- Messages
- 1,317
- Reaction score
- 3,914
- Points
- 113
பொழுது – 23 
எப்போதும் போல அன்றைக்கும் நிவினுக்கு ஆறுமணிக்கு விழிப்பு தட்டியது. தன்னைக் குனிந்து பார்த்தவனின் முகத்தில் முறுவல் அரும்பிற்று. இரவு படுத்ததைப் போலவே அவன் மீது காலைத் தூக்கிப்போட்டு அணைத்தவாறு மனைவி தூங்கிக் கொண்டிருந்தாள்.
காலையில் விரைவாய் எழுப்ப வேண்டாம் என சுதி முறைத்ததும் உபரியாய் நினைவை நிறைக்க, முகம் மென்மையானது. சில நொடிகள் அவளையே பார்த்திருந்தவன், பின் மெதுவாய் அவளிடமிருந்து எழுந்து சென்று காலைக் கடன்களை முடித்துவிட்டு குளித்து முடித்திருந்தான். வெளியே எந்த அரவமும் இல்லாதிருக்க, இவன் கதவைத் திறந்து கூடத்திற்குச் சென்றான்.
பாலுமகேந்திரா ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்.
சந்திரா, சௌம்யா என இருவருமே எழுந்திருக்கவில்லை. நேற்றைக்கு திருமணத்தின் அலைச்சலில் உடல் இரண்டு பெண்களுக்கு அலண்டு போயிருந்தது. அதனாலே நேரம் காலம் தெரியாது உறங்கிக் கொண்டிருந்தனர். அதைவிட அவர்களுடைய பிரதான பொறுப்பொன்றை இறக்கி வைத்த நிம்மதியில் துயின்று கொண்டிருக்கின்றனர் என்று கூறினால் தகும்.
நிவின் யாரையும் தொந்தரவு செய்யாது குளம்பியைக் கலக்கத் தொடங்கினான். அவனுக்குமே உடலில் சோர்வு அப்பியிருந்ததது. இருந்தாலும் நேற்றைய சுதியின் உடல்நிலையைப் பற்றிய சிந்தனைதான் மனம் முழுவதும் விரவியிருந்தது. ஓரிரு நாட்கள் சென்றதும் மறவாமல் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற யோசனையிலே குளம்பியைப் பருகினான்.
“ஐயோ...தம்பி, நீங்களே காபி போட்டுட்டீங்களா? கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன் தம்பி. என்னை எழுப்பி இருக்கலாம்லபா!” சந்திரா ஏதோ தவறு செய்ததைப் போல அடுக்களைக்குள் விரைந்து நுழைந்தார். ஆண்கள் சமையலறைக்குள் செல்வதெல்லாம் அவர் வரையில் மகாதவறாகிற்றே.
“மன்னிச்சுக்கோங்க தம்பி, ரொம்ப சங்கடமா இருக்கு. எப்பவும் இப்படி தூங்க மாட்டேன். புது இடம் நைட்டு லேட்டாதான் தூங்குனேன்!” என அவர் காரணங்களைத் தயங்கியபடியே அடுக்க, அவரைப் பார்த்து முறுவலித்தவன், “நோ ப்ராப்ளம் ஆன்ட்டி. நீங்க எல்லாம் டயடர்டா தூங்கிட்டு இருந்தீங்க. அதான் எழுப்ப மனசு வரலை. நானா தான் எப்பவுமே காஃபி அண்ட் குக்கிங் பண்ணிப்பேன். சோ, நோ கில்ட் ஃபீலிங்க்ஸ்!” என்றான் புன்னகை வாடாமல்.
“இருந்தாலும் கல்யாணமான மறுநாளே நீங்க அடுப்படிக்குள்ள வரலாமா தம்பி. இந்த சுதி எழலையா? அவளும் உங்களுக்குத் துணைக்கு இல்லை பாருங்க!” அவர் கூறவும், “நோ ஆன்ட்டி... ஷி இஸ் ஸ்லீப்பிங். ரொம்ப டய்ரடா தெரியுறா. அவ தூங்கட்டும். எழுப்ப வேணாம்!” என்றான் மனைவிக்காகப் பார்த்து. அவனது பதிலில் சந்திராவின் முகத்தில் பூரண திருப்தி விரவியது.
“சரிங்க தம்பி... நீங்க போங்க. நான் சமைக்கிறேன். யார் யாரெல்லாம் வருவாங்க தம்பி. எத்தனைப் பேருக்கு சமைக்கணும்?” என விவரம் கேட்டவர் சமையலில் இறங்கினார். சௌம்யாவும் எழுந்து வந்து அவருடன் இணைந்து கொண்டாள். பெண்கள் வேலை செய்யட்டும் என இவன் கூடத்திற்கு வர, பாலு மகேந்திராவைக் காணவில்லை.
குழந்தைகள் உறங்கும் அறையிலிருந்து வெளியே வந்தார். முகம் கழுவி வந்ததன் அடையாளமாய் முகத்தில் நீர் துளிகள் படர்ந்திருந்தன.
இவனிடம் பேசிக் கொண்டே அவர் குளம்பியைப் பருகினார். பெண்கள் சமைத்து முடித்து தாங்களும் தயாராகினர்.
நிவின் அறைக்குள் நுழைய, சுதி இன்னுமே உறங்கிக் கொண்டிருந்தாள். இவன் அலைபேசியை மின்னூக்கியில் இணைத்துவிட்டு வெளியே வந்தான்.
“சௌமி...மாப்பிள்ளைக்கிட்டே சுதியை எழுப்ப சொல்லு போ. மணி எட்டாச்சு. எல்லாரும் வந்துடுவாங்க!” சந்திரா மருமகளை விரட்டினார்.
நிவினிடம் வந்தவள், “தம்பி... உங்கப் பொண்டாட்டியைப் போய் எழுப்பிவிடுங்க. நேரமாச்சு. எல்லாரும் வந்ததும் சாப்ட்டு, கோவிலுக்குப் போகணும்!” எனக் கூற, இவன் தலையை அசைத்து சுதியை எழுப்பச் சென்றான்.
“சுதி... டைமாச்சு. நாளைக்கு எவ்வளோ நேரம்னாலும் நீ தூங்கிக்கலாம். இப்போ எழுந்திரி!” என நிவின் அவளைத் தொட்டு உசுப்ப, கண்களைக் கசக்கிக் கொண்டே எழுந்தமர்ந்தாள் பெண். கலைந்திருந்த கூந்தலைத் தூக்கிக் கொண்டையிட்டவள் அவனைப் பார்த்து அழகாய் புன்னகைத்தாள். அந்த சிரிப்பை பத்திரப்படுத்திக் கொண்டவன், “குட் மார்னிங் சுதி...” என்றான் மலர்ந்து.
“வெரி குட் மார்னிங்... எட்டு மணியாச்சா... ரொம்ப நாளுக்குப் பிறகு நிம்மதியா தூங்கி இருக்கேன். தேங்க் யூ!” என அவனைப் பார்த்து சிரித்தவளை வாஞ்சைமிகப் பார்த்தான் நிவின்.
“நாளைக்கு எல்லாம் உன் இஷ்டம்தான். எத்தனை மணிவரை வேணா தூங்கிக்கலாம்!” என நிவின் கூற, “ஓஹோ... செம்ம ஹஸ்பண்ட் மெட்டீரியல் நீங்க!” எனக் குறும்பாய் உரைத்தவள், “அம்மா காதுல விழற மாதிரி சொல்லிடாதீங்க. இப்பவே லேட்டா எழுந்ததுக்கு என்ன சொல்ல போறாங்களோ?” என அங்கலாய்த்துவிட்டு முகம் கழுவி வந்தாள் பெண்.
“இப்போ பேக் பெய்ன் பரவாயில்லையா சுதி? ஹோப் யூ வெல்!” என அக்கறையாய்க் கேட்டவனைப் பார்த்து இவளுக்கு மனம் நிறைந்து போனது.
“அது அப்பப்போ வரும், போகும். ரெஸ்ட் எடுத்தாச்சுல்ல. சரியாகிடுச்சுங்க. நீங்க அதையே நினைச்சிட்டு இருக்காதீங்க!" மென் அதட்டலுடன் பக்கத்து அறைக்குச் சென்றாள் பெண். ருத்ரா குளித்து முடித்து பட்டுப்பாவடைச் சட்டையை அணிந்து இரட்டைக் குடுமியோடு இவளைப் பார்த்து சிரித்தாள். தவாவும் குளித்து கிளம்பியிருந்தாலும் படுக்கையில் உருண்டு கொண்டே அலைபேசியில் விளையாடினான்.
“ரெண்டு நாளா கேட்க ஆள் இல்லைன்னு ஃபோனும் கையுமா இருக்க தவா நீ!” இவள் மெலிதாய் அதட்ட, “அத்தை... டூடே மட்டும்தான். நைட் வீட்டுக்குப் போய்ட்டா அப்புறம் அம்மா போன் தர மாட்டாங்க!” என்றான் அவன் கெஞ்சலாய்.
“அதுக்காக ஒரு அளவு இல்லையா டா... போ, வெளிய போய் எல்லாரோடவும் பேசிட்டு இரு. போ!” என அவன் கையிலிருந்த அலைபேசியை வாங்கிக்கொண்டு வெளியே அனுப்பினாள். ருத்ரா அங்கிருந்த பொருட்களை கீழே எடுத்து வைத்து அவளாக ஏதோ பேசிக் கொண்டே விளையாட, அதைப் பார்த்தவளுக்கு சிரிப்பு வந்தது.
“ருத்ரா, என்ன விளையாட்ற?” என சுதி வினவ, “மிஸ் விளையாட்டு அத்த... நீயும் வர்றீயா?” என ஆவலாய்க் கேட்டாள் சின்னவள்.
“ஹம்ம்...அத்தைக் குளிச்சிட்டு வர்றேன். அப்புறம் விளையாடலாம்!” என உரைத்துவிட்டு தன்னுடைய துணிப்பையை நிவினின் அறைக்குள் எடுத்துச் சென்றாள்.
கட்டிலில் அமர்ந்தவள் சில பல சேலைகளை வெளியே எடுத்துப் போட்டுவிட்டு அடியிலிருந்த கிளிச்சிறை வண்ணப் புடவை ஒன்றை எடுத்தாள். அதற்கு தேதாக அவள் மேல்சட்டையும் எடுக்க, “இது வேணாம்... இந்த சேரி கட்டு சுதி!” எனப் பின்னே கேட்ட குரலில் திரும்பிப் பார்த்தவள், “ஹம்ம்... இன்னொரு நாள் கட்டுறேங்க. இன்னைக்கு கோவிலுக்கு இந்த சேலைதான் கட்டணும்னு அம்மாவோட ஆர்டர். உங்களுக்கும் இதே கலர்லதானே வேட்டி சட்டை. ஜோடியா போகணுமாம்!” என சுதி உதட்டை வளைக்க, “ஓ...” என்றுவிட்டு அவன் அகன்றான். பாலாவும் ஆரோனும் வந்தனர்.
நந்தனா நிவினைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக்கொண்டு செல்ல, இவன் பெருமூச்சை வெளிவிட்டு இருக்கையில் அமர்ந்தான். பேச முயற்சிக்கவில்லை. அவனுக்குமே கொஞ்சம் மனத்தாங்கல் இருக்கத்தான் செய்தது. அக்ஷாவிற்காகப் பார்த்து இந்தப் பெண் தன் பக்க நியாயங்களை யோசிக்காது இப்படி முகம் திருப்பி செல்வதில் எவ்வித அர்த்தமும் இல்லையென தோன்ற, அவளாக வரட்டும் என்றுவிட்டான்.
“மாமா... ஹட்டோரி வச்சு குடுங்க. நான் பார்க்கணும்!” தவா வந்து நிவின் அருகே உரிமையாய் அமர, இவன் தொலைக்காட்சியை உயிர்ப்பித்து அவன் கேட்ட ஒளியலை வரிசையைத் தேடினான். செய்தியைத் தவிர ஒன்றும் பார்த்திராதவனுக்கு அதைத் தேடுவதில் சற்றே தடுமாற்றம்தான்.
“ட்வென்டி எய்ட்ல இருக்கு மாமா... உங்களுக்குத் தெரியாதா?” பெரிய மனுஷனாய் அவன் தொலைவியக்கையை பிடுங்க, இவனுக்கு முறுவல் பிறந்தது.
“உங்க மாமா நியூஸ் சேனலைத் தவிர வேற எதையும் பார்த்திருந்தா தானே டா பொம்மை சேனல் எல்லாம் தெரியும்... அவனொரு நியூஸ் வைத்தியம்!” ஆரோன் கலாய்க்க, பாலா அதை ஆமோதித்தான். நிவின் எப்போதும் அன்றாடச் செய்திகளைப் பார்த்து அறிந்து நாட்டு நடப்புகளைத் தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காண்பிப்பான். அதனாலே இவர்களது கேலி கிண்டல்களை மென்முறைப்பில் தட்டிவிட்டான்.
சுதி குளித்து முடித்து பட்டுப்புடவையை உடுத்திவிட்டு தலையை உலர்த்தினாள். பின் மெதுவாய் சமையலறைக்குள் நுழைய, சமைத்த உணவுகளை மேஜைக்கு மாற்றிக் கொண்டிருந்தனர் பெண்கள்.
சந்திரா இவளைக் கண்டிப்புடன் பார்க்க, சுதியின் முகத்தில் அசட்டுச் சிரிப்பு.
“மாமியார் இல்லாத வீடா இருக்கவும் ஒரே குஷிதான் இல்ல சுதி உனக்கு?” சௌம்யா இவளது காதில் முணுமுணுக்க, “ஓஹோ... அப்படியாண்ணி. நான் வேணா அம்மாகிட்டே இதை சொல்லவா?” எனக் குறும்பாய் சின்னவள் புருவம் உயர்த்தினாள்.
“சொல்லுடி... எனக்கென்ன பயமா. எங்க அத்தை டி... போ!” அவள் அங்கலாய்த்துவிட்டு செல்ல, இவளுக்கு சிரிப்பு வந்தது.
“சுதி...வா, நீயும் மாப்பிள்ளையும் சாப்பிடுங்க!” என சிறுவர்கள் இருவரையும் இவர்களுடன் அமர்த்தி உணவுண்ண வைத்த சந்திரா பின் அனைவருக்கும் உணவைப் பரிமாறினார்.
எல்லோரும் உண்டு முடிய மீனாட்சி அம்மன் கோவிலை ஒட்டியிருக்கும் மதுரை வீரன் கோவிலுக்கு குடும்பமாய் புறப்பட்டனர். நிவினின் மகிழுந்தில் ஐந்து பேரும், முத்துப்பாண்டியின் மகிழுந்தில் சில பேர் எனப் பிரித்து அமர்ந்து கொண்டனர். ஆரோனும் பாலாஜியும் இருசக்கர வாகனத்தில் வர, கோவிலுக்குச் சென்று பொங்கல் வைத்து பூஜை முடிய மதிய நேரத்தைத் தாண்டியிருந்தது. அப்படியே அனைவரும் ஒரு உணவகத்தில் உண்டு வீடு நுழைய முன் மாலைப் பொழுது கவிழ்ந்திருந்தது.
வீட்டிற்கு வந்ததும் ஆற அமர தேநீரை சுவைத்துக் கொண்டே பெரியவர்கள் தங்களுக்குள் சலசலக்க, சுதி ருத்ராவையும் தவச்செல்வனையும் அருகே அமர்த்திக் கொண்டாள். இன்னும் சற்று நேரத்தில் அவர்கள் கிளம்பி விடுவார்கள் என நினைக்கும்போது மனதில் மெல்லிய வருத்தம் மேலெழுந்தது. பிறந்த முதல்நாள் தொட்டு இன்றுவரை அவர்களைக் கையில் தூக்கி வளர்த்தவளாகிற்றே. அதனாலே அவர்களின் பிரிவுத் துயரை மனம் மெல்ல உள்வாங்கியது.
“நல்லா படிக்கணும் தவா... மாமாவைப் பார்த்தல்ல. எப்படி பெரிய வேலைல இருக்காரு. நீயும் படிச்சு முடிச்சிட்டு நல்ல வேலைக்குப் போகணும். அம்மா, அப்பத்தா, பாப்பாவையும் பார்த்துக்கணும்!” என இவள் சிறியவனிடம் அறிவுரை கூற, அவன் சமத்தாய்க் கேட்டுக் கொண்டான்.
“ஓயாம காசு வேணும்னு கேட்க கூடாது. முக்கியமா ஃபோன் அதிகம் பார்க்க கூடாது டா. பாப்பாவை பத்திரமா ஸ்கூல் கூட்டீட்டுப் போய்ட்டு வரணும்!” என இவள் அவனுக்குப் புரியும்படி கூற, “அத்தை... நான் அம்மா, பாப்பா, அப்பத்தாவைப் பார்த்துப்பேன். நீ கவலைப்படாதே!” என்றான். அவன் கன்னம் கிள்ளி இவள் முத்தமிட, ருத்ரா அவளின் கால்களுக்குள் வந்து அமர்ந்தாள்.
“அம்மா சொல்லுச்சு அத்தை... இனிமே அங்க வர மாட்டீயா? இங்க மாமா கூடத்தான் இருப்பீயா?” அவள் ஏக்கமாய்க் கேட்க, சுதி அவளின் இரண்டு கன்னத்திலும் அழுத்தி முத்தமிட்டாள்.
எப்போதும் போல அன்றைக்கும் நிவினுக்கு ஆறுமணிக்கு விழிப்பு தட்டியது. தன்னைக் குனிந்து பார்த்தவனின் முகத்தில் முறுவல் அரும்பிற்று. இரவு படுத்ததைப் போலவே அவன் மீது காலைத் தூக்கிப்போட்டு அணைத்தவாறு மனைவி தூங்கிக் கொண்டிருந்தாள்.
காலையில் விரைவாய் எழுப்ப வேண்டாம் என சுதி முறைத்ததும் உபரியாய் நினைவை நிறைக்க, முகம் மென்மையானது. சில நொடிகள் அவளையே பார்த்திருந்தவன், பின் மெதுவாய் அவளிடமிருந்து எழுந்து சென்று காலைக் கடன்களை முடித்துவிட்டு குளித்து முடித்திருந்தான். வெளியே எந்த அரவமும் இல்லாதிருக்க, இவன் கதவைத் திறந்து கூடத்திற்குச் சென்றான்.
பாலுமகேந்திரா ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்.
சந்திரா, சௌம்யா என இருவருமே எழுந்திருக்கவில்லை. நேற்றைக்கு திருமணத்தின் அலைச்சலில் உடல் இரண்டு பெண்களுக்கு அலண்டு போயிருந்தது. அதனாலே நேரம் காலம் தெரியாது உறங்கிக் கொண்டிருந்தனர். அதைவிட அவர்களுடைய பிரதான பொறுப்பொன்றை இறக்கி வைத்த நிம்மதியில் துயின்று கொண்டிருக்கின்றனர் என்று கூறினால் தகும்.
நிவின் யாரையும் தொந்தரவு செய்யாது குளம்பியைக் கலக்கத் தொடங்கினான். அவனுக்குமே உடலில் சோர்வு அப்பியிருந்ததது. இருந்தாலும் நேற்றைய சுதியின் உடல்நிலையைப் பற்றிய சிந்தனைதான் மனம் முழுவதும் விரவியிருந்தது. ஓரிரு நாட்கள் சென்றதும் மறவாமல் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற யோசனையிலே குளம்பியைப் பருகினான்.
“ஐயோ...தம்பி, நீங்களே காபி போட்டுட்டீங்களா? கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன் தம்பி. என்னை எழுப்பி இருக்கலாம்லபா!” சந்திரா ஏதோ தவறு செய்ததைப் போல அடுக்களைக்குள் விரைந்து நுழைந்தார். ஆண்கள் சமையலறைக்குள் செல்வதெல்லாம் அவர் வரையில் மகாதவறாகிற்றே.
“மன்னிச்சுக்கோங்க தம்பி, ரொம்ப சங்கடமா இருக்கு. எப்பவும் இப்படி தூங்க மாட்டேன். புது இடம் நைட்டு லேட்டாதான் தூங்குனேன்!” என அவர் காரணங்களைத் தயங்கியபடியே அடுக்க, அவரைப் பார்த்து முறுவலித்தவன், “நோ ப்ராப்ளம் ஆன்ட்டி. நீங்க எல்லாம் டயடர்டா தூங்கிட்டு இருந்தீங்க. அதான் எழுப்ப மனசு வரலை. நானா தான் எப்பவுமே காஃபி அண்ட் குக்கிங் பண்ணிப்பேன். சோ, நோ கில்ட் ஃபீலிங்க்ஸ்!” என்றான் புன்னகை வாடாமல்.
“இருந்தாலும் கல்யாணமான மறுநாளே நீங்க அடுப்படிக்குள்ள வரலாமா தம்பி. இந்த சுதி எழலையா? அவளும் உங்களுக்குத் துணைக்கு இல்லை பாருங்க!” அவர் கூறவும், “நோ ஆன்ட்டி... ஷி இஸ் ஸ்லீப்பிங். ரொம்ப டய்ரடா தெரியுறா. அவ தூங்கட்டும். எழுப்ப வேணாம்!” என்றான் மனைவிக்காகப் பார்த்து. அவனது பதிலில் சந்திராவின் முகத்தில் பூரண திருப்தி விரவியது.
“சரிங்க தம்பி... நீங்க போங்க. நான் சமைக்கிறேன். யார் யாரெல்லாம் வருவாங்க தம்பி. எத்தனைப் பேருக்கு சமைக்கணும்?” என விவரம் கேட்டவர் சமையலில் இறங்கினார். சௌம்யாவும் எழுந்து வந்து அவருடன் இணைந்து கொண்டாள். பெண்கள் வேலை செய்யட்டும் என இவன் கூடத்திற்கு வர, பாலு மகேந்திராவைக் காணவில்லை.
குழந்தைகள் உறங்கும் அறையிலிருந்து வெளியே வந்தார். முகம் கழுவி வந்ததன் அடையாளமாய் முகத்தில் நீர் துளிகள் படர்ந்திருந்தன.
இவனிடம் பேசிக் கொண்டே அவர் குளம்பியைப் பருகினார். பெண்கள் சமைத்து முடித்து தாங்களும் தயாராகினர்.
நிவின் அறைக்குள் நுழைய, சுதி இன்னுமே உறங்கிக் கொண்டிருந்தாள். இவன் அலைபேசியை மின்னூக்கியில் இணைத்துவிட்டு வெளியே வந்தான்.
“சௌமி...மாப்பிள்ளைக்கிட்டே சுதியை எழுப்ப சொல்லு போ. மணி எட்டாச்சு. எல்லாரும் வந்துடுவாங்க!” சந்திரா மருமகளை விரட்டினார்.
நிவினிடம் வந்தவள், “தம்பி... உங்கப் பொண்டாட்டியைப் போய் எழுப்பிவிடுங்க. நேரமாச்சு. எல்லாரும் வந்ததும் சாப்ட்டு, கோவிலுக்குப் போகணும்!” எனக் கூற, இவன் தலையை அசைத்து சுதியை எழுப்பச் சென்றான்.
“சுதி... டைமாச்சு. நாளைக்கு எவ்வளோ நேரம்னாலும் நீ தூங்கிக்கலாம். இப்போ எழுந்திரி!” என நிவின் அவளைத் தொட்டு உசுப்ப, கண்களைக் கசக்கிக் கொண்டே எழுந்தமர்ந்தாள் பெண். கலைந்திருந்த கூந்தலைத் தூக்கிக் கொண்டையிட்டவள் அவனைப் பார்த்து அழகாய் புன்னகைத்தாள். அந்த சிரிப்பை பத்திரப்படுத்திக் கொண்டவன், “குட் மார்னிங் சுதி...” என்றான் மலர்ந்து.
“வெரி குட் மார்னிங்... எட்டு மணியாச்சா... ரொம்ப நாளுக்குப் பிறகு நிம்மதியா தூங்கி இருக்கேன். தேங்க் யூ!” என அவனைப் பார்த்து சிரித்தவளை வாஞ்சைமிகப் பார்த்தான் நிவின்.
“நாளைக்கு எல்லாம் உன் இஷ்டம்தான். எத்தனை மணிவரை வேணா தூங்கிக்கலாம்!” என நிவின் கூற, “ஓஹோ... செம்ம ஹஸ்பண்ட் மெட்டீரியல் நீங்க!” எனக் குறும்பாய் உரைத்தவள், “அம்மா காதுல விழற மாதிரி சொல்லிடாதீங்க. இப்பவே லேட்டா எழுந்ததுக்கு என்ன சொல்ல போறாங்களோ?” என அங்கலாய்த்துவிட்டு முகம் கழுவி வந்தாள் பெண்.
“இப்போ பேக் பெய்ன் பரவாயில்லையா சுதி? ஹோப் யூ வெல்!” என அக்கறையாய்க் கேட்டவனைப் பார்த்து இவளுக்கு மனம் நிறைந்து போனது.
“அது அப்பப்போ வரும், போகும். ரெஸ்ட் எடுத்தாச்சுல்ல. சரியாகிடுச்சுங்க. நீங்க அதையே நினைச்சிட்டு இருக்காதீங்க!" மென் அதட்டலுடன் பக்கத்து அறைக்குச் சென்றாள் பெண். ருத்ரா குளித்து முடித்து பட்டுப்பாவடைச் சட்டையை அணிந்து இரட்டைக் குடுமியோடு இவளைப் பார்த்து சிரித்தாள். தவாவும் குளித்து கிளம்பியிருந்தாலும் படுக்கையில் உருண்டு கொண்டே அலைபேசியில் விளையாடினான்.
“ரெண்டு நாளா கேட்க ஆள் இல்லைன்னு ஃபோனும் கையுமா இருக்க தவா நீ!” இவள் மெலிதாய் அதட்ட, “அத்தை... டூடே மட்டும்தான். நைட் வீட்டுக்குப் போய்ட்டா அப்புறம் அம்மா போன் தர மாட்டாங்க!” என்றான் அவன் கெஞ்சலாய்.
“அதுக்காக ஒரு அளவு இல்லையா டா... போ, வெளிய போய் எல்லாரோடவும் பேசிட்டு இரு. போ!” என அவன் கையிலிருந்த அலைபேசியை வாங்கிக்கொண்டு வெளியே அனுப்பினாள். ருத்ரா அங்கிருந்த பொருட்களை கீழே எடுத்து வைத்து அவளாக ஏதோ பேசிக் கொண்டே விளையாட, அதைப் பார்த்தவளுக்கு சிரிப்பு வந்தது.
“ருத்ரா, என்ன விளையாட்ற?” என சுதி வினவ, “மிஸ் விளையாட்டு அத்த... நீயும் வர்றீயா?” என ஆவலாய்க் கேட்டாள் சின்னவள்.
“ஹம்ம்...அத்தைக் குளிச்சிட்டு வர்றேன். அப்புறம் விளையாடலாம்!” என உரைத்துவிட்டு தன்னுடைய துணிப்பையை நிவினின் அறைக்குள் எடுத்துச் சென்றாள்.
கட்டிலில் அமர்ந்தவள் சில பல சேலைகளை வெளியே எடுத்துப் போட்டுவிட்டு அடியிலிருந்த கிளிச்சிறை வண்ணப் புடவை ஒன்றை எடுத்தாள். அதற்கு தேதாக அவள் மேல்சட்டையும் எடுக்க, “இது வேணாம்... இந்த சேரி கட்டு சுதி!” எனப் பின்னே கேட்ட குரலில் திரும்பிப் பார்த்தவள், “ஹம்ம்... இன்னொரு நாள் கட்டுறேங்க. இன்னைக்கு கோவிலுக்கு இந்த சேலைதான் கட்டணும்னு அம்மாவோட ஆர்டர். உங்களுக்கும் இதே கலர்லதானே வேட்டி சட்டை. ஜோடியா போகணுமாம்!” என சுதி உதட்டை வளைக்க, “ஓ...” என்றுவிட்டு அவன் அகன்றான். பாலாவும் ஆரோனும் வந்தனர்.
நந்தனா நிவினைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக்கொண்டு செல்ல, இவன் பெருமூச்சை வெளிவிட்டு இருக்கையில் அமர்ந்தான். பேச முயற்சிக்கவில்லை. அவனுக்குமே கொஞ்சம் மனத்தாங்கல் இருக்கத்தான் செய்தது. அக்ஷாவிற்காகப் பார்த்து இந்தப் பெண் தன் பக்க நியாயங்களை யோசிக்காது இப்படி முகம் திருப்பி செல்வதில் எவ்வித அர்த்தமும் இல்லையென தோன்ற, அவளாக வரட்டும் என்றுவிட்டான்.
“மாமா... ஹட்டோரி வச்சு குடுங்க. நான் பார்க்கணும்!” தவா வந்து நிவின் அருகே உரிமையாய் அமர, இவன் தொலைக்காட்சியை உயிர்ப்பித்து அவன் கேட்ட ஒளியலை வரிசையைத் தேடினான். செய்தியைத் தவிர ஒன்றும் பார்த்திராதவனுக்கு அதைத் தேடுவதில் சற்றே தடுமாற்றம்தான்.
“ட்வென்டி எய்ட்ல இருக்கு மாமா... உங்களுக்குத் தெரியாதா?” பெரிய மனுஷனாய் அவன் தொலைவியக்கையை பிடுங்க, இவனுக்கு முறுவல் பிறந்தது.
“உங்க மாமா நியூஸ் சேனலைத் தவிர வேற எதையும் பார்த்திருந்தா தானே டா பொம்மை சேனல் எல்லாம் தெரியும்... அவனொரு நியூஸ் வைத்தியம்!” ஆரோன் கலாய்க்க, பாலா அதை ஆமோதித்தான். நிவின் எப்போதும் அன்றாடச் செய்திகளைப் பார்த்து அறிந்து நாட்டு நடப்புகளைத் தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காண்பிப்பான். அதனாலே இவர்களது கேலி கிண்டல்களை மென்முறைப்பில் தட்டிவிட்டான்.
சுதி குளித்து முடித்து பட்டுப்புடவையை உடுத்திவிட்டு தலையை உலர்த்தினாள். பின் மெதுவாய் சமையலறைக்குள் நுழைய, சமைத்த உணவுகளை மேஜைக்கு மாற்றிக் கொண்டிருந்தனர் பெண்கள்.
சந்திரா இவளைக் கண்டிப்புடன் பார்க்க, சுதியின் முகத்தில் அசட்டுச் சிரிப்பு.
“மாமியார் இல்லாத வீடா இருக்கவும் ஒரே குஷிதான் இல்ல சுதி உனக்கு?” சௌம்யா இவளது காதில் முணுமுணுக்க, “ஓஹோ... அப்படியாண்ணி. நான் வேணா அம்மாகிட்டே இதை சொல்லவா?” எனக் குறும்பாய் சின்னவள் புருவம் உயர்த்தினாள்.
“சொல்லுடி... எனக்கென்ன பயமா. எங்க அத்தை டி... போ!” அவள் அங்கலாய்த்துவிட்டு செல்ல, இவளுக்கு சிரிப்பு வந்தது.
“சுதி...வா, நீயும் மாப்பிள்ளையும் சாப்பிடுங்க!” என சிறுவர்கள் இருவரையும் இவர்களுடன் அமர்த்தி உணவுண்ண வைத்த சந்திரா பின் அனைவருக்கும் உணவைப் பரிமாறினார்.
எல்லோரும் உண்டு முடிய மீனாட்சி அம்மன் கோவிலை ஒட்டியிருக்கும் மதுரை வீரன் கோவிலுக்கு குடும்பமாய் புறப்பட்டனர். நிவினின் மகிழுந்தில் ஐந்து பேரும், முத்துப்பாண்டியின் மகிழுந்தில் சில பேர் எனப் பிரித்து அமர்ந்து கொண்டனர். ஆரோனும் பாலாஜியும் இருசக்கர வாகனத்தில் வர, கோவிலுக்குச் சென்று பொங்கல் வைத்து பூஜை முடிய மதிய நேரத்தைத் தாண்டியிருந்தது. அப்படியே அனைவரும் ஒரு உணவகத்தில் உண்டு வீடு நுழைய முன் மாலைப் பொழுது கவிழ்ந்திருந்தது.
வீட்டிற்கு வந்ததும் ஆற அமர தேநீரை சுவைத்துக் கொண்டே பெரியவர்கள் தங்களுக்குள் சலசலக்க, சுதி ருத்ராவையும் தவச்செல்வனையும் அருகே அமர்த்திக் கொண்டாள். இன்னும் சற்று நேரத்தில் அவர்கள் கிளம்பி விடுவார்கள் என நினைக்கும்போது மனதில் மெல்லிய வருத்தம் மேலெழுந்தது. பிறந்த முதல்நாள் தொட்டு இன்றுவரை அவர்களைக் கையில் தூக்கி வளர்த்தவளாகிற்றே. அதனாலே அவர்களின் பிரிவுத் துயரை மனம் மெல்ல உள்வாங்கியது.
“நல்லா படிக்கணும் தவா... மாமாவைப் பார்த்தல்ல. எப்படி பெரிய வேலைல இருக்காரு. நீயும் படிச்சு முடிச்சிட்டு நல்ல வேலைக்குப் போகணும். அம்மா, அப்பத்தா, பாப்பாவையும் பார்த்துக்கணும்!” என இவள் சிறியவனிடம் அறிவுரை கூற, அவன் சமத்தாய்க் கேட்டுக் கொண்டான்.
“ஓயாம காசு வேணும்னு கேட்க கூடாது. முக்கியமா ஃபோன் அதிகம் பார்க்க கூடாது டா. பாப்பாவை பத்திரமா ஸ்கூல் கூட்டீட்டுப் போய்ட்டு வரணும்!” என இவள் அவனுக்குப் புரியும்படி கூற, “அத்தை... நான் அம்மா, பாப்பா, அப்பத்தாவைப் பார்த்துப்பேன். நீ கவலைப்படாதே!” என்றான். அவன் கன்னம் கிள்ளி இவள் முத்தமிட, ருத்ரா அவளின் கால்களுக்குள் வந்து அமர்ந்தாள்.
“அம்மா சொல்லுச்சு அத்தை... இனிமே அங்க வர மாட்டீயா? இங்க மாமா கூடத்தான் இருப்பீயா?” அவள் ஏக்கமாய்க் கேட்க, சுதி அவளின் இரண்டு கன்னத்திலும் அழுத்தி முத்தமிட்டாள்.