Active member
- Messages
- 107
- Reaction score
- 31
- Points
- 28
அத்தியாயம் - 40
அன்று இரவு தான் வருவதற்கு தாமதமாகி விடும் என முன்பே தன் மனைவியிடம் தெரிவித்திருந்தான் அமிழ்தினியன். கல்லூரியில் அவனுடன் பணிபுரியும் பேராசிரியர் ஒருவர் பணியிலிருந்து ஓய்வு பெறுவதால் அவருக்கான பிரிவு உபசரிப்பு விழாவும், இரவு உணவு விருந்தும் நடப்பதாக அன்று ஏற்பாடாகி இருந்தன. அதை எல்லாம் முடித்துக் கொண்டு அவன் வீடு வந்து சேர்க்கையில் மணி இரவு பத்தைத் தொட்டு இருந்தது.
இரவு நேரம் சென்று வந்ததால் அனைவரும் அவரவரின் அறையில் முடங்கி இருக்க, அமிழ்தினியனும் நேராக தன்னுடைய அறைக்கு வந்தான். வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருந்த அறையை பார்த்தவாறே தங்களின் படுக்கை அறையிலிருந்த குளியலறைக்குள் புகுந்தவன் தன் வேலைகளை முடித்துக் கொண்டு வெளியே வருகையில் மேலும் பத்து நிமிடங்கள் கடந்திருந்தன.
சற்றே இலகுவான இரவு உடையில் தன் தலையை துவட்டியபடியே வெளியே வந்தவனின் விழிகள் அலைந்து தன் மனைவியையும் குழந்தைகளையும் தேட, அறையின் வலதுபுறத்திலிருந்த அலங்கார மேஜைக்கு முன்பாக நின்றுக் கொண்டு கண்ணாடியில் தெரியும் தன் பிம்பத்தை இடவலமாக திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள் மழைக்குழலி. அதுவும் அவனுடைய சட்டை ஒன்றினை அணிந்துக் கொண்டு முகத்தில் பொட்டு முதற்கொண்டு எவ்வித ஒப்பனையும் இல்லாமல் தன் சுருள் கேசத்தை வருடிக் கொண்டும் சட்டையினை பிடித்திழுத்து தன் சுற்றளவிற்கு ஏற்றவாறு இறுக்கிப் பிடித்துத் தன்னையே பார்த்திருந்தாள்.
இது அவ்வபோது நடப்பது தான். அவனுடைய பழைய சட்டைகளையும் அவன் முதல்நாள் அணிந்து கழற்றி வைத்திருந்த சட்டைகளையும் கூட தோன்றும் போது தானாகவே எடுத்து உடுத்திக் கொள்வது அவளது பழக்கம். அதிலும் இன்று, அவன் கழற்றிப் போட்டிருந்த உடையில் இருந்தவளை கண்ட கணவனின் நெஞ்சம் அவர்களின் கொடைக்கானல் நாட்களுக்கு சென்று திரும்பியது. அவளையே பார்த்தபடி அவளுக்கு பின்னால் வந்து நின்றவன், கண்ணாடியில் தெரிந்த அவள் பிம்பத்தில் தன் விழிகளை பதித்தபடியே தலையை துவட்ட, அவள் அவனை சிறிதும் கண்டுக் கொள்ளவே இல்லை.
‘ஃபங்ஷன் எப்படி போச்சு?’
‘என்ன சாப்ட்டிங்க?’
‘காஃபி எடுத்துட்டு வரவா?’ என இப்படியாக எதையாவது கேட்பாள் என அவன் எதிர்பார்க்க தன் பிம்பத்தில் பதிந்த தன் விழிகளை அசைக்கவே இல்லை அவள்.
“க்கும்…” என செறுமியவன், தன் துவாலையை ஐந்தடி உயரத்தில் அருகிலிருந்த துணிகளை உலர்த்தப் பயன்படுத்தப்படும் அடுக்கில் காய வைத்துவிட்டு தன் தலைமுடிகளை சிலுப்ப, அவனுடைய கேசத்தில் கோர்ந்திருந்த நீர்துளிகளில் சிலது அவள் முகத்தின் மீது வந்து மோதி தெறித்தது.
“பச்!” என சலித்துக் கொண்டாளே ஒழிய வேறெதுவும் பேசவில்லை.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவன் தனக்கு முதுகுக் காட்டி நின்றிருந்தவளின் இடையினை பின்னிருந்து இறுக்கமாக தன் இரு கைகளால் கோர்த்து தன் மார்பின் மீது மோதி நிற்கும் அளவிற்கு அவளை இழுத்து, “என்னடி ரொம்ப தான் சலிச்சுக்கிற?” என அவள் கழுத்து வளைவில் தன் முகத்தை புதைத்து இதழ் பதிக்கவும்,
“விடுங்க…” என்றவாறு அவனிடமிருந்து விலக பார்த்தவளை முன்பை விட இறுக்கமாக பிடித்து தன்னோடு நெருக்கமாக சேர்த்தணைத்த அமிழ்தினியன், “முடியாது ஜில்லு…” என மென்மையாக அவள் காதோரம் கிசுகிசுக்க, அவன் மீசைமுடிகள் உரசிய குறுகுறுப்பில் தன் முகத்தை வளைத்து சட்டென தன் கன்னங்களை விரல்களால் தொட்டு தழுவினாள்.
“எத்தனை தடவை தான் சொல்றது… என்னால உன்னை எப்பவும் விட முடியாதுனு… சொல்லி சொல்லியே எனக்கு வாய் வலிக்குது டி…” என்றவனின் இதழ்கள் தன்னை சூழ்ந்த உணர்வுகளிலிருந்து மீள முடியாமல் அவள் பளிங்கு பின்னங்கழுத்தில் தேங்கியது.
எதுவும் சொல்லாமல் அப்படியே அசையாமல் நின்றாள். இருவரின் பார்வையும் கண்ணாடியில் தெரிந்த மற்றவரின் பிம்பத்தை இம்சித்தது.
“பொழிலும் அவியும் எங்க? விளையாடிட்டு இருக்காங்களா? வெளிய காணோமே…” என கிசுகிசுப்பான குரலில் தன் மகள்கள் எங்கே என அவளிடம் வினவினான்.
“இன்னைக்கு ஃப்ரைடேல… பாவை அவங்கள கூட்டிட்டு போய் இருக்கா” இயல்பாக சொல்லிவிட்டு அவள் விலக முயல, அவளை தன் கைச்சிறைக்குள் கொணர்ந்தவன், “ஓ, மூவி நைட்டா!” என லேசாக முறுவலித்து, “இந்த ஷர்ட் உனக்கு பொருத்தமா இருக்கு ஜில்லு…” என அவள் இடையிலிருந்த கைகளை சட்டையை தாண்டிப் பதித்தான்.
“அத்தான்!” குரலே எழும்பவில்லை அவளுக்கு.
“இம்ம்!”
“என்ன இது விளையாட்டு?”
“என்ன என்ன விளையாட்டு? ஷர்ட்டும் என்னுது ஷர்ட் போட்டு இருக்கற பொண்ணும் என்னுது தானே… அப்பறம்?” குறும்பாக கேட்டான் அமிழ்தினியன்.
அமைதியாக நின்றிருந்தவளை ஒருமுறை ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தவனின் பார்வை சட்டென மாறவும் குழலியை வேகமாக தன்புறமாக திருப்பினான் அமிழ்தினியன்.
“என்னடா?” மெல்லிய குரலில் ஆதுரமாக அவன் கேட்க,
“ஒன்னுமில்லை அத்தான்…” என சமாளிப்பாகப் புன்னகைத்தாள்.
“ஜில்லு! இங்க என்னை பாரு…” அவளின் நாடி பிடித்து அவள் முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தியவனின் கண்களிலிருந்த ஏதோ ஒன்று அவளை அப்படியே அமிழ்த்தியது.
ஆழமாய் ஊடுருவிய விழிகளுடன் அவளை கூர்ந்தவன் திடீரென, “கவிதாகிட்ட ஏன் அப்படி கேட்ட ஜில்லு?” என்றதும் ஒன்றும் புரியாமல் அவளுடைய முகமும் விழிகளும் குழப்பத்தை தத்தெடுத்தன.
“நீ என்னை இன்னும் நம்பல இல்ல…”
“அத்தான்”
“நீ அவகிட்ட கேட்டதை பாத்தா அப்படி தான்டி இருக்கு…”
“...”
“மேடமுக்கு என்னை திருப்தி படுத்தனுமோ… அதுவும் எல்லா விதத்துலையும்… ஹ்ம்ம்?”
“...”
“எப்படிங்க மேடம் திருப்தி படுத்தலாம்னு இருக்கீங்க? இப்படியா…” அவளோடு தன் உடல் மொத்தத்தையும் ஒட்டிக் கொண்டு நின்றவனின் முகமும் பேச்சும் கரைக்காணாமல் இறுகிப் போய் இருந்தன.
நீர் திரையிட்ட விழிகளால் அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மழைக்குழலி. அவனை அப்படியே பிடித்து தன் விழிகளுக்குள் ஆழமாய் புதைத்துக் கொள்ளும் அளவிற்கு வேகம் பிறந்தது அவனுடைய பேச்சில். அமிழின் கண்கள் இரண்டும் அன்று போலவே இன்றும் சிவந்துப் போனது. மழைக்குழலியின் கண்களை ஆழ்ந்து பார்த்தவன் அவள் கன்னங்களை கைகளில் ஏந்தி,
“ஏன் ஜில்லு… உன்னை நீயே இப்படி கஷ்டப்படுத்திக்குற… இவ்வளவு நாள்ல நீ மறந்தே இருப்பனு நினைச்சேன். ஆனா, நீ அதை இன்னும் விடல. என் காதல் உனக்கு அந்த நம்பிக்கைய குடுக்கல அப்படிதானே?” வேகமாய் அவன் இதழ்களை தன் விரல்களினால் அழுத்தமாக மூடினாள் மனைவி.
“ப்ளீஸ் அத்தான்…” கலங்கிய அவள் விழிகளையே பார்த்து நின்றவன் அவளையே பார்க்க, “இதுக்கு தான் நாம பிரிஞ்சிடலாம்னு நான் முடிவெடுத்திருந்தேன். உங்களுக்கு என்னை புரியல. ஒரு பெண்ணா என் மனசு இப்ப எப்படி தவிக்குதுனு உங்களுக்கு புரியல…” வருந்தியவளின் உள்ளம் சொல்ல முடியாத வலியில் துவண்டது.
“நீங்க மறுக்க மறுக்க எனக்கு வேணும்னு தோணுது. நீங்க என்னை மறுக்க காரணம் நான் தான்னு எனக்கு தெரியும். எனக்கு எதாவது ஆகிடும்னு தானே ஒவ்வொரு முறையும் நீங்க தயங்கறிங்க… அப்பயெல்லாம் எனக்கு எப்படியாவது நாம சேர்ந்திட மாட்டோமானு தான் மனசு தவிக்குது. என்னை உங்ககிட்ட கொடுக்கணும்னு ஆசையா இருக்கு. ஒரு பெண்ணா, ஒரு மனைவியா நான் நினைக்கறதுல என்ன தப்பிருக்கு அத்தான்…”
தவிப்பாய் தன் இதழ்களை இறுக்கியவன் அவள் விழிகளை நேரடியாக சந்திக்க மறுத்தான்.
“நாம ரெண்டு பேரும் நிச்சயமா சந்தோஷமா தான் இருக்கோம். மத்த கணவன் மனைவிங்க மாதிரி அன்பா, அனுசரணையா, அன்யோன்யமா தான் இருக்கோம். பாசமான குடும்பம், குழந்தைனு எல்லாமே நிறைவா இருக்கு. ஆனா, எங்கையோ கசங்கி, கருகி உருக்குலைஞ்சு நிக்க வேண்டிய ரோஜா செடிக்கு அதுக்கு தேவையான எல்லாமே கொடுத்து பத்திரமா பராமிரிச்சு, அது நல்லா வளந்ததும் அதுல இருக்கற பூவ மட்டும் தூக்கி எறியற மாதிரி இருக்கு உங்க பேச்சும் செயலும்…”
“உளராத ஜில்லு…” சட்டென அவளை வேகமாக அணைத்தவனின் மூச்சுக் காற்றின் வெப்பம் கூடிக் கொண்டே போனது.
“நீங்க மட்டும் யாருக்கிட்டையும் என்னை விட்டுக் குடுக்காம… யாருக்கும் இந்த விஷயம் தெரியாம மறைச்சு உங்க மேலையே பழியையும் போட்டுக்கிட்டு… உங்க பொண்டாட்டிக்காக எல்லாம் பண்ணுவிங்களாம். ஆனா, நான் மட்டும் உங்களுக்காக எதையும் யோசிக்க கூடாது இல்ல. அதுவும் நான் விரும்பின என் அத்தானுக்காக நான் எதையுமே செய்யக் கூடாது”
“...”
“எனக்கு சரியாகனும்னு நான் எவ்வளவு நினைச்சேன் தெரியுமா அத்தான். உங்களோட குழந்தைய சும்மக்கற பாக்கியம் தான் எனக்கு இல்ல. ஆனா, இதுல கூடவா… நான் இவ்வளவு பேசுறதே தப்பு அத்தான். இதெல்லாம் கெஞ்சிக் கேட்டு வாங்குற விஷயம் இல்ல. எல்லாம் தானாவே நடக்கணும். என் விஷயத்துல அப்படி நடக்க சான்ஸே இல்ல, ஏன்னா நான் அதுக்கு தகுதியானவளே இல்லல”
அவன் மார்பில் சாய்ந்திருந்தவளின் தோள்களை பிடித்து அவளை தள்ளி நிறுத்தியவன், அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான்.
முகம் முழுவதும் ஜிவ்ஜிவ்வென்று சிவந்துப் போய்விட கோபத்தில் இதழ்களின் தசைகளை மென்றவனின் அழுத்தம் தாங்காமல் அவனுடைய கீழ் உதடு இரத்தத்தில் சூடாக நனைந்தது. தன் கன்னத்தை ஒரு கையால் தாங்கி நின்றிருந்தவளை உறுத்து விழித்தவன்,
“இன்னும் ரெண்டு வைக்கணும் இந்த வாய்க்கு? என்ன பேச்சு பேசுற… அறிவிருக்கா இல்லையாடி உனக்கு? உனக்கு ஒன்னுமே இல்ல. தகுதி அது இதுனு…” தவிப்பாய் உருகியவனின் கண்களில் மகரந்த ஈரத்தின் சாயல்.
“என்னை அப்படி மத்தவங்க சொல்லிட கூடாதுனு தானே இப்ப வரைக்கும் யாருக்கும் தெரியாம பார்த்துட்டு வரிங்க… ஆனா, நீங்க என்னை விட்டு தள்ளி இருந்து இப்படி நடந்துக்கறதுல எனக்கே அந்த டவுட் வருது…” அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பேச விடவில்லை அவன். அத்தனை ஆழமாய் அவளுள் இறங்கி இருந்தான். தன்னுடைய முழு கோபத்தையும் அவளிடம் காண்பித்திருந்தான்.
வார்த்தைகளை கொண்டு வடிக்க முடியாத மௌனம் அவனை முத்தத்தில் திறமாய் செதுக்கிவிட்டு அவளை நிலைகுலைய செய்திருந்தது. அவளின் முகம் முழுவதும் விரவிப் படர்ந்தவனின் இதழ்கள் சட்டையின் இடைவெளியில் கிடைத்த அவள் கழுத்தில் புதைய, தன் விரல்களை அவள் மீது வைத்து இறுக்கினான்.
“ஜில்லு… என்னை எப்பவுமே உன் வார்த்தையால சிதைச்சு சுக்கு நூறா உடைக்கவே பிறந்திருக்கியாடி… உன்கிட்ட இருக்கற என்னோட தயக்கமே வேற… ஆனா நீ பேசுறது… என்னால உன்னை காயப்படுத்த முடியாதுடி. ஆனா, நீ என்னை வார்த்தையாலே வதைக்குற. ஐ ஜஸ்ட் வான்ட் டூ லிவ் வித் யூ… அது போதும் எனக்கு”
“ஓ, அப்படியா? ரொம்பவே தேங்க்ஸ் அத்தான்… என்னை இவ்வளவு நாளும் நீங்க சகிச்சிக்கிட்டதுக்கு…” அன்றும் இதை தான் சொன்னாள் இன்றும் அதே வார்த்தையை தான் சொல்கிறாள். இத்தனை நாட்களில் அவளின் இந்த எண்ணத்தை மாற்ற முடியாத அளவிற்கா தன் காதல் இருந்திருக்கிறது என யோசித்தவனின் நெஞ்சம் அனலாய் கொதித்தது.
ஆழி பேராலையாய் தன்னை தாக்கிய உணர்வுகளின் பிடியில் சிக்குண்டு தவித்தவனுக்கு அவளின் வார்த்தைகள் அமிலமாய் எரிந்தது. அவளை பிடித்திழுத்து தன்புறமாக திருப்பியவனின் இதழ்கள் அவளுக்கான தண்டனையை வாரி வழங்கி துள்ளத் துள்ள அவளை வதைத்தது. கைகள் அவளின் மேனியில் ஊர்ந்து அவளை தன்னோடு இன்னும் இறுக்கமாய் இறுக்கியது.
அவன் நெருக்கத்தில், தான் உள்ளுக்குள்ளே மருகி மறைத்து புதைத்திருந்த உணர்வுகள் எல்லாம் பெறும் சுனாமியாய் தனக்குள் எழுந்ததை மறைக்க முடியாமல் அவன் முதுகினை தன் நகக்கண்களினால் அழுத்தினாள் மழைக்குழலி. தன் தொடுதலில் பார்வையில் துவண்டு சரிந்தவளை தன் கைகளுக்குள் சுழற்றியவன் அவள் காதருகே குனிந்து,
“சகிக்கிறேனா? உன்னையா?” என பல்லை கடித்துக் கொண்டாலும் அத்தனை சிரிப்புடன் கேட்டான்.
அவள் அமைதியாக இருக்கவும், “திமிர்… என் பொண்டாட்டிக்கு வாய் கொழுப்பும் திமிரும் ரொம்பவே அதிகம் தான்…” அவள் கன்னங்களுக்கு இடம்பெயர்ந்த இதழ்களில் கோபத்தோடு தாபத்தின் சுவடுகள். அவளின் மனதை திண்டாடி திகைக்க வைக்கும் அளவுக்கு அவளை தன்னோடு இறுக்கினான். இத்தனை நாளாய் சேர்த்து வைத்து இன்று அவளை மூர்ச்சையாக்கினான்.
“உனக்கான என் உணர்வுகள் ரொம்ப மோசமானது ஜில்லு. ஒரு முத்தத்துல, ஒரு அணைப்புல ஏன் நாம் கொண்ட உறவால கூட என்னால உன்னை நிச்சயமா கடந்து வர முடியாது. எனக்கு உன்மேல இருக்கற காதலுக்கும் காதலை தாண்டிய எல்லாத்துக்கும் முன்னாடி காலமே தோத்துப் போயிடும். ட்ரஸ்ட் மீ… உன்னை பத்தின அத்தனை சுகமான எண்ணங்களும் எனக்கு இருந்துச்சு டி… ஏன் இப்பவும் கூட என் ஆழ் மனசுல இருக்கு. நான் தான் அந்த பக்கங்களை எல்லாம் உன்கிட்ட காட்ட விரும்பல. அகுக்காக என் காதலை சந்தேகப்பட்டு பேசுவியா நீ?”
“சந்தேகமெல்லாம் இல்லத்தான்…” அவசரமாக மறுத்தவளின் கழுத்தில் முகம் புதைத்தவன் அவள் அணிந்திருந்த சட்டையை இறுக்கிப் பிடித்து தன் கோபத்தை அடக்கினான். தன் கோபத்தை கூட இவள் தாங்க மாட்டாளே என்று தான் தோன்றியது அவனுக்குள்.
“என் கண்ணை நிமிர்ந்து பாரு டி… உன்கிட்ட அதை காட்டாம இருக்க நான் எவ்வளவு பாடுபட்டு கடந்து வந்தேன்னு புரியும்… என்னை விட்டு தள்ளி தள்ளிப் போன என் பொண்டாட்டிக்கு, என் காதலை வாங்கிக்கிட்டு என்னை உயிரோட கொன்னுட்டு இருந்த என் பொண்டாட்டிக்கு, என்னை வேறொரு கல்யாணம் பண்ணிக்க சொல்லி டார்ச்சர் பண்ண என் பொண்டாட்டிக்கு… அதெல்லாம் என்னால எப்படி சொல்லிப் புரிய வைக்க முடியும். எல்லாத்தையும் எனக்குள்ள புதைச்சுக்கிட்டு இருந்தேன். அதையெல்லாம் உனக்கு தெரியப்படுத்த எனக்கு விருப்பமில்லை. ஏன்னா நான் அதெல்லாம் கடந்து வந்துட்டேன் ஜில்லு…”
“...”
“இப்பவும் கூட எனக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லனு தான் நான் நினைச்சிருந்தேன். ஆனா, இந்த ஒரு மாசமா என்னை நீ கொல்ற டி… உன் பார்வையால, பேச்சால என்னை எப்படி தவிக்க விடுற தெரியுமா… என்னால உன் கண்ணை பார்த்துப் பேச முடியலடி. ஒரு காலத்துல என் கற்பனையில நாம எப்படி எல்லாம் இருக்கணும்னு ஆசைப்பட்டேனோ அப்படியெல்லாம் மாறி என்னை வதைக்குற. ஏதோ டீன் ஏஜ் பையன் மாதிரி என்னை நினைக்க வைக்கற. இப்பல்லாம் நீ என்னை நெருங்கும்போது எனக்கு தான் படபடப்பா இருக்கு. எங்கையோ நான் புதைச்சு வச்ச உணர்வுகள் எல்லாம் வேகமாக நெஞ்சமெல்லாம் வந்து பாயுது. என் கண்கள் இரண்டும் காதல் பித்துப் பிடிச்சு திணறிப் போய் சிவந்துப் போகுது டி…”
“...”
“வயசாகிடுச்சுடா உனக்குனு கன்னத்துல அறையனும் போல இருக்கு. உன்னை நான் எந்தவிதத்துலயும் காயப்படுத்தக் கூடாதுனு முடிவு எடுத்து எதுவும் வேண்டாம்னு உறுதியா இருந்தவன். இப்ப இப்படி எல்லாம் யோசிக்கறதுக்கு எனக்கே அசிங்கமா இருக்கு டி. என்னால உன்னை ஃபேஸ் பண்ணவே முடியல. அவ்வளவு தானாடா நீ? நீயும் மத்த ஆம்பளைங்க மாதிரி தானானு என்னை என் மனசாட்சி கேவலமாய் கேக்குது. இப்ப உனக்கு சரியானதுனால சரி, ஒருவேளை இல்லைனா அப்ப இது எவ்வளவுப் பெரிய அபத்தம். அப்ப இவ்வளவு நாளும் நான் காட்டின காதலுக்கு அர்த்தமே இல்லாத மாதிரி இருக்கு ஜில்லு…”
அவனை காயப்படுத்தி சென்ற அவளுடைய வார்த்தைகளின் மூலமாய் அவன் மனதிலிருந்த தவிப்புகள் எல்லாம் அவளுக்கு புரிய நீர் நிறைந்த கண்களுடன் உணர்ச்சி ததும்பிய முகமாக நின்றிருந்தாள் மழைக்குழலி.
“ஐ’யம் ஸாரி… என் லைஃப்ல நீ மட்டும் என்னோட எல்லா விஷயத்துலையும் விதிவிலக்கு தான். உன்கிட்ட எப்பவும் நான் தோத்து தான் போயிடுறேன் டி…” அவளை விட்டு விலகி நின்றவன் அவள் முகம் காண தயங்கி மறுபுறமாக திரும்பவும் பின்னாலிருந்து அவனுடைய சட்டையை பாய்ந்து இழுத்துக் கொண்டவள் அவனுடைய முதுகில் ஆழமாய் முகம் புதைத்து நின்றாள்.
சற்றே இறுகிய அவனுடைய உடல் மெல்ல தளர்ந்து, கை கால்கள் எல்லாம் நடுங்கியது. வெட்கம் கலந்த குறும்பு சிரிப்போடு அவன் முதுகில் தன் இதழ்களின் வரிகளை அழுத்தமாய் பதித்து அவனை தன்னை நோக்கி அவள் இழுக்க, உயிர் வதைப்படும் அவதியில் நின்றிருந்தான் அமிழ்தினியன்.
“ப்ளீஸ் ஜில்லு…” தன்னிலிருந்து அவள் கைகளை அவன் விடுவிக்க,
“என்ன ப்ளீஸ்?” என குறும்பாக வந்தது அவள் குரல்.
“விடுடா… ஐ கான்ட்…” விழிகளை மூடியவன் வாய்க்குள் வார்த்தை அரைகுறையாக நின்றுப்போக, அவன் கீழிதழில் பாதி அவன் பற்களுக்குள் பதட்டமாய் சிதையுண்டது.
அவன் முகம் பார்த்து முன்னால் வந்து நின்றவள் அவன் பற்களுக்கு இடையில் சிக்கியிருந்த இதழினை மெல்ல தன் விரல்களால் விடுவித்துவிட்டு வளைந்த முறுவலுடன், “தட்ஸ் மைன்…” என்றாள் அவன் இதழ்களை பார்வையால் வருடி கிசுகிசுப்பாக.
அவள் கையினை விலக்கிவிட்டு நகர முயன்றவனின் இடையினைப் பிடித்திழுத்து, “சொன்னேன் இல்ல என்னதுனு…” என்றதுடன் அவன் விழிகளை உறுத்து விழித்தவள் அவன் இதழ்களில் ஆழப் புதைந்து காணாமல் போனாள்.
மனைவியின் செய்கைக்கு உடன்பட முடியாமல் தவித்தவனின் இதயத்துடிப்பு நூறு மடங்காய் எகிற, சுகமாய் அவளுள் தொலைந்த தன் இதழ்களை ஏமாற்றத்தோடு அலைப்புற்றுத் தேடிக் கொண்டிருந்தான் அமிழ்தினியன்.
விலகிய நொடியில் அரை வினாடி பார்வை மனைவியை சுற்றி வந்தது. எண்ணவோட்டம் முழுக்க அவளை சுற்றியே இருக்க தன் மனதினை வஞ்சிக்காமல் இருக்க முடியவில்லை அவனால். ஏனோ இன்று தன் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க முடியாமல் அனைத்தையும் கொட்டி விட்டான். அதன் பின்னர் தான் அவளை பற்றின யோசனைகள் எல்லாம் வலுத்துக் கொண்டிருக்கின்றன. ரணமாய் இருவருக்கும் இடையிலிருந்த இடைவெளி அவனை பெரிதும் வதைத்தாலும் அதற்கு மருந்தாய் அவள் தருவித்த முத்தச் சிதறல்களில் மொத்தமாய் தொலைந்து தான் போனான் அமிழ்தினியன்.
“அமிழா…” அவள் அழைப்பில் திடுக்கிட்டு நிமிர்ந்தவனின் கழுத்தினை சுற்றிலும் மாலையாக தன் கைகளை கோர்த்தவள்,
“நீ என்கிட்ட தோத்து தான் போகணும்டா…” என சொல்ல வெறுமையான பார்வையுடன் வேறெங்கோ பார்த்து அமைதியாக நின்றிருந்தான் அமிழ்தினியன்.
“இங்க என்னை பாருங்க…” என அவன் கன்னங்களை இழுத்துப் பிடித்து தன்னை விடாப்பிடியாக காண செய்தவளுக்கு சிறுபிள்ளையாக தன் முகத்தினை தூக்கி வைத்திருந்தவனுக்கும் தன் மகள்களுக்கும் பெரிதாய் எந்த வித்தியாசமும் இருப்பதாக அவளுக்கு தெரியவில்லை.
“உங்களால மட்டும் தான் அத்தான் இப்படியெல்லாம் யோசிக்க முடியும்” என சிரிப்புடன் துவங்கியவள்,
“ஆறு மாசமா இந்த மனுஷன் நம்பலை திரும்பி கூட பார்க்கலையே ஒருவேள, இவருக்கு நம்ப மேல இருந்த ஈர்ப்பு குறைஞ்சிடுச்சோனு நான் கவலை பட்டுக்கிட்டு இருந்தா… நீங்க என்னடானா உங்க பொண்டாட்டிய அவளுக்கே தெரியாம சத்தமில்லாம சைட் அடிச்சிட்டு இருந்திருக்கீங்க… கல்யாணத்துக்கு முன்னாடி தான் அப்படி இருந்தீங்கனா இப்பவும் அப்படியேதானா அத்தான்…” அவள் பார்வைகள் எல்லாம் அவனிடம் அவனை நிதர்சனமாய் கேட்டு நின்றதை சொல்லவும் வேண்டுமா.
எதையோ சொல்ல வந்தவனை கைநீட்டி தடுத்தவள், “அத்தான், ஒருவேளை நான் உங்களை காதலிக்காம இருந்திருந்தா உங்களை பாக்காம இருந்திருந்தா என்னோட பிரச்சனைய நான் ஒரு விஷயமாவே நினைச்சிருக்க மாட்டேன். எத்தனையோ பேர் குழந்தை இல்லாம, கல்யாணம் பண்ணிக்காம வாழுறாங்கல… அது வலிச்சாலும் அதை ஏத்துக்கிட்டு அவங்களை மாதிரி நானும் வாழ்ந்துட்டு போயிருப்பேன். ஆனா, நான் உங்களை காதலிச்சுட்டேனே. என்னை விட உங்களை அதிகமா நேசிக்க ஆரம்பிச்சிட்டேனே. அதனால் தானே எனக்குள்ள இந்த போராட்டம். அந்த போராத்தோட முடிவே நீங்க தானே அத்தான்” பெருமூச்சுடன் தொடர்ந்தாள்,
“அப்போதைக்கு சரி தான். ஆனா, அடுத்தடுத்த விஷயங்கள்ல கண்டிப்பா சிக்கல் வரும்னு நான் எதிர்பார்த்தேன். குழந்தைங்களை எல்லாம் நான் நினைச்சுக் கூட பார்த்ததில்ல… ஆனா, எல்லாதையும் எவ்வளவு அழகா ஹாண்டல் பண்ணீங்க… இதுவரைக்கும் எங்கேயுமே என்னை ஒரு சின்ன குறையா கூட எதுவுமே சொன்னதில்லை நீங்க. அவ்வளவு காதலை என்மேல வச்சிக்கிட்டு இப்ப என்னை விட்டு இப்படி விலகி விலகிப் போனா நான் மட்டும் என்னதான் அத்தான் பண்றது” தன் நிலையை விளக்கி அவன் செய்கைகளுக்கு அவனிடம் கோபித்துக் கொண்டாள்.
“இப்ப வரைக்கும் ஒருவாட்டி, ஒருவாட்டி கூட நீங்க என்னை அணுக நினைக்கலையே. அவ்வளவு கட்டுப்பாட்டோட இருக்கற என் அத்தானுக்கு நான் என்னையே கொடுக்கணும்னு நினைச்சது தப்பா? உங்களை கட்டிப் பிடிக்கும் போதும், முத்தம் கொடுக்கும் போதும் நானே சில சமயம் தடுமாறி இருக்கேன். ஆனா, அப்படி சின்னதா கூட நீங்க தடுமாறி நான் பாத்ததில்லையே… ஒருவேளை எனக்கான உங்களோட உணர்வுகளை நான் மொத்தமா பொசுக்கிட்டேனானு கூட நான் யோசிச்சு இருக்கேன். அப்ப கூட, அப்படி ஒருவேளை நீங்க என்னை நெருங்கிட்டா என்னால உங்களுக்கு என்ன பண்ணிட முடியும்னு அமைதியாகிடுவேன்…” அவள் விழிகளில் திரண்ட கண்ணீரை துடைத்து விட்டான் அமிழ்தினியன்.
‘இன்றோடு தங்களுடைய அத்தனை பாரங்களும் குறையட்டும்’ என நினைத்தவாறு அமைதியாக அவளை நோக்கினான் அவன்.
அன்று இரவு தான் வருவதற்கு தாமதமாகி விடும் என முன்பே தன் மனைவியிடம் தெரிவித்திருந்தான் அமிழ்தினியன். கல்லூரியில் அவனுடன் பணிபுரியும் பேராசிரியர் ஒருவர் பணியிலிருந்து ஓய்வு பெறுவதால் அவருக்கான பிரிவு உபசரிப்பு விழாவும், இரவு உணவு விருந்தும் நடப்பதாக அன்று ஏற்பாடாகி இருந்தன. அதை எல்லாம் முடித்துக் கொண்டு அவன் வீடு வந்து சேர்க்கையில் மணி இரவு பத்தைத் தொட்டு இருந்தது.
இரவு நேரம் சென்று வந்ததால் அனைவரும் அவரவரின் அறையில் முடங்கி இருக்க, அமிழ்தினியனும் நேராக தன்னுடைய அறைக்கு வந்தான். வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருந்த அறையை பார்த்தவாறே தங்களின் படுக்கை அறையிலிருந்த குளியலறைக்குள் புகுந்தவன் தன் வேலைகளை முடித்துக் கொண்டு வெளியே வருகையில் மேலும் பத்து நிமிடங்கள் கடந்திருந்தன.
சற்றே இலகுவான இரவு உடையில் தன் தலையை துவட்டியபடியே வெளியே வந்தவனின் விழிகள் அலைந்து தன் மனைவியையும் குழந்தைகளையும் தேட, அறையின் வலதுபுறத்திலிருந்த அலங்கார மேஜைக்கு முன்பாக நின்றுக் கொண்டு கண்ணாடியில் தெரியும் தன் பிம்பத்தை இடவலமாக திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள் மழைக்குழலி. அதுவும் அவனுடைய சட்டை ஒன்றினை அணிந்துக் கொண்டு முகத்தில் பொட்டு முதற்கொண்டு எவ்வித ஒப்பனையும் இல்லாமல் தன் சுருள் கேசத்தை வருடிக் கொண்டும் சட்டையினை பிடித்திழுத்து தன் சுற்றளவிற்கு ஏற்றவாறு இறுக்கிப் பிடித்துத் தன்னையே பார்த்திருந்தாள்.
இது அவ்வபோது நடப்பது தான். அவனுடைய பழைய சட்டைகளையும் அவன் முதல்நாள் அணிந்து கழற்றி வைத்திருந்த சட்டைகளையும் கூட தோன்றும் போது தானாகவே எடுத்து உடுத்திக் கொள்வது அவளது பழக்கம். அதிலும் இன்று, அவன் கழற்றிப் போட்டிருந்த உடையில் இருந்தவளை கண்ட கணவனின் நெஞ்சம் அவர்களின் கொடைக்கானல் நாட்களுக்கு சென்று திரும்பியது. அவளையே பார்த்தபடி அவளுக்கு பின்னால் வந்து நின்றவன், கண்ணாடியில் தெரிந்த அவள் பிம்பத்தில் தன் விழிகளை பதித்தபடியே தலையை துவட்ட, அவள் அவனை சிறிதும் கண்டுக் கொள்ளவே இல்லை.
‘ஃபங்ஷன் எப்படி போச்சு?’
‘என்ன சாப்ட்டிங்க?’
‘காஃபி எடுத்துட்டு வரவா?’ என இப்படியாக எதையாவது கேட்பாள் என அவன் எதிர்பார்க்க தன் பிம்பத்தில் பதிந்த தன் விழிகளை அசைக்கவே இல்லை அவள்.
“க்கும்…” என செறுமியவன், தன் துவாலையை ஐந்தடி உயரத்தில் அருகிலிருந்த துணிகளை உலர்த்தப் பயன்படுத்தப்படும் அடுக்கில் காய வைத்துவிட்டு தன் தலைமுடிகளை சிலுப்ப, அவனுடைய கேசத்தில் கோர்ந்திருந்த நீர்துளிகளில் சிலது அவள் முகத்தின் மீது வந்து மோதி தெறித்தது.
“பச்!” என சலித்துக் கொண்டாளே ஒழிய வேறெதுவும் பேசவில்லை.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவன் தனக்கு முதுகுக் காட்டி நின்றிருந்தவளின் இடையினை பின்னிருந்து இறுக்கமாக தன் இரு கைகளால் கோர்த்து தன் மார்பின் மீது மோதி நிற்கும் அளவிற்கு அவளை இழுத்து, “என்னடி ரொம்ப தான் சலிச்சுக்கிற?” என அவள் கழுத்து வளைவில் தன் முகத்தை புதைத்து இதழ் பதிக்கவும்,
“விடுங்க…” என்றவாறு அவனிடமிருந்து விலக பார்த்தவளை முன்பை விட இறுக்கமாக பிடித்து தன்னோடு நெருக்கமாக சேர்த்தணைத்த அமிழ்தினியன், “முடியாது ஜில்லு…” என மென்மையாக அவள் காதோரம் கிசுகிசுக்க, அவன் மீசைமுடிகள் உரசிய குறுகுறுப்பில் தன் முகத்தை வளைத்து சட்டென தன் கன்னங்களை விரல்களால் தொட்டு தழுவினாள்.
“எத்தனை தடவை தான் சொல்றது… என்னால உன்னை எப்பவும் விட முடியாதுனு… சொல்லி சொல்லியே எனக்கு வாய் வலிக்குது டி…” என்றவனின் இதழ்கள் தன்னை சூழ்ந்த உணர்வுகளிலிருந்து மீள முடியாமல் அவள் பளிங்கு பின்னங்கழுத்தில் தேங்கியது.
எதுவும் சொல்லாமல் அப்படியே அசையாமல் நின்றாள். இருவரின் பார்வையும் கண்ணாடியில் தெரிந்த மற்றவரின் பிம்பத்தை இம்சித்தது.
“பொழிலும் அவியும் எங்க? விளையாடிட்டு இருக்காங்களா? வெளிய காணோமே…” என கிசுகிசுப்பான குரலில் தன் மகள்கள் எங்கே என அவளிடம் வினவினான்.
“இன்னைக்கு ஃப்ரைடேல… பாவை அவங்கள கூட்டிட்டு போய் இருக்கா” இயல்பாக சொல்லிவிட்டு அவள் விலக முயல, அவளை தன் கைச்சிறைக்குள் கொணர்ந்தவன், “ஓ, மூவி நைட்டா!” என லேசாக முறுவலித்து, “இந்த ஷர்ட் உனக்கு பொருத்தமா இருக்கு ஜில்லு…” என அவள் இடையிலிருந்த கைகளை சட்டையை தாண்டிப் பதித்தான்.
“அத்தான்!” குரலே எழும்பவில்லை அவளுக்கு.
“இம்ம்!”
“என்ன இது விளையாட்டு?”
“என்ன என்ன விளையாட்டு? ஷர்ட்டும் என்னுது ஷர்ட் போட்டு இருக்கற பொண்ணும் என்னுது தானே… அப்பறம்?” குறும்பாக கேட்டான் அமிழ்தினியன்.
அமைதியாக நின்றிருந்தவளை ஒருமுறை ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தவனின் பார்வை சட்டென மாறவும் குழலியை வேகமாக தன்புறமாக திருப்பினான் அமிழ்தினியன்.
“என்னடா?” மெல்லிய குரலில் ஆதுரமாக அவன் கேட்க,
“ஒன்னுமில்லை அத்தான்…” என சமாளிப்பாகப் புன்னகைத்தாள்.
“ஜில்லு! இங்க என்னை பாரு…” அவளின் நாடி பிடித்து அவள் முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தியவனின் கண்களிலிருந்த ஏதோ ஒன்று அவளை அப்படியே அமிழ்த்தியது.
ஆழமாய் ஊடுருவிய விழிகளுடன் அவளை கூர்ந்தவன் திடீரென, “கவிதாகிட்ட ஏன் அப்படி கேட்ட ஜில்லு?” என்றதும் ஒன்றும் புரியாமல் அவளுடைய முகமும் விழிகளும் குழப்பத்தை தத்தெடுத்தன.
“நீ என்னை இன்னும் நம்பல இல்ல…”
“அத்தான்”
“நீ அவகிட்ட கேட்டதை பாத்தா அப்படி தான்டி இருக்கு…”
“...”
“மேடமுக்கு என்னை திருப்தி படுத்தனுமோ… அதுவும் எல்லா விதத்துலையும்… ஹ்ம்ம்?”
“...”
“எப்படிங்க மேடம் திருப்தி படுத்தலாம்னு இருக்கீங்க? இப்படியா…” அவளோடு தன் உடல் மொத்தத்தையும் ஒட்டிக் கொண்டு நின்றவனின் முகமும் பேச்சும் கரைக்காணாமல் இறுகிப் போய் இருந்தன.
நீர் திரையிட்ட விழிகளால் அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மழைக்குழலி. அவனை அப்படியே பிடித்து தன் விழிகளுக்குள் ஆழமாய் புதைத்துக் கொள்ளும் அளவிற்கு வேகம் பிறந்தது அவனுடைய பேச்சில். அமிழின் கண்கள் இரண்டும் அன்று போலவே இன்றும் சிவந்துப் போனது. மழைக்குழலியின் கண்களை ஆழ்ந்து பார்த்தவன் அவள் கன்னங்களை கைகளில் ஏந்தி,
“ஏன் ஜில்லு… உன்னை நீயே இப்படி கஷ்டப்படுத்திக்குற… இவ்வளவு நாள்ல நீ மறந்தே இருப்பனு நினைச்சேன். ஆனா, நீ அதை இன்னும் விடல. என் காதல் உனக்கு அந்த நம்பிக்கைய குடுக்கல அப்படிதானே?” வேகமாய் அவன் இதழ்களை தன் விரல்களினால் அழுத்தமாக மூடினாள் மனைவி.
“ப்ளீஸ் அத்தான்…” கலங்கிய அவள் விழிகளையே பார்த்து நின்றவன் அவளையே பார்க்க, “இதுக்கு தான் நாம பிரிஞ்சிடலாம்னு நான் முடிவெடுத்திருந்தேன். உங்களுக்கு என்னை புரியல. ஒரு பெண்ணா என் மனசு இப்ப எப்படி தவிக்குதுனு உங்களுக்கு புரியல…” வருந்தியவளின் உள்ளம் சொல்ல முடியாத வலியில் துவண்டது.
“நீங்க மறுக்க மறுக்க எனக்கு வேணும்னு தோணுது. நீங்க என்னை மறுக்க காரணம் நான் தான்னு எனக்கு தெரியும். எனக்கு எதாவது ஆகிடும்னு தானே ஒவ்வொரு முறையும் நீங்க தயங்கறிங்க… அப்பயெல்லாம் எனக்கு எப்படியாவது நாம சேர்ந்திட மாட்டோமானு தான் மனசு தவிக்குது. என்னை உங்ககிட்ட கொடுக்கணும்னு ஆசையா இருக்கு. ஒரு பெண்ணா, ஒரு மனைவியா நான் நினைக்கறதுல என்ன தப்பிருக்கு அத்தான்…”
தவிப்பாய் தன் இதழ்களை இறுக்கியவன் அவள் விழிகளை நேரடியாக சந்திக்க மறுத்தான்.
“நாம ரெண்டு பேரும் நிச்சயமா சந்தோஷமா தான் இருக்கோம். மத்த கணவன் மனைவிங்க மாதிரி அன்பா, அனுசரணையா, அன்யோன்யமா தான் இருக்கோம். பாசமான குடும்பம், குழந்தைனு எல்லாமே நிறைவா இருக்கு. ஆனா, எங்கையோ கசங்கி, கருகி உருக்குலைஞ்சு நிக்க வேண்டிய ரோஜா செடிக்கு அதுக்கு தேவையான எல்லாமே கொடுத்து பத்திரமா பராமிரிச்சு, அது நல்லா வளந்ததும் அதுல இருக்கற பூவ மட்டும் தூக்கி எறியற மாதிரி இருக்கு உங்க பேச்சும் செயலும்…”
“உளராத ஜில்லு…” சட்டென அவளை வேகமாக அணைத்தவனின் மூச்சுக் காற்றின் வெப்பம் கூடிக் கொண்டே போனது.
“நீங்க மட்டும் யாருக்கிட்டையும் என்னை விட்டுக் குடுக்காம… யாருக்கும் இந்த விஷயம் தெரியாம மறைச்சு உங்க மேலையே பழியையும் போட்டுக்கிட்டு… உங்க பொண்டாட்டிக்காக எல்லாம் பண்ணுவிங்களாம். ஆனா, நான் மட்டும் உங்களுக்காக எதையும் யோசிக்க கூடாது இல்ல. அதுவும் நான் விரும்பின என் அத்தானுக்காக நான் எதையுமே செய்யக் கூடாது”
“...”
“எனக்கு சரியாகனும்னு நான் எவ்வளவு நினைச்சேன் தெரியுமா அத்தான். உங்களோட குழந்தைய சும்மக்கற பாக்கியம் தான் எனக்கு இல்ல. ஆனா, இதுல கூடவா… நான் இவ்வளவு பேசுறதே தப்பு அத்தான். இதெல்லாம் கெஞ்சிக் கேட்டு வாங்குற விஷயம் இல்ல. எல்லாம் தானாவே நடக்கணும். என் விஷயத்துல அப்படி நடக்க சான்ஸே இல்ல, ஏன்னா நான் அதுக்கு தகுதியானவளே இல்லல”
அவன் மார்பில் சாய்ந்திருந்தவளின் தோள்களை பிடித்து அவளை தள்ளி நிறுத்தியவன், அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான்.
முகம் முழுவதும் ஜிவ்ஜிவ்வென்று சிவந்துப் போய்விட கோபத்தில் இதழ்களின் தசைகளை மென்றவனின் அழுத்தம் தாங்காமல் அவனுடைய கீழ் உதடு இரத்தத்தில் சூடாக நனைந்தது. தன் கன்னத்தை ஒரு கையால் தாங்கி நின்றிருந்தவளை உறுத்து விழித்தவன்,
“இன்னும் ரெண்டு வைக்கணும் இந்த வாய்க்கு? என்ன பேச்சு பேசுற… அறிவிருக்கா இல்லையாடி உனக்கு? உனக்கு ஒன்னுமே இல்ல. தகுதி அது இதுனு…” தவிப்பாய் உருகியவனின் கண்களில் மகரந்த ஈரத்தின் சாயல்.
“என்னை அப்படி மத்தவங்க சொல்லிட கூடாதுனு தானே இப்ப வரைக்கும் யாருக்கும் தெரியாம பார்த்துட்டு வரிங்க… ஆனா, நீங்க என்னை விட்டு தள்ளி இருந்து இப்படி நடந்துக்கறதுல எனக்கே அந்த டவுட் வருது…” அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பேச விடவில்லை அவன். அத்தனை ஆழமாய் அவளுள் இறங்கி இருந்தான். தன்னுடைய முழு கோபத்தையும் அவளிடம் காண்பித்திருந்தான்.
வார்த்தைகளை கொண்டு வடிக்க முடியாத மௌனம் அவனை முத்தத்தில் திறமாய் செதுக்கிவிட்டு அவளை நிலைகுலைய செய்திருந்தது. அவளின் முகம் முழுவதும் விரவிப் படர்ந்தவனின் இதழ்கள் சட்டையின் இடைவெளியில் கிடைத்த அவள் கழுத்தில் புதைய, தன் விரல்களை அவள் மீது வைத்து இறுக்கினான்.
“ஜில்லு… என்னை எப்பவுமே உன் வார்த்தையால சிதைச்சு சுக்கு நூறா உடைக்கவே பிறந்திருக்கியாடி… உன்கிட்ட இருக்கற என்னோட தயக்கமே வேற… ஆனா நீ பேசுறது… என்னால உன்னை காயப்படுத்த முடியாதுடி. ஆனா, நீ என்னை வார்த்தையாலே வதைக்குற. ஐ ஜஸ்ட் வான்ட் டூ லிவ் வித் யூ… அது போதும் எனக்கு”
“ஓ, அப்படியா? ரொம்பவே தேங்க்ஸ் அத்தான்… என்னை இவ்வளவு நாளும் நீங்க சகிச்சிக்கிட்டதுக்கு…” அன்றும் இதை தான் சொன்னாள் இன்றும் அதே வார்த்தையை தான் சொல்கிறாள். இத்தனை நாட்களில் அவளின் இந்த எண்ணத்தை மாற்ற முடியாத அளவிற்கா தன் காதல் இருந்திருக்கிறது என யோசித்தவனின் நெஞ்சம் அனலாய் கொதித்தது.
ஆழி பேராலையாய் தன்னை தாக்கிய உணர்வுகளின் பிடியில் சிக்குண்டு தவித்தவனுக்கு அவளின் வார்த்தைகள் அமிலமாய் எரிந்தது. அவளை பிடித்திழுத்து தன்புறமாக திருப்பியவனின் இதழ்கள் அவளுக்கான தண்டனையை வாரி வழங்கி துள்ளத் துள்ள அவளை வதைத்தது. கைகள் அவளின் மேனியில் ஊர்ந்து அவளை தன்னோடு இன்னும் இறுக்கமாய் இறுக்கியது.
அவன் நெருக்கத்தில், தான் உள்ளுக்குள்ளே மருகி மறைத்து புதைத்திருந்த உணர்வுகள் எல்லாம் பெறும் சுனாமியாய் தனக்குள் எழுந்ததை மறைக்க முடியாமல் அவன் முதுகினை தன் நகக்கண்களினால் அழுத்தினாள் மழைக்குழலி. தன் தொடுதலில் பார்வையில் துவண்டு சரிந்தவளை தன் கைகளுக்குள் சுழற்றியவன் அவள் காதருகே குனிந்து,
“சகிக்கிறேனா? உன்னையா?” என பல்லை கடித்துக் கொண்டாலும் அத்தனை சிரிப்புடன் கேட்டான்.
அவள் அமைதியாக இருக்கவும், “திமிர்… என் பொண்டாட்டிக்கு வாய் கொழுப்பும் திமிரும் ரொம்பவே அதிகம் தான்…” அவள் கன்னங்களுக்கு இடம்பெயர்ந்த இதழ்களில் கோபத்தோடு தாபத்தின் சுவடுகள். அவளின் மனதை திண்டாடி திகைக்க வைக்கும் அளவுக்கு அவளை தன்னோடு இறுக்கினான். இத்தனை நாளாய் சேர்த்து வைத்து இன்று அவளை மூர்ச்சையாக்கினான்.
“உனக்கான என் உணர்வுகள் ரொம்ப மோசமானது ஜில்லு. ஒரு முத்தத்துல, ஒரு அணைப்புல ஏன் நாம் கொண்ட உறவால கூட என்னால உன்னை நிச்சயமா கடந்து வர முடியாது. எனக்கு உன்மேல இருக்கற காதலுக்கும் காதலை தாண்டிய எல்லாத்துக்கும் முன்னாடி காலமே தோத்துப் போயிடும். ட்ரஸ்ட் மீ… உன்னை பத்தின அத்தனை சுகமான எண்ணங்களும் எனக்கு இருந்துச்சு டி… ஏன் இப்பவும் கூட என் ஆழ் மனசுல இருக்கு. நான் தான் அந்த பக்கங்களை எல்லாம் உன்கிட்ட காட்ட விரும்பல. அகுக்காக என் காதலை சந்தேகப்பட்டு பேசுவியா நீ?”
“சந்தேகமெல்லாம் இல்லத்தான்…” அவசரமாக மறுத்தவளின் கழுத்தில் முகம் புதைத்தவன் அவள் அணிந்திருந்த சட்டையை இறுக்கிப் பிடித்து தன் கோபத்தை அடக்கினான். தன் கோபத்தை கூட இவள் தாங்க மாட்டாளே என்று தான் தோன்றியது அவனுக்குள்.
“என் கண்ணை நிமிர்ந்து பாரு டி… உன்கிட்ட அதை காட்டாம இருக்க நான் எவ்வளவு பாடுபட்டு கடந்து வந்தேன்னு புரியும்… என்னை விட்டு தள்ளி தள்ளிப் போன என் பொண்டாட்டிக்கு, என் காதலை வாங்கிக்கிட்டு என்னை உயிரோட கொன்னுட்டு இருந்த என் பொண்டாட்டிக்கு, என்னை வேறொரு கல்யாணம் பண்ணிக்க சொல்லி டார்ச்சர் பண்ண என் பொண்டாட்டிக்கு… அதெல்லாம் என்னால எப்படி சொல்லிப் புரிய வைக்க முடியும். எல்லாத்தையும் எனக்குள்ள புதைச்சுக்கிட்டு இருந்தேன். அதையெல்லாம் உனக்கு தெரியப்படுத்த எனக்கு விருப்பமில்லை. ஏன்னா நான் அதெல்லாம் கடந்து வந்துட்டேன் ஜில்லு…”
“...”
“இப்பவும் கூட எனக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லனு தான் நான் நினைச்சிருந்தேன். ஆனா, இந்த ஒரு மாசமா என்னை நீ கொல்ற டி… உன் பார்வையால, பேச்சால என்னை எப்படி தவிக்க விடுற தெரியுமா… என்னால உன் கண்ணை பார்த்துப் பேச முடியலடி. ஒரு காலத்துல என் கற்பனையில நாம எப்படி எல்லாம் இருக்கணும்னு ஆசைப்பட்டேனோ அப்படியெல்லாம் மாறி என்னை வதைக்குற. ஏதோ டீன் ஏஜ் பையன் மாதிரி என்னை நினைக்க வைக்கற. இப்பல்லாம் நீ என்னை நெருங்கும்போது எனக்கு தான் படபடப்பா இருக்கு. எங்கையோ நான் புதைச்சு வச்ச உணர்வுகள் எல்லாம் வேகமாக நெஞ்சமெல்லாம் வந்து பாயுது. என் கண்கள் இரண்டும் காதல் பித்துப் பிடிச்சு திணறிப் போய் சிவந்துப் போகுது டி…”
“...”
“வயசாகிடுச்சுடா உனக்குனு கன்னத்துல அறையனும் போல இருக்கு. உன்னை நான் எந்தவிதத்துலயும் காயப்படுத்தக் கூடாதுனு முடிவு எடுத்து எதுவும் வேண்டாம்னு உறுதியா இருந்தவன். இப்ப இப்படி எல்லாம் யோசிக்கறதுக்கு எனக்கே அசிங்கமா இருக்கு டி. என்னால உன்னை ஃபேஸ் பண்ணவே முடியல. அவ்வளவு தானாடா நீ? நீயும் மத்த ஆம்பளைங்க மாதிரி தானானு என்னை என் மனசாட்சி கேவலமாய் கேக்குது. இப்ப உனக்கு சரியானதுனால சரி, ஒருவேளை இல்லைனா அப்ப இது எவ்வளவுப் பெரிய அபத்தம். அப்ப இவ்வளவு நாளும் நான் காட்டின காதலுக்கு அர்த்தமே இல்லாத மாதிரி இருக்கு ஜில்லு…”
அவனை காயப்படுத்தி சென்ற அவளுடைய வார்த்தைகளின் மூலமாய் அவன் மனதிலிருந்த தவிப்புகள் எல்லாம் அவளுக்கு புரிய நீர் நிறைந்த கண்களுடன் உணர்ச்சி ததும்பிய முகமாக நின்றிருந்தாள் மழைக்குழலி.
“ஐ’யம் ஸாரி… என் லைஃப்ல நீ மட்டும் என்னோட எல்லா விஷயத்துலையும் விதிவிலக்கு தான். உன்கிட்ட எப்பவும் நான் தோத்து தான் போயிடுறேன் டி…” அவளை விட்டு விலகி நின்றவன் அவள் முகம் காண தயங்கி மறுபுறமாக திரும்பவும் பின்னாலிருந்து அவனுடைய சட்டையை பாய்ந்து இழுத்துக் கொண்டவள் அவனுடைய முதுகில் ஆழமாய் முகம் புதைத்து நின்றாள்.
சற்றே இறுகிய அவனுடைய உடல் மெல்ல தளர்ந்து, கை கால்கள் எல்லாம் நடுங்கியது. வெட்கம் கலந்த குறும்பு சிரிப்போடு அவன் முதுகில் தன் இதழ்களின் வரிகளை அழுத்தமாய் பதித்து அவனை தன்னை நோக்கி அவள் இழுக்க, உயிர் வதைப்படும் அவதியில் நின்றிருந்தான் அமிழ்தினியன்.
“ப்ளீஸ் ஜில்லு…” தன்னிலிருந்து அவள் கைகளை அவன் விடுவிக்க,
“என்ன ப்ளீஸ்?” என குறும்பாக வந்தது அவள் குரல்.
“விடுடா… ஐ கான்ட்…” விழிகளை மூடியவன் வாய்க்குள் வார்த்தை அரைகுறையாக நின்றுப்போக, அவன் கீழிதழில் பாதி அவன் பற்களுக்குள் பதட்டமாய் சிதையுண்டது.
அவன் முகம் பார்த்து முன்னால் வந்து நின்றவள் அவன் பற்களுக்கு இடையில் சிக்கியிருந்த இதழினை மெல்ல தன் விரல்களால் விடுவித்துவிட்டு வளைந்த முறுவலுடன், “தட்ஸ் மைன்…” என்றாள் அவன் இதழ்களை பார்வையால் வருடி கிசுகிசுப்பாக.
அவள் கையினை விலக்கிவிட்டு நகர முயன்றவனின் இடையினைப் பிடித்திழுத்து, “சொன்னேன் இல்ல என்னதுனு…” என்றதுடன் அவன் விழிகளை உறுத்து விழித்தவள் அவன் இதழ்களில் ஆழப் புதைந்து காணாமல் போனாள்.
மனைவியின் செய்கைக்கு உடன்பட முடியாமல் தவித்தவனின் இதயத்துடிப்பு நூறு மடங்காய் எகிற, சுகமாய் அவளுள் தொலைந்த தன் இதழ்களை ஏமாற்றத்தோடு அலைப்புற்றுத் தேடிக் கொண்டிருந்தான் அமிழ்தினியன்.
விலகிய நொடியில் அரை வினாடி பார்வை மனைவியை சுற்றி வந்தது. எண்ணவோட்டம் முழுக்க அவளை சுற்றியே இருக்க தன் மனதினை வஞ்சிக்காமல் இருக்க முடியவில்லை அவனால். ஏனோ இன்று தன் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க முடியாமல் அனைத்தையும் கொட்டி விட்டான். அதன் பின்னர் தான் அவளை பற்றின யோசனைகள் எல்லாம் வலுத்துக் கொண்டிருக்கின்றன. ரணமாய் இருவருக்கும் இடையிலிருந்த இடைவெளி அவனை பெரிதும் வதைத்தாலும் அதற்கு மருந்தாய் அவள் தருவித்த முத்தச் சிதறல்களில் மொத்தமாய் தொலைந்து தான் போனான் அமிழ்தினியன்.
“அமிழா…” அவள் அழைப்பில் திடுக்கிட்டு நிமிர்ந்தவனின் கழுத்தினை சுற்றிலும் மாலையாக தன் கைகளை கோர்த்தவள்,
“நீ என்கிட்ட தோத்து தான் போகணும்டா…” என சொல்ல வெறுமையான பார்வையுடன் வேறெங்கோ பார்த்து அமைதியாக நின்றிருந்தான் அமிழ்தினியன்.
“இங்க என்னை பாருங்க…” என அவன் கன்னங்களை இழுத்துப் பிடித்து தன்னை விடாப்பிடியாக காண செய்தவளுக்கு சிறுபிள்ளையாக தன் முகத்தினை தூக்கி வைத்திருந்தவனுக்கும் தன் மகள்களுக்கும் பெரிதாய் எந்த வித்தியாசமும் இருப்பதாக அவளுக்கு தெரியவில்லை.
“உங்களால மட்டும் தான் அத்தான் இப்படியெல்லாம் யோசிக்க முடியும்” என சிரிப்புடன் துவங்கியவள்,
“ஆறு மாசமா இந்த மனுஷன் நம்பலை திரும்பி கூட பார்க்கலையே ஒருவேள, இவருக்கு நம்ப மேல இருந்த ஈர்ப்பு குறைஞ்சிடுச்சோனு நான் கவலை பட்டுக்கிட்டு இருந்தா… நீங்க என்னடானா உங்க பொண்டாட்டிய அவளுக்கே தெரியாம சத்தமில்லாம சைட் அடிச்சிட்டு இருந்திருக்கீங்க… கல்யாணத்துக்கு முன்னாடி தான் அப்படி இருந்தீங்கனா இப்பவும் அப்படியேதானா அத்தான்…” அவள் பார்வைகள் எல்லாம் அவனிடம் அவனை நிதர்சனமாய் கேட்டு நின்றதை சொல்லவும் வேண்டுமா.
எதையோ சொல்ல வந்தவனை கைநீட்டி தடுத்தவள், “அத்தான், ஒருவேளை நான் உங்களை காதலிக்காம இருந்திருந்தா உங்களை பாக்காம இருந்திருந்தா என்னோட பிரச்சனைய நான் ஒரு விஷயமாவே நினைச்சிருக்க மாட்டேன். எத்தனையோ பேர் குழந்தை இல்லாம, கல்யாணம் பண்ணிக்காம வாழுறாங்கல… அது வலிச்சாலும் அதை ஏத்துக்கிட்டு அவங்களை மாதிரி நானும் வாழ்ந்துட்டு போயிருப்பேன். ஆனா, நான் உங்களை காதலிச்சுட்டேனே. என்னை விட உங்களை அதிகமா நேசிக்க ஆரம்பிச்சிட்டேனே. அதனால் தானே எனக்குள்ள இந்த போராட்டம். அந்த போராத்தோட முடிவே நீங்க தானே அத்தான்” பெருமூச்சுடன் தொடர்ந்தாள்,
“அப்போதைக்கு சரி தான். ஆனா, அடுத்தடுத்த விஷயங்கள்ல கண்டிப்பா சிக்கல் வரும்னு நான் எதிர்பார்த்தேன். குழந்தைங்களை எல்லாம் நான் நினைச்சுக் கூட பார்த்ததில்ல… ஆனா, எல்லாதையும் எவ்வளவு அழகா ஹாண்டல் பண்ணீங்க… இதுவரைக்கும் எங்கேயுமே என்னை ஒரு சின்ன குறையா கூட எதுவுமே சொன்னதில்லை நீங்க. அவ்வளவு காதலை என்மேல வச்சிக்கிட்டு இப்ப என்னை விட்டு இப்படி விலகி விலகிப் போனா நான் மட்டும் என்னதான் அத்தான் பண்றது” தன் நிலையை விளக்கி அவன் செய்கைகளுக்கு அவனிடம் கோபித்துக் கொண்டாள்.
“இப்ப வரைக்கும் ஒருவாட்டி, ஒருவாட்டி கூட நீங்க என்னை அணுக நினைக்கலையே. அவ்வளவு கட்டுப்பாட்டோட இருக்கற என் அத்தானுக்கு நான் என்னையே கொடுக்கணும்னு நினைச்சது தப்பா? உங்களை கட்டிப் பிடிக்கும் போதும், முத்தம் கொடுக்கும் போதும் நானே சில சமயம் தடுமாறி இருக்கேன். ஆனா, அப்படி சின்னதா கூட நீங்க தடுமாறி நான் பாத்ததில்லையே… ஒருவேளை எனக்கான உங்களோட உணர்வுகளை நான் மொத்தமா பொசுக்கிட்டேனானு கூட நான் யோசிச்சு இருக்கேன். அப்ப கூட, அப்படி ஒருவேளை நீங்க என்னை நெருங்கிட்டா என்னால உங்களுக்கு என்ன பண்ணிட முடியும்னு அமைதியாகிடுவேன்…” அவள் விழிகளில் திரண்ட கண்ணீரை துடைத்து விட்டான் அமிழ்தினியன்.
‘இன்றோடு தங்களுடைய அத்தனை பாரங்களும் குறையட்டும்’ என நினைத்தவாறு அமைதியாக அவளை நோக்கினான் அவன்.