- Messages
- 1,288
- Reaction score
- 3,788
- Points
- 113
நேரம் – 14 
“இங்கயே நிறுத்து. நான் இறங்கிக்கிறேன் இசைவாணி!” முதல்முறை பரிதி முணுமுணுத்தது அவளுக்கு கேட்கவில்லை போல.
“என்ன?” எனக் கேட்டு திரும்பியவள், பின்னர் அவசரமாய் பார்வையை முன்னே வைத்தாள் இசைவாணி.
“இங்கேயே நிறுத்து. எங்க கூட்டிட்டு போற நீ?” சற்றே குரலை உயர்த்தி அவள் செவியோரம் இவன் கத்தவும், அதில் திடுக்கிட்டவள்,
“காதுகிட்டே வந்து கத்தி தொலையாத!” என கடுகடுத்தவள், “ஆமா.. இவர் பெரிய ஆணழகன். கடத்திட்டுப் போறாங்க. அமைதியா வந்து தொலை. ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணி விட்றேன். இப்படியே போய் உங்க வீட்ல நின்னா எவன்கிட்டயோ செம்மத்தியா வாங்கி கட்டிக்கிட்டேன்னு பயந்துடப் போறாங்க!” என்றாள் கேலியாக.
அதில் சடைத்தவன், “ஒன்னும் வேணாம். நான் வீட்டுக்குப் போறேன்!” என அவன் கோபமாக கூற, அவன் பேச்சை காதிலே வாங்காதவள், தன் வீட்டிற்குள்ளே வாகனத்தைச் செலுத்தினாள். கடையில் ஆட்கள் இருந்ததால் மார்த்தாண்டம் மகனைக் கவனிக்கவில்லை.
“உள்ள வா...” என அவனைக் கையோடு அழைத்துச் சென்றாள் இசைவாணி. சிடுசிடுப்புடனே அவளுக்கு இயைந்தான் இவன்.
அப்போதுதான் சுந்தரி பசிக்கிறது எனத் தேநீரையும் சர்க்கரை இல்லாத ரொட்டியையும் எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்து உண்ணத் தொடங்கினார். மகள் வரும் நேரமாதலால் அவளுக்காகவும் சேர்த்து தேநீர் தயாரித்து வைத்துக் காத்திருந்தார். ஆனால் அவளோடு பரிதியும் வந்தான்.
நெற்றியில் சிராய்ப்பு, கிழிந்த சட்டை, புழுதியில் புரண்ட உடலுமாக வாந்தவனைப் பார்த்து அதிர்ந்து எழுந்து நின்றவர், “தம்பி... என்னாச்சு? ஏன் இப்படி?” எனப் பதறி அவனருகே வந்தார்.
“ம்ப்ச்... ம்மா... பதறாத. ஒன்னும் இல்ல. பைக் ஓட்டும்போது சாகசம் பண்ணி தம்பி புதையல் எடுத்துட்டாப்புல. நான்தான் அழுதுட்டு இருந்தவரை சமாதானம் பண்ணி ஃபர்ஸ்ட் எய்ட் பண்ண கூட்டிட்டு வந்தேன். நீ போய் ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸை எடுத்துட்டு வா!” என சுந்தரிக்கும் அவனுக்கும் இடையே நுழைந்தாள் அவள்.
“ஏன்டீ... அவர் கீழே விழுந்துட்டாரு. நீ நக்கல் பண்ற!” மகளை முறைத்தப் பெரியவர், “வந்து உட்காருப்பா...” என நீள்விருக்கையில் அவனை அமரப் பணித்துவிட்டு, உள்ளே சென்று முதலுதவிப் பெட்டியை எடுத்து வந்தார்.
அதை வாங்கிய இசைவாணி அவளே அவனது காயத்தை வெகுசிரத்தையாக துடைத்தாள். சுந்தரி அவனருகே வர முயல, “ம்மா... அவனுக்கு ஏதாவது குடிக்க கொண்டு வா!” என அவரை அப்புறப்படுத்திவிட்டு வேலையைத் தொடர்ந்தாள்.
“ஸ்ஸ்...” அவன் சட்டென கையை எடுத்துவிட்டு முனங்க, “ரோட்டைப் பார்த்து ஓட்டாம சாகசம் பண்ணா இப்படித்தான் வலிக்கும். கொஞ்சம் பொறுத்துக்கோ!” என்றுவிட்டு காயத்தை துடைத்து மருந்திட்டவளைப் பார்த்து முறைத்தவன் பெருமூச்சுடன், “சாரி இசைவாணி!” என்றான் சின்ன குரலில். அவளுடன் வரும்போது கிடைத்த பத்து நிமிடத்தில் நடந்த அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்த மனது ஒருவழியாய் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு விட்டது. அதனாலே தன்முனைப்பைத் தூக்கிப் போட்டுவிட்டு மன்னிப்பைக் கேட்டான்.
“என்ன திடீர் ஞானோதயம்? அவ்வளோ நல்லவன் இல்லையே நீ?” என்றவள் நெற்றியில் அவன் கோபமூச்சு படர்ந்தது போல. அதை உணர்ந்தவள், விரைந்து வேலையை முடித்து எழ முயன்றாள்.
அப்போதுதான் அவன் நெற்றி காயம் நினைவு வர, அதைப் பார்த்துவிட்டு துடைத்து மருந்திட்டாள். வெகு அருகில் தெரியும் அவள் முகம், மூக்குத்தியோடு மின்னிய மூக்கு, ரோஜாவுக்கும் சிவப்புக்கும் இடையே கோடு போட்டு பிரித்தது போலொரு நிறத்திலிருந்த உதடுகள், ஆங்காங்கே பரு வந்து வடுவாகிய தழும்புகள் என அவன் விழிகள் அவளை மெதுவாய் மேய்ந்தன.
பரிதியின் ஆராய்ச்சி பார்வை கொடுத்த அசௌகரியத்தில் அவனை முறைத்து எழ முயன்றாள் இசைவாணி.
அவள் கையைப் பிடித்தவன், “நிஜமா சாரி!” என்றான் அவள் முகம் பார்த்து தயங்கி.
அவனை சில நொடிகள் ஆழப் பார்த்தவள், “விடு...” எனத் தன் கையை உருவினாள். சுந்தரி குளிர்ந்த பானத்தை அவனிடம் கொடுத்தார். அவனருகே அவர் அமருமுன்னே இவள் உட்கார்ந்துவிட்டாள். அவளது செய்கைகளை ஒருவித புருவச்சுழிப்புடன் பார்த்துவிட்டு பழச்சாற்றை அருந்தினான் பரிதி.
சுந்தரி அவனிடம் எப்படி விபத்து நிகழ்ந்தது என ஆராய்ச்சியைத் தொடங்க முயல, “ம்மா... அவனுக்கு டையர்டா இருக்கும். என்னாச்சுன்னு நானே சொல்றேன். அவன் போய் ரெஸ்ட் எடுக்கட்டும்!” என அவர்கள் பேச்சு வார்த்தை ஆரம்பிக்கும் முன்னே அதற்கொரு முற்றுப்புள்ளி வைத்தாள்.
“ஆமா தம்பி... நம்ப இன்னொரு நாள் பேசலாம். நீங்க போய் ரெஸ்ட் எடுங்க. உடம்பை பார்த்துக்கோங்க!” என அவர் கூற, “சரிங்க ஆன்ட்டி...” என அவன் வெளியே செல்ல, வாணியும் அவனோடு நகர்ந்தாள்.
காலணியை மாட்டிவிட்டு நிமிர்ந்தவன், “என்ன... உங்கம்மாகிட்டே பேச விடாம என்னைத் தொரத்தி விடுறதுலயே குறியா இருக்க? என் மேல அவ்ளோ பயமா போட்டு விட்டுடுவேன்னு?” என நக்கலாக கேட்டான்.
அவனை மேலிருந்து கீழாக கேலியாகப் பார்த்தவள், “உன்னைப் பார்த்து நான் ஏன் டா பயப்படணும்?” என அலட்சியமாகத் தோளைக் குலுக்கினாள்.
அதில் சீண்டப்பட்டவன், “இப்பவே போய் உங்கம்மாட்ட பத்தி வைக்கிறேன்!” என உள்ளே செல்ல முயன்றவனின் கால்சராயலிருந்த இடுப்பு பட்டையைப் பிடித்திழுத்து சுவரோடு சாய்த்தவள், “இப்போ மட்டும் நீ போய் என் அம்மாகிட்டே நீ பேசுன ஒன்னு இல்ல, நூறு அக்ரீமெண்ட் போட்டாலும் அவங்க பொண்ணை உனக்கு கல்யாணம் பண்ணித் தர மாட்டாங்க!” என்றாள் உதட்டை வளைத்துக் கேலியாக.
பரிதிக்கு அவள் வார்த்தைகள் பாதிதான் புத்தியில் ஏறியது. அருகே தெரிந்த அந்த கோதுமை நிற விழிகள் அவனை சலனப்படுத்தின. படபடத்துப் போனவன், நொடியில் பார்வையை நகர்த்தி, “என்ன லூசு மாதிரி உளர்ற!” என்றவாறே அவள் கையைத் தன்னிடமிருந்து பிரித்து நகர்ந்து நின்றான். இன்னுமே அவள் விரல்கள் இடுப்பு பட்டையோடு ஒட்டிக் கொண்டதை போல உணர்ந்து அவ்விடத்தை அவளறியாமல் தட்டிவிட்டான்.
“இங்கயே நிறுத்து. நான் இறங்கிக்கிறேன் இசைவாணி!” முதல்முறை பரிதி முணுமுணுத்தது அவளுக்கு கேட்கவில்லை போல.
“என்ன?” எனக் கேட்டு திரும்பியவள், பின்னர் அவசரமாய் பார்வையை முன்னே வைத்தாள் இசைவாணி.
“இங்கேயே நிறுத்து. எங்க கூட்டிட்டு போற நீ?” சற்றே குரலை உயர்த்தி அவள் செவியோரம் இவன் கத்தவும், அதில் திடுக்கிட்டவள்,
“காதுகிட்டே வந்து கத்தி தொலையாத!” என கடுகடுத்தவள், “ஆமா.. இவர் பெரிய ஆணழகன். கடத்திட்டுப் போறாங்க. அமைதியா வந்து தொலை. ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணி விட்றேன். இப்படியே போய் உங்க வீட்ல நின்னா எவன்கிட்டயோ செம்மத்தியா வாங்கி கட்டிக்கிட்டேன்னு பயந்துடப் போறாங்க!” என்றாள் கேலியாக.
அதில் சடைத்தவன், “ஒன்னும் வேணாம். நான் வீட்டுக்குப் போறேன்!” என அவன் கோபமாக கூற, அவன் பேச்சை காதிலே வாங்காதவள், தன் வீட்டிற்குள்ளே வாகனத்தைச் செலுத்தினாள். கடையில் ஆட்கள் இருந்ததால் மார்த்தாண்டம் மகனைக் கவனிக்கவில்லை.
“உள்ள வா...” என அவனைக் கையோடு அழைத்துச் சென்றாள் இசைவாணி. சிடுசிடுப்புடனே அவளுக்கு இயைந்தான் இவன்.
அப்போதுதான் சுந்தரி பசிக்கிறது எனத் தேநீரையும் சர்க்கரை இல்லாத ரொட்டியையும் எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்து உண்ணத் தொடங்கினார். மகள் வரும் நேரமாதலால் அவளுக்காகவும் சேர்த்து தேநீர் தயாரித்து வைத்துக் காத்திருந்தார். ஆனால் அவளோடு பரிதியும் வந்தான்.
நெற்றியில் சிராய்ப்பு, கிழிந்த சட்டை, புழுதியில் புரண்ட உடலுமாக வாந்தவனைப் பார்த்து அதிர்ந்து எழுந்து நின்றவர், “தம்பி... என்னாச்சு? ஏன் இப்படி?” எனப் பதறி அவனருகே வந்தார்.
“ம்ப்ச்... ம்மா... பதறாத. ஒன்னும் இல்ல. பைக் ஓட்டும்போது சாகசம் பண்ணி தம்பி புதையல் எடுத்துட்டாப்புல. நான்தான் அழுதுட்டு இருந்தவரை சமாதானம் பண்ணி ஃபர்ஸ்ட் எய்ட் பண்ண கூட்டிட்டு வந்தேன். நீ போய் ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸை எடுத்துட்டு வா!” என சுந்தரிக்கும் அவனுக்கும் இடையே நுழைந்தாள் அவள்.
“ஏன்டீ... அவர் கீழே விழுந்துட்டாரு. நீ நக்கல் பண்ற!” மகளை முறைத்தப் பெரியவர், “வந்து உட்காருப்பா...” என நீள்விருக்கையில் அவனை அமரப் பணித்துவிட்டு, உள்ளே சென்று முதலுதவிப் பெட்டியை எடுத்து வந்தார்.
அதை வாங்கிய இசைவாணி அவளே அவனது காயத்தை வெகுசிரத்தையாக துடைத்தாள். சுந்தரி அவனருகே வர முயல, “ம்மா... அவனுக்கு ஏதாவது குடிக்க கொண்டு வா!” என அவரை அப்புறப்படுத்திவிட்டு வேலையைத் தொடர்ந்தாள்.
“ஸ்ஸ்...” அவன் சட்டென கையை எடுத்துவிட்டு முனங்க, “ரோட்டைப் பார்த்து ஓட்டாம சாகசம் பண்ணா இப்படித்தான் வலிக்கும். கொஞ்சம் பொறுத்துக்கோ!” என்றுவிட்டு காயத்தை துடைத்து மருந்திட்டவளைப் பார்த்து முறைத்தவன் பெருமூச்சுடன், “சாரி இசைவாணி!” என்றான் சின்ன குரலில். அவளுடன் வரும்போது கிடைத்த பத்து நிமிடத்தில் நடந்த அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்த மனது ஒருவழியாய் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு விட்டது. அதனாலே தன்முனைப்பைத் தூக்கிப் போட்டுவிட்டு மன்னிப்பைக் கேட்டான்.
“என்ன திடீர் ஞானோதயம்? அவ்வளோ நல்லவன் இல்லையே நீ?” என்றவள் நெற்றியில் அவன் கோபமூச்சு படர்ந்தது போல. அதை உணர்ந்தவள், விரைந்து வேலையை முடித்து எழ முயன்றாள்.
அப்போதுதான் அவன் நெற்றி காயம் நினைவு வர, அதைப் பார்த்துவிட்டு துடைத்து மருந்திட்டாள். வெகு அருகில் தெரியும் அவள் முகம், மூக்குத்தியோடு மின்னிய மூக்கு, ரோஜாவுக்கும் சிவப்புக்கும் இடையே கோடு போட்டு பிரித்தது போலொரு நிறத்திலிருந்த உதடுகள், ஆங்காங்கே பரு வந்து வடுவாகிய தழும்புகள் என அவன் விழிகள் அவளை மெதுவாய் மேய்ந்தன.
பரிதியின் ஆராய்ச்சி பார்வை கொடுத்த அசௌகரியத்தில் அவனை முறைத்து எழ முயன்றாள் இசைவாணி.
அவள் கையைப் பிடித்தவன், “நிஜமா சாரி!” என்றான் அவள் முகம் பார்த்து தயங்கி.
அவனை சில நொடிகள் ஆழப் பார்த்தவள், “விடு...” எனத் தன் கையை உருவினாள். சுந்தரி குளிர்ந்த பானத்தை அவனிடம் கொடுத்தார். அவனருகே அவர் அமருமுன்னே இவள் உட்கார்ந்துவிட்டாள். அவளது செய்கைகளை ஒருவித புருவச்சுழிப்புடன் பார்த்துவிட்டு பழச்சாற்றை அருந்தினான் பரிதி.
சுந்தரி அவனிடம் எப்படி விபத்து நிகழ்ந்தது என ஆராய்ச்சியைத் தொடங்க முயல, “ம்மா... அவனுக்கு டையர்டா இருக்கும். என்னாச்சுன்னு நானே சொல்றேன். அவன் போய் ரெஸ்ட் எடுக்கட்டும்!” என அவர்கள் பேச்சு வார்த்தை ஆரம்பிக்கும் முன்னே அதற்கொரு முற்றுப்புள்ளி வைத்தாள்.
“ஆமா தம்பி... நம்ப இன்னொரு நாள் பேசலாம். நீங்க போய் ரெஸ்ட் எடுங்க. உடம்பை பார்த்துக்கோங்க!” என அவர் கூற, “சரிங்க ஆன்ட்டி...” என அவன் வெளியே செல்ல, வாணியும் அவனோடு நகர்ந்தாள்.
காலணியை மாட்டிவிட்டு நிமிர்ந்தவன், “என்ன... உங்கம்மாகிட்டே பேச விடாம என்னைத் தொரத்தி விடுறதுலயே குறியா இருக்க? என் மேல அவ்ளோ பயமா போட்டு விட்டுடுவேன்னு?” என நக்கலாக கேட்டான்.
அவனை மேலிருந்து கீழாக கேலியாகப் பார்த்தவள், “உன்னைப் பார்த்து நான் ஏன் டா பயப்படணும்?” என அலட்சியமாகத் தோளைக் குலுக்கினாள்.
அதில் சீண்டப்பட்டவன், “இப்பவே போய் உங்கம்மாட்ட பத்தி வைக்கிறேன்!” என உள்ளே செல்ல முயன்றவனின் கால்சராயலிருந்த இடுப்பு பட்டையைப் பிடித்திழுத்து சுவரோடு சாய்த்தவள், “இப்போ மட்டும் நீ போய் என் அம்மாகிட்டே நீ பேசுன ஒன்னு இல்ல, நூறு அக்ரீமெண்ட் போட்டாலும் அவங்க பொண்ணை உனக்கு கல்யாணம் பண்ணித் தர மாட்டாங்க!” என்றாள் உதட்டை வளைத்துக் கேலியாக.
பரிதிக்கு அவள் வார்த்தைகள் பாதிதான் புத்தியில் ஏறியது. அருகே தெரிந்த அந்த கோதுமை நிற விழிகள் அவனை சலனப்படுத்தின. படபடத்துப் போனவன், நொடியில் பார்வையை நகர்த்தி, “என்ன லூசு மாதிரி உளர்ற!” என்றவாறே அவள் கையைத் தன்னிடமிருந்து பிரித்து நகர்ந்து நின்றான். இன்னுமே அவள் விரல்கள் இடுப்பு பட்டையோடு ஒட்டிக் கொண்டதை போல உணர்ந்து அவ்விடத்தை அவளறியாமல் தட்டிவிட்டான்.