- Messages
- 1,104
- Reaction score
- 3,173
- Points
- 113
நெஞ்சம் – 4
சிவப்பு விளக்கு மஞ்சளுக்கு மாறிப் பின் பச்சையைத் தொடவும் அந்தப் போக்குவரத்து கூட்டம் மெதுவாக கலையத் தொடங்க, ஆதிரை ஒருமுறை உயிர்ப்பித்தும் இயங்காத வாகனத்தை யோசனையுடன் பார்த்து பின்னர் இன்னொரு முறை இயக்கவும் அது உறுமியது.
ஒரு நிம்மதி பெருமூச்சுடன் சாலையில் கலந்தவள் செல்லும் வழியிலே எரிபொருளை நிரப்பிக் கொண்டாள். கண்கள் சாலையில் இருந்தாலும் கவனம் என்னவோ தேவாவின் பேச்சிலே நின்றுவிட்டது. விளம்பர படத்தில் நடிக்கவில்லை என்றால் வேலை இல்லை என்று உரைப்பானா? என கோபம் மூளை வரை உயர, சூடாகிப் போயிருந்தாள்.
இவர்களிடம் வேலை பார்த்தால் சொல்வது அனைத்திற்கும் தலையை ஆட்ட வேண்டும் என்றொரு கட்டாயமா என்ன? முனுக்கென கோபம் வந்துவிட, எதையும் யோசிக்காது வேலையை வேண்டாம் என உதறிவிட்டிருந்தாள். பெண்ணுக்கு கொஞ்சமே கொஞ்சம் சுயமரியாதை எட்டிப் பார்த்து தொலைக்க, தைரியமாக பேசிவிட்டாள். ஆனால் அடுத்து இதுபோலொரு பாதுகாப்பான வேலை எங்கே கிடைக்கும் என நிதான மனம் கேள்வி கேட்க, சட்டென ஒரு சோர்வு வந்து ஒட்டிக் கொண்டது.
மகனை வெளியே அழைத்துச் செல்லப் போகிறோம் என காலையிலிருந்து துளிர்விட்டிருந்த உற்சாகம் மொத்தமாய் வடிந்திருக்க, சொல்ல முடியாத வெறுமை ஆட் கொண்டது.
‘ஏன்...இதுதான் வேலையா? இதே போல வேறு வேலைத் தேடிக் கொள்ளலாம்!’ என சுய சமாதானம் செய்தாலும் இந்தப் பண்ணை வேலையில் பளு அதிகமே தவிர, மற்றபடி எவ்வித பிரச்சினையும் இல்லையே. யாரும் அவளைத் தவறாகப் பார்த்தோ, அணுகியதோ இல்லை. அதற்கு தேவாவும் ஒரு காரணம். தன்னிடம் வேலை பார்க்கும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை அவன் அளித்திருந்தான். வேறு வேலை கிடைப்பது எளிதுதான். ஆனாலும் இது போல வராதே என யோசனை சென்றது.
‘இது என்ன கவர்மெண்ட் வேலையா என்ன? எப்போது இருந்தாலும் இங்கிருந்து விலகத்தானே வேண்டும். வேறு எதாவது தேடிக் கொள்ளலாம்!’ என தற்போதைக்கு அதைக் கிடப்பிலிட்டவள் முயன்று வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் மகனை பள்ளியிலிருந்து அழைத்துக் கொண்டாள்.
“ம்மா... ராக்கி எனக்கு கிஃப்ட் வாங்கி கொடுத்தான். லிசா எனக்கு வாட்ச் கிஃப்ட் பண்ணா மா. மிஸ் எனக்கு பென் கொடுத்தாங்க!” என பின்னே அமர்ந்து தாயைக் கட்டிக்கொண்டு அபி வெகு உற்சாகத்துடன் அன்றைய நாளைப் பகிர்ந்து கொள்ள, ஆதிரைக்கு மற்றதெல்லாம் மறைந்து போனது. சின்ன சிரிப்புடன் அவனிடம் பேசியபடியே இருவரும் குழந்தைகள் விளையாடும் ஸ்னோ வேர்ல் எனப்பட்டும் பனித் திடலுக்குள் நுழைந்தனர்.
அனுமதி சீட்டை பெற்றுக் கொண்டு இவர்கள் உள்ளே நுழைய, “ம்மா... ஸ்னோ வேர்ல்டா மா?” என மகன் ஆர்பரித்தான். சுற்றிலும் கண்ணாடிக் கதவுகள் அமைக்கப்பட்டிருக்க, வெள்ளைப் புகை போல அந்த இடமே காட்சியளித்தது. உள்ளே சிறுவர் சிறுமியர் தாய் தந்தையுடன் விளையாடிக் கொண்டிருக்க, இவர்கள் பாதுகாப்பு உடையும், கையுறை, காலுறை என அனைத்தையும் அணிந்து கொண்டு உள்ளே நுழைந்தனர். அன்றைக்கு வார நாட்கள் என்பதால் பெரிதாய் கூட்டம் இல்லை. வெகு சிலரே இருந்தனர்.
ஆங்காங்கே நன்கு பயிற்சி செய்யப்பட்ட ஆட்கள் நின்று உதவினர். இவர்களும் உள்ளே நுழைய, குட்டி குட்டி துகளாய் பனிக்கட்டி மேலே விழுந்து உடல் சூட்டில் கரைந்து போக, அபியின் விழிகள் ஆர்வத்தில் விரிந்தன.
பனிக்கரடி பொம்மை அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்க, “ம்மா... பனிக்கரடி மா...” என ஓடிச் சென்று அதைச் சுற்றிப் பார்த்து கைகளால் தடவினான். அவனது ஆர்ப்பரிப்பில் ஆதிரையின் முகம் கனிந்தது. அவளுக்குமே அடிக்கடி மகனை வெளியே அழைத்துச் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் வேலை நேரம் ஒத்துழைப்பது இல்லை.
அலைபேசியை எடுத்தவள் அவன் செய்யும் சேட்டைகளை புகைப்படமாகவும் காணொளியாகவும் எடுத்தாள். அங்கிருந்த சிறுவர்களுடன் இவனும் சேர்ந்து விளையாட, அவனைத் தன் கண் பார்வையிலே வைத்திருந்தவள் செயற்கை மரத்தின் கீழே போட்டப்படிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.
ஆடி விளையாடி களைத்துப் போய் அவளிடம் வந்த அபினவ், “ம்மா... வாட்டர்!” என்றான் மூச்சு வாங்க.
“அபி... உக்காரு!” என அவனை அமர வைத்து ஆசுவாசம் செய்து நீரைப் புகட்டினாள். பின்னர் தாயும் மகனும் சேர்ந்து சுயமி புகைப்படங்களை எடுத்து தள்ளினர்.
நேரமானதை உணர்ந்தவள், “அபி, கிளம்பலாமா?” எனக் கேட்டாள்.
“அதுக்குள்ளேயுமா மா?” அவன் முகம் வாட, “ப்ம்ச்... இதே ஸ்னோ வோர்ல்ட்க்கு நெக்ஸ்ட் வீக் எண்ட் வரலாம் அபிமா. இப்போ நைட் ஆகிடுச்சு. சாப்ட்டு வீட்டுக்குப் போகணும்ல?” என அவன் கன்னத்தைப் பிடித்துக்கொண்டு குனிந்து கேட்டாள்.
தாயின் குரலிலே புரிந்து கொண்ட அபி, “வீகெண்ட் வரலாம். நிறைய டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்மா!” என்றான். ஆதிரைக்கு மகன் புரிதலில் முகம் மலர்ந்தது.
“சரி டா... போகலாம் வா!” என இருவரும் வெளியேறி ஒரு உணவகத்தில் இரவு உணவை முடித்துக் கொண்டு வீட்டிற்கு சென்றனர்.
ஆதிரை முன்பதிவு செய்திருந்த அணிச்சல் வீட்டின் கதவு முன்பிருக்க, “ம்மா... கேக்கா மா?” என ஓடிச் சென்று அதைத் தூக்கினான் சிறியவன். இவள் சின்ன புன்னகையுடன் தலையை அசைக்க, உள்ளே நுழைந்ததும் பையை ஒருபுறம் தூக்கிப் போட்டவன் அந்த அணிச்சலை பிரித்தான்.
“வெளியே போய்ட்டு வந்துட்டு அப்படியே கேக் வெட்டலாமா டா? ஓடு... ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு ரெப்ரெஷ்ஷாகிட்டு வா!” மென்மையாய் முறைத்த தாயிடம் நாக்கை நீட்டி துருத்திக் காண்பித்துவிட்டு குடுகுடுவென உள்ளே ஓடினான் அபினவ்.
இவளும் முகம் கை கால் கழுவி உடை மாற்றிவிட்டு அணிச்சலை நடுவீட்டில் வைத்து மெழுகு திரியை பற்ற வைக்க, “ம்மா... ப்ரெஷ் ஆகிட்டேன் மா!” என அவன் வரவும் சரியாய் இருந்தது.
“ஹேப்பி பெர்த் டே டூ அபிமா, ஹேப்பி பெர்த் டே டூ என் தங்கம்!” என அவள் பாட, அணிச்சலை வெட்டி தாய்க்கு ஊட்டினான் சின்னவன். இவளும் அவனுக்கு ஊட்டிவிட்டாள். பின்னர் சிறிய டப்பாவில் ருக்குவிற்கும் அவரது கணவருக்கும் எடுத்துக் கொடுத்துவிட, இவன் அவர்களிடம் கொடுக்க சென்றான்.
அதற்குள்ளே ஆதிரை கூடத்தை கூட்டி முடித்து அறைக்குள் நுழைந்து படுக்கையை சரிசெய்தாள். நேரம் இரவு பத்தை தொட்டிருந்தது. இன்னும் சிறிது நேரம் விழித்திருந்தால் காலையில் மகன் அத்தனை சீக்கிரத்தில் எழ மாட்டான் என அவளுக்குத் தெரியும். அதனாலே அவன் வந்தவுடன் அதட்டி உருட்டி தூங்க வைத்திருந்தாள்.
இவளுக்கு உறக்கம் வராது போக அலைபேசியை எடுத்து அதில் விழிகளை ஓட்டியவளுக்கு அப்போதுதான் நினைவு வந்தது. நேரமாகிவிட்ட போதிலும் எழுந்து கணினியை உயிர்ப்பித்து ராஜினாமா கடிதத்தை தேவாவிற்கு மின்னஞ்சல் செய்ததும்தான் அவளுக்குத் திருப்தியாய் இருந்தது.
ஒரு வாரம் நன்றாய் ஓய்வெடுக்க வேண்டும். வாரத்தின் ஒரு நாள் விடுமுறை சர்வ நிச்சயமாக அவளுக்குப் போதவில்லை. அன்றைக்கும் மகனை அழைத்துக்கொண்டு நீச்சல் வகுப்பு, வணிக வளாகம் என சுற்றுவதால் சுத்தமாய் ஓய்வெடுக்க முடிவதில்லை. ஓடிக் கொண்டே இருப்பது போலொரு எண்ணத்தில் பெரு மூச்சுவிட்டவள் ஒரு வாரம் என்ன ஒரு மாதம் கூட நன்றாய் விடுமுறை எடுத்து உடலை தேற்றிக்கொண்டு வேறு வேலைத் தேட வேண்டும் என எண்ணினாள்.
தற்போதைக்கு பணத்திற்கு குறைவில்லை. இவள் சம்பளத்தில் சேமித்த பணம் இருந்தது. அதுவும் இல்லாது ஊரில் குத்தகைக்கு விட்டிருந்த நிலத்திலிருந்து மாத மாதம் வரும் பணத்தை மகனின் படிப்பு செலவிற்காக என அவன் பெயரில் வங்கியில் சேமித்து வைத்திருந்தாள். எட்டு வருடங்களில் அது வெகு கணிசமான தொகையாக உருப்பெற்றிருந்தது. அதுவும் இல்லாது அவசரத் தேவையிருந்தால் எடுத்துக் கொள்ளலாம் என அவளது பாட்டியின் நகைகளையும் வங்கியில் வைத்திருந்தாள். அதனால் இப்போதைக்கு பணத்தை பற்றிய கவலை இல்லை. நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே செல்லும் உடலை கொஞ்சம் கவனிக்கலாம் என எண்ணம் தோன்றிற்று.
நேரம் பன்னிரண்டைத் தொடப் போகும் சமயத்தில் கணினியில் வேலை பார்த்து முடித்த தேவா அதை அணைக்க செல்ல, டொங் என்று முன்னே வந்து விழுந்த மின்னஞ்சலில் முகம் சுருக்கியவன் அதை திறக்க, ஆதிரையின் பெயரோடு ராஜினாமா கடிதம் வந்து விழ, “திமிரு பிடிச்சவ!” என்ற முணுமுணுப்போடு உடனே அதை ஏற்றுக் கொண்டதாய் பதில் போட்டுவிட்டான்.
அவளை விட்டுவிட்டால் வேறு யாரும் கிடைக்க மாட்டார்களா என்ன? இவளை விட திறமையான ஊழியரை பணியமர்த்த வேண்டும் என மனதில் சூளுரைத்தவன் படக்கென மடிக்கணினியை மூடிவிட்டு படுக்கையில் விழுந்தான்.
ஆதிரை அவன் பதிலைக் கவனித்தாலும் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை. மகனை அணைத்துக்கொண்டு உறங்கிப் போனாள்.
மறுநாள் காலையில் எவ்வித அவசரமும் காட்டாது பொறுமையாய் எழுந்து குளம்பி கோப்பையோடு தொலைக்காட்சி முன்பு அமர்ந்தாள். சில பல நிமிடங்கள் செய்தியை உள்வாங்கிவிட்டு மெதுவாய் மேலெழுந்த சேம்பேறித் தனத்துடன் சமைத்து முடித்திருந்தாள்.
அபி தூங்கிக் கொண்டிருக்க அவனை எழுப்பி இவளே பள்ளிக்கு தயார் செய்தாள். உணவை ஊட்டி விட்டவள், “அபி... கெட் ரெடி!” என்றாள் தூக்கிப் போட்ட கொண்டையுடன்.
அவள் அணிந்திருந்த இரவு உடைக்கு மேலே துப்பட்டாவை சுற்றியவள், “நாட் பேட்!” என முகத்தை மட்டும் கழுவிவிட்டு வர, மகன் காலணியை அணிந்து நிமிர்ந்தான்.
“ம்மா... டூடே உங்களுக்கு லீவா?” அவன் தாயின் நடவடிக்கையைக் கவனித்து கேட்க, “ஆமா அபி... இன்னும் ஒன் மந்த் அம்மாவுக்கு லீவ்!” என்றாள் பளிச்சென்ற புன்னகையுடன்.
“ஆஹ்... அம்மா! ட்ரூலி? அப்போ இந்த மந்த் என்னோட பேரண்ட்ஸ் டீச்சர் மீட்டிங் வருவீங்க தானே?” என ஆர்வமாய்க் கேட்டான். இதுவரை அவள் ஓரிரு முறை மட்டுமே ஆசிரியர் பெற்றோர் கலந்துரையாடலுக்குச் சென்றிருக்கிறாள். எல்லா குழந்தைகளும் தாய், தந்தையுடன் வர, இவன் மட்டும் தனித்து அமர்ந்திருப்பான். ஆதிரைக்கு வருத்தமாய்தான் இருந்தது. வெகு அரிதாக ருக்கு பாட்டி அவனுக்காகப் பார்த்து உடன் வருவார். இவளுக்கு வார நாட்களில் நகரவே முடியாத அளவிற்கு வேலை நெட்டித் தள்ளும். அதனாலே பெரும்பாலும் கலந்துரையாடலுக்கு சென்றது இல்லை.
தன் முகத்தையே ஆர்வமாய் பார்க்கும் மகனின் கன்னத்தில் முத்தமிட்டவள், “கண்டிப்பா இந்த டைம் அம்மா பேரண்ட்ஸ்-டீச்சர் மீட்டிங்க்கு வருவேன். அப்புறம் வீக்கெண்ட் ஸ்விம்மிங் க்ளாஸ், ஷாப்பிங் அப்புறம் சர்டடே வெளிய சுத்தலாம்!” என்றாள் வீட்டைப் பூட்டி சாவியை மேலிருந்த ஆணியில் தொங்க விட்டபடியே.
“ம்மா... நிஜமா சொல்றீயா மா? பொய்யில்ல தானே?” என அவள் முகம் பார்ப்பதும் ஒரு படி கீழே இறங்குவதுமாய் இருந்தவனைப் பார்த்து முறுவலித்தவள், “ப்ராமிஸா டா கண்ணா!” என்றாள்.
“சூப்பர் மா... நீதான் பெஸ்ட் அம்மா!” என அவன் கடகடவென இறங்க, அவனை மென்மையாய் முறைத்தவள், பள்ளியில் இறக்கிவிட்டாள்.
“ம்மா... உள்ள வரீயா? என் ஃப்ரெண்ட்ஸ்கிட்டே இன்ட்ரோ பண்றேன்!” தன் கையைப் பிடித்த அபியிடமிருந்து கரத்தை லாவகமாக உருவியவள், “நைட் ட்ரெஸோட வந்தா நல்லா இருக்காது டா. இன்னொரு நாள் அவங்களை மீட் பண்றேன். நீ இப்போ உள்ள போ!” என அவனை அனுப்பிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.
பாத்திரங்கள் குவிந்து கிடந்தன. அலைபேசியை எடுத்து ஸ்பாட்டிஃபை செயலியில் பிடித்த பாடலை ஒலிக்கவிட்டு அரைமணி நேரத்தில் பாத்திரங்களை விளக்கி அடுப்படியை சுத்தம் செய்தாள். வீட்டையும் கூட்டி முடிய, பெரிதாய் எந்த வேலையும் இல்லை. துணியை இயந்திரத்தில் போட்டு எடுத்து மாடிக்குச் சென்று காயப்போட்டாள். மதிய உணவு நேரம் வந்துவிட, சாப்பிட்டுவிட்டு படுக்கையில் விழுந்தாள்.
மதியம் உறங்கி பழக்கம் இல்லை எனினும் புரண்டு படுத்து சிறிது நேரத்திலே உறங்கிப் போனாள். மாலை நான்கு மணிக்கு அலறி தன் வேலையை செய்ய, இமைகளை முயன்று பிரித்தாள். மகன் காத்திருப்பான் என்பது மெது மெதுவாக புத்திக்கு உறைக்க எழுந்து முகம் கழுவிவிட்டு அவனை அழைத்து வந்தாள்.
“இன்னைக்கு என்ன ஸ்நாக்ஸ் வேணும் அபிக்கு?” எனக் கேட்டுக் கொண்டே ஆதிரை குளம்பியைத் தயாரிக்க, சமையல் மேடையில் ஏறி குதித்து அமர்ந்தவன், “ம்மா... புட்டு செஞ்சு தாங்க மா!” என்றான்.
“ஓகே... ராகி புட்டு செய்யலாம்!” என கொஞ்சமாய் மாவைப் பிசைந்து அவனுக்கும் தனக்கும் புட்டை செய்தாள். இருவரும் பேசி சிரித்துக் கொண்டே உண்டு முடிய, அபி வீட்டுப்பாடம் செய்ய அமர்ந்துவிட்டான்.
அவனுடனே அமர்ந்த ஆதிரை அவனது சந்தேகங்களைத் தீர்த்து வைத்தாள். இரவிற்கு தோசை ஊற்றி மதியம் வைத்த சாம்பாரோடு உணவை முடித்துக் கொண்டனர்.
“ம்மா...ஹாரி பாட்டர் சீரீஸ் செவன் பார்ப்போம்மா. இன்னும் பார்க்கலை!” என அபினவ் தாயை இழுத்துக்கொண்டு வந்து கூடத்தில் அமர்ந்தான். நீள்விருக்கையில் அமர்ந்து இருவரும் படத்தைக் காண, சின்னவன் சிறிது நேரத்திலே தாயின் மடியில் தூங்கி வழிய, அவள் முகத்தில் முறுவல் பூத்தது. தொலைக்காட்சியை அணைத்துவிட்டு அப்படியே நீள்விருக்கையில் சாய்ந்து அமர்ந்து விழிகளை மூடிக் காலையிலிருந்து நடந்த அனைத்தையும் அசை போட்டாள்.
நெடிய நீண்ட வருடங்கள் கழித்து இப்படி செய்வதற்கு எந்த வேலையும் அற்று விசிராந்ததையாக மகனுடன் அமர்ந்து பேசி சிரித்து உண்டது இன்றைக்குத்தான் என மூளை கூற, இவள் அவனது தலையை பரிவாகத் தடவிக் கொடுத்தாள்.
காலையிலிருந்து அபினவ் உற்சாகத்திற்கான காரணம் தன்னுடைய அண்மைதான் என அவளுக்கும் புரிந்தே இருந்தது. ஆனாலும் குழந்தையுடன் நேரத்தை செலவழிக்க இயலவில்லை. வேலை இழுத்துக் கொண்டது. இனிமேல் வேலை இருந்தாலும் கூட அவனுக்கான நேரத்தை ஒதுக்க வேண்டும் என்ற சிந்தனை மேலெழுந்தது.
மகனைத் தூக்கி கட்டிலில் படுக்க வைத்தவள் தானும் அருகே விழ, அழையா விருந்தாளியாக பால் பண்ணை சிந்தையை நிறைத்தது. நினைக்க வேண்டாம் என காலையிலிருந்து இரண்டு முறை தட்டி விட்டாலும் ஐந்து வருட பழக்கமாகிற்றே. கோமதியும் தர்ஷினியும் சரியாய் வேலையை முடித்திருப்பார்களா? நாளைக்கு பாலை சரியான நேரத்தில் நுகர்வோரிடம் கொண்டு சேர்க்க முடியுமா என எண்ணம் அங்கே சுழல, ‘ச்சை... அதான் வேலையை விட்டுவிட்டு வந்தாச்சு. அப்புறம் என்ன அதைப் பத்தியே நினைக்கிறது? லீவ் இட் ஆதி!’ என தனக்குள்ளே முணுமுணுத்தவள் உறங்கிப் போனாள்.

சிவப்பு விளக்கு மஞ்சளுக்கு மாறிப் பின் பச்சையைத் தொடவும் அந்தப் போக்குவரத்து கூட்டம் மெதுவாக கலையத் தொடங்க, ஆதிரை ஒருமுறை உயிர்ப்பித்தும் இயங்காத வாகனத்தை யோசனையுடன் பார்த்து பின்னர் இன்னொரு முறை இயக்கவும் அது உறுமியது.
ஒரு நிம்மதி பெருமூச்சுடன் சாலையில் கலந்தவள் செல்லும் வழியிலே எரிபொருளை நிரப்பிக் கொண்டாள். கண்கள் சாலையில் இருந்தாலும் கவனம் என்னவோ தேவாவின் பேச்சிலே நின்றுவிட்டது. விளம்பர படத்தில் நடிக்கவில்லை என்றால் வேலை இல்லை என்று உரைப்பானா? என கோபம் மூளை வரை உயர, சூடாகிப் போயிருந்தாள்.
இவர்களிடம் வேலை பார்த்தால் சொல்வது அனைத்திற்கும் தலையை ஆட்ட வேண்டும் என்றொரு கட்டாயமா என்ன? முனுக்கென கோபம் வந்துவிட, எதையும் யோசிக்காது வேலையை வேண்டாம் என உதறிவிட்டிருந்தாள். பெண்ணுக்கு கொஞ்சமே கொஞ்சம் சுயமரியாதை எட்டிப் பார்த்து தொலைக்க, தைரியமாக பேசிவிட்டாள். ஆனால் அடுத்து இதுபோலொரு பாதுகாப்பான வேலை எங்கே கிடைக்கும் என நிதான மனம் கேள்வி கேட்க, சட்டென ஒரு சோர்வு வந்து ஒட்டிக் கொண்டது.
மகனை வெளியே அழைத்துச் செல்லப் போகிறோம் என காலையிலிருந்து துளிர்விட்டிருந்த உற்சாகம் மொத்தமாய் வடிந்திருக்க, சொல்ல முடியாத வெறுமை ஆட் கொண்டது.
‘ஏன்...இதுதான் வேலையா? இதே போல வேறு வேலைத் தேடிக் கொள்ளலாம்!’ என சுய சமாதானம் செய்தாலும் இந்தப் பண்ணை வேலையில் பளு அதிகமே தவிர, மற்றபடி எவ்வித பிரச்சினையும் இல்லையே. யாரும் அவளைத் தவறாகப் பார்த்தோ, அணுகியதோ இல்லை. அதற்கு தேவாவும் ஒரு காரணம். தன்னிடம் வேலை பார்க்கும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை அவன் அளித்திருந்தான். வேறு வேலை கிடைப்பது எளிதுதான். ஆனாலும் இது போல வராதே என யோசனை சென்றது.
‘இது என்ன கவர்மெண்ட் வேலையா என்ன? எப்போது இருந்தாலும் இங்கிருந்து விலகத்தானே வேண்டும். வேறு எதாவது தேடிக் கொள்ளலாம்!’ என தற்போதைக்கு அதைக் கிடப்பிலிட்டவள் முயன்று வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் மகனை பள்ளியிலிருந்து அழைத்துக் கொண்டாள்.
“ம்மா... ராக்கி எனக்கு கிஃப்ட் வாங்கி கொடுத்தான். லிசா எனக்கு வாட்ச் கிஃப்ட் பண்ணா மா. மிஸ் எனக்கு பென் கொடுத்தாங்க!” என பின்னே அமர்ந்து தாயைக் கட்டிக்கொண்டு அபி வெகு உற்சாகத்துடன் அன்றைய நாளைப் பகிர்ந்து கொள்ள, ஆதிரைக்கு மற்றதெல்லாம் மறைந்து போனது. சின்ன சிரிப்புடன் அவனிடம் பேசியபடியே இருவரும் குழந்தைகள் விளையாடும் ஸ்னோ வேர்ல் எனப்பட்டும் பனித் திடலுக்குள் நுழைந்தனர்.
அனுமதி சீட்டை பெற்றுக் கொண்டு இவர்கள் உள்ளே நுழைய, “ம்மா... ஸ்னோ வேர்ல்டா மா?” என மகன் ஆர்பரித்தான். சுற்றிலும் கண்ணாடிக் கதவுகள் அமைக்கப்பட்டிருக்க, வெள்ளைப் புகை போல அந்த இடமே காட்சியளித்தது. உள்ளே சிறுவர் சிறுமியர் தாய் தந்தையுடன் விளையாடிக் கொண்டிருக்க, இவர்கள் பாதுகாப்பு உடையும், கையுறை, காலுறை என அனைத்தையும் அணிந்து கொண்டு உள்ளே நுழைந்தனர். அன்றைக்கு வார நாட்கள் என்பதால் பெரிதாய் கூட்டம் இல்லை. வெகு சிலரே இருந்தனர்.
ஆங்காங்கே நன்கு பயிற்சி செய்யப்பட்ட ஆட்கள் நின்று உதவினர். இவர்களும் உள்ளே நுழைய, குட்டி குட்டி துகளாய் பனிக்கட்டி மேலே விழுந்து உடல் சூட்டில் கரைந்து போக, அபியின் விழிகள் ஆர்வத்தில் விரிந்தன.
பனிக்கரடி பொம்மை அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்க, “ம்மா... பனிக்கரடி மா...” என ஓடிச் சென்று அதைச் சுற்றிப் பார்த்து கைகளால் தடவினான். அவனது ஆர்ப்பரிப்பில் ஆதிரையின் முகம் கனிந்தது. அவளுக்குமே அடிக்கடி மகனை வெளியே அழைத்துச் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் வேலை நேரம் ஒத்துழைப்பது இல்லை.
அலைபேசியை எடுத்தவள் அவன் செய்யும் சேட்டைகளை புகைப்படமாகவும் காணொளியாகவும் எடுத்தாள். அங்கிருந்த சிறுவர்களுடன் இவனும் சேர்ந்து விளையாட, அவனைத் தன் கண் பார்வையிலே வைத்திருந்தவள் செயற்கை மரத்தின் கீழே போட்டப்படிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.
ஆடி விளையாடி களைத்துப் போய் அவளிடம் வந்த அபினவ், “ம்மா... வாட்டர்!” என்றான் மூச்சு வாங்க.
“அபி... உக்காரு!” என அவனை அமர வைத்து ஆசுவாசம் செய்து நீரைப் புகட்டினாள். பின்னர் தாயும் மகனும் சேர்ந்து சுயமி புகைப்படங்களை எடுத்து தள்ளினர்.
நேரமானதை உணர்ந்தவள், “அபி, கிளம்பலாமா?” எனக் கேட்டாள்.
“அதுக்குள்ளேயுமா மா?” அவன் முகம் வாட, “ப்ம்ச்... இதே ஸ்னோ வோர்ல்ட்க்கு நெக்ஸ்ட் வீக் எண்ட் வரலாம் அபிமா. இப்போ நைட் ஆகிடுச்சு. சாப்ட்டு வீட்டுக்குப் போகணும்ல?” என அவன் கன்னத்தைப் பிடித்துக்கொண்டு குனிந்து கேட்டாள்.
தாயின் குரலிலே புரிந்து கொண்ட அபி, “வீகெண்ட் வரலாம். நிறைய டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்மா!” என்றான். ஆதிரைக்கு மகன் புரிதலில் முகம் மலர்ந்தது.
“சரி டா... போகலாம் வா!” என இருவரும் வெளியேறி ஒரு உணவகத்தில் இரவு உணவை முடித்துக் கொண்டு வீட்டிற்கு சென்றனர்.
ஆதிரை முன்பதிவு செய்திருந்த அணிச்சல் வீட்டின் கதவு முன்பிருக்க, “ம்மா... கேக்கா மா?” என ஓடிச் சென்று அதைத் தூக்கினான் சிறியவன். இவள் சின்ன புன்னகையுடன் தலையை அசைக்க, உள்ளே நுழைந்ததும் பையை ஒருபுறம் தூக்கிப் போட்டவன் அந்த அணிச்சலை பிரித்தான்.
“வெளியே போய்ட்டு வந்துட்டு அப்படியே கேக் வெட்டலாமா டா? ஓடு... ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு ரெப்ரெஷ்ஷாகிட்டு வா!” மென்மையாய் முறைத்த தாயிடம் நாக்கை நீட்டி துருத்திக் காண்பித்துவிட்டு குடுகுடுவென உள்ளே ஓடினான் அபினவ்.
இவளும் முகம் கை கால் கழுவி உடை மாற்றிவிட்டு அணிச்சலை நடுவீட்டில் வைத்து மெழுகு திரியை பற்ற வைக்க, “ம்மா... ப்ரெஷ் ஆகிட்டேன் மா!” என அவன் வரவும் சரியாய் இருந்தது.
“ஹேப்பி பெர்த் டே டூ அபிமா, ஹேப்பி பெர்த் டே டூ என் தங்கம்!” என அவள் பாட, அணிச்சலை வெட்டி தாய்க்கு ஊட்டினான் சின்னவன். இவளும் அவனுக்கு ஊட்டிவிட்டாள். பின்னர் சிறிய டப்பாவில் ருக்குவிற்கும் அவரது கணவருக்கும் எடுத்துக் கொடுத்துவிட, இவன் அவர்களிடம் கொடுக்க சென்றான்.
அதற்குள்ளே ஆதிரை கூடத்தை கூட்டி முடித்து அறைக்குள் நுழைந்து படுக்கையை சரிசெய்தாள். நேரம் இரவு பத்தை தொட்டிருந்தது. இன்னும் சிறிது நேரம் விழித்திருந்தால் காலையில் மகன் அத்தனை சீக்கிரத்தில் எழ மாட்டான் என அவளுக்குத் தெரியும். அதனாலே அவன் வந்தவுடன் அதட்டி உருட்டி தூங்க வைத்திருந்தாள்.
இவளுக்கு உறக்கம் வராது போக அலைபேசியை எடுத்து அதில் விழிகளை ஓட்டியவளுக்கு அப்போதுதான் நினைவு வந்தது. நேரமாகிவிட்ட போதிலும் எழுந்து கணினியை உயிர்ப்பித்து ராஜினாமா கடிதத்தை தேவாவிற்கு மின்னஞ்சல் செய்ததும்தான் அவளுக்குத் திருப்தியாய் இருந்தது.
ஒரு வாரம் நன்றாய் ஓய்வெடுக்க வேண்டும். வாரத்தின் ஒரு நாள் விடுமுறை சர்வ நிச்சயமாக அவளுக்குப் போதவில்லை. அன்றைக்கும் மகனை அழைத்துக்கொண்டு நீச்சல் வகுப்பு, வணிக வளாகம் என சுற்றுவதால் சுத்தமாய் ஓய்வெடுக்க முடிவதில்லை. ஓடிக் கொண்டே இருப்பது போலொரு எண்ணத்தில் பெரு மூச்சுவிட்டவள் ஒரு வாரம் என்ன ஒரு மாதம் கூட நன்றாய் விடுமுறை எடுத்து உடலை தேற்றிக்கொண்டு வேறு வேலைத் தேட வேண்டும் என எண்ணினாள்.
தற்போதைக்கு பணத்திற்கு குறைவில்லை. இவள் சம்பளத்தில் சேமித்த பணம் இருந்தது. அதுவும் இல்லாது ஊரில் குத்தகைக்கு விட்டிருந்த நிலத்திலிருந்து மாத மாதம் வரும் பணத்தை மகனின் படிப்பு செலவிற்காக என அவன் பெயரில் வங்கியில் சேமித்து வைத்திருந்தாள். எட்டு வருடங்களில் அது வெகு கணிசமான தொகையாக உருப்பெற்றிருந்தது. அதுவும் இல்லாது அவசரத் தேவையிருந்தால் எடுத்துக் கொள்ளலாம் என அவளது பாட்டியின் நகைகளையும் வங்கியில் வைத்திருந்தாள். அதனால் இப்போதைக்கு பணத்தை பற்றிய கவலை இல்லை. நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே செல்லும் உடலை கொஞ்சம் கவனிக்கலாம் என எண்ணம் தோன்றிற்று.
நேரம் பன்னிரண்டைத் தொடப் போகும் சமயத்தில் கணினியில் வேலை பார்த்து முடித்த தேவா அதை அணைக்க செல்ல, டொங் என்று முன்னே வந்து விழுந்த மின்னஞ்சலில் முகம் சுருக்கியவன் அதை திறக்க, ஆதிரையின் பெயரோடு ராஜினாமா கடிதம் வந்து விழ, “திமிரு பிடிச்சவ!” என்ற முணுமுணுப்போடு உடனே அதை ஏற்றுக் கொண்டதாய் பதில் போட்டுவிட்டான்.
அவளை விட்டுவிட்டால் வேறு யாரும் கிடைக்க மாட்டார்களா என்ன? இவளை விட திறமையான ஊழியரை பணியமர்த்த வேண்டும் என மனதில் சூளுரைத்தவன் படக்கென மடிக்கணினியை மூடிவிட்டு படுக்கையில் விழுந்தான்.
ஆதிரை அவன் பதிலைக் கவனித்தாலும் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை. மகனை அணைத்துக்கொண்டு உறங்கிப் போனாள்.
மறுநாள் காலையில் எவ்வித அவசரமும் காட்டாது பொறுமையாய் எழுந்து குளம்பி கோப்பையோடு தொலைக்காட்சி முன்பு அமர்ந்தாள். சில பல நிமிடங்கள் செய்தியை உள்வாங்கிவிட்டு மெதுவாய் மேலெழுந்த சேம்பேறித் தனத்துடன் சமைத்து முடித்திருந்தாள்.
அபி தூங்கிக் கொண்டிருக்க அவனை எழுப்பி இவளே பள்ளிக்கு தயார் செய்தாள். உணவை ஊட்டி விட்டவள், “அபி... கெட் ரெடி!” என்றாள் தூக்கிப் போட்ட கொண்டையுடன்.
அவள் அணிந்திருந்த இரவு உடைக்கு மேலே துப்பட்டாவை சுற்றியவள், “நாட் பேட்!” என முகத்தை மட்டும் கழுவிவிட்டு வர, மகன் காலணியை அணிந்து நிமிர்ந்தான்.
“ம்மா... டூடே உங்களுக்கு லீவா?” அவன் தாயின் நடவடிக்கையைக் கவனித்து கேட்க, “ஆமா அபி... இன்னும் ஒன் மந்த் அம்மாவுக்கு லீவ்!” என்றாள் பளிச்சென்ற புன்னகையுடன்.
“ஆஹ்... அம்மா! ட்ரூலி? அப்போ இந்த மந்த் என்னோட பேரண்ட்ஸ் டீச்சர் மீட்டிங் வருவீங்க தானே?” என ஆர்வமாய்க் கேட்டான். இதுவரை அவள் ஓரிரு முறை மட்டுமே ஆசிரியர் பெற்றோர் கலந்துரையாடலுக்குச் சென்றிருக்கிறாள். எல்லா குழந்தைகளும் தாய், தந்தையுடன் வர, இவன் மட்டும் தனித்து அமர்ந்திருப்பான். ஆதிரைக்கு வருத்தமாய்தான் இருந்தது. வெகு அரிதாக ருக்கு பாட்டி அவனுக்காகப் பார்த்து உடன் வருவார். இவளுக்கு வார நாட்களில் நகரவே முடியாத அளவிற்கு வேலை நெட்டித் தள்ளும். அதனாலே பெரும்பாலும் கலந்துரையாடலுக்கு சென்றது இல்லை.
தன் முகத்தையே ஆர்வமாய் பார்க்கும் மகனின் கன்னத்தில் முத்தமிட்டவள், “கண்டிப்பா இந்த டைம் அம்மா பேரண்ட்ஸ்-டீச்சர் மீட்டிங்க்கு வருவேன். அப்புறம் வீக்கெண்ட் ஸ்விம்மிங் க்ளாஸ், ஷாப்பிங் அப்புறம் சர்டடே வெளிய சுத்தலாம்!” என்றாள் வீட்டைப் பூட்டி சாவியை மேலிருந்த ஆணியில் தொங்க விட்டபடியே.
“ம்மா... நிஜமா சொல்றீயா மா? பொய்யில்ல தானே?” என அவள் முகம் பார்ப்பதும் ஒரு படி கீழே இறங்குவதுமாய் இருந்தவனைப் பார்த்து முறுவலித்தவள், “ப்ராமிஸா டா கண்ணா!” என்றாள்.
“சூப்பர் மா... நீதான் பெஸ்ட் அம்மா!” என அவன் கடகடவென இறங்க, அவனை மென்மையாய் முறைத்தவள், பள்ளியில் இறக்கிவிட்டாள்.
“ம்மா... உள்ள வரீயா? என் ஃப்ரெண்ட்ஸ்கிட்டே இன்ட்ரோ பண்றேன்!” தன் கையைப் பிடித்த அபியிடமிருந்து கரத்தை லாவகமாக உருவியவள், “நைட் ட்ரெஸோட வந்தா நல்லா இருக்காது டா. இன்னொரு நாள் அவங்களை மீட் பண்றேன். நீ இப்போ உள்ள போ!” என அவனை அனுப்பிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.
பாத்திரங்கள் குவிந்து கிடந்தன. அலைபேசியை எடுத்து ஸ்பாட்டிஃபை செயலியில் பிடித்த பாடலை ஒலிக்கவிட்டு அரைமணி நேரத்தில் பாத்திரங்களை விளக்கி அடுப்படியை சுத்தம் செய்தாள். வீட்டையும் கூட்டி முடிய, பெரிதாய் எந்த வேலையும் இல்லை. துணியை இயந்திரத்தில் போட்டு எடுத்து மாடிக்குச் சென்று காயப்போட்டாள். மதிய உணவு நேரம் வந்துவிட, சாப்பிட்டுவிட்டு படுக்கையில் விழுந்தாள்.
மதியம் உறங்கி பழக்கம் இல்லை எனினும் புரண்டு படுத்து சிறிது நேரத்திலே உறங்கிப் போனாள். மாலை நான்கு மணிக்கு அலறி தன் வேலையை செய்ய, இமைகளை முயன்று பிரித்தாள். மகன் காத்திருப்பான் என்பது மெது மெதுவாக புத்திக்கு உறைக்க எழுந்து முகம் கழுவிவிட்டு அவனை அழைத்து வந்தாள்.
“இன்னைக்கு என்ன ஸ்நாக்ஸ் வேணும் அபிக்கு?” எனக் கேட்டுக் கொண்டே ஆதிரை குளம்பியைத் தயாரிக்க, சமையல் மேடையில் ஏறி குதித்து அமர்ந்தவன், “ம்மா... புட்டு செஞ்சு தாங்க மா!” என்றான்.
“ஓகே... ராகி புட்டு செய்யலாம்!” என கொஞ்சமாய் மாவைப் பிசைந்து அவனுக்கும் தனக்கும் புட்டை செய்தாள். இருவரும் பேசி சிரித்துக் கொண்டே உண்டு முடிய, அபி வீட்டுப்பாடம் செய்ய அமர்ந்துவிட்டான்.
அவனுடனே அமர்ந்த ஆதிரை அவனது சந்தேகங்களைத் தீர்த்து வைத்தாள். இரவிற்கு தோசை ஊற்றி மதியம் வைத்த சாம்பாரோடு உணவை முடித்துக் கொண்டனர்.
“ம்மா...ஹாரி பாட்டர் சீரீஸ் செவன் பார்ப்போம்மா. இன்னும் பார்க்கலை!” என அபினவ் தாயை இழுத்துக்கொண்டு வந்து கூடத்தில் அமர்ந்தான். நீள்விருக்கையில் அமர்ந்து இருவரும் படத்தைக் காண, சின்னவன் சிறிது நேரத்திலே தாயின் மடியில் தூங்கி வழிய, அவள் முகத்தில் முறுவல் பூத்தது. தொலைக்காட்சியை அணைத்துவிட்டு அப்படியே நீள்விருக்கையில் சாய்ந்து அமர்ந்து விழிகளை மூடிக் காலையிலிருந்து நடந்த அனைத்தையும் அசை போட்டாள்.
நெடிய நீண்ட வருடங்கள் கழித்து இப்படி செய்வதற்கு எந்த வேலையும் அற்று விசிராந்ததையாக மகனுடன் அமர்ந்து பேசி சிரித்து உண்டது இன்றைக்குத்தான் என மூளை கூற, இவள் அவனது தலையை பரிவாகத் தடவிக் கொடுத்தாள்.
காலையிலிருந்து அபினவ் உற்சாகத்திற்கான காரணம் தன்னுடைய அண்மைதான் என அவளுக்கும் புரிந்தே இருந்தது. ஆனாலும் குழந்தையுடன் நேரத்தை செலவழிக்க இயலவில்லை. வேலை இழுத்துக் கொண்டது. இனிமேல் வேலை இருந்தாலும் கூட அவனுக்கான நேரத்தை ஒதுக்க வேண்டும் என்ற சிந்தனை மேலெழுந்தது.
மகனைத் தூக்கி கட்டிலில் படுக்க வைத்தவள் தானும் அருகே விழ, அழையா விருந்தாளியாக பால் பண்ணை சிந்தையை நிறைத்தது. நினைக்க வேண்டாம் என காலையிலிருந்து இரண்டு முறை தட்டி விட்டாலும் ஐந்து வருட பழக்கமாகிற்றே. கோமதியும் தர்ஷினியும் சரியாய் வேலையை முடித்திருப்பார்களா? நாளைக்கு பாலை சரியான நேரத்தில் நுகர்வோரிடம் கொண்டு சேர்க்க முடியுமா என எண்ணம் அங்கே சுழல, ‘ச்சை... அதான் வேலையை விட்டுவிட்டு வந்தாச்சு. அப்புறம் என்ன அதைப் பத்தியே நினைக்கிறது? லீவ் இட் ஆதி!’ என தனக்குள்ளே முணுமுணுத்தவள் உறங்கிப் போனாள்.