• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,091
Reaction score
3,124
Points
113
இஷ்டம் – 23 💖
மறுநாளிலிருந்து ரகுராம் மருத்துவமனைக்குச் செல்லத் தொடங்கினான். அடுத்த வாரத்திலிருந்து காயத்ரியும் அவளது இயல்பு வாழ்க்கைக்குள் நூழைந்திருந்தாள். பணியில் இரவு சுழற்சி மட்டும் இருவருக்கும் ஒன்றாய் வருமாறு பார்த்துக் கொண்டனர்.
வேலை நேரம் ஒன்றாய் அமைந்தால் ரகுராமின் இருசக்கர வாகனத்திலே இருவரும் ஒன்றாய் சென்று வந்தனர். வெவ்வேறு சுழற்சியில் தனித்தனியாக சென்றனர். பெரிதாய் எவ்வித மாற்றமும் இல்லை. முன்பு வேறு வேறு வீட்டில் நட்பு பயிரை வளர்த்தவர்கள் இப்போது ஒரே வீட்டில் இருந்ததால் இன்னுமே பிணைப்பு கூடியது.
தினமும் செல்ல சண்டைகள், அதற்குப் பின்னரான சமாதானங்கள் என வாழ்க்கை வெகு இயல்பாக நகரத் தொடங்கியது. காயத்ரி தினமும் பத்து நிமிடமாவது தந்தையைப் பார்த்துவிட்டுத்தான் வந்தாள். விடுமுறை நாட்களில் அங்கே சென்று அவருக்கு சமைத்துக் கொடுத்தாள். அலைபேசி மூலம் அவர் மாத்திரைகளை உண்கிறாரா என கவனித்துக் கொண்டாள். மாதத்திற்கு ஒருமுறை அவள் வீட்டை சுத்தம் செய்தாள்.
ரகுராம் வீட்டில் பொருந்திப் போவதில் அவளுக்குப் பெரிதாய் எவ்வித சங்கடமும் ஏற்படவில்லை. சிறு வயதிலிருந்து பார்த்துப் பேசி பழகியவர்கள் என்பதால் அவர்களுடன் எளிதில் ஒன்றிப் போனாள். தேவராஜிற்கும் அவளுக்கும் அதிகமாகப் பேச்சு வார்த்தை இல்லை. தேவைக்கு ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசினாள். அவர் கேள்வி கேட்டால் பதிலுரைத்தாள். அவ்வளவுதான். இதற்கா இத்தனை பயந்தோம் என முன்பு கண்ணீரில் கரைந்த நாட்கள் எல்லாம் இப்போது நினைத்து சிரித்துக் கொண்டாள்.
தேவராஜ் மகன் என்று வருகையில் தன் சுய விருப்பு வெறுப்புகளைத் தளர்த்திக் கொண்டார். மனைவியை மருமகள் முன்பு திட்ட மாட்டார். அவர் திட்டுவதற்கான ஜாகையாக அறையை மாற்றிக் கொண்டார். அதனால் முன்பு‌ போல முகத்தை தூக்கி வைப்பதை நிறுத்தியிருந்தார். அதுவும் அல்லாது மருமகள் முன்பு தன் மனைவி எவ்விதத்திலும் குறைந்துவிடக் கூடாதென வெகு கவனமாய் இருந்தார் மனிதர். கௌதமிக்கும் கணவரின் மனமாற்றத்தில் வெகுவாய் மகிழ்ச்சி படர்ந்தது பெரிதாய் எவ்வித ஏற்ற இறக்கமும் அற்று வாழ்க்கை அதன் போக்கில் நகரத் தொடங்கியிருந்தது.
அன்றைக்கு மதிய சுழற்சி என்பதால் மாலை ரகுராமுடனே வீட்டிற்கு செல்லலாம் என காயத்ரி பணிநேரம் முடிந்ததும் கிளம்பி தயாராக நின்றாள்.
“என்ன உன் ஆளுக்கு வெய்டிங்கா காயூ?” எனக் கேட்ட கார்த்திகா விடை பெற, இவள் சின்ன சிரிப்புடன் தலையை அசைத்தாள்.
நேரத்தைப் பார்த்துவிட்டு காயத்ரி வாயிலை பார்க்க ரகுராம் நடந்து வந்தான். “காயூ வா...” என அவன் அப்படியே வெளியே திரும்ப, இவளும் கைப்பையை இறுக்கிப் பிடித்தபடி அவனுடன் நடந்தாள். அவளது இருசக்கர வாகனத்தில் ஏதோ பழுது என காலையில் பேருந்தில்தான் வந்திருந்தாள். அதனாலே ராம் தான் வந்து அழைத்துக் கொள்வதாகக் கூறிவிட்டான்.
இரவு நன்றாய் கவிழ்ந்திருந்தது. ரகுராம் இருசக்கர வாகனத்தை இயக்க, இவள் அவனுக்குப் பின்னே அமர்ந்தாள். இருவரும் வீட்டை அடைந்தனர். கௌதமி கூடத்தில்தான் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே காயத்ரி அறைக்குள் நுழைய, ரகுராம் மெலிதாய் விசிலடித்தபடியே உள்ளே நுழைந்தான். அவள் காதில் கேட்டாலும் அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளாது நிலைபேழையைத் திறந்து இரவு உடையைத் தேடினாள்.
“காயூ...” அவன் அழைக்க, “என்னடா?” என்றாள் திரும்பாமல்.
“நீயும் நல்ல பிஃகர்தான் போல டி?” அவன் கூறவும், இவள் திரும்பி அவனை முறைத்துக் கொண்டே உடையைக் கையில் எடுத்தாள். நெற்றி வகிட்டில் இட்டிருந்த குங்குமும் கழுத்தில் தொங்கிய மஞ்சள் தாலியும் அவளைத் தனித்துக் காட்டின. விசித்ரா பட்டு வகையிலான புடவை அவளை எடுத்துக் காட்டியது. மனைவியை மேலிருந்து கீழாக அளந்தான்.
“ஹே நிஜமா டி... முன்னாடிலாம் நீ அழகா இல்லையான்னு எனக்குத் தெரியாது. பட் இப்போ அழகா தெரிய ஆரம்பிச்சுட்டீயே! என்னவா இருக்கும்?” கேள்வி கேட்டு மேவாயைத் தேய்த்தவனை மென்மையாய் முறைத்தவள், “ஹம்ம்... கல்யாணம் ஆகிடுச்சுல்ல. அதான் வேற வழியில்லாம அழகா தெரியுறேன் போல?” என நக்கலாகக் கூறியபடியே உடை மாற்ற சென்றாள்.
“இருக்கும்... இருக்கும்!” என அவன் இழுக்கவும் அவன் இடையில் முட்டியால் இடித்தபடி வெளியே சென்றாள். இவன் சிரிப்புடன் கழிவறைக்குள் நுழைத்தான்.
“அத்தை... செம்மையா பசிக்குது? என்ன குக் பண்ணலாம்?” என்றவாறே கௌதமி அருகே சென்றாள் காயத்ரி.
“அடை தோசைக்கு மாவு ஆட்டி வச்சுட்டேன் காயூ. குருமா பத்து நிமிஷத்துல வச்சுடலாம். வா!” என அவர் அகல, “அத்தை... இன்னைக்கு நான் குருமா செய்றேன்...” என அவர் ஏற்கனவே வெட்டி வைத்திருந்த காய்கறிகளை வைத்து பத்து நிமிடத்தில் இவள் குருமாவை வைத்து முடித்தாள். தேவராஜூம் வந்துவிட, கௌதமி நால்வருக்குமான தோசையை சுட்டு ஹாட் பாக்ஸில் வைத்து மேஜை மீது எடுத்து வைத்தார்.

அனைவரும் உண்ண அமர்ந்தனர். காயத்ரி பசியாக இருந்ததால் தோசையில் கவனமாய் இருந்தாள். ஒரு வாய் உண்டவுடனே அது காயத்ரியின் சமையல் என ரகுவிற்குப் புரிந்து போனது.

தேவராஜ் இரண்டு கவளம் உண்டவர் ஏதோ திட்ட வாயெடுக்க, “ம்மா... இன்னைக்கு என்ன குருமால உப்பு உறைப்பு எல்லாம் கம்மியா போட்டிருக்கீங்க? உங்க குக்கிங் மாதிரி தெரியலையே?” என்றான்.
“ஆமா டா... நான் சமைக்கலை. உன் பொண்டாட்டிதான் இன்னைக்கு குருமா வச்சா!” அவர் கூற, காயத்ரி மாமனாரின் முகபாவனையிலே புரிந்து கொண்டாள்.
“நான்தான் மாமா சமைச்சேன். உப்பும் காரமும் கம்மியா சாப்ட்டா உடம்புக்கு நல்லதுதானே? உங்களுக்கே தெரியும்தானே மாமா?” என அவள் கேட்டு வைக்க, தேவராஜ் எதுவும் கூற முடியாது தலையை அசைத்து உண்டுவிட்டு எழுந்தார்.
அவர் அகன்றதும், “என் வீட்டுக்காரரையே தலையாட்ட வச்சுட்ட காயூ...” என்ற கௌதமியின் முகத்தில் முறுவல் பிறந்தது.
“என்ன அத்தை மாமாவை வளர்த்து வச்சிருக்கீங்க?” என போலியாய்க் கடிந்தவள், “என் புருஷனைப் பாருங்க. உப்பே இல்லைன்னா கூட சமத்தா சாப்பிடுவான்!” என அவன் மேவாயைப் பிடித்துக் கொஞ்சினாள். அதில் அவனுக்கு வெட்கம் வந்திருக்க வேண்டும். சிரிப்பும் முறைப்புமாய் அவள் கையைத் தட்டிவிட்டான். கௌதமி இருவரையும் சிரிப்புடன் பார்த்துவிட்டு அகன்றார்.
காயத்ரி மாமியாருக்கு உதவ செல்ல, ரகு சென்று படுக்கையில் விழுந்தான். சில பல நிமிடங்கள் கழித்து அவள் அறைக்குள் நுழைய, கணவன் உறக்கம் வராது அங்குமிங்கும் புரண்டு கொண்டிருந்தான். அறைக் கதவை சாற்றிவிட்டு விளக்கை அணைத்தவள், மேஜை விளக்கை உயிர்பித்து அவனருகே அமர்ந்தாள்.
“ராம்... என்னாச்சு டா? தூக்கம் வரலையா?” என அவள் யோசனையாக கேட்க, “ஹம்ம்... ஆமா காயூ. இன்னைக்கு மார்னிங்ல இருந்து ஒரு சர்ஜரி. ஆப்ரேஷன் தியேட்டர்ல நின்னுட்டே இருந்ததுல கால் வலிடி!” என்றான் முனங்கலாக. சற்றே நகர்ந்து அவனருகே சென்றவள் கணவனின் காலை எடுத்து மெதுவாய்ப் பிடித்துவிட்டாள்.

இதை எதிர்பாராது திகைத்தவன், “ஹே... காயூ, பரவாயில்லை. நீ வந்து படு டி!” என்றான் காலை இழுத்து.
“ம்கூம்... நீ அமைதியா தூங்கு ராம். நான் கொஞ்ச நேரம் காலைப் பிடிச்சு விடுறேன்!” என்றாள்.
“வேணாம் டி..‌. எனக்கு கூச்சமா இருக்கு!” அவன் முறைக்க, “ரொம்ப பண்ணாத டா. தூங்கு!” என்றாள் அதட்டலாய். அதற்கு மேலும் எதுவும் கூறாத ரகுராம் தலையணையில் முகம் புதைத்தான். அவளது விரல்கள் மெதுவாய் காலைப் பிடித்துவிட்டது இதமாய் இருந்தது. ஆனாலும் உறக்கம் கண்களை அண்டவில்லை.
“காயூ...” அவன் அழைக்க, “ஹம்ம்...” என்றாள் இவள்.
“காயூ...” மீண்டும் அவன் அழைக்க, “என்னடா... தூங்கலையா நீ?” அவள் சற்றே கண்டிப்புடன் கேட்டாள்.
“தூங்குறதெல்லாம் இருக்கட்டும் டி‌ நவம்பர் தேர்டித், டூ தௌசண்ட் போர்டீன் என்ன நடந்துச்சு?” எனக் கேட்டான்.
அவன் கேள்வியில் புரியாது விழித்தவள், “போன மாசம் என்ன நடந்துச்சுன்னே எனக்கு ஞாபகம் இருக்காது. இதுல எப்போ நடந்ததை கேட்குற டா?” என சலித்தாள் இவள்.
“குடிகாரி... குடிச்சிட்டு நீதான் உளறுன. அன்னைக்கு ஏதோ இன்சிடென்ட் நடந்துருக்கு. ஐ க்நோ, நீ முதல்ல அதை சொல்லு!” அவன் கேட்டதும் காயத்ரியின் மூளை பளிச்சிட்டது.
“ஓ... அதுவா?” என அவள் இழுக்க, “யெஸ்... யெஸ்!” என ரகு ஆர்வமாய் எழுந்தமர்ந்து
விட்டான்.
“அதெல்லாம் சொல்றதுக்கில்லை. ஒழுங்கா படுத்து தூங்கு!” என்றவள் மறுபுறம் படுக்க செல்ல, இடையோடு கைக்கொடுத்து அவளைத் தன்னருகே அமர்த்தியவன், “நீ என்ன நடந்துச்சுன்னு சொல்லாம தூங்க முடியாது டி. நான் விட மாட்டேன்!” என அவன் அடமாய்க் கூற, “போடா... எனக்குத் தோணும்போது சொல்றேன். இப்போ மாட்டேன்!” என அவன் தோளில் சாய்ந்து கண்மூடினாள் பெண்.
“அநியாயம் பண்ற டி... ஒழுங்கா சொல்லிடு. இல்லைன்னா கடிச்சு வச்சிடுவேன்!” என அவன் பொய்யாய் கூற, ஒரு நொடி முகத்தை சுருக்கியவள் பின்னர், “சரி, ஒரு டீல். அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு நான் சொல்றேன். நீ மேரேஜ் அப்போ அந்த ரூம்க்குள்ள என்னாச்சுன்னு சொல்லணும். ஓகே வா?” என புருவத்தை உயர்த்தினாள்.
“எமகாதகி டி நீ... சொல்லும். சொல்லித் தொலையும். நான் நெக்ஸ்ட் சொல்றேன்...” என்றான் போலியான கோபத்துடன்.
“ம்கூம்... உன்னை நம்ப முடியாதே!” காயூ இழுக்க, அவள் கழுத்தில் கையைப் போட்டு இறுக்கியவன், “நிஜமா சொல்றேன்...” என்றான் அழுத்தமாக.
“ஹம்ம்...” என்று அவன் கழுத்து வளைவில் முகம் புதைத்தவள், “அன்னைக்கு நான் ஏஜ் அட்டென்ட் பண்ணி இருந்தேன் டா!” என்றாள் மெல்லிய குரலில்.
“ஓ...” எனக் கேட்டவன் அவளைத் தோளோடு சேர்த்து தன்னோடு இறுக்கினான்.
 
Administrator
Staff member
Messages
1,091
Reaction score
3,124
Points
113
இன்னும் அவனுள் புதைந்தவள், “அன்னைக்கு நீ என்னைப் பார்க்க வந்தல்ல ராம். உனக்கு ஞாபகம் இருக்கா?” என அவன் முகத்தருகே நிமிர்ந்து கேட்டாள் பெண். சில நொடிகள் யோசித்தவன் இல்லையென மென்மையாய் தலையை அசைத்தான். அவள் நடந்ததை விவரித்தாள்.
காயத்ரியும் ரகுராமும் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம் அது. அன்றைக்கு ரகு மட்டைப் பந்து விளையாடவென மைதானத்திற்கு சென்றுவிட, காலையிலிருந்து வயிற்று வலியால் அவதிப்பட்ட காயத்ரிக்கு அசௌகரியமாகத் தோன்றவும் ஆசிரியரிடம் சென்று கூறினாள். அவள் பூப்படைந்துவிட்டாள் என்பதை உணர்ந்த ஆசிரியர் தங்கராஜை அழைத்து அவளை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.

காயத்ரிக்கும் தனக்கு என்ன நடக்கிறது என்று புரியும் வயதுதான் என்றாலும் தாயின்றி தவித்துப் போயிருந்தாள். உடன் படிக்கும் மாணவிகள் அந்த நேரத்தில் தாய்தான் அனைத்தையும் பார்த்துக் கொண்டார் எனக் கூறக் கேட்டதும் சுசிலாவின் அருகாமைக்கு மனம் ஏங்கத் தொடங்கியது. தங்கராஜ் பக்கத்து வீட்டுப் பெண்மணியிடம் அப்போதைக்கு உதவி கேட்க, அவரும் வந்து என்ன செய்ய வேண்டும் என்று அவளிடம் கூறிவிட்டு செல்ல, குளித்துவிட்டு வந்தவள் படுக்கையில் சுருண்டிருந்தாள்.
வயிற்று வலியோடு உடன் தாயில்லை என்ற வலியும் சேர்ந்து அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. கட்டிலில் படுத்து விசும்பிக் கொண்டிருந்தாள்.
ரகுராமிற்கு விஷயம் தெரிந்ததும் இருப்புக் கொள்ளவில்லை. அவளைப் பார்க்க வேண்டும் என்று மனது தவித்தது. பெண்கள் பூப்படைவதைப் பற்றிய விவரங்கள் ஓரளவிற்கு அவனுக்குமே தெரியும். மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு சென்று உடை மாற்றியவன், “ம்மா... நான் காயூவைப் பாத்துட்டு வரேன்!” எனக் கிளம்பினான்.
“ராம்... அதெல்லாம் வேணாம். நீ இப்போ போய் பார்க்க கூடாது டா. யாரையும் பார்க்க விட மாட்டாங்க!” என கௌதமி அவனைத் தடுத்து நிறுத்தினார்.
“ம்மா... போய் ஐஞ்சு நிமிஷம் பேசிட்டு வரேன் மா!” இவன் அடமாய் நிற்க, “ராம்... சொன்னதைக் கேட்ணும். ட்யூஷன் கிளம்பு நீ!” என அதட்டியவர் அவனுடன் சென்று மாலை வகுப்பில் விட்டுவிட்டுதான் வீட்டிற்கு வந்தார்.

வகுப்பு முடிந்ததும் வீட்டிற்கு செல்லாமல் பையோடு காயத்ரி வீட்டிற்கு சென்றுவிட்டான். முன்பக்க வழியாய் சென்றால் பார்க்க முடியாது என்றுணர்ந்தவன் தனது மிதி வண்டியைக் வீட்டின் பின்புறம் நிறுத்திவிட்டு அவளது அறை ஜன்னலை மெதுவாய் திறந்தான். காயத்ரி அறைக்கு பின்பக்க கதவு முன்பு இருந்தது. அவள் கல்லூரி சென்றதும் தங்கராஜ் அதை இடித்துவிட்டு முழுதாய் சுவரையெழுப்பி இருந்தார். இவன் எட்டிப் பார்க்க, படுக்கையில் சுருண்டிருந்தவளின் முகம் அழுகையில் சிவந்திருந்தது.

“காயூ... காயூ!” என ரகுராம் மெல்லிய குரலில் அழைக்கவும் திடுக்கிட்டு எழுந்தவள் ஒரு நொடி திகைத்து சத்தம் எங்கே வருகிறதெனப் பார்த்தாள்.
“காயூ... இங்கதான். வா, வந்து டோரை ஓபன் பண்ணு!” அவன் கூறவும் ஜன்னலருகே சென்றவள், “ராம்...நீ என்ன இப்போ. வீட்டுக்கு கிளம்பு ராம். நான் யாரையும் பார்க்க கூடாதுன்னு அம்மாச்சி சொல்லி இருக்கு!” என்றாள் பதற்றத்துடன்.
“ம்கூம்... ரெண்டு நிமிஷம். நீ கதவைத் தொறடி. நான் உன்கிட்ட பேசிட்டு யாருக்கும் தெரியாம போய்டுறேன்!” என்றான்.
“நோ... வேணாம் ராம்‌. அம்மாச்சி வந்தா வெளுத்துடுவாங்க!” அவள் பயத்துடன் கூறினாள். ஷண்முகி சற்று நேரத்திற்கு முன்புதான் வந்திருந்தார். இவளிடம் வந்து சில நிமிடங்கள் பேசிவிட்டு சென்றாலும் பெரிதாய் அனுசரணையாகப் பேசவில்லை. பூப்படைந்து விட்டாள், இன்னும் பொறுப்புகள் கூடிவிட்டது, அடுத்து திருமணம் என்ற வகையில் அவளது வயிற்றில் பயபந்தை உருளச் செய்திருந்தார். அதற்கும் சேர்த்துதான் இவள் சோர்ந்து போய் படுத்திருந்தாள்.
“நீ கதவை திறக்காம நான் போக மாட்டேன் காயூ...” அவன் அழுத்திக் கூறவும் சில நொடிகள் தயங்கியவள் விறுவிறுவென சென்று முன்பக்க அறைக் கதவை இழுத்துப் பூட்டிவிட்டு வந்து இவனுக்கு கதவை திறந்துவிட்டாள்.
உள்ளே நுழைந்தவன், “இப்போ லயித்து வலி பரவாயில்லையா காயூ? மாத்திரை எதுவும் அப்பாகிட்டே கேட்டு வாங்கிட்டு வரவா?” எனக் கேட்டு அவளது கட்டிலில் வந்தமர்ந்தான்.
“இல்ல ராம்... இப்போ பரவாயில்லை!” என்றவள், “நீ கிளம்பு!” என்றாள் பயத்துடன். யாரும் வந்துவிடுவார்களோ என மனம் பதறியது.

அவள் கூறுவதைக் காதில் வாங்காதவன் கட்டிலில் கிடந்த புகைப்படத்தை எட்டி எடுத்தான். சுசீலாவின் புகைப்படம்தான் அது. அவன் நிமிர்ந்து கேள்வியாகப் பார்க்க, “அம்மா ஞாபகம் வந்துடுச்சு ராம்!” என்றாள் புன்னகைக்க முயன்ற உதடுகளுடன். அழுத முகம் அவளை சிரிக்க விடவில்லை.
“அழுதீயா காயூ?” அவன் ஆதுரமாய்க் கேட்டு எழுந்து வந்த தோளோடு அணைத்தான். அந்தக் கேள்வியில் இவளுக்கு இன்னும் அழுகைப் பொங்கியது. இதோ இது போலொரு அனுசரணையான, அனபான வார்த்தைகளைத்தானே எதிர்பார்த்தாள். அதானலே மனம் சட்டென கலங்கியது. இல்லையென தலையை அசைத்துப் பின்னர் ஆமாம் என முடித்தாள்.
“ப்ம்ச்... நான் எத்தனை டைம் சொல்லி இருக்கேன் காயூ. உனக்கு அம்மா ஞாபகம் வந்துச்சுன்னா எனக்கு கால் பண்ணு. நான் வரேன், இல்லை நீ வா. என் அம்மா...ம்கூம்...நம்ப கௌதமிம்மா இருக்காங்க இல்ல?” எனக் கேட்டவனை அமைதியாயப் பார்த்து தலையை அசைத்தாள்.

அவள் கண்களில் வழிந்த நீரைத் துடைத்தவன், “சாப்டீயா காயூ?” அன்பாய்க் கேட்டான்.
“ஹம்ம்... சாப்டேன் ராம்!” என்றவள் அவன் கையை விலக்கிவிட்டு கட்டிலில் சென்று அமர்ந்தாள்.
“பொய் சொல்லாத டி. உன் முகத்தைப் பார்த்தாலே தெரியுது. ஏன் சாப்பிடலை?” எனக் கேட்டான்.
“எதுவுமே சாப்பிட பிடிக்கலை ராம்!” என்றாள் கட்டிலில் சாய்ந்து வயிற்றில் கையைக் கோர்த்து.
“சாப்பிட்டா தானே தெம்பா இருக்கும்!” என்றான் அவன்.
“பன் பட்டர் ஜாம் சாப்பிடணும் போல இருக்கு ராம். அம்மாச்சி வெளிய எதுவும் வாங்கி சாப்பிடக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க!” என அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே அவள் கேட்ட இனிப்பு ரொட்டியை நீட்டியிருந்தான் ரகுராம். ஒரு நொடி அவளது முகம் மலர்ந்து போனது.
அதை வாங்கி உண்ணத் தொடங்கியவள், “எப்படி ராம்? நான் கேக்காமலே வாங்கிட்டு வந்த?” எனக் கேட்டாள்.
“ஹம்ம்... கடவுள் தான் சொன்னாரு. காயூ சாப்பிடாம அம்மாவை நினைச்சு அழுதுட்டு இருப்பா. பன் பட்டர் ஜாம் வாங்கிட்டு போன்னு!” அவன் என்னவோ விளையாடாகக் கூறினான். ஆனால், காயத்ரிக்கு அந்த பதிலில் நெஞ்சம் நனைந்து போயிருந்தது. உண்மையிலே சிறிது நேரத்திற்கு முன்னே கடவுளிடம் தான் ஏன் தாயை இத்தனை விரைவில் பிரித்துக் கொண்டீர்கள் என முறையிட்டிருந்தாள். இவன் இப்படி கூறவும் இன்னும் ரகுராமை நிரம்ப பிடித்தது. இதுவரைக்கும் ஒரு தோழனாய் நண்பனாய் அவனைப் பிடிக்கும்தான். ஆனால் இக்கணத்தில் தான் அவனுக்கான பிரியம் அவளிடம் பூக்கத் தொடங்கியிருந்தது.
அவள் உண்டு முடிய, “காயூ, இனி எதாவது சாப்பிடணும்னு தோணுச்சுன்னா எனக்கு கால் பண்ணு. உங்கப்பா போன்ல இருந்து பண்ணு. சரியா, அழாதே. வலி ரொம்ப இருந்தா சொல்லு. நாளைக்கு மாத்திரை வாங்கிட்டு வரேன். க்ளாஸ்ல என்ன மிஸ் நடத்துறாங்கன்னு யோசிக்காத. நான் எல்லாத்தையும் சொல்லித் தரேன். எப்போ ஸ்கூலுக்கு வருவ?” என்று கேள்விகளைக் கேட்டு பதிலைப் பெற்றுக்கொண்டு விடை பெற்றவனை அகமும் புறமும் நிறைத்துக் கொண்டாள் பெண்.
காயத்ரி நடந்ததைக் கூறி முடித்ததும் ரகுராம் முகத்தில் ஒரு நொடி ஆச்சர்யம் வந்து போனது. அவனுக்குமே இவள் கூறியதும் அந்த நிகழ்வு நினைவு வந்தது. ஆனால் இத்தனை தெளிவாய் இல்லையே. “அப்போல இருந்தே என்னைப் பிடிக்குமா காயூ?” என அதிசயமாய்க் கேட்டான்.
“ஹம்ம்...ஆமா டா. அதுக்கு முன்னாடி பிடிக்கும்தான். பட் அந்த இன்சிடென்ட்க்கு அப்புறம் ரொம்ப பிடிக்கும் டா. லவ்னு இல்ல, அது அப்போ ஒரு அட்ராக்ஷன். அப்புறம் ட்வெல்த் படிக்கும் போது உன் ஃப்ரெண்ட் ஒருத்தன் எனக்கு லவ் லெட்டர் கொடுத்தான்னு நீ‌ என்னைக் கூட்டீட்டு போய் அவன்கிட்ட சண்டை போட்ட இல்ல. என் ஷோல்டர்ல கைப்போட்டு, இவ என் காயூ. யாரும் வம்பு பண்ணிங்க அவ்வளோதான்னு திட்டுனல்ல. அப்போதான் லவ் அப்படின்னு கன்பார்ம் பண்ணேன். அது டீனேஜ் வேற இல்ல ராம். நீ பக்கத்துல வந்தாலே டோபமைன் சுரக்க ஆரம்பிச்சுடும். அப்புறம் காலேஜ் படிக்கும் போதும் என்னை விடாம ஒரே காலேஜ் சேர்த்துட்ட. அப்போதான் என் ராம் என்னை எங்கேயும் விட மாட்டான்னு ரொம்ப மனசுக்குள்ள பதிஞ்சுட்ட டா. அப்புறம் என்ன அந்த ஏஜ்க்கே உரிய லவ் ட்ரீம்ஸ்ல தான் காலேஜை ஓட்டுனேன். ஹம்ம்...தென் அடுத்தது எல்லாம் உனக்கே தெரியும் இல்ல ராம்?” என அவ்வப்போது அவன் முகம் பார்க்கத் தயங்கி கோர்த்திருந்த விரல்களை மெதுவாய் நீவிவிட்டு கொஞ்சம் அந்த வயது நினைவில் வெட்கப்பட்டு என தன் மீதான பிரியத்திற்கு பெயர் வைத்தவளை ரகுராம் ஆசையாய் பார்த்தான். இப்படியெல்லாம் அவள் அவனைப் பார்த்திருக்கிறாள் என்பதெல்லாம் ஆச்சரியம்தான். தான் என்று வரும்போது இவளின் முசுடு முகம் எங்கே என எண்ணியதும் மெல்லிய முறுவல் பிறந்தது.
“கிறுக்கச்சி!” என்றான் சிரிப்புடன். நிமிர்ந்து அவனை முறைக்க முயன்றவளின் முகத்திலும் சிரிப்புதான்.
“ஆமா டா...கிறுக்கச்சிதான் நான்!” என்றாள் பற்கள் தெரிய புன்னகைத்து.
முதன்முதலில் காயத்ரி அவனை வசீகரித்தாள். அந்தப் புன்னகையை தன் உதடு கொண்டு திருடும் எண்ணம் உதித்ததும் தொண்டையைச் செருமியவன், “காயூ, ஐ ஃபீல் லைக் கிஸ்ஸிங் யூ!” என்றான் தடுமாறியக் குரலில்.
ஒரு நொடி அவன் கூறியதில் அதிர்ந்து பின்னர் உணர்ந்தவளின் முகம் மலர்ந்தது. “இதெல்லாம் கேட்டுட்டா இருப்பாங்க டா!” என மென்மையாய் முறைத்தவள், “டேக் மீ!” என்றாள் குறும்பாய்.
“ஏய்... கிஸ் மட்டும்தான் டி!” அவன் பதற, இவளுக்கு சிரிப்பு பொங்கியது.
“ஏதோ ஒன்னு டா...” என்றாள் கேலியாய். தயக்கத்துடன் அவளது முகத்தைப் பற்றி உதடு நோக்கி குனிந்தவனை இவள் குறுகுறுவென பார்த்தாள்.
“ஏய்... இப்படி குறுகுறுன்னு பார்த்தா எப்படி டி கிஸ் பண்றது. கண்ணை மூடு நீ முதல்ல!” அவன் அதட்டவும், “ஒரு முத்தத்துக்கு இந்த அக்கப்போராடா?” என சுகமாய் சலித்தவள் விழிகளை மூடினாள். சில பல நிமிடங்களில் அவளது மூடிய இமைகள் அவனது இதழீரத்தை உணர, அவளது உதடுகளில் முறுவல் பிறந்தது. பின்னர் மெதுவாய் உதடுகளை நகர்த்தி இரண்டு கன்னத்திலும் பொதிந்து எடுத்தவன் நாடியில் முத்தமிட்டான்.
உதடுகளில் முத்தமிட சென்றவனுக்கு ஏகத்தயக்கம். ஒரு சில நிமிடங்கள் பொறுத்துப் பார்த்தவள் விழிகளைத் திறந்து, “என்னடா?” என்றாள் அவனை முறைத்து‌.

பின்னர் இவளே இருவர் உதடுகளுக்கும் இடையேயான இடைவெளியை நிரப்ப முயல, படக்கென தலையைப் பின்னிழுத்தவன், “காயூ...நாளைக்கு... நாளைக்கு கிஸ் பண்றேன்!” என்றான் பதறி. அவனது பாவனையில் இவளுக்கு சிரிப்பு வர தலையை சாய்த்து சிரித்தாள் பெண்.
“இதென்ன ஆப்ரேஷனா டா. டேட் பிக்ஸ் பண்ண?” அவள் சிரிப்புடன் கேட்க, “ப்ம்ச்... ட்ரை பண்ணேன் காயூ. பட் முடியலை!” என முணுமுணுத்து கையை உயர்த்தித் தலையைக் கோதினான். முகத்தில் மெலிதாய் வெட்கம் வந்ததோ என எண்ணியவள், “அதான் சொல்றேன். பேசாம ஒரு டாக்டரைப் பார்க்கலாம் டா!” என்றாள் குறும்புடன்.
“சீ... சீ அதில்லை டி. நான்... நான் அப்படி செல்லலை. இன்னும் டைம் வேணும்!” என்றான் தயங்கி.
அதில் சிரித்தவள், “பரவாயில்லை டா... அதான் கன்னத்துல கிஸ் பண்ற அளவுக்கு முன்னேறிட்ட இல்ல. மிச்சதை அப்புறம் பார்த்துக்கலாம்!” என்றாள்.
“நிஜமா நீ எதுவும் நினைக்கலைல காயூ?” அவள் முகம் பார்க்கத் தயங்கியவனின் முகத்தை நிமிர்த்தியவள், “ராம் உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சதுக்கு இன்னொரு ரீசன்‌ என்னென்னு தெரியுமா டா? என் கண்ணைத் தவிர எங்கேயும் நீ பார்த்து பேசுனது இல்ல. ஐ ஃபீல் வெரி சேஃப் வித் யூ. அதனாலே உன்னை ரொம்ப பிடிக்கும் டா. இப்போ கூட உன்னால சடன்னா என்னை வொய்ஃபா பார்க்க முடியலை.‌ பதினைஞ்சு வருஷமா ப்ரெண்டா இருந்துட்டு சட்டுன்னு அதை மாத்துனா உன் மனசு ஏத்துக்கணும் இல்ல. சோ லெட் இட் பீ ஃப்ரீ. டோன்ட் ஃபீல் கில்ட்!” என்றாள் அவன் மனதறிந்து. அதில் ரகுராமின் முகம் தெளிந்தது. அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.
“என்னைக் கல்யாணம் பண்ணாம போய்ருந்தா நிஜமா தனியாவே இருந்துருப்பீயா காயூ?” அவன் கேட்கவும் இவளுக்குப் புன்னகை முளைத்தது.
“உன் விஷயத்துல என்னைக்குமே நான் பொய் சொன்னது இல்லை டா!” என்றாள் அவன் தலையைக் கோதி.
“எப்படி டி இவ்வளோ ஸ்டபர்னா இருக்க நீ‌. நம்ப கல்யாணம் நடந்ததால சரி. அப்படி இல்லாம நான் சைந்தவியைக் கல்யாணம் பண்ணி இருந்தா என் கண்ணு முன்னாடி நீ தனியாவே இருந்து என்னை கஷ்டப்படுத்தியிருப்ப தானே நீ?” அவன் ஆதங்கமாய் கேட்க, பெருமூச்சு விட்டவள், “அதான் நடக்கலைல்ல டா. விடு!” என்றாள் ஆதரவாக.
“ம்கூம்... எனக்கு உன் மேல கோபம் நிறைய இருந்துச்சு காயூ. அழுது சோகத்துல இருக்கீயேன்னு அமைதியா இருந்துட்டேன். இன்னுமுமே கொஞ்ச கோபம் இருக்கு டி!” என்றான் முறைப்புடன். அதில் இவளுக்கு முறுவல் பூத்தது.
“அதுதான் விதின்னா யாராலையும் மாத்தி இருக்க முடியாது டா. நான் என் வாழ்க்கையை பார்த்துட்டுப் போய்ருப்பேன், அவ்ளோதான். ஏன் லவ் பண்ற எல்லாரும் மேரேஜ் பண்ணிக்கிறாங்களா என்ன? யூ க்நோ, நான் அக்செப்ட் பண்ணிட்டேன் ராம். உன்கிட்ட மனசுல இருக்கதை சொல்லிட்ட அப்புறம் கொஞ்சம் மனசு ரிலாக்ஸாச்சு. தென் யெஸ் இந்த ராம் எனக்கில்லை. அவன் எனக்காக படைக்கப்படலைன்னு முழுசா ஏத்துக்கிட்டு உன் மேரேஜ் அன்னைக்கு கோவிலுக்குப் போய் உனக்காகதான் வேண்டிக்கிட்டேன்‌ டா. நீ என் கூட இருந்தா தான் நான் சந்தோஷமா இருப்பேன்னு இல்ல டா. நீ எங்க இருந்தாலும் யார் கூட வாழ்ந்தாலும் நிம்மதியா இருக்கணும். சந்தோஷமா வாழணும். அது மட்டும்தானே அப்போதைக்கு என்னோட வேண்டுதல். அப்புறம் முக்கியமா என் கண்ணு முன்னாடி நீங்க நிக்கும் போது எப்பவுமே நான் பொறாமை படக் கூடாதுன்னு மனசை சரிபடுத்தி வச்சிட்டேன். பட், காட்ஸ் க்ரேஸ். என் ராமை என்கிட்டயே கொடுத்துட்டாரு. லைக் மிராக்கிள் மாதிரிதான் டா. நீ... நீ ரொம்ப தூரத்துல இருந்த டா. எப்படி செட்டாகும்னு அழுதிருக்கேன். என்னைப் பார்த்து பாவப்பட்டு உன்னை என்கிட்ட கடவுள் கொடுத்துட்டாரு போல. நம்ப மேரேஜ் முடிஞ்சு எத்தனையோ தடவை கோவிலுக்குப் போய்ருக்கேன். எதுவுமே கேட்கவே தோணலை ராம். அதான் நீயே கிடைச்சுட்ட. வேற என்ன வேணும் எனக்கு?” என்றாள் அவன் முகம் தாங்கி பிரியத்துடன். உண்மையிலே ரகுராம் அவள் வார்த்தைகளை பரிபூரணமாக உள்வாங்கினான்.
அவனுக்கு மலைப்பாய் இருந்தது. ஏன் இந்தப் பெண் இத்தனை அன்பை தன்மீது வைத்திருக்கிறாள் என சுகமாய் சலித்தவன், “ப்ம்ச்... எவ்ரிவொன் இஸ் ஆர்டினரி. இட்ஸ் யுவர் லவ் தட் மேக்ஸ் தெம் ஸ்பெஷல். சோ நீ நினைக்கிற அளவுக்கு
நான் வொர்த்!” என அவன் கூற வந்த வார்த்தையை மனைவி விழுங்கியிருந்தாள். எதிர்பாராது திகைத்தாலும் முதன்முதலில் இந்த அன்பிற்கு தானும் ஈடு செய்ய வேண்டும் என்று அவள் கொடுத்த முத்தத்தை திருப்பிக் கொடுத்தான். ஒரு கை அவளது கன்னத்தைப் பற்றி இழுக்க, இன்னும் அவன் மீது சரிந்தாள். கணவன் முத்தமிட்ட கணத்தில் காயத்ரி சொக்கிப் போயிருந்தாள்.
இருவரும் முத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து உதடுகளை பிரித்தெடுக்க, அவனை இறுக்கி அணைத்த காயத்ரி, “ராம்... சும்மா இருந்த என்னை ஃபீல் லைக் கிஸ்ஸிங் யூன்னு டெம்ப் பண்ணி விட்டுட்ட டா. அதான் கிஸ் பண்ணேன்!” என்றாள் முணுமுணுப்பும் வெட்கமுமாய் அவன் கழுத்தில் முகம் புதைத்து. அவனுக்கு சிரிப்பு வந்தது.
“ஏன் காயூ, உனக்கு வெட்கம், நாணம், அச்சம் இதெல்லாம் இருக்காரு டி... கொஞ்சமாச்சும் வெக்கப்படலாம் இல்ல?” எனக் கேலியாய்க் கேட்டான்.

அவனிடமிருந்து சிலிர்த்து எழுந்தவள், “ஏன் ராம், அதென்ன பொண்ணுங்க மட்டும்தான் வெக்கப்படணுமா? சின்ன சேஞ்ச்க்கு நீ வெக்கப்படு. எனக்கு அதெல்லாம் வராது!” என்றாள் அலட்டிக்காது. அவள் பதிலில் பொங்கி சிரித்தான் கணவன்.
காயத்ரி நினைவு வந்தவளாக, “டேய்... அன்னைக்கு மேரேஜ்ல என்ன நடந்துச்சுன்னு இப்போ சொல்ற. ஹம்ம், அப்படியே ஏமாத்திடலாம்னு நினைக்காத மேன்!” என்றாள் அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்து.

அப்படியே அவள் தோளில் சாய்ந்து போலியாய் கொட்டாவி விட்டவன், “காயூ... ஐ ஃபீல் ஸ்லீப்பி. டைம் பதினொன்னாச்சு டி. நாளைக்கு சொல்றேன்!” என்றான்.
“ராம்...சாவடிச்சுடுவேன் டா. ஒழுங்கா என்னாச்சுன்னு சொல்லு!” காயத்ரி அவனது காதைப் பிடித்து திருகினாள். ஆனாலும் அவன் அசையவில்லை.

கட்டிலில் படுத்து கண்களை மூடியவன், “நாளைக்கும் சர்ஜரி இருக்கு காயூ. நான் தூங்குனாதான் நல்லா பண்ண முடியும்!” என்றான். வேண்டுமென்றே எதைக் கூறினால் அவளது வாயை அடைக்க முடியும் என்று தெரிந்துதானே உரைத்தான்.
“ஏன் டா நாயே... இவ்வளோ நேரம் நான் சொல்றதை மட்டும் கதையா கேட்டல்ல. இப்போ மட்டும் ஆப்ரேஷனா? ஹம்ம்...” என அவன் தலையில் வலிக்காது கொட்டியவள் கடுப்புடன் படுக்கவும் அவளை இழுத்து அணைத்தான் கணவன்.
“ஒன்னும் தேவையில்லை... போடா. போ, தள்ளிப் படு போ!” என அவள் அடிகளை சிரிப்புடன் வாங்கினான் ரகுராம். ஒரு கட்டத்திற்கு மேல் அலுத்தவள், முறைத்துக் கொண்டே தூங்கிப் போனாள்.

தொடரும்...
 
Last edited:
Well-known member
Messages
924
Reaction score
677
Points
93
Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr

Gaayu kooda sernthu naangalum aarvama waiting
 
Well-known member
Messages
924
Reaction score
677
Points
93
Gaayu kooda sernthu naangalum aarvama waiting maaa


Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr
 
Top