- Messages
- 1,091
- Reaction score
- 3,124
- Points
- 113
இஷ்டம் – 23 
மறுநாளிலிருந்து ரகுராம் மருத்துவமனைக்குச் செல்லத் தொடங்கினான். அடுத்த வாரத்திலிருந்து காயத்ரியும் அவளது இயல்பு வாழ்க்கைக்குள் நூழைந்திருந்தாள். பணியில் இரவு சுழற்சி மட்டும் இருவருக்கும் ஒன்றாய் வருமாறு பார்த்துக் கொண்டனர்.
வேலை நேரம் ஒன்றாய் அமைந்தால் ரகுராமின் இருசக்கர வாகனத்திலே இருவரும் ஒன்றாய் சென்று வந்தனர். வெவ்வேறு சுழற்சியில் தனித்தனியாக சென்றனர். பெரிதாய் எவ்வித மாற்றமும் இல்லை. முன்பு வேறு வேறு வீட்டில் நட்பு பயிரை வளர்த்தவர்கள் இப்போது ஒரே வீட்டில் இருந்ததால் இன்னுமே பிணைப்பு கூடியது.
தினமும் செல்ல சண்டைகள், அதற்குப் பின்னரான சமாதானங்கள் என வாழ்க்கை வெகு இயல்பாக நகரத் தொடங்கியது. காயத்ரி தினமும் பத்து நிமிடமாவது தந்தையைப் பார்த்துவிட்டுத்தான் வந்தாள். விடுமுறை நாட்களில் அங்கே சென்று அவருக்கு சமைத்துக் கொடுத்தாள். அலைபேசி மூலம் அவர் மாத்திரைகளை உண்கிறாரா என கவனித்துக் கொண்டாள். மாதத்திற்கு ஒருமுறை அவள் வீட்டை சுத்தம் செய்தாள்.
ரகுராம் வீட்டில் பொருந்திப் போவதில் அவளுக்குப் பெரிதாய் எவ்வித சங்கடமும் ஏற்படவில்லை. சிறு வயதிலிருந்து பார்த்துப் பேசி பழகியவர்கள் என்பதால் அவர்களுடன் எளிதில் ஒன்றிப் போனாள். தேவராஜிற்கும் அவளுக்கும் அதிகமாகப் பேச்சு வார்த்தை இல்லை. தேவைக்கு ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசினாள். அவர் கேள்வி கேட்டால் பதிலுரைத்தாள். அவ்வளவுதான். இதற்கா இத்தனை பயந்தோம் என முன்பு கண்ணீரில் கரைந்த நாட்கள் எல்லாம் இப்போது நினைத்து சிரித்துக் கொண்டாள்.
தேவராஜ் மகன் என்று வருகையில் தன் சுய விருப்பு வெறுப்புகளைத் தளர்த்திக் கொண்டார். மனைவியை மருமகள் முன்பு திட்ட மாட்டார். அவர் திட்டுவதற்கான ஜாகையாக அறையை மாற்றிக் கொண்டார். அதனால் முன்பு போல முகத்தை தூக்கி வைப்பதை நிறுத்தியிருந்தார். அதுவும் அல்லாது மருமகள் முன்பு தன் மனைவி எவ்விதத்திலும் குறைந்துவிடக் கூடாதென வெகு கவனமாய் இருந்தார் மனிதர். கௌதமிக்கும் கணவரின் மனமாற்றத்தில் வெகுவாய் மகிழ்ச்சி படர்ந்தது பெரிதாய் எவ்வித ஏற்ற இறக்கமும் அற்று வாழ்க்கை அதன் போக்கில் நகரத் தொடங்கியிருந்தது.
அன்றைக்கு மதிய சுழற்சி என்பதால் மாலை ரகுராமுடனே வீட்டிற்கு செல்லலாம் என காயத்ரி பணிநேரம் முடிந்ததும் கிளம்பி தயாராக நின்றாள்.
“என்ன உன் ஆளுக்கு வெய்டிங்கா காயூ?” எனக் கேட்ட கார்த்திகா விடை பெற, இவள் சின்ன சிரிப்புடன் தலையை அசைத்தாள்.
நேரத்தைப் பார்த்துவிட்டு காயத்ரி வாயிலை பார்க்க ரகுராம் நடந்து வந்தான். “காயூ வா...” என அவன் அப்படியே வெளியே திரும்ப, இவளும் கைப்பையை இறுக்கிப் பிடித்தபடி அவனுடன் நடந்தாள். அவளது இருசக்கர வாகனத்தில் ஏதோ பழுது என காலையில் பேருந்தில்தான் வந்திருந்தாள். அதனாலே ராம் தான் வந்து அழைத்துக் கொள்வதாகக் கூறிவிட்டான்.
இரவு நன்றாய் கவிழ்ந்திருந்தது. ரகுராம் இருசக்கர வாகனத்தை இயக்க, இவள் அவனுக்குப் பின்னே அமர்ந்தாள். இருவரும் வீட்டை அடைந்தனர். கௌதமி கூடத்தில்தான் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே காயத்ரி அறைக்குள் நுழைய, ரகுராம் மெலிதாய் விசிலடித்தபடியே உள்ளே நுழைந்தான். அவள் காதில் கேட்டாலும் அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளாது நிலைபேழையைத் திறந்து இரவு உடையைத் தேடினாள்.
“காயூ...” அவன் அழைக்க, “என்னடா?” என்றாள் திரும்பாமல்.
“நீயும் நல்ல பிஃகர்தான் போல டி?” அவன் கூறவும், இவள் திரும்பி அவனை முறைத்துக் கொண்டே உடையைக் கையில் எடுத்தாள். நெற்றி வகிட்டில் இட்டிருந்த குங்குமும் கழுத்தில் தொங்கிய மஞ்சள் தாலியும் அவளைத் தனித்துக் காட்டின. விசித்ரா பட்டு வகையிலான புடவை அவளை எடுத்துக் காட்டியது. மனைவியை மேலிருந்து கீழாக அளந்தான்.
“ஹே நிஜமா டி... முன்னாடிலாம் நீ அழகா இல்லையான்னு எனக்குத் தெரியாது. பட் இப்போ அழகா தெரிய ஆரம்பிச்சுட்டீயே! என்னவா இருக்கும்?” கேள்வி கேட்டு மேவாயைத் தேய்த்தவனை மென்மையாய் முறைத்தவள், “ஹம்ம்... கல்யாணம் ஆகிடுச்சுல்ல. அதான் வேற வழியில்லாம அழகா தெரியுறேன் போல?” என நக்கலாகக் கூறியபடியே உடை மாற்ற சென்றாள்.
“இருக்கும்... இருக்கும்!” என அவன் இழுக்கவும் அவன் இடையில் முட்டியால் இடித்தபடி வெளியே சென்றாள். இவன் சிரிப்புடன் கழிவறைக்குள் நுழைத்தான்.
“அத்தை... செம்மையா பசிக்குது? என்ன குக் பண்ணலாம்?” என்றவாறே கௌதமி அருகே சென்றாள் காயத்ரி.
“அடை தோசைக்கு மாவு ஆட்டி வச்சுட்டேன் காயூ. குருமா பத்து நிமிஷத்துல வச்சுடலாம். வா!” என அவர் அகல, “அத்தை... இன்னைக்கு நான் குருமா செய்றேன்...” என அவர் ஏற்கனவே வெட்டி வைத்திருந்த காய்கறிகளை வைத்து பத்து நிமிடத்தில் இவள் குருமாவை வைத்து முடித்தாள். தேவராஜூம் வந்துவிட, கௌதமி நால்வருக்குமான தோசையை சுட்டு ஹாட் பாக்ஸில் வைத்து மேஜை மீது எடுத்து வைத்தார்.
அனைவரும் உண்ண அமர்ந்தனர். காயத்ரி பசியாக இருந்ததால் தோசையில் கவனமாய் இருந்தாள். ஒரு வாய் உண்டவுடனே அது காயத்ரியின் சமையல் என ரகுவிற்குப் புரிந்து போனது.
தேவராஜ் இரண்டு கவளம் உண்டவர் ஏதோ திட்ட வாயெடுக்க, “ம்மா... இன்னைக்கு என்ன குருமால உப்பு உறைப்பு எல்லாம் கம்மியா போட்டிருக்கீங்க? உங்க குக்கிங் மாதிரி தெரியலையே?” என்றான்.
“ஆமா டா... நான் சமைக்கலை. உன் பொண்டாட்டிதான் இன்னைக்கு குருமா வச்சா!” அவர் கூற, காயத்ரி மாமனாரின் முகபாவனையிலே புரிந்து கொண்டாள்.
“நான்தான் மாமா சமைச்சேன். உப்பும் காரமும் கம்மியா சாப்ட்டா உடம்புக்கு நல்லதுதானே? உங்களுக்கே தெரியும்தானே மாமா?” என அவள் கேட்டு வைக்க, தேவராஜ் எதுவும் கூற முடியாது தலையை அசைத்து உண்டுவிட்டு எழுந்தார்.
அவர் அகன்றதும், “என் வீட்டுக்காரரையே தலையாட்ட வச்சுட்ட காயூ...” என்ற கௌதமியின் முகத்தில் முறுவல் பிறந்தது.
“என்ன அத்தை மாமாவை வளர்த்து வச்சிருக்கீங்க?” என போலியாய்க் கடிந்தவள், “என் புருஷனைப் பாருங்க. உப்பே இல்லைன்னா கூட சமத்தா சாப்பிடுவான்!” என அவன் மேவாயைப் பிடித்துக் கொஞ்சினாள். அதில் அவனுக்கு வெட்கம் வந்திருக்க வேண்டும். சிரிப்பும் முறைப்புமாய் அவள் கையைத் தட்டிவிட்டான். கௌதமி இருவரையும் சிரிப்புடன் பார்த்துவிட்டு அகன்றார்.
காயத்ரி மாமியாருக்கு உதவ செல்ல, ரகு சென்று படுக்கையில் விழுந்தான். சில பல நிமிடங்கள் கழித்து அவள் அறைக்குள் நுழைய, கணவன் உறக்கம் வராது அங்குமிங்கும் புரண்டு கொண்டிருந்தான். அறைக் கதவை சாற்றிவிட்டு விளக்கை அணைத்தவள், மேஜை விளக்கை உயிர்பித்து அவனருகே அமர்ந்தாள்.
“ராம்... என்னாச்சு டா? தூக்கம் வரலையா?” என அவள் யோசனையாக கேட்க, “ஹம்ம்... ஆமா காயூ. இன்னைக்கு மார்னிங்ல இருந்து ஒரு சர்ஜரி. ஆப்ரேஷன் தியேட்டர்ல நின்னுட்டே இருந்ததுல கால் வலிடி!” என்றான் முனங்கலாக. சற்றே நகர்ந்து அவனருகே சென்றவள் கணவனின் காலை எடுத்து மெதுவாய்ப் பிடித்துவிட்டாள்.
இதை எதிர்பாராது திகைத்தவன், “ஹே... காயூ, பரவாயில்லை. நீ வந்து படு டி!” என்றான் காலை இழுத்து.
“ம்கூம்... நீ அமைதியா தூங்கு ராம். நான் கொஞ்ச நேரம் காலைப் பிடிச்சு விடுறேன்!” என்றாள்.
“வேணாம் டி... எனக்கு கூச்சமா இருக்கு!” அவன் முறைக்க, “ரொம்ப பண்ணாத டா. தூங்கு!” என்றாள் அதட்டலாய். அதற்கு மேலும் எதுவும் கூறாத ரகுராம் தலையணையில் முகம் புதைத்தான். அவளது விரல்கள் மெதுவாய் காலைப் பிடித்துவிட்டது இதமாய் இருந்தது. ஆனாலும் உறக்கம் கண்களை அண்டவில்லை.
“காயூ...” அவன் அழைக்க, “ஹம்ம்...” என்றாள் இவள்.
“காயூ...” மீண்டும் அவன் அழைக்க, “என்னடா... தூங்கலையா நீ?” அவள் சற்றே கண்டிப்புடன் கேட்டாள்.
“தூங்குறதெல்லாம் இருக்கட்டும் டி நவம்பர் தேர்டித், டூ தௌசண்ட் போர்டீன் என்ன நடந்துச்சு?” எனக் கேட்டான்.
அவன் கேள்வியில் புரியாது விழித்தவள், “போன மாசம் என்ன நடந்துச்சுன்னே எனக்கு ஞாபகம் இருக்காது. இதுல எப்போ நடந்ததை கேட்குற டா?” என சலித்தாள் இவள்.
“குடிகாரி... குடிச்சிட்டு நீதான் உளறுன. அன்னைக்கு ஏதோ இன்சிடென்ட் நடந்துருக்கு. ஐ க்நோ, நீ முதல்ல அதை சொல்லு!” அவன் கேட்டதும் காயத்ரியின் மூளை பளிச்சிட்டது.
“ஓ... அதுவா?” என அவள் இழுக்க, “யெஸ்... யெஸ்!” என ரகு ஆர்வமாய் எழுந்தமர்ந்து
விட்டான்.
“அதெல்லாம் சொல்றதுக்கில்லை. ஒழுங்கா படுத்து தூங்கு!” என்றவள் மறுபுறம் படுக்க செல்ல, இடையோடு கைக்கொடுத்து அவளைத் தன்னருகே அமர்த்தியவன், “நீ என்ன நடந்துச்சுன்னு சொல்லாம தூங்க முடியாது டி. நான் விட மாட்டேன்!” என அவன் அடமாய்க் கூற, “போடா... எனக்குத் தோணும்போது சொல்றேன். இப்போ மாட்டேன்!” என அவன் தோளில் சாய்ந்து கண்மூடினாள் பெண்.
“அநியாயம் பண்ற டி... ஒழுங்கா சொல்லிடு. இல்லைன்னா கடிச்சு வச்சிடுவேன்!” என அவன் பொய்யாய் கூற, ஒரு நொடி முகத்தை சுருக்கியவள் பின்னர், “சரி, ஒரு டீல். அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு நான் சொல்றேன். நீ மேரேஜ் அப்போ அந்த ரூம்க்குள்ள என்னாச்சுன்னு சொல்லணும். ஓகே வா?” என புருவத்தை உயர்த்தினாள்.
“எமகாதகி டி நீ... சொல்லும். சொல்லித் தொலையும். நான் நெக்ஸ்ட் சொல்றேன்...” என்றான் போலியான கோபத்துடன்.
“ம்கூம்... உன்னை நம்ப முடியாதே!” காயூ இழுக்க, அவள் கழுத்தில் கையைப் போட்டு இறுக்கியவன், “நிஜமா சொல்றேன்...” என்றான் அழுத்தமாக.
“ஹம்ம்...” என்று அவன் கழுத்து வளைவில் முகம் புதைத்தவள், “அன்னைக்கு நான் ஏஜ் அட்டென்ட் பண்ணி இருந்தேன் டா!” என்றாள் மெல்லிய குரலில்.
“ஓ...” எனக் கேட்டவன் அவளைத் தோளோடு சேர்த்து தன்னோடு இறுக்கினான்.

மறுநாளிலிருந்து ரகுராம் மருத்துவமனைக்குச் செல்லத் தொடங்கினான். அடுத்த வாரத்திலிருந்து காயத்ரியும் அவளது இயல்பு வாழ்க்கைக்குள் நூழைந்திருந்தாள். பணியில் இரவு சுழற்சி மட்டும் இருவருக்கும் ஒன்றாய் வருமாறு பார்த்துக் கொண்டனர்.
வேலை நேரம் ஒன்றாய் அமைந்தால் ரகுராமின் இருசக்கர வாகனத்திலே இருவரும் ஒன்றாய் சென்று வந்தனர். வெவ்வேறு சுழற்சியில் தனித்தனியாக சென்றனர். பெரிதாய் எவ்வித மாற்றமும் இல்லை. முன்பு வேறு வேறு வீட்டில் நட்பு பயிரை வளர்த்தவர்கள் இப்போது ஒரே வீட்டில் இருந்ததால் இன்னுமே பிணைப்பு கூடியது.
தினமும் செல்ல சண்டைகள், அதற்குப் பின்னரான சமாதானங்கள் என வாழ்க்கை வெகு இயல்பாக நகரத் தொடங்கியது. காயத்ரி தினமும் பத்து நிமிடமாவது தந்தையைப் பார்த்துவிட்டுத்தான் வந்தாள். விடுமுறை நாட்களில் அங்கே சென்று அவருக்கு சமைத்துக் கொடுத்தாள். அலைபேசி மூலம் அவர் மாத்திரைகளை உண்கிறாரா என கவனித்துக் கொண்டாள். மாதத்திற்கு ஒருமுறை அவள் வீட்டை சுத்தம் செய்தாள்.
ரகுராம் வீட்டில் பொருந்திப் போவதில் அவளுக்குப் பெரிதாய் எவ்வித சங்கடமும் ஏற்படவில்லை. சிறு வயதிலிருந்து பார்த்துப் பேசி பழகியவர்கள் என்பதால் அவர்களுடன் எளிதில் ஒன்றிப் போனாள். தேவராஜிற்கும் அவளுக்கும் அதிகமாகப் பேச்சு வார்த்தை இல்லை. தேவைக்கு ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசினாள். அவர் கேள்வி கேட்டால் பதிலுரைத்தாள். அவ்வளவுதான். இதற்கா இத்தனை பயந்தோம் என முன்பு கண்ணீரில் கரைந்த நாட்கள் எல்லாம் இப்போது நினைத்து சிரித்துக் கொண்டாள்.
தேவராஜ் மகன் என்று வருகையில் தன் சுய விருப்பு வெறுப்புகளைத் தளர்த்திக் கொண்டார். மனைவியை மருமகள் முன்பு திட்ட மாட்டார். அவர் திட்டுவதற்கான ஜாகையாக அறையை மாற்றிக் கொண்டார். அதனால் முன்பு போல முகத்தை தூக்கி வைப்பதை நிறுத்தியிருந்தார். அதுவும் அல்லாது மருமகள் முன்பு தன் மனைவி எவ்விதத்திலும் குறைந்துவிடக் கூடாதென வெகு கவனமாய் இருந்தார் மனிதர். கௌதமிக்கும் கணவரின் மனமாற்றத்தில் வெகுவாய் மகிழ்ச்சி படர்ந்தது பெரிதாய் எவ்வித ஏற்ற இறக்கமும் அற்று வாழ்க்கை அதன் போக்கில் நகரத் தொடங்கியிருந்தது.
அன்றைக்கு மதிய சுழற்சி என்பதால் மாலை ரகுராமுடனே வீட்டிற்கு செல்லலாம் என காயத்ரி பணிநேரம் முடிந்ததும் கிளம்பி தயாராக நின்றாள்.
“என்ன உன் ஆளுக்கு வெய்டிங்கா காயூ?” எனக் கேட்ட கார்த்திகா விடை பெற, இவள் சின்ன சிரிப்புடன் தலையை அசைத்தாள்.
நேரத்தைப் பார்த்துவிட்டு காயத்ரி வாயிலை பார்க்க ரகுராம் நடந்து வந்தான். “காயூ வா...” என அவன் அப்படியே வெளியே திரும்ப, இவளும் கைப்பையை இறுக்கிப் பிடித்தபடி அவனுடன் நடந்தாள். அவளது இருசக்கர வாகனத்தில் ஏதோ பழுது என காலையில் பேருந்தில்தான் வந்திருந்தாள். அதனாலே ராம் தான் வந்து அழைத்துக் கொள்வதாகக் கூறிவிட்டான்.
இரவு நன்றாய் கவிழ்ந்திருந்தது. ரகுராம் இருசக்கர வாகனத்தை இயக்க, இவள் அவனுக்குப் பின்னே அமர்ந்தாள். இருவரும் வீட்டை அடைந்தனர். கௌதமி கூடத்தில்தான் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே காயத்ரி அறைக்குள் நுழைய, ரகுராம் மெலிதாய் விசிலடித்தபடியே உள்ளே நுழைந்தான். அவள் காதில் கேட்டாலும் அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளாது நிலைபேழையைத் திறந்து இரவு உடையைத் தேடினாள்.
“காயூ...” அவன் அழைக்க, “என்னடா?” என்றாள் திரும்பாமல்.
“நீயும் நல்ல பிஃகர்தான் போல டி?” அவன் கூறவும், இவள் திரும்பி அவனை முறைத்துக் கொண்டே உடையைக் கையில் எடுத்தாள். நெற்றி வகிட்டில் இட்டிருந்த குங்குமும் கழுத்தில் தொங்கிய மஞ்சள் தாலியும் அவளைத் தனித்துக் காட்டின. விசித்ரா பட்டு வகையிலான புடவை அவளை எடுத்துக் காட்டியது. மனைவியை மேலிருந்து கீழாக அளந்தான்.
“ஹே நிஜமா டி... முன்னாடிலாம் நீ அழகா இல்லையான்னு எனக்குத் தெரியாது. பட் இப்போ அழகா தெரிய ஆரம்பிச்சுட்டீயே! என்னவா இருக்கும்?” கேள்வி கேட்டு மேவாயைத் தேய்த்தவனை மென்மையாய் முறைத்தவள், “ஹம்ம்... கல்யாணம் ஆகிடுச்சுல்ல. அதான் வேற வழியில்லாம அழகா தெரியுறேன் போல?” என நக்கலாகக் கூறியபடியே உடை மாற்ற சென்றாள்.
“இருக்கும்... இருக்கும்!” என அவன் இழுக்கவும் அவன் இடையில் முட்டியால் இடித்தபடி வெளியே சென்றாள். இவன் சிரிப்புடன் கழிவறைக்குள் நுழைத்தான்.
“அத்தை... செம்மையா பசிக்குது? என்ன குக் பண்ணலாம்?” என்றவாறே கௌதமி அருகே சென்றாள் காயத்ரி.
“அடை தோசைக்கு மாவு ஆட்டி வச்சுட்டேன் காயூ. குருமா பத்து நிமிஷத்துல வச்சுடலாம். வா!” என அவர் அகல, “அத்தை... இன்னைக்கு நான் குருமா செய்றேன்...” என அவர் ஏற்கனவே வெட்டி வைத்திருந்த காய்கறிகளை வைத்து பத்து நிமிடத்தில் இவள் குருமாவை வைத்து முடித்தாள். தேவராஜூம் வந்துவிட, கௌதமி நால்வருக்குமான தோசையை சுட்டு ஹாட் பாக்ஸில் வைத்து மேஜை மீது எடுத்து வைத்தார்.
அனைவரும் உண்ண அமர்ந்தனர். காயத்ரி பசியாக இருந்ததால் தோசையில் கவனமாய் இருந்தாள். ஒரு வாய் உண்டவுடனே அது காயத்ரியின் சமையல் என ரகுவிற்குப் புரிந்து போனது.
தேவராஜ் இரண்டு கவளம் உண்டவர் ஏதோ திட்ட வாயெடுக்க, “ம்மா... இன்னைக்கு என்ன குருமால உப்பு உறைப்பு எல்லாம் கம்மியா போட்டிருக்கீங்க? உங்க குக்கிங் மாதிரி தெரியலையே?” என்றான்.
“ஆமா டா... நான் சமைக்கலை. உன் பொண்டாட்டிதான் இன்னைக்கு குருமா வச்சா!” அவர் கூற, காயத்ரி மாமனாரின் முகபாவனையிலே புரிந்து கொண்டாள்.
“நான்தான் மாமா சமைச்சேன். உப்பும் காரமும் கம்மியா சாப்ட்டா உடம்புக்கு நல்லதுதானே? உங்களுக்கே தெரியும்தானே மாமா?” என அவள் கேட்டு வைக்க, தேவராஜ் எதுவும் கூற முடியாது தலையை அசைத்து உண்டுவிட்டு எழுந்தார்.
அவர் அகன்றதும், “என் வீட்டுக்காரரையே தலையாட்ட வச்சுட்ட காயூ...” என்ற கௌதமியின் முகத்தில் முறுவல் பிறந்தது.
“என்ன அத்தை மாமாவை வளர்த்து வச்சிருக்கீங்க?” என போலியாய்க் கடிந்தவள், “என் புருஷனைப் பாருங்க. உப்பே இல்லைன்னா கூட சமத்தா சாப்பிடுவான்!” என அவன் மேவாயைப் பிடித்துக் கொஞ்சினாள். அதில் அவனுக்கு வெட்கம் வந்திருக்க வேண்டும். சிரிப்பும் முறைப்புமாய் அவள் கையைத் தட்டிவிட்டான். கௌதமி இருவரையும் சிரிப்புடன் பார்த்துவிட்டு அகன்றார்.
காயத்ரி மாமியாருக்கு உதவ செல்ல, ரகு சென்று படுக்கையில் விழுந்தான். சில பல நிமிடங்கள் கழித்து அவள் அறைக்குள் நுழைய, கணவன் உறக்கம் வராது அங்குமிங்கும் புரண்டு கொண்டிருந்தான். அறைக் கதவை சாற்றிவிட்டு விளக்கை அணைத்தவள், மேஜை விளக்கை உயிர்பித்து அவனருகே அமர்ந்தாள்.
“ராம்... என்னாச்சு டா? தூக்கம் வரலையா?” என அவள் யோசனையாக கேட்க, “ஹம்ம்... ஆமா காயூ. இன்னைக்கு மார்னிங்ல இருந்து ஒரு சர்ஜரி. ஆப்ரேஷன் தியேட்டர்ல நின்னுட்டே இருந்ததுல கால் வலிடி!” என்றான் முனங்கலாக. சற்றே நகர்ந்து அவனருகே சென்றவள் கணவனின் காலை எடுத்து மெதுவாய்ப் பிடித்துவிட்டாள்.
இதை எதிர்பாராது திகைத்தவன், “ஹே... காயூ, பரவாயில்லை. நீ வந்து படு டி!” என்றான் காலை இழுத்து.
“ம்கூம்... நீ அமைதியா தூங்கு ராம். நான் கொஞ்ச நேரம் காலைப் பிடிச்சு விடுறேன்!” என்றாள்.
“வேணாம் டி... எனக்கு கூச்சமா இருக்கு!” அவன் முறைக்க, “ரொம்ப பண்ணாத டா. தூங்கு!” என்றாள் அதட்டலாய். அதற்கு மேலும் எதுவும் கூறாத ரகுராம் தலையணையில் முகம் புதைத்தான். அவளது விரல்கள் மெதுவாய் காலைப் பிடித்துவிட்டது இதமாய் இருந்தது. ஆனாலும் உறக்கம் கண்களை அண்டவில்லை.
“காயூ...” அவன் அழைக்க, “ஹம்ம்...” என்றாள் இவள்.
“காயூ...” மீண்டும் அவன் அழைக்க, “என்னடா... தூங்கலையா நீ?” அவள் சற்றே கண்டிப்புடன் கேட்டாள்.
“தூங்குறதெல்லாம் இருக்கட்டும் டி நவம்பர் தேர்டித், டூ தௌசண்ட் போர்டீன் என்ன நடந்துச்சு?” எனக் கேட்டான்.
அவன் கேள்வியில் புரியாது விழித்தவள், “போன மாசம் என்ன நடந்துச்சுன்னே எனக்கு ஞாபகம் இருக்காது. இதுல எப்போ நடந்ததை கேட்குற டா?” என சலித்தாள் இவள்.
“குடிகாரி... குடிச்சிட்டு நீதான் உளறுன. அன்னைக்கு ஏதோ இன்சிடென்ட் நடந்துருக்கு. ஐ க்நோ, நீ முதல்ல அதை சொல்லு!” அவன் கேட்டதும் காயத்ரியின் மூளை பளிச்சிட்டது.
“ஓ... அதுவா?” என அவள் இழுக்க, “யெஸ்... யெஸ்!” என ரகு ஆர்வமாய் எழுந்தமர்ந்து
விட்டான்.
“அதெல்லாம் சொல்றதுக்கில்லை. ஒழுங்கா படுத்து தூங்கு!” என்றவள் மறுபுறம் படுக்க செல்ல, இடையோடு கைக்கொடுத்து அவளைத் தன்னருகே அமர்த்தியவன், “நீ என்ன நடந்துச்சுன்னு சொல்லாம தூங்க முடியாது டி. நான் விட மாட்டேன்!” என அவன் அடமாய்க் கூற, “போடா... எனக்குத் தோணும்போது சொல்றேன். இப்போ மாட்டேன்!” என அவன் தோளில் சாய்ந்து கண்மூடினாள் பெண்.
“அநியாயம் பண்ற டி... ஒழுங்கா சொல்லிடு. இல்லைன்னா கடிச்சு வச்சிடுவேன்!” என அவன் பொய்யாய் கூற, ஒரு நொடி முகத்தை சுருக்கியவள் பின்னர், “சரி, ஒரு டீல். அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு நான் சொல்றேன். நீ மேரேஜ் அப்போ அந்த ரூம்க்குள்ள என்னாச்சுன்னு சொல்லணும். ஓகே வா?” என புருவத்தை உயர்த்தினாள்.
“எமகாதகி டி நீ... சொல்லும். சொல்லித் தொலையும். நான் நெக்ஸ்ட் சொல்றேன்...” என்றான் போலியான கோபத்துடன்.
“ம்கூம்... உன்னை நம்ப முடியாதே!” காயூ இழுக்க, அவள் கழுத்தில் கையைப் போட்டு இறுக்கியவன், “நிஜமா சொல்றேன்...” என்றான் அழுத்தமாக.
“ஹம்ம்...” என்று அவன் கழுத்து வளைவில் முகம் புதைத்தவள், “அன்னைக்கு நான் ஏஜ் அட்டென்ட் பண்ணி இருந்தேன் டா!” என்றாள் மெல்லிய குரலில்.
“ஓ...” எனக் கேட்டவன் அவளைத் தோளோடு சேர்த்து தன்னோடு இறுக்கினான்.