- Messages
- 1,339
- Reaction score
- 3,991
- Points
- 113
இதயத்துக்குள் இறங்கியது காதல்
அத்தியாயம் 1:
இசையால் ஒரு உலகம் அதில் நீ நான் மட்டும் இருப்போம் கனவால் ஒரு இல்லம் அது நாம்தான் இன்று நிஜமாய்…
இருள் மெல்ல பிரிந்தும் பிரியாத காலை வேலை வாகனங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வந்து போய்க் கொண்டிருக்கின்றது. அந்த அதிகாலை வேளையிலும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் மின்விளக்கு வெளிச்சத்தில் பளிச்சென்று மின்னியது. மதுரையிலிருந்து வெளியூர் செல்பவர்கள், வெளியூரிலிருந்து மதுரை வருபவர்கள் என்று பயணிகள் வந்து போய் கொண்டிருந்தனர்.
அந்தப் பேருந்து நிலையத்தின் பின்புறம் மிகவும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது மதுரையின் பிரபலமான மீன் விற்பனை சந்தை. அதிகாலை வேளையிலும் மீன் விரும்பிகள் வாகனங்களில் படையெடுத்து வந்து மீனை வாங்க துவங்கியிருந்தனர்.
அதுபோக ஊருக்குள் மீன் விற்பவர்கள் தங்களது விற்பனைக்காக கூடையில் மொத்த விலையில் வாங்கிக் கொண்டு இருந்தனர். கிட்டத்தட்ட ஐம்பது கடைகளுக்கு மேல் இருந்தது அங்கே. ஒவ்வொரு கடையும் சின்ன தடுப்பு போட்டு பிரிக்கப்பட்டிருந்தது.
மேற்கூரை மட்டும் போடப்பட்டிருக்க தரையில் தார்ப்பாய் போட்டு ஒவ்வொரு மீனும் வகை வகையாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. கடையில் இருக்கும் ஆட்கள் மீனை பார்வையிட்டவாறு நகர்ந்து கொண்டிருந்தவர்களை அண்ணே நம்ம கடையில வந்து வாங்குங்க என்று அழைத்படி இருந்தனர்.
அந்த வரிசையில் ஏழாவது கடையில் இருந்து, “அண்ணே நம்ம கடைக்கு வாங்க காலையில இறக்குன பிரெஷ் மீனு ஊளி மீனு சங்கரா மீனு பாறை மீனு நெய்பாறை ஜிலேபி கண்ட நண்டு இறாலு” என்று மீன் வகைகளை ஒப்புவித்து ஆட்களை மீன் வாங்க அழைத்துக் கொண்டிருந்தாள் மலர் என்கிற கருணை மலர்.
மலரின் சத்தத்தில் ஒரு பெண்மணி அருகில் வர, “வாங்கக்கா வாங்க என்ன மீனு வேணும் நம்ம கிட்ட எல்லாமே இருக்கு”என்று அவரிடம் அனைத்து மீன் வகைகளையும் காண்பிக்க, “பாறை மீன் இருக்கா? என்று அவர் வினா எழுப்பினார்.
“ஆங் இருக்குக்கா பாறை நெய்பாறை ரெண்டுமே இருக்கு உங்களுக்கு எந்த பாறை வேணும் சொல்லுங்க கா?” என்று இரண்டு மீன்களையும் கையில் எடுத்து காண்பித்தாள்.
“ரெண்டுத்துல எந்த மீன் நல்லா இருக்கும்?” அந்த பெண்மணி கேட்க, “பாறைய விட நெய் பாறை நல்லா இருக்கும் சின்ன வெங்காயம் அறைச்சு ஊத்தி குழம்பு வச்சா எல்லாரும் சப்பு கொட்டி சாப்டுவாங்க. அதுவும் எண்ணையே ஊத்த தேவையில்லை குழம்புல நெய் மிதக்கும்” என்று மலர் பாவனையுடன் விளக்கம் அளித்தாள்.
“கிலோ எவ்வளவு?” என்று அவர் வினா எழுப்ப, “மத்தவங்களுக்கு இருநூத்தி அம்பது ரூவாக்கா உங்களுக்கு இருநூத்தி இருவதுக்கு போடுறேன் வாங்கிக்கோங்க எத்தனை கிலோ வேணும்?” என்று கேட்டு மீனை எடுத்து எடை இயந்திரத்தில் அடுக்கியவள் அவர் கேட்டதற்கு அதிகமாகவே ஒரு சிறிய மீனை எடுத்துப் போட்டாள்.
பின், “மணி அக்காவுக்கு மீனை எடுத்து கவர்ல போட்டு கொடு” என்று அருகில் இருந்தவனிடம் குரல் கொடுத்தாள்.
அவள் அதிகமாக ஒரு மீனை போட்டதில் திருப்தி அடைந்த பெண்மணி பணத்தை கொடுத்து விட்டு மீனை வாங்கிக் கொண்டு செல்ல, “அக்கா எதுக்கு எப்ப பாத்தாலும் அதிகமா போட்டு விடுற இதனால் நமக்கு நட்டமாக போகுது” என்று மணி குறைபட்டான்.
“டேய் அவங்கள பாத்தா இப்பதான் முதல் தடவை வர்ற மாதிரி இருக்கு. முன்ன பின்ன கொஞ்சம் அதிகமா போட்டா இனிமே நம்மக்கிட்ட வந்து வாங்குவாங்க டா. இதெல்லாம் நட்ட கணக்கு இல்ல, லாப கணக்கு. அமைதியா வேலைய பாரு” என்று அவனை அதட்டியவள், அடுத்து ஒவ்வொருவராக தன் கடைக்கு அழைத்து மீனை விற்க துவங்கினாள்.
அங்கிருந்த கடைகளில் மிகவும் குறைந்த வயதில் மீன் விற்பனை செய்பவள் கருணை மலர் மட்டுமே மற்றவர்கள் எல்லாம் ஆண்கள் அல்லது மத்திய வயது பெண்களாக இருந்தனர்.
காலை நான்கு மணிக்கு மீன் லாரிகளில் வந்து இறங்கி விடும். கடை உரிமையாளர்கள் விலையைப் பேசி தங்களது கடைக்கு வாங்கி வைத்துக் கொள்ள நான்கு முப்பதுக்கு மேல் வாடிக்கையாளர் வர துவங்குவார்கள்.
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் எதிர்புறத்தில் வந்து நின்றது அந்த உயர்ரக மகிழுந்து. உள்ளே அமர்ந்திருந்த ராதா மகனிடம், “மார்க்கெட் வந்துட்டோமா கண்ணா?” என்று வினவ, “பக்கத்துல தான் மா கூகுள் மேப் காட்டுது” என்று தன் அலைபேசியை பார்த்தான்.
“இதோ இந்த ஆப்போசிட் ரோடை கிராஸ் பண்ணா பஸ் ஸ்டாண்டுக்கு பேக் சைடுல இருக்குமா” என்றவன் தனது மகிழுந்தை இயக்கி சாலையைக் கடந்து மீன் சந்தையின் வாயிலை அடைந்தான்.
வாயிலின் அருகே வாகனங்களை நிறுத்த டோக்கன் வழங்கப்பட்டு கொண்டிருந்தது. இருசக்கர வாகனத்திற்கு ஐந்து ரூபாயும் நான்கு சக்கர வாகனங்களுக்கு பத்து ரூபாயும் வசூலிக்கப்படும்.
இவர்களது மகிழுந்து நின்றவுடன் ஒரு நடுத்தர வயதுக்காரன் அருகில் வந்து, “சார் பார்க்கிங்க்கு டோக்கன் வாங்கணும்” என்று கூற, உள்ளிருந்தவன், “எவ்ளோ?” என்று வினா தொடுத்தான்.
“பத்து ரூபா சார்” என்று பதில் வர தனது பஸ்ஸில் தேடினான். அதில் ஐநூறு மற்றும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களே இருந்தது. திரும்பி தாயைக் கண்டவன், “உன்கிட்ட சேஞ்ச் இருக்காம்மா?” என்று வினவினான்.
“இருக்கும்னு நினைக்கிறேன்” என்ற ராதா தனது பஸ்ஸில் துழாவி பத்து ரூபாய் தாள் ஒன்றை எடுத்து தீட்டினார். அதனை வாங்கிக் கொண்டு எதிரில் இ
ருந்தவன் டோக்கனை கொடுத்தான்.
அத்தியாயம் 1:
இசையால் ஒரு உலகம் அதில் நீ நான் மட்டும் இருப்போம் கனவால் ஒரு இல்லம் அது நாம்தான் இன்று நிஜமாய்…
இருள் மெல்ல பிரிந்தும் பிரியாத காலை வேலை வாகனங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வந்து போய்க் கொண்டிருக்கின்றது. அந்த அதிகாலை வேளையிலும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் மின்விளக்கு வெளிச்சத்தில் பளிச்சென்று மின்னியது. மதுரையிலிருந்து வெளியூர் செல்பவர்கள், வெளியூரிலிருந்து மதுரை வருபவர்கள் என்று பயணிகள் வந்து போய் கொண்டிருந்தனர்.
அந்தப் பேருந்து நிலையத்தின் பின்புறம் மிகவும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது மதுரையின் பிரபலமான மீன் விற்பனை சந்தை. அதிகாலை வேளையிலும் மீன் விரும்பிகள் வாகனங்களில் படையெடுத்து வந்து மீனை வாங்க துவங்கியிருந்தனர்.
அதுபோக ஊருக்குள் மீன் விற்பவர்கள் தங்களது விற்பனைக்காக கூடையில் மொத்த விலையில் வாங்கிக் கொண்டு இருந்தனர். கிட்டத்தட்ட ஐம்பது கடைகளுக்கு மேல் இருந்தது அங்கே. ஒவ்வொரு கடையும் சின்ன தடுப்பு போட்டு பிரிக்கப்பட்டிருந்தது.
மேற்கூரை மட்டும் போடப்பட்டிருக்க தரையில் தார்ப்பாய் போட்டு ஒவ்வொரு மீனும் வகை வகையாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. கடையில் இருக்கும் ஆட்கள் மீனை பார்வையிட்டவாறு நகர்ந்து கொண்டிருந்தவர்களை அண்ணே நம்ம கடையில வந்து வாங்குங்க என்று அழைத்படி இருந்தனர்.
அந்த வரிசையில் ஏழாவது கடையில் இருந்து, “அண்ணே நம்ம கடைக்கு வாங்க காலையில இறக்குன பிரெஷ் மீனு ஊளி மீனு சங்கரா மீனு பாறை மீனு நெய்பாறை ஜிலேபி கண்ட நண்டு இறாலு” என்று மீன் வகைகளை ஒப்புவித்து ஆட்களை மீன் வாங்க அழைத்துக் கொண்டிருந்தாள் மலர் என்கிற கருணை மலர்.
மலரின் சத்தத்தில் ஒரு பெண்மணி அருகில் வர, “வாங்கக்கா வாங்க என்ன மீனு வேணும் நம்ம கிட்ட எல்லாமே இருக்கு”என்று அவரிடம் அனைத்து மீன் வகைகளையும் காண்பிக்க, “பாறை மீன் இருக்கா? என்று அவர் வினா எழுப்பினார்.
“ஆங் இருக்குக்கா பாறை நெய்பாறை ரெண்டுமே இருக்கு உங்களுக்கு எந்த பாறை வேணும் சொல்லுங்க கா?” என்று இரண்டு மீன்களையும் கையில் எடுத்து காண்பித்தாள்.
“ரெண்டுத்துல எந்த மீன் நல்லா இருக்கும்?” அந்த பெண்மணி கேட்க, “பாறைய விட நெய் பாறை நல்லா இருக்கும் சின்ன வெங்காயம் அறைச்சு ஊத்தி குழம்பு வச்சா எல்லாரும் சப்பு கொட்டி சாப்டுவாங்க. அதுவும் எண்ணையே ஊத்த தேவையில்லை குழம்புல நெய் மிதக்கும்” என்று மலர் பாவனையுடன் விளக்கம் அளித்தாள்.
“கிலோ எவ்வளவு?” என்று அவர் வினா எழுப்ப, “மத்தவங்களுக்கு இருநூத்தி அம்பது ரூவாக்கா உங்களுக்கு இருநூத்தி இருவதுக்கு போடுறேன் வாங்கிக்கோங்க எத்தனை கிலோ வேணும்?” என்று கேட்டு மீனை எடுத்து எடை இயந்திரத்தில் அடுக்கியவள் அவர் கேட்டதற்கு அதிகமாகவே ஒரு சிறிய மீனை எடுத்துப் போட்டாள்.
பின், “மணி அக்காவுக்கு மீனை எடுத்து கவர்ல போட்டு கொடு” என்று அருகில் இருந்தவனிடம் குரல் கொடுத்தாள்.
அவள் அதிகமாக ஒரு மீனை போட்டதில் திருப்தி அடைந்த பெண்மணி பணத்தை கொடுத்து விட்டு மீனை வாங்கிக் கொண்டு செல்ல, “அக்கா எதுக்கு எப்ப பாத்தாலும் அதிகமா போட்டு விடுற இதனால் நமக்கு நட்டமாக போகுது” என்று மணி குறைபட்டான்.
“டேய் அவங்கள பாத்தா இப்பதான் முதல் தடவை வர்ற மாதிரி இருக்கு. முன்ன பின்ன கொஞ்சம் அதிகமா போட்டா இனிமே நம்மக்கிட்ட வந்து வாங்குவாங்க டா. இதெல்லாம் நட்ட கணக்கு இல்ல, லாப கணக்கு. அமைதியா வேலைய பாரு” என்று அவனை அதட்டியவள், அடுத்து ஒவ்வொருவராக தன் கடைக்கு அழைத்து மீனை விற்க துவங்கினாள்.
அங்கிருந்த கடைகளில் மிகவும் குறைந்த வயதில் மீன் விற்பனை செய்பவள் கருணை மலர் மட்டுமே மற்றவர்கள் எல்லாம் ஆண்கள் அல்லது மத்திய வயது பெண்களாக இருந்தனர்.
காலை நான்கு மணிக்கு மீன் லாரிகளில் வந்து இறங்கி விடும். கடை உரிமையாளர்கள் விலையைப் பேசி தங்களது கடைக்கு வாங்கி வைத்துக் கொள்ள நான்கு முப்பதுக்கு மேல் வாடிக்கையாளர் வர துவங்குவார்கள்.
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் எதிர்புறத்தில் வந்து நின்றது அந்த உயர்ரக மகிழுந்து. உள்ளே அமர்ந்திருந்த ராதா மகனிடம், “மார்க்கெட் வந்துட்டோமா கண்ணா?” என்று வினவ, “பக்கத்துல தான் மா கூகுள் மேப் காட்டுது” என்று தன் அலைபேசியை பார்த்தான்.
“இதோ இந்த ஆப்போசிட் ரோடை கிராஸ் பண்ணா பஸ் ஸ்டாண்டுக்கு பேக் சைடுல இருக்குமா” என்றவன் தனது மகிழுந்தை இயக்கி சாலையைக் கடந்து மீன் சந்தையின் வாயிலை அடைந்தான்.
வாயிலின் அருகே வாகனங்களை நிறுத்த டோக்கன் வழங்கப்பட்டு கொண்டிருந்தது. இருசக்கர வாகனத்திற்கு ஐந்து ரூபாயும் நான்கு சக்கர வாகனங்களுக்கு பத்து ரூபாயும் வசூலிக்கப்படும்.
இவர்களது மகிழுந்து நின்றவுடன் ஒரு நடுத்தர வயதுக்காரன் அருகில் வந்து, “சார் பார்க்கிங்க்கு டோக்கன் வாங்கணும்” என்று கூற, உள்ளிருந்தவன், “எவ்ளோ?” என்று வினா தொடுத்தான்.
“பத்து ரூபா சார்” என்று பதில் வர தனது பஸ்ஸில் தேடினான். அதில் ஐநூறு மற்றும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களே இருந்தது. திரும்பி தாயைக் கண்டவன், “உன்கிட்ட சேஞ்ச் இருக்காம்மா?” என்று வினவினான்.
“இருக்கும்னு நினைக்கிறேன்” என்ற ராதா தனது பஸ்ஸில் துழாவி பத்து ரூபாய் தாள் ஒன்றை எடுத்து தீட்டினார். அதனை வாங்கிக் கொண்டு எதிரில் இ
ருந்தவன் டோக்கனை கொடுத்தான்.