Active member
- Messages
- 180
- Reaction score
- 149
- Points
- 43
யட்சிணியே 6
ரியா விமலாவின் அண்ணன் மகள், அவளின் பெற்றோர் இறந்து விட, எந்த உறவும் இல்லாமல் இருந்தவளை ஆதிலின் தந்தை ராகவ் அழைத்து வந்து இவள் இனிமேல் இங்கே தான் இருப்பாள் என்று கூறி விட, அப்போது ஆதிலுக்கு 9வயது, அவளுக்கு 3வயது.தனக்கு விளையாட ஒரு தங்கை வந்து விட்டாள் என்று மகிழ்ந்து போனவன் அவளை தன் தோழியாகவும் உடன் பிறவாத தங்கையை போல் நினைத்தான். தற்போதும் அப்படித்தான் ஆனால் அவளோ விமலாவின் பேச்சை கேட்டு அவனை திருமணம் செய்து கொள்வது தான் வாழ்வின் லட்சியம் என்பது போலே நடந்து கொள்வாள்.
ஆதிலிடம் இருந்து பிரிந்தவள் "யார் அது? புதுசா சர்வன்ட் அப்பொய்ன்மெண்ட் பண்ணிருக்கீங்கலாமா? அவ எங்க இருக்கா பாக்கலாம்"என்று அலட்சியமாக கேட்க...
தற்போது தான் அவளின் பேச்சில் இருந்த, ஏளனத்தை அறிந்து கொண்டவன், விமலாவை நினைக்க கோவமாக வந்தது. இந்த சிறுபெண்ணையும் இப்படி மாற்றி விட்டாளே எண்ணி ஆத்திரமாக இருந்தது.
"ஓ சூர் பாக்கலாமே, ஆனா இந்த வீட்டுல இதுக்கு முன்னாடி எவ்ளோ சர்வண்ட்ஸ் புதுசா வேலைக்கு சேர்ந்துருக்காங்களே? அப்போல்லாம் நீ இப்படி கேட்கலையே?"என்று புருவமுயர்த்தி கேட்க...
"அவளோ அது ஒண்ணும் இல்லை, சும்மாதான்" என கூறியவள் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த நந்தினியை கண்டு அதிர்ந்து போனாள்.
"அத்... அத்தான், அது நந்தினி அத்தையா? அவங்களுக்கு இப்போ உடம்பு சரி ஆகிடுச்சா?" என்று உண்மையான பாசத்துடன் கண்கள் பனிக்க, கேட்டவளின் கால்கள் தானாக நந்தினியை நோக்கி நகர்ந்தது.
தன்னை இந்த வீட்டிற்கு அழைத்து வந்தது விமலாவாகினும் அவளுக்கு தன்னை அலங்கரிக்கவும் ராகவனின் பின்னால் சுற்றவுமே சரியாய் இருக்க, ஆதில், ஆரவ் (விமலாவின் மகன் ), ரியா மூவருக்கும் உணவூட்டி பாடம் சொல்லி வளர்த்தவர் ஆயிற்றே...
விமலாவை விட, நந்தினியின் மேல் தான் அதிக பாசம். ஐந்து வருடங்களுக்கு முன், நந்தினிக்கு மனநிலை சரியில்லாமல் யாரையும் அருகில் விடாமல் பார்ப்பதை எல்லாம் தூக்கி வீசுவார். அதனால் ஆரவையும், ரியாவையும் மேல் படிப்பிற்காக வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தான்.
ஆரவ் விமலா, ராகவின் மகன் 23வயது. வெளிநாட்டில் படித்து கொண்டிருக்கிறான்.
நந்தினியின் அருகில் சென்றவள் "அத்தை உங்களுக்கு சரி ஆகிடுச்சா? இங்க பாருங்க, நான் யாருன்னு தெரியுதா?"என்று கையை பிடிக்க...
அதுவரை அமைதியாய் இருந்தவர், அவளை கண்டதும் பயந்து நடுங்க தொடங்கினார். செல்லமா அவளை போ...போக சொல்லு,
என்ன கொன்...கொன்றுவாங்க, மருந்துஊத்த போறாங்க, என்ன அடிக்கிறாங்க"என்றவள் தட்டை எடுத்து ரியாவின் மேல் வீச, ரியா பயந்து போனவள் ஆதிலின் பக்கத்தில் வந்து நின்று விட்டாள்.
வைஷு "அத்தை ஒண்ணும் இல்லை. பயப்படாதீங்க? யாரும் உங்களை எதுவுமே செய்ய மாட்டாங்க, நீங்க சாப்பிடுங்க"என்று ஊட்டப்போக, அவரோ மயங்கி விட, "ம்மா" ஆதில் வேகமாக வந்து தாயை தாங்கிகொண்டவன் அவரை ஒரு படுக்கையறையில் படுக்க வைத்தவன் அவனின் அந்த அறையில் இருந்த மருத்துவ உபகரணங்கள் நிறைந்த பையை எடுத்து வந்தவன்,அவரை பரிசோதித்து அவருக்கு மருந்தை செலுத்தி விட்டு ,லேப் டெக்னேஷியனுக்கு கால் செய்து வந்து சில பரிசோதனைகளை செய்ய ஆணையிட்டவன்... அன்னையின் அருகில் பயந்து போய் கண்ணில் கண்ணீர் வடிய நின்றிருந்த வைஷ்ணவியை பார்த்தவன் "அவங்களுக்கு ஒண்ணும் இல்லை. பிரஷர் அதான் மயங்கிட்டாங்க, தூக்கம் வரதுக்கு ஊசி போட்ருக்கேன். தூங்குவாங்க, நீ போ "என்று அவளை அனுப்பி வைத்து விட்டு அன்னையின் அருகில் அமர்ந்தவனின் கண்களில் கண்ணீர்.
ஆதில் அவனின் அறைக்குள் வந்து கதவை சாத்த, அப்போது தான் குளியலறைக்குள் இருந்து வந்தவள் அவனை கண்டு அதிர்ந்து போக, அவனுமே அவளை அங்கு எதிர்பார்க்கவில்லை.
வேகமாக வந்தவன் வைஷுவை இறுக்கி அணைத்துக்கொண்டவன், அவளின் தோளில் முகம் புதைத்தவன் வாய்விட்டு கதறி அழுதான். அவன் அழுகையை அதிர்ச்சியாக பார்த்தவள் அவனை தன்னிடம் இருந்து விலக்க பார்க்க, அவனோ ஐந்து வருடங்கள் கல்லாய் இறுகி இருந்தவன் தாயின் வேதனை தீர்ந்த பூரிப்பில் மனம் கவர்ந்தவளிடம் நெகிழ தொடங்கியிருந்தான்.
வெகுநேரத்திற்கு பிறகே, அவளிடம் இருந்து பிரிந்தவன் அவளின் காலடியிலேயே மண்டியிட்டு அமர்ந்தவன்,கையை கும்பிட்டு "தேங்க்ஸ் நவி"என்று கூற, வைஷுவோ அதிர்ந்து போனவள் "அச்சோ என்ன பண்றீங்க?"என்றவள் பின்னோக்கி நகர, எழுந்தவன் "எங்கம்மாவை என்கிட்ட முழுசா ஒப்படைச்சிருக்க, அவங்க என்னோட உயிர். அவங்க இல்லாம நான் இந்த அஞ்சு வருசமா எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா? அம்மா திரும்பி வந்துட்டாங்க, இதுக்கு மேல அவங்களை நான் சரி செஞ்சுருவேன்"என்றவனின் குரலில் அத்தனை இளக்கம். எப்போதும் கல்லாய் இறுகியிருக்கும் முகம் இன்று அதில் அத்துணை கனிவு.
அவளை மெத்தையில் அமர வைத்தவன் "என்னோட ஒட்டு மொத்த சந்தோஷத்தையும் நீ இன்னிக்கு திருப்பி கொடுத்திருக்க, சொல்லு உனக்கு என்ன வேணும். இந்த நிமிஷம் நீ என்ன கேட்டாலும் நான் தருவேன்"என்று அவளின் முகம் பற்றி கேட்க...
அவளோ "விடுதலை, உங்க கிட்ட இருந்து மொத்தமாய் விடுதலை வேணும். என்னையும் என் குடும்பத்தையும் விட்டிருங்க"என்று கேட்க...
அவனின் கண்கள் முன்பிருந்ததற்கு மாறாய் உணர்வுகளை பிரதிபலித்தது.
"முடியாது, அது மட்டும் இந்த ஜென்மத்துல நடக்காது. நீ சாகற வரைக்கும் என்னோட தான் இருக்கனும். அப்படியே நான் உனக்கு முன்னாடி சாகறதா இருந்தா உன்னையும் கொன்னுட்டு தான் நான் சாவேன். புரியுதா? ஐ லவ் யூ டி... உனக்கு புரியுதா? இல்லையா? உன்னை நான் அந்தளவுக்கு காதலிக்கிறேன். நீ எனக்காக மட்டும் தான் இருக்கனும். என்னோட மட்டும் தான் இருக்கனும். உனக்கு என்னோட உணர்வுகள் புரியலையா? என்றவன் அவளின் இதழை சிறைபிடிக்க, அவள் தன்னை நிராகரித்ததன் கோவம் மொத்தத்தையும் அவள் மீது காட்டியவன் கைகள் அவள் மேனியில் ஊர்வலம் போக, அவளின் மறுப்புகள் அவனின் முன்பு எடுபடாமல் போக,மேற்கொண்டு முன்னேறாமல் அவளிடம் இருந்து பிரிந்து எழுந்தவன் "உன் அனுமதி இல்லாம எதுவும் நடக்காது. உன்னை நீ உன்னோட சம்மதத்தோட எனக்கு தரணும். அப்போ தான் என்னோட காதல் ஜெயிச்சதா அர்த்தம். இந்த ஆதில் சைத்ரேயனுக்கு எதிலும் தோத்ததா இருக்க கூடாது. நம்ம ரெண்டு பேரும் சேரும்போது ரெண்டு பேர் மனசுலயும் காதல் இருக்கனும், அதுக்கான தேடலும் இருக்கனும். அது தான் என் காதலுக்கான வெற்றி. நான் உன்னை அடைஞ்ச விதம் தப்பா இருக்கலாம். ஆனால் என்னோட பாயிண்ட்ல அது எனக்கு சரி தான்"என்றவனின் குரலில் அத்தனை இறுக்கம்.
உடைகளை சரிப்படுத்திக்கொண்டு எழுந்தவன் "நீ என்னை காதலிக்கணும். காதலிச்சாகனும்"என்றவன் அவளின் முன்னுச்சியில் இதழ் பதித்து அவளின் காயத்தை வருடியவன் "ரொம்ப நாள் என்ன காக்க வெச்சிடாதே நவி"என்றவன் வெளியே சென்று விட, இவள் தான் மந்திரித்து விட்டவள் போல் அமர்ந்திருந்தாள்.
நாளைக்கும் இதே போல மூணு ud வேணும்னா கண்டிப்பா கமெண்ட் பண்ணனும். இல்லனா ஒன் வீக் கழிச்சு தான் போடுவேன்.
ரியா விமலாவின் அண்ணன் மகள், அவளின் பெற்றோர் இறந்து விட, எந்த உறவும் இல்லாமல் இருந்தவளை ஆதிலின் தந்தை ராகவ் அழைத்து வந்து இவள் இனிமேல் இங்கே தான் இருப்பாள் என்று கூறி விட, அப்போது ஆதிலுக்கு 9வயது, அவளுக்கு 3வயது.தனக்கு விளையாட ஒரு தங்கை வந்து விட்டாள் என்று மகிழ்ந்து போனவன் அவளை தன் தோழியாகவும் உடன் பிறவாத தங்கையை போல் நினைத்தான். தற்போதும் அப்படித்தான் ஆனால் அவளோ விமலாவின் பேச்சை கேட்டு அவனை திருமணம் செய்து கொள்வது தான் வாழ்வின் லட்சியம் என்பது போலே நடந்து கொள்வாள்.
ஆதிலிடம் இருந்து பிரிந்தவள் "யார் அது? புதுசா சர்வன்ட் அப்பொய்ன்மெண்ட் பண்ணிருக்கீங்கலாமா? அவ எங்க இருக்கா பாக்கலாம்"என்று அலட்சியமாக கேட்க...
தற்போது தான் அவளின் பேச்சில் இருந்த, ஏளனத்தை அறிந்து கொண்டவன், விமலாவை நினைக்க கோவமாக வந்தது. இந்த சிறுபெண்ணையும் இப்படி மாற்றி விட்டாளே எண்ணி ஆத்திரமாக இருந்தது.
"ஓ சூர் பாக்கலாமே, ஆனா இந்த வீட்டுல இதுக்கு முன்னாடி எவ்ளோ சர்வண்ட்ஸ் புதுசா வேலைக்கு சேர்ந்துருக்காங்களே? அப்போல்லாம் நீ இப்படி கேட்கலையே?"என்று புருவமுயர்த்தி கேட்க...
"அவளோ அது ஒண்ணும் இல்லை, சும்மாதான்" என கூறியவள் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த நந்தினியை கண்டு அதிர்ந்து போனாள்.
"அத்... அத்தான், அது நந்தினி அத்தையா? அவங்களுக்கு இப்போ உடம்பு சரி ஆகிடுச்சா?" என்று உண்மையான பாசத்துடன் கண்கள் பனிக்க, கேட்டவளின் கால்கள் தானாக நந்தினியை நோக்கி நகர்ந்தது.
தன்னை இந்த வீட்டிற்கு அழைத்து வந்தது விமலாவாகினும் அவளுக்கு தன்னை அலங்கரிக்கவும் ராகவனின் பின்னால் சுற்றவுமே சரியாய் இருக்க, ஆதில், ஆரவ் (விமலாவின் மகன் ), ரியா மூவருக்கும் உணவூட்டி பாடம் சொல்லி வளர்த்தவர் ஆயிற்றே...
விமலாவை விட, நந்தினியின் மேல் தான் அதிக பாசம். ஐந்து வருடங்களுக்கு முன், நந்தினிக்கு மனநிலை சரியில்லாமல் யாரையும் அருகில் விடாமல் பார்ப்பதை எல்லாம் தூக்கி வீசுவார். அதனால் ஆரவையும், ரியாவையும் மேல் படிப்பிற்காக வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தான்.
ஆரவ் விமலா, ராகவின் மகன் 23வயது. வெளிநாட்டில் படித்து கொண்டிருக்கிறான்.
நந்தினியின் அருகில் சென்றவள் "அத்தை உங்களுக்கு சரி ஆகிடுச்சா? இங்க பாருங்க, நான் யாருன்னு தெரியுதா?"என்று கையை பிடிக்க...
அதுவரை அமைதியாய் இருந்தவர், அவளை கண்டதும் பயந்து நடுங்க தொடங்கினார். செல்லமா அவளை போ...போக சொல்லு,
என்ன கொன்...கொன்றுவாங்க, மருந்துஊத்த போறாங்க, என்ன அடிக்கிறாங்க"என்றவள் தட்டை எடுத்து ரியாவின் மேல் வீச, ரியா பயந்து போனவள் ஆதிலின் பக்கத்தில் வந்து நின்று விட்டாள்.
வைஷு "அத்தை ஒண்ணும் இல்லை. பயப்படாதீங்க? யாரும் உங்களை எதுவுமே செய்ய மாட்டாங்க, நீங்க சாப்பிடுங்க"என்று ஊட்டப்போக, அவரோ மயங்கி விட, "ம்மா" ஆதில் வேகமாக வந்து தாயை தாங்கிகொண்டவன் அவரை ஒரு படுக்கையறையில் படுக்க வைத்தவன் அவனின் அந்த அறையில் இருந்த மருத்துவ உபகரணங்கள் நிறைந்த பையை எடுத்து வந்தவன்,அவரை பரிசோதித்து அவருக்கு மருந்தை செலுத்தி விட்டு ,லேப் டெக்னேஷியனுக்கு கால் செய்து வந்து சில பரிசோதனைகளை செய்ய ஆணையிட்டவன்... அன்னையின் அருகில் பயந்து போய் கண்ணில் கண்ணீர் வடிய நின்றிருந்த வைஷ்ணவியை பார்த்தவன் "அவங்களுக்கு ஒண்ணும் இல்லை. பிரஷர் அதான் மயங்கிட்டாங்க, தூக்கம் வரதுக்கு ஊசி போட்ருக்கேன். தூங்குவாங்க, நீ போ "என்று அவளை அனுப்பி வைத்து விட்டு அன்னையின் அருகில் அமர்ந்தவனின் கண்களில் கண்ணீர்.
ஆதில் அவனின் அறைக்குள் வந்து கதவை சாத்த, அப்போது தான் குளியலறைக்குள் இருந்து வந்தவள் அவனை கண்டு அதிர்ந்து போக, அவனுமே அவளை அங்கு எதிர்பார்க்கவில்லை.
வேகமாக வந்தவன் வைஷுவை இறுக்கி அணைத்துக்கொண்டவன், அவளின் தோளில் முகம் புதைத்தவன் வாய்விட்டு கதறி அழுதான். அவன் அழுகையை அதிர்ச்சியாக பார்த்தவள் அவனை தன்னிடம் இருந்து விலக்க பார்க்க, அவனோ ஐந்து வருடங்கள் கல்லாய் இறுகி இருந்தவன் தாயின் வேதனை தீர்ந்த பூரிப்பில் மனம் கவர்ந்தவளிடம் நெகிழ தொடங்கியிருந்தான்.
வெகுநேரத்திற்கு பிறகே, அவளிடம் இருந்து பிரிந்தவன் அவளின் காலடியிலேயே மண்டியிட்டு அமர்ந்தவன்,கையை கும்பிட்டு "தேங்க்ஸ் நவி"என்று கூற, வைஷுவோ அதிர்ந்து போனவள் "அச்சோ என்ன பண்றீங்க?"என்றவள் பின்னோக்கி நகர, எழுந்தவன் "எங்கம்மாவை என்கிட்ட முழுசா ஒப்படைச்சிருக்க, அவங்க என்னோட உயிர். அவங்க இல்லாம நான் இந்த அஞ்சு வருசமா எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா? அம்மா திரும்பி வந்துட்டாங்க, இதுக்கு மேல அவங்களை நான் சரி செஞ்சுருவேன்"என்றவனின் குரலில் அத்தனை இளக்கம். எப்போதும் கல்லாய் இறுகியிருக்கும் முகம் இன்று அதில் அத்துணை கனிவு.
அவளை மெத்தையில் அமர வைத்தவன் "என்னோட ஒட்டு மொத்த சந்தோஷத்தையும் நீ இன்னிக்கு திருப்பி கொடுத்திருக்க, சொல்லு உனக்கு என்ன வேணும். இந்த நிமிஷம் நீ என்ன கேட்டாலும் நான் தருவேன்"என்று அவளின் முகம் பற்றி கேட்க...
அவளோ "விடுதலை, உங்க கிட்ட இருந்து மொத்தமாய் விடுதலை வேணும். என்னையும் என் குடும்பத்தையும் விட்டிருங்க"என்று கேட்க...
அவனின் கண்கள் முன்பிருந்ததற்கு மாறாய் உணர்வுகளை பிரதிபலித்தது.
"முடியாது, அது மட்டும் இந்த ஜென்மத்துல நடக்காது. நீ சாகற வரைக்கும் என்னோட தான் இருக்கனும். அப்படியே நான் உனக்கு முன்னாடி சாகறதா இருந்தா உன்னையும் கொன்னுட்டு தான் நான் சாவேன். புரியுதா? ஐ லவ் யூ டி... உனக்கு புரியுதா? இல்லையா? உன்னை நான் அந்தளவுக்கு காதலிக்கிறேன். நீ எனக்காக மட்டும் தான் இருக்கனும். என்னோட மட்டும் தான் இருக்கனும். உனக்கு என்னோட உணர்வுகள் புரியலையா? என்றவன் அவளின் இதழை சிறைபிடிக்க, அவள் தன்னை நிராகரித்ததன் கோவம் மொத்தத்தையும் அவள் மீது காட்டியவன் கைகள் அவள் மேனியில் ஊர்வலம் போக, அவளின் மறுப்புகள் அவனின் முன்பு எடுபடாமல் போக,மேற்கொண்டு முன்னேறாமல் அவளிடம் இருந்து பிரிந்து எழுந்தவன் "உன் அனுமதி இல்லாம எதுவும் நடக்காது. உன்னை நீ உன்னோட சம்மதத்தோட எனக்கு தரணும். அப்போ தான் என்னோட காதல் ஜெயிச்சதா அர்த்தம். இந்த ஆதில் சைத்ரேயனுக்கு எதிலும் தோத்ததா இருக்க கூடாது. நம்ம ரெண்டு பேரும் சேரும்போது ரெண்டு பேர் மனசுலயும் காதல் இருக்கனும், அதுக்கான தேடலும் இருக்கனும். அது தான் என் காதலுக்கான வெற்றி. நான் உன்னை அடைஞ்ச விதம் தப்பா இருக்கலாம். ஆனால் என்னோட பாயிண்ட்ல அது எனக்கு சரி தான்"என்றவனின் குரலில் அத்தனை இறுக்கம்.
உடைகளை சரிப்படுத்திக்கொண்டு எழுந்தவன் "நீ என்னை காதலிக்கணும். காதலிச்சாகனும்"என்றவன் அவளின் முன்னுச்சியில் இதழ் பதித்து அவளின் காயத்தை வருடியவன் "ரொம்ப நாள் என்ன காக்க வெச்சிடாதே நவி"என்றவன் வெளியே சென்று விட, இவள் தான் மந்திரித்து விட்டவள் போல் அமர்ந்திருந்தாள்.
நாளைக்கும் இதே போல மூணு ud வேணும்னா கண்டிப்பா கமெண்ட் பண்ணனும். இல்லனா ஒன் வீக் கழிச்சு தான் போடுவேன்.