Active member
- Messages
- 180
- Reaction score
- 149
- Points
- 43
யட்சிணியே 5
அந்த அறைக்குள் கைகளும் கால்களும் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில், நாற்பத்தைந்து வயதிருக்கும் அந்த பெண்மணிக்கு அவரை முடியை பிடித்து இழுத்து கைக்குள் வைத்து கொண்டு ஒரு கையால் மருந்தை வாய்க்குள் ஊற்றிக்கொண்டு"சோறு வேணுமா உனக்கு? அது ஒண்ணு தான் குறைச்சல்"என்றவள் அவரின் முடியை பற்றி இழுக்க...
அவரோ வலியில் முகத்தை சுருக்கி, அதை குடிக்காமல் தட்டிவிட முயற்சிக்க விமலாவின் பிடியில் தலை வலிக்க, அவரின் கண்களில் கண்ணீர்.
வைஷ்ணவி பதறிப்போனவள், ஓடிச்சென்று விமலாவின் கைகளை தட்டிவிட்டு, அவளின் கைகளில் இருந்த முடியை இழுத்து விட்டு விமலாவை தள்ளிவிட்டவள், அங்கே இருந்தவளை கண்டு அதிர்ந்து கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க "அத்தை"என்றவளுக்கு மகிழ்ச்சியில் பேச்சே வரவில்லை.
விமலா வைஷுவின் செயலில், அதிர்ச்சியானவள் அவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்து "ஏண்டி உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா நீ என் மேலையே கை வைப்ப, அப்ட்ரோல் வேலைக்கார நாய் உனக்கு அவ்ளோ தைரியமா? என்னையே தள்ளி விடுற, உன்னை சும்மா விட மாட்டேண்டி"என்றவள் அருகே வர, வைஷுவோ அவளின் பேச்சில் அதிர்ந்தவள் "என்னை என்ன உன்னை மாறி பணத்துக்காக ஒட்டிக்கிட்டு வந்தவன்னு நெனச்சியா? முறைப்படி தாலிகட்டி இந்த வீட்டுக்குள்ள வந்துருக்கேன். இப்போ யார் வேலைக்காரின்னு உனக்கே தெரிஞ்சிருக்கும், மேற்கொண்டு நான் எதுவுமே செய்றதுக்கு முன்னாடி நீயா போயிரு "என்றவள் பார்வையில் அதிர்ந்தவள் அங்கிருந்து வேகமாக சென்று விட்டாள்.
கண்களில் கண்ணீர் வழிய அவரை பார்த்தவள் அவரின் அருகில் சென்று மண்டியிட்டு அமர, அவரோ "போ... போய்டு, என.. எனக்கு... எனக்கெதுவும் வேணாம். பசிக்கல, சோ... சோறு.. இனி... இனிமேல் கேக்... கேக்க மாட்டேன். என்ன என்னை அடி... அடிக்காத... வலி... வலிக்குது "என்று திக்கி திணறி கண்ணீர் வழிய கூற, அவளால் கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை. அவரை அணைத்து கொண்டவள் "நான் உங்களை அடிக்க மாட்டேன் அத்தை, நீங்க எப்டி இப்படி"என்றவளால் எதுவுமே பேச முடியாமல் எழுந்தவள் அறையை சுற்றி பார்க்க, ஒட்டடை, தூசி, தும்புமாய் இருந்தது.அவரின் உடம்பில் சுற்றியும் இருந்த சங்கிலியை கழட்ட போக, அவரோ பயந்து நடுங்க அவரின் அருகில் அமர்ந்தவள், அவரின் முகம் பற்றி "உங்களுக்கு என்னை நியாபகம் இல்லையா?அத்... அத்தை நீங்க என்னை பார்த்து பயப்படாதீங்க? நான் இதோ சங்கிலியை கழட்டிடுறேன். உங்களை குளிக்க வெச்சு, வேற ட்ரெஸ் போட்டு சாப்பிட போகலாம். சரியா? நான் உங்களை நல்ல பாத்துக்குவேன். என்னை பார்த்தா உங்களுக்கு பயமா இருக்கா? அடிக்குற மாதிரி தெரியுதா?"என்று கேட்க...
அவரோ அவள் பேசுவது புரிந்தும் புரியாமலும் தலையாட்ட, அவரை கண்ணீர் மல்க பார்த்தவள் அவரின் கழுத்தில் கைகளில் இருந்ததை கழட்டி எடுத்தவள் அந்த அறைக்குள் இருந்தவரை வெளியே அழைத்து வர, ஹாலில் அமர்ந்து இருந்த ஆதில், ராகுல், பட்டம்மா, விமலா, அங்கிருந்த மற்ற வேலையாட்கள் (முதல் நாள் வரவேண்டாம் என்று அவளை பயமுறுத்த மட்டுமே கூறினான்)அனைவரும் அதிர்ந்து போய் பார்க்க, ஆதில் எழுந்தே விட்டான்.
அவனின் நிலையை கூற முடியாது. முழுவதும் உடைந்தே போய் விட்டான். அவனின் இதழ்கள் "அம்மா"என்று உச்சரித்தது.
அவர் ஆதில் சைத்ரேயனின் தாய் நந்தினி .முழுதாய் ஐந்து வருடங்களுக்கு பின் பெற்ற தாயை பார்க்கிறான். மடிப்புகலையாத பட்டு சேலை, தங்க நகைகள், சிறிதும் கலையாத தலை,இடுப்பில் சாவிகொத்து என்று வலம் வந்தவர், நிறம் மங்கிய ஐந்தாறு கிழிசல்கள் அந்த சேலையில் கன்னம் எல்லாம் கன்றி போய், தலை முடி எல்லாம் ஆங்காங்கே சடை போல் ஒட்டி ஒன்று அறியா குழந்தை போல் வைஷுவின் கைகளை பயத்துடன் பிடித்துக்கொண்டு, தன் தாயை இந்த நிலையில் பார்த்தவன் உயிரோடு மரித்தே போனான்.
அனைவரையும் அழவைத்து, துடிக்க வைக்கும் ஒருவன், அவன் கலங்குவது ராகுலுக்கே அதிர்ச்சி தான்...
"அம்...அம்மா"என்றவன் வேகமாக அவரின் அருகில் ஓடிச்செல்ல, அவரோ பயந்து போய் வைஷுவின் பின்னால் நின்று கொண்டார்.
"செல்... செல்லம்மா பயமா இருக்கு, போக சொல்லு... இவன் என்ன அடிச்சுருவான் "என்று திக்கி கூறியவரை கண்டவன் இங்கேயே இறந்தால் கூட போதும் என்று தவித்து போய் நின்றான் அவன்.
வைஷ்ணவி அவரை திரும்பி பார்த்தவள், அவரின் செல்லம்மா என்ற விளிப்பில் நெகிழ்ந்து தான் போனாள்.
அவரின் கையை ஆதரவாக பிடித்தவள், ஆதிலை ஒரு பார்வை பார்த்தவள் அனைவரையும் ஆட்டிப்படைக்கும் கர்வம் கொண்ட உன்னால் உன் தாயையே பார்த்து கொள்ள முடியவில்லை. இவ்வளவு தானா நீ? என்று இருக்க, அவளின் பார்வையை சந்திக்க முடியாமல் தலைகுனிந்து கொண்டான்.
அவள் நந்தினியை அவர்களின் அறைக்குள் அழைத்து செல்ல, ஆதிலின் கண்கள் தானாக விமலாவை சுட்டு பொசுக்க, அவனின் பார்வை சீற்றத்தை தாங்க முடியாதவள் தலைகுனிய...
அவனின் கால்கள் தாய் இருந்த அறைக்குள் செல்ல, உச்சபட்ச அதிர்ச்சி. அவனின் வேலையாட்கள் கூட இதைவிட நேர்த்தியான அறையில் தான் உள்ளனர் அந்த அறை அவ்வளவு மோசமானதாக இருந்தது.தன்னை நினைத்தே அவனுக்கு அசிங்கமாக இருந்தது.
ஐந்து வருடங்களுக்கு முன், நடந்த கசப்பான சம்பவத்தால் அவன் அன்னையின் மனநிலை தடுமாறிட, யாரையும் பக்கத்திலே விடவில்லை. விமலா மட்டுமே சென்று வருவாள். நான் பார்த்து கொள்கிறேன் என்று கூற, அவளின் மேல் ஆயிரம் கோபம் இருந்தாலும், தன் தாயை பார்த்து கொள்கிறாள் என்ற காரணத்துக்காகவே அவளை கண்டுகொள்ளாமல் இருந்தான். அவன் இருக்கும்போது எந்த சத்தமும் இருக்காது. அம்மாக்கு அது வேணும், இது வாங்கணும் என்று கூறியே அவனிடம் பல லட்சங்கள் கறந்திருந்தாள். தன்னால் தான் தந்தைஇறந்தார் என்ற குற்ற உணர்ச்சியில் இருந்தவன் தாயின் முன் செல்ல, தயங்க விமலா பார்த்துக்கொண்டதால் அமைதியாக இருந்தான்.
தன் தாய் தன் வீட்டிலேயே அத்தனை கொடுமைகள் அனுபவித்துகிறார் என்று நினைத்தவனுக்கு, அவரின் கன்னங்களில் இருந்த காயம் நினைவுக்கு வர, மறுநொடி ருத்ரமூர்த்தியாய் விமலாவின் முன் நின்றிருந்தான்.
அவளோ சிங்கத்தின் முன் மாட்டிய,சிறு முயலாய் நடுங்கி போய் இருக்க, தன் ஒட்டுமொத்த பலத்தையும் ஒன்று திரட்டி அவளின் கண்ணங்களில் அறைய, அடுத்த நொடி தரையில் விழுந்திருந்தாள் அவள்.
"ஏய் எழுந்திரு"என்ற அவனின் கர்ஜனையில் அங்கிருந்த அனைவருமே நடுநடுங்கி போயினர்.
அவளின் தலைமுடியை கொத்தாக பற்றி இழுத்தவன் "உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா நீ இப்படி ஒரு வேலையா பார்த்திருப்ப, அதுவும் நான் இந்த வீட்டுல இருக்கும்போதே, உன்னை"என்றவனை இடைமறித்தவள் "வேணாம் ஆதி விட்டுரு, நான் உனக்கு அம்மா மாதிரி"என்று கூற,அதில் மேலும் ஆத்திரமானவன் "அம்மாவா... அதுக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு? நீ காசுக்கு **** வந்தவ, நீயும் எங்கம்மாவும் ஒண்ணா"என்றவனின் வார்த்தைகளை மேற்கொண்டு கேட்க முடியாமல் அனைவரும் காதை மூடிக்கொள்ள,விமலாவுக்கோ அது எதுவுமே உறைக்காமல் இவன் என்ன செய்வானோ என்று பயத்தில் இருக்க...
"இப்போ சொல்றேன் கேட்டுக்கோங்க,இதோ இந்த பொம்பளைக்கு இனிமேல் ஒருவேளை மட்டும் தான் சாப்பாடு தரணும். அதுவும் ஒருவேளை மட்டும் பழைய சாதம் புரிஞ்சுதா?" என்றவனுக்கு அங்கிருந்த அனைத்து தலைகளும் ஆட, வீரா அந்த ரூம்ல இருந்து சங்கிலியையும் ஸ்டூலும் எடுத்துட்டு வா"என்று சத்தமிட,விமலாவுக்கோ சப்த நாடியும் ஒடுங்கி போனது. சமையல் கட்டுக்கு அருகில் இருந்த, ஸ்டோர் ரூமுக்கு இழுத்து சென்றவன் வேலையாள் கொண்டு வந்த நாற்காலியில் அவளை தள்ளி கைகால்களை சங்கிலியால் பிணைத்து கழுத்திலும் மாட்டி விட்டவன் முன் அவளின் மறுப்புகள் எடுபடாமல் போனது.
"ஆதில் வேணாம் விட்டுரு, உங்கம்மாவை சமாளிக்க முடியாம தான் நான் அப்டி செஞ்சேன்.நான் செஞ்சதுக்கு இது பெரிய தண்டனை"என்றவள் முடிக்கும் முன்பே, துப்பாக்கியை அவளின் தலையில் வைத்திருந்தான்.
"நீ செஞ்ச பாவத்துக்கும் நம்பிக்கை துரோகத்துக்கும் என்னைக்கோ இத செஞ்சிருப்பேன்.எங்கம்மாக்கு நான் செஞ்ச சத்தியத்துக்காகவும் ஆரவ்காகவும் மட்டும் தான் அதை செய்யாம இருக்கேன். ஆனா எப்போவும் அப்டி இருக்க மாட்டேன்" என்றவன் அவளை மேலும் பேச விடாமல் வாயில் பிளாஸ்டர் போட்டு விட்டு கதவை மூடி சென்றே விட்டான்.
ஹாலில் உள்ள சோபாவில் வந்து அமர்ந்தவன் குற்றவுணர்வில் தவித்து போனான். இதே வீட்டில் தாய்க்கு நடந்த கொடுமைகளை தெரிந்து கொள்ளாமல் இருந்திருகிறேன் என்று நினைத்தவன் துடித்து போனான். வெளியில் எதிரியின் எண்ணம் முதற்கொண்டு அறிந்து அவர்களுக்கு சிம்மசொப்பனமாய் விளங்குபவன் வீட்டில் ஏமாளியாய், நினைக்கவே அவளை கொல்ல ஆத்திரம் பெருக, தாயின் சத்தியத்துக்காக பொறுமை காத்தான்.
கொலுசின் சத்தத்தில் திரும்பியவன், கால்கள் தானாக எழுந்தது. மாடிப்படியில் வைஷுவும் நந்தினியும். நந்தினி குளித்து புது சேலை அணிந்து தலை வாரப்பட்டு, நெற்றியில் விபூதி கீற்றோடு அவளின் கைப்பற்றி நடந்து வர, சற்று முன்பான தோற்றத்திற்கும் தற்போதைய தோற்றதுக்கும் சம்பந்தமே இல்லாமல், வைஷுவை பார்க்க, அவளோ அவனின் பார்வையை தவிர்த்து அவரை டேபிளில் அமர வைக்க, நந்தினி சாப்பிட பயந்து அவளையே பார்க்க, அவளோ உணவை எடுத்து பிசைந்தவள் அவருக்கு ஊட்டினாள்.
அவர்களையே பார்த்து கொண்டிருந்தவனை ஒரு கரம் கை நீட்டி இழுத்து அணைத்து "ஐ லவ் யூ ஆதில் அத்தான்"என்று கூற....
ஆதில் இறுக்கம் தளர்ந்து, இதழ் விரிக்க, அதை கண்ட வைஷுவோ கண்களில் கண்ணீர் வராமல் தடுக்க பெரும்பாடு பட்டு போனாள்.
ஆதில் அணைத்தவளை முன்னிழுத்தவன், கைகள் பாசமாக அவளின் தலையை தடவி கொடுக்க, ஏதேச்சையாக திரும்பியவன் வைஷுவை பார்த்து விட...
அவளை அணைத்தவன் "ஐ லவ் யூ, மிஸ் யூ சோ மச் ரியா"என்று கூற, வைஷ்ணவியோ அதை காண முடியாமல் அருவருப்பாக முகத்தை காண்பித்து திரும்பி விட...
அவனோ "என்ன உனக்கு பிடிக்கலை. அருவருப்பா இருக்குல்ல பாத்துக்குறேண்டி உன்னை, நீ தானா என்கிட்ட வந்து ஐ லவ் யூ சொல்லுவ, சொல்ல வைப்பேன்"என நினைத்து கொண்டவனுக்கு தெரியவில்லை.
அவள் அவனை காதலிக்கிறேன் என கூறும்பொழுது, அதை கேட்கும் நிலையில் அவன் இருக்க மாட்டான் என தெரியவில்லை அவனுக்கு...
nxt epi இன்னிக்கே வேணும்னா ஸ்டோரி பத்தி ஒரு லைன் சொல்லிட்டு போங்க, சூப்பர், நைஸ் இதுல என்ன தெரிஞ்சுக்கறதுன்னு தெரில... ப்ளீஸ்...
அந்த அறைக்குள் கைகளும் கால்களும் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில், நாற்பத்தைந்து வயதிருக்கும் அந்த பெண்மணிக்கு அவரை முடியை பிடித்து இழுத்து கைக்குள் வைத்து கொண்டு ஒரு கையால் மருந்தை வாய்க்குள் ஊற்றிக்கொண்டு"சோறு வேணுமா உனக்கு? அது ஒண்ணு தான் குறைச்சல்"என்றவள் அவரின் முடியை பற்றி இழுக்க...
அவரோ வலியில் முகத்தை சுருக்கி, அதை குடிக்காமல் தட்டிவிட முயற்சிக்க விமலாவின் பிடியில் தலை வலிக்க, அவரின் கண்களில் கண்ணீர்.
வைஷ்ணவி பதறிப்போனவள், ஓடிச்சென்று விமலாவின் கைகளை தட்டிவிட்டு, அவளின் கைகளில் இருந்த முடியை இழுத்து விட்டு விமலாவை தள்ளிவிட்டவள், அங்கே இருந்தவளை கண்டு அதிர்ந்து கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க "அத்தை"என்றவளுக்கு மகிழ்ச்சியில் பேச்சே வரவில்லை.
விமலா வைஷுவின் செயலில், அதிர்ச்சியானவள் அவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்து "ஏண்டி உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா நீ என் மேலையே கை வைப்ப, அப்ட்ரோல் வேலைக்கார நாய் உனக்கு அவ்ளோ தைரியமா? என்னையே தள்ளி விடுற, உன்னை சும்மா விட மாட்டேண்டி"என்றவள் அருகே வர, வைஷுவோ அவளின் பேச்சில் அதிர்ந்தவள் "என்னை என்ன உன்னை மாறி பணத்துக்காக ஒட்டிக்கிட்டு வந்தவன்னு நெனச்சியா? முறைப்படி தாலிகட்டி இந்த வீட்டுக்குள்ள வந்துருக்கேன். இப்போ யார் வேலைக்காரின்னு உனக்கே தெரிஞ்சிருக்கும், மேற்கொண்டு நான் எதுவுமே செய்றதுக்கு முன்னாடி நீயா போயிரு "என்றவள் பார்வையில் அதிர்ந்தவள் அங்கிருந்து வேகமாக சென்று விட்டாள்.
கண்களில் கண்ணீர் வழிய அவரை பார்த்தவள் அவரின் அருகில் சென்று மண்டியிட்டு அமர, அவரோ "போ... போய்டு, என.. எனக்கு... எனக்கெதுவும் வேணாம். பசிக்கல, சோ... சோறு.. இனி... இனிமேல் கேக்... கேக்க மாட்டேன். என்ன என்னை அடி... அடிக்காத... வலி... வலிக்குது "என்று திக்கி திணறி கண்ணீர் வழிய கூற, அவளால் கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை. அவரை அணைத்து கொண்டவள் "நான் உங்களை அடிக்க மாட்டேன் அத்தை, நீங்க எப்டி இப்படி"என்றவளால் எதுவுமே பேச முடியாமல் எழுந்தவள் அறையை சுற்றி பார்க்க, ஒட்டடை, தூசி, தும்புமாய் இருந்தது.அவரின் உடம்பில் சுற்றியும் இருந்த சங்கிலியை கழட்ட போக, அவரோ பயந்து நடுங்க அவரின் அருகில் அமர்ந்தவள், அவரின் முகம் பற்றி "உங்களுக்கு என்னை நியாபகம் இல்லையா?அத்... அத்தை நீங்க என்னை பார்த்து பயப்படாதீங்க? நான் இதோ சங்கிலியை கழட்டிடுறேன். உங்களை குளிக்க வெச்சு, வேற ட்ரெஸ் போட்டு சாப்பிட போகலாம். சரியா? நான் உங்களை நல்ல பாத்துக்குவேன். என்னை பார்த்தா உங்களுக்கு பயமா இருக்கா? அடிக்குற மாதிரி தெரியுதா?"என்று கேட்க...
அவரோ அவள் பேசுவது புரிந்தும் புரியாமலும் தலையாட்ட, அவரை கண்ணீர் மல்க பார்த்தவள் அவரின் கழுத்தில் கைகளில் இருந்ததை கழட்டி எடுத்தவள் அந்த அறைக்குள் இருந்தவரை வெளியே அழைத்து வர, ஹாலில் அமர்ந்து இருந்த ஆதில், ராகுல், பட்டம்மா, விமலா, அங்கிருந்த மற்ற வேலையாட்கள் (முதல் நாள் வரவேண்டாம் என்று அவளை பயமுறுத்த மட்டுமே கூறினான்)அனைவரும் அதிர்ந்து போய் பார்க்க, ஆதில் எழுந்தே விட்டான்.
அவனின் நிலையை கூற முடியாது. முழுவதும் உடைந்தே போய் விட்டான். அவனின் இதழ்கள் "அம்மா"என்று உச்சரித்தது.
அவர் ஆதில் சைத்ரேயனின் தாய் நந்தினி .முழுதாய் ஐந்து வருடங்களுக்கு பின் பெற்ற தாயை பார்க்கிறான். மடிப்புகலையாத பட்டு சேலை, தங்க நகைகள், சிறிதும் கலையாத தலை,இடுப்பில் சாவிகொத்து என்று வலம் வந்தவர், நிறம் மங்கிய ஐந்தாறு கிழிசல்கள் அந்த சேலையில் கன்னம் எல்லாம் கன்றி போய், தலை முடி எல்லாம் ஆங்காங்கே சடை போல் ஒட்டி ஒன்று அறியா குழந்தை போல் வைஷுவின் கைகளை பயத்துடன் பிடித்துக்கொண்டு, தன் தாயை இந்த நிலையில் பார்த்தவன் உயிரோடு மரித்தே போனான்.
அனைவரையும் அழவைத்து, துடிக்க வைக்கும் ஒருவன், அவன் கலங்குவது ராகுலுக்கே அதிர்ச்சி தான்...
"அம்...அம்மா"என்றவன் வேகமாக அவரின் அருகில் ஓடிச்செல்ல, அவரோ பயந்து போய் வைஷுவின் பின்னால் நின்று கொண்டார்.
"செல்... செல்லம்மா பயமா இருக்கு, போக சொல்லு... இவன் என்ன அடிச்சுருவான் "என்று திக்கி கூறியவரை கண்டவன் இங்கேயே இறந்தால் கூட போதும் என்று தவித்து போய் நின்றான் அவன்.
வைஷ்ணவி அவரை திரும்பி பார்த்தவள், அவரின் செல்லம்மா என்ற விளிப்பில் நெகிழ்ந்து தான் போனாள்.
அவரின் கையை ஆதரவாக பிடித்தவள், ஆதிலை ஒரு பார்வை பார்த்தவள் அனைவரையும் ஆட்டிப்படைக்கும் கர்வம் கொண்ட உன்னால் உன் தாயையே பார்த்து கொள்ள முடியவில்லை. இவ்வளவு தானா நீ? என்று இருக்க, அவளின் பார்வையை சந்திக்க முடியாமல் தலைகுனிந்து கொண்டான்.
அவள் நந்தினியை அவர்களின் அறைக்குள் அழைத்து செல்ல, ஆதிலின் கண்கள் தானாக விமலாவை சுட்டு பொசுக்க, அவனின் பார்வை சீற்றத்தை தாங்க முடியாதவள் தலைகுனிய...
அவனின் கால்கள் தாய் இருந்த அறைக்குள் செல்ல, உச்சபட்ச அதிர்ச்சி. அவனின் வேலையாட்கள் கூட இதைவிட நேர்த்தியான அறையில் தான் உள்ளனர் அந்த அறை அவ்வளவு மோசமானதாக இருந்தது.தன்னை நினைத்தே அவனுக்கு அசிங்கமாக இருந்தது.
ஐந்து வருடங்களுக்கு முன், நடந்த கசப்பான சம்பவத்தால் அவன் அன்னையின் மனநிலை தடுமாறிட, யாரையும் பக்கத்திலே விடவில்லை. விமலா மட்டுமே சென்று வருவாள். நான் பார்த்து கொள்கிறேன் என்று கூற, அவளின் மேல் ஆயிரம் கோபம் இருந்தாலும், தன் தாயை பார்த்து கொள்கிறாள் என்ற காரணத்துக்காகவே அவளை கண்டுகொள்ளாமல் இருந்தான். அவன் இருக்கும்போது எந்த சத்தமும் இருக்காது. அம்மாக்கு அது வேணும், இது வாங்கணும் என்று கூறியே அவனிடம் பல லட்சங்கள் கறந்திருந்தாள். தன்னால் தான் தந்தைஇறந்தார் என்ற குற்ற உணர்ச்சியில் இருந்தவன் தாயின் முன் செல்ல, தயங்க விமலா பார்த்துக்கொண்டதால் அமைதியாக இருந்தான்.
தன் தாய் தன் வீட்டிலேயே அத்தனை கொடுமைகள் அனுபவித்துகிறார் என்று நினைத்தவனுக்கு, அவரின் கன்னங்களில் இருந்த காயம் நினைவுக்கு வர, மறுநொடி ருத்ரமூர்த்தியாய் விமலாவின் முன் நின்றிருந்தான்.
அவளோ சிங்கத்தின் முன் மாட்டிய,சிறு முயலாய் நடுங்கி போய் இருக்க, தன் ஒட்டுமொத்த பலத்தையும் ஒன்று திரட்டி அவளின் கண்ணங்களில் அறைய, அடுத்த நொடி தரையில் விழுந்திருந்தாள் அவள்.
"ஏய் எழுந்திரு"என்ற அவனின் கர்ஜனையில் அங்கிருந்த அனைவருமே நடுநடுங்கி போயினர்.
அவளின் தலைமுடியை கொத்தாக பற்றி இழுத்தவன் "உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா நீ இப்படி ஒரு வேலையா பார்த்திருப்ப, அதுவும் நான் இந்த வீட்டுல இருக்கும்போதே, உன்னை"என்றவனை இடைமறித்தவள் "வேணாம் ஆதி விட்டுரு, நான் உனக்கு அம்மா மாதிரி"என்று கூற,அதில் மேலும் ஆத்திரமானவன் "அம்மாவா... அதுக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு? நீ காசுக்கு **** வந்தவ, நீயும் எங்கம்மாவும் ஒண்ணா"என்றவனின் வார்த்தைகளை மேற்கொண்டு கேட்க முடியாமல் அனைவரும் காதை மூடிக்கொள்ள,விமலாவுக்கோ அது எதுவுமே உறைக்காமல் இவன் என்ன செய்வானோ என்று பயத்தில் இருக்க...
"இப்போ சொல்றேன் கேட்டுக்கோங்க,இதோ இந்த பொம்பளைக்கு இனிமேல் ஒருவேளை மட்டும் தான் சாப்பாடு தரணும். அதுவும் ஒருவேளை மட்டும் பழைய சாதம் புரிஞ்சுதா?" என்றவனுக்கு அங்கிருந்த அனைத்து தலைகளும் ஆட, வீரா அந்த ரூம்ல இருந்து சங்கிலியையும் ஸ்டூலும் எடுத்துட்டு வா"என்று சத்தமிட,விமலாவுக்கோ சப்த நாடியும் ஒடுங்கி போனது. சமையல் கட்டுக்கு அருகில் இருந்த, ஸ்டோர் ரூமுக்கு இழுத்து சென்றவன் வேலையாள் கொண்டு வந்த நாற்காலியில் அவளை தள்ளி கைகால்களை சங்கிலியால் பிணைத்து கழுத்திலும் மாட்டி விட்டவன் முன் அவளின் மறுப்புகள் எடுபடாமல் போனது.
"ஆதில் வேணாம் விட்டுரு, உங்கம்மாவை சமாளிக்க முடியாம தான் நான் அப்டி செஞ்சேன்.நான் செஞ்சதுக்கு இது பெரிய தண்டனை"என்றவள் முடிக்கும் முன்பே, துப்பாக்கியை அவளின் தலையில் வைத்திருந்தான்.
"நீ செஞ்ச பாவத்துக்கும் நம்பிக்கை துரோகத்துக்கும் என்னைக்கோ இத செஞ்சிருப்பேன்.எங்கம்மாக்கு நான் செஞ்ச சத்தியத்துக்காகவும் ஆரவ்காகவும் மட்டும் தான் அதை செய்யாம இருக்கேன். ஆனா எப்போவும் அப்டி இருக்க மாட்டேன்" என்றவன் அவளை மேலும் பேச விடாமல் வாயில் பிளாஸ்டர் போட்டு விட்டு கதவை மூடி சென்றே விட்டான்.
ஹாலில் உள்ள சோபாவில் வந்து அமர்ந்தவன் குற்றவுணர்வில் தவித்து போனான். இதே வீட்டில் தாய்க்கு நடந்த கொடுமைகளை தெரிந்து கொள்ளாமல் இருந்திருகிறேன் என்று நினைத்தவன் துடித்து போனான். வெளியில் எதிரியின் எண்ணம் முதற்கொண்டு அறிந்து அவர்களுக்கு சிம்மசொப்பனமாய் விளங்குபவன் வீட்டில் ஏமாளியாய், நினைக்கவே அவளை கொல்ல ஆத்திரம் பெருக, தாயின் சத்தியத்துக்காக பொறுமை காத்தான்.
கொலுசின் சத்தத்தில் திரும்பியவன், கால்கள் தானாக எழுந்தது. மாடிப்படியில் வைஷுவும் நந்தினியும். நந்தினி குளித்து புது சேலை அணிந்து தலை வாரப்பட்டு, நெற்றியில் விபூதி கீற்றோடு அவளின் கைப்பற்றி நடந்து வர, சற்று முன்பான தோற்றத்திற்கும் தற்போதைய தோற்றதுக்கும் சம்பந்தமே இல்லாமல், வைஷுவை பார்க்க, அவளோ அவனின் பார்வையை தவிர்த்து அவரை டேபிளில் அமர வைக்க, நந்தினி சாப்பிட பயந்து அவளையே பார்க்க, அவளோ உணவை எடுத்து பிசைந்தவள் அவருக்கு ஊட்டினாள்.
அவர்களையே பார்த்து கொண்டிருந்தவனை ஒரு கரம் கை நீட்டி இழுத்து அணைத்து "ஐ லவ் யூ ஆதில் அத்தான்"என்று கூற....
ஆதில் இறுக்கம் தளர்ந்து, இதழ் விரிக்க, அதை கண்ட வைஷுவோ கண்களில் கண்ணீர் வராமல் தடுக்க பெரும்பாடு பட்டு போனாள்.
ஆதில் அணைத்தவளை முன்னிழுத்தவன், கைகள் பாசமாக அவளின் தலையை தடவி கொடுக்க, ஏதேச்சையாக திரும்பியவன் வைஷுவை பார்த்து விட...
அவளை அணைத்தவன் "ஐ லவ் யூ, மிஸ் யூ சோ மச் ரியா"என்று கூற, வைஷ்ணவியோ அதை காண முடியாமல் அருவருப்பாக முகத்தை காண்பித்து திரும்பி விட...
அவனோ "என்ன உனக்கு பிடிக்கலை. அருவருப்பா இருக்குல்ல பாத்துக்குறேண்டி உன்னை, நீ தானா என்கிட்ட வந்து ஐ லவ் யூ சொல்லுவ, சொல்ல வைப்பேன்"என நினைத்து கொண்டவனுக்கு தெரியவில்லை.
அவள் அவனை காதலிக்கிறேன் என கூறும்பொழுது, அதை கேட்கும் நிலையில் அவன் இருக்க மாட்டான் என தெரியவில்லை அவனுக்கு...
nxt epi இன்னிக்கே வேணும்னா ஸ்டோரி பத்தி ஒரு லைன் சொல்லிட்டு போங்க, சூப்பர், நைஸ் இதுல என்ன தெரிஞ்சுக்கறதுன்னு தெரில... ப்ளீஸ்...