• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

4👰👰👰

Active member
Messages
180
Reaction score
149
Points
43
யட்சிணி 4👰👰👰



ஆதவன் உதித்து வெகுநேரம் கழித்து, கண் விழித்தவள் வலியில் முகம் சுருக்க, எழுந்தமர்ந்தவளுக்கு எதிர் இருந்த கண்ணாடியில் தெரிந்த நெற்றிகாயத்தை கண்டு அதிர்ந்தவளுக்கு இரவின் மிச்சங்கள் நினைவுக்கு உடல் நடுங்கி போனாள் பேதையவள்.


இங்கிருந்து ஓடவும் முடியாதே... சிங்கத்தின் குகையில் மாட்டிக்கொண்டவள் வழி இல்லாமல் தவித்து போனாள்.

ஒருவேளை தானும் மற்றவர்கள் போல் படித்திருந்தால் துணிவுடன் அவனை எதிர்த்து நின்றிருப்போமா என்று நினைத்தவளுக்கு கண்ணில் கண்ணீர் வடிந்தது. மனதில் அவன் தன்னிடம் காதலை கூறிய தருணம் வந்து போனது.

பள்ளிப்படிப்பை மட்டும் முடித்தவள் பத்தொன்பது வயது பட்டாம்பூச்சி. ஒன்றரை வருடங்களாக அவனின் கார்மென்சில் தையல் வேலைக்கு சென்று வர, ஒரு நாள் அவளை பார்த்தவன் அவளின் கொள்ளைக்கொள்ளும் அழகிலும், அலைபாயும் கயல் விழியிலும் தன்னை மறந்து அவளை காதலிக்க தொடங்கினான் . ஒரு தலையாக மூன்று மாதங்கள் பார்வையிலே காதல் பாடம் படிக்க,இதை எதும் அறியா பெண்ணவளோ, அத்தனை மகிழ்வாய் இருந்தாள் தன் குடும்பத்துடன்.தந்தை சிதம்பரம் ஒரு தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை பார்க்க, தாய் மீனாட்சி வீட்டில் இருந்து அப்பளம், வடகம், ஊறுகாய் போட்டு அக்கம் பக்கத்தில் விற்று வருமானத்திற்கேற்ற செலவுடன்,தன் மூன்று குழந்தைகளுடன் மகிழ்வாக இருந்தனர்.வைஷ்ணவி வீட்டின் நிலையுணர்ந்து படிக்கும் ஆசை இருந்தாலும் பள்ளியுடன் படிப்பை நிறுத்தி விட்டாள் தம்பி, தங்கை வாழ்க்கைக்காகவும்.அத்தனை மகிழ்வாக இருந்தனர் குடும்பத்துடன்... அதுவும் வைஷு ஆதிலின் கண்ணில் படும் வரை மட்டுமே...


அவள் வீட்டுக்கு செல்லும் வலியில் அவளின் சைக்கிளை இடையில் மறித்து நிற்க, அவளோ யாரோ என்று பதறி போனாள். அந்த கார் அவளுடைய முதலாளியின் கார் என்பதை அறிந்தவள் அதிர்ந்து போய் பார்க்க, அதிலிருந்து இறங்கிய ராகுல் "மேடம் சார் கூப்பிடுறாங்க வாங்க"என்று கூற...


அவளோ அவன் கூறிய மேடம் என்ற வார்த்தையில் அதிர்ந்தவர் "அண்ணா நீங்க என்ன மாத்தி கூப்புடுறீங்க, நான் வைஷ்ணவி. உங்க கார்மெண்ட்ஸ்ல தான் வேலை செய்றேன். என்ன போய் மேடம்னு அதுவும் முதலாளி எதுக்காக என்னை கூப்பிட போறாங்க, அவர் எவ்ளோ பெரிய ஆள். ஆள் மாத்தி பேசுறீங்க"என்றவள் அங்கிருந்து நகர...

அவனோ அவளின் வெள்ளந்தி பேச்சிலேயே அவளை பற்றி தெரிந்து கொண்டவன், அவளை எண்ணி வருத்தம் தான் பட முடிந்தது.

ராகுல் "இல்லை மேடம் நான் ஆள் மாத்தி கூப்பிடல, ஆதில் சார் உங்களை தான் கூப்பிடுறார்"என்று கூற...

அவளோ அதிர்ந்து போனாள். அவர் ஏன் என்னை கூப்பிடுறார் என்று. அவள் தான் அவனை பற்றி அறிவாளே அவனை கண்டாலே பயந்து மறைந்து நின்று விடுவாள் அவள். ஒரு முறை அவளின் அருகில் இருந்த பெண் அவனை பார்த்து சிரித்ததுக்கே அவளை கேவலமாக பேசி, அசிங்கப்படுத்தி வேலையா விட்டு அனுப்பியவன் ஆயிற்றே...


காரின் அருகில் நடந்து வருவதற்குள் அவள் உடல் நடுங்க தொடங்கியிருந்தது.அவள் காரின் அருகில் வந்ததுமே அவளின் கையை பற்றி காருக்குள் இழுந்திருந்தான் அவன். காருக்குள் வந்தவள் அவன் மீதே விழ, அவளோ அதிர்ந்து போய் பயத்தில் கண்ணீர் வர, அவனின் பிடியில் இருந்து வெளியே வர துடிக்க, அவனுக்கோ அவளின் மறுப்புகள் எல்லாம் சிரிப்பை வரவழைக்க, அவளை அமைதியாக்க வேறு வழியில்லாமல் அவளின் இதழை சிறைபிடிக்க, முதலில் அவளை அடக்க அப்படி நடந்து கொண்டவன் விரும்பியே அவளின் இதழில் கவிபாடியவன் அவளை விடும்போது அவள் மயங்கியிருந்தாள்.

அவள் மயக்கமானதை பார்த்தவன் "ஹேய் நவி, பேபி சீ"என்றவன், அவளின் கன்னத்தில் தட்டி அவளை விழிக்க செய்ய அவளோ பயந்து போனவளாய் காரிலிருந்து இறங்க போனவள் "ஏய்"அவனின் சத்தத்தில் அதிர்ந்து திரும்பி பார்க்க,அவனோ "நான் உனக்கு போக சொல்லி அனுமதி தரவே இல்லையே, எதுக்காக போற?"என்று கடுமையாக கேட்க, அவளோ "எனக்கு பயமா இருக்கு. நான் போறேன்"என்று திரும்ப, அவனோ "நான் ஒண்ணும் உன்னை கடிச்சு தின்னுட போறதில்ல, ஐ வாண்ட் யூ, ஐ லவ் யூ."என்றவன் அவளின் புருவம் உயர்த்துதலில் "நீ என்னை கல்யாணம் பண்ணிக்கணும், புரியுதா? நான் சொல்றது"என்று கூற, அவளோ "இதெல்லாம் தப்பு. என்னை விட்டுருங்க, அடுத்த மாசம் எனக்கும் சந்திரன் மாமாக்கும் கல்யாணம், இப்போ நீங்க இப்படி அசிங்கமா பண்றது எனக்கு அருவெறுப்பா இருக்கு, உங்களை எனக்கு பிடிக்கலை ச்சி"என்றவள் வேகமாக காரை விட்டு இறங்கியவள் அவளின் சைக்கிளை எடுத்து கொண்டு சென்றவளுக்கு அவன் நடந்துகொண்டது பிடிக்கவில்லை. அவனை வாயில் வந்த படி திட்டியவாறே வீட்டிற்கு வந்தவளுக்கு மனமே ஆறவில்லை.


அவனோ தன்னை அடைய துடிக்கும் பெண்களின் மத்தியில் தான் இவ்வளவு இறங்கியும் தன்னை மதிக்காமல் செல்கிறாள் என்று கோவம் கொண்டவன் "உன்னை எப்டி எனக்கு சொந்தமாக்கிக்கணும்னு எனக்கு தெரியும் டி,என்ன பார்த்தா உனக்கு அசிங்கமா இருக்கா, இனிமேல் நீ இந்த அசிங்கத்தோட தான் வாழனும், வாழ்ந்தாகனும்" என்றவனின் விழிகளில் காதலை தாண்டிய வன்மம் மட்டுமே தெரிந்தது.


பதட்டத்துடன் வீட்டுக்கு வந்தவள் தன் பக்கத்து வீட்டு தோழியான அன்று ஆதிலிடம் அடிவாங்கியவளிடம் "இவர் எதுக்காக இப்படி செஞ்சார் சாரு, லவ் பண்றதா இருந்தா அதை மட்டும் சொல்ல வேண்டியது தானே, நானே வீட்டுல அப்பாகிட்ட சொல்லுவேன் தானே"என்று கேட்க...

அவளோ "அப்பாகிட்ட சொல்லுவியா? அப்போ உனக்கு அவரை பிடிச்சிருக்கா? என்று கேட்க...

"அச்சோ அதெல்லாம் இல்லை. அவரை பார்க்கும்போது ஒரு மாதிரியா இருக்கு. ஹார்ட் வேகமா துடிக்குற மாதிரி"என்று கூறியவளிடம் "இந்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்லாத, முக்கியமா அந்த ஆதில் கிட்ட, அவனை மாதிரி ஒரு மோசமானவன் யாரும் இல்லை. நான் பார்த்ததுக்கே என்கிட்ட எவ்ளோ மோசமா நடந்துகிட்டான் பார்த்தே இல்லை. அவனா தான் பொண்ணுங்கள தேடி போவான். பொண்ணுங்க அவனை பார்த்தா அவனுக்கு பிடிக்காது அசிங்க படுத்திருவான் "என்று அவளின் மனதை குழப்பி அனுப்பி வைத்தவளின் கண்களில் அத்தனை வன்மம்.

"நான் அன்னிக்கு பார்த்ததுக்கு என்னை எவ்ளோ அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தினே, இப்போ இவளை நீ லவ் பண்றியா? அது நடக்காது. நடக்கவும் விட மாட்டேன்"என்றவள் இந்த விசயத்தை வைஷுவின் அத்தையிடம் அரைகுறையாக கூறி பெண் கேட்டு வர வைத்து திருமணத்துக்கு ஏற்பாடு செய்ய, பெற்றோரின் விருப்பத்திற்கு இணங்க பெண்ணவளும் சம்மதிக்க
அதன் பின் நடந்தது தான் அத்தனையும்...

கண்களில் வழிந்த நீரை துடைத்து கொண்டவள், தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வந்தவள் தான் அவனுடன் வரும்போது தனக்கான உடைகள் எடுத்து வரவில்லை என்று நினைவுக்கு வர என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தவளின் விழிகளில் அங்கிருந்த டேபிளில் உடைகள் அடுக்கப்படிருந்தது.புருவம் சுருக்கியவள் எழுந்து வந்து பார்க்க, அவளின் அளவிலே அனைத்தும் இருந்தது. ஒருவேளை அவன் எனக்காக வாங்கியிருப்பானோ என நினைத்தவள் வேற யாரோடதாச்சும் இருக்கும் என்று நினைத்தவள் அதில் சிம்பிளாக ஒன்றை பார்க்க அனைத்துமே பிராண்டட் ஆக தான் இருந்தது.

அதில் ஒன்றை எடுத்துக்கொண்டவள் குளித்து உடைமாற்றி வெளியே வர, நெற்றியில் இருந்த அவளின் காயத்தை கண்ட பட்டம்மா பதறி போக, அவளோ டேபிளில் இடித்து மயங்கிவிட்டதாக கூற, பட்டம்மா "அப்போ உங்களுக்கு ஆதில் தம்பி தான் வைத்தியம் பார்த்தாரா? நிஜமாவா? நீங்க வெளியே வரல, அப்போ தம்பி தான்"என்றவருக்கு பேச்சே வரவில்லை. அத்தனை ஆனந்தம் அவருக்கு...

வைஷு கண்களை சுருக்கி அவரை பார்த்து "நீங்க சொல்றது எனக்கு புரியல, நிச்சயம் ஹாஸ்பிடல் போயிருப்பாங்க அம்மா, தையல் போட்ருக்குன்னு நினைக்குறேன். ரொம்ப வலிக்குது"முகத்தை வலியில் சுருக்கியவாறு கூற...

அவரோ கண்களை துடைத்துக்கொண்டு "ஆதில் தம்பி டாக்டர்ம்மா, அவருக்கு பிடிச்சு போய் அந்த படிப்பை கையில எடுத்தாரு, ஆனால் அஞ்சு வருசத்துக்கு முன்னாடி நடந்த அந்த கசப்பான விசயத்தால அவர் அதை வெறுத்துட்டாரு, இப்போ உங்களுக்காக அவருக்கு பிடிக்காத விசயத்தை செஞ்சிருக்காருன்னா நீங்க அவருக்கு எவ்ளோ முக்கியம்னு தெரிஞ்சுக்கோங்க"என்று அவர் பேசும்போதே, மாடி அறையில் பொருட்கள் உடையும் சத்தமும் யாரோ கத்தும் சத்தமும் கேட்க, அதிர்ந்து போய் திரும்ப...


அந்த அறையில் சத்தம் அதிகமாக, வைஷு அதிர்ந்து போய் பட்டம்மாவை பார்த்தவர்
அங்கே செல்ல போக, அவரோ கைபிடித்து தடுத்தவர் "அம்மா வேணாம் அங்க போகாதீங்க"என்று கூற...


மேலும் சத்தம் அதிகமாக, அவரின் கையை உதறியவள் அங்கே ஓடிச்செல்ல, முன்பு பூட்டியிருந்த அந்த அறை திறந்திருக்க அவள் உள்ளே கண்ட காட்சியில் உடல் நடுங்கி அதிர்ந்து போனாள்.


 
Active member
Messages
205
Reaction score
116
Points
43
அட கிறதகா இப்படியா மூர்கமா இருப்பான் 😡😡😡😡😡😡
 
Top