• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

12

Active member
Messages
180
Reaction score
149
Points
43
யட்சிணி 12

மறுநாளில் இருந்து வைஷு அங்கிருந்தே கல்லூரிக்கு செல்ல, ஆதில் அவளுடன் கண்ணாமூச்சி ஆடிகொண்டிருந்தான். அதிலிருந்து அவன் வீட்டுக்கு வருவதே இல்லை. அவளோ அவனை தேடி களைத்து போனாள். ஒருநாளைக்கு ராகுலிடம் கேட்க அவனோ "ஒரு பெரிய ஆர்டர் பேசி முடிக்கணும் அது இழுத்துட்டே இருக்கு அதனால அந்த டென்ஷன் ல இருக்கான்மா வந்துருவான். உனக்கு இந்த வருஷம் ரொம்ப முக்கியம் நீ எக்ஸாம்க்கு பிரிப்பர் பண்ணு, கண்டதையும் நினைச்சு கவலைப்படாத, இன்னும் நேரம் இருக்கு, உங்களுக்கு அதனால இப்போ உன்னோட கேரீர்ல கவனமா இரு, உன்னோட நாலுவருச உழைப்பு இந்த வருசத்துல தான் இருக்கு. நீ நல்லா படிச்சு உன் ஆசைப்படியே டாக்டர் ஆகணும்.மைண்ட்ல வேறெதும் ஏத்துக்காத ஓகே வா. உனக்கு ஒரு அண்ணனா சொல்லணும்னு நினைச்சதை சொல்லிருக்கேன். தப்பா சொல்லிருந்தா மன்னிச்சுடு"என்று தவிப்பாக கூறினான்.

வைஷ்ணவி "அச்சோ அண்ணா எதுக்காக மன்னிப்பு கேக்குறீங்க? நீங்க கரெக்டா தான் சொல்லிருக்கீங்க?இன்னும் எங்களுக்கு நேரம் இருக்குல்ல, நீங்க உங்க பாஸ் கிட்ட சொல்லிடுங்க, இனிமேல் அவரா என்னை தேடும் வரையில நான் அவரை பார்க்கவும் மாட்டேன், தேடிப்போகவும் மாட்டேன்"என்றவள் கண்களை துடைத்துக்கொண்டு உள்ளே சென்று விட்டாள்.


அவள் கண்களில் நீருடன் போவதை பார்த்திருந்தவனோ காதில் இருந்த ஸ்பீக்கரில் "இப்போ உனக்கு சந்தோசமா ஆதில், ஒவ்வொரு முறையும் அந்த பொண்ணுக்கு நீ அழுகையை மட்டும் தான் தர, இன்னும் என்ன பிரச்னை உனக்கு அவ தான் உன்னை லவ் பண்றா தானே,அவ கூட சேர்ந்து வாழ வேண்டியது தானே, எதுக்குடா இப்டி படுத்தி எடுக்குற?"என்று கோவமாக பேச, எதிர்ப்புறம் இருந்தவனோ "வேலை முடிஞ்சுதுல கிளம்பி வா, மீட்டிங் இருக்கு அங்க வந்து பேசு, இப்போ உன்னோட அட்வைஸ் கேக்க எனக்கு நேரம் இல்ல"என்றவன் அழைப்பை துண்டிக்க, ராகுலோ "இவன்லாம் ஒரு மனுஷன், ச்சை இவனையும் ஒருத்தி லவ் பண்ணிட்டு இருக்கா "என்று நொடித்து கொண்டே ஆதில் வர சொன்ன இடத்துக்கு கிளம்பினான்.

அங்கே அழைப்பை துண்டித்தவனோ,எதிரில் திரையில் தெரிந்த தன்னவளை ரசித்தவன் அவளின் முகத்தை வருடிக்கொண்டே "இன்னும் நமக்கு நிறைய நேரம் இருக்கு, அதுக்கு முன்னாடி இன்னும் தீர்க்க வேண்டிய கணக்கும் முடிச்சு வைக்க வேண்டிய கணக்கையும் முடிச்சு உங்கிட்ட வந்து சேர்ந்துருவேண்டி என்றவனின் கண்களில் பழிவெறி தாண்டவமாடியாது.


அவன் நினைத்தது போலவே அங்கே,"இருபது வருஷம் அதே வீட்டுல இருந்து நீ என்ன கிழிச்ச, உன்னால அந்த ஆதில கொல்ல முடியல, அவ்ளோ பெரிய சாம்ராஜ்யத்துக்கும் அவன் தான் வாரிசு, அவன் இல்லனா அதுக்கு அப்புறம் நம்ம பையன் ஆரவ் தான் அடுத்த வாரிசு. எனக்கு அந்த பிச்சைக்காரி நந்தினியை கட்டி வச்சாங்க , அவ என்னோட எல்லா ஆசைக்கும் முடிவு கட்டிட்டா, அதுக்கப்புறம் நானும் நல்லவனா தான் இருக்கணும்னு நினச்சேன், அவளையும் காதலிக்கிற மாதிரி நடிச்சேன்எங்கப்பன் சாகறதுக்கு முன்னாடி எல்லா சொத்தையும் அவன் பேருல எழுதினது மட்டும் இல்லாம என்னையே அவன்கிட்ட கையேந்த விட்டுட்டான்.என்னோட ஆசையே அந்த சொத்துக்கு முதலாளி ஆகறது தான் ஆனா, அது நடக்கல எங்கப்பன் இருக்கும் போது அவன் தான் ராஜா, அவனுக்கு கீழ நின்னு கூழ கும்பிடு போட்டு சம்பளம் இல்லாத வேலைக்காரன் போல என்னை ஆட்டி வச்சான். இப்போ அவன் அந்த ஆதில். அவனும் என் மகன் தான். என் புள்ளையே ஆனாலும் அது எனக்கு கீழ தான், என்னைக்கு அவனுக்கு கீழ தான் நான்னு முடிவாச்சோ அன்னைக்கே அவன் எனக்கு எதிரியாகிட்டான், அவன் முடிவுல தான் என்னோட சந்தோசம், என் ஆசை எல்லாம் என்று சிரித்தான் அவன் சாட்சாத் ராகவே தான், ஆதில், ஆரவின் தந்தை.

பணத்துக்காக சொந்த மகனையும், மனைவியையும் கொல்ல துடிக்கும் கொடூர பிறவி.

ராகவ் அனைத்து கெட்ட விஷயங்களின் தலைவன். அவனை திருத்தி நல்ல வழிக்கு வரவேண்டும் என்று ஏழைபெண்ணான நந்தினியை அவனுக்கு சொத்தில் பங்கு தர மாட்டேன் கூறி மிரட்டி கட்டி வைக்க, அவனோ சொத்தில் தந்தை பங்கு தரமாட்டார் என்பதற்காக, தன் காதலியான விமலாவை விடுத்து நந்தினியை திருமணம் செய்து திருந்தி வாழ்பவன் போல அனைத்தையும் மறந்து தொழிலை கற்றுக்கொள்ள, ஆதிலின் தாத்தா ஆதி நாராயணனுக்கு அப்போதும் மகனின் மீது நம்பிக்கை இல்லை.

அவர் இறக்கும் போது ஆதிலுக்கு 8வயது, மொத்த சொத்தையும் அவன் பேரில் எழுதியவர், அவனுக்கு கார்டியானாக நந்தினியை போட்டு அவர்கள் இருவரின் உயிருக்கு ஆபத்து வரும் பட்சத்தில் அனைத்து சொத்துக்களும் ஆசிரமத்துக்கு சேர்ந்து விடும் என்று பதிந்து வைத்து விட்டு போயிருக்க, ராகவோ நிலைகொள்ளாத கோவத்தில் தகித்தவன், விமலாவின் வற்புறுத்தலில் நாடகமாடி அவளை தன் வீட்டிற்கு வர வைத்து விட்டான். மனைவியின் முன்னிலையிலும் நல்லவனாகவே நடந்து கொண்டான்.

ஆதிலுக்கும் நன்கு விவரம் தெரிந்தது, அவனும் வளர்ந்தான். அவன் ஆசைப்படியே மருத்துவராக, அவனுக்கு விமலாவை பிடிக்காது ஆனால் அண்ணா, அண்ணா என்று சுற்றி வரும் ரியாவையும், ஆரவையும் அத்தனை பிடிக்கும் அவனுக்கு...

அன்று ஆதிலின் பிடிவாதத்தின் படி, வெளியே செல்ல ஆதில் கவனக்குறைவில் வரும் வண்டியை கவனிக்காமல் நிற்க, ராகவோ ஆதிலை காப்பாற்ற போய் அவன் மாட்டிக்கொள்ள, பதறிப்போய் ஆதில் தந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, அவன் இறந்து விட்டான் என்று கூற, நந்தினி அந்த அதிர்வில் திக் பிரம்மை பிடித்தவர் போல் ஆக ஆதிலோ தந்தையை பார்ப்பதா எங்கோ வெறித்து கொண்டு நிற்கும் தாயை பார்ப்பதா இல்லை தன்னால் தான் தந்தை இறந்து விட்டார் என்று குற்றவுணர்வில் எதையும் கண்டுகொள்ளாமல் அப்படியே அமர்ந்து விட்டான்.

அடுத்து நடந்த அனைத்தும் விமலா, ராகவின் திட்டங்கள், விமலா ஆதிலின் குற்றவுணர்வை அவ்வப்போது கிளற, அவன் அனைத்தையும் மறந்தான், அவன் டாக்டர் என்பதையும் தாயையும் தன் குற்றவுணர்ச்சியால் கண்டு கொல்ல மறந்து தொழிலில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தவன் அப்படியே இறுகி போனான்.

விமலா நந்தினியை அவள் கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள முடிவு செய்தவள் கொஞ்சம் கொஞ்சமாக அவளை அடிமையாகவே மாற்றியிருக்க, ராகவ் இறந்து போனதாக காட்டிக்கொண்டவன் மறைவாக இருந்து ஆதிலை ஏமாற்றி சொத்தில் கையெழுத்து வாங்க முயற்சிக்க எதுவுமே பலனளிக்காமல் போக, விமலா மாட்டிக்கொண்டதை அறிந்தவன் யாருமில்லாத நேரத்தில் தன் ஆட்களின் மூலம் அங்கிருந்து அழைத்து வந்து விட, ஆதில் மேலும் எச்சரிக்கையாக இருந்தான். அவன் வீட்டுக்குள்ளே வந்து செல்லும் அளவிற்கு விட்டதை எண்ணி அதிர்ந்தவனுக்கு அப்போது தன் புரிந்தது. விமலாவிற்கு பின் யாரோ இருப்பது, அதுவரையிலுமே அவருக்கு தன் அன்னையின் மேல் காழ்ப்புணர்ச்சி என்று மட்டுமே நினைத்திருந்தவன், அதற்கு பின் யார் என்று தேட தொடங்கியிருந்தான்.அவனின் தேடுதலுக்கான விடை தெரிய ஆதில் கொடூரத்தின் உச்சமாய் ராட்சசனாய் மாறி நின்றான்.

nxt epi innike tharen... ivlo late annathuku sorry... enna thedinavangaluku nanri... niraiya peruku ibla pathil solla mudila... sorry frds...
 
New member
Messages
12
Reaction score
5
Points
3
Thanks for the episode ..
Next update thanka
 
Top