- Messages
- 1,028
- Reaction score
- 2,912
- Points
- 113
பொழுது – 17 
இரண்டு நாட்கள் அமைதியாய் கழிந்தது. நிவின் எந்தவித தொல்லையும் செய்யாது அமைதியாய் இருக்கவும் சுதிக்கு நிம்மதி பிறந்தது. அன்றைக்கு அவள் வேலை முடிந்து வீடு வர, சந்திராவின் முகம் பொலிவிழந்து காணப்பட்டது. என்னவென புரியாது உடை மாற்றி வந்தாள் இவள்.
அவர் அமைதியாய் அப்பளத்தை தேய்த்துக் கொண்டிருந்தார். சௌம்யா சூடாய் ஆப்பம் சுட்டுக் கொடுக்க, அதை தட்டில் எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்தவள், “ம்மா... என்னாச்சு. ஏன் ஒருமாதிரி இருக்கீங்க?” எனக் கேட்டவாறே ஆப்பத்தை பிட்டு தேங்காய் பாலில் தோய்த்து வாயிலிட்டாள். பசித்த வயிற்றுக்கு அமிர்தமாய் இருந்தது. சந்திராவிடம் பதிலில்லை.
“ம்மா... உங்ககிட்டேதான் கேட்குறேன். பதில் சொல்லுங்க!” இவள் அழுத்திக் கேட்க, சௌம்யாவிடமிருந்து பதில் வந்தது.
“உன்னைப் பார்த்துட்டுப் போன பையனோட ஜாதகம் உன்னோட பொருந்தலை சுதி. அவங்க வீட்லயும் ஜாதகம் பார்த்திருப்பாங்க போல. கல்யாணம் நடந்தா சண்டையும் சச்சரவுமாத்தான் இருக்கும். அதனால வேணாம்னு ரெண்டு பக்கமும் முடிவெடுத்துட்டோம்!” என அவள் கூற, சுதியின் முகத்தில் அவர்கள் அறியாது நிம்மதி பிறந்தது. ஆனாலும் சௌம்யா கண்களுக்கு அது தவறாமல் புலப்பட்டது.
“சுதிமா, நீ எதுவும் மனசுல ஆசையை வச்சுக்கலையே. வேற நல்ல பையனா பார்ப்போம் டா. ஜாதகம் ஒத்து வரலைன்னா, வாழ்க்கை நல்லா அமையாம போய்டும்!” சந்திரா இவளை வருத்தமாய்ப் பார்த்துக் கூறினார். சுதி முகத்தில் இளமுறுவல் தோன்றிற்று.
“ம்மா... நீங்களா பார்த்து இவர்தான் உனக்கு வருங்கால புருஷன்னு யாரை பிக்ஸ் பண்ணிட்டு என் முன்னாடி நிறுத்துறீங்களோ அவரை நான் ஏத்துப்பேன் மா. அவர் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. நீங்க எனக்கு கெடுதல் எதுவும் நினைக்க மாட்டீங்க. எனக்கு நல்லது எதுன்னு உங்களுக்குத் தெரியாதா?” எனப் புன்னகைத்தவளின் முகத்தை தடவினார் பெரியவர்.
“ஐ... அத்தை முகத்துல மாவு!” ருத்ரா எட்டி சுதியின் முகத்தைத் துடைத்துவிட, இவள் புன்னகைத்தாள்.
“ரொம்ப சந்தோஷமா இருக்கோ?” செவியோரம் முணுமுணுத்துவிட்டுப் போகும் சௌம்யாவை இவள் முறைத்துப் பார்த்தாள்.
“முறைப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல டி?” என பெரியவள் தனக்குள் முனங்கினாள்.
சுதி அன்றைக்கு நிம்மதியாய் தூங்கினாள். பாஸ்கரின் அன்றைய பேச்சு அவளுக்கு அத்தனை உவப்பாய் இல்லை. அவனோடு எப்படி வாழ்க்கையைப் பகிரப் போகிறோம் என மனதினோரத்தில் கவலை அரித்திருந்தது. அவனுடைய சுபாவமே அன்றைய பேச்சைப் போலத்தான் என்றால் காலத்திற்கும் அவன் தன்னை மட்டம் தட்டிப் பேசுவானே. எப்படி நிம்மதியாய் வாழ முடியுமென பயமும் கவலையும் அப்பியிருந்த மனம் இன்றைக்கு சௌம்யாவின் பதிலில் நிறைந்து போனது. அடுத்து வரும் மாப்பிள்ளையைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என ஆழ்ந்த நித்திரையில் மூழ்கிப் போனாள்.
மறுநாள் மலர்ச்சியுடன் வேலைக்கு வந்த தோழியை சந்தேகமாகப் பார்த்தாள் விவேகா. “என்ன டி... முகமெல்லாம் பளபளன்னு இருக்கு. மேரேஜ் பிக்ஸ் ஆகிடுச்சா?” எனக் கேட்டாள்.
“ப்ம்ச்... அது ஜாதகம் ஒத்து வரலைன்னு தட்டிப் போய்டுச்சு டி. எனக்கு இப்பத்தான் நிம்மதியா இருக்கும் விவே. அந்த மாப்பிள்ளையை எனக்கு சுத்தமா பிடிக்கலை டி. அம்மா சொன்னாங்கன்னுதான் ஓகே சொன்னேன். அதுவா தட்டிப் போனதுல சந்தோஷமா இருக்கேன்!” என்றாள் மலர்ந்து புன்னகைத்து.
“ஆமா... ஆமா. கொஞ்சம் வெள்ளையா இருந்தா நம்பளை மட்டம் தட்டிடுவானுங்க. உனக்குன்னு ஒருத்தன் வருவான் சுதி. அதுவரை வெயிட் பண்ணு!” என அவள் கூற, சுதியின் அலைபேசியில் குறுஞ்செய்தி வந்து விழுந்தது. நிவின்தான் அனுப்பி இருந்தான்.
“ரெண்டு நாள் நிம்மதியா இருந்தேன். இவருக்குப் பிடிக்கலை போல!” என முணுமுணுத்துவிட்டு அந்தச் செய்தியை திறந்தாள்.
“சுதிரமாலா... ஆர் யூ ஃப்ரீ இன் தி ஈவ்னிங். ஐ ஜஸ்ட் வாண்ட் டு டாக் டு யூ!” என அவன் அனுப்பிய செய்தியைப் படித்தவள், பதிலளிக்கவில்லை.
“என்னவாம் டி... என்ன அனுப்பி இருக்கான். துரை இங்கிலீஷ்லதான் மெசேஜ் பண்ணுவாரோ? எனக்கு ஒன்னும் புரியலை!” விவேகா உதட்டைக் கோணினாள்.
“சாயங்காலம் ப்ரீயா. பேசணும்னு கூப்பிட்டிருக்காரு டி. நான் ரிப்ளை பண்ணலை. அவர்கிட்டே பேசுனா, என் தொண்டைத் தண்ணித்தான் வத்திப் போகும். அமைதியா இருந்துடுறது பெட்டர்!” என்றாள் பெருமூச்சுவிட்டு.
“ப்ளாக் பண்ணிடு சுதி. அப்புறம் எப்படி மெசேஜ் பண்றான்னு பார்ப்போம்!” என விவேகா கூற,
“இல்லை டி. போன மாசம் சம்பள பாக்கி இருக்கு. எட்டாயிரம் சும்மாவா? என் உழைப்பு டி. அதை வாங்கிட்டா ப்ளாக் பண்ணிடுவேன்!”
“ஆஹா... கண்டுபிடிச்சுட்டேன் டி. இந்த லவ் நாடகம் எல்லாம் இந்த எட்டாயிரத்தை அபேஸ் பண்ணவாதான் இருக்கும். எப்படியும் வேலையைவிட்டு தொரத்துற ஐடியால இருந்திருப்பான். இப்படி பேசினா நீயே நின்னுடுவ. சம்பளமும் கொடுக்கத் தேவையில்லை. அவன் மேலயும் தப்பில்லாம போய்டும். செம்ம கில்லாடி அவன்!” விவேகா யோசனையுடன் கூற, சுதி இல்லையென தலையை அசைத்தாள்.
“இல்லை டி... அப்படியெல்லாம் கஞ்சமில்லை டி. அவர் ஒருதடவை காம்ப்ளக்ஸ்க்கு பர்சேஸ்க்கு வந்தாலே ஐயாயிரம் பத்தாயிரம் செலவு பண்ணுவாரு. அதுவும் இல்லாம ஒன்னாந் தேதியானா, கரெக்டா சம்பளம் கொடுத்துடுவாரு. அதனால இது ரீசனா இருக்க வாய்ப்பில்லை!” என்றாள்.
“ஓ...” விவேகா யோசித்தாள். மறுபடியும் அலைபேசி சப்தமெழுப்ப, எடுத்துப் பார்த்த சுதிக்கு கோபம்தான் வந்தது.
“ரிப்ளை மீ சுதி. ஆர் எல்ஸ் ஐ வில் கம் டூ யுவர் ஹோம் டூநைட்!” என்றதைப் படித்தவள், “என் வீடு ஒன்னும் உங்க மாமியார் வீடில்லை. நினைச்ச நேரம் வந்து போறதுக்கு!” எனக் கடுப்புடன் பதிலளித்தாள்.
“இன்னும் ப்யூ டேய்ஸ்ல என் மாமியார் வீடாகிடும் இல்ல?” என கண்ணடிக்கும் பொம்மையை அனுப்பியிருந்தான்.
“சரி, நீ வர வேணாம். நான் நைன் ஓ க்ளாக் அங்க வரேன்!” என அடுத்து ஒரு செய்தியை அனுப்பியிருந்தான்.
“இம்சையைக் கூட்டுறான் டி. தொல்லையைத் தூக்கி நானே என் தோள்ல போட்டுக்கிட்டேன் போல!” சுதி நொந்துகொண்டு கூறினாள்.
“என்னதான் சொல்றான் அவன்? என்ன வேணுமா அவனுக்கு. கருமத்தை தமிழ்ல வேற அனுப்ப மாட்டான்!” என்றவள் என்னவெனப் படித்து புரியாது விழித்தாள்.
“நான் வரலைன்னா அவன் வீட்டுக்கு வருவானாம். இப்போதான் வீடு கொஞ்சம் நிம்மதியா இருக்கு. மறுபடியும் வந்து ஏழரையைக் கூட்டுவான். அண்ணி என்னமோ எல்லாம் என் சம்மதத்தோட நடக்குற மாதிரி பார்ப்பாங்க!” என்றாள் எரிச்சலாய்.
“சரி, வர்றேன்னு பதிலனுப்பு டி. நம்ப ரெண்டு பேரும் போறோம். நான் நாலு கொடுக்குற குடுப்புல உன் பக்கமே அவன் திரும்பக் கூடாது. அவ்வளோ என்ன கொழுப்பு அந்த வெள்ளை உழுவைக்கு!” விவேகா கடுகடுத்தாள்.
“பிரச்சனை வேணாம் விவே!”
“அப்போ அவன் நைட் டைம்ல உங்க வீட்டுக்கு வர்றது உனக்கு ஓகே வா. ஒரு தடவை போய் மூஞ்சில அடிச்ச மாதிரி பேசிட்டு வந்தாதான் சரிபடுவான் டி. நீ ஒதுங்கிப் போனா ஏறி மிதிக்கத்தான் பார்ப்பானுங்க. வர்றேன்னு சொல்லு. ரெண்டு பேரு இருக்கோம். எதுவும் பண்ண மாட்டான்!” என்றாள் அழுத்தமாய். சுதிக்கு செல்ல வேண்டுமா என மீண்டுமொரு யோசனை. பிரச்சனை எதற்கு என யோசித்தாள். இருந்தும் வீட்டிற்கு அவன் வந்துவிட்டால் என எண்ணம் தோன்ற, “சரி வர்றேன் சார்...” என அனுப்பினாள்.
“தட்ஸ் குட் கேர்ள். நைட் டைம், சோ டோன்ட் கம் அலோன். உன் ஃப்ரெண்ட் விவேகாவைக் கூட்டீட்டு வா சுதி!” என்றவன் பதிலில் சுதிக்கு ஆச்சர்யம்.
“தனியா வர வேணாம். உன் ஃப்ரெண்ட் விவேகாவை கூட்டீட்டுவான்னு சொல்றார் டி. உன் பேரை தெரிஞ்சு வச்சிருக்காரு பாரேன்!” என சுதி அதிசயித்துக் கூற,
“ஏன்... என் பேரை தெரிஞ்சு வச்சிருக்கக் கூடாதா என்ன?” என இவள் முகத்தைக் கோணினாள்.
“ச்சு... அப்படி சொல்லலை டி. உன் பேரை தெரிஞ்சுக்கிற அளவுக்கு நோட் பண்ணி இருக்காரேன்னு சொல்றேன்!”
“ஓ... அப்படி சொல்றீயா. இருக்கும், இருக்கும். நல்லவன் மாதிரி பேசுறான் பார்த்தீயா. சும்மா இருக்கவனைக் கூட நம்பிடலாம். நல்லவன் வேஷம் போட்றவனை நம்பக் கூடாது டி. நேர்ல போறோமில்ல. அவனைப் பார்த்துக்கிறேன்!” என இவள் சூளுரைக்க, சுதி சற்றே பயத்துடன் தோழியை நோக்கினாள்.
“பிரச்சனை எதுவும் வேணாம் டி. அமைதியா பேசிட்டு வரலாம். அவருக்கு ஒன்னும் இல்ல. எது நடந்தாலும் நம்மளைத்தான் குத்தம் சொல்லும் இந்த உலகம். நம்ப சேஃப்டி முக்கியம்!” என்க, விவேகா சும்மாவேனும் தலையசைத்துவிட்டு நகர, இவள் பெருமூச்சை வெளிவிட்டாள்.
இரவு வேலை முடிந்ததும் சௌம்யாவிற்கு குறுஞ்செய்தி ஒன்றைத் தட்டிவிட்டாள் சுதி. வணிகவளாகத்தில் ஆட்கள் என்றைக்காவது நிறைய இருந்தால் தாமதமாய் கிளம்புவாள். அதனால் அதைப் போல பொய்யை உரைத்தாள். மனம் கொஞ்சம் உறுத்தியது. நிவின் மீதுதான் கோபம் வந்தது.
ஐந்து நிமிடங்கள் வீட்டிற்கு அழைத்துப் பேசிவிட்டு வந்த விவேகா, “எங்கம்மா ஒரு பத்து நிமிஷம் லேட்டானாலே என்ன, ஏன், எதுக்குன்னு என்னைப் போட்டு படுத்திடும். இப்போ கொஞ்சம் லேட்டாகும்னு சொன்னதும்... ஷப்பா!” என அலுத்தவள், “ஆனால் பாரேன்... மலைமாடு மாதிரி ஒருத்தன் இருக்கான். எந்த நேரத்துக்கு வர்றான் போறான்னு தெரியாது. அவனைக் கேள்வி கேக்காது. நான்தானே இளிச்சவாய்!” என அவள் புலம்ப, இருவரும் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பிற்குள் நுழைந்தனர்.
விவேகா அனைத்தையும் ஆர்வமாய் சுற்றிப் பார்த்தாள்.
‘வாழ்றானுங்க!’ என அவள் மனம் பொறாமை கொண்டது. இருவரும் சென்று நிற்க, அழைப்புமணி அழுத்தும் முன்னே நிவின் கதவைத் திறந்துவிட்டான்.
“வாங்க சிஸ்டர்... உள்ள வாங்க!” விவேகாவை இன்முகமாக வரவேற்றவன், “கெட் இன் சுதி..” என்றுவிட்டு உள்ளே நுழைந்தான். விவேகா அந்த வீட்டைப் பிரம்மிப்பாய் பார்த்தாள். அவர்கள் வீட்டை நான்கு மடங்காக்கினால் கூட இந்தளவிற்கு வராது என அவள் மனம் கடகடவென கணக்கிட்டது.
“உக்காருங்க சிஸ்டர்...” என அவன் இரண்டு முறை உரைத்ததும் பிகு செய்யாமல் விவேகா அமர்ந்துவிட, சுதி மட்டும் அமரவில்லை. அமைதியாய் அவனை மட்டும் அளவெடுத்தாள்.
“சுதி... நீயும் உக்காரு. ரெண்டு பேரும் டயர்டா இருக்கீங்க. ஐ வில் கெட் யூ ஜூஸ்!” என்றவன் ஏற்கனவே தயாரித்திருந்த பழச்சாற்றை உணவு மேஜை மீதிருந்து எடுத்து இருவருக்கும் பரிமாறினான்.
சுதி அசையாது நிற்க, “சுதிரமாலா... சிட். நின்னுட்டே இருக்கேன்னு காட் கிட்டே வேண்டி இருக்கீயா என்ன? கம் அண்ட் சிட். யூ லுக் வெரி டயர்ட்!” என்றான் அக்கறையாய். அவனை சில நொடிகள் வெறித்தவள், மெதுவாய் வந்து அமர்ந்தாள். காலையிலிருந்து நின்று கொண்டே இருந்ததில் கால் வலி உயிர் போனது. அதோடு மாதவிடாய் காலமும் சேர்ந்து முதுகோடு வலிக்க, அயர்ந்து போனாள். வீட்டிற்கு சென்றதும் அப்படியே படுத்துவிட வேண்டுமென பல்லைக் கடித்து வேலை பார்த்தாள். வீட்டிற்கு செல்லாமல் இங்கு வந்ததும் கொஞ்சம் கடுப்பாய் இருந்தது. ஓய்வுக்காக வேண்டும் உடலை அவளே அழைக்கழித்தாள். கண்ணெல்லாம் சொக்கியது.
தளர்வாய் அமர்ந்ததும் அந்த பஞ்சு நீள்விருக்கை அவளை உள்வாங்கிக் கொண்டது. அப்படியே இங்கேயே படுத்து உறங்கிவிடலாம் என்ற எண்ணம் தோன்றியதும் பெருமூச்சை வெளிவிட்டாள். அவளது முகத்தையே நிவின் பார்த்திருந்தான். அவனுக்கும் அவள் நிலை புரந்திருக்க வேண்டும்.
“சிஸ்டர்... ஏன் ஜூஸ் குடிக்கலை நீங்க. எடுத்துக்கோங்க!” என்றான். விவேகா முதல்நிலை பிர்மமிப்பிலிருந்து மீண்டிருந்தாள்.
“வேண்டாம் சார். நீங்க விஷயத்தை மட்டும் சொல்லுங்க. இன்னைக்கு என்னென்னுப் பேசி முடிச்சிடலாம். என் ஃப்ரெண்ட் உங்க மேல செம்ம காண்டுல இருக்கா!” விவேகா குரலை உயர்த்தினாள்.
“சிஸ்டர்... உங்க கோபம் எனக்குப் புரியுது. எல்லாத்தையும் பேசிக்கலாம். இப்போ இந்த ஜூஸைக் குடிச்சிட்டு என்ன வேணாலும் பேசுங்க. நான் பதில் சொல்றேன்!” அவன் அக்கறையாகக் கூறவும், விவேகாவால் அவனிடம் கோபமாய் பேச முடியவில்லை. பழச்சாற்றை கையிலெடுத்து வாயருகே கொண்டு சென்றவள் படக்கென அவனை சந்தேகமாகப் பார்த்தாள்.
எதற்கெனப் புரிந்தவனும் மெலிதாய் சிரித்துவிட்டு ஒரு காலி குவளையை எடுத்து வந்து தானும் பழச்சாற்றை அருந்தினான். “பயப்படாம குடிங்க சிஸ்டர். எதுவும் மிக்ஸ் பண்ணலை நான். இட்ஸ் ப்ரெஷ் ஜூஸ். இப்போதான் ப்ரிபேர் பண்ணேன்!” என அவன் கூற, சுதி கண்களை மட்டும் மூடி தோழயின் தோளில் சாய்ந்திருந்தாள். விவேகா கடகடவென பழச்சாற்றை அருந்தி முடித்தாள். சுவையாய் இருந்ததும் நாக்கில் தித்திப்பாய் இறங்கியது பழச்சாறு.
“ஜூஸ் குடிச்சிட்டேன். இப்போ சொல்லுங்க சார். என்ன பேசணும் உங்களுக்கு?” விவேகா கேட்க, “என்னை நீங்க அண்ணான்னு கூப்பிடுங்க சிஸ்டர். உங்க ஃப்ரெண்டோ ப்யூச்சர் ஹஸ்பண்ட் நான்!” என்றான் சின்ன புன்னகையுடன்.
“அவ இன்னும் உங்களுக்கு ஓகே சொல்லலை!” விவேகா பட்டென கூற, “சீக்கிரம் சொல்லிடுவா!” உறுதியாய் உரைத்தான் நிவின்.
“நான் ஒன்னும் கேட்கணும் சார். எதுக்காக நீங்க சுதியை டார்ச்சர் பண்றீங்க. ஏற்கனவே வேலை வேலைன்னு நொந்து போய்ருக்கா. நீங்களும் அவளைக் கஷ்டப்படுத்துறீங்களே. இதெல்லாம் உங்களுக்கே அடுக்குமா? இவளைப் பார்த்தா பாவமா இல்லையா?” என ஆதங்கமாய்க் கேட்டாள்.
“சிஸ்டர்... நான் உங்கப் ஃப்ரெண்டை என்ன டார்ச்சர் பண்ணேன். அவளை எனக்குப் பிடிச்சது. சோ, சொன்னேன். யெஸ் ஆர் நோ சொல்றது அவளோட டிசிஷன்னு அப்பவே சொல்லிட்டேன்!” என்றவன் பதிலில் விவேகா திரும்பி சுதியைப் பார்க்க, அவள் தலையை அசைத்தாள்.
“ஓ... அதான் அவ பிடிக்கலைன்னு சொல்லிட்டா இல்ல. அப்புறம் ஏன் அதையே பேசுறீங்க?”
“இல்லையே சிஸ்டர். நான் சண்டே அன்னைக்கு என்னோட ப்ரபோசலை சுதிக்கிட்டேயும் அவளோட வீட்லயும் சொன்னேன். மத்தபடி அடுத்து நானா போய் பேசலை. உங்க ஃப்ரெண்ட் தான் என்னை வந்து பார்த்தா!” என்றான்.
“சுதி... அவரைப் போய் ஏன் பார்த்த நீ?” இவள் தோழியைக் கேட்டாள்.

இரண்டு நாட்கள் அமைதியாய் கழிந்தது. நிவின் எந்தவித தொல்லையும் செய்யாது அமைதியாய் இருக்கவும் சுதிக்கு நிம்மதி பிறந்தது. அன்றைக்கு அவள் வேலை முடிந்து வீடு வர, சந்திராவின் முகம் பொலிவிழந்து காணப்பட்டது. என்னவென புரியாது உடை மாற்றி வந்தாள் இவள்.
அவர் அமைதியாய் அப்பளத்தை தேய்த்துக் கொண்டிருந்தார். சௌம்யா சூடாய் ஆப்பம் சுட்டுக் கொடுக்க, அதை தட்டில் எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்தவள், “ம்மா... என்னாச்சு. ஏன் ஒருமாதிரி இருக்கீங்க?” எனக் கேட்டவாறே ஆப்பத்தை பிட்டு தேங்காய் பாலில் தோய்த்து வாயிலிட்டாள். பசித்த வயிற்றுக்கு அமிர்தமாய் இருந்தது. சந்திராவிடம் பதிலில்லை.
“ம்மா... உங்ககிட்டேதான் கேட்குறேன். பதில் சொல்லுங்க!” இவள் அழுத்திக் கேட்க, சௌம்யாவிடமிருந்து பதில் வந்தது.
“உன்னைப் பார்த்துட்டுப் போன பையனோட ஜாதகம் உன்னோட பொருந்தலை சுதி. அவங்க வீட்லயும் ஜாதகம் பார்த்திருப்பாங்க போல. கல்யாணம் நடந்தா சண்டையும் சச்சரவுமாத்தான் இருக்கும். அதனால வேணாம்னு ரெண்டு பக்கமும் முடிவெடுத்துட்டோம்!” என அவள் கூற, சுதியின் முகத்தில் அவர்கள் அறியாது நிம்மதி பிறந்தது. ஆனாலும் சௌம்யா கண்களுக்கு அது தவறாமல் புலப்பட்டது.
“சுதிமா, நீ எதுவும் மனசுல ஆசையை வச்சுக்கலையே. வேற நல்ல பையனா பார்ப்போம் டா. ஜாதகம் ஒத்து வரலைன்னா, வாழ்க்கை நல்லா அமையாம போய்டும்!” சந்திரா இவளை வருத்தமாய்ப் பார்த்துக் கூறினார். சுதி முகத்தில் இளமுறுவல் தோன்றிற்று.
“ம்மா... நீங்களா பார்த்து இவர்தான் உனக்கு வருங்கால புருஷன்னு யாரை பிக்ஸ் பண்ணிட்டு என் முன்னாடி நிறுத்துறீங்களோ அவரை நான் ஏத்துப்பேன் மா. அவர் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. நீங்க எனக்கு கெடுதல் எதுவும் நினைக்க மாட்டீங்க. எனக்கு நல்லது எதுன்னு உங்களுக்குத் தெரியாதா?” எனப் புன்னகைத்தவளின் முகத்தை தடவினார் பெரியவர்.
“ஐ... அத்தை முகத்துல மாவு!” ருத்ரா எட்டி சுதியின் முகத்தைத் துடைத்துவிட, இவள் புன்னகைத்தாள்.
“ரொம்ப சந்தோஷமா இருக்கோ?” செவியோரம் முணுமுணுத்துவிட்டுப் போகும் சௌம்யாவை இவள் முறைத்துப் பார்த்தாள்.
“முறைப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல டி?” என பெரியவள் தனக்குள் முனங்கினாள்.
சுதி அன்றைக்கு நிம்மதியாய் தூங்கினாள். பாஸ்கரின் அன்றைய பேச்சு அவளுக்கு அத்தனை உவப்பாய் இல்லை. அவனோடு எப்படி வாழ்க்கையைப் பகிரப் போகிறோம் என மனதினோரத்தில் கவலை அரித்திருந்தது. அவனுடைய சுபாவமே அன்றைய பேச்சைப் போலத்தான் என்றால் காலத்திற்கும் அவன் தன்னை மட்டம் தட்டிப் பேசுவானே. எப்படி நிம்மதியாய் வாழ முடியுமென பயமும் கவலையும் அப்பியிருந்த மனம் இன்றைக்கு சௌம்யாவின் பதிலில் நிறைந்து போனது. அடுத்து வரும் மாப்பிள்ளையைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என ஆழ்ந்த நித்திரையில் மூழ்கிப் போனாள்.
மறுநாள் மலர்ச்சியுடன் வேலைக்கு வந்த தோழியை சந்தேகமாகப் பார்த்தாள் விவேகா. “என்ன டி... முகமெல்லாம் பளபளன்னு இருக்கு. மேரேஜ் பிக்ஸ் ஆகிடுச்சா?” எனக் கேட்டாள்.
“ப்ம்ச்... அது ஜாதகம் ஒத்து வரலைன்னு தட்டிப் போய்டுச்சு டி. எனக்கு இப்பத்தான் நிம்மதியா இருக்கும் விவே. அந்த மாப்பிள்ளையை எனக்கு சுத்தமா பிடிக்கலை டி. அம்மா சொன்னாங்கன்னுதான் ஓகே சொன்னேன். அதுவா தட்டிப் போனதுல சந்தோஷமா இருக்கேன்!” என்றாள் மலர்ந்து புன்னகைத்து.
“ஆமா... ஆமா. கொஞ்சம் வெள்ளையா இருந்தா நம்பளை மட்டம் தட்டிடுவானுங்க. உனக்குன்னு ஒருத்தன் வருவான் சுதி. அதுவரை வெயிட் பண்ணு!” என அவள் கூற, சுதியின் அலைபேசியில் குறுஞ்செய்தி வந்து விழுந்தது. நிவின்தான் அனுப்பி இருந்தான்.
“ரெண்டு நாள் நிம்மதியா இருந்தேன். இவருக்குப் பிடிக்கலை போல!” என முணுமுணுத்துவிட்டு அந்தச் செய்தியை திறந்தாள்.
“சுதிரமாலா... ஆர் யூ ஃப்ரீ இன் தி ஈவ்னிங். ஐ ஜஸ்ட் வாண்ட் டு டாக் டு யூ!” என அவன் அனுப்பிய செய்தியைப் படித்தவள், பதிலளிக்கவில்லை.
“என்னவாம் டி... என்ன அனுப்பி இருக்கான். துரை இங்கிலீஷ்லதான் மெசேஜ் பண்ணுவாரோ? எனக்கு ஒன்னும் புரியலை!” விவேகா உதட்டைக் கோணினாள்.
“சாயங்காலம் ப்ரீயா. பேசணும்னு கூப்பிட்டிருக்காரு டி. நான் ரிப்ளை பண்ணலை. அவர்கிட்டே பேசுனா, என் தொண்டைத் தண்ணித்தான் வத்திப் போகும். அமைதியா இருந்துடுறது பெட்டர்!” என்றாள் பெருமூச்சுவிட்டு.
“ப்ளாக் பண்ணிடு சுதி. அப்புறம் எப்படி மெசேஜ் பண்றான்னு பார்ப்போம்!” என விவேகா கூற,
“இல்லை டி. போன மாசம் சம்பள பாக்கி இருக்கு. எட்டாயிரம் சும்மாவா? என் உழைப்பு டி. அதை வாங்கிட்டா ப்ளாக் பண்ணிடுவேன்!”
“ஆஹா... கண்டுபிடிச்சுட்டேன் டி. இந்த லவ் நாடகம் எல்லாம் இந்த எட்டாயிரத்தை அபேஸ் பண்ணவாதான் இருக்கும். எப்படியும் வேலையைவிட்டு தொரத்துற ஐடியால இருந்திருப்பான். இப்படி பேசினா நீயே நின்னுடுவ. சம்பளமும் கொடுக்கத் தேவையில்லை. அவன் மேலயும் தப்பில்லாம போய்டும். செம்ம கில்லாடி அவன்!” விவேகா யோசனையுடன் கூற, சுதி இல்லையென தலையை அசைத்தாள்.
“இல்லை டி... அப்படியெல்லாம் கஞ்சமில்லை டி. அவர் ஒருதடவை காம்ப்ளக்ஸ்க்கு பர்சேஸ்க்கு வந்தாலே ஐயாயிரம் பத்தாயிரம் செலவு பண்ணுவாரு. அதுவும் இல்லாம ஒன்னாந் தேதியானா, கரெக்டா சம்பளம் கொடுத்துடுவாரு. அதனால இது ரீசனா இருக்க வாய்ப்பில்லை!” என்றாள்.
“ஓ...” விவேகா யோசித்தாள். மறுபடியும் அலைபேசி சப்தமெழுப்ப, எடுத்துப் பார்த்த சுதிக்கு கோபம்தான் வந்தது.
“ரிப்ளை மீ சுதி. ஆர் எல்ஸ் ஐ வில் கம் டூ யுவர் ஹோம் டூநைட்!” என்றதைப் படித்தவள், “என் வீடு ஒன்னும் உங்க மாமியார் வீடில்லை. நினைச்ச நேரம் வந்து போறதுக்கு!” எனக் கடுப்புடன் பதிலளித்தாள்.
“இன்னும் ப்யூ டேய்ஸ்ல என் மாமியார் வீடாகிடும் இல்ல?” என கண்ணடிக்கும் பொம்மையை அனுப்பியிருந்தான்.
“சரி, நீ வர வேணாம். நான் நைன் ஓ க்ளாக் அங்க வரேன்!” என அடுத்து ஒரு செய்தியை அனுப்பியிருந்தான்.
“இம்சையைக் கூட்டுறான் டி. தொல்லையைத் தூக்கி நானே என் தோள்ல போட்டுக்கிட்டேன் போல!” சுதி நொந்துகொண்டு கூறினாள்.
“என்னதான் சொல்றான் அவன்? என்ன வேணுமா அவனுக்கு. கருமத்தை தமிழ்ல வேற அனுப்ப மாட்டான்!” என்றவள் என்னவெனப் படித்து புரியாது விழித்தாள்.
“நான் வரலைன்னா அவன் வீட்டுக்கு வருவானாம். இப்போதான் வீடு கொஞ்சம் நிம்மதியா இருக்கு. மறுபடியும் வந்து ஏழரையைக் கூட்டுவான். அண்ணி என்னமோ எல்லாம் என் சம்மதத்தோட நடக்குற மாதிரி பார்ப்பாங்க!” என்றாள் எரிச்சலாய்.
“சரி, வர்றேன்னு பதிலனுப்பு டி. நம்ப ரெண்டு பேரும் போறோம். நான் நாலு கொடுக்குற குடுப்புல உன் பக்கமே அவன் திரும்பக் கூடாது. அவ்வளோ என்ன கொழுப்பு அந்த வெள்ளை உழுவைக்கு!” விவேகா கடுகடுத்தாள்.
“பிரச்சனை வேணாம் விவே!”
“அப்போ அவன் நைட் டைம்ல உங்க வீட்டுக்கு வர்றது உனக்கு ஓகே வா. ஒரு தடவை போய் மூஞ்சில அடிச்ச மாதிரி பேசிட்டு வந்தாதான் சரிபடுவான் டி. நீ ஒதுங்கிப் போனா ஏறி மிதிக்கத்தான் பார்ப்பானுங்க. வர்றேன்னு சொல்லு. ரெண்டு பேரு இருக்கோம். எதுவும் பண்ண மாட்டான்!” என்றாள் அழுத்தமாய். சுதிக்கு செல்ல வேண்டுமா என மீண்டுமொரு யோசனை. பிரச்சனை எதற்கு என யோசித்தாள். இருந்தும் வீட்டிற்கு அவன் வந்துவிட்டால் என எண்ணம் தோன்ற, “சரி வர்றேன் சார்...” என அனுப்பினாள்.
“தட்ஸ் குட் கேர்ள். நைட் டைம், சோ டோன்ட் கம் அலோன். உன் ஃப்ரெண்ட் விவேகாவைக் கூட்டீட்டு வா சுதி!” என்றவன் பதிலில் சுதிக்கு ஆச்சர்யம்.
“தனியா வர வேணாம். உன் ஃப்ரெண்ட் விவேகாவை கூட்டீட்டுவான்னு சொல்றார் டி. உன் பேரை தெரிஞ்சு வச்சிருக்காரு பாரேன்!” என சுதி அதிசயித்துக் கூற,
“ஏன்... என் பேரை தெரிஞ்சு வச்சிருக்கக் கூடாதா என்ன?” என இவள் முகத்தைக் கோணினாள்.
“ச்சு... அப்படி சொல்லலை டி. உன் பேரை தெரிஞ்சுக்கிற அளவுக்கு நோட் பண்ணி இருக்காரேன்னு சொல்றேன்!”
“ஓ... அப்படி சொல்றீயா. இருக்கும், இருக்கும். நல்லவன் மாதிரி பேசுறான் பார்த்தீயா. சும்மா இருக்கவனைக் கூட நம்பிடலாம். நல்லவன் வேஷம் போட்றவனை நம்பக் கூடாது டி. நேர்ல போறோமில்ல. அவனைப் பார்த்துக்கிறேன்!” என இவள் சூளுரைக்க, சுதி சற்றே பயத்துடன் தோழியை நோக்கினாள்.
“பிரச்சனை எதுவும் வேணாம் டி. அமைதியா பேசிட்டு வரலாம். அவருக்கு ஒன்னும் இல்ல. எது நடந்தாலும் நம்மளைத்தான் குத்தம் சொல்லும் இந்த உலகம். நம்ப சேஃப்டி முக்கியம்!” என்க, விவேகா சும்மாவேனும் தலையசைத்துவிட்டு நகர, இவள் பெருமூச்சை வெளிவிட்டாள்.
இரவு வேலை முடிந்ததும் சௌம்யாவிற்கு குறுஞ்செய்தி ஒன்றைத் தட்டிவிட்டாள் சுதி. வணிகவளாகத்தில் ஆட்கள் என்றைக்காவது நிறைய இருந்தால் தாமதமாய் கிளம்புவாள். அதனால் அதைப் போல பொய்யை உரைத்தாள். மனம் கொஞ்சம் உறுத்தியது. நிவின் மீதுதான் கோபம் வந்தது.
ஐந்து நிமிடங்கள் வீட்டிற்கு அழைத்துப் பேசிவிட்டு வந்த விவேகா, “எங்கம்மா ஒரு பத்து நிமிஷம் லேட்டானாலே என்ன, ஏன், எதுக்குன்னு என்னைப் போட்டு படுத்திடும். இப்போ கொஞ்சம் லேட்டாகும்னு சொன்னதும்... ஷப்பா!” என அலுத்தவள், “ஆனால் பாரேன்... மலைமாடு மாதிரி ஒருத்தன் இருக்கான். எந்த நேரத்துக்கு வர்றான் போறான்னு தெரியாது. அவனைக் கேள்வி கேக்காது. நான்தானே இளிச்சவாய்!” என அவள் புலம்ப, இருவரும் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பிற்குள் நுழைந்தனர்.
விவேகா அனைத்தையும் ஆர்வமாய் சுற்றிப் பார்த்தாள்.
‘வாழ்றானுங்க!’ என அவள் மனம் பொறாமை கொண்டது. இருவரும் சென்று நிற்க, அழைப்புமணி அழுத்தும் முன்னே நிவின் கதவைத் திறந்துவிட்டான்.
“வாங்க சிஸ்டர்... உள்ள வாங்க!” விவேகாவை இன்முகமாக வரவேற்றவன், “கெட் இன் சுதி..” என்றுவிட்டு உள்ளே நுழைந்தான். விவேகா அந்த வீட்டைப் பிரம்மிப்பாய் பார்த்தாள். அவர்கள் வீட்டை நான்கு மடங்காக்கினால் கூட இந்தளவிற்கு வராது என அவள் மனம் கடகடவென கணக்கிட்டது.
“உக்காருங்க சிஸ்டர்...” என அவன் இரண்டு முறை உரைத்ததும் பிகு செய்யாமல் விவேகா அமர்ந்துவிட, சுதி மட்டும் அமரவில்லை. அமைதியாய் அவனை மட்டும் அளவெடுத்தாள்.
“சுதி... நீயும் உக்காரு. ரெண்டு பேரும் டயர்டா இருக்கீங்க. ஐ வில் கெட் யூ ஜூஸ்!” என்றவன் ஏற்கனவே தயாரித்திருந்த பழச்சாற்றை உணவு மேஜை மீதிருந்து எடுத்து இருவருக்கும் பரிமாறினான்.
சுதி அசையாது நிற்க, “சுதிரமாலா... சிட். நின்னுட்டே இருக்கேன்னு காட் கிட்டே வேண்டி இருக்கீயா என்ன? கம் அண்ட் சிட். யூ லுக் வெரி டயர்ட்!” என்றான் அக்கறையாய். அவனை சில நொடிகள் வெறித்தவள், மெதுவாய் வந்து அமர்ந்தாள். காலையிலிருந்து நின்று கொண்டே இருந்ததில் கால் வலி உயிர் போனது. அதோடு மாதவிடாய் காலமும் சேர்ந்து முதுகோடு வலிக்க, அயர்ந்து போனாள். வீட்டிற்கு சென்றதும் அப்படியே படுத்துவிட வேண்டுமென பல்லைக் கடித்து வேலை பார்த்தாள். வீட்டிற்கு செல்லாமல் இங்கு வந்ததும் கொஞ்சம் கடுப்பாய் இருந்தது. ஓய்வுக்காக வேண்டும் உடலை அவளே அழைக்கழித்தாள். கண்ணெல்லாம் சொக்கியது.
தளர்வாய் அமர்ந்ததும் அந்த பஞ்சு நீள்விருக்கை அவளை உள்வாங்கிக் கொண்டது. அப்படியே இங்கேயே படுத்து உறங்கிவிடலாம் என்ற எண்ணம் தோன்றியதும் பெருமூச்சை வெளிவிட்டாள். அவளது முகத்தையே நிவின் பார்த்திருந்தான். அவனுக்கும் அவள் நிலை புரந்திருக்க வேண்டும்.
“சிஸ்டர்... ஏன் ஜூஸ் குடிக்கலை நீங்க. எடுத்துக்கோங்க!” என்றான். விவேகா முதல்நிலை பிர்மமிப்பிலிருந்து மீண்டிருந்தாள்.
“வேண்டாம் சார். நீங்க விஷயத்தை மட்டும் சொல்லுங்க. இன்னைக்கு என்னென்னுப் பேசி முடிச்சிடலாம். என் ஃப்ரெண்ட் உங்க மேல செம்ம காண்டுல இருக்கா!” விவேகா குரலை உயர்த்தினாள்.
“சிஸ்டர்... உங்க கோபம் எனக்குப் புரியுது. எல்லாத்தையும் பேசிக்கலாம். இப்போ இந்த ஜூஸைக் குடிச்சிட்டு என்ன வேணாலும் பேசுங்க. நான் பதில் சொல்றேன்!” அவன் அக்கறையாகக் கூறவும், விவேகாவால் அவனிடம் கோபமாய் பேச முடியவில்லை. பழச்சாற்றை கையிலெடுத்து வாயருகே கொண்டு சென்றவள் படக்கென அவனை சந்தேகமாகப் பார்த்தாள்.
எதற்கெனப் புரிந்தவனும் மெலிதாய் சிரித்துவிட்டு ஒரு காலி குவளையை எடுத்து வந்து தானும் பழச்சாற்றை அருந்தினான். “பயப்படாம குடிங்க சிஸ்டர். எதுவும் மிக்ஸ் பண்ணலை நான். இட்ஸ் ப்ரெஷ் ஜூஸ். இப்போதான் ப்ரிபேர் பண்ணேன்!” என அவன் கூற, சுதி கண்களை மட்டும் மூடி தோழயின் தோளில் சாய்ந்திருந்தாள். விவேகா கடகடவென பழச்சாற்றை அருந்தி முடித்தாள். சுவையாய் இருந்ததும் நாக்கில் தித்திப்பாய் இறங்கியது பழச்சாறு.
“ஜூஸ் குடிச்சிட்டேன். இப்போ சொல்லுங்க சார். என்ன பேசணும் உங்களுக்கு?” விவேகா கேட்க, “என்னை நீங்க அண்ணான்னு கூப்பிடுங்க சிஸ்டர். உங்க ஃப்ரெண்டோ ப்யூச்சர் ஹஸ்பண்ட் நான்!” என்றான் சின்ன புன்னகையுடன்.
“அவ இன்னும் உங்களுக்கு ஓகே சொல்லலை!” விவேகா பட்டென கூற, “சீக்கிரம் சொல்லிடுவா!” உறுதியாய் உரைத்தான் நிவின்.
“நான் ஒன்னும் கேட்கணும் சார். எதுக்காக நீங்க சுதியை டார்ச்சர் பண்றீங்க. ஏற்கனவே வேலை வேலைன்னு நொந்து போய்ருக்கா. நீங்களும் அவளைக் கஷ்டப்படுத்துறீங்களே. இதெல்லாம் உங்களுக்கே அடுக்குமா? இவளைப் பார்த்தா பாவமா இல்லையா?” என ஆதங்கமாய்க் கேட்டாள்.
“சிஸ்டர்... நான் உங்கப் ஃப்ரெண்டை என்ன டார்ச்சர் பண்ணேன். அவளை எனக்குப் பிடிச்சது. சோ, சொன்னேன். யெஸ் ஆர் நோ சொல்றது அவளோட டிசிஷன்னு அப்பவே சொல்லிட்டேன்!” என்றவன் பதிலில் விவேகா திரும்பி சுதியைப் பார்க்க, அவள் தலையை அசைத்தாள்.
“ஓ... அதான் அவ பிடிக்கலைன்னு சொல்லிட்டா இல்ல. அப்புறம் ஏன் அதையே பேசுறீங்க?”
“இல்லையே சிஸ்டர். நான் சண்டே அன்னைக்கு என்னோட ப்ரபோசலை சுதிக்கிட்டேயும் அவளோட வீட்லயும் சொன்னேன். மத்தபடி அடுத்து நானா போய் பேசலை. உங்க ஃப்ரெண்ட் தான் என்னை வந்து பார்த்தா!” என்றான்.
“சுதி... அவரைப் போய் ஏன் பார்த்த நீ?” இவள் தோழியைக் கேட்டாள்.