- Messages
- 1,030
- Reaction score
- 2,923
- Points
- 113
பொழுது – 13 
சுதி அப்போதுதான் உண்டுவிட்டு அசத்திய உடலை படுக்கையில் சாய்த்தாள். கால்கள் மரத்துப் போயிருந்தன. மெதுவாய் கையை நீட்டி தானே அழுத்திவிட்டுக் கொண்டாள். கொஞ்சம் சுகமாய் இருக்க, ஒருபக்கமாய் சரிந்து படுத்தாள். இடுப்பும் வலித்தது. ஓய்வின்றி ஓடுகிறோம் என்று தெரிந்தாலும் எங்கேயும் இளைப்பாற இடம் கிடைக்கவில்லை என மூளைக் கூற, அடுத்த ஞாயிற்றுக்கிழமை எப்போதடா வருமென மனம் ஏங்கிற்று. மனதை திசை திருப்ப எண்ணியவள் அலைபேசியைக் கையிலெடுத்தாள். புலனத்திற்குள்ளே நுழைந்தவளுக்கு விவேகா ஏதோ காணொளியைப் பகிர்ந்திருந்தாள். அதைத் தொட்டு இவள் பார்க்க, குழந்தை சேட்டை செய்யும் காணொளி அது. மனம் இலகுவாக அப்படியே ஒவ்வொன்றாய் தள்ளி கேலிக்கை காணொளியில் மனதை திசை திருப்பினாள். நாளைக்கு என்ன சமைக்க வேண்டும் என நிவின் செய்தி அனுப்பியிருக்க, அது திரையில் வந்து விழுந்தது. தொட்டு உள்ளே சென்றவள், “ஓகே சார்!” என அனுப்பிவிட்டு சில நொடிகள் யோசித்தாள். அவனுக்குப் பிறந்தநாள் எனத் தெரிந்தும் சுதி வாழ்த்தவில்லை.
தற்போதைக்கு குடும்பத்தில் பணப் பிரச்சனை வெகுவாய் குறைந்ததற்கு அவனும் ஒரு காரணம் என மனம் அவன் மீதான நல்ல எண்ணத்தை முன்னடுக்க, சரியென்று, “ஹேப்பி பெர்த் டே நிவின் சார். ஸ்டே ஹெல்தி அண்ட் வெல்தி ஆல்வேய்ஸ்!” என இவள் அனுப்பினாள். அவன் எப்படியிருந்தாலும் சுதி உண்மையாய்தான் வாழ்த்தைப் பகிர்ந்தாள். அதைப் பார்த்துவிட்டான் என்பது புரிய, இரண்டு நிமிடங்கள் புலனத்தில் உலாவினாள். நிவின் பதிலளிக்கவில்லை எனத் தெரிய, இணையத்தை துண்டித்துவிட்டு போர்வையைப் போர்த்தி தூங்க முயற்சித்தாள்.
‘மெசேஜ் பார்த்தும் அவன் பதிலலிக்கவில்லை. வாழ்த்தை தெரிவிக்காமலே இருந்திருக்கலாம்!’ என அவன் செய்கை முகத்தில் அறைய, தன்னையே நிந்தித்துக்கொண்டு உறங்கிப் போனாள்.
மறுநாள் சுதி நிவின் வீட்டிற்குச் செல்ல, வீடே அலங்கோலமாக இருந்தது. அப்போதுதான் எழுந்த மகேந்திரா தன்னால் இயன்றவரை சுத்தம் செய்து கொண்டிருந்தார். நிவின் பூட்டிய அறை அவன் எழுந்திருக்கவில்லை எனக் கூறியது.
“வாம்மா சுதி...” என அவர் கூற, இவள் புன்னகைத்தாள்.
“சார், நான் க்ளீன் பண்ணிக்கிறேன். நீங்க ஸ்ட்ரெய்ன் பண்ணாதீங்க!” என அவர் கையிலிருந்த துடைப்பத்தை வாங்கினாள் இவள்.
“நேத்து இந்தப் பசங்தான் லேட் நைட் வரை அரட்டை அடிச்சிட்டு அப்படியே போட்டுட்டு கிளம்பிட்டாங்க மா!” அவர் சங்கடமாய்ப் புன்னகைத்தார்.
“பரவாயில்லை சார், இதுதானே என் வேலை. நான் பார்த்துக்கிறேன். நீங்க உட்காருங்க சார்!” என்றவள் மொத்த வீட்டையும் ஒருமுறை சுத்தம் செய்து குப்பையெல்லாம் குப்பைக் கூடையிலிட்ட போது அது நிரம்பி வழிந்தது. குனிந்து மேஜைக்கு அடியில் குப்பையையும், அணிச்சலையும் சாப்பிட்டுவிட்டு ஆங்காங்கே சிந்தி சிதறி வைத்திருந்தார்கள். எப்படியும் இதைத் தண்ணீர் வைத்து துடைத்தால்தான் சரிவரும் எனத் தோன்ற, மெலிதாய் சலிப்பு வந்தது. சென்ற வாரம்தான் முழு வீட்டையும் பளபளவென துடைத்திருந்தாள். இப்போது பார்க்கவே கறையும் அழுக்குமாய் இருக்க, இதை அழுத்தித் துடைத்தால் கையும் முதுகும் விண்டுவிடும் என்பது உறுதி. பெருமூச்சோடு வாளியில் நீரை நிரப்பி சலவை திரவத்தை ஊற்றினாள்.
“நான் கீழே போய் குப்பையைக் கொட்டீட்டு வரேன் மா!” என மகேந்திரா குப்பைக் கூடையோடு அகல, இவள் வீட்டைத் துடைக்கத் தொடங்கினாள். முதலில் கூட்டத்தைத் துடைத்து மின்விசிறியை சுழலவிட்டாள். பின்னர் சமையலறை படுக்கை அறை என துடைத்தாள். மீண்டும் சுத்தமான நீரை வாளியில் பிடித்து வீட்டை துடைத்தப் பின் நிமிரவே முடியவில்லை. முதுகோடு சேர்த்து ஒரு பக்க காலும் வலி உயிர் போனது. நகர மாட்டேன் என்ற கால்களை மெதுவாய் நகர்த்திக் கொண்டு சமையலறைக்குச் சென்றாள். இரவு ஏதோ சமைக்கிறேன் என்ற பேர்வழியில் மொத்த சமையலறையும் பாழாக்கி வைத்திருந்தார்கள். அதைப் பார்த்ததும் தலைச் சுற்றியது சுதிக்கு. நேரமானதை உணர்ந்து விறுவிறுவென அனைத்தையும் சுத்தம் செய்து பாத்திரத்தை துலக்கிவிட்டு சமையலைத் தொடங்கினாள்.
“ஒரு காஃபி போட்டு தர்றீயா சுதாமா?” என மகேந்திரா உள்ளே நுழைய, “ஐஞ்சு நிமிஷத்துல போட்றேன் சார்!” என்றாள்.
“அவனுக்கும் சேர்த்துப் போடு மா. எழுந்துட்டான் போல!” என்றவர் மகனது அறைக்குள் அடைய, இவள் குளம்பியை எடுத்துக்கொண்டு நிவின் அறை வாயிலிலே நின்றுவிட்டாள். உள்ளே செல்லும் எண்ணம் நிச்சயமாக இல்லை அவளுக்கு. ஏற்கனவே இரண்டு முறை நிவின் கேட்டான் என அவனுக்கு குளம்பி எடுத்து வந்திருக்கிறாள். இவளை அவன் உள்ளே அழைக்கவில்லை.
“சைட் டேபிள்ல வச்சிடுங்க!” என்று இருமுறையும் அவன் கூறிவிட, இவளும் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. அவனுடைய அறை, நிறைய தனிப்பட்ட விஷயங்கள் இருக்கலாம். யாரை உள்ள விட என்று அவன்தானே முடிவு செய்ய வேண்டும் நியாயமாய் யோசித்திருந்தாள்.
“சார் காஃபி!” இவள் மெலிதாய்க் குரல் கொடுக்க, “உள்ள வாம்மா சுதா...” என்றார் பெரியவர்.
“இல்ல சார். டேபிள் மேல வைக்கிறேன்!” என அவள் குரல் நிவினுக்கும் கேட்டது.
“நானே வர்றேன் மா...” என மகேந்திரா ஒரு குவளையை எடுத்துக் கொள்ள, நிவினும் குளம்பியை அருந்தினான்.
“உன்னைப் பார்க்க வச்சு ரெண்டு பேரும் காஃபி குடிக்கிறோம். நீ ஜூஸ் எதுவும் பிரிட்ஜ்ல இருந்தா எடுத்துக் குடிம்மா...” பெரியவர் அக்கறையாய்க் கூற, அவரைப் பார்த்து புன்னகைத்தவள், “இல்ல சார்... எனக்கு கூலிங் ஒத்துக்காது!” என அவர் மனம் நோகாது மறுத்துவிட்டாள் சுதி. அவர் மேலும் அவளை வற்புறுத்தவில்லை.
சுதி சமையலை முடித்துவிட்டு நேரத்தைப் பார்த்தாள். கடகடவென அது ஓடியிருந்தது. தேநீர் இடைவேளையின் போது உணவு உண்டு கொள்ளலாம் எனக் கிளம்பினாள். பாலு மகேந்திரா அவளருகே வந்தார்.
“இன்னைக்கு சாயங்காலம் நான் கிளம்புறேன் மா!” அவர் கூற, “ஓ... ஓகே சார். பார்த்து பத்திரமா போய்ட்டு வாங்க!” என்றாள்.
“நான் பத்திரமா போய்டுவேன் மா. நீயும் உடம்பை பார்த்துக்கோ. என் மகனையும் பார்த்துக்கோ மா. தனியா இருக்கான்னு அவனைப் பத்திதான் கவலை. இத்தனை வருஷம் அவ அம்மா பார்த்துக்கிட்டா. அப்புறம் அவ போனப் பிறகு எல்லாமே அவனேதான் பண்ணிப்பான். இந்த ஆக்ஸிடென்ட் மட்டும் ஆகலைன்னா, வீட்டு வேலைக்கு எல்லாம் சோம்பேறிதனப் பட்ற ஆள் இல்லைமா அவன்!” என அவர் பேச, இவளது விழிகள் கடிகாரத்தை தொட்டு மீண்டன. சட்டென பேச்சைக் கத்தரிக்க முடியாது நின்றிருந்தாள் சுதிரமாலா.
“அவன் எதுவும் சுள்ளுன்னு பேசிட்டா மனசுல வச்சுக்காதம்மா. நானும் கண்டிச்சிருக்கேன்!” என்றவர் இருநூறு ரூபாய்த் தாளை அவளிடம் நீட்டினார்.
“இதை செலவுக்கு வச்சுக்கோம்மா!” என அவர் கூற, சுதியின் முகம் ஒரு நொடி மாறினாலும் அதை சமாளித்திருந்தாள்.
“வேணாம் சார்... அதான் பார்க்குற வேலைக்கு நிவின் சார் சம்பளம் தர்றாரு இல்லை. அதுவே போதும் சார். நீங்களும் உங்க உடம்பைப் பார்த்துக்கோங்க சார்!” என்றவள் அவர் மேலும் பேசும்முன், “எனக்கு டைமாச்சு, லேட்டா போனா ஓனர் திட்டுவாரு. நான் கிளம்புறேன் சார்...” என வலுக்கட்டாயமாகப் புன்னகைத்து விடை பெற்றாள். பெரியவருக்கு ஆச்சரியம்தான். அவர் பார்த்தவரை தண்ணீர் கூட சுதி இங்கே அருந்தவில்லை. அவராக காசுக் கொடுத்தும் அதை நாசுக்காய் மறுத்துவிட்டவளை நினைத்து கொஞ்சம் ஆச்சர்யம்தான். நேர்மையான பெண் என எண்ணிக் கொண்டார். நிவினும் நடந்த அனைத்தையும் கவனித்தான்.
அன்றைக்கு மாலை பாலு மகேந்திரா விடை பெற, நிவின் அவரை பேருந்து நிலையம் வரை சென்று விட்டுவிட்டு வந்தான். மறுநாளிலிருந்து சுதிக்கு நாட்கள் எப்போதும் போல நகர்ந்தன. பெரிதாய் எந்த மாற்றமும் இன்றி வேலை, வணிகளவாளம், வீடு என நேரம் சென்றது. இடையில் சௌம்யா அரசுத் தேர்வை நன்முறையில் எழுதி முடித்திருந்தாள். வேலை கிடைத்துவிடும் என தேர்வு அறையிலிருந்து வெளிவரும் போதே அவளுக்குத் தெரிந்தாலும் கொஞ்சம் பயம்தான். முடிவுகள் வெளிவரட்டும் என அனைவரிடமும் ஏதோ எழுதியிருக்கிறேன் என்று மட்டும் உரைத்திருந்தாள்.
சுதி நிவின் வீட்டிற்கு வேலைக்குச் சேர்ந்து நான்கு மாதங்கள் முடிந்திருந்தன. நிவின் கையிலிருக்கும் கட்டை ஒரு மாதத்தில் பிரித்துவிடலாம் என மருத்துவர் உரைத்திருக்க, அவன் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தான். சுதிக்கும் அந்த விடயம் பாலு மகேந்திரா மூலம் தெரிந்திருக்க, ஒரு மாதம் மட்டும்தான் இங்கே வேலை பார்க்க முடியும் எனப் புரிந்தது. இந்த சில மாதங்களாக பணக் கஷ்டம் கொஞ்ம் குறைந்திருந்ததை அவளும் உணர்ந்தாள். இப்போது இந்த வேலையை விட்டுவிட்டால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டி வருமே என மனமும் மூளையும் அதையே சுற்றி வந்தன.
இங்கே இந்த அடுக்குமாடிக் குடியிருப்பிலே வேறு எதாவது வீட்டில் இதே போல ஒருவருக்கு சமைத்துக் கொடுக்கும் வேலைக் கிடைத்தால் நன்றாக இருக்குமெனத் தோன்ற, நிவின் வேலையை விட்டு நிற்க சொன்னால், வேறு ஒன்றைத் தேடிக் கொள்ளலாம் என முடிவெடுத்தாள். எந்த வீடென்றாலும் காசு கொடுக்கப் போகிறார்கள், வேலை செய்யப் போகிறோம் என மூளை கூற, இருந்தும் அவளுக்குப் பயம்தான். நிவின் வீட்டில் வேலைக்கு வரும்போதே இடுப்பில் எப்போதும் சிறிய கத்தியை மறைத்து வைத்திருப்பாள். ஆரம்பத்தில் ஐம்புலன்களும் எப்போதும் விழிப்புடன் இருப்பன. ஆனால் இப்போதெல்லாம் அதற்கு அவசியம் இல்லை என்பது போல வெகு சாதாரணமாக வேலை செய்தாள். காரணம் நிவின்தான்.
அவன் முகத்தில் அடித்தது போல பேசினாலும், அவளை சக மனுஷியாக மதிக்கவில்லை என்றாலும் கூட அவன் மீது சுதிக்கு மரியாதை உண்டு. இதுவரை அவளை ஒரு நொடி கூடத் தவறாய் அவன் கண்டதில்லை. தன்னுடைய முகத்தை கூட அவன் சரியாய்க் பார்த்திருக்க மாட்டான் என நினைத்த நாட்களும் உண்டு. உண்மையிலே அவன் ஒழுக்கமானவனாக இருக்க வேண்டும்; இல்லையென்றால் வேலைக்காரி தானே என இளக்காரமாகக் கூட எண்ணி இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அவளுக்கு கவலையில்லை. இந்த வேலை போல பாதுகாப்பான மற்றொரு வேலையைத் தேடிக் கொள்ள வேண்டும் என்றொரு எண்ணம் படர்ந்தது.
(தொடர்ந்து கீழே படிக்கவும்)

சுதி அப்போதுதான் உண்டுவிட்டு அசத்திய உடலை படுக்கையில் சாய்த்தாள். கால்கள் மரத்துப் போயிருந்தன. மெதுவாய் கையை நீட்டி தானே அழுத்திவிட்டுக் கொண்டாள். கொஞ்சம் சுகமாய் இருக்க, ஒருபக்கமாய் சரிந்து படுத்தாள். இடுப்பும் வலித்தது. ஓய்வின்றி ஓடுகிறோம் என்று தெரிந்தாலும் எங்கேயும் இளைப்பாற இடம் கிடைக்கவில்லை என மூளைக் கூற, அடுத்த ஞாயிற்றுக்கிழமை எப்போதடா வருமென மனம் ஏங்கிற்று. மனதை திசை திருப்ப எண்ணியவள் அலைபேசியைக் கையிலெடுத்தாள். புலனத்திற்குள்ளே நுழைந்தவளுக்கு விவேகா ஏதோ காணொளியைப் பகிர்ந்திருந்தாள். அதைத் தொட்டு இவள் பார்க்க, குழந்தை சேட்டை செய்யும் காணொளி அது. மனம் இலகுவாக அப்படியே ஒவ்வொன்றாய் தள்ளி கேலிக்கை காணொளியில் மனதை திசை திருப்பினாள். நாளைக்கு என்ன சமைக்க வேண்டும் என நிவின் செய்தி அனுப்பியிருக்க, அது திரையில் வந்து விழுந்தது. தொட்டு உள்ளே சென்றவள், “ஓகே சார்!” என அனுப்பிவிட்டு சில நொடிகள் யோசித்தாள். அவனுக்குப் பிறந்தநாள் எனத் தெரிந்தும் சுதி வாழ்த்தவில்லை.
தற்போதைக்கு குடும்பத்தில் பணப் பிரச்சனை வெகுவாய் குறைந்ததற்கு அவனும் ஒரு காரணம் என மனம் அவன் மீதான நல்ல எண்ணத்தை முன்னடுக்க, சரியென்று, “ஹேப்பி பெர்த் டே நிவின் சார். ஸ்டே ஹெல்தி அண்ட் வெல்தி ஆல்வேய்ஸ்!” என இவள் அனுப்பினாள். அவன் எப்படியிருந்தாலும் சுதி உண்மையாய்தான் வாழ்த்தைப் பகிர்ந்தாள். அதைப் பார்த்துவிட்டான் என்பது புரிய, இரண்டு நிமிடங்கள் புலனத்தில் உலாவினாள். நிவின் பதிலளிக்கவில்லை எனத் தெரிய, இணையத்தை துண்டித்துவிட்டு போர்வையைப் போர்த்தி தூங்க முயற்சித்தாள்.
‘மெசேஜ் பார்த்தும் அவன் பதிலலிக்கவில்லை. வாழ்த்தை தெரிவிக்காமலே இருந்திருக்கலாம்!’ என அவன் செய்கை முகத்தில் அறைய, தன்னையே நிந்தித்துக்கொண்டு உறங்கிப் போனாள்.
மறுநாள் சுதி நிவின் வீட்டிற்குச் செல்ல, வீடே அலங்கோலமாக இருந்தது. அப்போதுதான் எழுந்த மகேந்திரா தன்னால் இயன்றவரை சுத்தம் செய்து கொண்டிருந்தார். நிவின் பூட்டிய அறை அவன் எழுந்திருக்கவில்லை எனக் கூறியது.
“வாம்மா சுதி...” என அவர் கூற, இவள் புன்னகைத்தாள்.
“சார், நான் க்ளீன் பண்ணிக்கிறேன். நீங்க ஸ்ட்ரெய்ன் பண்ணாதீங்க!” என அவர் கையிலிருந்த துடைப்பத்தை வாங்கினாள் இவள்.
“நேத்து இந்தப் பசங்தான் லேட் நைட் வரை அரட்டை அடிச்சிட்டு அப்படியே போட்டுட்டு கிளம்பிட்டாங்க மா!” அவர் சங்கடமாய்ப் புன்னகைத்தார்.
“பரவாயில்லை சார், இதுதானே என் வேலை. நான் பார்த்துக்கிறேன். நீங்க உட்காருங்க சார்!” என்றவள் மொத்த வீட்டையும் ஒருமுறை சுத்தம் செய்து குப்பையெல்லாம் குப்பைக் கூடையிலிட்ட போது அது நிரம்பி வழிந்தது. குனிந்து மேஜைக்கு அடியில் குப்பையையும், அணிச்சலையும் சாப்பிட்டுவிட்டு ஆங்காங்கே சிந்தி சிதறி வைத்திருந்தார்கள். எப்படியும் இதைத் தண்ணீர் வைத்து துடைத்தால்தான் சரிவரும் எனத் தோன்ற, மெலிதாய் சலிப்பு வந்தது. சென்ற வாரம்தான் முழு வீட்டையும் பளபளவென துடைத்திருந்தாள். இப்போது பார்க்கவே கறையும் அழுக்குமாய் இருக்க, இதை அழுத்தித் துடைத்தால் கையும் முதுகும் விண்டுவிடும் என்பது உறுதி. பெருமூச்சோடு வாளியில் நீரை நிரப்பி சலவை திரவத்தை ஊற்றினாள்.
“நான் கீழே போய் குப்பையைக் கொட்டீட்டு வரேன் மா!” என மகேந்திரா குப்பைக் கூடையோடு அகல, இவள் வீட்டைத் துடைக்கத் தொடங்கினாள். முதலில் கூட்டத்தைத் துடைத்து மின்விசிறியை சுழலவிட்டாள். பின்னர் சமையலறை படுக்கை அறை என துடைத்தாள். மீண்டும் சுத்தமான நீரை வாளியில் பிடித்து வீட்டை துடைத்தப் பின் நிமிரவே முடியவில்லை. முதுகோடு சேர்த்து ஒரு பக்க காலும் வலி உயிர் போனது. நகர மாட்டேன் என்ற கால்களை மெதுவாய் நகர்த்திக் கொண்டு சமையலறைக்குச் சென்றாள். இரவு ஏதோ சமைக்கிறேன் என்ற பேர்வழியில் மொத்த சமையலறையும் பாழாக்கி வைத்திருந்தார்கள். அதைப் பார்த்ததும் தலைச் சுற்றியது சுதிக்கு. நேரமானதை உணர்ந்து விறுவிறுவென அனைத்தையும் சுத்தம் செய்து பாத்திரத்தை துலக்கிவிட்டு சமையலைத் தொடங்கினாள்.
“ஒரு காஃபி போட்டு தர்றீயா சுதாமா?” என மகேந்திரா உள்ளே நுழைய, “ஐஞ்சு நிமிஷத்துல போட்றேன் சார்!” என்றாள்.
“அவனுக்கும் சேர்த்துப் போடு மா. எழுந்துட்டான் போல!” என்றவர் மகனது அறைக்குள் அடைய, இவள் குளம்பியை எடுத்துக்கொண்டு நிவின் அறை வாயிலிலே நின்றுவிட்டாள். உள்ளே செல்லும் எண்ணம் நிச்சயமாக இல்லை அவளுக்கு. ஏற்கனவே இரண்டு முறை நிவின் கேட்டான் என அவனுக்கு குளம்பி எடுத்து வந்திருக்கிறாள். இவளை அவன் உள்ளே அழைக்கவில்லை.
“சைட் டேபிள்ல வச்சிடுங்க!” என்று இருமுறையும் அவன் கூறிவிட, இவளும் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. அவனுடைய அறை, நிறைய தனிப்பட்ட விஷயங்கள் இருக்கலாம். யாரை உள்ள விட என்று அவன்தானே முடிவு செய்ய வேண்டும் நியாயமாய் யோசித்திருந்தாள்.
“சார் காஃபி!” இவள் மெலிதாய்க் குரல் கொடுக்க, “உள்ள வாம்மா சுதா...” என்றார் பெரியவர்.
“இல்ல சார். டேபிள் மேல வைக்கிறேன்!” என அவள் குரல் நிவினுக்கும் கேட்டது.
“நானே வர்றேன் மா...” என மகேந்திரா ஒரு குவளையை எடுத்துக் கொள்ள, நிவினும் குளம்பியை அருந்தினான்.
“உன்னைப் பார்க்க வச்சு ரெண்டு பேரும் காஃபி குடிக்கிறோம். நீ ஜூஸ் எதுவும் பிரிட்ஜ்ல இருந்தா எடுத்துக் குடிம்மா...” பெரியவர் அக்கறையாய்க் கூற, அவரைப் பார்த்து புன்னகைத்தவள், “இல்ல சார்... எனக்கு கூலிங் ஒத்துக்காது!” என அவர் மனம் நோகாது மறுத்துவிட்டாள் சுதி. அவர் மேலும் அவளை வற்புறுத்தவில்லை.
சுதி சமையலை முடித்துவிட்டு நேரத்தைப் பார்த்தாள். கடகடவென அது ஓடியிருந்தது. தேநீர் இடைவேளையின் போது உணவு உண்டு கொள்ளலாம் எனக் கிளம்பினாள். பாலு மகேந்திரா அவளருகே வந்தார்.
“இன்னைக்கு சாயங்காலம் நான் கிளம்புறேன் மா!” அவர் கூற, “ஓ... ஓகே சார். பார்த்து பத்திரமா போய்ட்டு வாங்க!” என்றாள்.
“நான் பத்திரமா போய்டுவேன் மா. நீயும் உடம்பை பார்த்துக்கோ. என் மகனையும் பார்த்துக்கோ மா. தனியா இருக்கான்னு அவனைப் பத்திதான் கவலை. இத்தனை வருஷம் அவ அம்மா பார்த்துக்கிட்டா. அப்புறம் அவ போனப் பிறகு எல்லாமே அவனேதான் பண்ணிப்பான். இந்த ஆக்ஸிடென்ட் மட்டும் ஆகலைன்னா, வீட்டு வேலைக்கு எல்லாம் சோம்பேறிதனப் பட்ற ஆள் இல்லைமா அவன்!” என அவர் பேச, இவளது விழிகள் கடிகாரத்தை தொட்டு மீண்டன. சட்டென பேச்சைக் கத்தரிக்க முடியாது நின்றிருந்தாள் சுதிரமாலா.
“அவன் எதுவும் சுள்ளுன்னு பேசிட்டா மனசுல வச்சுக்காதம்மா. நானும் கண்டிச்சிருக்கேன்!” என்றவர் இருநூறு ரூபாய்த் தாளை அவளிடம் நீட்டினார்.
“இதை செலவுக்கு வச்சுக்கோம்மா!” என அவர் கூற, சுதியின் முகம் ஒரு நொடி மாறினாலும் அதை சமாளித்திருந்தாள்.
“வேணாம் சார்... அதான் பார்க்குற வேலைக்கு நிவின் சார் சம்பளம் தர்றாரு இல்லை. அதுவே போதும் சார். நீங்களும் உங்க உடம்பைப் பார்த்துக்கோங்க சார்!” என்றவள் அவர் மேலும் பேசும்முன், “எனக்கு டைமாச்சு, லேட்டா போனா ஓனர் திட்டுவாரு. நான் கிளம்புறேன் சார்...” என வலுக்கட்டாயமாகப் புன்னகைத்து விடை பெற்றாள். பெரியவருக்கு ஆச்சரியம்தான். அவர் பார்த்தவரை தண்ணீர் கூட சுதி இங்கே அருந்தவில்லை. அவராக காசுக் கொடுத்தும் அதை நாசுக்காய் மறுத்துவிட்டவளை நினைத்து கொஞ்சம் ஆச்சர்யம்தான். நேர்மையான பெண் என எண்ணிக் கொண்டார். நிவினும் நடந்த அனைத்தையும் கவனித்தான்.
அன்றைக்கு மாலை பாலு மகேந்திரா விடை பெற, நிவின் அவரை பேருந்து நிலையம் வரை சென்று விட்டுவிட்டு வந்தான். மறுநாளிலிருந்து சுதிக்கு நாட்கள் எப்போதும் போல நகர்ந்தன. பெரிதாய் எந்த மாற்றமும் இன்றி வேலை, வணிகளவாளம், வீடு என நேரம் சென்றது. இடையில் சௌம்யா அரசுத் தேர்வை நன்முறையில் எழுதி முடித்திருந்தாள். வேலை கிடைத்துவிடும் என தேர்வு அறையிலிருந்து வெளிவரும் போதே அவளுக்குத் தெரிந்தாலும் கொஞ்சம் பயம்தான். முடிவுகள் வெளிவரட்டும் என அனைவரிடமும் ஏதோ எழுதியிருக்கிறேன் என்று மட்டும் உரைத்திருந்தாள்.
சுதி நிவின் வீட்டிற்கு வேலைக்குச் சேர்ந்து நான்கு மாதங்கள் முடிந்திருந்தன. நிவின் கையிலிருக்கும் கட்டை ஒரு மாதத்தில் பிரித்துவிடலாம் என மருத்துவர் உரைத்திருக்க, அவன் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தான். சுதிக்கும் அந்த விடயம் பாலு மகேந்திரா மூலம் தெரிந்திருக்க, ஒரு மாதம் மட்டும்தான் இங்கே வேலை பார்க்க முடியும் எனப் புரிந்தது. இந்த சில மாதங்களாக பணக் கஷ்டம் கொஞ்ம் குறைந்திருந்ததை அவளும் உணர்ந்தாள். இப்போது இந்த வேலையை விட்டுவிட்டால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டி வருமே என மனமும் மூளையும் அதையே சுற்றி வந்தன.
இங்கே இந்த அடுக்குமாடிக் குடியிருப்பிலே வேறு எதாவது வீட்டில் இதே போல ஒருவருக்கு சமைத்துக் கொடுக்கும் வேலைக் கிடைத்தால் நன்றாக இருக்குமெனத் தோன்ற, நிவின் வேலையை விட்டு நிற்க சொன்னால், வேறு ஒன்றைத் தேடிக் கொள்ளலாம் என முடிவெடுத்தாள். எந்த வீடென்றாலும் காசு கொடுக்கப் போகிறார்கள், வேலை செய்யப் போகிறோம் என மூளை கூற, இருந்தும் அவளுக்குப் பயம்தான். நிவின் வீட்டில் வேலைக்கு வரும்போதே இடுப்பில் எப்போதும் சிறிய கத்தியை மறைத்து வைத்திருப்பாள். ஆரம்பத்தில் ஐம்புலன்களும் எப்போதும் விழிப்புடன் இருப்பன. ஆனால் இப்போதெல்லாம் அதற்கு அவசியம் இல்லை என்பது போல வெகு சாதாரணமாக வேலை செய்தாள். காரணம் நிவின்தான்.
அவன் முகத்தில் அடித்தது போல பேசினாலும், அவளை சக மனுஷியாக மதிக்கவில்லை என்றாலும் கூட அவன் மீது சுதிக்கு மரியாதை உண்டு. இதுவரை அவளை ஒரு நொடி கூடத் தவறாய் அவன் கண்டதில்லை. தன்னுடைய முகத்தை கூட அவன் சரியாய்க் பார்த்திருக்க மாட்டான் என நினைத்த நாட்களும் உண்டு. உண்மையிலே அவன் ஒழுக்கமானவனாக இருக்க வேண்டும்; இல்லையென்றால் வேலைக்காரி தானே என இளக்காரமாகக் கூட எண்ணி இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அவளுக்கு கவலையில்லை. இந்த வேலை போல பாதுகாப்பான மற்றொரு வேலையைத் தேடிக் கொள்ள வேண்டும் என்றொரு எண்ணம் படர்ந்தது.
(தொடர்ந்து கீழே படிக்கவும்)