- Messages
- 1,315
- Reaction score
- 3,913
- Points
- 113
பொழுது - 28 (இறுதி அத்தியாயம்)
இரண்டு வருடங்களுக்குப் பிறகு,
மையிருட்டாயிருந்த அறையில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான் நிவின். மணி பன்னிரெண்டைத் தொடும் வேகத்துடன் சதுர கடிகாரத்தில் முள் வேகமெடுத்தது. நிவினின் போர்வை ஒருபுறம் கலைந்து கிடக்க, ஜன்னல் வழி ஊடுருவிய பனிக்காற்றில் உடலைக் குறுக்கிப் படுத்திருந்தவனை அலைபேசி எழுப்பியது. யாரென தெரியாது கைகளால் துழாவி அதை எடுத்துக் காதுக்குக் கொடுத்தான்.
இந்நேரத்தில் அழைப்பு என்றதும் மூளை சுறுசுறுப்பாக இயங்கினாலும் உடல் ஒத்துழைக்கவில்லை. மசமசப்பாய் இருந்த விழிகளை தேய்த்தவாறே, “ஹலோ...” என்றான் கரகரத்தக் குரலில்.
“ஹேப்பி பெர்த் டே புருஷா!” என சுதியின் குரல் கிசுகிசுப்பாய் கேட்க, இவனது முகம் முழுவதும் புன்னகை படர்ந்தது. தாமதமாய் வாழ்த்தி விட்டாள் என கணவன் குறைக் கூறியதை நினைவில் வைத்து கடந்த வருடமும் அவள்தான் முதல் வாழ்த்தைக் கூறினாள். இந்த வருடம் அருகில் இல்லையென்றாலும் அலைபேசியில் சுதிரமாலா வாழ்த்தைப் பகிர்ந்திருக்க, இவனுக்கு அகமும் புறமும் குளிர்ந்து போனது. இப்போதெல்லாம் மனைவியின் சின்ன சின்ன மெனக்கெடல்கள் எல்லாம் நிவின் உதடுகளில் புன்னகையைப் பூக்கச் செய்கின்றன.
தான் மட்டுமே ஒரு வழிப்பாதையாய்ப் பகிர்ந்து கொண்டிருந்த அன்பை அதே அளவிற்கு அவளும் திருப்பிக் கொடுக்க, சிந்தாமல் சிதறாமல் அதைப் பத்திரப்படுத்திக் கொண்டான் நிவின்.
“தேங்க்ஸ் டி பொண்டாட்டி...” என அவன் பதிலுரைக்க, “இருக்கட்டும்... இருக்கட்டும். காலைல பேசுவோம். கிசுகிசுன்னு பேசுனா கூட உங்க மகளுக்கு தூக்கம் போய்டுது!” என சுகமாய் சலித்தபடியே அவள் அழைப்பைத் துண்டிக்க, இவனுக்கு முறுவல் அரும்பிற்று.
சிரிப்புடனே நிவின் உறங்கிப் போனான்.
காலையில் எழுந்ததும் தந்தையிடமிருந்து இரண்டாவதாக வாழ்த்தைப் பெற்றிருந்தான். பின்னர் நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் குறுஞ்செய்தியிலும் அழைப்பிலும் வாழ்த்தைப் பகிர, எல்லோருக்கும் பொதுவாய் நன்றி என பதிலளித்துவிட்டு குளித்துக் கிளம்பினான்.
ஒருவாரம் கழித்து மனைவியையும் மகளையும் காணப் போகும் ஆர்வம் முகத்தில் கொட்டிக் கிடந்தது. குளித்து முடித்து ஆலீவ் பச்சை நிறத்தில் சட்டையும் கருமை நிறத்தில் கால்சராயும் உடுத்தினான். இரண்டு மணி நேரப் பயணத்தில் அவனின் மகிழுந்து அந்த மாடிவீட்டின் முன்னே நின்றது. பச்சை பசேலிருந்த வீட்டின் முகப்பில் சிறிய கதவு அடைத்திருக்க, உள்ளே நுழைந்ததும் வலப்புறம் வேப்பரத்தில் பூக்கள் பூத்திருந்தன. ஆங்காங்கே சிறு சிறு செடிகளும் அவ்விடத்தை அடைத்திருக்க, கோடைக்காலத்தின் வெம்மையை அவ்வீட்டை அண்ட விடாமல் பார்த்துக் கொண்டதில் இவற்றின் பங்கு அளப்பரியது.
கீழ்தளத்திலிருந்த வீட்டின் ஜன்னலில் அவ்வப்போது வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த சுதியின் முகம் கணவனைக் கண்டதும் சூரிய காந்தியாய் மலர்ந்து போனது. இவனும் அவளைப் பார்த்துவிட்டதாய் புன்னகைத்து தலையை அசைக்க, வாயில்வரை வந்துவிட்டாள் மனைவி.
“வாங்க... உள்ள வாங்க!” முகம் கொள்ளா புன்னகையுடன் அழைப்பவளைக் கண்களில் நிரப்பிக் கொண்டு உள்ளே நுழைந்தவனின் விழிகள் ஒரு ஓரமாய் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த பிஞ்சு முகத்தில் வாஞ்சையுடன் நிலைத்தது.
“வந்ததும் மகளைத்தான் தேட்றது. நான் இங்க ஒருத்தி இருக்கேனாக்கும்!” என அவனை முழங்கையால் இடித்து மனைவி முனங்கவும், இவனுக்கு சிரிப்பு வந்தது. தூங்கும் குழந்தையை சில நொடிகள் ஆசையாய்ப் பார்த்தவன் நாற்காலியில் அமர்ந்தான்.
“வாங்க மாப்பிள்ளை...சுதி சொன்னா, உங்களுக்கு பிறந்தாள்னு. நூறு வயசு வரை நல்லா இருங்க மாப்பிள்ளை!” என மனமுவந்து வாழ்த்திய சந்திராவின் கால்களில் விழுந்து இவன் ஆசி வாங்க, அவர் முதலில் தயங்கிப் பின்னே வாழ்த்தினார்.
“மாப்ளை... வாங்க, வந்து உக்காருங்க. உங்களுக்காகத்தான் காலைல சீக்கிரமாவே சமைக்க ஆரம்பிச்சேன்...” என்றவர் தன் வயதையும் பொருட்படுத்தாது கூடத்தில் பாயை விரித்து சமைத்தவற்றை அடுக்க, “ம்மா... உங்க மாப்பிளை ஓடிப் போய்ட மாட்டாரு. பொறுமை!” என சுதிக் கடிந்தபடியே அவருக்கு உதவினாள்.
“நல்லா கேளு சுதி... என்னைக்கோ ஒருநாள் வர்ற மாப்பிள்ளைனால உங்கம்மா வகை வகையா சமைச்சுப் போடுறாங்க. வீட்டோட இருக்க மகனைக் கண்டுக்கிறது இல்ல. எங்களுக்கு மட்டும் மீந்து போன குழம்பும் பழைய சோறும்தான்!” என சந்திராவை வம்பிழுத்துக் கொண்டே அறையிலிருந்து வெளியே வந்தான் சித்தார்த். முப்பதைந்தை தொட்டு சில வருடங்கள் கடந்திருந்தாலும் நேர்த்தியாய் வாரியிருந்த சிகையும் கசங்காத உடையும் அவனை முப்பதுக்குள் பிம்பப்படுத்தின.
“ஹக்கும்... நாங்களே என்னைக்காவது ஒருநாள் விருந்தாளியா வந்துட்டுப் போறோம். அதனால் இந்த கவனிப்புண்ணா. இதுவே உங்களை மாதிரி இங்கேயே இருந்தா, எங்களுக்கும் பழைய குழம்புத்தான்... உங்கம்மாவைப் பத்தி உங்களுக்குத் தெரியாதாக்கும்!” என இவள் நொடித்துக் கொள்ள, சந்திரா இருவரையும் மென்மையாய் முறைத்தார்.
“பொழுது விடிஞ்சா போதும்... எங்கத்தையை வம்பிழுக்குறதையே வேலையா வச்சிருக்கது அண்ணனும் தங்கச்சியும்!” அதட்டலுடன் பருத்திப் புடவையின் வடவடப்பை ஒருமுறை சரிசெய்தாள் சௌம்யா. ஆறுமாத மேடிட்ட வயிறு சற்றே அவளைத் தனித்துக் காட்டியது. முகம் தாய்மைக்கே உரிய பூரிப்பில் பூத்திருந்தது.
“ஓஹோ... இப்படி பேசித்தான் எங்கம்மாவை கைக்குள்ளே போட்டு வச்சிருக்கீங்களா அண்ணி?” என சுதி பதிலுக்கு வம்பளக்க, நிவின் சின்ன சிரிப்புடன் அவர்களைப் பார்த்திருந்தான்.
“என்ன மச்சான்... எப்படி போகுது வேலை?” என நிவின் தோளில் தட்டியவாறே சித்தார்த் அவனருகில் அமர்ந்தான்.
“ஹம்ம்... நல்லா போகுது மாமா!” என இவன் பதிலளிக்க, பெண்கள் தங்களுக்குள் சலசலக்கத் நொடங்கினர்.
“ம்மாச்சி... பத்து ரூவா தயிர் இல்ல. முப்பது ரூவாயாம்!” எனத் தயிரை ஏழம் போட்டுக் கொண்டே உள்ளே நுழைந்த ருத்ரா மாமாவைக் கண்டதும், முகம் மலர்ந்தாள்.
“மாமா...” என இவள் தயங்கியபடியே அவனருகே செல்ல, இருகைகளாலும் தன்னருகே அவளை இழுத்த நிவின், “ஸ்கூல் போகலையா ருத்ரா?” எனக் கேட்டவாறே பக்கவாட்டில் வைத்திருந்த நெகிழிப் பையை அவளிடம் நீட்டினான். அவள் பள்ளிக்குத் தேவையான வண்ண பென்சில்கள், படம் வரையும் புத்தகம், சிறுவர் கதைப் புத்தகங்கள் மற்றும் இனிப்புகளும் வாங்கி வந்தான். ஒவ்வொரு வாரமும் எதாவது அவன் வாங்கி வந்து குழந்தையைப் பழக்கப்படுத்தி விட்டிருக்க, அதையே எதிர்பார்க்கத் தொடங்கியிருந்தாள் சின்னவள். சுதி கணவனை அதட்டியும் அவன் கேட்கவில்லை. தவாவிற்கு கைக்கடிகாரம், விளையாடும் போது அணியும் காலணி என அவன் வாயதிற்குத் தகுந்தாற் போல வாங்கிக் கொடுப்பான்.
“சரி...சரி, நேரமாச்சு. எல்லாரும் வாங்க சாப்பிடலாம்!” என சந்திரா அதட்டலுடன் அனைவரையும் அழைக்க, சித்தார்த் எழுந்து வந்து மனைவியின் கைப்பிடித்து அவளைப் பாயில் அமர வைத்தான்.
“அஹம்... ஹக்கும். நாங்களும் இங்கதான் இருக்கோம்ணா!” என சுதி தொண்டையைச் செரும, சித்தார்த் முகம் மெல்ல சிவந்தது.
“என் புருஷனை வம்பிழுக்கலைன்னா உன்னகே நாளே முடியாது சுதி!” என சௌம்யா அங்கலாய்க்க, சிரிப்பும் பேச்சுமாய் உண்டனர். காலை சிறப்பு வகுப்பிற்குச் சென்று வந்த தவாவும் இவர்களுடன் இணைந்து கொண்டான். அனைவரும் சாப்பிட்டு முடிய, சிறுவர்கள் பள்ளிக்குத் தயாராகி நின்றனர்.
“சரி மச்சான்... தங்கச்சியும் நீங்களும் பார்த்துப் பத்திரமா போய்ட்டு வாங்க. நாங்க ஆஃபிஸ் கிளம்புறோம்...” என்ற சித்தார்த் மகிழுந்து சாவியை எடுத்துக்கொண்டு முன்னே நடக்க, சிறியவர்கள் தாயை விட்டுவிட்டு தந்தையின் பின்னே சென்று ஏதோ ரகசியம் பேசினர். அவன் சிரிப்புடன் அவர்கள் கூறியதற்கு தலையை மட்டும் அசைத்து ஒப்புக் கொண்டிருந்தான். அதை கண்டும் காணாமலும் இருந்தாலும் சௌம்யா முகத்தில் புன்னகை கவிந்தது. அவளும் இவர்களிடம் கூறிவிட்டு கணவனுடன் கிளம்பிவிட்டாள்.
“மாப்பிள்ளை... டயர்டா இருப்பீங்க. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு மதியம் சாப்ட்டு சாயங்காலமா போங்க!” என சந்திரா அன்பு கட்டளையிட இவன் மறுக்காது ஏற்றுக் கொண்டான்.
மகள் அப்போதுதான் தந்தையின் குரல் உணர்ந்தாள் போல. மெதுவாய் அவள் சிணுங்க, “ஆரும்மா...எழுந்துட்டீங்களா?” என சுதி குழந்தையைத் தூக்கிக் கொண்டு அறைக்குள் செல்ல, நிவினும் நுழைந்தான். அவள் குழந்தைக்குப் பசியாற்ற, இவன் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.
“மாமாகிட்டே பேசுனீங்களா? என்ன பண்றாரு? இங்கேயே நம்மளோட வர சொல்லி சொன்னீங்களா? என்ன சொல்றாரு, நான் சொன்னா உங்கப்பா கேட்குறதே இல்லங்க. வயசான காலத்துல தனியா கஷ்டப்படுறாரே!” என்ற சுதியின் குரலில் மாமனாரின் மீதான பிரியமும் மரியாதையும் கொட்டிக் கிடந்தது. நிவின் புன்னகைத்தான், பதிலுரைக்கவில்லை. அவனுமே பல முறை வற்புறுத்தி அழைத்தும் அவர் செவிசாய்க்கவில்லை. வயல், பூக்காடு, நிலம், சொந்த வீடு என எதையுமே அவரால் விட்டுவிட்டு இங்கே வந்து நவீன வாழ்க்கைக்குக்கு உடன்பட விருப்பமில்லை. பேத்தி பிறந்தப்பின் கொஞ்சம் அவரது கொள்கைகள் தளர்ந்திருந்தன. தங்களுடைய குடும்ப வாரிசை அருகில் வைத்துக் கொஞ்ச மனம் ஏங்கினாலும், அவரால் உடனடியாக அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு வர முடியவில்லை. இன்னும் கொஞ்ச மாதங்கள் கழித்து வருவதாய் உறுதி கொடுத்தவர், மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பேத்தியைக் காண வந்துவிடுவார். வயதின் மூப்பின் காரணமாக அவரால் அடிக்கடி பயணம் மேற்கொள்ள முடியவில்லை. ஆனாலும் பேத்தி அவரை ஏங்க வைக்க, உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் வந்து சென்றார். சுதிதான் அவரை சில சமயம் அதட்டுவாள். ஆனால் அதையெல்லாம் தூசியாய் தட்டிவிடுவார் மனிதர்.
அப்படியே அவர்களின் பேச்சு குடும்பத்தை தொட்டு சுற்றி வந்தது. சந்திரா மதியத்திற்கும் சைவ விருந்தை செய்ய, சுதி குழந்தையைக் கணவனின் கையில் கொடுத்துவிட்டு அவருக்கு உதவினாள்.
மதிய உணவை உண்டு முடித்து சிறிது நேரம் உறங்கி எழுந்து மூவரும் விடைபெற்றனர்.
“புள்ளையைப் பத்திரமா பார்த்துக்கோ சுதி. கண்ட மருந்தெல்லாம் கொடுக்காத. ஆறு மாசம் தொடங்குனதும் சத்துமாவுக் கஞ்சி காய்ச்சி வடிகட்டி டப்பால போட்டு கொடு. வாரத்துக்கு ரெண்டு தடவை தலைக்கு குளிக்க வை. மறக்காம சாம்புராணி போடு!” என சந்திரா நீண்ட விளக்கம் கொடுக்கவும், சுகமாய் சலித்தபடியே அனைத்திற்கும் தலையை அசைத்து வைத்தாள் சுதிரமாலா. நிவின் அவரது அக்கறையானப் பேச்சில் புன்னகைத்தான். மூவரும் விடை பெற்றனர்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு,
மையிருட்டாயிருந்த அறையில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான் நிவின். மணி பன்னிரெண்டைத் தொடும் வேகத்துடன் சதுர கடிகாரத்தில் முள் வேகமெடுத்தது. நிவினின் போர்வை ஒருபுறம் கலைந்து கிடக்க, ஜன்னல் வழி ஊடுருவிய பனிக்காற்றில் உடலைக் குறுக்கிப் படுத்திருந்தவனை அலைபேசி எழுப்பியது. யாரென தெரியாது கைகளால் துழாவி அதை எடுத்துக் காதுக்குக் கொடுத்தான்.
இந்நேரத்தில் அழைப்பு என்றதும் மூளை சுறுசுறுப்பாக இயங்கினாலும் உடல் ஒத்துழைக்கவில்லை. மசமசப்பாய் இருந்த விழிகளை தேய்த்தவாறே, “ஹலோ...” என்றான் கரகரத்தக் குரலில்.
“ஹேப்பி பெர்த் டே புருஷா!” என சுதியின் குரல் கிசுகிசுப்பாய் கேட்க, இவனது முகம் முழுவதும் புன்னகை படர்ந்தது. தாமதமாய் வாழ்த்தி விட்டாள் என கணவன் குறைக் கூறியதை நினைவில் வைத்து கடந்த வருடமும் அவள்தான் முதல் வாழ்த்தைக் கூறினாள். இந்த வருடம் அருகில் இல்லையென்றாலும் அலைபேசியில் சுதிரமாலா வாழ்த்தைப் பகிர்ந்திருக்க, இவனுக்கு அகமும் புறமும் குளிர்ந்து போனது. இப்போதெல்லாம் மனைவியின் சின்ன சின்ன மெனக்கெடல்கள் எல்லாம் நிவின் உதடுகளில் புன்னகையைப் பூக்கச் செய்கின்றன.
தான் மட்டுமே ஒரு வழிப்பாதையாய்ப் பகிர்ந்து கொண்டிருந்த அன்பை அதே அளவிற்கு அவளும் திருப்பிக் கொடுக்க, சிந்தாமல் சிதறாமல் அதைப் பத்திரப்படுத்திக் கொண்டான் நிவின்.
“தேங்க்ஸ் டி பொண்டாட்டி...” என அவன் பதிலுரைக்க, “இருக்கட்டும்... இருக்கட்டும். காலைல பேசுவோம். கிசுகிசுன்னு பேசுனா கூட உங்க மகளுக்கு தூக்கம் போய்டுது!” என சுகமாய் சலித்தபடியே அவள் அழைப்பைத் துண்டிக்க, இவனுக்கு முறுவல் அரும்பிற்று.
சிரிப்புடனே நிவின் உறங்கிப் போனான்.
காலையில் எழுந்ததும் தந்தையிடமிருந்து இரண்டாவதாக வாழ்த்தைப் பெற்றிருந்தான். பின்னர் நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் குறுஞ்செய்தியிலும் அழைப்பிலும் வாழ்த்தைப் பகிர, எல்லோருக்கும் பொதுவாய் நன்றி என பதிலளித்துவிட்டு குளித்துக் கிளம்பினான்.
ஒருவாரம் கழித்து மனைவியையும் மகளையும் காணப் போகும் ஆர்வம் முகத்தில் கொட்டிக் கிடந்தது. குளித்து முடித்து ஆலீவ் பச்சை நிறத்தில் சட்டையும் கருமை நிறத்தில் கால்சராயும் உடுத்தினான். இரண்டு மணி நேரப் பயணத்தில் அவனின் மகிழுந்து அந்த மாடிவீட்டின் முன்னே நின்றது. பச்சை பசேலிருந்த வீட்டின் முகப்பில் சிறிய கதவு அடைத்திருக்க, உள்ளே நுழைந்ததும் வலப்புறம் வேப்பரத்தில் பூக்கள் பூத்திருந்தன. ஆங்காங்கே சிறு சிறு செடிகளும் அவ்விடத்தை அடைத்திருக்க, கோடைக்காலத்தின் வெம்மையை அவ்வீட்டை அண்ட விடாமல் பார்த்துக் கொண்டதில் இவற்றின் பங்கு அளப்பரியது.
கீழ்தளத்திலிருந்த வீட்டின் ஜன்னலில் அவ்வப்போது வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த சுதியின் முகம் கணவனைக் கண்டதும் சூரிய காந்தியாய் மலர்ந்து போனது. இவனும் அவளைப் பார்த்துவிட்டதாய் புன்னகைத்து தலையை அசைக்க, வாயில்வரை வந்துவிட்டாள் மனைவி.
“வாங்க... உள்ள வாங்க!” முகம் கொள்ளா புன்னகையுடன் அழைப்பவளைக் கண்களில் நிரப்பிக் கொண்டு உள்ளே நுழைந்தவனின் விழிகள் ஒரு ஓரமாய் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த பிஞ்சு முகத்தில் வாஞ்சையுடன் நிலைத்தது.
“வந்ததும் மகளைத்தான் தேட்றது. நான் இங்க ஒருத்தி இருக்கேனாக்கும்!” என அவனை முழங்கையால் இடித்து மனைவி முனங்கவும், இவனுக்கு சிரிப்பு வந்தது. தூங்கும் குழந்தையை சில நொடிகள் ஆசையாய்ப் பார்த்தவன் நாற்காலியில் அமர்ந்தான்.
“வாங்க மாப்பிள்ளை...சுதி சொன்னா, உங்களுக்கு பிறந்தாள்னு. நூறு வயசு வரை நல்லா இருங்க மாப்பிள்ளை!” என மனமுவந்து வாழ்த்திய சந்திராவின் கால்களில் விழுந்து இவன் ஆசி வாங்க, அவர் முதலில் தயங்கிப் பின்னே வாழ்த்தினார்.
“மாப்ளை... வாங்க, வந்து உக்காருங்க. உங்களுக்காகத்தான் காலைல சீக்கிரமாவே சமைக்க ஆரம்பிச்சேன்...” என்றவர் தன் வயதையும் பொருட்படுத்தாது கூடத்தில் பாயை விரித்து சமைத்தவற்றை அடுக்க, “ம்மா... உங்க மாப்பிளை ஓடிப் போய்ட மாட்டாரு. பொறுமை!” என சுதிக் கடிந்தபடியே அவருக்கு உதவினாள்.
“நல்லா கேளு சுதி... என்னைக்கோ ஒருநாள் வர்ற மாப்பிள்ளைனால உங்கம்மா வகை வகையா சமைச்சுப் போடுறாங்க. வீட்டோட இருக்க மகனைக் கண்டுக்கிறது இல்ல. எங்களுக்கு மட்டும் மீந்து போன குழம்பும் பழைய சோறும்தான்!” என சந்திராவை வம்பிழுத்துக் கொண்டே அறையிலிருந்து வெளியே வந்தான் சித்தார்த். முப்பதைந்தை தொட்டு சில வருடங்கள் கடந்திருந்தாலும் நேர்த்தியாய் வாரியிருந்த சிகையும் கசங்காத உடையும் அவனை முப்பதுக்குள் பிம்பப்படுத்தின.
“ஹக்கும்... நாங்களே என்னைக்காவது ஒருநாள் விருந்தாளியா வந்துட்டுப் போறோம். அதனால் இந்த கவனிப்புண்ணா. இதுவே உங்களை மாதிரி இங்கேயே இருந்தா, எங்களுக்கும் பழைய குழம்புத்தான்... உங்கம்மாவைப் பத்தி உங்களுக்குத் தெரியாதாக்கும்!” என இவள் நொடித்துக் கொள்ள, சந்திரா இருவரையும் மென்மையாய் முறைத்தார்.
“பொழுது விடிஞ்சா போதும்... எங்கத்தையை வம்பிழுக்குறதையே வேலையா வச்சிருக்கது அண்ணனும் தங்கச்சியும்!” அதட்டலுடன் பருத்திப் புடவையின் வடவடப்பை ஒருமுறை சரிசெய்தாள் சௌம்யா. ஆறுமாத மேடிட்ட வயிறு சற்றே அவளைத் தனித்துக் காட்டியது. முகம் தாய்மைக்கே உரிய பூரிப்பில் பூத்திருந்தது.
“ஓஹோ... இப்படி பேசித்தான் எங்கம்மாவை கைக்குள்ளே போட்டு வச்சிருக்கீங்களா அண்ணி?” என சுதி பதிலுக்கு வம்பளக்க, நிவின் சின்ன சிரிப்புடன் அவர்களைப் பார்த்திருந்தான்.
“என்ன மச்சான்... எப்படி போகுது வேலை?” என நிவின் தோளில் தட்டியவாறே சித்தார்த் அவனருகில் அமர்ந்தான்.
“ஹம்ம்... நல்லா போகுது மாமா!” என இவன் பதிலளிக்க, பெண்கள் தங்களுக்குள் சலசலக்கத் நொடங்கினர்.
“ம்மாச்சி... பத்து ரூவா தயிர் இல்ல. முப்பது ரூவாயாம்!” எனத் தயிரை ஏழம் போட்டுக் கொண்டே உள்ளே நுழைந்த ருத்ரா மாமாவைக் கண்டதும், முகம் மலர்ந்தாள்.
“மாமா...” என இவள் தயங்கியபடியே அவனருகே செல்ல, இருகைகளாலும் தன்னருகே அவளை இழுத்த நிவின், “ஸ்கூல் போகலையா ருத்ரா?” எனக் கேட்டவாறே பக்கவாட்டில் வைத்திருந்த நெகிழிப் பையை அவளிடம் நீட்டினான். அவள் பள்ளிக்குத் தேவையான வண்ண பென்சில்கள், படம் வரையும் புத்தகம், சிறுவர் கதைப் புத்தகங்கள் மற்றும் இனிப்புகளும் வாங்கி வந்தான். ஒவ்வொரு வாரமும் எதாவது அவன் வாங்கி வந்து குழந்தையைப் பழக்கப்படுத்தி விட்டிருக்க, அதையே எதிர்பார்க்கத் தொடங்கியிருந்தாள் சின்னவள். சுதி கணவனை அதட்டியும் அவன் கேட்கவில்லை. தவாவிற்கு கைக்கடிகாரம், விளையாடும் போது அணியும் காலணி என அவன் வாயதிற்குத் தகுந்தாற் போல வாங்கிக் கொடுப்பான்.
“சரி...சரி, நேரமாச்சு. எல்லாரும் வாங்க சாப்பிடலாம்!” என சந்திரா அதட்டலுடன் அனைவரையும் அழைக்க, சித்தார்த் எழுந்து வந்து மனைவியின் கைப்பிடித்து அவளைப் பாயில் அமர வைத்தான்.
“அஹம்... ஹக்கும். நாங்களும் இங்கதான் இருக்கோம்ணா!” என சுதி தொண்டையைச் செரும, சித்தார்த் முகம் மெல்ல சிவந்தது.
“என் புருஷனை வம்பிழுக்கலைன்னா உன்னகே நாளே முடியாது சுதி!” என சௌம்யா அங்கலாய்க்க, சிரிப்பும் பேச்சுமாய் உண்டனர். காலை சிறப்பு வகுப்பிற்குச் சென்று வந்த தவாவும் இவர்களுடன் இணைந்து கொண்டான். அனைவரும் சாப்பிட்டு முடிய, சிறுவர்கள் பள்ளிக்குத் தயாராகி நின்றனர்.
“சரி மச்சான்... தங்கச்சியும் நீங்களும் பார்த்துப் பத்திரமா போய்ட்டு வாங்க. நாங்க ஆஃபிஸ் கிளம்புறோம்...” என்ற சித்தார்த் மகிழுந்து சாவியை எடுத்துக்கொண்டு முன்னே நடக்க, சிறியவர்கள் தாயை விட்டுவிட்டு தந்தையின் பின்னே சென்று ஏதோ ரகசியம் பேசினர். அவன் சிரிப்புடன் அவர்கள் கூறியதற்கு தலையை மட்டும் அசைத்து ஒப்புக் கொண்டிருந்தான். அதை கண்டும் காணாமலும் இருந்தாலும் சௌம்யா முகத்தில் புன்னகை கவிந்தது. அவளும் இவர்களிடம் கூறிவிட்டு கணவனுடன் கிளம்பிவிட்டாள்.
“மாப்பிள்ளை... டயர்டா இருப்பீங்க. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு மதியம் சாப்ட்டு சாயங்காலமா போங்க!” என சந்திரா அன்பு கட்டளையிட இவன் மறுக்காது ஏற்றுக் கொண்டான்.
மகள் அப்போதுதான் தந்தையின் குரல் உணர்ந்தாள் போல. மெதுவாய் அவள் சிணுங்க, “ஆரும்மா...எழுந்துட்டீங்களா?” என சுதி குழந்தையைத் தூக்கிக் கொண்டு அறைக்குள் செல்ல, நிவினும் நுழைந்தான். அவள் குழந்தைக்குப் பசியாற்ற, இவன் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.
“மாமாகிட்டே பேசுனீங்களா? என்ன பண்றாரு? இங்கேயே நம்மளோட வர சொல்லி சொன்னீங்களா? என்ன சொல்றாரு, நான் சொன்னா உங்கப்பா கேட்குறதே இல்லங்க. வயசான காலத்துல தனியா கஷ்டப்படுறாரே!” என்ற சுதியின் குரலில் மாமனாரின் மீதான பிரியமும் மரியாதையும் கொட்டிக் கிடந்தது. நிவின் புன்னகைத்தான், பதிலுரைக்கவில்லை. அவனுமே பல முறை வற்புறுத்தி அழைத்தும் அவர் செவிசாய்க்கவில்லை. வயல், பூக்காடு, நிலம், சொந்த வீடு என எதையுமே அவரால் விட்டுவிட்டு இங்கே வந்து நவீன வாழ்க்கைக்குக்கு உடன்பட விருப்பமில்லை. பேத்தி பிறந்தப்பின் கொஞ்சம் அவரது கொள்கைகள் தளர்ந்திருந்தன. தங்களுடைய குடும்ப வாரிசை அருகில் வைத்துக் கொஞ்ச மனம் ஏங்கினாலும், அவரால் உடனடியாக அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு வர முடியவில்லை. இன்னும் கொஞ்ச மாதங்கள் கழித்து வருவதாய் உறுதி கொடுத்தவர், மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பேத்தியைக் காண வந்துவிடுவார். வயதின் மூப்பின் காரணமாக அவரால் அடிக்கடி பயணம் மேற்கொள்ள முடியவில்லை. ஆனாலும் பேத்தி அவரை ஏங்க வைக்க, உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் வந்து சென்றார். சுதிதான் அவரை சில சமயம் அதட்டுவாள். ஆனால் அதையெல்லாம் தூசியாய் தட்டிவிடுவார் மனிதர்.
அப்படியே அவர்களின் பேச்சு குடும்பத்தை தொட்டு சுற்றி வந்தது. சந்திரா மதியத்திற்கும் சைவ விருந்தை செய்ய, சுதி குழந்தையைக் கணவனின் கையில் கொடுத்துவிட்டு அவருக்கு உதவினாள்.
மதிய உணவை உண்டு முடித்து சிறிது நேரம் உறங்கி எழுந்து மூவரும் விடைபெற்றனர்.
“புள்ளையைப் பத்திரமா பார்த்துக்கோ சுதி. கண்ட மருந்தெல்லாம் கொடுக்காத. ஆறு மாசம் தொடங்குனதும் சத்துமாவுக் கஞ்சி காய்ச்சி வடிகட்டி டப்பால போட்டு கொடு. வாரத்துக்கு ரெண்டு தடவை தலைக்கு குளிக்க வை. மறக்காம சாம்புராணி போடு!” என சந்திரா நீண்ட விளக்கம் கொடுக்கவும், சுகமாய் சலித்தபடியே அனைத்திற்கும் தலையை அசைத்து வைத்தாள் சுதிரமாலா. நிவின் அவரது அக்கறையானப் பேச்சில் புன்னகைத்தான். மூவரும் விடை பெற்றனர்.