புன்னகை 8
நிச்சயமாக ஒரு
மாமாங்கு வேண்டும்
தான் போல இந்த
அகோர நேசத்தை
அநாயாசமாக உதறி செல்ல…
பார்க்கும் இடமெங்கும் கல்லூரி பறவைகள் வண்ண வண்ண உடைகளில் முகத்தில் மின்னும் சந்தோஷத்துடன் வலம் வந்து கொண்டிருந்தனர்.
அன்று வல்லபன் பயிலும் கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்.
வருடத்திற்கு ஒரு முறை கொண்டாடப்படும் இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாடி தீர்த்துவிடுவார்கள்.
நிறைய போட்டிகள் நடனம், ஓவியம் என்று நடத்தி பரிசும் அளிக்கப்படும். முதுநிலை மாணவர்கள் தான் எல்லாவற்றையும் எடுத்து முன்னின்று செய்து இளநிலை மாணவர்களை வழிநடத்துவார்கள்.
அந்த விதத்தில் வல்லபனது வகுப்பும் மற்ற துறைய முதுகலை மாணவர்களும் எடுத்து நடத்தி கொண்டிருந்தனர்.
அடர் கருப்பு நிறத்தில் சட்டையும் அதற்கு தோதாக வெள்ளை நிறத்தில் வேட்டியும் அணிந்து காற்றினால் நெற்றியில் புரளும் கேசத்தை ஒரு கையால் ஏற்றிவிட்டபடி,
"மச்சான் ஸ்டேஜ்ல மைக் வேலை செய்யுதான்னு பாரு. நான் செக் பண்ணப்போ ஒன்னு தான் நல்லா இருந்துச்சு. அந்த ரேடியோ செட் பையனை இன்னொன்னு கொண்டு வர சொன்னேன் எடுத்திட்டு வந்துட்டான்னு பாரு" என அஜயிடம் கூறியவன், அவன் சரியெனவிட்டு சென்றதும்
மதனிடம், "மச்சான் ஸ்னாக்ஸும் வாட்டர் பாட்டிலயும் ப்ளேட்ல அடுக்கி ரெடியா வச்சாச்சான்னு பாரு. ப்ரோக்ராம் ஸ்டார்ட் ஆனதும் கொடுக்க ஆரம்பிச்சிடனும். அப்புறம் ஸ்டாஃப்ஸ் வந்ததும் பர்ஸ்ட் ரோல உட்கார வச்சிடு" என்று ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்றாக கூறி பம்பரமாக சுழன்றான்.
அவர்கள் வருட மாணவர்கள் எடுத்து செய்யும் முதல் நிகழ்ச்சி அதில் எந்த தவறும் நிகழ்ந்துவிட கூடாது என்று கவனமாக செய்து கொண்டிருந்தான்.
"கனிமொழி இன்னும் ஹாப் ஆன் ஹவர்ல ப்ரோக்ராம் ஸ்டார்ட் ஆகிடும். ப்ரோக்ராம் சார்ட் யார்க்கிட்ட இருக்கு. வெல்கம் ஸ்பீச் அண்ட் டான்ஸ் ஆடுறவங்களை ரெடியா இருக்க சொல்லு" என்க,
"ஹ்ம்ம் சார்ட் என்கிட்ட தான் இருக்கு. ஆல்ரெடி அவங்களை ரெடி ஆக சொல்லிட்டேன்" என்று கனிமொழி நகர,
அடுத்ததாக எந்த வேலை மீதமுள்ளது என்று பார்க்க போய்விட்டான்.
நெற்றியில் சிறிதாக சந்தன கீற்றும் இதழில் தவழும் புன்னகையுடன் வேட்டியின் நுனியை ஒருவிரலில் பிடித்தபடி அங்குமிங்கும் பம்பரமாக சுழன்றவனின் மீது சில விழிகள் படிந்து மீளத்தான் செய்தது. அவன் கண்டும் காணாமல் கடந்துவிட்டான்.
ஆனால் அவன் மனம் கவர்ந்தவள் தான் அவனை கண்டுகொள்வதே இல்லை. அவன் வம்பிழுத்தால் மட்டும் நாசி நுனி சிவக்க அவனை முறைத்து திட்டிவிட்டு நகர்ந்திடுவாள்.
செல்வாவை நினைத்ததும் இதழ்களில் இருந்த மென்னகை புன்னகையாக உருமாற உள்ளுக்குள், 'ஜான்சி ராணி' என்று முணுமுணுப்பு பிறந்தது.
இன்றைக்கு அவள் முதல் முதலாக வரவேற்பு நடனமாக பரதநாட்டியம் ஆட போகிறாள்.
ஆர்வமாக பெயரை கொடுத்திருந்தாள். நடனப் பயிற்சி செய்யும் போது கூட யாரயும் உள்ளே விடவில்லை.
எப்படி ஆடப்போகிறாள் என்று பார்க்கத்தான் வல்லபன் ஆர்வமாக இருந்தான்.
ஆனால் இங்கே அவனது ஜான்சி ராணியோ பானுவிடம், "டி எனக்கு ரொம்ப பயமா இருக்கு டி. நான் ஆடிதான் ஆகணுமா? ஸ்டேஜ்ல போய் எதாவது சொதப்பிட போறேன்" என்று பத்தாவது முறையாக புலம்ப,
அவளும் பொறுமையாக,"பயப்படாத டி. நீ அப்படிலாம் சொதப்பமாட்ட. நல்லாதான ப்ராக்டிஸ் பண்ணிட்டு வந்திருக்க" என்று ஆறுதல் கூற,
"அப்படின்னா சொல்ற?" என்று சந்தேகமாக வினவினாள்.
"அப்படியே தான் நீ நல்லா பண்ணுவ" என்றாள் பானு.
"சரி என் ட்ரெஸ் எல்லாம் சரியா இருக்கா. இடுப்புக்கிட்ட கொஞ்சம் லூசா இருக்கு. அதை சரி பண்ணி விடு. இந்த நெத்தி சூடி திரும்பிட்டே இருக்கு" என்று செல்வா கூற,
"இதோ சரி பண்றேன்" என்று பானு சரிசெய்ய துவங்கினாள்.
அவள் சரிசெய்து முடித்ததும் நேரத்தை பார்த்த செல்வா பதட்டமாகி, "பானு இன்னும் பத்து நிமிஷம் தான்டி இருக்கு. நான் பதட்டத்துல ஸ்டேஜ்ல மயங்கி விழுந்துட்டா என்ன பண்றது" என்று முகத்தில் அப்பிய பயத்துடன் கேட்க,
பொறுமை இழந்த பானு, "இதோ வந்துட்றேன்" என்று வல்லபனை நோக்கி சென்றாள்.
இந்த இரண்டு மாதத்தில் பானுவிற்கு விடயம் தெரிந்துவிட்டது. வல்லபனுக்கு செல்வா மீது விருப்பம் இருப்பதும் அதே போல செல்வாவிற்கு இருப்பதும் அவள் வெளியே காண்பித்து கொள்ளாததும் தெரிந்தது.
இவள் வல்லபன் வந்து கூறினால் தான் சரியாவாள் என்று வல்லபனை நோக்கி சென்றாள்.
காரணம் அவன் கூறும்போது எதுவென்றாலும் மாட்டேன் முடியாது என்று கூறினாலும் இறுதியில் அதனை செய்திருந்தாள். அது வல்லபனாலா அல்லது செல்வாவின் சுய விருப்பமா என்று தான் பானுவிற்கு தெரியவில்லை.
வேலைகளின் மத்தியில் படு மும்முரமாக இருந்தவனை தேடி கண்டறிந்து,
"வல்லபன் அண்ணா" என்று வந்து நின்றாள் பானு.
"டேய் நீ போய் பாரு நான் வர்றேன்" என்று அருகில் இருந்தவனை அனுப்பியவன்,
"சொல்லும்மா" என்றான்.
"அண்ணா அங்க செல்வா லாஸ்ட் மினிட்ல எனக்கு பயமா இருக்கு நான் டான்ஸ் ஆடலைன்னு சொல்லிட்டு இருக்கா. என்னால அவளை சமாளிக்க முடியலை. நீங்க கொஞ்சம் வர்றீங்களா?" என்று பானு வினா எழுப்ப,
"இதோ இரண்டு நிமிஷத்துல வந்துட்றேன் நீ போ" என்றவன்,
பானு சென்றதும் அஜயிடம் வாசல் வரை சென்று பேராசிரியர்கள் வரும் நேரமாகிற்று வரவேற்க போய் நில் என்றுவிட்டு,
'பேருதான் ஜான்சிராணி எல்லாத்துக்கும் பயப்பட வேண்டியது' என்று முணுமுணுத்தபடி அவள் தயாராகி கொண்டிருந்த அறைக்கு சென்றான்.
செல்வா, "என்னடி எங்க போய்ட்டு வந்த?" என்று வினவும் போதே வல்லபன் உள்ளே வந்திருந்தான்.
அவனை அப்போது எதிர்பாராதவள் அதிர்ந்து நிற்க, வல்லபனும் அவளை தான் பார்த்திருந்தான்.
மஞ்சளில் அரக்கு நிறத்தில் கரை வைத்த நாட்டிய உடையில் அதற்கு தோதாக பெரியதான ஜிமிக்கி காதினை நிறைக்க கழுத்தில் ஆரம் நெற்றியில் நெற்றிசூடி என்று அவனை இமைக்க மறக்க வைக்கும் வகையில் இருந்தவளது மையிட்ட விழிகள் பெரியதாக விரிய,
வல்லபனுக்குத் தான் ஒரு நொடி ஏதும் ஓடவில்லை. குரலை செறுமி தன்னை நிலைப்படுத்தியவன்,
"என்னடி உனக்கு பிரச்சனை. ஏன் இப்போ டான்ஸ் ஆட மாட்டேன்னு சொல்லிட்டு இருக்க?" என்று முறைப்புடன் வினவ,
"அது எனக்கு பயமா இருக்கு. நான் கண்டிப்பா சொதப்பிடுவேன்" என்று பயந்த விழிகளுடன் கூற,
அந்த விழிகளுக்குள் தொலைய இருந்தவன் கையால் கழுத்தை அழுத்தமாக வருடிவிட்டு பானுவிடம்,
"பானு ஸ்டாப்ஸ் வந்துட்டாங்களான்னு எட்டி பாரு" என்றான்.
"சரிண்ணா" என்றவள் வாசலுக்கு சென்று எட்டி பார்க்கும் நொடி,
சடுதியில் அவளை நெருங்கி அணைத்தவன் காதில்,
"நான் இருக்கும் போது நீ எதுக்கு பயப்பட கூடாது. நீ நல்லா டான்ஸ் ஆடுவ" என்று அழுத்தமாய் கூறியவன் அணைத்த வேகத்திலே விலகிட,
இங்கு செல்வா தான் அவனது செயலில் சர்வமும் சமைந்து உறைந்துவிட்டாள்.
இதற்குள் பானு, "ண்ணா வந்துட்டாங்க" என்றிட,
வல்லபனுக்கு அவளது நிலையை கண்டு சிரிப்பு வந்துவிட இதழ்களுக்குள் அதக்கியவன்,
"இனிமே புலம்பமாட்டா. நல்லா பெர்பார்ம் பண்ணிடுவா" என்று அழுத்தமாக கூறிவிட்டு வெளியேறினான்.
ஆனால் செல்வாதான் தன்னிலை அடையாமல் இன்னும் அதிர்வுடன் சிலையாகியிருந்தாள்.
வெளியே வந்து, "வாங்க சார். வாங்க மேம்…" என்று வரவேற்றவனது இதழ்களில் ரகசிய புன்னகை மிளிர்ந்தது
கண் பார்த்து கதைக்க
முடியாமல் நானும் தவிக்கின்ற
ஒரு பெண்ணும் நீ தான்
கண் கொட்ட முடியாமல்
முடியாமல் பார்த்தும்
சலிக்காத ஒரு
பெண்ணும் நீ தான்
சலிக்காத ஒரு
பெண்ணும் நீ தான்….
***********************
கோவை விமான நிலையம் பரபரப்புடன் இயங்கி கொண்டிருக்க,
ஹைத்ரபாத்திலிருந்து வரும் விமானம் தரையிரங்க உள்ளது என மூன்று மொழிகளிலும் ஒலிக்கப்பட்டது.
அடுத்த பத்து நிமிடத்தில் விமானம் தரையிரங்க அனைத்து பரிசோதனைகளையும் முடித்து வெளியே வந்தனர் செல்வாவின் குடும்பத்தினர்.
வல்லபன் அதியை கையில் தூக்கி கொண்டு நடக்க செல்வா தான் இன்னும் மன உலைச்சலிலே இருந்தாள்.
என்னவோ அவனது சிறு முக மாற்றமும் அவளையறியாமலே உள்ளே வருத்தத்தை கிளற செய்ததில் சிறிது திண்டாடி தான் போனாள்.
சட்டென்று அவனிடம் சென்று அவளாலும் சடுதியில் பேச முடியவில்லை.
என்னவோ தனக்கு எல்லாம் மறந்துவிட்டது விபத்தில் அதுமட்டுமின்றி பாதி நினைவுகள் மறந்துவிட்டது இதில் திருமணம் கணவன் குழந்தை என்று அடுத்தடுத்த தாக்குதலில் சிறிது தடுமாறி தான் போயிருந்தாள்.
இதில் புதியதாக தன் வாழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட உறவுகளை ஏற்றுகொள்ளவும் அவர்களுடன் ஒன்றவும் முடியவில்லை.
அவளுக்கு சிறிது பயமாக கூட இருந்தது எங்கே தன்னையறியாமல் அவர்களை காயப்படுத்திவிடுவோமோ என்று.
வல்லபன் கூட அனைத்தையும் தெரிந்தவன் புரிந்து கொள்வான் ஆனால் அதியா அவளை தெரியாமல் காயப்படுத்திவிட்டால் அச்சிறு பிஞ்சிற்கு என்ன தெரியும்.
ஒருவேளை அவள் தன்னை வெறுத்துவிட்டால் நாளை எனக்கு நினைவு வந்த பிறகு என்னிடம் வர மறுத்துவிட்டால் என்ன செய்வது என்று எண்ணம் வேறு எழுந்து அவளை குழப்பி தவிக்க வைத்தது.
அவர்கள் வெளியே வந்ததும் இரண்டு பெரிய மகிழுந்துகள் வந்து நின்றது.
அவற்றின் தோற்றமே கூறியது அதன் மதிப்பை. செல்வாவிற்கு புரிந்தது அது தங்களுக்காக தான் வந்திருக்கிறது என்று.
மகிழுந்தில் இருந்து இறங்கிய இரண்டு ஓட்டுநர்கள் அவர்களிடமிருந்த பைகளை வாங்கி வைக்க செல்ல,
செல்வா இதனை கண்டு மேலும் மேலும் குழம்பி நின்றுவிட்டாள்.
'இத்தனை வசதி இவனிடமா…?' அவளை ஏதோ ஒரு வகையில் அச்சுறுத்தியது.
"என்னக்கா நிக்கிற வண்டியில ஏறு" என்று அவளது தோளை பவி தொட,
"ஹான்…" என்று ஒரு நொடி விழித்தவள் பின்,
"ஹ்ம்ம்" என்று ஏறி சாரளத்தின் அருகே அமர்ந்துவிட்டாள்.
நிச்சயமாக ஒரு
மாமாங்கு வேண்டும்
தான் போல இந்த
அகோர நேசத்தை
அநாயாசமாக உதறி செல்ல…
பார்க்கும் இடமெங்கும் கல்லூரி பறவைகள் வண்ண வண்ண உடைகளில் முகத்தில் மின்னும் சந்தோஷத்துடன் வலம் வந்து கொண்டிருந்தனர்.
அன்று வல்லபன் பயிலும் கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்.
வருடத்திற்கு ஒரு முறை கொண்டாடப்படும் இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாடி தீர்த்துவிடுவார்கள்.
நிறைய போட்டிகள் நடனம், ஓவியம் என்று நடத்தி பரிசும் அளிக்கப்படும். முதுநிலை மாணவர்கள் தான் எல்லாவற்றையும் எடுத்து முன்னின்று செய்து இளநிலை மாணவர்களை வழிநடத்துவார்கள்.
அந்த விதத்தில் வல்லபனது வகுப்பும் மற்ற துறைய முதுகலை மாணவர்களும் எடுத்து நடத்தி கொண்டிருந்தனர்.
அடர் கருப்பு நிறத்தில் சட்டையும் அதற்கு தோதாக வெள்ளை நிறத்தில் வேட்டியும் அணிந்து காற்றினால் நெற்றியில் புரளும் கேசத்தை ஒரு கையால் ஏற்றிவிட்டபடி,
"மச்சான் ஸ்டேஜ்ல மைக் வேலை செய்யுதான்னு பாரு. நான் செக் பண்ணப்போ ஒன்னு தான் நல்லா இருந்துச்சு. அந்த ரேடியோ செட் பையனை இன்னொன்னு கொண்டு வர சொன்னேன் எடுத்திட்டு வந்துட்டான்னு பாரு" என அஜயிடம் கூறியவன், அவன் சரியெனவிட்டு சென்றதும்
மதனிடம், "மச்சான் ஸ்னாக்ஸும் வாட்டர் பாட்டிலயும் ப்ளேட்ல அடுக்கி ரெடியா வச்சாச்சான்னு பாரு. ப்ரோக்ராம் ஸ்டார்ட் ஆனதும் கொடுக்க ஆரம்பிச்சிடனும். அப்புறம் ஸ்டாஃப்ஸ் வந்ததும் பர்ஸ்ட் ரோல உட்கார வச்சிடு" என்று ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்றாக கூறி பம்பரமாக சுழன்றான்.
அவர்கள் வருட மாணவர்கள் எடுத்து செய்யும் முதல் நிகழ்ச்சி அதில் எந்த தவறும் நிகழ்ந்துவிட கூடாது என்று கவனமாக செய்து கொண்டிருந்தான்.
"கனிமொழி இன்னும் ஹாப் ஆன் ஹவர்ல ப்ரோக்ராம் ஸ்டார்ட் ஆகிடும். ப்ரோக்ராம் சார்ட் யார்க்கிட்ட இருக்கு. வெல்கம் ஸ்பீச் அண்ட் டான்ஸ் ஆடுறவங்களை ரெடியா இருக்க சொல்லு" என்க,
"ஹ்ம்ம் சார்ட் என்கிட்ட தான் இருக்கு. ஆல்ரெடி அவங்களை ரெடி ஆக சொல்லிட்டேன்" என்று கனிமொழி நகர,
அடுத்ததாக எந்த வேலை மீதமுள்ளது என்று பார்க்க போய்விட்டான்.
நெற்றியில் சிறிதாக சந்தன கீற்றும் இதழில் தவழும் புன்னகையுடன் வேட்டியின் நுனியை ஒருவிரலில் பிடித்தபடி அங்குமிங்கும் பம்பரமாக சுழன்றவனின் மீது சில விழிகள் படிந்து மீளத்தான் செய்தது. அவன் கண்டும் காணாமல் கடந்துவிட்டான்.
ஆனால் அவன் மனம் கவர்ந்தவள் தான் அவனை கண்டுகொள்வதே இல்லை. அவன் வம்பிழுத்தால் மட்டும் நாசி நுனி சிவக்க அவனை முறைத்து திட்டிவிட்டு நகர்ந்திடுவாள்.
செல்வாவை நினைத்ததும் இதழ்களில் இருந்த மென்னகை புன்னகையாக உருமாற உள்ளுக்குள், 'ஜான்சி ராணி' என்று முணுமுணுப்பு பிறந்தது.
இன்றைக்கு அவள் முதல் முதலாக வரவேற்பு நடனமாக பரதநாட்டியம் ஆட போகிறாள்.
ஆர்வமாக பெயரை கொடுத்திருந்தாள். நடனப் பயிற்சி செய்யும் போது கூட யாரயும் உள்ளே விடவில்லை.
எப்படி ஆடப்போகிறாள் என்று பார்க்கத்தான் வல்லபன் ஆர்வமாக இருந்தான்.
ஆனால் இங்கே அவனது ஜான்சி ராணியோ பானுவிடம், "டி எனக்கு ரொம்ப பயமா இருக்கு டி. நான் ஆடிதான் ஆகணுமா? ஸ்டேஜ்ல போய் எதாவது சொதப்பிட போறேன்" என்று பத்தாவது முறையாக புலம்ப,
அவளும் பொறுமையாக,"பயப்படாத டி. நீ அப்படிலாம் சொதப்பமாட்ட. நல்லாதான ப்ராக்டிஸ் பண்ணிட்டு வந்திருக்க" என்று ஆறுதல் கூற,
"அப்படின்னா சொல்ற?" என்று சந்தேகமாக வினவினாள்.
"அப்படியே தான் நீ நல்லா பண்ணுவ" என்றாள் பானு.
"சரி என் ட்ரெஸ் எல்லாம் சரியா இருக்கா. இடுப்புக்கிட்ட கொஞ்சம் லூசா இருக்கு. அதை சரி பண்ணி விடு. இந்த நெத்தி சூடி திரும்பிட்டே இருக்கு" என்று செல்வா கூற,
"இதோ சரி பண்றேன்" என்று பானு சரிசெய்ய துவங்கினாள்.
அவள் சரிசெய்து முடித்ததும் நேரத்தை பார்த்த செல்வா பதட்டமாகி, "பானு இன்னும் பத்து நிமிஷம் தான்டி இருக்கு. நான் பதட்டத்துல ஸ்டேஜ்ல மயங்கி விழுந்துட்டா என்ன பண்றது" என்று முகத்தில் அப்பிய பயத்துடன் கேட்க,
பொறுமை இழந்த பானு, "இதோ வந்துட்றேன்" என்று வல்லபனை நோக்கி சென்றாள்.
இந்த இரண்டு மாதத்தில் பானுவிற்கு விடயம் தெரிந்துவிட்டது. வல்லபனுக்கு செல்வா மீது விருப்பம் இருப்பதும் அதே போல செல்வாவிற்கு இருப்பதும் அவள் வெளியே காண்பித்து கொள்ளாததும் தெரிந்தது.
இவள் வல்லபன் வந்து கூறினால் தான் சரியாவாள் என்று வல்லபனை நோக்கி சென்றாள்.
காரணம் அவன் கூறும்போது எதுவென்றாலும் மாட்டேன் முடியாது என்று கூறினாலும் இறுதியில் அதனை செய்திருந்தாள். அது வல்லபனாலா அல்லது செல்வாவின் சுய விருப்பமா என்று தான் பானுவிற்கு தெரியவில்லை.
வேலைகளின் மத்தியில் படு மும்முரமாக இருந்தவனை தேடி கண்டறிந்து,
"வல்லபன் அண்ணா" என்று வந்து நின்றாள் பானு.
"டேய் நீ போய் பாரு நான் வர்றேன்" என்று அருகில் இருந்தவனை அனுப்பியவன்,
"சொல்லும்மா" என்றான்.
"அண்ணா அங்க செல்வா லாஸ்ட் மினிட்ல எனக்கு பயமா இருக்கு நான் டான்ஸ் ஆடலைன்னு சொல்லிட்டு இருக்கா. என்னால அவளை சமாளிக்க முடியலை. நீங்க கொஞ்சம் வர்றீங்களா?" என்று பானு வினா எழுப்ப,
"இதோ இரண்டு நிமிஷத்துல வந்துட்றேன் நீ போ" என்றவன்,
பானு சென்றதும் அஜயிடம் வாசல் வரை சென்று பேராசிரியர்கள் வரும் நேரமாகிற்று வரவேற்க போய் நில் என்றுவிட்டு,
'பேருதான் ஜான்சிராணி எல்லாத்துக்கும் பயப்பட வேண்டியது' என்று முணுமுணுத்தபடி அவள் தயாராகி கொண்டிருந்த அறைக்கு சென்றான்.
செல்வா, "என்னடி எங்க போய்ட்டு வந்த?" என்று வினவும் போதே வல்லபன் உள்ளே வந்திருந்தான்.
அவனை அப்போது எதிர்பாராதவள் அதிர்ந்து நிற்க, வல்லபனும் அவளை தான் பார்த்திருந்தான்.
மஞ்சளில் அரக்கு நிறத்தில் கரை வைத்த நாட்டிய உடையில் அதற்கு தோதாக பெரியதான ஜிமிக்கி காதினை நிறைக்க கழுத்தில் ஆரம் நெற்றியில் நெற்றிசூடி என்று அவனை இமைக்க மறக்க வைக்கும் வகையில் இருந்தவளது மையிட்ட விழிகள் பெரியதாக விரிய,
வல்லபனுக்குத் தான் ஒரு நொடி ஏதும் ஓடவில்லை. குரலை செறுமி தன்னை நிலைப்படுத்தியவன்,
"என்னடி உனக்கு பிரச்சனை. ஏன் இப்போ டான்ஸ் ஆட மாட்டேன்னு சொல்லிட்டு இருக்க?" என்று முறைப்புடன் வினவ,
"அது எனக்கு பயமா இருக்கு. நான் கண்டிப்பா சொதப்பிடுவேன்" என்று பயந்த விழிகளுடன் கூற,
அந்த விழிகளுக்குள் தொலைய இருந்தவன் கையால் கழுத்தை அழுத்தமாக வருடிவிட்டு பானுவிடம்,
"பானு ஸ்டாப்ஸ் வந்துட்டாங்களான்னு எட்டி பாரு" என்றான்.
"சரிண்ணா" என்றவள் வாசலுக்கு சென்று எட்டி பார்க்கும் நொடி,
சடுதியில் அவளை நெருங்கி அணைத்தவன் காதில்,
"நான் இருக்கும் போது நீ எதுக்கு பயப்பட கூடாது. நீ நல்லா டான்ஸ் ஆடுவ" என்று அழுத்தமாய் கூறியவன் அணைத்த வேகத்திலே விலகிட,
இங்கு செல்வா தான் அவனது செயலில் சர்வமும் சமைந்து உறைந்துவிட்டாள்.
இதற்குள் பானு, "ண்ணா வந்துட்டாங்க" என்றிட,
வல்லபனுக்கு அவளது நிலையை கண்டு சிரிப்பு வந்துவிட இதழ்களுக்குள் அதக்கியவன்,
"இனிமே புலம்பமாட்டா. நல்லா பெர்பார்ம் பண்ணிடுவா" என்று அழுத்தமாக கூறிவிட்டு வெளியேறினான்.
ஆனால் செல்வாதான் தன்னிலை அடையாமல் இன்னும் அதிர்வுடன் சிலையாகியிருந்தாள்.
வெளியே வந்து, "வாங்க சார். வாங்க மேம்…" என்று வரவேற்றவனது இதழ்களில் ரகசிய புன்னகை மிளிர்ந்தது
கண் பார்த்து கதைக்க
முடியாமல் நானும் தவிக்கின்ற
ஒரு பெண்ணும் நீ தான்
கண் கொட்ட முடியாமல்
முடியாமல் பார்த்தும்
சலிக்காத ஒரு
பெண்ணும் நீ தான்
சலிக்காத ஒரு
பெண்ணும் நீ தான்….
***********************
கோவை விமான நிலையம் பரபரப்புடன் இயங்கி கொண்டிருக்க,
ஹைத்ரபாத்திலிருந்து வரும் விமானம் தரையிரங்க உள்ளது என மூன்று மொழிகளிலும் ஒலிக்கப்பட்டது.
அடுத்த பத்து நிமிடத்தில் விமானம் தரையிரங்க அனைத்து பரிசோதனைகளையும் முடித்து வெளியே வந்தனர் செல்வாவின் குடும்பத்தினர்.
வல்லபன் அதியை கையில் தூக்கி கொண்டு நடக்க செல்வா தான் இன்னும் மன உலைச்சலிலே இருந்தாள்.
என்னவோ அவனது சிறு முக மாற்றமும் அவளையறியாமலே உள்ளே வருத்தத்தை கிளற செய்ததில் சிறிது திண்டாடி தான் போனாள்.
சட்டென்று அவனிடம் சென்று அவளாலும் சடுதியில் பேச முடியவில்லை.
என்னவோ தனக்கு எல்லாம் மறந்துவிட்டது விபத்தில் அதுமட்டுமின்றி பாதி நினைவுகள் மறந்துவிட்டது இதில் திருமணம் கணவன் குழந்தை என்று அடுத்தடுத்த தாக்குதலில் சிறிது தடுமாறி தான் போயிருந்தாள்.
இதில் புதியதாக தன் வாழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட உறவுகளை ஏற்றுகொள்ளவும் அவர்களுடன் ஒன்றவும் முடியவில்லை.
அவளுக்கு சிறிது பயமாக கூட இருந்தது எங்கே தன்னையறியாமல் அவர்களை காயப்படுத்திவிடுவோமோ என்று.
வல்லபன் கூட அனைத்தையும் தெரிந்தவன் புரிந்து கொள்வான் ஆனால் அதியா அவளை தெரியாமல் காயப்படுத்திவிட்டால் அச்சிறு பிஞ்சிற்கு என்ன தெரியும்.
ஒருவேளை அவள் தன்னை வெறுத்துவிட்டால் நாளை எனக்கு நினைவு வந்த பிறகு என்னிடம் வர மறுத்துவிட்டால் என்ன செய்வது என்று எண்ணம் வேறு எழுந்து அவளை குழப்பி தவிக்க வைத்தது.
அவர்கள் வெளியே வந்ததும் இரண்டு பெரிய மகிழுந்துகள் வந்து நின்றது.
அவற்றின் தோற்றமே கூறியது அதன் மதிப்பை. செல்வாவிற்கு புரிந்தது அது தங்களுக்காக தான் வந்திருக்கிறது என்று.
மகிழுந்தில் இருந்து இறங்கிய இரண்டு ஓட்டுநர்கள் அவர்களிடமிருந்த பைகளை வாங்கி வைக்க செல்ல,
செல்வா இதனை கண்டு மேலும் மேலும் குழம்பி நின்றுவிட்டாள்.
'இத்தனை வசதி இவனிடமா…?' அவளை ஏதோ ஒரு வகையில் அச்சுறுத்தியது.
"என்னக்கா நிக்கிற வண்டியில ஏறு" என்று அவளது தோளை பவி தொட,
"ஹான்…" என்று ஒரு நொடி விழித்தவள் பின்,
"ஹ்ம்ம்" என்று ஏறி சாரளத்தின் அருகே அமர்ந்துவிட்டாள்.