• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

புன்னகை 7

Administrator
Staff member
Messages
606
Reaction score
836
Points
93
புன்னகை 7:

உணர்தலுக்கும்

உடைதலுக்குமான
சிறு இடைவெளியை
நிரப்பிடும் ஆகப்பெரும்
உணர்வு தான் இந்த
அலாதியான
நேசம்…!



சாரளத்தின் வழியே வந்தோடிய சிலுசிலு காற்றில் கூந்தலிழைகள் கண்ணாடி மீது வந்து விழ, அதனை விரலால் ஒதுக்கி தள்ளியவள் கையில் இருந்த புத்தகத்தில் கவனத்தை திருப்ப அது மாட்டேன் என்றது.

'ப்ச்…' என்று சலித்தவள் நெற்றியில் தட்டிவிட்டு சடுதியில் சுற்றுபுறத்தை ஆராய்ந்தாள் விழிகளால்.

அவள் இறுதியாக இருந்த புத்தக அலமாரியின் பின்னே உள்ள சாரளத்தின் அருகே அமர்ந்திருந்ததால் யாருக்கும் தெரியவில்லை.

அவள் இருப்பதே அவளாக கூறினால் தான் தெரியும். யாரும் வந்து பார்க்க கூட வாய்ப்பில்லை.

எப்போதும் முன்புறமே அமர்ந்துவிடுபவள் இன்று ஏனோ தனிமை வேண்டி புத்தக அலமாரயின் பின்னே நாற்காலியை தூக்கி கொண்டு அமர்ந்துவிட்டாள்.

என்ன முயன்றும் அவளால் புத்தகத்தில் விழியை பதிக்க இயலவில்லை.

காரணம் சாட்சாத் வல்லபன் சக்கரவர்த்தியே தான். பார்க்கும் பொழுதெல்லாம் அவளை வம்பிழுத்தான் பதற வைத்தான் இறுதியில் அவனே கையை கொடுத்து தூக்கியும் விட்டான்.

இதோ இரண்டு வாரங்கள் கடந்திருந்தது. இதற்கு முன்னர் ஒரு மாத காலமாக கண்ணிலே படாத ஒருவன் இரண்டு வாரத்தில் நிறைய முறை கண்ணில் பட்டுவிட்டான்.

இது ஏதேச்சையாக நடக்கிறதா அல்லது வேண்டுமென்றே செய்கிறானா என்று தெரியவில்லை.

ஆனால் அவளை தொல்லை செய்தான் இம்சை செய்தான். என்னவோ செய்தான்.

அவனுக்காக அவள் உருவாக்கி வைத்திருந்த கெட்டவன் என்ற பிம்பத்தை மொத்தமாக உடைத்திருந்தான். அதுமட்டுமின்றி ஏதோ ஒரு வகையில் ஈர்த்திருந்தான்.

கைகளை கட்டி கொண்டு அலட்சியமாகத் தோளை குலுக்கும் பாவனை அவளை பார்த்து ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கும் பாவனை என எல்லாவற்றிலும் அவளை பார்க்க வைத்திருந்தான்.

இதற்கு முன்னர் அவளது அடாவடி குணத்தாலே யாரும் அவளிடம் நேரடியாக காதலை கூறியிருக்கவில்லை.

நண்பர்கள் மூலம் தூது வந்திருக்கிறது அதனை சுலபமாக ஒதுக்கிவிட்டவளால் இவனை கடந்து செல்ல முடியவில்லை.

நேரடியாக முகம் பார்த்து விழியில் ஊடுருவி, "என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?" என்றவனின் நேரடி கேள்வியே அவளுக்கு பிடித்திருந்தது.

இது படிக்கும் வயது இதில் காதல் எல்லாம் வேண்டாம் என்று தனக்குத்தானே கூறி கொண்டாலும் மனது அவனிடம் தான் நின்றது.

அன்று அதுபோல தான் அவனது கேள்வியில் அவள் வகுப்பறையில் விக்கித்து நிற்க,

"இந்த சம்ம இப்படி தான் சால்வ் பண்ணனும்" என்று அவள் தன்னிலை மீள்வதற்கு அவகாசம் கொடுத்தவன் அந்த கணக்கை செய்தும் முடித்திருந்தான்.

அதாவது அவளை காப்பாற்றியிருந்தான்.

'செய்வதையும் செய்துவிட்டு நிற்கும் தோரணையை பார்' என்று இதழை சுழித்துவிட்டு செல்ல,

அதனை பெற்று கொண்டவனது இதழ்கள் புன்னகையில் நெளிந்தது.

'உனக்கு கொஞ்சம் கூட வெக்கமாவே இல்லையா. அவனை பத்தி நினைக்காதேன்னு சொல்லிட்டு இருக்கேன் நீ அவனை பத்தி மட்டுமே நினைச்சிட்டு இருக்க. நீ கொஞ்சம் கூட சரியில்லை செல்வா' என்று தன்னை தானே கடிந்து கொண்டவள் பார்வையை புத்தகத்தில் பதித்தாள்.

வெகுநேரம் புத்தகத்தில் ஆழ்ந்துவிட்டவள் நேரத்தை பார்க்க ஏழு முப்பது என்று காண்பிக்க,

'இன்னுமா லைப்ரரிய க்ளோஸ் பண்ணலை?' என்று எண்ணியவாறு பின்புறத்தில் இருந்து எழுந்து வர, வெளியே ஒருவரையும் காணவில்லை.

சடுதியில் அவளுக்கு உள்ளுக்குள் அச்சம் கிளற வேகநடையில் வாசலை எட்டிவிட்டவள் நூலகரை பார்க்க அவரது இருக்கையும் காலியாக இருந்தது.

"ஐயோ…" என்று நெற்றியை பிடித்து கொண்டவளுக்கு ஒரு கணம் பயத்தில் என்ன செய்வதென்று தெரியவில்லை.

இதயம் படபடவென அடிக்க நொடியில் வியர்வை அரும்பிவிட்டது.

இவள் பின்னால் அமர்ந்திருந்ததால் யாருக்கும் தெரியவில்லை ஆதலால் இவளை உள்ளே வைத்துவிட்டு பூட்டியிருந்தனர்.

அலமாரியின் பின்னே மறைந்து அமர்ந்த தனது மடத்தனத்தை எண்ணி அக்கணம் தன்னையே நொந்து கொண்டவளுக்கு அங்கே இருந்த மின்விளக்கு தான் ஆறுதல்.

அதனை எப்போதும் அணைக்கமாட்டார்கள். அணைத்து இருந்தால் கூட நூலகர் கிளம்பும் நேரத்தை செல்வா கவனித்திருப்பாள்.

விழிகள் ஆழ்ந்த அமைதியை தத்தெடுத்திருந்த நூலகத்தினை சுற்றிவர இதயம் தொண்டைக் குழியில் துடித்தது.

காரணம் அவளுக்கு பேனிக் அட்டாக் எனப்படும் இருட்டில் தனியாக இருந்தால் பயப்படும் நிலை இருந்தது.

நேரம் கடக்க கடக்க வியர்வை அதிகமாக பூக்க மூச்சடைப்பது போல ஆனது.

வேகமாக கதவை அடைந்தவள்,

"காப்பாத்துங்க… ஹெல்ப் மீ…." என்று கதவை தடதடவென தட்ட துவங்கினான்.

இங்கு மைதானத்தின் கல்பெஞ்சில் அமர்ந்து நண்பர்கள் கூடை பந்து விளையாடுவதை வெறித்தபடி இருந்தவனது நினைவுகள் முழுவதையும் ஆக்கிரமித்து இருந்தவள் நம் செல்வ மீனாட்சியே தான்.

நேற்றைய தினம் பணிமனையில் தான் ஏதோ வம்பிழுக்க வழக்கம் போல ஒற்றை விரலால் கண்ணாடியை சரிசெய்துவிட்டு நுனி நாசி சிவக்க தன்னை முறைத்துவிட்டு தோளில் வழிந்த துப்பட்டாவை சரிசெய்தபடி சென்ற செல்வா தான்.

உள்ளுக்குள் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் புதிதாக தெரிந்தாள். எந்த வகையிலே வசீகரித்தாள் ஈர்த்தாள் ஆகர்ஷித்தாள்.

எத்தனையோ பெண்களை கடந்து வந்துவிட்ட நான் இவளிடம் மட்டும் வேரூன்றி நின்றுவிட்ட காரணம் என்ன என்பது தான் அவனை வெகுநாளை துரத்தி கொண்டிருந்த கேள்வி.

பதில் தான் இப்போது வரை கிடைத்தபாடில்லை.

"மச்சான் வாடா நீயும் ஏன் உட்கார்ந்தே இருக்க?" என்று நண்பன் ஒருவன் அழைக்க,

"நான் வரலை நீங்க விளையாடுங்க" என்று வல்லபன் கூற,

"டேய் அவன் வரமாட்டான். அவன் தங்கச்சியோட கனவுல டூயட் பாடிட்டு இருப்பான்" என்று அஜய் வம்பிழுக்க,

"டேய்…" என்று நாக்கை கடித்து நண்பனை முறைத்தவனது முகம் முழுவதும் புன்னகை அரும்ப, அவர்களை பார்க்காது திரும்பி அமர்ந்தவனது பார்வையில் விழுந்தது நூலகத்தின் கதவு தடதடவென ஆடுவது.

முதலில் காற்றுக்கு ஆடுகிறது என்று நினைத்து ஒதுக்கியவன் பின்னர் வெகுநேரமாக ஆட‌ வேகநடையில் அங்கே நெருங்க,

"யாராவது இருக்கிங்களா? ஹெல்ப் மீ?" என்ற குரல் தூரத்தே கேட்டது.

அதில் யாரோ மாட்டி கொண்டதை உணர்ந்தவன்,

"அஜய் சீக்கிரமா போய் லைப்ரரி கீ வாங்கிட்டு வா. யாரோ உள்ள மாட்டிக்கிட்டாங்க" என்று கத்திவிட்டு விரைய,

"காப்பாத்துங்க…" என்ற பெண் குரல் வெகு நெருக்கத்தில் கேட்டது.

"ஒன்னுமில்லை பயப்படாதிங்க நான் கீ வாங்கிட்டு வர சொல்லியிருக்கேன்" என்று இவனும் இந்த புறம் கத்த,

அவனது குரலை பதட்டத்தில் உணராதவள்,

"சீக்கிரமா ப்ளீஸ் எனக்கு பேனிக் அட்டாக் இருக்கு. மூச்சு விட கஷ்டமா இருக்கு…" என்று திக்கித் திணறிய நொடி தான் அவளது குரலை உணர்ந்து கொண்ட வல்லபனின் இதயம் வேகமாக துடித்தது.

அவனுக்கும் சிறிது பதற்றம் தொற்றி கொள்ள,

"ஏய் ஜான்சி ராணி இங்க பாரு. நான் தான் வல்லபன் பயப்படாத. ஒன்னுமில்லை ரெண்டு நிமிஷத்துல கீ வந்திடும். நீ நல்லா டீப் ப்ரீத் பண்ணு" என்று அவளை தேற்ற கூற,

அவனது குரலை கேட்டதும் சிறிது தெம்பு பிறந்தது தான். உள்ளுக்குள் சிறிதான ஆசுவாசம் பிறக்க,

"சீ… சீக்கிரம் எனக்கு பயமா இருக்கு…" என்றவளின் குரல் முயன்று வெளிவர,

"எதுக்கு பயம். நான் இருக்கும் போது யாரும் உன்னை ஒன்னும் செஞ்சிட முடியாது ஜான்சி ராணி. பயப்படாத" என்று பேச்சு கொடுத்து அவளை திசை திருப்ப,

"உள்ளே யாரோ இருக்க மாதிரி இருக்கு…" என்றவளின் குரல் சிறிது கரகரக்க,

இவனுள் பிரளயம் பிறந்தது. இருந்தும் அதனை வெளிக்காண்பித்து கொள்ளாமல்,

"ஏய் நான் இருக்கும் போது எதுக்குடி பயப்பட்ற" என்று நடுங்கியதை மறைத்து அதட்ட,

அவளுக்கு பெரியதாக மூச்சு திணறியது. பதில் அளிக்க இயலவில்லை.

அவளிடம் பதில் இல்லாததில் பயந்து போனவன்,

"ஏய் செல்வா ஏதாவது பேசுடி" என்று அதட்ட,

எந்த சத்தமும் இல்லை.‌ அவனிதயம் துடிப்பை நிறுத்திய நொடி,

"மச்சான் கீ" என்று நீட்டியிருந்தான் அஜய்.

வல்லபன் சாவியை வாங்கி கதவை திறக்க,

கதவின் அருகிலே மூர்ச்சையாகி கிடந்தவளை கண்டு ஒரு ஸ்தம்பித்தவன் பின்னர் அவளை தூக்கி கொண்டு கல்லூரியின் மருத்துவ பகுதியை நோக்கி ஓடினான்.

உடனடியாக அவளை உள்ளே அழைத்து செல்ல மருத்துவர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை தொடங்கியது.

பத்து நிமிடங்கள் ஆனது மருத்துவர் வெளியே வர, அதற்குள் வல்லபன் என்னவோ போல ஆகிவிட்டான்.

அஜய் கூட, "மச்சான் பயத்தில தான் மயங்கி இருப்பா பயப்படாத" என்று ஆறுதல் கூற,

இவனுக்கு அது புரிந்தாலும் 'பேனிக் அட்டாக்' இருப்பதாக கூறியதில் தான் அச்சம் இவனுக்கு.

மருத்துவர் வந்து, "அவங்களுக்கு எந்த ப்ராப்ளமும் இல்லை. தனியா மாட்க்கிட்டதால பேனிக் அட்டாக் வந்திடுச்சு. அதனால தான் ப்ரீத்திங் இஸ்ஸூ வந்திருக்கு. நவ் ஷீ இஸ் நார்மல். கொஞ்ச நேரத்தில அவங்களே கான்சியஸ்க்கு வந்திடுவாங்க" என்று கூறியதும் தான் இவனுக்கு போன உயிர் திரும்ப வந்ததே.

வேறு யாருக்கும் என்றால் பதறியிருப்பான் தான் ஆனால் தன்னவளுக்கு‌ என்றதும் மூச்சே ஒரு விநாடி நின்றுவிட்டது.

"தாங்க்ஸ் டாக்டர்" என்று தளர்வாய் கூறியவன் உள்ளே சென்றான்.

கையில் ட்ரிப்ஸ் ஏறி கொண்டிருக்க விழி மூடி மயக்கத்தில் இருந்தாள் செல்வா.

நண்பர்களிடம், "நான் பாத்துக்கிறேன் நீங்க போய்ட்டு வாங்க" என்று அனுப்பி வைத்தவன் பானுவிற்கு மட்டும் தகவல் கூறிவிட்டு வந்து அவளருகே அமர்ந்துவிட்டான்.

விழிகள் அவள் மீதே இருக்க, "பாவி கொஞ்ச நேரத்தில எப்படி பதற வச்சுட்டா. லைப்ரரிக்குள்ள போனா சுத்தி என்ன நடக்குதுனு கூடவா தெரியாது" என்று அவளை செல்லமாக திட்டியவன்,

'என்னை இப்படி புலம்பவிட்டுட்டு அமைதியா படுத்திருக்கா பாரு' என்று புலம்பியபடி இருந்தவன் விழிகள் அவளை வாஞ்சையாக தான் பார்த்திருந்தது.

சில நிமிடங்கள் கடக்க மெதுவாக இமைகளை பிரித்து விழிகளை திறந்து பார்த்தாள் செல்வா.

முதலில் பார்வையில் பட்டது எதிரில் நின்றிருந்த வல்லபன் தான்.

முகம் அத்தனை தெளிவாய் தெரியவில்லை. மயங்குவதற்கு முன்பு நடந்தது நினைவு வர சடுதியில் எழுந்து அமர்ந்துவிட்டாள்.

இமைகள் மூடி திறந்தும் அவன் பிம்பம் தெளிவாகாததில் தான் கண்ணாடி இல்லை என்பது உரைக்க, விழிகள் சுற்றும் முற்றும் அலைய விட,

அமைதியாக அவளது கண்ணாடியை நீட்டினான்.

வாங்கி அணிந்து கொண்டவள் அவனை பார்க்க,

"ஓய் ஜான்சிராணி உனக்கு லைப்ரரிக்குள்ள போய்ட்டா என்ன நடக்குதுன்னே தெரியாதா…?" என்று முறைக்க,

அவள் அமைதியாக தான் இருந்தாள்.

"ப்ச் உனக்கு போய் யார் ஜான்சிராணினு பேர் வச்சிருக்கேன் பாரு. பயந்தாங்கொள்ளினு வச்சிருக்கணும்" என்று மேலும் சீண்ட,

"ஹலோ யாரு பயந்தாகொள்ளி. மைண்ட் யுவர் வோர்ட்ஸ்" என்று மூக்கின் நுனி சிவக்க முறைத்தாள்.

அவன் வம்பிழுத்ததில் அவனுக்கு நன்றி கூற மறந்து போனாலோ அல்லது நன்றி கூற விருப்பமில்லையோ அதை அவள் தான் அறிவாள்.

"நீதான் பயந்தாங்கொள்ளி ரெண்டு நிமிஷத்துல கீ வந்திடும்னு சொல்லியும் பயத்துல மயங்கிட்ட" என்று வம்பிழுக்க,

"அவ்ளோ தான் உங்களுக்கு மரியாதை" என்று செல்வா முறைக்க, அவனது முகத்தில் மந்தகாச புன்னகை.

புன்னகையுடனே அவளை நெருங்கி வர அவளுக்கு ஏதோ ஏடா கூடமாக கூற போகிறான் என்று புரிந்து இதயம் துடித்தது.

சடுதியில் அவளை நெருங்கியவன்,

"உன்னை யாரு மரியாதை கொடுக்க சொன்னது. உன் இஷ்டப்படியே கூப்டுக்கோ ஈவன் ஆஃபடர் மேரேஜ்" என்று நெருக்கத்தில் மூச்சுக்காற்று பட கூறிவிட்டு கண்ணடிக்க,

சடுதியில் அவளுக்கு முகம் சிவந்து விட்டது.

ஒற்றை கையால் அவனை சட்டென்று தள்ளிவிட்டவள் அவனை முறைத்துவிட்டு முகத்தை திருப்பிவிட,

இவனது இதழ்களில் குறும்பு புன்னகை. விழிகள் அவளது சிவந்த வதனத்தின் மீது தான் ரசனையாக படிந்தது.

அவனது செயலில் இதயம் படபடக்க தன்னை நிதானப்படுத்தியவள்,

"இப்போ யாரு உங்களை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொன்னா?" என்று அவளது அக்மார்க் முறைப்பை வெளியிட,

அவன் இதழ்களில் பூத்த விஷமப் புன்னகையுடன் பதிலளிக்க வருகையில்,

"செல்வா என்னாச்சு?" என்று பதட்டத்துடன் உள்ளே நுழைந்தாள் பானு.

"எனக்கு ஒன்னுமில்லை" என்று செல்வா பானுவை சமாதானம் செய்ய,

"ஆமா பயப்பட்ற‌ அளவுக்கு ஏதும் இல்லை" என்று வல்லபனும் கூறிய பிறகு தான் பானு சாதாரணமானாள்.

பின்னர், "சரி கிளம்புறேன் பாத்துக்கம்மா" என்று பானுவிடம் கூறிவிட்டு இவள் புறம் திரும்பியவன் குறும்பு சிரிப்புடன் கண்சிமிட்டி,

"நீ தான் என்னை கல்யாணம் பண்ணிக்க போற" என்று வாயசைத்துவிட்டு செல்ல,

அவளுக்கு தெளிவாக விளங்க அவனை முறையோ முறை என்று முறைத்தாள்.

வெளியே வந்த வல்லபனுக்கு முகம் முழுவதும் புன்னகை தான்.

அவள் கண்விழித்ததும் நடந்ததை நினைத்து பயப்படவோ வருந்தவோ கூடாது என்று தான் அவளை வம்பிழுத்து பேசி சாதாரணமாக்கியிருந்தான்.
அதை அவளும் உணர்ந்திருந்தாள்.

"க்யூட் ஜான்சிராணி" என்று சன்னமாய் முணுமுணுத்தவனது இதழோரம் சிரிப்பில் மின்னியது.

எதுவரை போகலாம் என்று நீ
சொல்லவேண்டும் என்றுதான்
விடாமல் கேட்கிறேன்
தேன் முத்தங்கள் மட்டுமே
போதும் என்று சொல்வதால்
தொடாமல் போகிறேன்…


*************************
 
Administrator
Staff member
Messages
606
Reaction score
836
Points
93
"பவி எல்லாத்தையும் எடுத்தாச்சா?" என்று வேதவள்ளி கேட்க,

"ஹ்ம்ம் எடுத்துட்டேன் மா" என்று பவி பதில் மொழிய,

'ப்பா இனி இந்த ஹாஸ்பிட்டல் வாசத்துல இருந்து விடுதலை. இனி ஹாஸ்பிட்டல் பக்கம் வரவே கூடாது சாமி' என்று மனதிற்குள் வேண்டிய‌ வேதவள்ளி கையில் செல்வாவின் மருத்துவ அறிக்கை அடங்கிய பையை எடுத்து கொண்டு சென்றார்.

அவரை தொடர்ந்து எல்லோரும் மருத்துவமனையிலிருந்து வெளியேற,

வல்லபன் மட்டும் மருத்துவமனையின் கட்டணத்தை செலுத்த சென்றான்.

எல்லோரும் வாயிலின் ஓரத்தில் நிற்க, அதியின் விரலை பிடித்தபடி இருந்த செல்வாவின் பார்வை மட்டும் வல்லபனிடம் இருந்தது.

வல்லபன், "எவ்ளோ பில்?" என வினவ,

"ட்வெல் லாக்ஸ் சார்" என்று பதில் வந்தது.

வல்லபன் ஏதும் கூறாது தனது பணப்பரிவர்த்தன அட்டையை எடுத்து நீட்டினான்.

சற்று தூரத்தில் நின்றிருந்த செல்வாவிற்கு பனிரெண்டு லட்சம் என்ற வார்த்தையில் ஒரு நொடி இதயம் நின்று துடித்தது.

'பனிரெண்டு லட்சமா? ஆறுமாத காலம் மருத்துவமனையில் இருந்ததற்கு இவ்வளவு பணமா?' என்று அதிர,

'இவ்வளவு பெரிய மருத்துவமனையில் இப்படித்தான் கட்டணம் வசூலிப்பார்கள்' என்று மற்றொரு மனம் கூறியது.

முதல் முறையாக, 'இவர் என்ன வேலை பார்க்கிறார். இவருடைய வருமானம் எவ்வளவு. பனிரெண்டு லட்சத்தை இத்தனை சாதரணமாக கொடுக்கிறாரா?' என்று கேள்வி எழுந்தது.


அங்கு அந்த பணிப்பெண் பணத்தை எடுத்துவிட்டு மீண்டும் அட்டையை நீட்ட, அதனை வாங்கி கொண்ட வல்லபன் சாதரணமாக வர,

இங்கே இவளுக்குள் தான் புயல் பலமாக வீசியது.

அவளை நோக்கி வந்தவன் தன்னையே நோக்கியிருந்தவளை கண்டு புருவத்தை உச்சிமேட்டிற்கு என்னவென்பதாய் உயர்த்த,

'ஒன்றுமில்லை' என்று வேகமாக தலையசைத்தவள் முகத்தை திருப்பி கொண்டாள்.

அதன் பின்னர் மருத்துவமனையிலிருந்து மகிழுந்தில் விமான நிலையத்தை நோக்கி ஒரு பயணம்.

செல்வா ஒருவித குழப்பத்தில் தான் அவர்களுடன் சென்றாள்.

ராமநாதன் தான் தங்களுடைய வீட்டிற்கு வந்து செல்லுமாறு அழைக்க அதற்காகத்தான் இப்போது கோவையை நோக்கி விமானப்பயணம்.

செல்வாவிற்கு அது தான் முதல் விமானப் பயணம் அவளை பொறுத்தவரை.

ஹைத்ரபாத் விமான நிலையம் பரபரப்புடன் இயங்கி கொண்டிருந்தது.

செல்வாவின் குடும்பத்தினர் நுழைந்ததும் செக் இன் செய்முறை செய்வதற்காக வரிசையில் இயல்பாக நிற்க,

செல்வா தான் முதல் முறை என்பதால் சிறிது தடுமாறி போனாள்.

"செல்வா ஏர்போர்ட் வந்ததும் பர்ஸ்ட் செக் இன் பண்ணனும். அவங்க கேக்கும் போது இதை கொடுக்கணும்" என்று இயல்பாய் தாங்கி கொண்டவன் பேச,
சம்மதமாக தலையசைத்தாள்.

இதையெல்லாம் மற்றவர்கள் கவனிக்கத்தான் செய்தனர்.‌ அவர்களுக்கு இடையே ஒரு பிணைப்பு உருவாக வேண்டும் என்ற அவ்வாறு செய்தனர்.

அது வல்லபனுக்கு புரிந்தது. ஆனால் செல்வாவிற்கு தான் தெரியவில்லை.

செயல்முறைகளை முடித்துவிட்டு விமானநிலையத்தின் 'லாஞ்ச்' என்றழைக்கப்படும் காத்திருப்பறையில் அமர்ந்தனர்.

சுற்றி முற்றி பார்த்தபடி இருந்த செல்வாவின் பார்வை அங்கிருந்த தேநீர் விடுதியில் பதிந்தது.

அதனை கண்டதும் அவளுக்கு தேநீர் அருந்தும் ஆசை வந்துவிட்டது. அவள் தான் மிகப்பெரிய தேநீர் பிரியை ஆகிற்றே?

யாரிடம் கேட்பது என்று சிந்தனையுடன் இருக்க,

இதற்குள் இவளது பார்வை போகும் திசையை கவனித்துவிட்டவன்,

"டீ வேணுமா செல்வா?" என்க,

"ஹான்…" என்று ஒருகணம் திகைத்தவள்,

"ம்ஹும் வேணாம்" என்று தலையசைத்தாள்.

அவன் வாங்கி கொடுத்ததை அருந்த ஏனோ எண்ணமில்லை. மனம் தந்தையிடம் தான் சென்றது.
அவளை பொறுத்தவரை அவள் ஒரு கல்லூரி மாணவி.‌ அவளுடைய தேவைகளை பெற்றோரிடம் தான் கேட்க வேண்டும் என்று நினைப்பு.

ஆனால் அவளது தந்தையோ அவளது தமையனிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.

"வா டீ குடிக்கலாம்" என்று எழுந்து கொள்ள,

இவள், 'வரமாட்டேன் என்ற பிறகு‌‌ எழுந்து நிற்கிறானே?' என்று திகைக்க,

"ஹ்ம்ம் வா" என்று மீண்டும் அழுத்தி கூற,

இவள் தானாக எழுந்து கொண்டாள்.

வல்லபனது பார்வை மற்றவர்களிடம் பதிந்தது. அவர்கள் யாரும் வரவில்லை என்று கூறிவிட்டனர்.

அதி மட்டும், "ப்பா நானு நானு…" என்று கையை தூக்க,

"உனக்கில்லாததா?" என்று புன்னகையுடன் மகளை கையில் வாரி கொண்டவன் நடக்க,
செல்வா பின்னே நடந்தாள்.

தேநீர் விடுதியை அடைந்ததும் மேஜை மேல் மகளை அமர வைத்துவிட்டு வல்லபன் அமர செல்வா எதிரில் அமர்ந்துகொண்டாள்.

இரண்டு தேநீரை தங்களுக்கு வரவைத்துவிட்டு அதிக்கு பாலை வரவைக்க,

அதி, "ம்மா கொது" என்று அவள்புறம் நகர்த்தி தாயை ஆர்வமாக பார்க்க, செல்வா விழித்தாள்.

அவள் இதுவரை குழந்தைகளிடம் அத்தனை நெருக்கமாய் பழகியதில்லை. அவர்களை கையாண்டதும் இல்லை.

'பால் வேறு சற்று சூடாக இருந்தது. கொடுக்கும் போது குழந்தையின் மேல் சிந்திவிட்டால் என்ன‌ செய்வது?' என்று அவள் யோசிக்க,

அவளது உணர்வுகளை படித்தவன்,

"அதிக்குட்டி இங்கவா அப்பா கொடுக்கிறேன்" என்று கை நீட்ட,

இப்போதும் குழந்தையின் பார்வை தாயிடம் சென்று நின்றது.

அதிலே செல்வாவிற்கு புரிந்தது தன்னுடைய அனுமதிக்காக தான் பார்க்கிறாள் என்று.

இதில் செல்வாவின் முகத்தில் புன்னகை குமிழிட,

"ஹ்ம்ம்…" என்பதாய் தலையசைத்த நொடி, அதி தந்தையிடம் தாவியிருந்தாள்.

வல்லபன் தேநீரை அருந்தியபடி அதிக்கும் பாலை புகட்ட,

செல்வா தன்னுடையதில் பார்வையை பதித்தாள்.

இஞ்சியும் ஏலக்காயும் சேர்த்து போடப்பட்டிருந்த தேநீரின் வாசம் நாசிகமலத்தினுள் நுழைந்து உள்ளத்தை நிரப்ப, ஆழ்ந்து அதன் வாசத்தை உள்ளிழுத்தவள் அதனை அருந்த துவங்கினாள்.

செல்வாவின் செயலை கண்டதும் வல்வபனின் முகத்தில் மெல்லிய கீற்றாய் புன்னகை அரும்பியது.

நினைவுகள் மறந்தாலும் சிலரது பழக்கங்கள் உள்ளுக்குள்ளேயே தங்கிவிடும் போலும் என்று நினைத்து கொண்டான்.

தந்தையும் மகளும் வேகமாய் அருந்தி முடித்திட இவள் மட்டும் பொறுமையாய் ரசித்து ருசித்து குடித்தாள்.

செல்வாவிற்கு அப்போது தான் மறந்து போயிருந்த மருத்துவமனை கட்டணம் விபரம் நினைவு வர மறுபடியும் குழப்ப ரேகைகள் அவளிடத்தில். அவள் குனிந்திருந்ததால் வல்லபனுக்கு தெரியவில்லை.

அவள் குடித்ததும், "போலாமா?" என்று மகளை கைகளில் தூக்கியவன் எழுந்து கொள்ள,

"ஹ்ம்ம்" என்று தலையசைத்தவளின் முகத்தில் குழப்பத்தின் எச்சங்கள் விரவியிருந்ததை கண்டு,

"என்ன செல்வா…? எனிதிங் எல்ஸ்?" என்றான்.

'நன்றாக தானே இருந்தாள். திடீரென என்னவாயிற்று இத்தனை குழப்பம்' என்று சிந்தனையுடன் பார்க்க,

"நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கணும் கேக்கலாமா?" என வினவ,

"ஹ்ம்ம் கேக்கலாமே" என்றவன் அவளை பார்த்தவாறு அமர்ந்துவிட்டான்.

விமானத்திற்கு இன்னும் நேரமிருந்தது. தன்னவளின் குழப்பத்தை தீர்த்துவிட்டு தான் மற்றைய வேலை என்று முடிவெடுத்துவிட்டான்.

"அது நீங்க என்ன வேலை பாக்குறீங்க?" என்று தயங்கி தயங்கி கேட்க,

அவனது முகத்தில் சிறிதாக புன்னகை முகிழ,

"இப்போதான் உனக்கு என்னை பத்தி தெரிஞ்சுக்க தோணுச்சா?" என்றவன்,

"ஏன் திடீர்னு இந்த கொஸ்டீன்?" என்க,

"அது ஹாஸ்பிடல் பில் ட்வெல் லேக்ஸ் வந்தது நீங்க கேஷுவலா பே பண்ணிட்டு வந்துட்டிங்களா அதை பாத்து தான் கேக்கணும்னு தோணுச்சு" என்று தயக்கமாய் கூறினாள்.

'ஊஃப்' இதை பற்றி தான் இவ்வளவு நேரம் குழப்பி கொண்டாளா?' என்று நினைத்து ஆசுவாசப்பட்டவன்,

"நான் பிஸ்னஸ் பண்றேன். நாம ஊருக்கு போனதும் நேர்ல அழைச்சிட்டு போய் காட்றேன்" என்க,

அவள், "என்ன பிஸ்னஸ்?" என்று விடாமல் கேட்டாள்.

இவ்வளவு பணத்தை இத்தனை சுலபமாக செலவு செய்யும் அளவிற்கு அப்படி என்ன பிஸ்னஸ் செய்கிறான் என்று அவளுக்கு தெரிந்து கொள்ள தோன்றியது.

அவளருகே வந்தவன், "நீ பயப்பட்ற அளவுக்கு நான் இல்லீகலா எதுவும் பண்ணலை. நேர்மையா தான் பிஸ்னஸ் பண்ணிட்டு இருக்கேன்" என்று கூறிவிட்டு நடக்க,

செல்வா தான் அவன் ஏதும் தவறாக நினைத்துவிட்டானோ என்று அச்சத்துடன் வேகமாக எழுந்து அவன் நடைக்கு ஈடுகொடுத்து அவன் முகம் நோக்கினாள்.

அது எப்போதும் போல நிர்மலாக இருக்க இவளுக்கு குழப்பமே எஞ்சியது.

மூவரும் சென்று அமர அடுத்த பதினைந்து நிமிடத்தில் விமானம் கிளம்புவதற்கான அழைப்பு வந்தது.

எல்லோரும் எழுந்து சென்றனர். ஏதோதோ சிந்தனையில் இருந்தவள் பவி அமர்ந்ததும் வேதவள்ளியை முந்தி கொண்டு அவளருகில் அமர்ந்துவிட்டாள்.

அப்போது தான் உள்ளே ஒரு ஆசுவாசம் பிறந்தது. விழிகள் வல்லபன் எங்கு அமர்கிறான் என்று சுழல, அவனும் செல்வாவை தான் நோக்கியிருந்தான்.

அவளது நடவடிக்கைகளை ஏற்கனவே கவனித்துவிட்டவனுக்கு அவளது எண்ணங்கள் தெரிந்தது. அவன் முகத்தை வைத்தே வல்லபனுக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என்று செல்வாவிற்கு புரிந்தது.

புரிந்த நொடி அவளது முகத்தில் சிறிதாக சங்கடம் குடிகொண்டது.

அதியை ஒரு தனது இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் பத்திரமாக அமர வைத்தவன் அவளை நோக்கி வர,

இவளுக்கு தான் இங்கே இதயம் மத்தளம் கொட்டியது. இரண்டு நாட்களாக அவனை பார்த்தவரை மிகவும் அழுத்தக்காரனாக தான் தெரிந்தான்.

வரும் தோரணையில் எதாவது கூறிவிடுவானோ…? என்று உள்ளுக்குள் அஞ்சியபடி பார்க்க,

நெருக்கத்தில் வந்து சட்டென்று குனிந்தவன் அவளது இருக்கை வாரை மாட்டிவிட இவள் தான் இங்கு அவனது நெருக்கத்தில் மூச்சை அடக்கி கொண்டாள்.

ஒரு கணம் இதயம் வெலவெலத்துப் போய்விட்டது. அவன் அவளிடம் இயல்பாக தான் நடந்தான். ஆனால் அவளுக்கு தான் புதியதான அவனது ஸ்பரிசம் பூகம்பத்தை உண்டு பண்ணியது.

வாரை மாட்டி முடிந்ததும் ஏதும் நடக்காதது போல கிளம்பிவிட இவள்தான் இங்கு தன்னிலை அடைய சில விநாடிகள் தேவைப்பட்டது.

எதற்கோ வருகிறான் என்று நினைத்தவள் இதனை சுத்தமாய் எதிர்ப்பார்க்கவில்லை.

வல்லபன் சென்று அதியின் அருகில் அமர்ந்துவிட்டான்.

இவள் தான் அவன் ஏதும் பேசாமல் சென்றதில் கோபமாக தான் இருக்கிறாரோ…?

ஏற்கனவே தேநீர் விடுதியில் அவ்வாறு கேட்டது. பின்னர் இருக்கைக்கு தான் நடந்துகொண்ட விதம் நிச்சயமாக அவனை கோபத்தில் நிறுத்தியிருக்கும் என்று எண்ணியவள் அவனையே பார்த்திருக்க,

வல்லபன் இங்கு தனது மகளுடன் ஐக்கியமாகிவிட்டான்.

அதி ஆர்வமாக ஏதோ கேட்க அவளுக்கு சிரிப்புடன் ஏதோ பதில் கூறியவன் மறந்தும் இவள் புறம் திரும்பவில்லை.

இதில் அவன் உறுதியாக தன் மீது கோபமாக தான் இருக்கிறான் என்று முடிவு செய்துவிட்டவளுக்கு உள்ளுக்குள் ஏதோ இனம்புரியாத வருத்தம் வந்து சேர்ந்தது.

அவளுக்கு புரியவில்லை பார்த்து வெறும் இரண்டு நாட்களே ஆன ஒருவருக்காக தான் வருந்துகிறோமா? ஏன்? என்று கேட்டால் பதிலில்லை.

இது உள்ளுக்குள்ளே ஏற்கனவே உண்டான பிணைப்பின் வெளிப்பாடா அல்லது தனக்கானவன் என்று அறிமுகப்படுத்தப் பட்டதால் உருவானா ஒன்றா என்று வினவினால் பதில் சுழியம் தான்.

ஏதோ ஒன்று அவளை என்னவோ வருத்தம் கொள்ள வைக்க இருக்கையில் சாய்ந்து கண்களை மூடி கொண்டாள்.

இன்னும் பிணைப்பே உருவாகாத இதயங்களிடத்தில் முதலே ஒரு இடைவெளியா? அதனை யார் நிரப்புவார்?

என் நிழலும்

என்னையே உதறும் நீ
நகரும் வழியில் தொடரும்
ஒரு முடிவே அமையா
கவிதை உடையும்….



 
Well-known member
Messages
1,081
Reaction score
770
Points
113
Superrrrrrrr superrrrrrrrr
Evlo jolly ah iruntha rendu perayum ippo ipdi amaithiya irukka vachittiye ma
 
Well-known member
Messages
612
Reaction score
348
Points
63
ஜான்சி ராணிக்கு சீக்கிரமா பழசு எல்லாம் ஞபாகம் வரும் 💕💕💕💕
 
Top