- Messages
- 1,300
- Reaction score
- 3,852
- Points
- 113
நேரம் – 24 
தண்ணீர் போத்தலில் சாய்த்து வைத்திருந்த அலைபேசியை காணொளி இணைப்பில் இணைத்து தாயிடம் பேசிக் கொண்டிருந்த இசைவாணி ஒரே ரிதத்துடன் சற்று சோம்பலுடன் வெங்காயத்தை மெதுவாய் நறுக்கினாள்.
தான் ஒரு ஆளுக்கு சமைக்க வேண்டுமே என்ற சலிப்பு அவள் வேலையில் தென்பட்டது. ஆனால் சுந்தரி மகள் சரியான நேரத்திற்கு உண்கிறாளா என விசாரணை புலனாய்வு குழு போல கேள்விகளை அடுக்க, அவளால் தப்பிக்க முடியவில்லை. தனக்காக இல்லயெனினும் அந்தப் பெண்மணிக்காக நேரத்திற்கு சரியாய் சாப்பிட்டு விடுகிறாள்.
“ஃபேன் எதுவும் இருந்தா உள்ளே எடுத்து வச்சுக்கோ வாணி. ஏன் இப்படி வேர்க்குது உனக்கு?” சுந்தரி அவள் முகத்தில் வழிந்த வியர்வையைப் பார்த்து அதட்ட, புறங்கையால் அதை துடைத்துவிட்டாள் மகள்.
“ஐஞ்சு நிமிஷத்துல ஆம்லேட் போட்ருவேன்மா. இதுல ஃபேன் எல்லாம் எடுத்துட்டு வந்து வைக்க முடியாது!” என சலித்தாள் இசைவாணி. அவள் லண்டன் சென்று வேலையில் சேர்ந்து ஒரு மாதம் கடகடவென ஒட்டியிருந்தது. புது இடம், புது மனிதர்கள், அலுவலகத்திலும் யாரையும் தெரியாது என்பதால் நிறைய தடுமாறிப் போயிருந்தாள். திரும்பும் இடமெங்கும் பரிட்சயமில்லாத முகம் தென்படவும் ஒரு வித சோர்வு தன்னாலே ஒட்டிக்கொண்டு விட்டது.
அவள் நன்றாக ஆங்கிலம் பேசுவாள் என்றாலும் கூட இங்கே இவர்களது நுனி நாக்கு ஆங்கில உச்சரிப்பு வெகு நளினமாக இருந்தது. முதலில் புரிந்து கொள்ளத் தடுமாறி, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றிற்கும் தன்னைப் பழகிக் கொண்டிருக்கிறாள். கடந்த ஒரு மாதத்தில் ஒரு தமிழ் பேசும் ஆள் கூட இவளது கண்ணில் தென்படவேயில்லை என்பதுதான் பெரும் சோகம். அவளது அலுவலகத்தில் நிறைய இந்தியர்கள் பணிபுரகின்றனர். ஆனால் யாருக்கும் தமிழ் தெரியாது. இந்தி பேசும் மக்கள்தான் அதிகம். ஓரிரண்டு மலையாளி, தெலுங்கு மக்களை காண முடிந்தது. இங்கு வந்ததும் முதலில் ஜெட் லாக்தான் அவளுக்குப் பெரிய தலைவலியாக இருந்தது. இரவில் உறக்கம் வராமல் தவித்து, அலுவலகத்தில் சென்று உறங்கி மற்றவர்கள் முன்னே கூச்சப்பட்டு, சங்கடப்பட்டாள்.
இப்போது அவளது உறக்க சுழற்சி லண்டன் கால நேரத்திற்கு ஓரளவிற்குப் பழகிவிட்டது.
“வாணிம்மா... அங்க எல்லாரும் குட்டி குட்டியா ட்ரெஸ் போட்டிருப்பாங்களாமே. அது அங்க சகஜம். அதுக்காக நீயும் அப்படியெல்லாம் போட்டுட்டு திரியாத. அதெல்லாம் நமக்கு ஒத்து வராது. எப்பவும் போல சுடிதார் போடு. குளிர் காலம் வந்தா ஜாக்கெட் மேல போட்டுக்கோ” அவள் சென்றிறங்கிய நாள் முதல் இப்படியான பேச்சுக்களைத் தொடங்கிய சுந்தரி,
“ஆம்பளை பொம்பளை வித்யாசம் இல்லாம பசங்க கட்டிக் கட்டிப் பிடிச்சுப் பேசுவாங்களாம். நீ கொஞ்சம் தள்ளியே இருந்துக்கோ. மாப்பிள்ளை எதுவும் தப்பா நினைச்சுப்பாரு!” என அங்கிருக்கும் ஆட்கள் அப்படி இப்படி உணவு என்னவென தினமும் கேட்டு, மகளிடம் பரிதியை ஏதோவொரு வகையில் அவர்தான் நினைவுப்படுத்தினார்.
மற்றபடி அவன் நினைவை முற்றிலும் மனத்திலிருந்து துடைத்தெடுத்தெறிந்துவிட்டாள் இசைவாணி. அவன் குரலைக்
கூட கேட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. என்னவோ இப்போதுதான் நிம்மதியாய் அவளால் மூச்சு விட முடிந்தது. அங்கே அவன் வீட்டிலிருக்கும்போது எப்போதும் இவள் என்ன செய்கிறாள் என சந்தேகக் கண்ணோடு பார்த்து ஏதாவது காயப்படுத்திக் கொண்டே இருப்பான். அங்கே இருக்கவே அவளுக்குப் பிடிக்கவில்லை. வேறு வழியில்லாமல் நாட்களை நெட்டித் தள்ளியவள், இங்கு வந்ததும் ஆசுவாசப் பெருமூச்சுவிட்டாள். தினமும் காலை மாலை தாயிடம் பேசிவிடுவாள். அப்படியே மாமியாருக்கும் அழைத்துப் பேசுவதை வழக்கப்படுத்தினாள். இல்லையில்லை, சுந்தரிதான் அவளைப் பழகச் செய்தார்.
லண்டன் சென்றதும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறைதான் சிந்தாமணிக்கு அழைத்துப் பேசினாள். இதையறிந்த சுந்தரி, “என் காலத்துக்குப் பிறகு மாமியார் வீடுதான் உனக்கு எல்லாம் வாணிம்மா. ஒழுங்கா தம்பிக்கிட்டே பேசும்போது உன் மாமியார்கிட்டேயும் நாலு வார்த்தைப் பேசு. அவங்க மூத்தவங்க, நீதான் என்ன ஏதுன்னு பேசணும். தள்ளி தள்ளிப் போகாத!” என மகளை அதட்டினார். அதனால் அவள் சிந்தாமணிக்கும் அழைத்துப் பேச வேண்டியதாகப் போயிற்று.
“ஏன் வாணி... கடைசியா எப்போ வீட்டுக்குத் தள்ளியிருந்த? இதை கேட்கணும் நினைச்சு மறந்துட்டேன். நீ வேற தனியா போய்ட்ட. நாள் தள்ளி கிள்ளிப் போயிருந்தா எப்படி தனியாளா அங்க சமாளிப்ப?” சிந்தாமணி அவள் அழைத்ததும் இப்படி கேட்டுவிட, இசைவாணி ஒரு நிமிடம் வாயடைத்துப் போனாள். பின்னர் தன்னை சமாளித்தவள், அது போல எதுவும் இல்லையென சங்கடத்துடன் கூறினாள்.
“கல்யாணமாகி மூனு மாசம் ஆச்சே ஆத்தா. எனக்கெல்லாம் ரெண்டாம் மாசமே உன் புருஷன் நின்னுட்டான்!” என்றவர், “குழந்தை பெத்துக்குறதை தள்ளியெதுவும் போட்டிருக்கீங்களா என்ன?” என விசாரித்தார்.
அதற்கு என்ன பதில் கூறவது எனத் தெரியாமல் இவள் விழிக்க, “குழந்தைன்றது கடவுள் கொடுக்குற வரம் வாணி. நம்மளா அதை தள்ளிப் போட கூடாது. புள்ளை தங்கிடுச்சுன்னா பெத்து என்கிட்டே கொடு. பேரப் புள்ளையை வளர்க்குறதைவிட பெரிய வேலை என்ன கிடக்கு எனக்கு? சம்பாத்தியம் முக்கியம்தான். ஆனால் வயசு இருக்கப்பவே புள்ளை பெத்துக்குறதும் முக்கியம்!” முடிந்தளவு சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொடு என அவர் மறைமுகமாக அழுத்திக் கூற, இவளுக்கு அந்தப் பேச்சே பிடிக்கவில்லை. பல்லைக் கடித்துப் பொறுத்தவள், பின்னர் எல்லாவற்றிற்கும் சரியென தலையை அசைத்து அழைப்பைத் துண்டித்தாள்.
மீண்டும் ஒருமுறை சிந்தாமணி அந்தப் பேச்சை எடுத்தப் போது வெகுலாவகமாக அதை தவிர்த்துவிட்டாள். அவரும் இந்த விஷயத்தை ஆறப்போட்டு விட்டார்.
“வாணி... மாப்பிள்ளை எப்போ அங்க வருவாரு? நீ போய் ஒரு மாசம் ஆச்சே. பாவம் அவரும் நீ இல்லாம இங்க தனியா கஷ்டப்படுறாரு!” பேச்சினூடே சுந்தரிக் கேட்டதும்,
“ஹம்ம்... அவனுக்கு விசா அப்பளை பண்ணிட்டேன்மா. பயோமெட்ரிக்ஸ் முடிஞ்சாதான் விசா வரும். கொஞ்சம் டைமாகும்!” என்றாள் அசட்டையாய்.
“சரி.. சரி. நீ போய் சாப்பிட்டு தூங்கு. ரொம்ப சோர்வா தெரியுற!” இவர் கனிவுடன் கூற, அலைபேசியைக் கையிலெடுத்தவள்,
“அதெல்லாம் இருக்கட்டும். நீ ஏன்மா ரெண்டு நாளா ஒருமாதிரி டல்லா இருக்க. உடம்புக்கு என்ன பண்ணுது. நெக்ஸ்ட் வீக் சுகர் டெஸ்ட் எடுக்கணும் இல்ல. நான் கொடுத்த நம்பருக்கு கால் பண்ணா ஒரு அண்ணா கார்ல வருவாரு. அவரே ஹாஸ்பிடல்ல பிக்கப் அண்ட் ட்ராப் பண்ணிடுவாரும்மா. போய் சுகர், பீபி செக் பண்ணும்மா. சர்க்கரை எதுவும் சாப்பிடலை தானே?” எனக் கவலையாய் கேட்டாள் இசைவாணி. சுந்தரியை அங்கு தனியே விட்டுட்டு வந்ததில் இவளுக்கு மனதிற்குள் ஏக வருத்தம்.
“வாணிம்மா... சர்க்கரையை ஒரு பேச்சுக்கு கூட அம்மா கண்ல காட்டுறது இல்ல நான். ஒரு மாசத்துக்கே ஒரு லிட்டர் எண்ணெய்தான் சமையலுக்கு வாங்குனேன். நீ அம்மாவைப் பத்திக் கவலைப்படாத டா!” சுந்தரி கட்டிலுக்கு கீழே கால் நீட்டி அமர்ந்து தைலத்தை உள்ளங்கையில் ஊற்றி தன் முழங்காலில் தேய்த்தபடியே கமலா பதிலளித்தார்.
“என்னாச்சு கமலாம்மா... முட்டி வலி அதிகமாகிடுச்சா உங்களுக்கு? அம்மாவுக்கும் பார்க்கும்போது நீங்களும் டாக்டரைப் பாருங்க!” அவர் முகத்தைச் சுளித்ததும் இவள் அனிச்சையாய் அவரது காலைப் பார்த்துவிட்டுக் கூறினாள்.
“கால் வலி இப்போ பரவாயில்லை டா. பரிதி தம்பிதான் நான் தாங்கி தாங்கி நடக்குறதைப் பார்த்துட்டு ஏதோ நாட்டு மருந்து வாங்கிட்டு வந்தாரு. மூனு நாளா தேய்ச்சேன். வலியே தெரியலை, சுகமா இருக்கு!” என்றவர்,
“நீ இல்லாத குறையைத் தம்பிதான் தீர்த்து வைக்கிறாருடா. டெய்லி அரைமணி நேரமாவது வந்து பேசிட்டுத்தான் போவாரு. என்னமோ இந்த வீட்ல ஆம்பளை புள்ளை இல்லாத மாதிரியே தெரியலை. முதல்ல நான் கூட ரொம்ப விளையாட்டுத்தனமா இருக்காரேன்னு நினைச்சேன். ஆனால் பொறுப்பான புள்ளை. என்ன கொஞ்சமா அப்பப்போ என்கிட்டே வம்பிழுக்குறாரு. ஆனால் எனக்கு கால் வலின்னதும் உடனே போய் தைலம் வாங்கிட்டு வந்தாரு!” என்றவர் பரிதி புராணம் பாட, இவள் கடமைக்கு கேட்டு வைத்தாள்.
“அம்மாக்கு சுகர் டெஸ்ட் எப்போ எடுக்கணும்னு கேட்டாரு. அவரே ஆஸ்பத்திரி கூட்டிட்டு போறேன்னு சொல்லிருக்காரு. நீ போனதும் நான் கூட அம்மாவை எப்படி தனியா ஆஸ்பத்திரி கூட்டிடுட்டு போவேன்னு பயந்தேன். ஆனால் தம்பி வரேன்னு சொல்லிட்டாரு!” விடாமல் அவன் துதி பாடினார் பெண்மணி.
“ஆமா வாணி... உன்னைப் பத்தி ரொம்ப கவலைப்பட்டுக்கிட்டே கிடப்பேன் நான். அதுக்குத்தான் நல்ல பையனை மருமகனா கொடுத்துட்டாரு கடவுளு. என்னையே இந்தளவுக்குப் பார்த்துக்கிறாரு. உன்னை அப்போ எப்படி தாங்குவாரு? இப்போலாம் உன்னைப் பத்தி நான் பெருசா யோசிக்கிறதே இல்ல டீ!” சுந்தரி முகம் மலர கூறினார். இசைவாணி சென்ற மறுநாளிலிருந்து பரிதி தினமும் மாமியாரைப் பார்க்க வந்தான். அவரிடம் சிரித்துப் பேசி இயல்பாக்கினான். இசைவாணியின் இடத்தை நிரப்ப முயன்றான். அவனுக்கும் அவளுக்கும் தனிப்பட்ட பிரச்சனைக்குள் பெரியவர்களை அவன் கொண்டுவரவில்லை.
சுந்தரியில் உடல்நிலை குறித்து வெகுவாக அக்கறை காண்பித்தான், கண்டித்தான். கமலாவைக் கேலி செய்து வம்பிழுத்தான். இப்படி அவனது இருப்பை அவர்களுக்கு வழங்கப்படுத்தினான்.
இனிப்பு மற்றும் எண்ணெயில் பொரிக்காத சத்து மிகுந்த நொறுக்குத் தீனிகளாகப் பார்த்து சுந்தரிக்கு வாங்கி வந்து கொடுத்தான். அவன் வாங்கி வந்த இனிப்பு குறைந்த சத்து மாவு லட்டு அவரது விருப்பப்பட்டியலில் இணைந்திருந்தது. அதை அறிந்தவன், இரண்டு மூன்று முறை வாங்கி வந்துவிட்டான்.
“என்ன தம்பி... சின்ன குழந்தைக்கு வாங்கித் தர மாதிரி வாங்கிட்டு வர்றீங்க?” சுந்தரி சங்கோஜத்துடன் மறுக்க,
“உங்கப் பொண்ணு வாங்கிட்டு வந்தா இப்படி கேட்பீங்களா? நான்னதும் வேணாம்னு சொல்றீங்க!” என அவன் உரிமையாகக் கோபம்கொள்ள, இவருக்கு மனம் நிறைந்தது. இடையே ஒரு ஞாயிற்றுக் கிழமை சரவணாவும் அற்புதாவும் வந்து சென்றனர். இசைவாணி இல்லாது அத்தை வருந்துவார் என்றெண்ணி அவர்கள் வந்து தங்கினர். பரிதியும் அவர்களுடன் இணைந்து கொண்டான்.
வீடே கலகலவென்றிருக்க, பெரியவர்களுக்கும் நேரம் போனது. இப்படி ஏதோ ஒரு வகையில் அவர்களிடம் அவன் அக்கறையும் பரிவும் காண்பிக்க, இரண்டு பெரியவர்களுக்கும் அவன் மீதான பிம்பம் மொத்தமும் மாறிப் போனது. மரியாதையுடனும் அன்புடனும் அவனை நடத்தினர். ஆனால் அவன் அதையெல்லாம் எதிர்பார்க்கவே இல்லை. வெகு இயல்பாக அவர்களுடன் ஒன்றிப் போனான். இதெல்லாம் சுந்தரியின் வாய்வழியாக இசைவாணி கேட்டுக் கொண்டாள். மற்றபடி தோண்டித் துருவி விசாரிக்கவில்லை. தாயிடம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தவள், சிந்தாமணியிடமும் பேசினாள்.
வயிறு கபகபவென பசிக்க, ஆம்லேட் ஆறிப் போயிருந்தது. மதியம் வைத்த சாதத்தில் ரசத்தை ஊற்றிக்கொண்டு வந்து கூடத்தில் அமர்ந்தாள. அது இருபடுக்கையறைக் கொண்ட வீடு. இவளும் பெங்காலி பெண் ஒருத்தியும் இந்த வீட்டைப் பகிர்ந்திருக்கின்றனர். அந்தப் பெண் மருந்தியலில் முதுகலை இங்கேயே படித்துவிட்டு, ஒரு தொழில்சாலையில் பணிபுரிகிறாள். அவளது காதலனும் அங்குதான் வேலை செய்கிறான். ஒரிரு முறை இங்கு வந்ததும் சென்றிருக்கிறான். இந்தியா போல அங்கு யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் மூன்றாவது நபர் நுழைய முடியாது. அவன் இங்கு வந்து தங்கி
ச் சென்றதைக் கண்டும் காணாமலும் கடந்துவிட்டாள் இசைவாணி.
தண்ணீர் போத்தலில் சாய்த்து வைத்திருந்த அலைபேசியை காணொளி இணைப்பில் இணைத்து தாயிடம் பேசிக் கொண்டிருந்த இசைவாணி ஒரே ரிதத்துடன் சற்று சோம்பலுடன் வெங்காயத்தை மெதுவாய் நறுக்கினாள்.
தான் ஒரு ஆளுக்கு சமைக்க வேண்டுமே என்ற சலிப்பு அவள் வேலையில் தென்பட்டது. ஆனால் சுந்தரி மகள் சரியான நேரத்திற்கு உண்கிறாளா என விசாரணை புலனாய்வு குழு போல கேள்விகளை அடுக்க, அவளால் தப்பிக்க முடியவில்லை. தனக்காக இல்லயெனினும் அந்தப் பெண்மணிக்காக நேரத்திற்கு சரியாய் சாப்பிட்டு விடுகிறாள்.
“ஃபேன் எதுவும் இருந்தா உள்ளே எடுத்து வச்சுக்கோ வாணி. ஏன் இப்படி வேர்க்குது உனக்கு?” சுந்தரி அவள் முகத்தில் வழிந்த வியர்வையைப் பார்த்து அதட்ட, புறங்கையால் அதை துடைத்துவிட்டாள் மகள்.
“ஐஞ்சு நிமிஷத்துல ஆம்லேட் போட்ருவேன்மா. இதுல ஃபேன் எல்லாம் எடுத்துட்டு வந்து வைக்க முடியாது!” என சலித்தாள் இசைவாணி. அவள் லண்டன் சென்று வேலையில் சேர்ந்து ஒரு மாதம் கடகடவென ஒட்டியிருந்தது. புது இடம், புது மனிதர்கள், அலுவலகத்திலும் யாரையும் தெரியாது என்பதால் நிறைய தடுமாறிப் போயிருந்தாள். திரும்பும் இடமெங்கும் பரிட்சயமில்லாத முகம் தென்படவும் ஒரு வித சோர்வு தன்னாலே ஒட்டிக்கொண்டு விட்டது.
அவள் நன்றாக ஆங்கிலம் பேசுவாள் என்றாலும் கூட இங்கே இவர்களது நுனி நாக்கு ஆங்கில உச்சரிப்பு வெகு நளினமாக இருந்தது. முதலில் புரிந்து கொள்ளத் தடுமாறி, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றிற்கும் தன்னைப் பழகிக் கொண்டிருக்கிறாள். கடந்த ஒரு மாதத்தில் ஒரு தமிழ் பேசும் ஆள் கூட இவளது கண்ணில் தென்படவேயில்லை என்பதுதான் பெரும் சோகம். அவளது அலுவலகத்தில் நிறைய இந்தியர்கள் பணிபுரகின்றனர். ஆனால் யாருக்கும் தமிழ் தெரியாது. இந்தி பேசும் மக்கள்தான் அதிகம். ஓரிரண்டு மலையாளி, தெலுங்கு மக்களை காண முடிந்தது. இங்கு வந்ததும் முதலில் ஜெட் லாக்தான் அவளுக்குப் பெரிய தலைவலியாக இருந்தது. இரவில் உறக்கம் வராமல் தவித்து, அலுவலகத்தில் சென்று உறங்கி மற்றவர்கள் முன்னே கூச்சப்பட்டு, சங்கடப்பட்டாள்.
இப்போது அவளது உறக்க சுழற்சி லண்டன் கால நேரத்திற்கு ஓரளவிற்குப் பழகிவிட்டது.
“வாணிம்மா... அங்க எல்லாரும் குட்டி குட்டியா ட்ரெஸ் போட்டிருப்பாங்களாமே. அது அங்க சகஜம். அதுக்காக நீயும் அப்படியெல்லாம் போட்டுட்டு திரியாத. அதெல்லாம் நமக்கு ஒத்து வராது. எப்பவும் போல சுடிதார் போடு. குளிர் காலம் வந்தா ஜாக்கெட் மேல போட்டுக்கோ” அவள் சென்றிறங்கிய நாள் முதல் இப்படியான பேச்சுக்களைத் தொடங்கிய சுந்தரி,
“ஆம்பளை பொம்பளை வித்யாசம் இல்லாம பசங்க கட்டிக் கட்டிப் பிடிச்சுப் பேசுவாங்களாம். நீ கொஞ்சம் தள்ளியே இருந்துக்கோ. மாப்பிள்ளை எதுவும் தப்பா நினைச்சுப்பாரு!” என அங்கிருக்கும் ஆட்கள் அப்படி இப்படி உணவு என்னவென தினமும் கேட்டு, மகளிடம் பரிதியை ஏதோவொரு வகையில் அவர்தான் நினைவுப்படுத்தினார்.
மற்றபடி அவன் நினைவை முற்றிலும் மனத்திலிருந்து துடைத்தெடுத்தெறிந்துவிட்டாள் இசைவாணி. அவன் குரலைக்
கூட கேட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. என்னவோ இப்போதுதான் நிம்மதியாய் அவளால் மூச்சு விட முடிந்தது. அங்கே அவன் வீட்டிலிருக்கும்போது எப்போதும் இவள் என்ன செய்கிறாள் என சந்தேகக் கண்ணோடு பார்த்து ஏதாவது காயப்படுத்திக் கொண்டே இருப்பான். அங்கே இருக்கவே அவளுக்குப் பிடிக்கவில்லை. வேறு வழியில்லாமல் நாட்களை நெட்டித் தள்ளியவள், இங்கு வந்ததும் ஆசுவாசப் பெருமூச்சுவிட்டாள். தினமும் காலை மாலை தாயிடம் பேசிவிடுவாள். அப்படியே மாமியாருக்கும் அழைத்துப் பேசுவதை வழக்கப்படுத்தினாள். இல்லையில்லை, சுந்தரிதான் அவளைப் பழகச் செய்தார்.
லண்டன் சென்றதும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறைதான் சிந்தாமணிக்கு அழைத்துப் பேசினாள். இதையறிந்த சுந்தரி, “என் காலத்துக்குப் பிறகு மாமியார் வீடுதான் உனக்கு எல்லாம் வாணிம்மா. ஒழுங்கா தம்பிக்கிட்டே பேசும்போது உன் மாமியார்கிட்டேயும் நாலு வார்த்தைப் பேசு. அவங்க மூத்தவங்க, நீதான் என்ன ஏதுன்னு பேசணும். தள்ளி தள்ளிப் போகாத!” என மகளை அதட்டினார். அதனால் அவள் சிந்தாமணிக்கும் அழைத்துப் பேச வேண்டியதாகப் போயிற்று.
“ஏன் வாணி... கடைசியா எப்போ வீட்டுக்குத் தள்ளியிருந்த? இதை கேட்கணும் நினைச்சு மறந்துட்டேன். நீ வேற தனியா போய்ட்ட. நாள் தள்ளி கிள்ளிப் போயிருந்தா எப்படி தனியாளா அங்க சமாளிப்ப?” சிந்தாமணி அவள் அழைத்ததும் இப்படி கேட்டுவிட, இசைவாணி ஒரு நிமிடம் வாயடைத்துப் போனாள். பின்னர் தன்னை சமாளித்தவள், அது போல எதுவும் இல்லையென சங்கடத்துடன் கூறினாள்.
“கல்யாணமாகி மூனு மாசம் ஆச்சே ஆத்தா. எனக்கெல்லாம் ரெண்டாம் மாசமே உன் புருஷன் நின்னுட்டான்!” என்றவர், “குழந்தை பெத்துக்குறதை தள்ளியெதுவும் போட்டிருக்கீங்களா என்ன?” என விசாரித்தார்.
அதற்கு என்ன பதில் கூறவது எனத் தெரியாமல் இவள் விழிக்க, “குழந்தைன்றது கடவுள் கொடுக்குற வரம் வாணி. நம்மளா அதை தள்ளிப் போட கூடாது. புள்ளை தங்கிடுச்சுன்னா பெத்து என்கிட்டே கொடு. பேரப் புள்ளையை வளர்க்குறதைவிட பெரிய வேலை என்ன கிடக்கு எனக்கு? சம்பாத்தியம் முக்கியம்தான். ஆனால் வயசு இருக்கப்பவே புள்ளை பெத்துக்குறதும் முக்கியம்!” முடிந்தளவு சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொடு என அவர் மறைமுகமாக அழுத்திக் கூற, இவளுக்கு அந்தப் பேச்சே பிடிக்கவில்லை. பல்லைக் கடித்துப் பொறுத்தவள், பின்னர் எல்லாவற்றிற்கும் சரியென தலையை அசைத்து அழைப்பைத் துண்டித்தாள்.
மீண்டும் ஒருமுறை சிந்தாமணி அந்தப் பேச்சை எடுத்தப் போது வெகுலாவகமாக அதை தவிர்த்துவிட்டாள். அவரும் இந்த விஷயத்தை ஆறப்போட்டு விட்டார்.
“வாணி... மாப்பிள்ளை எப்போ அங்க வருவாரு? நீ போய் ஒரு மாசம் ஆச்சே. பாவம் அவரும் நீ இல்லாம இங்க தனியா கஷ்டப்படுறாரு!” பேச்சினூடே சுந்தரிக் கேட்டதும்,
“ஹம்ம்... அவனுக்கு விசா அப்பளை பண்ணிட்டேன்மா. பயோமெட்ரிக்ஸ் முடிஞ்சாதான் விசா வரும். கொஞ்சம் டைமாகும்!” என்றாள் அசட்டையாய்.
“சரி.. சரி. நீ போய் சாப்பிட்டு தூங்கு. ரொம்ப சோர்வா தெரியுற!” இவர் கனிவுடன் கூற, அலைபேசியைக் கையிலெடுத்தவள்,
“அதெல்லாம் இருக்கட்டும். நீ ஏன்மா ரெண்டு நாளா ஒருமாதிரி டல்லா இருக்க. உடம்புக்கு என்ன பண்ணுது. நெக்ஸ்ட் வீக் சுகர் டெஸ்ட் எடுக்கணும் இல்ல. நான் கொடுத்த நம்பருக்கு கால் பண்ணா ஒரு அண்ணா கார்ல வருவாரு. அவரே ஹாஸ்பிடல்ல பிக்கப் அண்ட் ட்ராப் பண்ணிடுவாரும்மா. போய் சுகர், பீபி செக் பண்ணும்மா. சர்க்கரை எதுவும் சாப்பிடலை தானே?” எனக் கவலையாய் கேட்டாள் இசைவாணி. சுந்தரியை அங்கு தனியே விட்டுட்டு வந்ததில் இவளுக்கு மனதிற்குள் ஏக வருத்தம்.
“வாணிம்மா... சர்க்கரையை ஒரு பேச்சுக்கு கூட அம்மா கண்ல காட்டுறது இல்ல நான். ஒரு மாசத்துக்கே ஒரு லிட்டர் எண்ணெய்தான் சமையலுக்கு வாங்குனேன். நீ அம்மாவைப் பத்திக் கவலைப்படாத டா!” சுந்தரி கட்டிலுக்கு கீழே கால் நீட்டி அமர்ந்து தைலத்தை உள்ளங்கையில் ஊற்றி தன் முழங்காலில் தேய்த்தபடியே கமலா பதிலளித்தார்.
“என்னாச்சு கமலாம்மா... முட்டி வலி அதிகமாகிடுச்சா உங்களுக்கு? அம்மாவுக்கும் பார்க்கும்போது நீங்களும் டாக்டரைப் பாருங்க!” அவர் முகத்தைச் சுளித்ததும் இவள் அனிச்சையாய் அவரது காலைப் பார்த்துவிட்டுக் கூறினாள்.
“கால் வலி இப்போ பரவாயில்லை டா. பரிதி தம்பிதான் நான் தாங்கி தாங்கி நடக்குறதைப் பார்த்துட்டு ஏதோ நாட்டு மருந்து வாங்கிட்டு வந்தாரு. மூனு நாளா தேய்ச்சேன். வலியே தெரியலை, சுகமா இருக்கு!” என்றவர்,
“நீ இல்லாத குறையைத் தம்பிதான் தீர்த்து வைக்கிறாருடா. டெய்லி அரைமணி நேரமாவது வந்து பேசிட்டுத்தான் போவாரு. என்னமோ இந்த வீட்ல ஆம்பளை புள்ளை இல்லாத மாதிரியே தெரியலை. முதல்ல நான் கூட ரொம்ப விளையாட்டுத்தனமா இருக்காரேன்னு நினைச்சேன். ஆனால் பொறுப்பான புள்ளை. என்ன கொஞ்சமா அப்பப்போ என்கிட்டே வம்பிழுக்குறாரு. ஆனால் எனக்கு கால் வலின்னதும் உடனே போய் தைலம் வாங்கிட்டு வந்தாரு!” என்றவர் பரிதி புராணம் பாட, இவள் கடமைக்கு கேட்டு வைத்தாள்.
“அம்மாக்கு சுகர் டெஸ்ட் எப்போ எடுக்கணும்னு கேட்டாரு. அவரே ஆஸ்பத்திரி கூட்டிட்டு போறேன்னு சொல்லிருக்காரு. நீ போனதும் நான் கூட அம்மாவை எப்படி தனியா ஆஸ்பத்திரி கூட்டிடுட்டு போவேன்னு பயந்தேன். ஆனால் தம்பி வரேன்னு சொல்லிட்டாரு!” விடாமல் அவன் துதி பாடினார் பெண்மணி.
“ஆமா வாணி... உன்னைப் பத்தி ரொம்ப கவலைப்பட்டுக்கிட்டே கிடப்பேன் நான். அதுக்குத்தான் நல்ல பையனை மருமகனா கொடுத்துட்டாரு கடவுளு. என்னையே இந்தளவுக்குப் பார்த்துக்கிறாரு. உன்னை அப்போ எப்படி தாங்குவாரு? இப்போலாம் உன்னைப் பத்தி நான் பெருசா யோசிக்கிறதே இல்ல டீ!” சுந்தரி முகம் மலர கூறினார். இசைவாணி சென்ற மறுநாளிலிருந்து பரிதி தினமும் மாமியாரைப் பார்க்க வந்தான். அவரிடம் சிரித்துப் பேசி இயல்பாக்கினான். இசைவாணியின் இடத்தை நிரப்ப முயன்றான். அவனுக்கும் அவளுக்கும் தனிப்பட்ட பிரச்சனைக்குள் பெரியவர்களை அவன் கொண்டுவரவில்லை.
சுந்தரியில் உடல்நிலை குறித்து வெகுவாக அக்கறை காண்பித்தான், கண்டித்தான். கமலாவைக் கேலி செய்து வம்பிழுத்தான். இப்படி அவனது இருப்பை அவர்களுக்கு வழங்கப்படுத்தினான்.
இனிப்பு மற்றும் எண்ணெயில் பொரிக்காத சத்து மிகுந்த நொறுக்குத் தீனிகளாகப் பார்த்து சுந்தரிக்கு வாங்கி வந்து கொடுத்தான். அவன் வாங்கி வந்த இனிப்பு குறைந்த சத்து மாவு லட்டு அவரது விருப்பப்பட்டியலில் இணைந்திருந்தது. அதை அறிந்தவன், இரண்டு மூன்று முறை வாங்கி வந்துவிட்டான்.
“என்ன தம்பி... சின்ன குழந்தைக்கு வாங்கித் தர மாதிரி வாங்கிட்டு வர்றீங்க?” சுந்தரி சங்கோஜத்துடன் மறுக்க,
“உங்கப் பொண்ணு வாங்கிட்டு வந்தா இப்படி கேட்பீங்களா? நான்னதும் வேணாம்னு சொல்றீங்க!” என அவன் உரிமையாகக் கோபம்கொள்ள, இவருக்கு மனம் நிறைந்தது. இடையே ஒரு ஞாயிற்றுக் கிழமை சரவணாவும் அற்புதாவும் வந்து சென்றனர். இசைவாணி இல்லாது அத்தை வருந்துவார் என்றெண்ணி அவர்கள் வந்து தங்கினர். பரிதியும் அவர்களுடன் இணைந்து கொண்டான்.
வீடே கலகலவென்றிருக்க, பெரியவர்களுக்கும் நேரம் போனது. இப்படி ஏதோ ஒரு வகையில் அவர்களிடம் அவன் அக்கறையும் பரிவும் காண்பிக்க, இரண்டு பெரியவர்களுக்கும் அவன் மீதான பிம்பம் மொத்தமும் மாறிப் போனது. மரியாதையுடனும் அன்புடனும் அவனை நடத்தினர். ஆனால் அவன் அதையெல்லாம் எதிர்பார்க்கவே இல்லை. வெகு இயல்பாக அவர்களுடன் ஒன்றிப் போனான். இதெல்லாம் சுந்தரியின் வாய்வழியாக இசைவாணி கேட்டுக் கொண்டாள். மற்றபடி தோண்டித் துருவி விசாரிக்கவில்லை. தாயிடம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தவள், சிந்தாமணியிடமும் பேசினாள்.
வயிறு கபகபவென பசிக்க, ஆம்லேட் ஆறிப் போயிருந்தது. மதியம் வைத்த சாதத்தில் ரசத்தை ஊற்றிக்கொண்டு வந்து கூடத்தில் அமர்ந்தாள. அது இருபடுக்கையறைக் கொண்ட வீடு. இவளும் பெங்காலி பெண் ஒருத்தியும் இந்த வீட்டைப் பகிர்ந்திருக்கின்றனர். அந்தப் பெண் மருந்தியலில் முதுகலை இங்கேயே படித்துவிட்டு, ஒரு தொழில்சாலையில் பணிபுரிகிறாள். அவளது காதலனும் அங்குதான் வேலை செய்கிறான். ஒரிரு முறை இங்கு வந்ததும் சென்றிருக்கிறான். இந்தியா போல அங்கு யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் மூன்றாவது நபர் நுழைய முடியாது. அவன் இங்கு வந்து தங்கி
ச் சென்றதைக் கண்டும் காணாமலும் கடந்துவிட்டாள் இசைவாணி.