- Messages
- 1,215
- Reaction score
- 3,608
- Points
- 113
நெஞ்சம் – 59 
ஞாயிற்றுக் கிழமை என்பதால் வீடே ஆழ்ந்த அமைதியில் இருந்தது. காலைக் குளிர் குளுகுளுவென உள்ளே நுழைய, தேவாவும் ஆதிரையும் ஒரு போர்வையில் சுருண்டுப் படுத்திருந்தனர்.
எட்டு மணியைக் கடந்தும் இருவருக்கும் உறக்கம் தெளியவில்லை போல. அறையில் துயின்று கொண்டிருந்த அபினவ் எழுந்துவிட்டான். அவன் கண்கள் தாயைத் தேடின.
அவள் சமையலறையில் இருப்பாள் என எண்ணி வெளியே வந்தவன் தேவாவும் ஆதிரையும் கூடத்தில் படுத்திருப்பதைக் கண்டு அவர்களுக்கு அருகே சென்றான். பின்னிருந்து தேவா மனைவியை அணைத்திருக்க, அபி முன்பக்கமாய் அவளை அணைத்துக் கையைப் போட்டு படுத்தான்.
சில பல நிமிடங்களில் வெறுமனே மூடியிருந்த கண்ணை விழித்தவன், “ம்மா...” என்றான் ஆதிரை இமையைப் ஒற்றைக் கையால் பிரித்துவிட்டு.
“ஹம்ம்... தூங்கு அபி!” என்ற அதட்டலோடு அவன் கையை எடுத்துவிட்டாள் அவள்.
“ம்மா... எழுந்திரும்மா. எய்ட் ஓ க்ளாக் ஆகிடுச்சு. எனக்குப் பசிக்குது!” அபி அவளுடன் ஒண்டியபடியே கூறினான்.
அந்தக் குரலில் இமையைப் பிரித்தவள், “பசிக்குதா என் தங்கத்துக்கு?” சின்ன புன்னகைப்புடன் வினவினாள்.
“ஆமாம்மா... வயித்துல சத்தம் கேட்குதும்மா!” என அவன் உதட்டைப் பிதுக்க, இவளுக்கு சிரிப்பு வந்தது.
“சரி அம்மா பூஸ்ட் கலக்கித் தரேன். நீ போய் ப்ரஷ் பண்ணிட்டு வா!” என்றாள். அவன் குடுகுடுவென ஓட, தேவாவின் கையை மெதுவாய் எடுத்துவிட்டவள் எழுந்து அமர்ந்தாள். இரண்டு கைகளாலும் முகத்தையும் கண்ணையும் தேய்த்தாள். பின்னர் எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு அவனுக்கு பாலைக் காய்ச்சி சத்துமாவைக் கலந்து கொடுத்தாள். தனக்கும் ஒரு குளம்பியைக் கலக்கிக் கொண்டாள். தேவா எழவில்லை.
‘மிஸ்டர் பெர்பெக்ட் இன்னும் தூங்குறாரே! இந்நேரம் சண்டேன்னு கூடப் பார்க்காம எழுந்து வேலைக்கு ஓடிருப்பாரே!’ என கேலியாய் நினைத்தவள், “அங்கிளைப் போய் எழுப்பு அபி. அவருக்கு வொர்க்குக்கு டைமாச்சு!” என அபியை அனுப்பினாள்.
இவன் சென்று தேவாவை எழுப்ப, “என்ன டா?” எனக் கேட்டவன் எழுந்தமர்ந்தான்.
“அம்மாதான் எழுப்ப சொன்னாங்க அங்கிள்...” தேவாக்கு அருகே நின்றான்.
“என்னைத் தூக்கிவிடு!” என அவன் கையைக் கொடுக்க, சின்னவன் சிரிப்புடன் அவனைப் பிடித்து தூக்க முயன்றான்.
“அங்கிள்... ஹம்ம்... கொஞ்சம் லூசா விடுங்க!” என அவன் மூச்சைப் பிடித்து பெரியவனை இழுக்க, ஆதிரை என்ன செய்கிறார்கள் என எட்டிப் பார்த்தாள்.
தாயைக் கண்டதும், “ம்மா... வாங்க, அங்கிளை எழுப்பிவிடலாம்!” என அவளையும் அழைத்தான் சின்னவன்.
“என்ன விளையாட்டு இது?” என சிரிப்புடனே அவளும் தேவாவின் மற்றொரு கையைப் பிடித்து தூக்க முயன்றாள். அவன் உயரத்திற்கு ஏற்ற நல்ல உடல்வாகு. இருவராலும் அசைக்க கூட முடியவில்லை.
“போங்க... என்னால முடியலை!” ஆதிரை பின் வாங்க, அபி விடவில்லை. மீண்டும் முயற்சிக்கவும் அவனுக்காகப் பார்த்து தேவா எழுந்துவிட்டான்.
“ம்மா... ஐ யம் ஸ்ட்ராங்க் பாய்!” என அவன் புஜத்தைக் காண்பித்து பற்கள் தெரிய கூறவும், ஆதிரை அவன் கையில் வலிக்காது மெல்லமாய் கிள்ளினாள்.
“ரொம்ப ஸ்ட்ராங்க்தான் போ...” என அவள் கூறும்போதே தேவா முகம் கழுவி வந்தான். மனைவி அவனுக்கு கொடுத்த குளம்பியை ஆற அமர உட்கார்ந்து பருகினான். ஆதிரை காலையில் என்ன சமைப்பது என யோசித்தபடியே குளிர்சாதன பெட்டியிலிருக்கும் பொருட்களை துழாவினாள்.
“தேவா... என்ன குக் பண்ணட்டும். சிக்கன் வாங்கி பிரியாணி பண்ணட்டுமா?” என கணவனிடம் கேட்டாள்.
“நோ... மார்னிங் எதாவது குக் பண்ணு. லஞ்ச்க்கு வெளிய போகலாம்!” அவன் கூற,
“ஏன்... நீங்க இன்னைக்கு வேலைக்கு போகலையா?” எனக் கேட்டாள் ஆதிரை.
“இல்ல... போகலை. இனிமே சண்டேஸ் லீவ் எடுக்கலாம்னு இருக்கேன். வேலை வேலைன்னு ஓடிட்டே இருக்கது பிடிக்கலை. உங்க கூடவும் டைம் ஸ்பெண்ட் பண்ணணும்ல?” எனக் கேட்டவனைப் புருவம் உயர்த்திப் நம்பாமல் பார்த்தாள் மனைவி.
“ம்ப்ச்... உண்மை டீ!” என அவளருகே எழுந்து வந்தான்.
“உண்மையா இருந்தா சந்தோஷம்!” என உதட்டை வளைத்துக் கொண்டே சமைக்கச் சென்றாள். இவன் தோளைக் குலுக்கினான்.
அபி தேவாவின் அலைபேசியில் ஏதோ விளையாட கேட்க, “ஃபோன்ல எனிடைம் கேம் விளையாடக் கூடாது அபி. வா, டீவி பார்க்கலாம்!” என சின்னவனை அழைத்துச் சென்று அவனுக்கு ஏற்றது போல திரைப்படத்தை ஒலிக்கவிட்டான். இருவரும் அமர்ந்து பார்க்க, தேவாவின் அலைபேசி இரண்டு முறை அழைத்தது.
எதுவும் அவசர அழைப்பாக இருக்கும். சுபாஷ் தான் அலுவல் சம்பந்தமாக அழைத்திருப்பான் என எண்ணியபடியே அலைபேசியை எடுத்துப் பார்த்தான். ஹரிதான் அழைத்திருந்தான்.
“சொல்லு ஹரி...” எனக் கேட்டான் இவன்.
“ப்ரோ... செகண்ட் ரிலீஸ் பண்ணிட்டேன் நான். மார்னிங்தான் பையன் பொறந்திருக்கான்!” ஹரியின் குரலில் தேவாவின் முகம் மலர்ந்தது.
“கங்கிராட்ஸ் டா. எந்த ஹாஸ்பிடல்ல இருக்கீங்க? ஜனனி எப்படி இருக்கா?” எனக் கேட்டான்.
“பேபியும் மதரும் சேஃப் ப்ரோ. சி-செக்ஷன் தான்... இப்போதான் வார்ட்க்கு மாத்தப் போறாங்க. சகாயம் ஹாஸ்பிடல்ல தான்!” அவன் பதிலளிக்க,
“ஓகே டா... நாங்க வர்றோம்!” என அழைப்பைத் துண்டித்தவன் நேரே மனைவியிடம் சென்று கூறினான். அவளது முகத்தில் புன்னகை படர்ந்தது.
“கெட் ரெடி ஆதி... போய் பார்த்துட்டு வரலாம்!” என கூறியபடியே அபியை அழைத்து அவனையும் கிளப்பி தானும் தயாராகினான். ஆதிரை சமைத்து முடித்தவள், குளித்துவிட்டு ஒரு புடவையை அணிந்தாள். மூவரும் உண்டுவிட்டு கிளம்பினர்.
ஆதிரையின் கையிலிருந்த பெரிய பையைப் பார்த்தவன், “பேக்ல என்ன வச்சிருக்க ஆதி?” எனக் கேட்டவாறே மகிழுந்தை இயக்கினான்.
“டிஃபன் தேவா... யாரும் சாப்பிட்டிருக்க மாட்டாங்க இல்ல? சரி அதான் இட்லியும், சாம்பாரும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா செஞ்சு பேக் பண்ணிக்கிட்டேன்!” அவள் பதில் கூற, இவன் முகத்தில் சின்னதாய் புன்னகை வந்தது. அவன் இதையெல்லாம் யோசிக்கவில்லை. ஆதிரை உணவை மட்டுமல்ல ஜனனிக்கு வேற என்னென்ன தேவைப்படலாம் என யோசித்து அதையும் செல்லும் வழியிலே வாங்கிக் கொண்டாள்.
இவர்கள் உள்ளே செல்ல பிரசவப் பகுதியில் கோபால் வெளி இருக்கையில் அமர்ந்திருந்தார். மகனை இரண்டு வாரங்கள் கழித்துக் கண்டதும் அவருக்கு என்னவோ போலானது. பிறந்தது முதலே பிரியாத மகனைத் தனித்திருந்ததில் அவனைக் கண்டதும் முகம் மலர்ந்தார்.
“வா தேவா... வாம்மா!” என்றவர் வந்து அவன் கையைப் பிடித்தார். அவர் கைகளின் மெல்லிய ஸ்பசரித்தை இவனும் உணர்ந்து அவரைப் பார்த்து புன்னகைத்தான்.
“உள்ளேதான் இருக்கா ஜானு, போய் பாருப்பா!” என அவர் கூறவும், இவர்கள் மூவரும் அறைக்குள் நுழைந்தனர்.
ஜனனி, அவளது தாய் மற்றும் பொன்வாணியும் அங்குதான் இருந்தார். தேவா தாயைப் பார்க்காது நேரே குழந்தையிடம் சென்றுவிட, அவர் முகம் வாடியது. இரண்டு வாரத்திலே மகன் இளைத்துவிட்டான். இவள் சரியாய் உணவு சமைத்துக் கொடுக்கிறாளா? இல்லையா? என மனம் பதறிற்று அவருக்கு. இத்தனை நாட்கள் கண்ணில் படாததது கருத்திலும் பதியவில்லை என்பது போல முறுக்கிக் கொண்டிருந்தவரால் தேவாவை கண்ணுற்றதும் அப்படி இருக்க முடியவில்லை . என்னவோ அடக்க முடியாத அழுகை வரப் பார்த்தது. சட்டென பிரிவுத் துயரொன்று அவரது தொண்டையை அடைத்தது.
ஜனனி தேவாவைப் பார்த்து புன்னகைத்து, “வாங்க மாமா... வாங்க கா!” என்றாள்.
“ஹம்ம்...” இவன் தலையசைப்புடன் குழந்தையைப் பார்த்தான். ரோஜா வண்ணத்தில் ஹரியைப் போல முக அமைப்பைக் கொண்டிருந்தான் சின்னவன்.
“ஜானு... இதுல இட்லியும், சாம்பாரும் இருக்கு. உங்களுக்கு என்னென்ன பேசிக் திங்க்ஸ் தேவைப்படும்னு யோசிச்சு வாங்கிட்டு வந்திருக்கேன். வேற எதுவும் வேணும்னா சொல்லுங்க!” தான் கொண்டு வந்த பையை மேஜை மீது வைத்தாள் ஆதிரை.
“தேங்க்ஸ் கா... நெக்ஸ்ட் வீக்தான் பெய்ன் வரும்னு நானுமே எதையும் பேக் பண்ணவே இல்லை. இப்போதான் ஹரி கொஞ்சம் திங்க்ஸ் வாங்கிட்டு வரேன்னு போய்ருக்காரு!” என்றாள் நன்றியாய்.
தேவா குழந்தையின் கன்னத்தை தொட, “அங்கிள்... தம்பி அழகா இருக்கான்!” என அபியும் குழந்தையின் மறுகன்னத்தை தொடச் சென்றான். ஆதிரைக்கு சட்டென மனதில் ஏதோ தோன்ற,
“அபிம்மா... தம்பியை தொடக் கூடாது. ஹேண்ட் வாஷ் பண்ணலை இல்ல நீ. அவனுக்கு இன்ஃபெக்ஷன் ஆகிடப் போகுது!” என அபியைத் தன்னருகே இழுத்தாள். தேவா அவளை நிமிர்ந்து பார்த்தான்.
“ம்மா... அங்கிள் மட்டும் தொடுறாரு. ஒரே ஒரு டைம் தொட்டுப் பார்க்குறேன் மா. தம்பி பிங்க் கலர்ல க்யூட்டா இருக்கான் மா!” அவன் அடம்பிடிக்க,
“அபிம்மா... அம்மா சொன்னா கேட்கணும்!” என்றாள் கண்டிப்பான குரலில். ஆதிரை எப்போதாவது இப்படி பேசுவது உண்டு. அவள் குரலின் தொனியை வைத்தே செய்ய கூடாது என்று உணர்ந்த அபி தலையை மட்டும் அசைத்துவிட்டு வெளியே ஓடினான். அவனுக்கு கோபமும் அழுகையும் வந்தது.
“அக்கா... என்ன நீங்க? சின்ன பையனைப் போய் அதட்டுறீங்க. அதெல்லாம் ஒன்னும் ஆகாது. அழுதுட்டுப் போறான் பாருங்க. முதல்ல அவனை சமாதானம் பண்ணுங்க!” ஜானு கூற, இவள் வேண்டாம் என சின்ன புன்னகையுடன் மறுத்தாள்.
“வேணாம் ஜானு... குழந்தை வளர்ந்ததும் அபி தொடட்டும் தூக்கட்டும். அதான் எல்லாருக்கும் நல்லது!” என்றாள் முறுவலித்து. அவள் கூற்றின் பொருளில் வாணிக்கு சுருக்கென்றது. உண்மையில் அபி குழந்தையைத் தொட்டால் அதற்கும் வாணி எதாவது பேசுவார்.
அவளுக்கு தன் மகன் யாரிடமும் இப்படி அனாவசியமாக திட்டு வாங்குவதில் விருப்பம். அதுவும் இல்லாது அவர் என்ன பேசினாலும் இவளும் பதிலுக்கு பேசச் சென்றால் சண்டையாகிவிடும். தேவையற்ற பிரச்சனைகளை பொது இடத்தில் தவிர்க்கவே அப்படி கூறினாள். தேவாவிற்கும் அது புரிய மனைவியை முறைத்தான்.
“ரொம்ப பண்ணாத ஆதி. சின்ன பையன் அவன்!” அவளருகே வந்து மெல்லிய குரலில் கடிந்தான் அவன்.
“ஜானு... ஒரு நாலு பேர் சாப்பிட்ற அளவுக்கு டிஃபன் இருக்கு. எப்படியும் நீங்க சாப்பிடக் கூடாதுல்ல. சோ, மத்தவங்க சாப்பிடுவாங்க. நைட்டு நானே எதாவது குக் பண்ணி எடுத்துட்டு வரேன்!” கணவன் கூறியதைக் கண்டு கொள்ளாமல் ஜானுவிடம் பேசினாள். அவள் குரலில் உண்மையான அக்கறை இருந்தது.
“இல்லைம்மா... அதான் வீட்ல சமையக்காரம்மா இருக்காங்களே. அவங்க சமைப்பாங்க. உனக்கு எதுக்கு சிரமம். இல்ல நானே பார்த்துக்கிறேன். நீ உன் வேலையை மட்டும் பாரும்மா!” ஜனனியின் தாய் பட்டென்று கூறிவிட்டார். என்னவோ அவருக்கு ஆதிரையைப் பிடிக்கவில்லை. உண்மையில் பொன்வாணியின் வாய்வழியாக அவளைப் பற்றி அறிந்திருந்தவருக்கு அவள் மீது எவ்வித நல்ல எண்ணமும் இல்லை. என்னவோ இதெல்லாம் அவளை நல்லவளாக காண்பிக்க செய்தது போல தோன்றிற்று.
“அத்தை...” என தேவா அவரை அதட்டினான். என்ன இப்படி முகத்தில் அடித்தாற் போல பேசுகிறார் என அவனுக்கு கோபம் சுர்ரென்று ஏறியது.
ஆதிரை அவர் கூறியதில் முகம் மாறாதிருக்க சிரமப்பட்டவள், கணவனின் கையைப் பிடித்து அவனைப் பேசாதிருக்க கண் சைகை செய்தவள், “சரிங்க, நீங்களே பார்த்துக்கோங்க!” என்று ஜானுவின் தாயிடம் கூறிவிட்டு, “தேவா, நான் வெளிய வெயிட் பண்றேன். நீங்க பேசிட்டு வாங்க!” என விறுவிறுவென வெளியேறினாள். தேவா தன் அத்தையை முறைத்துப் பார்த்தான்.
“ஏம்மா... அவங்க எனக்காகத்தானே இதை செஞ்சு எடுத்துட்டு வந்தாங்க. மூஞ்சில அடிச்ச மாதிரி பேசுவீயா நீ? பாவம் ஆதிக்கா முகமே வாடிப் போச்சு!” ஜனனி தாயைக் கடிந்தாள்.
“ஏன் டீ... நான் என்னத்த சொல்லிட்டேன். அந்தப் பிள்ளைக்கு எதுக்கு சிரமம்? நான் இருக்கேன்ல, நானே பார்த்துக்கிறேன்னு சொன்னேன். என் பேச்சே அப்படித்தான். அவ தப்பா எடுத்துக்கிட்டா நான் என்ன பண்ண முடியும்?” என அவர் அங்கலாய்த்தார்.
தேவா அவரை முறைத்ததும், “டேய் தேவா... என்ன அப்படி முறைக்கிற? நான் உன் அத்தை டா. பொண்டாட்டி வந்ததும் நான்லாம் கண்ணுக்கே தெரியலை போல. உள்ள வந்தீயே... எப்படி இருக்கீங்க அத்தைன்னு ஒரு வார்த்தை கேட்டீயா?” அவன் பேசுவதற்குள் முந்தினார் பெரியவர்.
“உங்களுக்கு என்ன அத்தை. நல்லாதானே இருக்கீங்க. அடுத்தவங்க மனசைக் கஷ்படப்படுத்திட்டு அதைப் பத்தி கவலைப்படாதவங்க நீங்க. உங்களுக்கு என்ன வரப் போகுது?” நக்கலாய் அவரிடம் கூறயவன், “ஜானு... நான் போய்ட்டு வரேன்!” என்றான்.
“சாரி மாமா... அம்மாவுக்காக நான் மன்னிப்பு கேட்குறேன். நீங்க அக்காவை சமாதானம் பண்ணுங்க!” ஜானு கவலையுடன் பேச,
“ஏன்டீ... நான் என்ன சொல்லிட்டேன்னு அவன் என்னை முறைக்கிறான். நீ மன்னிப்பு கேட்டுட்டு கிடக்க?” அவர் இடைபுக, வாணி இத்தனை நேரம் மகனைத்தான் பார்த்திருந்தார். சண்டையிட வேணும் அவன் மற்றவர்களிடம் பேசினான். ஆனால் வந்ததிலிருந்து ஒரு நொடி கூட தன் முகத்தைப் பார்க்கவில்லையே என ஏங்கிப் போனார் பெண்மணி.
பெரியவரின் பேச்சுப் பிடிக்காத தேவா, “நான் வரேன் ஜானு!” என விறுவிறுவென வெளியே சென்றான்.
ஹரி மாமனாருடன் மனைவிக்குத் தேவையான பொருட்களை வாங்கி வந்தான். அறை வாயிலில் ஆதிரையும் அபியும் நிற்க, “மாமா... நீங்க இதை எடுத்துப் போய் அத்தைகிட்டே குடுங்க. நான் வரேன்!” என அவரை அனுப்பிவிட்டு இவர்களிடம் வந்தான்.
“அண்ணி... வாங்க, குழந்தையும் ஜானுவையும் பார்த்தீங்களா?” எனக் கேட்டான். அபி முகம் அவன் அழுதிருப்தை அப்படியே காண்பிக்க, அதை கவனித்துவிட்டே இவளிடம் பேச வந்தான்.
“பார்த்துட்டேன் ஹரி. அப்படியே உங்களை மாதிரியே இருக்கான் பையன்!” ஆதிரை சின்னதாய் முறுவலித்தாள்.
“சரி... அபி முகம் ஏன் அழுத மாதிரி இருக்கு. என்னாச்சு?” எனக் கேட்டவன் சின்னவனை தன்புறம் இழுத்தான்.
“சும்மாதான் ஹரி... ஒன்னும் இல்ல. நீங்க போய் ஜானுவைப் பாருங்க!” என்றாள் இவள்.
“ பொய் சொல்லாதீங்க அண்ணி...” என அவளை முறைத்தவன், “அபி, என்னாச்சுன்னு சித்தப்பாகிட்டே சொல்லு!” என சின்னவனிடம் கேட்டான்.
தாயின் முகத்தைப் பார்த்த அபினவ், “அது... ஐஸ்க்ரீம் கேட்டேன் ஹரிப்பா. அம்மா வாங்கித் தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க!” எனப் பொய்யுரைத்தான். ஆதிரை மகனை சில நொடிகள் பார்த்திருந்தாள். அவனுக்கு அனைத்தும் புரகிறது என அவளுக்குத் தெளிவாகிற்று.
“ம்ப்ச்... ஐஸ்க்ரீம் தானே? சித்தப்பா வாங்கித் தரேன் டா. எத்தனை வேணும்? என்ன ப்ளேவர்ல வேணும்னு
சொல்லு!” என அபியை அவன் சமாதானம் செய்ய, தேவா மனைவியை சமாதானம் செய்யலாம் என அவளுக்கருகே செல்லும்போது கோபால் மகனை அழைத்து விட்டார்.
ஞாயிற்றுக் கிழமை என்பதால் வீடே ஆழ்ந்த அமைதியில் இருந்தது. காலைக் குளிர் குளுகுளுவென உள்ளே நுழைய, தேவாவும் ஆதிரையும் ஒரு போர்வையில் சுருண்டுப் படுத்திருந்தனர்.
எட்டு மணியைக் கடந்தும் இருவருக்கும் உறக்கம் தெளியவில்லை போல. அறையில் துயின்று கொண்டிருந்த அபினவ் எழுந்துவிட்டான். அவன் கண்கள் தாயைத் தேடின.
அவள் சமையலறையில் இருப்பாள் என எண்ணி வெளியே வந்தவன் தேவாவும் ஆதிரையும் கூடத்தில் படுத்திருப்பதைக் கண்டு அவர்களுக்கு அருகே சென்றான். பின்னிருந்து தேவா மனைவியை அணைத்திருக்க, அபி முன்பக்கமாய் அவளை அணைத்துக் கையைப் போட்டு படுத்தான்.
சில பல நிமிடங்களில் வெறுமனே மூடியிருந்த கண்ணை விழித்தவன், “ம்மா...” என்றான் ஆதிரை இமையைப் ஒற்றைக் கையால் பிரித்துவிட்டு.
“ஹம்ம்... தூங்கு அபி!” என்ற அதட்டலோடு அவன் கையை எடுத்துவிட்டாள் அவள்.
“ம்மா... எழுந்திரும்மா. எய்ட் ஓ க்ளாக் ஆகிடுச்சு. எனக்குப் பசிக்குது!” அபி அவளுடன் ஒண்டியபடியே கூறினான்.
அந்தக் குரலில் இமையைப் பிரித்தவள், “பசிக்குதா என் தங்கத்துக்கு?” சின்ன புன்னகைப்புடன் வினவினாள்.
“ஆமாம்மா... வயித்துல சத்தம் கேட்குதும்மா!” என அவன் உதட்டைப் பிதுக்க, இவளுக்கு சிரிப்பு வந்தது.
“சரி அம்மா பூஸ்ட் கலக்கித் தரேன். நீ போய் ப்ரஷ் பண்ணிட்டு வா!” என்றாள். அவன் குடுகுடுவென ஓட, தேவாவின் கையை மெதுவாய் எடுத்துவிட்டவள் எழுந்து அமர்ந்தாள். இரண்டு கைகளாலும் முகத்தையும் கண்ணையும் தேய்த்தாள். பின்னர் எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு அவனுக்கு பாலைக் காய்ச்சி சத்துமாவைக் கலந்து கொடுத்தாள். தனக்கும் ஒரு குளம்பியைக் கலக்கிக் கொண்டாள். தேவா எழவில்லை.
‘மிஸ்டர் பெர்பெக்ட் இன்னும் தூங்குறாரே! இந்நேரம் சண்டேன்னு கூடப் பார்க்காம எழுந்து வேலைக்கு ஓடிருப்பாரே!’ என கேலியாய் நினைத்தவள், “அங்கிளைப் போய் எழுப்பு அபி. அவருக்கு வொர்க்குக்கு டைமாச்சு!” என அபியை அனுப்பினாள்.
இவன் சென்று தேவாவை எழுப்ப, “என்ன டா?” எனக் கேட்டவன் எழுந்தமர்ந்தான்.
“அம்மாதான் எழுப்ப சொன்னாங்க அங்கிள்...” தேவாக்கு அருகே நின்றான்.
“என்னைத் தூக்கிவிடு!” என அவன் கையைக் கொடுக்க, சின்னவன் சிரிப்புடன் அவனைப் பிடித்து தூக்க முயன்றான்.
“அங்கிள்... ஹம்ம்... கொஞ்சம் லூசா விடுங்க!” என அவன் மூச்சைப் பிடித்து பெரியவனை இழுக்க, ஆதிரை என்ன செய்கிறார்கள் என எட்டிப் பார்த்தாள்.
தாயைக் கண்டதும், “ம்மா... வாங்க, அங்கிளை எழுப்பிவிடலாம்!” என அவளையும் அழைத்தான் சின்னவன்.
“என்ன விளையாட்டு இது?” என சிரிப்புடனே அவளும் தேவாவின் மற்றொரு கையைப் பிடித்து தூக்க முயன்றாள். அவன் உயரத்திற்கு ஏற்ற நல்ல உடல்வாகு. இருவராலும் அசைக்க கூட முடியவில்லை.
“போங்க... என்னால முடியலை!” ஆதிரை பின் வாங்க, அபி விடவில்லை. மீண்டும் முயற்சிக்கவும் அவனுக்காகப் பார்த்து தேவா எழுந்துவிட்டான்.
“ம்மா... ஐ யம் ஸ்ட்ராங்க் பாய்!” என அவன் புஜத்தைக் காண்பித்து பற்கள் தெரிய கூறவும், ஆதிரை அவன் கையில் வலிக்காது மெல்லமாய் கிள்ளினாள்.
“ரொம்ப ஸ்ட்ராங்க்தான் போ...” என அவள் கூறும்போதே தேவா முகம் கழுவி வந்தான். மனைவி அவனுக்கு கொடுத்த குளம்பியை ஆற அமர உட்கார்ந்து பருகினான். ஆதிரை காலையில் என்ன சமைப்பது என யோசித்தபடியே குளிர்சாதன பெட்டியிலிருக்கும் பொருட்களை துழாவினாள்.
“தேவா... என்ன குக் பண்ணட்டும். சிக்கன் வாங்கி பிரியாணி பண்ணட்டுமா?” என கணவனிடம் கேட்டாள்.
“நோ... மார்னிங் எதாவது குக் பண்ணு. லஞ்ச்க்கு வெளிய போகலாம்!” அவன் கூற,
“ஏன்... நீங்க இன்னைக்கு வேலைக்கு போகலையா?” எனக் கேட்டாள் ஆதிரை.
“இல்ல... போகலை. இனிமே சண்டேஸ் லீவ் எடுக்கலாம்னு இருக்கேன். வேலை வேலைன்னு ஓடிட்டே இருக்கது பிடிக்கலை. உங்க கூடவும் டைம் ஸ்பெண்ட் பண்ணணும்ல?” எனக் கேட்டவனைப் புருவம் உயர்த்திப் நம்பாமல் பார்த்தாள் மனைவி.
“ம்ப்ச்... உண்மை டீ!” என அவளருகே எழுந்து வந்தான்.
“உண்மையா இருந்தா சந்தோஷம்!” என உதட்டை வளைத்துக் கொண்டே சமைக்கச் சென்றாள். இவன் தோளைக் குலுக்கினான்.
அபி தேவாவின் அலைபேசியில் ஏதோ விளையாட கேட்க, “ஃபோன்ல எனிடைம் கேம் விளையாடக் கூடாது அபி. வா, டீவி பார்க்கலாம்!” என சின்னவனை அழைத்துச் சென்று அவனுக்கு ஏற்றது போல திரைப்படத்தை ஒலிக்கவிட்டான். இருவரும் அமர்ந்து பார்க்க, தேவாவின் அலைபேசி இரண்டு முறை அழைத்தது.
எதுவும் அவசர அழைப்பாக இருக்கும். சுபாஷ் தான் அலுவல் சம்பந்தமாக அழைத்திருப்பான் என எண்ணியபடியே அலைபேசியை எடுத்துப் பார்த்தான். ஹரிதான் அழைத்திருந்தான்.
“சொல்லு ஹரி...” எனக் கேட்டான் இவன்.
“ப்ரோ... செகண்ட் ரிலீஸ் பண்ணிட்டேன் நான். மார்னிங்தான் பையன் பொறந்திருக்கான்!” ஹரியின் குரலில் தேவாவின் முகம் மலர்ந்தது.
“கங்கிராட்ஸ் டா. எந்த ஹாஸ்பிடல்ல இருக்கீங்க? ஜனனி எப்படி இருக்கா?” எனக் கேட்டான்.
“பேபியும் மதரும் சேஃப் ப்ரோ. சி-செக்ஷன் தான்... இப்போதான் வார்ட்க்கு மாத்தப் போறாங்க. சகாயம் ஹாஸ்பிடல்ல தான்!” அவன் பதிலளிக்க,
“ஓகே டா... நாங்க வர்றோம்!” என அழைப்பைத் துண்டித்தவன் நேரே மனைவியிடம் சென்று கூறினான். அவளது முகத்தில் புன்னகை படர்ந்தது.
“கெட் ரெடி ஆதி... போய் பார்த்துட்டு வரலாம்!” என கூறியபடியே அபியை அழைத்து அவனையும் கிளப்பி தானும் தயாராகினான். ஆதிரை சமைத்து முடித்தவள், குளித்துவிட்டு ஒரு புடவையை அணிந்தாள். மூவரும் உண்டுவிட்டு கிளம்பினர்.
ஆதிரையின் கையிலிருந்த பெரிய பையைப் பார்த்தவன், “பேக்ல என்ன வச்சிருக்க ஆதி?” எனக் கேட்டவாறே மகிழுந்தை இயக்கினான்.
“டிஃபன் தேவா... யாரும் சாப்பிட்டிருக்க மாட்டாங்க இல்ல? சரி அதான் இட்லியும், சாம்பாரும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா செஞ்சு பேக் பண்ணிக்கிட்டேன்!” அவள் பதில் கூற, இவன் முகத்தில் சின்னதாய் புன்னகை வந்தது. அவன் இதையெல்லாம் யோசிக்கவில்லை. ஆதிரை உணவை மட்டுமல்ல ஜனனிக்கு வேற என்னென்ன தேவைப்படலாம் என யோசித்து அதையும் செல்லும் வழியிலே வாங்கிக் கொண்டாள்.
இவர்கள் உள்ளே செல்ல பிரசவப் பகுதியில் கோபால் வெளி இருக்கையில் அமர்ந்திருந்தார். மகனை இரண்டு வாரங்கள் கழித்துக் கண்டதும் அவருக்கு என்னவோ போலானது. பிறந்தது முதலே பிரியாத மகனைத் தனித்திருந்ததில் அவனைக் கண்டதும் முகம் மலர்ந்தார்.
“வா தேவா... வாம்மா!” என்றவர் வந்து அவன் கையைப் பிடித்தார். அவர் கைகளின் மெல்லிய ஸ்பசரித்தை இவனும் உணர்ந்து அவரைப் பார்த்து புன்னகைத்தான்.
“உள்ளேதான் இருக்கா ஜானு, போய் பாருப்பா!” என அவர் கூறவும், இவர்கள் மூவரும் அறைக்குள் நுழைந்தனர்.
ஜனனி, அவளது தாய் மற்றும் பொன்வாணியும் அங்குதான் இருந்தார். தேவா தாயைப் பார்க்காது நேரே குழந்தையிடம் சென்றுவிட, அவர் முகம் வாடியது. இரண்டு வாரத்திலே மகன் இளைத்துவிட்டான். இவள் சரியாய் உணவு சமைத்துக் கொடுக்கிறாளா? இல்லையா? என மனம் பதறிற்று அவருக்கு. இத்தனை நாட்கள் கண்ணில் படாததது கருத்திலும் பதியவில்லை என்பது போல முறுக்கிக் கொண்டிருந்தவரால் தேவாவை கண்ணுற்றதும் அப்படி இருக்க முடியவில்லை . என்னவோ அடக்க முடியாத அழுகை வரப் பார்த்தது. சட்டென பிரிவுத் துயரொன்று அவரது தொண்டையை அடைத்தது.
ஜனனி தேவாவைப் பார்த்து புன்னகைத்து, “வாங்க மாமா... வாங்க கா!” என்றாள்.
“ஹம்ம்...” இவன் தலையசைப்புடன் குழந்தையைப் பார்த்தான். ரோஜா வண்ணத்தில் ஹரியைப் போல முக அமைப்பைக் கொண்டிருந்தான் சின்னவன்.
“ஜானு... இதுல இட்லியும், சாம்பாரும் இருக்கு. உங்களுக்கு என்னென்ன பேசிக் திங்க்ஸ் தேவைப்படும்னு யோசிச்சு வாங்கிட்டு வந்திருக்கேன். வேற எதுவும் வேணும்னா சொல்லுங்க!” தான் கொண்டு வந்த பையை மேஜை மீது வைத்தாள் ஆதிரை.
“தேங்க்ஸ் கா... நெக்ஸ்ட் வீக்தான் பெய்ன் வரும்னு நானுமே எதையும் பேக் பண்ணவே இல்லை. இப்போதான் ஹரி கொஞ்சம் திங்க்ஸ் வாங்கிட்டு வரேன்னு போய்ருக்காரு!” என்றாள் நன்றியாய்.
தேவா குழந்தையின் கன்னத்தை தொட, “அங்கிள்... தம்பி அழகா இருக்கான்!” என அபியும் குழந்தையின் மறுகன்னத்தை தொடச் சென்றான். ஆதிரைக்கு சட்டென மனதில் ஏதோ தோன்ற,
“அபிம்மா... தம்பியை தொடக் கூடாது. ஹேண்ட் வாஷ் பண்ணலை இல்ல நீ. அவனுக்கு இன்ஃபெக்ஷன் ஆகிடப் போகுது!” என அபியைத் தன்னருகே இழுத்தாள். தேவா அவளை நிமிர்ந்து பார்த்தான்.
“ம்மா... அங்கிள் மட்டும் தொடுறாரு. ஒரே ஒரு டைம் தொட்டுப் பார்க்குறேன் மா. தம்பி பிங்க் கலர்ல க்யூட்டா இருக்கான் மா!” அவன் அடம்பிடிக்க,
“அபிம்மா... அம்மா சொன்னா கேட்கணும்!” என்றாள் கண்டிப்பான குரலில். ஆதிரை எப்போதாவது இப்படி பேசுவது உண்டு. அவள் குரலின் தொனியை வைத்தே செய்ய கூடாது என்று உணர்ந்த அபி தலையை மட்டும் அசைத்துவிட்டு வெளியே ஓடினான். அவனுக்கு கோபமும் அழுகையும் வந்தது.
“அக்கா... என்ன நீங்க? சின்ன பையனைப் போய் அதட்டுறீங்க. அதெல்லாம் ஒன்னும் ஆகாது. அழுதுட்டுப் போறான் பாருங்க. முதல்ல அவனை சமாதானம் பண்ணுங்க!” ஜானு கூற, இவள் வேண்டாம் என சின்ன புன்னகையுடன் மறுத்தாள்.
“வேணாம் ஜானு... குழந்தை வளர்ந்ததும் அபி தொடட்டும் தூக்கட்டும். அதான் எல்லாருக்கும் நல்லது!” என்றாள் முறுவலித்து. அவள் கூற்றின் பொருளில் வாணிக்கு சுருக்கென்றது. உண்மையில் அபி குழந்தையைத் தொட்டால் அதற்கும் வாணி எதாவது பேசுவார்.
அவளுக்கு தன் மகன் யாரிடமும் இப்படி அனாவசியமாக திட்டு வாங்குவதில் விருப்பம். அதுவும் இல்லாது அவர் என்ன பேசினாலும் இவளும் பதிலுக்கு பேசச் சென்றால் சண்டையாகிவிடும். தேவையற்ற பிரச்சனைகளை பொது இடத்தில் தவிர்க்கவே அப்படி கூறினாள். தேவாவிற்கும் அது புரிய மனைவியை முறைத்தான்.
“ரொம்ப பண்ணாத ஆதி. சின்ன பையன் அவன்!” அவளருகே வந்து மெல்லிய குரலில் கடிந்தான் அவன்.
“ஜானு... ஒரு நாலு பேர் சாப்பிட்ற அளவுக்கு டிஃபன் இருக்கு. எப்படியும் நீங்க சாப்பிடக் கூடாதுல்ல. சோ, மத்தவங்க சாப்பிடுவாங்க. நைட்டு நானே எதாவது குக் பண்ணி எடுத்துட்டு வரேன்!” கணவன் கூறியதைக் கண்டு கொள்ளாமல் ஜானுவிடம் பேசினாள். அவள் குரலில் உண்மையான அக்கறை இருந்தது.
“இல்லைம்மா... அதான் வீட்ல சமையக்காரம்மா இருக்காங்களே. அவங்க சமைப்பாங்க. உனக்கு எதுக்கு சிரமம். இல்ல நானே பார்த்துக்கிறேன். நீ உன் வேலையை மட்டும் பாரும்மா!” ஜனனியின் தாய் பட்டென்று கூறிவிட்டார். என்னவோ அவருக்கு ஆதிரையைப் பிடிக்கவில்லை. உண்மையில் பொன்வாணியின் வாய்வழியாக அவளைப் பற்றி அறிந்திருந்தவருக்கு அவள் மீது எவ்வித நல்ல எண்ணமும் இல்லை. என்னவோ இதெல்லாம் அவளை நல்லவளாக காண்பிக்க செய்தது போல தோன்றிற்று.
“அத்தை...” என தேவா அவரை அதட்டினான். என்ன இப்படி முகத்தில் அடித்தாற் போல பேசுகிறார் என அவனுக்கு கோபம் சுர்ரென்று ஏறியது.
ஆதிரை அவர் கூறியதில் முகம் மாறாதிருக்க சிரமப்பட்டவள், கணவனின் கையைப் பிடித்து அவனைப் பேசாதிருக்க கண் சைகை செய்தவள், “சரிங்க, நீங்களே பார்த்துக்கோங்க!” என்று ஜானுவின் தாயிடம் கூறிவிட்டு, “தேவா, நான் வெளிய வெயிட் பண்றேன். நீங்க பேசிட்டு வாங்க!” என விறுவிறுவென வெளியேறினாள். தேவா தன் அத்தையை முறைத்துப் பார்த்தான்.
“ஏம்மா... அவங்க எனக்காகத்தானே இதை செஞ்சு எடுத்துட்டு வந்தாங்க. மூஞ்சில அடிச்ச மாதிரி பேசுவீயா நீ? பாவம் ஆதிக்கா முகமே வாடிப் போச்சு!” ஜனனி தாயைக் கடிந்தாள்.
“ஏன் டீ... நான் என்னத்த சொல்லிட்டேன். அந்தப் பிள்ளைக்கு எதுக்கு சிரமம்? நான் இருக்கேன்ல, நானே பார்த்துக்கிறேன்னு சொன்னேன். என் பேச்சே அப்படித்தான். அவ தப்பா எடுத்துக்கிட்டா நான் என்ன பண்ண முடியும்?” என அவர் அங்கலாய்த்தார்.
தேவா அவரை முறைத்ததும், “டேய் தேவா... என்ன அப்படி முறைக்கிற? நான் உன் அத்தை டா. பொண்டாட்டி வந்ததும் நான்லாம் கண்ணுக்கே தெரியலை போல. உள்ள வந்தீயே... எப்படி இருக்கீங்க அத்தைன்னு ஒரு வார்த்தை கேட்டீயா?” அவன் பேசுவதற்குள் முந்தினார் பெரியவர்.
“உங்களுக்கு என்ன அத்தை. நல்லாதானே இருக்கீங்க. அடுத்தவங்க மனசைக் கஷ்படப்படுத்திட்டு அதைப் பத்தி கவலைப்படாதவங்க நீங்க. உங்களுக்கு என்ன வரப் போகுது?” நக்கலாய் அவரிடம் கூறயவன், “ஜானு... நான் போய்ட்டு வரேன்!” என்றான்.
“சாரி மாமா... அம்மாவுக்காக நான் மன்னிப்பு கேட்குறேன். நீங்க அக்காவை சமாதானம் பண்ணுங்க!” ஜானு கவலையுடன் பேச,
“ஏன்டீ... நான் என்ன சொல்லிட்டேன்னு அவன் என்னை முறைக்கிறான். நீ மன்னிப்பு கேட்டுட்டு கிடக்க?” அவர் இடைபுக, வாணி இத்தனை நேரம் மகனைத்தான் பார்த்திருந்தார். சண்டையிட வேணும் அவன் மற்றவர்களிடம் பேசினான். ஆனால் வந்ததிலிருந்து ஒரு நொடி கூட தன் முகத்தைப் பார்க்கவில்லையே என ஏங்கிப் போனார் பெண்மணி.
பெரியவரின் பேச்சுப் பிடிக்காத தேவா, “நான் வரேன் ஜானு!” என விறுவிறுவென வெளியே சென்றான்.
ஹரி மாமனாருடன் மனைவிக்குத் தேவையான பொருட்களை வாங்கி வந்தான். அறை வாயிலில் ஆதிரையும் அபியும் நிற்க, “மாமா... நீங்க இதை எடுத்துப் போய் அத்தைகிட்டே குடுங்க. நான் வரேன்!” என அவரை அனுப்பிவிட்டு இவர்களிடம் வந்தான்.
“அண்ணி... வாங்க, குழந்தையும் ஜானுவையும் பார்த்தீங்களா?” எனக் கேட்டான். அபி முகம் அவன் அழுதிருப்தை அப்படியே காண்பிக்க, அதை கவனித்துவிட்டே இவளிடம் பேச வந்தான்.
“பார்த்துட்டேன் ஹரி. அப்படியே உங்களை மாதிரியே இருக்கான் பையன்!” ஆதிரை சின்னதாய் முறுவலித்தாள்.
“சரி... அபி முகம் ஏன் அழுத மாதிரி இருக்கு. என்னாச்சு?” எனக் கேட்டவன் சின்னவனை தன்புறம் இழுத்தான்.
“சும்மாதான் ஹரி... ஒன்னும் இல்ல. நீங்க போய் ஜானுவைப் பாருங்க!” என்றாள் இவள்.
“ பொய் சொல்லாதீங்க அண்ணி...” என அவளை முறைத்தவன், “அபி, என்னாச்சுன்னு சித்தப்பாகிட்டே சொல்லு!” என சின்னவனிடம் கேட்டான்.
தாயின் முகத்தைப் பார்த்த அபினவ், “அது... ஐஸ்க்ரீம் கேட்டேன் ஹரிப்பா. அம்மா வாங்கித் தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க!” எனப் பொய்யுரைத்தான். ஆதிரை மகனை சில நொடிகள் பார்த்திருந்தாள். அவனுக்கு அனைத்தும் புரகிறது என அவளுக்குத் தெளிவாகிற்று.
“ம்ப்ச்... ஐஸ்க்ரீம் தானே? சித்தப்பா வாங்கித் தரேன் டா. எத்தனை வேணும்? என்ன ப்ளேவர்ல வேணும்னு
சொல்லு!” என அபியை அவன் சமாதானம் செய்ய, தேவா மனைவியை சமாதானம் செய்யலாம் என அவளுக்கருகே செல்லும்போது கோபால் மகனை அழைத்து விட்டார்.