- Messages
- 1,205
- Reaction score
- 3,520
- Points
- 113
நெஞ்சம் – 48 
மகனைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே அவனுக்கு அருகே சாய்ந்தவாறே கட்டிலில் அமர்ந்திருந்தாள் ஆதிரை. அவளது கையில் புத்தகம் ஒன்றிருந்தது. தேவா வரத் தாமதமாக, அதுவரை அலைபேசியில் உலாவ அவளுக்கு விருப்பமில்லை. கூடத்தில் சென்று தொலைக்காட்சியைப் பார்க்கவும் மனம் ஒன்றவில்லை.
சரியென்று அவனது அலமாரியிலிருந்து தமிழ் புத்தகம் ஒன்றை எடுத்துப் புரட்டத் தொடங்கினாள். மனம் அதில் லயிக்கவே இல்லை. வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் தேவாதான் நினைவிற்கு வந்தான்.
வேண்டாமென தட்டிவிட முயன்றாலும் அவன் வாழ்த்தாதது பெரிய குறையாய் மனதில் தங்கிப் போனது. பெரிதாய் நகை, புடவை என எதையும் அவள் எதிர்பார்த்தது இல்லை. ஒரே ஒரு வாழ்த்தை மட்டும்தான் பெரிதாய் நினைத்தாள். அதுவே கிடைக்காத போது கோபமா? ஆற்றாமையா எனத் தெரியாது மனம் வலித்து தொலைத்தது.
உண்மையில் ஆதிரை எதையும் பெரிதாய் நினைக்க மாட்டாள். எதற்காகவும் அலட்டிக் கொள்ளவும் மாட்டாள். இத்தனை நாட்கள் தான், தனக்கு என்றிருந்த வாழ்க்கையில் உன்னை நேசிக்கிறேன் என்று பின்னோடு சுற்றி திருமணத்தை முடித்தவன் உடனிருக்கையில் அவளையும் அறியாது சின்ன எதிர்பார்ப்பு முளைத்திருக்க, அதை முளையிலே கிள்ளி எறிவதுதான் அமைதியான வாழ்க்கைக்கு வழி வகுக்கும் என மூளை அறிவுறுத்தியது.
அவன் வந்ததும் ஏன் வாழ்த்தவில்லை எனக் கேட்டு சண்டை பிடிக்கும் ரகமில்லை அவள். மறந்துவிட்டாயா? நல்லது என்று ஒதுங்கி கொள்வாள். யாரிடமும் எதையும் கேட்டு வாங்கிப் பழக்கப்பட்டிராத மனது இதை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கச் செய்து, மனதை மாற்றியது.
இதுவரை ஏன் பிறந்த நாளை மறந்தாய் எனக் கேட்டு சண்டையிடும் அளவிற்கு கூட ஆதிரையுடன் யாரும் இருந்ததாய் நினைவில் இல்லை. அப்படி இருக்கையில் இந்த நிகழ்வு தன்னைப் பாதிக்காது என சஞ்சலப்பட்ட மனதை தேற்றி அந்தப் புத்தகத்தில் நுழைய முயன்ற போது தேவா கதவை திறந்து உள்ளே வந்தான்.
அவன் அரவத்தில் ஆதிரை நிமிர, உழைத்துக் களைத்துப் போயிருந்தது அவனது முகம். இவளைப் பார்த்ததும் மெல்லிய தலையசைப்பைக் கொடுத்தவன் அலமாரியில் மாற்றுடையைத் தேடிக் கொண்டே, “டைம் பதினொன்னு ஆச்சு ஆதி. டைபிகல் வொய்ஃபா நீ நான் வர்ற வரைக்கும் முழிச்சிருக்கணும்னு அவசியம் இல்ல. உனக்குத் தூக்கம் வந்தா சாப்ட்டு தூங்கு. சம் டைம்ஸ் எனக்கு வொர்க் அதிகமா இருக்கும். நான் மார்னிங் லேட்டா எழுவேன். பட் உனக்கு வொர்க் இருக்கு. கரெக்ட் டைம்க்கு வேலைக்குப் போகணும். சோ, டோன்ட் வெய்ட் ஃபார் மீ!” என்றான். அவளிடமிருந்து பதில் வராது போக, துண்டை எடுத்து தோளில் போட்டவாறே அவளைத் திரும்பி பார்த்தான்.
அமைதியாய் இருந்தவள், “நாளைல இருந்து நான் வெய்ட் பண்ணலைங்க. நீங்க குளிச்சிட்டு வாங்க, நான் தோசை சுட்டு வைக்கிறேன்!” என சின்ன புன்னகையுடன் அவள் அகல, இவன் குளித்து வந்தான்.
அதற்குள்ளே ஆதிரை நான்கு தோசைகளை சுட்டு அடுக்கிவிட்டாள். மேலும் ஒரு தோசைக் கேட்டு வாங்கி வயிறு நிறைய உண்டவன், “தேங்க் யூ!” என்றவாறே அறைக்குள் நுழைந்தான். இவள் மாவை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டு அவன் சாப்பிட்ட தட்டோடு மற்ற பாத்திரங்களையும் கழுவிவிட்டே வந்து படுத்தாள்.
தேவா இரண்டு கால்களையும் அகட்டிப் படுத்தவாறே நன்று ஆழ்ந்து உறக்கிக் கொண்டிருந்தான். லேசாய் உதடுகள் பிளந்து மெல்லிய குறட்டை சப்தம் கேட்டது. இவள் அறையைப் பூட்டி விளக்கணைத்துவிட்டு அவனைத் தள்ளிப் படுக்க வைக்க முயன்றாள். முடியாது போனது. அடித்துப் போட்டாற் போல நன்றாகத் தூங்கினான்.
அபியும் அவனுமே கட்டிலை மொத்தமாய் ஆக்கிரமித்திருந்தனர். தேவாவின் கட்டில் இரண்டு பேர் வசதியாய் படுக்க கூடிய அளவில் இருந்தது. மூன்று பேர் என்கையில் ஓரளவிற்கு அனுசரித்து இடித்துக்கொண்டு தான் படுப்பார்கள். ஆனால் இன்றைக்கு அவளுக்கு கொஞ்சம் கூட இருவரும் இடம் விட்டிருக்கவில்லை.
இவள் அங்கிருந்து எடுத்து வந்த போர்வையை எடுத்து தரையில் விரித்து ஒரு தலையணையை எடுத்துப் போட்டு படுத்துக் கொண்டாள். இவளது பார்வை முழுவதும் தேவாவின் முகத்தில்தான் இருந்தது. அவனுக்கு தூக்கத்தில் கூட இவளது தொடர் பார்வை அசௌகரியத்தை கொடுத்திருக்க கூடும். முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டான். ஆதிரை நேராய் படுத்து சுழலும் மின்விசிறியையே நீண்ட நேரம் பார்த்திருக்க, மெல்ல கண்கள் சொருகி தூக்கம் சுழற்றியது.
காலை ஏழு மணியாகிவிட, ஆதிரைக்கு விழிப்பு வரவில்லை. அபி எழுந்து கண்ணைக் கசக்கியவாறே தாயைத் தேட, அவள் தரையில் படுத்திருக்கவும் கட்டிலிலிருந்து இறங்கி அவளருகே படுத்து இறுக்கி அணைத்தான்.
அவனது தொடுதலில் ஆதிரைக்கு உறக்கம் கலைய, “என் தங்கம் எழுந்துட்டீங்களா?” என மலர்ந்த முகத்துடன் அவன் முடியைக் கோதினாள்.
“இப்போதான்மா எழுந்தேன். ஏன் கீழே படுத்திருக்கீங்க? ஐ மிஸ் யூ லாஸ்ட் நைட்!” என்றான் அவளை உரசியபடியே.
இவளுக்கு மெலிதாய் சிரிப்பு வர, கூடவே மனதோரம் சின்னதாய் இதம் பரவிற்று. அவளைத் தேடுவதற்கு அபி இருக்கிறான் என உள்ளம் உருக, “என் தங்கம், ஒருநாள் தானே டா நான் உன் கூடப் படுக்கலை. அதுக்குள்ளேயும் உனக்கு மிஸ் பண்ற அளவுக்குப் போய்டுச்சா?” என்றவாறே அவன் நெற்றியிலும் கன்னத்திலும் முத்தமிட்டாள்.
“சரி, எழுந்து பிரஷ் பண்ணு அபி கண்ணா, அம்மா பூஸ்ட் கலக்கித் தரேன்!” என்றாள்.
“ப்ம்ச்... ம்மா நேத்து ஜானு சித்தி ஒரு பூஸ்ட் குடுத்தாங்கம்மா. அது நீ குடுக்கற பூஸ்டை விட டேஸ்டா இருந்துச்சும்மா. எனக்கு அது வேணும்!” இவன் சிணுங்கலாய்க் கூறி தாயின் கழுத்தைக் கட்டிக் கொள்ள, ஆதிரைப் புன்னகைத்தாள்.
“அப்படியா? சரி, இன்னைக்கு அபி சமத்துப் பையனா எழுந்து அம்மா குடுக்குற பூஸ்டை குடிப்பியாம். அம்மா ஜானு சித்திக்கிட்டே கேட்டு அது என்ன பூஸ்ட்னு வாங்கித் தரேன்!” வாஞ்சையாய் அவன் முகத்தை தடவினாள்.
“சூப்பர்ம்மா... தேங்க் யூ ம்மா!” அவள் கன்னத்தை எச்சில் செய்தவன் குதூகலத்துடன் எழுந்து சென்றான். இருவரும் தேவாவின் தூக்கம் கலையக் கூடாது என மெல்லிய குரலில் கிசுகிசுத்தனர். ஆதிரை எழுந்து தான் படுத்த போர்வையை கட்டிலில் போட்டுவிட்டு முகம் கழுவி பல் துலக்கி சமையலறைக்குள் சென்றாள்.
ஹரி அங்கே தேநீர் தயாரிக்கத் திணறிக் கொண்டிருந்தான். “என்ன பண்றீங்க ஹரி?” எனக் கேட்டவாறே இவள் அடுப்பை சரியாய் பற்ற வைத்தாள்.
“இல்ல, டீ போடலாம்னு வந்தேன் அண்ணி. டீ தூள் எங்கேன்னு தெரியலே!” என்றான் அசட்டுச் சிரிப்புடன். பொன்வாணி மகன்களை அடுப்படிக்குள் விட மாட்டாறே என யோசித்தவள் தேநீர் தூளை எடுத்து அருகே வைத்தாள்.
“அம்மாவும் அப்பாவும் ரிலேட்டீவ் மேரேஜ்னு சீக்கிரமே கிளம்பி போய்ட்டாங்க அண்ணி!” அவள் பார்வையின் பொருளுரணர்ந்து ஹரி பதிலளித்தான்.
“நீங்க போங்க ஹரி, நான் டீ போட்டு எடுத்துட்டு வரேன்!” அவள் கூற, இவன் தயங்கினான்.
“போங்க ஹரி!” அவள் மீண்டும் அழுத்திக் கூற, அவன் அகன்றான். மற்றொரு அடுப்பில் பாலைக் காய்ச்சினாள். தேநீரை வடிகட்டி அவனுக்கும் தனக்கும் எடுத்துக் கொண்டவள் அபிக்கு சத்து மாவைக் காய்ச்சும் போதே ராகினியும் எழுந்து வர, அவளுக்கும் கொடுத்தாள்.
ராகினி அதைக் குடிக்க மாட்டேன் என முகத்தைச் சுளிக்க, இவள்தான் அதட்டி உருட்டி குடிக்க வைத்தாள். பொன்வாணி மதியத்திற்கு சமைத்து வைத்துவிட்டே சென்றிருக்க, காலை என்ன செய்யலாம் என யோசித்தாள்.
சப்பாத்தி சுட்டு பன்னீர் குருமா வைக்கலாம் என யோசனை வந்தது. சென்ற வாரம் வாங்கி வந்த பன்னீர் தொடப்படாமல் அப்படி இருந்தது. ஆனால் ஏழு பேருக்கு சப்பாத்தியை சுட்டு முடித்து குருமா செய்ய முடியுமா என சந்தேகம் எழுந்தது. நேரத் தாமதமானால் அதற்கும் தேவா எதாவது சொல்வானே என தோன்றினாலும், விரைவில் செய்து முடிக்கலாம் என மாவைப் பிசைந்தாள்.
அபியையும் ராகினியையும் குளிக்க அனுப்பிவிட்டு இவள் சாப்பாத்தியை சுட, ஜனனி அப்போதுதான் எழுந்து வந்தாள். நன்றாய் உறங்கியதில் அவளது கன்னம் உப்பி போயிருந்தது.
இவளைப் பார்த்ததும், “குட் மார்னிங் ஆதிக்கா. சாரி, இன்னைக்கு நான் லேட்!” என்றாள். ஆதிரை புன்னகைத்தாள்.
“என்ன குக்கிங்? சப்பாத்தியா? தொட்டுக்க என்ன பண்ணப் போறீங்க?” எனக் கேட்டவள் அருகே இருந்த பன்னீரைப் பார்த்துவிட்டு, “நான் கடாய் பன்னீர் செய்றேன்!” என்றாள் அதை எடுத்து நறுக்கியபடியே.
“டீயைக் குடிச்சிட்டு செய்ங்க ஜானு... அப்படியே உங்க மாமாவுக்கும் டீயைக் குடுத்துடுங்க!” இரண்டு குவளைகளில் தேநீரை நிரப்பினாள். இவள் முகத்தில் விழுந்த முடியை ஒதுக்கி திரும்பும் போதுதான் தேவா நீள்விருக்கையில் வந்து அமர்ந்தான். ஜானு கொடுத்த தேநீரைப் பருகிறவாறே ஹரியுடன் பேசினான்.
ஜனனி பன்னீரை சமைக்க, ஆதிரை சப்பாத்தியை சுட்டு முடித்ததும், “டைமாச்சு ஜானு, நான் போய் ரெடியாகுறேன்!” என் அவளிடம் கூறிவிட்டு கூடத்திலிருந்த தேவாவை ஒரு நொடி பார்த்தவள், அறைக்குள் நுழைந்தாள். அபி குளித்து உடை மாற்றினான். இவளைக் கண்டதும் அவன் வெட்கப்பட்டு கால் சராயை அணிய, மெல்லிய சிரிப்பு உதட்டில் ஒட்டியது.
அவன் தலையை துவட்டியவள், “ஜானு சித்தி இருக்காங்க, ராகினியோட நீயும் சமத்தா சாப்பிடு அபி!” என அவனை அனுப்பியவள், கட்டிலில் கலைந்து கிடந்த போர்வையை மடிக்கத் தொடங்க, தேவா உள்ளே வந்தான்.
அவளைக் கண்டதும்தான் நேற்று அவளுடைய பிறந்தநாள் என்றே மனம் நினைவுபடுத்தியது. வாழ்த்து சொல்லலாமா? வேண்டாமா? என்ற யோசனை படர்ந்தது. தாமதமாய் கூறுவது அபத்தமாய் தோன்ற, ஆனாலும் அவளை அழைத்தான்.
“ஆதி!” அவன் குரலுக்கு, “என்னங்க, சொல்லுங்க!” என கேட்டவள் தலையணையை அதனதன் இடத்தில் வைத்தாள்.
“பிலேடட் ஹேப்பி பெர்த் டே ஆதிரை. நேத்து எனக்கு உன் பிறந்த நாள்னு தெரியாது, சாரி!”
ஏதோ கூற வேண்டும் என்ற கடமைக்காய் ஒரு வாழ்த்தைப் பகிர்ந்தான்.
ஆதிரை சில நொடிகள் அமைதியாய் இருந்தவள், அவன் முகம் பார்த்து முறுவலித்து, “தேங்க்ஸ்ங்க... இட்ஸ் ஓகே!” என்றாள் கண்களை எட்டா புன்னகையுடன்.
“உனக்கு கோபம் எதுவும் இல்லையே! சாரி, எனக்கு இந்த மாதிரி பெர்த் டே ஞாபகம் வச்சு விஷ் பண்றது, கிஃப்ட் பண்றது எல்லாம் வராத விஷயம். அண்ட் ஐ க்நோ யூ வெரி வெல். யூ ஆர் மெச்சூர்ட் கேர்ள். நீ என்ன கிட்-ஆ என்னோட விஷ்ஷை எக்ஸ்பெக்ட் பண்ண?” கேள்வியும் அவனே கேட்டு பதிலும் அவனே உரைத்தான். ஆதிரை சின்னதாய் புன்னகைத்தாள்.
“எனக்கே என் பெர்த் டே ஞாபகம் இல்லைங்க. நீங்க அதை ஞாபகம் வச்சுக்கணும்னு அவசியம் இல்ல. நான் எதுவும் எக்ஸ்பெக்ட் பண்ணலைங்க!” என்ற போது லேசாய் தொண்டையில் ஏதோ ஒன்று சிக்கிக் கொண்டது. அவன் முகம் பார்க்காது அலமாரியிலிருந்து ஒரு புடவையை உருவச் சென்றவள், அதைவிடுத்து கையில் கிடைத்த சுரிதார் ஒன்றை எடுத்தாள்.
“ஆர் யூ ஷ்யூர்?” அவன் அவள் முகத்தை தான் பார்த்தான். அதில் வருத்தம், எதிர்பார்ப்பு என எதையும் கண்டறியவில்லை. எப்போதும் போல அமைதியான பாவனை. அதனாலே தேவாவிற்கு அவளது மனம் புரியாது போனது. ஆதிரை முயன்று முகத்தில் எதையும் காண்பிக்காதிருக்க சிரமப்பட்டாள்.
“டூ ஹண்ட்ரட் பெர்சன்ட் ஷ்யூர்ங்க!” உதடுகள் வளைய அவனறியாது கேலியாய் புன்னகை பூத்தது. தேவா அவள் முகத்தைப் பார்த்தவன் அருகே வர, ஆதிரை என்னவெனப் பார்த்தாள்.
“சாப்பாத்தி மாவு ஒட்டி இருக்கு!” அவன் கையை உயர்த்தி அவளது கன்னத்தைத் தொட முயல, நாசூக்காய் நகர்ந்தவள், “ஆமாங்க... நைட்டியெல்லாம் கூட மாவு. ரொம்ப அழுக்கா இருக்கேன். நான் ஃபர்ஸ்ட் குளிச்சிட்டு வரேன். நீங்க அடுத்துக் குளிங்க!” என்றவாறே கழிவறைக்குள் புகுந்தாள்.
குளித்து முடித்ததும் ஏனோ தானவேன்று தலையைப் பின்னலிட்டவள் முகத்திற்கு அறைகுறையாய் முகப்பூச்சிட்டு தேவா குளித்து வரும் முன்னே கைப்பையுடன் வெளியே சென்றாள். ஜனனி அபியையும் ராகினியையும் பள்ளிக்கு கிளப்பி தயாராக வைத்திருக்க, அவரவர் உரிய வாகனம் வந்ததும் இருவரும் விடை பெற்றனர். ஆதிரை பெயருக்கு இரண்டு சப்பாத்திகளை உண்டு எழுந்தவள், “ஜானு, உங்க மாமா வந்ததும் நீங்க அவரைப் பார்த்துக்குறீங்களா? எனக்கு டைமாகிடுச்சு?” எனக் கேட்டவள் வானகச் சாவியைக் கையில் எடுத்தாள்.
“ஹக்கும்... உங்களுக்கு புருஷனாக முன்னாடியே அவர் என்னோட மாமாக்கா. நான் பார்த்துக்க மாட்டேனா?” அவள் கேலியாய்க் கேட்க, ஆதிரை சின்ன சிரிப்புடன் அகன்றாள். தேவா உண்ண வந்தவன் மனைவியைத் தேடினான்.
அவன் பார்வையை உணர்ந்த ஜனனி, “அக்கா டைமாச்சுன்னு கிளம்பிட்டாங்க மாமா!” என்றவாறே அவனுக்கு உணவு பரிமாறினாள்.
பிரதன்யா அப்போதுதான் கொட்டாவி விட்டவாறே வெளியே வந்தாள். “அண்ணி, காஃபி!” அவள் கேட்க, தேவா நிமிர்ந்தான்.
“இன்னைக்கு காலேஜ் இல்லையா பிரது உனக்கு? வீக் டேய்ஸ்ல என்ன லீவ்?” என யோசனையுடன் கேட்டான்.
“அண்ணா, நெக்ஸ்ட் வீக் செமஸ்டர். சோ, ஸ்டடி ஹாலிடேய்ஸ் விட்டிருக்காங்கண்ணா!” அவள் பதிலளிக்க, “ஸ்டடி ஹாலிடேய்ஸ் எக்ஸாம்க்குப் படிக்கத் தானே? இப்போ டைம் என்ன? ஏன் லேட்டா எழுந்து வர்ற? இயர்லி மார்னிங் படிக்க வேண்டியது தானே?” அவன் கண்டிப்புடன் கேட்க,
‘ப்மச்...தூக்கம் கலைஞ்சது கலைஞ்ச, ஒரு பத்து நிமிஷம் இவன் போன பின்னாடி முழிப்பு வந்திருக்க கூடாதா?’ என நொந்தவள், “நாளைல இருந்து மார்னிங் எழுந்து படிக்க ட்ரை பண்றேன் ப்ரோ!” என்றவாறே அகன்றுவிட்டாள்.
***
“என்னக்கா? புது சுடிதாரா? கலர் காம்பினேஷன் செம்ம?” தர்ஷினி ஆதிரை ஆய்வகத்திற்குள்
நுழைந்ததுமே கேட்க, அவள் குனிந்து என்ன உடுத்தியிருக்கிறோம் எனத் தன்னுடைய உடையைப் பார்த்தாள்.
காலையில் எதை உடுத்தினோம் என்ற நினைவே அவளிடம் இல்லை. மஞ்சளும் பச்சையும் கலந்த சுரிதார் அது. இரண்டு முறை வெளியே செல்லும்போது அணிந்து இருக்கிறாள். இங்கே வேலைக்கு வரும்போது ஒருமுறை கூட அணிந்து வராததால் தர்ஷினிக்கு இது புது உடையாகத் தோன்றி இருக்கலாம் என அவள் யோசிக்க, “அச்சோ...சாரிக்கா. சாரிகா, நேத்து உங்களுக்கு பெர்த்டே இல்லை. லாஸ்ட் இயரும் நான் மறந்துட்டேன். சோ, இந்த வருஷமாவது கரெக்டா விஷ் பண்ணணும்னு நினைச்சேன். பட், இப்பவும் மறந்துட்டேன்!” என்றாள் துள்ளல் குறைந்து கைகளைத் தலைக்கு மேலே தூக்கி.
“அட, விடு தர்ஷினி!” என்ற ஆதிரை மடிக்கணினியை உயிர்ப்பிக்க, “ஆ... க்கா, எனக்கு இப்போதான் தோணுது. இது உங்க ஆள் வாங்கிக் கொடுத்த ட்ரெஸ்ஸா? அப்படியே மின்னுதே!” என்றாள் ஆர்வமாய். ஆதிரையின் முகம் மெல்ல மாறினாலும் அதை மற்றவளுக்கு காண்பிக்காது புன்னகைத்தாள்.
“ப்ம்ச்... சிரிச்சு மழுப்பக் கூடாது! உண்மையை சொல்லுங்க. என்ன கிஃப்ட் வாங்கி குடுத்தாரு? டின்னருக்கு எங்க போனீங்க? நம்ப சாரோட டேஸ்ட் எப்படி? ஹவ் ரொமான்டிக் ஹீ இஸ்?” தர்ஷினி கேள்விகளால் துளைக்க, ஆதிரைக்கு மறந்து போன நிகழ்வை மீண்டும் கிளற வேண்டுமா என தோன்றிற்று. தேவாவின் மீதிருக்கும் ஆற்றாமையை இவர்களிடம் கோபமாய்க் காண்பித்து விடக் கூடாதே என மனம் பதறியது. அவள் கேள்விக்குப் பதிலளிக்காது மழுப்பினாள்.
சுபாஷ் இடையில் வந்து இவளைக் காப்பாற்ற, தர்ஷினி தற்காலிகமாக அந்தப் பேச்சை விட்டிருந்தாள். ஆதிரைக்கு ஆசுவாசம் பிறந்தது. கோமதி வரவும் மீண்டும் பிறந்தநாள் வாழ்த்து தொடங்க, நாசூக்காய் அவர்களது கேள்விளைத் தவிர்த்துவிட்டாள்.
தேவா காலையில் வரவில்லை. ஹரியுடன் அந்தக் கிளைக்குச் சென்று மதியத்திற்கு மேல்தான் வந்தான். ஆதிரை அவனில்லாத நேரத்தில் வேலையை சரியாய் முடித்து சமர்ப்பித்தாள். அவன் சிறு தலையாட்டலோடு கேட்டுக் கொள்ள, அலுவலகப் பேச்சைத் தவிர்த்து வேறொன்றும் பெரிதாய் இல்லை.
அந்த வாரம் அப்படியே கழிந்திருக்க, தேவாவிற்கு அப்போதுதான் நின்று நிதானமாக மூச்சுவிட நேரம் கிடைத்தது. கடந்த சில நாட்களாக அந்தக் கிளைக்கும் இந்தக் கிளைக்கும் அலைந்து சோர்ந்து போயிருந்தான். வேலையெல்லாம் முடிந்து அனைத்தும் சரியாகிவிடவே அன்றைக்கு விரைவாய் வீட்டிற்கு வந்தான்.
அறைக்குள் கலகலவென சிரிப்பு சப்தம் கேட்டது. இவன் உள்ளே செல்ல, ஆதிரையின் மேலே படுத்துக் கொண்டு ராகினி சிரிக்க, அபியும் அவளுக்கு அருகே இருந்தான். மூவரும் ஏதோ சிரித்து விளையாடிக் கொண்டிருந்தனர். இவனுக்கும் அவர்களைப் பார்த்ததும் முகம் மலர்ந்தது. ஆதிரை அவன் வந்ததும் எழுந்து அமர்ந்து முடியைக் கொண்டையிட்டாள்.
“தேவாப்பா!” ராகினியும், “அங்கிள்!” என அபியும் அவனைப் பிடித்துக் கொண்டனர்.
“ப்பா... எனக்கு ஹாட் சாக்லேட் வேணும்!” ராகி கேட்க, “எனக்கு ஓரியோ மில்க் ஷேக் வேணும் அங்கிள்!” அபியும் அடம்பிடித்தான். கடந்த வாரம் அவர்களை வெளியே அழைத்துச் சென்று வாங்கித் தருகிறேன் எனக் கூறி இருந்தான். ஆனால் எதிர்பாராத விதமாக வேலை கழுத்தை நெறிக்க, அவனால் அவர்களுடன் நேரத்தை செலவழிக்க முடியாமல் போயிற்று.
“சரி, பட் ஒன்னே ஒன்னுதான். நோ ஐஸ் க்ரீம்!” கண்டிப்புடன் கூறியவன், “ஃபைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க. நான் ப்ரெஷ்ஷாகிட்டு வரேன்!” என்றான். குழந்தைகள் இருவரும் குஷியாகினர்.
தேவா சில நொடிகள் யோசித்தான். திருமணம் முடிந்ததிலிருந்தே ஆதிரையையும் எங்கேயும் அழைத்துச் செல்லவில்லை என நினைத்தவன், “ஆதிரை, கெட் ரெடி. சேர்ந்து போய்ட்டு வரலாம்!” என அவளையும் அழைத்தான்.
“ம்கூம்... நான் வரலைங்க. நீங்க பிள்ளைங்களோட போய்ட்டு வாங்க!” என்றாள் மறுப்பாய் தலையை அசைத்து.
“ப்ம்ச்... ஏன் வரலை? போ, போய் ரெடியாகு. பக்கத்துல எதாவது ரெஸ்டாரண்ட்க்குப் போய்ட்டு வரலாம்!” அவன் மறுபடியும் வற்புறுத்த, “இல்ல, அது எனக்கு ஸ்டமக் பெய்ன்ங்க. நான் வரலை!” என்றாள் பொய்யான காரணத்தை காண்பித்து.
“ஓ... ஓகே, நீ ரெஸ்ட் எடு!” என்றவன் பிள்ளைகளோடு கிளம்பினாலும் அவளை ஒருமுறை பார்த்துவிட்டே அகன்றான். ஆதிரை அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.
இரவுக்கு என்ன சமைக்க வேண்டும் என யோசித்தாள். உண்மையில் அவளும் அபியுமாக இருக்கும் பொழுதுகளில் சமையல் பெரும் வேலையாக இருந்தது இல்லை. மகனுக்கு என்னப் பிடிக்குமோ அதையே தனக்கும் சமைத்து உண்பாள். அதனாலே என்ன சமைக்க என பெரிதாய் மெனக்கெட வேண்டியது இல்லை.
ஆனால், இங்கே அப்படியில்லை. கிட்டத்தட்ட பத்து பேருக்கு சமைக்க வேண்டும். மூன்று வேளையும் புதிதாய் எதாவது செய்ய வேண்டும். சமைத்ததையே மீண்டும் மீண்டும் செய்ய முடியாது. அதனாலே சற்று சலிப்பு தட்டியது. அவள் இந்த வீட்டிற்கு வந்த சில நாட்கள் வாணி இவளை சமைக்க விடக் கூடாது என எண்ணினார்தான். ஆனால் இப்போதெல்லாம் மொத்த சமையலும் அவள் தலையில்தான் விழுந்தது.
அவர் சமையல் பக்கமே வருவதை மெதுவாய் குறைத்தார். மூன்று வேளை சமைத்தவர் இப்போதெல்லாம் ஒரு வேளைக்கு சமைப்பதே பெரிதாய் இருந்தது. ஜனனிக்கு பேறுகாலம் வெகு அருகில் இருந்தது. அதனால் அவளையும் வேலை வாங்க முடியாது. இவள் தனியாளாக வீட்டில் காலைக்கும் இரவுக்கும் சமைத்து அலுவலக வேலையும் செய்வதில் உடல் அலண்டது.
பிரதன்யா கல்லூரி நேரம் போக இவளுக்கு உதவலாம். இப்போதைக்கு அவளால் மட்டுமே சமையலை பகிர்ந்து கொள்ள முடியும். ஆனால் இவளாகச் சென்று பிரதுவிடம் உதவி கேட்க மனமில்லை. படிக்கும் பிள்ளையை வேலை வாங்குகிறாள் என அதற்கும் வாணி எதாவது பேசுவார். அதானலே என்ன செய்வது என அலைபேசியை துழாவி காய்கறிகள் கலந்து செய்யும் நெய் சோறும் பட்டானி குருமாவும் செய்யலாம் என சமையலறை நோக்கிச் சென்றாள்.
மகனைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே அவனுக்கு அருகே சாய்ந்தவாறே கட்டிலில் அமர்ந்திருந்தாள் ஆதிரை. அவளது கையில் புத்தகம் ஒன்றிருந்தது. தேவா வரத் தாமதமாக, அதுவரை அலைபேசியில் உலாவ அவளுக்கு விருப்பமில்லை. கூடத்தில் சென்று தொலைக்காட்சியைப் பார்க்கவும் மனம் ஒன்றவில்லை.
சரியென்று அவனது அலமாரியிலிருந்து தமிழ் புத்தகம் ஒன்றை எடுத்துப் புரட்டத் தொடங்கினாள். மனம் அதில் லயிக்கவே இல்லை. வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் தேவாதான் நினைவிற்கு வந்தான்.
வேண்டாமென தட்டிவிட முயன்றாலும் அவன் வாழ்த்தாதது பெரிய குறையாய் மனதில் தங்கிப் போனது. பெரிதாய் நகை, புடவை என எதையும் அவள் எதிர்பார்த்தது இல்லை. ஒரே ஒரு வாழ்த்தை மட்டும்தான் பெரிதாய் நினைத்தாள். அதுவே கிடைக்காத போது கோபமா? ஆற்றாமையா எனத் தெரியாது மனம் வலித்து தொலைத்தது.
உண்மையில் ஆதிரை எதையும் பெரிதாய் நினைக்க மாட்டாள். எதற்காகவும் அலட்டிக் கொள்ளவும் மாட்டாள். இத்தனை நாட்கள் தான், தனக்கு என்றிருந்த வாழ்க்கையில் உன்னை நேசிக்கிறேன் என்று பின்னோடு சுற்றி திருமணத்தை முடித்தவன் உடனிருக்கையில் அவளையும் அறியாது சின்ன எதிர்பார்ப்பு முளைத்திருக்க, அதை முளையிலே கிள்ளி எறிவதுதான் அமைதியான வாழ்க்கைக்கு வழி வகுக்கும் என மூளை அறிவுறுத்தியது.
அவன் வந்ததும் ஏன் வாழ்த்தவில்லை எனக் கேட்டு சண்டை பிடிக்கும் ரகமில்லை அவள். மறந்துவிட்டாயா? நல்லது என்று ஒதுங்கி கொள்வாள். யாரிடமும் எதையும் கேட்டு வாங்கிப் பழக்கப்பட்டிராத மனது இதை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கச் செய்து, மனதை மாற்றியது.
இதுவரை ஏன் பிறந்த நாளை மறந்தாய் எனக் கேட்டு சண்டையிடும் அளவிற்கு கூட ஆதிரையுடன் யாரும் இருந்ததாய் நினைவில் இல்லை. அப்படி இருக்கையில் இந்த நிகழ்வு தன்னைப் பாதிக்காது என சஞ்சலப்பட்ட மனதை தேற்றி அந்தப் புத்தகத்தில் நுழைய முயன்ற போது தேவா கதவை திறந்து உள்ளே வந்தான்.
அவன் அரவத்தில் ஆதிரை நிமிர, உழைத்துக் களைத்துப் போயிருந்தது அவனது முகம். இவளைப் பார்த்ததும் மெல்லிய தலையசைப்பைக் கொடுத்தவன் அலமாரியில் மாற்றுடையைத் தேடிக் கொண்டே, “டைம் பதினொன்னு ஆச்சு ஆதி. டைபிகல் வொய்ஃபா நீ நான் வர்ற வரைக்கும் முழிச்சிருக்கணும்னு அவசியம் இல்ல. உனக்குத் தூக்கம் வந்தா சாப்ட்டு தூங்கு. சம் டைம்ஸ் எனக்கு வொர்க் அதிகமா இருக்கும். நான் மார்னிங் லேட்டா எழுவேன். பட் உனக்கு வொர்க் இருக்கு. கரெக்ட் டைம்க்கு வேலைக்குப் போகணும். சோ, டோன்ட் வெய்ட் ஃபார் மீ!” என்றான். அவளிடமிருந்து பதில் வராது போக, துண்டை எடுத்து தோளில் போட்டவாறே அவளைத் திரும்பி பார்த்தான்.
அமைதியாய் இருந்தவள், “நாளைல இருந்து நான் வெய்ட் பண்ணலைங்க. நீங்க குளிச்சிட்டு வாங்க, நான் தோசை சுட்டு வைக்கிறேன்!” என சின்ன புன்னகையுடன் அவள் அகல, இவன் குளித்து வந்தான்.
அதற்குள்ளே ஆதிரை நான்கு தோசைகளை சுட்டு அடுக்கிவிட்டாள். மேலும் ஒரு தோசைக் கேட்டு வாங்கி வயிறு நிறைய உண்டவன், “தேங்க் யூ!” என்றவாறே அறைக்குள் நுழைந்தான். இவள் மாவை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டு அவன் சாப்பிட்ட தட்டோடு மற்ற பாத்திரங்களையும் கழுவிவிட்டே வந்து படுத்தாள்.
தேவா இரண்டு கால்களையும் அகட்டிப் படுத்தவாறே நன்று ஆழ்ந்து உறக்கிக் கொண்டிருந்தான். லேசாய் உதடுகள் பிளந்து மெல்லிய குறட்டை சப்தம் கேட்டது. இவள் அறையைப் பூட்டி விளக்கணைத்துவிட்டு அவனைத் தள்ளிப் படுக்க வைக்க முயன்றாள். முடியாது போனது. அடித்துப் போட்டாற் போல நன்றாகத் தூங்கினான்.
அபியும் அவனுமே கட்டிலை மொத்தமாய் ஆக்கிரமித்திருந்தனர். தேவாவின் கட்டில் இரண்டு பேர் வசதியாய் படுக்க கூடிய அளவில் இருந்தது. மூன்று பேர் என்கையில் ஓரளவிற்கு அனுசரித்து இடித்துக்கொண்டு தான் படுப்பார்கள். ஆனால் இன்றைக்கு அவளுக்கு கொஞ்சம் கூட இருவரும் இடம் விட்டிருக்கவில்லை.
இவள் அங்கிருந்து எடுத்து வந்த போர்வையை எடுத்து தரையில் விரித்து ஒரு தலையணையை எடுத்துப் போட்டு படுத்துக் கொண்டாள். இவளது பார்வை முழுவதும் தேவாவின் முகத்தில்தான் இருந்தது. அவனுக்கு தூக்கத்தில் கூட இவளது தொடர் பார்வை அசௌகரியத்தை கொடுத்திருக்க கூடும். முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டான். ஆதிரை நேராய் படுத்து சுழலும் மின்விசிறியையே நீண்ட நேரம் பார்த்திருக்க, மெல்ல கண்கள் சொருகி தூக்கம் சுழற்றியது.
காலை ஏழு மணியாகிவிட, ஆதிரைக்கு விழிப்பு வரவில்லை. அபி எழுந்து கண்ணைக் கசக்கியவாறே தாயைத் தேட, அவள் தரையில் படுத்திருக்கவும் கட்டிலிலிருந்து இறங்கி அவளருகே படுத்து இறுக்கி அணைத்தான்.
அவனது தொடுதலில் ஆதிரைக்கு உறக்கம் கலைய, “என் தங்கம் எழுந்துட்டீங்களா?” என மலர்ந்த முகத்துடன் அவன் முடியைக் கோதினாள்.
“இப்போதான்மா எழுந்தேன். ஏன் கீழே படுத்திருக்கீங்க? ஐ மிஸ் யூ லாஸ்ட் நைட்!” என்றான் அவளை உரசியபடியே.
இவளுக்கு மெலிதாய் சிரிப்பு வர, கூடவே மனதோரம் சின்னதாய் இதம் பரவிற்று. அவளைத் தேடுவதற்கு அபி இருக்கிறான் என உள்ளம் உருக, “என் தங்கம், ஒருநாள் தானே டா நான் உன் கூடப் படுக்கலை. அதுக்குள்ளேயும் உனக்கு மிஸ் பண்ற அளவுக்குப் போய்டுச்சா?” என்றவாறே அவன் நெற்றியிலும் கன்னத்திலும் முத்தமிட்டாள்.
“சரி, எழுந்து பிரஷ் பண்ணு அபி கண்ணா, அம்மா பூஸ்ட் கலக்கித் தரேன்!” என்றாள்.
“ப்ம்ச்... ம்மா நேத்து ஜானு சித்தி ஒரு பூஸ்ட் குடுத்தாங்கம்மா. அது நீ குடுக்கற பூஸ்டை விட டேஸ்டா இருந்துச்சும்மா. எனக்கு அது வேணும்!” இவன் சிணுங்கலாய்க் கூறி தாயின் கழுத்தைக் கட்டிக் கொள்ள, ஆதிரைப் புன்னகைத்தாள்.
“அப்படியா? சரி, இன்னைக்கு அபி சமத்துப் பையனா எழுந்து அம்மா குடுக்குற பூஸ்டை குடிப்பியாம். அம்மா ஜானு சித்திக்கிட்டே கேட்டு அது என்ன பூஸ்ட்னு வாங்கித் தரேன்!” வாஞ்சையாய் அவன் முகத்தை தடவினாள்.
“சூப்பர்ம்மா... தேங்க் யூ ம்மா!” அவள் கன்னத்தை எச்சில் செய்தவன் குதூகலத்துடன் எழுந்து சென்றான். இருவரும் தேவாவின் தூக்கம் கலையக் கூடாது என மெல்லிய குரலில் கிசுகிசுத்தனர். ஆதிரை எழுந்து தான் படுத்த போர்வையை கட்டிலில் போட்டுவிட்டு முகம் கழுவி பல் துலக்கி சமையலறைக்குள் சென்றாள்.
ஹரி அங்கே தேநீர் தயாரிக்கத் திணறிக் கொண்டிருந்தான். “என்ன பண்றீங்க ஹரி?” எனக் கேட்டவாறே இவள் அடுப்பை சரியாய் பற்ற வைத்தாள்.
“இல்ல, டீ போடலாம்னு வந்தேன் அண்ணி. டீ தூள் எங்கேன்னு தெரியலே!” என்றான் அசட்டுச் சிரிப்புடன். பொன்வாணி மகன்களை அடுப்படிக்குள் விட மாட்டாறே என யோசித்தவள் தேநீர் தூளை எடுத்து அருகே வைத்தாள்.
“அம்மாவும் அப்பாவும் ரிலேட்டீவ் மேரேஜ்னு சீக்கிரமே கிளம்பி போய்ட்டாங்க அண்ணி!” அவள் பார்வையின் பொருளுரணர்ந்து ஹரி பதிலளித்தான்.
“நீங்க போங்க ஹரி, நான் டீ போட்டு எடுத்துட்டு வரேன்!” அவள் கூற, இவன் தயங்கினான்.
“போங்க ஹரி!” அவள் மீண்டும் அழுத்திக் கூற, அவன் அகன்றான். மற்றொரு அடுப்பில் பாலைக் காய்ச்சினாள். தேநீரை வடிகட்டி அவனுக்கும் தனக்கும் எடுத்துக் கொண்டவள் அபிக்கு சத்து மாவைக் காய்ச்சும் போதே ராகினியும் எழுந்து வர, அவளுக்கும் கொடுத்தாள்.
ராகினி அதைக் குடிக்க மாட்டேன் என முகத்தைச் சுளிக்க, இவள்தான் அதட்டி உருட்டி குடிக்க வைத்தாள். பொன்வாணி மதியத்திற்கு சமைத்து வைத்துவிட்டே சென்றிருக்க, காலை என்ன செய்யலாம் என யோசித்தாள்.
சப்பாத்தி சுட்டு பன்னீர் குருமா வைக்கலாம் என யோசனை வந்தது. சென்ற வாரம் வாங்கி வந்த பன்னீர் தொடப்படாமல் அப்படி இருந்தது. ஆனால் ஏழு பேருக்கு சப்பாத்தியை சுட்டு முடித்து குருமா செய்ய முடியுமா என சந்தேகம் எழுந்தது. நேரத் தாமதமானால் அதற்கும் தேவா எதாவது சொல்வானே என தோன்றினாலும், விரைவில் செய்து முடிக்கலாம் என மாவைப் பிசைந்தாள்.
அபியையும் ராகினியையும் குளிக்க அனுப்பிவிட்டு இவள் சாப்பாத்தியை சுட, ஜனனி அப்போதுதான் எழுந்து வந்தாள். நன்றாய் உறங்கியதில் அவளது கன்னம் உப்பி போயிருந்தது.
இவளைப் பார்த்ததும், “குட் மார்னிங் ஆதிக்கா. சாரி, இன்னைக்கு நான் லேட்!” என்றாள். ஆதிரை புன்னகைத்தாள்.
“என்ன குக்கிங்? சப்பாத்தியா? தொட்டுக்க என்ன பண்ணப் போறீங்க?” எனக் கேட்டவள் அருகே இருந்த பன்னீரைப் பார்த்துவிட்டு, “நான் கடாய் பன்னீர் செய்றேன்!” என்றாள் அதை எடுத்து நறுக்கியபடியே.
“டீயைக் குடிச்சிட்டு செய்ங்க ஜானு... அப்படியே உங்க மாமாவுக்கும் டீயைக் குடுத்துடுங்க!” இரண்டு குவளைகளில் தேநீரை நிரப்பினாள். இவள் முகத்தில் விழுந்த முடியை ஒதுக்கி திரும்பும் போதுதான் தேவா நீள்விருக்கையில் வந்து அமர்ந்தான். ஜானு கொடுத்த தேநீரைப் பருகிறவாறே ஹரியுடன் பேசினான்.
ஜனனி பன்னீரை சமைக்க, ஆதிரை சப்பாத்தியை சுட்டு முடித்ததும், “டைமாச்சு ஜானு, நான் போய் ரெடியாகுறேன்!” என் அவளிடம் கூறிவிட்டு கூடத்திலிருந்த தேவாவை ஒரு நொடி பார்த்தவள், அறைக்குள் நுழைந்தாள். அபி குளித்து உடை மாற்றினான். இவளைக் கண்டதும் அவன் வெட்கப்பட்டு கால் சராயை அணிய, மெல்லிய சிரிப்பு உதட்டில் ஒட்டியது.
அவன் தலையை துவட்டியவள், “ஜானு சித்தி இருக்காங்க, ராகினியோட நீயும் சமத்தா சாப்பிடு அபி!” என அவனை அனுப்பியவள், கட்டிலில் கலைந்து கிடந்த போர்வையை மடிக்கத் தொடங்க, தேவா உள்ளே வந்தான்.
அவளைக் கண்டதும்தான் நேற்று அவளுடைய பிறந்தநாள் என்றே மனம் நினைவுபடுத்தியது. வாழ்த்து சொல்லலாமா? வேண்டாமா? என்ற யோசனை படர்ந்தது. தாமதமாய் கூறுவது அபத்தமாய் தோன்ற, ஆனாலும் அவளை அழைத்தான்.
“ஆதி!” அவன் குரலுக்கு, “என்னங்க, சொல்லுங்க!” என கேட்டவள் தலையணையை அதனதன் இடத்தில் வைத்தாள்.
“பிலேடட் ஹேப்பி பெர்த் டே ஆதிரை. நேத்து எனக்கு உன் பிறந்த நாள்னு தெரியாது, சாரி!”
ஏதோ கூற வேண்டும் என்ற கடமைக்காய் ஒரு வாழ்த்தைப் பகிர்ந்தான்.
ஆதிரை சில நொடிகள் அமைதியாய் இருந்தவள், அவன் முகம் பார்த்து முறுவலித்து, “தேங்க்ஸ்ங்க... இட்ஸ் ஓகே!” என்றாள் கண்களை எட்டா புன்னகையுடன்.
“உனக்கு கோபம் எதுவும் இல்லையே! சாரி, எனக்கு இந்த மாதிரி பெர்த் டே ஞாபகம் வச்சு விஷ் பண்றது, கிஃப்ட் பண்றது எல்லாம் வராத விஷயம். அண்ட் ஐ க்நோ யூ வெரி வெல். யூ ஆர் மெச்சூர்ட் கேர்ள். நீ என்ன கிட்-ஆ என்னோட விஷ்ஷை எக்ஸ்பெக்ட் பண்ண?” கேள்வியும் அவனே கேட்டு பதிலும் அவனே உரைத்தான். ஆதிரை சின்னதாய் புன்னகைத்தாள்.
“எனக்கே என் பெர்த் டே ஞாபகம் இல்லைங்க. நீங்க அதை ஞாபகம் வச்சுக்கணும்னு அவசியம் இல்ல. நான் எதுவும் எக்ஸ்பெக்ட் பண்ணலைங்க!” என்ற போது லேசாய் தொண்டையில் ஏதோ ஒன்று சிக்கிக் கொண்டது. அவன் முகம் பார்க்காது அலமாரியிலிருந்து ஒரு புடவையை உருவச் சென்றவள், அதைவிடுத்து கையில் கிடைத்த சுரிதார் ஒன்றை எடுத்தாள்.
“ஆர் யூ ஷ்யூர்?” அவன் அவள் முகத்தை தான் பார்த்தான். அதில் வருத்தம், எதிர்பார்ப்பு என எதையும் கண்டறியவில்லை. எப்போதும் போல அமைதியான பாவனை. அதனாலே தேவாவிற்கு அவளது மனம் புரியாது போனது. ஆதிரை முயன்று முகத்தில் எதையும் காண்பிக்காதிருக்க சிரமப்பட்டாள்.
“டூ ஹண்ட்ரட் பெர்சன்ட் ஷ்யூர்ங்க!” உதடுகள் வளைய அவனறியாது கேலியாய் புன்னகை பூத்தது. தேவா அவள் முகத்தைப் பார்த்தவன் அருகே வர, ஆதிரை என்னவெனப் பார்த்தாள்.
“சாப்பாத்தி மாவு ஒட்டி இருக்கு!” அவன் கையை உயர்த்தி அவளது கன்னத்தைத் தொட முயல, நாசூக்காய் நகர்ந்தவள், “ஆமாங்க... நைட்டியெல்லாம் கூட மாவு. ரொம்ப அழுக்கா இருக்கேன். நான் ஃபர்ஸ்ட் குளிச்சிட்டு வரேன். நீங்க அடுத்துக் குளிங்க!” என்றவாறே கழிவறைக்குள் புகுந்தாள்.
குளித்து முடித்ததும் ஏனோ தானவேன்று தலையைப் பின்னலிட்டவள் முகத்திற்கு அறைகுறையாய் முகப்பூச்சிட்டு தேவா குளித்து வரும் முன்னே கைப்பையுடன் வெளியே சென்றாள். ஜனனி அபியையும் ராகினியையும் பள்ளிக்கு கிளப்பி தயாராக வைத்திருக்க, அவரவர் உரிய வாகனம் வந்ததும் இருவரும் விடை பெற்றனர். ஆதிரை பெயருக்கு இரண்டு சப்பாத்திகளை உண்டு எழுந்தவள், “ஜானு, உங்க மாமா வந்ததும் நீங்க அவரைப் பார்த்துக்குறீங்களா? எனக்கு டைமாகிடுச்சு?” எனக் கேட்டவள் வானகச் சாவியைக் கையில் எடுத்தாள்.
“ஹக்கும்... உங்களுக்கு புருஷனாக முன்னாடியே அவர் என்னோட மாமாக்கா. நான் பார்த்துக்க மாட்டேனா?” அவள் கேலியாய்க் கேட்க, ஆதிரை சின்ன சிரிப்புடன் அகன்றாள். தேவா உண்ண வந்தவன் மனைவியைத் தேடினான்.
அவன் பார்வையை உணர்ந்த ஜனனி, “அக்கா டைமாச்சுன்னு கிளம்பிட்டாங்க மாமா!” என்றவாறே அவனுக்கு உணவு பரிமாறினாள்.
பிரதன்யா அப்போதுதான் கொட்டாவி விட்டவாறே வெளியே வந்தாள். “அண்ணி, காஃபி!” அவள் கேட்க, தேவா நிமிர்ந்தான்.
“இன்னைக்கு காலேஜ் இல்லையா பிரது உனக்கு? வீக் டேய்ஸ்ல என்ன லீவ்?” என யோசனையுடன் கேட்டான்.
“அண்ணா, நெக்ஸ்ட் வீக் செமஸ்டர். சோ, ஸ்டடி ஹாலிடேய்ஸ் விட்டிருக்காங்கண்ணா!” அவள் பதிலளிக்க, “ஸ்டடி ஹாலிடேய்ஸ் எக்ஸாம்க்குப் படிக்கத் தானே? இப்போ டைம் என்ன? ஏன் லேட்டா எழுந்து வர்ற? இயர்லி மார்னிங் படிக்க வேண்டியது தானே?” அவன் கண்டிப்புடன் கேட்க,
‘ப்மச்...தூக்கம் கலைஞ்சது கலைஞ்ச, ஒரு பத்து நிமிஷம் இவன் போன பின்னாடி முழிப்பு வந்திருக்க கூடாதா?’ என நொந்தவள், “நாளைல இருந்து மார்னிங் எழுந்து படிக்க ட்ரை பண்றேன் ப்ரோ!” என்றவாறே அகன்றுவிட்டாள்.
***
“என்னக்கா? புது சுடிதாரா? கலர் காம்பினேஷன் செம்ம?” தர்ஷினி ஆதிரை ஆய்வகத்திற்குள்
நுழைந்ததுமே கேட்க, அவள் குனிந்து என்ன உடுத்தியிருக்கிறோம் எனத் தன்னுடைய உடையைப் பார்த்தாள்.
காலையில் எதை உடுத்தினோம் என்ற நினைவே அவளிடம் இல்லை. மஞ்சளும் பச்சையும் கலந்த சுரிதார் அது. இரண்டு முறை வெளியே செல்லும்போது அணிந்து இருக்கிறாள். இங்கே வேலைக்கு வரும்போது ஒருமுறை கூட அணிந்து வராததால் தர்ஷினிக்கு இது புது உடையாகத் தோன்றி இருக்கலாம் என அவள் யோசிக்க, “அச்சோ...சாரிக்கா. சாரிகா, நேத்து உங்களுக்கு பெர்த்டே இல்லை. லாஸ்ட் இயரும் நான் மறந்துட்டேன். சோ, இந்த வருஷமாவது கரெக்டா விஷ் பண்ணணும்னு நினைச்சேன். பட், இப்பவும் மறந்துட்டேன்!” என்றாள் துள்ளல் குறைந்து கைகளைத் தலைக்கு மேலே தூக்கி.
“அட, விடு தர்ஷினி!” என்ற ஆதிரை மடிக்கணினியை உயிர்ப்பிக்க, “ஆ... க்கா, எனக்கு இப்போதான் தோணுது. இது உங்க ஆள் வாங்கிக் கொடுத்த ட்ரெஸ்ஸா? அப்படியே மின்னுதே!” என்றாள் ஆர்வமாய். ஆதிரையின் முகம் மெல்ல மாறினாலும் அதை மற்றவளுக்கு காண்பிக்காது புன்னகைத்தாள்.
“ப்ம்ச்... சிரிச்சு மழுப்பக் கூடாது! உண்மையை சொல்லுங்க. என்ன கிஃப்ட் வாங்கி குடுத்தாரு? டின்னருக்கு எங்க போனீங்க? நம்ப சாரோட டேஸ்ட் எப்படி? ஹவ் ரொமான்டிக் ஹீ இஸ்?” தர்ஷினி கேள்விகளால் துளைக்க, ஆதிரைக்கு மறந்து போன நிகழ்வை மீண்டும் கிளற வேண்டுமா என தோன்றிற்று. தேவாவின் மீதிருக்கும் ஆற்றாமையை இவர்களிடம் கோபமாய்க் காண்பித்து விடக் கூடாதே என மனம் பதறியது. அவள் கேள்விக்குப் பதிலளிக்காது மழுப்பினாள்.
சுபாஷ் இடையில் வந்து இவளைக் காப்பாற்ற, தர்ஷினி தற்காலிகமாக அந்தப் பேச்சை விட்டிருந்தாள். ஆதிரைக்கு ஆசுவாசம் பிறந்தது. கோமதி வரவும் மீண்டும் பிறந்தநாள் வாழ்த்து தொடங்க, நாசூக்காய் அவர்களது கேள்விளைத் தவிர்த்துவிட்டாள்.
தேவா காலையில் வரவில்லை. ஹரியுடன் அந்தக் கிளைக்குச் சென்று மதியத்திற்கு மேல்தான் வந்தான். ஆதிரை அவனில்லாத நேரத்தில் வேலையை சரியாய் முடித்து சமர்ப்பித்தாள். அவன் சிறு தலையாட்டலோடு கேட்டுக் கொள்ள, அலுவலகப் பேச்சைத் தவிர்த்து வேறொன்றும் பெரிதாய் இல்லை.
அந்த வாரம் அப்படியே கழிந்திருக்க, தேவாவிற்கு அப்போதுதான் நின்று நிதானமாக மூச்சுவிட நேரம் கிடைத்தது. கடந்த சில நாட்களாக அந்தக் கிளைக்கும் இந்தக் கிளைக்கும் அலைந்து சோர்ந்து போயிருந்தான். வேலையெல்லாம் முடிந்து அனைத்தும் சரியாகிவிடவே அன்றைக்கு விரைவாய் வீட்டிற்கு வந்தான்.
அறைக்குள் கலகலவென சிரிப்பு சப்தம் கேட்டது. இவன் உள்ளே செல்ல, ஆதிரையின் மேலே படுத்துக் கொண்டு ராகினி சிரிக்க, அபியும் அவளுக்கு அருகே இருந்தான். மூவரும் ஏதோ சிரித்து விளையாடிக் கொண்டிருந்தனர். இவனுக்கும் அவர்களைப் பார்த்ததும் முகம் மலர்ந்தது. ஆதிரை அவன் வந்ததும் எழுந்து அமர்ந்து முடியைக் கொண்டையிட்டாள்.
“தேவாப்பா!” ராகினியும், “அங்கிள்!” என அபியும் அவனைப் பிடித்துக் கொண்டனர்.
“ப்பா... எனக்கு ஹாட் சாக்லேட் வேணும்!” ராகி கேட்க, “எனக்கு ஓரியோ மில்க் ஷேக் வேணும் அங்கிள்!” அபியும் அடம்பிடித்தான். கடந்த வாரம் அவர்களை வெளியே அழைத்துச் சென்று வாங்கித் தருகிறேன் எனக் கூறி இருந்தான். ஆனால் எதிர்பாராத விதமாக வேலை கழுத்தை நெறிக்க, அவனால் அவர்களுடன் நேரத்தை செலவழிக்க முடியாமல் போயிற்று.
“சரி, பட் ஒன்னே ஒன்னுதான். நோ ஐஸ் க்ரீம்!” கண்டிப்புடன் கூறியவன், “ஃபைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க. நான் ப்ரெஷ்ஷாகிட்டு வரேன்!” என்றான். குழந்தைகள் இருவரும் குஷியாகினர்.
தேவா சில நொடிகள் யோசித்தான். திருமணம் முடிந்ததிலிருந்தே ஆதிரையையும் எங்கேயும் அழைத்துச் செல்லவில்லை என நினைத்தவன், “ஆதிரை, கெட் ரெடி. சேர்ந்து போய்ட்டு வரலாம்!” என அவளையும் அழைத்தான்.
“ம்கூம்... நான் வரலைங்க. நீங்க பிள்ளைங்களோட போய்ட்டு வாங்க!” என்றாள் மறுப்பாய் தலையை அசைத்து.
“ப்ம்ச்... ஏன் வரலை? போ, போய் ரெடியாகு. பக்கத்துல எதாவது ரெஸ்டாரண்ட்க்குப் போய்ட்டு வரலாம்!” அவன் மறுபடியும் வற்புறுத்த, “இல்ல, அது எனக்கு ஸ்டமக் பெய்ன்ங்க. நான் வரலை!” என்றாள் பொய்யான காரணத்தை காண்பித்து.
“ஓ... ஓகே, நீ ரெஸ்ட் எடு!” என்றவன் பிள்ளைகளோடு கிளம்பினாலும் அவளை ஒருமுறை பார்த்துவிட்டே அகன்றான். ஆதிரை அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.
இரவுக்கு என்ன சமைக்க வேண்டும் என யோசித்தாள். உண்மையில் அவளும் அபியுமாக இருக்கும் பொழுதுகளில் சமையல் பெரும் வேலையாக இருந்தது இல்லை. மகனுக்கு என்னப் பிடிக்குமோ அதையே தனக்கும் சமைத்து உண்பாள். அதனாலே என்ன சமைக்க என பெரிதாய் மெனக்கெட வேண்டியது இல்லை.
ஆனால், இங்கே அப்படியில்லை. கிட்டத்தட்ட பத்து பேருக்கு சமைக்க வேண்டும். மூன்று வேளையும் புதிதாய் எதாவது செய்ய வேண்டும். சமைத்ததையே மீண்டும் மீண்டும் செய்ய முடியாது. அதனாலே சற்று சலிப்பு தட்டியது. அவள் இந்த வீட்டிற்கு வந்த சில நாட்கள் வாணி இவளை சமைக்க விடக் கூடாது என எண்ணினார்தான். ஆனால் இப்போதெல்லாம் மொத்த சமையலும் அவள் தலையில்தான் விழுந்தது.
அவர் சமையல் பக்கமே வருவதை மெதுவாய் குறைத்தார். மூன்று வேளை சமைத்தவர் இப்போதெல்லாம் ஒரு வேளைக்கு சமைப்பதே பெரிதாய் இருந்தது. ஜனனிக்கு பேறுகாலம் வெகு அருகில் இருந்தது. அதனால் அவளையும் வேலை வாங்க முடியாது. இவள் தனியாளாக வீட்டில் காலைக்கும் இரவுக்கும் சமைத்து அலுவலக வேலையும் செய்வதில் உடல் அலண்டது.
பிரதன்யா கல்லூரி நேரம் போக இவளுக்கு உதவலாம். இப்போதைக்கு அவளால் மட்டுமே சமையலை பகிர்ந்து கொள்ள முடியும். ஆனால் இவளாகச் சென்று பிரதுவிடம் உதவி கேட்க மனமில்லை. படிக்கும் பிள்ளையை வேலை வாங்குகிறாள் என அதற்கும் வாணி எதாவது பேசுவார். அதானலே என்ன செய்வது என அலைபேசியை துழாவி காய்கறிகள் கலந்து செய்யும் நெய் சோறும் பட்டானி குருமாவும் செய்யலாம் என சமையலறை நோக்கிச் சென்றாள்.