- Messages
- 1,194
- Reaction score
- 3,478
- Points
- 113
நெஞ்சம் – 37 
இரண்டு மாதங்கள் கடந்து போயிருந்தது. பொன்வாணி இடைப்பட்ட நாட்களில் மகனின் மனதை மாற்ற எவ்வளவோ முயன்று தோல்வியைத் தழுவியிருந்தார்.
தரகரிடம் பேசி அடுத்தடுத்து நான்கைந்து பெண்களின் புகைப்படங்கள் மற்றும் சுயவிவரங்களை அவர் மகனிடம் காண்பிக்க, அவன் பெரிதாய் எதிர்வினை எதுவும் ஆற்றவில்லை. நீங்கள் எத்தனை பெண்களைப் பார்த்தாலும் நான் ஆதிரையைத்தான் திருமணம் செய்வேன் என உறுதியாய் தன் பிடியிலே தேவா நின்றுவிட, இவருக்கு திக்கற்ற நிலை.
இறுதியில் மகனின் மனதை தன்னால் மாற்ற முடியாது என்று எண்ணி அவருடைய அண்ணன், தம்பி, பெரியப்பா மக்கள் என அனைவரையும் வீட்டில் அழைத்து பஞ்சாயத்து ஒன்றை வைத்துவிட, தேவா தன் பொறுமையை இழுத்துப் பிடித்தான். அத்தனை பேரின் முன்பும் இவன் ஏதோ பெரிய குற்றம் இழைத்தவிட்டது போல அவர் பேச, இவனுக்கு கடுப்பானது. உறவுகள் அனைவரும் வயதில் மூத்தவர்கள் என்ற எண்ணத்தில் அவனால் எடுத்தெறிந்து பேச முடியவில்லை. அவன் தந்தையைப் பார்க்க, அவர்தான் மொத்தக் கூட்டத்தையும் சரிகட்டி பேசி அனுப்பி வைத்தார்.
கோபால் மகனின்புறம் தான் நின்றார். அவனைத் தனியே அழைத்துப் பேசினார். தேவாவின் மனதில் என்ன உள்ளது என அறிந்து கொண்டார். அவன் பேசும் போதே ஆதிரையின் மீதான அன்பும் இந்த திருமண விஷயத்தில் அவனின் தீவிரமும் அவருக்குப் புரிந்து போயிற்று. அவருக்கும் தன் மகனுக்குப் போய் ஏற்கனவே விவாகரத்து வாங்கிய பெண்ணா மனைவியாக வர வேண்டும்? என மனதில் ஆதங்கம் இல்லாமல் இல்லை. வாழப் போகும் அவனே எதையும் பெரிதுபடுத்தாத போது இவர் மூக்கை நுழைப்பது அத்தனை உசிதமாய் படவில்லை.
அவன் மனைவி, குழந்தைகள் என நன்றாய் வாழ்ந்தால் போதுமென்று அவர் தன்னுடைய சம்மதத்தை தெரிவித்தார். வீட்டில் அனைவருக்குமே தேவாவின் முடிவு மகிழ்ச்சியைப் பெருக்கிற்று. ஆனால் பொன்வாணி மட்டும் வாய் ஓயாது புலம்பிக் கொண்டே இருந்தார்.
ஒரு கட்டத்தில் கோபாலுக்கே மனைவியின் செயல் சலித்துப் போனது. கடுமையாய் திட்டிவிட்டார். அதிலிருந்து கணவன் மனைவிக்கு இடையில் பேச்சு வார்த்தைக் குறைந்து போயிருந்தது.
“ண்ணா... நீ அம்மா சம்மதிக்கும்னு நம்பிட்டே இரு. அப்புறம் உனக்கும் அண்ணிக்கும் அறுபதாம் கல்யாணம் தான் நடக்கும். பேசாம அப்பாகிட்ட பேசு ப்ரோ. கல்யாணம் முடிஞ்சா வேற வழியில்லாம அம்மா அண்ணியை அக்செப்ட் பண்ணிப்பாங்க!” ஹரி தேவாவிடம் பலமுறை வற்புறுத்த, அவன் மறுத்துவிட்டான்.
அவனுக்குத் தாய் தந்தையின் சம்மதம் முக்கியமாகத் தோன்றிற்று. அவர்கள் சம்மதத்தோடு எளிமையாய் திருமணம் செய்தால் கூடப் போதும் என்பது அவனது சித்தாந்தம். கோபால் கூட மகனை கொஞ்சம் பொறுமையாய் இருக்க கூறினார். மனைவியை தான் சம்மதிக்க வைப்பதாக அவர் வாக்குறுதி கொடுத்திருக்க, தேவாவிற்கு பிரச்சனையின் பெரும்பகுதி நீர்த்துவிட்டதை போல ஆசுவாசமான உணர்வு தோன்றியது.
எப்போதும் போல உழவர் துணை, வீடு வேலை என அதிலே கவனமாய் இருந்தான். அன்றைய பேச்சிற்கு பின்னே ஆதிரை தேவாவிடம் திருமணம் பற்றி ஒரு வார்த்தைக் கூடக் கேட்கவில்லை.
அவனாக அதைப் பற்றி பேசினால் கூட, “ப்ம்ச்... பர்சனல் விஷயத்தை இங்க பேக் கூடாது தேவா சார்!” எனக் கேலியாய் அவன் முறைப்பைப் பெற்றுக் கொண்டாள்.
இந்த இரண்டு மாதத்தில் ஒரு முறை கூட அவளாக தேவாவிடம் திருமணத்திற்கு சம்மதம் கிடைத்து விட்டதா என ஆர்வமாய்க், கவலையாய் ஏன் தகவலாய்க் கூட கேட்கவில்லை.
நீதான் வந்து பிடித்திருக்கிறது என்றாய். உன் வீட்டில் சம்மதம் வாங்குவது உன்னுடைய கடமை என நடந்து கொண்டாள்.
உண்மையில் தேவாவின் மீது அவளுக்கு ஈர்ப்போ பிடிப்போ ஏற்படவில்லை. அவன் மீது முன்பு மரியாதை இருந்தது. இப்போது நல்ல தோழனாய் என அவனை தன் வாழ்க்கையில் ஏற்றிருந்தாள். அவன் முகம் வாடினால், குழப்பத்தில் இருந்தால் நண்பன் என்ற முறையில் அவன் மீது கரினம் எழுந்தது. மற்றபடி இந்த திருமணம் முழுவதும் தேவாவின் விருப்பத்தை மட்டுமே அடிப்படைடாகக் கொண்டுதான் நடக்கும் ஒழிய, ஆதிரை எவ்வித முன்னெடுப்புகளையும் எடுக்கவில்லை. இப்போது வந்து அவன் முடியாது என்று கூனினால் கூட இவள் வருந்தப் போவது இல்லை.
முதலில் மறுத்தாலும் ஆதிரை சம்மதம் கூறியதற்கு முக்கிய காரணம் தேவாவின் குடும்பம். கண்டிப்பாக தன்னைப் பற்றித் தெரிந்தால் எள் அளவு கூட அவர்கள் அவனது விருப்பத்திற்கு செவிசாய்க்க மாட்டார்கள் என திடமாய் நம்பினாள்.
அவன் எல்லாவற்றிலும் சரியானவன், நேர்மையானவன். அப்படி இருப்பவனுக்கு முறையில்லாமல் குழந்தையைப் பெற்று வளர்த்து கொண்டிருக்கும் நான் எந்த வகையில் சரியாய் இருப்பேன் என கொதித்துப் போய் விடுவார்கள், எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்றே அவள் எண்ணினாள். அவளது மனதை போலவே நடப்பது அனைத்தும் அமைந்து போயிற்று.
ஒருவேளை இவன் வற்புறுத்தி சம்மதிக்க வைத்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என மற்றொரு மனம் முந்தியது. என்னவோ விதியென தனியே வாழ்க்கையை வாழ்கிறாள். அவளாக சுயமாய் எடுத்த முடிவு எனினும் எத்தனையோ நாட்கள் தனிமையின் கொடுமை அவளை வாட்டியிருக்கிறது. வெளியே சிரித்து தன்னை அரிதாரம் பூசிக் காண்பித்தாலும் உள்ளே அவளுக்கென்று குட்டியாய் இதயம் ஒன்று இன்னும் உணர்வுடன் துடித்துக் கொண்டிருந்ததே.
எல்லோருடைய உதாசீனத்தை மட்டுமே இதுவரைக் கண்டு துவண்டு போன மனதின் எதிர்ப்பு தேவாவிடம் மட்டும் வலுவிழந்து போயிருந்தது. சரி, நானாக தேடிச் சென்ற வாழ்க்கை சுகிக்கவில்லை. எவ்வித முகாந்திரமும் இன்றி தன்னுடைய கடந்தக் காலத்தை கிளறாது அப்படியே தன்னை ஏற்றுக் கொள்ளும் தேவா கண்டிப்பாய் அவளை காயப்படுத்த மாட்டான் என அவனுடன் பழகிய சொற்ப நாட்களிலே மனம் உணர்ந்தது.
சரி இந்த திருமண வாழ்க்கையில் என்னதான் இருக்கிறது எனப் பார்த்துவிடலாம் என்று இறுதியாய் முடிவெடுத்தாள். இருவரும் அவ்வப்போது பார்த்துப் புன்னகைத்தனர். வேலை நிமித்தமாக பேசினர். வெகு அரிதாக தேவாவின் பார்வை இவளைத் தொட்டு தடவிப் போகும். இவளுக்கு அந்நேரத்தில் மெல்லிய சங்கடம் உருவாகும். ஆனால் அதற்கு மேல் வேலை இடத்தில் வேறு எதற்கும் அவன் இடம் கொடுப்பதில்லை. தேவாவைப் பற்றி ஆதிரைக்குத் தெரியும் என்பதால் அவளும் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை.
அது சனிக்கிழமையின் பின்மாலை பொழுது. நாளை விடுமுறை என்பதால் இப்போதே சோம்பேறித்தனம் ஓட்டிக் கொண்டதை போல எல்லோரும் பேசிக் கொண்டு, விச்ராந்தையாய் வேலை பார்த்தனர். இன்னும் ஒரு மணி நேரத்தில் கிளம்பிவிடலாம் என தர்ஷினி அப்போதே பையில் பொருட்களை அடைத்து ஓரமாய் வைத்துவிட்டாள். ஆதிரை அவளை ஓரக்கண்ணால் முறைத்தாலும் அவள் பெரிதாய் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.
“ஆதிரை, கம் டூ மை ரூம்!” என தேவா அழைக்கவும், அவன் குரலில் பதற்றம் இருப்பதாய் இவளுக்குத் தோன்றியது. யோசனையுடனே அவனது அறைக்குச் சென்றாள்.
தேவா மடிக்கணினியை அணைத்துவிட்டு மேஜையிலிருந்த பொருட்களை எல்லாம்
அப்புறப்படுத்தியவாறே எழுந்து நின்றான்.
இரண்டு மாதங்கள் கடந்து போயிருந்தது. பொன்வாணி இடைப்பட்ட நாட்களில் மகனின் மனதை மாற்ற எவ்வளவோ முயன்று தோல்வியைத் தழுவியிருந்தார்.
தரகரிடம் பேசி அடுத்தடுத்து நான்கைந்து பெண்களின் புகைப்படங்கள் மற்றும் சுயவிவரங்களை அவர் மகனிடம் காண்பிக்க, அவன் பெரிதாய் எதிர்வினை எதுவும் ஆற்றவில்லை. நீங்கள் எத்தனை பெண்களைப் பார்த்தாலும் நான் ஆதிரையைத்தான் திருமணம் செய்வேன் என உறுதியாய் தன் பிடியிலே தேவா நின்றுவிட, இவருக்கு திக்கற்ற நிலை.
இறுதியில் மகனின் மனதை தன்னால் மாற்ற முடியாது என்று எண்ணி அவருடைய அண்ணன், தம்பி, பெரியப்பா மக்கள் என அனைவரையும் வீட்டில் அழைத்து பஞ்சாயத்து ஒன்றை வைத்துவிட, தேவா தன் பொறுமையை இழுத்துப் பிடித்தான். அத்தனை பேரின் முன்பும் இவன் ஏதோ பெரிய குற்றம் இழைத்தவிட்டது போல அவர் பேச, இவனுக்கு கடுப்பானது. உறவுகள் அனைவரும் வயதில் மூத்தவர்கள் என்ற எண்ணத்தில் அவனால் எடுத்தெறிந்து பேச முடியவில்லை. அவன் தந்தையைப் பார்க்க, அவர்தான் மொத்தக் கூட்டத்தையும் சரிகட்டி பேசி அனுப்பி வைத்தார்.
கோபால் மகனின்புறம் தான் நின்றார். அவனைத் தனியே அழைத்துப் பேசினார். தேவாவின் மனதில் என்ன உள்ளது என அறிந்து கொண்டார். அவன் பேசும் போதே ஆதிரையின் மீதான அன்பும் இந்த திருமண விஷயத்தில் அவனின் தீவிரமும் அவருக்குப் புரிந்து போயிற்று. அவருக்கும் தன் மகனுக்குப் போய் ஏற்கனவே விவாகரத்து வாங்கிய பெண்ணா மனைவியாக வர வேண்டும்? என மனதில் ஆதங்கம் இல்லாமல் இல்லை. வாழப் போகும் அவனே எதையும் பெரிதுபடுத்தாத போது இவர் மூக்கை நுழைப்பது அத்தனை உசிதமாய் படவில்லை.
அவன் மனைவி, குழந்தைகள் என நன்றாய் வாழ்ந்தால் போதுமென்று அவர் தன்னுடைய சம்மதத்தை தெரிவித்தார். வீட்டில் அனைவருக்குமே தேவாவின் முடிவு மகிழ்ச்சியைப் பெருக்கிற்று. ஆனால் பொன்வாணி மட்டும் வாய் ஓயாது புலம்பிக் கொண்டே இருந்தார்.
ஒரு கட்டத்தில் கோபாலுக்கே மனைவியின் செயல் சலித்துப் போனது. கடுமையாய் திட்டிவிட்டார். அதிலிருந்து கணவன் மனைவிக்கு இடையில் பேச்சு வார்த்தைக் குறைந்து போயிருந்தது.
“ண்ணா... நீ அம்மா சம்மதிக்கும்னு நம்பிட்டே இரு. அப்புறம் உனக்கும் அண்ணிக்கும் அறுபதாம் கல்யாணம் தான் நடக்கும். பேசாம அப்பாகிட்ட பேசு ப்ரோ. கல்யாணம் முடிஞ்சா வேற வழியில்லாம அம்மா அண்ணியை அக்செப்ட் பண்ணிப்பாங்க!” ஹரி தேவாவிடம் பலமுறை வற்புறுத்த, அவன் மறுத்துவிட்டான்.
அவனுக்குத் தாய் தந்தையின் சம்மதம் முக்கியமாகத் தோன்றிற்று. அவர்கள் சம்மதத்தோடு எளிமையாய் திருமணம் செய்தால் கூடப் போதும் என்பது அவனது சித்தாந்தம். கோபால் கூட மகனை கொஞ்சம் பொறுமையாய் இருக்க கூறினார். மனைவியை தான் சம்மதிக்க வைப்பதாக அவர் வாக்குறுதி கொடுத்திருக்க, தேவாவிற்கு பிரச்சனையின் பெரும்பகுதி நீர்த்துவிட்டதை போல ஆசுவாசமான உணர்வு தோன்றியது.
எப்போதும் போல உழவர் துணை, வீடு வேலை என அதிலே கவனமாய் இருந்தான். அன்றைய பேச்சிற்கு பின்னே ஆதிரை தேவாவிடம் திருமணம் பற்றி ஒரு வார்த்தைக் கூடக் கேட்கவில்லை.
அவனாக அதைப் பற்றி பேசினால் கூட, “ப்ம்ச்... பர்சனல் விஷயத்தை இங்க பேக் கூடாது தேவா சார்!” எனக் கேலியாய் அவன் முறைப்பைப் பெற்றுக் கொண்டாள்.
இந்த இரண்டு மாதத்தில் ஒரு முறை கூட அவளாக தேவாவிடம் திருமணத்திற்கு சம்மதம் கிடைத்து விட்டதா என ஆர்வமாய்க், கவலையாய் ஏன் தகவலாய்க் கூட கேட்கவில்லை.
நீதான் வந்து பிடித்திருக்கிறது என்றாய். உன் வீட்டில் சம்மதம் வாங்குவது உன்னுடைய கடமை என நடந்து கொண்டாள்.
உண்மையில் தேவாவின் மீது அவளுக்கு ஈர்ப்போ பிடிப்போ ஏற்படவில்லை. அவன் மீது முன்பு மரியாதை இருந்தது. இப்போது நல்ல தோழனாய் என அவனை தன் வாழ்க்கையில் ஏற்றிருந்தாள். அவன் முகம் வாடினால், குழப்பத்தில் இருந்தால் நண்பன் என்ற முறையில் அவன் மீது கரினம் எழுந்தது. மற்றபடி இந்த திருமணம் முழுவதும் தேவாவின் விருப்பத்தை மட்டுமே அடிப்படைடாகக் கொண்டுதான் நடக்கும் ஒழிய, ஆதிரை எவ்வித முன்னெடுப்புகளையும் எடுக்கவில்லை. இப்போது வந்து அவன் முடியாது என்று கூனினால் கூட இவள் வருந்தப் போவது இல்லை.
முதலில் மறுத்தாலும் ஆதிரை சம்மதம் கூறியதற்கு முக்கிய காரணம் தேவாவின் குடும்பம். கண்டிப்பாக தன்னைப் பற்றித் தெரிந்தால் எள் அளவு கூட அவர்கள் அவனது விருப்பத்திற்கு செவிசாய்க்க மாட்டார்கள் என திடமாய் நம்பினாள்.
அவன் எல்லாவற்றிலும் சரியானவன், நேர்மையானவன். அப்படி இருப்பவனுக்கு முறையில்லாமல் குழந்தையைப் பெற்று வளர்த்து கொண்டிருக்கும் நான் எந்த வகையில் சரியாய் இருப்பேன் என கொதித்துப் போய் விடுவார்கள், எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்றே அவள் எண்ணினாள். அவளது மனதை போலவே நடப்பது அனைத்தும் அமைந்து போயிற்று.
ஒருவேளை இவன் வற்புறுத்தி சம்மதிக்க வைத்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என மற்றொரு மனம் முந்தியது. என்னவோ விதியென தனியே வாழ்க்கையை வாழ்கிறாள். அவளாக சுயமாய் எடுத்த முடிவு எனினும் எத்தனையோ நாட்கள் தனிமையின் கொடுமை அவளை வாட்டியிருக்கிறது. வெளியே சிரித்து தன்னை அரிதாரம் பூசிக் காண்பித்தாலும் உள்ளே அவளுக்கென்று குட்டியாய் இதயம் ஒன்று இன்னும் உணர்வுடன் துடித்துக் கொண்டிருந்ததே.
எல்லோருடைய உதாசீனத்தை மட்டுமே இதுவரைக் கண்டு துவண்டு போன மனதின் எதிர்ப்பு தேவாவிடம் மட்டும் வலுவிழந்து போயிருந்தது. சரி, நானாக தேடிச் சென்ற வாழ்க்கை சுகிக்கவில்லை. எவ்வித முகாந்திரமும் இன்றி தன்னுடைய கடந்தக் காலத்தை கிளறாது அப்படியே தன்னை ஏற்றுக் கொள்ளும் தேவா கண்டிப்பாய் அவளை காயப்படுத்த மாட்டான் என அவனுடன் பழகிய சொற்ப நாட்களிலே மனம் உணர்ந்தது.
சரி இந்த திருமண வாழ்க்கையில் என்னதான் இருக்கிறது எனப் பார்த்துவிடலாம் என்று இறுதியாய் முடிவெடுத்தாள். இருவரும் அவ்வப்போது பார்த்துப் புன்னகைத்தனர். வேலை நிமித்தமாக பேசினர். வெகு அரிதாக தேவாவின் பார்வை இவளைத் தொட்டு தடவிப் போகும். இவளுக்கு அந்நேரத்தில் மெல்லிய சங்கடம் உருவாகும். ஆனால் அதற்கு மேல் வேலை இடத்தில் வேறு எதற்கும் அவன் இடம் கொடுப்பதில்லை. தேவாவைப் பற்றி ஆதிரைக்குத் தெரியும் என்பதால் அவளும் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை.
அது சனிக்கிழமையின் பின்மாலை பொழுது. நாளை விடுமுறை என்பதால் இப்போதே சோம்பேறித்தனம் ஓட்டிக் கொண்டதை போல எல்லோரும் பேசிக் கொண்டு, விச்ராந்தையாய் வேலை பார்த்தனர். இன்னும் ஒரு மணி நேரத்தில் கிளம்பிவிடலாம் என தர்ஷினி அப்போதே பையில் பொருட்களை அடைத்து ஓரமாய் வைத்துவிட்டாள். ஆதிரை அவளை ஓரக்கண்ணால் முறைத்தாலும் அவள் பெரிதாய் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.
“ஆதிரை, கம் டூ மை ரூம்!” என தேவா அழைக்கவும், அவன் குரலில் பதற்றம் இருப்பதாய் இவளுக்குத் தோன்றியது. யோசனையுடனே அவனது அறைக்குச் சென்றாள்.
தேவா மடிக்கணினியை அணைத்துவிட்டு மேஜையிலிருந்த பொருட்களை எல்லாம்
அப்புறப்படுத்தியவாறே எழுந்து நின்றான்.