- Messages
- 1,194
- Reaction score
- 3,478
- Points
- 113
நெஞ்சம் – 35 
“இந்த ஈடு இட்லியோட போதும்த்தை.. அவரும் மாமாவும் மட்டும்தானே சாப்பிடணும். ஹாட்பாக்ஸ்ல ஏற்கனவே நாலு இட்லி இருக்கு!” என்ற ஜனனி சாப்பிட்ட தட்டைக் கழுவி கூடையில் கவிழ்த்திவிட்டு ராகினியைத் தூக்கி அவளது வாயைத் துடைத்தாள்.
“சரி... நான் பாலை காய்ச்சி வைக்கிறேன். நீ தூங்கப் போக முன்னாடி மறக்காம குடிச்சிடு...” என்று பொன்வாணி கூறவும், இவள் தலையை அசைத்துவிட்டு கூடத்திற்கு வந்தாள்.
ஹரியும் தேவாவும் அப்போதுதான் சாப்பிட வந்தனர். எல்லோரும் இன்றைக்கு சேர்ந்து சாப்பிட வேண்டும் என்று திட்டத்துடனே ஹரி தமையனுடன் உண்ண அமர்ந்தான். கோபால் உண்டுமுடித்து எழ, ஜனனி இருவருக்கும் பரிமாறினாள்.
“நீ போய் உட்காரு ஜனனி... நாங்க பார்த்துக்குறோம்!” தேவா அவளை அமரப் பணித்துவிட்டு உண்ணத் துவங்க,
“தேவாப்பா.... ஃபோன்!” என ராகினி அவனது அலைபேசியை எடுத்து வந்து கொடுத்தாள். சிறிது நேரம் அதில் விளையாடுகிறேன் என சில பல நிமிடங்களுக்கு முன்னே அவனுக்கு முத்தமிட்டு கைபேசியை வாங்கிச் சென்றிருந்தாள்.
“ஆதிரையாழ்!” திரையில் அவளது பெயர் மின்ன, ஹரி எட்டிப் பார்த்தான். அருகே இருந்த ஜனனிக்கும் பெயர் தெளிவாய் தெரிய, அவள் அதிர்ந்து விழித்துக் கணவனைப் பார்த்தாள்.
‘நான் சொன்னேன் கேட்டீயா நீ?’ கணவன் கண்ணாலே அவளிடம் கூற, தேவா நிமிர்ந்து அவனை முறைத்துவிட்டு அழைப்பை ஏற்று, “ஹலோ!” என்றவாறே அறைக்குள் சென்றான்.
“ஹரி... என்னடா இது?” ஜனனி அதிர்ச்சி விலகாது கேட்டாள்.
“ஹக்கும்... காலைலயே நான் சொன்னேன்ல டீ. நீதான் நம்பளை. எப்படியும் கொஞ்ச நேரத்துல எல்லாருக்கும் தெரிஞ்சிடும்!” அவன் மெல்லிய குரலில் உரைத்தான்.
“என்ன பண்றீங்க தேவா சார்?” காலையில் துவைத்து காயப்போட்ட துணிகளை மெத்தையில் பரப்பிவிட்டு மடித்துக் கொண்டிருந்தாள் ஆதிரை.
“ஹம்ம்... சாப்பிட்டுட்டு இருக்கேன்...” என்றவன், “என்ன ஃபோன் பண்ணி இருக்க?” எனக் கேட்டான்.
“ஏன்... நான் ஃபோன் பண்ண கூடாதா?” அவள் கேட்டதும், “இல்ல... விஷயம் இல்லாம ஃபோன் பண்ண மாட்டீயே? எனிதிங்க் இம்பார்டெண்ட்?” கேள்வி எழுப்பினான்.
“ப்ம்ச்... பெருசா ஒன்னும் இல்ல தேவா சார். காலைல ஒரு மனுஷன் மிஸ் மிஸ் ஹோம்வொர்க் பண்ணலைன்னு நின்னுட்டு இருந்தாரே. இப்போ என்ன பண்றார்னு கேட்க கால் பண்ணேன்!” கேலியுடன் கூறியவள் சேலையை மடித்து அலமாரியில் சொருகினாள்.
அவள் பேச்சில் இவனுக்கு மெலிதாய் கோபம்... இல்லை, சரியாகக் கூறினால் வெட்கம், அவஸ்தை வேறு என்னவோ வந்து ஒட்டிக் கொண்டது.
தலையைக் கோதச் சென்று பின்னர் சாப்பிட்ட கை என்பதை உணர்ந்தவன், “ஆதிரை!” என்றான் அதட்டலாய். ஆனால் குரலில் காரமில்லை.
“ம்... என்கிட்டதான் உங்க அதட்டல் உருட்டல் எல்லாம். பெருசா ஐ கேன் ஹேண்டில்னு வீராப்பா சொன்னீங்க. இப்போ தம்பியைத் துணைக்கு கூப்பிட்டுட்டு இருக்கீங்க. யூ ஆர் பிஹேவிங் லைக் அ சைல்ட் தேவா சார்!” அலட்டல் இல்லாது அவனைக் கேலி செய்தவளின் உதட்டோரம் புன்னகை நெளிந்தது. வேலை முடிந்து வீட்டிற்கு வந்தப் பின்பும் கூட தேவாவின் அவஸ்தையான முகம், பதற்றமான செய்கை என அனைத்தும் இவளது மூளையை அரித்தன.
காலையில் நடந்ததை போல இப்போதும் அவன் அப்படித்தான் தவித்துக் கொண்டிருப்பானோ என எண்ணத்திலே உழன்றவள் ஒரு முடிவாய் அழைத்துவிட்டாள். அவர்களுக்கு இடையேயான மோதல் தற்காலிக விடுப்பில் சென்றுவிட்டது.
ஆதிரையின் பேச்சில் ரோஷம் வரப்பெற்றவன், “லைன்லே இருடீ!” என்றுவிட்டு விறுவிறுவென வெளியே சென்றான்.
சிறகடிக்க ஆசை நாடகத்தைப் பார்த்துக் கொண்டே ஆவி பறக்கும் இட்லியை தட்டில் எடுத்துக்கொண்டு வந்தார் பொன்வாணி.
“ம்மா...” தேவா அவரை அழைக்க, பெரியவரின் கவனம் தொலைக்காட்சி தொடரில் இருந்தது.
“ம்மா... உங்களைத்தான் கூப்பிட்றேன்!” இவன் சற்று கடுப்புடன் அழைக்க, “என்ன டா... சாப்பிட்டு போய் ஃபோன் பேச வேண்டியது தானே... இட்லி வைக்கவா?” எனக் கேட்டு அவன் தட்டில் இட்லியை வைத்தவர் மீண்டும் தொடரில் கவனமானார்.
“அம்மா...!” கடுகடுத்தவன், “அப்பாவை எங்க?” எனக் கேட்டான். ஹரியும் ஜனனியும் அவனைத்தான் பார்த்திருந்தனர்.
“பிரஷர் மாத்திரை போட போனேன் டா!” அறைக்குள்ளிருந்து வெளியே வந்தார் கோபால்.
“ம்மா... அப்பா, எனக்கு ஒரு பொண்ணைப் பிடிச்சிருக்கு. நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்!” கடகடவென அவன் போட்டு உடைத்து விட, ஆதிரை அதிர்ந்தாள்.
“தேவா சார்... தேவா சார்! பொறுமைன்னாலே உங்களுக்கு என்னென்னு தெரியாதா?” அவள் இரைய, அலைபேசியைக் காதுக்கு கொடுத்தவன், “சும்மா இருந்தவனை நீதானே டி உசுப்பேத்திவிட்ட!” என மெல்லிய குரலில் கூறியவாறே அகன்றான்.
“ஏங்க... என்ன சொல்லிட்டு போறான் இவன்?” பொன்வாணி காதில் கேட்டது உண்மையா எனத் தெரியாது திகைத்துப் போயிருந்தார். கோபால் மகன் செல்லும் திசையைப் பார்த்தான்.
“ஏய்... அந்த டீவியை ஆஃப் பண்ணு டி!” தாய் அதட்டவும், “ம்மா... அண்ணன் பேசுனது எனக்கு ராங்கா கன்வே ஆகியிடுச்சும்மா!” எனத் தலையை சொரிந்தவாறே படக்கென்று தொலைக்காட்சியை அணைத்துப் போட்டாள் பிரதன்யா. கண்டிப்பாய் தன் காதில் கேட்டது பிரம்மையாகத்தான் இருக்கும். நிச்சயமாய் அது உண்மையாக இருக்காது என சின்னவள் உறுதியாய் நம்பினாள்.
“ஏங்க... நீங்க என்ன சிலை மாதிரி நிக்குறீங்க? உங்க மகனைக் கூப்பிட்டு என்ன சொன்னான்னு கேளுங்க!” வாணி கணவர் தோளில் தட்டினார்.
“ஹரி... அவன் என்னமோ உளறீட்டுப் போறான்!” அடுத்ததாக இளைய மகனிடம் திரும்பினார்.
“ப்ம்ச்... அவன் உளறீட்டு எல்லாம் இல்லை மா. தெளிவா சொல்லீட்டுப் போறான். இந்த வீட்டுக்கு மருமகளை செலக்ட் பண்ணிட்டான். உங்ககிட்ட சொல்ல கூச்சப்பட்டுட்டு காலைல என்கிட்ட சொன்னான். அதான் நைட் பேசலாம்னு இருந்தோம். இப்போ அவனே பட்டுன்னு போட்டு உடைச்சிட்டான்!” இவன் கடகடவென ஒப்பித்தான்.
“டேய்... தேவா அப்படிலாம் பண்ணவே மாட்டான். நீதான் சும்மா எதாவது விளையாடீட்டு இருப்ப!” பொன்வாணி மகனை முறைத்தார்.
“ஏம்மா... நீங்க நினைக்கிற அளவுக்கு எல்லாம் அவன் நல்லவன் இல்லைம்மா... நானா இப்படி உன்கிட்ட சொன்னேன். அவன் சொன்னது உன் காதுல விழலையா?” இவன் சத்தம் போட்டான். பிரதன்யா இவனருகே ஓடி வந்தாள்.
“ஹரிண்ணா... எனக்கு ஹார்ட் அட்டாக் வர்ற மாதிரி இருக்கு. இதெல்லாம் நிஜமா? நம்ம தேவாண்ணா லவ் பண்ணுதா?” அவள் குரல் அதிசயித்தது.
“எல்லாரும் காதை தீட்டி வச்சு நல்லா கேளுங்க. நம்ப ஆஃபிஸ்ல வொர்க் பண்ற ஆதிரையைத்தான் தேவா லவ் பண்றான். நீங்க அவங்களை பார்த்திருக்க மாட்டீங்க!” என்றான்.
“இல்லங்க... கோவிலுக்கு வந்தப்போ பார்த்தோமே!” ஜனனி கூற, பொன்வாணிக்கு நினைவில் இல்லை. அவர் யாரொன யோசித்தார். நியாபகத்திற்கு வரவில்லை. எல்லோருடைய பார்வையும் அறைக்குள்ளே நுழைந்தவனின் பின்னே சென்றது.
“தேவா சார், எதை எப்படி சொல்லணும்னு ஒரு வரைமுறை இருக்கு. இப்படியா பட்டாசு மாதிரி பொரியுறது? இது நல்லா இருக்கா?” ஆதிரைக் கடிந்தாள்.
“ஆதிரை, இதைத்தானே நீ எக்ஸ்பெக்ட் பண்ண. தைரியமா சொல்லிட்டேன் நான்!” அவன் கேலியாய் கூறியதும் அவளிடம் வெகுவாய் தடுமாற்றம் படர்ந்தது.
“அது...நான்!” எனத் திணறினாள். உண்மையில் அவனுக்காகத்தானே அவளும் யோசித்தாள். அதை ஒப்புக் கொள்ள மனம் வரவில்லை.
“ஆதிரை!” அவன் மென்மையாய் அழைத்ததும் அலைபேசியை தூர நகர்த்தி காதைத் தேய்த்துக் கொண்டு அருகில் இழுத்தாள். இதோடு இரண்டாவது முறை காதின் மென்னரம்புகள் அதிர்ந்து அவஸ்தையைக் கூட்டின. அன்றைக்கு அவன் மன்னிப்பு கேட்ட போதும் கூட இப்படித்தான் சொல்ல முடியாத உணர்வொன்று அவளைத் தழுவிச் சென்றது.
“ஹம்ம்...” ஆதிரைக்கு என்னப் பேசுவது எனத் தெரியாது வார்த்தை வரவில்லை.
“இங்க என்ன நடக்கும்னு நினைச்சு நீ கன்ப்யூஸ் பண்ணிக்காத ஆதி. நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன்!” அவன் அமைதியாய் கூறினான்.
“சரி... சரி. முதல்ல போய் உங்க அப்பா, அம்மாகிட்டே பேசுங்க தேவா சார். நீங்க கொடுத்த ஷாக்ல மிரண்டுப் போய்ருப்பாங்க. மறக்காம காலைக் கட் பண்ணிடுங்க. இல்லைன்னா அவங்க என்னைப் பத்தி பேசுறதை நானே கேட்ருவேன். அப்புறம் என் டிசிஷன்ல இருந்து பேக்கடிச்சாலும் அடிச்சிடுவேன்!” சிரிப்புடன் உரைத்தாள்.
“ப்ம்ச்... நீயா எதையாவது உளறாத ஆதிரை. அப்படியெல்லாம் யாரும் பேச மாட்டாங்க. அம்மாவை மட்டும்தான் கன்வின்ஸ் பண்ணணும். மத்தபடி எல்லாரும் ஓகே சொல்லிடுவாங்க!” இவன் அதட்ட, “நல்லது... நீங்க என்னென்னு பாருங்க” என அவள் அழைப்பைத் துண்டிக்க, வெளியே சென்றான் தேவநந்தன்.
மொத்தக் குடும்பமும் இவன் வருகைக்காகத்தான் காத்திருந்தனர். நேரே சென்று உணவு மேஜையில் அமர்ந்து பாதியில் விட்ட உணவைத் தொடர்ந்தான். அவன் இட்லியைப் பிய்த்து சட்னியில் தோய்த்து வாயில் வைக்க, “தேவா...” என கோபால் மகனை அழைத்தார்.
“என்னப்பா?” நிமிர்ந்து தந்தை முகம் பார்த்தான்.
“ஹரி என்னமோ சொல்றான். அதெல்லாம் உண்மையா?”
“ஆமாப்பா... ஹரி சொல்றது உண்மைதான். எனக்கு ஆதிரையைப் பிடிச்சிருக்கு. உங்க சம்மதத்தோட அவளை மேரேஜ் பண்ணிக்கலாம்னு இருக்கேன்!” என்றவன் உண்டுவிட்டு எழுந்து சென்றான்.
“டேய் தேவா... பொண்ணு எந்த ஊரு டா. நம்ப ஆளுங்களா?” பொன்வாணி கேட்டதும், அவன் தாயை அழுத்தமாய்ப் பார்த்தான்.
“வாணி!” கணவர் அதட்டலிட்டார்.
“சரி... சரி, விடுங்க. என்ன ஆளுங்களா இருந்தா என்ன? எம்மகன் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சதே எனக்கு சந்தோஷம் இப்போலாம் எல்லாரும் லவ் மேரேஜ் தானே பாண்றாங்க. என்ன புள்ளை நம்ப மதமா? இல்லை வேத்து மதமான்னு தெரிஞ்சுக்க கேட்டேன்!” அவர் முகத்தை தோளில் இடித்தார்.
“ரைட்டு... அம்மா வில்லி வேலை ஆரம்பம்!” ஹரி முணுமுணுத்தான். தேவா வந்து நீள்விருக்கையில் அமர்ந்தான்.
“தேவா, அந்தப் பொண்ணு எந்த ஊரு. அப்பா, அம்மா எங்க இருக்காங்கன்னு சொல்லு. நாங்க போய் நேர்ல பார்த்துப் பேசிட்டு வர்றோம்!” கோபால் மகனிடம் கேட்க,
“ப்பா... அவளுக்கு அம்மா, அப்பா இல்லை. அவ தனியாதான் இருக்கா!” என்றவன், “இல்லை... அவ அவளோட மகன் கூட இருக்கா!” எனத் திருத்தினான்.
பெற்றவர்கள் புரியாது விழித்தனர்.
“தம்பியோட இருக்காளா டா? சரியா சொல்லு!” பொன்வாணி மகனது பேச்சைத் திருத்தினார்.
“சரியாதான் சொல்றேன். அவளுக்கு ஆல்ரெடி
ஒரு வாழ்க்கை சரியா அமையலை. சோ, பையனும் அவளுமா இருக்காங்க!” என்றான் அழுத்தமாய். பொன்வாணி அதிர்ந்து போனார்.
“இந்த ஈடு இட்லியோட போதும்த்தை.. அவரும் மாமாவும் மட்டும்தானே சாப்பிடணும். ஹாட்பாக்ஸ்ல ஏற்கனவே நாலு இட்லி இருக்கு!” என்ற ஜனனி சாப்பிட்ட தட்டைக் கழுவி கூடையில் கவிழ்த்திவிட்டு ராகினியைத் தூக்கி அவளது வாயைத் துடைத்தாள்.
“சரி... நான் பாலை காய்ச்சி வைக்கிறேன். நீ தூங்கப் போக முன்னாடி மறக்காம குடிச்சிடு...” என்று பொன்வாணி கூறவும், இவள் தலையை அசைத்துவிட்டு கூடத்திற்கு வந்தாள்.
ஹரியும் தேவாவும் அப்போதுதான் சாப்பிட வந்தனர். எல்லோரும் இன்றைக்கு சேர்ந்து சாப்பிட வேண்டும் என்று திட்டத்துடனே ஹரி தமையனுடன் உண்ண அமர்ந்தான். கோபால் உண்டுமுடித்து எழ, ஜனனி இருவருக்கும் பரிமாறினாள்.
“நீ போய் உட்காரு ஜனனி... நாங்க பார்த்துக்குறோம்!” தேவா அவளை அமரப் பணித்துவிட்டு உண்ணத் துவங்க,
“தேவாப்பா.... ஃபோன்!” என ராகினி அவனது அலைபேசியை எடுத்து வந்து கொடுத்தாள். சிறிது நேரம் அதில் விளையாடுகிறேன் என சில பல நிமிடங்களுக்கு முன்னே அவனுக்கு முத்தமிட்டு கைபேசியை வாங்கிச் சென்றிருந்தாள்.
“ஆதிரையாழ்!” திரையில் அவளது பெயர் மின்ன, ஹரி எட்டிப் பார்த்தான். அருகே இருந்த ஜனனிக்கும் பெயர் தெளிவாய் தெரிய, அவள் அதிர்ந்து விழித்துக் கணவனைப் பார்த்தாள்.
‘நான் சொன்னேன் கேட்டீயா நீ?’ கணவன் கண்ணாலே அவளிடம் கூற, தேவா நிமிர்ந்து அவனை முறைத்துவிட்டு அழைப்பை ஏற்று, “ஹலோ!” என்றவாறே அறைக்குள் சென்றான்.
“ஹரி... என்னடா இது?” ஜனனி அதிர்ச்சி விலகாது கேட்டாள்.
“ஹக்கும்... காலைலயே நான் சொன்னேன்ல டீ. நீதான் நம்பளை. எப்படியும் கொஞ்ச நேரத்துல எல்லாருக்கும் தெரிஞ்சிடும்!” அவன் மெல்லிய குரலில் உரைத்தான்.
“என்ன பண்றீங்க தேவா சார்?” காலையில் துவைத்து காயப்போட்ட துணிகளை மெத்தையில் பரப்பிவிட்டு மடித்துக் கொண்டிருந்தாள் ஆதிரை.
“ஹம்ம்... சாப்பிட்டுட்டு இருக்கேன்...” என்றவன், “என்ன ஃபோன் பண்ணி இருக்க?” எனக் கேட்டான்.
“ஏன்... நான் ஃபோன் பண்ண கூடாதா?” அவள் கேட்டதும், “இல்ல... விஷயம் இல்லாம ஃபோன் பண்ண மாட்டீயே? எனிதிங்க் இம்பார்டெண்ட்?” கேள்வி எழுப்பினான்.
“ப்ம்ச்... பெருசா ஒன்னும் இல்ல தேவா சார். காலைல ஒரு மனுஷன் மிஸ் மிஸ் ஹோம்வொர்க் பண்ணலைன்னு நின்னுட்டு இருந்தாரே. இப்போ என்ன பண்றார்னு கேட்க கால் பண்ணேன்!” கேலியுடன் கூறியவள் சேலையை மடித்து அலமாரியில் சொருகினாள்.
அவள் பேச்சில் இவனுக்கு மெலிதாய் கோபம்... இல்லை, சரியாகக் கூறினால் வெட்கம், அவஸ்தை வேறு என்னவோ வந்து ஒட்டிக் கொண்டது.
தலையைக் கோதச் சென்று பின்னர் சாப்பிட்ட கை என்பதை உணர்ந்தவன், “ஆதிரை!” என்றான் அதட்டலாய். ஆனால் குரலில் காரமில்லை.
“ம்... என்கிட்டதான் உங்க அதட்டல் உருட்டல் எல்லாம். பெருசா ஐ கேன் ஹேண்டில்னு வீராப்பா சொன்னீங்க. இப்போ தம்பியைத் துணைக்கு கூப்பிட்டுட்டு இருக்கீங்க. யூ ஆர் பிஹேவிங் லைக் அ சைல்ட் தேவா சார்!” அலட்டல் இல்லாது அவனைக் கேலி செய்தவளின் உதட்டோரம் புன்னகை நெளிந்தது. வேலை முடிந்து வீட்டிற்கு வந்தப் பின்பும் கூட தேவாவின் அவஸ்தையான முகம், பதற்றமான செய்கை என அனைத்தும் இவளது மூளையை அரித்தன.
காலையில் நடந்ததை போல இப்போதும் அவன் அப்படித்தான் தவித்துக் கொண்டிருப்பானோ என எண்ணத்திலே உழன்றவள் ஒரு முடிவாய் அழைத்துவிட்டாள். அவர்களுக்கு இடையேயான மோதல் தற்காலிக விடுப்பில் சென்றுவிட்டது.
ஆதிரையின் பேச்சில் ரோஷம் வரப்பெற்றவன், “லைன்லே இருடீ!” என்றுவிட்டு விறுவிறுவென வெளியே சென்றான்.
சிறகடிக்க ஆசை நாடகத்தைப் பார்த்துக் கொண்டே ஆவி பறக்கும் இட்லியை தட்டில் எடுத்துக்கொண்டு வந்தார் பொன்வாணி.
“ம்மா...” தேவா அவரை அழைக்க, பெரியவரின் கவனம் தொலைக்காட்சி தொடரில் இருந்தது.
“ம்மா... உங்களைத்தான் கூப்பிட்றேன்!” இவன் சற்று கடுப்புடன் அழைக்க, “என்ன டா... சாப்பிட்டு போய் ஃபோன் பேச வேண்டியது தானே... இட்லி வைக்கவா?” எனக் கேட்டு அவன் தட்டில் இட்லியை வைத்தவர் மீண்டும் தொடரில் கவனமானார்.
“அம்மா...!” கடுகடுத்தவன், “அப்பாவை எங்க?” எனக் கேட்டான். ஹரியும் ஜனனியும் அவனைத்தான் பார்த்திருந்தனர்.
“பிரஷர் மாத்திரை போட போனேன் டா!” அறைக்குள்ளிருந்து வெளியே வந்தார் கோபால்.
“ம்மா... அப்பா, எனக்கு ஒரு பொண்ணைப் பிடிச்சிருக்கு. நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்!” கடகடவென அவன் போட்டு உடைத்து விட, ஆதிரை அதிர்ந்தாள்.
“தேவா சார்... தேவா சார்! பொறுமைன்னாலே உங்களுக்கு என்னென்னு தெரியாதா?” அவள் இரைய, அலைபேசியைக் காதுக்கு கொடுத்தவன், “சும்மா இருந்தவனை நீதானே டி உசுப்பேத்திவிட்ட!” என மெல்லிய குரலில் கூறியவாறே அகன்றான்.
“ஏங்க... என்ன சொல்லிட்டு போறான் இவன்?” பொன்வாணி காதில் கேட்டது உண்மையா எனத் தெரியாது திகைத்துப் போயிருந்தார். கோபால் மகன் செல்லும் திசையைப் பார்த்தான்.
“ஏய்... அந்த டீவியை ஆஃப் பண்ணு டி!” தாய் அதட்டவும், “ம்மா... அண்ணன் பேசுனது எனக்கு ராங்கா கன்வே ஆகியிடுச்சும்மா!” எனத் தலையை சொரிந்தவாறே படக்கென்று தொலைக்காட்சியை அணைத்துப் போட்டாள் பிரதன்யா. கண்டிப்பாய் தன் காதில் கேட்டது பிரம்மையாகத்தான் இருக்கும். நிச்சயமாய் அது உண்மையாக இருக்காது என சின்னவள் உறுதியாய் நம்பினாள்.
“ஏங்க... நீங்க என்ன சிலை மாதிரி நிக்குறீங்க? உங்க மகனைக் கூப்பிட்டு என்ன சொன்னான்னு கேளுங்க!” வாணி கணவர் தோளில் தட்டினார்.
“ஹரி... அவன் என்னமோ உளறீட்டுப் போறான்!” அடுத்ததாக இளைய மகனிடம் திரும்பினார்.
“ப்ம்ச்... அவன் உளறீட்டு எல்லாம் இல்லை மா. தெளிவா சொல்லீட்டுப் போறான். இந்த வீட்டுக்கு மருமகளை செலக்ட் பண்ணிட்டான். உங்ககிட்ட சொல்ல கூச்சப்பட்டுட்டு காலைல என்கிட்ட சொன்னான். அதான் நைட் பேசலாம்னு இருந்தோம். இப்போ அவனே பட்டுன்னு போட்டு உடைச்சிட்டான்!” இவன் கடகடவென ஒப்பித்தான்.
“டேய்... தேவா அப்படிலாம் பண்ணவே மாட்டான். நீதான் சும்மா எதாவது விளையாடீட்டு இருப்ப!” பொன்வாணி மகனை முறைத்தார்.
“ஏம்மா... நீங்க நினைக்கிற அளவுக்கு எல்லாம் அவன் நல்லவன் இல்லைம்மா... நானா இப்படி உன்கிட்ட சொன்னேன். அவன் சொன்னது உன் காதுல விழலையா?” இவன் சத்தம் போட்டான். பிரதன்யா இவனருகே ஓடி வந்தாள்.
“ஹரிண்ணா... எனக்கு ஹார்ட் அட்டாக் வர்ற மாதிரி இருக்கு. இதெல்லாம் நிஜமா? நம்ம தேவாண்ணா லவ் பண்ணுதா?” அவள் குரல் அதிசயித்தது.
“எல்லாரும் காதை தீட்டி வச்சு நல்லா கேளுங்க. நம்ப ஆஃபிஸ்ல வொர்க் பண்ற ஆதிரையைத்தான் தேவா லவ் பண்றான். நீங்க அவங்களை பார்த்திருக்க மாட்டீங்க!” என்றான்.
“இல்லங்க... கோவிலுக்கு வந்தப்போ பார்த்தோமே!” ஜனனி கூற, பொன்வாணிக்கு நினைவில் இல்லை. அவர் யாரொன யோசித்தார். நியாபகத்திற்கு வரவில்லை. எல்லோருடைய பார்வையும் அறைக்குள்ளே நுழைந்தவனின் பின்னே சென்றது.
“தேவா சார், எதை எப்படி சொல்லணும்னு ஒரு வரைமுறை இருக்கு. இப்படியா பட்டாசு மாதிரி பொரியுறது? இது நல்லா இருக்கா?” ஆதிரைக் கடிந்தாள்.
“ஆதிரை, இதைத்தானே நீ எக்ஸ்பெக்ட் பண்ண. தைரியமா சொல்லிட்டேன் நான்!” அவன் கேலியாய் கூறியதும் அவளிடம் வெகுவாய் தடுமாற்றம் படர்ந்தது.
“அது...நான்!” எனத் திணறினாள். உண்மையில் அவனுக்காகத்தானே அவளும் யோசித்தாள். அதை ஒப்புக் கொள்ள மனம் வரவில்லை.
“ஆதிரை!” அவன் மென்மையாய் அழைத்ததும் அலைபேசியை தூர நகர்த்தி காதைத் தேய்த்துக் கொண்டு அருகில் இழுத்தாள். இதோடு இரண்டாவது முறை காதின் மென்னரம்புகள் அதிர்ந்து அவஸ்தையைக் கூட்டின. அன்றைக்கு அவன் மன்னிப்பு கேட்ட போதும் கூட இப்படித்தான் சொல்ல முடியாத உணர்வொன்று அவளைத் தழுவிச் சென்றது.
“ஹம்ம்...” ஆதிரைக்கு என்னப் பேசுவது எனத் தெரியாது வார்த்தை வரவில்லை.
“இங்க என்ன நடக்கும்னு நினைச்சு நீ கன்ப்யூஸ் பண்ணிக்காத ஆதி. நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன்!” அவன் அமைதியாய் கூறினான்.
“சரி... சரி. முதல்ல போய் உங்க அப்பா, அம்மாகிட்டே பேசுங்க தேவா சார். நீங்க கொடுத்த ஷாக்ல மிரண்டுப் போய்ருப்பாங்க. மறக்காம காலைக் கட் பண்ணிடுங்க. இல்லைன்னா அவங்க என்னைப் பத்தி பேசுறதை நானே கேட்ருவேன். அப்புறம் என் டிசிஷன்ல இருந்து பேக்கடிச்சாலும் அடிச்சிடுவேன்!” சிரிப்புடன் உரைத்தாள்.
“ப்ம்ச்... நீயா எதையாவது உளறாத ஆதிரை. அப்படியெல்லாம் யாரும் பேச மாட்டாங்க. அம்மாவை மட்டும்தான் கன்வின்ஸ் பண்ணணும். மத்தபடி எல்லாரும் ஓகே சொல்லிடுவாங்க!” இவன் அதட்ட, “நல்லது... நீங்க என்னென்னு பாருங்க” என அவள் அழைப்பைத் துண்டிக்க, வெளியே சென்றான் தேவநந்தன்.
மொத்தக் குடும்பமும் இவன் வருகைக்காகத்தான் காத்திருந்தனர். நேரே சென்று உணவு மேஜையில் அமர்ந்து பாதியில் விட்ட உணவைத் தொடர்ந்தான். அவன் இட்லியைப் பிய்த்து சட்னியில் தோய்த்து வாயில் வைக்க, “தேவா...” என கோபால் மகனை அழைத்தார்.
“என்னப்பா?” நிமிர்ந்து தந்தை முகம் பார்த்தான்.
“ஹரி என்னமோ சொல்றான். அதெல்லாம் உண்மையா?”
“ஆமாப்பா... ஹரி சொல்றது உண்மைதான். எனக்கு ஆதிரையைப் பிடிச்சிருக்கு. உங்க சம்மதத்தோட அவளை மேரேஜ் பண்ணிக்கலாம்னு இருக்கேன்!” என்றவன் உண்டுவிட்டு எழுந்து சென்றான்.
“டேய் தேவா... பொண்ணு எந்த ஊரு டா. நம்ப ஆளுங்களா?” பொன்வாணி கேட்டதும், அவன் தாயை அழுத்தமாய்ப் பார்த்தான்.
“வாணி!” கணவர் அதட்டலிட்டார்.
“சரி... சரி, விடுங்க. என்ன ஆளுங்களா இருந்தா என்ன? எம்மகன் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சதே எனக்கு சந்தோஷம் இப்போலாம் எல்லாரும் லவ் மேரேஜ் தானே பாண்றாங்க. என்ன புள்ளை நம்ப மதமா? இல்லை வேத்து மதமான்னு தெரிஞ்சுக்க கேட்டேன்!” அவர் முகத்தை தோளில் இடித்தார்.
“ரைட்டு... அம்மா வில்லி வேலை ஆரம்பம்!” ஹரி முணுமுணுத்தான். தேவா வந்து நீள்விருக்கையில் அமர்ந்தான்.
“தேவா, அந்தப் பொண்ணு எந்த ஊரு. அப்பா, அம்மா எங்க இருக்காங்கன்னு சொல்லு. நாங்க போய் நேர்ல பார்த்துப் பேசிட்டு வர்றோம்!” கோபால் மகனிடம் கேட்க,
“ப்பா... அவளுக்கு அம்மா, அப்பா இல்லை. அவ தனியாதான் இருக்கா!” என்றவன், “இல்லை... அவ அவளோட மகன் கூட இருக்கா!” எனத் திருத்தினான்.
பெற்றவர்கள் புரியாது விழித்தனர்.
“தம்பியோட இருக்காளா டா? சரியா சொல்லு!” பொன்வாணி மகனது பேச்சைத் திருத்தினார்.
“சரியாதான் சொல்றேன். அவளுக்கு ஆல்ரெடி
ஒரு வாழ்க்கை சரியா அமையலை. சோ, பையனும் அவளுமா இருக்காங்க!” என்றான் அழுத்தமாய். பொன்வாணி அதிர்ந்து போனார்.