- Messages
- 1,317
- Reaction score
- 3,922
- Points
- 113
chap - 28
சதுரங்க ஆட்டத்தின் முன்னாள் அமர்ந்திருந்த உதயின் எதற்கும் அலட்டாத தோற்றத்தைப் பார்த்துக்கொண்டே உள்ளே வந்த ஈஸ்வரன் முகத்தில் சிரிப்பு இருந்தாலும், வளமை மாறாமல் மனதில் குரூர எண்ணங்கள் பல தோன்றி மறைந்தன என்பது அலைபாயும் அவர் கண்களிலே தெரிந்தது.
"என்ன உதய் ஏதோ பேசணும்னு சொன்னியாம்ல. ஆபீஸ்ல பேசிருக்கலாமே எதுக்கு இவ்ளோ தூரம் நீ அலையனும்?" அக்கறையுள்ள மாமனாய் மருமகனிடம் வினவியபடியே அவனுக்கு எதிரில் வந்து தானும் அமர்ந்தார்.
"இங்க தான் கொஞ்சம் வேலை இருக்கு... ஆபீஸ்ல பேசுற விசயமும் அது இல்லையே" - உதய்
"அப்டி என்ன உதய் நீ பேசணும்...?"
"இருபத்தி அஞ்சு வருசமா அம்மா அப்பா காசுல கொஞ்சம் கூட கூசாம சாப்டுட்டு இருந்தவனை தன்னோட பொண்டாட்டிக்காக ஒருத்தர் மதிச்சு வேலை குடுத்தா... அந்த பிச்சைக்கார பயன், சோறு போட்ட வீட்டுக்கே துரோகம் பன்றான்... இவன் எல்லாம் சோத்துல உப்பு போட்டு சாப்புடுறானுகளா இல்ல வேற எதையாவது கரைச்சு குடிக்கிறானுகலானு தெரியல"
நக்கல் வலிந்து ஓட ஓட பேசியவனைத் தீயாய் முறைத்தவர், "உதய்..." பற்களைக் கடித்து அடக்க முயன்றார்.
"இருங்க இருங்க இன்னும் முடிக்கல நான்" மேலும் தொடர்ந்தான், "சரி ஆயிரம் லட்சம்-னு அடிச்சதோட நிறுத்துச்சா அந்த அன்னக்காவடி? இல்ல... அந்த எச்சைக்கு போரா போரா மாதிரி குளு குளு-னு தீவு வேணுமாம்"
மருமகனின் வார்த்தை நீண்டு கொண்டே செல்ல கழுத்தோடு ஒட்டியிருந்த சட்டை பட்டன்கள் இரண்டை அவிழ்த்தார்... மூச்சு முட்டும் எண்ணம் அவருக்கு.
"அது தான் உங்களுக்கு ஏதாவது தீவு விலைக்கு வருமான்னு கேக்க வந்தேன்"
"என்ன பேசுறன்னு தெரிஞ்சு தான் பேசுறியா உதய்?" கடுகும் எண்ணெய்யுமாய் வெடித்தது அவர் முகம்.
"ஏன் தெரியாம? சாப்பிட்ட சாப்பாடை எப்படி செரிக்கிறதுன்னு தெரியாம அடுத்தவன் குடிய கெடுக்குறதுக்கு வித விதமா யோசிக்கிற ஒரு திருட்டு காபோதி முன்னாடி கால் மேல கால் போட்டு தெளிவா... நிதானமா... தைரியமா பேசிட்டு இருக்கேன்"
சட்டென இருக்கையிலிருந்து எழுந்தவர், "என்ன டா வரம்புக்கு மீறி பேசுற? இப்ப நினைச்சா கூட உன்ன அஞ்சே நிமிசத்துல தூக்க முடியும்" சீற்றம் அடங்க மாட்டாமல் அலையாய் பொங்கியது அவர் மனம்.
தவற்றை மறைக்க கோவம் கொண்டு திரையிட முயன்றார் அந்த பெரிய மனிதர். "யோவ் எதுக்கு யா இந்த வயசான காலத்துல விபரீத ஆசையெல்லாம் உனக்கு வருது வந்து ஒக்காரு" இருந்த கொஞ்ச மரியாதையும் வாசல் வழியே பறந்து சென்றது.
"வெளிய போ டா. உன் அப்பாகிட்ட நான் பேசுகிறேன்... என்னமோ நீ உன் காச எனக்கு குடுத்த மாதிரி இந்த ஆடு ஆடுற?" - ஈஸ்வரன்
"என் அப்பாகிட்ட என்ன என் அம்மாகிட்டயே பேசு... ஆனா யார் பேச்சையும் கேக்குற மூட்ல நான் சுத்தமா இல்ல. வாயேன் ஜெயில்கு போறதுக்கு முன்னாடி ஒரு ஆட்டம் ஆடிறலாம்"
சதுரங்கத்தைக் காட்டி அன்று நிகழ்ந்த அத்தனையும் உனக்குத் தான் என்று நினைவூட்டினான் உதய் மாதவன். அப்பொழுது தான் அவருக்குப் புரிந்தது, எத்தனை நாட்களாய் நான் அவனை ஏமாற்றவில்லை, இவன் தான் தன்னை ஏமாற்றியுள்ளான் என்று.
"என்ன பத்தி தெரியாம என்கிட்டே மோதுற உதய்... வேணாம். நீ நினைச்சு கூட பாக்க முடியாத அளவுக்கு என்னால உன்ன அடிக்க முடியும், தொழிலா இருந்தாலும் சரி சொந்த வாழ்க்கையா இருந்தாலும் சரி" அவர் எச்சரிக்கை வார்த்தைகள் சிரிப்பூட்டியது உதய்க்கு.
"நெருப்பு கூட விளையாடுறதுன்னு தெரிஞ்சு தீ காயத்துக்கு பயந்துட்டு இருக்க முடியுமா? நீ உன் கேம தாராளமா ஜெயில்ல இருந்து ஆடு மாமா. நான் வெளிய நின்னு சோக்கா உனக்கு கை தட்றேன்" அந்த எள்ளல் பார்வையும், திமிரான பேச்சிற்கும் தானே தன்னையே அவன் முதல் எதிரியாய் மாற்றி நின்றார், இப்பொழுதும் அவர் வார்த்தைகள் அவன் மேல் முடிவில்லா வன்மத்தை ஆழமாய் வேரூன்றி வைத்தது.
"நீ இங்க தான் இருக்கியா?" வாசலிலிருந்தே கத்திக்கொண்டே உள்ளே நுழைந்தான் விஷ்ணு, "உனக்கு என்ன பிரச்சனை? எதுக்கு தேவையில்லாம மாமா மேல பலியை போடுற?"
வீட்டில் நடந்தவற்றைத் தந்தை மூல கேள்வியுற்றவன் வேகமாக மாமனைப் பார்த்து சமாதான புறாவைப் பறக்க விட ஈஸ்வரன் வீட்டிற்கு வந்த பொழுது வாகாய் சகோதரனையும் பார்த்துவிட்டான். அவன் பின்னால் ஹரி தயக்கத்தோடு உள்ளே வர, உதயைப் பார்த்ததும் கூச்சம் விலகி திண்ணக்கமாய் உள்ளே நுழைந்தான்.
"வாடா உத்தம புத்திரா... உன் மாமா-கு சொம்பு தூக்க ஆள் இல்லையே-னு இப்ப தான் நினைச்சிட்டு இருந்தேன்... சரியா வந்துட்ட" சகோதரனையும் விடவில்லை உதய்... என்னை நம்பாமல் வெறுப்பவர்களை நானும் அதே இடத்தில் தான் நிறுத்துவேன் என்ற சவடால் தான் அது.
"உன்ன மாதிரி ஒருத்தனுக்கு பக்கத்துல நிக்கிறதுக்கு, இவருக்கு சொம்பு தூக்கலாம்" - விஷ்ணு
"சரியான பாயிண்ட்" இளக்காரமாக வந்தது உதயின் ஆர்வமில்லா பேச்சு.
"அப்டி என்ன தான் பணத்தை மட்டுமே வச்சு வாழ போற? சொந்தம் வேணாமா? உன் தம்பி வேணாம், தாய் மாமா வேணாம், அப்பா வேணாம்... எதுக்கு இப்டி அலையிற?" எரிச்சல் மண்டி கிடந்தது விஷ்ணுவின் குரலில்.
"பேச நேரம் இல்ல தம்பி சார்... உன் மாமாவைத் தாராளமா போய் கொஞ்சி முத்தம் குடுத்துகோங்க... இன்னும் சரியா ஒரே நிமிசத்துல அந்த சந்தர்ப்பம் கிடைக்காம போய்டும்" சட்டமாய் இந்த இல்லத்திற்கே தான் தான் உரிமையாளன் போல் அமர்ந்து மாமனையும் சகோதரனையும் பார்த்தான்.
அவன் பேசுவது புரியாமல் உதயை முறைத்து ஈஸ்வரன் அருகில் சென்ற விஷ்ணு, "என்ன மாமா அப்பா என்ன என்னமோ சொல்றாங்க..."
"எல்லாமே பொய் மாப்பிள்ளை, நான் கொஞ்சம் அடிச்சேன் தான் இல்லனு பொய் சொல்ல மாட்டேன்... அதுவும் முன்னாடி தான். எல்லாமே இவன் பண்றது, தேவையில்லாதது எல்லாம் என் மேல தூக்கி போடுறான்" உதய்யை கை காட்டினார் ஈஸ்வரன்.
விஷ்ணுவும் திரும்பி உதய்யை பார்த்து முறைக்க, அருகிலிருந்த சொம்பை எடுத்துக் காட்டி வேண்டுமா என்றான் நிதானமாக. ஏதோ உதய் மேல் இருந்த மரியாதை நிமித்தமாக விஷ்ணு அமைதியாக இருந்தான் இல்லையெனில் இப்பொழுதிருக்கும் கோவத்திற்கு ஒரு குத்துச்சண்டையே நிகழ்ந்திருக்கும்.
"யாருக்கு மாமா தெரியும் அவன் மேல இருக்க தப்ப மறைக்க உங்க மேல பலியை போடுறான் போல"
விஷ்ணுவின் வார்த்தை உள்ளுக்குள் மனதை உடைத்தாலும் வெளியில் எதையும் காட்டாமல் நிர்மலமாக முகத்துடன் ஒரு அறைக் கதவில் நின்று கண்ணீருடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஈஸ்வரனின் மனைவியை பார்த்தான் உதய். மாமன் எப்படியோ, ஆனால் அத்தை உண்மையான பாசமுடையவர்.
"உண்மையா ண்ணா எல்லாம்?" அருகில் வந்து நின்று கேட்டான் ஹரி.
சகோதரனின் குரலை கேட்டு அத்தையிடம் கண்களை எடுக்காமல், "ஒருத்தர் செய்ற தப்பு மொத்த குடும்பத்தையும் பாதிக்கிது பாத்தியா?" வருத்தமாய் கூறினான். ஹரி யோசிக்காமல் ஈஸ்வரன் மனைவி இருந்த இடத்திற்கு சென்றான்.
"எதுவும் யோசிக்காதிங்க அத்தை..." - ஹரி
"எனக்கு யோசிக்க எல்லாம் எதுவும் இல்ல ப்பா, அவர் பண்ண தப்பு அப்டி. எனக்கு கவலை எல்லாம் என் பொண்ணோட வாழ்க்கைய பத்தி தான்... உதய் கண்டிப்பா இனி எங்கள ஏத்துக்க மாட்டான். அவன் பேச்ச தானே உங்க வீட்டுலையும் எல்லாரும் கேப்பாங்க?" தாயின் கவலை பெரிதாக இருந்தது.
"நான் சொல்றேன்னு தப்பா நினைக்க வேணாம் உங்க பொண்ணு விஷ்ணுவ லவ் பண்ணல, அவ வேற ஒரு பையன லவ் பான்றா... விஷ்ணு-கு உங்க பொண்ணு மேல ஆர்வம் எதுவும் இல்ல. அவ சந்தோசத்தை மாமா ஆசைக்காக கெடுத்துடாதீங்க"
மகளை பற்றிய அதிர்ச்சியிலிருந்து அவர் மீண்டு வரும் முன்னே பரபரப்பாக பத்து பதினைந்து பேர் வீட்டிற்குள் நுழைந்தார். வந்த உடனே வீட்டில் இருந்த அனைவரையும் வரவேற்பறையில் அமரவைத்து வீட்டையே புரட்டி போட்டு சோதனையில் ஈடுபட்டனர் வருவாய்த்துறை அதிகாரிகள்.
"நீ தான் இதுக்கு எல்லாம் காரணமா?" பற்களை கடித்து கோவமாக கேள்வி எழுப்பினான் விஷ்ணு சகோதரனை முறைத்துக்கொண்டு.
அவன் அருகில் அமர்ந்திருந்த ஈஸ்வரனுக்கு தெரியுமே, கண்டிப்பாக இவனை தவிர வேறு எவரும் இந்த வேலையை செய்திருக்க மாட்டார்கள் என்று, ஆனால் சகோதரர்கள் வார்த்தை போரை கேட்கும் நிலையில் அவர் இல்லை... மனம், சிந்தனை அத்தனையும் எவ்வளவு சொத்துகள் தேறும் என்ற கணக்கில் பிரண்டுகொண்டிருந்தது, அவருடைய பங்கு, சம்பளம் என்று வைத்து பார்த்தால் தன்னிடம் இருக்கும் சொத்துகளில் கால் வாசி தானே மிஞ்சும்.
நல்லவேளை ஜெர்மனில் வாங்கிப்போட்ட சொத்துகளின் பத்தரங்கள் ஜெர்மனிலே வைத்து வந்தது கூட ஒரு விதத்தில் நல்லது தான் என்ற சிறு தெம்பும் வந்தது, அதோடு சில கணக்குகள் அவருடைய இரண்டாம் வீட்டில்(சின்ன வீடு) உள்ளது. ஆனால் அடுத்த கவலை, இனி இவனுடைய அலுவலகத்தினுள் செல்ல முடியுமா? சென்றாலும் இவனை மீறி இனி ஒரு ரூபாய் கூட கை வைக்க முடியாதே... இப்படி வரிசைகட்டி கவலைகள் செல்ல, முகத்தில் அதன் தாக்கம் தெரிந்தது.
"சந்தேகமே வேணாம்" உதய் அலட்டாமல் பதில் கூறினான்.
"உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா? இப்படியா ஒரு மனுஷன் மேல அபாண்டமான பலி போடுவ? உன் மேல கொஞ்சம் கொஞ்சம் மரியாதை இருந்ததும் இப்ப சுத்தமா போச்சு... சரியான சாடிஸ்ட். அடுத்தவங்களை காயப்படுத்தி பாக்குறதுல உனக்கு ஏன் தான் இவ்ளோ சந்தோஷமோ தெரியல"
விஷ்ணு மீது உரிமையாய் கோவம் வந்தாலும் ஈஸ்வரன் மீது தான் அதீத ஆத்திரம் உண்டானது. தன்னுடைய சகோதரன் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது கூட உதய் முகத்தை பார்த்து ஆசையாய் சிரிப்பதும், எந்த சந்தேகம் இருந்தாலும் தயங்காமல் கேட்பதும் என விஷ்ணு விஷ்ணுவாக இருந்தான்.
அதன் பிறகு விடுமுறை நாட்களில் மாமன் அழைப்பை ஏற்று ஜெர்மனி சென்று வந்த பொழுது எல்லாமே தலைகீழாய் மாறியது. என்ன கூறினார், எதை காட்டி உடன் பிறந்தவனை வெறுக்க வைத்தார் என்றெல்லாம் தெரியாமல் குழம்பினான் உதய், அதன் பிறகு ஹரி, பல்லவி, திவ்யா என மொத்தமாய் அவனிடமிருந்து விலகினர்.
"உன்னோட ஸ்பீச்ச கேக்குறதுக்கு எல்லாம் எனக்கு நேரம் இல்ல" - உதய்
"அதான உனக்கு எப்படி நாங்க பேசுறது எல்லாம் கேக்க நேரம் இருக்கும்? பணத்துக்கு பின்னாடியே அலையிறவன் மனுசங்க பேச்ச கேக்க மாட்டியே"
விருட்டென எழுந்து விஷ்ணு அந்த வரவேற்பறையில் அமைத்திருந்த மாடிப்படியில் அமர்ந்துகொண்டான், கோவத்தில் எதையாவது எக்குத்தப்பாக பேசிவிடுவோமோ என்ற பயத்தில். மற்றொரு பக்கம் வருவாய்த்துறை அதிகாரிகள் சிட்டாய் பறந்து பறந்து வேலை செய்துகொண்டிருக்க அடுத்த இரண்டு மணி நேரத்தில் பல பத்திரங்களை புரட்டி எடுத்து அவர் முன் வரிசையாய் அடுக்கினர்.
"கார்ல செக் பண்ணுங்க"
உதய் தான் இவர்களை வரவழைத்தது என்று தெரிந்த விடயம், அதில் அவன் இவ்வளவு நேரம் அவன் அமைதியாக இருப்பது தான் அவமானப்படுவதை பார்க்க தான் என்று எண்ணியிருந்தார் ஈஸ்வரன்.
ஆனால் இப்பொழுது அவனே அவருடைய வாகனத்தில் சோதனை செய்ய கூறியதும் துணுக்குற்றவாறாய், "நீ வரம்பு மீறி போற டா" உதய் நோக்கி பாய்ந்தவரை ஜெயன் ஒரே பிடியில் அந்த இடத்திலே நிறுத்தி வைத்தான்.
"இல்ல மிஸ்டர் ஈஸ்வரன், இப்ப தான் சரியா போறேன். இத்தனை நாள் அமைதியா இருந்து தப்பு பண்ணிட்டேன்" அவருக்கும் சகோதரர்களுக்கும் கேட்குமாறு மட்டும் வினவியவன் மீண்டும் சாய்வில் சாய்ந்து அமர்ந்துகொண்டான்.
ஈஸ்வரன் முன் மேலும் பல ஆவணங்களை அடுக்கிய அந்த வருவாய்த்துறை அதிகாரிகளில் முதன்மை அதிகாரி, "இதுக்கு எல்லாம் என்ன கணக்கு சொல்றிங்க மிஸ்டர் ஈஸ்வரன்?"
"எல்லாம் இவன் பண்ண வேலை தான். எதுக்குயா என்கிட்ட கேக்குறீங்க?" கர்ஜித்தார் ஈஸ்வரன்.
"அதெல்லாம் எங்களுக்கு தெறியாது மிஸ்டர் ஈஸ்வரன், அவர் மேல சந்தேகம் இருந்தா ஏதாவது ஆதாரம் இருக்கா?" - அதிகாரி
"இல்லையா எதுவும் இல்ல" - ஈஸ்வரன்
அந்த அதிகாரி வேறு சில பாத்திரங்களை காட்டி, "ஜெர்மன்ல இருக்குற உங்க சில அபார்ட்மெண்ட்ஸ், ஷேர்ஸ், அப்றம் போரா போரா பக்கத்துல ஒரு தீவு வாங்கிருக்கிங்க, இது இல்லாம உங்க கிண்டி வீட்டுல..."
அந்த அதிகாரியை இடைமறித்து, "ஏன் சார் கிண்டி வீடுன்னு சொல்றிங்க தெளிவா சின்ன வீடுன்னு சொன்னா தானே எல்லாருக்கும் புரியும்" அவருடைய மற்றொரு ரகசியத்தையும் உதய் அந்த இடத்தில் உடைத்திருந்தான்.
"தொழில்ல மாமாவ முடக்குனது மட்டும் இல்லாம இப்ப குடும்பத்துலையும் குழப்பத்தை உண்டுபண்ண ட்ரை பண்றியா? ச்சை அசிங்கமா இல்ல ஒருத்தர் மேல இப்டி பலி போட?" உணர்ச்சிவசப்பட்டு விஷ்ணு எரிந்து விழுந்தான் சகோதரனிடம்.
"விஷ்ணு லிமிட் மீறி நீ தான் டா போற... ஏன் உன் மாமாகிட்ட கேக்க வேண்டியது தான? அமைதியா இருக்குராறுல அப்பயே தெரிய வேணாம் யார் மேல தப்புனு?" - ஹரி
"இவனுக மூஞ்சில அடிக்கிற மாதிரி உண்மைய சொல்லுங்க மாமா" - விஷ்ணு
"அதிதி மேல சத்தியம் பண்ண சொல்லு டா" - ஹரி
"பண்ணுவாரு... நீ சும்மா இரு" - விஷ்ணு
இருவரும் மாறி மாறி பேசிக்கொண்டு இருந்தனர் தவிர அமைதியாய் இருந்த ஈஸ்வரனை கவனிக்க தவறினர்.
'ஐயோ இதுவும் போய்விட்டதா? இதாவது ஜெர்மனில் இருப்பதால் தப்பிக்கும்' என்று எண்ணியவர் எண்ணத்தில் ஒரு ஆற்றில் இருக்கும் மண் மொத்தத்தையும் கொட்டியது போல் இருந்தது. ஆனால் அது தான் பத்து நாட்களுக்கு முன்னரே சக்தி மூலம் உதய் கைக்கு வந்து சேர்ந்ததே... யாருக்கும் தான் இதை பற்றி தெரியாதே என்ற அலட்சியத்தில் விட்டு வந்ததை சக்தி அழகாய் பயன்படுத்திக்கொண்டான்.
"சார் உங்க குடும்ப பிரச்சனை எல்லாம் அப்றம் பாத்துக்கலாம். நாங்க இப்ப இவரை கஸ்டடில எடுக்குறோம்"
உடல் வெடவெடக்க எழுந்த ஈஸ்வரன் உதய் நோக்கி வந்து, "என்ன உதய், என்ன அரெஸ்ட் பண்ண போறேன்னு சொல்றாங்க நீ அமைதியா இருக்குற? என்ன அரெஸ்ட் பண்ணா நம்ம கம்பெனி-கு கெட்ட பேர் இல்லையா?"
இருக்கையிலிருந்து எழுந்தவன், "திருத்தம், அது நம்ம கம்பெனி இல்ல, எங்க கம்பெனி. உன்ன கம்பெனி பொறுப்புல இருந்து தூக்கி ஆறு மணி நேரம் ஆச்சு. நான் பாசமா இருக்குறவங்கள என்கிட்டே இருந்து பிரிச்சா உதய் காணாம போய்டுவான்னு யார் உன்ட்ட சொன்னது ஈஸ்வர்?"
கையில் கூர்மையான பொருள் இருந்தால் நிச்சயம் உதய் குடலை உருவி எடுத்திருப்பார், அவ்வளவு கோவம் ஈஸ்வரன் கண்ணில்.
"புயல் அடிச்சாலும் ஒத்த ஆலமரமா அசராம நிப்பேன்... நாலு காக்கா ஏறி ஒக்காந்தா சாஞ்சுடுவேன்னு அசுர நம்பிக்கை இருந்தா ஏமாற்றத்துக்கு நான் பொறுப்பில்லை"
அந்த அதிகாரி பக்கம் திரும்பிய உதய், "தேங்க்ஸ் சார்... இவ்ளோ ஷார்ட் நோட்டீஸ்ல ரைட் வந்ததுக்கு. இதுல நெறையா கம்பெனி அக்கௌன்ட்ல வர வேண்டி இருக்கு... அதோட டீடெயில்ஸ் எல்லாம் நாளைக்கு உங்க ஆபீஸ்ல வந்து அபீஷியலா நான் சப்மிட் பண்றேன்"
அவருடன் கை குலுக்கி புன்னகைத்தான், "நாட் எ ப்ராப்லம் மிஸ்டர் மாதவன். பேமிலி-னு பாக்காம உண்மையா இருந்ததுக்கு ஐ ஷுட் அப்ரிஷியேட் யூ"
ஈஸ்வர் பக்கம் பார்த்து, "வர்ட்டா மாமே..." நக்கல் சிரிப்போடு வெளியேறியவன் மூளை ஈஸ்வரனை தாக்கும் அடுத்த கட்ட நடவடிக்கையை மூலையில் அசைபோட்டுக்கொண்டே சென்றது.
**********************
பூமி பூஜை செய்து இரண்டு வாரங்கள் ஆகியிருந்தது... ஆதியின் தந்தையின் நிலத்தில் வேலைகள் எதுவும் துவங்காவிடினும் வானம் தோண்ட ஆயத்தங்கள் அத்தனையும் தயாராகிக்கொண்டே தான் இருந்தது.
பூஜை போட்ட முதல் நாளே உதய் தன்னுடையதாக மாற்றியிருந்த ஆதியின் தந்தை அலுவலகத்தின் பின்னே இருந்த பெரிய காலியிடத்தில் சிமெண்ட் மூட்டைகளை அடுக்கப் பெரிய கூரை போட்டு கூடாரம் அமைத்திருக்க அதிலிருந்த படியே தான் கடந்த இரண்டு நாட்களாக கௌதம், தமிழ் இருவரும் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்க ஆதவன் வந்து அவர்கள் இருவரும் பேசுவதைக் காதில் கூட வாங்காமல் சஹானாவிடம் கடலை போட்டுக்கொண்டிருப்பான்.
"வந்து ஏதாவது சொல்லு டா"
"நான் மெக்கானிக்கல் படிச்சேன்டா இத பத்தி எல்லாம் சுத்தமா ஐடியா இல்ல" என்று மழுப்பிவிடுவான்.
ஆதி வெளியில் வங்கி அல்லது வேறு ஏதாவது வேலை இருப்பதாகக் கூறி இரண்டு வாரங்களுக்கு மேல் பம்பரமாகச் சுற்றிக்கொண்டிருந்தான். புழுக்கம் தாங்காமல் ஆதவன் ஒரு காகிதத்தை மடித்து விசிறிக்கொண்டிருக்க அவனுக்கு எதிரில் இருந்த ஒரு நாற்காலியில் ஆதவனின் கருப்பு கண்ணாடியை அணிந்து சாய்ந்து அமர்ந்த வாக்கிலே தூங்கிப் போனான் கௌதம்.
என்ன விசிறியும் வேர்வை வழிந்துகொண்டே தான் இருந்தது ஆதவனுக்கு. எந்நேரமும் குளுகுளு என எ.சியில் இருந்தே பழக்கப்பட்டிருந்தவனுக்கு மாசி மாத வெயிலையே சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கௌதமை போல தானும் சட்டையைக் கழட்டி அமர்த்துவிடுவோமா என்ற எண்ணம் தோன்றிய உடனே சட்டையை அவிழ்த்துப் போடத் தான் சிறிது ஆசுவாசமடைந்தான்.
ஆனால் அதுவும் சில நொடிகளே தாக்குப்பிடிக்க மீண்டும் வியர்வை வழிந்தது. ஆனால் கௌதம் அசராமல் வியர்வையைக் கூட கண்டுகொள்ளாமல் அமர்ந்திருந்தான். அந்த நேரம் தமிழ் ஒரு பெரிய மினெரல் கேனுடன் வந்து ஆதவனுக்குத் தண்ணீரைக் கொடுத்தான்.
"என்னடா ஒரு பேன் கூட இல்லையா?" கேள்வி கேட்டுக்கொண்டே தண்ணீரை வாங்கினான்.
வாயில் தண்ணீரை ஊற்றிய பொழுது தமிழின் கை ஆதவன் தலையில் ஓங்கி அடிக்க புரையேறி எதிரில் ஆழ்ந்த நிம்மதியான உறக்கத்திலிருந்த கௌதம் முகத்தில் சாரலாய் அது தெறிக்க அதையும் துடைத்து கொஞ்சமும் அசையாது உறக்கத்தைத் தொடர்ந்தான் கௌதம்.
"கேன கூ..." - தமிழ்
"டேய் டேய்... வார்த்தை வார்த்தை" ஆதவன் எச்சரிப்பை விடுத்தான்.
"கூமுட்டை..." வார்த்தையைத் திருத்தி, "உனக்கு விசுர வேற எதுவுமே கெடைக்கலயாடா? இது பிளான் பேப்பர்" ஆதவன் கையிலிருந்த காகிதத்தை வாங்கியவன் அதை மீண்டும் விரித்துப் பத்திரப்படுத்தி வைத்தான்.
கௌதம் பக்கம் திரும்பி அவன் காலிலே ஓங்கி ஏத்தியவன், "தூங்குது பாரு நைட் எல்லாம் போன் பேசிட்டு..."
"ஆஆ..." காலை பிடித்து எழுந்த கௌதம், "மூதேவி எதுக்குடா எத்துன?"
"அவன் பிளான் பேப்பர எடுத்து விசிறிட்டு இருக்கான் நீ வாட்டுக்கு தூங்குற" முறைத்துக்கொண்டு கேட்டான் தமிழ்.
உதட்டை ஏளனமாக முடித்தவன், "என் நண்பனுக்காக இந்த சின்ன பேப்பர் என்ன... என் உசுரையே தருவான் டா இந்த கெளதம்"
"நீ மசுர கிழிக்கிற லட்சணம் எனக்கு தெரியும்..." - ஆதவன்
"வன்மம் கக்கப்பட்டது" - கெளதம்
"பின்ன என்னடா எனக்கு சின்ன வயசுல நாய் பயம் அதிகம் தெரிஞ்சும் ஒரு நாள் இவன் வீட்டு பக்கம் கிரிக்கெட் ஆடிட்டு இருந்தப்ப நாய் இருக்குற வீட்டுக்கு வேணும்னே அனுப்பி வச்சு ஒரு வாரம் காச்சல்ல படுக்க வச்சது இவன் தான... இதுல உசுர குடுத்து நொட்டுவானாம்" ஆதவன் அன்றைய நிகழ்வில் நண்பனை தீயாய் முறைக்க தமிழும் கௌதமும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
"ஆதவா ஒரு டீ சொல்லேன்" இன்னொரு நாற்காலியை இழுத்து போட்டு சோர்வாய் அமர்ந்தான் தமிழ்.
"தமிழு ஒரு எ.சி சொல்லேன்" தமிழை போலவே அதே மாடுலேஷன் தவறாமல் ஆதவன் கூறினான்.
"டீ வேணாம்... எனக்கு களனி தண்ணி போதும்" - தமிழ்
"சரி டா மாடு
ஒரு தொட்டிலாவது கட்டி விடுங்கடா நைட் ஏழு மணிக்கு இப்டி வேர்க்க வேர்க்க புடிச்சு ஒக்கார வச்சிருக்கீங்க" தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றிக்கொள்ளும் அளவிற்கு புழுக்கம். காற்று சுத்தமாக இல்லை.
சதுரங்க ஆட்டத்தின் முன்னாள் அமர்ந்திருந்த உதயின் எதற்கும் அலட்டாத தோற்றத்தைப் பார்த்துக்கொண்டே உள்ளே வந்த ஈஸ்வரன் முகத்தில் சிரிப்பு இருந்தாலும், வளமை மாறாமல் மனதில் குரூர எண்ணங்கள் பல தோன்றி மறைந்தன என்பது அலைபாயும் அவர் கண்களிலே தெரிந்தது.
"என்ன உதய் ஏதோ பேசணும்னு சொன்னியாம்ல. ஆபீஸ்ல பேசிருக்கலாமே எதுக்கு இவ்ளோ தூரம் நீ அலையனும்?" அக்கறையுள்ள மாமனாய் மருமகனிடம் வினவியபடியே அவனுக்கு எதிரில் வந்து தானும் அமர்ந்தார்.
"இங்க தான் கொஞ்சம் வேலை இருக்கு... ஆபீஸ்ல பேசுற விசயமும் அது இல்லையே" - உதய்
"அப்டி என்ன உதய் நீ பேசணும்...?"
"இருபத்தி அஞ்சு வருசமா அம்மா அப்பா காசுல கொஞ்சம் கூட கூசாம சாப்டுட்டு இருந்தவனை தன்னோட பொண்டாட்டிக்காக ஒருத்தர் மதிச்சு வேலை குடுத்தா... அந்த பிச்சைக்கார பயன், சோறு போட்ட வீட்டுக்கே துரோகம் பன்றான்... இவன் எல்லாம் சோத்துல உப்பு போட்டு சாப்புடுறானுகளா இல்ல வேற எதையாவது கரைச்சு குடிக்கிறானுகலானு தெரியல"
நக்கல் வலிந்து ஓட ஓட பேசியவனைத் தீயாய் முறைத்தவர், "உதய்..." பற்களைக் கடித்து அடக்க முயன்றார்.
"இருங்க இருங்க இன்னும் முடிக்கல நான்" மேலும் தொடர்ந்தான், "சரி ஆயிரம் லட்சம்-னு அடிச்சதோட நிறுத்துச்சா அந்த அன்னக்காவடி? இல்ல... அந்த எச்சைக்கு போரா போரா மாதிரி குளு குளு-னு தீவு வேணுமாம்"
மருமகனின் வார்த்தை நீண்டு கொண்டே செல்ல கழுத்தோடு ஒட்டியிருந்த சட்டை பட்டன்கள் இரண்டை அவிழ்த்தார்... மூச்சு முட்டும் எண்ணம் அவருக்கு.
"அது தான் உங்களுக்கு ஏதாவது தீவு விலைக்கு வருமான்னு கேக்க வந்தேன்"
"என்ன பேசுறன்னு தெரிஞ்சு தான் பேசுறியா உதய்?" கடுகும் எண்ணெய்யுமாய் வெடித்தது அவர் முகம்.
"ஏன் தெரியாம? சாப்பிட்ட சாப்பாடை எப்படி செரிக்கிறதுன்னு தெரியாம அடுத்தவன் குடிய கெடுக்குறதுக்கு வித விதமா யோசிக்கிற ஒரு திருட்டு காபோதி முன்னாடி கால் மேல கால் போட்டு தெளிவா... நிதானமா... தைரியமா பேசிட்டு இருக்கேன்"
சட்டென இருக்கையிலிருந்து எழுந்தவர், "என்ன டா வரம்புக்கு மீறி பேசுற? இப்ப நினைச்சா கூட உன்ன அஞ்சே நிமிசத்துல தூக்க முடியும்" சீற்றம் அடங்க மாட்டாமல் அலையாய் பொங்கியது அவர் மனம்.
தவற்றை மறைக்க கோவம் கொண்டு திரையிட முயன்றார் அந்த பெரிய மனிதர். "யோவ் எதுக்கு யா இந்த வயசான காலத்துல விபரீத ஆசையெல்லாம் உனக்கு வருது வந்து ஒக்காரு" இருந்த கொஞ்ச மரியாதையும் வாசல் வழியே பறந்து சென்றது.
"வெளிய போ டா. உன் அப்பாகிட்ட நான் பேசுகிறேன்... என்னமோ நீ உன் காச எனக்கு குடுத்த மாதிரி இந்த ஆடு ஆடுற?" - ஈஸ்வரன்
"என் அப்பாகிட்ட என்ன என் அம்மாகிட்டயே பேசு... ஆனா யார் பேச்சையும் கேக்குற மூட்ல நான் சுத்தமா இல்ல. வாயேன் ஜெயில்கு போறதுக்கு முன்னாடி ஒரு ஆட்டம் ஆடிறலாம்"
சதுரங்கத்தைக் காட்டி அன்று நிகழ்ந்த அத்தனையும் உனக்குத் தான் என்று நினைவூட்டினான் உதய் மாதவன். அப்பொழுது தான் அவருக்குப் புரிந்தது, எத்தனை நாட்களாய் நான் அவனை ஏமாற்றவில்லை, இவன் தான் தன்னை ஏமாற்றியுள்ளான் என்று.
"என்ன பத்தி தெரியாம என்கிட்டே மோதுற உதய்... வேணாம். நீ நினைச்சு கூட பாக்க முடியாத அளவுக்கு என்னால உன்ன அடிக்க முடியும், தொழிலா இருந்தாலும் சரி சொந்த வாழ்க்கையா இருந்தாலும் சரி" அவர் எச்சரிக்கை வார்த்தைகள் சிரிப்பூட்டியது உதய்க்கு.
"நெருப்பு கூட விளையாடுறதுன்னு தெரிஞ்சு தீ காயத்துக்கு பயந்துட்டு இருக்க முடியுமா? நீ உன் கேம தாராளமா ஜெயில்ல இருந்து ஆடு மாமா. நான் வெளிய நின்னு சோக்கா உனக்கு கை தட்றேன்" அந்த எள்ளல் பார்வையும், திமிரான பேச்சிற்கும் தானே தன்னையே அவன் முதல் எதிரியாய் மாற்றி நின்றார், இப்பொழுதும் அவர் வார்த்தைகள் அவன் மேல் முடிவில்லா வன்மத்தை ஆழமாய் வேரூன்றி வைத்தது.
"நீ இங்க தான் இருக்கியா?" வாசலிலிருந்தே கத்திக்கொண்டே உள்ளே நுழைந்தான் விஷ்ணு, "உனக்கு என்ன பிரச்சனை? எதுக்கு தேவையில்லாம மாமா மேல பலியை போடுற?"
வீட்டில் நடந்தவற்றைத் தந்தை மூல கேள்வியுற்றவன் வேகமாக மாமனைப் பார்த்து சமாதான புறாவைப் பறக்க விட ஈஸ்வரன் வீட்டிற்கு வந்த பொழுது வாகாய் சகோதரனையும் பார்த்துவிட்டான். அவன் பின்னால் ஹரி தயக்கத்தோடு உள்ளே வர, உதயைப் பார்த்ததும் கூச்சம் விலகி திண்ணக்கமாய் உள்ளே நுழைந்தான்.
"வாடா உத்தம புத்திரா... உன் மாமா-கு சொம்பு தூக்க ஆள் இல்லையே-னு இப்ப தான் நினைச்சிட்டு இருந்தேன்... சரியா வந்துட்ட" சகோதரனையும் விடவில்லை உதய்... என்னை நம்பாமல் வெறுப்பவர்களை நானும் அதே இடத்தில் தான் நிறுத்துவேன் என்ற சவடால் தான் அது.
"உன்ன மாதிரி ஒருத்தனுக்கு பக்கத்துல நிக்கிறதுக்கு, இவருக்கு சொம்பு தூக்கலாம்" - விஷ்ணு
"சரியான பாயிண்ட்" இளக்காரமாக வந்தது உதயின் ஆர்வமில்லா பேச்சு.
"அப்டி என்ன தான் பணத்தை மட்டுமே வச்சு வாழ போற? சொந்தம் வேணாமா? உன் தம்பி வேணாம், தாய் மாமா வேணாம், அப்பா வேணாம்... எதுக்கு இப்டி அலையிற?" எரிச்சல் மண்டி கிடந்தது விஷ்ணுவின் குரலில்.
"பேச நேரம் இல்ல தம்பி சார்... உன் மாமாவைத் தாராளமா போய் கொஞ்சி முத்தம் குடுத்துகோங்க... இன்னும் சரியா ஒரே நிமிசத்துல அந்த சந்தர்ப்பம் கிடைக்காம போய்டும்" சட்டமாய் இந்த இல்லத்திற்கே தான் தான் உரிமையாளன் போல் அமர்ந்து மாமனையும் சகோதரனையும் பார்த்தான்.
அவன் பேசுவது புரியாமல் உதயை முறைத்து ஈஸ்வரன் அருகில் சென்ற விஷ்ணு, "என்ன மாமா அப்பா என்ன என்னமோ சொல்றாங்க..."
"எல்லாமே பொய் மாப்பிள்ளை, நான் கொஞ்சம் அடிச்சேன் தான் இல்லனு பொய் சொல்ல மாட்டேன்... அதுவும் முன்னாடி தான். எல்லாமே இவன் பண்றது, தேவையில்லாதது எல்லாம் என் மேல தூக்கி போடுறான்" உதய்யை கை காட்டினார் ஈஸ்வரன்.
விஷ்ணுவும் திரும்பி உதய்யை பார்த்து முறைக்க, அருகிலிருந்த சொம்பை எடுத்துக் காட்டி வேண்டுமா என்றான் நிதானமாக. ஏதோ உதய் மேல் இருந்த மரியாதை நிமித்தமாக விஷ்ணு அமைதியாக இருந்தான் இல்லையெனில் இப்பொழுதிருக்கும் கோவத்திற்கு ஒரு குத்துச்சண்டையே நிகழ்ந்திருக்கும்.
"யாருக்கு மாமா தெரியும் அவன் மேல இருக்க தப்ப மறைக்க உங்க மேல பலியை போடுறான் போல"
விஷ்ணுவின் வார்த்தை உள்ளுக்குள் மனதை உடைத்தாலும் வெளியில் எதையும் காட்டாமல் நிர்மலமாக முகத்துடன் ஒரு அறைக் கதவில் நின்று கண்ணீருடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஈஸ்வரனின் மனைவியை பார்த்தான் உதய். மாமன் எப்படியோ, ஆனால் அத்தை உண்மையான பாசமுடையவர்.
"உண்மையா ண்ணா எல்லாம்?" அருகில் வந்து நின்று கேட்டான் ஹரி.
சகோதரனின் குரலை கேட்டு அத்தையிடம் கண்களை எடுக்காமல், "ஒருத்தர் செய்ற தப்பு மொத்த குடும்பத்தையும் பாதிக்கிது பாத்தியா?" வருத்தமாய் கூறினான். ஹரி யோசிக்காமல் ஈஸ்வரன் மனைவி இருந்த இடத்திற்கு சென்றான்.
"எதுவும் யோசிக்காதிங்க அத்தை..." - ஹரி
"எனக்கு யோசிக்க எல்லாம் எதுவும் இல்ல ப்பா, அவர் பண்ண தப்பு அப்டி. எனக்கு கவலை எல்லாம் என் பொண்ணோட வாழ்க்கைய பத்தி தான்... உதய் கண்டிப்பா இனி எங்கள ஏத்துக்க மாட்டான். அவன் பேச்ச தானே உங்க வீட்டுலையும் எல்லாரும் கேப்பாங்க?" தாயின் கவலை பெரிதாக இருந்தது.
"நான் சொல்றேன்னு தப்பா நினைக்க வேணாம் உங்க பொண்ணு விஷ்ணுவ லவ் பண்ணல, அவ வேற ஒரு பையன லவ் பான்றா... விஷ்ணு-கு உங்க பொண்ணு மேல ஆர்வம் எதுவும் இல்ல. அவ சந்தோசத்தை மாமா ஆசைக்காக கெடுத்துடாதீங்க"
மகளை பற்றிய அதிர்ச்சியிலிருந்து அவர் மீண்டு வரும் முன்னே பரபரப்பாக பத்து பதினைந்து பேர் வீட்டிற்குள் நுழைந்தார். வந்த உடனே வீட்டில் இருந்த அனைவரையும் வரவேற்பறையில் அமரவைத்து வீட்டையே புரட்டி போட்டு சோதனையில் ஈடுபட்டனர் வருவாய்த்துறை அதிகாரிகள்.
"நீ தான் இதுக்கு எல்லாம் காரணமா?" பற்களை கடித்து கோவமாக கேள்வி எழுப்பினான் விஷ்ணு சகோதரனை முறைத்துக்கொண்டு.
அவன் அருகில் அமர்ந்திருந்த ஈஸ்வரனுக்கு தெரியுமே, கண்டிப்பாக இவனை தவிர வேறு எவரும் இந்த வேலையை செய்திருக்க மாட்டார்கள் என்று, ஆனால் சகோதரர்கள் வார்த்தை போரை கேட்கும் நிலையில் அவர் இல்லை... மனம், சிந்தனை அத்தனையும் எவ்வளவு சொத்துகள் தேறும் என்ற கணக்கில் பிரண்டுகொண்டிருந்தது, அவருடைய பங்கு, சம்பளம் என்று வைத்து பார்த்தால் தன்னிடம் இருக்கும் சொத்துகளில் கால் வாசி தானே மிஞ்சும்.
நல்லவேளை ஜெர்மனில் வாங்கிப்போட்ட சொத்துகளின் பத்தரங்கள் ஜெர்மனிலே வைத்து வந்தது கூட ஒரு விதத்தில் நல்லது தான் என்ற சிறு தெம்பும் வந்தது, அதோடு சில கணக்குகள் அவருடைய இரண்டாம் வீட்டில்(சின்ன வீடு) உள்ளது. ஆனால் அடுத்த கவலை, இனி இவனுடைய அலுவலகத்தினுள் செல்ல முடியுமா? சென்றாலும் இவனை மீறி இனி ஒரு ரூபாய் கூட கை வைக்க முடியாதே... இப்படி வரிசைகட்டி கவலைகள் செல்ல, முகத்தில் அதன் தாக்கம் தெரிந்தது.
"சந்தேகமே வேணாம்" உதய் அலட்டாமல் பதில் கூறினான்.
"உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா? இப்படியா ஒரு மனுஷன் மேல அபாண்டமான பலி போடுவ? உன் மேல கொஞ்சம் கொஞ்சம் மரியாதை இருந்ததும் இப்ப சுத்தமா போச்சு... சரியான சாடிஸ்ட். அடுத்தவங்களை காயப்படுத்தி பாக்குறதுல உனக்கு ஏன் தான் இவ்ளோ சந்தோஷமோ தெரியல"
விஷ்ணு மீது உரிமையாய் கோவம் வந்தாலும் ஈஸ்வரன் மீது தான் அதீத ஆத்திரம் உண்டானது. தன்னுடைய சகோதரன் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது கூட உதய் முகத்தை பார்த்து ஆசையாய் சிரிப்பதும், எந்த சந்தேகம் இருந்தாலும் தயங்காமல் கேட்பதும் என விஷ்ணு விஷ்ணுவாக இருந்தான்.
அதன் பிறகு விடுமுறை நாட்களில் மாமன் அழைப்பை ஏற்று ஜெர்மனி சென்று வந்த பொழுது எல்லாமே தலைகீழாய் மாறியது. என்ன கூறினார், எதை காட்டி உடன் பிறந்தவனை வெறுக்க வைத்தார் என்றெல்லாம் தெரியாமல் குழம்பினான் உதய், அதன் பிறகு ஹரி, பல்லவி, திவ்யா என மொத்தமாய் அவனிடமிருந்து விலகினர்.
"உன்னோட ஸ்பீச்ச கேக்குறதுக்கு எல்லாம் எனக்கு நேரம் இல்ல" - உதய்
"அதான உனக்கு எப்படி நாங்க பேசுறது எல்லாம் கேக்க நேரம் இருக்கும்? பணத்துக்கு பின்னாடியே அலையிறவன் மனுசங்க பேச்ச கேக்க மாட்டியே"
விருட்டென எழுந்து விஷ்ணு அந்த வரவேற்பறையில் அமைத்திருந்த மாடிப்படியில் அமர்ந்துகொண்டான், கோவத்தில் எதையாவது எக்குத்தப்பாக பேசிவிடுவோமோ என்ற பயத்தில். மற்றொரு பக்கம் வருவாய்த்துறை அதிகாரிகள் சிட்டாய் பறந்து பறந்து வேலை செய்துகொண்டிருக்க அடுத்த இரண்டு மணி நேரத்தில் பல பத்திரங்களை புரட்டி எடுத்து அவர் முன் வரிசையாய் அடுக்கினர்.
"கார்ல செக் பண்ணுங்க"
உதய் தான் இவர்களை வரவழைத்தது என்று தெரிந்த விடயம், அதில் அவன் இவ்வளவு நேரம் அவன் அமைதியாக இருப்பது தான் அவமானப்படுவதை பார்க்க தான் என்று எண்ணியிருந்தார் ஈஸ்வரன்.
ஆனால் இப்பொழுது அவனே அவருடைய வாகனத்தில் சோதனை செய்ய கூறியதும் துணுக்குற்றவாறாய், "நீ வரம்பு மீறி போற டா" உதய் நோக்கி பாய்ந்தவரை ஜெயன் ஒரே பிடியில் அந்த இடத்திலே நிறுத்தி வைத்தான்.
"இல்ல மிஸ்டர் ஈஸ்வரன், இப்ப தான் சரியா போறேன். இத்தனை நாள் அமைதியா இருந்து தப்பு பண்ணிட்டேன்" அவருக்கும் சகோதரர்களுக்கும் கேட்குமாறு மட்டும் வினவியவன் மீண்டும் சாய்வில் சாய்ந்து அமர்ந்துகொண்டான்.
ஈஸ்வரன் முன் மேலும் பல ஆவணங்களை அடுக்கிய அந்த வருவாய்த்துறை அதிகாரிகளில் முதன்மை அதிகாரி, "இதுக்கு எல்லாம் என்ன கணக்கு சொல்றிங்க மிஸ்டர் ஈஸ்வரன்?"
"எல்லாம் இவன் பண்ண வேலை தான். எதுக்குயா என்கிட்ட கேக்குறீங்க?" கர்ஜித்தார் ஈஸ்வரன்.
"அதெல்லாம் எங்களுக்கு தெறியாது மிஸ்டர் ஈஸ்வரன், அவர் மேல சந்தேகம் இருந்தா ஏதாவது ஆதாரம் இருக்கா?" - அதிகாரி
"இல்லையா எதுவும் இல்ல" - ஈஸ்வரன்
அந்த அதிகாரி வேறு சில பாத்திரங்களை காட்டி, "ஜெர்மன்ல இருக்குற உங்க சில அபார்ட்மெண்ட்ஸ், ஷேர்ஸ், அப்றம் போரா போரா பக்கத்துல ஒரு தீவு வாங்கிருக்கிங்க, இது இல்லாம உங்க கிண்டி வீட்டுல..."
அந்த அதிகாரியை இடைமறித்து, "ஏன் சார் கிண்டி வீடுன்னு சொல்றிங்க தெளிவா சின்ன வீடுன்னு சொன்னா தானே எல்லாருக்கும் புரியும்" அவருடைய மற்றொரு ரகசியத்தையும் உதய் அந்த இடத்தில் உடைத்திருந்தான்.
"தொழில்ல மாமாவ முடக்குனது மட்டும் இல்லாம இப்ப குடும்பத்துலையும் குழப்பத்தை உண்டுபண்ண ட்ரை பண்றியா? ச்சை அசிங்கமா இல்ல ஒருத்தர் மேல இப்டி பலி போட?" உணர்ச்சிவசப்பட்டு விஷ்ணு எரிந்து விழுந்தான் சகோதரனிடம்.
"விஷ்ணு லிமிட் மீறி நீ தான் டா போற... ஏன் உன் மாமாகிட்ட கேக்க வேண்டியது தான? அமைதியா இருக்குராறுல அப்பயே தெரிய வேணாம் யார் மேல தப்புனு?" - ஹரி
"இவனுக மூஞ்சில அடிக்கிற மாதிரி உண்மைய சொல்லுங்க மாமா" - விஷ்ணு
"அதிதி மேல சத்தியம் பண்ண சொல்லு டா" - ஹரி
"பண்ணுவாரு... நீ சும்மா இரு" - விஷ்ணு
இருவரும் மாறி மாறி பேசிக்கொண்டு இருந்தனர் தவிர அமைதியாய் இருந்த ஈஸ்வரனை கவனிக்க தவறினர்.
'ஐயோ இதுவும் போய்விட்டதா? இதாவது ஜெர்மனில் இருப்பதால் தப்பிக்கும்' என்று எண்ணியவர் எண்ணத்தில் ஒரு ஆற்றில் இருக்கும் மண் மொத்தத்தையும் கொட்டியது போல் இருந்தது. ஆனால் அது தான் பத்து நாட்களுக்கு முன்னரே சக்தி மூலம் உதய் கைக்கு வந்து சேர்ந்ததே... யாருக்கும் தான் இதை பற்றி தெரியாதே என்ற அலட்சியத்தில் விட்டு வந்ததை சக்தி அழகாய் பயன்படுத்திக்கொண்டான்.
"சார் உங்க குடும்ப பிரச்சனை எல்லாம் அப்றம் பாத்துக்கலாம். நாங்க இப்ப இவரை கஸ்டடில எடுக்குறோம்"
உடல் வெடவெடக்க எழுந்த ஈஸ்வரன் உதய் நோக்கி வந்து, "என்ன உதய், என்ன அரெஸ்ட் பண்ண போறேன்னு சொல்றாங்க நீ அமைதியா இருக்குற? என்ன அரெஸ்ட் பண்ணா நம்ம கம்பெனி-கு கெட்ட பேர் இல்லையா?"
இருக்கையிலிருந்து எழுந்தவன், "திருத்தம், அது நம்ம கம்பெனி இல்ல, எங்க கம்பெனி. உன்ன கம்பெனி பொறுப்புல இருந்து தூக்கி ஆறு மணி நேரம் ஆச்சு. நான் பாசமா இருக்குறவங்கள என்கிட்டே இருந்து பிரிச்சா உதய் காணாம போய்டுவான்னு யார் உன்ட்ட சொன்னது ஈஸ்வர்?"
கையில் கூர்மையான பொருள் இருந்தால் நிச்சயம் உதய் குடலை உருவி எடுத்திருப்பார், அவ்வளவு கோவம் ஈஸ்வரன் கண்ணில்.
"புயல் அடிச்சாலும் ஒத்த ஆலமரமா அசராம நிப்பேன்... நாலு காக்கா ஏறி ஒக்காந்தா சாஞ்சுடுவேன்னு அசுர நம்பிக்கை இருந்தா ஏமாற்றத்துக்கு நான் பொறுப்பில்லை"
அந்த அதிகாரி பக்கம் திரும்பிய உதய், "தேங்க்ஸ் சார்... இவ்ளோ ஷார்ட் நோட்டீஸ்ல ரைட் வந்ததுக்கு. இதுல நெறையா கம்பெனி அக்கௌன்ட்ல வர வேண்டி இருக்கு... அதோட டீடெயில்ஸ் எல்லாம் நாளைக்கு உங்க ஆபீஸ்ல வந்து அபீஷியலா நான் சப்மிட் பண்றேன்"
அவருடன் கை குலுக்கி புன்னகைத்தான், "நாட் எ ப்ராப்லம் மிஸ்டர் மாதவன். பேமிலி-னு பாக்காம உண்மையா இருந்ததுக்கு ஐ ஷுட் அப்ரிஷியேட் யூ"
ஈஸ்வர் பக்கம் பார்த்து, "வர்ட்டா மாமே..." நக்கல் சிரிப்போடு வெளியேறியவன் மூளை ஈஸ்வரனை தாக்கும் அடுத்த கட்ட நடவடிக்கையை மூலையில் அசைபோட்டுக்கொண்டே சென்றது.
**********************
பூமி பூஜை செய்து இரண்டு வாரங்கள் ஆகியிருந்தது... ஆதியின் தந்தையின் நிலத்தில் வேலைகள் எதுவும் துவங்காவிடினும் வானம் தோண்ட ஆயத்தங்கள் அத்தனையும் தயாராகிக்கொண்டே தான் இருந்தது.
பூஜை போட்ட முதல் நாளே உதய் தன்னுடையதாக மாற்றியிருந்த ஆதியின் தந்தை அலுவலகத்தின் பின்னே இருந்த பெரிய காலியிடத்தில் சிமெண்ட் மூட்டைகளை அடுக்கப் பெரிய கூரை போட்டு கூடாரம் அமைத்திருக்க அதிலிருந்த படியே தான் கடந்த இரண்டு நாட்களாக கௌதம், தமிழ் இருவரும் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்க ஆதவன் வந்து அவர்கள் இருவரும் பேசுவதைக் காதில் கூட வாங்காமல் சஹானாவிடம் கடலை போட்டுக்கொண்டிருப்பான்.
"வந்து ஏதாவது சொல்லு டா"
"நான் மெக்கானிக்கல் படிச்சேன்டா இத பத்தி எல்லாம் சுத்தமா ஐடியா இல்ல" என்று மழுப்பிவிடுவான்.
ஆதி வெளியில் வங்கி அல்லது வேறு ஏதாவது வேலை இருப்பதாகக் கூறி இரண்டு வாரங்களுக்கு மேல் பம்பரமாகச் சுற்றிக்கொண்டிருந்தான். புழுக்கம் தாங்காமல் ஆதவன் ஒரு காகிதத்தை மடித்து விசிறிக்கொண்டிருக்க அவனுக்கு எதிரில் இருந்த ஒரு நாற்காலியில் ஆதவனின் கருப்பு கண்ணாடியை அணிந்து சாய்ந்து அமர்ந்த வாக்கிலே தூங்கிப் போனான் கௌதம்.
என்ன விசிறியும் வேர்வை வழிந்துகொண்டே தான் இருந்தது ஆதவனுக்கு. எந்நேரமும் குளுகுளு என எ.சியில் இருந்தே பழக்கப்பட்டிருந்தவனுக்கு மாசி மாத வெயிலையே சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கௌதமை போல தானும் சட்டையைக் கழட்டி அமர்த்துவிடுவோமா என்ற எண்ணம் தோன்றிய உடனே சட்டையை அவிழ்த்துப் போடத் தான் சிறிது ஆசுவாசமடைந்தான்.
ஆனால் அதுவும் சில நொடிகளே தாக்குப்பிடிக்க மீண்டும் வியர்வை வழிந்தது. ஆனால் கௌதம் அசராமல் வியர்வையைக் கூட கண்டுகொள்ளாமல் அமர்ந்திருந்தான். அந்த நேரம் தமிழ் ஒரு பெரிய மினெரல் கேனுடன் வந்து ஆதவனுக்குத் தண்ணீரைக் கொடுத்தான்.
"என்னடா ஒரு பேன் கூட இல்லையா?" கேள்வி கேட்டுக்கொண்டே தண்ணீரை வாங்கினான்.
வாயில் தண்ணீரை ஊற்றிய பொழுது தமிழின் கை ஆதவன் தலையில் ஓங்கி அடிக்க புரையேறி எதிரில் ஆழ்ந்த நிம்மதியான உறக்கத்திலிருந்த கௌதம் முகத்தில் சாரலாய் அது தெறிக்க அதையும் துடைத்து கொஞ்சமும் அசையாது உறக்கத்தைத் தொடர்ந்தான் கௌதம்.
"கேன கூ..." - தமிழ்
"டேய் டேய்... வார்த்தை வார்த்தை" ஆதவன் எச்சரிப்பை விடுத்தான்.
"கூமுட்டை..." வார்த்தையைத் திருத்தி, "உனக்கு விசுர வேற எதுவுமே கெடைக்கலயாடா? இது பிளான் பேப்பர்" ஆதவன் கையிலிருந்த காகிதத்தை வாங்கியவன் அதை மீண்டும் விரித்துப் பத்திரப்படுத்தி வைத்தான்.
கௌதம் பக்கம் திரும்பி அவன் காலிலே ஓங்கி ஏத்தியவன், "தூங்குது பாரு நைட் எல்லாம் போன் பேசிட்டு..."
"ஆஆ..." காலை பிடித்து எழுந்த கௌதம், "மூதேவி எதுக்குடா எத்துன?"
"அவன் பிளான் பேப்பர எடுத்து விசிறிட்டு இருக்கான் நீ வாட்டுக்கு தூங்குற" முறைத்துக்கொண்டு கேட்டான் தமிழ்.
உதட்டை ஏளனமாக முடித்தவன், "என் நண்பனுக்காக இந்த சின்ன பேப்பர் என்ன... என் உசுரையே தருவான் டா இந்த கெளதம்"
"நீ மசுர கிழிக்கிற லட்சணம் எனக்கு தெரியும்..." - ஆதவன்
"வன்மம் கக்கப்பட்டது" - கெளதம்
"பின்ன என்னடா எனக்கு சின்ன வயசுல நாய் பயம் அதிகம் தெரிஞ்சும் ஒரு நாள் இவன் வீட்டு பக்கம் கிரிக்கெட் ஆடிட்டு இருந்தப்ப நாய் இருக்குற வீட்டுக்கு வேணும்னே அனுப்பி வச்சு ஒரு வாரம் காச்சல்ல படுக்க வச்சது இவன் தான... இதுல உசுர குடுத்து நொட்டுவானாம்" ஆதவன் அன்றைய நிகழ்வில் நண்பனை தீயாய் முறைக்க தமிழும் கௌதமும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
"ஆதவா ஒரு டீ சொல்லேன்" இன்னொரு நாற்காலியை இழுத்து போட்டு சோர்வாய் அமர்ந்தான் தமிழ்.
"தமிழு ஒரு எ.சி சொல்லேன்" தமிழை போலவே அதே மாடுலேஷன் தவறாமல் ஆதவன் கூறினான்.
"டீ வேணாம்... எனக்கு களனி தண்ணி போதும்" - தமிழ்
"சரி டா மாடு
ஒரு தொட்டிலாவது கட்டி விடுங்கடா நைட் ஏழு மணிக்கு இப்டி வேர்க்க வேர்க்க புடிச்சு ஒக்கார வச்சிருக்கீங்க" தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றிக்கொள்ளும் அளவிற்கு புழுக்கம். காற்று சுத்தமாக இல்லை.