- Messages
- 1,273
- Reaction score
- 3,731
- Points
- 113
chap - 13
வேர்க்க விறுவிறுக்க மருத்துவமனை வாயிலை அடைந்த ஆதவன் அங்கிருந்த ரிசப்ஷன் ஏரியாவில் ஆதியின் அறை எண்ணை கேட்டு ஓடினான் அறையை நெருங்கி இருந்த நேரம் கண்ணில் பட்ட ஜெயனை பார்த்து அதிர்ந்து சிலையாய் உறைந்தான்...
ஆதவனை பார்த்த ஜெயன், "மார்னிங் சார்" அந்த குரலில் ஒரு நடுக்கம் தெரிந்தது...
"உதய்?"
"ம்ம்ம் இங்க தான் சார் இருக்காரு"
தலையில் கை வைத்துச் சிறிது நேரம் யோசித்தவன் எதுவாக இருந்தாலும் எதிர்கொள்வோம் என்ற அசட்டுத் தைரியத்துடன் முன்னேறினான்... ஐ.சி.யூ என்றச் சிகப்பு நிற எழுத்துக்களுடன் ஒரு சிகப்பு நிற சிறிய பல்பு எரிந்துக் கொண்டிருந்த அறைக்கு சற்று தள்ளி போடப்பட்டிருந்த ஒரு நாற்காலியில் தலையைக் கவிழ்த்தபடி அமர்ந்திருந்தான் உதய்...
அவனிடமிருந்துப் பார்வையை விளக்கி அங்கே நின்றுக் கொண்டிருந்த தமிழ் மற்றும் கௌதமை பார்த்து முறைத்தவன் அவர்களிடம் சென்று, "ஐ.சி.யூ ல இருக்க அளவு என்னடா பிரச்னை?"
"ஒன்னுமே புரியலடா எங்களுக்கு...ஒரு சின்ன வெட்டுதாண்டா..." கெளதம் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அமைதியாக அமர்ந்திருந்த உதய் கோவத்தில் அமர்ந்திருந்த நாற்காலியை வீசி எறிந்தான், அந்தத் தளமே அதிரும் வகையில்...
நேராக வந்தவன் கௌதமின் கழுத்தை பற்றி அருகில் இருந்த சுவற்றில் தள்ளினான் கண்களில் கோவத்தை மட்டுமே டன் டன்னாய் சேமித்து...
"சின்ன வெட்டா? சின்ன வெட்டுக்காடா இப்புடி ஐ.சி.யூ ல உயிருக்குப் போராடிட்டு இருக்கான்... அங்க தான இருந்திங்க ரெண்டு தடி மாடுகளும் இல்ல வேற புடுங்குற வேலைய எதுவும் பாத்துட்டு இருந்திங்களா?
அவன் மேல கை வச்ச அடுத்த செகண்ட் அவனை துண்டு துண்டா வெட்டி கடல்ல வீசிட்டு வர்றத விட்டுட்டு இங்க நின்னு ஒன்னும் புரியலன்னு கதை அளந்துட்டு இருக்க... இதுக்காக தான் அவனை உங்க கூட விட்டுட்டு போனேன்னா? அவனுக்கு மட்டும் எதாவது ஒன்னு ஆகட்டும் அடுத்த நிமிஷம் ஒடம்புல உயிர் இருக்காது உனக்கு"
"மச்சான்" கௌதமின் தழுதழுத்த குரலில் சற்று நிதானம் திரும்பியவன் அவன் கழுத்தில் இருந்த கையை சற்று விலக்கினான்...
உதய்யின் பிடி தளர்ந்தவுடன் கெளதம் சிறிதும் யோசிக்கவில்லை உதய்யை கட்டி அணைத்து தான் அடக்கிய கண்ணீரை உதய்யின் தோள்களில் இறக்கிவைத்தான் கொஞ்சம் கொஞ்சமாக...
நெடு நாட்கள் கழிந்து நண்பனின் நட்பில் மூழ்கிய உதய்யோ கோவத்தை கட்டுப்படுத்த இயலாமலும் நண்பனை விளக்க இயலாமலும் தூணாய் நின்றான்
கௌதமின் அழுகை மட்டுப்படுத்தும் உதய், "என்ன ஆச்சு?"
"தமிழ் காலேஜ்ல தாண்டா பிரச்னை ஆரமிச்சது அவன் ஸ்டுடென்ட் ஒரு பொண்ண ஒரு பையன் தப்பா நடந்துக்க ட்ரை பன்னிருக்கான் அத எதேச்சையா தமிழ் பாத்து அவன் மேல் கம்பிலைன் குடுத்துருக்கான் அது பெரிய பிரச்சனை ஆகி போலீஸ் கம்ப்லைன் வரைக்கும் போய்டுச்சு.
அந்த பையனோட அப்பா இவனை ஆள் வச்சு தூக்க ட்ரை பன்னிருக்காரு. அப்ப தான் இவன் ஆதிக்கு போன் பண்ணி வர சொல்லிருக்காங்க. நாங்க ரெண்டு பேரும் போனோம்... அங்க இருந்த எல்லாரையும் ஆதி அடிச்சிட்டாண்டா ஆனா திடீர்னு தான் ஒருத்தன் வந்து வெட்டுனான் பின்னாடியே அந்த மினிஸ்டரும் கூட ரெண்டு பேரும் இருந்தாங்க..."
மினிஸ்டர் என்ற வார்த்தையை கேட்டதும் உதய் போதுமென சைகை செய்து ஐ.சி.யூ-வின் வாயிலில் நின்றான் தீவிர சிந்தனையில்...
சரியாக உள்ளிருந்து ஒரு மருத்துவர் வர உதய்யை பார்த்து அதிர்ந்தாலும், "பேஷன்ட் உங்களுக்கு என்ன ரிலேஷன் சார்?"
"இப்ப எப்டி இருக்கான்?"
அவன் குரலில் கடுமையும் கோவமும் வழிந்தோடியது அதை உணர்த்த மருத்துவர், "ஹி ஐஸ் ஆல்ரைட் நொவ்... அறிவால் வெட்டுனால பெருசா எந்த ப்ராப்லம் இல்ல பட் அந்த அரிவாள்ல விஷம் தடவி வெட்டிருக்காங்க. அது தான் கொஞ்சம் கிரிட்டிக்கல் கண்டிஷன் பட் நொவ் ஹி ஐஸ் அவுட் ஆப் டேஞ்ஜர் நாளைக்கு மார்னிங் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்"
"தேங்க்ஸ்"
சிறிய தலை அசைப்புடன் அவர் சென்றதும் ஆதவனிடம், "பாத்துகோ" என்று நகரப்போனவனை நிறுத்தினான் ஆதவன், "இருந்து பாத்துட்டு போடா" சிறிது யோசித்து சரி என தலை அசைத்து ஒரு ஓரமாக சென்று நின்றுவிட்டான்...
அரை மணி நேரத்திற்குப் பிறகு ஆதியை ஒரு ஸ்ட்ரெச்சர்-ல் வைத்து இழுத்து வந்தனர் அவனை பார்த்ததும் ஒரு அடி நகராமல் அவனை ஆழ்ந்து கவனித்தான் உதய், நெற்றியில் சிறியக் காயம், கையில் அங்கங்குச் சிறிய ப்லாஸ்டர்ஸ், கைகளில் ட்ரிப்ஸ் ஏறும் ஊசியென படுத்து கிடந்தவனை நேராக பார்க்க மனம் ரணமாக வலித்தது...
ஒரு நிமிடம் ஒரு இடத்தில நிற்காதவன் இவ்வாறுப் படுத்துக் கிடப்பது மேலும் மேலும் உதய்க்கு வலியை கொடுக்க அவனை தாண்டி செல்ல இருந்த ஸ்ட்ரெச்சரை நிறுத்தியவன் மத்தளமாய் அடித்த இதயத்தின் ஓசையை நிராகரித்து ஆதியின் இடதுக் கையை மெலிதாகப் பற்றினான், எப்பொழுதும் போலே இன்றும் 'எல்லாம் சரி ஆகிடும்' என்று அவன் கைகளில் இருந்து வரும் அழுத்தத்திற்கு ஏங்கியபடி...
"உனக்கு ஒன்னுனா மட்டும் அல்லுவிடுதுடா, வந்துருடா என்கிட்டே வேகமா..."
ஆதியிடம் இருந்து வலுக்கட்டாயமாக கையை மீட்டெடுத்தவன் அதற்குமேல் அங்கே நில்லாது அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டான்...
உதய் சென்றதைப் பார்த்த ஆதவனுக்குத் தெரிந்தது அவனுடைய மன ஓட்டத்தைப் பற்றி. கோவத்தில் இருக்கும் உதய்யை சமாளிப்பது எளிது ஆனால் வருத்தத்தில் இருப்பவனைக் கணிப்பதே மிகவும் கடினம்.
அதுவும், தன்னுடைய உயிராய் நினைப்பவனை இந்த நிலையில் பார்த்தப் பின் அவனுடைய அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்றெண்ணியப் போதே அந்த மினிஸ்டர் மீது பரிதாபம் பிறந்தது ஆதவனுக்கு...
"நீ வீட்டுக்கு கெளம்பு நாங்க பாத்துக்குறோம்" எங்கோ பார்த்து தமிழ் ஆதவனிடம் கூறினான்...
"வாத்தி இங்க யாரும் உங்கள பாக்க காத்துக்கிடக்கலை... மூடிட்டு போய் ஓரமா நின்னு" சீற்றமாய் ஆதவன்
"ஏண்டா அவன்ட எப்படி பேசுற கம்முனு இரேண்டா" சலிப்பாய் கெளதம் தமிழிடம் கெஞ்சினான், "இத்தனை வருஷம் கழிச்சு மீட் பண்ணவன்கிட்ட இப்டியா பேசுவ நீ? இன்னும் ஸ்கூல் பையன் மாதிரி சண்டை போடாதிங்கடா ஏற்கனவே இருக்க பிரச்சனைல இவனுக வேற"
"ஆமா ஸ்கூல் அப்ப கூட இவனுக்கு கொஞ்சம் அறிவு இருந்ததுடா இப்ப பாரு ஞாயிற்று கிழமை ஒரு கிறுக்கன் கூப்பிட்டு வேலை இருக்குன்னு சொன்ன ஒடனே அறிவே இல்லாம கெளம்பிருக்கான்... உனக்கு பொண்ணு குடுக்குறேன்னு சொன்ன அந்த இளிச்சவாயன நான் பாத்தே ஆகணுமே?"
"அதெல்லாம் உனக்கு காட்ட முடியாது போடா" - தமிழ்
"ஏண்டா உனக்கு கல்யாணம்னு தெரிஞ்ச எனக்கு உன் மாமனாரை தெரிஞ்சுக்க எவ்ளோ நேரம் ஆகா போகுது" - ஆதவன்
"இந்த ஆதி கிறுக்கன் சொன்னானா?" கோவமாய் ஆதவனை பார்த்து கேட்டான் தமிழ்
"அவன் எங்கடா பேசுனான்... ஆமா கெளதம் உனக்கும் கல்யாணம்னு கேள்வி பட்டேன்" - ஆதவன்
ஒரு நக்கல் அந்தக் கேள்வியில்... திரு திருவென முழித்த கெளதம் தமிழைப் பார்த்து ஒரு வெட்கத்துடன், "ஆமாடா ஆனா இன்னும் எங்கேஜ்மெண்ட் ஆகல"
"இவனை மாதிரி இல்லாம நீயாவது சொல்லுடா" - ஆதவன்
"அவன் எங்களுக்கே சொல்லல" - கெளதம்
"டேய் ஓவரா பேசுறீங்க நான் கெளம்புறேன்" என்று சென்றவனை இழுத்து புடித்த ஆதவன் அவன் கழுத்தில் கை போட்டு அணை கட்டி தன்னுடைய அலைபேசி எடுத்து ஏதோச் செய்ய அவனிமிருந்து தமிழ்த் திமிர முற்பட்ட, "ஏண்டா இப்புடி மொறபொண்ணு மாதிரி நெளியுற"
"ஏய் சீசீ கை எடு நாயே" - தமிழ்
"கம்முன்னு இருடா என் இசுக்கு... பிரியாணி ஸ்விக்கில ஆர்டர் பண்ணப் போறேன் புது மாப்பிள்ளைங்க காசு குடுத்துருங்க அட்வான்ஸ் ட்ரீட்-னு வச்சுக்கலாம்" - ஆதவன்
"இன்னும் இத நீங்க விடலையாடா... இவ்ளோ சம்பாதிக்கிறல்ல சொந்த காசு போட்டு வாங்குடா" - தமிழ்
"அவன் தருவான் நீ ஆர்டர் போடு எனக்கு அப்புடியே ஒரு மட்டன் சாப்ஸ், க்ரில்டு சிக்கன். முழு கோழி மறந்துராத" - கெளதம்
தமிழ் இருவரையும் கேவலமாக ஒரு பார்வை பார்த்து, "உள்ள ஒருத்தன் உயிருக்குப் போராடிட்டு இருக்கான் நீங்க என்னடா பிரியாணி, சுக்கான்னு சாப்புடுறீங்க"
"அவன் தான் சரி ஆகிட்டான்ல? அப்றம் என்ன வா சட்டுபுட்டுன்னு சாப்டுட்டு நர்ஸ்ஸ சைட் அடிக்கலாம்... பிரைவேட் ஹாஸ்பிடல்ல நர்ஸ் எல்லாம் டக்கரா இருக்கும்... இப்ப ஆதியை கூட்டிட்டு போன நர்ஸ் ஒன்னு செம்மையா இருந்துச்சு "
'இவன் திருந்த போறது இல்ல' என்று நினைத்த தமிழ் தனது வெக்கத்தை விட்டு, "சரி எனக்கு டிராகன் சிக்கன் சொல்லு ஒரு தடியன் அடிச்ச அடில பல்லு ஒரு பக்கம் வலிக்கிது சாப்ட்டா சாப்பிட்டா தான் நல்லா இருக்கும்" மெல்ல மெல்ல தங்களையே மறந்து இன்பத்தில் திளைக்க ஆரமித்தனர் மூவரும்...
ஆதியின் அறையில் அமர்ந்து பிரியாணியை ஒரு புடி புடித்து கொண்டிருந்தனர் மூவரும் (ஆதவன், தமிழ், கெளதம்) அமைதியாக... சட்டென கதவுத் திறந்த சத்தம் கேட்டு திரும்ப அங்குக் கண்களில் கோவத்தை அடக்கி மூவரையும் பார்த்து நின்றான் உதய்...
இலையையும் மறைக்க இயலாது கையையும் மறைக்க இயலாது அசடு வழிந்த புன்னகையோடு உதய்யை பார்த்து சிரித்தான் ஆதவன், தமிழோ இறுதியாய் கையை சப்பி உன்ன ஆசையில் மாறி மாறி உதய்யையும் தனது விரல்களையும் பார்த்து இறுதியில் கையில் இருந்த பிரியாணியை சப்பி சாப்பிட ஆரமித்தான்...
இவை அனைத்திற்கும் ஒரு படி மேலே சென்ற கெளதம், "உனக்கு ஒரு பார்சல் சேத்து தாண்டா வாங்கி வச்சிருக்கோம் முறைக்காத"
பல்லை கடித்து தலையை ஆட்டியவன், "அஞ்சு நிமிஷம் தான் டைம் இந்த இடம் சுத்தமா இருக்கனும் இல்லனா கைய ஒடச்சு இவனுக்கு பக்கத்துல மூணு பெட் போட சொல்லிடுவேன்"
"டேய் அவன் மூக்கு பக்கத்துல போய் இந்த பிரியாணியை வை அண்டர்டேக்கர் மாதிரி எந்திரிச்சு ஒக்காந்துருவான்" என்று அவன் முன் பிரிக்காத ஒரு பொட்டணத்தை நீட்டினான் தமிழ்...
உதய் முறைத்த முறையில் அமைதியாய் இடத்தை மூவரும் சுத்தம் செய்துக் கிளம்ப ஒருப் பார்சல் மட்டும் அதே இடத்தில இருந்தது அதைப் பார்த்தவன் அடக்கப்பட்டச் சிரிப்புடன் நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்த ஆதியை பெரும் அமைதியோடுக் கவனித்து நின்றான்...
தமிழ் கூறியது போலப் பிரியாணியின் மனம் நாசியைத் துளைக்க எழுவானோ என்றச் சந்தேகத்தில் அந்த பார்ஸலை பிரித்து அவன் மூக்கிற்கு அருகில் வைத்துப் பொறுமையாய் காத்தான்... ஆனால் சிறு அசைவும் இன்றிப் படுத்திருந்த ஆதியை இந்த நிலையில் காண இயலாது வந்த வழியேச் சென்றான் தனது உயிரின் பாதியை அந்த அறையிலே விட்டு...
***********************
"பா என்னப்பா பண்ணி வச்சிருக்க? நான் அந்த ப்ரோப்பஸர எதுவும் பண்ணாதிங்கன்னு சொன்னேன்ல எதுக்கு தேவை இல்லாம ஆள வச்சி அடிச்சிருக்கீங்க... நானே அந்த பொண்ணுகிட்ட தப்ப நடந்துக்க முயற்சி பண்ணிட்டேன்னு டெய்லி பீல் பண்ணிட்டு இருக்கேன் நீ இதுல பிரச்சனைய பெருசாக்கிட்டு இருக்க"
"என்னடா பொட்டச்சி மேல ஆசை வந்துடுச்சோ?" அமைச்சர் மகனை கனல் பார்வை வீசினார்.
"அசிங்கமா பேசத்தப்பா நான் அந்த பொண்ணுக்கு பண்ண நெனச்ச தப்புக்கு அவ அழுதது தான் கண்ணு முன்னாடி ஒவ்வொரு தடவையும் வந்து வந்து போகுது இதுல நீ என் மனசுல பாரத்த ஏத்திட்டே போற" - அமைச்சரின் மகன் அவருக்கும் சற்றும் அசராது பதில் அளித்தான்...
"இங்க பாரு எனக்கு தேவை என் பேரு மட்டும் தான்... நீ ஒருத்திய கைய புடிச்சு இலுப்ப அத ஒருத்தன் பாத்து உன் மேல கேஸ் போட்ருக்கான்... எதிர் கட்சி காரனுக்கும் மீடியாக்கும் தெரிஞ்சது ஊதி ஊதி அடுத்த எலக்க்ஷன்-ல எனக்கு சீட் கிடைக்காம பண்ணிடுவாங்க"
"பா எப்ப பாத்தாலயும் கட்சி, காசு மட்டும் தான் உனக்கு முக்கியமா?"
"இதுல என்னடா சந்தேகம்?"
அவர் பேச்சை கேட்டு அவர் மேல் இருந்த கொஞ்ச பாசமும் காற்றில் கரைய கண்டான் அவர் புதல்வன், "அப்ப எதுக்கு நீ சம்மந்தமே இல்லாம வேற ஒருத்தன வெட்டுன?"
விஷமமாய் சிரித்தவர், "அது பிஸ்னஸ்டா இவனை கை வச்சா என்னோட பரம எதிரி உதய் மாதவன் மேல கை வச்ச மாதிரி... நீ பொறந்ததுல இருந்து உன்னால எனக்கு கிடைச்ச ஒரே நல்ல விசியம் இது தான்"
அவர்கள் உரையாடலைத் தடுத்து நிறுத்தினான் மினிஸ்டரின் பி.எ, "சார் நம்ம பேக்டரி-ல ஏதோ லேபர் பிரச்னை பன்னுரங்களாம் நாம ஒடனே போகணும்"
"சரி வண்டி எடு" என்றவர் தன் மகனிடம் திரும்பி, "அந்தப் பொட்டச்சிப் பின்னாடி நீ சுத்துனன்னுக் கேள்விப் பட்டேன் அவளோடக் குடும்பமே இருக்காது" குண்டை அவன் தலையில் அமைதியாக இறக்கிச் சென்றார்...
பேக்டரி வந்தவுடன் அந்த இடத்தைக் கண்களில் ஆராய்ந்தவர் அதன் அமைதியைப் பார்த்துக் கடுமையானக் கோபத்துடன் தன்னுடைய அலுவலக அறையை அடைய அங்கு அவருக்கு காத்து நின்றான் அந்த பேக்டரி மேனேஜர், "என்னையா இவனுங்களுக்கு பிரச்னை எப்ப பாரு இவனுங்களுக்கு சம்பளத்தை கூடிட்டே இருக்க முடியுமா"
"சார் இந்த தடவை சம்பளம் பிரச்சனை இல்ல ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிக்கிற இடத்துல மீத்தேன், co2 லீக் ஆகுறனால..."
"யோவ் நிறுத்து பிரச்னை என்ன அத மட்டும் சொல்லு"
"மெஷின் ரிப்பேர் சார் மூணு மாசமா சொல்லிட்டே இருக்கு ஆனா இன்னும் எதுவும் பண்ணல"
"சரி அந்த மெஷின் மாத்த சொல்றேன்"
"சார், நீங்க ஒரு தடவ அத பாத்துட்டா லேபர்ஸ் கொஞ்சம் நிம்மதியா இருப்பாங்க"
சலிப்புடன், "சரி வந்து தொள"
"பர்ஸ்ட் ஃப்லோர்-ல இருக்க ரூம் தான் சார் நீங்க போங்க நான் லேபர் ஹெட்ட கூட்டிட்டு வர்றேன்"
"சீக்கிரம் வாயா எனக்கு ஆயிரம் வேலை இருக்கு" என்றவர் முதல் தளத்திற்கு சென்றார்.
வேலை நிறுத்தம் காரணமாக அங்கு ஒருவரும் இல்லாமல் அந்த தலமே வெறிச்சோடி இருந்தது... அங்கிருந்த அறையில் நுழைந்து அங்கிருந்த இயந்திரங்களை ஆராய்ந்து நின்ற பொழுது ஏதோ கைகள் அரிப்பது போன்ற எண்ணம் தோன்றவும் அவ்விடத்தை விட்டு வெளியேற நினைத்தவர் கதவினை திறக்க அதை திறக்க இயலவில்லை...
சுற்றி பார்க்க அங்கு ஒருவரும் கண்ணில் தென்படவில்லை நொடிகள் கழிய கழிய மூச்சு விட சிரமப்படுவது போல் இருந்தது...
அந்த நேரம் அவருடைய எண்ணிற்கு ஒரு அழைப்பு, உதய் மாதவன்...
அந்த பெயரை பார்த்த நொடி நடுங்கியக் கைகளுடன் அதை எடுத்தார், "ஹலோ"
"என்ன மினிஸ்டரு எ.சி காத்துல இருக்க போல குரல்ல ஒரே புத்துணர்ச்சி தெரியிது" அவ்வ்ளவு இளக்காரம் அவன் குரலில் வழிந்தோடியது
"டேய்..."
"ஷ்ஷ்ஷ்... ரொம்ப பேசுனா ரெத்தம் கக்கி செத்துடுவ மங்குனி அமைச்சரே... அதுவும் இல்லாம நீ பேச கூடாது. இப்ப நான் மட்டும் தான் பேசணும்... என்னைக்கு நீ என்ன பழி வாங்குறேன்னு என் ஆதி மேல கை வச்சியோ அப்பயே உன் சாவு என் கைல தான்னு முடிவாகிடுச்சு... அவனை அணைக்கிறதும் நானா தான் இருப்பேன் அடிக்கிறதும் நானா மட்டும் தான் இருப்பேன். நடுவுல எவன் வந்தாலும் அவனுக்கு இதே நிலைமை தான்"
அவனுக்கு பதில் கூற கூட முடியாத நிலையில் அவர் விழி பிதுங்கி நின்றார், கைகளில் இருந்த கைபேசி தரையில் விழுந்து சுக்குநூறாக சிதறியது... நிலைமையை மோசமாக்க செவிமடலில் இருந்து வழிந்தோடிய குருதி அந்த பளீர் வெள்ளை சட்டையில் ஓடியது...
**********************
'மீன்வளத்துறை அமைச்சர் திரு. குமரன் நெடுஞ்செழியன் சென்னையில் உள்ள அவரின் காட்டன் தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு வாயு கசிவின் காரணமாக அகால மரணமடைந்தார். இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் நேரில் சென்று அவருடைய இறுதி சடங்கில்...'
"என்னங்க இவரை நம்ம வீட்டுல கூட ஒரு தடவ சந்திச்சிருக்கேன்ல?" நளினி, ஹரியின் தாயார் தொலைக்காட்சியில் வெளியாகிக் கொண்டிருந்த செய்தியைப் பார்த்தவர் தன் கணவனிடம் சந்தேகத்துடன் கேட்டார்...
"ஆமாமா இவரு கூட கொஞ்சம் மனஸ்தாபம் இருக்கு, அரசியல்வாதின்னு நல்லா காமிப்பாரு செட்டில்மென்ட் ஒழுங்கா வராது, ஆளுங்க அனுப்பி மெரட்டுவாரு அதான் உதய் ஒரு தடவத் தட்டி வச்சான் அதுல இருந்து நம்மப் பக்கமே வர்றது இல்ல" முகத்தில் புன்னகைப் பூத்தது மகனைப் பற்றிய நினைவில்...
"நீங்க போக போறிங்களா?"
"அண்ணாவும் நானும் போயிடு வர்றோம் பெரிய இடம்ல"
"சரி சாப்புட வாங்க, மாமாவையும் கூட்டிட்டு வாங்க" அந்த குரலில் சிறு ஏமாற்றம் கலந்த கோவம் இருந்தது, 'இவ கூப்புடுற தொனியே சரி இல்லையே...'
"ம்ம்ம் கூட்டிட்டு வர்றேன்மா" என்றவர் தன் சகோதரரை அழைக்கச் சென்றார்...
அதே நேரம் தன்னுடைய அறையில் இருந்து விஷ்ணுக் குறுக்கும் நெடுக்கும் ஹரியின் அறைக்கு மாறி மாறி நடந்துக்கொண்டே இருந்தான், கதவுத் திறந்திருந்தாலும் உள்ளேச் செல்லாமல் ஒவ்வொரு முறையும் ஹரி என்னச் செய்கின்றான் என்று எட்டிப் பார்ப்பானேத் தவிர உள்ளேச் செல்ல முயற்சிக்க வில்லை...
குட்டி போட்ட பூனைப் போல் தினமும் அறையின் வாசலில் வந்து நிற்பவன் மேல் சிறிதும் இரக்கம் தோன்றவில்லை மாறாக கோவம் அதிகரிக்கவேச் செய்தது, இருவரும் நேருக்கு நேர் பேசி இரண்டு வாரங்கள்க்கு மேல் ஆகியது...
தனது இருப்பைக் காட்டிக்கொள்ள காலை அழுத்தி அழுத்தி நடந்தவனை பார்த்தும் பார்க்காததுமாய் இல்லாத சட்டைச் சுருக்கத்தை அழுத்தி அழுத்தித் தேய்த்து நின்றான் ஹரி...
பொறுத்துப் பார்த்தவன் இனி முடியாதென உணர்ந்து வெக்கத்தை விட்டு ஹரியின் அறைக்கு சென்றான்... விஷ்ணுவைப் பார்த்தும் சிறிது அசையாதுத் தன
து சட்டையை டக்-இன் செய்தவன் அவனிடம் சிறிதும் கவனம் செலுத்தாதுத் தன்னுடைய வேலையிலே குறியாய் இருந்தான்...
"டேய் சாவடிக்காத ஏற்கனவே மண்டை சூடா இருக்குது இதுல நீ வேற சூடேத்தாத" - விஷ்ணு
வேர்க்க விறுவிறுக்க மருத்துவமனை வாயிலை அடைந்த ஆதவன் அங்கிருந்த ரிசப்ஷன் ஏரியாவில் ஆதியின் அறை எண்ணை கேட்டு ஓடினான் அறையை நெருங்கி இருந்த நேரம் கண்ணில் பட்ட ஜெயனை பார்த்து அதிர்ந்து சிலையாய் உறைந்தான்...
ஆதவனை பார்த்த ஜெயன், "மார்னிங் சார்" அந்த குரலில் ஒரு நடுக்கம் தெரிந்தது...
"உதய்?"
"ம்ம்ம் இங்க தான் சார் இருக்காரு"
தலையில் கை வைத்துச் சிறிது நேரம் யோசித்தவன் எதுவாக இருந்தாலும் எதிர்கொள்வோம் என்ற அசட்டுத் தைரியத்துடன் முன்னேறினான்... ஐ.சி.யூ என்றச் சிகப்பு நிற எழுத்துக்களுடன் ஒரு சிகப்பு நிற சிறிய பல்பு எரிந்துக் கொண்டிருந்த அறைக்கு சற்று தள்ளி போடப்பட்டிருந்த ஒரு நாற்காலியில் தலையைக் கவிழ்த்தபடி அமர்ந்திருந்தான் உதய்...
அவனிடமிருந்துப் பார்வையை விளக்கி அங்கே நின்றுக் கொண்டிருந்த தமிழ் மற்றும் கௌதமை பார்த்து முறைத்தவன் அவர்களிடம் சென்று, "ஐ.சி.யூ ல இருக்க அளவு என்னடா பிரச்னை?"
"ஒன்னுமே புரியலடா எங்களுக்கு...ஒரு சின்ன வெட்டுதாண்டா..." கெளதம் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அமைதியாக அமர்ந்திருந்த உதய் கோவத்தில் அமர்ந்திருந்த நாற்காலியை வீசி எறிந்தான், அந்தத் தளமே அதிரும் வகையில்...
நேராக வந்தவன் கௌதமின் கழுத்தை பற்றி அருகில் இருந்த சுவற்றில் தள்ளினான் கண்களில் கோவத்தை மட்டுமே டன் டன்னாய் சேமித்து...
"சின்ன வெட்டா? சின்ன வெட்டுக்காடா இப்புடி ஐ.சி.யூ ல உயிருக்குப் போராடிட்டு இருக்கான்... அங்க தான இருந்திங்க ரெண்டு தடி மாடுகளும் இல்ல வேற புடுங்குற வேலைய எதுவும் பாத்துட்டு இருந்திங்களா?
அவன் மேல கை வச்ச அடுத்த செகண்ட் அவனை துண்டு துண்டா வெட்டி கடல்ல வீசிட்டு வர்றத விட்டுட்டு இங்க நின்னு ஒன்னும் புரியலன்னு கதை அளந்துட்டு இருக்க... இதுக்காக தான் அவனை உங்க கூட விட்டுட்டு போனேன்னா? அவனுக்கு மட்டும் எதாவது ஒன்னு ஆகட்டும் அடுத்த நிமிஷம் ஒடம்புல உயிர் இருக்காது உனக்கு"
"மச்சான்" கௌதமின் தழுதழுத்த குரலில் சற்று நிதானம் திரும்பியவன் அவன் கழுத்தில் இருந்த கையை சற்று விலக்கினான்...
உதய்யின் பிடி தளர்ந்தவுடன் கெளதம் சிறிதும் யோசிக்கவில்லை உதய்யை கட்டி அணைத்து தான் அடக்கிய கண்ணீரை உதய்யின் தோள்களில் இறக்கிவைத்தான் கொஞ்சம் கொஞ்சமாக...
நெடு நாட்கள் கழிந்து நண்பனின் நட்பில் மூழ்கிய உதய்யோ கோவத்தை கட்டுப்படுத்த இயலாமலும் நண்பனை விளக்க இயலாமலும் தூணாய் நின்றான்
கௌதமின் அழுகை மட்டுப்படுத்தும் உதய், "என்ன ஆச்சு?"
"தமிழ் காலேஜ்ல தாண்டா பிரச்னை ஆரமிச்சது அவன் ஸ்டுடென்ட் ஒரு பொண்ண ஒரு பையன் தப்பா நடந்துக்க ட்ரை பன்னிருக்கான் அத எதேச்சையா தமிழ் பாத்து அவன் மேல் கம்பிலைன் குடுத்துருக்கான் அது பெரிய பிரச்சனை ஆகி போலீஸ் கம்ப்லைன் வரைக்கும் போய்டுச்சு.
அந்த பையனோட அப்பா இவனை ஆள் வச்சு தூக்க ட்ரை பன்னிருக்காரு. அப்ப தான் இவன் ஆதிக்கு போன் பண்ணி வர சொல்லிருக்காங்க. நாங்க ரெண்டு பேரும் போனோம்... அங்க இருந்த எல்லாரையும் ஆதி அடிச்சிட்டாண்டா ஆனா திடீர்னு தான் ஒருத்தன் வந்து வெட்டுனான் பின்னாடியே அந்த மினிஸ்டரும் கூட ரெண்டு பேரும் இருந்தாங்க..."
மினிஸ்டர் என்ற வார்த்தையை கேட்டதும் உதய் போதுமென சைகை செய்து ஐ.சி.யூ-வின் வாயிலில் நின்றான் தீவிர சிந்தனையில்...
சரியாக உள்ளிருந்து ஒரு மருத்துவர் வர உதய்யை பார்த்து அதிர்ந்தாலும், "பேஷன்ட் உங்களுக்கு என்ன ரிலேஷன் சார்?"
"இப்ப எப்டி இருக்கான்?"
அவன் குரலில் கடுமையும் கோவமும் வழிந்தோடியது அதை உணர்த்த மருத்துவர், "ஹி ஐஸ் ஆல்ரைட் நொவ்... அறிவால் வெட்டுனால பெருசா எந்த ப்ராப்லம் இல்ல பட் அந்த அரிவாள்ல விஷம் தடவி வெட்டிருக்காங்க. அது தான் கொஞ்சம் கிரிட்டிக்கல் கண்டிஷன் பட் நொவ் ஹி ஐஸ் அவுட் ஆப் டேஞ்ஜர் நாளைக்கு மார்னிங் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்"
"தேங்க்ஸ்"
சிறிய தலை அசைப்புடன் அவர் சென்றதும் ஆதவனிடம், "பாத்துகோ" என்று நகரப்போனவனை நிறுத்தினான் ஆதவன், "இருந்து பாத்துட்டு போடா" சிறிது யோசித்து சரி என தலை அசைத்து ஒரு ஓரமாக சென்று நின்றுவிட்டான்...
அரை மணி நேரத்திற்குப் பிறகு ஆதியை ஒரு ஸ்ட்ரெச்சர்-ல் வைத்து இழுத்து வந்தனர் அவனை பார்த்ததும் ஒரு அடி நகராமல் அவனை ஆழ்ந்து கவனித்தான் உதய், நெற்றியில் சிறியக் காயம், கையில் அங்கங்குச் சிறிய ப்லாஸ்டர்ஸ், கைகளில் ட்ரிப்ஸ் ஏறும் ஊசியென படுத்து கிடந்தவனை நேராக பார்க்க மனம் ரணமாக வலித்தது...
ஒரு நிமிடம் ஒரு இடத்தில நிற்காதவன் இவ்வாறுப் படுத்துக் கிடப்பது மேலும் மேலும் உதய்க்கு வலியை கொடுக்க அவனை தாண்டி செல்ல இருந்த ஸ்ட்ரெச்சரை நிறுத்தியவன் மத்தளமாய் அடித்த இதயத்தின் ஓசையை நிராகரித்து ஆதியின் இடதுக் கையை மெலிதாகப் பற்றினான், எப்பொழுதும் போலே இன்றும் 'எல்லாம் சரி ஆகிடும்' என்று அவன் கைகளில் இருந்து வரும் அழுத்தத்திற்கு ஏங்கியபடி...
"உனக்கு ஒன்னுனா மட்டும் அல்லுவிடுதுடா, வந்துருடா என்கிட்டே வேகமா..."
ஆதியிடம் இருந்து வலுக்கட்டாயமாக கையை மீட்டெடுத்தவன் அதற்குமேல் அங்கே நில்லாது அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டான்...
உதய் சென்றதைப் பார்த்த ஆதவனுக்குத் தெரிந்தது அவனுடைய மன ஓட்டத்தைப் பற்றி. கோவத்தில் இருக்கும் உதய்யை சமாளிப்பது எளிது ஆனால் வருத்தத்தில் இருப்பவனைக் கணிப்பதே மிகவும் கடினம்.
அதுவும், தன்னுடைய உயிராய் நினைப்பவனை இந்த நிலையில் பார்த்தப் பின் அவனுடைய அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்றெண்ணியப் போதே அந்த மினிஸ்டர் மீது பரிதாபம் பிறந்தது ஆதவனுக்கு...
"நீ வீட்டுக்கு கெளம்பு நாங்க பாத்துக்குறோம்" எங்கோ பார்த்து தமிழ் ஆதவனிடம் கூறினான்...
"வாத்தி இங்க யாரும் உங்கள பாக்க காத்துக்கிடக்கலை... மூடிட்டு போய் ஓரமா நின்னு" சீற்றமாய் ஆதவன்
"ஏண்டா அவன்ட எப்படி பேசுற கம்முனு இரேண்டா" சலிப்பாய் கெளதம் தமிழிடம் கெஞ்சினான், "இத்தனை வருஷம் கழிச்சு மீட் பண்ணவன்கிட்ட இப்டியா பேசுவ நீ? இன்னும் ஸ்கூல் பையன் மாதிரி சண்டை போடாதிங்கடா ஏற்கனவே இருக்க பிரச்சனைல இவனுக வேற"
"ஆமா ஸ்கூல் அப்ப கூட இவனுக்கு கொஞ்சம் அறிவு இருந்ததுடா இப்ப பாரு ஞாயிற்று கிழமை ஒரு கிறுக்கன் கூப்பிட்டு வேலை இருக்குன்னு சொன்ன ஒடனே அறிவே இல்லாம கெளம்பிருக்கான்... உனக்கு பொண்ணு குடுக்குறேன்னு சொன்ன அந்த இளிச்சவாயன நான் பாத்தே ஆகணுமே?"
"அதெல்லாம் உனக்கு காட்ட முடியாது போடா" - தமிழ்
"ஏண்டா உனக்கு கல்யாணம்னு தெரிஞ்ச எனக்கு உன் மாமனாரை தெரிஞ்சுக்க எவ்ளோ நேரம் ஆகா போகுது" - ஆதவன்
"இந்த ஆதி கிறுக்கன் சொன்னானா?" கோவமாய் ஆதவனை பார்த்து கேட்டான் தமிழ்
"அவன் எங்கடா பேசுனான்... ஆமா கெளதம் உனக்கும் கல்யாணம்னு கேள்வி பட்டேன்" - ஆதவன்
ஒரு நக்கல் அந்தக் கேள்வியில்... திரு திருவென முழித்த கெளதம் தமிழைப் பார்த்து ஒரு வெட்கத்துடன், "ஆமாடா ஆனா இன்னும் எங்கேஜ்மெண்ட் ஆகல"
"இவனை மாதிரி இல்லாம நீயாவது சொல்லுடா" - ஆதவன்
"அவன் எங்களுக்கே சொல்லல" - கெளதம்
"டேய் ஓவரா பேசுறீங்க நான் கெளம்புறேன்" என்று சென்றவனை இழுத்து புடித்த ஆதவன் அவன் கழுத்தில் கை போட்டு அணை கட்டி தன்னுடைய அலைபேசி எடுத்து ஏதோச் செய்ய அவனிமிருந்து தமிழ்த் திமிர முற்பட்ட, "ஏண்டா இப்புடி மொறபொண்ணு மாதிரி நெளியுற"
"ஏய் சீசீ கை எடு நாயே" - தமிழ்
"கம்முன்னு இருடா என் இசுக்கு... பிரியாணி ஸ்விக்கில ஆர்டர் பண்ணப் போறேன் புது மாப்பிள்ளைங்க காசு குடுத்துருங்க அட்வான்ஸ் ட்ரீட்-னு வச்சுக்கலாம்" - ஆதவன்
"இன்னும் இத நீங்க விடலையாடா... இவ்ளோ சம்பாதிக்கிறல்ல சொந்த காசு போட்டு வாங்குடா" - தமிழ்
"அவன் தருவான் நீ ஆர்டர் போடு எனக்கு அப்புடியே ஒரு மட்டன் சாப்ஸ், க்ரில்டு சிக்கன். முழு கோழி மறந்துராத" - கெளதம்
தமிழ் இருவரையும் கேவலமாக ஒரு பார்வை பார்த்து, "உள்ள ஒருத்தன் உயிருக்குப் போராடிட்டு இருக்கான் நீங்க என்னடா பிரியாணி, சுக்கான்னு சாப்புடுறீங்க"
"அவன் தான் சரி ஆகிட்டான்ல? அப்றம் என்ன வா சட்டுபுட்டுன்னு சாப்டுட்டு நர்ஸ்ஸ சைட் அடிக்கலாம்... பிரைவேட் ஹாஸ்பிடல்ல நர்ஸ் எல்லாம் டக்கரா இருக்கும்... இப்ப ஆதியை கூட்டிட்டு போன நர்ஸ் ஒன்னு செம்மையா இருந்துச்சு "
'இவன் திருந்த போறது இல்ல' என்று நினைத்த தமிழ் தனது வெக்கத்தை விட்டு, "சரி எனக்கு டிராகன் சிக்கன் சொல்லு ஒரு தடியன் அடிச்ச அடில பல்லு ஒரு பக்கம் வலிக்கிது சாப்ட்டா சாப்பிட்டா தான் நல்லா இருக்கும்" மெல்ல மெல்ல தங்களையே மறந்து இன்பத்தில் திளைக்க ஆரமித்தனர் மூவரும்...
ஆதியின் அறையில் அமர்ந்து பிரியாணியை ஒரு புடி புடித்து கொண்டிருந்தனர் மூவரும் (ஆதவன், தமிழ், கெளதம்) அமைதியாக... சட்டென கதவுத் திறந்த சத்தம் கேட்டு திரும்ப அங்குக் கண்களில் கோவத்தை அடக்கி மூவரையும் பார்த்து நின்றான் உதய்...
இலையையும் மறைக்க இயலாது கையையும் மறைக்க இயலாது அசடு வழிந்த புன்னகையோடு உதய்யை பார்த்து சிரித்தான் ஆதவன், தமிழோ இறுதியாய் கையை சப்பி உன்ன ஆசையில் மாறி மாறி உதய்யையும் தனது விரல்களையும் பார்த்து இறுதியில் கையில் இருந்த பிரியாணியை சப்பி சாப்பிட ஆரமித்தான்...
இவை அனைத்திற்கும் ஒரு படி மேலே சென்ற கெளதம், "உனக்கு ஒரு பார்சல் சேத்து தாண்டா வாங்கி வச்சிருக்கோம் முறைக்காத"
பல்லை கடித்து தலையை ஆட்டியவன், "அஞ்சு நிமிஷம் தான் டைம் இந்த இடம் சுத்தமா இருக்கனும் இல்லனா கைய ஒடச்சு இவனுக்கு பக்கத்துல மூணு பெட் போட சொல்லிடுவேன்"
"டேய் அவன் மூக்கு பக்கத்துல போய் இந்த பிரியாணியை வை அண்டர்டேக்கர் மாதிரி எந்திரிச்சு ஒக்காந்துருவான்" என்று அவன் முன் பிரிக்காத ஒரு பொட்டணத்தை நீட்டினான் தமிழ்...
உதய் முறைத்த முறையில் அமைதியாய் இடத்தை மூவரும் சுத்தம் செய்துக் கிளம்ப ஒருப் பார்சல் மட்டும் அதே இடத்தில இருந்தது அதைப் பார்த்தவன் அடக்கப்பட்டச் சிரிப்புடன் நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்த ஆதியை பெரும் அமைதியோடுக் கவனித்து நின்றான்...
தமிழ் கூறியது போலப் பிரியாணியின் மனம் நாசியைத் துளைக்க எழுவானோ என்றச் சந்தேகத்தில் அந்த பார்ஸலை பிரித்து அவன் மூக்கிற்கு அருகில் வைத்துப் பொறுமையாய் காத்தான்... ஆனால் சிறு அசைவும் இன்றிப் படுத்திருந்த ஆதியை இந்த நிலையில் காண இயலாது வந்த வழியேச் சென்றான் தனது உயிரின் பாதியை அந்த அறையிலே விட்டு...
***********************
"பா என்னப்பா பண்ணி வச்சிருக்க? நான் அந்த ப்ரோப்பஸர எதுவும் பண்ணாதிங்கன்னு சொன்னேன்ல எதுக்கு தேவை இல்லாம ஆள வச்சி அடிச்சிருக்கீங்க... நானே அந்த பொண்ணுகிட்ட தப்ப நடந்துக்க முயற்சி பண்ணிட்டேன்னு டெய்லி பீல் பண்ணிட்டு இருக்கேன் நீ இதுல பிரச்சனைய பெருசாக்கிட்டு இருக்க"
"என்னடா பொட்டச்சி மேல ஆசை வந்துடுச்சோ?" அமைச்சர் மகனை கனல் பார்வை வீசினார்.
"அசிங்கமா பேசத்தப்பா நான் அந்த பொண்ணுக்கு பண்ண நெனச்ச தப்புக்கு அவ அழுதது தான் கண்ணு முன்னாடி ஒவ்வொரு தடவையும் வந்து வந்து போகுது இதுல நீ என் மனசுல பாரத்த ஏத்திட்டே போற" - அமைச்சரின் மகன் அவருக்கும் சற்றும் அசராது பதில் அளித்தான்...
"இங்க பாரு எனக்கு தேவை என் பேரு மட்டும் தான்... நீ ஒருத்திய கைய புடிச்சு இலுப்ப அத ஒருத்தன் பாத்து உன் மேல கேஸ் போட்ருக்கான்... எதிர் கட்சி காரனுக்கும் மீடியாக்கும் தெரிஞ்சது ஊதி ஊதி அடுத்த எலக்க்ஷன்-ல எனக்கு சீட் கிடைக்காம பண்ணிடுவாங்க"
"பா எப்ப பாத்தாலயும் கட்சி, காசு மட்டும் தான் உனக்கு முக்கியமா?"
"இதுல என்னடா சந்தேகம்?"
அவர் பேச்சை கேட்டு அவர் மேல் இருந்த கொஞ்ச பாசமும் காற்றில் கரைய கண்டான் அவர் புதல்வன், "அப்ப எதுக்கு நீ சம்மந்தமே இல்லாம வேற ஒருத்தன வெட்டுன?"
விஷமமாய் சிரித்தவர், "அது பிஸ்னஸ்டா இவனை கை வச்சா என்னோட பரம எதிரி உதய் மாதவன் மேல கை வச்ச மாதிரி... நீ பொறந்ததுல இருந்து உன்னால எனக்கு கிடைச்ச ஒரே நல்ல விசியம் இது தான்"
அவர்கள் உரையாடலைத் தடுத்து நிறுத்தினான் மினிஸ்டரின் பி.எ, "சார் நம்ம பேக்டரி-ல ஏதோ லேபர் பிரச்னை பன்னுரங்களாம் நாம ஒடனே போகணும்"
"சரி வண்டி எடு" என்றவர் தன் மகனிடம் திரும்பி, "அந்தப் பொட்டச்சிப் பின்னாடி நீ சுத்துனன்னுக் கேள்விப் பட்டேன் அவளோடக் குடும்பமே இருக்காது" குண்டை அவன் தலையில் அமைதியாக இறக்கிச் சென்றார்...
பேக்டரி வந்தவுடன் அந்த இடத்தைக் கண்களில் ஆராய்ந்தவர் அதன் அமைதியைப் பார்த்துக் கடுமையானக் கோபத்துடன் தன்னுடைய அலுவலக அறையை அடைய அங்கு அவருக்கு காத்து நின்றான் அந்த பேக்டரி மேனேஜர், "என்னையா இவனுங்களுக்கு பிரச்னை எப்ப பாரு இவனுங்களுக்கு சம்பளத்தை கூடிட்டே இருக்க முடியுமா"
"சார் இந்த தடவை சம்பளம் பிரச்சனை இல்ல ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிக்கிற இடத்துல மீத்தேன், co2 லீக் ஆகுறனால..."
"யோவ் நிறுத்து பிரச்னை என்ன அத மட்டும் சொல்லு"
"மெஷின் ரிப்பேர் சார் மூணு மாசமா சொல்லிட்டே இருக்கு ஆனா இன்னும் எதுவும் பண்ணல"
"சரி அந்த மெஷின் மாத்த சொல்றேன்"
"சார், நீங்க ஒரு தடவ அத பாத்துட்டா லேபர்ஸ் கொஞ்சம் நிம்மதியா இருப்பாங்க"
சலிப்புடன், "சரி வந்து தொள"
"பர்ஸ்ட் ஃப்லோர்-ல இருக்க ரூம் தான் சார் நீங்க போங்க நான் லேபர் ஹெட்ட கூட்டிட்டு வர்றேன்"
"சீக்கிரம் வாயா எனக்கு ஆயிரம் வேலை இருக்கு" என்றவர் முதல் தளத்திற்கு சென்றார்.
வேலை நிறுத்தம் காரணமாக அங்கு ஒருவரும் இல்லாமல் அந்த தலமே வெறிச்சோடி இருந்தது... அங்கிருந்த அறையில் நுழைந்து அங்கிருந்த இயந்திரங்களை ஆராய்ந்து நின்ற பொழுது ஏதோ கைகள் அரிப்பது போன்ற எண்ணம் தோன்றவும் அவ்விடத்தை விட்டு வெளியேற நினைத்தவர் கதவினை திறக்க அதை திறக்க இயலவில்லை...
சுற்றி பார்க்க அங்கு ஒருவரும் கண்ணில் தென்படவில்லை நொடிகள் கழிய கழிய மூச்சு விட சிரமப்படுவது போல் இருந்தது...
அந்த நேரம் அவருடைய எண்ணிற்கு ஒரு அழைப்பு, உதய் மாதவன்...
அந்த பெயரை பார்த்த நொடி நடுங்கியக் கைகளுடன் அதை எடுத்தார், "ஹலோ"
"என்ன மினிஸ்டரு எ.சி காத்துல இருக்க போல குரல்ல ஒரே புத்துணர்ச்சி தெரியிது" அவ்வ்ளவு இளக்காரம் அவன் குரலில் வழிந்தோடியது
"டேய்..."
"ஷ்ஷ்ஷ்... ரொம்ப பேசுனா ரெத்தம் கக்கி செத்துடுவ மங்குனி அமைச்சரே... அதுவும் இல்லாம நீ பேச கூடாது. இப்ப நான் மட்டும் தான் பேசணும்... என்னைக்கு நீ என்ன பழி வாங்குறேன்னு என் ஆதி மேல கை வச்சியோ அப்பயே உன் சாவு என் கைல தான்னு முடிவாகிடுச்சு... அவனை அணைக்கிறதும் நானா தான் இருப்பேன் அடிக்கிறதும் நானா மட்டும் தான் இருப்பேன். நடுவுல எவன் வந்தாலும் அவனுக்கு இதே நிலைமை தான்"
அவனுக்கு பதில் கூற கூட முடியாத நிலையில் அவர் விழி பிதுங்கி நின்றார், கைகளில் இருந்த கைபேசி தரையில் விழுந்து சுக்குநூறாக சிதறியது... நிலைமையை மோசமாக்க செவிமடலில் இருந்து வழிந்தோடிய குருதி அந்த பளீர் வெள்ளை சட்டையில் ஓடியது...
**********************
'மீன்வளத்துறை அமைச்சர் திரு. குமரன் நெடுஞ்செழியன் சென்னையில் உள்ள அவரின் காட்டன் தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு வாயு கசிவின் காரணமாக அகால மரணமடைந்தார். இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் நேரில் சென்று அவருடைய இறுதி சடங்கில்...'
"என்னங்க இவரை நம்ம வீட்டுல கூட ஒரு தடவ சந்திச்சிருக்கேன்ல?" நளினி, ஹரியின் தாயார் தொலைக்காட்சியில் வெளியாகிக் கொண்டிருந்த செய்தியைப் பார்த்தவர் தன் கணவனிடம் சந்தேகத்துடன் கேட்டார்...
"ஆமாமா இவரு கூட கொஞ்சம் மனஸ்தாபம் இருக்கு, அரசியல்வாதின்னு நல்லா காமிப்பாரு செட்டில்மென்ட் ஒழுங்கா வராது, ஆளுங்க அனுப்பி மெரட்டுவாரு அதான் உதய் ஒரு தடவத் தட்டி வச்சான் அதுல இருந்து நம்மப் பக்கமே வர்றது இல்ல" முகத்தில் புன்னகைப் பூத்தது மகனைப் பற்றிய நினைவில்...
"நீங்க போக போறிங்களா?"
"அண்ணாவும் நானும் போயிடு வர்றோம் பெரிய இடம்ல"
"சரி சாப்புட வாங்க, மாமாவையும் கூட்டிட்டு வாங்க" அந்த குரலில் சிறு ஏமாற்றம் கலந்த கோவம் இருந்தது, 'இவ கூப்புடுற தொனியே சரி இல்லையே...'
"ம்ம்ம் கூட்டிட்டு வர்றேன்மா" என்றவர் தன் சகோதரரை அழைக்கச் சென்றார்...
அதே நேரம் தன்னுடைய அறையில் இருந்து விஷ்ணுக் குறுக்கும் நெடுக்கும் ஹரியின் அறைக்கு மாறி மாறி நடந்துக்கொண்டே இருந்தான், கதவுத் திறந்திருந்தாலும் உள்ளேச் செல்லாமல் ஒவ்வொரு முறையும் ஹரி என்னச் செய்கின்றான் என்று எட்டிப் பார்ப்பானேத் தவிர உள்ளேச் செல்ல முயற்சிக்க வில்லை...
குட்டி போட்ட பூனைப் போல் தினமும் அறையின் வாசலில் வந்து நிற்பவன் மேல் சிறிதும் இரக்கம் தோன்றவில்லை மாறாக கோவம் அதிகரிக்கவேச் செய்தது, இருவரும் நேருக்கு நேர் பேசி இரண்டு வாரங்கள்க்கு மேல் ஆகியது...
தனது இருப்பைக் காட்டிக்கொள்ள காலை அழுத்தி அழுத்தி நடந்தவனை பார்த்தும் பார்க்காததுமாய் இல்லாத சட்டைச் சுருக்கத்தை அழுத்தி அழுத்தித் தேய்த்து நின்றான் ஹரி...
பொறுத்துப் பார்த்தவன் இனி முடியாதென உணர்ந்து வெக்கத்தை விட்டு ஹரியின் அறைக்கு சென்றான்... விஷ்ணுவைப் பார்த்தும் சிறிது அசையாதுத் தன
து சட்டையை டக்-இன் செய்தவன் அவனிடம் சிறிதும் கவனம் செலுத்தாதுத் தன்னுடைய வேலையிலே குறியாய் இருந்தான்...
"டேய் சாவடிக்காத ஏற்கனவே மண்டை சூடா இருக்குது இதுல நீ வேற சூடேத்தாத" - விஷ்ணு