- Messages
- 1,065
- Reaction score
- 3,032
- Points
- 113
இஷ்டம் – 9 
காலையிலே ரகுராமின் வீடு பரபரவென்றிருந்தது. தங்கராஜின் மூன்று அக்கா குடும்பமும் நேற்றிரவுதான் புதுக்கோட்டைக்கு வந்திறங்கியிருந்தனர். இன்றைக்கு மாலை ரகுராம் சைந்தவியின் நிச்சயதார்த்த விழா திருப்பூரில் புகழ்பெற்ற திருமண மண்டபத்தில் ஏற்பாடாகியிருந்தது. அதற்குத்தான் காலையிலே அனைவரும் அரக்கப் பறக்க கிளம்பிக் கொண்டிருந்தனர்.
காலை ஆறு மணியிலிருந்து பெண்கள் கூட்டம் ஆயத்தமாகியது. நேரம் பத்தை தொட்டும் இன்னும் ஒருவர் கூட அசைவதாய் இல்லை. தேவராஜ் அக்கா கணவர்களோடு அமர்ந்திருந்தார். மொத்தம் இவர்களது குடும்பமே மூப்பது பேரிரும் மேலிருக்க, மூன்று நான்கு மகிழுந்துகள் தேவைப்படலாம் என்று யோசித்தவர் தனியார் பேருந்து ஒன்றை ஏற்பாடு செய்துவிட்டார். இடப்பற்றாக் குறையும் இருக்காது, அனைவருக்கும் வசதியாய் இருக்குமென எண்ணி பேருந்தை வரவழைத்தார்.
காலை ஒன்பது மணிக்கே ஓட்டுநர் வந்துவிட்டார். காத்திருந்த மனதிருக்குப் பொறுமை காற்றில் கலந்துவிட, “சார், ஒரு டீ சாப்ட்டு வரேன்!” என அவர் இப்போதுதான் அகன்றிருந்தார்.
ரகுராமும் ஆயத்தமாகி அவ்தேஷ் மற்றும் கௌரேஷூடன் அமர்ந்திருந்தான். கௌதமி அனைவரும் உண்டு முடித்ததும், சமையலைறையில் வேலையை முடித்துவிட்டு பட்டுச் சேலையை உடுத்தித் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தார்.
அலைபேசியில் மூழ்கியிருந்த அவ்தேஷ், “இதோ வரேன்டான்னு ஒருத்தன் போனான் ரகு. இன்னும் காணோம். இந்த ஊர்ல யாரைத் தெரியும் அவனுக்கு?” என யோசனையாகக் கேட்டான்.
அவனை ஆராய்ச்சியாகப் பார்த்த ரகுராம், “ஆமா... நானும் அவனைத் தேடுனேன். ஆளையே காணோமே?” என விழிகளை சுழற்றினான்.
“அவ ஏன் இங்க இருக்கப் போறான். அந்தப் பொண்ணு வீட்ல போய் காவகாத்துட்டு இருப்பான்!” கௌரேஷ் கேலியாக கூற, மற்ற இருவரும் அவனைத் திரும்பிப் பார்த்தனர்.
“எந்தப் பொண்ணு டா?” அவ்தேஷ்க்கு சுத்தமாய் காயத்ரியை நினைவில் இல்லை. அன்றைக்குப் பார்த்ததோடு மறந்து போயிருந்தான்.
“அதான் டா... அன்னைக்கு ட்ரெஸ் எடுக்கப் போகும்போது பார்த்தோமே... அந்தப் பொண்ணு பேரு கூட?” என இவன் நினைவடுக்கில் துழாவ, “காயூ!” என்றான் ராம் பல்லைக் கடித்து.
“யெஸ்! யெஸ். காயூ, காயத்ரி தானே அவங்க பேரு? அவங்க வீட்டுக்குத்தான் போய்ருப்பான். வேற எங்கேயும் போக வாய்ப்பில்லை!” எனக் கூறிவிட்டு அலைபேசியில் மீண்டும் முகத்தைப் புதைத்துக் கொண்டான். இங்கே ரகுராமிற்கு ஏனோ புகைச்சலாய் இருந்தது.
அன்றைய சம்பவத்திற்குப் பின்னே இவனாய் அவளிடம் பேச முயற்சிக்கவில்லை. அவளாய் குழம்பி தெளிந்து வரட்டும் என விட்டுவிட்டான். இருந்தும் மனம் கேளாமல் அவ்வப்போது ஓரிரண்டு குறுஞ்செய்திகள் அனுப்பினான். அவை படிக்கப்படாமல் தூசியடைந்து போயின. ஒரு வாரம் கழித்து நேற்றைக்கு அழைத்திருந்தான். நான்கைந்து முறை அழைத்தப் பிறகே அவள் அழைப்பை ஏற்றிருந்தாள். ஆனாலும் ஒரு வார்த்தை அவளாக உதிர்க்கவில்லை.
இவன்தான், “நாளைக்கு எங்கேஜ்மெண்ட்க்கு வர்ற ப்ளான் இருக்கா? இல்லை எதாவது காரணம் சொல்லித் தட்டிக் கழிக்கலாம்னு நினைச்சிருக்கீயா காயூ?” என ஆதங்கத்தில் இரைந்தான். அவளிடம் சில நொடிகள் மௌனம்.
“வரேன் ராம்!” என அவன் பேச வாய்ப்பளிக்காது அழைப்பைத் துண்டித்திருந்தாள். அவள் வருகிறேன் என்று கூறியதே இவனுக்கு நிம்மதியை படரச் செய்ய, வேறெதுவும் பேச முனையவில்லை. இதோ காலையில் கிளம்பி அமர்ந்தவன் அவள் வருவாள் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்க, இந்த யுக்தேஷ் இடையில் வருகிறானே என எரிச்சலும் பொருமலும் ஒருங்கே தோன்றிற்று.
***
“அப்பா அம்மா எல்லாம் என்ன பண்றாங்க தம்பி?” தங்கராஜ் கேட்க, அவரது கட்டிலருகே ஒரு இருக்கையை இழுத்துப் போட்டு அமர்ந்திருந்த யுக்தா பதிலுரைத்தான்.
“அம்மா ஹவுஸ் வொய்ப்தான் அங்கிள். அப்பா கவர்மெண்ட் ஆபிஸ்ல வேலை பார்க்குறாரு!” என்றான் இவன்.
“சரிங்க தம்பி, நீங்க டாக்டருன்னு பாப்பா சொன்னா?”
“ஆமா அங்கிள், டாக்டர்தான். சைக்கார்டிஸ்ட், மனநல மருத்துவம் படிச்சிட்டு இருக்கேன். இந்த வருஷத்தோட முடிஞ்சிடும். அப்புறம் அபிஷியலா டாக்டராகிடுவேன் அங்கிள்!” என ஆர்வமாய் பதிலளித்தவன், காயத்ரியைப் பற்றியும் கேட்டுக் கொண்டிருந்தான்.
தன்னிடம் இருப்பதிலே பரவாயில்லை என்றிருந்த கபிலை வண்ணப் புடவையை அசிரத்தையாய் மடிப்பெடுத்து தோளில் சரித்து ஊக்கைக் குத்தினாள். ஒரு மடிப்பு மட்டும் சரியாய் வராது தனித்து தெரிய, மீண்டும் அதை சரிசெய்ய மனமற்று அப்படியே விட்டவள், உலர்ந்திருந்த தலையை இரண்டு பின்னலிட்டு நேற்று வாங்கி வந்த மல்லிகைப் பூவை தலையில் வைத்தாள். பெரிதாய் ஆபரணங்கள் அணிய அவளுக்கு விருப்பமில்லை. எளிமையாய் கழுத்தணி ஒன்றும் காதணி ஒன்றும் அணிந்தாள். தங்க நிறத்திலே வளையலை கைகளில் புகுத்தியவள் கண்ணாடியைப் பார்க்காது கைப்பையை எடுத்தாள். மாலை அங்கே சென்று உடுத்த உடைகள் மற்றும் தேவையான இத்யாதிகளை எடுத்துக் கொண்டாள். வெளியே யுக்தாவும் தந்தையும் பேசும் சத்தம் இங்கே வரை அவளுக்கும் கேட்டது. காலையிலே புன்னகை முகமாக வந்தவனை நோகடிக்க இவளுக்கு மனம் வரவில்லை. அதிலும் இந்த சில நாட்களாக அவனின் நட்பு இவளுக்கு ஏதோவொரு ஆறுதல் அளிப்பதை மனம் உளமார உணர்ந்திருக்க, அவனிடம் கடுமையைக் காண்பிக்க இயலவில்லை.
இவள் தயாரகி வெளியே வர, “ரெடியா காயூ, கிளம்பலாமா?” என அவனும் எழுந்தான்.
அவனிடம் தலையை அசைத்தவள், “ப்பா... கரெக்ட் டைம்க்கு சாப்பிடுங்கப்பா. நான் ஃபோன் பண்ணி கேட்டுட்டே இருப்பேன். மாத்திரையை மறக்காம போடணும்!” எனக் கண்டிப்புடன் அவள் கூற, “நான் என்னைப் பாத்துக்கிறேன். நீ பத்திரமா போய்ட்டு வாம்மா...” என்றார் பெரியவர். அவரிடம் தலையை அசைத்து வெளியே சென்றாள்.
ரகுராமின் இருசக்கர வாகனத்தை இவன் எடுத்து வந்திருந்தான். “காயூ, இந்த வெயில் நடக்குறது கஷ்டம். வா, பைக்ல ரெண்டு நிமிஷம் தான். நல்ல ஃப்ரெண்டா நினைச்சிக்க. நத்திங் மோர் தன் தட்!” என அவன் மூச்சு வாங்கிப் பேசி முடியும் முன்னே காயத்ரி அவனுக்கு பின்னே ஏறியமர்ந்திருக்க, அவனது முகத்தில் அழையா விருந்தாளியாகப் புன்னகை வந்தமர்ந்தது. இருவரும் ரகுராமின் வீட்டை நோக்கி நகர்ந்தனர்.
எத்தனை நேரம் பொறுமையை இழுத்துப் பிடிக்க முடியும்? நேரத்தைப் பார்த்த தேவராஜ், “இப்போ எல்லாரும் கிளம்பி பஸ்ல ஏறப் போறீங்களா? இல்ல, விட்டுட்டு நாங்க மட்டும் கிளம்பவா? எவ்வளோ நேரம்?” என அவர் சத்தமாய் ஒரு அதட்டல் போடவும் ஐந்தே நிமிடத்தில் அனைவரும் விறுவிறுவென பேருந்தை நோக்கி நகரத் தொடங்கினர்.
“என் பொண்டாட்டிக்கு எல்லாம் நீங்கதான் மாப்பிள்ளை கரெக்டு. நாங்க சொன்னா, காதிலே வாங்க மாட்டா!” தேவராஜின் மூத்த மாமா சலித்துக் கொண்டார். இளையவர்கள் குழந்தைகள், அவ்வீட்டின் மருமகன், மருமகள்கள் என அனைவரும் பேருந்தை ஆக்கிரமித்து விட்டிருந்தனர்.
“டேய் அவி, உங்க அண்ணன் எங்கப் போனான்?” என அவனின் தாய் யுக்தாவைக் காணாது தேடினார்.
“ம்மா... டூ மினிட்ஸ்ல வந்துடுவான் மா. கடை வரைக்கும் போய்ருக்கான்!” என பொய்யைக் கூறி அந்நேரத்திற்கு மழுப்பியவன், அவனைக் காணாது ஜன்னலில் எட்டிப் பார்த்த வண்ணமிருந்தான்.
எல்லோரும் கிளம்பியதும் அனைத்து அறையிலும் ஒருமுறை நோட்டமிட்டு உறுதி செய்து கொண்ட ரகுராம் தாயை அனுப்பியவன் வீட்டின் கதவைப் பூட்டினான். அவனுக்குப் பின்னே இருச்சக்கர வாகனம் சத்தம் கேட்க, திரும்பி பார்த்தான். யுக்தாவின் பின்னிருந்த இறங்கிய காயத்ரியையும் அவனையும் சேர்த்துப் பார்த்தவனுக்கு மனம் சுர்ரென கோபம் உச்சியில் கிளர்ந்தது.
அவனுடைய இருசக்கர வாகனம், அவனுடைய காயூ. ஆம், காயத்ரி அவனுடையவள்தான். இந்த வீடு, இருசக்கர வாகனம், அவர்களது ஆஸ்தான இடம், நித்திய மல்லி செடி, மயில் மாணிக்க கொடியோடு காயத்ரி என்பவளும் அவனுடைய உடைமைதான். அப்படியிருக்கையில் அவர்கள் இருவரையும் ஒன்றாய் கண்டதும் அடிவயிற்றிலிருந்து தொண்டை வரை கோபம் படர்ந்தது. யுக்தாவைப் பார்வையாலே எரித்தான்.
அவனது கோப முகத்தைப் பார்த்த யுக்தேஷ், “ச்சு... சாரி டா மச்சான். கொஞ்சம் லேட்டாகிடுச்சு. எல்லாம் இவதான் லேட் பண்ணா. காயூவைக் கேளு நீ...” என அவன் சமாளிக்க, காயத்ரி அவனை நிமிர்ந்து பார்க்கவே இல்லை.
“யுக்தா, போகலாமா?” என இவனிடம் கேட்க, “ஷ்யூர் காயூ, வா...வா. நண்டு சிண்டுக எல்லாம் இடத்தைப் பிடிச்சிருக்கும்ங்க. நம்மளும் போய் உக்காருவோம்!” என்றவன் அவளை முன்னே விட்டு பின்னே செல்ல, ரகுராம் காயத்ரியை சில நொடிகள் வெறித்துவிட்டு வெளிக்கதவை இழுத்துப் பூட்டியபின் பேருந்தில் ஏறினான்.
முன்னிருந்த இருக்கைகளை பெரியவர்கள் ஆக்கிரமித்துக் கொள்ள, நடுவில் சிறுவர் பட்டாளமும் அதன் தாய்மார்களும் இருந்தனர். அப்படியே சில பல இருக்கைகள் தள்ளி கௌரேஷ், அவ்தேஷ் இருவரும் அமர்ந்திருக்க, “காயூ... இங்க உட்காரலாம்!” என யுக்தேஷ் அவளைக் கடைசி இருக்கைக்கு முன்னிருந்த இருக்கையில் அமர வைத்து அவளருகே அமர்ந்து கொண்டான்.
“பேக்கை கொடு, மேல வைக்கலாம்!” என அவளது கைப்பையை வாங்கி மேலே வைத்தான். ரகுராம் உள்ளே வந்தவன் அவர்கள் இருவரும் அமர்ந்திருந்த இருக்கையை நோக்கிப் போனான். யுக்தா இன்னும் அமராது மேலிருந்த பையை உள்ளே தள்ளிக் கொண்டிருக்க, “யுக்தா, நான் அவகிட்டே கொஞ்சம் பேசணும். நீ போய் வேற சீட்ல உட்காரு!” என்றான் அதட்டலாய்.
அவனைப் புருவம் சுருக்கிப் பார்த்த யுக்தேஷ், “மச்சான், உனக்கொரு நல்லதை உன் குடும்பமே சேர்ந்து செஞ்சு வைக்கிறாங்க. அதே மாதிரி எனக்கொரு நல்லது நடக்க வேணாமா? ஹம்ம், அவகிட்டே இத்தனை வருஷம் பேசாததையா இப்போ பேச போற. மூடிட்டு கடைசி சீட்ல போய் உக்கார்ந்துட்டு உன் ஆளுக்கு கால் பண்ணி கடலை போடு. யாரும் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க. இந்த சீட்டை கண்டிப்பா நான் தர மாட்டேன்!” என அவன் கேலியாய்க் கூறி இருக்கையில் பொத்தென அமர்ந்தான்.
அவனை அழுத்தத்துடன் பார்த்த ரகுராம் காயத்ரியைக் காண, அவளுக்கு இவர்களது உரையாடல் தெளிவாய் கேட்கவில்லை. அதுவும் இன்றி நேற்று அவள் இரவுப் பணி பார்த்துவிட்டு காலையில் ஒரு மணி நேரம் மட்டுமே தூங்கி எழுந்து தந்தைக்கு சமைத்து அரக்கப் பறக்க வந்ததிலே உடல் அலண்டு போயிருந்தது. விழிகள் உறக்கத்திற்கு கெஞ்ச, இமைகளை சிமிட்டி தூக்கத்தை விரட்டியடித்தவாறு பார்வையை ஜன்னலில் பதித்திருந்தாள். ரகு பின்னிருக்கைக்கு சென்று அமர்ந்தான். பேருந்து கிளம்பவும் கசகசவென பேச்சு சத்தம் கேட்கத் தொடங்கியது.
காயத்ரி முயன்று விழிகளைத் திறந்து திறந்து மூடிக் கொண்டிருந்தாள். கிளம்பும் போதே அவள் தூங்கி வழிந்தால் அதற்கும் ரகுவின் அத்தைகளின் வாயில் அவலாக அரைபடக் கூடுமென எண்ணி வெகு கவனமாய் தூக்கத்தை தூரப் போட முயன்றாள். விழிகள் சிவந்து கிடந்தன.
“தூக்கம் வந்தா தூங்கு காயூ. யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. நைட் ட்யூட்டி பார்த்தீயா?” என இருக்கைக்குப் பின்னிருந்த ரகு இவளைப் பார்த்துவிட்டு எட்டி செவியருகே மெதுவாக மென்மையாய் பேசினான். அவனைத் திரும்பிப் பார்த்தவள் சம்மதமாய் தலையை அசைத்துவிட்டு இருக்கையில் சாய்ந்து விழிகளை மூடினாள்.
“காயூ... ஒன் மினிட், இப்படியே சீட்ல தூங்குனா, உனக்கு நெக் பெயன் வந்துடும். ஐ வில் அட்ஜெஸ்ட் தி சீட்!” என்ற யுக்தா இருக்கையை அவளுக்கு ஏற்றது போல தளர்த்திவிட்டு தன்னுடைய பையிலிருந்து சிறிய சால்வையை எடுத்து அவளிடம் நீட்ட, மெல்லிய முறுவலுடன் அதைப் போர்த்திக்கொண்டு உறங்கத் தொடங்கினாள். சில பல நிமிடங்களிலே அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல, யுக்தா அவளை ஆதுரமாகப் பார்த்திருந்தான். அவனது செயல்களையே அவதானித்த ராகுவிற்கு கோபம் கட்டுக்கடங்காது பெருகி வழிந்தது. இருக்கும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அமைதி காத்தான்.
திறந்திருந்த ஜன்னல் வழியாக வெப்ப காற்று முகத்தில் பட, அவள் முகத்தை சுளித்தாள். வெயில் வேறு உள்ளே நுழைந்து குளிரூட்டியின் குளிரைக் குறைத்தது. யுக்தா எழுந்து அவள் மீது கை படாதவாறு நின்று பேருந்து ஜன்னலின் கதவை இழுத்து அடைத்துவிட்டு அமர்ந்தவன், அவளுக்குப் போர்வையை ஒழுங்காகப் போர்த்தி விட கையைக் கொண்டு செல்ல, ரகுராம் அவன் கையைப் பின்னிருந்து பிடித்தான்.
“என்ன பண்ண போற யுக்தா?” அவன் கேட்க, இவனது முகத்தில் அப்பட்டமாய் எரிச்சல் படர்ந்தது.
“நீ எதுக்கு இப்போ எங்களையே நோட்டம் விட்டுட்டு இருக்க மச்சான்?” என மெல்லிய குரலில் கடுப்பாக பேசியவன் எழுந்து சென்று அவனருகே அமர்ந்தான்.
“இப்போ எதுக்கு நீ அவகிட்டே இவ்வளோ அட்வாண்டேஜ் எடுத்துக்குற. எனக்கு சுத்தமா பிடிக்கலை அது!” ரகு முகத்தில் அடித்தது போல கூற, அவனை யோசனையாகப் பார்த்தான் மற்றவன்.
“லூசாடா நீ? அவ உனக்கு மட்டும் ஃப்ரெண்ட் இல்ல. எனக்கும் ப்ரெண்ட தான். அவ மேல எனக்கும் அக்கறை சரக்கரை எல்லாம் இருக்கு. பெட்ஷிட் விலகுச்சேன்னு சரி பண்ண போனேன். அதுல என்ன தப்பைக் கண்ட நீ?” என இவன் கடுகடுத்தான்.
“ப்ம்ச்... நான் இதை மட்டும் சொல்லலை. அவளோட நீ க்ளோஸ் ஆக ட்ரை பண்றது எனக்குப் பிடிக்கலை யுக்தா. ஸ்டே வித்தின் யுவர் லிமிட்ஸ்!” என்றவனை உறுத்து விழித்தவன், “நீ அவளுக்குப் ஃப்ரெண்ட். அவ்வளோ தான். எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு. சோ பழகுறேன்!” என்றான் அழுத்தமாய்.
“வாட் டூ யூ மீன்?” ரகுவிற்கு ரத்த அழுத்தம் எகிறியது.
“ஐ மீன் இட். ஐ லவ் ஹெர். ஐ லவ் ஹெர் ட்ரூலி. அதனாலதான் ஐ வாண்ட் டூ நோ அபவுட் ஹெர் இன் அண்ட் அவுட். அவளை இம்ப்ரெஸ் பண்ண ட்ரை பண்றேன்!” என்றான் தலையைக் கோதி.
“செருப்பு பிஞ்சிடும். இதை நான் சொல்லலை. அவளே சொல்லுவா. உன் விளையாட்டெல்லாம் அவகிட்டே வச்சுக்காத டா. அவ ஏதோ மைண்ட் அப்செட்டா இருக்கவும் உன்னைப் பக்கத்துல விட்டு வச்சிருக்கா. இல்லைன்னா லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிடுவா!” என்றான் பல்லை நறநறத்து.
“வாட் எவர், அதை அவ சொல்லட்டும் டா. நான் என்னோட விருப்பத்தை ஜென்யூனா அவகிட்டே சொல்லுவேன். அவளுக்கு என்னைப் பிடிக்கலைன்னு அவ வாய்ல இருந்து சொல்லட்டும். நீ அவளுக்கு ஃப்ரெண்ட் மட்டும்தான். அவளோட லைஃப்ல என்ன முடிவெடுக்கணும்னு நீ டிசைட் பண்ணாத. தட் இஸ் நன் ஆஃப் யுவர் பிஸ்னஸ். எனக்கும் அவளுக்கும் இடையில வராத டா. எனக்கு எரிச்சலாகுது. கடைசி வரை அவ சிங்கிளாவே இருக்கணும்னு நினைக்குறீயா?” எனக் கடுப்புடன் கேட்டுவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் முன்னே வந்து அமர்ந்து கொண்டான். ரகு அவனை அமைதியாகப் பார்த்தான்.

காலையிலே ரகுராமின் வீடு பரபரவென்றிருந்தது. தங்கராஜின் மூன்று அக்கா குடும்பமும் நேற்றிரவுதான் புதுக்கோட்டைக்கு வந்திறங்கியிருந்தனர். இன்றைக்கு மாலை ரகுராம் சைந்தவியின் நிச்சயதார்த்த விழா திருப்பூரில் புகழ்பெற்ற திருமண மண்டபத்தில் ஏற்பாடாகியிருந்தது. அதற்குத்தான் காலையிலே அனைவரும் அரக்கப் பறக்க கிளம்பிக் கொண்டிருந்தனர்.
காலை ஆறு மணியிலிருந்து பெண்கள் கூட்டம் ஆயத்தமாகியது. நேரம் பத்தை தொட்டும் இன்னும் ஒருவர் கூட அசைவதாய் இல்லை. தேவராஜ் அக்கா கணவர்களோடு அமர்ந்திருந்தார். மொத்தம் இவர்களது குடும்பமே மூப்பது பேரிரும் மேலிருக்க, மூன்று நான்கு மகிழுந்துகள் தேவைப்படலாம் என்று யோசித்தவர் தனியார் பேருந்து ஒன்றை ஏற்பாடு செய்துவிட்டார். இடப்பற்றாக் குறையும் இருக்காது, அனைவருக்கும் வசதியாய் இருக்குமென எண்ணி பேருந்தை வரவழைத்தார்.
காலை ஒன்பது மணிக்கே ஓட்டுநர் வந்துவிட்டார். காத்திருந்த மனதிருக்குப் பொறுமை காற்றில் கலந்துவிட, “சார், ஒரு டீ சாப்ட்டு வரேன்!” என அவர் இப்போதுதான் அகன்றிருந்தார்.
ரகுராமும் ஆயத்தமாகி அவ்தேஷ் மற்றும் கௌரேஷூடன் அமர்ந்திருந்தான். கௌதமி அனைவரும் உண்டு முடித்ததும், சமையலைறையில் வேலையை முடித்துவிட்டு பட்டுச் சேலையை உடுத்தித் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தார்.
அலைபேசியில் மூழ்கியிருந்த அவ்தேஷ், “இதோ வரேன்டான்னு ஒருத்தன் போனான் ரகு. இன்னும் காணோம். இந்த ஊர்ல யாரைத் தெரியும் அவனுக்கு?” என யோசனையாகக் கேட்டான்.
அவனை ஆராய்ச்சியாகப் பார்த்த ரகுராம், “ஆமா... நானும் அவனைத் தேடுனேன். ஆளையே காணோமே?” என விழிகளை சுழற்றினான்.
“அவ ஏன் இங்க இருக்கப் போறான். அந்தப் பொண்ணு வீட்ல போய் காவகாத்துட்டு இருப்பான்!” கௌரேஷ் கேலியாக கூற, மற்ற இருவரும் அவனைத் திரும்பிப் பார்த்தனர்.
“எந்தப் பொண்ணு டா?” அவ்தேஷ்க்கு சுத்தமாய் காயத்ரியை நினைவில் இல்லை. அன்றைக்குப் பார்த்ததோடு மறந்து போயிருந்தான்.
“அதான் டா... அன்னைக்கு ட்ரெஸ் எடுக்கப் போகும்போது பார்த்தோமே... அந்தப் பொண்ணு பேரு கூட?” என இவன் நினைவடுக்கில் துழாவ, “காயூ!” என்றான் ராம் பல்லைக் கடித்து.
“யெஸ்! யெஸ். காயூ, காயத்ரி தானே அவங்க பேரு? அவங்க வீட்டுக்குத்தான் போய்ருப்பான். வேற எங்கேயும் போக வாய்ப்பில்லை!” எனக் கூறிவிட்டு அலைபேசியில் மீண்டும் முகத்தைப் புதைத்துக் கொண்டான். இங்கே ரகுராமிற்கு ஏனோ புகைச்சலாய் இருந்தது.
அன்றைய சம்பவத்திற்குப் பின்னே இவனாய் அவளிடம் பேச முயற்சிக்கவில்லை. அவளாய் குழம்பி தெளிந்து வரட்டும் என விட்டுவிட்டான். இருந்தும் மனம் கேளாமல் அவ்வப்போது ஓரிரண்டு குறுஞ்செய்திகள் அனுப்பினான். அவை படிக்கப்படாமல் தூசியடைந்து போயின. ஒரு வாரம் கழித்து நேற்றைக்கு அழைத்திருந்தான். நான்கைந்து முறை அழைத்தப் பிறகே அவள் அழைப்பை ஏற்றிருந்தாள். ஆனாலும் ஒரு வார்த்தை அவளாக உதிர்க்கவில்லை.
இவன்தான், “நாளைக்கு எங்கேஜ்மெண்ட்க்கு வர்ற ப்ளான் இருக்கா? இல்லை எதாவது காரணம் சொல்லித் தட்டிக் கழிக்கலாம்னு நினைச்சிருக்கீயா காயூ?” என ஆதங்கத்தில் இரைந்தான். அவளிடம் சில நொடிகள் மௌனம்.
“வரேன் ராம்!” என அவன் பேச வாய்ப்பளிக்காது அழைப்பைத் துண்டித்திருந்தாள். அவள் வருகிறேன் என்று கூறியதே இவனுக்கு நிம்மதியை படரச் செய்ய, வேறெதுவும் பேச முனையவில்லை. இதோ காலையில் கிளம்பி அமர்ந்தவன் அவள் வருவாள் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்க, இந்த யுக்தேஷ் இடையில் வருகிறானே என எரிச்சலும் பொருமலும் ஒருங்கே தோன்றிற்று.
***
“அப்பா அம்மா எல்லாம் என்ன பண்றாங்க தம்பி?” தங்கராஜ் கேட்க, அவரது கட்டிலருகே ஒரு இருக்கையை இழுத்துப் போட்டு அமர்ந்திருந்த யுக்தா பதிலுரைத்தான்.
“அம்மா ஹவுஸ் வொய்ப்தான் அங்கிள். அப்பா கவர்மெண்ட் ஆபிஸ்ல வேலை பார்க்குறாரு!” என்றான் இவன்.
“சரிங்க தம்பி, நீங்க டாக்டருன்னு பாப்பா சொன்னா?”
“ஆமா அங்கிள், டாக்டர்தான். சைக்கார்டிஸ்ட், மனநல மருத்துவம் படிச்சிட்டு இருக்கேன். இந்த வருஷத்தோட முடிஞ்சிடும். அப்புறம் அபிஷியலா டாக்டராகிடுவேன் அங்கிள்!” என ஆர்வமாய் பதிலளித்தவன், காயத்ரியைப் பற்றியும் கேட்டுக் கொண்டிருந்தான்.
தன்னிடம் இருப்பதிலே பரவாயில்லை என்றிருந்த கபிலை வண்ணப் புடவையை அசிரத்தையாய் மடிப்பெடுத்து தோளில் சரித்து ஊக்கைக் குத்தினாள். ஒரு மடிப்பு மட்டும் சரியாய் வராது தனித்து தெரிய, மீண்டும் அதை சரிசெய்ய மனமற்று அப்படியே விட்டவள், உலர்ந்திருந்த தலையை இரண்டு பின்னலிட்டு நேற்று வாங்கி வந்த மல்லிகைப் பூவை தலையில் வைத்தாள். பெரிதாய் ஆபரணங்கள் அணிய அவளுக்கு விருப்பமில்லை. எளிமையாய் கழுத்தணி ஒன்றும் காதணி ஒன்றும் அணிந்தாள். தங்க நிறத்திலே வளையலை கைகளில் புகுத்தியவள் கண்ணாடியைப் பார்க்காது கைப்பையை எடுத்தாள். மாலை அங்கே சென்று உடுத்த உடைகள் மற்றும் தேவையான இத்யாதிகளை எடுத்துக் கொண்டாள். வெளியே யுக்தாவும் தந்தையும் பேசும் சத்தம் இங்கே வரை அவளுக்கும் கேட்டது. காலையிலே புன்னகை முகமாக வந்தவனை நோகடிக்க இவளுக்கு மனம் வரவில்லை. அதிலும் இந்த சில நாட்களாக அவனின் நட்பு இவளுக்கு ஏதோவொரு ஆறுதல் அளிப்பதை மனம் உளமார உணர்ந்திருக்க, அவனிடம் கடுமையைக் காண்பிக்க இயலவில்லை.
இவள் தயாரகி வெளியே வர, “ரெடியா காயூ, கிளம்பலாமா?” என அவனும் எழுந்தான்.
அவனிடம் தலையை அசைத்தவள், “ப்பா... கரெக்ட் டைம்க்கு சாப்பிடுங்கப்பா. நான் ஃபோன் பண்ணி கேட்டுட்டே இருப்பேன். மாத்திரையை மறக்காம போடணும்!” எனக் கண்டிப்புடன் அவள் கூற, “நான் என்னைப் பாத்துக்கிறேன். நீ பத்திரமா போய்ட்டு வாம்மா...” என்றார் பெரியவர். அவரிடம் தலையை அசைத்து வெளியே சென்றாள்.
ரகுராமின் இருசக்கர வாகனத்தை இவன் எடுத்து வந்திருந்தான். “காயூ, இந்த வெயில் நடக்குறது கஷ்டம். வா, பைக்ல ரெண்டு நிமிஷம் தான். நல்ல ஃப்ரெண்டா நினைச்சிக்க. நத்திங் மோர் தன் தட்!” என அவன் மூச்சு வாங்கிப் பேசி முடியும் முன்னே காயத்ரி அவனுக்கு பின்னே ஏறியமர்ந்திருக்க, அவனது முகத்தில் அழையா விருந்தாளியாகப் புன்னகை வந்தமர்ந்தது. இருவரும் ரகுராமின் வீட்டை நோக்கி நகர்ந்தனர்.
எத்தனை நேரம் பொறுமையை இழுத்துப் பிடிக்க முடியும்? நேரத்தைப் பார்த்த தேவராஜ், “இப்போ எல்லாரும் கிளம்பி பஸ்ல ஏறப் போறீங்களா? இல்ல, விட்டுட்டு நாங்க மட்டும் கிளம்பவா? எவ்வளோ நேரம்?” என அவர் சத்தமாய் ஒரு அதட்டல் போடவும் ஐந்தே நிமிடத்தில் அனைவரும் விறுவிறுவென பேருந்தை நோக்கி நகரத் தொடங்கினர்.
“என் பொண்டாட்டிக்கு எல்லாம் நீங்கதான் மாப்பிள்ளை கரெக்டு. நாங்க சொன்னா, காதிலே வாங்க மாட்டா!” தேவராஜின் மூத்த மாமா சலித்துக் கொண்டார். இளையவர்கள் குழந்தைகள், அவ்வீட்டின் மருமகன், மருமகள்கள் என அனைவரும் பேருந்தை ஆக்கிரமித்து விட்டிருந்தனர்.
“டேய் அவி, உங்க அண்ணன் எங்கப் போனான்?” என அவனின் தாய் யுக்தாவைக் காணாது தேடினார்.
“ம்மா... டூ மினிட்ஸ்ல வந்துடுவான் மா. கடை வரைக்கும் போய்ருக்கான்!” என பொய்யைக் கூறி அந்நேரத்திற்கு மழுப்பியவன், அவனைக் காணாது ஜன்னலில் எட்டிப் பார்த்த வண்ணமிருந்தான்.
எல்லோரும் கிளம்பியதும் அனைத்து அறையிலும் ஒருமுறை நோட்டமிட்டு உறுதி செய்து கொண்ட ரகுராம் தாயை அனுப்பியவன் வீட்டின் கதவைப் பூட்டினான். அவனுக்குப் பின்னே இருச்சக்கர வாகனம் சத்தம் கேட்க, திரும்பி பார்த்தான். யுக்தாவின் பின்னிருந்த இறங்கிய காயத்ரியையும் அவனையும் சேர்த்துப் பார்த்தவனுக்கு மனம் சுர்ரென கோபம் உச்சியில் கிளர்ந்தது.
அவனுடைய இருசக்கர வாகனம், அவனுடைய காயூ. ஆம், காயத்ரி அவனுடையவள்தான். இந்த வீடு, இருசக்கர வாகனம், அவர்களது ஆஸ்தான இடம், நித்திய மல்லி செடி, மயில் மாணிக்க கொடியோடு காயத்ரி என்பவளும் அவனுடைய உடைமைதான். அப்படியிருக்கையில் அவர்கள் இருவரையும் ஒன்றாய் கண்டதும் அடிவயிற்றிலிருந்து தொண்டை வரை கோபம் படர்ந்தது. யுக்தாவைப் பார்வையாலே எரித்தான்.
அவனது கோப முகத்தைப் பார்த்த யுக்தேஷ், “ச்சு... சாரி டா மச்சான். கொஞ்சம் லேட்டாகிடுச்சு. எல்லாம் இவதான் லேட் பண்ணா. காயூவைக் கேளு நீ...” என அவன் சமாளிக்க, காயத்ரி அவனை நிமிர்ந்து பார்க்கவே இல்லை.
“யுக்தா, போகலாமா?” என இவனிடம் கேட்க, “ஷ்யூர் காயூ, வா...வா. நண்டு சிண்டுக எல்லாம் இடத்தைப் பிடிச்சிருக்கும்ங்க. நம்மளும் போய் உக்காருவோம்!” என்றவன் அவளை முன்னே விட்டு பின்னே செல்ல, ரகுராம் காயத்ரியை சில நொடிகள் வெறித்துவிட்டு வெளிக்கதவை இழுத்துப் பூட்டியபின் பேருந்தில் ஏறினான்.
முன்னிருந்த இருக்கைகளை பெரியவர்கள் ஆக்கிரமித்துக் கொள்ள, நடுவில் சிறுவர் பட்டாளமும் அதன் தாய்மார்களும் இருந்தனர். அப்படியே சில பல இருக்கைகள் தள்ளி கௌரேஷ், அவ்தேஷ் இருவரும் அமர்ந்திருக்க, “காயூ... இங்க உட்காரலாம்!” என யுக்தேஷ் அவளைக் கடைசி இருக்கைக்கு முன்னிருந்த இருக்கையில் அமர வைத்து அவளருகே அமர்ந்து கொண்டான்.
“பேக்கை கொடு, மேல வைக்கலாம்!” என அவளது கைப்பையை வாங்கி மேலே வைத்தான். ரகுராம் உள்ளே வந்தவன் அவர்கள் இருவரும் அமர்ந்திருந்த இருக்கையை நோக்கிப் போனான். யுக்தா இன்னும் அமராது மேலிருந்த பையை உள்ளே தள்ளிக் கொண்டிருக்க, “யுக்தா, நான் அவகிட்டே கொஞ்சம் பேசணும். நீ போய் வேற சீட்ல உட்காரு!” என்றான் அதட்டலாய்.
அவனைப் புருவம் சுருக்கிப் பார்த்த யுக்தேஷ், “மச்சான், உனக்கொரு நல்லதை உன் குடும்பமே சேர்ந்து செஞ்சு வைக்கிறாங்க. அதே மாதிரி எனக்கொரு நல்லது நடக்க வேணாமா? ஹம்ம், அவகிட்டே இத்தனை வருஷம் பேசாததையா இப்போ பேச போற. மூடிட்டு கடைசி சீட்ல போய் உக்கார்ந்துட்டு உன் ஆளுக்கு கால் பண்ணி கடலை போடு. யாரும் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க. இந்த சீட்டை கண்டிப்பா நான் தர மாட்டேன்!” என அவன் கேலியாய்க் கூறி இருக்கையில் பொத்தென அமர்ந்தான்.
அவனை அழுத்தத்துடன் பார்த்த ரகுராம் காயத்ரியைக் காண, அவளுக்கு இவர்களது உரையாடல் தெளிவாய் கேட்கவில்லை. அதுவும் இன்றி நேற்று அவள் இரவுப் பணி பார்த்துவிட்டு காலையில் ஒரு மணி நேரம் மட்டுமே தூங்கி எழுந்து தந்தைக்கு சமைத்து அரக்கப் பறக்க வந்ததிலே உடல் அலண்டு போயிருந்தது. விழிகள் உறக்கத்திற்கு கெஞ்ச, இமைகளை சிமிட்டி தூக்கத்தை விரட்டியடித்தவாறு பார்வையை ஜன்னலில் பதித்திருந்தாள். ரகு பின்னிருக்கைக்கு சென்று அமர்ந்தான். பேருந்து கிளம்பவும் கசகசவென பேச்சு சத்தம் கேட்கத் தொடங்கியது.
காயத்ரி முயன்று விழிகளைத் திறந்து திறந்து மூடிக் கொண்டிருந்தாள். கிளம்பும் போதே அவள் தூங்கி வழிந்தால் அதற்கும் ரகுவின் அத்தைகளின் வாயில் அவலாக அரைபடக் கூடுமென எண்ணி வெகு கவனமாய் தூக்கத்தை தூரப் போட முயன்றாள். விழிகள் சிவந்து கிடந்தன.
“தூக்கம் வந்தா தூங்கு காயூ. யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. நைட் ட்யூட்டி பார்த்தீயா?” என இருக்கைக்குப் பின்னிருந்த ரகு இவளைப் பார்த்துவிட்டு எட்டி செவியருகே மெதுவாக மென்மையாய் பேசினான். அவனைத் திரும்பிப் பார்த்தவள் சம்மதமாய் தலையை அசைத்துவிட்டு இருக்கையில் சாய்ந்து விழிகளை மூடினாள்.
“காயூ... ஒன் மினிட், இப்படியே சீட்ல தூங்குனா, உனக்கு நெக் பெயன் வந்துடும். ஐ வில் அட்ஜெஸ்ட் தி சீட்!” என்ற யுக்தா இருக்கையை அவளுக்கு ஏற்றது போல தளர்த்திவிட்டு தன்னுடைய பையிலிருந்து சிறிய சால்வையை எடுத்து அவளிடம் நீட்ட, மெல்லிய முறுவலுடன் அதைப் போர்த்திக்கொண்டு உறங்கத் தொடங்கினாள். சில பல நிமிடங்களிலே அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல, யுக்தா அவளை ஆதுரமாகப் பார்த்திருந்தான். அவனது செயல்களையே அவதானித்த ராகுவிற்கு கோபம் கட்டுக்கடங்காது பெருகி வழிந்தது. இருக்கும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அமைதி காத்தான்.
திறந்திருந்த ஜன்னல் வழியாக வெப்ப காற்று முகத்தில் பட, அவள் முகத்தை சுளித்தாள். வெயில் வேறு உள்ளே நுழைந்து குளிரூட்டியின் குளிரைக் குறைத்தது. யுக்தா எழுந்து அவள் மீது கை படாதவாறு நின்று பேருந்து ஜன்னலின் கதவை இழுத்து அடைத்துவிட்டு அமர்ந்தவன், அவளுக்குப் போர்வையை ஒழுங்காகப் போர்த்தி விட கையைக் கொண்டு செல்ல, ரகுராம் அவன் கையைப் பின்னிருந்து பிடித்தான்.
“என்ன பண்ண போற யுக்தா?” அவன் கேட்க, இவனது முகத்தில் அப்பட்டமாய் எரிச்சல் படர்ந்தது.
“நீ எதுக்கு இப்போ எங்களையே நோட்டம் விட்டுட்டு இருக்க மச்சான்?” என மெல்லிய குரலில் கடுப்பாக பேசியவன் எழுந்து சென்று அவனருகே அமர்ந்தான்.
“இப்போ எதுக்கு நீ அவகிட்டே இவ்வளோ அட்வாண்டேஜ் எடுத்துக்குற. எனக்கு சுத்தமா பிடிக்கலை அது!” ரகு முகத்தில் அடித்தது போல கூற, அவனை யோசனையாகப் பார்த்தான் மற்றவன்.
“லூசாடா நீ? அவ உனக்கு மட்டும் ஃப்ரெண்ட் இல்ல. எனக்கும் ப்ரெண்ட தான். அவ மேல எனக்கும் அக்கறை சரக்கரை எல்லாம் இருக்கு. பெட்ஷிட் விலகுச்சேன்னு சரி பண்ண போனேன். அதுல என்ன தப்பைக் கண்ட நீ?” என இவன் கடுகடுத்தான்.
“ப்ம்ச்... நான் இதை மட்டும் சொல்லலை. அவளோட நீ க்ளோஸ் ஆக ட்ரை பண்றது எனக்குப் பிடிக்கலை யுக்தா. ஸ்டே வித்தின் யுவர் லிமிட்ஸ்!” என்றவனை உறுத்து விழித்தவன், “நீ அவளுக்குப் ஃப்ரெண்ட். அவ்வளோ தான். எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு. சோ பழகுறேன்!” என்றான் அழுத்தமாய்.
“வாட் டூ யூ மீன்?” ரகுவிற்கு ரத்த அழுத்தம் எகிறியது.
“ஐ மீன் இட். ஐ லவ் ஹெர். ஐ லவ் ஹெர் ட்ரூலி. அதனாலதான் ஐ வாண்ட் டூ நோ அபவுட் ஹெர் இன் அண்ட் அவுட். அவளை இம்ப்ரெஸ் பண்ண ட்ரை பண்றேன்!” என்றான் தலையைக் கோதி.
“செருப்பு பிஞ்சிடும். இதை நான் சொல்லலை. அவளே சொல்லுவா. உன் விளையாட்டெல்லாம் அவகிட்டே வச்சுக்காத டா. அவ ஏதோ மைண்ட் அப்செட்டா இருக்கவும் உன்னைப் பக்கத்துல விட்டு வச்சிருக்கா. இல்லைன்னா லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிடுவா!” என்றான் பல்லை நறநறத்து.
“வாட் எவர், அதை அவ சொல்லட்டும் டா. நான் என்னோட விருப்பத்தை ஜென்யூனா அவகிட்டே சொல்லுவேன். அவளுக்கு என்னைப் பிடிக்கலைன்னு அவ வாய்ல இருந்து சொல்லட்டும். நீ அவளுக்கு ஃப்ரெண்ட் மட்டும்தான். அவளோட லைஃப்ல என்ன முடிவெடுக்கணும்னு நீ டிசைட் பண்ணாத. தட் இஸ் நன் ஆஃப் யுவர் பிஸ்னஸ். எனக்கும் அவளுக்கும் இடையில வராத டா. எனக்கு எரிச்சலாகுது. கடைசி வரை அவ சிங்கிளாவே இருக்கணும்னு நினைக்குறீயா?” எனக் கடுப்புடன் கேட்டுவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் முன்னே வந்து அமர்ந்து கொண்டான். ரகு அவனை அமைதியாகப் பார்த்தான்.