• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,091
Reaction score
3,124
Points
113
இஷ்டம் – 7 💖
அரைமணி நேரத்தில் சைந்தவியின் குடும்பம் வந்திறங்கியது. மகிழ்வேந்தேன் மட்டும் ஆண்துணைக்காக வந்திருக்க, மற்ற அனைத்தும் பெண்கள் கூட்டம்தான். ஷிவதுளசி, ரித்விக், சைந்தவி, சாம்பவி, அவளுடைய குழந்தைகள், தீக்ஷிதா, அவளுடைய மகள் மற்றும் மகன் என சிறிய பட்டாளமே வந்திருந்தனர்.
“நம்பதான் ஒரு ஊரை திரட்டிட்டு வந்திருக்கோம்னு பார்த்தா, உன் மாமியார் வீடு ரெண்டு ஊரா இருக்காங்களே டி?” சாம்பவி தங்கை காதைக் கடிக்க, அவளும் வந்திருக்கும் கூட்டத்தை தான் அயர்ந்து பார்த்தாள்.
“என் மாமியார் ஒருத்தரை சமாளிக்கவே நான் நாலு வேளை சாப்பிட்றேன் டி. நீ ஹேண்டில் பண்ணிடுவீயா?” சாம்பவி கேட்க, “பார்த்துக்கலாம் கா!” என சைந்தவி தோள் குலுக்கலில் தட்டிவிட்டாள். ரகுராம் எழுந்து வந்து அனைவரையும் வரவேற்றவன், சைந்தவியை அறிமுகம் செய்தான்.
“புடிச்சாலும் புளியங்கொம்பாதான் டி நம்ப அண்ணன் புடிச்சிருக்காரு. மினிஸ்டர் வீடுன்னா சும்மாவா?” என மூத்த நாத்தனார் அங்கலாய்த்தார். சைந்தவி நடுவில் அமர, வலதுபுறம் இடது புறம் என இருபக்கமும் மாப்பிள்ளை, பெண் வீட்டார் ஆக்கிரமித்தனர். கௌதமிக்கு கடைசி இருக்கையே வழங்கப்பட்டது. அதை அவர் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. சைந்தவிக்கு எரிச்சல்தான். ஆனாலும் காண்பித்துக் கொள்ள முடியவில்லை. அவள் எடுக்கும் சேலையின் நிறம் சரியில்லை, அது இதுவென ஒவ்வொன்றாய் இரண்டு நாத்தனார்களும், அவரது பிள்ளைகளும் தட்டிக் கழிக்க, அவளுக்குக் கோபம் வந்தது.
கடைசியாய் ஒரு மயில் வண்ண புடவையை தேர்ந்தெடுத்தவள், “இது ஓகேம்மா. எனக்கு இதான் பிடிச்சிருக்கு. கட்டப் போறது நான்தானே, இதையே பில் போட சொல்லுங்க!” பட்டென அவள் கூறிவிட, மற்றவர்களால் பேச முடியவில்லை. ரகுராமிற்கும் நிச்சயதார்த்தம், வரவேற்பு, திருமணம் என அனைத்திற்கும் உடையை தேர்வு செய்து கொண்டிருந்தனர்.
காயத்ரி கையிலிருந்த இரண்டு வயது குழந்தையைக் கொஞ்சிக் கொண்டே சுற்றி இருப்பவற்றை விளையாட்டு காட்டினாள். அந்தக் குழந்தையின் தாய் கழிவறை சென்று வரும்வரை அவளைப் பார்த்துக்கச் சொல்லி கொடுத்துவிட்டு சென்றார்.
“ஹாய்!” என்ற குரலில் காயத்ரி நிமிர்ந்து பார்க்க, யுக்தேஷ் நின்றிருந்தான். அவனை நெற்றி சுருங்கப் பார்த்தாள் பெண்.
“நான் யுக்தா, ரகுவோட கசின். உங்க கிட்டே சின்னதா எனக்கொரு ஹெல்ப் வேணும்!” என அவன் தொடங்க, “என்ன ஹெல்ப்?” எனக் கேட்டாள் இவள். யுக்தேஷ் மனநல மருத்துவத்தின் இறுதி ஆண்டிலிருந்தான்.
“என்னோட ஃபைனல் தீஸீஸ் சப்மிட் பண்ணும்போது ட்வென்டி ஓன் மெம்ரஸோட டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணி ப்ராஜெக்ட்ல ஆட் பண்ணி இருக்கணும். இருபது பேர் கிடைச்சாச்சு. அந்த கடைசி ஆள் நீங்களா இருக்கலாம்னு என்ககொரு எண்ணம்?” என அவன் இழுக்க,
“ஏன்? உங்களுக்கு வேற ஆளே கிடைக்கலையா? நீங்க ப்ளர்ட் பண்றதுக்கு நான் ஆளாக முடியாது. சாரி!” ஏற்கனவே பெரியவர்களின் மீது கோபத்தில் இருந்தவள் வார்த்தைகள் சுள்ளென வந்தன. குழந்தையின் தாய் வந்துவிடவும் அவரிடம் அவளை ஒப்படைத்துவிட்டு இவன் புறம் திரும்பினாள். இவளது பேச்சில் அவன் முகம் வாடியிருந்தது.
காயத்ரிக்கு கொஞ்சம் வருத்தமாகப் போய்விட்டது. “சாரி யுக்தேஷ், நான் நீங்க நினைக்கிற மாதிரி இல்ல? அதானல வேற யார்கிட்டேயும் ஹெல்ப் கேளுங்க!” என்றாள் கொஞ்சம் தன்மையான குரலில்.
“யெஸ் அப்கோர்ஸ் நீங்க நான் நினைக்கிற மாதிரி இல்ல. அதனால தான் நான் உங்களை என் ப்ராஜெக்ட்க்கு செலக்ட் பண்ணேன். உங்ககிட்டே ஒரு ஸ்ட்ராங்க் பெர்சன் இருக்கது போல சாஃப்டான பக்கமும் இருக்குன்னு தோணுது. முகத்துல சிரிப்பு இருந்தாலும் கண்ல ஏதோ ஒரு சோகம் இருக்கோன்னு என் டாக்டர் மூளை கேட்குது. என்னமோ தெரியலை, உங்களை செலக்ட் பண்ண தோணுச்சு. நாட் பிகாஸ் நீங்க அழகா இருக்கீங்கன்னு நான் வழிஞ்சிட்டோ, ப்ளர்ட் பண்ணவோ வரலை‌. உங்களுக்கு முன்னாடி நிறையா அழகான பொண்ணுங்களை பார்த்தவன் நான். எனக்குமே ஸ்டாக்கிங் பிடிக்காது!” எனப் பேசிக் கொண்டே அலைபேசியை எடுத்தவன், “இதுதான் என் ப்ராஜெக்ட் ஃபார்ம். இதைதான் நீங்க பில்லப் பண்ணி தரணும். ஒரு ப்ரெண்டா ஆர் டாக்டரா உங்களுக்கு ஹெல்ப் பண்ண தோணுது. சோ, ஃபைனல் டிசிஷஸ் இஸ் யுவர்ஸ்!” என அவன் கைகளை முன்னே நீட்ட, காய்த்ரி அவனை உறுத்து விழித்தாள். ஆனாலும் கைகள் முன்னே நீளவில்லை.
“ஏங்க, தம் கட்டிப் பேசியிருக்கேன். எதுவுமே சொல்லலைன்னா என்னங்க அர்த்தம்?” என இவன் கேட்க, “பார்த்த ரெண்டு நிமிஷத்துல என் பெர்சனலை ஷேர் பண்ணிக்கிற அளவுக்கு நீங்க எனக்கு க்ளோஸூம் இல்ல, உங்க ப்ராஜெக்ட்க்கு ஹெல்ப் பண்ண எனக்கு டைமும் இல்லை. அண்ட் தேங்க் யூ ஃபார் யுவர் கன்சர்ன். என்னை எனக்குப் பார்த்துக்க தெரியும். அப்படியே முடியலைனாலும், நல்ல டாக்டரா நானே கன்சல்ட் பண்ணிக்கிறேன்!” என்றுவிட்டு அவள் விறுவிறுவென முன்னே நடக்க, யுக்தேஷ் முகத்தில் புன்னகை அரும்பிற்று. தலையைக் கோதியவன் அவளுடனே நடந்தான்.
“அப்போ ரொம்ப கஷ்டம் உங்க ஃப்ரெண்ட்ஷிப் கிடைக்க. நான் அன்லக்கி போல?” என்றவனை ஓரக்கண்ணால் காயத்ரி முறைத்தாள்.
“அழகு, அறிவு இருந்தா திமிரும் கூடவே இருக்கும் போல யுக்தா!” என அவன் முணுமுணுப்பு இவளுக்கும் கேட்டது. ஒரு நொடி நின்ற காயூவின் முகத்தில் யோசனைக் கோடுகள் விரவின.
“ராமோட கசின்னுதானே சொன்னீங்க?” என இவள் யோசிக்க, “யெஸ், யெஸ்...” என்றான் அவன் ஆர்வமாய்.
“ஓகே, என்னால முடிஞ்சா உங்க ப்ராஜெக்ட்க்கு ஹெல்ப் பண்றேன். பட், முடியலைன்னா, டோன்ட் திங்க் எனிதிங்க் பேட்!” என்றாள்.
“ஷ்யூர்... ஷ்யூர்!” என அவன் ஆமோதித்தவன், “உங்க ஃபோன் நம்பர்ங்க!” என்றான். அவள் சந்தேகமாகப் பார்க்க, “நோ... தப்பா யோசிக்காதீங்க. ஜஸ்ட் பார்ம் ஷேர் பண்ண, டீடெயில்ஸ் கேட்கத்தான் வாங்குறேன்!” அவசரமாய் அவன் இடைபுக, தலையை அசைத்தவள் தன்னுடைய இலக்கத்தைப் பகிர்ந்தாள்.
“டோன்ட் டேக் டூ மச் அட்வாண்டேஜ். எனக்குப் பிடிக்கலைன்னா, ப்ளாக் பண்ண தயங்க மாட்டேன்!” என இவள் அழுத்தமாய்க் கூற, “காயூ, ராம் உங்களுக்கு நல்ல ஃப்ரெண்ட் தானே?” எனக் கேட்க, சில நொடிகள் மௌனமாய் இருந்தவள், ஆமோதிப்பாய் தலையை அசைத்தாள்.
“லைக் ஹிம், நானும் உங்களுக்கு ஒரு நல்ல ஃப்ரெண்ட். ராம் மாதிரி இருப்பேன். தப்பான எண்ணமில்லை எனக்கு!” என இலகுவாக அவன் பதிலளித்தான்.
“டோன்ட் கம்பேர் யுவர் செல்ஃப் வித் ராம். என்னோட ராம் இடத்தை ரீப்ளேஸ் பண்ண முடியாது!” என்றவளின் பார்வை ரகுராமைத் தொட்டது.
“ஓ...” என்ற யுக்தேஷின் குரலில் பொறாமை வெளிப்பட்டதோ.
“நோ ப்ராப்ளம், நானும் யாரையும் ரிப்ளேஸ் பண்ண போறதில்லை. ஏதோ உங்களைப் பார்த்ததும் ஃப்ரெண்டா இருக்கணும்னு தோணுச்சு. அவ்வளோதான்!” என அவன் தோளைக் குலுக்க, “குட், அதான் உங்களுக்கும் எனக்கும் நல்லது!” என புன்னகையுடன் அவள் நடக்க, ரகு அவர்களைக் கண்டுவிட்டு யோசனையாக முகத்தை சுருக்கினான்.
அவர்கள் அருகே சென்றவன், “இவ்வளோ நேரம் க்ரவுண்ட் ப்ளோர்ல என்ன பண்ண காயூ?” எனக் கடிந்து அவளது கையைப் பிடித்து இழுத்துச் சென்றான். அனைவரது பார்வையும் இவர்களிடம் குவிய, மெதுவாய் தன் விரல்களை உருவிக் கொண்டாள்.
“காயூ, இந்த சேரி ஓகேவான்னு பாரு. உனக்கு செட்டாகும்னு ராம் செலக்ட் பண்ணான்!” என கௌதமி அவளிடம் புடவையைக் காண்பிக்க, “ஓகேம்மா!” என்றாள் அதை தொடாது.
“சும்மா ஓகே சொல்லாதடி... உனக்குப் பிடிச்சிருக்கா?” என்ற ராம் அவளது தோளைத் தொட்டு அருகே திருப்ப, இவளுக்கு எரிச்சலாக இருந்தது. இதற்கும் அந்த பெரிய பெண்மணிகள் எதாவது கூறக் கூடுமென எண்ணி அவர்களைப் பார்க்க, இவளைத்தான் அரைத்துக் கொண்டிருந்தனர்.

ரகுவின் கையை மெதுவாக விலக்கியவள், “நல்லா இருக்கு டா. நீ செலக்ட் பண்ணது நல்லா இல்லாம போகுமா? டைமாச்சுல்ல. எல்லாருக்கும் எடுத்தாச்சா?” எனப் பேச்சை மாற்றினாள். அனைவருக்கும் உடைகள் எடுத்து முடிந்து மதிய உணவை மூன்று மணிக்கு முடித்துவிட்டு அவரவர் வீட்டிற்கு கிளம்பினர்.
உணவு உண்ணும் போது யுக்தேஷ் காயத்ரியின் அருகே இடம்பிடித்து அமர்ந்தான். அவள் பெரிதாய்க் கண்டு கொள்ளவில்லை. ஆனால் அவளுக்கு எதிர்புறமாக அமர்ந்திருந்த யுக்தேஷின் தாயார் இவளை முறைக்க, அவரை வெறுப்பேற்ற வேண்டும் என்றே, “யுக்தா, ட்ரை திஸ்!” என அவனுடன் சிரித்துப் பேச, அவன் யார் சுற்றியிருக்கிறார்கள் என்பதையெல்லாம் மறந்து அவள் கூறிய உணவை மொத்தமாய் உண்டு முடித்திருந்தான். இடையிடையே இருவரும் சிரித்துப் பேச, அவனின் தாயார் முகம் அஷ்டக் கோணலாக மாறியது. அதைப் பார்த்து இவள் திருப்திப்பட்டுக் கொண்டாள்.
“அறிவில்லையாடா உனக்கு? அவகிட்டே உனக்கென்ன பேச்சு? சிரிச்சு சிரிச்சு பேசுற?” என இவள் காதுபடவே அவர் மகனைத் தனியாய் அழைத்து திட்ட, அவர்கள் அருகே சென்றவள், “யுக்தா, நான் வரேன். என் நம்பர் இருக்குல்ல, மெசேஜ் போடுங்க. ஃப்ரியா இருக்கும்போது பேசலாம்!” என்று அவன் தாயைக் கவனிக்காதது போல அலட்டிக்காது நகர்ந்த காயத்ரிக்கு மனம் அப்போதுதான் சாந்தமடைந்திருந்தது. தன்னுடைய பேச்சில் அப்பெண்மணி திகைத்து நின்றதைக் கண்டு உதடுகளில் புன்னகை ஏறியது. நடந்து வந்து கௌதமியோடு இணைந்து கொண்டாள்.
“பத்திரமா போங்க அத்தை, பாய் சைந்து, பாய் அண்ணி, அண்ணா!” என அனைவரையும் உறவு முறை வைத்து அழைத்து இயல்பாய் பேசி வழியனுப்பிய ரகுராமை மொத்தக் குடும்பத்திற்கும் வெகுவாய் பிடித்துப் போனது.
இவனது அத்தைக் குடும்பம் மகிழுந்தில் புறப்பட, இவனும் காயத்ரி மற்றும் தாயுடன் செல்ல ஆயத்தமானான். யுக்தேஷ் இவனது வாகனத்தின் அருகே வந்து பின்பக்கமாய் குனிந்து, “டேக் கேர் காயூ, ஐ வில் டெக்ஸ்ட் யூ!” என அவன் கூற, “ஷ்யூர் யுக்தா!” என தலையை அசைத்துப் புன்னகைத்தாள் அவள். ரகுராம் இதை யோசனையுடன் பார்த்தான். காயத்ரி ரகுவிடம் இத்தனை இலகுவாக நட்பு பாராட்டுகிறாளே என அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதுவும் சந்தித்த முதல்நாளே அலைபேசி இலக்கத்தைப் பாகிரும் அளவிற்கு என்ன நெருக்கம் என மனதில் மெல்லிய பொறாமை எழுந்தது.
மகிழுந்தை இயக்கியவன், “காயூ, என்ன டெக்ஸ்ட், எதுக்கு கால் பண்றேன்னு யுக்தா சொன்னான்?” என முன்புற கண்ணாடி வழியே அவள் முகத்தைப் பார்த்து வினவினான்.

அவனை உறுத்து விழித்தவள், “அதைத் தெரிஞ்சு நீ என்ன பண்ண போற? தட்ஸ் நன் ஆஃப் யுவர் பிஸ்னஸ்!” வெடுக்கென பதிலளித்தவள், கௌதமியின் தோளில் சாய்ந்து கொண்டாள். உடலும் உள்ளமும் சோர்ந்து போயிருந்தது. மனம் பாரமேறி அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டிருந்தது. எதுவும் என்னைப் பாதிக்கவில்லை என்றொரு எண்ணத்தைப் புகுத்தினாலும் அனைத்தும் பாதித்ததுதான். யாரிடமும் சொல்லி அழ முடியாத தன்னிரக்கத்தில் இயல்பாய் மனம் தாய் மடியைத் தேடியது. கண்களை மூடிக் கொண்டாள்.
“ஓஹோ... தட்ஸ் நன் ஆஃப் மை பிஸ்னஸா?” என அவன் சூடாய்க் கேட்க, “யெஸ் அப்கோர்ஸ்!” என விழிகளைத் திறக்காமல் பதிலளித்தாள் பெண்.
“ராம்... வழியைப் பார்த்து வண்டியை ஓட்டுடா. அவங்க ரெண்டு பேரும் என்ன பேசுனா உனக்கென்ன? அவளோட தனிப்பட்ட இடத்துலே நீ தலையிடாத!” என்ற கௌதமி இவளது தலையை வாஞ்சையுடன் கோத, காயத்ரிக்கு விழிகள் கலங்கின. அவரை நிமிர்ந்து சங்கடமாய் பார்த்தாள்.
“காயூ, நான் எதுவும் நினைக்கலை டா. நீ சரியாத்தான் சொல்ற. எல்லாருக்கும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு இருக்கும். ப்ரெண்ட்னாலும் அதுல தலையிட உரிமை கிடையாது!” என அவர் கூற, இவள் முறுவலுடன் தலையை அசைத்தாள். ராம் அவர்கள் இருவரையும் முறைத்தான்.
“காயூ... உனக்கு எடுத்த புடவையை நீ பார்க்கவே இல்லையே டா!” என்ற கௌதமி ஆசையாய் இரண்டு புடவையையும் எடுத்து விரித்துக் காண்பித்தார்.
“ரொம்ப அழகா இருக்கும்மா!” என்றவளின் விரல்கள் அந்தப் புடவையைத் தடவின. அப்படியே திருப்பி விலையைப் பார்த்தவள் அதிர்ந்தாள். சில பல ஆயிரங்களை விழுங்கியிருந்தது அது.
“ம்மா... கல்யாணத்துல வந்து ஒரு ஓரமா நின்னுட்டு போற எனக்கு எதுக்கு இவ்வளோ விலைல சேலை எடுத்தீங்க?” என இவள் அவரை முறைத்தாள்.
“நல்ல கதையால்ல இருக்கு மா, ஓரமா நின்னுட்டு போவீயா? நாத்தனார் முடிச்சே நீதான் போடப் போற!” என அவர் கூறியதும், காயத்ரி அதிர்ந்து அவரைப் பார்த்தாள். காதல் கொண்ட இதயம் நொடியில் துடித்துப் போனது.
“ம்மா... நோ, அதெல்லாம் வேணாம்மா. ராம்க்கு உங்க சொந்ததுல யாரையாவது நாத்தனார் முடிச்சை போட சொல்லுங்க. நான் எதுக்கு, அவனோட அத்தைங்களுக்குப் புடிக்காது. அப்பா எதாவது சொல்லிடப் போறாரு!” என வேக வேகமாக மறுப்பை தெரிவித்தாள்.
“காயூம்மா... அவங்க அப்பாவை நான் சமாளிச்சுக்கிறேன். அதெல்லாம் என் நாத்தனாருங்களை அவர் பேசி வாயை அடைச்சுடுவாரு. நீதான் நாத்தனார் முடிச்சைப் போடணும்!” அவர் உறுதியாய் கூறினார்.
“ம்மா... இல்லைமா, அது நல்லா இருக்காது!” என்றாள் இழுத்துப் பிடித்த பொறுமையுடன்.
“காயூ, என் மகன் நல்லா இருக்கணும்னு நினைக்குறவங்கதான் நாத்தனார் முடிச்சை போடணும்னு நான் ஆசைப்படுறேன் டா. நீ எனக்குப் பொண்ணு இல்லாத குறையை தீர்த்து வச்சவ. அப்போ நீதான் போடணும்!” பெரியவர் கூற, “ம்மா... என்னால முடியாதுன்னா, முடியாதுதான். வேற யாரையும் பாருங்க. கம்பெல் பண்ணாதீங்க!” என சுள்ளென கூறியவள் முகத்தை கண்ணாடியின் புறம் திரும்பினாள். எப்போது வெளிய வர என்று கண்ணீர் உருண்டு திரண்டு நின்று சதி செய்தது.
அவளது பேச்சில் கௌதமியின் முகம் வாடிவிட, “காயூ... அம்மாகிட்டே இப்படித்தான் பேசுவீயா?” என ராம் அவளை அதட்டினான். அவன் புறம் திரும்பவில்லை பெண்.
“ம்மா... அப்படியொன்னும் அவ கஷ்டப்பட்டு செய்ய வேணாம். வேற யாராவது போடட்டும்!” இவனும் வெடுக்கென கூற, “டேய்... நீ அமைதியா இரு. உங்க அத்தைகளுக்கு பயந்துதான் காயூ வேணாம்னு சொல்றா. அதெப்படி மேடைல வச்சு போட மாட்டேன்னு சொல்லுவான்னு பார்க்குறேன். நான் வளர்த்தப் புள்ளை டா!” என அவளது கையைப் பெரியவர் பிடிக்க, இவளுக்கு அழுகை வரும் போலானது.
‘கடவுளே... இன்னும் என்னென்ன மிச்சம் வச்சிருக்கீங்க. மொத்தமா குடுத்தா செத்துட்டுப் போறேன். கொஞ்சம் கொஞ்சமா குடுத்து சாகடிக்காதீங்க!’ மனம் அரற்றியது. கண்களை மூடி அப்படியே படுத்துவிட்டாள். அதோ இதோவென இரவு எட்டு மணியைத் தொட்டதும் இவர்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
ரகு காயத்ரியின் வீட்டிற்கு செல்லாது இங்கே வந்திருந்தான். அதைக் கவனித்தவள் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, கைப்பையை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினாள்.
“காயத்ரி, உள்ளே வந்துட்டுப் போம்மா... சாப்பிட்ற நேரம் வந்துடுச்சு. வா, வந்து சாப்ட்டு போ!” என்ற கௌதமி அவர் கையைப் பிடித்து அழைக்க, “ம்மா... அப்பா வெயிட் பண்ணுவார் மா. மதியத்துக்கு மட்டும்தான் குக் பண்ணி வச்சேன். நைட் அவருக்கு டைம்க்கு சாப்பாடு, சுகர் மாத்திரை கொடுக்கணும்மா. நான் இன்னொரு நாள் வரேன்!” என்றாள் மறுக்க முடியாத குரலில்.
“என்னம்மோ போம்மா... வீட்டு வாசல் வரை வந்துட்டு உள்ள வர மாட்ற!” என அவர் அலுத்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார்.
“இப்போ வீட்டுக்குள்ள வர்றதுல உனக்கென்ன பிரச்சனை. அம்மா கூப்பிட்றாங்க இல்ல, ரெண்டு நிமிஷம் உள்ள வந்துட்டுப் போனா குறைஞ்சு போய்டுவீயா காயூ?” ராம் கடித்தப் பற்களிடையே கேட்க, அவனை சலனமில்லாமல் பார்த்தவள், “எல்லாரும் உன் இஷ்டத்துக்கே ஆடணும்னு நினைக்காத ராம். ஆன்ட்டி சொன்ன மாதிரி எனக்கும் பெர்சனல் இருக்கும். ஓரளவுக்கு மேல அதுல தலையிட என் அப்பாவாவே இருந்தாலும் நான் அலோவ் பண்ண மாட்டேன்!” என்றாள் அழுத்தமாய்.
அதில் கோபம் வரப் பெற்றவன், “என்னடி அப்போல இருந்து பெர்சனல் பெர்சனல்னு சொல்லி இருக்க? நமக்குள்ள எங்க எப்போ இந்த பெர்சனல் நுழைஞ்சது காயூ?” எனக் கேட்டு அவளதுக் கையைப் பிடித்தழுத்தினான் கோபத்தில்.
“ராம், இன்னும் நீ சின்ன புள்ளை இல்ல? பொது இடத்துல எப்படி நடந்துக்கணும்னு பழகு. தொட்டுப் பேசுறது, கையைப் பிடிச்சு இழுக்குறதெல்லாம் நல்லா இருக்கா. உன்னை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. என்னைத்தான் பேசுவாங்க. கண்டவங்ககிட்டே பேச்சு வாங்கணும்னு எனக்கு எந்தவொரு அவசியமும் இல்ல. சோ, கீப் டிஸ்டன்ஸ்!” என்றவளின் குரலில் அவனது புருவங்கள் இடுங்கின.
“யார் என்ன சொன்னா உன்னை?” என அவன் அழுத்திக் கேட்டான்.
அவனை உறுத்து விழித்தவள், “உங்கம்மா என்னதான் என்னைப் பொண்ணு மாதிரி பொண்ணு மாதிரின்னு சொன்னாலும் உங்க குடும்பத்துல நான் என்னைக்கும் ஒருத்தியாக முடியாது ராம். நீங்க வேற, நாங்க வேற.‌ உனக்கு நான் முக்கியமா இருக்கலாம். உன்னை மாதிரியே உங்க அத்தைங்க எனக்கு இம்பார்டென்ஸ் கொடுக்கணும்னு நான் எதிர்பார்க்க மாட்டேன். அது முட்டாள்தனம், இன்னைக்கு நான் வர மாட்டேன்னு சொன்னதுக்கு காரணமே உங்க ஃபேமிலி மெம்மர்ஸைப் பத்தி தெரிஞ்சனாலதான். அவங்க சொன்னதுல தப்பு இருக்கதா தெரியலை ராம். ப்ரெண்டுனா கல்யாணத்துக்கு வந்தோமா, வாழ்த்திட்டு கிஃப்ட் கொடுத்துட்டு சாப்ட்டு போறதுதானே முறை. அதைதான் உங்க அத்தை ரொம்ப நாகரீகமா சொன்னாங்க!” என்றாள் அவன் முகத்தைக் கூர்ந்து பார்த்து.
“ப்ம்ச்... இதெல்லாம் அங்கேயே சொல்ல வேண்டியதுதானே டி. என் அத்தையாவே இருந்தாலும் உன்னைப் பேச விட்டு வேடிக்கைப் பார்ப்பேனா நான்? அம்மா இல்லையா அங்க?” என அவன் கோபமாய் கேட்டான்.
அவனை அமைதியாய் பார்த்தவள், “ஏன் இல்ல, அவங்க இருந்தாங்க. நாத்தனாரா? இல்லை நானான்னு யோசிச்சா அவங்களுக்கு நாத்தனார்தான் முக்கியம். அதான் நியாயமும் கூட. ஏன் உன்கிட்ட சொல்லி, தேவையில்லாத பிரச்சனையாக்கணும்னு தான் சொல்லலை. அதுவும் இல்லாம என்னைக் கூட்டீட்டுப் போனது நீதானே.‌ நான் என்ன பண்றேன், யார்கூட பேசுறேன்னு பார்த்துக்க வேண்டியது உன் பொறுப்பு. நீ உன்னோட கசின்ஸைப் பார்த்ததும் கூட வந்தவளை மறந்துட்ட. அதான் கிடைச்ச கேப்ல உன் அத்தைங்க நல்ல மரியாதையா பேசிட்டாங்க!” என்றாள் அவனைக் குற்றம்சாட்டும் குரலில். உண்மையிலே இப்படியெல்லாம் நடக்கும் என ரகுராம் எதிர்பார்த்திருக்கவில்லை. அத்தைகளின் மீது கோபமாய் வந்தது. அதைவிட அவள் கூறுவது போல தானும் பொறுப்பற்று நடந்து கொண்டோம் என மனம் குற்றம் சாட்ட, “சாரி காயூ... சாரி. நான், நான்தான் தப்பு பண்ணிட்டேன். கூட்டீட்டு போன உன்னை நான்தான் கவனிச்சிருக்கணும்!” என்றான் தவறிழைத்த பாவனையில்.
“இட்ஸ் ஓகே ராம், நான் உன்னைக் குத்தமா சொல்லலை. இனிமே என்னை எங்கேயும் கூப்பிடாத. எங்கேஜ்மெண்ட்க்கு, கல்யாணத்துக்கும் நீ கூப்பிடலைனாலும் உனக்காக வந்து வாழ்த்திட்டுப் போறேன். வேற எதுக்கும் என்னைக் கூப்பிடாத. இதை சொல்றதுக்குத்தான் நடந்ததை உன்கிட்ட ஷேர் பண்ணேன்.‌ எனக்காக உங்க அத்தைங்க கிட்டே நீ எந்த சண்டையும் போட கூடாது. என்னால உன் கல்யாணத்துல எந்த தடையும் வரக்கூடாது ராம். எங்கேஜ்மெண்ட்ல மீட் பண்ணலாம் டா. நான் இப்போ கிளம்புறேன்!” என சோபையாய்ப் புன்னகைத்தவள் இரண்டு எட்டுகள் வைத்தாள்.
“சாரி டி‌... ஐ யம் எக்ஸ்ட்ரீம்லி சாரி காயூ. நான் வேணும்னு எதுவுமே பண்ணலை டி!” என அவள் முன்னே மறித்தது போல நின்ற ராம் மீண்டும் மன்னிப்பை யாசித்தான். தாய் முகத்தைப் பார்த்து நிற்கும் குழந்தை போல நின்றவனைப் பார்த்த காயத்ரி,
“ப்ம்ச்... லூசா டா. விடு நீ. எதுக்கு இத்தனை சாரி. எனக்கு கோபம் எல்லா நீ புரிஞ்சுக்க மாட்றேன்னுதான். மத்தபடி உன் அத்தைங்க பேச்சை எல்லாம் நான் கண்டுக்குற ஆளா. விடு, நீ உள்ள போ!” என்றுவிட்டு நடந்தாள்.
“சரி வா, நானே உன்னை ட்ராப் பண்றேன். இப்பவே மணி எட்டரையாச்சு காயூ!” என அவன் கூற,
“நோ நீட் ராம். பத்து நிமிஷத்துல நடந்து போய்டுவேன். நைட் ட்யூட்டி எல்லாம் பார்த்துட்டு லேட் நைட்டே வந்திருக்கேன் டா. மணி ஒன்பது கூட ஆகலைல. நான் தனியா போய்டுவேன். என்னைப் பத்திக் கவலைப்படாத!” என்றாள்.
“காயூ, அடம்பிடிக்காம வா. நான் பைக்ல ட்ராப் பண்றேன். தனியா போனா சேஃப்டி இல்லடி?” என்றவனை ஆழ்ந்து பார்த்தவள், “எத்தனை நாள் என்கூட இப்படி துணைக்கு வருவ ராம்?” என அதிராமல் கேட்டாள். அவன் அவளைப் புரியாது நோக்கினான்.
“இப்போ வருவ சரி, காலம் முழுக்க வர முடியுமா? காலம் முழுக்க நான் சேஃப்டியா போய்டேனான்னு செக் பண்ணிட்டு இருப்பீயா என்ன? முடியாதில்ல? மூடிட்டு நீ கிளம்பு. என்னை எனக்குப் பார்த்துக்க தெரியும். நீ உன் ஃபேமிலியைக் கேர் பண்ணிக்கோ ராம். இன்னைக்கு நீ வந்துட்டன்னு நாளைக்கும் மனசு எதிர்பார்க்கும். அப்புறம் உன் பொண்டாட்டிக்கும் உனக்கும் சண்டை வர நான் காரணமா இருக்க மாட்டேன். உன் வேலையை நீ பாரு!” என்றவளை என்ன செய்தால் தகும் என்பது போல பார்த்தான்.
“ஏய்... அறிவே இல்லையாடி உனக்கு. இன்னைக்கு மட்டும் இல்ல, நான் சாகும்வரைக்கும் உன்னைக் கேர் பண்ணிப்பேன். நீ என்னோட காயூ. என்னைத் தவிர யாராலயும் உன்னைப் புரிஞ்சுக்க முடியாதுன்னு நினைச்சிட்டு இருந்தேன் டி. ஆனால் இப்போ நீ பேசுறதுல எரிச்சலாகி கோபத்துல கை நீட்டிடுவேன் போல?” என்றவனைக் கோபமாய் நோக்கியவள், “பொண்டாட்டி வந்துட்டா ஃப்ரெண்டெல்லாம் எம்மாத்திரம். கோபம் வரும், அடிக்க கூட தோணும்ல ராம்?” என்றாள் இடறிய குரலை சரி செய்து.

தான் பேசுவது அதிகப்படி எனத் தெரிந்தாலும் காய்தரிக்கு வேறு வழி தெரியவில்லை. இவனிடம் இப்படி பேசினால் ஒழிய பிரிந்து செல்ல முடியாது என்றுணர்ந்தாள். இல்லையெனில் பாசம் என்ற போர்வையில் இவர்கள் தன்னை அருகில் வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக சித்திரவதை செய்வார்கள். அதை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. வலிக்கவில்லை என்று எத்தனை தூரம்தான் நடிக்க. எங்கேனும் யாராவது இளைப்பாற தோள் கொடுக்க மாட்டார்களா என்ற ஏக்கத்தில் அழுகையாய் வந்தது பொண்ணுக்கு. இருந்தும் வைராக்கியத்தை இழுத்துப் பிடித்து அவன் முன்னே அழாமல் நின்றாள்.
“உனக்கு ஏதோ ஆகிடுச்சு காயூ. ஏன்டி இப்படிலாம் பிஹேவ் பண்ற. நீ சொன்னல்ல, நான் உன்கிட்ட இருந்து தூரமா போறேன்னு. ஆனால் அது உண்மை இல்ல. நீதான் என்னைவிட்டுத் தூரமா போய்ட்ட. நீ பேசுறதெல்லாம் என்னை ரொம்ப ஹர்ட் பண்ணுதுடி!” உள்ளடங்கிய குரலில் அவன் பேச, காயத்ரியின் விழிகளில் மெல்ல நீர் தளும்ப பார்த்தது.
“நீ செய்றது எல்லாம் எனக்கும் ஹேர்ட் ஆகுது ராம். அதான் சொல்றேன். வீட்டுப் பக்கம் வராதே. நல்லபடியா எல்லா வேலையும் பாரு. கரெக்டா கல்யாணத்துக்கு வந்து ஒரு ப்ரெண்டா நின்னு உங்க அத்தை சொன்ன மாதிரி வாழ்த்துவேன். வேற எங்கேயும் என்னை நீ எதிர்பார்க்காத ராம். ஐ நீட் ஸ்பேஸ். உனக்குப் புரியும்னு நினைக்கிறேன்!” என்றவள் விறுவிறுவென நடந்தாள். கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்து கன்னத்தை நனைத்தது. வலித்தாலும் பேசிவிட்டாள்.
‘என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்களாம் இந்த தாயும் மகனும். இவன் என்னவென்றால் என்னை உடனழைத்துக் கொண்டு தேவையில்லாத பிரச்சனையை இழுத்து விடுகிறான். அதைக் கூட அவளால் பொறுத்துப் போக முடிந்தது. ஏனோ சைந்தவியை ராமோடு இணைத்துப் பார்க்கும்போது அழ வேண்டும் என்றொரு எண்ணம். இவளே தேர்ந்தெடுத்த பாதை எனினும் ரணமாய் வலித்தது. கௌதமி வேறு அந்த ரணத்தைக் கீறி சுகம் காண்கிறார். நாத்தனார் முடிச்சை நான் போடணுமாம்? ரெண்டு பேரும் சேர்ந்து என்னை ரொம்ப கஷ்டப்படுத்துறாங்க. இதுக்கு பேசாம நான் தூரமா இருந்து அவனை வாழ்த்திட்டுப் போய்ட்றேன். கல்யாணம் முடிஞ்சிடுச்சுன்னா, அடுத்தவ புருஷனை நினைக்க கூடாதுன்னு புத்தியில செருப்பால அடிச்ச மாதிரி உறைக்கும். அப்போ இந்த ராம் என் மனசுல மட்டும் இல்ல, வாழ்க்கைல இருந்தும் போய்ருப்பான். அதான் எல்லாருக்கும் நல்லது!” எனக் கண்ணீரை சுண்டி விட்டுக் கொண்டே நடந்தாள். இந்நொடி தாய்மடி தேவையாய் இருந்தது. தந்தையிடம் பகிர மனம் வரவில்லை. இந்நேரத்திற்கு அவர் மதுவிற்கு அடிமையாகி தூங்கிக் கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என நினைத்ததும் மனம் கசந்து வழிந்தது.
‘யாரும் தேவையில்ல. எனக்கு நான் போதும் என்னைப் பார்த்துப்பேன்!’ என சுயத்தேற்றலில் தன்னை மீட்டுக் கொண்டே வீட்டை அடைந்தாள்.

தொடரும்...





































































 
Well-known member
Messages
924
Reaction score
677
Points
93
Gaayu romba paavam ma, azha vachitte irukka neenu
 
Top