• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,091
Reaction score
3,124
Points
113
இஷ்டம் – 24 💖
மேலும் இரண்டு நாட்கள் கழிந்திருந்தது. காயத்ரி ரகுராமிடம் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு சுற்றினாள். ஆனால் அவன் வாயைத் திறக்கவே இல்லை. அவளால் கணவனிடம் பேசாது இருக்க முடியாது போக, அவனுக்கு இன்னுமே குறும்பு தலை தூக்கியது. கிடைக்கும் நேரமெல்லாம் அவளை கேலி செய்தே ஒரு வழியாக்கினான்.
“கேவலம் ஒரு பன் பட்டர் ஜாம்க்கு நீ என்னை லவ் பண்ணி இருக்க வேணாம் டி!” என அவ்வப்போது அவளை வெகுவாய் சீண்டிப் பார்த்தான். பொறுத்துப் பொறுத்துப் பார்ப்பவள் ஒரு நிலைக்கு மேல் அவனோடு சண்டையிடுவாள். சிறுபிள்ளை தனமான செய்கையில் இருவருக்குமே சிரிப்பு பொங்கும்‌. வாழ்க்கை எவ்வித பிரச்சனையும் அற்று நீரோடை போல செல்லத் துவங்கியிருந்தது. அவர்களுமே ஒருவருக்கொருவர் தங்களைப் பொறுத்திக் கொண்டு வாழ்க்கையோடு ஓடத் தொடங்கினர்.
அன்றைக்கு மருத்துவமனை சென்று வந்த காயத்ரி உண்டு முடித்து படுக்கையில் விழுந்தாள். காலை நேரப் பணி என்பதால் மதியம் உறங்கி எழலாம் என நினைத்தவள் அலைபேசியை எடுத்து கண்களை அதில் ஓட்டினாள். அப்போதுதான் ரகுராம் அலைபேசியிலிருந்து எடுத்து வைத்த சைந்தவியின் இலக்கம் நினைவிற்கு வர, ஒரு நொடி தயங்கியவள் பின்னே அவளுக்கு அழைத்துவிட்டாள்.
“ஹலோ யாரு?” எனக் கேட்ட சைந்தவி மருத்துவமனையில் வேலையில் இருந்தாள்.
“ஹலோ சைந்தவி, நான் காயத்ரி பேசுறேன்!” இவள் தயங்க, “எந்த காயத்ரி?” என அவள் கேட்டாள்.
“ஹம்ம்.. ரகுராமோட கரண்ட் வொய்ப் காயத்ரி பேசுறேன்!” இவள் கொஞ்சம் கடுப்புடன் கூறியதும், “ஹே... ஷ்...சாரி, சாரி காயூ. அது உங்களை நான் எக்ஸ்பெக்ட் பண்ணலை. சாரி!” என்றாள் நொடியில் மாறிவிட்ட பாவனையில்.
“இட்ஸ் ஓகே சைந்தவி!” என இவளும் இயல்பாய் தோளைக் குலுக்கினாள்.
“எப்படி இருக்கீங்க காயூ? ரகு எப்படி இருக்காரு? சாரி என்னால உங்க மேரேஜ்க்கு வர முடியலை. அன்னைக்கு எனக்கு ஒரு ஆப்ரேஷன். அதுவும் இல்லாம ரகு ஜெம். என்னையும் அவரையும் மேரேஜ்க்கு இன்வைட் பண்ணாரு. அங்கிளும் ஆன்ட்டியும் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு தெரியாது. ஆல்ரெடி என்னால அவர் லைஃப்ல வந்த ப்ராப்ளம் போதாதான்னு நான் வரலை. பட்‌ ஹேப்பி ஃபார் யூ. எங்க ரகு லைஃப் சரியாகாமப் போய்டுமோன்னு கில்டா இருந்துச்சு எனக்கு. இப்போதான்ங்க நிம்மதியா இருக்கு!” என அவள் மூச்சுவிடாது பேசி முடிய, காயத்ரி அமைதியாய் இருந்தாள். ரகுராமிற்கு சைந்தவி மீது கோபம் இருக்கும் என்று எண்ணியிருந்தாள். ஆனால் அவன் அவளை தங்கள் திருமணத்திற்கு அழைத்தான் என்பது புதிய செய்தி.
மறுபுறம் தொடர்ந்த மௌனத்தில், “காயூ, லைன்ல இருக்கீங்களா? உங்களுக்கு என் மேல கோபம் தீரலையா? ஐ யம் சாரி!” என்றாள் உண்மையான வருத்தத்துடன்.
“நோ... நோ சைந்தவி. எனக்கு கோபம் எல்லாம் இல்லை. இன்பேக்ட் ராம்தான் கோபபப்படணும். அவனே உங்ககிட்டே நல்லா பேசுறான். அப்படி இருக்கும்போது நான் ஏன் கோபப்பட போறேன்ங்க!” என்றாள். முதலில் சைந்தவி மீது காயத்ரிக்கு கட்டுக்கடங்காத கோபம்தான். ஆனால் அவள் செய்த கலகம் இவர்களது திருமணத்தில் முடிந்ததில் அந்தக் கோபம் எல்லாம் கரைந்து காணாமல் போயிருந்தது.
“ஹப்பா... ரொம்ப சந்தோஷம் காயூ. உங்க மேரேஜ் லைஃப் எப்படி போகுது?” சைந்து ஆர்வமாய்க் கேட்க,
“ரொம்ப நல்ல போகுதுங்க. நீங்க சொல்லுங்க, உங்க லைஃப் எப்படி இருக்கு?” எனக் கேட்டாள்.
“ரொம்ப ரொம்ப நல்லா போகுது காயூ. எனக்கு நெக்ஸ்ட் மந்த் வளைகாப்பு வச்சிருக்கோம். நீங்களும் ரகுவும் நிச்சயமா வரணும். நான் நேர்ல வந்து இன்வைட் பண்றேன்!” என அவள் கூற, இவளது முகம் மலர்ந்தது.
“கண்டிப்பா வரேன் சைந்தவி. உங்களுக்கும் உங்க ஹஸ்பண்ட்க்கும் என்னோட அட்வான்ஸ் விஷ்ஸஸ்!” என்றாள் மனதார.
“தேங்க் யூ சோ மச் காயூ. ரகுவுக்கு நான் ரொம்ப நன்றி கடன் பட்டிருக்கேன். அவருக்கு எவ்வளோ தேங்க்ஸ் சொன்னாலும் தகும். உண்மையை சொல்லணும்னா, யூ ஆர் சோ லக்கி. அவரை மாதிரி பெர்சன்ஸ் எல்லாம் ரேர். ஜெம்ங்க அவரு. கண்கலங்காம அவரைப் பார்த்துக்கோங்க!” என்றாள் உண்மையான குரலில்.
“ஆமா... அந்த ஜெம்மை தானே நீங்க வேணாம்னு கல்யாணத்தை நிறுத்துனீங்க சைந்து?” இவள் கேலியாகக் கேட்க, சைந்தவி ஒரு நொடி திகைத்தாள்.
“காயூ... அது அன்னைக்கு சிட்சுவேஷன் அப்படி. இன்பேக்ட் நான் ரகுவைக் கல்யாணம் பண்ணிக்கணும்ன்ற எண்ணத்துலதான் எல்லாத்துக்கும் ஓகே சொன்னேன். என்னோட பாஸ்ட் ரிலேஷன்ஷிப் பத்தி ஃபர்ஸ்ட் மீட்லயே நான் அவர்கிட்ட சொல்லிட்டேன். எல்லாம் பேசி‌ ஓகே சொன்னப் பிறகுதான் மேரேஜ்க்கு ப்ரொசீட் பண்ணது. பட், கல்யாண்த்தன்னைக்கு நான் ரொம்ப ஸ்ட்ராங்காதான் இருந்தேன். சித்துவை வேணாம்னு தூக்கிப் போட்டுட்டு முழு மனசா கல்யாணத்துக்கு சம்மதிச்ச என்னை ரகுதான் கம்பெல் பண்ணி சித்தார்த்தைக் கல்யாணம் பண்ணிக்க வச்சாரு. பட், உண்மையா அவரு அப்போ எடுத்த முடிவு எவ்வளவு கரெக்ட்னு இப்போ என்னால ரியலைஸ் பண்ண முடியுது. தௌசண்ட் தேங்க்ஸ் டூ ரகு!” என அவள் கூறி முடித்ததும் காயத்ரி அதிர்ந்து போனாள்.
“என்ன சொல்றீங்க சைந்து... ராம்... ராம்தான் உங்களை கன்வின்ஸ் பண்ணாரா?” எனத் திகைத்தாள்.
“யெஸ்... ஐ லவ் சித்து. பட் என் செல்ஃப் ரெஸ்பெக்ட் ரொம்ப அடிவாங்கிடுச்சு. இதுக்கும் மேல முடியாதுன்னு தோணுனாலதான் நான் ரகுவுக்கு ஓகே சொன்னது. பட் அன்னைக்கு நடந்ததே வேற!” என அவள் கூற, “அன்னைக்கு என்னங்க நடந்துச்சு. இப்போ வரை இவன் வாயே திறக்க‌ மாட்றான்!” காயூ கடுப்புடன் கூறினாள்.
“வாட்... காயூ, உங்களுக்கும் தெரியாதா?” என அவள் திகைக்க, “யூ மீன்?” என காயூ அதிர்ந்து கேட்க, “ஹம்ம்... எனக்கும் அன்னைக்கு என்னாச்சுன்னு தெரியாது காயூ. சித்துவும் ரகுவும் ஒரு பத்து நிமிஷம் பேசிட்டு வந்தாங்க. அப்புறம் ரகு வந்து என்னைவிட உன் லைஃப்க்கு சித்தார்த் தான் ரொம்ப பெர்பெக்டா இருப்பாரு. இப்போ கோபத்துல என்னைக் கல்யாணம் பண்ணாலும் வாழ்க்கை முழுக்க நரகம்தான் அது. கல்யாணத்தைப் பண்ணிட்டு எந்த பிராப்ளம்னாலும் பேசி தீர்த்துக்கோங்கன்னு என்னைக் கன்வின்ஸ் பண்ணாரு. பட் அந்த டைம் எனக்கு சித் மேல செம்ம கோபம். முடியவே முடியாதுன்னுட்டேன். அப்புறம் ரகு எனக்கு உன்னைக் கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்ல சைந்தவி அப்படின்னு சொல்லிட்டாரு. நான் ஷாக்காகிட்டேன். தென் சித்தார்த் பேசுனான். அப்புறம் அண்ணா வந்தாங்க. ரெண்டு அண்ணாவும் சித்தார்த் விஷயம் கேள்விப்பட்டு அவனை அடிக்கப் போக, ரகுதான் எல்லாரையும் சமாளிச்சாரு. எல்லார்கிட்டயும் பேசி புரிய வச்சாரு. அடிதடி எல்லாம் நடந்துச்சு. ஆனாலும் கடைசில எங்க மேரேஜை நல்லபடியா முடிச்சு கொடுத்தது அவருதான்!” என்றாள் பெருமூச்சுடன். காயத்ரிக்கு ஒன்றுமே புரியவில்லை.
“அப்போ... அப்போ ராம்தான் மேரேஜை ஸ்டாப் பண்ணதா?” இவள் தடுமாறியபடியே கேட்க, “ஹம்ம்... சித்துதான் ஸ்டாப் பண்ணது. பட் ரகுவுக்கும் ஈக்வல் ஷேர் அதுல. அவர் ஸ்ட்ராங்கா இருந்திருந்தா எங்க கல்யாணம் அன்னைக்கு நடந்திருக்கும்!” என்றவள், “பட்... அப்படி நடந்திருந்தா கண்டிப்பா நாங்க சந்தோஷமா வாழ்ந்திருப்போமான்னு தெரியலை. ஏன்னா சித்துவோட நான் ரொம்ப சந்தோஷமா வாழ்றேன் காயூ. எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். அவரோட பிரேக்ப்ல இருந்து வெளிய வந்து நான் ரகுவை அக்செப்ட் பண்ண கண்டிப்பா எனக்கு ரொம்ப நாள் தேவைப்பட்டிருக்கலாம். இல்லை, கடைசிவரை ரகுவைக் கஷ்டப்படுத்தி இருக்கலாம். காட்ஸ் க்ரேஸ் காயூ. அண்ட் ரகு உங்க மேரேஜ்க்கு இன்வைட் பண்ணும்போது சொன்னாரு. காயூவை விட என்னை இந்த அளவுக்குப் புரிஞ்சு வச்சிருக்கவங்க யாரும் இருக்க மாட்டாங்க. ஷீ லவ்ஸ் மீ தட் மச்னு அவர் சொல்லும்போது எனக்கு நிம்மதியா இருந்துச்சு. நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ்றீங்கன்னு அவரோட வாட்சப் ப்ரொபைல் பிக்சர் வச்சுத்தான் கண்டு பிடிச்சேன். சோ ஹேப்பி ஃபார் யூ!” என்றாள் உற்சாகமாக.
“தேங்க் யூ சைந்து... தேங்க் யூ சோ மச். நான் உங்ககிட்ட இன்னொரு நாள் பேசுறேன்...” என அழைப்பைத் துண்டித்த காயத்ரிக்கு தலை வலித்தது. அன்று என்ன நடந்திருக்கும் என யோசித்து யோசித்து மூளை சூடாகிப் போனதுதான் மிச்சம். படுத்தும் உறக்கம் வராது பொழுதை நெட்டித் தள்ளியவள் ரகுராம் வந்ததும் என்னவென்று விசாரிக்க வேண்டும் என நினைத்திருந்தாள்.
பொழுது மாலையைத் தொட இரவு எட்டு மணிக்குத்தான் ரகுராம் மருத்துவமனையில் இருந்து வந்தான். இவள் கூடத்தில் அமர்ந்து பெயருக்கு தொலைக்காட்சியை உயிர்ப்பித்துவிட்டு வாயிலையே பார்த்திருந்தாள்.
அவள் முகத்திலிருந்த குழப்பத்தை பார்த்த கௌதமி,
“என்னாச்சு காயூ? என் ஒரு மாதிரி இருக்க?” எனக் கேட்டுவிட்டார்.
“ஒன்னும் இல்லம்மா. தலைவலி, மாத்திரை போட்டிருக்கேன். சரியாகிடும்...” என அவரை சமாளித்தவள் ரகுராம் வந்ததும் விறுவிறுவென அறைக்குள் அவன் பின்னே நுழைந்தாள். களைத்துப் போய் வந்தவன் மனைவி முகத்தைப் பார்க்கவில்லை.
இவள் அமைதியாய் வந்து கட்டிலில் அமர்ந்து அவனைத்தான் பார்த்திருந்தாள். உடைமாற்றி முகம் கழுவி வந்தவன் துண்டால் துடைத்துக் கொண்டே கண்ணாடியைப் பார்த்தான். காயத்ரியின் பார்வை தன்னிடம்தான் என்பதை உணர்ந்து, “என்னடி... பார்வை எல்லாம் தினுசா இருக்கே?” எனப் புருவம் உயர்த்த, அவளிடம் பதிலில்லை. அமைதியாய் அவனை வெறித்திருந்தாள்.
“காயூ... என்ன... என்ன இப்படி பார்க்குற?” என அவள் அருகில் வந்த ராம் நெற்றியைச் சுருக்கினான்.
“நீதான் சைந்தவியைக் கன்வின்ஸ் பண்ணி அவங்க லவ்வரோட சேர்த்து வச்சீயா ராம்?” என காயத்ரி கேட்டதும் அவனிடம் நொடி நேர அதிர்ச்சி.
“இல்லையே! அதெல்லாம் இல்ல டி. யார் சொன்னா உனக்கு?” என அவளை பொய்யாய் முறைத்தான்.
“சைந்தவிதான் சொன்னாங்க!” அவனைத் தீர்க்கமாகப் பார்த்துப் பெண் கேட்க, ரகுராம் தடுமாறினான்.
“அது... அன்னைக்கு சிட்சுவேஷன் அப்படி காயூ. அதான் நடந்து முடிஞ்சிடுச்சு இல்ல. அப்புறம் என்ன அதைப் பத்தியே பேசிக்கிட்டு?” என பேச்சை திசை திருப்ப முயன்றான்.
தலையை இடம் வலமாக முடியாது என அசைத்தவள், “எனக்கு என்ன நடந்ததுன்னு தெரியணும் ராம்!” என்றாள் அடமாய்.
“அதை தெரிஞ்சு என்ன பண்ண போற டி நீ?” அவன் அதட்ட, காயத்ரி அசையவில்லை.

அழுத்தமாக அவனைப் பார்க்க பெருமூச்சு விட்டவன், “இப்போ என்ன தெரியணும் உனக்கு?” என சலிப்பாய்க் கேட்டான்.
“அன்னைக்கு என்ன நடந்தது?” அடமாய்க் கேட்டாள்.
“ப்ம்ச்... நான்தான் சைந்தவியைக் கம்பெல் பண்ணி சித்தார்த்தை மேரேஜ் பண்ணிக்க சொன்னேன்!” அவன் ஒப்புக் கொண்டான்.
“ஏன்?” அவளிடம் ஒற்றை கேள்வி வந்து விழுந்தது.
“ஹம்ம்... அவ கழுத்துல தாலி கட்டப் போறோம்னு தெரிஞ்சப்போ கூட இதோ அழுது வடிஞ்சுட்டு நின்ன உன் மூஞ்சிதான் கண்ணு முன்னாடி வந்து நிக்குது. இந்தக் கண்ல எனக்கான காதலைப் பார்த்தப்புறம் என்ன செய்ய சொல்ற. யாரோ ஒருத்தர் உன்னை அழ வச்சாலே என்னால அதை தாங்கிக்க முடியாது டி. அப்படி இருக்கப்போ நானே கடைசிவரை உன்னை அழ விடுவேனா? ராம்ன்னு வரப்போ நீ செல்பிஷ்ஷா இருந்தல்ல... அதே மாதிரி காயூன்னு வரப்போ நான் செல்ஃபிஷ்ஷா இருந்தேன். கண்ணை மூடி ஒரு நிமிஷம் யோசிச்சேன் டி. சைந்தவி இல்லாம இந்த ராமால் வாழ முடியும். ஏன் நான் இல்லைன்னா கூட வேற ஒருத்தனோட அவ நல்லா இருப்பா. பட் காயூ இல்லாம என்னால இருக்க முடியும்னு தோணலை. அந்த செகண்ட் தோணுச்சு, கண்டிப்பா நீ நான் இல்லாம நல்லா இருக்க மாட்டேன்னு. அதான் நான் சிட்சுவேஷனை எனக்கு சாதகமாக யூஸ் பண்ணிக்கிட்டேன். பட் ட்ரஸ்ட் மீ காயூ, நானா எதையும் தேடி போகலை. அதுவா அமைஞ்சுது. சித்தார்த் கிட்ட பேசுனப்போதான் எனக்குத் தெரிஞ்சது சைந்தவிதான் சித்தார்த்தை தொரத்தி தொரத்தி லவ் பண்ணி இருக்கான்னு. இவன் ஸ்டேடட்ஸ் அது இதுன்னு காரணம் காட்டி தட்டிவிட்டு அது பெரிய பிரச்சினையாகிடுச்சு போல. அவன்‌ மேல கோபம். அதான் எனக்கு ஓகே சொல்லி இருக்கா. அதை சித்தார்த் சொல்லும்போது என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது. சித்தார்த் கிட்டே பேசுறதுக்கு முன்னாடி கல்யாணத்தை ஸ்டாப் பண்ற ஐடியா எனக்கில்லை. பட் அவரு ஒரு வார்த்தை சொன்னாரு!” என்று பெருமூச்சுவிட, இவள் கருமணிகள் கூட அசையாது அமைதியாய் ரகுராமைப் பார்த்தாள்.
“அவன் கூட சைந்தவி இல்லாம வாழ்ந்துடுவானாம். பட் அவளால் கண்டிப்பா என்கூட வாழ முடியாதாம். பிகாஸ் ஐஞ்சு வருஷமா லவ் பண்றான்னு சொன்னப்போ எனக்கு நீதான்டி ஞாபகம் வந்த. ஐஞ்சு வருஷத்துக்கே அவன் பக்கம் பக்கமா பேசுறான். அங்க ஒருத்தி என்னை மட்டுமே நினைச்சிட்டு பைத்தியம் மாதிரி இருக்காளே. அவளோட காதலுக்கு நியாயம் செய்ய வேணாமான்னு மனசு கேட்டுச்சு. சித்தார்த் வேற ரொம்ப கெஞ்சவும், நானும் அவரும் சேர்ந்து சைந்துவை கன்ப்யூஸ் பண்ணி கன்வின்ஸ் பண்ணி மேரேஜ் பண்ணி வச்சுட்டோம். அவங்க வாழ்க்கை கண்டிப்பா நல்லா இருக்கும்னு எனக்குத் தோணுச்சு. அதான் நான் அந்த முடிவை எடுத்தேன். என் சுயநலமும் இருந்துச்சுதான்!” என்றான். காயத்ரியின் விழிகளில் முனுக்கென நீர் முட்டி நின்றது. அவனைத்தான் அசையாது பார்த்திருந்தாள்.‌
அவள் இப்படி வருத்தப்படக் கூடாது என்றுதானே ரகு எதையும் கூறாது மறைத்திருந்தான். இன்றைக்கு அதுவாகத் தெரிய நேரிட, அவனால் இதற்கு மேலும் மறைக்க முடியாது கூறிவிட்டான்.
“எனக்காகத்தான் இவ்வளோ பெரிய ரிஸ்க் எடுத்தீயா ராம்?” காயத்ரியின் குரல் பிசிறடித்து தேய, “ப்ம்ச்...‌ காயூ, டோன்ட் கெட் எமோஷனல். இதனாலதான் நான் சொல்லலை!” என அவளருகே வந்தவன் வயிற்றோடு அவளை அணைக்கவும் அவளிடம் மெலிதாய் விசும்பல் வெளிப்பட்டது.
“ப்ம்ச்... என்னடி?” என ஒரு அதட்டலோடு அவளது விழிநீரைத் துடைத்துவிட்டான்.
“ஏன் ராம் இப்படி பண்ண? சப்போஸ் சைந்தவி வீட்ல இருந்து உனக்கு எதாவது பிராப்ளம் வந்தா என்ன பண்ணி இருப்ப? அவங்க எல்லாரும் பாலிடிக்ஸ்ல இருக்காங்க டா. லூசு மாதிரி பண்ணியிருக்க நீ?” என எழுந்து அவன் சட்டையின் நுனியைப் பிடித்தவளின் முகம் அழுகையில் சிவந்திருந்தது.
“ச்சு... இந்த மூஞ்சிக்கு முன்னாடி வேற எதுவும் பெருசா தெரியலை!” என சிரித்துக் கொண்டே அவளை இழுத்து அணைத்தான் ரகுராம். காயத்ரிக்கு விழிகளில் நீர் பொங்கியது.

அவனை இறுக்கி அணைத்தவள், “ஏன்டா நாயே இப்படி பண்ண? அப்படியென்ன இந்த காயூ உனக்கு முக்கியமா போய்ட்டா. காதலைக் கூட சொல்ல தைரியம் இல்லாத கோழைடா அவ. ரொம்ப செல்பிஷ். உன்னைக் கஷ்டப்படுத்துனவ அவ. அவளுக்காக நீ இவ்வளோ பெரிய ரிஸ்க் எடுக்கணும்னு அவசியமே இல்ல!” என அவனிடமிருந்து பிரிந்து சிவந்த முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டே அவனை முறைத்தாள் பெண். ரகுவின் முகத்தில் மெல்லிய முறுவல் பூத்தது.
“யெஸ் அவ என்னைக் கஷ்டப்படுத்தி இருக்கா? லவ் பண்றதை சொல்லாம மறைச்சிருக்கா. பட், ஷீ லவ்ஸ் மீ மோர். எனக்காகன்னு பார்த்து என்னையே விட்டுக் கொடுக்கத் துணிஞ்ச கிறுக்கச்சி அவ. என்னோட காயூ. அப்படியெல்லாம் அவளை விட முடியும்னு தோணலை. அதான் இறுக்கிப் பிடிச்சுக்கிட்டேன்!” என சிரிப்புடன் கூறி தூரமாய் நின்றவளை கைநீட்டி இழுத்து மீண்டும் இறுக அத்திணைத்தான்.
“லூசு... லூசு டா நீ!” என அவன் முடியைப் பிடித்து ஆட்டினாள் பெண்.
“ராம்... உனக்கு உனக்கு சைந்தவியை ரொம்ப பிடிக்கும் இல்ல ராம். யூ லவ்ட ஹெர். எப்படி டா அப்படியொரு முடிவை எடுத்த?” அவன் முகம் பார்க்கத் தயங்கியபடியே காயத்ரி கேட்டாள்.
“கிறுக்கச்சி... சைந்தவி இடத்துல வேற எந்த பொண்ணை என் அம்மா காட்டியிருந்தாலும் எனக்குப் பிடிச்சிருந்தா ஓகே சொல்லி இருப்பேன். யெஸ் ஐ லைக் ஹெர். ஒரு பொண்ணு அழகா இருந்தா புடிக்கிறது நேச்சுரல். ஐ லைக் ஹெர். பட் லவ் பண்ணேன்னு எல்லாம் சொல்லாத டி. அப்படியெல்லாம் எனக்கு எந்த ஃபீலிங்க்ஸூம் சைந்து மேல இல்ல. என்னைக் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுன்னு அன்பு, ஆசை எல்லாம் இருந்தது. லவ் வரலை. மேரேஜ்க்கு அப்புறம் பார்த்துக்கலாம்னு அப்போ யோசிச்சேன்!” என அவன் கூறியதும் காயத்ரி விழிகளில் நீர் நின்றிருந்தது.
“நிஜமாவா ராம்?” எனக் கேட்டவளின் முகத்தை தன் கையிலிருந்த துண்டால் துடைத்தவன், “நிஜமா காயூ. அழகான பொண்ணைப் பார்த்தா சைட் அடிக்குறது இல்ல. அந்த மாதிரி தான் அதுவும். அவ அழகா இருந்தா, எனக்குப் பிடிச்சது. தட்ஸ் இட். அதுக்கும் மேல எதுவும் இல்லடி!” என்றான் மெல்லிய குரலில். காயத்ரி முகம் தெளிந்தது.
“உனக்கொன்னு தெரியுமா ராம்? சைந்தவியை உனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு. சோ அந்த மேரேஜ் ஸ்டாபானதுல நீ வருத்ததுல இருப்ப. இல்ல, அவங்களை மாதிரி வேற பொண்ணை தேடுறீயோ என்னவோன்னு எனக்குத் தோணிட்டே இருக்கும் டா. நீ வேற ப்ரெண்டா பார்க்குறேன் பார்க்குறேன்னு வேற சொல்ற. அதான் அவங்களை ஓவர்கம் பண்ண முடியலையோன்னு திங்க் பண்ணேன் டா!” என்றவளின் மண்டையிலே ஓங்கி தட்டியவன், “லூசா டி நீ, நான்தான் அவ கூட இருந்த கல்யாணத்தை வேணாம்னு கட்டாயப்படுத்தி நிறுத்துனேன். அதுல அவளை மறக்க முடியலைன்னு இவளே நினைச்சுப்பாளாம்!” அவன் பொரிந்தான்‌. அவனது வார்த்தைகளில் கண்களில் நீருடன் சிரித்த காயத்ரி பட்டென எக்கி ஆவேசமாக அவனுடைய உதட்டில் முத்தமிட்டாள்.
முன்பாவது மெல்லிய தயக்கத்துடன் இங்கிதமாக முத்தத்தைப் பகிர்வாள். ஆனால் இப்போது வரையறையற்ற வரைமுறைகளைத் தகர்க்கும் முத்தம். ரகுராம் நிற்க முடியாது கட்டிலில் விழ, அவன் மீது சரிந்தவள் மூச்சு வாங்கி கொண்டே அவனைப் பார்த்து, “லவ் யூ ராம்...” என்றாள் மலர்ந்த முகமும் அகமும். அங்காங்கே ஒட்டியிருந்த சிறு சிறு கவலைகளும் கரைந்திருந்தன. அவளை முறைக்க முயன்றவனுக்கு முடியாது போக, “குடிகாரி...” என அவள் தலையோடு மெலிதாய் முட்டினான். அவள் உதட்டின் சூடு அவனது உடல் முழுவதும் பரவியிருந்தது.
“பசிக்குது டி... எழுந்திரி. சாப்பிட போகலாம்!” அவன் அவஸ்தையுடன் கூற, சின்ன தலையாட்டலுடன் எழுந்து வெளியே சென்றாள். அவர்களது மலர்ந்த முகத்தைப் பார்த்ததுமே கௌதமிக்கு சிறியவர்களுக்கு இடையே இருந்த பிணக்கு சரியாகிவிட்டது என்று புரிந்தது. இருவரும் உண்டுவிட்டு அறைக்குள் நுழைந்தனர்.
“ராம்... கீழே படுப்போம் டா!” என அவள் உற்சாகமாக கூற, “நீ வேணா படு டி. நான் கட்டில்ல படுக்கப் போறேன்...” என அவன் கூற, “ம்ஹூம்... கீழே படுப்போம்...” என அவனைப் பாடாய்படுத்தி கீழே படுக்க வைத்தாள்.
அவனுக்கு அருகே நகர்ந்து தோளில் முகம் புதைத்தவள் கணவனின் கைகளை எடுத்து தனது இடையில் போட்டு இன்னும் அவனை ஒட்டிப் படுத்துக் கொண்டாள். அவளது செய்கையில் ரகுராமுக்கு சிரிப்பு வந்தது. காயத்ரி முகத்தில் புன்னகை வாடவே இல்லை. கணவன் வார்த்தைகள், அவளுக்காக அவன் செய்தவை என அவற்றிலே மனம் தளும்பி நின்றது. அதனாலே தன்னுடைய அன்பை சிறுபிள்ளை தனமாக வெளிப்படுத்தினாள்.
“என்னடி... ஏன் இப்படி படுத்துற?” ரகு அதட்ட, “ஒன்னும் இல்ல ராம்...” என அவனுள் புதைந்தாள் மனைவி. அவஸ்தையாய் நெளிந்தவனை இவள் குறுகுறுவென பார்த்தாள்.
“இந்த மூஞ்சில என்ன இருக்குன்னு இப்படி பார்க்குற நீ?” மெல்லிய அதட்டலுடன் அவளைத் தள்ளிப் படுக்க வைக்க முயன்றான். முயன்றான் அவ்வளவே. மனைவி காற்று கூடப் புக முடியாத அளவிற்கு அவனை இறுகி அணைத்திருந்தாள்.
“ப்ம்ச்... அதான் டா நானும் கேட்குறேன். மேடை வரைக்கும் போன கல்யாணத்தை நிறுத்திட்டு வர்ற அளவுக்கு இந்த மூஞ்சில என்ன இருக்கு? எனக்குப் புரியவே இல்ல ராம். எப்படி அவ்வளோ பெரிய விஷயத்தை ஈஸியா செஞ்ச நீ?” என ஆச்சர்யம் விலகாது கேட்டவளின் நெற்றியில் ஒற்றை விரலை வைத்து தள்ளியவன், “சும்மா அதையே கேட்காத டி. தூங்கு நீ!” என அதட்டி மறுபுறம் திரும்பி தலையணையில் முகம் புதைத்தான்.
அவன் மேலே கையையும் காலையும் போட்டு அணைத்தவள், “ப்ம்ச்... என்ன அர்த்தம்னு சொல்லு டா!” என்றாள் அடமாய்.
“அதான் சொன்னேன்ல டி. நீ அழறதைப் பார்க்க முடியலை!” என்றான்.
“நான் அழறதைப் பார்க்க முடியலைன்னா என்ன அர்த்தம் டா?” அவனை தொல்லை செய்தாள் பெண். அவன் அமைதியாய் இருந்தான்.
“அப்போ என்னை அந்தளவுக்குப் பிடிக்கும்னு அர்த்தம். ரைட்?” அவளே பதிலும் கூற, இவன் வெறுமனே தலையை அசைத்தான்.
“பிடிக்கும் அப்படின்னா என்ன அர்த்தம் ராம்?” அவள் கேள்வியில் கடியானவன், “மனுஷனை தூங்க விடுடி!” என்றான் பொய் கோபத்துடன்.
“ம்கூம்... நீ என்னென்று சொல்லு. அப்போதான் டா தூங்க விடுவேன்!” அவள் கூற, “அதான் நீயே யோசிச்சு வச்சிருப்பீயே. சொல்லி தொலையும்!” சுகமாய் சலித்தான் கணவன்.
“தட் மீன்ஸ் யூ லவ்ட் மீ ராம்!” ஆகப்பெரும் ரகசியம் ஒன்றை கண்டுபிடித்த தோரணையில் மலர்ந்த முகத்துடன் அவள் கூற, நிமிர்ந்து முறைக்க முயன்றவன் முகம் புன்னகையில் குளித்திருந்தது.
“நீயா நினைச்சுக்கிட்டா நான் எதுவும் பண்ண முடியாது டி!” அவளை வம்பிழுத்தான்.
“ஏன்... ஏன் லவ் பண்றதை ஒத்துக்கிட்டா என்ன டா குறைஞ்சு போய்டுவ நீ? கல்நெஞ்சக்காரா!” அவள் கட்டாமாய்க் கேட்க, “ஹம்ம்... அதெப்படி டி உனக்கொரு நியாயம். எனக்கொரு நியாயம்? ஹம்ம்... பத்து பருஷமா லவ் பண்ணவளே பத்து நாள் முன்னாடிதான் ஒத்துக்கிட்டாளாம். நாங்க மாட்டும் ஆமான்னு உடனே சரண்டனர் ஆகணுமாம். பேராசைகாரி!” என முணுமுணுத்தவன் தலையணையில் முகம் புதைக்க, அவனையே முறைத்துப் பார்த்தாள் மனைவி.
“முறைச்சிட்டே இருந்தா விடிஞ்சிடும் டி. தூங்கு!” அவள்புறம் திரும்பாது கூறினான் ரகுராம்.
“என் இஷ்டம்... தூங்காம கூட முழிச்சே கிடப்பேன். உனக்கென்ன டா வந்துச்சு?” என சடைத்தாள் பெண்‌. திரும்பாலே அவளது முகத்தில் எள்ளும் கொள்ளும் போட்டால் வெடித்துவிடும் என்பதை உணர்ந்தவனுக்கு சிரிப்பு முளைத்து தொலைத்தது.
“உன் இஷ்டம் தான் காயூ. ரூம்ல முழிச்சிருக்கதுக்கு வெளிய கேட்கிட்ட உக்கார்ந்தா வாட்ச்மேனுக்கு கொடுக்குற சேலரி மிச்சம்!” அவளை வம்பிழுத்தான்.
“மூடிகிட்டு படு ராம்!” என்றவள் வெடுக்கென எழுந்து சென்று கட்டிலில் படுக்க, ரகுராம் அசையவில்லை. கீழேயே படுத்து உறங்க, “கல்நெஞ்சக்காரன். பொண்டாட்டி கோபமா இருந்தா சமாதானம் செய்யாம தூங்குறான் பாரு!” என அவனை வாயில் அரைத்துக் கொண்டே உறங்கிப் போனாள் பெண்.

தொடரும் ‌...















































































 
Top