• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,091
Reaction score
3,124
Points
113
இஷடம் – 20 💖
“என்னம்மா... இன்னைக்கு பனியாரமா? என்ன ஸ்பெஷல்?” எனக் கேட்டுக் கொண்டே உணவு மேஜையில் அமர்ந்து விரல்களால் ஏதோ ஒரு பாடலை தாளம்தட்டியபடி உதட்டுக்குள் முணுமுணுத்த மகனை ஆசையாய் பார்த்தார் கௌதமி. நீண்ட நாட்களுப் பின்னர் அவன் முகத்தில் பூத்த புன்னகை இவரை ஆசுவாசம் கொள்ள செய்தது.
“இல்ல ராம்... ரொம்ப நாளா நீ ஒரு மாதிரி இருந்த. இப்போதான் ரெண்டு நாளா சிரிச்ச முகமாக அழகா இருக்க டா. என் கண்ணே பட்டுடும் போல!” என அவன் கன்னத்தைக் கிள்ளியவரை ஆதுரமாய்ப் பார்த்தான். தன்னுடைய ஒரு முகச்சுணக்கம் இந்தப் பெண்மணியிடம் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என அவன் அறியாதது இல்லை. இருந்தும் இத்தனை நாட்கள் கானல் நீராய் சென்ற காலத்தில் இப்போதுதான் பூ பூத்து வசந்தம் வீசத் தொடங்கியிருந்தது. அதற்கு காயத்ரிதான் பிரதான காரணம். காலையிலே அந்தக் காணொளியை அவளது புலனத்திற்கு அனுப்பி சில பல வர்ணனைகளை தட்டச்சு செய்து அனுப்பியிருக்க, இவனை அவள் கருப்பியிருந்தாள். அதற்கு முன்னே தமிழில் வெகு சுலபமான கெட்ட வார்த்தைகள் ரெண்டு உபரியாய் வந்து விழுந்திருக்க, இவனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. நீண்ட நெடிய காலத்திற்குப் பின்னர் அவர்களது இயல்பு மீண்டது போலொரு எண்ணம்‌. ஒரு மாதிரி மனம் நிறைவாய் உணர்ந்தது.
மெதுவாய் பனியாரத்தை உண்டு கொண்டே தந்தை அறையைப் பார்த்திருந்தான். அவரும் மருத்துவமனைக்குச் செல்லத்தான் கிளம்பி கொண்டிருந்தார். தொண்டையைக் கனைத்தவன், “ம்மா... எப்போ கல்யாணம் பண்ணிக்கிறேன்னு கேட்டுட்டே இருக்கல்ல. இப்போ பண்ணிக்கலாம்னு தோணுது மா!” என்ற மகனை பார்த்த கௌதமிக்கு முகமெல்லாம் மலர்ந்து போனது.
“டேய் ராம், என்னடா இப்படி அதிர்ச்சி எல்லாம் தர? நான் அந்தப் பேச்சை எடுத்தாலே தட்டிவிட்டுடுவ. உங்கப்பா கிட்டே சொல்லணும் டா. எங்க நீ கல்யாணத்துக்கு ஒத்துக்காம போய்டுவீயோன்னு கவலைல இருந்தேன் டா. என் மனசுல இருக்க பாரமே குறைஞ்சு போச்சு டா...” என ஆரம்பித்தார் பெரியவர்.
“ம்மா... பொண்ணு நான் சொல்றவ தான். எனக்கு ஒரு பொண்ணைப் பிடிச்சிருக்கு. உன் சம்மதம், அப்பா சம்மதத்தோட அவ இந்த வீட்டுக்கு மருமகளா வரணும்னு என் ஆசை மா!” ரகுராம் தாயின் கன்னத்தைக் கிள்ள, அவர் அதிர்ந்து பார்த்தார்.
“ராம் நிஜமாவா டா? உனக்கு ஒரு பொண்ணைப் பிடிச்சிருக்கா டா? ரொம்ப சந்தோஷம் டா. யாரு அந்தப் பொண்ணு? கூட வேலை பார்க்குற டாக்டர் யாரையும் பிடிச்சு போச்சா டா? அப்பாகிட்டே நான் பேசுறேன்!” துள்ளலாக கூறினார் அவர். தேவராஜ் உணவு உண்ண மேஜைக்கு வந்தார். அவரும் இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டுதானே இருந்தார்.
“ப்பா... அம்மா, எனக்கு காயூவை பிடிச்சிருக்கு. அவளை மேரேஜ் பண்ணிக்க ஆசைபடுறேன்!” என்றவன் சில நொடிகள் நிறுத்தி, “எனக்கு உங்க ரெண்டு பேரோட முழு சம்மதமும் வேணும். நீங்க பார்த்த பொண்ணை என்ன ஏதுன்னு கேட்காம நான் கல்யாணம் பண்ண சம்மதிச்சதுக்கு முக்கிய காரணம் என் அம்மா அப்பா எனக்கு எப்பவும் நல்லது செய்வாங்க, சரியாதான் இருக்கும்னு. அன்பார்ச்சுனேட்லி அந்த கல்யாணம் நின்னு போச்சு. அதுக்கு யாரையும் நான் குத்தம் சொல்லலை. இதை ஏன் சொல்றேன்னா நான் உங்க மேல வச்ச நம்பிக்கையை என் மேல வைங்க. காயத்ரியோட நான் சந்தோஷமா வாழ்வேன். அவ குடும்பம், அந்தஸ்து, அவளோட அப்பா எல்லாத்தையும் தாண்டி அவளை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மா. என்னை நல்லா புரிஞ்சு வச்சிருக்கவ அவ. கண்டிப்பா நாங்க சந்தோஷமா வாழ்வோம்!” என்றான் நிறுத்தி நிதானமாக. ஒவ்வொரு வார்த்தையாகக் கோர்த்தான்.
தேவராஜ் தன் முகத்தில் அதிருப்தியைக் காண்பித்தார்.
“ராம், இது சரி வராது. அந்தஸ்துன்றதை தாண்டி அந்தப் பொண்ணோட அப்பா ஒரு குடிகாரன். அப்படியிருக்கும் போது அந்த வீட்ல இருந்து பொண்ணெடுக்க எனக்கு விருப்பம் இல்ல. நீ வேற யாரையாவது பிடிச்சிருக்குன்னு சொல்லி இருந்தா சந்தோஷமா நாங்க சம்மதிச்சு இருப்போம்!” முகத்தை சுளித்தார் பெரியவர். கௌதமி இருவரையும் பயந்து போய் பார்த்தார். அவருக்கு மகனின் பேச்சில் அதிர்ச்சிதான். அவரைப் பொறுத்தவரை அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள். அதைத் தாண்டி பெரிதாய் யோசிக்கவில்லை. ஆனால் மகன் கூறுவது தலைகீழாய் இருக்கவும் கணவர் என்ன சொல்வாரோ எனப் பயந்து போய் பார்த்தார்.
கையைக் கழுவிக்கொண்டு வந்து தந்தை அருகே அமர்ந்தான் ராம். “ப்பா... யெஸ், தங்கராஜ் அங்கிள் குடிகாரர்தான். அதுக்கு காயூ என்ன பண்ணுவா பா? அவ அப்பா அப்படி பண்றதுக்கு அவளோட கேரக்டரைக் குறை சொல்றது ரொம்ப தப்பான விஷயம் பா. ஏன் நம்ப சக்திவேல் மாமா குடிக்காத குடியா. இப்போ திருந்திட்டார்தான். இருந்தாலும் அவர் குடிகாரர்னு வீட்டுக்குள்ள விடாம இருந்தீங்களா? உங்க அக்கா வீட்டுக்காரர்னதும் அவருக்கு மட்டும் என்ன தனி சலுகை. தங்கராஜ் அங்கிள் குடிக்கிறது அவரோட பெர்சனல் பா. யாரோட தனிப்பட்ட விஷயத்துலயும் தலையிட நமக்கு ரைட்ஸ் இல்ல. ஐ லவ் காயூ. என்னைப் பொறுத்தவரைக்கும் அவளைத் தவிர வேற யாரும் என் வாழ்க்கைக்கு சரியா இருக்க மாட்டாங்க. நீங்க சம்மதிச்சே ஆகணும்னு நான் கட்டாயப்படுத்த மாட்டேன். உங்களுக்கு ஓகேன்னா எல்லாரோட சம்மதத்துலயும் அவளை நான் கல்யாணம் பண்ணிப்பேன். அப்படி உங்களால அக்செப்ட் பண்ணிக்கவே முடியாதுன்னு தோணுனா ஓகே, ஐ அக்செப்ட் யுவர் டிசிஷன். பட் என்னை நீங்க மேரேஜ்க்கு ஃபோர்ஸ் பண்ண கூடாது. ஒன்னு காயூவைக் கல்யாணம் பண்ணி வைங்க. இல்லைன்னா நான் இப்படியே இருந்துட்றேன்!” என்றவனை தேவராஜ் யோசனையுடன் பார்க்க, கௌதமி அதிர்ந்து பார்த்தார்.
“ப்பா... ஐ லவ் யூ போத். உங்களோட விருப்பத்துக்கு நான் எவ்வளோ மதிப்பு கொடுப்பேன்னு உங்களுக்கே தெரியும். நீங்க ரெண்டு பேரும் சம்மதம் சொல்லாம எதுவுமே நடக்காது. அதே மாதிரி இது என்னோட நியாயமான ஆசை. உங்களை எனக்கு எவ்வளோ பிடிக்குமோ அதே அளவுக்கு காயூவையும் பிடிக்கும். உங்கப் பையன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு ஆசைப்பட்டீங்கன்னா ஓகே சொல்லுங்கப்பா. இல்ல, உங்க மகனாவே இருந்துடுறேன். உங்களையும் என்னால காயப்படுத்த முடியாது. அவளையும் விட்டுக் கொடுக்க முடியாது பா. மூனு பேருமே எனக்கு வெரி வெரி இம்பார்டெண்ட். நீங்க யோசிச்சு ஒரு வாரத்துல நல்ல முடிவா சொல்லுங்கப்பா!” என அவரை அணைத்து விடுவித்தவன், “ம்மா... நான் ஹாஸ்பிடல் கிளம்புறேன்...” என அவன் விடை பெற, தேவராஜ் மகனது பேச்சிலே ஆழ்ந்துவிட்டார். அவரால் உடனடியாக ஒரு முடிவை எடுக்க முடியவில்லை, தடுமாறிப் போனார். மருத்துவமனை சென்ற பின்னரும் அவரது மனம் ரகுவின் பேச்சிலே உழன்றது.
கௌதமிக்கு நடப்பது எதுவும் புரியவேயில்லை. எதையும் நம்பவும் முடியவில்லை. ரகுராம் மாலை வந்ததும் முதல் வேலையாக அவனிடம் விசாரிக்க வேண்டும் என நினைத்தவர் தயங்கியபடியே காயத்ரிக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை பார்த்தாலும் வேலை இருந்ததால் பிறகு அழைத்துக் கொள்ளலாம் என விட்டுவிட்டாள். அவள் அழைப்பை ஏற்காது போக ராம் வந்ததும் அவனிடம் விசாரணையைத் தொடங்கினார்.
என்ன ஏது எப்படி என அவர் கேள்விகளால் மகனைத் துளைத்தெடுக்க ஒரு வார்த்தை அவரால் வாங்க முடியவில்லை.
“ம்மா... எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும் மா. யாரோ தெரியாதவங்களோட லைஃபை ஷேர் பண்ணிக்கிறதுக்கு காயூவா இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு. ஏன் உனக்கு அவளைப் பிடிக்கலையா?” என எதிர்கேள்வி கேட்டான்.
“டேய்... நான் பார்க்க வளர்ந்த புள்ளை டா. நான் ஊட்டி வளர்ந்தவ. எப்படி புடிக்காம போகும். உங்கப்பாவை நினைச்சாதான் உதறுது டா. அவர் என்ன முடிவெடுக்கப் போறாரோ?” என கௌதமி பதற, அவனுக்கு அப்படியொன்றும் பயமும் பதற்றமும் அணுகவில்லை.
“ம்மா... சில், ஐ க்நோ அப்பா. அவர் என் விருப்பத்துக்கு மாறா எதுவும் செய்ய மாட்டாரு. அவரோட முடிவு எதுவா இருந்தாலும் அதை ஃபேஸ் பண்ற தைரியம் எனக்கு இருக்கு. சோ, கவலைப்படாதீங்க!” என அவரைத் தேற்றினான். தேவராஜ் வந்தார். மகன் எப்போதும் போல அவரிடம் பேசினான். காலையில் எதுவுமே நடவாதது போலிருந்தது அவனது நடவடிக்கை.
அடுத்து வந்த நாட்களும் அப்படித்தான். வெகு இயல்பாக தாய் தந்தையிடம் உரையாடினான், உண்டான், வேலைக்கு சென்று வந்தான். அன்றைக்கு பேசியதோடு சரி. அதற்குப் பின்னர் ஒரு வார்த்தைக் கூட ராம் திருமணத்தைப் பற்றி உரைக்கவில்லை. அவளைத்தான் திருமணம் செய்ய வேண்டும், உங்களது சம்மதம் வேண்டும் என்று எந்த வகையிலுமே தந்தையை அவன் கட்டாயப்படுத்தவில்லை. அப்படியெதும் செய்திருந்தால் கூட தேவராஜ் மறுத்திருக்க கூடும். அவனது நடவடிக்கை எல்லாம் தந்தை தன் விருப்பத்தை மதிப்பார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்த, இவரால் மறுக்க முடியவில்லை
அதுவும் அன்றி ஏற்கனவே தங்களால் தான் மகன் காயம்பட்டிருக்கிறான். இருந்தும் ஒரு வார்த்தை கூட எங்கேயும் அவன் பெற்றவர்களை குற்றவாளி கூண்டில் நிறுத்தவில்லையே. அப்படி இருக்கையில் அவனுடைய விருப்பம் பிரதானமாகப்பட்டது. காயத்ரியை மருமகளாக ஏற்க அவருக்கு முழுதாய் சம்மதம் இல்லைதான். இருந்தும் ரகுராமிற்காக ஒப்புக் கொள்ள, “தேங்கயூப்பா... ஐ க்நோ யூ வெல். தேங்க் யூ சோ மச்!” என அவரது கன்னத்தில் முத்தமிட்டவனை தேவராஜ் அதிசயமாகப் பார்த்தார். சிறுவயதில் எதையாவது கேட்டு அடம்பிடித்து அது கிடைத்தவுடன் இப்படித்தான் தந்தைக்கு முத்தம் கொடுப்பான். இப்போது அவன் முகத்திலிருந்த மகிழ்ச்சியில் தன்னுடைய முடிவு சரியானது என ஆசுவாசம் கொண்டார்.
“ராம், உங்கப்பா மனசு மாறுறதுக்குள்ள காயூ வீட்ல பேசி கல்யாணத்தை சட்டுபுட்டுன்னு முடிச்சிடலாம் டா!” கௌதமி கூற, அவனுக்கும் அதுவே சரியென பட, மறுநாளே காயத்ரி வீட்டிற்கு சென்று பேசலாம் என தந்தையிடம் அவன் கூற, அவரும் ஒப்புக் கொண்டார்.
இந்த ஒரு வார இடைவெளியில் காயத்ரியும் ரகுராமும் சந்திக்கவில்லைதான். ஆனாலும் ஏதோ ஒரு வகையில் அவளை சீண்டிக் கொண்டுதான் இருந்தான். புலனத்தில் கருப்பி இருந்ததால் முகநூலில் செய்தி அனுப்பி இம்சை செய்தான். அதுவும் அந்தக் காணொளியில் அவள் பேசியது செய்தது என ஒவ்வொன்றாக அவளைக் கேலி செய்தே இந்த ஒரு வாரமாக புன்னகையுடன் வலம் வந்தான். அதற்கு எதிர்மாறாக காயத்ரி நொந்து போனாள். ஆயிரத்து ஒன்றாம் முறையாக அன்றைக்கு மது குடித்ததற்கு தன்னையே திட்டிக் கொண்டாள்.
காலையில் எழுந்து மருத்துவமனைக்கு கிளம்பி கொண்டிருந்தாள் காயத்ரி. வெளியே ஏதோ வாகன சத்தம் கேட்க, எட்டிப் பார்த்தாள். ஷண்முகிதான் கையில் பையோடு வந்தார். அவரைப் பார்த்ததும் ஒரு நொடி திகைத்தாலும் இவளது முகம் மலர்ந்தது.
“அம்மாச்சி... என்ன சொல்லாம கொள்ளாம வந்திருக்க?” எனக் கேட்டபடியே தலையைப் பின்னலிட்டாள்.
“ஏன்டி... ஃபோன் பண்ணி சொல்லலைன்னா வீட்டுக்குள்ள விட மாட்டீயா நீ?” என அவள் இடுப்பில் இடித்தவாறே உள்ளே நுழைந்தார்.
“விஷயம் இல்லாம வர மாட்டீயே நீ? சொல்லு!” காயத்ரி அவரை சந்தேகமாகப் பார்க்க, “அதான் நீயே சொல்றீயே... எல்லா நல்ல விஷயம்தான். சாயங்காலம் உன்னைப் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வராங்க...” என அவர் சிரிப்புடன் கூறவும், இவளது முகம் மாறியது.
“அம்மாச்சி... யாரைக் கேட்டு வர சொன்ன நீ?” அவள் பல்லைக் கடித்தாள்.
“யாரைடி கேட்கணும்? ஹம்ம்... யாரைக் கேட்கணும். ஒழுங்கா சாயங்காலம் பொண்ணா அடக்க ஒடுக்கமா வந்து நிக்கிற!” என அவர் வெடுக்கென கூற, தந்தையைத் திரும்பி பார்த்தாள்.
“பையன் ரொம்ப நல்லவன் மா. உனக்கு கூடத் தெரியுமே!” என அவர் ஆரம்பிக்க, “ப்பா... நான் கிளம்பறேன்...” எனக் கைப்பையை எடுத்துக் கொண்டு கோபமாக கிளம்பிவிட்டாள். மனதில் சட்டென ஒரு பயம். என்னத்தான் தன்னை மீறி எதுவும் நடக்காது என்றாலும் அவர்கள் உணர்வு ரீதியாக அவளைத் தாக்கினால் என்ன செய்வது என மனம் தவித்துப் போனது. மருத்துவமனையை அடைந்ததும் ரகுராமிற்கு அழைத்துவிட்டாள்.
அவளது அழைப்பை எதிர்பார்த்தான் போல. சிரிப்புடன் ஏற்றுக் காதில் பொறுத்தியவன், “சொல்லுடி குடிகாரி!” என்றான் குறும்பாய். உதடுவரை வண்ண வண்ணமாக வார்த்தைகள் வந்தப் போதும் அதை விழுங்கியவள், “ராம்... நான் முக்கியமான விஷயம் பேசக் கூப்ட்டேன்!” என்றாள் இழுத்துப் பிடித்த பொறுமையுடன்.
“ஓ... என்ன விஷயம் குடிகாரி?” அவன் கேட்க, “அது... அது அம்மாச்சி ஊர்ல இருந்து வந்திருக்காங்க...” என்றாள் தயங்கியபடியே.
“ஓ... பேப்பர்ல ஹெட் லைனா போட்றலாமா காயூ?” அவன் கேலியாகக் கேட்க, “ப்ம்ச்... அவங்க எனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்காங்களாம். ஈவ்னிங் அவன் என்னைப் பார்க்க வரானாம்!” பல்லை நறநறத்தாள் பெண்.
“கங்கிராட்ஸ் காயூ. பையன் என்ன பண்றான்? ஃபோட்டோ பார்த்தீயா?” என அவன் வேறு கேட்கும் முன்னே அவள் அழைப்பைத் துண்டித்திருக்க, இவன் வாய்விட்டுச் சிரித்தான். அங்கோ காயத்ரி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அமர்ந்திருந்தாள். மதியம் வேலை முடிந்ததும் வீட்டிற்கு செல்லாது நீண்ட நாட்களாக தன்னை காண வேண்டும் என்று அழைத்த தோழியின் வீட்டிற்கு சென்றாள். அவளுக்கு குழந்தை பிறந்ததும் இவள் பார்க்க செல்லாதிருக்க, இன்றைக்கு குழந்தைக்குப் புது உடை ஒன்றை எடுத்துச் சென்று மதிய பொழுதை அங்கே கழித்து வேண்டும் என்றே வெகு தாமதமாய் வீட்டிற்கு வந்தாள்.
வெளியே நிறைய காலணிகள் கிடந்தன. வாயிலில் ரகுராமின் மகிழுந்துதான் நின்றிருந்தது. அவளிருந்த மனநிலையில் அதெல்லாம் கண்ணிலும் கருத்திலும் பதியவில்லை. முகத்தைக் கடுகடுவென வைத்துக் கொண்டே வந்தவள் உள்ளே நுழைந்ததும் கௌதமி தேவராஜைப் பார்த்து அதிர்ந்து நின்றாள். ரகுராம் அவளைப் பார்த்து கண்ணை சிமிட்டி முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
அவனை யாருமறியாமல் முறைத்தவள்,”வாங்கமா, வாங்கப்பா!” என அவர்களை அழைத்தாள். தான் அங்கே நிற்பதா? செல்வதா? எனத் தெரியாது அவள் தடுமாற,
“ஏன்டி... சாயங்காலம் சீக்கிரம் வர சொன்னா இப்படித்தான் லேட்டா வருவீயா நீ? அவங்க உனக்காகத்தான் காத்திருக்காங்க. நீ சாவகாசமா வர்ற?” என்ற ஷண்முகி அவளைக் கடிய, சங்கடமாக வந்தவர்களைப் பார்த்தாள் அவள்.
“அட பரவாயில்லை மா... புதுசா அவளைப் பார்க்க என்ன இருக்க? நான் வளர்த்தப் புள்ளை காயத்ரி...” என்ற கௌதமி எழுந்து சென்று அவளது தலையில் பூவை வைத்துவிட்டார்.
“அப்போ சரிம்மா... ஒரு நல்ல நாளா பார்த்து கல்யாணம் வச்சுக்கலாம். உங்களுக்கு சம்மதம்தானே?” தேவராஜ் கேட்டதும் தங்கராஜ் மகளது முகத்தைப் பார்த்தார்.

அவள் சம்மதமாக தலையை அசைக்க, “சந்தோஷம்ங்க. அப்படியே செஞ்சுடலாம்!” என மேலும் சில பல நிமிடங்கள் பேசிவிட்டு அவர்கள் சென்றதும் ஷண்முகி காயத்ரி தலையில் வலிக்காது கொட்டிவிட்டு அகல, அவள் அறைக்குள் நுழைந்து உடைமாற்றினாள். பின்னர் தாயின் சேலையை எடுத்துக்கொண்டு கட்டிலில் படுத்தாள். அவளுக்கு இந்த நொடியை உரண வேண்டியிருந்தது. நடந்தது எதுவும் பொய்யில்லை என மனம் மெதுவாய் நம்பத் தொடங்கியது. மனம் நிறைந்து கிடந்தது.
தேவராஜ் கூறியது போல அடுத்த இரண்டு வாரங்களில் நல்ல நாள் ஒன்று இருப்பதாக ஷண்முகியிடம் பேச, இருவீட்டு பெரியவர்களும் கலந்து கொண்டு அந்த நாளிலேயே திருமணம் வைக்கலாம் என உறுதியானது. நிச்சயதார்த்தம் வேண்டாம். கோவிலில் எளிமையாக திருமணத்தை நடத்தி முடித்தி கோவில் மண்டபத்திலே உணவை ஏற்பாடு செய்யலாம் என அனைவராலும் ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. காயத்ரி அனைத்தையும் கவனித்தாலும் எதிலும் கலந்து கொள்ளவில்லை. பெரியவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என விட்டுவிட்டாள். ரகுராமை மட்டும் முறைத்துக் கொண்டே சுற்றினாள். அவனும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவளைக் கேலி செய்ய மறக்கவில்லை.
இவர்கள் திருமண விஷயம் கேள்விப்பட்டதும் யுக்தேஷ் கொதித்து போய் ரகுராமிற்கு அழைத்துவிட்டான். “மச்சான், உனக்கு மினிட்ஸ்டர் பொண்ணோட கல்யாணம் நடக்கலைன்னா எம்.எல்.ஏ பொண்ணைக் கட்ட வேண்டியதுதானே டா? எதுக்கு டா என் வாழ்க்கைல குறுக்க வர்ற. அவ என் காயத்ரி டா!” தாறுமாறாக கோபம் பொங்கியது.
அலைபேசியைத் தூர வைத்துக் காதைக் குடைந்த ரகுராம், “மச்சான் கூல் டா. எதுக்கு இவ்வளோ கோபம். என்ன, காயத்ரியை நான் கல்யாணம் பண்ணிக்க கூடாது. அவ்வளோதானே?” என சாவகாசமாக கேட்டான்.
“ஆமா டா... ஐ லவ் ஹெர்!” யுக்தா பல்லைக் கடித்தான்.
“ஓகே... அவளை நான் கல்யாணம் பண்ணலை. நீ அவகிட்டே பேசு. அவ உன்னை பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டா இப்பவே இந்த மேரேஜை நான் கால் ஆஃப் பண்ணிட்றேன்!” ரகுராம் குரல் இறுமாந்து வந்தது.
“ஓஹோ... அவ்வளோ நம்பிக்கை உனக்கு?” அவன் சீற,
“டெபனட்லி யுக்தா. யூ க்நோ, இந்த ஜென்மத்துல என்னைத் தவிர யாரையும் அவ கல்யாணம் பண்ணிக்க மாட்டா!” என்றான் அழுத்தமாய்.
“டேய்! டேய். கதை விடாத டா. நான் காயூகிட்டே பேசுறேன். நீதான் அவளைக் கன்வின்ஸ் பண்ணி இருப்ப. மேரேஜ் நின்னு போன விரக்தியில இப்படி பண்ணி இருப்ப. அவ என்னோட காயூ. நான் நான் அவளை விட்டுத் தர மாட்டேன் ராம்!” அவன் படபடவென பொரிய, இவனுக்கு சிரிப்பு வந்தது.
“பெஸ்ட் ஆஃப் லக் மச்சான்!” என ராம் அழைப்பைத் துண்டித்தான். ஏனோ மனம் யுக்தாவின் கோபத்தில் அற்ப சந்தோஷத்தை அனுபவித்தது.
‘அந்த ரெண்டு நாளும் என்னை எவ்ளோ கதற விட்டடா. இப்போ நீ கதறு!’ என மனதிற்குள் கூத்தாட்டம் போட்டான் ரகுராம்.
அங்கே காயத்ரிக்கு அழைப்பை விடுத்தான் யுக்தேஷ். அவனது பெயரைப் பார்த்தும் இவளது முகத்தில் முறுவல் பிறந்தது. கடந்த இரண்டு மாதங்களாக அவன் படிப்பில் வெகுவாய் நேரம் செலவழித்ததால் இவளிடம் பேச முடியவில்லை. இருந்தாலும் அவ்வப்போது குறுஞ்செய்திகளைப் பகிர்வான்.
“என்ன யுக்தா, ஃபைனல் ப்ராஜெக்ட் சப்மிட் பண்ணிட்டீயா? எல்லாம் ஓவரா?” எனக் கேட்டாள்.
“இப்போ நான் அதுக்கு கால் பண்ணலை காயூ. கௌதமி அத்தை கால் பண்ணி உனக்கும் ரகுவுக்கும் மேரேஜ்னு சொல்றாங்க. அது உண்மையா?” எனக் கேட்டான். சில நொடிகள் தடுமாறிய காயத்ரி, “ஆமா யுக்தா!” என்றாள் மெல்லிய குரலில்.
“ஷிட்... ஏன் காயூ இப்படி பண்ற? யு க்நோ தட் ஐ லைக் யூ வெரி மச். நீ... நீ அவனுக்கு எப்படி ஓகே சொல்லலாம். நான் உன்கிட்ட ஏற்கனவே என் ப்ரபோசலை வச்சிருந்தேனே காயூ...” ஆதங்கமாய் கேட்டான். அவன் கூற்றில் இவளுக்கு பெருமூச்சு எழுந்தது.
“யுக்தா... நான் அப்பவே அதுக்கான பதிலை சொல்லிட்டேன். உனக்கு ஹோப் கொடுக்குற மாதிரி எந்த இடத்துலயும் நடக்கலை நான். அண்ட் உன்னை ஒரு ஃப்ரெண்டா எனக்கு ரொம்ப பிடிக்கும். பட், அதுக்கும் மேல எதுவும் இல்ல!” என்றாள்.
“ஏன் காயூ? அதான் ஏன்னு கேட்குறேன். எனக்கு உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும். படிப்பு முடிஞ்சதும் கண்டிப்பா உன்னைக் கன்வின்ஸ் பண்ணி வீட்ல பேசலாம்னு நினைச்சிட்டு இருந்தேன். பட் இடையில இந்த ரகு வேற‌. எனக்குத் தெரியும். அவன்தான் உன்னை எதாவது சொல்லி ஏமாத்தி இருப்பான். ராஸ்கல்!” யுக்தா புலம்பியதும் இவளுக்கு சிரிப்பு வந்தது.
“யுக்தா... உண்மையா நான் ஒன்னு சொல்லவா? ஐ லவ் ராம்!” என்றாள் அவனுக்குப் புரிய வைத்திடும் நோக்கோடு.
“பொய்... என்னை சமாளிக்க நீ பொய் சொல்ற காயூ. ரகு இப்படி சொல்ல சொன்னானா? அவனும் உன்னை லவ் பண்றான்னா அப்புறம் ஏன் சைந்தவியோட மேரேஜ்க்கு ஓகே சொன்னான்? அவன் உன்னை சீட் பண்ண பார்க்குறான். நீ அவனை நம்பாதே” அவன் கோபத்தில் பல்லைக் கடித்தான்.
“லுக் யுக்தா, உனக்கு நான் சொல்றது புரியுதா இல்லையா? ஐ லவ் ஹிம் அ லாட். இதுல எந்தப் பொய்யும் இல்ல அண்ட் ராம் என்னை சீட் பண்ணவும் இல்ல. அவனைப் பத்தி தப்பா பேசுன, உன் நம்பரை ப்ளாக் பண்ணிடுவேன்...” இவளும் எரிச்சலாகப் பேசினாள்.
“ஓஹோ... உனக்கு அவனைப் பிடிச்சிருக்கு சரி. அவனோட மேரேஜ் நிக்கலைன்னா என்ன பண்ணி இருப்ப? எனக்கு ஓகே சொல்லி இருப்ப தானே? நான் உன்னை நல்லா பார்த்துப்பேன் காயூ!” ஆதங்கமாய் பேசினான்.
“யுக்தா, சைந்தவியோட ராம்க்கு மேரேஜ் நடந்திருந்தாலும் நடக்கலைனாலும் நான் உனக்கு ஓகே சொல்லி இருக்க மாட்டேன். ஏன்னா ராமை தவிர என் வாழ்க்கைல யாருக்குமே இடம் இல்லை. அவனுக்கு வேற கல்யாணம் நடந்தே இருந்தாலும் நடக்கலைனாலும் ஐ லவ் ஹிம். அதுல எந்த மாற்றமும் இல்ல. அப்படின்னா ராம் தவிர யாரையும் இந்த ஜென்மத்துல கல்யாணம் பண்ணியிருக்க மாட்டேன். இதுக்கும் மேல இதைப் பத்தி பேசாதே. நீ கல்யாணத்துக்கு வா. நம்ப பேசிக்கலாம்!” கோபமாய் ஆரம்பித்தாலும் அவனுக்காகப் பார்த்து பொறுமையாய் பேசினாள்.
“ஓஹோ... நீங்க ரெண்டு பேரும் என் கண்ணு முன்னாடியே கல்யாணம் பண்ணிப்பிங்க. நான் அதைப் பார்க்க வரணுமா? சாரி காயூ. எனக்கு அவ்வளோ பெரிய மனசில்லை. எனிவே ஹேப்பி மேரீட் லைஃப். நீ சந்தோஷமா இரு!” என அவன் கோபத்தில் அழைப்பைத் துண்டிக்க, இவளுக்கு வருத்தமாகிப் போய்விட்டது. இரண்டு நாட்களாக முயற்சி செய்து அவனிடம் பேசி நடந்தவற்றை ஓரளவிற்குப் புரிய வைத்து திருமணத்திற்கு வர ஒப்புக் கொள்ள வைத்த போது இவளின் மொத்த ஆற்றலும் வடிந்து போயிருந்தது.
தேவராஜ் மிகவும் நெருங்கிய சொந்தங்களை மட்டும் திருமணத்திற்கு அழைத்திருக்க, ஷண்முகியும் அவ்வாறே ஊர்க்காரங்களில் சொந்தங்களை மட்டுமே அழைத்திருந்தார். பெரிதாய் விமர்சியாகப் பத்திரிகை அடிக்கவில்லை. ஷண்முகி அவர்கள் காலத்தில் இருந்தது போல மஞ்சளும் ரோஜா நிறமும் சேர்ந்த எளிமையான பத்திரிக்கையை தேர்வு செய்து தங்கராஜிடம் கொடுக்க, அவரும் ஊரில் உள்ள உறவினர்களுக்கு அழைப்பைவிடுத்தார். அதோ இதோவென திருமணமும் எளிமையாக முடிந்திருந்தது.

தொடரும்...



























































 
Member
Messages
67
Reaction score
55
Points
18
Eagerly waiting for a next epi sis
 
Top