• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,091
Reaction score
3,124
Points
113
இஷ்டம் – 16 💖
கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்திருந்த காயத்ரியின் மனம் ஆழ்ந்த அமைதியில் திளைத்திருந்தது. உணவு உண்ண விருப்பமில்லை. இருந்தும் ஷண்முகி விடமாட்டார் என்பதை உணர்ந்து ஒரு தோசையை மட்டும் கடினப்பட்டு விழுங்கிவிட்டு அறைக்குள் நுழைந்தாள். எதுவும் செய்யாது அறையையே வெறித்திருந்தால் மனம் கற்பனைகளை வாரியிறைத்து காயம்பட்ட மனதை இன்னுமே கீறிவிடும் என எண்ணி அருகே மேஜையில் அடுக்கப்பட்டிருந்த ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு அமர்ந்தாள்.
பக்கங்களை விரல்கள் புரட்ட, விழிகள் எழுத்துக்களை மேய்ந்தாலும் மனதில் எதுவுமே பதியவில்லை. வெளியே ஏதோ வாகனச் சத்தம் கேட்டது. இவள் எழுந்து செல்ல முனையவில்லை. தன் வேலையைத் தொடர்ந்தாள்.
“என்னப்பா ரகு, வா வா!” என்ற ஷண்முகி அவன் பட்டுவேட்டி சட்டையில் வந்ததும் ஒரு நொடி தயங்கினார். அவனுக்கு என்றைக்கு திருமணம் என பெரியவருக்கு நினைவில் இல்லை.
“பாட்டி, காயூ...” என அவன் தயங்க, “ரூம்க்குள்ளதான் இருக்காப்பா!” என்றவர், “உன் கல்யாணம் என்னைக்குப்பா? காயத்ரி கிட்டே கேட்க மறந்துட்டேன். நானும் மாப்பிள்ளையும் நிச்சயம் வரோம் பா!” என அவர் கேட்க, பெருமூச்சை இழுத்து வெளிவிட்டவன், “தேதி மாத்திட்டோம் பாட்டி‌. நான் உங்களுக்கு சொல்றேன்!” என்றான். அவருக்கு என்னவென கேட்க மனம் பரபரத்தாலும் அவனது சோர்ந்த முகம் கேள்வி கேட்க விடவில்லை.
“சரிப்பா!” என்றவர் அகல, இவன் அவளது அறைக்குள் நுழைந்தான். காயக்ரிக்கு ரகுராம் குரல் செவியில் விழுந்ததுதான். ஆனாலும் அது தன் பிரேமை என நினைத்துப் புறந்தள்ளினாள்.
மெதுவாய் காலடிகள் அருகே கேட்கவும் நிமிர்ந்து பார்த்தவளின் முகம் ஒரு நொடி அதிர்ந்து போனது. “ராம்... ராம், நீ... நீ இங்க என்ன பண்ற? மண்டபத்துல தானே இருக்கணும். சைந்தவி... சைந்தவி?” என்னக் கேட்பது எனத் தெரியாது அவள் தடுமாற, ரகுராம் கட்டிலில் அமைதியாய் அமர்ந்தான். அவனிடம் எந்தப் பதிலும் இல்லை. இவளுக்கு மனம் தடதடத்தது.
“ராம்... உன்கிட்டதான் டா கேட்குறேன்? எதுக்கு இப்போ நீ இங்க வந்த? முதல்ல மண்டபத்துக்கு கிளம்பு? எதுனாலும் அப்புறம் பேசிக்கலாம்!” என்றாள் அதட்டலாய். அவன் அசையாது அமர்ந்திருந்த விதத்தில் இவளுக்கு பதறிப் போனது.
“ராம்... கிளம்பு டா!” என்றாள் கலங்கிய குரலில். அவன் நிமிர்ந்து அவளை நிதானமாய் பார்க்க, காயத்ரியின் விழிகள் மெல்ல கலங்கப் பார்த்தன.
“ராம்!” என அவள் தயங்க, “போ... போன்னா எங்க போறது டி? உன்னைவிட்டு எங்க போக சொல்ற?” எனக் கோபமாய் இரைந்தவனிடம் என்னவென பதிலுரைப்பது எனத் தெரியாது காயத்ரி தடுமாறினாள்.
“எனக்கும் சைந்தவிக்கும் நடக்க இருந்த மேரேஜ் ஸ்டாப் ஆகிடுச்சு!” என அவன் கூறியதும் இவளுக்கு நெஞ்சம் திடுக்கிட்டுப் போனது. அவனை அதிர்ந்து பார்த்தாள்.
“பொய் சொல்லாத ராம். யுக்தா வீடியோ கூட அனுப்புனானே?” என இவள் பதற்றம் மேலிடக் கேட்க, “அந்த வீடியோவ இன்னொரு டைம் பாரு டி. அது நான் இல்லை. சைந்தவியோட காலேஜ் சீனியர்!” என்றான் அவளை உறுத்து விழித்து.
காயத்ரி அலைபேசியை எங்கே வைத்தேன் எனத் தெரியாது அதனை துழாவி எடுத்து யுக்தா அனுப்பிய காணொளியை நன்றாய் பார்த்தாள். முதல்முறையாக முழு மனதோடு பார்க்க முடியாது எனத் தோன்றியதும் படக்கென அணைத்துப் போட்டிருந்தாள். இப்போது உற்றுப் பார்க்கவும் அது ரகுராம் இல்லை எனத் தெரிந்த போது அவனை நிமிர்ந்து பார்த்தவள், “என்னாச்சு ராம்?” என தவிப்புடன் கேட்டாள்.
அவனிடம் மௌனம் மட்டுமே.
நடந்ததை அவளிடம் இப்போது சொல்லும் மனநிலையில் அவன் இல்லை எனப் புரிந்து போக, “ராம், நான் இப்படியாகும்னு நினைக்கலை ராம். சைந்தவி... நான் அவங்களை இப்படி எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லை. நீயும் அவங்களும் மேரேஜ் பண்ணி சந்தோஷமா வாழ்றதைப் பார்க்க்தான் ராம் ஆசைப்பட்டேன் ராம்!” என்றாள் ஆதங்கமாய். எப்படி இந்தப் பெண் என்னுடைய ராமை இப்படி விட்டுவிடலாம் என மனம் புழுங்கியது.
“நிஜமா நாங்க சந்தோஷமா வாழ்றதைப் பார்த்து நீ சந்தோஷப்பட்டிருப்பீயா காயூ?” என அவன் அழுத்திக் கேட்க, இவளது முகம் மாறியது.
“ராம்.‌.‌. என்னை சந்தேகப்படுறீயா டா?” எனக் கேட்டவளுக்கு மனம் கனத்துப் போனது.
“அப்போ நான் சந்தோஷமா வாழ்றதுதான் உனக்கு ஹேப்பி. ரைட்?” அவன் கேட்க, “கண்டிப்பா ராம்‌. எனக்குப் பொறாமை எல்லாம் இல்ல டா. நிஜமா டா. நீ சிரிக்குறதைப் பார்த்தா என் கஷ்டம் எல்லாம் காணாம போய்டும் டா!” என்றாள் கன்னத்தில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டு.
“ஹம்ம்... அப்புறம் ஏன் காயூ ரெண்டு நாளைக்கு முன்னாடி அப்படி பேசுன? எப்படி டி நீ அழுறதைப் பார்த்ததுட்டு அவகூட நான் சந்தோஷமா இருப்பேன்னு நினைச்ச. இந்த முகம் அழுது வீங்கிப் போய்ருக்கும் போது நான் சிரிச்சு ஹேப்பியா மேரேஜ் பண்ணுவேன்னு நினைச்சுத்தான் நீ என்கிட்ட ப்ரபோஸ் பண்ணியா டி?” என அவன் கேட்டதும், காயத்ரி வெகுவாய்த் தடுமாறிப் போனாள்.
“ராம்... நான் இன்டென்ஷனலா அதை சொல்லலை டா. அது என்னையும் மீறி நடந்த விஷயம். நான் உன்கிட்ட அப்படிலாம் பேசணும்னு நினைக்கவே இல்லை. யூ க்நோ மீ வெரி வெல். என் மனசுல இருக்கதை சொல்லணும்னா நான் இவ்வளோ தூரம் வர விட்டிருக்க மாட்டேன். இப்படியொரு சிட்சுவேஷன்ல உன்னை வச்சிட்டு நான் மனசுல இருக்கதை சொல்லி கஷ்டப்படுத்தி இருக்க மாட்டேன் டா. நீ ஹேர்ட் ஆகியிருக்கன்னு எனக்குப் புரியது. பட், அதுக்காக என்னை இப்படி ஜட்ஜ் பண்ணாத டா. அது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். தப்புதான், என் ராம்னு வரும்போது சரி தப்பெல்லாம் கண்ணுக்குத் தெரிய மாட்டுது டா. நான் என்ன பண்ண?” என்றாள் தொண்டை அடைக்க, கண்களில் கண்ணீர் பெருகியது. ஏனோ ரகுராம் அவளைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றியதை அவளால் ஏற்க முடியவில்லை. அவனுடைய சந்தோஷத்தில் தானே அவளுடைய சகலமும் அடங்கி இருக்கிறது. அப்படி இருக்கையில் அவனைக் கஷ்டப்படுத்தவெல்லாம் அவளால் முடியாதே என நினைத்ததும் விம்மி அழுகை வெடிக்கப் பார்த்தது‌.
அவள் அழுவதை அமைதியாய் பார்த்த ரகுராம், “அப்புறம் ஏன் முன்னாடியே சொல்லலை?” எனக் கேட்டான்.
அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லத் தடுமாறியவள், “நான் உனக்குப் பொருத்தமானவ இல்லை ராம்!” என்றாள் நிராசையாய். அன்றைக்கு அவள் கண்களில் தெரிந்த அதே வலிதான் இன்றும். இவனுக்கும் அதிகமாய் வலித்தது.
“அப்படின்னு யார் சொன்னா?” ரகுவின் குரல் முழுவதும் அழுத்தம்தான்.
“யார் சொல்லணும்னு நினைக்கிற டா. எனக்கே தெரியாதா என்ன? நீங்க வேற, நான் வேற. உன் அப்பா, அம்மா உனக்கு பார்த்த சைந்தவியோட ஸ்டேடட்ஸ் என்ன? அவங்க குடும்ப பாரம்பரியம் என்ன?” என கொஞ்சம் நிமிர்ந்து அமர்ந்து கொண்டு தெளிவாக உரைத்தாள்.
“ஓஹோ... என்ன நாங்க வேற? நீ வேற? இத்தனை நாள் என்கூடப் பழகும்போது அந்த வேற வேற உனக்குத் தெரியலையா காயூ?” என அவன் கேட்க, இவளது முகத்தில் வருத்த முறுவல் பிறந்தது.
“ப்ரெண்ஷிப்க்கு ஸ்டேடட்ஸ் தேவையில்ல ராம். பட் மேரேஜ்னா இந்த கசப்பான ரியாலிட்டியை நாம அக்செப்ட் பண்ணிக்கணும் ராம். உங்கப்பா உனக்கு டாக்டர் பொண்ணு தானே பார்ப்பாரு. கஷ்டப்பட்டு உன்னை ஒரு நிலைக்கு கொண்டு வந்தவங்களுக்கு உன் மேரேஜ்ல எக்ஸ்பெக்டேஷன் இருக்கதுல தப்பு எதுவும் இல்ல ராம்?” என்றாள் புன்னகைக்க முயன்று தோற்ற உதடுகளுடன். விழிகளில் உவர் நீர் சுரந்து முகத்தை ஈரம் செய்தது. அவன் பதிலேதும் உரைக்கவில்லை.
“குடிகாரன் பொண்ணை எல்லாம் உங்கப்பா ஏத்துக்க மாட்டாரு ராம். குடிகாரரோ நல்லவரோ கெட்டவரோ, என் அப்பா அவரு. அம்மா போனதுக்குப் பின்னாடி தனக்கொரு வாழ்க்கையைத் தேடீட்டு என்னை எங்கேயும் விட்டுடாம இத்தனை நாள் பார்த்துக்கிட்ட மனுஷன். என்ன இருந்தாலும் என் அப்பா எனக்கு உசத்திதானே. அதனாலே அவர் எங்கேயும் தலை குனியறதுலயோ இல்ல அவமானப்பட்றதுலயோ எனக்கு விருப்பம் இல்ல. அதுவும் இல்லாம என்னோட நிலைமை என்னென்னு எனக்கு நல்லா தெரியும் ராம். யெஸ் எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் தான். அதுக்காக பிடிச்சவங்க எல்லாரையும் பக்கத்துலயே வச்சுக்க முடியுமா என்ன? அதுக்கெல்லாம் ஒரு குடுப்பனை வேணும் இல்ல? அது எனக்கில்லை டா. அதனால்தான் நான் எதையும் உன்கிட்ட சொல்லை. உன் கோபம் எனக்குப் புரியுது. பட் நிதானமா யோசிச்சா, நான் செஞ்சதுதான் சரின்னு உனக்குப் புரியும்!” என்றவள், “கல்யாணம் நின்னது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு டா. பட் பரவாயில்லை, சைந்தவி உனக்கானவங்க இல்லை. வேற நல்ல பொண்ணா பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கோ ராம். சந்தோஷமா வாழு டா. அதைப் பார்த்தா எனக்கு நிம்மதி வரும். இல்லை நானே பொறாமைபட்டு உன் வாழ்க்கை இப்படியாகிடுச்சோன்னு எனக்கு கில்ட் இருந்துட்டே இருக்கும் டா!” என்றாள் தூர இருந்தே. அருகே சென்று அவனது கையைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் சொல்ல மனம் பரபரத்தாலும் அமைதியாய்தான் பேசினாள். ஆனாலும் குரலில் உறுதியிருந்தது.
“அப்பா என்ன சொன்னாரு உன்னை?” அவன் கேட்கவும், காயத்ரி முகம் மாறினாலும் நொடியில் சமாளித்தவள், “அவர் என்ன சொல்லணும் ராம்?” என்றாள் இயல்பாய்.
“பொய் சொல்லாத காயூ!” அவன் அதட்ட, “நான் எதுக்குப் பொய் சொல்லணும். அவர்கிட்டே நான் பேசி நீ பார்த்திருக்கீயா? அப்படி இருக்கும்போது அவர் என்ன சொல்லி இருப்பாரு?” என வெகு சாதாரணமாக கேட்டாள்.
தலையை இடம் வலமாக அசைத்தவன், “அவர் ஏதோ சொல்லி இருக்கணும். அதான் நீ வீட்டுக்குள்ள வர்றதில்லை. என்கிட்ட ரொம்ப டிஸ்டன்ஸ் மெய்ன்டெய்ன் பண்ற. ரைட்?” அவன் சரியாய்க் கேட்க, காயத்ரி வாயிலிருந்து ஒரு வார்த்தையை வாங்க இயலவில்லை.
“சரி, நான் இன்னொரு பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழுவேன். நீ என்ன பண்றதா இருக்க?” எனக் கேட்டான். அந்தக் கேள்விக்கு இவளிடம் பதிலில்லை.
“உன்கிட்டதான் கேட்டேன். என்ன பண்ண போற? என் சந்தோஷம் தான் முக்கியம்னு நான் கல்யாணம் பண்ணதும் என் கண்ணு முன்னாடி இப்படியே தனியா இருந்து என்னை சாவடிக்கணும். அதானே?” அவன் கோபத்துடன் கேட்க, காயத்ரியின் விழிகள் நிரம்ப பார்த்தன.
“உன் கண்ணு முன்னாடி வர மாட்டேன்னு சொன்னதா ஞாபகம். அப்படியொன்னும் உன்னைக் கஷ்டப்படுத்துற எண்ணம் எனக்கில்லை ராம். என் வாழ்க்கையை நான் பார்த்துக்கிறேன். நீ அதைப் பத்தி கவலைப்படாதே!” என்றாள் ரோஷத்துடன்.
“ஓ... உன் வாழ்க்கையைப் பத்தி கவலைப்பட எந்த உரிமையும் எனக்கில்லைல?” என அவன் கேட்டுக் கொண்டே எழுந்து வர, “ஆமா... என்னதான் ஃப்ரெண்டா இருந்தாலும் என் பெர்சனல் ஸ்பேஸ்ல நுழையாத நீ?” கோபமாய் கூறினாள். அப்படி உரைத்தால்தானே அவனை எட்ட நிறுத்த முடியும்.
அவளது அடிபடாத கையைப் பிடித்தவன், “அப்புறம் என்னத்துக்கு டி என் வாழ்க்கைல நீ தலையிடுற. நான் சந்தோஷமா இருந்தா என்ன? நாசமா போனா என்ன?” என குரலை உயர்த்தினான்.
“ராம் ப்ளீஸ், அம்மாச்சி இருக்காங்க. நீ... நீ கிளம்பு. அப்புறம் பேசிக்கலாம்!” எனக் கையை உருவ முயன்றாள். ஆனால் முடியாது போனது.
“ம்கூம்... எனக்கு இப்பவே பேசணும். சொல்லுடி... என் சந்தோஷம் உனக்கு முக்கியம். ஆனால் நான் மட்டும் நீ எக்கேடு கெட்டுப் போக்கட்டும்னு விடணும். எப்படி காயூ நீ இப்படி பேசுற?” என ஆதங்கத்தில் இரைந்தவன், “என்னதான் டி நினைச்சிட்டு இருக்க‌. ரெண்டு நாள்ல கல்யாணம் வச்சிருக்கவன்கிட்ட வந்து பிடிச்சிருக்குன்னு சொல்ற. ஆனால் கல்யாணம் பண்ண இஷ்டம் இல்லை. எங்க இருந்தாலும் வாழுன்னு சொல்வ? அன்னைக்கு நீ பேசி அழுதப்ப எப்படி இருந்துச்சுன்னு தெரியுமா டி? உன்னை அழவே விடக்கூடாதுன்னு நினைக்கிற என்கிட்டவே அழற? என்ன பண்ண சொல்ற நீ என்னை? இந்தக் கல்யாணம் அதுவா நிக்கலைன்னா நான் வேறொருத்தி புருஷனாகிருப்பேன். அதைப் பார்த்துட்டு நீ ஒவ்வொரு நாளும் அழுதுருப்ப. அப்படி உன்ன அழ வச்சிட்டு நான் என்னத்தை டி சாதிக்கப் போறேன். முன்னாடியே சொல்றதுக்கு என்ன? என்கிட்ட என்ன காயூ உனக்கு தயக்கம்? ஹம்ம்... பொய் பேசுறல்ல நீ? அதுவும் என்கிட்ட? என் ராம், என் ராம்னு சொல்றதெல்லாம் வெறும் வாய் வார்த்தை. அதான் பெர்சனல் மயிறுன்னுட்டீயே!” என அவன் பேச்சோடு அவளது கரத்தை அழுத்திப் பிடிக்க, காயத்ரியின் விழிகளில் சரசரவென நீர் வழிந்தது. காலையில் அவனுக்குத் திருமணம் என்ற செய்தியை கிரகித்து உள்ளே அனுப்பும்போதே அவளது பாதி உயிர் போயிருந்தது. உடலில் உள்ள அனைத்து ஆற்றலும் வடிந்து போயிருக்க, இவன் அழுத்தியதில் வலித்தது.
“ராம்... வலிக்குது ராம். கையை விடு டா!” என்றாள் அழுகும் குரலில். பட்டென அவளைவிட்டவன் கையைத் தலையில் தாங்கி கட்டிலில் பொத்தென அமர்ந்தான்.
“எனக்கும் வலிச்சது காயூ? ரெண்டு நாளா பைத்தியம் மாதிரி இருந்தேன் டி. நீ... நீ ஒருநாள் அழுதாவே என்னால தாங்கிக்க முடியாது. அன்னைக்கு அதுவும் கட்டிப் புடிச்சு முத்தம் கொடுத்து என்னமோ கடைசியா என்னைப் பார்க்குற மாதிரி ட்ரீட் பண்ணப்போ நான் எப்படி இருந்திருப்பேன்னு உனக்குப் புரியலையா காயூ? என்னை ஹேர்ட் பண்ண கூடாதுன்னு நினைச்சே என்னை ரொம்ப கஷ்டப்படுத்துற காயூ? ஐ ஹேட் யூ டி!” என்றான் குரல் உடைய. காயத்ரிக்கு தொண்டை அடைத்தது.
“ராம்... சாரி டா. சாரி. நான் ரொம்ப கெட்டப் பொண்ணு ராம். உன்னைக் கஷ்டப்படுத்துறேன்ல. ஆனால் அதெல்லாம் நானா பண்ணலை டா. யார் மேலயோ கோபம். ம்கூம்...‌என் விதி மேலதான் டா கோபம். ஏன் எனக்கு உன்னைப் பிடிக்கணும்னு எத்தனை நாள் அழுதுருக்கேன் தெரியுமா ராம். உன் இடத்துல யாரையுமே வச்சுப் பார்க்க முடியாது ராம். நான் சொன்னேன்ல, உன் கூட இருக்கறப்பலாம் அம்மா கூட இருக்க மாதிரி ஒரு சேஃப் சோன்ல இருக்குற ஃபீல்னு. நீ ஒவ்வொரு டைம் அக்கறையா எனக்காகப் பார்த்து செய்யுறப்போ கடைசி வரை உன்கூடவே இருக்கணும்னு தோணும் டா. யாருமே இல்லாம அப்பா கூட வளர்ந்ததால நீ என்னைப் பார்த்துக்கும் போது அந்த அன்பை கடைசி வரைக்கும் எனக்கு கிடைக்காதுன்ற ஒரு ஆதங்கம். கோபம், ஆனால் உன் மேல அதைக் காட்டுறது நியாயமே இல்லேன்னு எனக்குப் புரியுது ராம். நீ... நீ உனக்கொரு வாழ்க்கையை தேடீட்டுப் போய்ட்டா, நான் கஷ்டமா இருந்தாலும் ரியாலிட்டியை அக்செப்ட் பண்ணிப்பேன் டா. இப்படித்தான் என் வாழ்க்கைன்னு எனக்கு முன்னாடியே தெரியும் ராம். என்ன என் மனசுல இருந்ததை சொல்லி உன்னைக் கஷ்டப்படுத்திட்டேன்னு வருத்தமா இருக்கு டா. அன்னைக்கு நான் ரொம்ப வீக்கா இருந்தேன் ராம். இப்போலாம் நான் ரொம்ப அழுறேன் டா. என்னாலே கண்ட்ரோல் பண்ண முடியலை. பட் கண்டிப்பா சரியாகிடுவேன். ஐ ப்ராமிஸ் யூ, இனிமே உன்னைக் கஷ்டப்படுத்தவே மாட்டேன் டா!” என்றாள் அவனுக்கு அருகே சென்று அணைத்துக் கொள்ளச் சொல்லிய உந்துதலை அடக்கி. ரகுராம் கண்ணீர் வழிய விசும்பியபடியே பேசிய பெண்ணைப் பார்த்திருந்தான். அவனுக்கும் வலித்ததுதான்.
“இங்க வா காயூ!” என அவன் கையை நீட்டி அவளை அழைக்க, கண்ணீரோடு முடியாது எனத் தலையை அசைத்தாள்.
இவன் எழுந்து அருகே வர, “ராம்... ப்ளீஸ்டா. கிட்ட வராத. நான் ரொம்ப எமோஷனலா இருக்கேன். நீ... பக்கத்துல வந்தா உன்னைக் கட்டிப் பிடிக்கணும்னு தோணும் டா. நீ அங்கேயே இரு!” என அவள் அழுகையை அடக்கிய குரலில் பேச, ரகுராம் அவளை இழுத்து இறுக அணைத்திருந்தான். காயத்ரிக்கு அழுகைப் பொங்கியது. அவன் தோளில் முகம் புதைத்தவள் தேம்பினாள்.
“சாரி ராம்... சாரி‌ டா. நான் உன் வாழ்க்கைல வராம போயிருந்தா நீ நிம்மதியா இருந்திருப்ப டா. உன்னைக் கஷ்டப்படுத்திட்டே இருக்கேன். ட்ரான்ஸ்பர் கிடைச்சதும் இங்க இருந்து போய்டுவேன் ராம். உன் கண்ணுலயே பட மாட்டேன்!” என்றாள் விசும்பியபடியே அவன் கழுத்தில் முகம் புதைத்தாள்.
“ப்ம்ச்... அழறதை நிறுத்து காயூ!” என அவளைப் பிரித்து நிறுத்தி முகத்தை துடைத்துவிட்டவன், “நீ எங்கேயும் போக வேணாம் காயூ. நம்ப கல்யாணம் பண்ணிக்கலாம்!” என்றான். நொடியில் தீச்ச்சுட்டாற் போல விலகியவள், “அது முடியாது ராம்!” என்றாள் உருண்டு திரண்டு நின்ற உவர் நீரை உள்ளிழுத்தபடி.
“அதான் ஏன்?” அவன் ஆதங்கமாய் கேட்க,
“எனக்கு உன்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு எந்த எண்ணமும் இல்ல ராம். நீ உங்க வீட்டுக்கு ஏத்தது போல வேற ஒரு நல்ல பொண்ணா பார்த்துக் கல்யாணம் பண்ணிக்க!” என்றவளை கன்னத்தோடு கன்னமாக அறைய வேண்டும் என்றொரு எண்ணம் உதித்தாலும், பொறுமையை இழுத்துப் பிடித்தவன், “சரி ஓகே, நான் வேற ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்குறேன். பட் ஒரு கண்டிஷன்!” என்றான்.
அவள் நிமிர்ந்து கேள்வியாக பார்க்க, “நான் பார்க்குற பையனை நீ கல்யாணம் பண்ணிக்கணும். அப்புறம் நான் யாரையும் பார்த்து மேரேஜ் பண்ணிக்கிறேன்!” என்றான்.
“ராம்...” என அவனை அதட்டியவள், “அதெல்லாம் என் பர்சனல். தட் இஸ் நன் ஆஃப் யுவர் பிஸ்னஸ்!” என்றவளைப் பார்த்தவன், “ஓகே... அப்போ என் விஷயத்துல நீ தலையிடாத. நான் இனிமே மேரேஜ் பண்ற ஐடியால இல்லை. நீ எப்போ மேரேஜ் பண்றியோ அதுக்கு அப்புறம் நான் பண்றேன். சப்போஸ் நீ சிங்கிளாவே இருந்துட்டா, நான் காலம் முழுக்க அப்படியே இருந்துட்றேன். எனக்கு ஒன்னும் பிராப்ளம் இல்ல!” என்றவனை இவள் கோபமாய் பார்த்தாள்.
“என் வாழ்க்கையை உன்னோட கம்பேர் பண்ணாத ராம். நான் மட்டும்தான் உன்னை லவ் பண்றேன். நீ என்னை ப்ரெண்டா தானே பார்க்குற? அப்புறம் என்னத்துக்கு நீ இந்த மாதிரி பேசுற. ஒழுங்கா கல்யாணம் பண்ணிக்கோ!” அவள் அழுத்தமாகக் கூற, “தட் இஸ் நன் ஆஃப் யுவர் பிஸ்னஸ்!” அவனும் அழுத்தமாகக் கூறினான்.
“ராம் புரிஞ்சுக்கோ டா. என்னால உன்னைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது. என் லைஃப் வேற டா!” என்றாள் அவனுக்காக இறங்கிய குரலில்.
“ஓ... இதெல்லாம் அழுது ப்ரபோஸ் பண்ணி முத்தம் கொடுக்குறதுக்கு முன்ன யோசிச்சுருக்கணும் டி!” அவன் கூறியதும் காயத்ரி முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவளுக்கே அன்று அவள் நடந்து கொண்டது அதிகப்படி என தோன்றிற்று. அதை ரகுராம் வாய் வழியாகக் கூறவும், இன்னுமே மனதிற்குள் சுருங்கினாள். எந்த தைரியத்தில் அவனை முத்தமிட்டாள் என இந்நொடி வரை அவளுக்குப் புரியவில்லை.
“என்னால என் காயூவை விட முடியும்னு தோணலை டி. கல்யாணம் பண்ணீட்டு எதுனாலும் சேர்ந்தே ஃபேஸ் பண்ணலாம்!” என அவன் கூற, இவள் முடியாது என தலையை அழுத்தமாக அசைத்தாள்.
“நான் கிளம்புறேன் காயூ. கோபத்துல அடிச்சிடுவேனோன்னு பயமா இருக்கு!” என்றவன் விறுவிறுவென வெளியேற, காயத்ரி அவனை உணர்வுகளற்றுப் பார்த்திருந்தாள்.
அவன் சென்றதும் இவள் விழிகள் மெலிதாகக் கலங்க, “என்னடி நடக்குது காயத்ரி?” என ஷண்முகி உள்ளே நுழைந்தார். அவர்கள் பேசியதை இவரும் கேட்டுக் கொண்டுதானே இருந்தார். காயத்ரிக்கு இப்போது அதெல்லாம் பெரிதாய் தெரியவில்லை. ரகுராம் வார்த்தைகளே காதில் எதிரொலித்தன.
“உன்கிட்ட தான் கேட்குறேன் காயத்ரி. அந்த ரகு தம்பி என்ன என்னமோ சொல்லிட்டு போறான்!” என ஷண்முகி இவளை உலுக்க, “அம்மாச்சி, அதெல்லாம் ஒன்னும் இல்ல. நீ அப்பா கிட்ட இதெல்லாம் சொல்லிட்டு இருக்காத. வேலை இருந்தா பாரு. ராம் ஏதோ உளறிட்டுப் போறான்!” என அவள் அவரிடம் கூற, ஷண்முகி அவளை முறைத்து விட்டு வெளியே சென்றவர் தங்கராஜ் வந்ததும் முதல் வேலையாக இதைப் பற்றி பேச வேண்டும் என நினைத்துக் கொண்டார்.
தொடரும்...
சாரி மக்களே... காயூவையும் ராமையும் பிரிக்கிற‌ அளவுக்கு நான் கொடூரமானவ இல்லை. இப்படித்தான் ஸ்டோரி ப்ளான் பண்ணி இருந்தேன். சப்போஸ் அவங்களை பிரிச்சா காயூவை சிங்கிளாதான் விடுவேன். நெகட்டீவ் எண்டிங் மாதிரி ஆகிடும். இது ஃபீல் குட் ஸ்டோரி. நீங்க நம்பலைனாலும் அதான் நிஜம் 🙈🏃‍♀️






















































 
Well-known member
Messages
465
Reaction score
343
Points
63
நம்பறோம், பிரிச்ச அப்புறம் எப்படி பீல் குட் ஸ்டோரி? 🤔🤔🤔🤔
 
Well-known member
Messages
924
Reaction score
677
Points
93
Namburommmmmmmm
 
Top