- Messages
- 1,091
- Reaction score
- 3,124
- Points
- 113
இஷ்டம் – 12 
“கதவை திற டீ!” அவன் அதட்டலிட, சாவியை எடுத்துச் சென்று திறந்த காயத்ரி, “இந்த டைம்ல எதுக்கு வந்திருக்க ராம்? என்ன எதுவும் பிரச்சனையா?” எனப் புரியாதது போல வினவினாள். இவனிடம் மெல்லிய பெருமூச்சு மட்டுமே எழுந்தது. நெற்றியை ஒரு விரலால் கீறியவன், “சாரி டி... மிட் நைட்ல உன்னை டிஸ்டர்ப் பண்றேன்!” மெதுவாய் பேசினான்.
“உள்ளே வா நீ!” என அவனை அழைத்துச் சென்று அமர வைத்தவள் நீரை எடுத்து வந்து பருகச் செய்துவிட்டு வெகு கவனமாய் அவனிடமிருந்து தள்ளி வேறொரு இருக்கையில் அமர்ந்தாள். ரகுராம் எதுவும் பேசாது சுவரிலிருந்த கடிகாரத்தையே வெறித்திருந்தான். ஏனோ எத்தனை முயன்றும் அவனால் விரைவில் வர முடியாது போயிற்று.
அவனது முகத்தையே பார்த்திருந்தாள் காயத்ரி. கலக்கம் சூழ்ந்த விழிகளும் குற்றம் செய்த பாவனையும் இவளை இளகச் செய்திருந்தன. முன்பே கோபம் இல்லை. வருத்தம்தான். ஆனாலும் காண்பித்துக் கொள்ளவில்லை.
“என்னாச்சு ராம்? எதுவும் பிரச்சனையா?” என ஆதரவாகக் கேட்டாள்.
அவளை நிமிர்ந்து பார்த்தவன், “சாரி காயூ...” என்றான் வருத்தம் மேவிய குரலில்.
“எதுக்கு டா?” அவளது கேள்வியில் இன்னுமே இவன் காயம்பட்டான்.
“ஹம்ம்... அது உன் பெர்த் டேவை மறந்துட்டேன் காயூ. நிஜமா வேணும்னு பண்ணலை டி. வொர்க் டென்ஷன். சைந்தவியோட ஃப்ரெண்ட்ஸ்க்கு சின்ன பார்ட்டி கொடுக்க திருப்பூர் வரைக்கும் போய்ட்டேன். அதானல தான்... சாரி, சாரி!” என அவன் பேசப் பேச காயத்ரியின் முகம் மாறிற்று. அவள் மூளைக்கு காரணம் இதுவாக இருக்கலாம் என ஏற்கனவே தெரிந்த போதும் அவன் வாய் மொழியாய்க் கேட்கவும் அதிகமாய் வலித்தது.
வெகு கவனமாய் அவன் பார்வையிலிருந்து அதை மறைத்தவள், “ப்ச்.. ராம். இதுக்கா இந்த மிட் நைட்ல அரக்கப்பறக்க ஓடி வந்த. நான் எதுவும் நினைக்கலை டா. நீயே மேரேஜ் பிஸில இருப்ப. என் பெர்த்டேக்கு விஷ் பண்ணலைன்றது எல்லாம் பெரிய விஷயம் இல்லை டா. இட்ஸ் நாட் அ பிக் டீல் மேன்!” என்றாள் அதிராமல் புன்னகைத்து. உன்னுடைய வாழ்த்தின் இன்மையோ உன்னுடைய இன்மையோ எங்கேயும் என்னைப் பாதிக்கவில்லை என்பதைப் போலத்தான் காயத்ரின் குரல் இருந்தது. இவன் வாழ்த்தை தெரிவிக்காததற்கு திட்டியிருந்தாலோ அல்லது அடித்திருந்தாலோ கூட இத்தனை வலித்திருக்காது. ஏனோ பேச்சிலே எட்ட நிறுத்திய அந்நிய பாவனையில் இவனுக்கு மனம் முழுவதும் வேதனை படர்ந்தது.
அவளை நிமிர்ந்து பார்த்தவன், “உன் கோபம் எனக்குப் புரியுது காயூ. பட், நான் வேணும்னு செய்யலை டி. மறந்துட்டேன்!” என்றவன் எட்டி அவளது கையைப் பிடித்தான்.
மெதுவாய் அவனிடமிருந்து கரத்தை விலக்கியவள், “ப்ம்ச்... லூசா ராம் நீ? எனக்கு கோபம் எல்லாம் இல்ல டா. இன்பேக்ட் பெர்த் டே செலிபிரேட் பண்ற வயசெல்லாம் தாண்டிட்டேன் நான். யார் விஷ் பண்ணா, பண்ணலைன்னு ஞாபகம் கூட இல்ல. நீ வந்து விஷ் பண்ணலைன்னு சொல்றப்போ தான் ராம் விஷ் பண்ணலைன்னு எனக்குத் தோணுது. நானே வயசாகிட்டே போகுதே. அப்பா மேரேஜ்க்கு கம்பெல் பண்ணுவாரேன்னு அந்தக் கவலைல இருந்தேன்!” கேலியான குரலில் நான் நன்றாய் இருக்கிறேன் எனக் கூற முயன்றாள். சர்வ நிச்சயமாய் நன்றாக இல்லைதான். ஆனாலும் எங்கேயும் தன்னை வெளிப்படுத்திக் விடக் கூடாது என்றொரு உறுதி மனம் முழுவதும் இருந்து தொலைத்தது. உயிர் தோழனே ஆகினும் அவனுக்கொரு குடும்பம் என்று வருகையில் தான் இரண்டாம்பட்சமாக போய்விட்டதில் அவளுக்கொன்றும் பெரிதாய் வருத்தமில்லை. சற்று நேரத்திற்கு முன்னிருந்த மனநிலை எல்லாம் வடிந்திருந்தது. இன்னும் இரண்டு நாட்கள் சென்றால் நடந்ததை மறந்துவிட்டு அவளுடைய இயல்பு வாழ்க்கைக்குப் பழகி இருப்பாள். இதுதானே வாழ்வின் நிதர்சனமும் கூட.
“நீ என்கிட்ட திட்டி கோபப்பட்டிருந்தா கூட எனக்கு வலிச்சிருக்காது காயூ. யாரோ மாதிரி பேசவும் ஒரு மாதம் மனசெல்லாம் வலிக்குது காயூ. ஏன் டி இப்படி பேசுற?” வேதனை ததும்பிய குரல் சர்வ நிச்சயமாய் இவளைப் பாதித்தது தான். உதட்டைக் கடித்து உணர்வுகளை அடக்கியவள் தயங்கியபடியே மெதுவாய் அவன் தோளில் தட்டிப் புன்னகைத்தாள்.
“நான் கோபப்பட்டா எல்லாமே மாறிடுமா ராம்? மோர் ஓவர் என் கோபத்துல எந்த நியாயமுமே இருக்கதா எனக்குத் தோணலை. உனக்கே மேரேஜ் டென்ஷன், வொர்க் டென்ஷன். இதுல என் பெர்த் டேக்கு விஷ் பண்ணலைன்னு நான் சண்டை போட்டா எது எவ்வளோ சைல்ட் டிஷ்ஸா இருக்கும். அதுவும் இல்லாம கூட இருக்கவங்க பெர்த் டே விஷ் பண்ணலைன்னு நான்லாம் அழணும்னா, வருஷம் முழுக்க அழுகணும் டா. ஏன்னா, என்னைப் பெத்தவருக்கு என் பெர்த் டே டேட்டே தெரியாது. நானா போய் சொன்னா கூட, நல்லா இரும்மான்னு ரெண்டு வார்த்தை சொல்லுவாரு. அவ்வளோ தான் என் பெர்த் டே. பிறந்தாள் கொண்டாட்றதெல்லாம் அம்மா இருந்தவரைக்கும் தான் ரகு. அப்புறம் எல்லா நாள் போல அதுவும் ஒருநாள். அவ்வளோ தான். இதோ, இன்னைக்கு கூட அம்மாவோட புடவையை தான் கட்டுனேன். புது ட்ரெஸ் எல்லாம் எடுக்கணும்னு கூடத் தோணலை. அவ்வளோதான் என் பெர்த் டே ராம். சோ உனக்கு கில்டி கான்ஷியஸ் எல்லாம் வேணாம். இனிமே என் பெர்த் டேவை மறந்தா தப்பில்லை. சைந்தவியோட பிறந்தாளை மட்டும் மறக்காத. அதை ஞாபகம் வச்சுக்கிட்டா போதும் டா. இல்லைன்னா உனக்குத்தான் சேதாரம் அதிகம்!” என கேலியாய்ப் பேசி சூழ்நிலையை இயல்பாக்க முயன்றவளை அவன் வெற்றுப் பார்வை பார்த்தான். இந்தப் பெண் தன்னிடமிருந்து மொத்தமாய் விலகிவிட்டாள் என்ற நிதர்சனத்தை வலிக்க வலிக்க ஏற்றுக் கொண்டிருந்தான். விழிகள் எல்லாம் கலங்கப் பார்த்தன.
“ஹம்ம்... நான் சொல்லிக் காட்டுறேன்னு நினைக்காத ராம். அன்னைக்கு நான் சொன்னப்போ உனக்கு கோபம் வந்தது. பட் திஸ் இஸ் தி ரியாலிட்டி. வீ ஹேவ் டூ அக்செப்ட் இட் அண்ட் மூவ் ஆன். நீ விஷ் பண்ணலைன்னு இல்ல, யார் விஷ் பண்ணாலும் பண்ணலைனாலும் காலம் யாருக்காகவும் நிக்காது டா!” என மென்முறுவலுடன் கூறியவளை அமைதியாகப் பார்த்தவன், தன் கையிலிருந்த நெகிழிப்பையை நீட்டினான்.
“என்ன ராம் இது?” கைகள் நீளவில்லை. கேள்வி முன்னே வந்து விழுந்தது.
“ஹேப்பி பெர்த் டே காயூ!” அவள் முகம் பார்த்து அவன் ஆழ்ந்து கூற, “ஓ... தேங்க் யூ ராம்!” என சிரிய புன்னகையுடன் பெற்றுக் கொண்டாள். அவ்வளவே மற்றபடி பெரிதாய் அதைப் பிரிக்கும் ஆர்வமோ ஆசையோ அவளிடம் துளியேனும் இல்லை. ஒவ்வொரு முறையும் இவனது பரிசு என்னவாக இருக்குமோ என ஆசையாய் பிரிக்கும் காயத்ரி மனக்கண்ணில் வந்து போனாள். அட்சர சுத்தமாக இவள் என் காயூ இல்லை. இந்தப் பெண் ஒரு வார்த்தையில் பாவனையில் என்னை எட்ட நிறுத்தி அந்நியப்படுத்துகிறாள் என மனம் வெதும்பியது.
“நான் கிளம்புறேன் காயூ!” என அவன் எழுந்து நிற்க, தலையை சரியென அசைத்தாள். அவன் இரண்டெட்டுகள் வைக்க, “ராம், சாப்டீயா நீ?” எனக் கேட்டாள். அந்தக் கேள்வியில் நொடியில் இவனுக்கு அடிவயிற்றிலிருந்து தொண்டையை ஏதோ அடைக்கும் உணர்வு.
தன்னை சரி செய்தவன், “சாப்டேன் காயூ!” என்றான்.
“பொய் சொல்லாத ராம். உன் முகத்தைப் பார்த்தாலே தெரியுது. பசியில இருக்க நீ. ட்ராவல் பண்ணது வேற டயர்டா இருக்கும். நீ வந்து உக்காரு. சாப்ட்டு போ, இல்லைன்னா தூக்கம் வராது டா!” என அன்பாய் கட்டளை இட்டவள் உள்ளே சென்று இரவு சமைத்த உணவை சூடு செய்து எடுத்து வந்தாள்.
“ஸ்பெஷல் எல்லாம் எதுவும் இல்ல ராம். வெஜ் ரைஸ் வித் குருமா தான் செஞ்சேன். பரவாயில்லாம இருக்கும். சாப்பிடு!” என்றவள் உணவைப் பரிமாறிவிட்டு அவனுக்கு இரண்டு முட்டைகளை ஆம்லேட் செய்து எடுத்து வந்து கொடுத்தாள். அவன் உண்டு முடிய முடிய அவன் தட்டை நிரப்பியவள், அவனை ஆதுரமாகப் பார்த்தாள்.
அந்தப் பார்வை உணர்ந்தவனும் நிமிர்ந்து, “சாரி காயூ!” என்றான் குரல் கலங்க.
“ப்ம்ச்... சாப்பிடும்போதும் என்னடா உனக்கு?” என அதட்டலாய் அவனருகே எழுந்து நின்றவள் அவனது தலையைக் கலைத்துவிட்ட நொடி, “காயூ!” என்றவன் உண்ட கையோடு அவளை இடையை சுற்றி அணைத்து முகத்தை அவளது வயிற்றில் முகம் புதைக்க, காயத்ரியிடம் பெரும் பிரளயம் வெடித்திருந்தது. நெஞ்சம் திடுக்கிட்டு போக, “ராம், முதல்ல என்னை விடுடா!” என்றாள் குரல் நடுங்க.
“ஹ்கூம்..சாரி காயூ, நான் என்ன பண்ணியிருந்தாலும் என்னை மன்னிச்சிடு டி. நீ என் கூட பேசாம, உன் முகத்தைப் பார்க்காமல் எல்லாம் என்னால இருக்க முடியாது டி. ஐ மிஸ்ட் யூ அ லாட்!” என அவன் குரலிலிருந்த உணர்வில் இவளது உணர்வுகள் பொங்கிப் பெருகின. கண்களில் குபுகுபுவென கண்ணீர் பெருகியது. இந்தப் பையன் இப்படியெல்லாம் செய்தால் எப்படி அவனை விட்டுக் கொடுக்க இவளுக்கு மனம் வருமென காயத்ரிக்கு அழுகையாய் வந்தது. எங்கே தானும் உணர்வுகளைக் கொட்டிக் கவிழ்த்து விடுவோமோ என மனம் அஞ்ச, “ராம், முதல்ல என்னை விடு!” என்றாள் அதட்டலாக. அவளுக்கு அவளையே சமாளிக்க வேண்டியிருந்தது. அவனை வயிற்றோடு புதைத்துக் கொள்ளச் சொல்லி மனம் பரபரத்தது. கைகளை இறுக மூடிக் கொண்டாள். சைந்தவி கண் முன்னே வரவும் இன்னுமே அவள் இறுகிப் போனாள்.
“முடியாது!” என முணுமுணுத்தவன் ஒரு நிமிடம் முழுதாய் அவளை அணைத்திருந்தே விடவும், காயத்ரியின் மனம் துடித்துப் போனது. விறுவிறுவென சமையலறைக்குள் சென்றாள். தேம்பி அழ முயன்ற மனதை அதட்டி உருட்டி சமாதானம் செய்து அழுத விழிகளைத் துடைத்துக் கொண்டு பழைய திடத்துடன் வெளியே வந்தவள், “சாப்ட்டு இப்போ கிளம்புற ராம். இனிமே அன்-டைம்ல வீட்டுக்கு வராத. எனக்குப் பிடிக்கலை!” என்றாள் கண்டிப்பான குரலில். அவன் இவளை நிமிர்ந்து பார்க்காது உண்டு முடித்து கிளம்பினான். காயத்ரியும் அவன் முகத்தைப் பார்க்கவில்லை. அவன் அகன்றதும் பட்டென கதவை சாற்றினாள். சில பல நிமிடங்கள் நீள்விருக்கையில் தலையைப் பிடித்து அமர்ந்திருந்தாள். மிக மிக மெதுவாய் மனம் சமன்பட்டது. அருகேயிருந்த அவன் வாங்கிக் கொடுத்த உடையை பிரித்துக் கூடப் பார்க்காதவள் அதை அப்படியே நிலை பேழையில் வைத்துவிட்டு விளக்கை அணைத்துவிட்டு படுக்கையில் விழுந்தாள். அழக்கூடாது என்ற வைராக்கியம் கண்ணீரைக் கட்டுப்படுத்தியிருந்தது. தூரச் சென்றிருந்த உறக்கத்தை வெகு கட்டாயப்படுத்தி இழுத்து உறங்கிப் போனாள். ஆனால் ரகுராம் உறங்காது விழித்தே கிடந்தான்.
காலையில் எழுந்த காயத்ரிக்கு இரவு நடந்தது எல்லாம் நினைவில் நின்றது. இது எதுவும் தன்னைப் பாதிக்கவில்லை என்றொரு திடமிருந்தது அவளிடம். எப்போதும் போல வேலைக்கு கிளம்பிச் சென்றாள். வேலை முடிந்து வந்தாள். வீடு, மருத்துவமனை என அவளது நாட்கள் நகரத் தொடங்கின.

“கதவை திற டீ!” அவன் அதட்டலிட, சாவியை எடுத்துச் சென்று திறந்த காயத்ரி, “இந்த டைம்ல எதுக்கு வந்திருக்க ராம்? என்ன எதுவும் பிரச்சனையா?” எனப் புரியாதது போல வினவினாள். இவனிடம் மெல்லிய பெருமூச்சு மட்டுமே எழுந்தது. நெற்றியை ஒரு விரலால் கீறியவன், “சாரி டி... மிட் நைட்ல உன்னை டிஸ்டர்ப் பண்றேன்!” மெதுவாய் பேசினான்.
“உள்ளே வா நீ!” என அவனை அழைத்துச் சென்று அமர வைத்தவள் நீரை எடுத்து வந்து பருகச் செய்துவிட்டு வெகு கவனமாய் அவனிடமிருந்து தள்ளி வேறொரு இருக்கையில் அமர்ந்தாள். ரகுராம் எதுவும் பேசாது சுவரிலிருந்த கடிகாரத்தையே வெறித்திருந்தான். ஏனோ எத்தனை முயன்றும் அவனால் விரைவில் வர முடியாது போயிற்று.
அவனது முகத்தையே பார்த்திருந்தாள் காயத்ரி. கலக்கம் சூழ்ந்த விழிகளும் குற்றம் செய்த பாவனையும் இவளை இளகச் செய்திருந்தன. முன்பே கோபம் இல்லை. வருத்தம்தான். ஆனாலும் காண்பித்துக் கொள்ளவில்லை.
“என்னாச்சு ராம்? எதுவும் பிரச்சனையா?” என ஆதரவாகக் கேட்டாள்.
அவளை நிமிர்ந்து பார்த்தவன், “சாரி காயூ...” என்றான் வருத்தம் மேவிய குரலில்.
“எதுக்கு டா?” அவளது கேள்வியில் இன்னுமே இவன் காயம்பட்டான்.
“ஹம்ம்... அது உன் பெர்த் டேவை மறந்துட்டேன் காயூ. நிஜமா வேணும்னு பண்ணலை டி. வொர்க் டென்ஷன். சைந்தவியோட ஃப்ரெண்ட்ஸ்க்கு சின்ன பார்ட்டி கொடுக்க திருப்பூர் வரைக்கும் போய்ட்டேன். அதானல தான்... சாரி, சாரி!” என அவன் பேசப் பேச காயத்ரியின் முகம் மாறிற்று. அவள் மூளைக்கு காரணம் இதுவாக இருக்கலாம் என ஏற்கனவே தெரிந்த போதும் அவன் வாய் மொழியாய்க் கேட்கவும் அதிகமாய் வலித்தது.
வெகு கவனமாய் அவன் பார்வையிலிருந்து அதை மறைத்தவள், “ப்ச்.. ராம். இதுக்கா இந்த மிட் நைட்ல அரக்கப்பறக்க ஓடி வந்த. நான் எதுவும் நினைக்கலை டா. நீயே மேரேஜ் பிஸில இருப்ப. என் பெர்த்டேக்கு விஷ் பண்ணலைன்றது எல்லாம் பெரிய விஷயம் இல்லை டா. இட்ஸ் நாட் அ பிக் டீல் மேன்!” என்றாள் அதிராமல் புன்னகைத்து. உன்னுடைய வாழ்த்தின் இன்மையோ உன்னுடைய இன்மையோ எங்கேயும் என்னைப் பாதிக்கவில்லை என்பதைப் போலத்தான் காயத்ரின் குரல் இருந்தது. இவன் வாழ்த்தை தெரிவிக்காததற்கு திட்டியிருந்தாலோ அல்லது அடித்திருந்தாலோ கூட இத்தனை வலித்திருக்காது. ஏனோ பேச்சிலே எட்ட நிறுத்திய அந்நிய பாவனையில் இவனுக்கு மனம் முழுவதும் வேதனை படர்ந்தது.
அவளை நிமிர்ந்து பார்த்தவன், “உன் கோபம் எனக்குப் புரியுது காயூ. பட், நான் வேணும்னு செய்யலை டி. மறந்துட்டேன்!” என்றவன் எட்டி அவளது கையைப் பிடித்தான்.
மெதுவாய் அவனிடமிருந்து கரத்தை விலக்கியவள், “ப்ம்ச்... லூசா ராம் நீ? எனக்கு கோபம் எல்லாம் இல்ல டா. இன்பேக்ட் பெர்த் டே செலிபிரேட் பண்ற வயசெல்லாம் தாண்டிட்டேன் நான். யார் விஷ் பண்ணா, பண்ணலைன்னு ஞாபகம் கூட இல்ல. நீ வந்து விஷ் பண்ணலைன்னு சொல்றப்போ தான் ராம் விஷ் பண்ணலைன்னு எனக்குத் தோணுது. நானே வயசாகிட்டே போகுதே. அப்பா மேரேஜ்க்கு கம்பெல் பண்ணுவாரேன்னு அந்தக் கவலைல இருந்தேன்!” கேலியான குரலில் நான் நன்றாய் இருக்கிறேன் எனக் கூற முயன்றாள். சர்வ நிச்சயமாய் நன்றாக இல்லைதான். ஆனாலும் எங்கேயும் தன்னை வெளிப்படுத்திக் விடக் கூடாது என்றொரு உறுதி மனம் முழுவதும் இருந்து தொலைத்தது. உயிர் தோழனே ஆகினும் அவனுக்கொரு குடும்பம் என்று வருகையில் தான் இரண்டாம்பட்சமாக போய்விட்டதில் அவளுக்கொன்றும் பெரிதாய் வருத்தமில்லை. சற்று நேரத்திற்கு முன்னிருந்த மனநிலை எல்லாம் வடிந்திருந்தது. இன்னும் இரண்டு நாட்கள் சென்றால் நடந்ததை மறந்துவிட்டு அவளுடைய இயல்பு வாழ்க்கைக்குப் பழகி இருப்பாள். இதுதானே வாழ்வின் நிதர்சனமும் கூட.
“நீ என்கிட்ட திட்டி கோபப்பட்டிருந்தா கூட எனக்கு வலிச்சிருக்காது காயூ. யாரோ மாதிரி பேசவும் ஒரு மாதம் மனசெல்லாம் வலிக்குது காயூ. ஏன் டி இப்படி பேசுற?” வேதனை ததும்பிய குரல் சர்வ நிச்சயமாய் இவளைப் பாதித்தது தான். உதட்டைக் கடித்து உணர்வுகளை அடக்கியவள் தயங்கியபடியே மெதுவாய் அவன் தோளில் தட்டிப் புன்னகைத்தாள்.
“நான் கோபப்பட்டா எல்லாமே மாறிடுமா ராம்? மோர் ஓவர் என் கோபத்துல எந்த நியாயமுமே இருக்கதா எனக்குத் தோணலை. உனக்கே மேரேஜ் டென்ஷன், வொர்க் டென்ஷன். இதுல என் பெர்த் டேக்கு விஷ் பண்ணலைன்னு நான் சண்டை போட்டா எது எவ்வளோ சைல்ட் டிஷ்ஸா இருக்கும். அதுவும் இல்லாம கூட இருக்கவங்க பெர்த் டே விஷ் பண்ணலைன்னு நான்லாம் அழணும்னா, வருஷம் முழுக்க அழுகணும் டா. ஏன்னா, என்னைப் பெத்தவருக்கு என் பெர்த் டே டேட்டே தெரியாது. நானா போய் சொன்னா கூட, நல்லா இரும்மான்னு ரெண்டு வார்த்தை சொல்லுவாரு. அவ்வளோ தான் என் பெர்த் டே. பிறந்தாள் கொண்டாட்றதெல்லாம் அம்மா இருந்தவரைக்கும் தான் ரகு. அப்புறம் எல்லா நாள் போல அதுவும் ஒருநாள். அவ்வளோ தான். இதோ, இன்னைக்கு கூட அம்மாவோட புடவையை தான் கட்டுனேன். புது ட்ரெஸ் எல்லாம் எடுக்கணும்னு கூடத் தோணலை. அவ்வளோதான் என் பெர்த் டே ராம். சோ உனக்கு கில்டி கான்ஷியஸ் எல்லாம் வேணாம். இனிமே என் பெர்த் டேவை மறந்தா தப்பில்லை. சைந்தவியோட பிறந்தாளை மட்டும் மறக்காத. அதை ஞாபகம் வச்சுக்கிட்டா போதும் டா. இல்லைன்னா உனக்குத்தான் சேதாரம் அதிகம்!” என கேலியாய்ப் பேசி சூழ்நிலையை இயல்பாக்க முயன்றவளை அவன் வெற்றுப் பார்வை பார்த்தான். இந்தப் பெண் தன்னிடமிருந்து மொத்தமாய் விலகிவிட்டாள் என்ற நிதர்சனத்தை வலிக்க வலிக்க ஏற்றுக் கொண்டிருந்தான். விழிகள் எல்லாம் கலங்கப் பார்த்தன.
“ஹம்ம்... நான் சொல்லிக் காட்டுறேன்னு நினைக்காத ராம். அன்னைக்கு நான் சொன்னப்போ உனக்கு கோபம் வந்தது. பட் திஸ் இஸ் தி ரியாலிட்டி. வீ ஹேவ் டூ அக்செப்ட் இட் அண்ட் மூவ் ஆன். நீ விஷ் பண்ணலைன்னு இல்ல, யார் விஷ் பண்ணாலும் பண்ணலைனாலும் காலம் யாருக்காகவும் நிக்காது டா!” என மென்முறுவலுடன் கூறியவளை அமைதியாகப் பார்த்தவன், தன் கையிலிருந்த நெகிழிப்பையை நீட்டினான்.
“என்ன ராம் இது?” கைகள் நீளவில்லை. கேள்வி முன்னே வந்து விழுந்தது.
“ஹேப்பி பெர்த் டே காயூ!” அவள் முகம் பார்த்து அவன் ஆழ்ந்து கூற, “ஓ... தேங்க் யூ ராம்!” என சிரிய புன்னகையுடன் பெற்றுக் கொண்டாள். அவ்வளவே மற்றபடி பெரிதாய் அதைப் பிரிக்கும் ஆர்வமோ ஆசையோ அவளிடம் துளியேனும் இல்லை. ஒவ்வொரு முறையும் இவனது பரிசு என்னவாக இருக்குமோ என ஆசையாய் பிரிக்கும் காயத்ரி மனக்கண்ணில் வந்து போனாள். அட்சர சுத்தமாக இவள் என் காயூ இல்லை. இந்தப் பெண் ஒரு வார்த்தையில் பாவனையில் என்னை எட்ட நிறுத்தி அந்நியப்படுத்துகிறாள் என மனம் வெதும்பியது.
“நான் கிளம்புறேன் காயூ!” என அவன் எழுந்து நிற்க, தலையை சரியென அசைத்தாள். அவன் இரண்டெட்டுகள் வைக்க, “ராம், சாப்டீயா நீ?” எனக் கேட்டாள். அந்தக் கேள்வியில் நொடியில் இவனுக்கு அடிவயிற்றிலிருந்து தொண்டையை ஏதோ அடைக்கும் உணர்வு.
தன்னை சரி செய்தவன், “சாப்டேன் காயூ!” என்றான்.
“பொய் சொல்லாத ராம். உன் முகத்தைப் பார்த்தாலே தெரியுது. பசியில இருக்க நீ. ட்ராவல் பண்ணது வேற டயர்டா இருக்கும். நீ வந்து உக்காரு. சாப்ட்டு போ, இல்லைன்னா தூக்கம் வராது டா!” என அன்பாய் கட்டளை இட்டவள் உள்ளே சென்று இரவு சமைத்த உணவை சூடு செய்து எடுத்து வந்தாள்.
“ஸ்பெஷல் எல்லாம் எதுவும் இல்ல ராம். வெஜ் ரைஸ் வித் குருமா தான் செஞ்சேன். பரவாயில்லாம இருக்கும். சாப்பிடு!” என்றவள் உணவைப் பரிமாறிவிட்டு அவனுக்கு இரண்டு முட்டைகளை ஆம்லேட் செய்து எடுத்து வந்து கொடுத்தாள். அவன் உண்டு முடிய முடிய அவன் தட்டை நிரப்பியவள், அவனை ஆதுரமாகப் பார்த்தாள்.
அந்தப் பார்வை உணர்ந்தவனும் நிமிர்ந்து, “சாரி காயூ!” என்றான் குரல் கலங்க.
“ப்ம்ச்... சாப்பிடும்போதும் என்னடா உனக்கு?” என அதட்டலாய் அவனருகே எழுந்து நின்றவள் அவனது தலையைக் கலைத்துவிட்ட நொடி, “காயூ!” என்றவன் உண்ட கையோடு அவளை இடையை சுற்றி அணைத்து முகத்தை அவளது வயிற்றில் முகம் புதைக்க, காயத்ரியிடம் பெரும் பிரளயம் வெடித்திருந்தது. நெஞ்சம் திடுக்கிட்டு போக, “ராம், முதல்ல என்னை விடுடா!” என்றாள் குரல் நடுங்க.
“ஹ்கூம்..சாரி காயூ, நான் என்ன பண்ணியிருந்தாலும் என்னை மன்னிச்சிடு டி. நீ என் கூட பேசாம, உன் முகத்தைப் பார்க்காமல் எல்லாம் என்னால இருக்க முடியாது டி. ஐ மிஸ்ட் யூ அ லாட்!” என அவன் குரலிலிருந்த உணர்வில் இவளது உணர்வுகள் பொங்கிப் பெருகின. கண்களில் குபுகுபுவென கண்ணீர் பெருகியது. இந்தப் பையன் இப்படியெல்லாம் செய்தால் எப்படி அவனை விட்டுக் கொடுக்க இவளுக்கு மனம் வருமென காயத்ரிக்கு அழுகையாய் வந்தது. எங்கே தானும் உணர்வுகளைக் கொட்டிக் கவிழ்த்து விடுவோமோ என மனம் அஞ்ச, “ராம், முதல்ல என்னை விடு!” என்றாள் அதட்டலாக. அவளுக்கு அவளையே சமாளிக்க வேண்டியிருந்தது. அவனை வயிற்றோடு புதைத்துக் கொள்ளச் சொல்லி மனம் பரபரத்தது. கைகளை இறுக மூடிக் கொண்டாள். சைந்தவி கண் முன்னே வரவும் இன்னுமே அவள் இறுகிப் போனாள்.
“முடியாது!” என முணுமுணுத்தவன் ஒரு நிமிடம் முழுதாய் அவளை அணைத்திருந்தே விடவும், காயத்ரியின் மனம் துடித்துப் போனது. விறுவிறுவென சமையலறைக்குள் சென்றாள். தேம்பி அழ முயன்ற மனதை அதட்டி உருட்டி சமாதானம் செய்து அழுத விழிகளைத் துடைத்துக் கொண்டு பழைய திடத்துடன் வெளியே வந்தவள், “சாப்ட்டு இப்போ கிளம்புற ராம். இனிமே அன்-டைம்ல வீட்டுக்கு வராத. எனக்குப் பிடிக்கலை!” என்றாள் கண்டிப்பான குரலில். அவன் இவளை நிமிர்ந்து பார்க்காது உண்டு முடித்து கிளம்பினான். காயத்ரியும் அவன் முகத்தைப் பார்க்கவில்லை. அவன் அகன்றதும் பட்டென கதவை சாற்றினாள். சில பல நிமிடங்கள் நீள்விருக்கையில் தலையைப் பிடித்து அமர்ந்திருந்தாள். மிக மிக மெதுவாய் மனம் சமன்பட்டது. அருகேயிருந்த அவன் வாங்கிக் கொடுத்த உடையை பிரித்துக் கூடப் பார்க்காதவள் அதை அப்படியே நிலை பேழையில் வைத்துவிட்டு விளக்கை அணைத்துவிட்டு படுக்கையில் விழுந்தாள். அழக்கூடாது என்ற வைராக்கியம் கண்ணீரைக் கட்டுப்படுத்தியிருந்தது. தூரச் சென்றிருந்த உறக்கத்தை வெகு கட்டாயப்படுத்தி இழுத்து உறங்கிப் போனாள். ஆனால் ரகுராம் உறங்காது விழித்தே கிடந்தான்.
காலையில் எழுந்த காயத்ரிக்கு இரவு நடந்தது எல்லாம் நினைவில் நின்றது. இது எதுவும் தன்னைப் பாதிக்கவில்லை என்றொரு திடமிருந்தது அவளிடம். எப்போதும் போல வேலைக்கு கிளம்பிச் சென்றாள். வேலை முடிந்து வந்தாள். வீடு, மருத்துவமனை என அவளது நாட்கள் நகரத் தொடங்கின.