• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,091
Reaction score
3,124
Points
113
இஷ்டம் – 10 💖

திருப்பூரின் பிரதான நான்கு வழி சாலையில் அமைந்திருந்த அந்தக் குரு கிருஷ்ணா திருமண மண்டபம் ஜகஜோதியாகக் காட்சி அளித்தது‌. கிட்டதட்ட நானூறு பேர்களையாவது அந்த இடம் விழுங்கியிருக்கும். நிச்சயதார்த்தமா? அல்லது திருமணமா? என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு கூட்டமும் அலங்காரமும் தோன்ற வைத்தது.
அமைச்சரின் தங்கை சைந்தவி என்பது மட்டும் அதற்குக் காரணம் அல்ல. அவர்கள் வீட்டில் நடக்கும் கடைசி திருமணம் என்பதால் இரண்டு தமையன்களும் தங்கையின் திருமணத்தில் எவ்வித குறையும் இருந்துவிடக் கூடாதென பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் கவனித்தனர்.
வந்திருந்த உறவினர்களில் வெகுஜனமானவர்கள் மேல் தட்டு மக்களே‌. அது அவர்களது உடை, பாவனை, பேச்சு என அனைத்திலும் எதிரொலித்தது. நிறைய அரசியல் பிரமுகர்களும் கட்சி ஆட்களுமே முன்னிருந்த வரிசைகளை ஆக்கிரமித்திருந்தனர். சினிமா பிரபலங்கள் ஒரு சிலரும் கூட அங்கே அனைவரது கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருந்தனர்.
மேடையில் பெண் வீட்டார் ஒருபுறமும் மாப்பிள்ளை வீட்டார் மறுபுறமும் அமர்ந்திருக்க, பூ, பழம், மாலை, தட்டு என அத்தியாவசிய இத்யாதிகள் நடுவில் இருந்தன. ரகுராம் தாய் தந்தையோடு அமர்ந்திருக்க, அவனுக்கு நேர் எதிராய் சைந்தவி இருந்தாள்‌‌. இவனைக் காணும்போது எல்லாம் அவளது முகத்தில் புன்னகை பூத்தது. இவனிடம் மென்மையான முறுவல். அவ்வப்போது ராமின் கண்கள் காயத்ரியைத் துழாவின.
கடைசி இருக்கையில் ஒரு ஓரமாய் அமர்ந்திருந்தாள். அவளது பார்வை மேடையைவிட்டு எங்கேயும் அகலவில்லை. அமைதியாய் அனைத்தையும் அவதானித்தாள். அவளுக்கு அருகே யுக்தேஷ் அமர்ந்திருந்தான்.
“நல்ல நேரம் முடியப் போகுது. நிச்சய பத்திரிக்கையை வாசிச்சிடலாமா?” என புரோகிதர் வினவ, “ம்மா... எல்லாரும் வந்துட்டாங்க இல்ல‌. சோ, ஸ்டார்ட் பண்ணிடலாம்!” என்ற இளவேந்தனின் முகம் வேலை செய்து களைத்திருந்தாலும் முகத்தில் மகிழ்ச்சி படர்ந்திருந்தது.
“என்ன கௌதமி, உங்க சொந்தக்காரங்க எல்லாரும் வந்தாச்சுல்ல‌. ஆரம்பிச்சுடலாமா அண்ணா?” என்ற நளினி கௌதமியிடம் ஆரம்பித்து தேவராஜிடம் முடித்தார். ஒவ்வொரு விடயத்திலும் அவர்கள் தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பதில் மனிதருக்கு அத்தனைப் பெருமையாய் இருந்தது.
“ஆரம்பிச்சடலாம்மா!” என அவர் கூற, நிச்சயப் பத்திரிகை வாசிக்கப்பட்டது. இரு வீட்டு சார்பாகவும் பெற்றவர்கள் பூ, பழம் நிரம்பிய தட்டை மாற்றி திருமணத்தை உறுதி செய்ய, அன்றைக்கே திருமணத்திற்கு நாளும் குறிக்கப்பட்டது. இளவேந்தனும் மகிழ் வேந்தனும் அவ்விடத்திலிருந்து அகன்று அரசியல் பிரமுகர்களை உணவுண்ண அழைத்துச் சென்றனர். அப்படியே மண்டபத்தின் பின்புறம் மதுபானங்களும் கட்சி ஆட்களுக்கு வழங்கப்பட்டது.
மேடையிலிருந்து உறவினர்கள் எல்லாம் கலையத் தொடங்கினர். மண்டபத்தின் மாடியில் உணவுப் பந்தி ஆரம்பித்தது. பஃபே முறையில்தான் உணவு பரிமாறப்பட, சொந்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாடியை நோக்கிப் படையெடுத்தனர்.
இரண்டு வீட்டு மக்களும் வந்த உறவினர்களைக் கவனித்து அனுப்ப வேண்டும் என்று அதிலே கவனமாய் இருந்தனர்.
புகைப்படக்காரர் பெண்ணையும் மாப்பிள்ளையும் மேடையில் நிற்க வைத்து விதவிதமாய் புகைப்படம் எடுத்தார். காயத்ரி அவர்களைத்தான் பார்த்திருந்தாள். விழிகள் உயிர்ப்பற்றிருக்க, முகத்தில் துளி சலனமில்லை. ஆனாலும் பார்வையை அகற்றாது அவர்களையே வெறித்திருந்தாள். இது எதுவும் தன்னைப் பாதிக்காது என்ற திடத்துடன் அமர்ந்திருந்தாலும் அவளுள் நடக்கும் போராட்டம் அவளது உறுதியை உருக்குலைத்துக் கொண்டிருந்தது‌.
“போத் ஆர் லுக்கிங் கார்ஜியஸ் இல்ல காயூ? செம்மையா இருக்காங்க?” என யுக்தா அவர்கள் இருவரையும் பார்த்துக் கூற, காயத்ரி தலையை அசைத்து செயற்கை புன்னகையோடு அதை ஏற்றாள்.
“காயூ, நம்ப ஒரு ஃபோட்டோ எடுத்துக்கலாமா?” இவன் தயங்கி தயங்கி கேட்க, “ஐ யம் நாட் இன் த மூட் டு டேக் பிக்சர் யுக்தா!” என்றாள் வெற்றுக் குரலில்.
இவனது முகத்தில் ஏமாற்றம் படர்ந்தாலும், “இட்ஸ் ஓகே!” என்றான் இலகுவாக.
“என் கூடவே உட்கார்நிருக்க யுக்தா. போய் ஃபேமிலியோட டைம் ஸ்பெண்ட் பண்ணு. எல்லாரும் அங்க ஒன்னா இருக்காங்க‌. நீ மட்டும் தனியா ஏன் கூட இருக்க?” அவன் வந்து அமர்ந்ததும் காயத்ரி கேட்க, “நீ தனியா உட்கார்ந்திருக்க காயூ. உன்னை விட்டுட்டு எப்படி போறது?” என அவன் இவள் முகம் பார்த்தான். காயத்ரி முகத்தில் மெல்லிய முறுவல்.
“எனக்காக பார்க்காத யுக்தா. நீ போ, போய் மேடைல ஃபேமிலியோட உட்காரு. ஐ வில் டேக் கேர் மை செல்ஃப்!” என்றாள்.
“நோ... நீயும் வா, நான் போறேன். இல்லைன்னா, இங்கேயே இருக்கேன்‌. எனக்கு அங்கப் போறதுல பெருசா இன்ட்ரெஸ்ட் இல்ல!” என்று பொய்யுரைத்தவனை சரிதான் போ என்று விட்டுவிட்டாள் இவள். உறவினர்கள் உண்டுவிட்டு கிளம்பத் தொடங்கினர்.
அனைவரும் சாப்பிட்டு அகன்றப் பிறகு இவர்கள் உண்டுவிட்டு வீட்டிற்கு செல்வதாய் ஏற்பாடாகியிருந்தது.
“அண்ணி, ரெண்டு அண்ணா அண்ட் எல்லாரையும் அசெம்பிள் பண்ணுங்க அண்ணி. ஃபேமிலி ஃபோட்டோ ஒன்னு மெமரபிளா எடுத்துக்கலாம்!” என துளசியிடம் சைந்தவி கோரிக்கை வைக்க, “ரொம்ப கஷ்டம் சைந்து. உன் அண்ணன் பிஸி. நான் ட்ரை பண்றேன்!” என்றாள் கணவனைக் கண்களால் துழாவியபடி.
“நோ அண்ணி. கண்டிப்பா கூட்டீட்டு வாங்க. நான் ஆசைப்பட்டேன்னு சொல்லுங்க. ரெண்டு பேரும் வருவாங்க. அம்மா, அப்பா, அக்கா, மாமா குட்டீஸ், நீங்க எல்லாரும் வரணும்!” என்று அன்பான கட்டளையிட்டவள், “ரகு, நம்ப ஃபேமிலியையும் கூப்பிடுங்க. யாரும் மிஸ்ஸாகக் கூடாது. மொத்தமா ஒரு ஃபோட்டோ எடுத்து ஹால்ல மாட்டணும்!” என அவனிடமும் இவள் உற்சாகமாகக் கூறினாள்.
“சரி சைந்து!” என்றவன் அவ்தேஷ் மற்றும் கௌரேஷை அழைத்து அனைவரையும் மேடையேற சொன்னான். பின்னர் யுக்தாவிற்கு அழைப்பு விடுத்தான்.
மேடையை நிமிர்ந்து அவன் பார்க்க, “கால் அட்டென்ட் பண்ணுடா!” என ரகுராம் சைகை செய்தான். இவன் அழைப்பை ஏற்றுக் காதில் பொருத்தினான்.
“யுக்தா, ஃபேமிலி போட்டோ எடுக்கப் போறோம். நீயும் காயூவும் ஸ்டேஜ்க்கு வாங்க. அவ வர மாட்டேன்னு சொல்லுவா. கட்டாயப்படுத்திக் கூட்டீட்டு வா!” என்றான்.
“சரி டா!” என்றவன் அலைபேசியை கால்சராயில் நுழைத்துவிட்டு எழுந்து நின்றான்.
“காயூ வா... ஸ்டேஜ்க்குப் போகலாம்!” என அழைத்தவனைக் கேள்வியாகப் பார்த்தாள் இவள்.
“ஃபேமிலி ஃபோட்டோ எடுக்கப் போறோம் காயூ. வா!” என இவன் அழைக்க, “இல்ல யுக்தா, நீங்க போங்க. நான் வரலை!” என்றாள்.
“ஏன்... ஒரே ஒரு ஃபோட்டோ தானே? என் கூடதான் எடுக்க மாட்டேன்னுட்ட. குரூப்பாவாது எடுக்கலாம். கமான் கேர்ள்!” என அவன் அழுத்தி அழைக்க, “ப்ம்ச்... உங்க ஃபேமிலி போட்டோல நான் எதுக்கு யுக்தா எக்ஸ்ட்ரா பிட்டிங்கா? நீங்க போங்க!” என்றாள் மறுக்கும் குரலில்.
“காயூ... அதென்ன உங்க ஃபேமிலி. நீயும் நம்ப ஃபேமிலி தான், வா!” என அவன் கட்டாயப்படுத்த இவளது முகத்தில் விருப்பமின்மை படர்ந்தது.
“யுக்தா, டோன்ட் கம்பெல் மீ. எனக்கு இஷ்டம் இல்ல!” என்றாள் கடினக் குரலில். அவனால் அதற்கு மேலும் வற்புறுத்த முடியாது மேடையைப் பார்க்க, ரகுராமும் இவர்களைத்தான் பார்த்திருந்தான். யுக்தா இல்லையென்பது போல தலையை அசைக்க, அவனுக்கு அழைப்பை விடுத்தவன், “நீ அவகிட்டே ஃபோனை கொடு!” என்றான்.
“காயூ, இந்தா ரகு பேசணுமாம்!” என அலைபேசியைக் கொடுக்க இவள் பெருமூச்சுடன் வாங்கி காதில் பொருத்தினாள்.
“காயூ, இப்போ நீ ஸ்டேஜ்க்கு வர்ற. வர்றீயா? இல்லையான்னு நான் கேட்கலை!” என்றான் கட்டளையாக.
“உங்க ஃபேமிலி போட்டோல நான் எதுக்கு ராம். புரிஞ்சுக்க ட்ரை பண்ணு. எல்லாரும் என்னைத்தான் வித்யாசமா பார்ப்பாங்க!” இவளது குரலில் கடினத்தன்மை கொட்டிக் கிடந்தது.
“இப்போ நீ வரலைன்னா நான் இறங்கி வந்து உன் கையைப் பிடிச்சு இழுத்துட்டு வருவேன் காயூ. எல்லாரும் அப்போதான் வித்யாசமா பார்ப்பாங்க. பெட்டர் நீயே வந்துடு!” ரகுவின் குரலில் நிமிர்ந்து அவனை வெற்றுப் பார்வை பார்த்தவள், “வரேன்!” என்றாள் அலைபேசியை யுக்தாவிடம் நீட்டி.
“நான் அவ்வளோ தூரம் கம்பெல் பண்ணியும் வர மாட்டேன்னு சொல்லிட்டு அவன் ரெண்டு டைம் கூப்டதும் வரேன்னு சொல்ற காயூ!” என இவன் முனங்கல் எல்லாம் அவளைப் பாதித்ததாய் தெரியவில்லை.
இருவீட்டு சொந்தங்களும் மேடையை ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். புகைப்படக் கலைஞர் அனைவரையும் ஆயாசத்துடன் பார்த்து, ‘எல்லாரையும் சிங்கிள் ப்ரேம்ல கவர் பண்ணணுமா?’ என சலிப்புடன் புகைப்படக் கருவியை எப்படி வைத்தால் சரியாய் இருக்குமென அங்கேயும் இங்கேயும் நகர்த்தினார்.
“டேய்... உங்க அண்ணனை எங்க டா. எல்லாரும் ஒரு இடத்துல இருந்தா இவன் மட்டும் தனியா போய்ட்றான். வர சொல்லு அவனை!” அவ்தேஷிடம் அவனது தாய் குரலை உயர்த்த, “ம்மா.. இதோ வந்துட்டான்!” என மேடையேறும் யுக்தேஷைக் கை காண்பித்தான்.
“வாடா... எங்க போன நீ. வர வர உன் போக்கே சரியில்ல!” எனக் கண்டித்தவர் அவன் பின்னே வரும் காயத்ரியைப் பார்த்ததும், “குடும்பமா ஃபோட்டோ எடுக்குறதுக்கு இவளை எதுக்கு டா கூட்டீட்டு வந்த?” என சுள்ளென சத்தமாய்க் கேட்டுவிட, மேடையிலிருந்த அனைவரின் பார்வையும் காய்தரியிடம் குவிந்தது. அவரது பேச்சில் அவமானமாய் போய்விட, இவளது முகம் மாறியது.

அவரைப் பார்க்காமல் நிமிர்ந்து ரகுராமைக் குற்றம் சுமத்தும் பார்வையை வீச, “அத்தை... நான்தான் அவளைக் கூப்ட்டேன். அவ என் ஃப்ரெண்ட். நம்ப ஃபேமிலில அவளும் ஒருத்திதான்!” அவன் அத்தையை முறைத்தான்.
“என்ன டா தேவராஜூ, உன் மகன் எனக்கு கொடுக்குற மரியாதை இதுதானா? இதெல்லாம் நல்லா இல்ல டா. நான் ஃபோட்டோ எடுக்க வரலை டா. நீங்க யாரையும் கூட்டீட்டு நடுவுல நிக்க வச்சு ஃபோட்டோ எடுங்க. நான் யாரு அதைக் கேட்க!” என அப்பெண்மணி முகத்தைச் சுருக்கி கீழே இறங்க செல்ல, “ராம், பெரியவங்க கிட்டே இப்படித்தான் பேசுவீயா? அவங்க உன் அத்தை. நம்பளை மதிச்சு கல்யாணத்துக்கு வந்திருக்காங்க. நம்ப அதுக்குரிய மரியதையைக் கொடுக்கணும்!” தேவராஜ் கண்டனக் குரலில் பேசினார்.
“ப்பா... காயூ என் ஃப்ரெண்ட். என்னை மதிச்சு என் கல்யாணத்துக்கு அவ வந்திருக்கா. அவ என் கெஸ்ட். அவளோட மரியாதையும் எனக்கு முக்கியம். அத்தைப் பேசுனது சரியில்லைப்பா!” என அவன் இன்னுமே சூடாய் பதில் தந்தான்.
“அட... என்ன ராம் நீ. உன் அத்தை தானே. விடு தெரியாம பேசியிருப்பாங்க!” என்ற கௌதமி, “அண்ணி... என்ன நீங்க. வீட்டுக்கு மூத்தவங்க. முன்னாடி வந்து நின்னு போட்டோவுக்கு போஸ் குடுங்க. எதுக்கு ஓரமா நிக்குறீங்க?” என அவரைக் கைப்பிடித்து இழுத்த கௌதமி, “காயூ, நீ வா, அம்மா பக்கத்துல நில்லு!” என அவளை தன்னோடு இருத்திக் கொண்டார். காயத்ரி இறுகிய முகத்துடன் அங்கே நின்றிருந்தாள். ஏனோ தான் மட்டும் அங்கே பொருந்தாத பொருள் போல மனம் வலித்தது. அதுதான் உண்மையும் கூட. அவளுக்குமே அது புரிந்திருந்தததால் தானே வர மாட்டேன் என்று ஸ்திரமாக நின்றாள். ஆனால் ராம் என்ற சொல்லுக்காக இவ்விதப் பேச்சையெல்லாம் தாங்கிக் கொண்டிருக்கிறாள்.

புகைப்படம் எடுத்து முடித்ததும் அவள் விறுவிறுவென இறங்க செல்ல, “காயூவைக் கூப்பிடு சைந்து!” என ரகுராம் சைந்தவியிடம் கூற, “காயூ!” என இவள் அழைக்க, அவள் திரும்பி பார்த்தாள்.
“ஒன் மினிட் வர்றீங்களா? ப்ளீஸ்?” என அவள் அழைக்க, காயத்ரி தவிர்க்க முடியாது அவளருகே சென்றாள்.
“அண்ணா, எங்க மூனு பேரையும் ஒரு ஃபோட்டோ எடுங்க!” ரகு கூறும் முன்னே அவன் முகக் குறிப்பரிந்து சைந்தவி கூற, அவனது முகத்தில் முறுவல் பூத்தது.
“சாரி காயூ...” ராம் இவளது முகத்தை சங்கடமாய்ப் பார்க்க, “பரவாயில்லை ராம். அவங்க பேசலைன்னாதான் அதிசயம்?” என்று முறுவலித்தாள் காயூ. அவளிடம் இயல்பு தொலைந்திருந்தது. இருந்தாலும் சபை நாகரீகம் கருதி வெகுவாய் புன்னகை என்னும் அரிதாரத்தை முகத்தில் பூசிக் கொண்டாள்.
“காயூ, வாங்க... நம்ப மூனு பேரும் ஃபோட்டோ எடுத்துப்போம்!” சைந்தவி இவள் கையைப் பிடிக்க, “நோ... வேணாம் சைந்தவி. நீங்க ஜோடியா எடுங்க. நான் எதுக்கு தேவையில்லாம!” என இவள் நாசூக்காய் அவளிடமிருந்து கையை உருவினாள்.
“ப்ச்... நாங்கதான் ஏற்கனவே நிறைய பிக்ஸ் எடுத்துட்டோம் காயூ. ஒன்னே ஒன்னு, என் ஆசைக்காக. உங்களோட ராம்க்காக எடுங்க. அவர் பாவம் உங்க முகத்தையேதான் பார்த்துட்டு இருந்தாரு!” என சைந்தவி அவனுக்காக பரிந்து பேச, ரகுராமும் இவளது முகத்தைதான் பார்த்திருந்தான். ஏனோ இன்றைக்கு தனக்கும் ராமிற்கும் இடையே சைந்தவி வந்ததை மனம் உண்மையாய் உணர்ந்தது. இனிமேலும் இது இப்படித்தானே? ராம் என்ற பேச்சு சைந்தவியோடுதான் வரும் எனப் புரிய, மனம் பிசைய ஆரம்பித்தது. மெல்லிய தலையசைப்போடு சரியென்றாள்.
“ஓகே... நீங்க அவர் பக்கத்துல போய் நில்லுங்க!” என இவளை ராம் அருகே நிற்க வைக்க, மூவரும் புகைப்படத்தில் விழுந்தனர். கீழே இறங்குவதற்காக திரும்பிய காயத்ரியின் விழிகள் ரகுராம் சைந்தவியின் பிணைந்திருந்த கரத்தில் படவும், அழக்கூடாது என்று உருப்போட்டிருந்த வைராக்கியம் அனைத்தும் உடைந்து விழிகள் கலங்கப் பார்த்தன. முகம் மாறாதிருக்க வெகு பிரயத்தனப்பட்டவள், யாரையும் நிமிர்ந்து பாராது கீழே இறங்கினாள்.
“சைந்து, அங்க அண்ணிகிட்டே சொல்லி காயூவை சாப்பிட வைக்க சொல்றீயா? அவ சாப்பிடாம தனியா உக்கார்ந்திடுவா?” என நடந்து சென்று இருக்கையில் அமர்ந்த காயத்ரியைப் பார்த்தவாறே கூறினான்‌ ரகு.
“ஷ்யூர் ரகு!” என்றவள் தீக்ஷியை அழைத்து கூற, அவள் காயத்ரியை உணவுண்ண அழைத்துச் சென்றாள். இவர்களும் குடும்பத்தோடு உண்டு முடித்து வீட்டை அடைந்தனர். சைந்தவி காயத்ரியை தன்னோடு அறைக்கு அழைத்துச் சென்றாள்.
“ஷப்பா... செம்ம டயர்டா இருக்கேன் காயூ நான். இந்த ஜ்வல்ஸ் எல்லாம் போட்டுட்டு நசநசன்னு இருக்கு. மொதல்ல ரிமூவ் பண்ணணும்!” என சைந்தவி மெத்தையில் பொத்தென விழ, “நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணவா சைந்தவி?” எனக் கேட்டாள் இவள்.
“நோ... நோ. ஃபைவ் மினிட்ஸ் ரெஸ்ட் எடுத்துட்டு நானே ரிமூவ் பண்ணிக்கிறேன்!” என அவள் புன்னகைக்க, காயத்ரி அவளின் நகைகளைப் பத்திரமாக கழட்டிக் கொடுத்து, “தேங்க் யூ சோ மச் சைந்தவி!” என்றாள்.
“இட்ஸ் ஓகே காயூ. நீங்க ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக்கோங்க!” என அவள் கூற, இவள் உடை மாற்றும் அறைக்குள் சென்று சேலையை அவிழ்த்துவிட்டு சுடிதார் ஒன்றை அணிந்தாள். வரும்போது அணிந்து வந்த காதணியையும் கழுத்தணியையும் அணிந்தவள், உடுத்தியிருந்த துணிகளை மீண்டும் பையில் திணித்து அதை மூடி வைத்தாள். தலையிலிருந்த பூவைப் பறித்துக் குப்பைக் கூடையில் இட்டவள் சிகை அலங்கார நிபுணர் செய்த அலங்காரத்தைக் கலைத்து வெகு சாதாரணமாக பின்னலிட்டு இழுபட்டையை இழுத்து மாட்டிவிட்டு முகம் கழுவினாள். நெற்றியில் ஒற்றைப் பொட்டை மட்டும் இட்டவள், கைப்பையை தோளில் மாட்டிக் கொண்டே வெளியே வந்தாள்.
சைந்தவி நகைகளைக் கழற்றி நிலைபேழையில் வைத்துக் கொண்டிருந்தாள். இவளது அரவம் கேட்டுத் திரும்பியவள், “காயூ... நைட் ட்ரெஸ் எதுவும் போடாம ஏன் சுடிதார் போட்டு இருக்கீங்க? கைல என்ன பேக்?” என நெற்றியைச் சுருக்கினாள்.
“சைந்து, நான் ஊருக்கு கிளம்புறேன்!” என்றாள் தயங்கி.
“வாட்... இந்த நைட் டைம்ல தனியா எப்படி போவீங்க நீங்க? நோ வே, என் கூட ஸ்டே பண்ணிட்டு எல்லாரோடவும் மார்னிங் கிளம்புங்க...” என்றாள்.
 
Administrator
Staff member
Messages
1,091
Reaction score
3,124
Points
113
“இல்லை சைந்தவி, எனக்கு வேலை இருக்கு. நாளைக்கு ட்யூட்டிக்குப் போகணும். அப்பாவைத் தனியா விட்டுட்டு வந்திருக்கேன். அவருக்கு ஹெல்த் இஷ்ஸூன்னு உங்களுக்கே தெரியும் இல்ல? அவர் நினைப்பாவே இருக்கு. தனியா சாப்ட்டாரா என்னென்னு தெரியலை. மாத்திரை போட்டாரான்னு அதே யோசனை. என்னை விட்டா அவரைக் கேர் பண்ணிக்க யாரும் இல்ல!” என்றாள் தன்னிலையை விளக்கும் பொருட்டு. சைந்தவியால் இதற்குப் பதிலுரைக்க இயலவில்லை. இருந்தும் தனியாய் இந்தப் பெண் எப்படி செல்வாள் என்ற கவலைத் தோன்றிற்று.

என்னமோ காயூ, நீங்க பண்றது நல்லா இல்லை. நான் ரகுவை வர சொல்றேன். அவர்கிட்டே நீங்களே சொல்லுங்க. அப்புறம் காலைல வந்து என் ப்ரெண்டை எங்கன்னு சண்டைக்கு வந்துடுவாரு!” எனக் கேலியுடன் அவனுக்கு அழைத்தாள்.

“சைந்து, ராமை டிஸ்டர்ப் பண்ண வேணாம். அவனே டயர்டா இருப்பான். நான் மெசேஜ் போட்டுக்கிறேன்!” என இவள் கூறுவதை பொருட்படுத்தாத சைந்தவி, “ரகு,‌ என் ரூம்க்கு வாங்க நீங்க. உங்க ஃப்ரெண்ட் ஊருக்குப் போறதுக்கு கிளம்பி நிக்குறாங்க. நீங்களே வந்து என்னென்று கேளுங்க!” என்று படபடவென அவனிடம் விஷயத்தைப் பகிர்ந்தாள்.

அப்போதுதான் அனைவருக்கும் அறையை ஒழுங்கு படுத்திக் கொடுத்து ஆண்கள் நால்வரும் ஒரு அறையை எடுத்துக் கொண்டனர். இன்றைக்கு முழுவதும் அலைச்சலில் அவனுக்கு சோர்வாய் இருக்க, படுக்கலாம் எனப் கட்டிலில் சாய்ந்தவனை இவள் அழைத்ததும், விருட்டென எழுந்தவனுக்கு கோபம் கட்டுக்கடங்காமல் பெருகியது.

“சைந்து, ஃபைவ் மினிட்ஸ். அவளைப் போக விட்றாத. ஐ வில் பீ தேர்!” என பல்லைக் கடித்து விறுவிறுவென விருந்தினர் மாளிகையிலிருந்து இளவேந்தன் வீட்டை நோக்கி நடந்தான்.

“எதுக்கு இவன் இப்படி போறான்? காயூ மேட்டரா இருக்குமோ?” எனப் பார்த்திருந்த யுக்தேஷூம் சப்தமிடாமல் அவன் பின்னே நடந்தான்.

விறுவிறுவென இவன் உள்ளே நுழைய, நளினி கூடத்தில்தான் இருந்தார். தீக்ஷியும் அவரருகே கூடத்தை சுத்தம் செய்ய உதவிக் கொண்டிருந்தாள். இவனைக் கண்டதும் இருவரும் என்னவோ ஏதோ என பார்த்தனர்.

“என்னாச்சு மாப்பிள்ளை, எதுவும் வேணுமா?” என நளினி அவனிடம் வினவ, “அது.... அத்தை, சைந்து கால் பண்ணா. காயூ கிளம்புறேன்னு சொல்றாளாம். அதான் பேசிட்டு போகலாம் வந்தேன்!” என்றான் தயங்கியபடியே. நேரம் நள்ளிரவு பதினொன்றைத் தொட இருபது நிமிடங்கள் இருந்தன. இந்நேரத்திற்கு அவளை சந்திக்க செல்கிறேன் என்று கூற இவனுக்கே சற்று சங்கடமாய் இருந்தது.

“சரிங்க மாப்ளை, நீங்க போய் பேசுங்க...” என அவர் கூறியதும் இவன் திறந்திருந்த சைந்தவி அறைக்குள் நுழைந்தான். காயத்ரி ஊருக்கு செல்வதற்கு ஆயத்தமாக தோளில் பையோடு நின்றிருந்தாள். இவனைக் கண்டதும் அவளிடம் எவ்வித மாற்றமும் இல்லை.

உள்ளே நுழைந்தவன், “அறிவிருக்கா டி உனக்கு. இந்த நேரத்துல ஊருக்குத் தனியா போறேன்னு சொல்ற. அதெல்லாம் ஒன்னும் கிழிக்க வேணாம். காலைல போய்க்கலாம். போய் படு!” கோபம் வார்த்தைகளில் தெறித்தது. காயத்ரி அழுத்தமாக முடியாது எனத் தலையை அசைத்தாள்.

“ப்ம்ச்... என்னைக் கோபப்படுத்தாத காயூ? இப்போ என்ன அவசரம் இந்த நேரத்துல வீட்டுக்குப் போக?” பற்களை நறநறத்தான் அவன்.

“நாளைக்கு ட்யூட்டிக்குப் போகணும் ராம். அப்பா தனியா இருப்பாரு. அதனாலே நான் கிள்மபுறதுதான் பெட்டர்!” என்றாள் அவன் முகம் பார்க்காது. பொய்யுரைக்கிறாள் என அவனுக்கு நொடியில் புரிந்தது.

“ஏன் நாளைக்கு ஒருநாள் லீவ் போட மாட்டீயா? அங்கிள்க்கு கால் பண்ணி பேசு. நாளைக்கு இயர்லி மார்னிங் கூட நான் உன்னை பஸ்ஸேத்தி விடுறேன்!” பொறுமையை இழுத்துப் பிடித்துப் பேசினான்.

“நாளைக்கு லீவ் கிடைக்கலை ராம். நான் போகலைன்னா கவுண்டர்ல ஆள் இல்லாம போய்டும்!” மெல்லிய குரலில் உரைத்தாள் பெண்.

“அப்படியா? நான் நந்தேஷ்க்கு கால் பண்ணி என்னென்னு கேட்குறேன்!” அவன் அலைபேசியை எடுக்க, அதை நொடியில் தட்டிவிட்டவள், “மிட் நைட்ல அவரை டிஸ்டர்ப் பண்ணாத ராம். நான் கிளம்புறேன். அவ்வளோ தான். பங்கசன் முடிஞ்சிடுச்சே. அப்புறம் என்ன?” எனக் கடுப்புடன் கேட்டாள்.

“கிளம்புறேன் கிள்மபுறேன்னா இந்த அர்த்த ராத்திரில எப்படிடி போவ? சேஃப்டி முக்கியம் காயூ. வீம்பு பிடிக்காத. இந்நேரத்துக்கு பஸ் ஸ்டாண்ட் போய் போறது கஷ்டம்!” ரகுராம் அவளுக்குப் புரிய வைக்க முயன்றான்.

“நான் ரெட் பஸ்ல புக் பண்ணிட்டேன் ராம். மெயின் ரோட்ல வந்து அவங்களே பிக்கப் பண்ணிப்பாங்க. இங்க இருந்து கேப் புக் பண்ணிட்டேன்!” என்றவளை உறுத்து விழித்தவன், “சோ, கிளம்புற ஐடியாலதான் வந்திருக்க. அதான் எல்லாத்தையும் ரெடி பண்ணி வச்சிருக்க?” எனக் கேட்டவனுக்கு எதிரில் இருந்தவளின் கன்னம் கன்னமாக அறையும் வேகம். பொறுமை பொறுமை என இழுத்துப் பிடித்தவனை இந்தப் பெண் வெகுவாய் சோதித்தாள். அவனது கேள்விக்கு காயத்ரியிடம் பதில் இல்லை. மௌனமாய் தரையை வெறித்தாள்.

“பைன், ஒன்னும் பிரச்சனை இல்லை. வா, நானும் நீயும் சேர்ந்து போகலாம். காலைல அம்மா, அப்பா, அத்தைங்களோட வரட்டும்!” என்றான்.

அவனை நிமிர்ந்து முறைத்த காயத்ரி, “அதெல்லாம் ஒன்னும் தேவையில்ல. நீ என் கூட வர்றது நல்லா இருக்காது. நான் போய்க்கிறேன். ஏன் எந்த கேர்ள்ஸூம் மிட் நைட்ல பஸ்ல போறது இல்லை. அந்த பஸ்ல நான் மட்டும்தான் லேடியா இருப்பேனா என்ன?” என அவள் அழுத்திக் கேட்டாள்.

“நோ வே, வந்தா நானும் வரேன். இல்லைன்னா, நீ காலைல போ!” அவன் உறுதியாய் மறுக்க, அவள் ஏதும் பேசும் முன்னே யுக்தேஷ் வந்துவிட்டான். இவர்களது உரையாடலைப் பாதி கேட்டிருந்தவனுக்குப் புரிந்தது.

“ராம்... எதுக்கு காயூ மேல கோபப்படுற. இப்போ என்ன அவ தனியா போகக் கூடாது. அவ்வளோ தானே? நானும் காயூவும் சேர்ந்தே போறோம். நான் புதுக்கோட்டை போய் செங்கல்பட்டுக்கு பஸ்க்கு மாறிக்கிறேன். எனக்கும் நாளைக்கு முக்கியமான வேலை இருக்கு. அம்மா, அப்பா லேட்டா வரட்டும்!” என்றான் முந்திக்கொண்டு. காயத்ரியோடு பயணம் செய்யும் வாய்ப்பை அவனுக்கு தவறவிட மனதில்லை. அவனது பேச்சில் ரகுராமின் தீர்ப்பார்வை அவன் மேலே படர்ந்தது.

“நீ கொஞ்சம் வாயை மூடிட்டு இரு யுக்தா. இது உனக்கு தேவையில்லாத வேலை. உங்கம்மாவுக்குத் தெரிஞ்சா அவ்வளோதான்!” என்றான் சுள்ளென.

“அதெல்லாம் அம்மாவை சமாளிக்க எனக்குத் தெரியும். நான் காயூவோட போறேன்!” என அவன் அழுத்திக் கூற, “ரகு, அவர் சொல்றது நல்ல ஐடியா தானே?” என சைந்தவி இடை புகுந்தாள்.

“யெஸ்... யெஸ், சொல்லுங்க சிஸ்டர்!” யுக்தேஷ் கூற,

“யாரும் எனக்குப் பாதுக்காப்புக்கு வர வேணாம். என்னைப் பார்த்துக்க எனக்குத் தெரியும். நான் புக் பண்ண கேப் வந்துடுச்சு‌. நான் பத்திரமா போய்டுவேன்!” என்ற காயத்ரி விறுவிறுவென நடக்க, ரகு பல்லைக் கடித்தபடியே, “சைந்து, உங்க அண்ணா கார் கீ வேணும். அவளை பஸ் ஏத்தி விட்டுட்டு வரேன்!” என அவளிடம் மகிழுந்து சாவியைப் பெற்றுக் கொண்டு மகிழுந்தை இயக்கி வீட்டின் வாயிலுக்குச் சென்றான்.

காயத்ரி நிற்க, அவனருகே யுக்தேஷ் ஏதோ பேசி அவளை சம்மதிக்க வைக்க முயன்று கொண்டிருந்தான். அவர்கள் முன்னே மகிழுந்தை நிறுத்தியவன், “காயூ, உள்ளே ஏறு. நானே உன்னை பஸ் ஏத்திவிட்றேன்!” என்றான் அழுத்தமாய்.

“இல்ல ராம்!” என அவள் ஏதோ பேசும் முன்னே, “மூடீட்டு பேசாம வண்டியில ஏறுடி!” என அவன் உரைத்ததும் இவள் மறுமொழி சொல்லாது உள்ளே ஏறியமர்ந்தாள்.

“நானும் வந்து காயூவை சென்ட் ஆஃப் பண்றேன்!” என்ற யுக்தாவை முறைத்தவன், “ஒன்னும் தேவையில்லை. நீ மூடிட்டு போய் தூங்கு. நான் பார்த்துக்கிறேன்!” என விருட்டென அவன் மகிழுந்தை இயக்கிச் செல்ல, “துரோகி!” என இவன் முணுமுணுத்தான்.

ரகுராம் கோபத்தில் மகிழுந்தின் வேகத்தை சற்றே உயர்த்த, காயத்ரி அவனைப் பார்க்காது பார்வையை ஜன்னலில் பதித்தாள்.

“கடமைக்கு வந்துட்டுப் போறதுக்கு எதுக்குடி வந்த. பேசாம வர மாட்டேன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லித் தொலைஞ்சிருக்க வேண்டி தானே?” என அவன் இரைய, இவள் பதில் பேசவில்லை.

“உன்கிட்ட தான் கேட்குறேன் காயூ. வாயைத் தொறந்து பதில் சொல்லு!” என இவன் அதட்ட, அவள் வெகு நிதானமாக அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவனிடமிருந்த உணர்ச்சி வேகமோ, கோபமோ, ஆற்றாமையோ என எதுவுமே அவளிடம் இல்லை. முகம் உணர்வுகளற்று இருந்தது. நிச்சலமாக அவனைப் பார்த்தாள்.

“நான் உனக்கு ஏற்கனவே ரீசன் சொல்லிட்டேன் ராம்!” அதிராமல் பதிலளித்தவளைப் பார்த்தவன், “மண்ணாங்கட்டி ரீசன். நீ சொல்றதை மத்தவங்க நம்புவாங்க காயூ. ஆனால் நான் நம்ப மாட்டேன். உண்மையை சொல்றவ என் மூஞ்சியைப் பார்த்து பேசாம ஏன்டி தரையைப் பார்த்து பேசுன?” அவன் குரலை உயர்த்த, இவளது வாய் பூட்டுப் போட்டுக் கொண்டது.

“என்னத்தைதான் மனசுல வச்சிருக்கன்னு எனக்குத் தெரியலை டி. இப்படி கொஞ்சம் கொஞ்சமா என்னை டார்ச்சர் பண்றதுக்கு மொத்தமா சாவடிச்சுடு காயூ. நிம்மதியா போய் சேர்ந்துடுவேன் நான். பக்கத்துல இருந்து சித்திரவதை பண்ற டி. எங்க கையை நீட்டி அறைஞ்சுடுவேனோன்னு பயமா இருக்கு. பேசுறதெல்லாம் பொய். என்கிட்ட உனக்குப் பொய் பேச வரும்னு எனக்கு இப்போதான் தெரியும் டி. ஆனால் நீ அப்படி இல்லை. நான் உனக்கு முக்கியம் இல்லை. கேட்டா பெர்சனல்னு என் வாயை அடைக்கிற. அந்த பெர்சனல் எப்போ எப்படி நமக்குள்ள வந்துச்சு. ஏன் என்னை இவ்வளோ ஆட்டிப் படைக்கிதுன்னு எனக்குத் தெரியலை. மண்டை காயுது எனக்கு. இன்னைக்குத்தான் எனக்கு எங்கேஜ்மெண்ட் முடிஞ்சிருக்கு. ஆனால், அதுக்கான சந்தோஷத்தைக் கூட என்னால முழுசா அனுபவிக்க முடியலை டி!” என அவன் கூறி முடித்ததும் அவனை நிமிர்ந்து நோக்கிய காயூ, “காரை நிறுத்து ராம்!” என்றாள் அழுத்தமாய்.

அவன் அவளைக் கேள்வியாக நோக்க, “காரை நிறுத்துன்னு சொன்னேன். நான் உன்னை என் கூட கூப்பிடலை. கேப் புக் பண்ணி நானே போய்ருப்பேன். இப்போ பாரு, உன்னால எங்கேஜ்மெண்ட்காக சந்தோஷம் கூட பட முடியலை. உனக்கு தேவையில்லாத சுமையா இருக்கேன் நான். எதுக்கு உனக்கு சிரமம். நீ என்னை நீ என்னை இறக்கிவிட்டுட்டு கிளம்பு. நான் எதாவது ஆட்டோ பிடிச்சு பஸ் ஸ்டாண்ட் போய்க்கிறேன். முதல்ல வண்டியை நிறுத்து ராம்!” என்றாள் பிடிவாதமாக. இத்தனை நேரம் அவள் கைபிடித்த நிதானம் முற்றிலும் தவறியிருந்தது. வார்த்தைகள் சூடாய் வந்தன.

அவளைத் திரும்பி உறுத்து விழித்தவன், “கூட வந்தவங்களை பாதியிலே விட்டுவிட்டு போற பழக்கம் என்னைக்கும் எனக்கு இல்ல. நீ என்னோட எங்கேஜ்மெண்ட்க்கு தானே வந்த. உன்னைப் பத்திரமா அனுப்பி வைக்கிறது என்னோட பொறுப்பு!” என்றான் அழுத்தமாய். அவள் அவனை ஒரு வெற்றுப் பார்வை பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டாள்.

இருவரும் பேருந்து நிலையத்தை அடைந்தனர். “பஸ் வர்ற வரை கீழே இறங்காத காயூ!” என எச்சரித்தவன் அருகிலிருந்த கடைக்குச் சென்று தண்ணீர் பொத்தல், ரொட்டிகள் மற்றும் வாந்தியைத் தடுப்பதற்கான மாத்திரைகளை வாங்கி வந்தான். அவள் கீழே இறங்கி நிற்க, “இதைப் புடி, ஆன்ட்டி எமிடிக் வாங்கி இருக்கேன். வாமிட் வர்ற மாதிரி இருந்தா போட்டுக்கோ!” என அவன் கொடுக்க, காயத்ரிக்கு இத்தனை நேரமிருந்த ஆற்றாமை ஒளிந்து விழிகள் கலங்க பார்த்தன. ஆனாலும் தன்னைத் திடமாய்க் காண்பித்துக் கொண்டாள்.

பேருந்து வந்து நிற்க, ரகுராம் முதலில் உள்ளே ஏறி அவளது இருக்கை எண்ணைப் பார்த்தான். அருகே ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். அவள் உள்ளே ஏற, இவன் பையை வாங்கி மேலே வைத்துவிட்டு, “அண்ணா, தனியா போறாங்க. கொஞ்சம் பார்த்துக்கோங்க ண்ணா!” என நடத்துநரிடம் தன்மையாய்க் கூற, “அதெல்லாம் ஒன்னும் பிராப்ளம் இல்ல சார். நான் பார்த்துக்கிறேன். நீங்க போங்க!” என்றவரிடம் தலையை அசைத்தவன் வெளியேறினான்.

“வீட்டுக்குப் போய்ட்டு மேசேஜ் போடு காயூ. அடிக்கடி கால் பண்ணுவேன். நீ எடுத்துப் பதில் பேசணும். இல்லைன்னா,நான் கிளம்பி வந்துடுவேன். நைட் தூங்க மாட்டேன். நீ போய்ட்டன்னு சொன்னதுதான் தூங்குவேன்!” என அவன் ஜன்னலருகே மெலிதாய்க் கத்த, காயத்ரி அவன் புறம் திரும்பவே இல்லை. நேரே பார்த்தது பார்த்தபடி அமர்ந்திருக்க, பேருந்து கிளம்பியது. இவனது பார்வை அவளையே தொடர்ந்தது. அவள் பார்க்கவில்லை எனத் தெரிந்ததும் ரகுராம் மகிழுந்தினருகே செல்ல, அவனை எட்டிப் பார்த்த காயத்ரி கண்ணில் வழிந்த நீரைத் துடைத்தவள், தண்ணீரை அருந்தி தொண்டையை அடைத்த துக்கத்தை நீரோடு சேர்த்து விழுங்கினாள். ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒருமுறை ராம் அவளுக்கு அழைத்தான். அவள் பாதுகாப்பை அறிந்தப் பின்னர்தான் அழைப்பைத் துண்டித்தான்.

ஐந்து மணி நேரங்கள் கடந்து அவள் புதுக்கோட்டையை அடைந்து ஒரு மகிழுந்து முன்பதிவு செய்து ஆலம்பட்டியிலிருந்த வீட்டை அடைந்தாள். அவனுக்கு செய்தியை இவள் தட்டச்சு செய்ய, அவனே அழைத்துவிட்டான்.

“வீட்டுக்குப் பத்திரமா போய்ட்டீயா காயூ?” அவன் குரல் சோர்வாய் வந்தது.

“ஹம்ம் வந்துட்டேன். நீ போய் தூங்கு ராம்!” என இவள் கூற, “ஹம்ம்... சாரி காயூ. உன்கிட்ட கோபமா பேசிட்டேன்.‌ என்னமோ கில்டியா இருக்கு எனக்கு. சாரி ஃபார் எவ்ரிதிங்க் அண்ட் குட் நைட்...” என அவன் அழைப்பைத் துண்டித்ததும் இவளுக்கு கண்களிலிருந்து பொல பொலவென நீர் வடிய, சத்தம் செய்யாது விசும்பிக் கொண்டே படுக்கையில் விழுந்தாள்.

தொடரும்...

 
Active member
Messages
206
Reaction score
137
Points
43
Lovely
Ha ha sainthu ku purinjidum nu thonuthu
Intha tadhi ram ku tan Puriyala
Intha un amma latchanathuku thevaya unaku ithu
 
Well-known member
Messages
924
Reaction score
677
Points
93
Irunthalum romba azha vachitte irukka ma neenu
 
Top