• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 8

Administrator
Staff member
Messages
502
Reaction score
796
Points
93
ஜென்மம் 8

காதல் கானாக்கள் தானா

தீர உலா நானா போதாதா
காலம் வினாக்கள் தானா
போதும் அருகினில் வர
மனம் உருகிதான்

கறையுதே…

தனது வெஸ்பாவை அந்த குழந்தைகள் ஆசிரமத்தின் முன் நிறுத்திவிட்டு இறங்கினாள் கன்னல்மொழி.

அவளை தொடர்ந்து வந்த பார்த்தீபன், “இங்க எதுக்கு வந்திருக்கா?” என்று புருவத்தை சுருக்கி பார்த்தான்.

கனி தன்னை ஒருவன் பின்தொடர்வதை துளியும் கவனியாமல் கையில் இருந்த பையை எடுத்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.

பார்த்தீபன் தான் போவதா இல்லையா? என்று சிந்தித்தபடி மகிழுந்தினுள் அமர்ந்து இருந்தான்.

இங்கு கனி உள்ளே நுழைந்ததும் அலுவலக அறைக்கு செல்ல அங்கு அமர்ந்திருந்த காப்பாளர் எழுந்து,

“வாங்க வாங்க‌ கன்னல் மொழி? பார்த்து ரொம்ப நாள் ஆச்சு?” என்று சிரிப்புடன் எழுந்து வரவேற்க,

“நல்லா இருக்கேன் மேம்” என்று புன்னகையுடன் கூறியவள்,

“வாங்க போங்கன்றதை விடுங்கன்னு எவ்ளோ டைம் சொல்றது மேம்” என்று லேசாய் சலித்து கொள்ள,

“அது தானா வருதும்மா. ட்ரை பண்றேன் குறைச்சுக்க” என்று புன்னகைத்தவர்,

“என்ன குடிக்கிறிங்க. டீ ஆர் காஃபி” என்று உபசரிக்க,

“எனக்கு எதுவும் வேண்டாம் மேம்” என்று மறுத்தவள்,

“பசங்க எல்லாம் என்ன பண்றாங்க மேம்” என்று வினவினாள்.

“எல்லாரும் சாப்பிட்டு விளையாடிட்டு இருக்காங்க. ரேவதிய அழைச்சிட்டு வர சொல்றேன்” என்க,

“இல்லை மேம் நானே போய் பாத்துக்கிறேன்” என்றவள் பையிலிருந்து ஒரு இனிப்பை எடுத்து அவரிடம் நீட்ட,

“என்ன ஸ்பெஷல் மா? எனி குட் நீயூஸ்?” என்று வினா எழுப்பினார்.

“குட் நீயூஸ் தான் மேம். நான் இங்க சென்னையில ஜாப் ஜாயின் பண்ணி இருக்கேன்” என்க,

“ரொம்ப நல்ல விஷயம் மா” என்று மகிழ்ந்தவர்,

“அப்போ இங்க அடிக்கடி வருவீங்க இல்லை?” என்று கேள்வி எழுப்ப,

“கண்டிப்பா மேம். இங்க பக்கத்துல தான் ஜாப். ஸ்டேயிங்கும் பக்கம் தான். என்னால முடியும் போதெல்லாம் கண்டிப்பா வந்திட்டு போறேன்” என்று அழகாய் புன்னகைத்தவள் எழுந்து வெளியே செல்ல குழந்தைகள் காலை உணவை முடித்துவிட்டு விளையாடி கொண்டு இருந்தனர்.

இவளை கண்டதும் ஒரு சில வாண்டுகள், “கனிக்கா…” என்று சிரிப்புடன் காலை கட்டி கொள்ள,

கனி சிரிப்புடன் அவர்களது உயரத்திற்கு குனிந்து, “மோனி தினேஷ் கவின் எல்லாரும் எப்படி இருக்கிங்க?” என்க,

“நல்லா இருக்கோம் கா. நீ ஏன் ரொம்ப நாளா வரலை. நாங்க உன்னை ரொம்ப மிஸ் பண்ணோம்” என்க,

இவளுக்கு அவர்களது அன்பில் உள்ளம் நெகிழ்ந்தது.

இதழ் தாண்டா புன்னகை செவி வரை நீள,

“கொஞ்சம் வொர்க் இருந்துச்சு. இப்போ சென்னைக்கே ஷிஃப்ட் ஆகிட்டேன். இனி அடிக்கடி வந்து பாக்குறேன்” என்று அவர்களது கன்னத்தில் முத்தமிட்டவள் தான் கொண்டு வந்திருந்த இனிப்புகளை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்தாள்.

மற்ற குழந்தைகளும் வந்து இவளிடம் பேச முகம் மலர்ந்த சிரிப்புடன் அவர்களின் கேள்விகளுக்கு பதில் மொழிந்தாள்.

இந்த இடம் கனிக்கு மிகவும் பிடித்த இடம். காரணம் பல வருடங்களுக்கு முன்பு சிவப்பிரகாசம் கனியை இந்த ஆசிரமத்தில் இருந்து தான் தத்தெடுத்து சென்றார்.

ஆசிரம காப்பாளர், ‘இரண்டு வயதில் நீ அழுதபடி சென்றது இன்றுவரை எனக்கு நினைவில் இருக்கிறது’ என்று அடிக்கடி கூறுவார்.

அப்போதெல்லாம் கனிக்கு தான் இங்கேயே இருந்திருக்கலாம் பெரிதான பாதிப்புகள் இன்றி வாழ்வை வாழ்ந்திருக்கலாம் என்று தோன்றும்.

குழந்தைகளுடன் நேரத்தை செலவழித்தவள் மனமே இல்லாது எழுந்து கொண்டாள்.

என்னவோ தாய் வீட்டை பிரியும் உணர்வு தான் எப்போதும் இங்கிருந்து கிளம்பும் நேரம் தோன்றி மறையும்.

விழிகளால் அவ்விடத்தை ஒரு முறை நிறுத்தி நிதானித்து ஆராய்ந்தவள் அங்கிருந்த குழந்தைகளிடம் கூறிவிட்டு கிளம்ப,

அவர்கள் அடிக்கடி வந்து தங்களை பார்க்குமாறு அன்பு கோரிக்கை விடுத்தனர்.

அவர்களிடம் கண்டிப்பாக தான் இயன்றவரை வந்து செல்வதாக வாக்களித்தவள் எழுந்து சென்று காப்பாளரிடம் கூறிவிட்டு விடை பெற்று வெளியே வந்தாள்.

வரும் சமயம் அவள் முகம் மலர்ந்து விகசித்ததை கண்டவன் அவள் வாகனத்தை எடுத்தவுடன் யோசனையுடன் உள்ளே சென்றான்.

காவலாளி பார்த்தீபனது தோற்றத்தை கண்டு எதாவது உதவி செய்ய வந்திருப்பாரோ என்று எண்ணி,

“டொனேஷன் கொடுக்க வந்து இருக்கிங்களா சார்?” என்று மரியாதையாக வினவ,

“ஆம்” என்று தலையசைத்தான்.

“வாங்க சார் நானே மேம் ரூம்க்கு அழைச்சிட்டு போறேன்” என்றவன் காப்பாளரின் அறைக்கு அழைத்து சென்று,

“மேடம் சார் டொனேஷன் கொடுக்க வந்து இருக்காங்க” என்று மொழிய,

அவனது தோற்றத்தில் தெரிந்த உயர்தரத்தில் காப்பாளர் எழுந்து,

“வாங்க சார் உட்காருங்க” என்று உபசரித்தார்.

பார்த்தீபன் அந்த அறையை சுற்றி பார்த்தபடி அவர் எதிரில் அமர்ந்தான்.

“என்ன குடிக்கிறிங்க சார்” என்று வினவ,

“எதுவும் வேண்டாம்” என்று மறுத்தவன் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு பின்,

“இங்க எத்தனை குழந்தைங்க இருக்காங்க?”என்று கேள்வி எழுப்ப,

“கேர்ள்ஸ் நாப்பத்தி அஞ்சு பாய்ஸ் இருபத்தி அஞ்சு மொத்தமா எழுபது பேர்”

“ஒன் மந்த்க்கு டோட்டலா எக்ஸ்பென்ஸ் ஆகும்?”

“ஐம்பதாயிரம் ஆகும் சார்”

“ஓகே” என்றவன் காசோலையை எடுத்து அதில் ஒரு லட்சம் நிரப்பி அவர்களிடம் கொடுத்தான்.

இதை கண்ட காப்பாளர் மகிழ்ந்து,

“ரொம்ப நன்றி சார். நீங்க செஞ்சு இருக்கது ரொம்ப பெரிய உதவி சார்” என்று மனமுவந்து கூற,

சிறிய தலையசைப்புடன் ஏற்று கொண்டவன்,

“நான் இங்க இருக்க பசங்களை பார்க்கலாமா?” என்க,

“கண்டிப்பா சார். டூ மினிட்ஸ் எல்லாரையும் நான் ஹால்ல அசெம்பிள் பண்ண சொல்றேன்” என்க,

“நோ அசெம்பிள் எல்லாம் வேணாம். ஜஸ்ட் பாக்கணும் எனக்காக எதுவும் பண்ண வேணாம்” என்றான்.

“ஓகே சார் வாங்க” என்று எழுந்து செல்ல,

தானும் அவரை தொடர்ந்து சென்றான். அங்கே சிறு வயது முதல் பதினைந்து வயது வரை உள்ள குழந்தைகள் சிரிப்புடன் விளையாடி கொண்டிருந்தனர்.

அவர்களை கண்டதும் பார்த்தீபனுக்கு சட்டென்று என்னவோ ஆனது.

இத்தனை குழந்தைகள் பெற்றோர் இல்லாமல் இவ்வுலகில் வாழ்கிறார்களா? என்று எண்ணம் எழுந்தது.

விளையாடி கொண்டு இருந்தவர்கள் காப்பாளரை கண்டதும் எழுந்து நின்றனர்.

காப்பாளர், “எல்லா குழந்தைகளும் இங்க தான் இருக்காங்க. யூசுவலா இந்த டைம்க்கு கிளாஸ் இருக்கும்‌. இன்னைக்கு லீவ்னால விளையாடிட்டு இருக்காங்க” என்றவர்,

“ஸ்டூடண்ட்ஸ் இந்த சார் நேம் பார்த்தீபன் இவங்க உங்களுக்கு ரெண்டு மாசத்துக்கு தேவையான சாப்பாட்டுக்கு ஹெல்ப் பண்ணியிருக்காங்க. சாருக்கு நன்றி சொல்லுங்க” என்றார்.

பார்த்தீபன் மறுத்து கூற வருவதற்குள் குழந்தைகள் கோரஸாக, “நன்றி பார்த்தீபன் சார்” என்று நன்றி நவிழ,

சட்டென்று என்னவோ அந்த குரல்களில் இருந்த மகிழ்ச்சியில் உள்ளுக்குள் ஏதோ நழுவியது.

இதெல்லாம் பார்த்தீபனுக்கு புதிது என்பதால் என்ன எதிர்வினை ஆற்றுவது என்று அவனுக்கு தெரியவில்லை.

ஒரு நொடி உறைந்து தான் போய்விட்டான்.

காப்பாளர், “ஓகே சத்தம் போடாம விளையாடுங்க” என்றுவிட்டு,

“போகலாமா சார்?” என்று வினவ,

“ஹ்ம்ம்” என்று தலையசைத்தவன் அலைபேசியில் ஏதோ பேசியவன் காப்பாளரிடம்,

“நான் வரும் போது ஒரு பொண்ணு வெளியே போனாங்களே அவங்க கன்னல்மொழி தானே?” என்று வினவ,

“ஆமா சார்.‌ உங்களுக்கு அவங்களை தெரியுமா சார்?”

“ஹ்ம்ம் தெரியும். என் காலேஜ் ஜூனியர் தான். இப்போ கான்டாக்ட்ல இல்லை. நான் கூப்பிட்றதுக்குள்ள கிளம்பி போய்ட்டாங்க” என்றவன்,

“அவங்க இங்க அடிக்கடி வருவாங்களா?” என்று வினவிட,

“அடிக்கடி வர மாட்டாங்க. டூ மந்த் ஒன்ஸ் த்ரீ மந்த் ஒன்ஸ் வருவாங்க”

“ஓ… எதாவது ஹெல்ப் பண்றாங்களா?”

“ஆமா சார் ரொம்ப நல்ல பொண்ணு. ஆக்சுவலி அவங்களும் இந்த ஆசிரமத்தில இருந்தவங்க தான்‌. இங்க இருந்து ஒரு ரிச் பேமிலி அவங்களுக்கு குழந்தை இல்லைன்னு தத்தெடுத்துட்டு போய்ட்டாங்க” என்றதும் பார்த்தீபனுக்கு புரிந்தது அவளது முக மலர்ச்சிக்கான காரணம்.

“இந்த ஆசிரமத்தை ஒரு பெரிய மில் ஓனர் தான் பாத்துக்கிட்டு வந்தாங்க. சில வருஷத்துக்கு முன்னாடி அந்த ஓனர் இறந்து போன பின்னாடி அவங்க பசங்க இதை கன்டினியூ பண்ண முன் வரலை. அப்போ ரொம்ப கஷ்டம். பசங்களுக்கு ரெண்டு வேளை சாப்பாடு போடவும் கஷ்டப்பட்டோம். உங்கள மாதிரி நல்ல மனசு உள்ளவங்க யாராவது ஹெல்ப் பண்ணா தான் சாப்பாடு போட முடிஞ்சது”

“...”

“கஷ்டத்தை சமாளிக்க இங்க இருந்து வெளியே போன சிலர்கிட்ட உதவி கேட்டோம். அப்போ தான் இவங்க உதவி செய்ய முன் வந்தாங்க. அப்போதுல இருந்து கிட்டத்தட்ட அஞ்சு வருஷமா ஆசிரமத்தோட மொத்த செலவும் இவங்க தான் பாத்துக்கிறாங்க” என்றதும் பார்த்தீபனின் புருவம் வியப்பில் விரிந்தது.

“சாப்பாடு படிப்பு மருத்துவ செலவு எல்லாமே இவங்க தான் பாத்துக்கிறாங்க. போன மாசம் ஒரு பையனுக்கு ஹார்ட் ஆப்ரேஷன் பண்ண வேண்டி இருந்தது பத்து லட்சம் இவங்க தான் யோசிக்காம தூக்கி கொடுத்தாங்க.‌ உதவி செய்யிறதால சொல்லலை உண்மையாவே அவங்க ரொம்ப நல்ல பொண்ணு” என்று மனதார கூற,

இங்கு பார்த்தீபன் மனதில் கனியின் மீதான அவனது புரிதல் மெதுவாக உடைந்து கொண்டிருந்தது.

“சார் நீங்க கேட்டதும் பட்டுன்னு சொல்லிட்டேன். இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேணாம். ஒரு நாள் சாப்பாடு போட்டாலே அதை விளம்பரம் பண்ற இந்த காலத்துல முழுசா அஞ்சு வருஷமா இவங்களை பாத்திட்டு வர பொண்ணு தான் தான் இதை பண்றேன்னு எந்த இடத்துலயும் காட்ட விரும்பலை” என்று பெருமையாக கூற,

இங்கு பார்த்தீபன் முகத்தில் பிரித்தரிய முடியாத உணர்வுகள். இவளிடம் ஏது இவ்வளவு பணம். சிவப்பிரகாசம் மாமா உதவி செய்திருப்பாரா? அப்படி செய்திருந்தால் நிச்சயம் தனக்கு செய்தி வந்திருக்குமே என்று யோசித்தான்.

எப்படி இது சாத்தியம் என சிந்தித்து கொண்டிருக்க, அவன் சிறிது நேரத்திற்கு முன் அழைத்து பேசிய நபர் கைகள் நிறைய இனிப்புடன் உள்ளே நுழைந்தார்.

வந்து, “சார் நீங்க கேட்டது” என்று கூற,

அந்த பையை வாங்கி கொண்டவன் அவனை போக கூறிவிட்டு,

“இது குழந்தைகளுக்காக ஸ்வீட்ஸ் வாங்கிட்டு வர சொன்னேன்” என்று பையை அவரிடம் நீட்ட,

“வந்து நீங்களே உங்க கையால கொடுங்க சார்” என்று அவர் பார்த்தீபனை அழைத்து சென்றுவிட்டார்.

விளையாடி கொண்டிருந்த குழந்தைகளிடம், “ஸ்டூடண்ட்ஸ் சார் உங்களுக்கு ஸ்வீட்ஸ் ஸ்நாக்ஸ் எல்லாம் வாங்கிட்டு வந்திருக்காங்க எல்லாரும் வரிசையா வந்து நின்னு வாங்கிக்கோங்க” என்று மொழிய,

தடதடவென ஓடி வந்து முந்தி கொண்டு வரிசையில் நின்றனர். அவர்களது முகத்தில் இனிப்பை உண்ண போகும் மகிழ்ச்சி ஆறாக பெருகியிருந்தது.

ஒவ்வொருவராக வர பார்த்தீபன் இனிப்பை எடுத்து கொடுத்தான்,

“நன்றி சார்” , “தாங்க்ஸ் சார்” என்று பலரிடமிருந்து குரல் வர இவனுக்கு உள்ளுக்குள் ஏதோ செய்தது.

இதுவரை யாருக்கும் பெரிதாக தானாக சென்று உதவியதில்லை. அதற்காக உதவ மனம் இல்லை என்று கிடையாது. சிக்னலில் நிற்கும் போது யாராவது வந்து உதவி கேட்டால் கண்டிப்பாக பணம் கொடுத்துவிட்டு செல்வான்.

ஆனால் இந்த பிஞ்சுகளின் முகம் மலர்ந்து மழலை மாறாது கூறும் நன்றி ஏதோ உள்ளுக்குள் நிறைவை தந்தது.

இத்தனை நாட்கள் ஏன் நமக்கு இது போல உதவி செய்ய எண்ணம் வரவில்லை. இப்போது கனியை தொடர்ந்து வராவிடின் இத்தயை மகிழ்ச்சியை நிறைவை இந்த ஜென்மத்தில் தான் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றியது.

கையில் இனிப்பை வாங்கிய ஒரு சிறுவன், “உங்களுக்கு இன்னைக்கு பர்த்டே வா சார்?” என்று வினவ,

“இல்லை” எனும் விதமாக தலையசைத்தான்.

“இங்க பர்த்டேக்கு யாராவது வந்து சாக்லேட் பிரியாணி எல்லாம் வாங்கி கொடுப்பாங்க. ரொம்ப நல்லாயிருக்கும்” என்று பாவனையாய் கூற இவனுக்கு புன்னகை முகிழ்ந்தது.

“அடுத்த முறை வரும் போது பிரியாணி வாங்கி தர்றீங்களா? எனக்கு பிரியாணி ரொம்ப பிடிக்கும் ஆனால் இங்க அது செய்ய மாட்டாங்க. யாராவது வந்து வாங்கி கொடுத்தாதான் கிடைக்கும்” என்றவனது முகம் முழுவதும் ஆசையும் ஏக்கமும் பிரதிபலித்தது.

நொடியில் அந்த பாவனை அடி நெஞ்சில் தாக்கியிருந்தது‌.

சாதாரண சாப்பாட்டிற்கு கூட இவர்கள் எவ்வளவு ஏங்குகிறார்கள். தான் செல்லும் கேளிக்கை விருந்துகளிலும் விழாக்களிலும் உணவு வீணாக்கப்படுவது சிந்தையில் வந்து போனது.

ஏன் தானே பல முறை உணவை உண்ண பிடிக்காது என வீணாக்கி இருக்கிறோமே என்று தோன்றியது.

தான் பதிலை அவன் எதிர்பார்த்திருப்பது புரிய,

“இன்னைக்கே உங்க எல்லாருக்கும் பிரியாணி வாங்கி தர்றேன்” என்று கனத்த மனதுடன் கூற,

சூரியனை கண்ட தாமரையாய் முகம் மலர்ந்தவன்,

“ரொம்ப நன்றி சார்” என்க,

“முகில் எவ்ளோ நேரம் நீயே நிப்ப. மூவ் பண்ணு மத்தவங்க வாங்க வேண்டாமா?” என்று காப்பாளர் அதட்ட,

“நன்றி சார்” என்று மீண்டும் நன்றி நவிழ்ந்து அவன் விலக மற்றவர்கள் வாங்கி சென்றனர்.

இறுதியாக வந்த பத்து வயது சிறுமி, “சார் நீங்க படத்துல வர்ற ஹீரோ மாதிரி இருக்கிங்க. படத்துல நடிச்சு இருக்கிங்களா?” என்று ஆர்வமாய் கேட்க,

இவனுக்கு புன்னகை முகிழ்ந்தது.

“இல்லை” என்று தலை அசைத்தான்.

“ஓ… பாக்க ஹீரோ மாதிரி வெள்ளையா இருக்கிங்க சார் அதான் கேட்டேன்”என்று கள்ளமில்லா சிரிப்பை உதிர்க்க,

இவனுக்கு ரசிக்க கண்கள் போதவில்லை.

அனைவருக்கும் கொடுத்துவிட்டு காப்பாளரிடம்,

“இன்னைக்கு எல்லாருக்கும் புட் நான் புரெவைட் பண்றேன் மேம். இன்னும் ஒன் ஹவர்ல பிரியாணியை இங்க கொண்டு வந்து டெலிவரி பண்ணிடுவாங்க” என்று கூற,

“ரொம்ப நன்றி சார். எங்களால பசங்களுக்கு அசைவம் எல்லாம் அடிக்கடி செஞ்சு கொடுக்க முடியிறது இல்லை. யாராவது இப்படி வாங்கி கொடுத்தாதான் உண்டு. அவங்களுக்கும் ஆசை எல்லாம் இருக்கு. கேட்க முடியாத சூழ்நிலையில இருக்கதால அவங்க கேட்க மாட்டாங்க” ஏதோ தனக்கே யாவும் கிடைத்த மகிழ்ச்சியில் அவர் நன்றியை தெரிவிக்க,

“நீங்க இங்க ஒர்க் பண்றீங்களா மேம்?” என்று வினவ,

“ஆமா சார்.‌ எனக்கு கல்யாணத்துல பெருசா இன்ட்ரெஸ்ட் வரலை அதுனால சின்ன வயசுலயே இங்க வந்து ஜாயின்ட் பண்ணிட்டேன். இப்போ ஸ்டே வரை எல்லாம் இங்க தான்” என்று கூறி மென்னகை புரிந்தார்.

தன் வாழ்வையே பொது சேவைக்கு அற்பணித்துவிட்டு அதனை எவ்வளவு இயல்பாக கூறுகிறார் என்று வியப்பு எழுந்தது.

தன்னுடைய பையில் இருந்து ஒரு அட்டையை எடுத்தவன்,

“இது என்னோட கார்ட். இங்க சென்னையில தான் பிஸ்னஸ் பண்ணிட்டு இருக்கேன். பசங்களுக்கு புட் வேறு எந்த ஹெல்ப் தேவைப்பட்டாலும் என்னை தயங்காம கான்டாக்ட் பண்ணுங்க நான் கன்டிப்பா ஹெல்ப் பண்றேன்” என்றவன்,

“நெக்ஸ்ட் வீக் பசங்களுக்கு எல்லாம் ட்ரெஸ்க்கு அரேன்ஜ் பண்றேன் சைஸ் அளவெடுக்க என்னோட ஆட்கள் வருவாங்க. அவங்களுக்கு கொஞ்சம் டீடெயில்ஸ் கொடுத்துடுங்க” என்க,

“கண்டிப்பா சார். காசு இருந்தாலும் கொடுக்க எல்லாருக்கும் மனசு வராது. ஆனால் உங்களுக்கு இருக்கு. இந்த புண்ணியம் உங்களுக்கு கண்டிப்பா கிடைக்கும் உங்க வைஃப் குழந்தைங்க எல்லாரும் ரொம்ப நல்லா இருப்பாங்க. நாங்க வேண்டிக்கிறோம் சார்” என்று இறுதி முறையாக நன்றியை தெரிவிக்க அவரிடம் விடை பெற்று வந்தவன் மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி பெருகியது.

தான் உள்ளே நுழைந்த போது இருந்த மனநிலை என்ன? இப்போது இருக்கும் மனநிலை என்ன? எல்லாவற்றிற்கும் காரணம் யார் என்று வினா எழ அழையா விருந்தாளியாக கனியின் முகம் வந்து போனது.

இதழில் உறைந்த சிரிப்புடன் பார்த்தீபன் மகிழுந்தை இயக்க போகும் வழியிலே அவனது மகிழ்ச்சிக்கு காரணமானவள் நின்று கொண்டிருந்தாள்.

அதுவும் முகம் முழுவதும் சிரிப்புடன் கையில் ஒரு செம்பை வைத்து இருந்தாள். பார்த்தீபன் கவனிக்க அது ஒரு ரோட்டோரத்தில் கூழ் கடை.

சிறிய தள்ளு வண்டியில் ஒரு வயதானவர் வைத்திருந்தார்.

மற்றொரு கையில் இன்னொரு செம்பை வாங்கியவள் இரண்டடி எடுத்து வைக்க அந்த சாலையின் ஓரத்தில் வயதான மூதாட்டி ஒருவர் உடைகள் எல்லாம் மிகவும் அழுக்காக நைந்த தோற்றத்தில் அமர்ந்து இருந்தார்.

அவரது அருகில் சிறிதும் சிந்திக்காது அமர்ந்தவள் தன் கையில் இருந்த ஒரு செம்பை அவரிடத்தில் கொடுத்தவள்,

“குடிங்க பாட்டி. பாத்தா பசியா இருக்க மாதிரி தெரியிது” என்க,

“நீ நல்லா இருக்கணும்மா”என்றவர் தோள் சுருங்கிய கைகளில் அதை வாங்கி பருகினார்.

அவரது அருகிலே தானும் அமர்ந்தவள் கூழை ரசித்து ருசித்து பருக துவங்கினாள்.

கூழை குடித்ததும் அவளது முகத்தில் வந்து போன பாவனை அவ்வளவு அழகாய் இருந்தது. அங்கிருந்த தாத்தாவை அழைத்து கூழ் மிகவும் நன்றாக உள்ளது என்று கையினால் சைகை காண்பித்தாள்.

பிறகு பாட்டியிடம் ஏதோ பேசி கொண்டு இருந்தாள்.

பாட்டி குடிக்கும் வரை பொறுமையாக அமர்ந்து இருந்தவள் செம்பை வாங்கி தாத்தாவிடம் கொடுத்துவிட்டு பணமும் கொடுத்தவள் மூன்று கடை தள்ளியிருந்த துணிக்கடைக்குள் நுழைந்தாள்.

ஐந்து நிமிடத்தில் ஒரு பையுடன் வெளியே வந்தவள் பாட்டியின் எதிரே மண்டியிட்டு அமர்ந்து அதனை அவரிடத்தில் கொடுக்க பாட்டியின் முகத்தில் ஏக மகிழ்ச்சி.

கனியின் முகத்தை தடவி ஏதோ கூற பதிலுக்கு கனியின் முகத்தில் புன்னகை.‌ அந்த புன்னகை தான் எத்தனை அழகு.

‘இவள் இத்தனை அழகா?’ என்று அந்த கனம் தோன்றியது பார்த்தீபனுக்கு.

‘இவளையா இவ்வளவு நாள் தவறான கண்ணோட்டத்தில் நீ பார்த்து கொண்டிருந்தாய்?’ என்று மனசாட்சி எள்ளி நகையாடியது.

அந்த கணம் உலகத்திலே மிக மகிழ்ச்சியாய் இருப்பவள் இவள் தான் என்று எண்ணம் ஜனித்தது.

அதுவும் அவள் முகத்தில் தெரிந்த வாஞ்சை புன்னகை பரிவு அவளை இவ்வுலகிலே பேரழகியாய் காண்பித்தது அவனுக்கு.

பாட்டியிடம் பேசிவிட்டு வந்து வெஸ்பாவில் அமர்ந்து உயிர்பிக்கும் சமயம் தீடீரென வந்த ஆட்டே சிறிது உரசிவிட்டு சென்றிட சட்டென்று நிலை தடுமாறி விழுந்திருந்தாள் கன்னல் மொழி.

நொடி நேரத்தில் யாவும் நிகழ்ந்திருந்தது. பார்த்தீபனுக்கு நடந்தது மூளையில் உறைக்க வேகமாக இறங்கி அவளை நோக்கி ஓடியிருந்தான்.

அதற்குள் அங்கே சிறு கூட்டம் கூறி இருந்தது.‌ ஆட்டோ நிற்காமல் சென்றிருந்தது.

ஒரு சிலர் வந்து அவளுக்கு கைக்கொடுத்து எழ உதவி செய்ய,

“தள்ளுங்க” என்று பதற்றத்துடன் உள்ளே நுழைந்தவன்,

“கனி கால்ல அடிப்பட்ருச்சா.‌ என் கையை பிடிச்சுக்கோ” என்று அவளது கையை பிடிக்க வர அவனை ஒரு கணம் அங்கு எதிர்பாராது திகைத்தவள் பிறகு அடுத்த நொடியே அவனது கையை உதறியிருந்தாள்.

அவளது செயலை பெரிதாக கொள்ளாதவன், “கனி வா ப்ளீட் ஆகுது. ஹாஸ்பிட்டல் போகலாம்” என்க,

“தம்பி உனக்கு தெரிஞ்சவராமா? கார்ல தான் வந்து இருக்காரு போல ஹாஸ்பி
ட்டலுக்கு அவர்கூடவே போறீயாம்மா?” என்றதும் அடுத்த விநாடியே,

“இல்லை இவர் யாருன்னே எனக்கு தெரியாது. எனக்கு ஒரு ஆட்டோ மட்டும் பிடிச்சு கொடுங்க நான் ஹாஸ்பிட்டல் போய்க்கிறேன்” என்று அவனை உறுத்து விழித்தவாரே கூறியவளது முகம் முழுவதிலும் ஒவ்வாத தன்மை.

அதனை கண்ட பார்த்தீபன் தான் மொழிகள் இன்றி உறைந்திருந்தான்…



 
Active member
Messages
360
Reaction score
246
Points
43
Mozhi oda bathil la unga mozhi kannama poiduthu ah parthiban enna panrathu nega enna kuduthigalo athu than ava thirupi kudukura ah
 
Top