ஜென்மம் 7
வானம் எங்கும்
உன் பிம்பம் ஆனால்
கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன்
வாசம் வெறும் வாசம்
வாழ்க்கை இல்லை….
சாளரத்தின் வழியே வந்த ஆதவனின் கீற்றுகள் முகத்தில் விழ விழிகளை சுருக்கி திரும்பி படுத்தாள் கன்னல் மொழி.
சில நிமிடங்கள் புரண்டு படுத்தவள் அலைபேசியை எடுத்து நேரத்தில் பார்க்க மணி ஆறாகியிருந்தது.
வழக்கமாக எழும் நேரத்தினை விட தாமதமாக இருந்தாலும் இன்று விடுமுறை என்பதால் சோம்பேறித்தனம் வந்து ஒட்டி கொண்டது.
மேலும் சில நிமிடங்கள் புரண்டவள் எழுந்து முகம் கழுவி காலைக்கடன்களை முடித்துவந்து தனக்கான தேநீரை தயாரித்தாள்.
அறையின் ஓரத்திலே ஒரு சிறு மேஜை இருக்க அதிலே சமையலை செய்து கொண்டாள்.
மிகவும் குறைந்த அளவில் தான் அவளுக்கான பாத்திரங்கள் தேவைப்பட்டது. மற்ற மளிகை பொருட்களை சிறிய டப்பாக்கள் வாங்கி அதில் கொட்டி அடுக்கி வைத்திருந்தாள்.
அவனருகே மிகச்சிறிய அளவில் குளிர்சாதன பெட்டி இருந்தது. இது ப்ரவீனது உபயம்.
கனி தினமும் பால் வாங்க கடைக்கு செல்வதை கண்டவன் மறுநாளே அவளது மறுப்பை மீறி வாங்கி வைத்திருந்தான்.
கனிக்கும் இது உபயோகமாக இருக்க அவளும் பெரிதாக அலட்டி கொள்ளவில்லை.
குளிர்சாதன பெட்டியில் இருந்து பாலை எடுத்து தேநீரை தயாரித்தவள் கையில் கோப்பையுடன் சென்று பால்கனியில் நின்று வேடிக்கை பார்க்க துவங்கினாள்.
காலை நேரம் என்பதால் அந்த பகுதியில் பெரிதான ஆள் நடமாட்டம் இல்லை.
படபடவென்று அடித்து கொண்டு வந்து அருகில் நின்ற புறாவை கண்டவள் அதற்காக வைக்கப்படிருந்த சிறிய கிண்ணத்தை காண அதில் தானியங்கள் காலியாகி இருந்தது.
உள்ளே சென்று எடுத்து வந்து அதனை நிரப்பியவள் தான் அருகில் சென்றால் அது உண்ணாது என்று அறிந்து உள்ளே நகர படபடவென்று அடித்து கொண்டு நான்கைந்து புறாக்கள் வந்து உண்ண துவங்கியது.
அதனை ஒரு சில கணங்கள் பார்த்தவள் குளிப்பதற்காக உடையை தேர்ந்தெடுத்தாள்.
அவள் இங்கு வந்த இரண்டாவது நாளில் இருந்தே இது பழக்கம் தான். ஒரு நாள் புறா வந்து நிற்பதை கண்டவள் ஒரு கிண்ணத்தில் தானியங்களும் மற்றொரு கிண்ணத்தில் நீரையும் வைத்திட அவை தினமும் வாடிக்கையாக்கி கொண்டன.
குளித்து முடித்து தயாராக மகேஷ் அலைபேசியில் அழைத்தான். அவனது அழைப்பை கண்டதும் வழக்கம் போல மென்னகை எழுந்தது.
என்ன நடந்தாலும் நாள் தவறாது அழைத்திடும் இவனது அழைப்பு அக்கறையையும் அன்பையும் உணர்த்திடும் இவளுக்கு.
அழைப்பை ஏற்று சில நிமிடங்கள் பேசிவிட்டு துண்டித்தவளுக்கு காலை உணவு செய்ய மனம் வரவில்லை.
வாங்கி வைத்திருந்த ஒரு ஆப்பிளை எடுத்து துண்டு துண்டாக வெட்டி உண்டவள் தனது கைப்பையை எடுத்து கொண்டு கீழிறங்கினாள்.
கீழே கற்பகம் கத்தி கொண்டிருப்பது கேட்டது. காரணம் பெரிதாக ஏதுமிருக்காது.
என்ன சண்டை நடந்தாலும் அதன் மூலப்பொருள் தான் தான் என்று தெளிவாக புரிந்திருந்தது.
“என் பிள்ளைங்க பர்த்டே பார்டிக்கு அவ வர கூடாது” என்று கற்பகம் கத்தி கொண்டிருக்க,
“அக்கா வரலைன்னா நானும் வரமாட்டேன் மா”
“ஏன்டா உன்னையும் ப்ரத்யூ மாதிரி தானே பெத்தேன். நீ மட்டும் ஏன் டா இப்படி புத்தி கெட்டு அலையுற?”
“எனக்கு நல்ல புத்திதான் இருக்கு. உங்களுக்குத்தான்” என்றவன் தாயை அதற்கு மேல் பேச மனதில்லாமல் நிறுத்த,
“பேசுடா ஏன் நிறுத்திட்ட. எல்லாம் அந்த சிறுக்கி சொல்லி கொடுத்து இருப்பா” என்று காலில் கட்டுடன் அமர்ந்து இருந்த கோதை திட்ட,
“பாட்டி நீங்க சும்மா இருங்க. உங்களால தான் அம்மா இப்படி ஆகிட்டாங்க”
“பாத்தியா கற்பகம் உன் புள்ளை பேசுற பேச்சை. இதுக்கு தான் இவனை தோளுலயும் மாருலயும் போட்டு வளத்தேனா?” என்று கோதை மூக்கை சிந்த,
“ப்ரவீன் பாட்டிக்கிட்ட இப்படிதான் பேசுவியா? அவங்க வயசென்ன உன் வயசென்ன?” என்று கற்பகம் அதட்ட,
“வயசை பொறுத்து மரியாதை கொடுக்க முடியாது செய்யிற செயல்ல தான் இருக்கும்மா மரியாதை” என்று ப்ரவீனின் கூற்றுக்கு ‘சபாஷ்’ என்று மனதிற்குள் கூறியபடி இறங்கினாள் கன்னல்மொழி.
தினமும் காலையில் எதாவது ஒரு காரணத்தை கூறி சண்டையிடுவது தான் இவர்களது வேலை.
இவர்களது தொல்லை தாங்காமல் சிவப்பிரகாசம் விரைவாகவே அலுவலகம் கிளம்பிவிடுகிறார்.
“ப்ரவீன் இப்போல்லாம் ரொம்ப பேசுற நீ? இதெல்லாம் யார் சொல்லி கொடுத்து பேசுறன்னு எனக்கு தெரியும்” என்ற கற்பகத்தின் பார்வை கனியின் மீது அசூகையாக படிய,
அதனை வழக்கம் போல அசட்டை செய்தவள் அவர்களது சண்டையை சுவாரஸ்மயாக வேடிக்கை பார்ப்பது போல நின்று கொள்ள,
மற்ற இருவருக்கும் வெறி ஏறியது.
கனியினை கூறுவது பொறுக்காமல்,
“சும்மா எல்லாத்துக்கும் அக்காவையே சொல்லாதீங்க. ஐ ஆம் ட்வென்டி டூ எனக்கு எல்லாமே தெரியும். யார் சரியா இருக்கா யார் தப்பா இருக்கான்னு” என்றவன்,
“அக்கா வெளியே கிளம்பிட்டியா” என்றபடி இவளருகே வந்தவன் அவர்களை சிறிதும் கண்டுகொள்ளவில்லை.
“எல்லாம் இந்த அநாதை நாயால வந்துச்சு. இது இருக்க தைரியத்துல தான் இவன் ஆடுறான். இதை துரத்துனா இவன் அடங்கிடுவான். அதுக்கு முதல் ஒரு வழி பண்ணனும்” என்று சத்தமாக கூறிய கற்பகம் தாயிடம் ஏதோ பேச துவங்க,
ப்ரவீன் தமக்கையை அநாதை என்று கூறியதில் கோபமாகி ஏதோ கூற வர,
“ப்ரவீ வேண்டாம் விடு. அவங்க தான் அப்படின்னு தெரியும்ல விடு. கோபப்பட்டு பேசி உன் எனெர்ஜிய வேஸ்ட் பண்ணாத” என்று தடுத்திட,
“நீ எப்படிதான் இவ்ளோ பொறுமையா இருக்கியோ? அப்பா வந்ததும் இவங்களை பத்தி கம்பிளைண்ட் பண்ணனும்” என்று கடுப்புடன் மொழிய,
“அதெல்லாம் வேணாம் ப்ரவீ. ஏற்கனவே நான் வந்ததுல இருந்து அப்பாவுக்கு நிம்மதி இல்லை. இதை நீ சொல்ல போய் சண்டை பெருசாக போகுது” என்று தடுத்திருந்தாள்.
“என்னவோ போக்கா இவங்க எல்லாம் என்ன ஜென்மங்களோ?” சலிப்பாய் கூறியவன்,
“எங்கேயோ வெளிய கிளம்பிட்ட போல உனக்கு லேட்டாகுது பாரு கிளம்பு” என்று மொழிந்தான்.
“ஒரு சின்ன வொர்க்கா வெளியே போறேன் வர ஈவ்னிங் ஆகிடும் அப்பா சீக்கிரம் வந்தா சொல்லிடு” என்க,
“சரிக்கா பாத்து போ. உனக்கு இங்க ஏரியா எல்லாம் தெரியுமா நான் கூட வரவா?” என்க,
அதில் முகிழந்த புன்னகையுடன், “என்னோட குட்டி தம்பி அக்காவுக்கே துணைக்கு வர அளவுக்கு வளர்ந்துட்டான் போல” என்க,
பிரவீனுக்கு மனநிலை இளகுவாக,
“ஆமா எனக்கு ட்வென்டி டூ இந்த வீக்ல இருந்து ட்வென்டி த்ரீ” என்க,
“சரிதான் எவ்ளோ வளர்ந்தாலும் நீ எனக்கு குட்டி தம்பி தான் நான் போய்ட்டு வர்றேன்” என்று புன்னகையுடன் கிளம்ப,
சரியாக அதே நேரம் நிவிஷாவும் ப்ரத்யூவும் உள்ளே நுழைந்தனர்.
இவளை கண்ட ப்ரத்யூ, “சீ இவ மூஞ்சில முழிக்க கூடாதுனு தான் காலையிலே எழுந்து வெளியே போனேன். ஆனாலும் வந்து நிக்கிறா” என்றவள்,
“நல்ல ஜிங்க்கு ஜிங்க்குனு மேக்கப் போட்டு காலையில எவனை பாக்க கிளம்பிட்டான்னு தெரியலை” என்று அவளது காதுபடவே முணுமுணுத்தாள்.
அவள் கேட்டு சண்டைக்கு வர வேண்டும் அதை வைத்து வீட்டை விட்டு துரத்திவிடலாம் தந்தையும் வீட்டில் இல்லாத சமயம் என்று கணக்கு போட்டாள்.
துணைக்கு நிவிஷாவும், “இவ மூஞ்சியை பாக்க கூடாதுனு தான் நானும் உங்க வீட்டுக்கே வர்றதில்லை” என்று தானும் மொழிய,
சட்டென்று கனியின் நடை நின்றது.
ப்ரத்யூ அவளை முறைத்து பார்க்க கனி முகத்தில் எந்த உணர்வையும் காண்பிக்காமல்,
“நான் எங்க போறேன்னு தெரிஞ்சுக்கணுமா?” என்று வினவியவள்,
“தெரிஞ்சா நீ தான் பீல் பண்ணுவ” என்றுவிட்டு,
“நான் வந்தா பர்த்டே பார்ட்டிக்கு வர மாட்டேன்னு சொன்னியாமே அதுக்காகவே கண்டிப்பா வரணும்னு என் தம்பிக்கு கிஃப்ட் வாங்க போய்டு இருக்கேன். அதுவும் யாரோட தெரியுமா?” என்று மிக அருகில் ரகசிய குரலில் வினவியவள்,
“என்னோட பார்த்தீ அத்தானோட” என்று நமட்டு சிரிப்புடன் கூற,
இருவரது முகத்திலும் ஏகமாய் அதிர்ந்தது.
ப்ரத்யூ கோபத்தில், “ஏய்…ஏய்?” என்று வார்த்தை வராமல் தடுமாற,
“நீ அப்புறமா யோசிச்சு திட்டு. இப்போ என் அத்தான் வெயிட் பண்ணிட்டு இருப்பார். நான் கிளம்புறேன்” என்று கண்ணடிக்க,
ப்ரத்யூக்கு ரத்த அழுத்தம் எகிறியது.
“ஏய் பொய் சொல்லாதடி என் அத்தான் உன்கூடலாம் வர சேன்சே இல்லை” என்று இரைய,
“ஆமா ஏன் அண்ணன் உன்னைலாம் ஒரு ஆளா கூட மதிக்காது. நீ கொலைக்காரி மாமாவயையும் ப்ரவீ அத்தானையும் ஏமாத்துற மாதிரி என் அண்ணனை ஏமாத்த முடியாது” என்று நிவிஷா கூற,
“அதெல்லாம் உன் அண்ணன்கிட்ட பேசிக்கோ. லேட்டா போனா கோவிச்சுப்பாரு. அப்புறம் நான் கெஞ்சி கொஞ்சி சாமாதானம் பண்ணனும்” என்றவள் அங்கிருந்து நகர,
இவர்கள் இருவருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.
சடுதியில் ஒன்றும் ஓடவில்லை. அவர்களது நிலையை கண்ட கனிக்கு சிரிப்பு வந்தது.
இவர்களை எல்லாம் இப்படி எல்லாம் பேசினால் தான் அடக்க முடியும் வந்ததில் இருந்து எத்தனை கலாட்டாக்கள் செய்துவிட்டார்கள் என்று எண்ணியபடியே தனது இரு சக்கர வாகனத்தை எடுத்து கொண்டு வெளியேறினாள்.
இங்கு வந்த ஒரே வாரத்தில் கனி தனது வாகனத்தை கொண்டு வந்திருந்தாள்.
இதை கொண்டு வந்ததில் இருந்து எத்தனை போராட்டம் தினமும் சக்கரத்தில் காற்றை பிடுங்கிவிட்டு வைக்க கனிக்கு ஒரே கடுப்பாக இருந்தது.
சிவப்பிரகாசத்திடம் கூறி வாகன நிறுத்திடமிடத்தில் கண்கானிப்பு கருவி பொருத்தவும் தான் அமைதியாக இருந்தார்கள்.
அதுவும் சிவப்பிரகாசம் வீட்டில் இருப்பவர்கள் தான் இதை செய்தது என தெரிந்தால் வீட்டை விட்டு அனுப்பிவிடுவேன் என்று தெளிவாக கூறிவிட அதன் பிறகு வாகனத்தின் அருகில் வருவதில்லை.
ஒவ்வொரு நாளும் கனிக்கு இவர்கள் என்ன செய்து வைப்பார்களே என்று தான் இருக்கும்.
இதோ இந்த போராட்டத்தோட ஒரு மாதம் கழிந்திருந்தது.
பார்த்தீபனின் அன்று பேசிய பிறகு அவனது கண்ணிலே இவள் படவில்லை.
நான் உன்னை நெருங்க முயற்சிக்கிறேனா? நான் உன்னை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை என்று அவனுக்கு உணர்த்தும் விதமாக நடந்து கொண்டாள்.
அது பார்த்தீபனுக்கு இன்னும் கோபத்தை ஏற்படுத்தியது. அவளை குதறிவிடும் சந்தர்பத்திற்காக அவனும் காத்திருந்தான்.
கனி அதற்கு இடமே கொடுக்கவில்லை. தன்னுடைய வேலையில் மிக மிக சரியாக இருந்தாள்.
எள் எனும் முன் எண்ணெய்யாக இருந்தாள். இந்த ஒரு மாதத்தில் நன்றாக வேலையை கற்று தேர்ந்திருந்தாள்.
தனக்கு கொடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களில் ஐந்தில் நான்கு பேரை கல்லூரியில் சேர்ப்பதற்கு பேசி முன் பணமும் செலுத்த வைத்திருந்தாள்.
இதற்கு மேல் அவளை திட்ட அவனுக்கு என்ன வாய்ப்பு அமைந்திட போகிறது.
நடந்தவற்றை எண்ணியபடியே பயணம் செய்தவளுக்கு இந்நேரம் தான் கூறிய வார்த்தைகள் பார்த்தீபனை சென்றடைந்திருக்கும்.
சும்மாவே குதிப்பான் இதை கேட்டு இன்னும் குதிப்பான். நன்றாக கடுப்பாகட்டும். தான் கூறியவற்றை கேட்டதும் அவன் முகம் போகும் போக்கை நினைத்து பார்த்தவளுக்கு சிரிப்பு வந்திட தன்னை பார்த்து யாரும் பைத்தியம் என்று நினைத்துவிட போகிறார்கள் என்று எண்ணி கொண்டாள்.
வந்த புதிதில் கடினமாக இருந்த வாழ்க்கை இப்போது வேடிக்கையாக மாறி இருந்தது. அதுவும் தன் வீட்டில் இருக்கும் வேடிக்கை மனிதர்களின் செயலினால் சற்று சிரிப்பு கூட வந்தது. இதெல்லாம் இந்த கன்னல் மொழிக்கு ஒரு விடயமா என்று கடந்து வந்திருந்தாள்.
வீட்டிற்கு வந்த அன்றைக்கும் இன்றைக்கும் மனநிலையில் எவ்வளவு மாற்றம் என்று நினைத்து கொண்டாள்.
இங்கு கனி நினைத்தது போலவே நிவிஷா தன் அண்ணனுக்கு அழைத்து இருந்தாள்.
ஒரு முறை அழைப்பு விடுத்து அவன் எடுக்காமல் போக இவர்களுக்கு பயம் எகிறியது.
நிவிஷா மீண்டும் அழைத்திட இறுதி நொடியில் அழைப்பை ஏற்றவன்,
“சொல்லு நிவி” என்க,
“அண்ணா எங்க இருக்க?” என்றவளது குரலில் இருந்த பயம் தமையனுக்கு புரிந்திட,
“என்னடா என்னாச்சு?” என்று வினவ,
“ப்ச் நீ எங்க இருக்கேன்னு பர்ஸ்ட் சொல்லு” என்றவளது குரலில் எரிச்சல்.
“நான் அரும்பாக்கம் போயட்டு இருக்கேன்” என்றவன்,
“அது எதுக்கு உனக்கு?” என்க,
கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல்,
“உன் கூட யார் இருக்கா?” என்று வினா எழுப்ப,
இவனுக்கு கோபம் வந்தது.
“இப்போ உனக்கு என்ன தெரியணும்? ஏன் இப்படி கேள்வி கேட்டுட்டு இருக்க?” என்று எரிச்சலாக வினவ,
“அத்தான் நிவி கேட்டதுக்கு பதில் சொல்லுங்க”
“ப்ரத்யூ நீயும் அங்க தான் இருக்கியா? உங்க ரெண்டு பேருக்கும் என்ன ஆச்சு?” என்று சிறிது ஆயாசமாக வினவிட,
“அத்தான் அந்த கொலைக்காரி உங்க கூட இருக்காளா?”
“யாரு அது?”
“அதான் அத்தான் எங்க வீட்ல இருக்க பிச்சைக்காரி?”
“ப்ச் உன்கிட்ட அன்னைக்கே சொன்னேன்ல வயசுக்கு மரியாதை கொடுக்கணும்னு” என்றவன் அதட்ட,
“ஆமா அந்த அநாதை நாய்க்கு மரியாதை ஒன்னு தான் குறைச்சல். இப்போ அவ உங்க கூட இருக்காளா? இல்லையா?”
“ப்ரத்யூ ரொம்ப பேசுற நீ” என்று அதட்டியவன்,
“அவ எதுக்கு என் கூட இருக்கணும்?” என்று புருவம் சுருக்க,
“அத்தான் அந்த பொய்க்காரி அப்படி தான் சொல்லிட்டு போனா. உங்க கூட வெளியே போறேன்னு அதுவும் லேட்டானா உங்களை கொஞ்சி சமாதானம் பண்ணுவேன்னு” என்றவளது குரலில் அத்தனை கோபம் வெறுப்பு.
“என்ன?” என்று அதிர்வுடன் திகைத்கவனுக்கு ஒரு கணம் ஒன்றும் புரியாது போக,
‘உலகத்தோட கடைசி ஆம்பளையா நீ இருந்தாக்கூட உன்னை திரும்பியும் பாக்க மாட்டேன்’ என்றவளது குரல் எதிரொலிக்க,
சடுதியில் தலையை உலுக்கியவன்,
“அவ எதாவது இஷ்டத்துக்கு சொன்னா ரெண்டு பேரும் என்கிட்ட வந்து கொஸ்டீன் கேட்பிங்களா?” என்று அவளது வார்த்தை கொடுத்த தாக்கத்தையும் சேர்த்து காட்ட,
“இல்லை அத்தான் அது” என்று ப்ரத்யூ என்ன செய்வதென்று தெரியாமல் இழுக்க,
“என்ன இல்லை ஆமான்னு இழுத்திட்டு இருக்கிங்க” என்று அதற்கும் காய,
“ண்ணா நாங்க பாட்டுக்கு தான் இருந்தோம். அவ தான் வந்து ஏதேதோ பேசி எங்களை குழப்பிவிட்டுட்டா” என்று நிவிஷா விளக்க,
“அவ சொன்னா உங்களுக்கு எங்க போச்சு அறிவு. போய் ரெண்டு பேரும் உருப்படியா ஏதாவது பண்ணுங்க. காலையிலே வந்து மூட் அப்சட் ஆக்கிட்டு” என்று கத்தியவன் கடுப்புடன் அழைப்பை துண்டித்து விட்டு தனது மகிழுந்தை இயக்க,
முகத்தில் தோன்றிய சிரிப்புடன் இரு சக்கர வாகனத்தில் அவனை கடந்து சென்று கொண்டிருந்தாள் கன்னல்மொழி.
அவளை பார்த்ததும் இவளால் தான் காலையிலே இவ்வளவுதான் தலைவலி சும்மாவே இருக்கமாட்டாள் என்று கடுப்புடன் எண்ணியவன் இந்நேரத்தில் எங்கே செல்கிறாள்? இவளுக்கு இங்கே உறவினர்கள் கூட கிடையாதே என்று நெற்றி சுருக்கியவன் தான் போகும் வேலையை பாதியில் விட்டுவிட்டு அவளை பின் தோடர்ந்தான்.
இங்கு பார்த்தீபனிடம் திட்டு வாங்கிய இருவரும் கடுப்புடன் உள்ளே வந்து,
“ம்மா இந்த பிச்சைக்காரி காலையிலே மாமாக்கிட்ட எங்களை திட்டு வாங்க வச்சிட்டா” என்று அழாத குறையாக நடந்தவற்றை கூற,
இதனை கேட்டு அதிர்ந்த கோதை,
“அந்த அநாதை கழுதை அப்படியா சொல்லுச்சு. அது கெட்ட கேட்டுக்கு ராஜா மாதிரி இருக்க என் பேரன் கேக்குதா?” என்க,
“அம்மா நான் சொன்னேன்ல அவ ஏதோ திட்டத்தோட தான் இந்த வீட்டுக்குள்ள வந்து இருக்கா. என் மருமகனை மயக்கி கைக்குள்ள போட்டுக்கிறது தான் அவளோட பிளான் அதை தான் சொல்லிட்டு போறா” என்று கற்பகம் கூற,
“இல்லை அத்தை. போயும் போயும் அவளையா? என் அண்ணன் திரும்பி கூட பாக்காது சேன்சே இல்லை” என்று நிவிஷா மறுத்தாள்.
கற்பகம், “உனக்கு தெரியாது நிவி இவ நல்லவ வேசம் போட்டு யாரை வேணா ஏமாத்துவா? அப்படி தான உன் மாமாவையும் ப்ரவீனையும் ஏமாத்தி வச்சிருக்கா” என்று கற்பகம் மொழிய,
“ஆமா நிவி. எனக்கு பயமா இருக்கு இவ என் அத்தானை மயக்கிடுவாளோன்னு”
“சீ அந்த மாதிரிலாம் எப்பவும் நடக்காது. அதுக்கு முதல் இந்த அநாதை நாய செருப்பால அடிச்சு துரத்தணும். அதுக்கு எதாவது பிளான் பண்ணனும்” என்று கோதை மொழிய,
மற்றவர்களும் இதை ஆதரித்து கனியை உடனடியாக வீட்டை விட்டு துரத்துவதற்கு என்ன செய்யலாம் என்று நேரம் போனதே தெரியாமல் யோசித்து கொண்டு இருந்தனர்.
அப்போது வெளியே மகிழுந்தின் சத்தம் கேட்க நிவி,
“இது அண்ணாவோட கார் சவுண்ட்” என்க,
“அத்தானா?” என்று ப்ரத்யூவின் முகம் மலர,
“ஆமா காலையில கோவமா பேசிட்டாருல அதான் சமாதானம் செய்ய வந்திருப்பாங்க” என்று நிவி கூற,
“ஆமாடி. அத்தானுக்கு நம்ம மேல பாசம் அதிகம். உடனே சமாதானம் ஆகிட கூடாது”என்றவள்,
“வா போய் உள்ள கூப்டுவோம்” என்று எழுந்து செல்ல,
“நான் போய் மருமகனுக்கு வெயிலுக்கு இதமா ஜூஸ் போட்றேன்” என்று கற்பகம் எ
ழுந்து செல்ல,
இங்கு வெளியே வந்த இருவரும் மின்னல் தாக்கியது போல அதிர்ந்து நின்றனர்.
காரணம் பார்த்தீபன் மகிழுந்தின் ஒரு புறம் இறங்க, கனி மற்றொரு புறம் இறங்கினாள்.
அதுவும் இவர்களை கண்டதும் அவனை நெருங்கி வந்தவள் ஏதோ சிரிப்புடன் மொழிய,
இங்கு ப்ரத்யூவுக்கு நெஞ்சு வலி வந்திருந்தது.
வானம் எங்கும்
உன் பிம்பம் ஆனால்
கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன்
வாசம் வெறும் வாசம்
வாழ்க்கை இல்லை….
சாளரத்தின் வழியே வந்த ஆதவனின் கீற்றுகள் முகத்தில் விழ விழிகளை சுருக்கி திரும்பி படுத்தாள் கன்னல் மொழி.
சில நிமிடங்கள் புரண்டு படுத்தவள் அலைபேசியை எடுத்து நேரத்தில் பார்க்க மணி ஆறாகியிருந்தது.
வழக்கமாக எழும் நேரத்தினை விட தாமதமாக இருந்தாலும் இன்று விடுமுறை என்பதால் சோம்பேறித்தனம் வந்து ஒட்டி கொண்டது.
மேலும் சில நிமிடங்கள் புரண்டவள் எழுந்து முகம் கழுவி காலைக்கடன்களை முடித்துவந்து தனக்கான தேநீரை தயாரித்தாள்.
அறையின் ஓரத்திலே ஒரு சிறு மேஜை இருக்க அதிலே சமையலை செய்து கொண்டாள்.
மிகவும் குறைந்த அளவில் தான் அவளுக்கான பாத்திரங்கள் தேவைப்பட்டது. மற்ற மளிகை பொருட்களை சிறிய டப்பாக்கள் வாங்கி அதில் கொட்டி அடுக்கி வைத்திருந்தாள்.
அவனருகே மிகச்சிறிய அளவில் குளிர்சாதன பெட்டி இருந்தது. இது ப்ரவீனது உபயம்.
கனி தினமும் பால் வாங்க கடைக்கு செல்வதை கண்டவன் மறுநாளே அவளது மறுப்பை மீறி வாங்கி வைத்திருந்தான்.
கனிக்கும் இது உபயோகமாக இருக்க அவளும் பெரிதாக அலட்டி கொள்ளவில்லை.
குளிர்சாதன பெட்டியில் இருந்து பாலை எடுத்து தேநீரை தயாரித்தவள் கையில் கோப்பையுடன் சென்று பால்கனியில் நின்று வேடிக்கை பார்க்க துவங்கினாள்.
காலை நேரம் என்பதால் அந்த பகுதியில் பெரிதான ஆள் நடமாட்டம் இல்லை.
படபடவென்று அடித்து கொண்டு வந்து அருகில் நின்ற புறாவை கண்டவள் அதற்காக வைக்கப்படிருந்த சிறிய கிண்ணத்தை காண அதில் தானியங்கள் காலியாகி இருந்தது.
உள்ளே சென்று எடுத்து வந்து அதனை நிரப்பியவள் தான் அருகில் சென்றால் அது உண்ணாது என்று அறிந்து உள்ளே நகர படபடவென்று அடித்து கொண்டு நான்கைந்து புறாக்கள் வந்து உண்ண துவங்கியது.
அதனை ஒரு சில கணங்கள் பார்த்தவள் குளிப்பதற்காக உடையை தேர்ந்தெடுத்தாள்.
அவள் இங்கு வந்த இரண்டாவது நாளில் இருந்தே இது பழக்கம் தான். ஒரு நாள் புறா வந்து நிற்பதை கண்டவள் ஒரு கிண்ணத்தில் தானியங்களும் மற்றொரு கிண்ணத்தில் நீரையும் வைத்திட அவை தினமும் வாடிக்கையாக்கி கொண்டன.
குளித்து முடித்து தயாராக மகேஷ் அலைபேசியில் அழைத்தான். அவனது அழைப்பை கண்டதும் வழக்கம் போல மென்னகை எழுந்தது.
என்ன நடந்தாலும் நாள் தவறாது அழைத்திடும் இவனது அழைப்பு அக்கறையையும் அன்பையும் உணர்த்திடும் இவளுக்கு.
அழைப்பை ஏற்று சில நிமிடங்கள் பேசிவிட்டு துண்டித்தவளுக்கு காலை உணவு செய்ய மனம் வரவில்லை.
வாங்கி வைத்திருந்த ஒரு ஆப்பிளை எடுத்து துண்டு துண்டாக வெட்டி உண்டவள் தனது கைப்பையை எடுத்து கொண்டு கீழிறங்கினாள்.
கீழே கற்பகம் கத்தி கொண்டிருப்பது கேட்டது. காரணம் பெரிதாக ஏதுமிருக்காது.
என்ன சண்டை நடந்தாலும் அதன் மூலப்பொருள் தான் தான் என்று தெளிவாக புரிந்திருந்தது.
“என் பிள்ளைங்க பர்த்டே பார்டிக்கு அவ வர கூடாது” என்று கற்பகம் கத்தி கொண்டிருக்க,
“அக்கா வரலைன்னா நானும் வரமாட்டேன் மா”
“ஏன்டா உன்னையும் ப்ரத்யூ மாதிரி தானே பெத்தேன். நீ மட்டும் ஏன் டா இப்படி புத்தி கெட்டு அலையுற?”
“எனக்கு நல்ல புத்திதான் இருக்கு. உங்களுக்குத்தான்” என்றவன் தாயை அதற்கு மேல் பேச மனதில்லாமல் நிறுத்த,
“பேசுடா ஏன் நிறுத்திட்ட. எல்லாம் அந்த சிறுக்கி சொல்லி கொடுத்து இருப்பா” என்று காலில் கட்டுடன் அமர்ந்து இருந்த கோதை திட்ட,
“பாட்டி நீங்க சும்மா இருங்க. உங்களால தான் அம்மா இப்படி ஆகிட்டாங்க”
“பாத்தியா கற்பகம் உன் புள்ளை பேசுற பேச்சை. இதுக்கு தான் இவனை தோளுலயும் மாருலயும் போட்டு வளத்தேனா?” என்று கோதை மூக்கை சிந்த,
“ப்ரவீன் பாட்டிக்கிட்ட இப்படிதான் பேசுவியா? அவங்க வயசென்ன உன் வயசென்ன?” என்று கற்பகம் அதட்ட,
“வயசை பொறுத்து மரியாதை கொடுக்க முடியாது செய்யிற செயல்ல தான் இருக்கும்மா மரியாதை” என்று ப்ரவீனின் கூற்றுக்கு ‘சபாஷ்’ என்று மனதிற்குள் கூறியபடி இறங்கினாள் கன்னல்மொழி.
தினமும் காலையில் எதாவது ஒரு காரணத்தை கூறி சண்டையிடுவது தான் இவர்களது வேலை.
இவர்களது தொல்லை தாங்காமல் சிவப்பிரகாசம் விரைவாகவே அலுவலகம் கிளம்பிவிடுகிறார்.
“ப்ரவீன் இப்போல்லாம் ரொம்ப பேசுற நீ? இதெல்லாம் யார் சொல்லி கொடுத்து பேசுறன்னு எனக்கு தெரியும்” என்ற கற்பகத்தின் பார்வை கனியின் மீது அசூகையாக படிய,
அதனை வழக்கம் போல அசட்டை செய்தவள் அவர்களது சண்டையை சுவாரஸ்மயாக வேடிக்கை பார்ப்பது போல நின்று கொள்ள,
மற்ற இருவருக்கும் வெறி ஏறியது.
கனியினை கூறுவது பொறுக்காமல்,
“சும்மா எல்லாத்துக்கும் அக்காவையே சொல்லாதீங்க. ஐ ஆம் ட்வென்டி டூ எனக்கு எல்லாமே தெரியும். யார் சரியா இருக்கா யார் தப்பா இருக்கான்னு” என்றவன்,
“அக்கா வெளியே கிளம்பிட்டியா” என்றபடி இவளருகே வந்தவன் அவர்களை சிறிதும் கண்டுகொள்ளவில்லை.
“எல்லாம் இந்த அநாதை நாயால வந்துச்சு. இது இருக்க தைரியத்துல தான் இவன் ஆடுறான். இதை துரத்துனா இவன் அடங்கிடுவான். அதுக்கு முதல் ஒரு வழி பண்ணனும்” என்று சத்தமாக கூறிய கற்பகம் தாயிடம் ஏதோ பேச துவங்க,
ப்ரவீன் தமக்கையை அநாதை என்று கூறியதில் கோபமாகி ஏதோ கூற வர,
“ப்ரவீ வேண்டாம் விடு. அவங்க தான் அப்படின்னு தெரியும்ல விடு. கோபப்பட்டு பேசி உன் எனெர்ஜிய வேஸ்ட் பண்ணாத” என்று தடுத்திட,
“நீ எப்படிதான் இவ்ளோ பொறுமையா இருக்கியோ? அப்பா வந்ததும் இவங்களை பத்தி கம்பிளைண்ட் பண்ணனும்” என்று கடுப்புடன் மொழிய,
“அதெல்லாம் வேணாம் ப்ரவீ. ஏற்கனவே நான் வந்ததுல இருந்து அப்பாவுக்கு நிம்மதி இல்லை. இதை நீ சொல்ல போய் சண்டை பெருசாக போகுது” என்று தடுத்திருந்தாள்.
“என்னவோ போக்கா இவங்க எல்லாம் என்ன ஜென்மங்களோ?” சலிப்பாய் கூறியவன்,
“எங்கேயோ வெளிய கிளம்பிட்ட போல உனக்கு லேட்டாகுது பாரு கிளம்பு” என்று மொழிந்தான்.
“ஒரு சின்ன வொர்க்கா வெளியே போறேன் வர ஈவ்னிங் ஆகிடும் அப்பா சீக்கிரம் வந்தா சொல்லிடு” என்க,
“சரிக்கா பாத்து போ. உனக்கு இங்க ஏரியா எல்லாம் தெரியுமா நான் கூட வரவா?” என்க,
அதில் முகிழந்த புன்னகையுடன், “என்னோட குட்டி தம்பி அக்காவுக்கே துணைக்கு வர அளவுக்கு வளர்ந்துட்டான் போல” என்க,
பிரவீனுக்கு மனநிலை இளகுவாக,
“ஆமா எனக்கு ட்வென்டி டூ இந்த வீக்ல இருந்து ட்வென்டி த்ரீ” என்க,
“சரிதான் எவ்ளோ வளர்ந்தாலும் நீ எனக்கு குட்டி தம்பி தான் நான் போய்ட்டு வர்றேன்” என்று புன்னகையுடன் கிளம்ப,
சரியாக அதே நேரம் நிவிஷாவும் ப்ரத்யூவும் உள்ளே நுழைந்தனர்.
இவளை கண்ட ப்ரத்யூ, “சீ இவ மூஞ்சில முழிக்க கூடாதுனு தான் காலையிலே எழுந்து வெளியே போனேன். ஆனாலும் வந்து நிக்கிறா” என்றவள்,
“நல்ல ஜிங்க்கு ஜிங்க்குனு மேக்கப் போட்டு காலையில எவனை பாக்க கிளம்பிட்டான்னு தெரியலை” என்று அவளது காதுபடவே முணுமுணுத்தாள்.
அவள் கேட்டு சண்டைக்கு வர வேண்டும் அதை வைத்து வீட்டை விட்டு துரத்திவிடலாம் தந்தையும் வீட்டில் இல்லாத சமயம் என்று கணக்கு போட்டாள்.
துணைக்கு நிவிஷாவும், “இவ மூஞ்சியை பாக்க கூடாதுனு தான் நானும் உங்க வீட்டுக்கே வர்றதில்லை” என்று தானும் மொழிய,
சட்டென்று கனியின் நடை நின்றது.
ப்ரத்யூ அவளை முறைத்து பார்க்க கனி முகத்தில் எந்த உணர்வையும் காண்பிக்காமல்,
“நான் எங்க போறேன்னு தெரிஞ்சுக்கணுமா?” என்று வினவியவள்,
“தெரிஞ்சா நீ தான் பீல் பண்ணுவ” என்றுவிட்டு,
“நான் வந்தா பர்த்டே பார்ட்டிக்கு வர மாட்டேன்னு சொன்னியாமே அதுக்காகவே கண்டிப்பா வரணும்னு என் தம்பிக்கு கிஃப்ட் வாங்க போய்டு இருக்கேன். அதுவும் யாரோட தெரியுமா?” என்று மிக அருகில் ரகசிய குரலில் வினவியவள்,
“என்னோட பார்த்தீ அத்தானோட” என்று நமட்டு சிரிப்புடன் கூற,
இருவரது முகத்திலும் ஏகமாய் அதிர்ந்தது.
ப்ரத்யூ கோபத்தில், “ஏய்…ஏய்?” என்று வார்த்தை வராமல் தடுமாற,
“நீ அப்புறமா யோசிச்சு திட்டு. இப்போ என் அத்தான் வெயிட் பண்ணிட்டு இருப்பார். நான் கிளம்புறேன்” என்று கண்ணடிக்க,
ப்ரத்யூக்கு ரத்த அழுத்தம் எகிறியது.
“ஏய் பொய் சொல்லாதடி என் அத்தான் உன்கூடலாம் வர சேன்சே இல்லை” என்று இரைய,
“ஆமா ஏன் அண்ணன் உன்னைலாம் ஒரு ஆளா கூட மதிக்காது. நீ கொலைக்காரி மாமாவயையும் ப்ரவீ அத்தானையும் ஏமாத்துற மாதிரி என் அண்ணனை ஏமாத்த முடியாது” என்று நிவிஷா கூற,
“அதெல்லாம் உன் அண்ணன்கிட்ட பேசிக்கோ. லேட்டா போனா கோவிச்சுப்பாரு. அப்புறம் நான் கெஞ்சி கொஞ்சி சாமாதானம் பண்ணனும்” என்றவள் அங்கிருந்து நகர,
இவர்கள் இருவருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.
சடுதியில் ஒன்றும் ஓடவில்லை. அவர்களது நிலையை கண்ட கனிக்கு சிரிப்பு வந்தது.
இவர்களை எல்லாம் இப்படி எல்லாம் பேசினால் தான் அடக்க முடியும் வந்ததில் இருந்து எத்தனை கலாட்டாக்கள் செய்துவிட்டார்கள் என்று எண்ணியபடியே தனது இரு சக்கர வாகனத்தை எடுத்து கொண்டு வெளியேறினாள்.
இங்கு வந்த ஒரே வாரத்தில் கனி தனது வாகனத்தை கொண்டு வந்திருந்தாள்.
இதை கொண்டு வந்ததில் இருந்து எத்தனை போராட்டம் தினமும் சக்கரத்தில் காற்றை பிடுங்கிவிட்டு வைக்க கனிக்கு ஒரே கடுப்பாக இருந்தது.
சிவப்பிரகாசத்திடம் கூறி வாகன நிறுத்திடமிடத்தில் கண்கானிப்பு கருவி பொருத்தவும் தான் அமைதியாக இருந்தார்கள்.
அதுவும் சிவப்பிரகாசம் வீட்டில் இருப்பவர்கள் தான் இதை செய்தது என தெரிந்தால் வீட்டை விட்டு அனுப்பிவிடுவேன் என்று தெளிவாக கூறிவிட அதன் பிறகு வாகனத்தின் அருகில் வருவதில்லை.
ஒவ்வொரு நாளும் கனிக்கு இவர்கள் என்ன செய்து வைப்பார்களே என்று தான் இருக்கும்.
இதோ இந்த போராட்டத்தோட ஒரு மாதம் கழிந்திருந்தது.
பார்த்தீபனின் அன்று பேசிய பிறகு அவனது கண்ணிலே இவள் படவில்லை.
நான் உன்னை நெருங்க முயற்சிக்கிறேனா? நான் உன்னை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை என்று அவனுக்கு உணர்த்தும் விதமாக நடந்து கொண்டாள்.
அது பார்த்தீபனுக்கு இன்னும் கோபத்தை ஏற்படுத்தியது. அவளை குதறிவிடும் சந்தர்பத்திற்காக அவனும் காத்திருந்தான்.
கனி அதற்கு இடமே கொடுக்கவில்லை. தன்னுடைய வேலையில் மிக மிக சரியாக இருந்தாள்.
எள் எனும் முன் எண்ணெய்யாக இருந்தாள். இந்த ஒரு மாதத்தில் நன்றாக வேலையை கற்று தேர்ந்திருந்தாள்.
தனக்கு கொடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களில் ஐந்தில் நான்கு பேரை கல்லூரியில் சேர்ப்பதற்கு பேசி முன் பணமும் செலுத்த வைத்திருந்தாள்.
இதற்கு மேல் அவளை திட்ட அவனுக்கு என்ன வாய்ப்பு அமைந்திட போகிறது.
நடந்தவற்றை எண்ணியபடியே பயணம் செய்தவளுக்கு இந்நேரம் தான் கூறிய வார்த்தைகள் பார்த்தீபனை சென்றடைந்திருக்கும்.
சும்மாவே குதிப்பான் இதை கேட்டு இன்னும் குதிப்பான். நன்றாக கடுப்பாகட்டும். தான் கூறியவற்றை கேட்டதும் அவன் முகம் போகும் போக்கை நினைத்து பார்த்தவளுக்கு சிரிப்பு வந்திட தன்னை பார்த்து யாரும் பைத்தியம் என்று நினைத்துவிட போகிறார்கள் என்று எண்ணி கொண்டாள்.
வந்த புதிதில் கடினமாக இருந்த வாழ்க்கை இப்போது வேடிக்கையாக மாறி இருந்தது. அதுவும் தன் வீட்டில் இருக்கும் வேடிக்கை மனிதர்களின் செயலினால் சற்று சிரிப்பு கூட வந்தது. இதெல்லாம் இந்த கன்னல் மொழிக்கு ஒரு விடயமா என்று கடந்து வந்திருந்தாள்.
வீட்டிற்கு வந்த அன்றைக்கும் இன்றைக்கும் மனநிலையில் எவ்வளவு மாற்றம் என்று நினைத்து கொண்டாள்.
இங்கு கனி நினைத்தது போலவே நிவிஷா தன் அண்ணனுக்கு அழைத்து இருந்தாள்.
ஒரு முறை அழைப்பு விடுத்து அவன் எடுக்காமல் போக இவர்களுக்கு பயம் எகிறியது.
நிவிஷா மீண்டும் அழைத்திட இறுதி நொடியில் அழைப்பை ஏற்றவன்,
“சொல்லு நிவி” என்க,
“அண்ணா எங்க இருக்க?” என்றவளது குரலில் இருந்த பயம் தமையனுக்கு புரிந்திட,
“என்னடா என்னாச்சு?” என்று வினவ,
“ப்ச் நீ எங்க இருக்கேன்னு பர்ஸ்ட் சொல்லு” என்றவளது குரலில் எரிச்சல்.
“நான் அரும்பாக்கம் போயட்டு இருக்கேன்” என்றவன்,
“அது எதுக்கு உனக்கு?” என்க,
கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல்,
“உன் கூட யார் இருக்கா?” என்று வினா எழுப்ப,
இவனுக்கு கோபம் வந்தது.
“இப்போ உனக்கு என்ன தெரியணும்? ஏன் இப்படி கேள்வி கேட்டுட்டு இருக்க?” என்று எரிச்சலாக வினவ,
“அத்தான் நிவி கேட்டதுக்கு பதில் சொல்லுங்க”
“ப்ரத்யூ நீயும் அங்க தான் இருக்கியா? உங்க ரெண்டு பேருக்கும் என்ன ஆச்சு?” என்று சிறிது ஆயாசமாக வினவிட,
“அத்தான் அந்த கொலைக்காரி உங்க கூட இருக்காளா?”
“யாரு அது?”
“அதான் அத்தான் எங்க வீட்ல இருக்க பிச்சைக்காரி?”
“ப்ச் உன்கிட்ட அன்னைக்கே சொன்னேன்ல வயசுக்கு மரியாதை கொடுக்கணும்னு” என்றவன் அதட்ட,
“ஆமா அந்த அநாதை நாய்க்கு மரியாதை ஒன்னு தான் குறைச்சல். இப்போ அவ உங்க கூட இருக்காளா? இல்லையா?”
“ப்ரத்யூ ரொம்ப பேசுற நீ” என்று அதட்டியவன்,
“அவ எதுக்கு என் கூட இருக்கணும்?” என்று புருவம் சுருக்க,
“அத்தான் அந்த பொய்க்காரி அப்படி தான் சொல்லிட்டு போனா. உங்க கூட வெளியே போறேன்னு அதுவும் லேட்டானா உங்களை கொஞ்சி சமாதானம் பண்ணுவேன்னு” என்றவளது குரலில் அத்தனை கோபம் வெறுப்பு.
“என்ன?” என்று அதிர்வுடன் திகைத்கவனுக்கு ஒரு கணம் ஒன்றும் புரியாது போக,
‘உலகத்தோட கடைசி ஆம்பளையா நீ இருந்தாக்கூட உன்னை திரும்பியும் பாக்க மாட்டேன்’ என்றவளது குரல் எதிரொலிக்க,
சடுதியில் தலையை உலுக்கியவன்,
“அவ எதாவது இஷ்டத்துக்கு சொன்னா ரெண்டு பேரும் என்கிட்ட வந்து கொஸ்டீன் கேட்பிங்களா?” என்று அவளது வார்த்தை கொடுத்த தாக்கத்தையும் சேர்த்து காட்ட,
“இல்லை அத்தான் அது” என்று ப்ரத்யூ என்ன செய்வதென்று தெரியாமல் இழுக்க,
“என்ன இல்லை ஆமான்னு இழுத்திட்டு இருக்கிங்க” என்று அதற்கும் காய,
“ண்ணா நாங்க பாட்டுக்கு தான் இருந்தோம். அவ தான் வந்து ஏதேதோ பேசி எங்களை குழப்பிவிட்டுட்டா” என்று நிவிஷா விளக்க,
“அவ சொன்னா உங்களுக்கு எங்க போச்சு அறிவு. போய் ரெண்டு பேரும் உருப்படியா ஏதாவது பண்ணுங்க. காலையிலே வந்து மூட் அப்சட் ஆக்கிட்டு” என்று கத்தியவன் கடுப்புடன் அழைப்பை துண்டித்து விட்டு தனது மகிழுந்தை இயக்க,
முகத்தில் தோன்றிய சிரிப்புடன் இரு சக்கர வாகனத்தில் அவனை கடந்து சென்று கொண்டிருந்தாள் கன்னல்மொழி.
அவளை பார்த்ததும் இவளால் தான் காலையிலே இவ்வளவுதான் தலைவலி சும்மாவே இருக்கமாட்டாள் என்று கடுப்புடன் எண்ணியவன் இந்நேரத்தில் எங்கே செல்கிறாள்? இவளுக்கு இங்கே உறவினர்கள் கூட கிடையாதே என்று நெற்றி சுருக்கியவன் தான் போகும் வேலையை பாதியில் விட்டுவிட்டு அவளை பின் தோடர்ந்தான்.
இங்கு பார்த்தீபனிடம் திட்டு வாங்கிய இருவரும் கடுப்புடன் உள்ளே வந்து,
“ம்மா இந்த பிச்சைக்காரி காலையிலே மாமாக்கிட்ட எங்களை திட்டு வாங்க வச்சிட்டா” என்று அழாத குறையாக நடந்தவற்றை கூற,
இதனை கேட்டு அதிர்ந்த கோதை,
“அந்த அநாதை கழுதை அப்படியா சொல்லுச்சு. அது கெட்ட கேட்டுக்கு ராஜா மாதிரி இருக்க என் பேரன் கேக்குதா?” என்க,
“அம்மா நான் சொன்னேன்ல அவ ஏதோ திட்டத்தோட தான் இந்த வீட்டுக்குள்ள வந்து இருக்கா. என் மருமகனை மயக்கி கைக்குள்ள போட்டுக்கிறது தான் அவளோட பிளான் அதை தான் சொல்லிட்டு போறா” என்று கற்பகம் கூற,
“இல்லை அத்தை. போயும் போயும் அவளையா? என் அண்ணன் திரும்பி கூட பாக்காது சேன்சே இல்லை” என்று நிவிஷா மறுத்தாள்.
கற்பகம், “உனக்கு தெரியாது நிவி இவ நல்லவ வேசம் போட்டு யாரை வேணா ஏமாத்துவா? அப்படி தான உன் மாமாவையும் ப்ரவீனையும் ஏமாத்தி வச்சிருக்கா” என்று கற்பகம் மொழிய,
“ஆமா நிவி. எனக்கு பயமா இருக்கு இவ என் அத்தானை மயக்கிடுவாளோன்னு”
“சீ அந்த மாதிரிலாம் எப்பவும் நடக்காது. அதுக்கு முதல் இந்த அநாதை நாய செருப்பால அடிச்சு துரத்தணும். அதுக்கு எதாவது பிளான் பண்ணனும்” என்று கோதை மொழிய,
மற்றவர்களும் இதை ஆதரித்து கனியை உடனடியாக வீட்டை விட்டு துரத்துவதற்கு என்ன செய்யலாம் என்று நேரம் போனதே தெரியாமல் யோசித்து கொண்டு இருந்தனர்.
அப்போது வெளியே மகிழுந்தின் சத்தம் கேட்க நிவி,
“இது அண்ணாவோட கார் சவுண்ட்” என்க,
“அத்தானா?” என்று ப்ரத்யூவின் முகம் மலர,
“ஆமா காலையில கோவமா பேசிட்டாருல அதான் சமாதானம் செய்ய வந்திருப்பாங்க” என்று நிவி கூற,
“ஆமாடி. அத்தானுக்கு நம்ம மேல பாசம் அதிகம். உடனே சமாதானம் ஆகிட கூடாது”என்றவள்,
“வா போய் உள்ள கூப்டுவோம்” என்று எழுந்து செல்ல,
“நான் போய் மருமகனுக்கு வெயிலுக்கு இதமா ஜூஸ் போட்றேன்” என்று கற்பகம் எ
ழுந்து செல்ல,
இங்கு வெளியே வந்த இருவரும் மின்னல் தாக்கியது போல அதிர்ந்து நின்றனர்.
காரணம் பார்த்தீபன் மகிழுந்தின் ஒரு புறம் இறங்க, கனி மற்றொரு புறம் இறங்கினாள்.
அதுவும் இவர்களை கண்டதும் அவனை நெருங்கி வந்தவள் ஏதோ சிரிப்புடன் மொழிய,
இங்கு ப்ரத்யூவுக்கு நெஞ்சு வலி வந்திருந்தது.