• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 19

Administrator
Staff member
Messages
516
Reaction score
796
Points
93
ஜென்மம் 19:

தினம் ஒரு கவிதை

உனை பற்றியே
எழுதி வந்தேன்
என் தேவதையே….


கற்பகம் சிவப்பிரகாசம் தம்பதியினருக்கு திருமணம் ஆகி ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்தது.

அவனுடன் திருமணம் செய்த கஸ்தூரி மற்றும் கிரிக்கு பார்த்தீபன் பிறந்து ஐந்து வயதில் இருந்தான்.

முதலில் குழந்தை பிறந்துவிடும் என்று நம்பிக்கையாக இருந்த கற்பகத்திற்கும் சிவாவிற்கும் நாளாக நாளாக நம்பிக்கை ஆட்டம் கண்டது.

அதுவும் கற்பகத்திற்கு உள்ளுக்குள் பயம் பேயாட்டம் போட்டது.

வெளியே எங்கும் செல்ல இயலவில்லை. யாரை பார்த்தாலும் குழந்தை இல்லையா? என்று பரிதாப பார்வை பார்த்தனர்.

இல்லையேல் ஏளனமாக பார்த்தனர்.

கற்பகம் கொஞ்சம் கொஞ்சமாக மன அழுத்தத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

கோதையும் மகளுக்கு உடன் ஆறுதலாக இருந்தார்.

இருவரும் மருத்துவமனை மற்றும் கோவில் கோவிலாக ஏறி இறங்கி கொண்டிருந்தனர்.

ஆனால் எந்த பலனும் இல்லை. இதனால் கற்பகத்தின் மன அழுத்தம் அதிகமாகி கணவன் மனைவி இருவருக்கும் சண்டை அதிகமானது.

மனைவியின் வருத்தத்தை புரிந்து கொண்ட சிவா பல நேரங்களில் உறுதுணையாக இருந்தாலும் சில நேரங்களில் தன்னிலை இழந்து கோபமாக பேசிவிடுவதால் சண்டை பெரியதானது.

அடிக்கடி கிரி வந்து சமாதானம் செய்யும் நிலைக்கு ஆளானார்கள்.

இந்நிலையில் கிரியின் பேச்சை கேட்டு இருவரும் ஒரு மனநல ஆலோசகரிடம் சென்றனர்

இருவருக்கும் பல்வேறு கட்டங்களில் ஆலோசனை வழங்கியவர் இறுதியில் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும்படி அறிவுரை கூறினார்.

கற்பகத்திற்கு பெரிதாய் உடன்பாடில்லை. ஆனால் சிவாவிற்கு இது நல்ல யோசனையாக தோன்றியது.

மனைவியை பேசி சம்மதிக்க வைத்தவர் குடும்பத்தினரிடம் இதை தெரிவிக்க கோதை தான் முதலில் எதிர்த்தார்.

கஸ்தூரிக்கும் கிரிக்கும் இதில் சம்மதமே‌.

கோதையின் எதிர்பை சமாளித்தவர்கள் சென்னையில் உள்ள ஆசிரமத்தில் இருந்து கனியை தத்தெடுத்து வந்தனர்.

பார்த்தீபனுக்கு அப்போது வயது ஐந்து கொழு கொழுவென பொம்மை போல இருந்த கனியை அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

“பாப்பா பாப்பா” என்று அவளது கைப்பிடித்து சுற்றி விளையாடினான்.

சிவப்பிரகாசம் ‘அம்மா அப்பா’ என்று இருவரையும் அழைக்க சொல்லி கொடுக்க கனியின் அதனை பிடித்து கொண்டு அழகாக ‘ம்மா ப்பா’ என்று அழைத்தாள்.

“அம்மா அம்மா”என்று அழைத்து கற்பகத்தின் பின்னாலே சுற்றினாள்.

இத்தனை வருடமாக ஏங்கிய அழைப்பு கிட்டயதில் கற்பகத்தின் இதயம் இளகியது.

கனியை தானும் பற்றி கொண்டார்.

தன்னுடைய மகள் என்று அவ்வளவு பாசமாக பார்த்து கொண்டாள்.

இருவருக்கும் இடையில் அழகிய பிணைப்பு உண்டாகி இருந்தது.

சிவப்பிரகாசத்திற்கும் வாழ்வு மனைவி மகள் என்று மிகவும் அழகாக சென்றது.

அப்போது தான் கற்பகம் திடீரென கருத்தரித்திருந்தார்.

இதனை அறிந்த குடும்பத்தினருக்கு மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் இருந்தது.

கனி வந்த நேரம் தான் தனக்கு குழந்தை பிறக்க போகிறது என்று கற்பகம் கனியை மேலும் கொண்டாடினார்.

ஆனால் கோதை அதுதான் உனக்கு குழந்தை பிறக்க போகிறதே எதற்கு இந்த அநாதை குழந்தை இதனை அந்த இல்லத்திலே விட்டுவிடுங்கள் என்று கூற கணவன் மனைவி இருவரும் மறுத்துவிட்டிருந்தனர்.

கற்பகத்திற்கு கர்ப்ப கால அவஸ்தைகள் துவங்க கோதை அங்கேயே இருந்து பார்த்து கொண்டார்.

வெகு நாட்கள் கழித்து கர்ப்பம் அகி உள்ளதால் அவருக்கு வாந்தி மயக்கம் அசதி எல்லாம் அதிகமாக இருந்தது.

இதில் கனியை சரிவர பார்த்து கொள்ள இயலவில்லை.

இவ்வளவு நாட்கள் கிடைத்த தாய் பாசம் கிடைக்காததில் கனி சற்று ஏங்கி போனாள்.

வழக்கம் போல தாய் தன்னை அரவணைத்து கொள்ள வேண்டும் என்று குழந்தை மனம் ஏங்கியது.

“அம்மா அம்மா” என்று அனைத்திற்கும் அவளையே தேடியது.

ஒரு கட்டத்துக்கு மேல் கர்ப கால ஹார்மோன் பிரச்சனையால் கற்பகத்திற்கு அடிக்கடி சலிப்பு கோபம் எல்லாம் வந்தது.

கனியின் மீது காண்பித்தார்.‌ இது தான் வாய்ப்பென்று கோதையும் கனியின் மீதான கோபத்தை கற்பகத்திற்கு ஏற்றிவிட்டார்.

ஐந்து மாதங்கள் முடிந்த பிறகு இரட்டை குழந்தைகள் என்று தெரியவர இன்னுமே மகிழ்ச்சி அதிகரித்தது.

அதோடு சேர்த்து மிகவும் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர் வேறு கூறியிருந்தார்.

அதில் கனியை சுத்தமாக கற்பகத்தால் பார்க்க இயலவில்லை.

குழந்தை தாயிடம் தான் இருப்பேன் என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்தது.

கோதை தக்க சமயத்தில் இதற்கு தான் கூறினேன் இந்த அநாதை குழந்தையை ஆசிரமத்தில் விட்டுவிடு என்று கேட்டாயா நீ. இப்போதே இவ்வளவு அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறது இதில் உனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த பிறகு இதையும் சேர்த்து எப்படி சமாளிப்பாய்.

இந்த குழந்தை வேண்டாம் உனக்கு திருப்பி அனுப்பிவிடு என்று மூளைச்சலவை பலவாறு செய்ய கற்பகத்திற்குமே சிறிது யோசனை பிறந்தது.

தனக்கே இரண்டு குழந்தைகள் இருக்கும் போது எதற்கு இந்த குழந்தை என்று?

ஆனாலும் கணவரிடம் இதனை கேட்க தயங்கினார்.

இதற்கிடையில் நாட்கள் ஓட கற்பகத்திற்கு இரட்டை குழந்தைகள் ஆண் ஒன்று பெண் ஒன்று பிறந்தது.

வீடே மகிழ்ச்சி கடலில் நீந்தியது.
ஆனால் கனி தான் மிகவும் ஏங்கி போய் இருந்தாள்.

அப்போது அவளுக்கு துணையாக இருந்தது தினமும் விளையாட வரும் பார்த்தீபன் தான்.

பெரியவர்களின் போதனையில் பார்த்தீத்தான் என்று அவனை அழைக்க பழகி இருந்தாள்.

வீட்டில் இரு குழந்தைகளை கண்டதும் கனிக்கும் பார்த்தீக்கும் ஏக மகிழ்ச்சி.

இருவரும் குழந்தைகளை சுற்றி வந்தனர்.

பொக்கை வாயை கொண்டு அழகாக சிரிக்கும் தம்பி தங்கைகளை கனிக்கு மிகவும் பிடித்து இருந்தது.

இருந்தும் தாயை தேடி கனி ஒவ்வொன்றிற்கும் வந்தாள்.

இரு குழந்தைகளை பார்த்து கொள்வது இரவில் உறங்காமல் இருப்பதால் மற்றும் ஹார்மோன் மாற்றங்களால் சற்று மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்தார்.

எதற்கெடுத்தாலும் கோபம் அழுகை சலிப்பு என்று வந்தது.

மனைவியை புரிந்து கொண்ட சிவப்பிரகாசம் மிகவும் உறுதுணையாக இருந்தார்.

ஆனால் கனிக்கு அது புரியவில்லை.

என்ன வேண்டும் என்றாலும் தாயை தேடி கனி வர எரிச்சலில் அடிக்கடி அவரிடம் திட்டுக்களையும் அடியையும் பெற்று கொண்டாள்.

இடையில் கஸ்தூரிக்கும் நிவிஷா பிறந்து இருந்தாள்.

இருந்தும் அப்போது அழும் குழந்தை பிறகு மறந்துவிட்டு மீண்டும் தாயை தேடியது.

இதோடு சேர்த்து கோதையின் போதனைகள் தொடர கற்பகத்திற்கு கனியின் மீது வெறுப்பு படர துவங்கியிருந்தது.

நாளாக நாளாக அது அதிகமாக ஒரு நாள் தானே சிவப்பிரகாசத்திடம் கனியை மீண்டும் ஆசிரமத்தில் விட்டுவிடலாம் என்று கூற சிவப்பிரகாசம் கொதித்து எழுந்துவிட்டார்.

தன்னுடைய மூத்த மகளை ஆசிரமத்தில் விடுவதா என மனைவியுடன் பெரிய சண்டையாகி இருந்தது.

இந்த நிகழ்வால் கற்பகத்தின் வெறுப்பு கனி மீது கூடியது

கோதையின் தூபத்தால் அடிக்கடி கனியை திட்டுவது தேவையில்லாமல் அடிப்பது என்று கனி மீதான வன்முறை தொடர்ந்தது.

தாய் எதற்கு அடிக்கிறாள் என்று தெரியாமலே அடியையும் திட்டையும் வாங்கி கொண்டு இருந்தாள் கன்னல்மொழி.

இவை யாவையும் தாண்டி தன் மீது அன்பு செலுத்திய பார்த்தீபனின் மீது அவளுக்கு அளப்பரிய அன்பு இருந்தது.

இருவரும் ஒரே பள்ளியில் படித்ததால் சிவப்பிரகாசம் பார்த்தீபனிடத்தில் பார்த்து கொள்ள கூறியிருக்க பார்த்தீபன் அதில் மகிழ்ந்து தன்னை பெரியவனாக எண்ணி கனியை நன்றாக பார்த்து கொண்டான்.

காலையில் பள்ளி வாகனத்தில் ஏறுவதில் இருந்து வீடு வரும்வரை அவளை பார்த்து கொண்டான்.

பெரியவர்களிடத்தில் கிடைக்காத அன்பு பார்த்தீபனிடத்தில் கிடைக்க அதனை பற்றி கொண்டாள்.

நாட்கள் இப்படியே நகர பிரவீனும் ப்ரத்யூவும் வளர துவங்கினர்.

கோதை குழந்தைகளிடத்திலும் கனியை பற்றி தப்பாக கூறி அவளை நெருங்கவிடாது செய்தார்.

ப்ரத்யூ வேறு கோதையின் குணத்தை அப்படியே கொண்டிருந்தாள்.

அதனை அப்படியே பற்றி கொண்டாள்.

அதுவும் கோதை நீ தான் இந்த வீட்டின் மகாராணி அவளுக்கு இங்கு இடமில்லை. அவள் ஒரு அநாதை என்று பலவாறாக வளரும் பிள்ளைகள் மீது நஞ்சை விதைத்தார்.

இதனால் ப்ரத்யூவிற்கு கனியை சிறு வயதிலே பிடிக்காது போயிற்று‌.

தனக்கு அவளை போட்டியாக கருதினாள்.

அதுவும் தனது தந்தை அவள் மீது பாசம் காண்பிப்பதை அறவே வெறுத்தாள்.

ஆனால் கனிக்கு தம்பி தங்கைகளை அளவுக்கு அதிகமாக பிடிக்கும்.

இருவரிடத்திலும் அவ்வளவு பாசமாக இருந்தாள்.

ப்ரத்யூ அதனை உதாசீனம் செய்துவிட கோதையின் வார்த்தைகளையும் மீறி பிரவீனுக்கு கனியை பிடித்து இருந்தது.

“அக்கா அக்கா” என்று அவள் பின்பே சுற்றினான்.

கனியும் அவனை தன்னோடு அரவணைத்து கொண்டாள்.

தன்னை விட்டு இருவரும் கூட்டணி சேர்ந்ததை அறிந்து அதற்கும் சண்டை போட்டாள் ப்ரத்யூ.

வளர‌ வளர கனியின் மீதான ப்ரத்யூவின் வெறுப்பு அதிமாகியது.

கனிக்கு எது செய்தாலும் அதனை செய்ய கூடாது என்று அடம்பிடித்தாள் சண்டை போட்டாள்.

இளைய மகளை கண்டிக்க இயலாத சிவா பெரிய மகளிடம் விட்டு கொடுக்கும் படி கூற அவளும் தந்தை பேச்சிற்கு மதிப்பு கொடுத்தாள்‌.

அதன் பிறகு எல்லாவற்றையும் தங்கைக்கு விட்டு கொடுத்தாள்.

பிரவீனும் பார்த்தீயும் அவளுக்கு ஆறுதலாக இருந்தனர்.

சிவப்பிரகாசம் தொழில் முன்னேற்றத்தில் கனியை சரிவர கவனிக்கவில்லை.

இது வீட்டில் இருந்தவர்களுக்கு வசதியாக போய்விட அவளை போட்டு வாட்டினர்.

பிரவீனுக்கு அவர்கள் தமக்கையை துன்பப்படுத்துவது புரிகிறது ஆனால் எதிர்த்துக் கேட்க முடியவில்லை.

கேட்டால் அவனுக்கும் அடி விழுந்தது.

எப்படியாவது கனியை வீட்டைவிட்டு அனுப்பிவிட வேண்டும் என கோதை கங்கணம் கட்டிக் கொண்டார்.

நாட்கள் காற்றில் பறக்கும் பட்டமாய் பறக்க கனி பத்தாவது வகுப்பும் ப்ரத்யூ மற்றும் பிரவீன் ஏழாம் வகுப்பும் படித்து கொண்டிருந்தனர்.

அப்போது பார்த்தீபன் கல்லூரியில் படித்து கொண்டிருந்தான்.

அவனுக்கு அத்தை மக்கள் மூவரையும் பிடிக்கும். ஆனால் கனியிடத்தில் சிறிது ஒட்டுதல் அதிகமாக இருந்தது.

கனிக்கும் சிறு வயதில் இருந்து தன்னை பார்த்து கொண்ட பார்த்தீபன் மீது நெஞ்சு நிறைய பாசம் இருந்தது.

அந்த வயதில் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கெல்லாம் அவளுக்கு வடிகாலாக இருந்தான்.

எல்லாவற்றிற்கும் மேல் அவளது குரு ஆசான் நலம்விரும்பி என யாவுமே அவன் தான்.

அவனை ஒரு நாயகனாக மனதில் வரித்து கொண்டிருந்தவள் அவனிடத்தில் கேட்காது எதையும் செய்ய மாட்டாள்.

அவளுக்கு பாடத்தில் உள்ள சந்தேகங்களை அவன் தான் தீர்த்து வைப்பான்.

இவர்களது இந்த இணக்கம் அந்த வயதிலே ப்ரத்யூவிற்கு உறுத்தியது.

எப்படியாவது பார்த்தீயிடத்தில் கனியை கெட்ட பெயர் வாங்க வைக்க வேண்டும் என்று சமயம் பார்த்து கொண்டிருந்தாள்.

அன்று பள்ளி விடுமுறை. சிவப்பிரகாசத்தை தவிர அனைவருக்கும் வீட்டில் தான் இருந்தனர்.

பிரவீனும் ப்ரத்யூவும் விளையாடியபடியே தொலைக்காட்சியை பார்த்து கொண்டிருந்தனர்.

கனி பத்தாம் வகுப்பு என்பதால் தேர்வுக்கு படித்து கொண்டிருந்தாள்.

கோதை கஸ்தூரியுடன் வெளியே சென்றிருக்க கற்பகம் தலைவலி என்று அறையில் படுத்து இருந்தார்.

படித்து முடித்த கனியையும் பிரவீன் விளையாட அழைக்க ப்ரத்யூவும் போனால் போகிறதென்று வரவிட்டாள்.

வெகுநாட்களுக்கு பிறகு தங்கை அழைத்ததில் மகிழ்ந்தவள் அவர்களோடு இணைந்து கொண்டாள்.

கண்ணாமூச்சி விளையாட முடிவாகி கனி கண்ணை மூடி கொண்டாள்.

பிரவீன் அறைக்குள் நுழைந்து மறைந்து கொள்ள ப்ரத்யூ இருக்கையின் பின்புறம் ஒளிந்து கொண்டாள்.

ஐந்து நிமிடங்கள் கழித்து உள்ளே வந்த கனி இருவரையும் தேட இருக்கையின் பின்புறம் இருந்த ப்ரத்யூவை பார்த்துவிட்டாள்.

“ப்ரத்யூ அவுட்” என்று கூறியபடி வர,

இவளிடத்தில் தான் தோற்று போவதா என்று எண்ணியவள் அவள் அருகில் வரும் முன்னர் எழுந்து ஓட முயற்சிக்க கனியும் வேகமாக தொட வந்தாள்.

இதில் ப்ரத்யூ இருக்கை தடுக்கி அருகில் இருந்த டீபாயின் விளிம்பில் மோதி விழுந்திருந்தாள்.

டீபாயின் முனை சற்று கூர்மையாக இருந்தால் நெற்றியில் ஆழமான காயம் பட்டு குருதி வழிந்தது.

“அம்மா” என்று சத்தத்துடன் அலற,

மகளின் குரலில் கற்பகம் ஓடி வந்தார்.

பணியாளர்களும் அங்கே ஓடி வர,

கற்பகம் மகளின் நிலை கண்டு பதறி,

“ப்ரத்யூ என்னாச்சு” என்று அவளை தூக்க முயற்சிக்க,

“அம்மா வலிக்கிது” என்று வலி தாங்காது அலறியவள்,

“இவ என்னை தள்ளிவிட்டுட்டா” என்று கனியை காண்பித்தாள்.

அதில் கனி அதிர்ந்து, “ம்மா நான் எதுவும் பண்ணலைம்மா அவ கால் தடுக்கி தான் விழுந்தா” என்று பயந்து கூற,

“அம்மா வலிக்கிது” என்று ப்ரத்யூ மீண்டும் அலறினாள்.

கற்பகம் செப்பென்று கனியின் கன்னத்தில் அறைந்து, “போடி இங்க இருந்து” என்று தள்ளிவிட்டவர் பணியாளர் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

இங்கு கனி செய்யாத தவறிற்காக அடி வாங்கி அழுதபடி இருந்தாள்.

நடந்தவற்றை புரிந்து கொண்ட பிரவீன், “அக்கா” என்று அருகில் வர,

“பிரவீன் நான் நான் ப்ரத்யூவ தள்ளிவிடலைடா” என்று அழுகையுடன் கையை பிடிக்க,

“க்கா அழாதக்கா” என்று அவனது கண்ணீரை துடைத்தவனுக்கு கனி மேல் நம்பிக்கை இருந்தது.

விடயம் அறிந்த கஸ்தூரியும் கோதையும் மருத்துவமனைக்கு ஓடி இருந்தனர்.

ப்ரத்யூவின் காயத்திற்கு மருந்து வைத்து கட்டப்பட்டிருந்தது.

மருத்துவர் வேறு சற்று தள்ளி அடிபட்டிருந்தால் ப்ரத்யூவின் உயிருக்கே ஆபத்தாகி இருக்கும் என்று கூற பெரியர்வர்கள் அதிர்ந்து போயினர்.

ப்ரத்யூவை வீட்டிற்கு அழைத்து வந்ததும் கோதை கனியிடம் பேயாட்டம் போட்டார்.

“பிச்சைக்கார அநாதை நாயி. போனா போகுன்னு இடம் கொடுத்து சோறு போட்டா என் பேத்தியை கொல்ல பாக்குறியாடி கொலைக்காரி” என்று கனியை போட்டு அடிக்க,

“நான் தள்ளிவிடலை பாட்டி. அடிக்காதிங்க பாட்டி வலிக்கிது” என்று கெஞ்சினாள்.

கனியால் அடியை தாங்கி கொள்ள முடியவில்லை.

கற்பகமும், “இந்த சனியனை ஒழிச்சு கட்ட சொன்னா கேக்குறாரா அந்த மனுஷன் இப்போ இது எம் மகளுக்கே எமனா வந்து இருக்கு. உனக்கு எவ்வளோ நாளா எம் மகளை கொல்ல திட்டம்” என்று தானும் அவளது கன்னத்தில் மாறி மாறி அடிக்க,

“ம்மா வலிக்கிது மா வேணாம் மா” என்று கதறினாள்.

பிரவீன், “ம்மா அக்காவ அடிக்காதம்மா ப்ளீஸ்மா”என்று கெஞ்ச,

“தள்ளிப்போடா நீ” என்று அவனுக்கும் இரண்டு அடி கொடுத்தனர்.

இவை எல்லாவற்றையும் கஸ்தூரியின் மடியில் படுத்து கொண்டு குரோதத்துடன் ரசித்து கொண்டிருந்தாள் ப்ரத்யூ.

தன்னுடைய வலியையும் தாண்டி அவளது அழுகை மகிழ்ச்சி கொடுத்தது.

கஸ்தூரிக்கு கனியை பார்க்க சிறிது பாவமாக தான் இருந்தது.

ஆனால் அவள் செய்த காரியம் மிகப்பெரிய தவறு. சிறிது தவறி இருந்தாலும் ப்ரத்யூவின் உயிருக்கு ஆபத்தாகிவிடுமே. இவர்கள் கொடுக்கும் தண்டனை சரிதான் என்று தன்னை தேற்றி பார்த்து கொண்டிருந்தார்.

கோதை, “என் பேத்தியை தள்ளிவிட்ட‌ உன்னை சும்மாவிட மாட்டேன்” என்றவர் விறுவிறுவென சமையலறை சென்று கரன்டியை அடுப்பில் வைத்தார்.

பணியாளர்களுக்கு கனியை பார்க்க பாவமாக இருந்தது. அவர்கள் தான் தினமும் கனியை இவர்கள் படுத்தும் கொடுமையை பார்க்கிறார்களே.

கோதை செய்ய போகும் காரியத்தை உணர்ந்தவள்,

“ம்மா வேணாம் மா. எனக்கு சூடு வைக்க வேணாம் மா. நான் எதுவும் பண்ணலைம்மா. ப்ரத்யூ பொய் சொல்றாம்மா” என்று கற்பகத்தின் காலை பிடித்து கெஞ்ச,

“சீ இனிமே என்னை அம்மான்னு கூப்பிட்ட உன்னை கொன்னுடுவேன்” என்று அவளை தள்ளிவிட்டார்.

பிரவீன், “அக்கா பாவம்மா வேணாம்மா” என்று தானும் தாயின் காலை பிடித்து கெஞ்ச,

“இந்த சனியனுக்கு சப்போர்ட் பண்ணி வந்த உனக்கும் சூடு வச்சிடுவேன்” என்று அவனை தள்ளிவிட்டார்.

கோதை கரன்டி சூடானதும் எடுத்து கொண்டு வர,

கனிக்கு பயம் அதிகமானது.

“பாட்டி வேணாம் பாட்டி. என்னை விட்டுடுங்க” என்று அமர்ந்தவாக்கிலே அவரது காலை பிடிக்க,

கஸ்தூரி, “அத்தை சின்ன பொண்ணு வேணாம்த்தை தெரியாம” என்று துவங்கியவர் மாமியாரின் பார்வையில் அமைதியாகிவிட்டார்.

கனி, “ப்ளீஸ் பாட்டி வேணாம் பாட்டி” என்று கெஞ்ச கெஞ்ச அதனை பொருட்படுத்தாது,

“இந்த கை தான என் பேத்திய தள்ளிவிட்டுச்சு” என்று அவளது கையை பிடித்தவர் கரண்டியை வைத்து இழுக்க,

“அம்மா…” என்று அலறியவளது குரல் கஸ்தூரியை கண்கலங்க வைத்திருந்தது.

“அத்தை ப்ளீஸ் அந்த பொண்ணை விட்ருங்க” என்று கெஞ்ச,

“ம்மா இன்னும் ரெண்டு இழு இழும்மா” என்று கற்பகம் வெறுப்புடன் கூற,


அந்த காயத்தின் மேலே மீண்டும் சூடாக இரண்டு வைத்தார்.

கனியால் வலியை சுத்தமாக தாங்க முடியவில்லை.

“ஐயோ என்னால முடியலை என்ன விட்ருங்க. ப்ளீஸ்” என்று வீடே அதிரும்படி கதற,

“அக்கா” என்று அவளை கட்டி கொண்டு பிரவீனும் கதறினான்.

“ப்ரவீன் வலிக்கிதுடா முடியலைடா” என்று கனி அழுக,

“இப்படி தான என் மகளுக்கு வலிச்சிருக்கும் அநாதை நாயே” என்று கற்பகம் சீற,

கனி வலியில் துடித்தாள். கஸ்தூரி கலங்கிய விழிகளுடன் முகத்தை திருப்பி கொண்டார்.

கோதை, “இந்த அநாதை கழுதை இனி நம்ம வீட்டுல இருக்க கூடாது. இப்பவே துரத்துறேன்” என்று அவளது காயம்பட்ட கையிலே பிடித்து இழுத்து செல்ல,

“அம்மா என்னை விடுங்க” என்று அலறினாள் கனி.

கஸ்தூரி, “கற்பகம் வேணாம் அதான் தண்டனை கொடுத்துட்டிங்களே வயசுக்கு வந்த பிள்ளைய இப்படி வெளிய அனுப்ப வேணாம்” என்று மொழிய,

“நீங்க சும்மா இருங்க அண்ணி. நிவிக்கு இப்படி அடிபட்ருந்தா சும்மா இருப்பீங்களா?” என்று அவரது வாயை அடைத்துவிட்டார்.

பிரவீன், “அக்காவ விடுங்க” என்று அவர்கள் பின்னே ஓட,

அவனை பிடித்து, “நீ சும்மா இருக்க மாட்ட” என்று பிடித்து கொண்டார் கற்பகம்.

கோதை அவளை வெளியே தள்ளி வீட்டு கதவை அடைக்க,

“பாட்டி ப்ளீஸ் கதவை திறங்க பாட்டி. ப்ளீஸ் பாட்டி” என்று கதறலுடன் கதவை தட்டியவளுக்கு வலி உயிர்போக அப்படியே கதவில் சாய்ந்து அமர்ந்துவிட்டாள் அழுகையுடன்.

செய்யாத தவறிற்கு எதற்கு இவ்வளவு பெரிய தண்டனை என்று தெரியவில்லை.

கை வேறு ஏகமாய் எரிந்தது. நல்ல சூடாக்கி வைத்ததால் தோள் உரிந்து பெரிய காயமாகி இருந்தது.


யாருமே தன்னை நம்பவில்லையே என்று ஏங்கி ஏங்கி அழுதாள்.

தன்னை காக்க ஒருவரும் இல்லையா என்று அழுகையில் கரைந்தவள் ஒரு கையை பற்றியபடி அமர்ந்து இருந்தாள்.

அப்போது தான் தனது இருசக்கர வாகனத்தில் உள்ளே நுழைந்தான் பார்த்தீபன்.

அவனை கண்டதும் கனிக்கு எல்லா
ம் மறந்து போனது.

‘என்னுடைய பார்த்தீ அத்தான் வந்துவிட்டார். அவர் என்னை நம்புவார்.‌ எனது காயத்திற்கு மருந்திடுவார்’ என்று மகிழ்தவள் தனது வலியை மறந்து,

“அத்தான்…” என்று அழுகையுடன் அவனிடத்தில் ஓட,

“சீ என்னை அப்படி கூப்பிடாத” என்று அவளை அருவருப்புடன் உதறியவன் உயிருடன் மரிக்க செய்திருந்தான்.

இதனை எதிர்பாராத கனி மொத்தமாய் அதிர்ந்து, “அத்தான்” என்று அழுகையுடன் அவனை கண்டாள்.



 
Well-known member
Messages
368
Reaction score
255
Points
63
Karpagam um kothai yum eppo chance kedaikum parthaga atha use pannikitaga and ellarum kuzhandhai poo sollathu nu prathyu nenacha ga andha vagai la than kasturi parthiban ival ah thappu ah nenachathu aana athu kuzhandhai illa appo vae kutty sathan than proof panni iruku .

Mathavanga la vida parthi mela yen avolo kobam nu ippo puriyuthu avaluku ellamum ah irundha avan nambala apadi na ra thu than avaluku yematratha kuduthu iruku athu nall aadaivula kobam ah mariduthu parpom parthi atha epudi kadhal ah mathuran nu
Aana avan edathula yaru irundhalum ipadi than react panni irupaga prathyu kuzhandhai na ra thu na la ava pechu ah avan nambitan athuvum doctor avaluku innum konjam thalli adipattu irundha erandhu poi irupu ah nu vera sonnaru la but itha kani oda manasu accept pannanumae
 
Top