ஜென்மம் 17
தினமும் இரவில்
உனை தொலைவில்
காண்கிறேன் அதனால்
இரவை நான் நீள கேட்கிறேன்…
தன் முன்னே அமர்ந்திருந்த தந்தையை இயலாமையுடன் பார்த்து கொண்டிருந்தாள் கனி.
அருகில் பிரவீன் வேறு.
“அக்கா அப்பா ஒரு முடிவெடுத்தா அது ரொம்ப சரியா இருக்கும்னு நீ தான சொல்லுவ?” என்று பிரவீன் வினவ,
கனியின் சிரம் மேலும் கீழும் அசைந்தது.
“அப்புறம் என்ன? ஏன் நீ இந்த கல்யாணத்தை வேணாம்னு சொல்ற?” என்று வினா தொடுத்தான்.
“எல்லா விஷயமும் இந்த விஷயமும் ஒன்னு இல்லைடா”
“எக்ஸாட்லி. மத்த விஷயத்துக்கே அவ்ளோ பாக்குற அப்பா உன் லைஃப் எவ்ளோ முக்கியமான ஒன்னு. அதுல எவ்வளவு மெனக்கெட்டு இருப்பாரு. பார்த்தீ அத்தானுக்கு என்ன குறை?”
“அவருக்கு எந்த குறையும் இல்லை. எனக்கு தான் இதுல விருப்பம் இல்லை”
“அதான் ஏன்னு கேக்குறேன்”
“டேய் ப்ரத்யூ அவ சின்ன வயசுல இருந்தே அவரை தான் கல்யாணம் பண்ணிக்க போறோம்னு ஆசையை வளர்த்துட்டா. அவ வாழ்க்கையை நான் எப்படிடா”
“அவங்க ரெண்டு பேருக்கும் மியூசுவலா விருப்பம் இருந்து நீ இடையில போனா தான் தப்பு. அத்தானுக்கு உன்னை தான் பிடிச்சு இருக்கு. அவர் உன்னை கல்யாணம் பண்ணிக்க கேட்டப்போ நான் எவ்ளோ சந்தோஷப்பட்டேன் தெரியுமா? நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கணும்னு நான் முதல்ல இருந்தே ஆசைப்பட்டேன். கடவுள் என் ஆசையை நிறைவேத்தி வச்சிட்டாரு”
“எப்படி பாத்தாலும் இது சரி வராதுடா”
“என்னக்கா ஸ்டார்டிங்ல இருந்தே நெகட்டிவா பேசிட்டு இருக்க. எங்க தேடுனாலும் அத்தானை மாதிரி ஒருத்தரை கண்டுபிடிக்க முடியாது. அவர் ரொம்ப நல்லவரு கா”
“இதுக்கு உங்கம்மா பாட்டி மத்தவங்க எல்லாம் ஒத்துக்க மாட்டாங்க”
“வாழ போறது நீங்க தான். உனக்கும் அத்தானுக்கும் பிடிச்சு இருந்தா போதும். அத்தான் நீ போன பின்னாடி என்ன சொன்னாரு தெரியுமா? நான் கனியை தவிர யாரையும் இந்த ஜென்மத்தில கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது கனி கூட மட்டும் தான். நீங்களே யோசிச்சு முடிவெடுங்கன்னு சொல்லிட்டாரு”
“அவரு விருப்பம் இருந்தா போதுமா? அவரோட அம்மா அப்பாக்கு விருப்பம் இருக்க வேணாமா? அவங்களுக்கு என்னை பார்த்தாலே பிடிக்காது”
“அக்கா உனக்கு எவ்ளோ டைம் சொல்றது” என்று பேசுகையிலே இடை நுழைந்தவள்,
“நாங்க மட்டும் வாழ போறது இல்லை. எல்லாரும் சேர்ந்து தான் குடும்பம்” என்றாள்.
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த சிவா,
“பாப்பா கிரிக்கும் கஸ்தூரிக்கும் இதுல சம்மதம் தான். பார்த்தீயோட முடிவை கேட்டு என்கிட்ட அவங்க வந்து பேசுனாங்க. அவங்களுக்கு ப்ரத்யூவ பார்த்தீக்கு கல்யாணம் பண்ண முடியலைன்னு வருத்தம் தான். இருந்தும் பார்த்தீயோட விருப்பம் அவங்களுக்கு முக்கியம். அதான் சம்மதிச்சு இருக்காங்க” என்று உண்மையை கூற,
“எல்லாருக்கும் மன கஷ்டத்தோட இந்த கல்யாணம் வேண்டாம்பா”
“அதெல்லாம் போக போக சரி ஆகிடும் பாப்பா. எல்லா கல்யாணத்துலயும் யாராவது ஒரு ஆளுக்கு மனக் கஷ்டம் இருக்கத்தான் செய்யும்”
“எல்லாருக்கும் மனக்கஷ்டம்னு பேசுறீயே. எங்க ரெண்டு பேருக்கும் இந்த கல்யாணத்துல எவ்ளோ சந்தோஷம் தெரியுமாக்கா. எங்களுக்காக நீ சம்மதிக்க மாட்டியா?” என்று பிரவீன் இடை நுழைய,
இவர்களுக்கு எப்படி புரிய வைப்பது. விருப்பம் இல்லாத ஒன்றை செய்ய சொல்கிறார்களே என்று ஆயாசமாக வந்தது அவளுக்கு.
“அக்கா அப்பாக்கு எங்களை மாதிரி உன்னை கூட வச்சு பாத்துக்க முடியலையேன்னு வருத்தம் இருக்கு. அது இப்போ நீ அத்தானை கல்யாணம் பண்ணிட்டா சரியாகிடும்” என்று மீண்டும் பிரவீன் விளக்க,
இவளுக்கு பதில் கூற நா எழவில்லை.
“உன்னை இங்க அழைச்சிட்டு வந்ததுல இருந்து நான் நல்லா பாத்துக்கலைன்னு எனக்கு குற்றவுணர்ச்சி அரிச்சுட்டே இருக்கு. அதுவும் உன்னை ஊர்ல விட்டுட்டு வந்தப்போ ரொம்ப அதிகமாகிடுச்சு. நீ பெத்த பிள்ளையா இருந்தா இப்படி விட்டு இருப்பியா? அப்போ உனக்கும் அந்த எண்ணம் இருக்கு தானேன்னு மனசாட்சி தினமும் கேள்வி கேக்குது பாப்பா”
“...”
“என்னால நீ நிறைய கஷட்டத்தை அனுபவிச்சிட்ட பாப்பா. கேக்க கூடாத வார்த்தை எல்லாம் கேட்டுட்ட. நீ அந்த ஆசிரமத்திலே வளர்ந்து இருந்தா
கூட இவ்ளோ கஷ்டப்பட்டு இருக்க மாட்டியோன்னு எனக்கு அடிக்கடி தோணுச்சு. என்னை கொஞ்சம் கொஞ்சமாக கொண்ணுட்டு இருக்க இந்த குற்றவுணர்வுல இருந்து விடுதலை கொடு பாப்பா” என்று கலங்கிய குரலும் விழிகளுமாக கனியை கை பிடித்து கொள்ள,
“அப்பா…” என்றவளுக்கும் விழிகள் கலங்கிவிட்டது.
“ஏன்பா இப்படி எல்லாம் பேசுறீங்க?” என்று கலங்கியவாறு வினவ,
“நான் சாகுறதுக்குள்ள உன்னை சந்தோஷமா பாக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்றேன். பார்த்தீயை நீ கல்யாணம் பண்ணா அது கண்டிப்பா நடக்கும். கணவன் குழந்தைன்னு நீ வாழ்றதை பாத்துட்டா நான் செத்த பிறகு என் ஆன்மா சாந்தியடையும்” என்றிட,
“அப்பா…” என்று இருவரிடம் இருந்தும் ஏகமாய் அதிர்ந்து வந்தது.
பிரவீன், “அப்பா அக்கா நிச்சயமா கல்யாணத்துக்கு சம்மதிப்பா. நீங்க ஏன் இப்படி பேசுறீங்க” என்று தந்தையை அதட்டினான்.
இமை சிமிட்டி நீரை உள்ளிழுத்தவள் இவ்வளவு நாட்கள் தன்னை பாதுகாத்து படிப்பை கொடுத்தவரின் அன்பிற்கு நியாயம் செய்ய நினைத்தாள்.
மனதிற்குள் நேற்றிரவு பார்த்தீயிடம்,
“நான் இந்த உலகத்திலேயே உங்களை தவிர யாரை வேணா கல்யாணம் பண்ணுவேன் மிஸ்டர் பார்த்தீபன்” என்று சீறியது நினைவு வந்தது.
மனசாட்சி தன்னை பார்த்து எள்ளி நகையாடுவதாக தோன்ற விழிகளை இறுக மூடி உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தவள்,
“அப்பா நீங்க எப்பவுமே எனக்கு நல்லது தான் செஞ்சு இருக்கிங்க. இனியும் நல்லது தான் செய்வீங்கப்பா. உங்களுக்கு எது விருப்பமே எனக்கும் அது சம்மதம் தான் பா. உங்களுக்காக நான் அவரை கல்யாணம் பண்ண சம்பாதிக்கிறேன்” என்றவள்,
“ஆனா ஒரு கண்டிஷன்” என்று நிறுத்தினாள்.
இருவரும் ‘என்ன’ என்பது போல பார்க்க,
“இனிமே இப்போ பேசுனிங்களே குற்றவுணர்ச்சி அது இதுன்னு அந்த மாதிரி எப்பவும் பேச கூடாது. ஏன்னா நீங்க ப்ரவீன் ப்ரத்யூவ விட என்னை ரொம்ப நல்லா பாத்துக்கிட்டீங்க” என்க,
இருவருக்கும் உள்ளம் நெகிழ்ந்தது.
“கண்டிப்பா பேச மாட்டேன். என்னோட ஆசை எல்லாம் உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்கணும்றது தான். அது இப்போ நிறைவேற போதுது. இதை விட வேறென்ன பெரிய சந்தோஷம் இருக்க போகுது. இனிமே ஓடியாடி உன்னோட கல்யாண வேலையை ஸ்டார்ட் பண்ணிடுவேன்” என்று புன்னகைக்க,
“ஆமாக்கா. என்னோட ரொம்ப பெரிய ஆசையே நிறைவேற போகுது. இனிமேல் லைஃப் லாங் நீ என்கூடவே இருப்ப. இத்தனை வருஷம் பிரிஞ்சு இருந்ததுக்கு இனி சேர்ந்து இருப்போம்” என்று பிரவீன் கூறியதும் சடுதியில் நேற்று பார்த்தீபன் பத்து வருடங்களுக்கு சேர்த்து வாழலாம் சீக்கிரம் என்னிடம் வந்துவிடு என்று கூறியது நினைவில் வந்து போனது.
அவர்களது புன்னகைக்கு பதிலாக கொடுத்த புன்னகையில் உயிர்ப்பில்லை.
இத்தனை வருடம் பாதுகாத்தவருக்கு நன்றி கடனாக இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாயிற்று. ஆனால் தன்னால் அந்த வாழ்வில் பொருந்தி வாழ இயலுமா என்று தெரியவில்லை.
“அக்கா கல்யாண மாப்பிள்ளை மட்டும் தான் எங்க விருப்பம். மத்த எல்லாமே உன்னோட விருப்பம் தான் சொல்லு. உனக்கு எப்படி கல்யாணம் பண்ண ஆசை?”
“ரொம்ப கிராண்டா வேணாம். சிம்பிளா இருந்தா போதும் பா. இது என்னோட விருப்பம் பட் அவங்களுக்கு எதாவது ஆசை இருந்தா கேட்டுட்டு பண்ணிக்கோங்க. வேற எதுவும் எனக்கு பெருசா ஆசையில்லை” என்று முடித்துவிட,
சிவா கிரியிடமும் பேசி திருமணத்தை சற்று எளிமையாகவே நடத்தலாம் என்று முடிவு செய்தார்.
திருமணத்தை கோவிலில் முடித்துவிட்டு ஒரு மண்டபத்தில் மறுநாள் வரவேற்பு வைத்திட முடிவு செய்தனர்.
நல்ல நாள் பார்த்த போது அடுத்த பதினைந்து நாட்களில் ஒரு முகூர்த்த நாளும் அதன் பிறகு மூன்று மாதங்கள் கழித்தும் இருந்தது.
பார்த்தீபன் பதினைந்து நாட்களில் வைத்து கொள்ளலாம் என்று கூறிவிட்டான்.
அதற்குள் எப்படி என்று பெரியவர்கள் அதிர்ந்தாலும் பார்த்தீபனது வார்த்தையை அவர்களால் மீற இயலவில்லை.
பதினைந்து நாட்கள் மட்டுமே இருப்பதால் எல்லாம் வேகவேகமாக நடந்தது.
நிற்க நேரமில்லாமல் பெரியவர்கள் ஓடினர். கற்பகம் தனக்கு இதில் சம்மந்தம் இல்லை என்று ஒதுங்கிவிட பிரவீன் தான் தந்தைக்கு துணையாக இருந்தான்.
அதோ இதோவென்று பதினைந்து நாட்களும் முடிந்துவிட அவர்களது பகுதியிலே சற்று பெரியதாக இருந்த அம்மன் கோவிலில் திருமணம் ஏற்பாடாகியிருந்தது.
உறவினர்கள் சூழ மரகத பச்சை பட்டுடுத்தி அழகாக நடந்து வந்தாள் கன்னல் மொழி. முகத்தில் எந்த உணர்வையும் காண்பிக்கவில்லை.
நெருக்கிய சொந்தங்கள் மட்டுமே கூடியிருந்தது.
அங்கே இங்கே என்று ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்த மகேஷ் தோழியின் வருகையை அறிந்து புன்னகையுடன் பார்த்திருந்தான்.
இந்த திருமணத்தால் ப்ரவீன் மற்றும் சிவாவிற்கு பிறகு மிகவும் மகிழ்ச்சி அடைந்தது மகேஷ் தான்.
இவ்வளவு விரைவாக திருமணம் என்றதும் அதிர்ந்தான் தான். ஆனால் பார்த்தீபன் தான் மாப்பிள்ளை என்றதும் அவனடைந்த மகிழ்விற்கு அளவே கிடையாது.
தோழியை பற்றி நன்கு அறிந்திருந்தவனுக்கு அவளால் நிச்சயமாக பார்த்தீபனை தவிர்த்து வேறொருவருடன் சந்தோஷமாக நிம்மதியாக வாழ முடியாது என்று தெரிந்தது.
ஆக இம்முடிவு மிகவும் நல்ல முடிவு இப்போது அவள் வருத்தத்தில் இருந்தாலும் நாளை நிச்சயமாக நன்றாக இருப்பாள் என்று உறுதியாக நம்பினான்.
அது தான் நான்கு நாட்கள் முன்னரே வந்து வேலை எல்லாம் எடுத்து போட்டு செய்து கொண்டிருந்தான்.
பட்டு வேட்டி சட்டையில் பார்த்தீபன் மந்திரங்களை கூறி கொண்டிருக்க கனி அவனது அருகில் சென்று அமர்ந்தாள்.
தோழியையே பார்த்து கொண்டிருந்தவன் அவள் நிமிர்ந்ததும் புன்னைக்குமாறு சைகை செய்ய அவளது இதழ்கள் மெதுவாக விரிந்தது.
ஆனால் அதில் உயிர்ப்பில்லை. விரைவாக கடவுள் அவளது புன்னகையில் ஜீவனை மீட்டு தரும்படி மகேஷ் வேண்டிக்கொண்டான்.
முகூர்த்த நேரம் வந்ததும் புரோகிதர் மாங்கல்யத்தை எடுத்து நீட்ட அதனை வாங்கி கன்னல்மொழிக்கு அனுபவித்தவன் அவளை தன்னுடைய சரிபாதியாக ஏற்று கொண்டான்.
பிறகு குங்குமத்தை எடுத்து அவளது உச்சி வகிட்டில் வைத்துவிட ஒரு கணம் விழிகளை மூடி திறந்தவள் தன்னுடைய விருப்பத்தில் நடக்கிறதோ இல்லையோ இந்த வாழ்க்கை தனக்கு நிலைக்க வேண்டும் என்று வேண்டி கொண்டாள்.
சிவப்பிரகாசத்திற்கு மகிழ்ச்சி தாளவில்லை. கலங்கிய விழிகளை துடைத்துவிட்டு மணமக்களை புன்னகையுடன் பார்த்தார்.
பிரவீனுக்கும் ஏகபோக மகிழ்ச்சி. முகம் முழுவதும் மலர்ந்து விகசித்தது.
கஸ்தூரிக்கும் கிரிக்கும் கூட மகனது திருமணம் தங்களது விருப்பத்தின் பேரில் நடக்கவில்லை என்றாலும் அவனுடைய விருப்பத்தினை நிறைவேற்றிய மகிழ்ச்சி.
நிவிஷா அண்ணனுக்காக வந்து இருந்தாலும் தோழியின் கண்ணீர் அவளை வருத்தி கொண்டிருந்தது.
ப்ரத்யூ அத்தனை ஆர்ப்பாட்டம் செய்துவிட்டாள்.
இவர்களை தவிர்த்து அங்கு அதிகம் மகிழ்ந்தது மகேஷ் தான்.
பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று கொண்டதும் கடவுளை தரிசித்துவிட்டு மகிழுந்தில் வீட்டிற்கு புறப்பட்டனர்.
கனி எந்தவித பாவனையுமின்றி அமைதியாக வர பார்த்தீபனும் முகத்தில் எந்த உணர்வையும் பிரதிபலிக்கவில்லை.
ஆனால் உள்ளுக்குள் சொல்லவியலா நிறைவு ஒன்று பெருகி வழிந்தது.
அவளது கையை பற்றி கொண்டான்.
கனி சட்டென்று திரும்பி அவனை காண எதுவுமே நடக்காத பாவனையில் மகிழுந்தில் ஏறி அமர்ந்து கொண்டான்.
கனி தான் கையை அவனிடமிருந்து உருவ முடியாது அருகிலே அமர்ந்தாள்.
மகேஷ் பிரவீனுடன் சேர்ந்து அவனுடைய இரு சக்கர வாகனத்தில் ஏறி கொண்டான்.
மனமக்களின் வாகனத்தை தொடர்ந்தபடியே சென்றனர்.
பிரவீன், “இப்போதான் நிம்மதியா இருக்குண்ணா. எங்க அக்கா அத்தானை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிடுவாளோன்னு பயந்திட்டே இருந்தேன்” என்று ஆனந்தமாக மொழிய,
“நீங்க கேட்டதும் கனி உடனே சம்மதிச்சிட்டாளா?” என்று மகேஷ் ஆச்சர்யமாக வினவ,
“அவ எங்க உடனே ஓகே சொன்னா. நானும் அப்பாவும் ஒன் ஹவர் உக்காந்து கன்வின்ஸ் பண்ணோம்” என்றான்.
“ஓ…” என்று மகேஷ் யோசனையுடன் மொழிய,
“எப்படி என் திறமை? உங்க வீட்லயும் லவ்வுக்கு ஓகே சொல்ல மாட்றாங்கன்னு கேள்விபட்டேன். வேணும்னா சொல்லுங்க நான் வந்து பிரைன்வாஷ் பண்றேன்” என்றதும் சிரித்த மகேஷ்,
“நீ பேசி கன்வின்ஸ் பண்ணதாலதான் அவ மேரேஜ்க்கு ஓகே சொல்லி இருக்கான்னு நீ நினைக்கிறியா?” என்று வினவினான்.
“இல்லையா பின்ன?” என்று பிரவீன் வினா தொடுக்க,
“வாய்ப்பே இல்லை. அவளுக்கு விருப்பம் இல்லாம கன்வின்ஸ் பண்ணி எதையும் செய்யவில்லை வைக்க முடியாது” என்றதும் பிரவீன் விழிகளில் கேள்வியை தேக்கி பார்த்தான்.
“அவளுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இருக்கு. முழுசா இல்லைன்னாலும் கொஞ்சமாவது இருக்கணும். செய்யணும்னு அவ நினைச்சா தான் செய்ய முடியும். வேணாம்னு அவ முடிவு பண்ணிட்ட பின்னாடி யார் என்ன சொன்னாரு கன்வின்ஸ் பண்ணாலும் நோ தான்” என்று அழுத்தம் திருத்தமாக மொழிய,
“அப்போ அக்காக்கு அத்தானை பிடிக்குமா? இந்த கல்யாணத்துல விருப்பமா?” என்று பிரவீன் ஆர்வமாய் வினவ
“நிச்சயமா பிடிக்கும். அவளுக்கு சின்ன வயசுல இருந்தே பார்த்தீபனை பிடிக்கும்” என்க,
“வாவ் சூப்பர் அப்போ அக்கா லைஃப் சீக்கிரம் சரியாகிடும்” என்று ஆர்ப்பரித்தான்.
“கண்டிப்பா சரியாகிடும்” என்று இருவரும் மகிழ்வுடன் பேசியபடி செல்ல,
இங்கு கற்பகம் ப்ரத்யூவிடம்,
“முடிஞ்சிடுச்சாம் அந்த கருமம் பிடிச்ச கல்யாணம்” என்று பொறும,
“என் பேத்தி வாழ்க்கை பறிச்ச அவ நல்லாவே இருக்க மாட்டா விளங்காம போய்டுவா” என்று கோதை சாபமிட்டார்.
“ம்மா அவளை நல்லா வாழவிட கூடாதும்மா. எதாவது பண்ணனும்” என்று ப்ரத்யூவிற்கு பார்த்தீபன் வந்து பேசிவிட்டு போனது நினைவில் வந்தது.
இவர்கள் கனியை தகாத வார்த்தைகளால் திட்டுவதை அலைபேசியில் கேட்டவன் மறுநாள் காலையே அங்கு வந்திருந்தான்.
அவனை கண்டதும் கற்பகம்,
“வா மருமகனே எனக்கு தெரியும். உன்னால இந்த அத்தை கூட பேசாம இருக்க முடியாதுனு. நேத்து நீ பேசுனதை நான் மனசுல வச்சுக்கலை. வா வந்து உட்காரு” என்று கை பிடித்து நீள்விருக்கையில் அமர வைக்க,
கோதை, “போய் பேரனுக்கு குடிக்க எதாவது ஜூஸ் எடுத்துட்டு வா. வெயில்ல களைச்சு போய் வந்து இருக்கான்” என்று அன்பை மொழிந்தார்.
இவன் வந்ததை அறிந்த ப்ரத்யூ,
“அத்தான் நீங்க என்னை தேடி வருவீங்கன்னு எனக்கு தெரியும். நேத்தே ஏதோ தெரியாம பேசிட்டிங்க. இப்போ தான் உங்களுக்கு புரிஞ்சு இருக்கும். அந்த பிச்சைக்காரி வேணாம் நான் தான் வேணும்னு வந்துட்டிங்க தான அத்தான். எனக்கு தெரியும் உங்களுக்கு என்னை தான் பிடிக்கும்னு”
“...”
“ஒன்னுமில்லாத பிச்சைக்காரி. அநாதை நாய் அவளுக்கு உங்களை கட்டிக்க என்ன தகுதி இருக்கு? அவ உங்ககிட்ட நல்லவ வேஷம் போட்டுட்டு இருக்கா. அவளை நம்பாதிங்க” என்று தன் போக்கில் பேச,
இன்னும் எவ்வளவு தூரம் போகிறார்கள் என்று அமைதியாக பார்த்திருந்தான்.
அதையே சம்மதமாக எடுத்தவள்,
“நேத்து நீங்க போய்ட்ட பின்னாடி அவ என்னென்ன பேசுனா தெரியுமா? அம்மாவையும் பாட்டியையும் பார்த்து பாத்தீயா உன் பேரனை வளைச்சு போட்டுட்டேன். இனிமே அவன் என் முந்தானையில தான். வந்த வேலையை கச்சிதமா முடிச்சிட்டேன். இனி அவனை வச்சே உங்க எல்லாரையும் வீட்டைவிட்டு விரட்டிடுவேன்னு சொன்னா. அதுமட்டுமா இனிமே நான் என் மாமா வீட்டுக்கு வர கூடாதாம். வந்தா வாஙல்லயே செருப்பை கழட்டி அடிச்சு துரத்திவிட்ருவாலாம்” என்று கண்ணீர் சிந்தியவள்,
“நான் இனிமே அங்க வர கூடாதா அத்தான்” என்று அப்பாவியாக விழிகளை விரிக்க,
எப்படி இத்தனை தத்ரூபமாக நடித்து கொண்டிருக்கிறாள். இத்தனை நாளும் இதை கண்டு தான் தான் ஏமாந்து போயிருக்கிறோம் என்று அதிர்ச்சியாக பார்த்தான்.
கோதை, “ஆமா பார்த்தீ. என்னை பாத்து வயசால காலத்துல நீயெல்லாம் எதுக்கு உயிரோட இருக்க? உனக்கு சோத்துல விஷம் வைக்கிறேன்னு நாக்குல நரம்பில்லாம பேசுறா டா” அவரும் கண்ணீர் சிந்த,
“இந்தா மருமகனே உனக்கு பிடிச்ச மாதிரி அத்தை ஜூஸ் போட்ருக்கேன்” என்று தேன் குரலில் பேசி அவனிடத்தில் கொடுத்தார்.
பார்த்தீ அமைதியாக வாங்கி கொள்ள,
“அது மட்டுமா அத்தயையும் மாமாவையும் என்ன சொன்னா தெரியுமா?” என்று ப்ரத்யூ வினவ,
“அந்த எடுபட்ட சிறுக்கி என் மகனையும் மருமகளையும் முதியோர் இல்லத்துல சேர்த்துவிட்ருவாலாம். அது மட்டுமா என் பேத்தி நிவிவை ஹாஸ்டல்ல தள்ளிடுவாளாம். இப்படி உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ண நினைக்கிற அவ எல்லாம் நல்லா இருப்பாளா…?” என்று கோதை மொழிய,
“என்ன பார்த்தீ நாங்க இவ்ளோ பேசுறோம். நீ அமைதியாவே இருக்க?” என்று வினவினார்.
“இல்லத்தை இது வேற ஒரு பிரச்சனை. அதான் என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்” என்றதும்,
“என்ன பிரச்சனை மருமகனே சொல்லு சரி பண்ணிடலாம்” என்று வினவ,
“நேத்து நைட் மாமாக்கு ஏதோ த்ரெட் கால் வந்து இருக்கு. கால் பண்ணது யாருன்னு தெரியலை பிஸ்னஸ் எனிமி யாராவது இருக்கலாம். அவன் மிரட்டனதை நினைச்சு தான் யோசிச்சிட்டு இருக்கேன்”என்றான்.
“எவன் என் வீட்டுக்காரர மிரட்னது? என்ன சொல்லி மிரட்டுனானாம்?” என்று கற்பகம் ஆவேசமாக கேட்க
,
“அது…” என்று தொடங்கி நிறுத்தியவன்,
“நம்ம ப்ரத்யூவ கடத்தி நாசம் பண்ணி கடல்ல தூக்கி போட்ருவானாம்” என்றதும்,
“என்ன?” என்று மூவரது முகத்திலும் அதிர்ச்சி இடியாய் இறங்கியது.
அடுத்தவர்களை கூறும் போது புரியாத வார்த்தையின் வீரியம் இப்போது புரியுமோ…?
தினமும் இரவில்
உனை தொலைவில்
காண்கிறேன் அதனால்
இரவை நான் நீள கேட்கிறேன்…
தன் முன்னே அமர்ந்திருந்த தந்தையை இயலாமையுடன் பார்த்து கொண்டிருந்தாள் கனி.
அருகில் பிரவீன் வேறு.
“அக்கா அப்பா ஒரு முடிவெடுத்தா அது ரொம்ப சரியா இருக்கும்னு நீ தான சொல்லுவ?” என்று பிரவீன் வினவ,
கனியின் சிரம் மேலும் கீழும் அசைந்தது.
“அப்புறம் என்ன? ஏன் நீ இந்த கல்யாணத்தை வேணாம்னு சொல்ற?” என்று வினா தொடுத்தான்.
“எல்லா விஷயமும் இந்த விஷயமும் ஒன்னு இல்லைடா”
“எக்ஸாட்லி. மத்த விஷயத்துக்கே அவ்ளோ பாக்குற அப்பா உன் லைஃப் எவ்ளோ முக்கியமான ஒன்னு. அதுல எவ்வளவு மெனக்கெட்டு இருப்பாரு. பார்த்தீ அத்தானுக்கு என்ன குறை?”
“அவருக்கு எந்த குறையும் இல்லை. எனக்கு தான் இதுல விருப்பம் இல்லை”
“அதான் ஏன்னு கேக்குறேன்”
“டேய் ப்ரத்யூ அவ சின்ன வயசுல இருந்தே அவரை தான் கல்யாணம் பண்ணிக்க போறோம்னு ஆசையை வளர்த்துட்டா. அவ வாழ்க்கையை நான் எப்படிடா”
“அவங்க ரெண்டு பேருக்கும் மியூசுவலா விருப்பம் இருந்து நீ இடையில போனா தான் தப்பு. அத்தானுக்கு உன்னை தான் பிடிச்சு இருக்கு. அவர் உன்னை கல்யாணம் பண்ணிக்க கேட்டப்போ நான் எவ்ளோ சந்தோஷப்பட்டேன் தெரியுமா? நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கணும்னு நான் முதல்ல இருந்தே ஆசைப்பட்டேன். கடவுள் என் ஆசையை நிறைவேத்தி வச்சிட்டாரு”
“எப்படி பாத்தாலும் இது சரி வராதுடா”
“என்னக்கா ஸ்டார்டிங்ல இருந்தே நெகட்டிவா பேசிட்டு இருக்க. எங்க தேடுனாலும் அத்தானை மாதிரி ஒருத்தரை கண்டுபிடிக்க முடியாது. அவர் ரொம்ப நல்லவரு கா”
“இதுக்கு உங்கம்மா பாட்டி மத்தவங்க எல்லாம் ஒத்துக்க மாட்டாங்க”
“வாழ போறது நீங்க தான். உனக்கும் அத்தானுக்கும் பிடிச்சு இருந்தா போதும். அத்தான் நீ போன பின்னாடி என்ன சொன்னாரு தெரியுமா? நான் கனியை தவிர யாரையும் இந்த ஜென்மத்தில கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது கனி கூட மட்டும் தான். நீங்களே யோசிச்சு முடிவெடுங்கன்னு சொல்லிட்டாரு”
“அவரு விருப்பம் இருந்தா போதுமா? அவரோட அம்மா அப்பாக்கு விருப்பம் இருக்க வேணாமா? அவங்களுக்கு என்னை பார்த்தாலே பிடிக்காது”
“அக்கா உனக்கு எவ்ளோ டைம் சொல்றது” என்று பேசுகையிலே இடை நுழைந்தவள்,
“நாங்க மட்டும் வாழ போறது இல்லை. எல்லாரும் சேர்ந்து தான் குடும்பம்” என்றாள்.
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த சிவா,
“பாப்பா கிரிக்கும் கஸ்தூரிக்கும் இதுல சம்மதம் தான். பார்த்தீயோட முடிவை கேட்டு என்கிட்ட அவங்க வந்து பேசுனாங்க. அவங்களுக்கு ப்ரத்யூவ பார்த்தீக்கு கல்யாணம் பண்ண முடியலைன்னு வருத்தம் தான். இருந்தும் பார்த்தீயோட விருப்பம் அவங்களுக்கு முக்கியம். அதான் சம்மதிச்சு இருக்காங்க” என்று உண்மையை கூற,
“எல்லாருக்கும் மன கஷ்டத்தோட இந்த கல்யாணம் வேண்டாம்பா”
“அதெல்லாம் போக போக சரி ஆகிடும் பாப்பா. எல்லா கல்யாணத்துலயும் யாராவது ஒரு ஆளுக்கு மனக் கஷ்டம் இருக்கத்தான் செய்யும்”
“எல்லாருக்கும் மனக்கஷ்டம்னு பேசுறீயே. எங்க ரெண்டு பேருக்கும் இந்த கல்யாணத்துல எவ்ளோ சந்தோஷம் தெரியுமாக்கா. எங்களுக்காக நீ சம்மதிக்க மாட்டியா?” என்று பிரவீன் இடை நுழைய,
இவர்களுக்கு எப்படி புரிய வைப்பது. விருப்பம் இல்லாத ஒன்றை செய்ய சொல்கிறார்களே என்று ஆயாசமாக வந்தது அவளுக்கு.
“அக்கா அப்பாக்கு எங்களை மாதிரி உன்னை கூட வச்சு பாத்துக்க முடியலையேன்னு வருத்தம் இருக்கு. அது இப்போ நீ அத்தானை கல்யாணம் பண்ணிட்டா சரியாகிடும்” என்று மீண்டும் பிரவீன் விளக்க,
இவளுக்கு பதில் கூற நா எழவில்லை.
“உன்னை இங்க அழைச்சிட்டு வந்ததுல இருந்து நான் நல்லா பாத்துக்கலைன்னு எனக்கு குற்றவுணர்ச்சி அரிச்சுட்டே இருக்கு. அதுவும் உன்னை ஊர்ல விட்டுட்டு வந்தப்போ ரொம்ப அதிகமாகிடுச்சு. நீ பெத்த பிள்ளையா இருந்தா இப்படி விட்டு இருப்பியா? அப்போ உனக்கும் அந்த எண்ணம் இருக்கு தானேன்னு மனசாட்சி தினமும் கேள்வி கேக்குது பாப்பா”
“...”
“என்னால நீ நிறைய கஷட்டத்தை அனுபவிச்சிட்ட பாப்பா. கேக்க கூடாத வார்த்தை எல்லாம் கேட்டுட்ட. நீ அந்த ஆசிரமத்திலே வளர்ந்து இருந்தா
கூட இவ்ளோ கஷ்டப்பட்டு இருக்க மாட்டியோன்னு எனக்கு அடிக்கடி தோணுச்சு. என்னை கொஞ்சம் கொஞ்சமாக கொண்ணுட்டு இருக்க இந்த குற்றவுணர்வுல இருந்து விடுதலை கொடு பாப்பா” என்று கலங்கிய குரலும் விழிகளுமாக கனியை கை பிடித்து கொள்ள,
“அப்பா…” என்றவளுக்கும் விழிகள் கலங்கிவிட்டது.
“ஏன்பா இப்படி எல்லாம் பேசுறீங்க?” என்று கலங்கியவாறு வினவ,
“நான் சாகுறதுக்குள்ள உன்னை சந்தோஷமா பாக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்றேன். பார்த்தீயை நீ கல்யாணம் பண்ணா அது கண்டிப்பா நடக்கும். கணவன் குழந்தைன்னு நீ வாழ்றதை பாத்துட்டா நான் செத்த பிறகு என் ஆன்மா சாந்தியடையும்” என்றிட,
“அப்பா…” என்று இருவரிடம் இருந்தும் ஏகமாய் அதிர்ந்து வந்தது.
பிரவீன், “அப்பா அக்கா நிச்சயமா கல்யாணத்துக்கு சம்மதிப்பா. நீங்க ஏன் இப்படி பேசுறீங்க” என்று தந்தையை அதட்டினான்.
இமை சிமிட்டி நீரை உள்ளிழுத்தவள் இவ்வளவு நாட்கள் தன்னை பாதுகாத்து படிப்பை கொடுத்தவரின் அன்பிற்கு நியாயம் செய்ய நினைத்தாள்.
மனதிற்குள் நேற்றிரவு பார்த்தீயிடம்,
“நான் இந்த உலகத்திலேயே உங்களை தவிர யாரை வேணா கல்யாணம் பண்ணுவேன் மிஸ்டர் பார்த்தீபன்” என்று சீறியது நினைவு வந்தது.
மனசாட்சி தன்னை பார்த்து எள்ளி நகையாடுவதாக தோன்ற விழிகளை இறுக மூடி உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தவள்,
“அப்பா நீங்க எப்பவுமே எனக்கு நல்லது தான் செஞ்சு இருக்கிங்க. இனியும் நல்லது தான் செய்வீங்கப்பா. உங்களுக்கு எது விருப்பமே எனக்கும் அது சம்மதம் தான் பா. உங்களுக்காக நான் அவரை கல்யாணம் பண்ண சம்பாதிக்கிறேன்” என்றவள்,
“ஆனா ஒரு கண்டிஷன்” என்று நிறுத்தினாள்.
இருவரும் ‘என்ன’ என்பது போல பார்க்க,
“இனிமே இப்போ பேசுனிங்களே குற்றவுணர்ச்சி அது இதுன்னு அந்த மாதிரி எப்பவும் பேச கூடாது. ஏன்னா நீங்க ப்ரவீன் ப்ரத்யூவ விட என்னை ரொம்ப நல்லா பாத்துக்கிட்டீங்க” என்க,
இருவருக்கும் உள்ளம் நெகிழ்ந்தது.
“கண்டிப்பா பேச மாட்டேன். என்னோட ஆசை எல்லாம் உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்கணும்றது தான். அது இப்போ நிறைவேற போதுது. இதை விட வேறென்ன பெரிய சந்தோஷம் இருக்க போகுது. இனிமே ஓடியாடி உன்னோட கல்யாண வேலையை ஸ்டார்ட் பண்ணிடுவேன்” என்று புன்னகைக்க,
“ஆமாக்கா. என்னோட ரொம்ப பெரிய ஆசையே நிறைவேற போகுது. இனிமேல் லைஃப் லாங் நீ என்கூடவே இருப்ப. இத்தனை வருஷம் பிரிஞ்சு இருந்ததுக்கு இனி சேர்ந்து இருப்போம்” என்று பிரவீன் கூறியதும் சடுதியில் நேற்று பார்த்தீபன் பத்து வருடங்களுக்கு சேர்த்து வாழலாம் சீக்கிரம் என்னிடம் வந்துவிடு என்று கூறியது நினைவில் வந்து போனது.
அவர்களது புன்னகைக்கு பதிலாக கொடுத்த புன்னகையில் உயிர்ப்பில்லை.
இத்தனை வருடம் பாதுகாத்தவருக்கு நன்றி கடனாக இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாயிற்று. ஆனால் தன்னால் அந்த வாழ்வில் பொருந்தி வாழ இயலுமா என்று தெரியவில்லை.
“அக்கா கல்யாண மாப்பிள்ளை மட்டும் தான் எங்க விருப்பம். மத்த எல்லாமே உன்னோட விருப்பம் தான் சொல்லு. உனக்கு எப்படி கல்யாணம் பண்ண ஆசை?”
“ரொம்ப கிராண்டா வேணாம். சிம்பிளா இருந்தா போதும் பா. இது என்னோட விருப்பம் பட் அவங்களுக்கு எதாவது ஆசை இருந்தா கேட்டுட்டு பண்ணிக்கோங்க. வேற எதுவும் எனக்கு பெருசா ஆசையில்லை” என்று முடித்துவிட,
சிவா கிரியிடமும் பேசி திருமணத்தை சற்று எளிமையாகவே நடத்தலாம் என்று முடிவு செய்தார்.
திருமணத்தை கோவிலில் முடித்துவிட்டு ஒரு மண்டபத்தில் மறுநாள் வரவேற்பு வைத்திட முடிவு செய்தனர்.
நல்ல நாள் பார்த்த போது அடுத்த பதினைந்து நாட்களில் ஒரு முகூர்த்த நாளும் அதன் பிறகு மூன்று மாதங்கள் கழித்தும் இருந்தது.
பார்த்தீபன் பதினைந்து நாட்களில் வைத்து கொள்ளலாம் என்று கூறிவிட்டான்.
அதற்குள் எப்படி என்று பெரியவர்கள் அதிர்ந்தாலும் பார்த்தீபனது வார்த்தையை அவர்களால் மீற இயலவில்லை.
பதினைந்து நாட்கள் மட்டுமே இருப்பதால் எல்லாம் வேகவேகமாக நடந்தது.
நிற்க நேரமில்லாமல் பெரியவர்கள் ஓடினர். கற்பகம் தனக்கு இதில் சம்மந்தம் இல்லை என்று ஒதுங்கிவிட பிரவீன் தான் தந்தைக்கு துணையாக இருந்தான்.
அதோ இதோவென்று பதினைந்து நாட்களும் முடிந்துவிட அவர்களது பகுதியிலே சற்று பெரியதாக இருந்த அம்மன் கோவிலில் திருமணம் ஏற்பாடாகியிருந்தது.
உறவினர்கள் சூழ மரகத பச்சை பட்டுடுத்தி அழகாக நடந்து வந்தாள் கன்னல் மொழி. முகத்தில் எந்த உணர்வையும் காண்பிக்கவில்லை.
நெருக்கிய சொந்தங்கள் மட்டுமே கூடியிருந்தது.
அங்கே இங்கே என்று ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்த மகேஷ் தோழியின் வருகையை அறிந்து புன்னகையுடன் பார்த்திருந்தான்.
இந்த திருமணத்தால் ப்ரவீன் மற்றும் சிவாவிற்கு பிறகு மிகவும் மகிழ்ச்சி அடைந்தது மகேஷ் தான்.
இவ்வளவு விரைவாக திருமணம் என்றதும் அதிர்ந்தான் தான். ஆனால் பார்த்தீபன் தான் மாப்பிள்ளை என்றதும் அவனடைந்த மகிழ்விற்கு அளவே கிடையாது.
தோழியை பற்றி நன்கு அறிந்திருந்தவனுக்கு அவளால் நிச்சயமாக பார்த்தீபனை தவிர்த்து வேறொருவருடன் சந்தோஷமாக நிம்மதியாக வாழ முடியாது என்று தெரிந்தது.
ஆக இம்முடிவு மிகவும் நல்ல முடிவு இப்போது அவள் வருத்தத்தில் இருந்தாலும் நாளை நிச்சயமாக நன்றாக இருப்பாள் என்று உறுதியாக நம்பினான்.
அது தான் நான்கு நாட்கள் முன்னரே வந்து வேலை எல்லாம் எடுத்து போட்டு செய்து கொண்டிருந்தான்.
பட்டு வேட்டி சட்டையில் பார்த்தீபன் மந்திரங்களை கூறி கொண்டிருக்க கனி அவனது அருகில் சென்று அமர்ந்தாள்.
தோழியையே பார்த்து கொண்டிருந்தவன் அவள் நிமிர்ந்ததும் புன்னைக்குமாறு சைகை செய்ய அவளது இதழ்கள் மெதுவாக விரிந்தது.
ஆனால் அதில் உயிர்ப்பில்லை. விரைவாக கடவுள் அவளது புன்னகையில் ஜீவனை மீட்டு தரும்படி மகேஷ் வேண்டிக்கொண்டான்.
முகூர்த்த நேரம் வந்ததும் புரோகிதர் மாங்கல்யத்தை எடுத்து நீட்ட அதனை வாங்கி கன்னல்மொழிக்கு அனுபவித்தவன் அவளை தன்னுடைய சரிபாதியாக ஏற்று கொண்டான்.
பிறகு குங்குமத்தை எடுத்து அவளது உச்சி வகிட்டில் வைத்துவிட ஒரு கணம் விழிகளை மூடி திறந்தவள் தன்னுடைய விருப்பத்தில் நடக்கிறதோ இல்லையோ இந்த வாழ்க்கை தனக்கு நிலைக்க வேண்டும் என்று வேண்டி கொண்டாள்.
சிவப்பிரகாசத்திற்கு மகிழ்ச்சி தாளவில்லை. கலங்கிய விழிகளை துடைத்துவிட்டு மணமக்களை புன்னகையுடன் பார்த்தார்.
பிரவீனுக்கும் ஏகபோக மகிழ்ச்சி. முகம் முழுவதும் மலர்ந்து விகசித்தது.
கஸ்தூரிக்கும் கிரிக்கும் கூட மகனது திருமணம் தங்களது விருப்பத்தின் பேரில் நடக்கவில்லை என்றாலும் அவனுடைய விருப்பத்தினை நிறைவேற்றிய மகிழ்ச்சி.
நிவிஷா அண்ணனுக்காக வந்து இருந்தாலும் தோழியின் கண்ணீர் அவளை வருத்தி கொண்டிருந்தது.
ப்ரத்யூ அத்தனை ஆர்ப்பாட்டம் செய்துவிட்டாள்.
இவர்களை தவிர்த்து அங்கு அதிகம் மகிழ்ந்தது மகேஷ் தான்.
பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று கொண்டதும் கடவுளை தரிசித்துவிட்டு மகிழுந்தில் வீட்டிற்கு புறப்பட்டனர்.
கனி எந்தவித பாவனையுமின்றி அமைதியாக வர பார்த்தீபனும் முகத்தில் எந்த உணர்வையும் பிரதிபலிக்கவில்லை.
ஆனால் உள்ளுக்குள் சொல்லவியலா நிறைவு ஒன்று பெருகி வழிந்தது.
அவளது கையை பற்றி கொண்டான்.
கனி சட்டென்று திரும்பி அவனை காண எதுவுமே நடக்காத பாவனையில் மகிழுந்தில் ஏறி அமர்ந்து கொண்டான்.
கனி தான் கையை அவனிடமிருந்து உருவ முடியாது அருகிலே அமர்ந்தாள்.
மகேஷ் பிரவீனுடன் சேர்ந்து அவனுடைய இரு சக்கர வாகனத்தில் ஏறி கொண்டான்.
மனமக்களின் வாகனத்தை தொடர்ந்தபடியே சென்றனர்.
பிரவீன், “இப்போதான் நிம்மதியா இருக்குண்ணா. எங்க அக்கா அத்தானை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிடுவாளோன்னு பயந்திட்டே இருந்தேன்” என்று ஆனந்தமாக மொழிய,
“நீங்க கேட்டதும் கனி உடனே சம்மதிச்சிட்டாளா?” என்று மகேஷ் ஆச்சர்யமாக வினவ,
“அவ எங்க உடனே ஓகே சொன்னா. நானும் அப்பாவும் ஒன் ஹவர் உக்காந்து கன்வின்ஸ் பண்ணோம்” என்றான்.
“ஓ…” என்று மகேஷ் யோசனையுடன் மொழிய,
“எப்படி என் திறமை? உங்க வீட்லயும் லவ்வுக்கு ஓகே சொல்ல மாட்றாங்கன்னு கேள்விபட்டேன். வேணும்னா சொல்லுங்க நான் வந்து பிரைன்வாஷ் பண்றேன்” என்றதும் சிரித்த மகேஷ்,
“நீ பேசி கன்வின்ஸ் பண்ணதாலதான் அவ மேரேஜ்க்கு ஓகே சொல்லி இருக்கான்னு நீ நினைக்கிறியா?” என்று வினவினான்.
“இல்லையா பின்ன?” என்று பிரவீன் வினா தொடுக்க,
“வாய்ப்பே இல்லை. அவளுக்கு விருப்பம் இல்லாம கன்வின்ஸ் பண்ணி எதையும் செய்யவில்லை வைக்க முடியாது” என்றதும் பிரவீன் விழிகளில் கேள்வியை தேக்கி பார்த்தான்.
“அவளுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இருக்கு. முழுசா இல்லைன்னாலும் கொஞ்சமாவது இருக்கணும். செய்யணும்னு அவ நினைச்சா தான் செய்ய முடியும். வேணாம்னு அவ முடிவு பண்ணிட்ட பின்னாடி யார் என்ன சொன்னாரு கன்வின்ஸ் பண்ணாலும் நோ தான்” என்று அழுத்தம் திருத்தமாக மொழிய,
“அப்போ அக்காக்கு அத்தானை பிடிக்குமா? இந்த கல்யாணத்துல விருப்பமா?” என்று பிரவீன் ஆர்வமாய் வினவ
“நிச்சயமா பிடிக்கும். அவளுக்கு சின்ன வயசுல இருந்தே பார்த்தீபனை பிடிக்கும்” என்க,
“வாவ் சூப்பர் அப்போ அக்கா லைஃப் சீக்கிரம் சரியாகிடும்” என்று ஆர்ப்பரித்தான்.
“கண்டிப்பா சரியாகிடும்” என்று இருவரும் மகிழ்வுடன் பேசியபடி செல்ல,
இங்கு கற்பகம் ப்ரத்யூவிடம்,
“முடிஞ்சிடுச்சாம் அந்த கருமம் பிடிச்ச கல்யாணம்” என்று பொறும,
“என் பேத்தி வாழ்க்கை பறிச்ச அவ நல்லாவே இருக்க மாட்டா விளங்காம போய்டுவா” என்று கோதை சாபமிட்டார்.
“ம்மா அவளை நல்லா வாழவிட கூடாதும்மா. எதாவது பண்ணனும்” என்று ப்ரத்யூவிற்கு பார்த்தீபன் வந்து பேசிவிட்டு போனது நினைவில் வந்தது.
இவர்கள் கனியை தகாத வார்த்தைகளால் திட்டுவதை அலைபேசியில் கேட்டவன் மறுநாள் காலையே அங்கு வந்திருந்தான்.
அவனை கண்டதும் கற்பகம்,
“வா மருமகனே எனக்கு தெரியும். உன்னால இந்த அத்தை கூட பேசாம இருக்க முடியாதுனு. நேத்து நீ பேசுனதை நான் மனசுல வச்சுக்கலை. வா வந்து உட்காரு” என்று கை பிடித்து நீள்விருக்கையில் அமர வைக்க,
கோதை, “போய் பேரனுக்கு குடிக்க எதாவது ஜூஸ் எடுத்துட்டு வா. வெயில்ல களைச்சு போய் வந்து இருக்கான்” என்று அன்பை மொழிந்தார்.
இவன் வந்ததை அறிந்த ப்ரத்யூ,
“அத்தான் நீங்க என்னை தேடி வருவீங்கன்னு எனக்கு தெரியும். நேத்தே ஏதோ தெரியாம பேசிட்டிங்க. இப்போ தான் உங்களுக்கு புரிஞ்சு இருக்கும். அந்த பிச்சைக்காரி வேணாம் நான் தான் வேணும்னு வந்துட்டிங்க தான அத்தான். எனக்கு தெரியும் உங்களுக்கு என்னை தான் பிடிக்கும்னு”
“...”
“ஒன்னுமில்லாத பிச்சைக்காரி. அநாதை நாய் அவளுக்கு உங்களை கட்டிக்க என்ன தகுதி இருக்கு? அவ உங்ககிட்ட நல்லவ வேஷம் போட்டுட்டு இருக்கா. அவளை நம்பாதிங்க” என்று தன் போக்கில் பேச,
இன்னும் எவ்வளவு தூரம் போகிறார்கள் என்று அமைதியாக பார்த்திருந்தான்.
அதையே சம்மதமாக எடுத்தவள்,
“நேத்து நீங்க போய்ட்ட பின்னாடி அவ என்னென்ன பேசுனா தெரியுமா? அம்மாவையும் பாட்டியையும் பார்த்து பாத்தீயா உன் பேரனை வளைச்சு போட்டுட்டேன். இனிமே அவன் என் முந்தானையில தான். வந்த வேலையை கச்சிதமா முடிச்சிட்டேன். இனி அவனை வச்சே உங்க எல்லாரையும் வீட்டைவிட்டு விரட்டிடுவேன்னு சொன்னா. அதுமட்டுமா இனிமே நான் என் மாமா வீட்டுக்கு வர கூடாதாம். வந்தா வாஙல்லயே செருப்பை கழட்டி அடிச்சு துரத்திவிட்ருவாலாம்” என்று கண்ணீர் சிந்தியவள்,
“நான் இனிமே அங்க வர கூடாதா அத்தான்” என்று அப்பாவியாக விழிகளை விரிக்க,
எப்படி இத்தனை தத்ரூபமாக நடித்து கொண்டிருக்கிறாள். இத்தனை நாளும் இதை கண்டு தான் தான் ஏமாந்து போயிருக்கிறோம் என்று அதிர்ச்சியாக பார்த்தான்.
கோதை, “ஆமா பார்த்தீ. என்னை பாத்து வயசால காலத்துல நீயெல்லாம் எதுக்கு உயிரோட இருக்க? உனக்கு சோத்துல விஷம் வைக்கிறேன்னு நாக்குல நரம்பில்லாம பேசுறா டா” அவரும் கண்ணீர் சிந்த,
“இந்தா மருமகனே உனக்கு பிடிச்ச மாதிரி அத்தை ஜூஸ் போட்ருக்கேன்” என்று தேன் குரலில் பேசி அவனிடத்தில் கொடுத்தார்.
பார்த்தீ அமைதியாக வாங்கி கொள்ள,
“அது மட்டுமா அத்தயையும் மாமாவையும் என்ன சொன்னா தெரியுமா?” என்று ப்ரத்யூ வினவ,
“அந்த எடுபட்ட சிறுக்கி என் மகனையும் மருமகளையும் முதியோர் இல்லத்துல சேர்த்துவிட்ருவாலாம். அது மட்டுமா என் பேத்தி நிவிவை ஹாஸ்டல்ல தள்ளிடுவாளாம். இப்படி உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ண நினைக்கிற அவ எல்லாம் நல்லா இருப்பாளா…?” என்று கோதை மொழிய,
“என்ன பார்த்தீ நாங்க இவ்ளோ பேசுறோம். நீ அமைதியாவே இருக்க?” என்று வினவினார்.
“இல்லத்தை இது வேற ஒரு பிரச்சனை. அதான் என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்” என்றதும்,
“என்ன பிரச்சனை மருமகனே சொல்லு சரி பண்ணிடலாம்” என்று வினவ,
“நேத்து நைட் மாமாக்கு ஏதோ த்ரெட் கால் வந்து இருக்கு. கால் பண்ணது யாருன்னு தெரியலை பிஸ்னஸ் எனிமி யாராவது இருக்கலாம். அவன் மிரட்டனதை நினைச்சு தான் யோசிச்சிட்டு இருக்கேன்”என்றான்.
“எவன் என் வீட்டுக்காரர மிரட்னது? என்ன சொல்லி மிரட்டுனானாம்?” என்று கற்பகம் ஆவேசமாக கேட்க
,
“அது…” என்று தொடங்கி நிறுத்தியவன்,
“நம்ம ப்ரத்யூவ கடத்தி நாசம் பண்ணி கடல்ல தூக்கி போட்ருவானாம்” என்றதும்,
“என்ன?” என்று மூவரது முகத்திலும் அதிர்ச்சி இடியாய் இறங்கியது.
அடுத்தவர்களை கூறும் போது புரியாத வார்த்தையின் வீரியம் இப்போது புரியுமோ…?