• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 15

Administrator
Staff member
Messages
516
Reaction score
796
Points
93
ஜென்மம் 15:

இதயம் கிழியும்

ஒலி கேட்டேன்
இதையா இதையா
எதிர்பார்த்தேன்…



கையில் இருந்த சுங்குடி சேலையை மடிப்பு எடுத்து அழகாக குத்திய கனி கண்ணாடியில் தன்னை முறை ஆராய்ந்தாள்.

சற்று திருப்தியாக இருக்கவும் கூந்தலை பின்னலிட்டு நெற்றியில் சிறு பொட்டிட்டு அலங்காரத்தை முடித்துவிட்டாள்.

இன்று தான் பார்த்தீபனது நிறுவனத்தில் கல்வி சேவை சார்ந்த நிகழ்வு நடக்கவுள்ளது. தானும் அதில் முக்கிய பங்கு வகிப்பதால் காலை சற்று விரைவாகவே தயாராகி இருந்தாள்.

நிகழ்வு தொடங்கும் முன்பே சென்று அனைத்தும் தயாராக உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும்.

காலை தேநீரை மட்டும் அருந்தி இருந்தவள் விறுவிறுவென இறங்கி கீழே சென்றாள்.

சிவப்பிரகாசமும் குடும்பத்துடன் அந்நிகழ்விற்கு வரவுள்ளார். கனிக்கு பணி இருப்பதால் சற்று முன்னரே கிளம்புகிறாள்.

“என்ன பாப்பா சீக்கிரம் கிளம்பிட்டியா?”என்றபடி அறையில் இருந்து வர,

“ஆமாப்பா. போய் ஒரு டைம் எல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணணும்” என்க,

“சரிடா பாத்து போ. நாங்க பின்னாடி வர்றோம்” என்றார்.

“சரிங்கப்பா” என்றவள் நகர,

“அக்கா ஆபிஸ் போ உனக்கு அங்க ஒரு சர்ப்ரைஸ் இருக்கு” என்று அறையின் வாயிலில் இருந்து பிரவீன் கத்த,

“என்ன?” என்று கனி திரும்பி பார்க்க,

“ஆபிஸ் போனா தான் தெரியும்” என்று சிரிக்க,

அவன் சிரிப்பே ஒரு மாதிரி இருந்ததால் ஒரு முறை மேலும் கீழும் அவனை‌ப் பார்த்தவள் விறுவிறுவென நடந்து சென்றாள்.

தனது வெஸ்பாவை எடுத்து கொண்டு அலுலகம் நோக்கி நகன்றாள்.

அது காலை நேரம் என்பதால் கூட்டம் சற்று குறைவாக இருந்தது. விரைவாக சென்றுவிட்டாள்.

கனிக்கு முன்பே சிலர் வந்து தங்களது பணியை பார்த்து கொண்டிருக்க புன்னகையை அவர்களுக்கு கொடுத்துவிட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தினை அடைந்தாள்.

ஒவ்வொரு மூலையிலும் பெரிய மேஜை போடப்பட்டு ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனி குழுவாக அமைக்கப்பட்டிருந்தது.

ஆஸ்திரேலியாவில் அவர்கள் கல்வி சேவை வழங்கும் கல்லூரி தொடர்பான படங்களை ஆங்காங்கே ஒட்டி அதனை பற்றிய விளக்கங்களும் கொடுப்பட்டிருந்தது.

தாரிகாவும் வந்துவிட இன்று கொடுக்க வேண்டிய உரைக்கான அனைத்தையும் ஒரு முறை சரிப்பார்த்து கொண்டனர்.

நேரம் ஆக ஆக ஒவ்வொருவராக பணிக்கு வர துவங்கினர். பார்த்தீபனும் வந்துவிட்டிருந்தான்.

இரவு வேலை முடிந்து செல்ல வெகு தாமதமாக ஆகியிருந்ததால் பார்த்தீபன் அனைவரும் வந்த பிறகு வந்தான்.

பார்த்தீபனை கண்டதும் எல்லோரும் எழுந்து நிற்க ஒரு தலையசைப்பு மூலம் அவர்களை அமர செய்தவன் விழிகள் கனியின் மீது படிந்தது.

பச்சை நிறத்தில் காவி நிற கரை வைத்த சுங்குடி சேலையில் கண்ணை பறித்தாள். இன்று அனைத்து பெண்களும் புடவையில் தான் வருகை.

இருந்தும் மனதிற்கு இனியவள் மட்டும் தேவதையாக தெரிந்தாள். இரவு முழுவதும் வேலை செய்த களைப்பெல்லாம் தன்னவளை கண்டதும் ஓடிவிட உள்ளுக்குள் உற்சாகம் பாய்ந்தது.

விழிகளால் ஆராய்ந்தபடி மேற்பார்வை செய்தபடி வந்தவன் சுமித்ராவிடம் சிலவற்றை சரி செய்ய கூறினான்.

சரியாக கனியின் இடத்தருகே வந்ததும் நின்றவன் விழிகளால் அவர்களது வேலையையும் அவளையும் சேர்த்தே ஆராய,

அவள் திரும்பி நின்று மேல ஒட்டபட்டிருந்த போஸ்டரை சரி செய்து கொண்டிருந்தாள்.

பார்த்தீயை கண்டதும் எழுந்து நின்ற தாரிகா,

“கனி சார் வந்திருக்காரு” என்றதும் நின்றவாக்கிலே அவனை திரும்பி விழிகளை உயர்த்தி பார்த்தாள்.

அந்த பார்வையில் பார்த்தீபன் தான் மொத்தமாக தொலைந்து கொண்டிருந்தான்.

சடுதியில் தன்னை மீட்டு கொண்டவன்,

“எல்லாம் ஆல் செட் தான தாரிகா?” என்று வினவ,

“எஸ் சார் எல்லாம் பர்பெக்ட்”

“ஓகே யார் பிரசண்டேஷன் கொடுக்க போறது. நீங்களா? அவங்களா?”

“அவ தான் சார்” என்றதும் அவள் புறம் திரும்பி,

“பிரிபேர்ட் தான மிஸ் கன்னல்மொழி” என்று வினவிட,

“எஸ் சார். வெல் பிரிப்பேர்ட்” என்று இதழ்களை சற்று விரித்தாள்.

இன்னும் சற்று பெரிதயாக சிரித்தால் குறைந்தா போய்விடுவாள் என்று மனதிற்குள் நினைத்தவன் தலையசைப்புடன் நகர்ந்து மற்ற வேலைகளை கவனித்தான்.

“மொழி?” என்ற பழக்கப்பட்ட குரலில் கனி திரும்ப,

“ஹாய்” என்று புன்னகையுடன் நின்றிருந்தான் குகன்.

“ஹாய்” என்றவளது விழிகள் சடுதியில் பார்த்தீபனை தான் தேடியது.

அவனும் இவளை உறுத்து விழித்தபடி தான் எதிரில் நின்று இருந்தான்.

விழிகள், ‘அவனிடத்தில் நீ பேசிவிடுவாயா?’ என்று சவால் விட,

கனியின் இதழ்களில் புன்னகை ஜனித்தது.

அதனை மாற்றாது, “வாட் அ சர்ப்ரைஸ் குகன். ஐ டின்ட் எக்ஸ்பெக்ட் யூ” என்று விழிகளை மலர விட,

பார்த்தீபனுக்கு தாடை இறுகியது.

“பிரவீன் தான் இன்னைக்கு உங்க ஆபிஸ்ல பங்க்ஷன்னு இன்வைட் பண்ணாரு. கிரி சார் கூட இன்வைட் பண்ணாங்க” என்க,

“ஓ… சாரி நான் உங்களை கூப்பிட மறந்திட்டேன்”

“இட்ஸ் ஓகே இதுல என்ன இருக்கு” என்று பெருந்தன்மையாக பதில் மொழிந்தான் குகன்.

“டீ ஆர் காஃபி எதுவும் சாப்பிட்றீங்களா?” என்று வினவ,

“இல்லை இப்போ தான் சாப்பிட்டு வந்தேன்” என்று மறுத்தவன்,

“எதாவது ஹெல்ப் வேணுமா?” என்று வினவ,

“நோ தாங்க்ஸ் ஆல்மோஸ்ட் எல்லாம் ஓவர். நீங்க ஆடியன்ஸா இருந்து பீட்பேக் கொடுத்தா போதும்” என்று புன்னகைத்தாள்.

“கண்டிப்பா கொடுக்குறேன்” என்றவன் மேலும் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு செல்ல,

நிமிர்ந்து பார்த்தீபனது இறுகிய முகத்தை கண்டவளுக்கு ஆத்ம திருப்தி ஏற்பட்டது.

எதுவுமே நடக்காத பாவனையில் பணியை தொடர்ந்தாள்.

இங்கு பார்த்தீபன் தான் விழிகளால் அவளை துவம்சம் செய்து கொண்டிருந்தான்.

உன் பார்வை எல்லாம் என்னை எதுவும் செய்யாது என்று அசட்டை செய்தவள் வேலையில் மும்மரமானாள்.

தாரிகா, “வந்துட்டு போனது யாரு கனி?” என்று வினவ,

“சாரி இன்ட்ரோ கொடுக்க மறந்துட்டேன் பேமிலி ப்ரெண்ட்” என்றாள்.

கனி வேண்டுமென்றே செய்வதை உணர்ந்து பல்லை கடித்தவன் விழா முடிந்து அவளை பார்த்து கொள்ளலாம் என்று பணியை கவனித்தான்.

சிறிது நேரத்தில் சிவா மற்றும் கிரிதரனும் குடும்பத்துடன் வந்தனர்.

அவர்களுக்கென தனி இருக்கை ஒதுக்கப்பட்டிருக்க அதில் அமர்ந்து கொண்டனர்.

பிரவீன் வந்தவுடனே கனியிடம் வந்து, “அக்கா எப்படி நம்ம சர்ப்ரைஸ்” என்று கண்ணடிக்க,

“ரொம்ப நல்லா இருந்துச்சு” என்று தானும் புன்னகைத்தாள்.

காரணம் பார்த்தீபனை கோபப்படுத்தியாயிற்றே.

அன்று அவன் பேசிவிட்டு சென்றதில் இருந்து இன்றுவரை அவனை கனி கண்டுகொள்ளவே இல்லை.

பார்த்தீபனின் வேலையில் கொஞ்சம் கவனமாக இருந்ததால் கனியிடத்தில் பேச்சு வைத்து கொள்ளவில்லை.

சிவப்பிரகாசமும் வந்து கனியிடத்தில் பேசி செல்ல எல்லோர் பார்வையும் கனியிடத்தில் வித்யாசமாக விழுந்தது.

தாரிகா கூட, “கனி எம்.டி பேமிலி உனக்கு நல்லா தெரிஞ்சவங்களா?” என்று வினவிட,

இவள் பதில் மொழிய திணறி வேறு வழியின்றி, ‘ஆமாம்’ என்று தவையசைத்து வைத்தாள்.

சிறிது நேரத்திலே கனி பார்த்தீபனது குடும்பத்திற்கு மிகவும் வேண்டப்பட்டவள் என்ற செய்தி அங்கே பரவியிருந்தது.

அதனை கனி கண்டுகொள்ளவில்லை.

பிரவீன் சென்று குகன் அருகில் அமர்ந்து அவனிடத்தில் பேச்சு கொடுக்க துவங்கி இருந்தான்.

சற்று நேரத்தில் அரங்கமே மக்களால் நிறைந்து வழிந்தது.

வர வேண்டிய அனைவரும் வந்ததும் நிகழ்வு துவங்கியது.

பார்த்தீபன் தான் முதலில் துவங்கி வைத்தான்.

முழு வெள்ளை நிறத்தில் சட்டையும் கருப்பு நிற பேண்ட்டும் அணிந்து இருந்தவன் தனது ஆளுமையான பேச்சினால் அரங்கில் இருந்தவர்களை கட்டு போட்டிருந்தான்.

கனியும் தன்னை மறந்து ஒரு கணம் அவனை பார்த்திருந்தாள். அவனது ஆளுமை கம்பீரம் நிச்சயமாக யாரையும் ரசிக்க வைக்கும்.

அடுத்தடுத்து ஒவ்வொரு குழுவாக வந்து விவரிக்க துவங்கியது.

கனியினது குழுவின் முறையும் வந்தது.

கனியும் மேடை ஏறி தெளிவான உச்சரிப்புடன் நிதானமாக விளக்கி கூறினாள்.

பார்வையாளர்களிடையே எழுந்த சந்தேகங்களையும் அழகாக விளக்கினாள்.

பார்த்தீபனுக்கு அவளது திறமை தெரிந்திருந்தாலும் புருவத்தை உயர்த்தி வியப்புடன் அவளது தன்னம்பிக்கையை பார்த்திருந்தான்.

எதேச்சையாக திரும்பியவன் விழிகளில் அந்த காட்சி விழுந்தது.

குகன் சிரிப்புடன் கனி விளக்குவதை காணொளியாக பதிவு செய்து கொண்டிருந்தான்.

சட்டென்று முகத்தில் இறுக்கம் படர இதற்கு இன்றே முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணி கொண்டான்.

விழா மிகவும் சிறப்பாக நடந்தது. மாணவர்கள் ஆர்வமாக தனது சந்தேகங்களை தீர்த்து கொண்டனர்.

முன்னாள் மாணவர்களும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

பார்த்தீபன் எதிர்ப்பார்த்ததை விட வரவேற்பு நன்றாக இருந்தது‌. நிறைய பெற்றோர்கள் அப்போதே கல்லூரியில் சேர்க்க ஆர்வம் காண்பித்தனர்‌.

ஒவ்வொரு குழுவில் உள்ளவர்களும் அவர்களுக்கு உதவி செய்தனர்.

மாலை நேரம் நிகழ்வு முடிவடைந்தது. ஒவ்வொருவராக கலைந்து செல்ல துவங்கினர்.

சிவப்பிரகாசம் மற்றும் கிரியும் பாராட்டிவிட்டு குடும்பத்தினருடன் கிளம்பினர்.

குகன் கூட கனியிடம் கூறிவிட்டு கிளம்பி இருந்தான்.

ஓரளவு அனைவரும் சென்றிருக்க பணி புரிபவர்கள் மட்டும் இருந்தனர்.

பார்த்தீபன் அனைவரையும் அழைத்து பாராட்ட முடிவு செய்து சுமித்ராவிடம் பேசி கொண்டு இருந்தான்.

கனியும் நிகழ்வு நல்ல படியாக முடிவடைந்ததில் மகிழ்ச்சியுடன் தாரிகாவுடன் பேசியபடி இருக்க,

“கன்னல் மொழி” என்று வந்து நின்றாள் ஸ்வேதா.

“சொல்லுங்க ஸ்வேதா” என்று கனி மொழிய,

“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் வர்றீங்களா?” என்று வினவிட,

‘இவங்க என்ன பேச போறாங்க?’ என்று நினைத்தவள் தாரிகாவிடம் கூறிவிட்டு எழுந்து ஓரமாக சென்றாள்.

“கன்னல் மொழி சார் பேமிலி உங்களுக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்களா?” என்றிட,

இந்த பேச்சு எளிதில் முடியாது என்று எண்ணியவள் மையமாக தலையசைத்து வைத்தாள்.

“நான் முன்னாடியே நினைச்சேன்” என்றவள்,

“எனக்கு ஒரு ஹெல்ப் பண்றீங்களா?” என்று வினா தொடுக்க,

“சொல்லுங்க” என்றவளுக்கு அபாய மணி உள்ளுக்குள் அடித்தது.

“மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதிங்க” என்றவள்,

“எனக்கு சாரை ரொம்ப பிடிக்கும். ஐ மீன் ஐ லவ் ஹிம். நான் காலேஜ்ல அவருக்கு ஜூனியர். என் அப்பா ஓன் பிஸ்னஸ் ரன் பண்றார்.‌ அதை விட்டுட்டு அவருக்காக தான் இங்க ஜாயின்ட் பண்ணேன்‌. நான் இன்னைக்கு அவருக்கு ப்ரபோஸ் பண்ணலாம்னு இருக்கேன்.‌ எனக்கு நீங்க தான் ஹெல்ப் பண்ணனும்” என்றதும்,

“என்ன?” என்று அதிர்ந்து விழித்தாள் கனி. தான் முதல் நாள் நினைத்தது சரி என்றாகி விட்டதா?

“ப்ளீஸ் ப்ளீஸ் முடியாதுனு சொல்லிடாதீங்க” என்று அவளது கையை இறுக்கி கொள்ள,

“இல்லை” என்று மறுக்க வந்தவளுக்கு சடுதியில் என்ன தோன்றியதோ,

‘எனக்கா அலையன்ஸ் பாக்குற நான் உனக்கு பொண்ணு பார்த்து தர்றேன்’ என்று நினைத்து,

“ஓகே பண்றேன் ஸ்வேதா. உங்களை பாத்தாலும் ரொம்ப நாள் லவ் பண்ற மாதிரி தான் இருக்கு” என்றாள்.

“தாங்க் யூ. தாங்க் யூ சோ மச் கன்னல் மொழி. யெஸ் த்ரீ இயர்ஸா லவ் பண்றேன்” என்றாள்.

“ஓகே உங்களுக்காக கண்டிப்பா பேசுறேன்” என்றவள்,

“உங்க டீடெயில்ஸ் சொல்லுங்க” என்று கேட்டு கொண்டாள்.

பிறகு, “இன்னைக்கே பேசலாமா?” என்று வினவ,

“ஹ்ம்ம் கண்டிப்பா” என்றாள்.

“ஓகே எல்லாரும் கிளம்புனதும் பேசலாம்” என்றாள்.

பார்த்தீபன் சிறிது நேரத்தில் அனைவரையும் அழைத்து பாராட்டி ஒரு மாத சம்பளத்தை பரிசாக கொடுத்திருக்க, எல்லோரும் மகிழ்வுடன் கிளம்பினர்.

எல்லோரும் கிளம்பியதும் சுமித்ராவை கிளம்ப கூறிவிட்டு பார்த்தீபன் கிளம்ப ஆயத்தமாக,

“எக்ஸ் க்யூஸ் மீ சார்” என்ற கனியின் குரல் செவியில் மோதியது.

அப்போது தான் கனியிடம் பேச நினைத்திருந்தது நினைவு வர,

“எஸ் கம்மின்” என்று அனுமதி வழங்கினான்‌.

அவள் மட்டும் உள்ளே வருவாள் என்று எண்ணியிருக்க உடன் ஸ்வேதாவும் வந்தாள்.

‘இருவரும் எதற்கு வந்துள்ளனர்?’ என்று புருவம் சுருக்கியவன்,

“உட்காருங்க” என்று மொழிந்தான்.

நன்றி கூறி அமர்ந்ததும் கனி,

“சார் உங்ககிட்ட ஒரு இம்ப்பார்ட்டன்ட் விஷயம் பேசணும்” என்க,

சிந்தனையுடன்,

“சொல்லுங்க என்ன விஷயம்?” என்று வினவினான்.

“இது வொர்க் ரிலேட்டட் இல்லை.‌ கொஞ்சம் பர்சனல்” என்றவள்,

“இவங்க ஸ்வேதா உங்களுக்கே தெரியும் நம்ம கம்பெனில ஹெச்.ஆரா வொர்க் பண்றாங்க. இவங்களுக்கு உங்களை ரொம்ப பிடிக்குமாம். காலேஜ் டேஸ்ல இருந்து உங்களை பாலோ பண்றாங்க. உங்களுக்காக தான் இந்த ஆபிஸ் வந்து இருக்காங்க. இவங்க அப்பா கூட ஓன் பிஸ்னஸ் ரன் பண்றாங்க. ஒரே ஒரு தம்பி தான். உங்க ஸ்டேட்டஸ்க்கு ஈக்வலா இருக்காங்க”.

“...”

“அண்ட் குட் லுக்கிங் ஆல்சோ. உங்ககிட்ட பேச பயமா இருக்குனு என்கிட்ட ஹெல்ப் கேட்டாங்க அதான் அழைச்சிட்டு வந்தேன். ஷீ இஸ் அ குட் சாய்ஸ். கன்சிடர் பண்ணுங்க” என்று முடித்துவிட,

இவ்வளவு தானா? இன்னும் உள்ளதா? என்ற தொனியில் கைகளை கட்டி கொண்டு உறுத்து விழித்தான் பார்த்தீபன்.

இந்த பார்வைக்கெல்லாம் அசருபவள் நான் அல்ல எனும் விதமாக அவனை நேருக்கு நேர் கண்டவள்,

“நீங்க என்னோட லைஃப்காக யோசிச்ச மாதிரி நானும் நீங்க நல்லா இருக்கணும்னு ஆசைப்பட்டு தான் இதை செஞ்சேன் சார்” என்று புன்னகையுடன் மொழிந்தவள் ஸ்வேதாவிடம்,

“நான் பேச வேண்டியதை பேசிட்டேன் ஸ்வேதா. இனிமே நீங்களே முடிவை கேட்டுக்கோங்க. நான் எதுக்கு டிஸ்டபன்ஸா” என்றவள் விடை பெற்று வெளியே வந்தாள்.

வந்தவளது முகம் முழுவதும் சிரிப்பு வீற்றிருந்தது‌.

‘யாருன்னு நினைச்ச இந்த கனியை?’ என்று மனதிற்குள் நினைத்தவள் சிரிப்புடன் வீட்டிற்கு சென்றாள்.

அங்கு பார்த்தீபனது குடும்பமும் ஹாலில் குழுமியிருக்க எதற்கு வம்பு என்று எண்ணி அமைதியாக அறைக்குள் நுழைந்துவிட்டாள்‌.

அடுத்த சில நிமிடங்களில் பார்த்தீபன் அங்கே பிரவேசித்தான்.

கற்பகம் அவனை வரவேற்று உபசரிக்க பேச்சுக்கள் தொடர்ந்தது.

அப்போது தான் கிரி,“பார்த்தீ அத்தை உனக்கும் ப்ரத்யூவுக்கும் கல்யாணம் பண்ணலாம்னு சொல்றா. ப்ரத்யூவும் காலேஜ் முடிச்சிட்டா. உனக்கும் கல்யாண வயசு வந்திடுச்சு” என்று மொழிய,

“இப்போ என்னப்பா அவசரம்?” என்று பார்த்தீ வினவ,

“அவசரம்லாம் இல்லை மருமகனே.‌ உங்க சின்ன வயசுல பேசுனது தானே? ப்ரத்யூ காலேஜ் முடிக்க தான் வெயிட் பண்ணோம்” என்று கற்பகம் மொழிய,

கோதை, “ஆமப்பா. நான் சாகுறதுக்குள்ள என் பேரன் பிள்ளைங்க கல்யாணத்தை கண்குளிர பார்க்கணும்” என்று கோதையும் கூற,

நிவி வேறு, “ஆமண்ணா ஒத்துக்கோ. என் ஃப்ரெண்ட்ஸ் அக்கா அண்ணா எல்லாரும் கல்யாணம் பண்றாங்க. எனக்கும் உன் மேரஜை பார்க்க ஆசையா இருக்கு” என்றாள்.

கஸ்தூரி, “பார்த்தீ கண்ணா சம்மதம் சொல்லுடா உன் சம்மதத்துக்காக தான் காத்திருக்கோம்.‌ நீ ஓகேன்னு ஒரு வார்த்தை சொல்லு டக்குனு வேலையை ஸ்டார்ட் பண்ணிடுவோம்” என்க,

ப்ரத்யூ எதிர்ப்பார்ப்புடன் பார்த்தீபனது முகத்தை நோக்கி இருந்தாள்.

ஆக மொத்தத்தில் எல்லோரும் தன்னை திருமணத்திற்கு சம்மதம் கூற வைப்பதில் ஏகமாய் முனைப்புடன் உள்ளனர் என்பதை உணர்ந்தவன் ஒரு கணம் யோசித்த பின்னர் நிமிர்ந்து அமர்ந்து,

“ஓகேப்பா நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்க,

அங்கே எல்லோரிடத்திலும் மகிழ்ச்சி அலை பரவியது.

“எனக்கு தெரியும் மருமகனே உனக்கு பிரத்யூவ எவ்ளோ பிடிக்கும்னு அதான் அண்ணன்கிட்ட பேசுனேன்” என்று மகிழ்ச்சியாக கூற,

“வாவ் அண்ணா என் பெஸ்ட் ப்ரெண்ட் எனக்கு அண்ணியா வர போறா. சூப்பர்” என்று குதிக்க,

ப்ரத்யூ நாணத்துடன் தலையை குனிந்து கொண்டாள்.

“மாமா” என்று சிவப்பிரகாசத்தை அழைத்தவனது குரலில் எல்லோருக்கும் அவன் புறம் திரும்ப,

“நான் கல்
யாணம் பண்ணிக்கிறேன்னு தான் சொன்னேன். அது ப்ரத்யூவ இல்லை அதோ இறங்கி வராளே உங்க மூத்த பொண்ணு கன்னல் மொழிய” என்க,

குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்க தயாராகி கீழே படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்த கனி இவனது வார்த்தையை கேட்டு,

“என்ன?” என்று அதிர்ந்து கைப்பிடியை பிடித்தாள்.

பார்த்தீ சலனமற்று அவளை தான் நோக்கி இருந்தான்.







 
Well-known member
Messages
368
Reaction score
255
Points
63
Mozhi ne yum parthi yum unga kobathku vilayada vandhu matturaga paru kugan swetha nu .
Dharani ketkum pothu fiance nu solla vendiyathu than ah parthi ah tease panna avan kita nalla pesurathu ippo swetha ah va avan kita intro panrathu nu iva panna ella gallatta kum serthu avan motham ah potu odachitan nalla kuduthan shock
 
Top