• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 14

Administrator
Staff member
Messages
516
Reaction score
796
Points
93
ஜென்மம் 14:

எத்தனை நிலவை

உனக்காக
வெறுத்திருந்தேன்
உயிர் சுமந்து
பொறுத்திருந்தேன்
உனை கண்டு

உயிர்த்தெழுந்தேன்…

“அக்கா, போட்டோ பாத்தியா? உனக்கு பிடிச்சு இருக்கா?” என்று காலையில் எழுந்தவுடனேயே பிரவீன் வந்து நிற்க,

இவளுக்கு சிரிப்பு தான் வந்தது. இவனுக்கு ஏன் தன்னுடைய திருமணத்தில் இவ்வளவு நாட்டம் என்று அவளுக்கு தெரியவில்லை.

“என்னக்கா சிரிக்கிற அப்போ மாப்ள ஓகே வா?” என்று அதற்கும் ஒரு அர்த்தம் கற்பிக்க,

“டேய் உனக்கு காலையிலயே வேற வேலை இல்லையா?” என்று முறைப்புடன் வினவ,

“இதை விட பெரிய வேலை என்ன இருக்க போகுது?. நீ ஓகே அப்படின்னு சொன்னதும் மண்டபம் பாக்குறது கேட்டரிங் புக் பண்றதுனு ஆரம்பிச்சிட வேண்டியது தான்” என்று சிரிப்புடன் கூறினான்.

“சரிதான் போ போய் ஆபிஸ் கிளம்புற வழிய பாரு. டைம் ஆகிடும்” என்று விரட்ட,

“ஆபிஸ் எங்க போய்ட போகுது. நீ சொல்லு போட்டோ பாத்தீயா இல்லையா?” என்று தனது பிடியிலே நிற்க,

“ப்ச் பாக்கலைடா” என்று மொழிய,

“ஏன் ஏன் பாக்கலை?” என்றவன் கேள்வி எழுப்ப,

“போட்டோல பாக்க பெருசா இன்ட்ரெஸ்ட் இல்லை. நேர்ல பாத்துக்கிறேன். நேர்ல பாத்து பேசுனா தான் கரெக்டா இருக்கும்” என்று மொழிந்தாள்.

“அதுவும் சரிதான். போட்டோல பாத்து பிடிக்காம போய்டுச்சுனா. நேர்ல பேச பிடிக்காது. நீ நேர்லயே பாத்து பேசிட்டு வா” என்க,

கனி அமைதியாக தலையை அசைத்தவள்,

“சரி போ போய் ஆஃபிஸ் கிளம்பு” என்க,

“ஹ்ம்ம் போறேன் கா. ஈவ்னிங் பேசுனதும் பர்ஸ்ட் உன் முடிவை எனக்கு தான் கால் பண்ணி சொல்லணும்” என்றுவிட்டு நகர,

“சரி” என்றவள் பாதியில் விட்ட சமையல் வேலையை தொடர்ந்தாள்.

மனதினில் இன்று குகனை எப்படி சந்திக்க போகிறோம் என்று தான் மூளைக்குள் ஓடி கொண்டிருந்தது.

இரவெல்லாம் சிந்தித்து மனதை தேற்றி கடவுள் கொடுக்கும் வாழ்க்கையை ஏற்று கொண்டு நிம்மதியாக வாழ வேண்டும் என்று தான் முடிவு எடுத்திருந்தாள்.

ஆனால் உள்ளே ஒன்று உறுத்தியது.‌ என்னவோ மனதிற்கு சுத்தமாக ஒவ்வாத ஒரு காரியத்தை செய்ய துனிவது போல.

அவன் உனக்கு வேண்டாம். நெருங்கி வந்து மயக்க பார்க்கிறாயா? என்று கேட்டவனிடத்தில் உன் மனது மீண்டும் சென்று நிற்கிறதா என்ன?

உன்னுடைய தன்மானம் எங்கே சென்றது என்று தட்டி அதனை அடக்கி வைத்தாள்.

இருந்தும் ஏதோ ஒரு புள்ளியில் மனது மீண்டும் மீண்டும் இறுகுவது போல தான் உணர்ந்தாள்.

சிந்தனையுடனே சமைத்து முடித்தவள் குளித்து முடித்து வெளியே வர,

“பாப்பா இன்னைக்கு சேரி கட்டிட்டு போறீயா?”என்ற வினாவுடன் சிவப்பிரகாசம் வர,

“நானும் அதான் சொல்ல நினைச்சு வந்தேன். அதுக்குள்ள நீங்க வந்துட்டிங்கப்பா” என்றபடி பிரவீனும் வந்தான்.

தம்பியை ஒரு முறை கண்டுவிட்டு,

“ப்பா எதுக்கு இந்த பார்மாலிட்டீஸ் எல்லாம்” என்று வினவ,

“இது பார்மாலிட்டி எல்லாம் இல்லை. அன்னைக்கு பங்க்ஷன்ல சாரில ரொம்ப அழகா இருந்த பாப்பா அதான் இன்னைக்கு என் பொண்ணை சாரில பாக்கலாம்னு கட்ட சொன்னேன்”

“ஆமாக்கா. சுடிதார்ல ரொம்ப சின்ன பொண்ணா தெரியிற. சாரில தான் கொஞ்சம் கல்யாண வயசுல இருக்க மாதிரி இருக்க” என்று பிரவீனும் கூற,

தான் புடவை அணிந்து கொள்கிறேன் என்று கூறும் வரை இவர்கள் விட மாட்டார்கள் என்று கனிக்கு புரிந்துவிட மௌனமாக தலையசைத்தாள்.

“அக்கா உன் பர்த்டேக்கு லாஸ்ட் நான் பிரசன்ட் பண்ண அந்த ஆலிவ் க்ரீன் சாரிய கட்டுக்கா. அது உனக்கு நல்லா இருக்கும்” என்று வேறு பிரவீன் கூற,

இன்று ஏன் இவன் தன்னை இவ்வளவு படுத்துக்கிறான் என்று தோன்ற,

“சரி அதையே கட்டுறேன்” என்றவள்,

“எனக்கு ஆஃபிஸ்க்கு டைம் ஆகிடுச்சு” என்க,

“சரிம்மா நீ போய் ரெடியாகு” என்ற சிவா பிரவீனுடன் கிளம்ப,

“உஃப்” என்று பெருமூச்சை வெளியிடப்பட்டவள்,

அலமாரியில் இருந்து அந்த பச்சை நிற புடவையை எடுத்து உடுத்த துவங்கினாள்.

அலுவலகத்திற்கு செல்வதால் எப்போதும் போல ஒற்றையாக விடாமல் மடிப்பு எடுத்து குத்தி கொண்டவள் கூந்தலை ஒரு க்ளிப்பில் அடக்கினாள்.

எப்போதும் அணியும் காதணி கழுத்தணி தான் இருந்தும் சற்று அதிகமாக தோன்றியது.

வேறு வழியில்லை என்று எண்ணி கொண்டவள் பெருமூச்சுடன் காலை உணவை முடித்து கொண்டு அலுவலகத்திற்கு புறப்பட்டாள்.

கற்பகம் மூலம் விடயம் அறிந்திருந்த ப்ரத்யூவிற்கு சந்தோஷம் தாளவில்லை.

அதுவும் நடுத்தர குடும்பத்து மாப்பிள்ளை என்றதும் அவளது தகுதிக்கு இதுவே அதிகம் என்று எண்ணி கொண்டு மகிழ்ச்சியாக சுற்றினாள்.

அவளுக்கு இந்த சம்பந்தம் அமைந்துவிட்டால் தனக்கும் பார்த்தீ அத்தானுக்கும் இடையில் யாரும் வர முடியாது.

அதுவுமின்றி இவளும் தனது வீட்டை விட்டு சென்றுவிடுவாள் என்று பலவிதமான கற்பனை பெருக்கெடுத்தது.

சேலை உடுத்தி கொண்டு கனி செல்வதை கண்டவள் இவளும் கல்யாணத்துக்கு ரெடியாகிட்டா போல என்று நினைத்து கொண்டாள்.

கனி தனது இரு சக்கர வாகனத்தில் அலுவலகத்திற்கு புறப்பட அது பாதி வழியிலே இயங்காமல் நின்றுவிட்டது.

‘என்னடா இது காலையில இருந்து ஒரே ரோதனை’ என்று சலித்தவள் நேரமாகிவிட்டதை உணர்ந்து ஒரு மூன்று சக்கர வாகனத்தினை பிடித்து அலுவலகத்தை அடைந்தாள்.

இருக்கைக்கு சென்று அமர்ந்ததும் அவளது குழுவில் உள்ள பூர்வீகா,

“வாவ் கன்னல் மொழி என்ன இன்னைக்கு சாரி? பர்த்டேவா?” என்று சிரிப்புடன் வினவ,

“இல்லை சும்மா தான் கட்டுனேன்” என்று தானும் புன்னகையுடன் பதில் அளித்தாள்.

“ஓ… சரி இன்னைக்கு ஈவன்டோட பைனல் ரிப்போர்ட் சப்மிட் பண்ணனும். தாரிகா ரிமைண்ட் பண்ண சொல்லி இருக்கா” என்க,

“ஹ்ம்ம் நியாபகம் இருக்கு” என்று தலையசைத்தவள் தனது மடிக்கணினியை உயிர்பித்து வேலையை துவங்கினாள்.

இதற்குள் ஒவ்வொருவராக வர துவங்க எல்லோரும் சொல்லி வைத்தது போல பூர்வீகா கேட்ட கேள்வியையே கேட்க,

பதில் கூறுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

‘எல்லாம் இந்த அப்பாவையும் பிரவீனையும் சொல்லணும்’ என்று மனதிற்குள் புலம்பியவள் நேற்ற ஓரளவு தொகுத்து வைத்திருந்த விபரங்களை சரி பார்க்க துவங்கினாள்.

இங்கு வந்த சில மாதங்களில் வேலையை நன்கு கற்று தேர்த்திருந்தாள் கனி.

பார்த்தீபனது நிறுவனத்தில் வருடா வருடம் வேலை வாய்ப்பு மற்றும் வெளிநாட்டு கல்வி சேவை தொடர்பான நிகழ்ச்சி ஒன்று நடைபெறும்.

அதில் வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களும் வேலை செய்ய விருப்பம் உள்ளவர்களும் கலந்து கொண்டு தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வார்கள்.

இதில் சில வெளிநாட்டு கல்லூரிகளை சேர்ந்தவர்களும் வந்து தங்களது கல்லூரியை பற்றி விவரிப்பார்கள்.

பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிந்துவிட்டிருந்தபடியால் அடுத்து கல்லூரியை எல்லோரும் தேட துவங்கிவிடுவர்.

அதனால் தான் இந்த சமயத்தில் இந்நிகழ்வு நடைபெறும்.

வெளியூரில் இருந்து கூட பெற்றோர்களும் பிள்ளைகளும் வந்து கலந்து கொள்வார்கள்.

அதற்காக தான் இப்போது பார்த்தீபனது நிறுவனத்தில் வேலை தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.

ஆஸ்திரேலியா நாட்டு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான நிகழ்வுகளை சரிபார்த்து தொகுத்து வழங்கும் வேலை இவர்களது குழுவில் தாரிகா மற்றும் கனியிடம் ஒப்படைக்கபட்டிருந்தது

தாரிகா இங்கேயே இரண்டு வருடம் பணிபுரிந்த அனுபவம் இருப்பதால் அவளும் கனி புதிதாகக் கற்று கொள்ள வேண்டும் என்று இருவரையும் நியமித்து இருந்தனர்.

இன்று தாரிகாவிற்கு உடல்நல குறைவு என்பதால் கனிதான் தங்கள் இதுவரை செய்திருந்த அனைத்து வேலைகளையும் தொகுத்து பார்த்தீபனிடத்தில் விவரிக்க வேண்டும்.

ஒரு மணி நேரத்தில் ஒரு வழியாக அனைத்தையும் தொகுத்து ஒரு பிபிடி பிரசன்டேஷனாக தயாரித்தவள் ஒரு முறை இறுதியாக சரி பார்த்து கொண்டாள்.

ஜெர்மனி நாட்டு கல்வி சேவை குழு பார்த்தீபனிடத்தில் விவரித்து கொண்டிருக்க அடுத்த கனி தான் என்று சுமித்ரா கூறியிருக்க ஒருவித படபடப்புடன் அமர்ந்து இருந்தாள்.

மேலே கலந்தாய்வு நடக்கும் அறையில் தான் இப்போது கனி செல்ல வேண்டும்.

பத்து நிமிடத்தில் கனிக்கு அழைப்பு வர எழுந்து கொண்டவள் தனது மடிக்கணினியை எடுத்து கொண்டு மின்தூக்கி மூலம் மேல் உள்ள அறையை அடைந்தாள்.

‘ப்ச் இந்த சேலை வேற அன்கம்பர்டபுளா இருக்கு’ என்று மனதில் புலம்பியவள்,

“மே ஐ கம் இன் சார்” என்று அனுமதி வேண்ட,

“எஸ் கம் இன்” என்று அழுத்தமான குரல் செவியில் மோதியது.

சேலையை ஒருவராக சரி செய்து கொண்டவள் கையில் மடிக்கணினியுடன் நுழைந்தாள்.

அவளை புடவையில் எதிர்பார்த்திடாத பார்த்தீபன் ஒரு முறை புருவத்தை ஏற்றி இறக்கினான்.

அதனை கவனிக்காத கனி மடிக்கணினியை முன்புறம் வைத்துவிட்டு,

“ஷால் ஐ எக்ஸ்பிளைன் சார்?” என்று வினவ,

“வேர் இஸ் யுவர் டீம்மேட்?” என்று வினவினான்.

“ஷீ இஸ் இன் லீவ் சார்” என்று பதில் அளித்தவளுக்கு இவன் தானே நேற்று விடுமுறை கொடுத்தது இப்போது வந்து இப்படி கேட்கிறானே என்று எண்ணி கொண்டாள்.

முகத்தில் எதையும் காண்பிக்கவில்லை.

“எக்ஸ்பிளைன் பண்ணுங்க” என்றுவிட,

தனது மடிக்கணினியை புரொஜெக்டரில் இணைத்தவள் தங்களது யோசனைகளை கூற துவங்கினாள்.

அதில் எப்படி மாணவர்களது சந்தேகங்களை எளிதில் தீர்த்து வைப்பது கல்லூரி மற்றும் படிப்பை பற்றிய விபரங்களை பெற்றோர்களுக்கு புரியும் வகையில் எவ்வாறு விளக்குவது என்று ஒவ்வொன்றாக கூற துவங்க,

பார்த்தீபனது கவனம் முழுவதும் கனியின் மீது தான்.‌ அவனது உடைக்கு பொருத்தமான பச்சை நிறத்தில் சேலை உடுத்தி இருந்தவளை விட்டு விழிகளை அகற்ற முடியவில்லை.

அதுவும் அவள் பேசும் போது அங்குமிங்கும் நடனமாடும் விரல்களும் விழிகளும் அவனுக்குள் ஏதோ செய்தது.

நெற்றியில் இட்டு இருந்த சிறிய பொட்டு முதல் கழுத்தில் இருந்த கழுத்தணி வரை விழிகள் ஆராய்ந்தது.

காற்றில் அசைந்தாடும் கூந்தல் அவனது பார்வை உணர்ந்தாலும் அது தன்னை பாதிக்கவில்லை என்ற பாவனையில் அவளிடம் தெரியும் அந்த தைரியம் மிடுக்கு. இவற்றிற்கு மேல் அவளது புத்தி கூர்மை எல்லாம் சேர்ந்து அவனை என்னவோ செய்து கொண்டிருந்தது.

பார்வையில் ரசனை கூடி கொண்டே செல்ல,

‘என்னடா பண்ணிட்டு இருக்க பார்த்தீபா. அவளுக்கு மட்டும் இது தெரிஞ்சது உன்னை கண்ணாலே எரிச்சிடுவா’ என்று தன்னை தானே அதட்டியவன் இதழ்களில் மென் கீற்றாய் ஒரு புன்னகை.

அந்த புன்னகை நிச்சயமாய் கனியை தடுமாற வைக்கும் சக்தி வாய்ந்ததாக இருந்தது. இருந்தும் காலையில் இருந்து தனக்குள் உருப்போட்ட விடயத்தால் அழுத்தமாக நின்று இருந்தாள்.

ரசிக்கும் வேலை ஒரு புறம் இருந்தாலும் அவள் கூறுவதையும் கவனித்து இருந்தவன் ஒரு சில கேள்விகளை தொடுக்க,

அதற்கு தகுந்த தெளிவான பதிலை கூறினாள்.

அவர்களது யோசனை நன்றாக இருந்தாலும் சில திருத்தங்களை கூறியவன்,

“இந்த நோட் பேட்ல நான் சொல்ற கரெக்ஷன்ஸ் நோட் பண்ணுங்க” என்க,

அவனெதிரே வந்து அமர்ந்தவள் பேனாவை எடுத்து எழுத துவங்க,

அவளை அருகில் ரசித்தபடியே சிறு சிறு தவறுகளை சுட்டி காண்பித்தான்.

“இந்த அலுமினி ஐடியா யாரோடது?” என்று வினவினான்.

கனி தான் இவர்களது நிறுவனத்தின் மூலம் கல்லூரி சேர்ந்து படித்து இப்போது நல்ல வேலையில் இருப்பவர்கள் நேரில் வந்து பேசினால் நல்ல பலன் கிடைக்கும் என்று இதனை சேர்த்திருந்தாள்.

ஒரு வேளை இவனுக்கு இது பிடிக்கலையோ எதாவது கூறிவிடுவானோ? என்று எண்ணியபடி

“நான் தான் சார் ஆட் பண்ணேன்” என்று கூற,

“ரியல்லி?” என்றவன்,

“இட் வாஸ் அ குட் ஐடியா?” என்றிட,

இவளது முகம் ஒரு கணம் மலர்ந்து பின்னர் இயல்பானது.

இருக்காதா பின்னே ஒழுங்காக வேலை செய்ய வேண்டும் உறவுகளுக்கு இங்கே இடமில்லை என்று திட்டியவனிடத்திலே பாராட்டினை வாங்கினால் மனம் மகிழத்தானே செய்யும்.

பார்த்தீபன் தான் அந்த மலர்ந்த விழிகளில் ஒரு கணம் விழுந்து எழுந்திருந்தான்.

இத்தனை நாள் இந்த சிரிப்பை எங்கு வைத்திருந்தாள் என்று தான் தோன்றியது.

கூடவே அவளது மகிழ்விற்கான காரணமாக ஏதோ ஒன்றை யூகித்தவனுக்கு உள்ளே ஒன்று இறுகிட, முகத்திலும் இறுக்கம் ஜனித்தது.

“ஓகே லீவ் திஸ் ப்ளேஸ்” என்று சடுதியில் கூறிவிட,

கனி பட்டென்று மாறிய அவனது மனநிலையை கண்டு உள்ளுக்குள் அதிர்ந்தவள்,

“ஓகே சார்” என்றுவிட்டு தனது மடிக்கணினியை எடுத்து கொண்டு வெளியேறினாள்.

போகிறவளையே கண்ட பார்த்தீபனுக்கு தந்தை காலையில் கூறியது நினைவில் வந்தது‌.

“பார்த்தீ நம்ம ஆபிஸ்ல வொர்க் பண்ற குகன் தெரியும்ல?” என்று வினவ,

“தெரியும் சொல்லுங்கப்பா” என்றான்.

“அவனை நம்ம கனிக்கு பாத்து இருக்கோம். விசாரிச்ச வரை ரொம்ப நல்ல பையனா தெரியிறான்” என்றதும்,

பார்த்தீபனிடத்தில் பெரிய அதிர்ச்சி. நொடியில் பாவனையை மாற்றியவன்,

“ஓ… என்ன திடீர்னு?” என்று வினா எழுப்ப,

“திடீர்னு இல்லைப்பா. சிவா சொல்லி த்ரீ மந்த் மேல ஆச்சு. நம்ம ஸ்டேட்ஸ்ல பாக்க சொல்லியிருந்தா ஈஸியா பாத்து இருக்கலாம். நிறைய பசங்க இருக்காங்க. பட் அந்த பொண்ணு கண்டிப்பா மிடில் கிளாஸ் பையன் தான் வேணும்.‌ அதுவும் பெருசா சொத்து இருக்க கூடாது. ஓன் ஹவுஸ் தென் குட் சாலரி இருந்தா போதும்னு சொல்லி இருக்கு போல. அதான் இவ்ளோ லேட்”

“ஓ…”

“நான் இத்தனை வருஷத்துல பாத்த வரைக்கும் குகன் ரொம்ப நல்ல பையன். கண்டிப்பா அந்த பொண்ணை நல்லா பாத்துப்பான்” என்றவர்,

“நான் கூட கற்பகம் சொல்றதை வச்சு அந்த பொண்ணை ரொம்ப தப்பா நினைச்சுட்டேன். ரொம்ப நல்லா பொண்ணா இருக்கு. சிவாவோட சொத்துல ஒரு பர்சன்ட் கூட தனக்கு கொடுக்க கூடாது. கல்யாண செலவு கூட தன்னோட சேவிங்க்ஸ்ல தான் பண்ணனும்னு சொல்லி இருக்கு” என்று வியந்து கூற,

ஏற்கனவே அவளை பற்றி அறிந்து வைத்திருந்தவன் அமைதியாக கேட்டு இருந்தான்.

“இன்னைக்கு நம்ம கம்பெனிக்கு ஆபோசிட்ல இருக்க கோல்டன் கேபேல தான் ரெண்டு பேருக்கும் மீட்டிங் அரேஞ்ச் பண்ணி இருக்கான் சிவா. ரெண்டு பேரும் பேசி ஓகே சொல்லிட்டா கல்யாண வேலையை ஸ்டார்ட் பண்ணிடனும்னு அவ்ளோ சந்தோஷமா சொன்னான்”

“...”

“அவன் இவ்ளோ சந்தோஷமா இருந்து ரொம்ப நாளுக்கு அப்புறம் இப்போ தான் பாக்குறேன்” என்று நண்பனை பற்றி மகிழ்வுடன் கூறி கொண்டிருக்க,

கேட்டவனுக்கு தான் அத்தனை உவப்பாய் இல்லை.

அவள் புடவையில் வந்ததும் தன்னை மறந்து ரசித்தவனுக்கு அதன் காரணம் சற்று தாமதமாகவே உரைத்தது. அதன் வெளிப்பாடே இந்த இறுக்கம்.

மாலை வேலை முடிந்ததும் கனி தனது உடமைகளை எடுத்து வைத்து கொண்டிருக்க, அலைபேசியின் கானா இசைத்தது.

எடுத்து பார்க்க பிரவீன் தான் அழைத்திருந்தான்.

இந்த நேரத்தில் இவன் எதற்கு அழைக்கிறான் என்று சிந்தித்தபடியே அழைப்பை ஏற்றவள்,

“என்ன பிரவீன் இந்த டைம்ல கூப்டு இருக்க?”

“ஆபிஸ் முடிஞ்சதா கா?”

“ஹ்ம்ம் வொர்க் ஓவர் தான்”

“அவர் குகன் ஆபோசிட் காஃபி ஷாப்ல வெயிட் பண்றாரு உனக்காக”

“ஹ்ம்ம் நியாபகம் இருக்கு டா. இதை சொல்ல தான் கால் பண்ணியா?”

“ஆமாக்கா. வொர்க் முடிச்சு டையர்டா இருப்ப. கொஞ்சம் ரெப்ரெஷ் ஆகிட்டு போ கா”

“பிரவீன் என் பொறுமைய மார்னிங்ல இருந்து ரொம்ப சோதிக்கிற.‌ நான் பாத்துக்கிறேன் நீ வை” என்று அழைப்பை துண்டித்தவள் மூச்சை இழுத்து வெளியேவிட்டாள்.

‘காம் டவுன் கனி’ என்று தன்னை தானே அமைதிபடுத்தியவள் தனது கைப்பையை எடுத்து கொண்டு வெளியே சென்றாள்.

அந்த சந்தின் துவக்கத்தில் எதிர்புறத்தில் அமைந்து இருந்தது அந்த தேநீர் விடுதி.

யாரையும் காக்க வைப்பதை பெரியதாக விரும்பாதவள் விரைந்து நடந்து சென்று விடுதியை அடைந்தாள்.

புகைப்படத்தை இன்னும் பார்க்காத மடத்தனத்தை மனதிற்குள் நொந்தவள் அதனை பையில் இருந்து எடுக்க செல்லும் சமயம்,

“கன்னல் மொழி இங்க” என்று அருகில் உள்ள மேஜையில் இருந்து குரல் வர, நிமிர்ந்து பார்த்தாள்.

மாநிறத்தில் சற்று வாட்ட சாட்டமான இளைஞன் ஒருவன் அமர்ந்து இருந்தான்.

தன்னை அழைத்த விதத்திலே அவன் தான் குகன் என்பதை உணர்ந்தவள்,

“ஹாய்” என்று புன்னகையுடன் எதிரே அமர்ந்தாள்.

“ஹாய் கன்னல்மொழி நைஸ் டூ மீட் யூ” என்று எதிரில் இருந்தவன் கையை கொடுக்க,

“கிளாட் டூ மீட் யூ குகன்” என்று புன்னகை புரிந்தவள்,

“என்ன பத்தி எல்லாம் அப்பா சொல்லி இருப்பாங்களே?” என்று வினவ,

“எஸ், சார் சொன்னாங்க எனக்கு எல்லாத்துக்கும் சம்மதம். ஆக்சுவலி உங்க கண்டிஷன்ஸ் கேட்டு தான் இம்பரஸ் ஆகிட்டேன். லீகலா அவங்க உங்களை தத்தெடுத்து இருக்காங்க உங்களுக்கு சொத்துல பங்கு இருக்கு. இருந்தும் சொந்த கால்ல நிக்கணும்னு ஆசை பட்றீங்களே அது எவ்ளோ பெரிய விஷயம்” என்று மொழிய,

மெல்லிய புன்னகை இவள் இதழ்களில்.

“எனக்கு உங்ககிட்ட இருந்து எந்தவிதமான சொத்தோ நகையோ வேண்டாம். எனக்கு வரதட்சணை வாங்குறதுல எந்தவித உடன்பாடும் இல்லை” என்றவன்,

“என்னோட பேக்ரவுண்ட் தெரியும்ல? என்கிட்ட பெருசா அஸெட்ஸ் இல்லை.‌ ஒரே ஒரு சொந்த வீடு தான் அதுலயும் லோன் இருக்கு இந்த இயர் எண்டிங்கோட முடிஞ்சிடும். ஒரே ஒரு தங்கை.‌ அவளுக்கும் மேரேஜ் ஆகிடுச்சு” என்க,

“ஹ்ம்ம் தெரியும் அப்பா சொல்லிட்டாங்க. இருக்க வீடும் சாப்பிட சாப்பாடும் இருந்தா போதாததா இந்த வாழ்க்கையை வாழ? நானும் ஜாப் போறேன் சேர்ந்தே லோனை பே பண்ணிடலாம்” என்று மொழிய,

“மறுபடி மறுபடி நான் உங்கிட்ட இம்பரஸ் ஆகுறேன். ஒன் லாக் சாலரி கார் சொந்த வீடுன்னு கண்டிஷன் போட்ற பொண்ணுங்க மத்தியில இவ்ளோ சிம்பிளா ஒரு பொண்ணு உங்களை மாதிரியே உங்க மனசும் ரொம்ப அழகா இருக்குங்க” என்றவன்,

“அப்புறம் என் அம்மா அப்பா கடைசி வரை நம்ம கூட தான் இருப்பாங்க” என்றுவிட்டு அவளை கண்டான்.

“இதுல புதுசா என்ன இருக்கு பெத்தவங்க பிள்ளைங்க கூட தான் இருக்கணும்” என்று எளிமையாய் முடித்தவள் இன்னுமின்னும் அவனை வசீகரித்தாள்.

“அப்போ கல்யாணத்துக்கு ப்ரசீட் பண்ண சொல்லிடலாம்ல” என்று குகன் மொழிய,

கனி பதில் அளிக்கும் முன் பட்டென்று அவளருகே வந்து அமர்ந்தான் பார்த்தீபன்.

கனி ஒரு நொடி அதிர்ந்து விழித்து அவனை காண,

குகன், “பார்த்தீபன் சார்” என்று மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றுவிட்டான்.

“ஹேய் குகன் நோ பார்மாலிட்டீஸ் உட்காருங்க” என்க,

சம்மதமாய் அவன் தலையசைத்து அமர்ந்தான்.

பார்த்தீபனது வரவை எதிர்பாராத இருவரும் என்ன பேசுவதென ஒருவரது முகத்தை மற்றொருவர் காண,

இதற்கு காரணமான பார்த்தீபனோ அது புரிந்தும் புரியாதது போல சட்டமாய் அமர்ந்து இருந்தான்.

இவனை வைத்து கொண்டு வேறு எதுவும் குகனாலும் பேச முடியவில்லை.

‘இவரை யார் இங்க வர சொன்னது’ என்று உள்ளுக்குள் பல்லை கடித்தவள் மென் புன்னகையுடன்,

“ஓகே குகன். நாம இன்னொரு நாள் மீட் பண்ணலாம்” என்று எழுந்து கொள்ள,

சூழ்நிலையை உணர்ந்து, “ஓகே மொழி” என்றவன் பார்த்தீபனிடமும் கூறிவிட்டு விடை பெற்று செல்ல,

கனி திரும்பி பார்த்தீபனை முறைத்து,

“நீங்க எதுக்கு இங்க வந்தீங்க?” என்க,

“காஃபி குடிக்க” என்று அமரிக்கையாக பதில் அளித்தான்.

அதில் இவளுக்கு கோபம் உச்சிக்கு ஏற,

“ஏன் வேற காஃபி ஷாப்பே உங்களுக்கு கிடைக்கலையா?”

“என் ஆபிஸ்க்கு பக்கத்துல இது தான் இருந்துச்சு. உனக்கு மீட் பண்ண வேற ப்ளேஸ் கிடைக்கலையா?” என்று வினவியவன் அவளது பதிலை எதிர்ப்பார்க்காது எழுந்து சென்றுவிட,

இவளுக்கு தான் கோபம் பெருகியது. வழக்கம் போல விழிகளை மூடி திறந்து தன்னை அமைதிபடுத்தியவள் எழுந்து வெளியே சென்று சாலை கடந்து பேருந்து நிறுத்தம் செல்ல விழைய, பார்த்தீபனது மகிழுந்து அவளருகே வந்து நின்றது.

கதவை திறந்தவன், “கெட் இன்” என்க,

“நோ தாங்க்ஸ்” என்றவள் நகர முற்பட,

“நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும். இப்போ நீயா வரியா? இல்லை நானே தூக்கி உள்ள போடவா?” என்று வினவிட,

இவன் செய்துவிடுவான் என்று உணர்ந்தவள்,

‘இதுதான் கடைசி முறை. இனி இவனது வாகனத்தில் ஏறக்கூடாது’ என்று முடிவு செய்தவள் ஏதும் கூறாது ஏறி அமர்ந்தாள்.

பல நிமிடங்கள் அமைதியான பயணத்தில் கழிந்துவிட கனி தான் ஏதோ பேச வேண்டும் என்று கூறிவிட்டு அமைதியாக வருகிறானே என்று சிந்தித்தபடி வந்தாள்.

“அப்புறம் மாப்பிளைய பிடிச்சு இருக்கா?” என்று பார்த்தீபன் துவங்க,

“அதை உங்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றவள் முகத்தை திருப்பி கொள்ள,

“அவனை பிடிக்கலைன்னு சொல்லிடு” என்றதும் கனி முறைத்தவாறு ஏதோ கூற வர,

“ஐ ஹாவ் அ பெட்டர் ஆப்சஷன் பார் யூ‌. மாப்பிள்ளைக்கு ஏஜ் ட்வென்டி நைன். ஓனா பிஸ்னஸ் பண்ணிட்டு இருக்கான். சொல்லிக்கிற அளவுக்கு பேமிலி பேக்ரவுண்ட் இருக்கு”

“...”

“கரெக்ட் ஹைட் அண்ட் வெயிட்ல லைட்டா பேரா இருப்பான். கொஞ்சம் ஷார்ட் டெம்பர் பட் குட் கை. இதுவரைக்கும் எந்த ரிலேஷன்ஷிப்லயும் இருந்தது இல்லை. உன்னை ரொம்ப நல்லா பாத்துப்பான். ஒரு தங்கச்சி இருக்கா ஸ்டடியிங். அவங்க அப்பா பிஸ்னஸ் பண்ணிட்டு இருக்காங்க. அவனோட நேம்”என்றவனை இடையிட்டவள்,

“எனஃப். நீங்க சொன்ன டீடெயிலே போதும்.‌ எனக்
கு நீங்க பாத்த அலையன்ஸ் பிடிக்கலை. நீங்க பாத்து வச்சிருக்க அந்த மாப்பிள்ளைக்கிட்ட சொல்லிடுங்க இந்த கன்னல்மொழி கடைசி வரை சிங்கிளா இருந்தாலும் அவரை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு” என்றவள் வீடு வரவும் விறுவிறுவென இறங்கி சென்றுவிட்டாள்.

முறைத்து விட்டு செல்பவளை கண்டு இவனது இதழ்களில் புன்னகை பூத்தது.

எனக்கென‌ ஏற்கனவே

பிறந்தவள் இவளோ…?
இதயத்தை கயிறு கட்டி
இழுத்தவள் இவளோ….?



 
Well-known member
Messages
368
Reaction score
255
Points
63
Mozhi unnaku indha adavadi than correct ne avan ah virumbi yum avan mela ulla kobathula vera oruthar ah kalyanam panna num nu nenaikira appo avan ipadi than ah pannuvan nalla rendu perum jadi ku yetha moodi than
 
Administrator
Staff member
Messages
516
Reaction score
796
Points
93
Mozhi unnaku indha adavadi than correct ne avan ah virumbi yum avan mela ulla kobathula vera oruthar ah kalyanam panna num nu nenaikira appo avan ipadi than ah pannuvan nalla rendu perum jadi ku yetha moodi than
Athan jodi sethu vitruken 😂
 
Top