ஜென்மம் 12
என் கண் பார்த்தது
என் கை சேருமோ
கை சேராமலே
கண்ணீர் சேருமோ…?
கனியின் வார்த்தையை கேட்டு எல்லோருக்கும் முகத்தில் ஆர்வம் பொங்கியது.
ப்ரத்யூவுக்கு மூளை ஒரு கணம் வேலை செய்ய நிறுத்திவிட சடுதியில் தாயருகே சென்றவள்,
“ம்மா இவளோட கான்ஃபிடன்ட்ட பாத்தா எதையோ மிஸ் பண்ணிட்டோம் போல” என்று பதற்றத்துடன் மொழிய,
“இல்லையே எல்லாம் சரியா தான பிளான் போட்டோம். அவ எதோ பயத்துல உளறிட்டு இருக்கா. எப்படியும் அவமானப்பட்டு போக தான் போறா. நீ அமைதியா இரு” என்று அதட்ட,
“ம்மா யாரு அவ பயப்பட்றாளா? அவ முகத்தை பாரு எவ்ளோ கூலா இருக்கா. இவ மட்டும் எப்படி எந்த சுட்சுவேஷன்லயும் ஒரே மாதிரியே இருக்கா” என்று பொறுமினாள்.
“அவளுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்காம. நீ போய் அவளை துரத்துற வழிய பாரு” என்று மகளை அனுப்பிவிட்டு தானும் வந்து நின்று கொண்டாள்.
பிரவீன், “அக்கா சிசிடிவியும் வொர்க் ஆகலை. எப்படிக்கா ப்ரூஃப் பண்ணுவ” என்று பதற்றத்துடன் வினவ,
சிவப்பிரகாசம், “கனிமா என்னடா இது?” என்று வருத்தமாக கேட்க,
“ப்பா டூ மினிட்ஸ் இருங்க” என்றவள் விறுவிறுவென அங்கே நடக்கும் நிகழ்வுகளை காணொளியாக பதிவு செய்து கொண்டிருந்த புகைப்பட கலைஞர் குழுவின் அருகே சென்றாள்.
பார்த்தீபன் தான் அவளது அமைதியிலும் அமரிக்கையிலும் புருவத்தை உயர்த்தி வியந்து கொண்டிருந்தான்.
அவள் இவ்வளவு உறுதியுடன் பேசும் போதே நிச்சயமாக ஏதோ ஆதாரம் வைத்து உள்ளாள் என்று உறுதியாகிவிட அமைதியாக பார்த்திருந்தான்.
கற்பகம், “பாத்தீங்களா அண்ணி பச்ச புள்ளை நகையை திருடிட்டு இப்போ இல்லைனு நாடத்தை போட்டுட்டு இருக்கா” என்று கஸ்தூரியிடம் திட்ட,
“அந்த பொண்ணு பேசுறதை பார்த்தா அவ அதை எடுக்கலைன்னு தான் தோணுது” என்க,
கற்பகத்திற்கு பகீரென்றது. எதை கூறினாலும் நம்பும் தன் அண்ணியே தான் கூறியதை நம்பவில்லையா? என்று அதிர்ச்சி ஜனித்தது.
இதில் மற்றவர்கள் எப்படி நம்புவார்கள் எண்ணினார்.
இங்கே கனி வந்து அவர்களிடம் சற்று முன்பு எடுத்த காணொளியை அங்கு போடவிட கூற,
நடந்ததை கவனித்து கொண்டிருந்த அவர்களும் அதனை ஒலிக்கவிட்டனர்.
சரியாக கனியிடத்தில் வினோதினி குழந்தையை கொடுத்ததில் இருந்து வாங்கி சென்றது வரை அதில் பதிவாகி இருந்தது.
இவள் அமர்ந்திருந்தது ஓரமாக இருந்தாலும் நான்கு புறமும் புகைப்படமும் காணொளியும் எடுத்ததால் அதில் பதிவாகி இருந்தது.
குழந்தையை வாங்கும் சமயம் காணொளியை நிறுத்திவிட்டு அதனை பெரிதாக்கி காண்பிக்க அவள் வாங்கி செல்லும் சமயம் குழந்தையிடம் செயின் இருந்தது.
அதனை சுட்டி காட்டியவள்,
“இந்த ஆதாரம் போதுமா மிஸஸ் வினோதினி” என்று அழுத்தம் திருத்தமாக கேட்க,
இதனை எதிர்பார்த்திடாத வினோதினி அதிர்ந்து விழிக்க,
கற்பகம் ப்ரத்யூ மற்றும் கோதையின் முகத்தில் ஈயாடவில்லை.
இத்தகைய திருப்பத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
கண்காணிப்பு கருவியை அகற்ற நினைத்தவர்கள் இதனை மறந்துவிட்டிருந்தனர்.
அதுவும் ப்ரத்யூ தான் ஒரு இடம் விடாது அனைத்து இடத்திலும் காணொளியை பதிவு செய்ய வேண்டும் என்று கண்டிப்புடன் கூறி இருந்தாள்.
இப்போது அதுவே இவர்களுக்கு வினையாகி போனது.
எல்லோரும் நடப்பதை வியப்புடனும் ஆர்வத்துடனும் பார்க்க,
ஒருவர், “ஏம்மா செயின் எங்கேயோ தவறி விழுந்திருக்கு. அதுக்கு போய் உதவி பண்ண பொண்ணு மேல பழி போட்டு இருக்கியே?” என்க,
அடுத்தடுத்து குரல் வந்தது.
“இந்த காலத்துல உதவி பண்றது கூட பெரிய தப்பு போல”
“ஆமா இந்த பொண்ணு அவ்ளோ ஸ்ட்ராங்கா பேசும் போதே எனக்கு இது மாதிரி தான் எதாவது நடந்து இருக்கும்னு தோணுச்சு”
“ஆமா திருடியிருந்தா இந்த பொண்ணு பயந்திருக்கணும்”
“சிவப்பிரகாசம் வீட்டு பொண்ணு மேலயே பழி போட எப்படி மனசு வந்துச்சு. அவர்கிட்ட இல்லாத பணமா?” என்று வினோதினியிடம் எகிற,
அவளுக்கு விழி பிதுங்கியது. ஏதோ ப்ரத்யூ உதவியாக கேட்க செய்யலாம் என்று எண்ணி செய்திருக்க இது தனக்கெதிரே திரும்பும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.
அவளை பேசி திட்டி துரத்திவிடலாம் என்று எண்ணியிருந்தவளுக்கு இப்போது சூழ்நிலையை எப்படி கையாள்வது என தெரியவில்லை.
திருதிருத்து போயிருந்தாள். அவளது நிலையை கண்ட இத்திட்டத்தில் துணை போன ப்ரத்யூவின் தோழி,
“சரி விடுங்க அவங்க செயினை காணோமேன்ற பதட்டத்துல இவங்க எடுத்துருப்பாங்களோன்னு நினைச்சிட்டாங்க” என்க,
“அதெப்படி விட முடியும். இதுவே எங்க வீட்டு பொண்ணு உங்க மேல பழி போட்டு இருந்தா இதே மாதிரி மன்னிச்சு விட்ருவீங்களா?” என்ற குரலில் கனியின் குடும்பத்தினர் அனைவருக்கும் அதிர்ச்சி.
காரணம் அந்த குரலுக்கு சொந்தக்காரர் கஸ்தூரி.
கனியே ஒரு நொடி புருவம் சுருக்கி பார்த்தாள்.
பார்த்தீபன் தாயை மெச்சும் பார்வை பார்த்தான்.
பிரவீன், “ஆமா அத்தை சொல்றது கரெக்ட் நீங்க இது மாதிரி விடுவிங்களா?” என்று வர,
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த பார்த்தீபன்,
“வினோதினி சொன்னது மாதிரி எங்க வீட்டு பொண்ணு கால்ல விழுந்து மன்னிப்பு நீ கேட்கணும்” என்ற பார்த்தீபனின் குரலில் நீ செய்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.
இப்படி வந்து மாட்டி கொண்டோமே? இவளது காலிலா விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும். இது மட்டும் குடும்பத்தினருக்கு தெரிந்தால் என்ன ஆவது என்று பயத்தில் முகம் வெளுத்தது.
ப்ரத்யூவின் தோழி, “தெரியாம செஞ்சதுக்கு கால்ல விழ வைக்கிறது கொஞ்சம் டூ மச்” என்க,
“என் அக்கா இந்த வீடியோவ கண்டுபிடிச்சு போடலைன்னா இந்நேரம் அவ தான் செயினை எடுத்து இருப்பான்னு அவமானப்படுத்தி இருப்பிங்கள்ல கால்ல விழுங்க” என்று பிரவீன் வெடுக்கென்று கூற,
‘நீ என் காலில் இப்போது விழுந்தாக வேண்டும்’ என்ற தோரணையில் வந்து கனி அவள் முன் நிற்க,
வினோதினி கையில் இருந்த குழந்தையை அருகில் இருந்தவளிடம் கொடுத்துவிட்டு ப்ரத்யூவை பார்த்தாள்.
‘பேசாம இவ தான் செய்ய சொன்னதுனு போட்டு கொடுத்துடலாமா?’ என்று சிந்தித்து அவளை காண,
வினோதினியின் எண்ணத்தை படித்த ப்ரத்யூவிற்கு வயிற்றில் பயப்பந்து உருண்டது.
அவள் உண்மையை கூறிவிட்டாள் அடுத்து தான் தான் அவளது இடத்தில் இருக்க வேண்டும் என்று தோன்றிட பகீரென்றது.
சடுதியில் கனியின் அருகே சென்றவள்,
“அக்கா” என்று அழைக்க,
கனி வியப்பில் புருவம் உயர்த்தி பார்த்தாள்.
‘சீ இவளை எல்லாம் அக்கான்னு கூப்பிட வேண்டியது இருக்கே…’ என்று மனதிற்குள் நொந்தவள்,
“அக்கா அவங்க பாவம் தெரியாம உன் மேல பழிய போட்டுட்டாங்க விட்ரலாமே” என்று அவளது கையை பிடிக்க,
மொத்த குடும்பமும் ஆச்சர்யமாக காண,
கற்பகத்திற்கும் கோதைக்தும் கசந்து வழிந்தது.
சட்டென்று கனியின் இதழ்களில் மென்னகை பிறக்க,
“ரொம்ப வருஷம் கழிச்சு என் தங்கச்சி என்கிட்ட பேசி இருக்கா அதுவும் உங்களுக்காக அதுனால விட்டுட்றேன். இனிமே எதையும் விசாரிக்காம யாரையும் பிளேம் பண்ணாதிங்க” என்றவள் திரும்பி,
“எனக்காக உதவிக்கு வந்தவங்களுக்கு ரொம்ப நன்றி. இப்போ இவங்களுக்கு உதவி தேவைப்படுது. எல்லோரும் சேர்ந்து இவங்க பாப்பாவோட செயினை தேடி தருவோம். விருப்பம் இருக்கவங்க என்கூட வந்து தேடுங்க” என்றவள் தேடுதல் வேட்டையில் இருங்க,
நடப்பதை பதைபதைப்புடன் பார்த்திருந்த சிவப்பிரகாசத்திற்கு இரு மகள்களும் பேசிவிட்டதில் அகமும் முகமும் மகிழ்ந்து போனாள்.
ப்ரத்யூவிடமும் திரும்பி, “வா அவங்க செயினை தேடி தருவோம்” என்று அழைக்க,
அவளும் வேறு வழியின்றி தேட துவங்கினாள்.
கஸ்தூரி, “அண்ணி ரொம்ப வருஷம் கழிச்சு உங்க ரெண்டு பொண்ணுங்களும் சமாதானம் ஆகி இருக்காங்க” என்று மகிழ்வுடன் கூற,
கற்பகமும் வேறு வழியின்றி, “ஹ்ம்ம் ஆமா அண்ணி” என்று சிரித்து வைக்க,
“நான் சொன்னேன்ல அந்த பொண்ணு எடுத்திருக்க வாய்ப்பு இல்லைன்னு. அந்த பொண்ணு நல்ல பொண்ணு தான் போலண்ணி. நாம தான் தப்பா நினைச்சு இருக்கோம்” என்று வேறு கூற,
மற்ற இருவருக்கும் ‘ஐயோ’ என்று வந்தது.
இருந்தும் வேறு வழியின்றி கஸ்தூரி பேசுவதை கேட்டனர்.
நிவிஷா வேறு ப்ரத்யூவிடம், “என்னடி அவளை போய் அக்கான்னு கூப்பிட்ட” என்று வருத்தமாக கேட்க,
“வேற வழியில்லாம கேட்டுட்டேன்டி விடு” என்றவள் செயின் தொலையவில்லை என்று தெரிந்தும் தேடுவது போல நடித்து கொண்டிருந்தாள்.
வினோதினிக்கே சிறிது குற்றவுணர்வு ஆகிவிட அவசர அவசரமாக யாருக்கும் தெரியாமல் அந்த செயினை ஒரு நாற்காலியின் கீழே போட்டுவிட்டாள்.
இங்கு பிரவீன், “அக்கா உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை. உன் மேல திருட்டு பழி போட்டவங்களுக்கு நீ உதவி பண்ணிட்டு இருக்க” என்று சலிப்புடன் கேட்க,
“பிரவீன் இருக்கது ஒரு வாழ்க்கை டா. அதுல எதுக்கு இந்த கோவம் பழி உணர்ச்சி எல்லாம் முடிஞ்ச அளவு எல்லாருக்கும் உதவி செஞ்சிட்டு வாழ்வோம்” என்று புன்னகையுடன் கூறவிட்டு நகர,
அவர்களுக்கு சற்று தள்ளி நின்றிருந்த பார்த்தீபனுக்கு இது கேட்டுவிட அவனது இதழ்களில் புன்னகை பிறந்தது.
இந்த பெண் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு செய்கையிலும் அவனுக்கு தனித்துவமாக தெரிந்தாள். புதிதாக இருந்தாள்.
அவளது குணத்தால் இன்னுமின்னும் அவனது கண்களுக்கு பேரழகியாகி போனாள்.
இவளால் எப்படி இவ்வாறு இருக்க முடிகிறது என்று தான் வினா ஒவ்வொரு முறையும் எழுகிறது.
கொஞ்சம் கொஞ்சமாய் அவள் தனக்குள் இறங்கி கொண்டிருப்பதை உணராதவன் அவளையே ரசனையாக பார்த்திட,
இதனை கவனித்த ப்ரத்யூ, “ஐயோ ஐயோ இவளை அவமானப்படுத்தி துரத்திவிட பிளான் பண்ணிட்டு நானே இவளை ஹீரோயின் ஆக்கிட்டேனே. அத்தான் வேற அப்படி பாத்திட்டு இருக்காரே” என்று வயிறு எரிய புலம்பி கொண்டு இருந்தார்.
சில நிமிடங்களில் யாரோ ஒருவர் வினோதினி கீழே போட்ட செயினை எடுத்து தந்துவிட, அவள் நன்றி கூறி பெற்று கொண்டாள்.
அதன் பிறகு அவரவர் இடத்துக்கு சென்று உணவுன்னும் பணியை துவங்கினர்.
கனியும் உணவுன்ன செல்ல அவளருகே காலியாக இருந்த இருக்கையில் பார்த்தீபன் வந்து அமர,
“வாங்க அத்தான்” என்று சிரிப்புடன் வரவேற்றான்.
பிரவீன் மனதில் கனிக்கு பார்த்தீபனை திருமணம் செய்து வைக்க நிறைய ஆசை இருந்தது.
நடந்து கொண்டிருப்பதை கண்டவன் தனது ஆசை நிறைவேறிவிடும் என்று எண்ணி கொண்டான்.
கனி அவன் புறம் திரும்பாது அமர்ந்திருக்க,
“அக்கா அத்தானுக்கு தண்ணீ கொடு” என்று தண்ணீர் பொத்தலை நீட்ட,
அதனை வாங்கியவள் அவன் முகம் காணாது கொடுக்க,
“அக்கா அத்தானுக்கு குலோப் ஜாமுன் பிடிக்கும்ல இந்தா கொடு” என்று கிண்ணத்தை கொடுக்க,
அதையும் திரும்பாமலே கொடுத்தாள்.
“அக்கா அத்தானுக்கு” என்று பிரவீன் துவங்கவும் நிமிர்ந்து அவனை முறைத்தவள்,
“நான் அந்த சைடு மாறிக்கிறேன். நீயே உன் அத்தானை நல்லா கவனிச்சுக்கோ” என்க,
‘உள்ளதும் போய்விடும் என்று அஞ்சியவன் சிரித்து சமாளித்து,
“இல்லை என் ஃப்ரெண்ட்ஸ் பக்கத்துலயே உட்கார்ந்துக்கிறேன்” என்று நண்பர்களிடம் பேச துவங்க,
இதனை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த ப்ரத்யூ,
“ம்மா எல்லாம் உன்னால தான். ஏன் மா இப்படி பண்ண?” என்று தாயிடம் காய,
“ஏய் நான் என்ன வேணும்னாடி பண்ணேன். அவளை அவமானப்படுத்த தான் பிளான் பண்ணேன் நம்ம நேரம் இப்படி ஊத்திகிச்சு”
“எல்லாம் உன்னால வீணா போன ஐடியாவால தான். பேசாம நானே அவளை ஆள வச்சு போட்டு தள்ளி இருப்பேன்” என்று பொறும,
“இவ ஒருத்தி கொல்றதுலே குறியா இருக்கா. கொண்ணுட்டு ஜெயிலுக்கு போய்ட்டா பார்த்தீக்கு கூட எப்படி வாழ்வ” என்று முறைத்தார்.
அதில் இருந்த உண்மை புரிய ப்ரத்யூ அமைதியாகி பின்,
“ம்மா இவனை நீ தான் பெத்தியா? இல்லை ஹாஸ்பிட்டல்ல பிள்ளை மாறிடுச்சா?” என்று கடுப்புடன் கேட்க,
“அதான் உங்கப்பாவ உரிச்சு வச்சு இருக்கானே அப்புறம் என்னடி சந்தேகம்”
“அவன் மட்டும் ஏன் மா நம்மள மாதிரி இல்லை. அந்த அநாதைக்கு கூஜா தூக்கிட்டு இருக்கான். விட்டா அவனே ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடுவான் போல” என்க,
“ஏய் வாயை கழு. அந்த அநாதை கழுதைக்கு என் மருமகன் கேட்குதா? பார்த்தீ உனக்கு தான்” என்று அழுத்தம் திருத்தமாக மொழிந்தார்.
“நடக்குறதெல்லாம் பாத்தா அப்படி தெரியலையே மா” என்று அவர்களை காண்பித்தவள்,
“பேசாம எழுந்து போய் அவளை நாலு அரை விட்றவா?”
“அப்புறம் வினையே வேணாம் பார்த்தீ இந்த ஜென்மத்தில உன்னை கட்டிக்க மாட்டான்” என்ற கற்பகம்,
“அமைதியா இரு. அவளை துரத்த வேற ஐடியா பண்ணுவோம்” என்க,
“ஆமா உன் ஐடியாவை தூக்கி குப்பைல போடு. ஏற்கனவே குடுத்த ஐடியாவுல தான் அவ ஹீரோயின் ஆகிட்டா. அடுத்த ஐடியால ரெண்டு பேருக்கும் நீயே கல்யாணம் பண்ணி வச்சாலும் வச்சிடுவ” என முறைத்தாள்.
“ஏய் ஒரு தடவை தான் சொதப்பிடுச்சு. நெக்ஸ்ட் டைம் கரெக்டா பண்ணலாம்” என்க,
“வேணாம் இனிமே யார் ஐடியாவும் வேணாம் நானே பாத்துக்கிறேன்”
“பாத்து கிழிப்ப. நீயும் தான் வீட்டுக்குள்ள பூட்டி வச்சு வர விடாம பண்ண. இப்போ பாரு பார்த்தீயோட ஜோடி போட்டுட்டு வந்து நிக்கிறா” என்று மகள் திட்டியதில் பதிலுக்கு காய்ந்தாள்.
இவர்களது சண்டையை கவனித்த கோதை,
“ரெண்டு பேரும் இப்படி சண்டை போட்டுட்டு இருங்க. அந்த கேப்ல அவ என் பேரனை கொத்திட்டு போகட்டும்” என்க,
“பாட்டி”
“ம்மா” என்று இருவரும் ஒரு சேர முறைத்னர்.
“அடியே இப்படி சண்டை போட்றதை விட்டுட்டு நான் சொல்றதை கேளுங்க”
“என்ன பாட்டி நீயும் ஐடியா சொல்ல போறீயா?”
“ஐடியா தான் ஆனால் அவளை வெளியே துரத்துறதுக்கு இல்லை. உனக்கும் பார்த்தீக்கும் கல்யாணம் பண்ண”
“வாவ் நிஜமாவா பாட்டி?”
“ஆமாடா தங்கம்” என்றவர்,
“கற்பகம் பாப்பாக்கு படிப்பு முடிய போகுதுல பேரனுக்கு வயசு கூடுது. உன் வீட்டுக்கார்கிட்ட சொல்லி கிரிக்கிட்ட பேச சொல்லு. அவர் கேட்டா கிரியால மறுக்க முடியாது. கிரி சொன்ன பேச்சை பேரனும் மீற மாட்டான்” என்று முடித்திட,
“வாவ் சூப்பர் பாட்டி. ம்மா பாட்டி சொல்றது நல்ல ஐடியாவா இருக்கு. சீக்கிரம் அப்பாக்கிட்ட பேசு” என்க,
“இன்னைக்கு நைட்டே பேசிட்றேன்”
“பாட்டி நீ என் செல்ல பாட்டி தங்க பாட்டி. உனக்கு எப்படி இப்படி நல்ல ஐடியா வந்துச்சு” என்று ப்ரத்யூ பாட்டியை கொஞ்ச துவங்கினாள்.
இங்கு பார்த்தீயோ சில கணங்கள் அமைதியாக இருந்துவிட்டு பின்னர் தொண்டையை செரும,
கனி குனிந்த தலை நிமிராது சாப்பிட்டு கொண்டிருந்தாள்.
இது வேலைக்காது என்று நினைத்தவன்,
“கனி” என்று அழைத்துவிட,
சடுதியில் நிமிர்ந்து பார்த்தவளது விழிகள் கங்கினை கக்கியது.
அதில் தனது செயலை உணர்ந்தவன்,
“சாரி மிஸ் கன்னல்மொழி” என்று சிரிப்புடன் மொழிய,
‘என்ன?’ என்று கண்களால் மிரட்டினாள்.
‘ப்பா என்ன கண்ணுடா’ என்று உள்ளுக்குள் கூச்சல் எழுந்தது.
அதில் புன்னகை இமை நீள,
“யூ லுக் பியூட்டிபுல் இன் திஸ் சாரி” என்க,
“தாங்க்ஸ் பார் யுவர் காம்ப்ளிமென்ட்” என்று போலியாக சிரித்து வைத்தாள்.
“இப்போலாம் நீ என் கண்ணுக்கு ரொம்ப புதுசா தெரியிற. இது நான் சின்ன வயசுல பார்த்த என் மாமா பொண்ணு தானான்னு சந்தேகமா இருக்கு”
“எல்லாரும் எப்பவும் ஒரே மாதிரி இருக்க முடியாது மிஸ்டர் பார்த்தீபன்” என்று அழுத்தமாக கூறியவள் பட்டென்று எழுந்து செல்ல,
போகிறவளை இமைக்காமல் பார்த்தவனது இதழ்கள்,
“கோவக்காரி” என்று முணுமுணுக்க விழிகளில் ரசனை தொக்கி நின்றது.
அவனை பார்வையை கவனி
த்த பிரவீன்,
“என்னத்தான் அக்காவ சைட் அடிக்கிறிங்களா?” என்று சிரிப்புடன் கேட்டு கண்ணடிக்க,
“டேய் சாப்பிட்ற வேலையை பாரு” என்று சிரிப்புடன் அதட்டியவன் அதே முகபாவனையுடன் அவன் பின்னே எழுந்து சென்றான்.
இதுவரை பார்த்த
பெண்ணில்
உன்னை போல
என்னை யாருமே
அழகாலே கொன்று
தின்று உயிர் மீட்டு
தர வில்லையே…
என் கண் பார்த்தது
என் கை சேருமோ
கை சேராமலே
கண்ணீர் சேருமோ…?
கனியின் வார்த்தையை கேட்டு எல்லோருக்கும் முகத்தில் ஆர்வம் பொங்கியது.
ப்ரத்யூவுக்கு மூளை ஒரு கணம் வேலை செய்ய நிறுத்திவிட சடுதியில் தாயருகே சென்றவள்,
“ம்மா இவளோட கான்ஃபிடன்ட்ட பாத்தா எதையோ மிஸ் பண்ணிட்டோம் போல” என்று பதற்றத்துடன் மொழிய,
“இல்லையே எல்லாம் சரியா தான பிளான் போட்டோம். அவ எதோ பயத்துல உளறிட்டு இருக்கா. எப்படியும் அவமானப்பட்டு போக தான் போறா. நீ அமைதியா இரு” என்று அதட்ட,
“ம்மா யாரு அவ பயப்பட்றாளா? அவ முகத்தை பாரு எவ்ளோ கூலா இருக்கா. இவ மட்டும் எப்படி எந்த சுட்சுவேஷன்லயும் ஒரே மாதிரியே இருக்கா” என்று பொறுமினாள்.
“அவளுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்காம. நீ போய் அவளை துரத்துற வழிய பாரு” என்று மகளை அனுப்பிவிட்டு தானும் வந்து நின்று கொண்டாள்.
பிரவீன், “அக்கா சிசிடிவியும் வொர்க் ஆகலை. எப்படிக்கா ப்ரூஃப் பண்ணுவ” என்று பதற்றத்துடன் வினவ,
சிவப்பிரகாசம், “கனிமா என்னடா இது?” என்று வருத்தமாக கேட்க,
“ப்பா டூ மினிட்ஸ் இருங்க” என்றவள் விறுவிறுவென அங்கே நடக்கும் நிகழ்வுகளை காணொளியாக பதிவு செய்து கொண்டிருந்த புகைப்பட கலைஞர் குழுவின் அருகே சென்றாள்.
பார்த்தீபன் தான் அவளது அமைதியிலும் அமரிக்கையிலும் புருவத்தை உயர்த்தி வியந்து கொண்டிருந்தான்.
அவள் இவ்வளவு உறுதியுடன் பேசும் போதே நிச்சயமாக ஏதோ ஆதாரம் வைத்து உள்ளாள் என்று உறுதியாகிவிட அமைதியாக பார்த்திருந்தான்.
கற்பகம், “பாத்தீங்களா அண்ணி பச்ச புள்ளை நகையை திருடிட்டு இப்போ இல்லைனு நாடத்தை போட்டுட்டு இருக்கா” என்று கஸ்தூரியிடம் திட்ட,
“அந்த பொண்ணு பேசுறதை பார்த்தா அவ அதை எடுக்கலைன்னு தான் தோணுது” என்க,
கற்பகத்திற்கு பகீரென்றது. எதை கூறினாலும் நம்பும் தன் அண்ணியே தான் கூறியதை நம்பவில்லையா? என்று அதிர்ச்சி ஜனித்தது.
இதில் மற்றவர்கள் எப்படி நம்புவார்கள் எண்ணினார்.
இங்கே கனி வந்து அவர்களிடம் சற்று முன்பு எடுத்த காணொளியை அங்கு போடவிட கூற,
நடந்ததை கவனித்து கொண்டிருந்த அவர்களும் அதனை ஒலிக்கவிட்டனர்.
சரியாக கனியிடத்தில் வினோதினி குழந்தையை கொடுத்ததில் இருந்து வாங்கி சென்றது வரை அதில் பதிவாகி இருந்தது.
இவள் அமர்ந்திருந்தது ஓரமாக இருந்தாலும் நான்கு புறமும் புகைப்படமும் காணொளியும் எடுத்ததால் அதில் பதிவாகி இருந்தது.
குழந்தையை வாங்கும் சமயம் காணொளியை நிறுத்திவிட்டு அதனை பெரிதாக்கி காண்பிக்க அவள் வாங்கி செல்லும் சமயம் குழந்தையிடம் செயின் இருந்தது.
அதனை சுட்டி காட்டியவள்,
“இந்த ஆதாரம் போதுமா மிஸஸ் வினோதினி” என்று அழுத்தம் திருத்தமாக கேட்க,
இதனை எதிர்பார்த்திடாத வினோதினி அதிர்ந்து விழிக்க,
கற்பகம் ப்ரத்யூ மற்றும் கோதையின் முகத்தில் ஈயாடவில்லை.
இத்தகைய திருப்பத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
கண்காணிப்பு கருவியை அகற்ற நினைத்தவர்கள் இதனை மறந்துவிட்டிருந்தனர்.
அதுவும் ப்ரத்யூ தான் ஒரு இடம் விடாது அனைத்து இடத்திலும் காணொளியை பதிவு செய்ய வேண்டும் என்று கண்டிப்புடன் கூறி இருந்தாள்.
இப்போது அதுவே இவர்களுக்கு வினையாகி போனது.
எல்லோரும் நடப்பதை வியப்புடனும் ஆர்வத்துடனும் பார்க்க,
ஒருவர், “ஏம்மா செயின் எங்கேயோ தவறி விழுந்திருக்கு. அதுக்கு போய் உதவி பண்ண பொண்ணு மேல பழி போட்டு இருக்கியே?” என்க,
அடுத்தடுத்து குரல் வந்தது.
“இந்த காலத்துல உதவி பண்றது கூட பெரிய தப்பு போல”
“ஆமா இந்த பொண்ணு அவ்ளோ ஸ்ட்ராங்கா பேசும் போதே எனக்கு இது மாதிரி தான் எதாவது நடந்து இருக்கும்னு தோணுச்சு”
“ஆமா திருடியிருந்தா இந்த பொண்ணு பயந்திருக்கணும்”
“சிவப்பிரகாசம் வீட்டு பொண்ணு மேலயே பழி போட எப்படி மனசு வந்துச்சு. அவர்கிட்ட இல்லாத பணமா?” என்று வினோதினியிடம் எகிற,
அவளுக்கு விழி பிதுங்கியது. ஏதோ ப்ரத்யூ உதவியாக கேட்க செய்யலாம் என்று எண்ணி செய்திருக்க இது தனக்கெதிரே திரும்பும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.
அவளை பேசி திட்டி துரத்திவிடலாம் என்று எண்ணியிருந்தவளுக்கு இப்போது சூழ்நிலையை எப்படி கையாள்வது என தெரியவில்லை.
திருதிருத்து போயிருந்தாள். அவளது நிலையை கண்ட இத்திட்டத்தில் துணை போன ப்ரத்யூவின் தோழி,
“சரி விடுங்க அவங்க செயினை காணோமேன்ற பதட்டத்துல இவங்க எடுத்துருப்பாங்களோன்னு நினைச்சிட்டாங்க” என்க,
“அதெப்படி விட முடியும். இதுவே எங்க வீட்டு பொண்ணு உங்க மேல பழி போட்டு இருந்தா இதே மாதிரி மன்னிச்சு விட்ருவீங்களா?” என்ற குரலில் கனியின் குடும்பத்தினர் அனைவருக்கும் அதிர்ச்சி.
காரணம் அந்த குரலுக்கு சொந்தக்காரர் கஸ்தூரி.
கனியே ஒரு நொடி புருவம் சுருக்கி பார்த்தாள்.
பார்த்தீபன் தாயை மெச்சும் பார்வை பார்த்தான்.
பிரவீன், “ஆமா அத்தை சொல்றது கரெக்ட் நீங்க இது மாதிரி விடுவிங்களா?” என்று வர,
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த பார்த்தீபன்,
“வினோதினி சொன்னது மாதிரி எங்க வீட்டு பொண்ணு கால்ல விழுந்து மன்னிப்பு நீ கேட்கணும்” என்ற பார்த்தீபனின் குரலில் நீ செய்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.
இப்படி வந்து மாட்டி கொண்டோமே? இவளது காலிலா விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும். இது மட்டும் குடும்பத்தினருக்கு தெரிந்தால் என்ன ஆவது என்று பயத்தில் முகம் வெளுத்தது.
ப்ரத்யூவின் தோழி, “தெரியாம செஞ்சதுக்கு கால்ல விழ வைக்கிறது கொஞ்சம் டூ மச்” என்க,
“என் அக்கா இந்த வீடியோவ கண்டுபிடிச்சு போடலைன்னா இந்நேரம் அவ தான் செயினை எடுத்து இருப்பான்னு அவமானப்படுத்தி இருப்பிங்கள்ல கால்ல விழுங்க” என்று பிரவீன் வெடுக்கென்று கூற,
‘நீ என் காலில் இப்போது விழுந்தாக வேண்டும்’ என்ற தோரணையில் வந்து கனி அவள் முன் நிற்க,
வினோதினி கையில் இருந்த குழந்தையை அருகில் இருந்தவளிடம் கொடுத்துவிட்டு ப்ரத்யூவை பார்த்தாள்.
‘பேசாம இவ தான் செய்ய சொன்னதுனு போட்டு கொடுத்துடலாமா?’ என்று சிந்தித்து அவளை காண,
வினோதினியின் எண்ணத்தை படித்த ப்ரத்யூவிற்கு வயிற்றில் பயப்பந்து உருண்டது.
அவள் உண்மையை கூறிவிட்டாள் அடுத்து தான் தான் அவளது இடத்தில் இருக்க வேண்டும் என்று தோன்றிட பகீரென்றது.
சடுதியில் கனியின் அருகே சென்றவள்,
“அக்கா” என்று அழைக்க,
கனி வியப்பில் புருவம் உயர்த்தி பார்த்தாள்.
‘சீ இவளை எல்லாம் அக்கான்னு கூப்பிட வேண்டியது இருக்கே…’ என்று மனதிற்குள் நொந்தவள்,
“அக்கா அவங்க பாவம் தெரியாம உன் மேல பழிய போட்டுட்டாங்க விட்ரலாமே” என்று அவளது கையை பிடிக்க,
மொத்த குடும்பமும் ஆச்சர்யமாக காண,
கற்பகத்திற்கும் கோதைக்தும் கசந்து வழிந்தது.
சட்டென்று கனியின் இதழ்களில் மென்னகை பிறக்க,
“ரொம்ப வருஷம் கழிச்சு என் தங்கச்சி என்கிட்ட பேசி இருக்கா அதுவும் உங்களுக்காக அதுனால விட்டுட்றேன். இனிமே எதையும் விசாரிக்காம யாரையும் பிளேம் பண்ணாதிங்க” என்றவள் திரும்பி,
“எனக்காக உதவிக்கு வந்தவங்களுக்கு ரொம்ப நன்றி. இப்போ இவங்களுக்கு உதவி தேவைப்படுது. எல்லோரும் சேர்ந்து இவங்க பாப்பாவோட செயினை தேடி தருவோம். விருப்பம் இருக்கவங்க என்கூட வந்து தேடுங்க” என்றவள் தேடுதல் வேட்டையில் இருங்க,
நடப்பதை பதைபதைப்புடன் பார்த்திருந்த சிவப்பிரகாசத்திற்கு இரு மகள்களும் பேசிவிட்டதில் அகமும் முகமும் மகிழ்ந்து போனாள்.
ப்ரத்யூவிடமும் திரும்பி, “வா அவங்க செயினை தேடி தருவோம்” என்று அழைக்க,
அவளும் வேறு வழியின்றி தேட துவங்கினாள்.
கஸ்தூரி, “அண்ணி ரொம்ப வருஷம் கழிச்சு உங்க ரெண்டு பொண்ணுங்களும் சமாதானம் ஆகி இருக்காங்க” என்று மகிழ்வுடன் கூற,
கற்பகமும் வேறு வழியின்றி, “ஹ்ம்ம் ஆமா அண்ணி” என்று சிரித்து வைக்க,
“நான் சொன்னேன்ல அந்த பொண்ணு எடுத்திருக்க வாய்ப்பு இல்லைன்னு. அந்த பொண்ணு நல்ல பொண்ணு தான் போலண்ணி. நாம தான் தப்பா நினைச்சு இருக்கோம்” என்று வேறு கூற,
மற்ற இருவருக்கும் ‘ஐயோ’ என்று வந்தது.
இருந்தும் வேறு வழியின்றி கஸ்தூரி பேசுவதை கேட்டனர்.
நிவிஷா வேறு ப்ரத்யூவிடம், “என்னடி அவளை போய் அக்கான்னு கூப்பிட்ட” என்று வருத்தமாக கேட்க,
“வேற வழியில்லாம கேட்டுட்டேன்டி விடு” என்றவள் செயின் தொலையவில்லை என்று தெரிந்தும் தேடுவது போல நடித்து கொண்டிருந்தாள்.
வினோதினிக்கே சிறிது குற்றவுணர்வு ஆகிவிட அவசர அவசரமாக யாருக்கும் தெரியாமல் அந்த செயினை ஒரு நாற்காலியின் கீழே போட்டுவிட்டாள்.
இங்கு பிரவீன், “அக்கா உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை. உன் மேல திருட்டு பழி போட்டவங்களுக்கு நீ உதவி பண்ணிட்டு இருக்க” என்று சலிப்புடன் கேட்க,
“பிரவீன் இருக்கது ஒரு வாழ்க்கை டா. அதுல எதுக்கு இந்த கோவம் பழி உணர்ச்சி எல்லாம் முடிஞ்ச அளவு எல்லாருக்கும் உதவி செஞ்சிட்டு வாழ்வோம்” என்று புன்னகையுடன் கூறவிட்டு நகர,
அவர்களுக்கு சற்று தள்ளி நின்றிருந்த பார்த்தீபனுக்கு இது கேட்டுவிட அவனது இதழ்களில் புன்னகை பிறந்தது.
இந்த பெண் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு செய்கையிலும் அவனுக்கு தனித்துவமாக தெரிந்தாள். புதிதாக இருந்தாள்.
அவளது குணத்தால் இன்னுமின்னும் அவனது கண்களுக்கு பேரழகியாகி போனாள்.
இவளால் எப்படி இவ்வாறு இருக்க முடிகிறது என்று தான் வினா ஒவ்வொரு முறையும் எழுகிறது.
கொஞ்சம் கொஞ்சமாய் அவள் தனக்குள் இறங்கி கொண்டிருப்பதை உணராதவன் அவளையே ரசனையாக பார்த்திட,
இதனை கவனித்த ப்ரத்யூ, “ஐயோ ஐயோ இவளை அவமானப்படுத்தி துரத்திவிட பிளான் பண்ணிட்டு நானே இவளை ஹீரோயின் ஆக்கிட்டேனே. அத்தான் வேற அப்படி பாத்திட்டு இருக்காரே” என்று வயிறு எரிய புலம்பி கொண்டு இருந்தார்.
சில நிமிடங்களில் யாரோ ஒருவர் வினோதினி கீழே போட்ட செயினை எடுத்து தந்துவிட, அவள் நன்றி கூறி பெற்று கொண்டாள்.
அதன் பிறகு அவரவர் இடத்துக்கு சென்று உணவுன்னும் பணியை துவங்கினர்.
கனியும் உணவுன்ன செல்ல அவளருகே காலியாக இருந்த இருக்கையில் பார்த்தீபன் வந்து அமர,
“வாங்க அத்தான்” என்று சிரிப்புடன் வரவேற்றான்.
பிரவீன் மனதில் கனிக்கு பார்த்தீபனை திருமணம் செய்து வைக்க நிறைய ஆசை இருந்தது.
நடந்து கொண்டிருப்பதை கண்டவன் தனது ஆசை நிறைவேறிவிடும் என்று எண்ணி கொண்டான்.
கனி அவன் புறம் திரும்பாது அமர்ந்திருக்க,
“அக்கா அத்தானுக்கு தண்ணீ கொடு” என்று தண்ணீர் பொத்தலை நீட்ட,
அதனை வாங்கியவள் அவன் முகம் காணாது கொடுக்க,
“அக்கா அத்தானுக்கு குலோப் ஜாமுன் பிடிக்கும்ல இந்தா கொடு” என்று கிண்ணத்தை கொடுக்க,
அதையும் திரும்பாமலே கொடுத்தாள்.
“அக்கா அத்தானுக்கு” என்று பிரவீன் துவங்கவும் நிமிர்ந்து அவனை முறைத்தவள்,
“நான் அந்த சைடு மாறிக்கிறேன். நீயே உன் அத்தானை நல்லா கவனிச்சுக்கோ” என்க,
‘உள்ளதும் போய்விடும் என்று அஞ்சியவன் சிரித்து சமாளித்து,
“இல்லை என் ஃப்ரெண்ட்ஸ் பக்கத்துலயே உட்கார்ந்துக்கிறேன்” என்று நண்பர்களிடம் பேச துவங்க,
இதனை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த ப்ரத்யூ,
“ம்மா எல்லாம் உன்னால தான். ஏன் மா இப்படி பண்ண?” என்று தாயிடம் காய,
“ஏய் நான் என்ன வேணும்னாடி பண்ணேன். அவளை அவமானப்படுத்த தான் பிளான் பண்ணேன் நம்ம நேரம் இப்படி ஊத்திகிச்சு”
“எல்லாம் உன்னால வீணா போன ஐடியாவால தான். பேசாம நானே அவளை ஆள வச்சு போட்டு தள்ளி இருப்பேன்” என்று பொறும,
“இவ ஒருத்தி கொல்றதுலே குறியா இருக்கா. கொண்ணுட்டு ஜெயிலுக்கு போய்ட்டா பார்த்தீக்கு கூட எப்படி வாழ்வ” என்று முறைத்தார்.
அதில் இருந்த உண்மை புரிய ப்ரத்யூ அமைதியாகி பின்,
“ம்மா இவனை நீ தான் பெத்தியா? இல்லை ஹாஸ்பிட்டல்ல பிள்ளை மாறிடுச்சா?” என்று கடுப்புடன் கேட்க,
“அதான் உங்கப்பாவ உரிச்சு வச்சு இருக்கானே அப்புறம் என்னடி சந்தேகம்”
“அவன் மட்டும் ஏன் மா நம்மள மாதிரி இல்லை. அந்த அநாதைக்கு கூஜா தூக்கிட்டு இருக்கான். விட்டா அவனே ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடுவான் போல” என்க,
“ஏய் வாயை கழு. அந்த அநாதை கழுதைக்கு என் மருமகன் கேட்குதா? பார்த்தீ உனக்கு தான்” என்று அழுத்தம் திருத்தமாக மொழிந்தார்.
“நடக்குறதெல்லாம் பாத்தா அப்படி தெரியலையே மா” என்று அவர்களை காண்பித்தவள்,
“பேசாம எழுந்து போய் அவளை நாலு அரை விட்றவா?”
“அப்புறம் வினையே வேணாம் பார்த்தீ இந்த ஜென்மத்தில உன்னை கட்டிக்க மாட்டான்” என்ற கற்பகம்,
“அமைதியா இரு. அவளை துரத்த வேற ஐடியா பண்ணுவோம்” என்க,
“ஆமா உன் ஐடியாவை தூக்கி குப்பைல போடு. ஏற்கனவே குடுத்த ஐடியாவுல தான் அவ ஹீரோயின் ஆகிட்டா. அடுத்த ஐடியால ரெண்டு பேருக்கும் நீயே கல்யாணம் பண்ணி வச்சாலும் வச்சிடுவ” என முறைத்தாள்.
“ஏய் ஒரு தடவை தான் சொதப்பிடுச்சு. நெக்ஸ்ட் டைம் கரெக்டா பண்ணலாம்” என்க,
“வேணாம் இனிமே யார் ஐடியாவும் வேணாம் நானே பாத்துக்கிறேன்”
“பாத்து கிழிப்ப. நீயும் தான் வீட்டுக்குள்ள பூட்டி வச்சு வர விடாம பண்ண. இப்போ பாரு பார்த்தீயோட ஜோடி போட்டுட்டு வந்து நிக்கிறா” என்று மகள் திட்டியதில் பதிலுக்கு காய்ந்தாள்.
இவர்களது சண்டையை கவனித்த கோதை,
“ரெண்டு பேரும் இப்படி சண்டை போட்டுட்டு இருங்க. அந்த கேப்ல அவ என் பேரனை கொத்திட்டு போகட்டும்” என்க,
“பாட்டி”
“ம்மா” என்று இருவரும் ஒரு சேர முறைத்னர்.
“அடியே இப்படி சண்டை போட்றதை விட்டுட்டு நான் சொல்றதை கேளுங்க”
“என்ன பாட்டி நீயும் ஐடியா சொல்ல போறீயா?”
“ஐடியா தான் ஆனால் அவளை வெளியே துரத்துறதுக்கு இல்லை. உனக்கும் பார்த்தீக்கும் கல்யாணம் பண்ண”
“வாவ் நிஜமாவா பாட்டி?”
“ஆமாடா தங்கம்” என்றவர்,
“கற்பகம் பாப்பாக்கு படிப்பு முடிய போகுதுல பேரனுக்கு வயசு கூடுது. உன் வீட்டுக்கார்கிட்ட சொல்லி கிரிக்கிட்ட பேச சொல்லு. அவர் கேட்டா கிரியால மறுக்க முடியாது. கிரி சொன்ன பேச்சை பேரனும் மீற மாட்டான்” என்று முடித்திட,
“வாவ் சூப்பர் பாட்டி. ம்மா பாட்டி சொல்றது நல்ல ஐடியாவா இருக்கு. சீக்கிரம் அப்பாக்கிட்ட பேசு” என்க,
“இன்னைக்கு நைட்டே பேசிட்றேன்”
“பாட்டி நீ என் செல்ல பாட்டி தங்க பாட்டி. உனக்கு எப்படி இப்படி நல்ல ஐடியா வந்துச்சு” என்று ப்ரத்யூ பாட்டியை கொஞ்ச துவங்கினாள்.
இங்கு பார்த்தீயோ சில கணங்கள் அமைதியாக இருந்துவிட்டு பின்னர் தொண்டையை செரும,
கனி குனிந்த தலை நிமிராது சாப்பிட்டு கொண்டிருந்தாள்.
இது வேலைக்காது என்று நினைத்தவன்,
“கனி” என்று அழைத்துவிட,
சடுதியில் நிமிர்ந்து பார்த்தவளது விழிகள் கங்கினை கக்கியது.
அதில் தனது செயலை உணர்ந்தவன்,
“சாரி மிஸ் கன்னல்மொழி” என்று சிரிப்புடன் மொழிய,
‘என்ன?’ என்று கண்களால் மிரட்டினாள்.
‘ப்பா என்ன கண்ணுடா’ என்று உள்ளுக்குள் கூச்சல் எழுந்தது.
அதில் புன்னகை இமை நீள,
“யூ லுக் பியூட்டிபுல் இன் திஸ் சாரி” என்க,
“தாங்க்ஸ் பார் யுவர் காம்ப்ளிமென்ட்” என்று போலியாக சிரித்து வைத்தாள்.
“இப்போலாம் நீ என் கண்ணுக்கு ரொம்ப புதுசா தெரியிற. இது நான் சின்ன வயசுல பார்த்த என் மாமா பொண்ணு தானான்னு சந்தேகமா இருக்கு”
“எல்லாரும் எப்பவும் ஒரே மாதிரி இருக்க முடியாது மிஸ்டர் பார்த்தீபன்” என்று அழுத்தமாக கூறியவள் பட்டென்று எழுந்து செல்ல,
போகிறவளை இமைக்காமல் பார்த்தவனது இதழ்கள்,
“கோவக்காரி” என்று முணுமுணுக்க விழிகளில் ரசனை தொக்கி நின்றது.
அவனை பார்வையை கவனி
த்த பிரவீன்,
“என்னத்தான் அக்காவ சைட் அடிக்கிறிங்களா?” என்று சிரிப்புடன் கேட்டு கண்ணடிக்க,
“டேய் சாப்பிட்ற வேலையை பாரு” என்று சிரிப்புடன் அதட்டியவன் அதே முகபாவனையுடன் அவன் பின்னே எழுந்து சென்றான்.
இதுவரை பார்த்த
பெண்ணில்
உன்னை போல
என்னை யாருமே
அழகாலே கொன்று
தின்று உயிர் மீட்டு
தர வில்லையே…