• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 11

Administrator
Staff member
Messages
516
Reaction score
796
Points
93
ஜென்மம் 11:

நிலா மழை மொழி அலை

பனி இருள் கிளி கிளை
நீயும் நானும்
தெகட்ட தெகட்ட

ரசிக்கணும்…

“ப்ரத்யூ உன்னை தான் கேக் கட் பண்ண கூப்பிட்றாங்க?” என்று அருகில் இருந்த தோழி உலுக்க,

“ஹான்” என்று சுய நினைவை அடைந்தவள் ஒரு கணம் மலங்க மலங்க விழித்தாள்.

“என்னடி ஏன் இப்படி முழிக்கிற போ” என்க,

“ஹ்ம்ம் போறேன்” என்றவள் கனியை தேட,

அவள் பிரவீன் அருகில் சிரிப்புடன் நின்று இருந்தாள்.

‘என்ன இங்க அழுக வச்சிட்டு நீ மட்டும் சிரிக்கிறியா? இருடி இன்னைக்கு உன்னை இங்க இருந்து அவமானப்மடுத்தி துரத்திவிடலை என் பேரு ப்ரத்யூ இல்லை’ என்று மனதிற்குள் சபதம் எடுத்தவள் முகத்தை முயன்று சாதரணமாக வைத்தவாறே சிரித்தபடி பிரவீன் அருகே சென்றாள்.

பின்னர் இருவரும் கேக்கை வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டி கொள்ள எல்லோரும் கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பிரத்யூ பிரவீனுக்கு ஊட்டிய பிறகு,

“அத்தான் உங்களுக்கு தான் பர்ஸ்ட்” என்று ஊட்ட வர,

பார்த்தீபனும் புன்னகையுடன் அதனை பெற்று கொண்டு அவளுக்கும் ஊட்டிவிட்டான்.

பிரவீன் கனிக்கு ஊட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.

ஒவ்வொருவராக பரிசு வழங்க துவங்க சிவப்பிரகாசம் இருவருக்கும் தனித்தனியாக ஒரு கடலோர பங்களாவை பரிசளிக்க பிரவீன் புன்னகையுடன் பெற்று கொள்ள,

பிரத்யூ, “வாவ் சூப்பர் டாடி. நான் என் ஃப்ரெண்ட்ஸோட டைம் ஸ்பெண்ட் பண்ண சூப்பர் ப்ளேஸ்” என்று அத்தனை ஆரவாரம் செய்தாள்.

கோதை பேரன் பேத்தி இருவருக்கும் தங்க நகைகளை பரிசளித்தார்.

கஸ்தூரி கிரிதரன் தம்பதியினரும் பரிசை கொடுத்தனர்.

ப்ரத்யூ, “அத்தான் நீங்க என்ன கிஃப்ட் கொடுக்க போறீங்க” என்று அவனது கையை பிடித்து கொள்ள,

“அதான் என் சார்பா உன் அத்தை மாமா கொடுத்துட்டாங்களே” என்க,

“அது அவங்க கிஃப்ட் நீங்க எனக்கு எதுவும் வாங்கிட்டு வரலையா?” என்று சுருதி இறங்கிய குரலில் கேட்க,

நிவி, “ண்ணா பர்த்டே பேபிய பீல் பண்ண வைக்காத. கிஃப்ட கொடுத்திடு” என்றவள்,

“உனக்காக அண்ணா தேடி பிடிச்சு ஒரு கிஃப்ட் வாங்கிட்டு வந்து இருக்காங்க” என்று ப்ரத்யூவிடம் மொழிய,

“நிஜமாவாத்தான்” என்று ப்ரத்யூ விழிகளை விரிக்க,

பார்த்தீபனது விழிகள் சடுதியில் கனியிடம் சென்று மீண்டது.

புன்னகையுடன் தான் வாங்கி வந்த பரிசை நீட்ட,

“என்ன வாங்கிட்டு வந்து இருக்கிங்கத்தான்” அவள் ஆர்வமாக அதனை பிரித்து பார்க்க,

வைரக்கற்கள் பதித்த அழகான ஆரம் இருந்தது. விலை எப்படியும் பல லட்சக்கங்களை விழுங்கி இருக்கும் அது‌.

கண்ணை பறித்த அதன் அழகில் தன்னை மறந்து ரசித்தவள்,

“வாவ் அத்தான் கிஃப்ட் வேற லெவெல்” என்று ஆர்ப்பரித்தவள்,

“இதை இப்போவே நான் போட்டுக்கிறேன்” என்றவள் தான் அணிந்து இருந்ததை கழட்டி வைத்துவிட்டு அதனை அணிந்தாள்‌.

அவள் அணிந்திருந்த உடைக்கு அத்தனை அழகாய் பொருந்த குட்டியாய் பொம்மை போல அவ்வளவு அழகாய் இருந்தாள் ப்ரத்யூ.

“எப்படி இருக்குத்தான்” என்று அவள் கேட்கும் முன்பே,

“டால் மாதிரி அழகா இருக்க ப்ரத்யூ” என்று பார்த்தீ கூறிட,

அவளுக்கு கால்கள் தரையில் இல்லை. வானத்தில் பறந்து கொண்டிருந்தாள்.

“ம்மா அத்தான் எனக்கு வாங்கி கொடுத்தாங்க” என்று அங்கிருந்த ஒவ்வொரிடமும் பெருமையாக கூறி மகிழ்ந்தாள்.

அவள் செய்வதை சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தான் பார்த்தீபன்.

பிறகு எல்லோருக்கும் கேக் இனிப்பு மற்றும் குளிர்பானங்கள் பகிரப்பட்டது.

டி.ஜே மூலம் பாட்டு ஒலிக்கப்பட அங்கே இளைஞர்கள் பாட்டு பாடி ஆரவாரம் செய்ய துவங்கினார்கள்.

பெரியவர்களும் சிலர் கலந்து கொண்டு தங்களது இளமையை புதுப்பித்து கொண்டிருந்தனர்.

ஓரிடத்தில் அமைதியாக வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் கனி.

ப்ரத்யூ செய்யும் அலப்பறையை கண்டவளுக்கு இரண்டு நாட்கள் முன்பு அவள் செய்தது நினைவில் வந்து போனது.

பிரவீனிடம் பார்த்தீபனை வர சொல்லி அழைத்த போது,

“என்ன கூப்பிட்டேன்னு பிரவீன் சொன்னான்? எதாவது பெயின் இருக்கா?” என்று வினவ,

“அதெல்லாம் எதுவும் இல்லை. இதை பிடிங்க” என்று கையில் இருந்து சில ரூபா நோட்டுகளை நீட்ட,

அதனை வாங்காதவன் கேள்வியாக புருவம் நெறிக்க,

“என்ன வீடு வரைக்கும் அழைச்சிட்டு வந்ததுக்கு உங்க காருக்கு சார்ஜ்” என்றாளே பார்ப்போம்.

பார்த்தீபனுக்கு கோபம் பொத்து கொண்டு வந்தது.

“ஏய் நீ ரொம்ப போற” என்று அனலை கக்க,

“அப்படிதான் போவேன். நீங்க யாரு பர்ஸ்ட் எனக்கு ஹெல்ப் பண்ண? உங்களுக்கு எனக்கும் நடுவுல என்ன இருக்கு? பாஸ் எம்பிளாயின்ற ரிலேஷன்ஷிப் எல்லாம் ஆபிஸோட முடிஞ்சது‌. இந்த காசை பிடிங்க”என்று பதிலுக்கு தானும் முறைக்க,

அவளது பேச்சினால் பெருகிய கோபத்தை கட்டுப்படுத்தியவன் பேச்சை வளர்த்து சண்டையை பெரிதாக்க விரும்பாமல் அங்கிருந்து நகர முயற்சிக்க,

“ப்ச் காச வாங்கிட்டு போங்க” என்றவள் ஏதோ நினைவில் காலை எடுத்து கீழே ஊன்றிவிட்டாள்.

வலியில் உயிர்போய்விட,

“அம்மா” என்று அலறியடி காலை பிடிக்க போக,

“ஏய் கனி” என்றவன் ஓடி சென்று அவள் காலை தன் கையில் எந்தியிருந்தான்.

“அறிவே இல்லையா உனக்கு. வாய் மட்டும் காது கிழிய பேசுற” கடிந்தவன் அவளது காலை ஆராய,

கனி பல்லை கடித்து வலியை பொறுத்து கொண்டிருந்தாள்.

சரியாக அதே நேரம் தான் உள்ளே நுழைந்தாள் ப்ரத்யூ.

அவளது விழிகளில் பார்த்தீபன் கனியின் காலை ஏந்தியிருந்த காட்சி விழுக,

கனவிலும் கற்பனை செய்யாத ஒன்றை கண்டவள் காலையில் அடைந்த அதிர்ச்சியின் விளைவால் பட்டென்று மயங்கி விழுந்திருந்தாள்.

அவள் விழுந்த சத்தத்தில் திரும்பி பார்த்த பார்த்தீ,

“ஏய் ப்ரத்யூ என்னாச்சு?” என்று பதறி கனியை கட்டிலில் அமர வைத்துவிட்டு வந்து அவளை மடியில் ஏந்தி,

“ப்ரத்யூ என்னாச்சு கண்ணை முழிச்சு பாரு” என்று கன்னத்தை தட்ட,

சத்தம் கேட்டு உள்ளே வந்த பிரவீனும் பதறி,

“ப்ரத்யூ என்னாச்சு” என்று அவளை உலுக்க,

கனி, “பிரவீன் அவ ஷாக்ல தான் மயங்கி இருக்கா. தண்ணீயை எடுத்து தெளிச்சுவிடு” என்க,

அவனும் தண்ணீர் பொத்தலை எடுத்து அவள் முகத்தில் நீரை தெளித்தான்.

அதில் லேசாக விழிகளை திறந்தவள்,

“அத்தான் நீங்க எனக்கு மட்டும் தான் அத்தான் அவக்கிட்ட பேசாதீங்க.‌ நீங்க எனக்கு மட்டும் தான் அத்தான்” என்று பிதற்றி அவனை இடையோடு கட்டி கொண்டவள் அழவே துவங்கியிருந்தாள்.

இவளது அலறல் கேட்டு மேல ஓடி வந்த கற்பகம்,

“ஐயோ என் பொண்ணுக்கு என்னாச்சு”என்று பதற,

“அத்தை ஒன்னுமில்லை லேசான மயக்கம் தான்” என்றவன்,

“வா உன் ரூமுக்கு போகலாம்” என்று அவளை கைத்தாங்கலாக எழுப்ப முயல,

“ம்ஹூம் நீங்க எதுக்கு அவ காலே பிடிச்சிங்க சொல்லுங்க” என்று அழுகையுடன் கேட்க,

கற்பகம், “என்னது காலை பிடிச்சியா?” என்று அதிர,

“ப்ரத்யூ அவ கால் தடுமாறிவிழ போனா. அடிபட்ட கால்ல அகெய்ன் அடிபடாம இருக்க தான் அவளை பிடிச்சேன் போதுமா?” என்றவன்,

“வா போகலாம்” என்று எழுப்பினான்.

எழுந்து நின்று அவனது சட்டையை இறுக பிடித்தவள்,

“ம்ஹூம் நீங்க எனக்கு மட்டும் தான் அத்தான் சொல்லுங்க. எனக்கு மட்டும் தான் அத்தான்னு சொல்லுங்க அவளுக்கு நீங்க அத்தான் கிடையாது” என்று அழுகையும் பிடிவாதமுமாக மொழிய,

நிவி, “ண்ணா அவ தான் அழறால பதில் சொல்லுங்க. நீங்க அவளுக்கு மட்டும் தான் அத்தான்னு” என்று மொழிய,

சட்டென்று பார்த்தீபனது பார்வை கனியின் புறம் திரும்ப அவள் யாருக்கு வந்த விருந்தோ என்று அலைபேசியை குனிந்து பார்த்து கொண்டிருந்தாள்.

ப்ரத்யூவிடம் திரும்பியவன், “நான் உனக்கு மட்டும் தான் அத்தான் போதுமா? வா ரூம்க்கு போகலாம்” என்க,

கற்பகம், “நல்லா இருந்த வீட்டுல ஆமை புகுந்த மாதிரி என்னைக்கு இவ வந்தாளோ அன்னையில இருந்து வீடு விளங்காம போய்ட்டு இருக்கு” என்று கனியை சாட,

பார்த்தீபனுக்கு உள்ளே இறுகியது. தான் ஏதாவது பேசினால் அது நிச்சயமாக கனியின் புறம் தான் மீண்டும் திரும்பும் என்று எண்ணியவன் அமைதியாக ப்ரத்யூவை அழைத்து கொண்டு அவளறைக்கு சென்றான்.

அங்கு சென்றும் ப்ரத்யூ,

“அத்தான் அவளை நம்பாதிங்க. அவ ஒரு ஏமாத்துக்காரி கொலைக்காரி உங்களை ஏமாத்திடுவா. அவ கூட நீங்க பேசுறது எனக்கு பிடிக்கலை. நீங்க‌ எனக்கு மட்டும் தான் அத்தான்” என்று பிதற்றலை தொடர,

ப்ரத்யூவை சாமாதானம் செய்வதற்குள் பார்த்தீக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.

இங்கு அவர்கள் நகர்ந்ததும் அறையை தாழ் போட்டவள் தனது மெத்தையில் விழிகளை மூடி படுத்துவிட்டாள்.

மனம் அத்தனை வெறுமையாக இருந்தது.

இங்கே பார்த்தீ சிறு பெண் ஏதோ உரிமை போராட்டத்தில் இவ்வாறு செய்கிறாள் போக போக சரியாகிடும் என்று எண்ணி கிளம்பியிருந்தான்.

யாரை பற்றி நினைத்து கொண்டிருந்தாளோ அவளே அருகில் வந்து,

“ஏய் பிச்சைக்காரி நீ இதுக்கு முன்னாடி இது போல பைவ் ஸ்டார் ஹோட்டல்ல பங்க்ஷன் அட்டென்ட் பண்ணி இருக்க மாட்டேலே அதான் ஆன்னு வாயை பிளந்து பாத்திட்டு இருக்க” என்று அவளது கவனத்தை கலைக்க,

கனியின் இதழ்களில் இனம்புரியாத புன்னகை தவழ்ந்தது.

அது ப்ரத்யூவை வெறுப்பேற்ற,

“ஏய் என்ன பதில் இல்லைனா சிரிச்சு சமாளிப்பியா? இங்க பாரு என் அத்தான் எனக்கு டைமண்ட் நெக்லஸ் வாங்கி கொடுத்து இருக்காரு. இதோட ரேட் தெரியுமா? இதெல்லாம் நீ கண்ல கூட பாத்திருக்க மாட்ட” என்று அவளை வம்பிழுக்க,

இதழ்களில் நக்கல் சிரிப்பை தவழவிட்டவள்,

“உனக்கு நெக்லஸ் மட்டும் தான் கொடுத்தாரு” என்றவள் நெருங்கி ரகசிய குரலில்,

“எனக்கு என்ன கொடுத்தாரு தெரியுமா?” என்று கேட்க,

அவளது தோரணை ப்ரத்யூவிற்கு வயிற்றில் பயப்பந்தை உருள செய்ய,

“எ… என்ன கொடுத்தாரு?” என்று கேட்க,

“அது…” என்று துவங்கியவள்,

“போ எனக்கு வெக்கமா இருக்கு” என்று போலியான சிரிப்புடன் முகத்தை திருப்பி கொள்ள,

ப்ரத்யூவிற்கு வயிறு பற்றி ஏரிந்தது.

“ஏய் நீ… நீ பொய் சொல்ற. என்னை வெறுப்பேத்தணும்னே பொய் சொல்ற” என்று வார்த்தைகள் வராது தடுமாற,

“உன்கிட்ட பொய் சொல்லி எனக்கு என்ன கிடைக்க போகுது? நீ வேணா உன் அத்தான்கிட்ட போய் காருக்குள்ள அவளுக்கு என்ன கொடுத்திங்கன்னு கேளேன்” என்க,

சரியாக தோழி கூறியது வேறு வந்து செவியில் மோத இவளுக்கு கற்பனை எங்கெங்கோ பறந்தது.

முகம் அச்சத்தில் வெளுத்து போனது.

“ஏய் உன் பேஸ்லாம் ஏன் இப்படி ஆகிடுச்சு? மறுபடியும் மயக்கம் போட்டு விழுந்திடாத போ போய் அந்த சேர் ப்ரீயா இருக்கு பாரு அங்க உட்காரு” என்று கையை காண்பிக்க,

கனியை அவமானப்படுத்த வந்தவள் தானே நொந்து போய் அங்கிருந்து நகன்றாள்.

அவள் நகர்ந்ததும் கனி எழுந்து சென்று பிரவீனிடம்,

“பர்த்டே பாய்க்கு கிஃப்ட் எதுவும் வேணாமா?” என்க,

“குடுத்தா வேணாம்னு சொல்ல மாட்டேன்” என்று சிரித்தான் பிரவீன்.

“இந்தா” இந்த தனது பையில் இருந்து ஒரு காகித உரையை எடுத்து அவனிடத்தில் நீட்டினாள்.

“என்னக்கா இது?”

“பிரிச்சு பார்த்தா உனக்கே தெரியும்.‌ இப்போ வேணாம் வீட்டுக்கு போய் பிரிச்சு பாரு” என்க,

சமமதமாக தலையசைத்தவன் தனது சட்டை பையில் பத்திரப்படுத்தி கொண்டான்.

இங்கு பார்த்தீபன் யாரிடத்தில் பேசி கொண்டு இருந்தாலும் அவ்வபோது பார்வை கனியிடத்தில் பதிந்து மீண்டது.

இங்கு கனியிடத்தில் பேசிய பிறகு ப்ரத்யூவிற்கு இருப்பு கொள்ளவில்லை.

அவள் கூறியதை கேட்டதில் இருந்தே பார்த்தீபன் தனக்கு கிடைக்க மாட்டானோ என்ற பயம் ஆட்டி படைத்தது‌.

தன் தாயிடம் வந்து நடந்ததை கூறியவள்,

“ம்மா எனக்கு‌ அவளை கொல்லணும் போல ஆத்திரம் வருதும்மா. பேசாம அவளை ஆளை வச்சு கொலை பண்ணிடலாமா?” என்று வெறியுடன் கேட்க,

“ஏய் அவசரப்பட்டு அந்த மாதிரிலாம் பண்ணிடாத. அப்புறம் ஜெயில்ல களி தான் திங்கணும். நான் ஒரு ஐடியா வச்சு இருக்கேன். இப்போவே அதை எக்ஸ்க்யூட் பண்ணா அவளை இங்கயே அவமானப்படுத்தி துரத்திவிட்றலாம்” என்று கற்பகம் கூற,

“என்ன ஐடியா மா. சீக்கிரம் சொல்லு?” என்க,

கற்பகம் தனது திட்டத்தை கூறினார்.

அதனை ப்ரத்யூவின் முகம் பிரகாசமாக,

“வாவ் மா. வேற லெவெல் பிளான். எல்லார் முன்னாடியும் அவமானப்பட்டு வெளிய போகணும். முக்கியமா அத்தான் முன்னாடி அவமானப்படணும்” என்க,

“தப்ப கூட தப்பில்லாம பண்ணனும். முதல்ல இந்த ஹோட்டல் மேனஜரை பணம் கொடுத்து கரெக்ட் பண்ணி சிசிடிவியை ஆஃப் பண்ணனும் போய் உன் ஃப்ரெண்ட்ஸ் யாராவது பண்ண சொல்லு” என்றவர் ப்ரத்யூவிடம் அடுத்து செய்ய வேண்டியதை கூறினார்.

“சரிம்மா இப்போவே பண்றேன்” என்றவள் தனது தோழியை அழைத்து ஏதோ கூறினாள்.

அவர்களது திட்டம் வெகு சிறப்பாக நடந்தேற தன்னை சுற்றி பின்னப்படும் வலையை அறியாத கனி நடப்பவற்றை புன்னகையுடன் பார்த்திருந்தாள்.

அவளருகே, “எக்ஸ் க்யூஸ் மீ” என்ற குரல் கேட்க,

திரும்பி பார்த்த கனியின் முன் அழகான பெண் ஒருத்தி குழந்தையுடன் நின்று இருந்தாள்.

கனி, “சொல்லுங்க” என்று அவளை கேள்வியாக காண,

“நான் வாஷ் ரூம் போகணும். என் பொண்ணை கொஞ்சம் நேரம் பாத்துக்கிறிங்களா?” என்று வினவ,

கனி, “ஹ்ம்ம் கொடுங்க” என்று புன்னகையுடன் வாங்கி கொண்டவள்,

“செல்லக்குட்டி உன் நேம் என்ன?” என்று கேட்க,

“தன்விகா” என்று மழலையில் பதில் வந்தது‌.

“தன்விகாவா? நேம் ரொம்ப அழகா இருக்கு.‌ என்ன படிக்கிறிங்க?”

“நான் எல்கேஜி படிக்கிறேன்”

“ஓ… அவ்ளோ பெரிய பொண்ணா நீங்க?”

“ஆமா நான் பிக் கேர்ள்”

“இந்த ட்ரெஸ் யாரு வாங்கி கொடுத்தது அழகா இருக்கு”

“டாடி வாங்கி கொடுத்தாங்க” மகிழ்வுடன் பதில் வர,

கனியின் புன்னகை இமை நீண்டது.

இதனை கண்ட பார்த்தீபனுக்கும் கவிதையாக இருந்தது.

ஐந்து நிமிடத்தில் குழந்தையின் தாய் வந்து நன்றி கூறி குழந்தையை பெற்று கொண்டாள்.

பிறகு இரவுணவு நேரம் வர ஒவ்வொருவராக உணவருந்த சென்றனர்.

பிரவீன் வந்து, “வாக்கா சாப்பிடலாம்” என்று கனியை அழைத்து சென்றான்.

தனது நண்பர்களுடன் அமர்த்தியவன் எல்லோரிடத்திலும் தன்னுடைய அக்கா என்று பெருமையாக அறிமுகம் செய்து வைக்க,

கனிக்கு நெஞ்சம் கனிந்து போனது.

புன்னகையுடன் தானும் ஒரு சில வார்த்தைகள் பேசினாள்.

திடீரென ஓரிடத்தில் சலசலப்பு கேட்டது.

கனி என்னவென திரும்பி பார்க்க, அவளிடத்தில் குழந்தையை கொடுத்து சென்ற பெண் தான் பதட்டத்துடன் ஏதோ கூறி கொண்டிருந்தாள்.

பிரவீன், “என்னாச்சு அங்கே ஏன் சத்தம் போட்றாங்க” என்று கேட்க,

“தெரியலை வா போய் பாப்போம்” என்று அருகில் இருந்தவன் எழுந்து செல்ல,

கனியும் கூட எழுந்து சென்றாள்.

அப்பெண், “இல்லை எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி வாஷ் ரூம் போனேன் அதுக்கு முன்னாடி கூட பார்த்தேன்” என்க,

“அப்போ அதுக்கு பின்னாடி தான் தொலைஞ்சு இருக்கணும். இங்க தான் இருக்கும் தேடி பார்ப்போம்” என்று ஒருவர் கூற,

“இல்லை அது கழண்டு விழ வாய்ப்பே இல்லை. நானே கஷ்டப்பட்டு தான் கழட்டுவேன்” என்க,

“அப்போ யாரோ வேணும்னே கழட்டி இருக்கலாம்னு சொல்றிங்களாக்கா?” என்று ப்ரத்யூ கனியை பார்த்தபடி வினவ,

“அப்படி தான் நடந்து இருக்கணும்‌. ஆனால் நான் வந்ததுல இருந்து பாப்பாவ யார்க்கிட்டயும் கொடுக்கலையே” என்றவள் சடுதியில் நினைவு வந்தவளாக,

“வாஷ் ரூம் போகும் போது அங்க உட்கார்ந்து இருந்த ஒரு பொண்ணுக்கிட்ட கொடுத்துட்டு போனேன்” என்றவள் கூட்டத்தில் துழாவி,

“இதோ இந்த பொண்ணுக்கிட்ட தான் கொடுத்தேன்” என்க,

அருகில் இருந்த ஒருத்தி,

“அப்போ இவங்க தான் எடுத்தாங்கன்னு சொல்றீங்களா?” என்றிட,

“ஆமா இந்த பொண்ணு தான் எடுத்து இருக்கணும்” என்க,

“என்ன?” என்று கனி அதிர்ந்து பார்க்க,

“ஹலோ யாரை பார்த்து என்ன பேசுறீங்க?” என்று பிரவீன் சண்டைக்கு வர,

கனி, “பிரவீன் கொஞ்சம் பொறுமையா இரு பேசிக்கலாம்” என்றாள்.

“அக்கா உன்னை பாத்து நகையை திருடிட்டேன்னு சொல்றாங்க. நீ இப்பயும் அமைதியா இருக்க சொல்ற” என்று அவளிடம் மொழிந்தவன்,

“வார்த்தைய அளந்து பேசுங்க” என்றான்.

“என்ன அளந்து பேச. அவசரத்துக்கு உதவி கேட்டா இப்படி தான் குழந்தை நகையில கையை வப்பீங்களா?” என்று அந்த பெண் எகிற,

சிவப்பிரகாசம் வந்து, “ராம கிருஷ்ணன் பொண்ணு வினோதினி தானம்மா நீ” என்று கேட்க,

“ஆமா ஆங்கிள்” என பதில் அளித்தாள்.

“இது என்னோட பெரிய பொண்ணு.‌ எங்க குடும்பத்தை பத்தி உங்களுக்கு தெரியும் தான? என் பொண்ணு இந்த மாதிரி ஒரு காரியத்தை செஞ்சிருக்க மாட்டா”

“ஏதோ நீங்க பெத்து வளர்த்த பொண்ணு மாதிரி பேசுறீங்க. அநாதை ஆசிரமத்தில இருந்து வந்தவ தான அதான் வைர நகையை பார்த்ததும் கையை வச்சிட்டா” என்று மற்றொருவர் கூற,

“ஏய்…” என்று அடிக்க பாய்ந்திருந்தான் பிரவீன்‌.

அவனை இழுத்து பிடித்து நிறுத்திய கனி, “பிரவீன் பிராப்ளம் வேணாம். சிசிடிவிய செக் பண்ணுவோம்” என்றாள்.

சடுதியில் எல்லோருக்கும் அது நல்ல யோசனையாக தோன்ற, மேலாளரை அழைத்து நடந்த விவரத்தை கூறி கண்காணிப்பு கருவியை பார்க்க வேண்டும் என்று கூற,

அவரோ, “சாரி சார் நேத்துல இருந்து இங்க சிசிடிவி வொர்க் ஆகலை” என்க,

பிரவீனுக்கு வந்ததே கோபம், “சிசிடிவி ஒர்க் ஆகலைன்னா அதை சரி பண்ணி வைக்க மாட்டிங்களா? இந்த மாதிரி அவசரத்துக்கு பாக்க தான சிசிடிவி” என்று அவரிடம் எகிறினான்.

“சாரி சார் இப்போ தான் சர்வீஸ் வொர்க் நடந்துட்டு இருக்கு” என்று அவன் மன்னிப்பை வேண்டினான்.

எல்லோரும் என்ன செய்வதென சிந்திக்க,

தொழில் சம்பந்தமான ஒரு அலைபேசியை அழைப்பை வெளியே சென்று பேசிவிட்டு வந்த பார்த்தீபன் கூட்டத்தை கண்டு,

“என்னாச்சு?” என்று யோசனையுடன் உள்ளே வர,

பிரவீன், “அத்தான் அக்காவ நகை‌ திருடிட்டதா பழி போட்றாங்க” என்க,

சட்டென்று பார்த்தீபனது முகத்தில அதிர்வும் திகைப்பும் வந்து போக,

“வினோதினி யார் மேல என்ன பழி போட்டு இருக்க?” என்று தீவிர முக பாவத்துடன் கேட்க,

“எல்லாம் தெரிஞ்சு தான் அண்ணா பேசுறேன். இவக்கிட்ட தான் பாப்பாவ கொடுத்துட்டு போனேன்.‌ அதுக்கு பின்னாடி தான் காணோம்” என்று கூற,

பார்த்தீபன் பதில் மொழிவதற்குள் முன்னால் வந்தவள்,

“இது என்னோட பிராப்ளம் நானே சால்வ் பண்ணிக்கிறேன்” என்று அமர்த்தலாக கூறியவள் அப்பெண் முன்பு நின்றாள்.

ப்ரத்யூவுக்கு தான் இந்த சூழ்நிலையிலும் இவள் எப்படி இத்தனை அமைதியாக இருக்கிறாள்.‌ இந்நேரம் வேறு யாராவது இருந்தால் பயத்தில் அழுதிருப்பார்கள்.

சரியான திமிர் பிடித்தவள் என்று மனதிற்குள் நினைத்தவள் அவளை முறைத்தாள்.

அப்பெண் முன்பு தோரணையாக சென்று நின்றவள்,

“அந்த செயினை நான் தான் எடுத்தேன் அப்படிதான?” என்று அமரிக்கையாக வினவ,

“ஆமா நீ தான் திருடி இருக்க”

“ஓ… அப்படி நான் எடுக்கலைன்னு திரும்பிச்சிட்டா இவங்க எல்லார் முன்னா
டியும் என் கால்ல விழுந்து நீ மன்னிப்பு கேட்கணும்” என்று அழுத்தமாக கூற,

அதற்கு வாய்ப்பே இல்லை என்று இறுமாப்புடன் இருந்தவள்,

“அதெல்லாம் நடக்க வாய்பில்லை.‌ ஏன்னா நீ தான் எடுத்து இருக்க”

“நிரூபிச்சிட்டா?”

“சரி நீ நிரூபிச்சிட்டா நான் உன் கால்ல விழறேன்” என்க,

“ஓகே…” என்றவள் அருகில் முறைத்தபடி நின்று இருந்த ப்ரத்யூவை பார்த்து கண்ணடித்தாள்.

இதில் ப்ரத்யூ தான் திகைத்து விழித்தாள்.









 
Well-known member
Messages
368
Reaction score
255
Points
63
Kani enna panna pora nu theriyala ava pattuku ava velai ah than parthutu iruku ah appuram yen ipadi panraga last ah ivanga than bulb vanga poraga athu nallavae theriyuthu
 
Top