Member
- Messages
- 68
- Reaction score
- 1
- Points
- 8
வேந்தன்… 62
காதல்!...
இந்த வார்த்தையை மனதில் நினைக்கும் பொழுதே மனதுக்குள் ஒரு குறுகுறுப்பு உண்டாகும். பருவங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு உணர்வையும் தரக்கூடிய வார்த்தை இது.
வார்த்தை?
ம்ஹூம் அவ்வளவு சுலபமாய் “வார்த்தை” என்று சாதாரணமாய் கடந்து போகவும் முடியாது.
வர்ணங்கள் சூழ்ந்த மாயாஜாலமாய் நம்மை ஆட்டி வைக்கும் ஒரு மாயக்கயிறுதான் காதல்…
காதல் காதலர்களுக்குள் மட்டும்தான் வரணும்னு விதி ஏதும் இருக்கா?...
நட்பு, அக்கம் பக்கத்தினர், யாரென்றே அறியாத ஒரு ரயில் சினேகிதத்திடம் ஒரு இனம் புரியாத பாசம் வருமே, அவர்களின் மொபைல் எண்ணைக் கூட வாங்கத் தோன்றாது ஆனால் அவர்களை எப்போதும் மறக்கவே முடியாது. தம்பதிகள், பேரன் பேத்திகளிடம், தாத்தா பாட்டியிடம் இவர்களுக்குள்ளும் வரும்.
மனதின் ஓரத்தில் ஓர் இனிய குறுகுறுப்பு…
மெல்லிய மழைச் சாரலின் நறுமணமாய் ஒரு உணர்வு நெஞ்சுக்குள் சிலீரென்று ஊடுருவும்.
சதாகாலமும் சீற்றமாய் இருக்கும் கடலோரம் செல்லும் பொழுது சாந்தமாய் முகத்தில் படரும் தென்றல் காற்றினைப் போல இதமாய்.
என்றென்றும் இளமையைத் தரும் ஒரு உணர்வுதான் காதல்.
எனில் சில நேரம் சுமையாய்த் தோன்றலாம்,
எல்லையற்ற மகிழ்ச்சியும் தலைகுப்புற மாறிப்போகும் தருணமும் வரும்.
நெஞ்சம் உடைந்து போக அது தரும் வலியானது நேசத்தினை எரித்து கண்ணீரில் கரைய வைத்திடும்.
நேசத்தினை பிறரிடம் விட்டுத் தராது, சிரிப்புக்குப் பின்புறம் அதை ஒலித்து வைக்கச் சொல்லும்…
நொடியில் நம்மை சிதைத்துவிடும் ஆயுதம்…
காதல் உயிரைத் தரவும் செய்யும் எடுக்கவும் செய்யும்…
…..
சிபின் தன் வேலையில் கவனமாய் இருக்க. அவன் எப்பொழுது சாப்பிடுவான் குளிப்பான், தூங்குவான் என்று எதையும் யாராலும் தெரிந்து கொள்ள முடியாது போனது. அவன் மனதில் என்ன இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ளவே முடியவில்லை யாராலும்.
அவனது தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. உயிர் மனைவி விட்டுப் போனதன் வலி அவனிடம் சுத்தமாக இல்லை என்பதைப் போலவே காணப்பட்டான். முன்பு இருப்பதைப் போலத்தான் இருந்தான். துருவ் ஆரியன் எவ்வளவோ முறை அவனிடம் பேச முயற்சி செய்தாயிற்று. நின்று ஓரிரு வார்த்தையில் முடித்துக் கொள்வான்.
“என்கூட வந்து வேலையைப் பாருடா. இப்படியே சுத்திட்டு இருக்காதே” துருவ்விடம் எப்பவும் போல கண்டிப்பைக் காட்டுவதும், தாய் தந்தையிடம் பேசுவதும் எதிலும் அவன் மாற்றத்தைக் கொண்டு வரவேயில்லை.
அம்னீசியா எதுவும் வந்துருச்சா? இவர்களுக்கு சந்தேகம் வர, “சிபின் நளிரா யாருன்னு தெரியுமாப்பா?” அவன் முகத்தையே குறுகுறுவெனப் பார்த்துக் கேட்டே விட்டார்.
தன் கோபத்தை தாய் தாங்க மாட்டார் என்பதால் கண்களை மூடித் திறக்க, மிரா எதிரே இருக்கவே மாட்டார்.
மிராவோ சிபினின் நிலையை நினைத்து வருந்தித் தன் உடம்பையும் கெடுத்துக் கொள்வார். “அம்மா நீங்கதான் தேவையில்லாம வருத்திக்கறிங்க, அண்ணா எப்பவும் போலத்தான் கல்லைத் தின்ன மாதிரி விரைப்பா இருக்கான். ஐ ஹேட் திஸ் பேட் வைபரேஷன் ம்மா” துருவ்தான் சூழ்நிலையை இலகுவாக்க முயல்வான்.
“நளிரா இருக்கப்ப வீடே நல்லாருக்கும்டா. அத்த அத்தன்னு முந்தானையைப் பிடிச்சுக்கிட்டு சுத்துவா. உங்கண்ணன் அன்புல அந்தப் பொண்ணு மிரண்டு ஓடிட்டா. வீட்டுக்கு ஒரு பொண்ணு வரான்னு அத்தனை சந்தோஷம் எனக்கு. என்னோட விதிடா. நானே தடிமாடுங்களுக்கு ஆக்கிப் போடணும்னு விதிச்சிருக்கு” மிரா புலம்பலை அவனுக்கு காது குடுத்துக் கேட்கவே முடியவில்லை.
சிபின் தன் அறையில் இருந்து வெளியே வர, “ரெடி ஸ்டார்ட்… ம்ம்ம்… ஆரம்பிங்கம்மா. இப்ப நீங்க அவனை சாப்பிடக் கூப்பிடனும். அவன் வேண்டாம்னு போகணும். நீங்க அழுதுட்டு வரணும். இதான் இன்னைக்கு சீன் ஓகேவா” எப்போதும் நடப்பதை அவன் பிசகாமல் கூற.
கேலி செய்யும் அவனைக் கண்டுகொள்ளாது, “சிபின்! கண்ணா நில்லுப்பா” மிரா அவன் பின்னேயே ஓடினார்.
“என்ன மாம்?” தாயின் வார்த்தைகளுக்காக நின்றான்.
மகன் எதையும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் அவருக்குப் புரியாதா? மகனின் கன்னத்தை வருடித் தந்தவர் “சாப்பிடுப்பா. உனக்குப் பிடிச்சதுதான் செஞ்சேன் இன்னைக்கு” கனிவோடு பார்த்தார்.
“பசிக்கல மாம்” அவரைப் பாராது கூறிவிட்டு நடக்க.
“அதெப்படி பசியில்லாம போகும்? கொஞ்சமாவது சாப்பிடு” மிராவின் குரலில் நின்றவன் “பிடிக்கலைம்மா” நறுக்கென சொல்லிவிட்டு நடந்தான் வெளியே.
இது இன்று மட்டுமில்லை கடந்த நான்கு நாட்களாகவே இதுதான் நடக்கின்றது.
மிரா சோபாவில் அமர்ந்து கண்ணீர் விட்டு அழவும், துருவ் அவரை எப்படித் தேற்றவென்று அறியாமல் தவித்துப் போனான்.
“நல்ல பொண்ணுடா. இவனோட குணத்துக்கு யாரும் சமாளிக்க முடியாதுன்னு நான் கவலைப்படுறப்ப, இவனா ஒரு தங்கத்தை லவ் பண்ணுறேன்னு வந்து நின்னான்”
“அவனா வந்து நின்னான்?. நாங்க கண்டுபிடிச்சு சொன்னோம்” ஆத்மா ரவிக் இருவரும் அங்கே வருகை தந்தார்கள்.
அழுதவாறு அமர்ந்திருந்த மிராவின் அருகே வந்தமர்ந்தவர்கள் “அண்ணி சீக்கிரமே மனசு மாறி வருவாங்கம்மா. கவலைப்படாதீங்க” அவர் கையைத் தட்டிக் கொடுத்தான் ஆத்மா.
“வீட்டை விட்டுப் போன பொண்ணை அப்படியே விட்டுற முடியுமாடா. நாமதானே போய் பார்க்கணும். அவ கோபத்தைக் குறைச்சு கூட்டிட்டு வரணும். இவனைப் பாரேன் எதுவுமே உரைக்காம சுத்திட்டு இருக்கான். பயமா இருக்குடா. இத்தனை நாளா இவனை நினைச்சுக் கவலை. இவன் ஆரம்பிச்சு வைச்சுட்டான். ஆகமொத்தம் நிம்மதியே இல்லடா எனக்கு” மிரா உடைந்து அழுதார்.
“அம்மா!” ரவிக் ஆத்மா துருவ் மூவருமே திகைத்து அமர்ந்திருந்தார்கள். வேறு வழியே இல்லை தாங்கள்தான் இதில் ஏதாவது செய்ய வேண்டுமென்பதும் புரிந்தது.
“இங்க பாருங்க. அவங்க ஒண்ணு சேருற வரைக்கும் நீங்க எங்கயும் சுத்த நான் விடமாட்டேன் பாத்துக்கங்க. ஒழுங்கா வீட்டோட கிடங்க” மிரா துருவ்கிட்டே மிரட்டலாகக் கூறிவிட்டார்.
என்னடா இது வம்பாப் போச்சு, இவன் பண்ணுற அழும்புக்கு நாமளும் ஊரைச் சுத்த முடியாம போவுதே. இவனை இப்படியே விட்டுட முடியாதே, என்று துருவ் தான் அவர்களை சேர்ந்து வைக்கும் முயற்சியில் இறங்கினான். அவனால் சிரிக்காமல், விளையாடாது ஊர் சுற்றாமல் இருக்கவே முடியாது.
மதியம் மூவரும் சேர்ந்து சிபினைப் பிடித்துக் கொண்டனர்.
தன் முன் நின்றவர்களை முறைத்த சிபின், “என்னடா? வழியை விடுங்க” அதட்டினான்.
“எங்களுக்கு உன் கூடப் பேசனும் மச்சி” ஆத்மாதான் வாய் திறந்து சொன்னான்.
“அதெல்லாம் ஒரு மண்ணும் வேண்டாம். போய் வேலையைப் பாருங்க” சிபின் அங்கிருந்து நகர. அவர்கள் பேச வருவது எதைப் பற்றியது என்பதைப் புரிந்தவனாய் தவிர்த்தான் சிபின்.
“பேசணும்னு சொல்றோம் அண்ணா. எங்கக் கூடப் பேசித்தான் ஆகணும்” துருவ் சிபின் கையைப் பற்றி நிற்க வைத்தான்.
“துருவ். விளையாடாதே. வழியை விடு” சிபினின் சீற்றத்தில் பயம் வந்தாலும், துருவ் விலகிப் போகவில்லை. அடிக்கப் போறியா அடிச்சுக்கோ, என்பது போல நின்றுவிட்டான்.
அவன் நிற்கும் தோரணையைப் பார்த்த சிபினுக்கு கோவம் உச்சிக்கு ஏறிவிட்டது, “மாம்” ஓங்கிய குரலில் அழைக்கவும், மிரா என்னவோ ஏதோ என்று அங்கே ஓடி வந்தாள்.
“நீ என்ன கத்தினாலும் சரிதான். நாம நின்னு பேசித்தான் ஆகணும். இப்படியே விட முடியாது உன்னை” துருவ் பிடிவாதம் மாறாது சொன்னான்.
“துருவ் என்ன இதெல்லாம். அண்ணாகிட்ட இப்படியா மரியாதை இல்லாம பேசுவ. அவனுக்கு வழியை விடு” மிரா பதறினாள். எங்கே இருவருக்கும் சண்டை வருமோ என்று அஞ்சினாள்.
“அவனோட விருப்பத்துக்கு விட்டுவிட்டு இப்போ பைத்தியம் போல சுத்திட்டு இருக்கான் மா. இவன் பண்ணுறது உங்களுக்குத் தெரியுமா? இவன் சாப்பிட்டு எத்தனை நாளாச்சுன்னு உங்களுக்குத் தெரியுமா. முதல் மாதிரி இவன்கிட்ட நம்மால பேச முடியுதா? இவனைப் பார்க்கப் பார்க்க பயமா இருக்கும்மா. இப்படியே விட்டு வச்சா இவன் நமக்கு இல்லாம போயிடுவான்ம்மா” துருவ் ஆவேசமாய்க் கத்தினான். இதற்கும் மேல் இனி பொறுமையாய் இருக்கவே முடியாது என்று தோன்றியது அவனுக்கு.
“என்னால முடியலைம்மா. எப்பப் பாரு நீங்க ஒருபக்கம் சோகமா அழுதுட்டே இருக்கறதும், அப்பா ஒரு பக்கம் பொம்மையா நடமாடுறதும், இதோ இந்தப் பெரிய மனுஷன் ஒருபக்கம் யாருகிட்டயும் ஒட்டாம அவரு பாட்டுக்கு வறதும் போறதுமா இருக்கார். பைத்தியம் பிடிக்கற மாதிரி இருக்கும்மா. பேசாம நான் கோமாவுலயே இருந்திருக்கலாம்” தலையைப் பிடித்துக் கொண்டு கத்தினான்
மிரா அதற்கும் மேல் துருவ்வைத் தடுக்கவில்லை.
“கத்தாதடா. உனக்கு நல்லதில்ல” சிபின் இறுக்கம் விடுத்து அக்கறையாகச் சொன்னான்.
“பரவால்ல. என்னாலதான உனக்கு இப்படி ஆச்சு. அப்போ எனக்கு ஏதாவது ஆகட்டும். எனக்கும் கில்ட்டியா இருக்காது பாரு” துருவ் முதல் முறையாக சகோதரனை எதிர்த்து நின்றான்.
“நீ யாருகிட்ட பேசுறேன்னு உனக்கு நினைப்பு இருக்கா துருவ்” சிபின் அவனை அதட்டிட.
“நல்லாவே நினைப்பு இருக்குண்ணா. கிடைச்ச நல்ல வாழ்க்கையை கெடுத்துக்கிற நல்ல மனுஷன்கிட்டே பேசிக்கிட்டு இருக்கேன்” துருவ் அவன் அதட்டலுக்கு பயப்படாது சொன்னான்.
“இப்ப என்னடா?” சிபின் மொபைலைப் பார்க்க.
அதைப் பிடுங்கி தன் கையில் வைத்துக்கொண்ட துருவ், “என்கிட்டே பேசணும் நீ” அண்ணனின் முறைப்பையும் கண்டுகொள்ளாது சொன்னான்.
ஒரு மூச்சை இழுத்துவிட்ட சிபின், இருக்கையில் சென்று அமர்ந்தான்.
மிரா ஜூஸ் எடுத்துட்டு வரவும், கூடி என்பதுபோல துருவ் பார்க்கவும், அதையும் ஒரே முடக்கில் குடித்துவிட்டு, திரும்பவும் துருவ் முகத்தையே ஊன்றிப் பார்த்தான்.
அவன் பார்வையில் நடுக்கம் பிறந்தாலும், சமாளித்தவன், “உனக்கு அண்ணி வேணுமா வேண்டாமா?” நேருக்கு நேர் நின்று கேட்க.
“அவளுக்கு நான் வேண்டாமாம்டா” சிபின் முகம் கருக்கச் சொன்னான்.
“அவங்க அப்படிச் சொல்லவே இல்ல” ஆத்மா இடையில் வந்தான்.
“ஆமாமா நானும் கேட்டேன்” ரவிக் குறுக்கிட.
“நாயே மொத்த சம்பவத்துக்கும் நீதான்டா காரணம். எட்டப்பன் வேலையைக் காட்டாம இருந்தா எந்தப் பிரச்சனையும் இல்ல இப்ப” ஆத்மா ரவிக் காதைப் பிடித்து முறுக்க.
“டேய் எப்பப் பார்த்தாலும் அரட்டையே அடிக்காதீங்க. பிரச்சனையைப் பத்தி பேசுங்க” மிராதான் அவர்களை அடக்கினாள்.
“உங்களுக்கு அவங்க வேணுமா வேண்டாமா. இப்படியே விட்டுறப் போறிங்களா அண்ணா” துருவ் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்க்க,
அண்ணனின் முகத்தைப் பார்த்தவனுக்கு அதிர்ந்தே போனது. நான் எதற்கும் கலங்க மாட்டேன் என்பது போலவே காட்டிக்கொண்டாலும், வேதனையின் சுவடுகளை தாங்கி நின்ற விழிகள் அவனது உள்ளக் கொதிப்பை அப்பட்டமாகக் காட்டியது. எப்பொழுது தூங்கினானோ விழிகள் சிவந்திருந்தது.
“அண்ணா எங்க பேச்சை கேக்கறதை விட வேற வழி இல்ல உங்களுக்கு” துருவ் இரக்கமே பாராமல் ஸ்டைலாக தோள்களைக் குலுக்கிச் சொல்ல.
“ப்ச் போடா” சிபின் அலட்சியம் செய்தான்.
“அண்ணா அண்ணி மனசை நாங்க மாத்துவோம் நம்புங்க” துருவ் சொல்ல.
“அதுக்கும் முதல்ல இவன் திருந்தினாவே அவ தானா வீட்டுக்கு வருவாடா” மிரா சொல்லிவிட்டு இரு கரத்தாலும் வாயை மூடிக் கொண்டாள்.
சிபின் அதற்கு எதுவுமே பேசவில்லை. இவர்கள் முயற்சியில் தன்னவள் தன்னுடன் சேர்ந்தால் சரிதான் என்பது போல அவர்கள் சொல்வதைக் கேட்கத் தயாரானான்.
“சிபின் அவன் ஹிஸ்டரி கேவலமா இருந்தாலும், கரெக்ட்டா ஸ்கெட்ச் போட்டுத் தருவான். தாராளமா நம்பலாம் அவனை” ஆத்மா துருவ்க்கு சர்ட்டிபிக்கெட் தந்தான்..
“பாத்துடா பழி வாங்கிடப் போறான்” ரவிக் அண்ணன் தம்பி இருவரின் நிலையையும் பார்த்து நினைக்கும் பொழுதெல்லாம் அடக்க முடியாது சிரிப்பான். அப்போதும் சிரிப்பை வாய்க்குள் மறைக்க.
“டேய் நீ வேற” ஆத்மா அவனை முறைத்தான்.
“டேய் அவங்க சண்டையே வேறடா. சிபினுக்கும் அண்ணிக்கும் இருக்க பிரச்சனை பொசசிவ். இதுல நீங்க என்னத்த பண்ணுவீங்க. பேசாம கண்ணு காது வாயின்னு மூணும் ஆப்சென்ட் ஆன பொண்ணா பார்த்துக் கட்டியிருக்கலாம். அவங்களும் விட்டுட்டு போயிருக்க மாட்டாங்க” மூவரும் தங்களுக்குள் பேசிக்கொள்ள.
சிபின் இவர்கள் என்ன சொன்னாலும் கண்டுகொள்ளாமல் பொண்டாட்டியை எப்படி திரும்ப அழைத்து வருவது என்றே சிந்திக்க.
இவர்கள் மூவரும் இஷ்டத்துக்கு கலாய்த்தார்கள்.
“இப்ப பேசாம இருக்கறீங்களா இல்லையாடா” துருவ் அவர்களை சப்தம் போட. அனைவரும் கப்சிப்.
“டேய் அண்ணா நாளைக்கே நம்ம நாலு பேரும் தூத்துக்குடி போறோம்” துருவ் சொல்ல.
“நாங்க எதுக்குடா. எங்க மேரேஜ்க்கு பத்திரிக்கை வைக்கணும்” ஆத்மா பதற. ரவிக் அப்போதே எஸ்கெப் ஆகத் தயார்தான்.
“அதுக்கும் முதல்ல எங்க அண்ணா வாழ்க்கையில் விளக்கேற்றி வைக்கறோம்டா. நண்பர்கள்னு கூடவே சுத்துறீங்க. இப்ப விட்டுட்டு போனா என்ன அர்த்தம்?” துருவ் அவர்களிடம் சண்டைக்குப் போய்விட்டான்.
“சரிடா. வறோம். வர்ற இடத்துல நீ ஒரு எட்டு போட்டு வைக்காம இருந்தா சரிதான்” நண்பர்கள் ஒப்புக் கொள்ள. நால்வரும் கிளம்பியாயிற்று.
காதல்!...
இந்த வார்த்தையை மனதில் நினைக்கும் பொழுதே மனதுக்குள் ஒரு குறுகுறுப்பு உண்டாகும். பருவங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு உணர்வையும் தரக்கூடிய வார்த்தை இது.
வார்த்தை?
ம்ஹூம் அவ்வளவு சுலபமாய் “வார்த்தை” என்று சாதாரணமாய் கடந்து போகவும் முடியாது.
வர்ணங்கள் சூழ்ந்த மாயாஜாலமாய் நம்மை ஆட்டி வைக்கும் ஒரு மாயக்கயிறுதான் காதல்…
காதல் காதலர்களுக்குள் மட்டும்தான் வரணும்னு விதி ஏதும் இருக்கா?...
நட்பு, அக்கம் பக்கத்தினர், யாரென்றே அறியாத ஒரு ரயில் சினேகிதத்திடம் ஒரு இனம் புரியாத பாசம் வருமே, அவர்களின் மொபைல் எண்ணைக் கூட வாங்கத் தோன்றாது ஆனால் அவர்களை எப்போதும் மறக்கவே முடியாது. தம்பதிகள், பேரன் பேத்திகளிடம், தாத்தா பாட்டியிடம் இவர்களுக்குள்ளும் வரும்.
மனதின் ஓரத்தில் ஓர் இனிய குறுகுறுப்பு…
மெல்லிய மழைச் சாரலின் நறுமணமாய் ஒரு உணர்வு நெஞ்சுக்குள் சிலீரென்று ஊடுருவும்.
சதாகாலமும் சீற்றமாய் இருக்கும் கடலோரம் செல்லும் பொழுது சாந்தமாய் முகத்தில் படரும் தென்றல் காற்றினைப் போல இதமாய்.
என்றென்றும் இளமையைத் தரும் ஒரு உணர்வுதான் காதல்.
எனில் சில நேரம் சுமையாய்த் தோன்றலாம்,
எல்லையற்ற மகிழ்ச்சியும் தலைகுப்புற மாறிப்போகும் தருணமும் வரும்.
நெஞ்சம் உடைந்து போக அது தரும் வலியானது நேசத்தினை எரித்து கண்ணீரில் கரைய வைத்திடும்.
நேசத்தினை பிறரிடம் விட்டுத் தராது, சிரிப்புக்குப் பின்புறம் அதை ஒலித்து வைக்கச் சொல்லும்…
நொடியில் நம்மை சிதைத்துவிடும் ஆயுதம்…
காதல் உயிரைத் தரவும் செய்யும் எடுக்கவும் செய்யும்…
…..
சிபின் தன் வேலையில் கவனமாய் இருக்க. அவன் எப்பொழுது சாப்பிடுவான் குளிப்பான், தூங்குவான் என்று எதையும் யாராலும் தெரிந்து கொள்ள முடியாது போனது. அவன் மனதில் என்ன இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ளவே முடியவில்லை யாராலும்.
அவனது தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. உயிர் மனைவி விட்டுப் போனதன் வலி அவனிடம் சுத்தமாக இல்லை என்பதைப் போலவே காணப்பட்டான். முன்பு இருப்பதைப் போலத்தான் இருந்தான். துருவ் ஆரியன் எவ்வளவோ முறை அவனிடம் பேச முயற்சி செய்தாயிற்று. நின்று ஓரிரு வார்த்தையில் முடித்துக் கொள்வான்.
“என்கூட வந்து வேலையைப் பாருடா. இப்படியே சுத்திட்டு இருக்காதே” துருவ்விடம் எப்பவும் போல கண்டிப்பைக் காட்டுவதும், தாய் தந்தையிடம் பேசுவதும் எதிலும் அவன் மாற்றத்தைக் கொண்டு வரவேயில்லை.
அம்னீசியா எதுவும் வந்துருச்சா? இவர்களுக்கு சந்தேகம் வர, “சிபின் நளிரா யாருன்னு தெரியுமாப்பா?” அவன் முகத்தையே குறுகுறுவெனப் பார்த்துக் கேட்டே விட்டார்.
தன் கோபத்தை தாய் தாங்க மாட்டார் என்பதால் கண்களை மூடித் திறக்க, மிரா எதிரே இருக்கவே மாட்டார்.
மிராவோ சிபினின் நிலையை நினைத்து வருந்தித் தன் உடம்பையும் கெடுத்துக் கொள்வார். “அம்மா நீங்கதான் தேவையில்லாம வருத்திக்கறிங்க, அண்ணா எப்பவும் போலத்தான் கல்லைத் தின்ன மாதிரி விரைப்பா இருக்கான். ஐ ஹேட் திஸ் பேட் வைபரேஷன் ம்மா” துருவ்தான் சூழ்நிலையை இலகுவாக்க முயல்வான்.
“நளிரா இருக்கப்ப வீடே நல்லாருக்கும்டா. அத்த அத்தன்னு முந்தானையைப் பிடிச்சுக்கிட்டு சுத்துவா. உங்கண்ணன் அன்புல அந்தப் பொண்ணு மிரண்டு ஓடிட்டா. வீட்டுக்கு ஒரு பொண்ணு வரான்னு அத்தனை சந்தோஷம் எனக்கு. என்னோட விதிடா. நானே தடிமாடுங்களுக்கு ஆக்கிப் போடணும்னு விதிச்சிருக்கு” மிரா புலம்பலை அவனுக்கு காது குடுத்துக் கேட்கவே முடியவில்லை.
சிபின் தன் அறையில் இருந்து வெளியே வர, “ரெடி ஸ்டார்ட்… ம்ம்ம்… ஆரம்பிங்கம்மா. இப்ப நீங்க அவனை சாப்பிடக் கூப்பிடனும். அவன் வேண்டாம்னு போகணும். நீங்க அழுதுட்டு வரணும். இதான் இன்னைக்கு சீன் ஓகேவா” எப்போதும் நடப்பதை அவன் பிசகாமல் கூற.
கேலி செய்யும் அவனைக் கண்டுகொள்ளாது, “சிபின்! கண்ணா நில்லுப்பா” மிரா அவன் பின்னேயே ஓடினார்.
“என்ன மாம்?” தாயின் வார்த்தைகளுக்காக நின்றான்.
மகன் எதையும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் அவருக்குப் புரியாதா? மகனின் கன்னத்தை வருடித் தந்தவர் “சாப்பிடுப்பா. உனக்குப் பிடிச்சதுதான் செஞ்சேன் இன்னைக்கு” கனிவோடு பார்த்தார்.
“பசிக்கல மாம்” அவரைப் பாராது கூறிவிட்டு நடக்க.
“அதெப்படி பசியில்லாம போகும்? கொஞ்சமாவது சாப்பிடு” மிராவின் குரலில் நின்றவன் “பிடிக்கலைம்மா” நறுக்கென சொல்லிவிட்டு நடந்தான் வெளியே.
இது இன்று மட்டுமில்லை கடந்த நான்கு நாட்களாகவே இதுதான் நடக்கின்றது.
மிரா சோபாவில் அமர்ந்து கண்ணீர் விட்டு அழவும், துருவ் அவரை எப்படித் தேற்றவென்று அறியாமல் தவித்துப் போனான்.
“நல்ல பொண்ணுடா. இவனோட குணத்துக்கு யாரும் சமாளிக்க முடியாதுன்னு நான் கவலைப்படுறப்ப, இவனா ஒரு தங்கத்தை லவ் பண்ணுறேன்னு வந்து நின்னான்”
“அவனா வந்து நின்னான்?. நாங்க கண்டுபிடிச்சு சொன்னோம்” ஆத்மா ரவிக் இருவரும் அங்கே வருகை தந்தார்கள்.
அழுதவாறு அமர்ந்திருந்த மிராவின் அருகே வந்தமர்ந்தவர்கள் “அண்ணி சீக்கிரமே மனசு மாறி வருவாங்கம்மா. கவலைப்படாதீங்க” அவர் கையைத் தட்டிக் கொடுத்தான் ஆத்மா.
“வீட்டை விட்டுப் போன பொண்ணை அப்படியே விட்டுற முடியுமாடா. நாமதானே போய் பார்க்கணும். அவ கோபத்தைக் குறைச்சு கூட்டிட்டு வரணும். இவனைப் பாரேன் எதுவுமே உரைக்காம சுத்திட்டு இருக்கான். பயமா இருக்குடா. இத்தனை நாளா இவனை நினைச்சுக் கவலை. இவன் ஆரம்பிச்சு வைச்சுட்டான். ஆகமொத்தம் நிம்மதியே இல்லடா எனக்கு” மிரா உடைந்து அழுதார்.
“அம்மா!” ரவிக் ஆத்மா துருவ் மூவருமே திகைத்து அமர்ந்திருந்தார்கள். வேறு வழியே இல்லை தாங்கள்தான் இதில் ஏதாவது செய்ய வேண்டுமென்பதும் புரிந்தது.
“இங்க பாருங்க. அவங்க ஒண்ணு சேருற வரைக்கும் நீங்க எங்கயும் சுத்த நான் விடமாட்டேன் பாத்துக்கங்க. ஒழுங்கா வீட்டோட கிடங்க” மிரா துருவ்கிட்டே மிரட்டலாகக் கூறிவிட்டார்.
என்னடா இது வம்பாப் போச்சு, இவன் பண்ணுற அழும்புக்கு நாமளும் ஊரைச் சுத்த முடியாம போவுதே. இவனை இப்படியே விட்டுட முடியாதே, என்று துருவ் தான் அவர்களை சேர்ந்து வைக்கும் முயற்சியில் இறங்கினான். அவனால் சிரிக்காமல், விளையாடாது ஊர் சுற்றாமல் இருக்கவே முடியாது.
மதியம் மூவரும் சேர்ந்து சிபினைப் பிடித்துக் கொண்டனர்.
தன் முன் நின்றவர்களை முறைத்த சிபின், “என்னடா? வழியை விடுங்க” அதட்டினான்.
“எங்களுக்கு உன் கூடப் பேசனும் மச்சி” ஆத்மாதான் வாய் திறந்து சொன்னான்.
“அதெல்லாம் ஒரு மண்ணும் வேண்டாம். போய் வேலையைப் பாருங்க” சிபின் அங்கிருந்து நகர. அவர்கள் பேச வருவது எதைப் பற்றியது என்பதைப் புரிந்தவனாய் தவிர்த்தான் சிபின்.
“பேசணும்னு சொல்றோம் அண்ணா. எங்கக் கூடப் பேசித்தான் ஆகணும்” துருவ் சிபின் கையைப் பற்றி நிற்க வைத்தான்.
“துருவ். விளையாடாதே. வழியை விடு” சிபினின் சீற்றத்தில் பயம் வந்தாலும், துருவ் விலகிப் போகவில்லை. அடிக்கப் போறியா அடிச்சுக்கோ, என்பது போல நின்றுவிட்டான்.
அவன் நிற்கும் தோரணையைப் பார்த்த சிபினுக்கு கோவம் உச்சிக்கு ஏறிவிட்டது, “மாம்” ஓங்கிய குரலில் அழைக்கவும், மிரா என்னவோ ஏதோ என்று அங்கே ஓடி வந்தாள்.
“நீ என்ன கத்தினாலும் சரிதான். நாம நின்னு பேசித்தான் ஆகணும். இப்படியே விட முடியாது உன்னை” துருவ் பிடிவாதம் மாறாது சொன்னான்.
“துருவ் என்ன இதெல்லாம். அண்ணாகிட்ட இப்படியா மரியாதை இல்லாம பேசுவ. அவனுக்கு வழியை விடு” மிரா பதறினாள். எங்கே இருவருக்கும் சண்டை வருமோ என்று அஞ்சினாள்.
“அவனோட விருப்பத்துக்கு விட்டுவிட்டு இப்போ பைத்தியம் போல சுத்திட்டு இருக்கான் மா. இவன் பண்ணுறது உங்களுக்குத் தெரியுமா? இவன் சாப்பிட்டு எத்தனை நாளாச்சுன்னு உங்களுக்குத் தெரியுமா. முதல் மாதிரி இவன்கிட்ட நம்மால பேச முடியுதா? இவனைப் பார்க்கப் பார்க்க பயமா இருக்கும்மா. இப்படியே விட்டு வச்சா இவன் நமக்கு இல்லாம போயிடுவான்ம்மா” துருவ் ஆவேசமாய்க் கத்தினான். இதற்கும் மேல் இனி பொறுமையாய் இருக்கவே முடியாது என்று தோன்றியது அவனுக்கு.
“என்னால முடியலைம்மா. எப்பப் பாரு நீங்க ஒருபக்கம் சோகமா அழுதுட்டே இருக்கறதும், அப்பா ஒரு பக்கம் பொம்மையா நடமாடுறதும், இதோ இந்தப் பெரிய மனுஷன் ஒருபக்கம் யாருகிட்டயும் ஒட்டாம அவரு பாட்டுக்கு வறதும் போறதுமா இருக்கார். பைத்தியம் பிடிக்கற மாதிரி இருக்கும்மா. பேசாம நான் கோமாவுலயே இருந்திருக்கலாம்” தலையைப் பிடித்துக் கொண்டு கத்தினான்
மிரா அதற்கும் மேல் துருவ்வைத் தடுக்கவில்லை.
“கத்தாதடா. உனக்கு நல்லதில்ல” சிபின் இறுக்கம் விடுத்து அக்கறையாகச் சொன்னான்.
“பரவால்ல. என்னாலதான உனக்கு இப்படி ஆச்சு. அப்போ எனக்கு ஏதாவது ஆகட்டும். எனக்கும் கில்ட்டியா இருக்காது பாரு” துருவ் முதல் முறையாக சகோதரனை எதிர்த்து நின்றான்.
“நீ யாருகிட்ட பேசுறேன்னு உனக்கு நினைப்பு இருக்கா துருவ்” சிபின் அவனை அதட்டிட.
“நல்லாவே நினைப்பு இருக்குண்ணா. கிடைச்ச நல்ல வாழ்க்கையை கெடுத்துக்கிற நல்ல மனுஷன்கிட்டே பேசிக்கிட்டு இருக்கேன்” துருவ் அவன் அதட்டலுக்கு பயப்படாது சொன்னான்.
“இப்ப என்னடா?” சிபின் மொபைலைப் பார்க்க.
அதைப் பிடுங்கி தன் கையில் வைத்துக்கொண்ட துருவ், “என்கிட்டே பேசணும் நீ” அண்ணனின் முறைப்பையும் கண்டுகொள்ளாது சொன்னான்.
ஒரு மூச்சை இழுத்துவிட்ட சிபின், இருக்கையில் சென்று அமர்ந்தான்.
மிரா ஜூஸ் எடுத்துட்டு வரவும், கூடி என்பதுபோல துருவ் பார்க்கவும், அதையும் ஒரே முடக்கில் குடித்துவிட்டு, திரும்பவும் துருவ் முகத்தையே ஊன்றிப் பார்த்தான்.
அவன் பார்வையில் நடுக்கம் பிறந்தாலும், சமாளித்தவன், “உனக்கு அண்ணி வேணுமா வேண்டாமா?” நேருக்கு நேர் நின்று கேட்க.
“அவளுக்கு நான் வேண்டாமாம்டா” சிபின் முகம் கருக்கச் சொன்னான்.
“அவங்க அப்படிச் சொல்லவே இல்ல” ஆத்மா இடையில் வந்தான்.
“ஆமாமா நானும் கேட்டேன்” ரவிக் குறுக்கிட.
“நாயே மொத்த சம்பவத்துக்கும் நீதான்டா காரணம். எட்டப்பன் வேலையைக் காட்டாம இருந்தா எந்தப் பிரச்சனையும் இல்ல இப்ப” ஆத்மா ரவிக் காதைப் பிடித்து முறுக்க.
“டேய் எப்பப் பார்த்தாலும் அரட்டையே அடிக்காதீங்க. பிரச்சனையைப் பத்தி பேசுங்க” மிராதான் அவர்களை அடக்கினாள்.
“உங்களுக்கு அவங்க வேணுமா வேண்டாமா. இப்படியே விட்டுறப் போறிங்களா அண்ணா” துருவ் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்க்க,
அண்ணனின் முகத்தைப் பார்த்தவனுக்கு அதிர்ந்தே போனது. நான் எதற்கும் கலங்க மாட்டேன் என்பது போலவே காட்டிக்கொண்டாலும், வேதனையின் சுவடுகளை தாங்கி நின்ற விழிகள் அவனது உள்ளக் கொதிப்பை அப்பட்டமாகக் காட்டியது. எப்பொழுது தூங்கினானோ விழிகள் சிவந்திருந்தது.
“அண்ணா எங்க பேச்சை கேக்கறதை விட வேற வழி இல்ல உங்களுக்கு” துருவ் இரக்கமே பாராமல் ஸ்டைலாக தோள்களைக் குலுக்கிச் சொல்ல.
“ப்ச் போடா” சிபின் அலட்சியம் செய்தான்.
“அண்ணா அண்ணி மனசை நாங்க மாத்துவோம் நம்புங்க” துருவ் சொல்ல.
“அதுக்கும் முதல்ல இவன் திருந்தினாவே அவ தானா வீட்டுக்கு வருவாடா” மிரா சொல்லிவிட்டு இரு கரத்தாலும் வாயை மூடிக் கொண்டாள்.
சிபின் அதற்கு எதுவுமே பேசவில்லை. இவர்கள் முயற்சியில் தன்னவள் தன்னுடன் சேர்ந்தால் சரிதான் என்பது போல அவர்கள் சொல்வதைக் கேட்கத் தயாரானான்.
“சிபின் அவன் ஹிஸ்டரி கேவலமா இருந்தாலும், கரெக்ட்டா ஸ்கெட்ச் போட்டுத் தருவான். தாராளமா நம்பலாம் அவனை” ஆத்மா துருவ்க்கு சர்ட்டிபிக்கெட் தந்தான்..
“பாத்துடா பழி வாங்கிடப் போறான்” ரவிக் அண்ணன் தம்பி இருவரின் நிலையையும் பார்த்து நினைக்கும் பொழுதெல்லாம் அடக்க முடியாது சிரிப்பான். அப்போதும் சிரிப்பை வாய்க்குள் மறைக்க.
“டேய் நீ வேற” ஆத்மா அவனை முறைத்தான்.
“டேய் அவங்க சண்டையே வேறடா. சிபினுக்கும் அண்ணிக்கும் இருக்க பிரச்சனை பொசசிவ். இதுல நீங்க என்னத்த பண்ணுவீங்க. பேசாம கண்ணு காது வாயின்னு மூணும் ஆப்சென்ட் ஆன பொண்ணா பார்த்துக் கட்டியிருக்கலாம். அவங்களும் விட்டுட்டு போயிருக்க மாட்டாங்க” மூவரும் தங்களுக்குள் பேசிக்கொள்ள.
சிபின் இவர்கள் என்ன சொன்னாலும் கண்டுகொள்ளாமல் பொண்டாட்டியை எப்படி திரும்ப அழைத்து வருவது என்றே சிந்திக்க.
இவர்கள் மூவரும் இஷ்டத்துக்கு கலாய்த்தார்கள்.
“இப்ப பேசாம இருக்கறீங்களா இல்லையாடா” துருவ் அவர்களை சப்தம் போட. அனைவரும் கப்சிப்.
“டேய் அண்ணா நாளைக்கே நம்ம நாலு பேரும் தூத்துக்குடி போறோம்” துருவ் சொல்ல.
“நாங்க எதுக்குடா. எங்க மேரேஜ்க்கு பத்திரிக்கை வைக்கணும்” ஆத்மா பதற. ரவிக் அப்போதே எஸ்கெப் ஆகத் தயார்தான்.
“அதுக்கும் முதல்ல எங்க அண்ணா வாழ்க்கையில் விளக்கேற்றி வைக்கறோம்டா. நண்பர்கள்னு கூடவே சுத்துறீங்க. இப்ப விட்டுட்டு போனா என்ன அர்த்தம்?” துருவ் அவர்களிடம் சண்டைக்குப் போய்விட்டான்.
“சரிடா. வறோம். வர்ற இடத்துல நீ ஒரு எட்டு போட்டு வைக்காம இருந்தா சரிதான்” நண்பர்கள் ஒப்புக் கொள்ள. நால்வரும் கிளம்பியாயிற்று.