• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,028
Reaction score
2,912
Points
113
பொழுது – 14 💖
ஆறுமணியைக் கடந்தும் சுதிக்கு விழிப்பு வருவேனா என்றது. ஆறு முப்பதுக்கு வைத்திருக்கும் அலறி அதன் வேலையை சரியாய் செய்ய, நேரமானதை உணரந்து திடுக்கென எழுந்தமர்ந்தவள், கண்களை தேய்த்தாள்.
“சுதி... இன்னைக்கு ஒருநாள் வேலைக்குப் போக வேணாம். நீ லீவ் சொல்லிடு!” சந்திரா அறையை எட்டிப் பார்த்துவிட்டு கூற, இவள் என்னவெனப் புரியாது எழுந்து அவிழ்ந்திருந்த முடியைத் தூக்கிக் கொண்டையிட்டு பாயை மடித்துவிட்டு வெளியே வந்தாள்.
“ம்மா... காம்ப்ளக்ஸ் லீவ்தான். இன்னைக்கு காலைல நிவின் சார்க்கு சமைச்சு கொடுத்துட்டு வந்துடுறேன் மா. சொல்லாம கொள்ளாம லீவ் போட முடியாது மா!” சுதி சந்திராவின் முகம் பார்த்தாள்.
“ஒருநாள் லீவு கொடுக்காத வேலை எதுக்கு உனக்கு. அதை விட்ரு!” என்றவரின் பேச்சில் சுதிக்கு எதுவும் புரியாதநிலை. சந்திரா எப்போதும் இப்படியெல்லாம் பேச மாட்டாரே என அவள் விழித்தாள்.
“அத்தை... ஈவ்னிங் தானே வர்றாங்க. இப்போ அவ வேலைக்குப் போகட்டும் அத்தை. விடுங்க!” சௌம்யா கூற, “யாரு வர்றாங்க அண்ணி?” என இவள் கேள்வி கேட்டாள்.
“ஹம்ம்... சுதி, உனக்கொரு சம்பந்தம் அமைஞ்சு வந்திருக்கு. இன்னைக்கு உன்னைப் பார்க்க வரவான்னு கேட்டாங்க. சரி லீவ் நாள்னு நானும் வர சொல்லிட்டேன். நீயும் அந்தப் பையனைப் பாரு. நல்லக் குடும்பம், குறைன்னு எதுவும் இல்ல. டிகிரி படிச்சிட்டு டிவிஎஸ்ல வேலை பார்க்குறாராம். எவ்வளோ பெரிய கம்பெனி அது. முப்பதாயிரம் சம்பளம். அப்பா, அம்மா, ஒரு அக்காவாம். பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சாம். நமக்கு எல்லா வகையிலயும் ஒத்து வரும்னு தோணுச்சு. அதான் நேர்ல பார்த்துட்டு முடிவு பண்ணலாம்!” சந்திரா முகம் முழுவதும் படர்ந்த மகிழ்ச்சியுடன் பேச, சுதிக்கு முகத்தில் எந்த உணர்வும் இல்லை.
“ஓ... சரிம்மா...” என்றாள். அவ்வளவுதான் அவளது எதிர்வினை.
“என்ன ஓன்னு ஒரு வார்த்தையில முடிச்சிட்ட. முகம் டல்லா இருக்கு. நல்லா சந்தோஷமா கேக்க வேணாமா சுதி. பையன் பார்க்க எப்படி இருப்பாரு, கருப்பா சிவப்பான்னு எதாவது?” சௌம்யா குறையாய்க் கூற, சுதியின் முகத்தில் மெல்லிய முறுவல் அரும்பியது.
“நான் சொன்னா, நீங்க திட்டக் கூடாது!” அவள் கூற, “நீ என்னென்னு சொல்லு. நான் அப்புறம் திட்றதா, வேணாமான்னு முடிவு பண்றேன்!” பெரியவள் உதட்டைச் சுழித்தாள்.
“முதல்ல வர்றவங்களுக்கு என்னைப் பிடிக்கட்டும் அண்ணி. படிச்ச பையன், அழகா வேற இருப்பார்னு சொல்றீங்க. அப்புறம் எப்படி என்னைப் போய் பிடிக்கும். ரொம்ப ஆசையை வளர்த்துக்காதீங்க ரெண்டு பேரும்...” சுதி பொறுமையாய்க் கூற, சந்திரா அப்போதே அகன்றிருந்தார்.
“ப்ம்ச்... சும்மா லூசு மாதிரி பேசாத நீ. படிச்ச பையன் படிக்காத பொண்ணைக் கல்யாணம் பண்றது ஊர்ல இல்லாத வழக்கமா சுதி. நீயா உன்னை மட்டம் தட்டிக்காத!” பெரியவள் கண்டித்தாள்.
“இல்லைன்னு சொல்ல மாட்டேன் அண்ணி. படிச்ச பையன் படிக்காத பொண்ணைக் கல்யாணம் பண்ண ரெண்டு காரணம் இருக்கும். ஒன்னு பொண்ணு அழகா இருக்கணும். ஆனால் பாருங்க அது இங்க இல்லை. நான் எப்படி இருக்கேன்னு எனக்கே தெரியும். ரெண்டாவது நிறையா வரதட்சணை போட்டாவது கல்யாணம் பண்ணணும். அதுவும் இல்ல, அப்படி இருக்கும்போது படிச்ச அழகான பையன் என்னைக் கட்டுவானா என்ன? உண்மையை நம்ப ஏத்துக்கணும் அண்ணி!” என்றவள் சில நொடிகள் நிறுத்திப் பின், “நான் முன்னாடியே சொல்லணும்னு நினைச்சேன். நீங்களா கல்யாண பேச்செடுக்கும் போது சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன் அண்ணி. படிக்காத பையனா பாருங்க. அழகா இருக்கவன் வேணாம். அவனோட எக்ஸ்பெக்டேஷனுக்கு நான் இல்ல. அதனால என்னை மாதிரி பார்க்க சுமாரா இருக்கவனைப் பாருங்க. முக்கியமா வரதட்சணை வேணாம்னு சொல்றவனைப் பாருங்க. அப்படி ஒருத்தன் வந்தா, கருப்போ, சிவப்போ, நெட்டையோ, குட்டையோ எப்படி இருந்தாலும் நான் ஏத்துப்பேன் அண்ணி! முக்கியமா உங்களுக்கும் அம்மாவுக்கும் மரியாதை தர்றவங்களா பாருங்க. பணம் இல்லாதவங்களா இருந்தாலும் பண்பா இருந்தா போதும் அண்ணி. ஏன்னா, பணம் இருக்க இடத்துல திமிர் தானா வந்துடும். அதெதுக்கு, நமக்கு ஏத்தவங்கன்னா சரியா இருக்கும்!” மெல்லிய குரலில் சுதி பேசி முடிக்க, சௌம்யா முகத்தில் வருத்தம் பரவியது. இந்தப் பெண் தங்களுக்காகத்தான் பார்க்கிறாள் எனப் புரிந்தவள் அவளது தோளைத் தட்டினாள்.
“உன் நல்ல மனசுக்கு நல்ல படிச்ச அழகான பையன் அமைவான் சுதி. கடவுள் பார்த்துப்பாரு எல்லாத்தையும். இந்த சம்பந்தம் அமையும்னு எனக்கு தோணுது!” சௌம்யா கூற, “ரொம்ப எதிர்பார்க்காதீங்க. அப்புறம் இல்லைன்னு போச்சுன்னா, கஷ்டமாய்டும். எதுனாலும் அவங்க ஈவ்னிங் வந்து என்னைப் பார்த்துட்டுப் போகட்டும்!” என்றாள் புன்னகைத்து.
“சரி அண்ணி... ரொம்ப லேட்டாகிடுச்சு. நான் டைம்க்கு போக முடியாது இன்னைக்கு. சண்டேதானே? லேட்டா போறேன்!” என அவளே பேசிவிட்டு விறுவிறுவென தலைக்கு குளித்து முடித்தாள். அசிரத்தையாய் நிலைபேழையில் விழிகளை ஓட்டியவள் நீண்ட நாட்களாக உடுத்தாமல் வைத்திருந்த புடவை ஒன்றைக் கையிலெடுத்தாள். கரும்பச்சை நிறத்தில் அங்காங்கே தங்க நிறத்தில் பூக்கள் பூத்திருந்தன. நேரமானாலும் அதை நேர்த்தியாய் உடுத்தியவள், தலையைத் தளரப் பின்னலிட்டாள்‌. சந்திரா மாலைப் பெண் பார்க்க வரும்போது
வைப்பதற்காகப் பூ வாங்கியிருந்தாலும், இப்போதும் வைத்துக் கொள்ளுமாறு கொஞ்சம் பூவைக் கொடுத்துவிட்டுச் சென்றார். அதை எடுத்து தலையில் வைத்தவள் கண்ணாடியில் முகம் பார்த்தாள். முட்டைக் கண்கள் வெறுமையாய் இருக்க, ஆசையாய் அதற்கு மையிட்டாள். வட்ட பொட்டை விடுத்து இன்றைக்கென நீளப் பொட்டை எடுத்து வைத்தவள் முகம் சற்றே மிளிர்ந்தது.
அறைக்கு வெளியே செல்ல சற்றே சங்கடமாய் இருந்தது பெண்ணுக்கு. கடைசியாய் கல்லூரி கிளம்பும்போது இப்படியெல்லாம் ஒப்பனை செய்தது. அதற்கடுத்து அவளுக்கு வாய்ப்பும் அமையவில்லை. மனநிலையும் இல்லையென்பதே உண்மை.
சில நொடிகள் மூச்சை வெளியிட்டு அவள் கூடத்திற்கு வர, மொச்சைப் பயறை உரித்துக் கொண்டிருந்த சௌம்யாவின் முகத்தில் கேலிப் புன்னகை. சற்று நேரம் முன்பு சுதியின் மீதிருந்த அதிருப்தி எல்லாம் இந்நொடி தகர்ந்திருக்க, “ஆஹா...” என்றாள் கிண்டலாய். அவள் முகபாவனையில் சுதிக்கு லேசாய் வெட்கம் வந்துவிட, “அண்ணி...” என சிணுங்கினாள்.
“ஹக்கும்... ம்க்கும்... அத்தை, ஈவ்னிங் தானே சுதியைப் பொண்ணு பார்க்க வர்றதா சொன்னீங்க. ஆனால், காலைலயே வர்றாங்க போல?” சௌம்யா குரலை உயர்த்த, சந்திரா வெளியே வந்தார். மகளை நீண்ட நாட்கள் கழித்து இப்படி பார்க்கையில் அவரது மனம் நிறைந்து போனது. சுதி அவர் முகத்தை சங்கோஜமாய்ப் பார்த்தாள்.
“ச்சு... சௌமி, புள்ளை எவ்வளோ நாள் கழிச்சு இப்படி அலங்காரம் பண்ணியிருக்கா. நீயே கிண்டல் பண்ணாத!” என அதட்டியவர், “அழகா இருக்கு சுதி!” என்றார் மகிழ்ச்சியுடன். மகளுக்கு நல்ல வாழ்க்கை அமையப் போகிறதென அவர் உள்ளம் உவகைக் கொண்டது. அத்தோடு அவளும் அந்த வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளுவாள் என அவள் நடவடிக்கைகள் கூற, எல்லாம் நன்றாக நடக்க வேண்டும் என்றெண்ணிக் கொண்டார்.
“சரி சுதி... மழை வர்ற மாதிரி வானம் இருட்டீட்டு கிடக்கு. பார்த்துப் போ!” என அவர் கூற, தலையை அசைத்துவிட்டு சுதிரமாலா கிளம்பினாள். அகத்தின் மகிழ்ச்சி முகத்தில் தெரிந்தது. திருமணம் என்ற எண்ணத்தை தாண்டி அவளுக்கான வாழ்க்கை. ஆசையாய் எத்தனையோ கனவுகளை சுமந்து கொண்டிருக்கிறாள். அந்தக் கனவுகள் உயிர்ப்பெற்று நிற்கப் போகும் கணங்கள் கண்முன்னே வரவும், இயல்பாய் முகம் மலர்ந்தது.
‘ரொம்ப சந்தோஷப்படாத சுதி. அவங்களை சொல்லிட்டு நீ எதிர்பார்க்காத. எது வந்தாலும் ஃபேஸ் பண்ணணும்!’ என துள்ளிய மனதை அடக்கிவிட்டு பேருந்திலேறினாள்.
மேகம் ஆங்காங்கே கூடிக் கலைந்து மழை வரும் அறிகுறியைக் காண்பித்தது. வெளுத்து சிவந்திருந்த வானத்தைப் பார்த்த சுதியின் முகத்தில் மெலிதாய் ஒரு சொட்டு மழைநீர் பட்டுத் தெறித்தது. ஜன்னல் கதவை இழுத்து மூடியவளின் உடலை கூதக்காற்று துளைத்தது. மழைக்காலம் கூட இல்லையே புதிதாய் என்ன மழை வருகிறது என்றெண்ணியவள் அலைபேசியை எடுத்து இணையத்தை இணைக்க, நிவினின் செய்தி வந்து விழுந்தது.
“வொய் டிட் யூ டேக் லீவ் வித்தவுட் ஆஸ்கிங் பெர்மிஷன்?” அவனின் குறுஞ்செய்தியைப் படித்தவள், 'அரைமணி நேரம் லேட்டாச்சுன்னா லீவ் போட்டுட்டேன்னு நினைச்சுடுவார் போல!’ என மனதிற்குள்ளே முனங்கியவள், “சாரி சார். ஆன் தி வே. கொஞ்சம் லேட்டாகிடுச்சு!” என பதிலளித்தாள். பத்து நிமிடங்களில் பேருந்து நிறுத்தம் வந்துவிட, மழையில் நனையக் கூடாதென அடித்துப் பிடித்து அந்த அடுக்குமாடிக் கட்டிடத்திற்குள் நுழைந்த போது பாதி நனைந்திருந்தாள்.
முகத்திலிருந்த நீரை மட்டும் முந்தானையால் துடைத்துவிட்டு மின்தூக்கி மூலம் மேல் தளத்தை அடைந்து அழைப்பு மணியை அலுத்த, நிவின் வந்து கதவைத் திறந்தான். நனைந்து வந்தவளைப் பார்த்தவன், “கெட் இன் சுதிரமாலா...” என்றுவிட்டு அவள் உள்ளே நுழைந்ததும் மின்விசிறியை சுழலவிட்டான்.
“மழை ஸ்டாப்பானதும் வந்திருக்கலாம்ல. ஏன் இப்போ அவசரமா வந்தீங்க?” என்றவன் கரிசனமான வார்த்தைகளில் சுதிக்கு ஆச்சரியம்தான். வெயில் காலத்தில் மழை பெய்ததற்கான காரணம் இதுவாகத்தான் இருக்கக் கூடுமென அனுமானித்தவள், “பரவாயில்லை சார். ஏற்கனவே டைமாகிடுச்சு. அதான் வந்துட்டேன்!” என்றவள் சமையலறைக்குள் நுழைந்தாள்.
புடவைக் கட்டி வேலை பார்த்த பழக்கமில்லை அவளுக்கு. முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகியவளின் உதடுகளில் புன்னகை நெளிந்தது. ‘வீட்டு வேலைக்கு வர்றதுக்கு எதுக்கு இத்தனை அலங்காரம்னு நினைச்சிருப்பான்!’ என நினைத்தவளுக்குமே சிரிப்பு வந்தது. வீட்டு வேலைக்குத்தானே வந்திருக்கிறேன். என்னவோ சௌம்யா சொன்னது போல இத்தனை அலங்காரம் எதற்கு என மனமே கேலி செய்ய, அதைக் கிடப்பிலிட்டவள் அமைதியாய் வேலையைப் பார்த்தாள்.
சற்றே அசௌகரியத்தை அளித்தது சேலை. இருந்தாலும் நல்ல மனநிலையில் இருந்தபடியால் சுதிக்கு எதுவுமே பெரிதாய் தோன்றவில்லை. வேண்டாம் எனத் தட்டிவிட முயன்றாலும் வரும் மாப்பிள்ளைக்குத் தன்னைப் பிடிக்காது போய்விட்டால் என்ன செய்வது என மனம் அதையே சுற்றி வந்தது. ஒரே வரன் பார்த்து அதுவே அமைந்துவிடும் அளவிற்கு எல்லாம் தனக்கு யோகமில்லை என்றெண்ணியவள், அப்படி அமையாது என மனதில் ஆழப் பதித்தாள். காரணம் விவேகாவிற்கு திருமணப் பேச்சை எடுத்து சில பல மாதங்கள் ஓடியிருக்க, ஒன்றுமே அமையவில்லை. அவளுமே ஒவ்வொரு முறை பெண் பார்க்கச் வரும்போது அது இதுவெனக் காரணம் காண்பித்து வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் எனக் கவலையுற்றிருக்கிறாள். அதனாலே மனதை அனைத்திற்கும் தயார் செய்தாள்.
பிடிக்கவில்லை என்று அவர்கள் அவளது தோற்றத்தை, படிப்பை எதைக் குறைக் கூறினாலும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையைக் கொடு கடவுளே என காலையிலே வேண்டிவிட்டாள். அவளைப் பிடித்திருக்கிறது என்று மாப்பிள்ளைக் கூறிவிட்டால், அவனின் தோற்றம் பற்றியெல்லாம் சுதிக்கு எண்ணமே இல்லை. என்னை ஏற்றுக் கொள்பவன் எப்படி இருந்தாலும் எனக்கு சம்மதம்தான் என்ற சிந்தனையிலே வேலையை முடித்தாள்.
சிறிது நேரம் தூறிக் கொண்டிருந்த வானம் சற்று நேரத்தில் வெளுக்கத் துவங்க, இவள் ஆயசமாகப் பார்த்தாள். இப்போதுதான் மழை நின்றுவிட்டது வீட்டிற்கு செல்லலாம் என நினைத்தாள். ‘மறுபடியும் மழை பெய்யுதே!’ என அலுத்தவள், எட்டி ஜன்னல் வழியே பார்த்த வண்ணமிருந்தாள். நிவின் கூடத்திலேதான் அமர்ந்திருந்தான். எப்போதும் அவன் கையிலிருக்கும் அலைபேசியோ மடிக்கணினியோ என எதுவுமே இல்லை. அவன் சிந்தனை கூட இங்கில்லை. இளையராஜா உருகிக் கொண்டிருந்தார். அதில் கூட அவன் லயிக்கவில்லை என முகமே கூறியது. சுதி எட்டிப் பார்த்துவிட்டு கைப்பையிலிருந்த அலைபேசியை எடுத்து கண்களை அதில் ஓட்டினாள்.
அப்படியே வர சற்றுத் தாமதமாகும் என சௌம்யாவிற்குக் குறுஞ்செய்தி ஒன்றைத் தட்டிவிட்டாள். “சுதிரமாலா, ஒரு காஃபி வேணும்!” அவன் குரலில் கலைந்தவள் அலைபேசியை பையில் வைத்துப் பூட்டிவிட்டு அவனுக்கொரு குளம்பியைத் தயாரித்துக் கொடுத்துப் பின்னர் அப்படியே பால்கனிக்குச் சென்று நின்றாள்.
மழை விட்டுவிட்டுப் பெய்து கொண்டிருக்க, இவள் ஆர்வமே இல்லாது அசிரத்தையாய்ப் பார்வையை சாலையில் படரவிட்டாள். சிந்தனை எங்கெங்கோ படர்ந்தது. கையைக் கட்டி சுவரில் சாய்ந்தவள் அடுத்து வாழ்க்கையில் என்னவென யோசித்தாள்.
“யூ லுக் ப்ரிட்டி இன் திஸ் சாரி சுதி!” தூரத்தில் நின்றாலும் செவிவழி நுழைந்து இதயத்தை அதிரச் செய்த குரலின் அடர்த்தியில் நெஞ்சம் திடுக்கிட்டது பெண்ணுக்கு‌. வெகுபிரயனதனம் மேற்கொண்டு முகத்தில் எதையும் காண்பிக்காது சரிசெய்தவள், “தேங்க் யூ சார், அண்ட் இந்த காம்ப்ளிமெண்ட் தேவையில்லாதது!” என்றாள் இழுத்துப் பிடித்த புன்னகையுடன். உன்னுடைய பேச்சு எனக்கு உவப்பாய் இல்லை என்று பார்த்து வைத்தாள்.

(தொடர்ந்து கீழே படிக்கவும்)
 
Administrator
Staff member
Messages
1,028
Reaction score
2,912
Points
113
“தப்பா எதுவும் சொல்லலையே நான். ஜஸ்ட் மனசுல பட்டதை சொன்னேன்!” அசிரத்தையாய் பதிலளித்தவாறே அங்கிருந்த நாற்காலியை நகர்த்தி அதில் அமர்ந்தவன் குனிந்து ஒரு மிடறு குளம்பியைப் பருகிவிட்டு நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
அந்தப் பார்வைக்காகக் காத்திருந்தவள் போல, “ஓ... ரோட்ல போற யாரா இருந்தாலும் காம்ப்ளிமெண்ட் கொடுப்பீங்களா சார்?” குரலில் கொஞ்சம் கேலி இழையோடக் கேட்டாள் பெண். அவள் பதிலில் இவனது முகத்தில் முறுவல் அரும்பியது. சுதி அவனைத்தான் பார்த்தாள். எத்தனை மாதங்கள் கழித்துப் புன்னகைக்கிறான். இந்த சில பல மாதங்களாக ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொள்ளவில்லை.
“ரோட்ல போற எல்லாரும் சுதியாகிட முடியாதில்ல?” என்றவன் குளம்பியில் கவனமாகிவிட, சுதியின் முகம் மாறத் தொடங்கியது. இதற்கு மேலும் இங்கிருப்பது நல்லதற்கல்ல என அறிவு உணர்த்த, விறுவிறுவென நடக்க முயன்றாள். மழையில்
நனைந்தாலும் பரவாயில்லை. இவனுடன் இருப்பது சர்வ நிச்சயமாகப் பாதுகாப்பில்லை என மனம் முதன்முதலில் நிவினின் அருகே பயந்து போனது. பார்வையில் தவறில்லை. ஆனாலும் பேச்சு அவளைப் பயங்கொள்ள செய்ததே.
“டூ மினிட்ஸ் சுதி. ஐ ஜஸட் வாண்ட் டு டாக்‌ டூ யூ!” என அவன் இவளைத் தடை செய்ய, சில நொடிகள் யோசித்தவள், “என்ன பேசணும் சார்?” என இறுகிய குரலில் கேட்டாள்.
“ஃபர்ஸ்ட் ரிலாக்ஸ் சுதி. டூ யூ வாண்ட் காஃபி?” என அவன் கேட்க, இவளுக்கு கோபம் வந்தது. ஆனாலும் இந்நேரத்தில் தனியாய் அவனுடன் இருக்கும்போது கோபப்படுவது தவறானது என அறிவு அறிவுறுத்தியது.
“என்ன பேசணுமோ பேசி முடிச்சிடுங்க சார். அனேகமா இனிமே நான் இங்க வேலைக்கு வர்றது இதுதான் கடைசி நாளா இருக்கும். பேசிடுங்க, கேட்டுட்டுப் போறேன்!” அழுத்தமாய்க் கூறியவளைப் பார்த்தவன், “ஓ...” என உதட்டைக் குவித்து எழுந்து சென்றான். குவளையைக் கழுவி கவிழ்த்திவிட்டு வந்து அவளுக்கு முன்னே நின்றான்.
இரண்டிகள் விலகி நின்ற சுதியின் முகம் பதற்றத்தில் திளைத்திருந்தது. கையில் எதையோ ஒளித்து வைத்திருந்தாள். அதைக் பார்த்தாலும் கண்டு கொள்ளாதவன், “இது மேரேஜ் ப்ரபோசல், இல்ல லவ் ப்ரபோசல், வாட் எவர், நீ என்ன நினைச்சாலும் ஐ டோன்ட் கேர். ஐ ஜஸ்ட் வாண்ட் டூ லிவ் ரெஸ்ட் ஆஃப் மை லைஃப் வித் யூ சுதி!” என்றான் அடர்ந்தக் குரலில். சுதிக்கு அவன் வார்த்தைகள் கொடுத்த அதிர்வை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவன் குரலின் உண்மைத்தன்மை, பேதம் என எதையும் அவள் அறியும் நிலையில் இல்லை. கோபம்தான் வந்தது.
பற்களை அழுந்தக் கடித்தவள், “எனக்கு டைமாச்சு. நான் கிளம்புறேன் சார்!” என விறுவிறுவென நடந்து சமையலறைக்குள் சென்று கைப்பையை எடுத்து தோளில் மாட்டினாள்‌. அவள் வெளியே செல்ல முடியாதவாறு வழியை அடைத்து நின்றவன், “ஐ வாண்ட் ஆன்சர்!” என்றான் அழுத்தமாய்.
கோபத்தைக் குறைத்து தன்னை நிதானப்படுத்தியவள் எதிரிலிருப்பவனை வணிகவளாகத்தின் வாடிக்கையாளர் என்ற எண்ணத்தை உட்புகுத்தி உதடுகளில் வலுக்கட்டாயமாக புன்னகையை பூட்டினாள்.
“சாரி சார், நீங்க என்ன பேசுறீங்கன்னு எனக்கு சுத்தமா புரியலை. இருந்தாலும் ஒன்னு சொல்லணும்னு நினைக்கிறேன். நீங்க வந்து மேரேஜ் ப்ரபோசல் வச்சதும், உங்களோட அப்பியரன்ஸ், பணம், ஆடம்பரமான வாழ்க்கை எல்லாத்தையும் பார்த்து சரின்னு சொல்லிடுவேன்னு நினைக்காதீங்க. அண்ட் ஒன் திங்க், இதுவரைக்கும் உங்க மேல ஒரு நல்ல அபிப்பிராயம் இருந்தது. நீங்களே அதை அழிச்சுக்க நினைக்காதீங்க. மிட்டாயை வச்சு ஆசைக் காட்டி மோசம் பண்ணறது போல செய்ய நான் குழந்தை இல்லை. என்னோட தகுதி, தராதாரம் என்னென்னு எனக்குத் தெரியும். அதை எப்பவுமே என் மனசுல வச்சுப்பேன். நீங்க பேசுனதை நான் மறந்துட்றேன். நீங்களும் மறந்துடுங்க‌. வேற ஒரு நல்ல சர்வன்டா பார்த்து வேலைக்கு வச்சுக்கோங்க. வீட்ல என்னைத் தேடுவாங்க. வழி விட்டா நான் போய்டுவேன்!” இழுத்துப் பிடித்தப் பொறுமையுடன் பேசினாள் சுதி.

நிவின் என்ற மனிதன் அவளது மனதிலிருந்து கீழிறிங்கி இருந்தான். அவன் முகத்தை சுளித்து, திட்டிய போது கூட அவன் மீது கோபம்தான் வந்தது. மற்றபடி வெறுப்போ இல்லை வேறு எண்ணமோ வரவில்லை. ஆனால் இன்றைக்கு மனம் கசந்து போனது. என்ன எண்ணத்தில் இவன் அப்படிக் கேட்டான். இவனிடமிருக்கும் பணத்தைப் பார்த்து பிரம்மித்து இவனுக்கு கைப்பாவையாகி விடுவேன் என நினைத்தானோ என்ற எண்ணத்தில் முகம் சிவந்து போனது. காலையில் பூவாய் மலர்ந்திருந்த முகம் எதிரிலிருந்தவனின் செய்கையில் கோபத்தில் செம்மையாகிப் போனது.
“அப்போ இதான் உன் முடிவு?” அவன் கேட்டதும் நிமிர்ந்து பார்த்தவள், “ஆமா... இதுதான் என் முடிவு. வீட்டுக் கஷ்டத்துக்காக வேலைக்கு வர்றவ. கல்யாணம் அது இதுன்னு சொன்னதும் நம்பிடுவா. யூஸ் பண்ணிட்டு தூக்கிப் போலாம்னு நீங்க நினைச்சிருந்தா, ஐயம் சாரி மிஸ்டர் நிவின். எனக்கு பணத் தேவை இருக்கு. அதுக்காக எப்படி வேணாலும் சம்பாரிக்கலாம்ன்ற எண்ணமில்லை. நான் உங்க வீட்ல வேலைக்கு வந்தேன்றதுக்காக அட்வாண்டேஜ் எடுக்கலாம்னு நினைக்காதீங்க. உங்கப் பணத்து மேல என்னைக்கும் எனக்கு பிரம்மிப்பு இல்லை!” என்றாள் கோபமாய். விழிகள் உடைப்பெடுக்க முயன்றாலும் உதட்டைக் கடித்து அமைதியாய் நின்றாள்.
அவளைக் கூர்ந்து பார்த்தவன், “ஓஹோ... அப்போ சாக்லேட் கொடுத்து இந்த பாப்பாவைக் கரெக்ட் பண்ண முடியாது. சோ சேட் நிவின்!” கேலியாக் கூறி தோளை ஆட்டியவனில் சுதியின் பொறுமை கடந்தது.
“வழியை விடுங்க மிஸ்டர் நிவின். நான் வீட்டுக்குப் போகணும்!” என்றாள் கடுப்புடன். அத்தனை என்ன இளக்காரமாகப் போய்விட்டேன் என நினைத்ததும் கழிவிரக்கத்தில் தொண்டை அடைத்தது. வீட்டு வேலைக்கு வந்ததால் இவனிஷ்டத்திற்கு வளைக்கப் பார்ப்பானா என்ன? என மூளை அவளை தூண்டிவிட, அவனை நிமிர்ந்து முறைத்தாள். முகமும் காதும் அவளுக்கு சிவந்தது. இங்கிருந்து வீட்டிற்கு சென்றுவிடு மனமே என மூளை பதறியது.
“என்னை ரிஜெக்ட் பண்ண ரீசன் தெரிஞ்சுக்கலாமா?” என்றவனின் கேள்வியில் சுதிக்கு முகம் வெளுத்தது. இப்போதைக்கு இவன் தன்னை வெளியே செல்ல விடமாட்டான் போல என நினைத்து கையிலிருந்த கத்தியை இறுக்கிப் பிடித்தாள். அவளது முகத்தில் வியர்வை அரும்பியது. நிவினும் பார்த்துக்கொண்டு தானே இருந்தான்.
“சுதிர மாலா!” இத்தனை நேரமிருந்த அழுத்தம், அலட்சியம் அனைத்தையும் தூக்கியெறிந்து விட்டு தன்மையாய் அழைத்தான் நிவின். இவளுக்கு நெஞ்சு படபடத்தது. நிமிர்ந்து பயத்துடன் அவனை நோக்கினாள்.
“ரிலாக்ஸ், நீ நினைக்கிற அளவுக்கு நான் ஹார்ம் ஃபுல் கிடையாது. என்னைக்காவது நான் உன்னைத் தப்பா பார்த்திருக்கேனா? இல்லை உன்கிட்டே தப்பா பேசி இருக்கேனா? இல்லைல? இப்போ ஜஸ்ட் எனக்கு உன்னைப் பிடிச்சது. அதை ஷேர் பண்ணுனேன். அக்செப்ட் பண்றதும் ரிஜெக்ட் பண்றதும் உன்னோட விருப்பம். ஐ டோன்ட் வாண்ட் டூ போர்ஸ் யூ. இப்போ கிளம்புங்க. நாளைக்குப் பேசிக்கலாம்...” என்றவன், “கண்டிப்பா வேலையைவிட்டு சொல்லாம நிக்க கூடாது. என்னால புது சர்வண்ட் ஈஸியா தேட முடியாது. ஆல்ரெடி யூ க்னோ தட் டிபிகல்டீஸ். சோ, வேலையை கண்டினியூ பண்ணணும்!” என கடைசி விஷயத்தை அழுத்திக் கூறினான்.

நிமிர்ந்து அவனைப் பிரித்தரிய முடியாது நோக்கியவள் விறுவிறுவென வெளியேறினாள். அவனிடம் தைரியமாய் பேசிவிட்டாலும் சுதிக்கு அழுகையாய் வந்தது. நல்லவன் என நினைத்து வேலைக்கு வந்தால், இவன் என்ன வேண்டுமானாலும் பேசுவானோ? அத்தனை தாழ்ந்து போய்விட்டேனா நான் என மனம் அடிவாங்கிப் போனது. இந்த நிமிடம் வரை அவன் கூறியது உண்மையென சுதியால் நம்ப முடியவில்லை. என்‌ முகத்தைத் கூட ஒழுங்காகப் பார்த்திராத இவனுக்கு பிடித்திருக்கிறதாம் என நினைத்ததும் உதடுகளில் விரக்தி புன்னகை. அவன் அளவிற்குப் படிக்கவில்லை, பணமில்லைதான். ஆனால் அவளுக்கு சுயமரியாதை, சுயவொழுக்கம் அதிகமாய் இருந்தது. பணத்திற்காக தரம் தாழ்ந்து போவதில்லை உத்தமமாய் அவளுக்கு விருப்பமில்லை. உணவை விட ஒழுக்கம் மேல் என போதிக்கப்பட்டு வளர்ந்தவளுக்கு அவன் பேச்சு உவப்பாய் இல்லை. அதைவிட நிவின் இப்படி பேசியதை அவளால் கிஞ்சிற்றும் நம்ப முடியவில்லை. அவனை இப்படியொரு எண்ணத்தில் என்றைக்குமே அவள் புகுத்தியிருக்கவில்லை. அவள் வந்ததும் வீட்டின் கதவைக் கூட ஒருநாளும் அவன் பூட்டியது இல்லை. பாதி திறந்தே தான் இருக்கும். அதே போல ஒருநாளும் அவன் பார்வை தவறாய் இவள் மீது படர்ந்தது இல்லை. தன் முகத்தைக் கூட இதுவரைக்கும் விரல்விட்டு எண்ணி விடும் அளவிற்குத் தானே பார்த்திருக்கிறான் என மூளை பரபரவென அவன் மீதான குற்றச்சாட்டிற்கு ஆதாரத்தை திரட்ட முயல், அதில் ஒன்றுமே இல்லையே.

வாயில் வரை சென்று காலணியை மாட்டியவள் வெளியே வந்துவிட்டோம் என்ற நினைப்பில் ஆழ்ந்த மூச்செடுத்துப் பின்னர் அவனைப் பார்க்க, நிவினும் இவளைத்தான் பார்த்திருந்தான். தப்பு செய்த அவனே இத்தனை தைரியமாய் இருக்கும்போது தான் மட்டும் ஏன் பயப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் கையைக் கட்டிக்கொண்டு அவனை முறைத்தவள், “ஈவ்னிங் எனக்கு எங்கேஜ்மெண்ட் சார். கண்டிப்பா நீங்க வரணும்!” என்றாள் அழுத்தமாய். பொய்தான் உரைத்தாள். அப்படிகூறிவிட்டால் அவன் இதுபோல பேச்சுக்களைத் தவிர்த்து விடுவான் எனக் கூறினாள். அதே போல உன்னைக் கண்டு நான் பயப்படவில்லை என்றொரு பாவனையை குரலில் புகுத்தினாள். நிவின் முகத்தில் கேலி சிரிப்பு படர்ந்து விரிந்தது.
“ஓ...” என்று அவன் உதட்டைக் குவிக்கவும், சுதியின் முகம் கடுகடுத்தது‌. கேலியை சுமந்து வந்தப் பார்வை இவளுக்கு கோபத்தை வாரி இறைக்க, “என்னால இனிமே வேலைக்கு வர முடியாது. உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோங்க!” என்றுவிட்டு விறுவிறுவென நடந்தாள்.
மனம் மட்டும் நடந்த நிகழ்வில் தேங்கிவிட்டது. உறுதியாய்ப் பேசிவிட்டு வந்தாலும் உள்ளம் நடுங்கிப் போயிருந்தது.
கடைசியில் இவனும் ஒரு ஆம்பிளை என்று நிரூபித்துவிட்டான். போடா... போ!’ எனக் கண்ணீரைத் துடைத்துப் பயணச்சீட்டை வாங்கிவிட்டு நடத்துநரிடம் சில்லறையை பெற்றுப் பையில் வைத்தாள். மனம் சில நிமிடங்களில் கொஞ்சம் சமாதானம் அடைந்திருந்தது. இதை வீட்டிலும் சொல்ல முடியாது. சொன்னால் அவ்வளவுதான். தனியாய் இருக்கும் வாலிபன் வீட்டில் இத்தனை நாட்கள் பொய்க் கூறிவிட்டு வேலை பார்த்தாயா என சந்திராவும் சௌம்யாவும் அவளை ஒரு பார்வைப் பார்த்தால் சுருண்டு போவாளே. அவர்கள் அவளைத் தவறாக ஒருபோதும் நினைக்க மாட்டார்கள். இருந்தும் அவர்கள் ஒரு பார்வை பார்த்தாலும் இவளால் தாங்கிக் கொள்ள முடியாது. காசு பிரச்சனையைக் கூட சமாளித்துக் கொள்ளலாம் போல. இனிமேல் இதுபோல வீட்டு வேலைக்கு மட்டும் செல்ல வேண்டாம் என முடிவெடுத்திருந்தாள் பெண். மனம் சமன்பட்டது.
விவேகாவிடம் நடந்ததைப் பகிர்ந்தால் அவள் திட்டித் தீர்த்துவிடுவாளே என அஞ்சினாலும், நாளை அவளிடம் கூறிவிட்டால் மனம் அமைதியடையும் என்றெண்ணியவள், முகத்தை நன்றாய் அழுத்தித் துடைத்து அழுதத் தடயத்தை மறைத்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள். கையிலிருந்த அலைபேசி சப்தமிட்டது.
“ஹோப் யூ ரீச்சிட் ஹோம் சேஃப்லி?” என நிவின் செய்தி அனுப்பியிருக்க, அவனது எண்ணைக் கருப்ப சென்றவள் அப்படியே நிறுத்தினாள். இன்றோடு சேர்த்து இந்த மாதம் அவள் இருப்பதி ஐந்து நாட்கள் வேலை பார்த்திருக்கிறாள். அவளது உழைப்பு அது. அந்த சம்பளப் பணத்தை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அலைபேசியைத் தூக்கி தூரப் போட்டாள்.
‘சுதி, யூ லுக் ப்ரிடீ இன் திஸ் சேரி!’ சேலையில் கை வைத்தும் அவன் குரல் செவியில் மோத, ஒரு வேகத்துடன் அதை அவிழ்த்து மூலையில் எறிந்தாள்.
‘சேலை ஒன்னுதான் கேடு. இத்தனை நாள் கூட இருந்தவன் என்ன எண்ணத்துல இருந்தான்னு கண்டு பிடிக்க முடியாத நீயெல்லாம் எதுக்கு சோறு சாப்பிட்ற?’ மனம் ஆறாது கேள்வி கேட்க, சுதி அப்படியே படுத்துவிட்டாள்‌. சௌமியா வந்து சாப்பிட அழைக்க, “இல்ல அண்ணி... நான் மதியம் சாப்பிட்டுக்கிறேன்‌. இப்போ கொஞ்ச நேரம் தூங்குறேன். டயர்டா இருக்கு!” எனக் கூற, அவளும் விட்டுவிட்டாள்.
தான் அனுப்பிய செய்தி படிக்கப்படாமலே இருந்ததை நிவின் பார்த்துவிட்டு பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை. தோளைக் குலுக்கிக்கொண்டு சுதி சமைத்தவற்றை எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தான். உப்பு குறைவாய் போட்டிருந்தாள். எழுந்து சென்று உப்பை எடுத்து வந்து உணவில் கலந்து ஒருவாய் வைத்தான். நன்றாய் இருக்கவும் வயிறும் மனதும் நிரம்பும்வரை உண்டுவிட்டு அப்படியே தொலைக்காட்சியில் ஏதோ ஒரு முழு நீள படத்தை பார்த்து முடித்திருந்தான். பொழுது நகர்ந்துவிட, மாலை குளித்து முடித்து வீட்டில் அணியும் இலகுவான உடை ஒன்றை அணிந்தான். தலையில் ஈரம் இன்னும் காயாதிருக்க, அதைக் கலைத்துவிட்டுக் கொண்டே மகிழுந்து சாவியைக் கையிலெடுத்து சுழற்றியபடியே வெளியேறி சுதிரமாலாவின் வீட்டின் முன்பு சென்று நின்றவனை எதிர்பாராது திகைத்துப் போயிருந்தாள் பெண்.

தொடரும்...

Sorry makkale... Update nethey type paniten. But I'm not satisfied. So edit pani scenes mathi ezhuthi potu iruken. Epdi irukunu solunga. Correct uh na track la porena nu doubt uh iruku. So please share your feedbacks. 🙂






















 
Well-known member
Messages
881
Reaction score
652
Points
93
Edheyyyy 😲😲😲😲😲😲😲😲😲😲😲

Dei nivinnnnnnn, epdi da ipdilam
Ithu eppo la irunthu

Sathiyama ethirpaakkave illa ipdi oru twistuuu
 
Well-known member
Messages
430
Reaction score
319
Points
63
என்னடா திடீர்னு வீட்டுக்கு வந்துட்ட?
 
Messages
55
Reaction score
36
Points
18
பெண் பார்க்க வருகிறார்கள் என
புதிய செய்தி கேட்டு பிரமிக்கவில்லை
பெண் மனம் எதிர்பார்ப்பில்லாமல் புன்னகையுடன் கடந்து விட்டது ....

புடவையில் ஒளிரும்
பாவையின் அருகே
பார்வையில் அன்பாக
பெண்ணை புகழ...

எரித்திடும் தீயாய்
எப்படி வந்தது இந்த தைரியம்
ஏன் இப்படி கேட்கிறான் என
ஆயிரம் கேள்விகளில்
கோவ பார்வையில் பெண்
தள்ளி நிறுத்த
ஆணின் மனம் அதை அலட்சியம் செய்ய...

வரச் சொல்லிச் சென்றாள் கோபத்தில் வந்து நிற்கிறான் தாபத்தில்...
சொன்ன சொல்லை தட்டாத புது காதலன்...
மோதலில் தொடங்கி இருக்கிறது
காதலில் முடியுமோ...
 
Active member
Messages
178
Reaction score
119
Points
43
Adeiii
Ha ha
 
Top