- Messages
- 1,028
- Reaction score
- 2,912
- Points
- 113
பொழுது – 11 
சுதி அந்தக் காமைக்கலத்தை விழியகற்றாது பார்த்தாள். நேற்று அவள் சமைத்த உணவுதான். வழக்கத்தைவிட காளான் பிரியாணி நன்றாக
வந்திருக்கிறது என அவள் நேற்று எண்ணியவை மொத்தமும் வீணாகிப் போயின. நண்பர்களுடன் வெளியே சென்ற நிவின், சுதி மதியம் சமைத்த உணவை உண்ணவில்லை. அதைத் திறந்து கூட அவன் பார்க்கவில்லை என அவளுக்குப் புரிந்தது.
தன் கையால் உணவை கீழேப் போடுகிறோமே என்ற வருத்தத்துடன் அந்த உணவைக் குப்பைத் தொட்டியிலிட்டாள். எத்தனையோ பேர் பசியாலும் வறுமையாலும் வாட, இப்படி சாப்பாட்டை வீணடித்த நிவினை நினைத்து சுதிக்கு கோபம்தான். ஆனாலும் வாய் வார்த்தையாக எதையும் அவனிடம் கேட்கவில்லை பெண். கேட்டால், ‘நீ என்கிட்டே வேலைதான் பார்க்குற. என்னைக் கேள்வி கேட்க உனக்கென்ன உரிமை?’ எனக் கேட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. அதனாலே பெருமூச்சுடன் வேலையை முடித்துவிட்டு கிளம்பினாள். அவன் கூடத்தில் அமர்ந்திருக்க, வாய் வார்த்தையாக உரைக்காது தலையை மட்டும் அசைத்துக் கிளம்பினாள். அவனும் பெரிதாய் எதிர்வினையாற்றவில்லை; அவளையும் கண்டு கொள்ளவில்லை. அந்த வார ஞாயிற்றுக்கிழமை சுதி விடுப்பு முடிந்து கொஞ்சம் தெம்பாய் திங்கட்கிழமை காலை வேலைக்கு வந்தாள்.
அழைப்பு மணியை அழுத்தச் சென்றவள் கதவு திறந்திருக்கவும் மெல்ல அதைத் தள்ளி உள்ளே சென்றாள். கூடத்தில் பாலுமகேந்திரா அமர்ந்திருந்தார். அன்றைய செய்தியை தொலைக்காட்சியில் பார்த்தவாறே அமர்ந்திருந்தவர் இவளது அரவம் கேட்டுத் திரும்பினார்.
“வாம்மா சுதா... நல்லா இருக்கீயா மா?” என அவர் வினவ, ஒரு நொடி அவரை எதிர்பாராது திகைத்தவள், “நான் நல்லா இருக்கேன் சார். நீங்க எப்படி இருக்கீங்க?” எனக் கேட்டுக் கொண்டே நடந்தாள்.
“நல்லா இருக்கேன் மா! என் மகன் உயிரைக் காப்பத்துனதும் இல்லாம, அவனுக்கு வாய்க்கு ருசியா சமைச்சு வேற கொடுக்குறம்மா. உனக்கு எப்படி தேங்க்ஸ் சொல்றதுன்னு தெரியலை மா. நீ மட்டும் சரியான நேரத்துக்கு வேலைக்கு வரலைன்னா, பையன் தனியா கஷ்டப்பட்டிருப்பான். அவன் கூட என்னாலயும் தங்க முடியாத சிட்சுவேஷன்!” என்றவர் பெருமூச்சுவிட்டபடி,
ஒரே நேரத்துல ரெண்டு வேலை பார்க்குறீயே... உடம்பு என்னத்துக்கும்மா ஆகும்?” என அவள் மீதும் அக்கறையாகக் கேட்க, சுதி புன்னகைத்தாள்.
“பெருசா கஷ்டமா இல்லை சார். தேவை இருந்தா வேலை பார்த்துதானே ஆகணும்” என்றவளை அவர் அனுசரணையாய்ப் பார்த்தார்.
“தேவை இருந்துட்டேதான் இருக்கும் மா... நீயும் என் பொண்ணு மாதிரி தான்மா. உடம்பை பார்த்துக்கோ!” என்றவரிடம் சுதி பதிலளிக்கவில்லை. ஏனோ நிவின் மீதிருக்கும் பிம்பத்தை இவரி மீது புகுத்த விருப்பமில்லை. மகேந்திராவின் வார்த்தைகளில் சுதிக்கு மெதுவாய் பாரம் இறங்கியது போல உணர்ந்தாள். தான் கஷ்டப்படுவதை விட யாரோ ஒருவர் அதைக் கேட்கும்போது வலி குறைந்தது. அக்கறையான வார்த்தைக்கு மனம் ஏங்கியதை உணர்ந்து திடுக்கிட்டுப் போனாள் பெண். ஒரு நொடியில் தன்னை சமாளித்தவள், “நான் போய் குக் பண்றேன் சார்...” என நடந்தவாறே, “உங்களுக்கு காஃபி போட்டுத் தரவா சார்?” எனக் கேட்டாள்.
“இப்போதான் காஃபி குடிச்சேன்மா. இருந்தாலும் உன் கையால எனக்கு ஒன்னுப் போட்டுத் தாம்மா...” என்றவர் சமையலறைக்குள் அவளுடன் நுழைந்து கொண்டார். தலையை அசைத்துவிட்டு சுதி அவருக்கு குளம்பியைத் தயாரித்தாள்.
“ரெண்டா போடும்மா... நீயும் ஒரு காஃபியைக் குடிச்சிட்டு வேலை பார்ப்ப... சீக்கிரம் எழுந்து அங்க இருந்து வர்ற. பசிக்கப் போகுது!” என அவர் கூறவும் சுதியின் கண்கள் சட்டென கலங்கிவிட்டன. இந்த மனிதாபிமானம் நிவினிடம் ஏன் இல்லையென மனம் கேட்க, அதைத் தட்டி தூர எறிந்தாள். அவன் கேட்டாலும் கூட அவளுக்கு இங்கே தண்ணீர் குடிக்க கூட விருப்பமில்லை என்பது வேறு விஷயம். முதலில் அவளது பாதுகாப்புதான் முக்கியம். இரண்டாவது தன்மானம் முக்கியமாகப் போயிற்று. அவன் வீட்டில் முன்பே எதையும் சாப்பிட, குடிக்கக் கூடாது என்று நினைத்திருந்தாள். பின்னர் அவனுடைய நடவடிக்கையில் அந்த எண்ணம் மேலும் வலுப்பெற்றது.
“இல்ல சார்... நான் வரும்போதுதான் டீ குடிச்சிட்டு வந்தேன். நீங்க குடிங்க!” சுதி மறுக்க, “அட... என்னம்மா சங்கடம், இது நம்ப வீடு. எனக்குப் போடும்போது சேர்த்து இன்னொரு காஃபி உனக்கும் போடப் போற...” என மகேந்திரா கூற, இவள் நம்ப வீடு என்ற வார்த்தையில் மெதுவாய் சிரித்தாள்.
“டீ மட்டும்தான் குடிப்பேன் சார். இங்க டீ தூள் இல்ல!” என அவரை சமாளித்தவள், “சுகர் கம்மியா போடணுமா சார்?” சர்க்கரை டப்பாவைக் கையில் வைத்துக்கொண்டு வினவ, “ஆமா... மா. வயசாகிட்டதால சர்க்கரை, எண்ணென்னு எல்லாத்தையும் குறைச்சுக்கிட்டேன்...” என்றவருக்கு குவளையைக் கையில் கொடுத்தாள்.
“உங்க வீட்ல எத்தனை பேருமா... அப்பா, அம்மா என்ன பண்றாங்க?” என அவர் கேட்டதும் சுதியிடம் சில நிமிடங்கள் மௌனம். அவளது முகத்தைப் பார்த்தவர், “சாரிமா... நான் எதுவும் தப்பா கேட்டுட்டேனா?” எனக் கேட்டார் பெரியவர்.
“ஐயோ... அதெல்லாம் இல்ல சார். அம்மா, அப்பா உயிரோட இல்ல. சின்ன வயசுல ஒரு ஆக்ஸிடென்ட்ல இறந்துட்டாங்க. அத்தை, மாமா வீட்லதான் வளர்ந்தேன். விவரம் தெரியுற வரை அவங்கதான் எனக்கு அம்மா, அப்பாவா இருந்தாங்க. இப்பவும் அப்படித்தான்...”
என்று வலுக்கட்டாயமாக சிரிக்க முயன்றாள். என்ன முயன்றும் குரலில் வருத்தம் தோய்ந்திருந்தது.
பெரியவர் சில நொடிகள் அமைதியாய் இருந்தார். “என்ன சொல்றதுன்னு தெரியலை மா. கடவுள் ஒன்னைப் பறிச்சாலும் இன்னொன்னை கொடுத்துருக்காருன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான் மா!” என்றவருக்குப் பதில் இவளது முகத்தில் வருத்தப் புன்னகை. அதையும் கடவுள் பறித்துவிட்டார் என்று கூறி இவரிடம் அனுதாபம் தேட சுதிக்கு விருப்பமில்லை. அதனாலே வேலையைக் கவனித்தாள்.
அவருடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே சமைத்து முடித்துப் பாத்திரத்தைக் கழுவி வைத்தவள், வீட்டைப் பெருக்க ஆயத்தமாகப், பெரியவர் குளித்து வருவதாய் அறைக்குள் நுழைந்து கொண்டார்.
அப்போதுதான் நிவின் எழுந்து வெளியே வந்தான். தொலைக்காட்சி யாருமில்லாத வீட்டில் சத்தம் போட்டுக் கொண்டிருக்க, அதை அணைத்தான். அவன் நிற்கும் இடத்தைதான் சுதி சுத்தம் செய்து கொண்டிருந்தாள். அவன் அருகே வரவும் திடீரென எதிர்பாராது ஒரு நொடி பயந்து விலக, நிவின் நின்றான். அவன்தான் வந்திருக்கிறான் என்பதை புலன்கள் உணர்ந்து மூளைக்கு கடத்த, ஆசுவாசப் பெருமூச்சை வெளிவிட்டாள் பெண். அவன் அதைப் பார்த்தும் கண்டு கொள்ளாது அகன்றுவிட, இவளுக்கு மனம் கடுகடுவென்றிருந்தது.
சத்தம் இல்லாமல் இப்படித்தான் வந்து நிற்பானா என எண்ணியபடியே வீட்டை சுத்தம் செய்து முடித்துவிட்டு கிளம்ப சென்றாள். மகேந்திராவிடம் சொல்லிக் கொள்ளாது கிளம்ப மனம் வரவில்லை பெண்ணுக்கு. நிவினைக் கொண்டுதான் அவர் பழக்கம் என்றாலும் அவரின் அக்கறையான வார்த்தைகளும் அன்பான பார்வையிலும் எவ்வித பிசுறும் இவளால் கண்டறிய முடியவில்லை. நிவினுக்கு வேண்டுமென்றால் நான் வேலைக்காரியாக இருந்துவிட்டுப் போகிறேன்.
தன் தந்தை உயிரோடிருந்தால் இவரை ஒத்துதான் இருந்திருப்பார் எனத் தோன்ற, பால்கனியில் வந்து நின்றாள். இளம் வெயில் முகத்தில் பட்டுத் தெறிக்க, மெதுவாய் சிந்தனை எங்கெங்கோ சென்றது. இழுத்துப் பிடிக்க மனதில்லாது அதன் போக்கிலே விட்டுவிட்டாள். சரத்தும் அவளது மாமாவும் உடனிருந்த பசுமையான நாட்கள் நினைவை நிறைக்க, மீண்டும் வராத அந்தக் காலத்தை எண்ணியதும் ஏக்கப் பெருமூச்சுதான்.
“ஸ்கூல் பஸ் வரலைன்னு பொம்பளைப் புள்ளையை பஸ்ல போகச் சொல்ற நீ? ஆயிரம் காவாலிப் பயலுகள வருவாங்க. எனக்கு டைமானாலும் பரவாயில்லை. நான் சுதியை ஸ்கூல்ல விட்டுட்டு ஆஃபிஸ் போறேன்...” எனத் தன்னைப் பொத்திப் பாதுகாத்த தந்தை ஸ்தானத்திலிருந்த மாமாவை நினைத்ததும் மனம் கனிந்து போனது. பேருந்திலேறி சிரமப்படக் கூடாதென தாங்கிய மனிதர் இன்று தான் அனுபவிக்கும் வேதனைகளை பார்த்திருந்தால், துடித்துப் போயிருப்பார்.
பத்து வயது தன்னைவிடக் குறைவு என்பதாலே அத்தை மகள் என்ற எண்ணம் கொஞ்சமும் இல்லாது குட்டிமா எனக் கொஞ்சும் சரத்தை நினைக்கையில் மனம் விம்மும். மாமா இறந்ததிலிருந்து கூட அவள் சீக்கிரம் மீண்டிருந்தாள். ஆனால் சரத் இழப்பை ஈடுகட்ட முடியாது அவர்கள் வாழ்க்கையே ஸ்தம்பித்துப் போயிருந்தது. அத்தனை சிறிய வயதில் சௌம்யா கணவனை இழந்து கதறிய காட்சி இன்றுமே அவளை உலுக்கும்.
“ம்மா சுதா... கிளம்பிட்டீயா?” மகேந்திரா குரலில் மீண்டவள், “ஆமா சார்... டைமாச்சு. நான் கிளம்புறேன்...” என்றவள் வெளியே நடந்தாள்.
“காலைல சாப்பாடு சாப்பிடலையா மா? அங்கப் போய் சாப்பிடுவீயா?” அவர் கேட்க, “டிபன் கட்டீட்டு வந்துருக்கேன் சார். போய்தான் சாப்பிடணும்!” என்றவள் விடைபெற, இவர் தலையை அசைத்தார்.
விவேகாவின் புலம்பலில்தான் சுதிக்கு நாளே துவங்கியது. அவளுடைய அண்ணன் ஏதோ தகராறில் மூக்கை நுழைத்திருந்தான். காவல்துறையினர் அடித்து வெளுத்துவிட்டார்களாம். இவளும் தந்தையும் சென்றுதான் அவர்களிடம் பேசி, ஐந்தாயிரம் பணத்தைக் கொடுத்து அவனைக் காவல் நிலையத்திலிருந்து அழைத்து வந்திருந்தார்கள். போதாத குறைக்கு அரசு மருத்துவமனைக்கு செல்ல மாட்டேன் என அடம்பிடித்து தனியார் மருத்துவமனையில் இரண்டு நாட்கள் அனுமதித்து வீட்டிற்கு வரும்போது இருபதாயிரத்து சொச்சம் செலவாகியிருந்தது. விவேகா திருமணத்திற்கென்று வாங்கிய தங்கச் செயினை அடகுவைத்து அந்தப் பணத்தைக் கட்டியிருந்தாள். அதற்கெல்லாம் சேர்ந்துதான் இப்போது தமையனை வசைபாடிக் கொண்டிருக்கிறாள். சுதி என்னப் பேசுவது எனத் தெரியாது அமைதியாய் அவள் புலம்பலைக் கேட்டாள்.
“ஊர்ல உலகத்துல எத்தனையோ ஆம்பளை பசங்க வீட்டை நில்லுன்னு நிறுத்துறாங்க. ஆனால் எங்க வீட்லன்னு வந்து பொறந்திருக்குப் பாரு. எல்லாம் எங்க தலைவிதி டி சுதி. வீட்டுக்கு பிரயோஜனம் இல்லைனாலும் என்னத்தையோ சோத்தை சாப்ட்டு அமைதியா இருக்கான்னு நினைச்சேன். இப்போ அந்த நிம்மதியையும் கெடுத்துட்டான். நான் அவன் ஜெயில்லயே கிடக்கட்டும், அப்போதான் புத்தி வரும்னு சொன்னேன். ஆனால் எங்கம்மா உக்காந்து ஒரே ஒப்பாரி. எரிச்சலா இருக்கு டி. காலைல இருந்து நைட்டு வரைக்கும் நின்னு நின்னு காலே செத்துப் போற அளவுக்கு வேலை பார்த்து காசை சேர்த்தா, இவன் ரெண்டு நாள்ல என் ரெண்டு மாச சம்பளத்தை வேஸ்ட் பண்ணிட்டான். மனசே ஆறலை டி... சரியா திங்காம, உங்காம சேர்த்த காசு. அனாமத்தா போச்சேன்னு வயிறு எரியுது!” என அவள் கோபமும் ஆதங்கமுமாய்ப் பேசினாள்.
சுதிக்கும் அவளது பேச்சின் நியாயங்கள் புரிந்தே இருந்தது. இங்கே வேலை பார்க்கும் ஒவ்வொருவரும் எத்தனையோ வலிகளைத் தாங்கிக்கொண்டு வேறு வழியின்றி வேலை பார்க்கின்றனர். அப்படியிருக்கையில் இருபத்தைந்தாயிரம் என்பது ரொம்ப பெரிய தொகை. அதிலும் விவேகாவின் உழைப்பும் வீணாகிவிட்டதே என இவளுக்கும் வருத்தம் பிறந்தது. அவளைப் பேசி சரி செய்தாள் சுதி.
மறுநாளும் சுதியை பாலு மகேந்திராதான் வரவேற்றார். புன்னகையுடன் அவருக்கு குளம்பியைத் தயாரித்தாள்.
“இந்தாம்மா... கடைக்கு போனேன் காலைல. அப்படியே சிக்கன் எடுத்துட்டேன். கறிக்குழம்பு வச்சு, சாப்பாடு செஞ்சுடும்மா... அப்படியே அவனுக்கு ரசம் வச்சிடு. நான்வெஜ் சாப்பிடமாட்டான் அவன்!” என அவர் இறைச்சியை அவளுக்கு அருகே வைக்க, அவர் கையில் குளம்பியைக் கொடுத்தவள், “நிவின் சார் தக்காளி சாதம் வச்சு, காலிஃப்ளவர் பொரிக்க சொன்னாரு...” என்றாள் தயக்கமாய்.
“அவன் அப்படித்தான் மா. காய்கறியைத் தின்னு வளர்ந்தவன். சின்ன வயசுலயே கோழியும் ஆடும் பாவம்னு அழுதுட்டே நான் வெஜ் சாப்பிட மாட்டேன்னு அடம்புடிச்சு, இன்னைக்கு வர அதை ஃபாலோ பண்றான் மா!” என்றவர், “நீ நல்லா மணக்க மணக்க கோழிக் குழம்பை வைம்மா!” என்றார். சுதி அப்படியே நின்றாள். ஏற்கனவே நிவின் பேசிய சுடுசொற்கள் இன்னுமே மனதில் வடுவாய் தங்கியிருக்க, மீண்டுமொருமுறை காயப்பட அவளுக்கு விருப்பமில்லை.
“இல்ல சார்... நான் வேற எதுவும் சமைச்சா அவருக்குப் பிடிக்காது. அவர் சொல்றதை செய்றதுக்குத்தானே எனக்கு சம்பளம் தர்றாரு. அதனாலே என்னால அதை மீற முடியாது, சாரி சார்!” என்றாள். பெரியவரிடம் இப்படிப் பேச அவளுக்குமே மனதில்லை. இருந்தும் நிவினின் குணத்தை அவளறிந்தவரை இப்படிக் கூறினால் மட்டுமே அவளுடைய வேலையைப் பார்க்க முடியும்.
(தொடர்ந்து கீழே படிக்கவும்)

சுதி அந்தக் காமைக்கலத்தை விழியகற்றாது பார்த்தாள். நேற்று அவள் சமைத்த உணவுதான். வழக்கத்தைவிட காளான் பிரியாணி நன்றாக
வந்திருக்கிறது என அவள் நேற்று எண்ணியவை மொத்தமும் வீணாகிப் போயின. நண்பர்களுடன் வெளியே சென்ற நிவின், சுதி மதியம் சமைத்த உணவை உண்ணவில்லை. அதைத் திறந்து கூட அவன் பார்க்கவில்லை என அவளுக்குப் புரிந்தது.
தன் கையால் உணவை கீழேப் போடுகிறோமே என்ற வருத்தத்துடன் அந்த உணவைக் குப்பைத் தொட்டியிலிட்டாள். எத்தனையோ பேர் பசியாலும் வறுமையாலும் வாட, இப்படி சாப்பாட்டை வீணடித்த நிவினை நினைத்து சுதிக்கு கோபம்தான். ஆனாலும் வாய் வார்த்தையாக எதையும் அவனிடம் கேட்கவில்லை பெண். கேட்டால், ‘நீ என்கிட்டே வேலைதான் பார்க்குற. என்னைக் கேள்வி கேட்க உனக்கென்ன உரிமை?’ எனக் கேட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. அதனாலே பெருமூச்சுடன் வேலையை முடித்துவிட்டு கிளம்பினாள். அவன் கூடத்தில் அமர்ந்திருக்க, வாய் வார்த்தையாக உரைக்காது தலையை மட்டும் அசைத்துக் கிளம்பினாள். அவனும் பெரிதாய் எதிர்வினையாற்றவில்லை; அவளையும் கண்டு கொள்ளவில்லை. அந்த வார ஞாயிற்றுக்கிழமை சுதி விடுப்பு முடிந்து கொஞ்சம் தெம்பாய் திங்கட்கிழமை காலை வேலைக்கு வந்தாள்.
அழைப்பு மணியை அழுத்தச் சென்றவள் கதவு திறந்திருக்கவும் மெல்ல அதைத் தள்ளி உள்ளே சென்றாள். கூடத்தில் பாலுமகேந்திரா அமர்ந்திருந்தார். அன்றைய செய்தியை தொலைக்காட்சியில் பார்த்தவாறே அமர்ந்திருந்தவர் இவளது அரவம் கேட்டுத் திரும்பினார்.
“வாம்மா சுதா... நல்லா இருக்கீயா மா?” என அவர் வினவ, ஒரு நொடி அவரை எதிர்பாராது திகைத்தவள், “நான் நல்லா இருக்கேன் சார். நீங்க எப்படி இருக்கீங்க?” எனக் கேட்டுக் கொண்டே நடந்தாள்.
“நல்லா இருக்கேன் மா! என் மகன் உயிரைக் காப்பத்துனதும் இல்லாம, அவனுக்கு வாய்க்கு ருசியா சமைச்சு வேற கொடுக்குறம்மா. உனக்கு எப்படி தேங்க்ஸ் சொல்றதுன்னு தெரியலை மா. நீ மட்டும் சரியான நேரத்துக்கு வேலைக்கு வரலைன்னா, பையன் தனியா கஷ்டப்பட்டிருப்பான். அவன் கூட என்னாலயும் தங்க முடியாத சிட்சுவேஷன்!” என்றவர் பெருமூச்சுவிட்டபடி,
ஒரே நேரத்துல ரெண்டு வேலை பார்க்குறீயே... உடம்பு என்னத்துக்கும்மா ஆகும்?” என அவள் மீதும் அக்கறையாகக் கேட்க, சுதி புன்னகைத்தாள்.
“பெருசா கஷ்டமா இல்லை சார். தேவை இருந்தா வேலை பார்த்துதானே ஆகணும்” என்றவளை அவர் அனுசரணையாய்ப் பார்த்தார்.
“தேவை இருந்துட்டேதான் இருக்கும் மா... நீயும் என் பொண்ணு மாதிரி தான்மா. உடம்பை பார்த்துக்கோ!” என்றவரிடம் சுதி பதிலளிக்கவில்லை. ஏனோ நிவின் மீதிருக்கும் பிம்பத்தை இவரி மீது புகுத்த விருப்பமில்லை. மகேந்திராவின் வார்த்தைகளில் சுதிக்கு மெதுவாய் பாரம் இறங்கியது போல உணர்ந்தாள். தான் கஷ்டப்படுவதை விட யாரோ ஒருவர் அதைக் கேட்கும்போது வலி குறைந்தது. அக்கறையான வார்த்தைக்கு மனம் ஏங்கியதை உணர்ந்து திடுக்கிட்டுப் போனாள் பெண். ஒரு நொடியில் தன்னை சமாளித்தவள், “நான் போய் குக் பண்றேன் சார்...” என நடந்தவாறே, “உங்களுக்கு காஃபி போட்டுத் தரவா சார்?” எனக் கேட்டாள்.
“இப்போதான் காஃபி குடிச்சேன்மா. இருந்தாலும் உன் கையால எனக்கு ஒன்னுப் போட்டுத் தாம்மா...” என்றவர் சமையலறைக்குள் அவளுடன் நுழைந்து கொண்டார். தலையை அசைத்துவிட்டு சுதி அவருக்கு குளம்பியைத் தயாரித்தாள்.
“ரெண்டா போடும்மா... நீயும் ஒரு காஃபியைக் குடிச்சிட்டு வேலை பார்ப்ப... சீக்கிரம் எழுந்து அங்க இருந்து வர்ற. பசிக்கப் போகுது!” என அவர் கூறவும் சுதியின் கண்கள் சட்டென கலங்கிவிட்டன. இந்த மனிதாபிமானம் நிவினிடம் ஏன் இல்லையென மனம் கேட்க, அதைத் தட்டி தூர எறிந்தாள். அவன் கேட்டாலும் கூட அவளுக்கு இங்கே தண்ணீர் குடிக்க கூட விருப்பமில்லை என்பது வேறு விஷயம். முதலில் அவளது பாதுகாப்புதான் முக்கியம். இரண்டாவது தன்மானம் முக்கியமாகப் போயிற்று. அவன் வீட்டில் முன்பே எதையும் சாப்பிட, குடிக்கக் கூடாது என்று நினைத்திருந்தாள். பின்னர் அவனுடைய நடவடிக்கையில் அந்த எண்ணம் மேலும் வலுப்பெற்றது.
“இல்ல சார்... நான் வரும்போதுதான் டீ குடிச்சிட்டு வந்தேன். நீங்க குடிங்க!” சுதி மறுக்க, “அட... என்னம்மா சங்கடம், இது நம்ப வீடு. எனக்குப் போடும்போது சேர்த்து இன்னொரு காஃபி உனக்கும் போடப் போற...” என மகேந்திரா கூற, இவள் நம்ப வீடு என்ற வார்த்தையில் மெதுவாய் சிரித்தாள்.
“டீ மட்டும்தான் குடிப்பேன் சார். இங்க டீ தூள் இல்ல!” என அவரை சமாளித்தவள், “சுகர் கம்மியா போடணுமா சார்?” சர்க்கரை டப்பாவைக் கையில் வைத்துக்கொண்டு வினவ, “ஆமா... மா. வயசாகிட்டதால சர்க்கரை, எண்ணென்னு எல்லாத்தையும் குறைச்சுக்கிட்டேன்...” என்றவருக்கு குவளையைக் கையில் கொடுத்தாள்.
“உங்க வீட்ல எத்தனை பேருமா... அப்பா, அம்மா என்ன பண்றாங்க?” என அவர் கேட்டதும் சுதியிடம் சில நிமிடங்கள் மௌனம். அவளது முகத்தைப் பார்த்தவர், “சாரிமா... நான் எதுவும் தப்பா கேட்டுட்டேனா?” எனக் கேட்டார் பெரியவர்.
“ஐயோ... அதெல்லாம் இல்ல சார். அம்மா, அப்பா உயிரோட இல்ல. சின்ன வயசுல ஒரு ஆக்ஸிடென்ட்ல இறந்துட்டாங்க. அத்தை, மாமா வீட்லதான் வளர்ந்தேன். விவரம் தெரியுற வரை அவங்கதான் எனக்கு அம்மா, அப்பாவா இருந்தாங்க. இப்பவும் அப்படித்தான்...”
என்று வலுக்கட்டாயமாக சிரிக்க முயன்றாள். என்ன முயன்றும் குரலில் வருத்தம் தோய்ந்திருந்தது.
பெரியவர் சில நொடிகள் அமைதியாய் இருந்தார். “என்ன சொல்றதுன்னு தெரியலை மா. கடவுள் ஒன்னைப் பறிச்சாலும் இன்னொன்னை கொடுத்துருக்காருன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான் மா!” என்றவருக்குப் பதில் இவளது முகத்தில் வருத்தப் புன்னகை. அதையும் கடவுள் பறித்துவிட்டார் என்று கூறி இவரிடம் அனுதாபம் தேட சுதிக்கு விருப்பமில்லை. அதனாலே வேலையைக் கவனித்தாள்.
அவருடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே சமைத்து முடித்துப் பாத்திரத்தைக் கழுவி வைத்தவள், வீட்டைப் பெருக்க ஆயத்தமாகப், பெரியவர் குளித்து வருவதாய் அறைக்குள் நுழைந்து கொண்டார்.
அப்போதுதான் நிவின் எழுந்து வெளியே வந்தான். தொலைக்காட்சி யாருமில்லாத வீட்டில் சத்தம் போட்டுக் கொண்டிருக்க, அதை அணைத்தான். அவன் நிற்கும் இடத்தைதான் சுதி சுத்தம் செய்து கொண்டிருந்தாள். அவன் அருகே வரவும் திடீரென எதிர்பாராது ஒரு நொடி பயந்து விலக, நிவின் நின்றான். அவன்தான் வந்திருக்கிறான் என்பதை புலன்கள் உணர்ந்து மூளைக்கு கடத்த, ஆசுவாசப் பெருமூச்சை வெளிவிட்டாள் பெண். அவன் அதைப் பார்த்தும் கண்டு கொள்ளாது அகன்றுவிட, இவளுக்கு மனம் கடுகடுவென்றிருந்தது.
சத்தம் இல்லாமல் இப்படித்தான் வந்து நிற்பானா என எண்ணியபடியே வீட்டை சுத்தம் செய்து முடித்துவிட்டு கிளம்ப சென்றாள். மகேந்திராவிடம் சொல்லிக் கொள்ளாது கிளம்ப மனம் வரவில்லை பெண்ணுக்கு. நிவினைக் கொண்டுதான் அவர் பழக்கம் என்றாலும் அவரின் அக்கறையான வார்த்தைகளும் அன்பான பார்வையிலும் எவ்வித பிசுறும் இவளால் கண்டறிய முடியவில்லை. நிவினுக்கு வேண்டுமென்றால் நான் வேலைக்காரியாக இருந்துவிட்டுப் போகிறேன்.
தன் தந்தை உயிரோடிருந்தால் இவரை ஒத்துதான் இருந்திருப்பார் எனத் தோன்ற, பால்கனியில் வந்து நின்றாள். இளம் வெயில் முகத்தில் பட்டுத் தெறிக்க, மெதுவாய் சிந்தனை எங்கெங்கோ சென்றது. இழுத்துப் பிடிக்க மனதில்லாது அதன் போக்கிலே விட்டுவிட்டாள். சரத்தும் அவளது மாமாவும் உடனிருந்த பசுமையான நாட்கள் நினைவை நிறைக்க, மீண்டும் வராத அந்தக் காலத்தை எண்ணியதும் ஏக்கப் பெருமூச்சுதான்.
“ஸ்கூல் பஸ் வரலைன்னு பொம்பளைப் புள்ளையை பஸ்ல போகச் சொல்ற நீ? ஆயிரம் காவாலிப் பயலுகள வருவாங்க. எனக்கு டைமானாலும் பரவாயில்லை. நான் சுதியை ஸ்கூல்ல விட்டுட்டு ஆஃபிஸ் போறேன்...” எனத் தன்னைப் பொத்திப் பாதுகாத்த தந்தை ஸ்தானத்திலிருந்த மாமாவை நினைத்ததும் மனம் கனிந்து போனது. பேருந்திலேறி சிரமப்படக் கூடாதென தாங்கிய மனிதர் இன்று தான் அனுபவிக்கும் வேதனைகளை பார்த்திருந்தால், துடித்துப் போயிருப்பார்.
பத்து வயது தன்னைவிடக் குறைவு என்பதாலே அத்தை மகள் என்ற எண்ணம் கொஞ்சமும் இல்லாது குட்டிமா எனக் கொஞ்சும் சரத்தை நினைக்கையில் மனம் விம்மும். மாமா இறந்ததிலிருந்து கூட அவள் சீக்கிரம் மீண்டிருந்தாள். ஆனால் சரத் இழப்பை ஈடுகட்ட முடியாது அவர்கள் வாழ்க்கையே ஸ்தம்பித்துப் போயிருந்தது. அத்தனை சிறிய வயதில் சௌம்யா கணவனை இழந்து கதறிய காட்சி இன்றுமே அவளை உலுக்கும்.
“ம்மா சுதா... கிளம்பிட்டீயா?” மகேந்திரா குரலில் மீண்டவள், “ஆமா சார்... டைமாச்சு. நான் கிளம்புறேன்...” என்றவள் வெளியே நடந்தாள்.
“காலைல சாப்பாடு சாப்பிடலையா மா? அங்கப் போய் சாப்பிடுவீயா?” அவர் கேட்க, “டிபன் கட்டீட்டு வந்துருக்கேன் சார். போய்தான் சாப்பிடணும்!” என்றவள் விடைபெற, இவர் தலையை அசைத்தார்.
விவேகாவின் புலம்பலில்தான் சுதிக்கு நாளே துவங்கியது. அவளுடைய அண்ணன் ஏதோ தகராறில் மூக்கை நுழைத்திருந்தான். காவல்துறையினர் அடித்து வெளுத்துவிட்டார்களாம். இவளும் தந்தையும் சென்றுதான் அவர்களிடம் பேசி, ஐந்தாயிரம் பணத்தைக் கொடுத்து அவனைக் காவல் நிலையத்திலிருந்து அழைத்து வந்திருந்தார்கள். போதாத குறைக்கு அரசு மருத்துவமனைக்கு செல்ல மாட்டேன் என அடம்பிடித்து தனியார் மருத்துவமனையில் இரண்டு நாட்கள் அனுமதித்து வீட்டிற்கு வரும்போது இருபதாயிரத்து சொச்சம் செலவாகியிருந்தது. விவேகா திருமணத்திற்கென்று வாங்கிய தங்கச் செயினை அடகுவைத்து அந்தப் பணத்தைக் கட்டியிருந்தாள். அதற்கெல்லாம் சேர்ந்துதான் இப்போது தமையனை வசைபாடிக் கொண்டிருக்கிறாள். சுதி என்னப் பேசுவது எனத் தெரியாது அமைதியாய் அவள் புலம்பலைக் கேட்டாள்.
“ஊர்ல உலகத்துல எத்தனையோ ஆம்பளை பசங்க வீட்டை நில்லுன்னு நிறுத்துறாங்க. ஆனால் எங்க வீட்லன்னு வந்து பொறந்திருக்குப் பாரு. எல்லாம் எங்க தலைவிதி டி சுதி. வீட்டுக்கு பிரயோஜனம் இல்லைனாலும் என்னத்தையோ சோத்தை சாப்ட்டு அமைதியா இருக்கான்னு நினைச்சேன். இப்போ அந்த நிம்மதியையும் கெடுத்துட்டான். நான் அவன் ஜெயில்லயே கிடக்கட்டும், அப்போதான் புத்தி வரும்னு சொன்னேன். ஆனால் எங்கம்மா உக்காந்து ஒரே ஒப்பாரி. எரிச்சலா இருக்கு டி. காலைல இருந்து நைட்டு வரைக்கும் நின்னு நின்னு காலே செத்துப் போற அளவுக்கு வேலை பார்த்து காசை சேர்த்தா, இவன் ரெண்டு நாள்ல என் ரெண்டு மாச சம்பளத்தை வேஸ்ட் பண்ணிட்டான். மனசே ஆறலை டி... சரியா திங்காம, உங்காம சேர்த்த காசு. அனாமத்தா போச்சேன்னு வயிறு எரியுது!” என அவள் கோபமும் ஆதங்கமுமாய்ப் பேசினாள்.
சுதிக்கும் அவளது பேச்சின் நியாயங்கள் புரிந்தே இருந்தது. இங்கே வேலை பார்க்கும் ஒவ்வொருவரும் எத்தனையோ வலிகளைத் தாங்கிக்கொண்டு வேறு வழியின்றி வேலை பார்க்கின்றனர். அப்படியிருக்கையில் இருபத்தைந்தாயிரம் என்பது ரொம்ப பெரிய தொகை. அதிலும் விவேகாவின் உழைப்பும் வீணாகிவிட்டதே என இவளுக்கும் வருத்தம் பிறந்தது. அவளைப் பேசி சரி செய்தாள் சுதி.
மறுநாளும் சுதியை பாலு மகேந்திராதான் வரவேற்றார். புன்னகையுடன் அவருக்கு குளம்பியைத் தயாரித்தாள்.
“இந்தாம்மா... கடைக்கு போனேன் காலைல. அப்படியே சிக்கன் எடுத்துட்டேன். கறிக்குழம்பு வச்சு, சாப்பாடு செஞ்சுடும்மா... அப்படியே அவனுக்கு ரசம் வச்சிடு. நான்வெஜ் சாப்பிடமாட்டான் அவன்!” என அவர் இறைச்சியை அவளுக்கு அருகே வைக்க, அவர் கையில் குளம்பியைக் கொடுத்தவள், “நிவின் சார் தக்காளி சாதம் வச்சு, காலிஃப்ளவர் பொரிக்க சொன்னாரு...” என்றாள் தயக்கமாய்.
“அவன் அப்படித்தான் மா. காய்கறியைத் தின்னு வளர்ந்தவன். சின்ன வயசுலயே கோழியும் ஆடும் பாவம்னு அழுதுட்டே நான் வெஜ் சாப்பிட மாட்டேன்னு அடம்புடிச்சு, இன்னைக்கு வர அதை ஃபாலோ பண்றான் மா!” என்றவர், “நீ நல்லா மணக்க மணக்க கோழிக் குழம்பை வைம்மா!” என்றார். சுதி அப்படியே நின்றாள். ஏற்கனவே நிவின் பேசிய சுடுசொற்கள் இன்னுமே மனதில் வடுவாய் தங்கியிருக்க, மீண்டுமொருமுறை காயப்பட அவளுக்கு விருப்பமில்லை.
“இல்ல சார்... நான் வேற எதுவும் சமைச்சா அவருக்குப் பிடிக்காது. அவர் சொல்றதை செய்றதுக்குத்தானே எனக்கு சம்பளம் தர்றாரு. அதனாலே என்னால அதை மீற முடியாது, சாரி சார்!” என்றாள். பெரியவரிடம் இப்படிப் பேச அவளுக்குமே மனதில்லை. இருந்தும் நிவினின் குணத்தை அவளறிந்தவரை இப்படிக் கூறினால் மட்டுமே அவளுடைய வேலையைப் பார்க்க முடியும்.
(தொடர்ந்து கீழே படிக்கவும்)