Member
- Messages
- 94
- Reaction score
- 2
- Points
- 8
அத்தியாயம் - 34
"இனி மாமா… இனி மாமா…” என சத்தமாக கத்தியவாறே சுற்றிலும் தன் பார்வையை ஓட்டியபடியே அந்த பெரிய வரவேற்பறையில் அங்குமிங்குமாக ஆராய்ந்துக் கொண்டிருந்தான் சர்வேஸ்வரன்.
ஓங்கி ஒலித்த தன்னுடைய குரலுக்கு எந்தவிதமான பதிலும் கிடைக்காமல் போனதாலோ இல்லை தான் தேடியது இன்னும் கிடைக்காததாலோ சலித்தபடியே தன் கால்களை தரையில் உதைத்துக்கொண்டு, தன் முன்னால் நின்றிருந்தவர்களை மீண்டும் கோபமாய் முறைத்து வைத்தது அந்த குட்டி வாண்டு.
“வேலா… மித்து… வரு… பாவ… நாலு பேதும் அவுட்… இங்கி..யே தா இருக்கனு… நா.. இனி மாமாவ அவுட் பண்ணித்டு வதேன்…” என அவர்களை அதட்டிவிட்டு வேலனை மட்டும் மேலும் முறைத்தான் அவனுடைய அண்ணன் மகன்.
தன் வாயில் சுட்டு விரலை வைத்து சிரிப்பை அடக்கிக்கொண்டு சர்வாவிற்கு முன் முதல் ஆளாய் வேலன் நின்றிருக்க, “இனி மாமா… நீங்க சீக்கிதம் அவுட் ஆனா வேலா தான் நெக்ச்ட் கேட்சர்… ப்ளீஸ் மாமா… அவுட் ஆகிதுங்க…” என விரைவாக உந்தித் தள்ளிய சர்வாவின் விழிகள் சிரிக்கும் வேலனை வஞ்சனையின்றி சினத்தோடு எதிர்கொண்டது.
“இன்னும் ஃபைவ் மினிட்ஸ் தான் உனக்கு டைம் பல்சர்… அதுக்குள்ள நீ அத்தானை கண்டுப் பிடிக்கலனா மறுபடியும் நீ தான் கேட்சர்…” மீண்டும் செங்கதிர்வேலனிடம் ஒரு குறும்பு கலந்த குழந்தை சிரிப்பு.
இவர்களின் விளையாட்டை ரசித்தபடியே வரவேற்பறையில் அமர்ந்திருந்த ஆதி பகவான் ஐயா, அன்னலட்சுமி அம்மாள், கங்காதரன் மற்றும் குருமூர்த்தி ஆகிய நால்வரும் வேலனோடு நடக்கும் தள்ளுமுள்ளுகளை கண்டு களித்திருப்பதைப் பார்த்ததும் அசட்டையாய் அவர்களை நோக்கி முன்னேறிய சர்வா,
“தாத்தூஸ்… நா… இனி மாமாவ தேதிப் போறே… நா அந்த பக்கம் போனதூ இவங்க மாமாக்கு சிக்னல் குதுக்கப் போகாம நீங்க மூணு பேரும் தா பாத்து..ணும்… பாத்தி… நீங்க இனி மாமா வந்தா என்னை உதனே கூப்பிதுங்க…” என்று நால்வருக்கும் வேலை சொல்லிவிட்டு அங்கிருந்து நகர முயல, எதிரே அவர்களுக்கான தேநீர் கோப்பைகளோடு வந்த மழைக்குழலியைக் கண்டு தன் வேகத்தைக் குறைத்தான்.
பெரியவர்கள் நால்வருக்கும் சூடான தேநீர் கோப்பைகளை கொடுத்து முடித்தவள் சிறியவர்களுக்கென தயாரித்து வைத்திருந்த சத்துமாவு கிண்ணிகளில் இரண்டை எடுத்து மித்ரா, ஸ்வரூப்பிடம் கொடுத்து அவர்கள் இருவரும் குடிக்க பொறுமையாக உதவி செய்துக் கொண்டிருந்தாள். அவர்கள் இருவரும் மட்டும் உண்ணுவதைக் கண்டு மேலும் கோபமான சர்வா தன் கருவிழிகளை மட்டும் உயர்த்தி மேல்பார்வையால் குழலியை சுட்டெரித்தபடியே,
“அத்த… உன் ஹஸ்பண்த் எங்க?” என மூச்சுகள் வாங்க அழுத்தமாய் கேட்கவும் குழலியின் முகம் போன தினுசில் மற்றவர்கள் அனைவரும் சத்தமாக சிரித்துவிட்டார்கள்.
“இஷ், என்க்கும் பசிக்குது…” என தன் கைகளை மார்பிற்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டபடியே தலை கவிழ்ந்த சர்வா அனைவரையும் பாவமாக பார்த்து வைக்க, அவனை தூக்கிக் கொண்டபடியே ஒரு சுழற்று சுழற்றிய மழைக்குழலி,
“என் செல்லத்துக்கு பசிக்குதா… நீ வாடா சர்வா குட்டி… அத்த உனக்கு ஊட்டி விடறேன்…” அவனை அருகிலிருந்த இருக்கை ஒன்றில் அமர்த்தியவாறே மொழியவும் சிலிர்த்துக் கொண்டு வந்த வேலன்,
“ரெயின், என்ன நீ… எங்க ரூல்ஸ் புரியாம பேசுற… பல்சர் இப்ப அத்தானை கண்டுபிடிக்கணும். இல்லனா மறுபடியும் அவன் தான் கேட்சர். இன்னும் இரண்டு நிமிஷம் தான் இருக்கு அதனால நீ கொஞ்ச நேரம் சும்மா இரு…” என்று வேண்டுமென்றே மழைக்குழலியை அங்கிருந்து தள்ளியபடியே கூற,
“இரண்டு நிமிஷம்னா எவ்வளவு டைம் இருக்கு அத்த…” தன் உணவினை தட்டிப் பறித்த வேலனை தவிர்த்தவாறு சலிப்புடன் வினவிய அந்த குட்டி கண்ணனின் முகத்தினை தன் கைகளில் அள்ளிக் கொண்டபடியே,
“இரண்டு நிமிஷம்னா இன்னும் நிறைய டைம் இருக்குடா தங்கம். அவன் கிடக்குறான். வா… உனக்கு அத்த ஹெல்ப் பண்றேன்… நாம ரெண்டு பேரும் சேர்ந்து உங்க மாமாவ கண்டுப் பிடிக்கலாம்” என பதிலளித்ததைக் கேட்ட செங்கதிர்வேலன் மென் முறைப்புடன்,
“இல்ல இல்ல… நான் இதை ஒத்துக்க மாட்டேன். பல்சருக்கு யாரும் ஹெல்ப் பண்ணக் கூடாது. இது எங்க ரூல்ஸ்லையே கிடையாது…” தன் உதட்டை சுழித்தவாறே, “ரெயின்… உன்னை அப்பவே நாங்க விளையாட கூப்டோம் நீ தான் வரலன்னு சொல்லிட்டல… அப்பறம் இப்ப மட்டும் எப்படி வந்து ஜாயின் பண்ணலாம். நீ ஒன்னும் வரவே வேணாம் போடி… போய் அம்மாக்கும் அத்தைக்கும் ஹெல்ப் பண்ணு…” அவள் பின்னலை பிடித்திழுத்தபடியே அவளை தடுத்தவாறு நவிழ்ந்தான்.
“அச்சச்சோ… வேலா… சித்தா வந்தா உன்..னை அதிக்கும்…” கையில் வைத்திருந்த சின்னக் கிண்ணத்தை அளவிட்டபடியே மித்ரா வேலனை கண்டிக்க,
“ஆமா ஆமா… சித்தி மேல கை வைக்காத வேலா… சித்தாக்கு பிடிக்காது…” என ஸ்வரூப் கூறியதைக் கேட்டு அனைவரின் முகங்களும் மேலும் விரிந்தன.
“டேய்… அண்ணனும் தங்கச்சியும் வாய திறக்காதிங்க… அதான் முக்கியமான வேலையா இருக்கீங்கள்ல அதைப் பாருங்க…” இடுப்பில் கையூன்றி அவர்கள் இருவரையும் முறைத்தான் வேலன்.
“ரெயின்… நீ கிளம்பு. உன்னை இப்ப சேர்த்துக்க முடியாது…” அதட்டலிட்டான் அவளிடம்.
அதற்கு கொஞ்சமும் சளைக்காமல், “போடா…” வென வேலனின் நெற்றியை தட்டியபடியே சர்வாவோடு முன்னேறிய குழலியை மீண்டும் தடுத்தவன்,
“ரூல்ஸ்ல அத்தெல்லாம் இல்லடி…” என்றவாறே தன் தலையை தேய்த்துக் கொண்டான்.
“ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் உங்களுக்கு தான். எங்களுக்கு இல்ல…” முறுக்கிக் கொண்டவளை மேலும் சீண்டும் பொருட்டு,
“ரூல்ஸ் போட்டது அத்தான்னு சொன்னா…” இதழ் ஓரங்களில் மலர்ந்த குறும்பு சிரிப்போடு அடுத்த அடி எடுத்து வைக்காமல் சட்டென நின்றுவிட்ட குழலியின் முகத்தை குறுகுறுவென நிதானமாக அளவிட்டான் செங்கதிர்வேலன்.
அரை நிமிட யோசனைக்கு பிறகு நிமிர்ந்த மழைக்குழலி, “இப்ப நான் விளையாட வரக் கூடாதுனு யார்லாம் சொல்றீங்க…” என கேட்டதற்கு அங்கிருந்தவர்களில் வேலன் மட்டுமே தன் கையினை மேலே உயர்த்தினான்.
“நான் விளையாடலாம்னு சொல்றவங்க…” என அவள் வேலனை பார்த்தபடியே கேட்க, பெரியவர்கள் உட்பட அங்கிருந்த அத்தனை பேரின் கைகளும் உயர்ந்தன. சமையல் அறையில் இருந்தும் கூட நான்கு ஓட்டுகள் மழைக்குழலிக்கு விழுந்திருந்தன.
“ஹ்ம்ம், மொத்தம் ட்வெல்வ்… உன் அத்தானோட சேர்த்து உனக்கு இரண்டு ஓட்டுனா கூட… யார் வின் பண்ணதுன்னு உனக்கே தெரியும்” எள்ளல் கலந்த புன்னகையோடு அவள் முன்னேறியதை கை நீட்டி தடுத்த வேலன் தன்னுடைய கைக்கடிகாரத்தை பார்த்தபடியே, “டைம் ஓவர்” என்றான் தன் விழிகளை சிமிட்டி சிரித்து.
அதனை சிறிதும் எதிர்பார்க்காமல் அவர்கள் இருவரும் வேலனை உறுத்து விழிக்க, “வேலா… என் மருமக கிட்ட இவ்வளவு நேரமும் பேசிட்டு இருந்துட்டு, இப்ப டைமாச்சுனா சொல்ற… இதெல்லாம் ஃபவுல். இதுக்காகவே இன்னும் பத்து நிமிஷம் எக்ஸ்ட்ராவா அவங்களுக்கு தருவோம்” என்று முக்கிய நடுவராக தீர்க்கமான முடிவை சொல்லிவிட்டிருந்தார் குருமூர்த்தி.
“போச்சுடா… எங்க அப்பா சொல்லியிருந்தா கூட பரவால்ல. சொன்னது என் மாமனார். தலையாட்டி தான் ஆகணும் போலையே….” தனக்கு தானே பேசுவது போல சொல்லியவாறு ஓய்ந்துப் போய் அங்கிருந்த நீள்விருக்கையில் சாய்ந்தான் செங்கதிர்வேலன்.
அவனுடைய நிலையை கண்டு வாய்பொத்தி சிரித்த சிறியவர்கள் விளையாட்டாய் அவனை ஒட்டிக் கொண்டு அமர்ந்து முகத்தை சுழித்து 'வெவ்வவ்வே’ என ஒழுங்கெடுக்க, “வா… தங்கம் நாம… உன் மாமாவை கண்டுபிடிச்சிட்டு வருவோம்” என்றவாறு மழைக்குழலி அங்கிருந்து நகர்ந்தாள்.
அப்படி இதுவரை அமிழ்தினியன் எங்கு தான் மறைந்திருக்கிறான் என்றறிய அனைவருக்குமே ஆர்வமாகிப் போனது. வரவேற்பறையில் அனைவரும் எதிர்பார்ப்புடன் ஆவலாக காத்திருக்க, சர்வாவோடு மாடியறைகளுக்கு சென்ற மழைக்குழலி ஒவ்வொரு அறையாக திறந்து பார்த்தாள்.
முதலிரு அறைகளை தாண்டியதும் சட்டென இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். “குழி… அது மாமா குரல் தான…” என சர்வா கிசுகிசுவென கதைக்க, மேலும் கீழுமாய் ஆமோதிப்பாய் தலையசைத்த குழலி, “ஆனா, உங்க அப்பா ரூம்ல எப்படிடா…” என்று மெல்லிய குரலில் கேட்டபடியே அன்புவேந்தனுடைய அறையின் கதவை திறந்துப் பார்த்தாள்.
உள்ளே, இருவரும் கட்டி தழுவியபடி நின்றிருந்த காட்சியை கண்டதும் மழைக்குழலிக்கு மயக்கம் வராத குறை தான். “டேய்… போதும்டா… விட்றா…” தன் மேல் சாய்ந்துக் கொண்டு நின்றிருந்த அன்புவேந்தனை சமாளிக்க முடியாமல் விழித்துக் கொண்டிருந்தான் அமிழ்தினியன்.
“இல்லடா… என்ன இருந்தாலும் நான் அப்படி பேசியிருக்கக் கூடாது. தப்பெல்லாம் என் மேல தான். உன்னை விட்டுக்கொடுத்து பேசிட்டேன். பெரியவங்க தான் ஏதோ கோவமா பேசிக்கிட்டாங்கனா நானும் உன்னை அப்படி பேசியிருக்கக் கூடாது. இதுல உன்னை அடிச்சிட்டேன் வேற…” என அன்பு வருத்தமாய் மொழிய,
“பச், நீ கோவப்பட்டனா… அதுக்கான காரணம் எனக்கு புரியுதுடா. யாரா இருந்தாலும் அப்படி தான் நடந்துக்கிட்டு இருப்பாங்க… நீ ரொம்ப ஃபீல் பண்ணாத…” அவனை தள்ளி நிறுத்தியபடியே,
“அப்பப்ப நெஞ்சை நனைக்காதடா” என கன்னம் வரை நீண்ட சிரிப்போடு அவனை கலாய்த்தான்.
அதற்குள் அறையின் வாசலில் நின்றிருந்த மழைக்குழலியின் கைகளிலிருந்து தாவி இறங்கிய சர்வா, “இனி மாமா அவுட்… இனி மாமா அவுட்… கண்துபிடிச்சித்தேன் கண்டுபிடிச்சிட்டேன்” என சத்தமாக கத்திக்கொண்டே அவனை நோக்கி பாய, அவனை தன் கைகளில் அள்ளிக்கொண்ட அமிழ்தினியன்,
“இவ்வளவு லேட்டாவா சர்வஸ் வந்து என்னை கண்டுபிடிப்ப… உங்க அப்பா என்னை படுத்தி எடுத்துட்டான்…” என முகம் நிறைந்த புன்னகையோடு அசையாமல் உறைந்துவிட்ட தன் மனைவியை துளிர் பார்வையால் வருட, அவளுடைய முகமோ இருவரையும் மாறி மாறி அளந்தது.
அடுத்து எதையோ பேச முயன்ற அன்புவிற்கு கண்ணைக் காட்டி அடக்கியவன், “யார ஃபர்ஸ்ட் அவுட் பண்ண சர்வஸ்…” தன் மச்சானின் மகனிடம் பேச்சை வளர்க்க, “வேலா தான் மாமா…” என உற்சாகம் பொங்க கூறி சிரித்தான் சர்வா.
“நான் போய் சொல்லித்து வரே…” அதுவரை பொறுத்திருந்ததே பெரிது என்று சர்வா அங்கிருந்து சிட்டாய் பறக்க, “போதும்டா மச்சான். நீ பேசின வரைக்கும் போதும்… அண்ணன் வந்துட்டு இருப்பான். அவன் கூட போய் மொக்க போடு… என்னை ஆள விடு…” என தன் மனைவியை இழுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் அமிழ்தினியன்.
“என்ன அத்தான்? என்னாச்சு? அன்பா எதுவும் சொன்னானா? உங்க முகமே சரியில்ல… என்னனு சொல்லுங்க…” அவன் கைப்பிடியை தளர்த்தியவாறே அவள் கேட்க,
“கொஞ்ச நேரம் பேசாம வாடி…” என்றபடியே அவளையும் தன்னோடு இழுத்துக் கொண்டு அவள் அறைக்குள் நுழைந்து கதவை சாற்றினான்.
அவன் செய்கையில் எதுவும் புரியாமல் விழித்தபடியே நின்றிருந்தவளை தன்னோடு சேர்த்தணைத்து, “இஷ்ஷ். கொஞ்ச நேரம் ஜில்லு ப்ளீஸ்” என்று முனங்கியவனின் காற்றை வருடும் தொடுகையில் முகம் சிவந்தாள் அமிழ்தினியனின் மனையாள்.
“அன்பா வேற எதுவும் பேசலையே அத்தான். அவனுக்கு என் மேல பாசம் அதிகம். அதனால தான் அப்படி சட்டுனு கோவப்பட்டுட்டான். இப்ப ரொம்ப வருத்தப்பட்டான்ல”
“...”
“இன்னும் வருத்தமா அத்தான்… எல்லாரும் உங்ககிட்ட இப்ப நல்லா தான் பேசுறாங்க. ஆனா, மாமா மட்டும் தான் இன்னும்…”
“...”
“நான் அவர்கிட்ட பேசிப் பார்க்கட்டுமா அத்தான். என்னால தானே உங்களுக்கு இந்த சங்கடம். ஸாரி அத்தான்”
“...”
“நான் இதெல்லாம் யோசிக்கவே இல்ல… இப்ப எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு… மாமாக்கிட்ட…” மேலும் பேச விடாமல் அவளுக்கு தன் இதழ்களால் தடை விதித்தவன் சில நிமிடங்களுக்கு பின் விலகியபோது மழைக்குழலி அவன் மார்பில் சாய்ந்திருந்தாள்.
“ஐ மிஸ் யூ அத்தான். என்னமோ இந்த ஒரு வாரமும் நாம இங்க ஒன்னாவே இருந்திருந்தாலும் கொடைக்கானல்ல இருந்த மாதிரி இல்ல. உங்களை ரொம்பவே மிஸ் பண்ணேன். ஆனா, அப்பாக்கு சரியானதும் தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு. இதெல்லாம் யோசிக்கவே நேரம் இருக்கல” என அவள் பகிர்ந்ததை பொறுமையாக கேட்ட அமிழ்தினியன், தன் மார்பில் படர்ந்திருந்தவளின் முகத்தை மெல்ல தன்னை நோக்கி நிமிர்த்தி,
“உன் கிட்ட நான் ஒண்ணு கேட்கணும் ஜில்லு…” என்றான் திடீரென்று பூடகமாக.
“ம்ம், என்ன அத்தான்?” குழப்பமான மனநிலையோடு ஏறிட்டாள் குழலி.
“நாம திரும்ப கொடைக்கானலுக்கே போயிடலாமா…” என வினவியதை நம்ப முடியவில்லை அவளால்.
“என்ன விளையாடுறிங்களா அத்தான்?”
“இல்ல ஜில்லு… ரொம்பவே சீரியஸா தான் கேட்கிறேன். நாம அங்க போய் இருக்கலாமா? ரொம்ப வேணாம் ஒரு இரண்டு வருஷம் இல்லனா ஒரு வருஷம்…”
“அத்தான்” மொத்தமாய் அதிர்ந்தே போனாள் அவள். அவளுடைய பார்வையில் தன் தலையை தேய்த்துக் கொண்டு அமைதியாக நின்றிருந்தான் அமிழ்தினியன்.
“நம்ப குடும்பம் இல்லாம தனியா இருக்க உங்களுக்கு கஷ்டம்னு எனக்கு தெரியும். இந்த எட்டு மாசமே நீங்க ரொம்ப கஷ்டப்பட்டிருப்பீங்க. அடிக்கடி வெளியூர் வெளிநாடுனு போனாலும் ஒரு வாரம் வரைக்கும் தான் உங்களால தாங்க முடியும். நடுவுல எப்படியாவது வந்துட்டு போவீங்க. நீங்களா இப்படி…”
அவளிடமிருந்து விலகி சென்று நீள்விருக்கையில் அமர்ந்தவன் முழங்கையில் தாங்கிய விரல்களால் தன் நெற்றியினை வருட, அவனருகே வந்து முழங்காலிட்டு அமர்ந்த குழலி, அவன் முகத்தை தாங்கி அதனை குறிப்பாய் ஆராய்ந்தாள். சிவந்திருந்த விழிகள் அவளுக்கு ஆயிரம் கதைகள் சொன்னது.
“ஜில்லு… ஒண்ணுமில்ல. உனக்கு வேணாம்னா போக வேண்டாம்டா” முறுவலோடு அவள் நெற்றி முட்டியவன் தன் உள்ளத்து உணர்வுகளை மனைவி படிக்கும் முன் அங்கிருந்து நகர முயல, அவன் கைகளை இறுக்கமாகப் பிடித்துத் தடுத்தவள், “இல்ல… நாம போகலாம் அத்தான். கொஞ்ச நாள் அங்கேயே இருக்கலாம். எனக்கு ஓகே தான்… எப்ப போறோம்?” என படபடவென்று சிந்தித்தாள்.
“ஹேய், என்னடா? எதுவுமே கேட்காம… சரினு சொல்லிட்ட?” இப்போது அமிழ்தினியன் அதி தீவிரமாய் அவளை ஆராய்ந்தான்.
“என்னமோ உங்களுக்குள்ள இருக்குனு புரியுது. என்னனு சொல்லணும்னு இல்ல… எனக்கு என் அத்தானை தெரியும்”
“ஹ்ம்ம்” என யோசனையில் ஆழ்ந்தவன், “என்னமோ எல்லாம் புதுசா இருக்குடா. பழைய மாதிரி தோணல. மத்தவங்ககிட்ட என்னால எதையும் காமிச்சுக்க முடியல. நம்ப வீட்டு குட்டிஸ்ல இருந்து எல்லாரும் என்னை புதுசா பாக்குற மாதிரி இருக்கு. கொஞ்ச நாள் நாம அங்க இருப்போமே…” என்று முடித்தான். அதற்குமேல் தன் எண்ண ஓட்டங்களை அவனால் ஏனோ வெளிப்படுத்த முடியவில்லை.
பேசுவது தங்கள் குடும்பத்தை பற்றிய விஷயங்களை. அதனாலே எதுவும் தவறாய் அர்த்தம் கற்பித்துவிடுமோ என வெகு ஜாக்கிரதையாக பேச வேண்டி இருந்தது. இவளிடமாவது மனம்விட்டு அவனால் பேச முடிகிறது. மற்றவர்களிடம் அதைக் கூட செய்ய முடியாமல் திணறுகிறான். அது தன்னை உள்ளும் புறமும் நன்றாகவே புரிந்து வைத்திருக்கும் வேலனாய் இருந்த போதிலும், அவனிடமும் கூட பகிர முடியாது போயின.
உண்மையில் அமிழ்தினியனுக்கு அப்படி தான் தோன்றியது. தங்கள் வீட்டினர் அனைவரும் வெகுவாய் கவனித்து ஒவ்வொன்றாய் யோசித்து யோசித்து தன்னிடம் பேசுவது போலவே இருந்தது. அதிலும் அவன் தந்தை அவனை பற்றிய பேச்சுகளை முழுதாய் தவிர்த்துவந்த வண்ணம் இருக்கிறார். அவர் பேசாதது கூட அவனுக்கு ஒரு பொருட்டாக பதியவில்லை. மற்றவர்களின் அணுகுமுறையும் கவனிப்பும் அவனை மனதளவில் பெரிதும் ஒதுங்க வைத்திருக்கிறது.
அவர்களுடைய மனநிலையும் அவனுக்கு புரியாமல் இல்லை. ஆனால், மழைக்குழலிக்கு கிடைக்கும் நெருக்கங்களில் பாதியளவு கூட அவனுக்கு கிடைக்கவில்லை. அவளிடம் அவர்கள் காட்டும் இயல்பு ஏனோ இவனிடம் மட்டும் தவறுகிறது. அதில் இரு வீட்டாரும் அடக்கம். வேலன் மட்டுமே எப்போதும் போல அவனோடு பழக்கம் கொண்டான். மற்றவர்கள் புதிதிலும் புதிதாய் மிளிர்ந்து பிசிறு தட்டியது.
மழைக்குழலிக்கு அவனுடைய மனம் ஓரளவுக்கு புரிந்தது. இந்த ஒரு வாரமாய் அமிழ்தினியன் கங்காதரன் வீட்டில் தான் இருக்கிறான். மருந்துக்கும் கூட தன் வீட்டுப்பக்கம் அவன் செல்ல முயலவில்லை. கண்டிப்பாக அவனுக்கும் தோன்றிருக்கும் தான். ஆனால், செல்ல முயலவில்லை எனில் என்னவோ இருக்கிறது என்று அவளுமே சிந்தித்த வண்ணம் தான் இருந்தாள்.
பிரச்சனை எதுவாய் இருப்பினும் காரணம் இவளல்லவா! அதனால் அவளால் எதையும் கேட்கவும் முடியவில்லை. என்ன செய்து சரி செய்வது என்றும் புரியவில்லை. நிச்சயமாய் இதைப்பற்றி குருமூர்த்தியிடம் பேசிட வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை மனதிற்குள் உறுதியாக முடிவெடுத்துக் கொண்டாள்.
“ஹ்ம்ம் ஓகே அத்தான்…” நெடு நேர சிந்தனைக்கு பிறகு அவளிடமிருந்து கிடைத்த ஆமோதிப்பில் பெருமூச்சோடு அவளை நோக்கி முன்னேறிய அமிழ்தினியன்,
“என்னாச்சு ஜில்லு?” பேச்சினூடே அவள் நெற்றியில் இதழ் பதிக்க, அவன் தாடையில் விரல் பதித்தவள், “ஐ மிஸ் யூ…” அவன் கன்னங்களில் முத்தமிட்டாள்.
“ஜில்லு…” என முழுதாய் கிறங்கிப் போய் நின்றான் அமிழ்தினியன்.
சிலிர்த்த விரல்களுடன் அவளை இறுக்கியவன் மெல்ல அவள் முகம் நோக்கி குனிய, முறுவலோடு அலட்டிக்கொள்ளாமல் அவன் இதழ்களில் மிருதுவாய் தன்னை உடனே சேர்த்தாள் மழைக்குழலி.
“ஹாப்பியா இருக்கியா?” சத்தமின்றி அவள் காதுகளில் முனங்கியவனை பாரபட்சமின்றி தன் விழிகளால் விழுங்கியவள்,
“உங்க கூட இருக்கும்போது நான் எப்பவுமே ஹாப்பியா தான் இருப்பேன் அத்தான்” என்று கூறவும் கன்னங்களில் விழுந்து குவிந்த குழிகளுடன் ஆழமாய் புன்னகைத்தான் அமிழ்தினியன்.
“இவ்வளவு நாளும் என்னை சுத்தல்ல விட்டுட்டு… இப்ப நல்லாவே பேசுற டி நீ…”
“அத்தான்…” அதட்டலிட்டு அவனை அடக்கினாள் மனைவி.
“ஓகே ஓகே சரண்டர்…” என தன் கைகள் இரண்டையும் தலைக்கு மேலாக தூக்கியவன், பின் அவள் கழுத்தில் மாலையாய் கோர்த்து,
“உன்னை அப்படியே அள்ளிக்கலாம் போல இருக்கு ஜில்லு… அள்ளிக்கட்டுமா?” மயக்கமாய் அவள் கழுத்தினை வருடினான்.
“அள்ளுவிங்க அள்ளுவிங்க… நாம தனியா இல்லைங்கறதை மறந்துடாதிங்க…” ஒற்றை விரல் நீட்டி அவனை எச்சரித்தாள்.
அவளை விட்டு விலகி சென்று இருக்கையில் சாய்ந்தவன், “தனியா இருந்துட்டா மட்டும் அப்படியே அள்ளிக்க விட்றுவியா… போடி…” என சத்தமாக கிண்டலடித்தான். அவனுடைய கிண்டல் பேச்சினை கேட்டு இடுப்பில் கையூன்றிக் கொண்டு அவனை முறைத்தாள் குழலி.
“என்ன அள்ளணும்? என்ன அத்தான் எதை அள்ளிப் போறிங்க…” என கேட்டபடியே அவர்களின் அறை கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தான் செங்கதிர்வேலன்.
எதிர்பாராத விதமாய் உள்ளே நுழைந்த தன் உடன்பிறந்தவனை கண்டதும் மழைக்குழலி விழித்துக் கொண்டு நிற்க, இதழ்களில் பொங்கிய குறும்பு சிரிப்போடு அவளையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான் அமிழ்தினியன்.
குழலியின் முகத்தைப் பார்த்தே எதுவோ சரியில்லை என்பதை உணர்ந்த வேலன், “ஸாரி, இன்னும் கீழ வரலையேனு அத்தானை தேடி வந்தேன். ஃபோன்ல பேசுறார்னு நினைச்சு உள்ள வந்துட்டேன் டி…” அவளை தான் இங்கு சற்றும் எதிர்பார்க்கவில்லை என்ற செய்தியோடு அவளருகே வந்து அவள் கைகளைப் பிடித்தான்.
“இல்..இல்ல… வே…வேலா… அது அள்ள… அப்படின்னு எல்லாம்… அது வந்து… ஒன்னுமில்லடா”
தடுமாறிய மனைவியை ஆசைப் பொங்க ரசித்த அமிழ்தினியன், “ரிலாக்ஸ் ஜில்லு…” என்று வேலன் முன்பே சொல்ல, மேலும் அதிர்ந்துப் போய் நின்றாள் பெண்ணவள்.
'என்ன இது வேலன் முன்னால்?' என்ற குறிப்பு வேறு அவள் விழிகளில் தேங்கி நின்றது.
வேலனுக்கும் அதிர்ச்சி தான். அமிழ்தினியனின் புன்னகையிலும் அதில் அவ்வபோது பகிரப்பட்ட நேசத்திலும் சங்கடத்தோடு சங்கோஜம் கொண்டான்.
“நான் அப்பறம் வரேன்” என உடனே விடைபெற முயன்றவனை இழுத்து தன்னருகே அமர்த்திய அமிழ்தினியன், குழலிக்காகவும் ஒரு நாற்காலியை நகர்த்த, அவளோ முகம் நிமிராமல் சிலையாய் நின்றிருந்தாள்.
“அது ஒன்னுமில்லடா… நாளைக்கு சண்டேல… முன்னாடி நாம சோசியல் குரூப்ஸோட பீச் போய் அங்கிருக்கற வேஸ்ட் எல்லாம் கலெக்ட் பண்ணுவோம்ல. அதான் நாளைக்கு போய் வேஸ்ட் எல்லாம் எடுக்கலாம்னு பேசிட்டு இருந்தோம். அப்படியே நாம ஃபேமிலியா கொஞ்ச நேரம் வெளிய போன மாதிரியும் இருக்கும். மாமாவோட ஹெல்த் கண்டிஷனுக்கும் பீச் போனா அவருக்கு கொஞ்சம் ரிலீஃப்பா இருக்கும்ல… அதான் ப்ளான் பண்ணிட்டு இருந்தோம்” என அவனிடம் தெரிவித்தவாறே தன் மனைவியை தோளோடு அணைத்தபடி அழைத்து வந்து தன்னருகே அமர்த்தினான்.
“நாளைக்கு பீச் போய் குப்பை அள்ளணும்னு தான் நீங்க ரெயின் கிட்ட பேசிட்டு இருந்தீங்கனு நான் நம்பனும் இல்லத்தான்…” குறும்பு குரலில் இதழ் மடித்து வேலன் நக்கலாய் கேட்க, அவன் பேச பேச லஜ்ஜையுற்று தன் முகத்தை பக்கவாட்டாக திருப்பியவாறு வெட்க புன்னகை ஒன்றினை சிந்தினாள் மழைக்குழலி.
ஆண்கள் இருவருமே அவள் புன்னகையில் கரைந்துப் போய் அமர்ந்திருக்க, தன் எதிரே அமர்ந்திருந்த தமக்கையின் கைகளைப் பிடித்த வேலன், “ரொம்ப ரொம்ப அழகா இருக்க ரெயின். எப்பவும் இப்படியே சிரிச்சிட்டே இரு டி…” அவள் கைகளில் அழுத்தம் கூட்ட,
தன் சகோதரனின் பாசமிகு வார்த்தைகளில் நெகிழ்ந்தவள், “கண்டிப்பாடா… உன் அத்தான் இருக்கும்போது எனக்கென்ன கவலை. இனிமே, நான் எப்பவும் சிரிச்சிட்டே தான் இருப்பேன். நீ எங்களை பத்தி யோசிக்கறதை விட்டுட்டு உன் வாழ்க்கைய பாரு. நீயும் பாவையோட சந்தோஷமா இருக்கறதை நாங்க பாக்கணும்” இருக்கையை விட்டு எழுந்து வந்து உரிமையாய் அவனை தோளோடு அணைத்துக் கொண்டாள்.
வெகு நாட்களுக்கு பிறகாக கிட்டிய அவள் தோழமை நிறைந்த அணைப்பில் கலங்கிய வேலன், “ரெயின்… ஐ மிஸ்ட் யூ சோ மச் டி… இனி இப்படி பண்ணாத டி. என்னால தாங்கவே முடியாது” என அதிகமாய் உணர்ச்சிவயப்பட, அமர்ந்திருந்தவனின் தலையில் தாடை பதிய இறுக்கமாய் ஒருமுறை தழுவி விலகியவள்,
“போய் சொல்லாத எரும… நான் இல்லைன்னு நீ கவலைப்பட்டியா? தொல்லை ஒழிஞ்சிதுனு பாவை கூட ஜாலியா டூயட் பாடிட்டு தானே இருந்திருப்ப…” வேண்டுமென்றே அவனோடு வம்பு வளர்க்க,
“போடி, நீ மட்டும் என்ன? அத்தானை பாத்தியா… சண்டப் போட்டியா… சமாதானம் ஆனியானு… கோபம் குறைஞ்சு உடனே கிளம்பி வருவனு பார்த்தா… அத்தானை அங்கேயே பிடிச்சு வச்சிக்கிட்டு அவரோட கொடைக்கானலை சுத்திட்டு ஒரு வருஷம் கழிச்சு இப்ப தான் வர. இனி எங்கயாவது போ… இருக்கு உனக்கு…” அவள் தலையில் நறுக்கென கொட்டியபடியே தன் முகத்தை சுருக்கி மிரட்டினான்.
அதுவரை இதழ்களில் மலர்ந்த புன்னகையுடன் அமைதியாக வேலனின் பேச்சினை கேட்டிருந்த கணவன் மனைவி இருவரும் இறுதியாக அவன் கூறிய சொற்களில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க, அவர்கள் இருவரையும் ஒருசேர முறைத்து வைத்தான் செங்கதிர்வேலன்.
“என்ன இரண்டு பேரும் எதாவது ப்ளான் போட்டு வச்சிருக்கிங்களா என்ன?” என்று அவர்களின் மனம் படித்தவனாய் சரியாய் விசாரிக்க,
“அது வந்துடா…” என துவங்கிய குழலியைக் கண்ணை காட்டிய அடக்கிய அமிழ்தினியன், “ஹ்ம்ம், என் மனசுக்குள்ள ஒண்ணு ஓடிட்டு இருக்கு. அது சரியா தப்பானு தெரியல. நான் கொஞ்சம் யோசிக்கணும்டா. எதுவா இருந்தாலும் நாளைக்கு சொல்றேன்… கிவ் மீ சம் டைம்” அப்போதைய மனநிலையைக் கெடுத்துக் கொள்ள விரும்பாது அமிழ்தினியன் அமைதியாக இருந்துவிட, வேலனுக்கும் அதற்குமேல் அவனிடம் தோண்டி துருவ மனம் வரவில்லை.
"இனி மாமா… இனி மாமா…” என சத்தமாக கத்தியவாறே சுற்றிலும் தன் பார்வையை ஓட்டியபடியே அந்த பெரிய வரவேற்பறையில் அங்குமிங்குமாக ஆராய்ந்துக் கொண்டிருந்தான் சர்வேஸ்வரன்.
ஓங்கி ஒலித்த தன்னுடைய குரலுக்கு எந்தவிதமான பதிலும் கிடைக்காமல் போனதாலோ இல்லை தான் தேடியது இன்னும் கிடைக்காததாலோ சலித்தபடியே தன் கால்களை தரையில் உதைத்துக்கொண்டு, தன் முன்னால் நின்றிருந்தவர்களை மீண்டும் கோபமாய் முறைத்து வைத்தது அந்த குட்டி வாண்டு.
“வேலா… மித்து… வரு… பாவ… நாலு பேதும் அவுட்… இங்கி..யே தா இருக்கனு… நா.. இனி மாமாவ அவுட் பண்ணித்டு வதேன்…” என அவர்களை அதட்டிவிட்டு வேலனை மட்டும் மேலும் முறைத்தான் அவனுடைய அண்ணன் மகன்.
தன் வாயில் சுட்டு விரலை வைத்து சிரிப்பை அடக்கிக்கொண்டு சர்வாவிற்கு முன் முதல் ஆளாய் வேலன் நின்றிருக்க, “இனி மாமா… நீங்க சீக்கிதம் அவுட் ஆனா வேலா தான் நெக்ச்ட் கேட்சர்… ப்ளீஸ் மாமா… அவுட் ஆகிதுங்க…” என விரைவாக உந்தித் தள்ளிய சர்வாவின் விழிகள் சிரிக்கும் வேலனை வஞ்சனையின்றி சினத்தோடு எதிர்கொண்டது.
“இன்னும் ஃபைவ் மினிட்ஸ் தான் உனக்கு டைம் பல்சர்… அதுக்குள்ள நீ அத்தானை கண்டுப் பிடிக்கலனா மறுபடியும் நீ தான் கேட்சர்…” மீண்டும் செங்கதிர்வேலனிடம் ஒரு குறும்பு கலந்த குழந்தை சிரிப்பு.
இவர்களின் விளையாட்டை ரசித்தபடியே வரவேற்பறையில் அமர்ந்திருந்த ஆதி பகவான் ஐயா, அன்னலட்சுமி அம்மாள், கங்காதரன் மற்றும் குருமூர்த்தி ஆகிய நால்வரும் வேலனோடு நடக்கும் தள்ளுமுள்ளுகளை கண்டு களித்திருப்பதைப் பார்த்ததும் அசட்டையாய் அவர்களை நோக்கி முன்னேறிய சர்வா,
“தாத்தூஸ்… நா… இனி மாமாவ தேதிப் போறே… நா அந்த பக்கம் போனதூ இவங்க மாமாக்கு சிக்னல் குதுக்கப் போகாம நீங்க மூணு பேரும் தா பாத்து..ணும்… பாத்தி… நீங்க இனி மாமா வந்தா என்னை உதனே கூப்பிதுங்க…” என்று நால்வருக்கும் வேலை சொல்லிவிட்டு அங்கிருந்து நகர முயல, எதிரே அவர்களுக்கான தேநீர் கோப்பைகளோடு வந்த மழைக்குழலியைக் கண்டு தன் வேகத்தைக் குறைத்தான்.
பெரியவர்கள் நால்வருக்கும் சூடான தேநீர் கோப்பைகளை கொடுத்து முடித்தவள் சிறியவர்களுக்கென தயாரித்து வைத்திருந்த சத்துமாவு கிண்ணிகளில் இரண்டை எடுத்து மித்ரா, ஸ்வரூப்பிடம் கொடுத்து அவர்கள் இருவரும் குடிக்க பொறுமையாக உதவி செய்துக் கொண்டிருந்தாள். அவர்கள் இருவரும் மட்டும் உண்ணுவதைக் கண்டு மேலும் கோபமான சர்வா தன் கருவிழிகளை மட்டும் உயர்த்தி மேல்பார்வையால் குழலியை சுட்டெரித்தபடியே,
“அத்த… உன் ஹஸ்பண்த் எங்க?” என மூச்சுகள் வாங்க அழுத்தமாய் கேட்கவும் குழலியின் முகம் போன தினுசில் மற்றவர்கள் அனைவரும் சத்தமாக சிரித்துவிட்டார்கள்.
“இஷ், என்க்கும் பசிக்குது…” என தன் கைகளை மார்பிற்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டபடியே தலை கவிழ்ந்த சர்வா அனைவரையும் பாவமாக பார்த்து வைக்க, அவனை தூக்கிக் கொண்டபடியே ஒரு சுழற்று சுழற்றிய மழைக்குழலி,
“என் செல்லத்துக்கு பசிக்குதா… நீ வாடா சர்வா குட்டி… அத்த உனக்கு ஊட்டி விடறேன்…” அவனை அருகிலிருந்த இருக்கை ஒன்றில் அமர்த்தியவாறே மொழியவும் சிலிர்த்துக் கொண்டு வந்த வேலன்,
“ரெயின், என்ன நீ… எங்க ரூல்ஸ் புரியாம பேசுற… பல்சர் இப்ப அத்தானை கண்டுபிடிக்கணும். இல்லனா மறுபடியும் அவன் தான் கேட்சர். இன்னும் இரண்டு நிமிஷம் தான் இருக்கு அதனால நீ கொஞ்ச நேரம் சும்மா இரு…” என்று வேண்டுமென்றே மழைக்குழலியை அங்கிருந்து தள்ளியபடியே கூற,
“இரண்டு நிமிஷம்னா எவ்வளவு டைம் இருக்கு அத்த…” தன் உணவினை தட்டிப் பறித்த வேலனை தவிர்த்தவாறு சலிப்புடன் வினவிய அந்த குட்டி கண்ணனின் முகத்தினை தன் கைகளில் அள்ளிக் கொண்டபடியே,
“இரண்டு நிமிஷம்னா இன்னும் நிறைய டைம் இருக்குடா தங்கம். அவன் கிடக்குறான். வா… உனக்கு அத்த ஹெல்ப் பண்றேன்… நாம ரெண்டு பேரும் சேர்ந்து உங்க மாமாவ கண்டுப் பிடிக்கலாம்” என பதிலளித்ததைக் கேட்ட செங்கதிர்வேலன் மென் முறைப்புடன்,
“இல்ல இல்ல… நான் இதை ஒத்துக்க மாட்டேன். பல்சருக்கு யாரும் ஹெல்ப் பண்ணக் கூடாது. இது எங்க ரூல்ஸ்லையே கிடையாது…” தன் உதட்டை சுழித்தவாறே, “ரெயின்… உன்னை அப்பவே நாங்க விளையாட கூப்டோம் நீ தான் வரலன்னு சொல்லிட்டல… அப்பறம் இப்ப மட்டும் எப்படி வந்து ஜாயின் பண்ணலாம். நீ ஒன்னும் வரவே வேணாம் போடி… போய் அம்மாக்கும் அத்தைக்கும் ஹெல்ப் பண்ணு…” அவள் பின்னலை பிடித்திழுத்தபடியே அவளை தடுத்தவாறு நவிழ்ந்தான்.
“அச்சச்சோ… வேலா… சித்தா வந்தா உன்..னை அதிக்கும்…” கையில் வைத்திருந்த சின்னக் கிண்ணத்தை அளவிட்டபடியே மித்ரா வேலனை கண்டிக்க,
“ஆமா ஆமா… சித்தி மேல கை வைக்காத வேலா… சித்தாக்கு பிடிக்காது…” என ஸ்வரூப் கூறியதைக் கேட்டு அனைவரின் முகங்களும் மேலும் விரிந்தன.
“டேய்… அண்ணனும் தங்கச்சியும் வாய திறக்காதிங்க… அதான் முக்கியமான வேலையா இருக்கீங்கள்ல அதைப் பாருங்க…” இடுப்பில் கையூன்றி அவர்கள் இருவரையும் முறைத்தான் வேலன்.
“ரெயின்… நீ கிளம்பு. உன்னை இப்ப சேர்த்துக்க முடியாது…” அதட்டலிட்டான் அவளிடம்.
அதற்கு கொஞ்சமும் சளைக்காமல், “போடா…” வென வேலனின் நெற்றியை தட்டியபடியே சர்வாவோடு முன்னேறிய குழலியை மீண்டும் தடுத்தவன்,
“ரூல்ஸ்ல அத்தெல்லாம் இல்லடி…” என்றவாறே தன் தலையை தேய்த்துக் கொண்டான்.
“ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் உங்களுக்கு தான். எங்களுக்கு இல்ல…” முறுக்கிக் கொண்டவளை மேலும் சீண்டும் பொருட்டு,
“ரூல்ஸ் போட்டது அத்தான்னு சொன்னா…” இதழ் ஓரங்களில் மலர்ந்த குறும்பு சிரிப்போடு அடுத்த அடி எடுத்து வைக்காமல் சட்டென நின்றுவிட்ட குழலியின் முகத்தை குறுகுறுவென நிதானமாக அளவிட்டான் செங்கதிர்வேலன்.
அரை நிமிட யோசனைக்கு பிறகு நிமிர்ந்த மழைக்குழலி, “இப்ப நான் விளையாட வரக் கூடாதுனு யார்லாம் சொல்றீங்க…” என கேட்டதற்கு அங்கிருந்தவர்களில் வேலன் மட்டுமே தன் கையினை மேலே உயர்த்தினான்.
“நான் விளையாடலாம்னு சொல்றவங்க…” என அவள் வேலனை பார்த்தபடியே கேட்க, பெரியவர்கள் உட்பட அங்கிருந்த அத்தனை பேரின் கைகளும் உயர்ந்தன. சமையல் அறையில் இருந்தும் கூட நான்கு ஓட்டுகள் மழைக்குழலிக்கு விழுந்திருந்தன.
“ஹ்ம்ம், மொத்தம் ட்வெல்வ்… உன் அத்தானோட சேர்த்து உனக்கு இரண்டு ஓட்டுனா கூட… யார் வின் பண்ணதுன்னு உனக்கே தெரியும்” எள்ளல் கலந்த புன்னகையோடு அவள் முன்னேறியதை கை நீட்டி தடுத்த வேலன் தன்னுடைய கைக்கடிகாரத்தை பார்த்தபடியே, “டைம் ஓவர்” என்றான் தன் விழிகளை சிமிட்டி சிரித்து.
அதனை சிறிதும் எதிர்பார்க்காமல் அவர்கள் இருவரும் வேலனை உறுத்து விழிக்க, “வேலா… என் மருமக கிட்ட இவ்வளவு நேரமும் பேசிட்டு இருந்துட்டு, இப்ப டைமாச்சுனா சொல்ற… இதெல்லாம் ஃபவுல். இதுக்காகவே இன்னும் பத்து நிமிஷம் எக்ஸ்ட்ராவா அவங்களுக்கு தருவோம்” என்று முக்கிய நடுவராக தீர்க்கமான முடிவை சொல்லிவிட்டிருந்தார் குருமூர்த்தி.
“போச்சுடா… எங்க அப்பா சொல்லியிருந்தா கூட பரவால்ல. சொன்னது என் மாமனார். தலையாட்டி தான் ஆகணும் போலையே….” தனக்கு தானே பேசுவது போல சொல்லியவாறு ஓய்ந்துப் போய் அங்கிருந்த நீள்விருக்கையில் சாய்ந்தான் செங்கதிர்வேலன்.
அவனுடைய நிலையை கண்டு வாய்பொத்தி சிரித்த சிறியவர்கள் விளையாட்டாய் அவனை ஒட்டிக் கொண்டு அமர்ந்து முகத்தை சுழித்து 'வெவ்வவ்வே’ என ஒழுங்கெடுக்க, “வா… தங்கம் நாம… உன் மாமாவை கண்டுபிடிச்சிட்டு வருவோம்” என்றவாறு மழைக்குழலி அங்கிருந்து நகர்ந்தாள்.
அப்படி இதுவரை அமிழ்தினியன் எங்கு தான் மறைந்திருக்கிறான் என்றறிய அனைவருக்குமே ஆர்வமாகிப் போனது. வரவேற்பறையில் அனைவரும் எதிர்பார்ப்புடன் ஆவலாக காத்திருக்க, சர்வாவோடு மாடியறைகளுக்கு சென்ற மழைக்குழலி ஒவ்வொரு அறையாக திறந்து பார்த்தாள்.
முதலிரு அறைகளை தாண்டியதும் சட்டென இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். “குழி… அது மாமா குரல் தான…” என சர்வா கிசுகிசுவென கதைக்க, மேலும் கீழுமாய் ஆமோதிப்பாய் தலையசைத்த குழலி, “ஆனா, உங்க அப்பா ரூம்ல எப்படிடா…” என்று மெல்லிய குரலில் கேட்டபடியே அன்புவேந்தனுடைய அறையின் கதவை திறந்துப் பார்த்தாள்.
உள்ளே, இருவரும் கட்டி தழுவியபடி நின்றிருந்த காட்சியை கண்டதும் மழைக்குழலிக்கு மயக்கம் வராத குறை தான். “டேய்… போதும்டா… விட்றா…” தன் மேல் சாய்ந்துக் கொண்டு நின்றிருந்த அன்புவேந்தனை சமாளிக்க முடியாமல் விழித்துக் கொண்டிருந்தான் அமிழ்தினியன்.
“இல்லடா… என்ன இருந்தாலும் நான் அப்படி பேசியிருக்கக் கூடாது. தப்பெல்லாம் என் மேல தான். உன்னை விட்டுக்கொடுத்து பேசிட்டேன். பெரியவங்க தான் ஏதோ கோவமா பேசிக்கிட்டாங்கனா நானும் உன்னை அப்படி பேசியிருக்கக் கூடாது. இதுல உன்னை அடிச்சிட்டேன் வேற…” என அன்பு வருத்தமாய் மொழிய,
“பச், நீ கோவப்பட்டனா… அதுக்கான காரணம் எனக்கு புரியுதுடா. யாரா இருந்தாலும் அப்படி தான் நடந்துக்கிட்டு இருப்பாங்க… நீ ரொம்ப ஃபீல் பண்ணாத…” அவனை தள்ளி நிறுத்தியபடியே,
“அப்பப்ப நெஞ்சை நனைக்காதடா” என கன்னம் வரை நீண்ட சிரிப்போடு அவனை கலாய்த்தான்.
அதற்குள் அறையின் வாசலில் நின்றிருந்த மழைக்குழலியின் கைகளிலிருந்து தாவி இறங்கிய சர்வா, “இனி மாமா அவுட்… இனி மாமா அவுட்… கண்துபிடிச்சித்தேன் கண்டுபிடிச்சிட்டேன்” என சத்தமாக கத்திக்கொண்டே அவனை நோக்கி பாய, அவனை தன் கைகளில் அள்ளிக்கொண்ட அமிழ்தினியன்,
“இவ்வளவு லேட்டாவா சர்வஸ் வந்து என்னை கண்டுபிடிப்ப… உங்க அப்பா என்னை படுத்தி எடுத்துட்டான்…” என முகம் நிறைந்த புன்னகையோடு அசையாமல் உறைந்துவிட்ட தன் மனைவியை துளிர் பார்வையால் வருட, அவளுடைய முகமோ இருவரையும் மாறி மாறி அளந்தது.
அடுத்து எதையோ பேச முயன்ற அன்புவிற்கு கண்ணைக் காட்டி அடக்கியவன், “யார ஃபர்ஸ்ட் அவுட் பண்ண சர்வஸ்…” தன் மச்சானின் மகனிடம் பேச்சை வளர்க்க, “வேலா தான் மாமா…” என உற்சாகம் பொங்க கூறி சிரித்தான் சர்வா.
“நான் போய் சொல்லித்து வரே…” அதுவரை பொறுத்திருந்ததே பெரிது என்று சர்வா அங்கிருந்து சிட்டாய் பறக்க, “போதும்டா மச்சான். நீ பேசின வரைக்கும் போதும்… அண்ணன் வந்துட்டு இருப்பான். அவன் கூட போய் மொக்க போடு… என்னை ஆள விடு…” என தன் மனைவியை இழுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் அமிழ்தினியன்.
“என்ன அத்தான்? என்னாச்சு? அன்பா எதுவும் சொன்னானா? உங்க முகமே சரியில்ல… என்னனு சொல்லுங்க…” அவன் கைப்பிடியை தளர்த்தியவாறே அவள் கேட்க,
“கொஞ்ச நேரம் பேசாம வாடி…” என்றபடியே அவளையும் தன்னோடு இழுத்துக் கொண்டு அவள் அறைக்குள் நுழைந்து கதவை சாற்றினான்.
அவன் செய்கையில் எதுவும் புரியாமல் விழித்தபடியே நின்றிருந்தவளை தன்னோடு சேர்த்தணைத்து, “இஷ்ஷ். கொஞ்ச நேரம் ஜில்லு ப்ளீஸ்” என்று முனங்கியவனின் காற்றை வருடும் தொடுகையில் முகம் சிவந்தாள் அமிழ்தினியனின் மனையாள்.
“அன்பா வேற எதுவும் பேசலையே அத்தான். அவனுக்கு என் மேல பாசம் அதிகம். அதனால தான் அப்படி சட்டுனு கோவப்பட்டுட்டான். இப்ப ரொம்ப வருத்தப்பட்டான்ல”
“...”
“இன்னும் வருத்தமா அத்தான்… எல்லாரும் உங்ககிட்ட இப்ப நல்லா தான் பேசுறாங்க. ஆனா, மாமா மட்டும் தான் இன்னும்…”
“...”
“நான் அவர்கிட்ட பேசிப் பார்க்கட்டுமா அத்தான். என்னால தானே உங்களுக்கு இந்த சங்கடம். ஸாரி அத்தான்”
“...”
“நான் இதெல்லாம் யோசிக்கவே இல்ல… இப்ப எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு… மாமாக்கிட்ட…” மேலும் பேச விடாமல் அவளுக்கு தன் இதழ்களால் தடை விதித்தவன் சில நிமிடங்களுக்கு பின் விலகியபோது மழைக்குழலி அவன் மார்பில் சாய்ந்திருந்தாள்.
“ஐ மிஸ் யூ அத்தான். என்னமோ இந்த ஒரு வாரமும் நாம இங்க ஒன்னாவே இருந்திருந்தாலும் கொடைக்கானல்ல இருந்த மாதிரி இல்ல. உங்களை ரொம்பவே மிஸ் பண்ணேன். ஆனா, அப்பாக்கு சரியானதும் தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு. இதெல்லாம் யோசிக்கவே நேரம் இருக்கல” என அவள் பகிர்ந்ததை பொறுமையாக கேட்ட அமிழ்தினியன், தன் மார்பில் படர்ந்திருந்தவளின் முகத்தை மெல்ல தன்னை நோக்கி நிமிர்த்தி,
“உன் கிட்ட நான் ஒண்ணு கேட்கணும் ஜில்லு…” என்றான் திடீரென்று பூடகமாக.
“ம்ம், என்ன அத்தான்?” குழப்பமான மனநிலையோடு ஏறிட்டாள் குழலி.
“நாம திரும்ப கொடைக்கானலுக்கே போயிடலாமா…” என வினவியதை நம்ப முடியவில்லை அவளால்.
“என்ன விளையாடுறிங்களா அத்தான்?”
“இல்ல ஜில்லு… ரொம்பவே சீரியஸா தான் கேட்கிறேன். நாம அங்க போய் இருக்கலாமா? ரொம்ப வேணாம் ஒரு இரண்டு வருஷம் இல்லனா ஒரு வருஷம்…”
“அத்தான்” மொத்தமாய் அதிர்ந்தே போனாள் அவள். அவளுடைய பார்வையில் தன் தலையை தேய்த்துக் கொண்டு அமைதியாக நின்றிருந்தான் அமிழ்தினியன்.
“நம்ப குடும்பம் இல்லாம தனியா இருக்க உங்களுக்கு கஷ்டம்னு எனக்கு தெரியும். இந்த எட்டு மாசமே நீங்க ரொம்ப கஷ்டப்பட்டிருப்பீங்க. அடிக்கடி வெளியூர் வெளிநாடுனு போனாலும் ஒரு வாரம் வரைக்கும் தான் உங்களால தாங்க முடியும். நடுவுல எப்படியாவது வந்துட்டு போவீங்க. நீங்களா இப்படி…”
அவளிடமிருந்து விலகி சென்று நீள்விருக்கையில் அமர்ந்தவன் முழங்கையில் தாங்கிய விரல்களால் தன் நெற்றியினை வருட, அவனருகே வந்து முழங்காலிட்டு அமர்ந்த குழலி, அவன் முகத்தை தாங்கி அதனை குறிப்பாய் ஆராய்ந்தாள். சிவந்திருந்த விழிகள் அவளுக்கு ஆயிரம் கதைகள் சொன்னது.
“ஜில்லு… ஒண்ணுமில்ல. உனக்கு வேணாம்னா போக வேண்டாம்டா” முறுவலோடு அவள் நெற்றி முட்டியவன் தன் உள்ளத்து உணர்வுகளை மனைவி படிக்கும் முன் அங்கிருந்து நகர முயல, அவன் கைகளை இறுக்கமாகப் பிடித்துத் தடுத்தவள், “இல்ல… நாம போகலாம் அத்தான். கொஞ்ச நாள் அங்கேயே இருக்கலாம். எனக்கு ஓகே தான்… எப்ப போறோம்?” என படபடவென்று சிந்தித்தாள்.
“ஹேய், என்னடா? எதுவுமே கேட்காம… சரினு சொல்லிட்ட?” இப்போது அமிழ்தினியன் அதி தீவிரமாய் அவளை ஆராய்ந்தான்.
“என்னமோ உங்களுக்குள்ள இருக்குனு புரியுது. என்னனு சொல்லணும்னு இல்ல… எனக்கு என் அத்தானை தெரியும்”
“ஹ்ம்ம்” என யோசனையில் ஆழ்ந்தவன், “என்னமோ எல்லாம் புதுசா இருக்குடா. பழைய மாதிரி தோணல. மத்தவங்ககிட்ட என்னால எதையும் காமிச்சுக்க முடியல. நம்ப வீட்டு குட்டிஸ்ல இருந்து எல்லாரும் என்னை புதுசா பாக்குற மாதிரி இருக்கு. கொஞ்ச நாள் நாம அங்க இருப்போமே…” என்று முடித்தான். அதற்குமேல் தன் எண்ண ஓட்டங்களை அவனால் ஏனோ வெளிப்படுத்த முடியவில்லை.
பேசுவது தங்கள் குடும்பத்தை பற்றிய விஷயங்களை. அதனாலே எதுவும் தவறாய் அர்த்தம் கற்பித்துவிடுமோ என வெகு ஜாக்கிரதையாக பேச வேண்டி இருந்தது. இவளிடமாவது மனம்விட்டு அவனால் பேச முடிகிறது. மற்றவர்களிடம் அதைக் கூட செய்ய முடியாமல் திணறுகிறான். அது தன்னை உள்ளும் புறமும் நன்றாகவே புரிந்து வைத்திருக்கும் வேலனாய் இருந்த போதிலும், அவனிடமும் கூட பகிர முடியாது போயின.
உண்மையில் அமிழ்தினியனுக்கு அப்படி தான் தோன்றியது. தங்கள் வீட்டினர் அனைவரும் வெகுவாய் கவனித்து ஒவ்வொன்றாய் யோசித்து யோசித்து தன்னிடம் பேசுவது போலவே இருந்தது. அதிலும் அவன் தந்தை அவனை பற்றிய பேச்சுகளை முழுதாய் தவிர்த்துவந்த வண்ணம் இருக்கிறார். அவர் பேசாதது கூட அவனுக்கு ஒரு பொருட்டாக பதியவில்லை. மற்றவர்களின் அணுகுமுறையும் கவனிப்பும் அவனை மனதளவில் பெரிதும் ஒதுங்க வைத்திருக்கிறது.
அவர்களுடைய மனநிலையும் அவனுக்கு புரியாமல் இல்லை. ஆனால், மழைக்குழலிக்கு கிடைக்கும் நெருக்கங்களில் பாதியளவு கூட அவனுக்கு கிடைக்கவில்லை. அவளிடம் அவர்கள் காட்டும் இயல்பு ஏனோ இவனிடம் மட்டும் தவறுகிறது. அதில் இரு வீட்டாரும் அடக்கம். வேலன் மட்டுமே எப்போதும் போல அவனோடு பழக்கம் கொண்டான். மற்றவர்கள் புதிதிலும் புதிதாய் மிளிர்ந்து பிசிறு தட்டியது.
மழைக்குழலிக்கு அவனுடைய மனம் ஓரளவுக்கு புரிந்தது. இந்த ஒரு வாரமாய் அமிழ்தினியன் கங்காதரன் வீட்டில் தான் இருக்கிறான். மருந்துக்கும் கூட தன் வீட்டுப்பக்கம் அவன் செல்ல முயலவில்லை. கண்டிப்பாக அவனுக்கும் தோன்றிருக்கும் தான். ஆனால், செல்ல முயலவில்லை எனில் என்னவோ இருக்கிறது என்று அவளுமே சிந்தித்த வண்ணம் தான் இருந்தாள்.
பிரச்சனை எதுவாய் இருப்பினும் காரணம் இவளல்லவா! அதனால் அவளால் எதையும் கேட்கவும் முடியவில்லை. என்ன செய்து சரி செய்வது என்றும் புரியவில்லை. நிச்சயமாய் இதைப்பற்றி குருமூர்த்தியிடம் பேசிட வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை மனதிற்குள் உறுதியாக முடிவெடுத்துக் கொண்டாள்.
“ஹ்ம்ம் ஓகே அத்தான்…” நெடு நேர சிந்தனைக்கு பிறகு அவளிடமிருந்து கிடைத்த ஆமோதிப்பில் பெருமூச்சோடு அவளை நோக்கி முன்னேறிய அமிழ்தினியன்,
“என்னாச்சு ஜில்லு?” பேச்சினூடே அவள் நெற்றியில் இதழ் பதிக்க, அவன் தாடையில் விரல் பதித்தவள், “ஐ மிஸ் யூ…” அவன் கன்னங்களில் முத்தமிட்டாள்.
“ஜில்லு…” என முழுதாய் கிறங்கிப் போய் நின்றான் அமிழ்தினியன்.
சிலிர்த்த விரல்களுடன் அவளை இறுக்கியவன் மெல்ல அவள் முகம் நோக்கி குனிய, முறுவலோடு அலட்டிக்கொள்ளாமல் அவன் இதழ்களில் மிருதுவாய் தன்னை உடனே சேர்த்தாள் மழைக்குழலி.
“ஹாப்பியா இருக்கியா?” சத்தமின்றி அவள் காதுகளில் முனங்கியவனை பாரபட்சமின்றி தன் விழிகளால் விழுங்கியவள்,
“உங்க கூட இருக்கும்போது நான் எப்பவுமே ஹாப்பியா தான் இருப்பேன் அத்தான்” என்று கூறவும் கன்னங்களில் விழுந்து குவிந்த குழிகளுடன் ஆழமாய் புன்னகைத்தான் அமிழ்தினியன்.
“இவ்வளவு நாளும் என்னை சுத்தல்ல விட்டுட்டு… இப்ப நல்லாவே பேசுற டி நீ…”
“அத்தான்…” அதட்டலிட்டு அவனை அடக்கினாள் மனைவி.
“ஓகே ஓகே சரண்டர்…” என தன் கைகள் இரண்டையும் தலைக்கு மேலாக தூக்கியவன், பின் அவள் கழுத்தில் மாலையாய் கோர்த்து,
“உன்னை அப்படியே அள்ளிக்கலாம் போல இருக்கு ஜில்லு… அள்ளிக்கட்டுமா?” மயக்கமாய் அவள் கழுத்தினை வருடினான்.
“அள்ளுவிங்க அள்ளுவிங்க… நாம தனியா இல்லைங்கறதை மறந்துடாதிங்க…” ஒற்றை விரல் நீட்டி அவனை எச்சரித்தாள்.
அவளை விட்டு விலகி சென்று இருக்கையில் சாய்ந்தவன், “தனியா இருந்துட்டா மட்டும் அப்படியே அள்ளிக்க விட்றுவியா… போடி…” என சத்தமாக கிண்டலடித்தான். அவனுடைய கிண்டல் பேச்சினை கேட்டு இடுப்பில் கையூன்றிக் கொண்டு அவனை முறைத்தாள் குழலி.
“என்ன அள்ளணும்? என்ன அத்தான் எதை அள்ளிப் போறிங்க…” என கேட்டபடியே அவர்களின் அறை கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தான் செங்கதிர்வேலன்.
எதிர்பாராத விதமாய் உள்ளே நுழைந்த தன் உடன்பிறந்தவனை கண்டதும் மழைக்குழலி விழித்துக் கொண்டு நிற்க, இதழ்களில் பொங்கிய குறும்பு சிரிப்போடு அவளையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான் அமிழ்தினியன்.
குழலியின் முகத்தைப் பார்த்தே எதுவோ சரியில்லை என்பதை உணர்ந்த வேலன், “ஸாரி, இன்னும் கீழ வரலையேனு அத்தானை தேடி வந்தேன். ஃபோன்ல பேசுறார்னு நினைச்சு உள்ள வந்துட்டேன் டி…” அவளை தான் இங்கு சற்றும் எதிர்பார்க்கவில்லை என்ற செய்தியோடு அவளருகே வந்து அவள் கைகளைப் பிடித்தான்.
“இல்..இல்ல… வே…வேலா… அது அள்ள… அப்படின்னு எல்லாம்… அது வந்து… ஒன்னுமில்லடா”
தடுமாறிய மனைவியை ஆசைப் பொங்க ரசித்த அமிழ்தினியன், “ரிலாக்ஸ் ஜில்லு…” என்று வேலன் முன்பே சொல்ல, மேலும் அதிர்ந்துப் போய் நின்றாள் பெண்ணவள்.
'என்ன இது வேலன் முன்னால்?' என்ற குறிப்பு வேறு அவள் விழிகளில் தேங்கி நின்றது.
வேலனுக்கும் அதிர்ச்சி தான். அமிழ்தினியனின் புன்னகையிலும் அதில் அவ்வபோது பகிரப்பட்ட நேசத்திலும் சங்கடத்தோடு சங்கோஜம் கொண்டான்.
“நான் அப்பறம் வரேன்” என உடனே விடைபெற முயன்றவனை இழுத்து தன்னருகே அமர்த்திய அமிழ்தினியன், குழலிக்காகவும் ஒரு நாற்காலியை நகர்த்த, அவளோ முகம் நிமிராமல் சிலையாய் நின்றிருந்தாள்.
“அது ஒன்னுமில்லடா… நாளைக்கு சண்டேல… முன்னாடி நாம சோசியல் குரூப்ஸோட பீச் போய் அங்கிருக்கற வேஸ்ட் எல்லாம் கலெக்ட் பண்ணுவோம்ல. அதான் நாளைக்கு போய் வேஸ்ட் எல்லாம் எடுக்கலாம்னு பேசிட்டு இருந்தோம். அப்படியே நாம ஃபேமிலியா கொஞ்ச நேரம் வெளிய போன மாதிரியும் இருக்கும். மாமாவோட ஹெல்த் கண்டிஷனுக்கும் பீச் போனா அவருக்கு கொஞ்சம் ரிலீஃப்பா இருக்கும்ல… அதான் ப்ளான் பண்ணிட்டு இருந்தோம்” என அவனிடம் தெரிவித்தவாறே தன் மனைவியை தோளோடு அணைத்தபடி அழைத்து வந்து தன்னருகே அமர்த்தினான்.
“நாளைக்கு பீச் போய் குப்பை அள்ளணும்னு தான் நீங்க ரெயின் கிட்ட பேசிட்டு இருந்தீங்கனு நான் நம்பனும் இல்லத்தான்…” குறும்பு குரலில் இதழ் மடித்து வேலன் நக்கலாய் கேட்க, அவன் பேச பேச லஜ்ஜையுற்று தன் முகத்தை பக்கவாட்டாக திருப்பியவாறு வெட்க புன்னகை ஒன்றினை சிந்தினாள் மழைக்குழலி.
ஆண்கள் இருவருமே அவள் புன்னகையில் கரைந்துப் போய் அமர்ந்திருக்க, தன் எதிரே அமர்ந்திருந்த தமக்கையின் கைகளைப் பிடித்த வேலன், “ரொம்ப ரொம்ப அழகா இருக்க ரெயின். எப்பவும் இப்படியே சிரிச்சிட்டே இரு டி…” அவள் கைகளில் அழுத்தம் கூட்ட,
தன் சகோதரனின் பாசமிகு வார்த்தைகளில் நெகிழ்ந்தவள், “கண்டிப்பாடா… உன் அத்தான் இருக்கும்போது எனக்கென்ன கவலை. இனிமே, நான் எப்பவும் சிரிச்சிட்டே தான் இருப்பேன். நீ எங்களை பத்தி யோசிக்கறதை விட்டுட்டு உன் வாழ்க்கைய பாரு. நீயும் பாவையோட சந்தோஷமா இருக்கறதை நாங்க பாக்கணும்” இருக்கையை விட்டு எழுந்து வந்து உரிமையாய் அவனை தோளோடு அணைத்துக் கொண்டாள்.
வெகு நாட்களுக்கு பிறகாக கிட்டிய அவள் தோழமை நிறைந்த அணைப்பில் கலங்கிய வேலன், “ரெயின்… ஐ மிஸ்ட் யூ சோ மச் டி… இனி இப்படி பண்ணாத டி. என்னால தாங்கவே முடியாது” என அதிகமாய் உணர்ச்சிவயப்பட, அமர்ந்திருந்தவனின் தலையில் தாடை பதிய இறுக்கமாய் ஒருமுறை தழுவி விலகியவள்,
“போய் சொல்லாத எரும… நான் இல்லைன்னு நீ கவலைப்பட்டியா? தொல்லை ஒழிஞ்சிதுனு பாவை கூட ஜாலியா டூயட் பாடிட்டு தானே இருந்திருப்ப…” வேண்டுமென்றே அவனோடு வம்பு வளர்க்க,
“போடி, நீ மட்டும் என்ன? அத்தானை பாத்தியா… சண்டப் போட்டியா… சமாதானம் ஆனியானு… கோபம் குறைஞ்சு உடனே கிளம்பி வருவனு பார்த்தா… அத்தானை அங்கேயே பிடிச்சு வச்சிக்கிட்டு அவரோட கொடைக்கானலை சுத்திட்டு ஒரு வருஷம் கழிச்சு இப்ப தான் வர. இனி எங்கயாவது போ… இருக்கு உனக்கு…” அவள் தலையில் நறுக்கென கொட்டியபடியே தன் முகத்தை சுருக்கி மிரட்டினான்.
அதுவரை இதழ்களில் மலர்ந்த புன்னகையுடன் அமைதியாக வேலனின் பேச்சினை கேட்டிருந்த கணவன் மனைவி இருவரும் இறுதியாக அவன் கூறிய சொற்களில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க, அவர்கள் இருவரையும் ஒருசேர முறைத்து வைத்தான் செங்கதிர்வேலன்.
“என்ன இரண்டு பேரும் எதாவது ப்ளான் போட்டு வச்சிருக்கிங்களா என்ன?” என்று அவர்களின் மனம் படித்தவனாய் சரியாய் விசாரிக்க,
“அது வந்துடா…” என துவங்கிய குழலியைக் கண்ணை காட்டிய அடக்கிய அமிழ்தினியன், “ஹ்ம்ம், என் மனசுக்குள்ள ஒண்ணு ஓடிட்டு இருக்கு. அது சரியா தப்பானு தெரியல. நான் கொஞ்சம் யோசிக்கணும்டா. எதுவா இருந்தாலும் நாளைக்கு சொல்றேன்… கிவ் மீ சம் டைம்” அப்போதைய மனநிலையைக் கெடுத்துக் கொள்ள விரும்பாது அமிழ்தினியன் அமைதியாக இருந்துவிட, வேலனுக்கும் அதற்குமேல் அவனிடம் தோண்டி துருவ மனம் வரவில்லை.
Last edited: