Member
- Messages
- 94
- Reaction score
- 2
- Points
- 8
அத்தியாயம் - 33
இடைவிடாது பொழிந்துக் கொண்டிருந்தது வானம். விடாது பெய்த மழையால் அந்த மருத்துவமனையை சூழ்ந்தது உடலை துளைக்கும் குளிர்.
மழை என்றாலும் கூட அந்நிலையிலும் அந்த மருத்துவமனையை சுற்றிலும் திரளாய் வழிந்து ஓடியது மக்கள் கூட்டம். தேநீர் குடுவைகளையும் மருந்து கோப்பைகளையும் ஏந்திய கைகளுமாக முகத்தில் ஈரத்துடன் சிலர் அங்குமிங்குமாக சுற்றிக் கொண்டிருந்தனர். உள்ளிருந்து வெளியேறியவாறும், வெளியிலிருந்து உள் நுழைந்தவாறும் மருத்துவமனை வாயிலை அடைத்திருந்தனர் சிலர். சில மருத்துவர்களும் செவிலியர்களும் கூட அதில் அடக்கம்.
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த விடியல் நேரத்தை கண்ணாடி சுவர்களுக்கு பின்னால் நின்றிருந்தவாறு வெறித்துக் கொண்டிருந்தான் செங்கதிர்வேலன்.
சிரிப்பை தொலைத்த விழிகளுடன் வெளிறிய முகமாய் நடுங்கிய கரத்தினால் அருகிலிருந்த இருக்கையை இறுகப் பற்றியபடி வெளியே வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்றவனின் நினைவுகள் முழுவதும் தன் தந்தை கங்காதரனை சுற்றியே வலம் வந்துக் கொண்டிருந்தன.
சில மணி நேரங்களுக்கு முன்னால் தான் கண்ட அவருடைய நிலையில் அவன் இதயமே ஒரு நொடி துடிக்க மறந்து செயலிழந்துப் போனது. சிறு வயதிலிருந்து எத்தனை கம்பீரமாய் எத்தனை நிமிர்வோடு அவரை எப்போதும் கண்டிருக்கிறான். அதனாலேயே அவனுடைய ஒரு பாதி இதயமானது அவருடைய இந்நிலையை ஏற்றுக் கொள்ளவே முடியாது துவண்டது. மற்றொரு பாதியோ இறுதியாக அவர் கூறிய வார்த்தைகளுக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது.
சுயநினைவில்லாமல் கழிவறையிலேயே கங்காதரன் மயக்கம் அடைந்து விட்டார் என செந்தளிர் பதறி அடித்துக்கொண்டு வேலனையும் அன்புவேந்தனையும் அழைத்துப்போது மணி பத்தை கடந்திருக்கும். அந்த நேரத்தில் அவருக்கு என்னானதென ஒன்றும் புரியாமல் திடீரென்று ஏற்பட்ட மயக்கத்தால் சரிந்துக் கிடந்தவரை தூக்கிப் போட்டுக் கொண்டு வேலனின் மொத்த குடும்பமும் மருத்துவமனைக்கு விரைந்தது.
இரண்டு மணி நேர சிகிச்சைக்கு பிறகான மருத்துவரின் சந்திப்பில் தான் அவருக்கு ஏற்பட்டிருந்தது மாரடைப்பு என்பது அவர்களுக்கு தெரிய வந்தது. ஆதி ஐயாவில் தொடங்கி வேலன் வரை அனைவருமே அதற்குள் ஒடுங்கிப் போய்விட்டனர். தலைவலி, காய்ச்சலை தவிர பெரிதாக மருத்துவமனைக்கு வந்திராத குடும்பத்தில், இப்படி ஒரு நிலையை யாரும் எதிர்பார்க்கவே இல்லை என்பது முழுதாய் கலங்கி நின்றிருந்த அவர்களின் தோற்றத்திலிருந்தே புரிந்தது.
இதில் ஆறு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மயக்கம் தெளிந்து எழுந்தவர் யாரும் எதிர்பார்க்காத விதமாய் முதலில் தேடியது வேலனை தான். அவரை அனுமதித்திருந்த அறைக்குள் நுழைந்த வேலனை தன் தளர்ந்த கைகளால் அருகிலழைத்தவர் விழிகளில் பெருகிய எதிர்பார்ப்புடனும் பெரும் மனஉளைச்சலுடனும் கூறியவையே அவன் மூளைக்குள் மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டிருந்தன.
“வே..லா… நா..நா..ன்… என..க்கு… குழலிய… பாக்க..ணும்பா… கடைசியா… ஒரே.. ஒரு தடவை… அவ..வள பாக்கணும். இனி..யனை வர சொல்லு வேலா… அவன்கிட்ட நா..ன் மன்னிப்பு கேக்கணும்… ரெண்டு பேரை..யும் என்…னால பாக்க முடியாம போயிருமோனு… அதா..ன்…” பாதி முகத்தை மறைத்தபடி செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருந்த நிலையில் தெளிவாக பேச முடியாமல் உடைந்து ஒலித்தவரின் குரல் அவனை முன்னிலும் பெரிதாய் பயமுறுத்தியது.
முதற்கட்ட மாரடைப்பு தான் எந்தவித பயமும் வேண்டாம் என மருத்துவர்கள் எடுத்துரைத்தும் தன் தந்தையின் நிலையைக் கண்டு பெரிதும் உடைந்துப் போய் நின்றிருந்தான் செங்கதிர்வேலன். அவருடைய ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் உடனே அமிழ்தினியனுக்கு அழைத்து விஷயத்தைப் பகிர்ந்திருந்தான்.
“ஜிம்மி….” கவலையால் சூழ்ந்திருந்த அவன் முகத்தை பார்த்தபடியே அவன் எதிரில் வந்து நின்றாள் சித்திரப்பாவை.
“ஜிம்மி… மாமாக்கு ஒண்ணுமில்ல. மைனர் அட்டாக் தான். சீக்கிரம் சரியாகிடும்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்கல இன்னும் ஏன் நீ இப்படி இருக்க?”
பதிலின்றி வெளியே வேடிக்கைப் பார்த்தவனின் முகவாயை தொட முயன்றவளை தவிர்த்தபடியே வேறு பக்கம் திரும்பினான் வேலன்.
“ஜிம்மி… என்னாச்சு?” அவன் முகத்திருப்பலில் அதிர்ந்து விழித்தாள் பாவை.
“நத்திங் சார்ம்…” விட்டேற்றியாய் வந்தது வேலனின் பதில்.
“என…க்கு புரியுது ஜிம்மி… இருந்தாலும் நீயே இப்படி இருந்தா எப்படி…”
தன் கால்சராய் சட்டைப்பைக்குள் கைவிட்டபடியே திரும்பி இவளை ஆழ்ந்து நோக்கியவன், “என்ன புரியுது உனக்கு?” என மெல்லிய கோபம் இழையோடும் குரலில் வினவியது மட்டுமின்றி ஏதோ சொல்ல வந்து நிறுத்தியவன், “உனக்கு என்னை புரியல சார்ம்… புரிஞ்சிருந்தா… ஹ்ம்ம்…” பெருமூச்சோடு சற்று பின்னால் விலகி நின்றான்.
பாவைக்கு சட்டென முகம் மாறிவிட்டது. இதுவரை வேலனை இப்படி இடிந்து போய் அவள் பார்த்தது கிடையாது. மற்றவரின் நிலையை ஏற்றுக் கொண்டவளால் வேலனின் முகம் மாற்றத்தையும் வருத்தத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் தான் அவனோடு தனியாக பேச முயன்றாள்.
கங்காதரனின் உடல்நிலையில் எந்த பின்னடைவுகளும் இல்லை எனினும் தொடர்ந்து அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள். அதனால் தங்கள் வீட்டின் பெரியவர்கள் குழந்தைகள் என அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு மற்ற அனைத்தையும் விட்டுவிட்டு வேலனை காணவென பாவை விரைந்து ஓடி வந்திருந்தாள்.
ஆனால், அவனுடைய பேச்சிலிருந்த ஏதோ ஒன்று அவளை சட்டென எட்ட நிறுத்தியது போல இருந்தது. முந்திய தன்னுடைய செயல்கள் அவனுக்கு அதிருப்தி அளித்தது உண்மை தான் எனினும் இப்போதும் கூட எது அவனை போட்டு அழுத்துகிறது என்று தெரியாமல் பேசில்லாமல் திணறிப் போய் நின்றாள்.
“எல்லாரும் வீட்டுக்கு போயாச்சா?” எதிரே தெரிந்த வாகனங்களை பார்வையிட்டவாறே வேறு பேச்சிற்கு தாவினான் வேலன்.
“ஹ்ம்ம், ஐயா அன்னமோட அண்ணியும் பூர்ணி அக்காவும் குழந்தைகள கூட்டிட்டு கிளம்பிட்டாங்க… அம்மாவும் எல்லாருக்கும் பிரேக்ஃபாஸ்ட் பண்ணி எடுத்துட்டு வரேன்னு கிளம்பி இருக்காங்க…”
“பச், உங்க அப்பா கிளம்பிட்டாரா இல்லையா?” சிடுசிடுவென நெற்றியை வருடினான்.
'அதென்ன ஜிம்மி உங்க அப்பா? ஏன் மாமானு சொல்றதுக்கு என்ன?' வாய்வரை வந்துவிட்ட கேள்வியை அவன் நிலை கருதி மென்று விழுங்கியவள், “எங்க அப்பா எப்படி போவாரு ஜிம்மி… அவர் இங்க தான் இருப்பேன்னு பிடிவாதமா இருக்கிறார். அத்தை கூட தான் உட்காந்து இருக்கார்… அவங்களுக்கும் ஒரு ஆறுதலா ஹெல்ப்பா இருக்கும்ல…” சற்றே சத்தமாய் சொல்லியவளை வெடுக்கென திரும்பிப் பார்த்து,
“அதுக்கு தான் நான், அன்பா, மாறனத்தான் இருக்கோமே…” என சொல்லி நிறுத்தியவன்,
“நீ அவரை இங்கிருந்து கூட்டிட்டு போ… அப்பறமா இன்னைக்கு ஈவ்னிங் வேணா வர சொல்லு…” என்றான் யோசிக்காமல்.
“ஜிம்மி…” கத்தரித்து பேசியவனின் அசட்டையான பேச்சில் சினம் பொங்க அவன் முன்பாக வந்தவள், “என்ன பேசுறனு யோசிச்சு தான் பேசுறியா? விஷயம் கேள்விப்பட்டு நடு ராத்திரினு கூட பாக்காம எங்க எல்லாரையும் கூட்டிட்டு வந்தவரு… இன்னும் பச்ச தண்ணி கூட குடிக்காம அங்க உட்காந்து இருக்கார். மாமாவ பாக்காம இங்கிருந்து எங்கையும் நகர மாட்டேன்னுட்டார். அவரை போய் நான் எப்படி கூட்டிட்டு போறது. நீ பேசுறது கொஞ்சம் கூட நல்லா இல்ல ஜிம்மி…” வறண்ட நாவை ஈரமாக்கியவளின் விழிகளும் மினுமினுப்புடன் லேசாய் கலங்கியது.
இப்படி எடுத்தெறிந்து பேசுபவன் இல்லையே வேலன். ஏனென்றே தெரியாமல் அவன் முகத்திலும் வார்த்தையிலும் விரவியிருந்த சூட்டில் அடிவரை பொசுங்கியது பாவையின் மனம்.
தலையை அழுத்தமாக கோதிய வேலனின் மனம் யோசித்துக் கொண்டே இருந்தது. அடுத்து என்ன நடக்கும் என அவனால் ஊகிக்க முடியவில்லை என்பதால் அவனும் கலங்கி போய் நின்றான்.
பின் தெளிவான முகத்தோடு முடிவெடுத்துவிட்டவனாய் நிதானித்து, “சார்ம்… அத்தானும் ரெயினும் வருவாங்க… அதனால தான் சொன்னேன்…” அவள் விழிகளில் குடியேறியிருந்த ஏதோ ஒன்றில் மெல்ல தடுமாறியது வேலனின் வார்த்தைகள்.
“என்ன? அண்ணாவும் அண்ணியும் வராங்களா?” என பெரிதும் அதிர்ந்தவள், “நீ ஏன்டா இதுக்குள்ள அவங்களுக்கு சொன்ன?” புரியாமல் விழிகளை விரித்தாள்.
சலிப்பாக தன் வலது கையினை மடக்கி காற்றில் வீசியவன், “வேற என்ன பண்ண சொல்ற? எப்பனாலும் அவங்களுக்கும் தெரிய தானே போகுது. நானும் கொஞ்சம் வெயிட் பண்ணி சொல்லலாம்னு தான் இருந்தேன். அப்பா பாக்கணும்னு கேட்டுடார் அதுக்கு மேல நான் என்ன பண்ண முடியும்…” என இயம்ப,
“இருந்தாலும்… நீ ஒரு ரெண்டு நாளைக்கு அப்பறம்…” தன் நிலையை தெரியப்படுத்தியும் பாவை இழுப்பதை கண்டவன்,
“சார்ம்… இப்ப பேசி எதுவும் ஆகப்போறதில்ல… இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்கனு நினைக்கறேன். மாமா இங்க இருந்தா தேவையில்லாத பிரச்சனை வரும்…” என்றான் இம்முறை எதையும் மறைக்காமல்.
யோசனையில் சுருங்கிய முகமாய் சில நிமிடங்கள் அமைதியாக நின்றுவிட்ட பாவை, “இன்னைக்கு இனியன் அண்ணனோட கல்யாண நாள் ஜிம்மி…” ஒருவித தெளிவான மலர்ச்சியுடன் மொழிந்தாள்.
“பச்” என அசட்டையாக முகம் திருப்பியவனை தீர்க்கமாய் எதிர்கொண்டவள், “அண்ணனும் அண்ணியும் வரும்போது எல்லாரும் இங்க இருக்கட்டுமே ஜிம்மி. அவங்களை யார் என்ன சொல்லிட போறாங்க. எனக்கு என்னவோ எல்லா பிரச்சனையும் இன்னியோட முடிஞ்சிரும்னு தோணுது…” என நம்பிக்கையில் மிளிர்ந்து கூறிய தொனியில் வேலனின் மனமும் கூட 'அப்படியும் நடக்குமோ?' என ஆவலோடு காத்திருக்க துவங்கியது.
காலை பத்து மணி போல, அதிகாலையில் வீட்டிற்கு சென்றிருந்த அனைவரும் சிறிது ஓய்விற்கு பிறகு மீண்டும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்திருந்தனர். குழந்தைகளை மட்டுமாவது விட்டுவிட்டு வந்திருக்கலாமே என வேலன் கேட்டது கூட கேட்பாரற்று காற்றோடு தான் மறைந்தது. ஒருவரும் வாய் திறக்கவில்லை. மருத்துவமனையிலேயே தங்கிவிட்ட மற்றவர்களுக்கும் காலை உணவினை கொண்டு வந்திருந்தார் தாமரைச்செல்வி.
இரவு இங்கு வந்தபோது எப்படி அமர்ந்திருந்தாரோ அப்படியே தான் இப்போது வரை அமர்ந்திருந்தார் குருமூர்த்தி. அங்கிருந்த ஒருத்தரையும் நிமிர்ந்து பார்க்கக் கூடவில்லை. மரியாதைக்குரிய தன் ஐயா அம்மாவின் முகத்தை கூட அவரால் எதிர்கொள்ள முடியாமல் குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தார். அவருடைய மனதிற்குள் தன் நண்பனின் இந்நிலைக்கு தானும் ஒரு காரணமோ என்ற பலத்த சிந்தனை ஒன்றினை தவிர வேறு எதுவும் தோன்றவில்லை.
குருமூர்த்தியை தவிர அனைவரும் உண்டு முடித்துவிட்டனர். செந்தளிரை கூட பாவை சரிக்கட்டி உண்ண வைத்திருந்தாள். மருந்துகளின் உதவியோடு உறக்கத்திலிருந்த கங்காதரனை வெளியிலிருந்தே கண்டுவிட்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு பொன்னியும் பூர்ணியும் அங்கிருந்து கிளம்பிவிட, குருமூர்த்தியின் அருகே வந்து அமர்ந்தார் ஆதி பகவான் ஐயா.
“மூர்த்தி… என்னப்பா இது? சின்ன குழந்தை மாதிரி அடம் பண்ணிக்கிட்டு. கங்கா இப்ப நல்லாதான் இருக்கான். நீ வந்து ஒரு வாய் சாப்டுப்பா…” என ஆறுதலாய் குருமூர்த்தியின் தோள் பற்றினார் ஆதி பகவான் ஐயா.
மற்றவர்களின் கவனம் இவர்களிடம் இருந்தாலும் கண்டும் காணாது போல தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.
அதுவரை இறுகிய முகத்தோடு யாரையும் நிமிர்ந்துப் பார்க்காமல் அமர்ந்திருந்த குருமூர்த்தி ஆதி பகவான் ஐயாவின் கரத்தை பற்றி ஒரு மூச்சு அழுது தீர்த்துவிட்டார்.
“ஐயா… என்னை மன்னிச்சிடுங்க ஐயா… எல்லாம் எங்க தப்பு தான். அன்னைக்கு உங்களை என்னலாம் பேசிட்டேன். கங்காவையும் எவ்வளவு அவமானபடுத்தினேன். எல்லாம் என்னால தான் ஐயா. கங்காவோட இந்த நிலைக்கு நான் தான் காரணம் ஐயா… என்னை மன்னிச்சிடுங்க ஐயா… தப்பெல்லாம் எங்க மேல தான். இனியனும் நானும் தான்…” என தன் போக்கில் சொல்லிக் கொண்டே சென்றவரை வேகமாய் இடையிட்ட வேலன்,
“மாமா… அன்னைக்கு கண்டபடி பேசினது நீங்களும் அப்பாவும் தான். இதுல எதுக்கு இப்ப என் அத்தானை சேர்க்கறீங்க?” என்று அமிழ்தினியனை பேசக் கூடாது என கோபமாய் கேட்க,
முன்தாழ்வார பகுதியிலிருந்து, “வேலா…” என அதட்டலாய் ஒலித்தது ஒரு குரல்.
தன் செவிகளை நிறைத்த குரலிலிருந்தே யாரென அடையாளம் கண்டுக் கொண்ட வேலன் ஆறுதலான புன்சிரிப்புடன் திரும்ப, மற்ற அனைவரும் கூட சத்தம் வந்த திசையினை நோக்கி ஆவலுடன் திரும்பினால், அங்கு மழைக்குழலியோடு இணைந்து நின்றிருந்தான் அமிழ்தினியன்.
கிட்டதட்ட ஒரு வருடத்திற்கு பிறகு, அமிழ்தினியனையும் மழைக்குழலியையும் கண்டதும் பெரியவர்களின் விழிகளில் திரண்டு நின்ற நீரோடு அனைவரின் இதழ்களிலும் தேங்கியது அழகான புன்முறுவல். மற்ற அனைவரும் அவர்கள் இருவரையும் தங்கள் விழிகளுக்குள் நிறைந்துக் கொள்ள தவிக்க, வேலன் ஓடி சென்று தன் அத்தானை அணைத்துக் கொண்டான்.
அவன் பின்னோடு ஓடி வந்த சித்திரப்பாவையும் விழிகளில் வழிந்த புன்னகையோடு மற்றொரு பக்கமாய் அமிழ்தினியனை தோளோடு அணைத்துக் கொள்ள ஆதரவாய் அவள் தலை கோதிய அமிழ்தினியன் மற்றொரு கையால் அருகிலிருந்த தன் மனைவியின் கரத்தினை விடாமல் இறுகப் பற்றிருந்தான்.
அக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்த பெரியவர்களுக்கு சிறியவர்களின் ஒற்றுமையை கண்டு மனம் குளிர்ந்த போதிலும் அவர்களின் இணக்கத்தை பார்த்து சற்று பொறாமையாகக் கூட இருந்தது.
அன்புவேந்தனும் பரிதிமாறானும் குழலியையும் இனியனையும் மாறி மாறி பார்த்தவாறே அவர்களுக்கு வெகு அருகில் வந்து நிற்க, அமிழ்தினியனின் முழு கவனமும் தன் தந்தையிடமே இருந்தது.
இடைவிடாது பொழிந்துக் கொண்டிருந்தது வானம். விடாது பெய்த மழையால் அந்த மருத்துவமனையை சூழ்ந்தது உடலை துளைக்கும் குளிர்.
மழை என்றாலும் கூட அந்நிலையிலும் அந்த மருத்துவமனையை சுற்றிலும் திரளாய் வழிந்து ஓடியது மக்கள் கூட்டம். தேநீர் குடுவைகளையும் மருந்து கோப்பைகளையும் ஏந்திய கைகளுமாக முகத்தில் ஈரத்துடன் சிலர் அங்குமிங்குமாக சுற்றிக் கொண்டிருந்தனர். உள்ளிருந்து வெளியேறியவாறும், வெளியிலிருந்து உள் நுழைந்தவாறும் மருத்துவமனை வாயிலை அடைத்திருந்தனர் சிலர். சில மருத்துவர்களும் செவிலியர்களும் கூட அதில் அடக்கம்.
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த விடியல் நேரத்தை கண்ணாடி சுவர்களுக்கு பின்னால் நின்றிருந்தவாறு வெறித்துக் கொண்டிருந்தான் செங்கதிர்வேலன்.
சிரிப்பை தொலைத்த விழிகளுடன் வெளிறிய முகமாய் நடுங்கிய கரத்தினால் அருகிலிருந்த இருக்கையை இறுகப் பற்றியபடி வெளியே வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்றவனின் நினைவுகள் முழுவதும் தன் தந்தை கங்காதரனை சுற்றியே வலம் வந்துக் கொண்டிருந்தன.
சில மணி நேரங்களுக்கு முன்னால் தான் கண்ட அவருடைய நிலையில் அவன் இதயமே ஒரு நொடி துடிக்க மறந்து செயலிழந்துப் போனது. சிறு வயதிலிருந்து எத்தனை கம்பீரமாய் எத்தனை நிமிர்வோடு அவரை எப்போதும் கண்டிருக்கிறான். அதனாலேயே அவனுடைய ஒரு பாதி இதயமானது அவருடைய இந்நிலையை ஏற்றுக் கொள்ளவே முடியாது துவண்டது. மற்றொரு பாதியோ இறுதியாக அவர் கூறிய வார்த்தைகளுக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது.
சுயநினைவில்லாமல் கழிவறையிலேயே கங்காதரன் மயக்கம் அடைந்து விட்டார் என செந்தளிர் பதறி அடித்துக்கொண்டு வேலனையும் அன்புவேந்தனையும் அழைத்துப்போது மணி பத்தை கடந்திருக்கும். அந்த நேரத்தில் அவருக்கு என்னானதென ஒன்றும் புரியாமல் திடீரென்று ஏற்பட்ட மயக்கத்தால் சரிந்துக் கிடந்தவரை தூக்கிப் போட்டுக் கொண்டு வேலனின் மொத்த குடும்பமும் மருத்துவமனைக்கு விரைந்தது.
இரண்டு மணி நேர சிகிச்சைக்கு பிறகான மருத்துவரின் சந்திப்பில் தான் அவருக்கு ஏற்பட்டிருந்தது மாரடைப்பு என்பது அவர்களுக்கு தெரிய வந்தது. ஆதி ஐயாவில் தொடங்கி வேலன் வரை அனைவருமே அதற்குள் ஒடுங்கிப் போய்விட்டனர். தலைவலி, காய்ச்சலை தவிர பெரிதாக மருத்துவமனைக்கு வந்திராத குடும்பத்தில், இப்படி ஒரு நிலையை யாரும் எதிர்பார்க்கவே இல்லை என்பது முழுதாய் கலங்கி நின்றிருந்த அவர்களின் தோற்றத்திலிருந்தே புரிந்தது.
இதில் ஆறு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மயக்கம் தெளிந்து எழுந்தவர் யாரும் எதிர்பார்க்காத விதமாய் முதலில் தேடியது வேலனை தான். அவரை அனுமதித்திருந்த அறைக்குள் நுழைந்த வேலனை தன் தளர்ந்த கைகளால் அருகிலழைத்தவர் விழிகளில் பெருகிய எதிர்பார்ப்புடனும் பெரும் மனஉளைச்சலுடனும் கூறியவையே அவன் மூளைக்குள் மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டிருந்தன.
“வே..லா… நா..நா..ன்… என..க்கு… குழலிய… பாக்க..ணும்பா… கடைசியா… ஒரே.. ஒரு தடவை… அவ..வள பாக்கணும். இனி..யனை வர சொல்லு வேலா… அவன்கிட்ட நா..ன் மன்னிப்பு கேக்கணும்… ரெண்டு பேரை..யும் என்…னால பாக்க முடியாம போயிருமோனு… அதா..ன்…” பாதி முகத்தை மறைத்தபடி செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருந்த நிலையில் தெளிவாக பேச முடியாமல் உடைந்து ஒலித்தவரின் குரல் அவனை முன்னிலும் பெரிதாய் பயமுறுத்தியது.
முதற்கட்ட மாரடைப்பு தான் எந்தவித பயமும் வேண்டாம் என மருத்துவர்கள் எடுத்துரைத்தும் தன் தந்தையின் நிலையைக் கண்டு பெரிதும் உடைந்துப் போய் நின்றிருந்தான் செங்கதிர்வேலன். அவருடைய ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் உடனே அமிழ்தினியனுக்கு அழைத்து விஷயத்தைப் பகிர்ந்திருந்தான்.
“ஜிம்மி….” கவலையால் சூழ்ந்திருந்த அவன் முகத்தை பார்த்தபடியே அவன் எதிரில் வந்து நின்றாள் சித்திரப்பாவை.
“ஜிம்மி… மாமாக்கு ஒண்ணுமில்ல. மைனர் அட்டாக் தான். சீக்கிரம் சரியாகிடும்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்கல இன்னும் ஏன் நீ இப்படி இருக்க?”
பதிலின்றி வெளியே வேடிக்கைப் பார்த்தவனின் முகவாயை தொட முயன்றவளை தவிர்த்தபடியே வேறு பக்கம் திரும்பினான் வேலன்.
“ஜிம்மி… என்னாச்சு?” அவன் முகத்திருப்பலில் அதிர்ந்து விழித்தாள் பாவை.
“நத்திங் சார்ம்…” விட்டேற்றியாய் வந்தது வேலனின் பதில்.
“என…க்கு புரியுது ஜிம்மி… இருந்தாலும் நீயே இப்படி இருந்தா எப்படி…”
தன் கால்சராய் சட்டைப்பைக்குள் கைவிட்டபடியே திரும்பி இவளை ஆழ்ந்து நோக்கியவன், “என்ன புரியுது உனக்கு?” என மெல்லிய கோபம் இழையோடும் குரலில் வினவியது மட்டுமின்றி ஏதோ சொல்ல வந்து நிறுத்தியவன், “உனக்கு என்னை புரியல சார்ம்… புரிஞ்சிருந்தா… ஹ்ம்ம்…” பெருமூச்சோடு சற்று பின்னால் விலகி நின்றான்.
பாவைக்கு சட்டென முகம் மாறிவிட்டது. இதுவரை வேலனை இப்படி இடிந்து போய் அவள் பார்த்தது கிடையாது. மற்றவரின் நிலையை ஏற்றுக் கொண்டவளால் வேலனின் முகம் மாற்றத்தையும் வருத்தத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் தான் அவனோடு தனியாக பேச முயன்றாள்.
கங்காதரனின் உடல்நிலையில் எந்த பின்னடைவுகளும் இல்லை எனினும் தொடர்ந்து அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள். அதனால் தங்கள் வீட்டின் பெரியவர்கள் குழந்தைகள் என அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு மற்ற அனைத்தையும் விட்டுவிட்டு வேலனை காணவென பாவை விரைந்து ஓடி வந்திருந்தாள்.
ஆனால், அவனுடைய பேச்சிலிருந்த ஏதோ ஒன்று அவளை சட்டென எட்ட நிறுத்தியது போல இருந்தது. முந்திய தன்னுடைய செயல்கள் அவனுக்கு அதிருப்தி அளித்தது உண்மை தான் எனினும் இப்போதும் கூட எது அவனை போட்டு அழுத்துகிறது என்று தெரியாமல் பேசில்லாமல் திணறிப் போய் நின்றாள்.
“எல்லாரும் வீட்டுக்கு போயாச்சா?” எதிரே தெரிந்த வாகனங்களை பார்வையிட்டவாறே வேறு பேச்சிற்கு தாவினான் வேலன்.
“ஹ்ம்ம், ஐயா அன்னமோட அண்ணியும் பூர்ணி அக்காவும் குழந்தைகள கூட்டிட்டு கிளம்பிட்டாங்க… அம்மாவும் எல்லாருக்கும் பிரேக்ஃபாஸ்ட் பண்ணி எடுத்துட்டு வரேன்னு கிளம்பி இருக்காங்க…”
“பச், உங்க அப்பா கிளம்பிட்டாரா இல்லையா?” சிடுசிடுவென நெற்றியை வருடினான்.
'அதென்ன ஜிம்மி உங்க அப்பா? ஏன் மாமானு சொல்றதுக்கு என்ன?' வாய்வரை வந்துவிட்ட கேள்வியை அவன் நிலை கருதி மென்று விழுங்கியவள், “எங்க அப்பா எப்படி போவாரு ஜிம்மி… அவர் இங்க தான் இருப்பேன்னு பிடிவாதமா இருக்கிறார். அத்தை கூட தான் உட்காந்து இருக்கார்… அவங்களுக்கும் ஒரு ஆறுதலா ஹெல்ப்பா இருக்கும்ல…” சற்றே சத்தமாய் சொல்லியவளை வெடுக்கென திரும்பிப் பார்த்து,
“அதுக்கு தான் நான், அன்பா, மாறனத்தான் இருக்கோமே…” என சொல்லி நிறுத்தியவன்,
“நீ அவரை இங்கிருந்து கூட்டிட்டு போ… அப்பறமா இன்னைக்கு ஈவ்னிங் வேணா வர சொல்லு…” என்றான் யோசிக்காமல்.
“ஜிம்மி…” கத்தரித்து பேசியவனின் அசட்டையான பேச்சில் சினம் பொங்க அவன் முன்பாக வந்தவள், “என்ன பேசுறனு யோசிச்சு தான் பேசுறியா? விஷயம் கேள்விப்பட்டு நடு ராத்திரினு கூட பாக்காம எங்க எல்லாரையும் கூட்டிட்டு வந்தவரு… இன்னும் பச்ச தண்ணி கூட குடிக்காம அங்க உட்காந்து இருக்கார். மாமாவ பாக்காம இங்கிருந்து எங்கையும் நகர மாட்டேன்னுட்டார். அவரை போய் நான் எப்படி கூட்டிட்டு போறது. நீ பேசுறது கொஞ்சம் கூட நல்லா இல்ல ஜிம்மி…” வறண்ட நாவை ஈரமாக்கியவளின் விழிகளும் மினுமினுப்புடன் லேசாய் கலங்கியது.
இப்படி எடுத்தெறிந்து பேசுபவன் இல்லையே வேலன். ஏனென்றே தெரியாமல் அவன் முகத்திலும் வார்த்தையிலும் விரவியிருந்த சூட்டில் அடிவரை பொசுங்கியது பாவையின் மனம்.
தலையை அழுத்தமாக கோதிய வேலனின் மனம் யோசித்துக் கொண்டே இருந்தது. அடுத்து என்ன நடக்கும் என அவனால் ஊகிக்க முடியவில்லை என்பதால் அவனும் கலங்கி போய் நின்றான்.
பின் தெளிவான முகத்தோடு முடிவெடுத்துவிட்டவனாய் நிதானித்து, “சார்ம்… அத்தானும் ரெயினும் வருவாங்க… அதனால தான் சொன்னேன்…” அவள் விழிகளில் குடியேறியிருந்த ஏதோ ஒன்றில் மெல்ல தடுமாறியது வேலனின் வார்த்தைகள்.
“என்ன? அண்ணாவும் அண்ணியும் வராங்களா?” என பெரிதும் அதிர்ந்தவள், “நீ ஏன்டா இதுக்குள்ள அவங்களுக்கு சொன்ன?” புரியாமல் விழிகளை விரித்தாள்.
சலிப்பாக தன் வலது கையினை மடக்கி காற்றில் வீசியவன், “வேற என்ன பண்ண சொல்ற? எப்பனாலும் அவங்களுக்கும் தெரிய தானே போகுது. நானும் கொஞ்சம் வெயிட் பண்ணி சொல்லலாம்னு தான் இருந்தேன். அப்பா பாக்கணும்னு கேட்டுடார் அதுக்கு மேல நான் என்ன பண்ண முடியும்…” என இயம்ப,
“இருந்தாலும்… நீ ஒரு ரெண்டு நாளைக்கு அப்பறம்…” தன் நிலையை தெரியப்படுத்தியும் பாவை இழுப்பதை கண்டவன்,
“சார்ம்… இப்ப பேசி எதுவும் ஆகப்போறதில்ல… இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்கனு நினைக்கறேன். மாமா இங்க இருந்தா தேவையில்லாத பிரச்சனை வரும்…” என்றான் இம்முறை எதையும் மறைக்காமல்.
யோசனையில் சுருங்கிய முகமாய் சில நிமிடங்கள் அமைதியாக நின்றுவிட்ட பாவை, “இன்னைக்கு இனியன் அண்ணனோட கல்யாண நாள் ஜிம்மி…” ஒருவித தெளிவான மலர்ச்சியுடன் மொழிந்தாள்.
“பச்” என அசட்டையாக முகம் திருப்பியவனை தீர்க்கமாய் எதிர்கொண்டவள், “அண்ணனும் அண்ணியும் வரும்போது எல்லாரும் இங்க இருக்கட்டுமே ஜிம்மி. அவங்களை யார் என்ன சொல்லிட போறாங்க. எனக்கு என்னவோ எல்லா பிரச்சனையும் இன்னியோட முடிஞ்சிரும்னு தோணுது…” என நம்பிக்கையில் மிளிர்ந்து கூறிய தொனியில் வேலனின் மனமும் கூட 'அப்படியும் நடக்குமோ?' என ஆவலோடு காத்திருக்க துவங்கியது.
காலை பத்து மணி போல, அதிகாலையில் வீட்டிற்கு சென்றிருந்த அனைவரும் சிறிது ஓய்விற்கு பிறகு மீண்டும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்திருந்தனர். குழந்தைகளை மட்டுமாவது விட்டுவிட்டு வந்திருக்கலாமே என வேலன் கேட்டது கூட கேட்பாரற்று காற்றோடு தான் மறைந்தது. ஒருவரும் வாய் திறக்கவில்லை. மருத்துவமனையிலேயே தங்கிவிட்ட மற்றவர்களுக்கும் காலை உணவினை கொண்டு வந்திருந்தார் தாமரைச்செல்வி.
இரவு இங்கு வந்தபோது எப்படி அமர்ந்திருந்தாரோ அப்படியே தான் இப்போது வரை அமர்ந்திருந்தார் குருமூர்த்தி. அங்கிருந்த ஒருத்தரையும் நிமிர்ந்து பார்க்கக் கூடவில்லை. மரியாதைக்குரிய தன் ஐயா அம்மாவின் முகத்தை கூட அவரால் எதிர்கொள்ள முடியாமல் குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தார். அவருடைய மனதிற்குள் தன் நண்பனின் இந்நிலைக்கு தானும் ஒரு காரணமோ என்ற பலத்த சிந்தனை ஒன்றினை தவிர வேறு எதுவும் தோன்றவில்லை.
குருமூர்த்தியை தவிர அனைவரும் உண்டு முடித்துவிட்டனர். செந்தளிரை கூட பாவை சரிக்கட்டி உண்ண வைத்திருந்தாள். மருந்துகளின் உதவியோடு உறக்கத்திலிருந்த கங்காதரனை வெளியிலிருந்தே கண்டுவிட்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு பொன்னியும் பூர்ணியும் அங்கிருந்து கிளம்பிவிட, குருமூர்த்தியின் அருகே வந்து அமர்ந்தார் ஆதி பகவான் ஐயா.
“மூர்த்தி… என்னப்பா இது? சின்ன குழந்தை மாதிரி அடம் பண்ணிக்கிட்டு. கங்கா இப்ப நல்லாதான் இருக்கான். நீ வந்து ஒரு வாய் சாப்டுப்பா…” என ஆறுதலாய் குருமூர்த்தியின் தோள் பற்றினார் ஆதி பகவான் ஐயா.
மற்றவர்களின் கவனம் இவர்களிடம் இருந்தாலும் கண்டும் காணாது போல தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.
அதுவரை இறுகிய முகத்தோடு யாரையும் நிமிர்ந்துப் பார்க்காமல் அமர்ந்திருந்த குருமூர்த்தி ஆதி பகவான் ஐயாவின் கரத்தை பற்றி ஒரு மூச்சு அழுது தீர்த்துவிட்டார்.
“ஐயா… என்னை மன்னிச்சிடுங்க ஐயா… எல்லாம் எங்க தப்பு தான். அன்னைக்கு உங்களை என்னலாம் பேசிட்டேன். கங்காவையும் எவ்வளவு அவமானபடுத்தினேன். எல்லாம் என்னால தான் ஐயா. கங்காவோட இந்த நிலைக்கு நான் தான் காரணம் ஐயா… என்னை மன்னிச்சிடுங்க ஐயா… தப்பெல்லாம் எங்க மேல தான். இனியனும் நானும் தான்…” என தன் போக்கில் சொல்லிக் கொண்டே சென்றவரை வேகமாய் இடையிட்ட வேலன்,
“மாமா… அன்னைக்கு கண்டபடி பேசினது நீங்களும் அப்பாவும் தான். இதுல எதுக்கு இப்ப என் அத்தானை சேர்க்கறீங்க?” என்று அமிழ்தினியனை பேசக் கூடாது என கோபமாய் கேட்க,
முன்தாழ்வார பகுதியிலிருந்து, “வேலா…” என அதட்டலாய் ஒலித்தது ஒரு குரல்.
தன் செவிகளை நிறைத்த குரலிலிருந்தே யாரென அடையாளம் கண்டுக் கொண்ட வேலன் ஆறுதலான புன்சிரிப்புடன் திரும்ப, மற்ற அனைவரும் கூட சத்தம் வந்த திசையினை நோக்கி ஆவலுடன் திரும்பினால், அங்கு மழைக்குழலியோடு இணைந்து நின்றிருந்தான் அமிழ்தினியன்.
கிட்டதட்ட ஒரு வருடத்திற்கு பிறகு, அமிழ்தினியனையும் மழைக்குழலியையும் கண்டதும் பெரியவர்களின் விழிகளில் திரண்டு நின்ற நீரோடு அனைவரின் இதழ்களிலும் தேங்கியது அழகான புன்முறுவல். மற்ற அனைவரும் அவர்கள் இருவரையும் தங்கள் விழிகளுக்குள் நிறைந்துக் கொள்ள தவிக்க, வேலன் ஓடி சென்று தன் அத்தானை அணைத்துக் கொண்டான்.
அவன் பின்னோடு ஓடி வந்த சித்திரப்பாவையும் விழிகளில் வழிந்த புன்னகையோடு மற்றொரு பக்கமாய் அமிழ்தினியனை தோளோடு அணைத்துக் கொள்ள ஆதரவாய் அவள் தலை கோதிய அமிழ்தினியன் மற்றொரு கையால் அருகிலிருந்த தன் மனைவியின் கரத்தினை விடாமல் இறுகப் பற்றிருந்தான்.
அக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்த பெரியவர்களுக்கு சிறியவர்களின் ஒற்றுமையை கண்டு மனம் குளிர்ந்த போதிலும் அவர்களின் இணக்கத்தை பார்த்து சற்று பொறாமையாகக் கூட இருந்தது.
அன்புவேந்தனும் பரிதிமாறானும் குழலியையும் இனியனையும் மாறி மாறி பார்த்தவாறே அவர்களுக்கு வெகு அருகில் வந்து நிற்க, அமிழ்தினியனின் முழு கவனமும் தன் தந்தையிடமே இருந்தது.