- Messages
- 997
- Reaction score
- 2,810
- Points
- 93
நெஞ்சம் – 8
அன்று ஞாயிற்றுக்கிழமை, எந்த வேலையும் இல்லாதிருக்க, சூரியன் உதித்த பின்னும் பிரபஞ்சன் எழவில்லை. அவன் மீது தன் கால்களைத் தூக்கிப் போட்டு கோகுலும் உறங்கிக்கொண்டிருந்தான். சாரதா மட்டும் எழுந்து குளித்துமுடித்து கூடத்தில் அமர்ந்து அன்றைய நாளிதழைப் புரட்டிக்கொண்டிருந்தார்.
மூட்டுவலி லேசாய் அவரை முகம் சுளிக்க வைத்தது. காலை அருகிலிருந்த மேஜையில் தூக்கி வைக்க, சுகமாக இருக்கவும், தன் வாசிப்பைத் தொடர்ந்தார்.
சற்றுநேரத்தில் கண்களைக் கசக்கிக்கொண்டே எழுந்தான் பிரபஞ்சன். கனத்தக் கால்கள் அவனை அசைவிடாமல் செய்ய, “தடியா, காலை எடு டா” என கோகுலை சற்றே தள்ளிப் படுக்க வைத்துவிட்டு எழுந்து கழிவறைக்குச் சென்று வந்தான்.
அறையைவிட்டு வெளியே வந்தவனின் பார்வையில், முகத்தை சுளித்தவாறு, இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி கீழே வைப்பதும் மேலே வைப்பதும் என சாகசம் செய்யும் சாரதாவில் நிலைக்க, ஆடவன் முகம் மென்மையானது. வயது மூப்பின் காரணமாக இப்போதெல்லாம் பெரியவருக்கு மூட்டுவலி அதிகமாயிருந்தது.
மருத்துவரின் அறிவுரைப்படி மருந்து மாத்திரைகளை நேரத்திற்கு தாயை உண்ண வைக்கிறான்தான். இருந்தும், இப்போது வலி அதிகமாகியிருக்க, அவரது அறைக்குள் நுழைந்து மூட்டுவலி தைலத்தை எடுத்துவந்தான் பிரபஞ்சன்.
“வா டா, நல்லா தூங்கிட்டு இருந்தீங்களா, அதான் எழுப்ப மனசு வரலை” எனக் கூறியவரின் அருகே அமர்ந்து அவரது காலை எடுத்துத் தன் மடியில் வைத்தான் பிரபஞ்சன்.
“ஜாய்ன்ட் பெய்ன் இருக்குன்னா, சொல்ல வேண்டியதுதானே மா? நான் தைலம் தேய்ச்சு விட மாட்டேனா?” எனக் கேட்டவனின் கரங்கள் தைலத்தை எடுத்துத் தாயின் முட்டியில் மெதுவாக தேய்த்துவிட்டது. அதில் சாரதாவின் முகத்தில் புன்னகை படர்ந்தது.
“போதும் டா, வலி இப்போ பரவாயில்லை...” என அவர் இரண்டுமுறை கூறியதும்தான் அவரது காலை மேஜை மீது நகர்த்தி வைத்தான் மகன்.
“பிரபா, ஒரு பொண்ணு நம்மளோட தூரத்து சொந்தம். போன வாரம் காசியோட கல்யாணத்துல பார்த்தேன். லட்சணமா இருந்தா, விசாரிச்சேன். அவளுக்கும் வரன் பார்க்குறாங்களாம், அந்தப் பொண்ணோட அம்மா, அப்பாகிட்டே பேசிட்டேன். அடுத்த ஞாயித்துக் கிழமை போய் பார்த்துட்டு வரலாம் பா!” என்றார் சாரதா.
“சரி மா, பார்க்கலாம்” பிரபஞ்சன் தலையை அசைக்க,
“ம்மா, போச்சு போங்க. இப்போ அம்மா, அம்மான்னு உங்கக் காலைச் சுத்தி வர்றவன், கல்யாணம் முடிஞ்சதும் பொண்டாட்டி முந்தானையைப் பிடிச்சு சுத்தப் போறான். வெரி பிட்டி ஃபார் யூ மம்மி...” உச்சுக் கொட்டியபடியே கொட்டாவிவிட்ட கோகுல், பிரபஞ்சன் அருகே அமரவும், சாரதா சிரித்துவிட்டார்.
கைக்கு அருகே ஏதேனும் அகப்படுதா எனத் தேடிய பிரபஞ்சன் முகம் லேசாய் சிவந்துவிட்டிருந்தது. கோகுலின் கழுத்தோடு சேர்த்து வளைத்தவன், “இந்த வாய் குறையவே குறையாதா டா?” எனக் கேட்டு அவன் தலையில் கொட்ட, கோகுல் குலுங்கிச் சிரித்தான்.
“மம்மி, பொண்டாட்டி பத்தி சொன்னதும், இப்போவே எப்படி ரியாக்ட் பண்றான் பாருங்க. நான் சொன்னது உண்மையாகப் போகுது...” என்ற கோகுலின் குறும்பில் மூவருக்கும் அப்படியொரு சிரிப்பு வந்தது.
கோகுலை அனுமதித்தால், பேசிக்கொண்டே இருப்பான் என உணர்ந்த பிரபஞ்சன் அவனை இழுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தான். இருவரும் சண்டையிட்டு சமாதானம் அடைந்து, பின் புதிதாய் வந்த திரைப்படம் ஒன்றிற்கு செல்லலாம் என முடிவெடுத்து அந்த ஞாயிறை கழித்துவிட்டிருந்தனர்.
திங்கள்கிழமை எப்போதும் போல வழக்கத்துடன் நகர, பிரபஞ்சன் தன் அலுவலக வேலையில் மூழ்கியிருந்த நேரம், கதவு தட்டப்பட, “யெஸ் கம்மின்...” என்றான்.
“சார், இந்த மந்த் ஆர்டருக்கு ட்ரெஸ் டிசைன் பண்ணியாச்சு. நீங்க பார்த்து ஓகே சொன்னா, ப்ரொசீட் பண்ணலாம்...” தலைமை ஆடை வடிவமைப்பாளர் கூறவும், எதிரிலிருந்த இருக்கையில் அவரை அமர வைத்தான். பின் அவர் அனுப்பிய மின்னஞ்சலை கணினியில் திறந்தான். இரண்டு மூன்று வடிவமைப்புகள் அதிலிருக்க, ஒன்றைத் தேர்ந்தெடுத்து, “இது நைஸ், பைனலைஸ் பண்ணுங்க. ரொம்ப நல்லா இருக்கு, எப்போவும் டிசைன் பண்றதைவிட, இது கொஞ்சம் டிப்ஃரண்டா இருக்கு...” என மெச்சுதலாய் அவரைப் பார்த்தான் ஆடவன்.
“தேங்க் யூ சார், ஸ்டிச்சிங்ல இருக்க ஒரு பொண்ணுதான் டிசைன் பண்ணாங்க” என்று அவர் கூறவும்,
“நைஸ், யாரு அவங்க?” என வினவினான் பிரபஞ்சன்.
“அவங்க நேம் உமையாள் சார், நான் டிசைன் பண்ணும்போது அங்க துணி அடுக்க வந்தாங்க, அப்போதான் ஐடியாஸ் கொடுத்தாங்க. எனக்கும் ஓகேன்னு தோணுச்சு. உங்ககிட்ட கேட்டு முடிவு பண்ணலாம்னு வந்தேன்!” என்றவரிடம் பிரபஞ்சன் புன்னகை பெரிதாய் விரிந்தது. தானே அதை வடிவமைத்தது எனக்கூறி கடந்து இருக்கலாம். அடுத்தவர்களைப் பாராட்ட மனம் வேண்டும் என நினைத்தவன், அவரிடம் மேலும் சில தகவல்களைப் பெற்றுக்கொண்டு வேலையில் ஆழ்ந்தான்.
கோகுல் அன்று வேலைக்கு வரவில்லை. ராகவனை மாதாந்திர மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவனை அழைத்துச் சென்றிருந்தான். அதனாலே பொழுது மெதுவாக நகர்வது போல தோன்ற, கையை நீட்டி சோம்பல் முறித்தவன், எழுந்து சிறிது நேரம் நடந்து வரலாம் என ஒவ்வொரு பகுதியாகச் சுற்றிவர ஆரம்பித்தான். அப்படியே வேலைகள் எப்படி நடக்கிறதென்று மேற்பார்வை பார்த்தபடியே நடக்க, எப்போதை விடவும், அவன் வருகையில் எல்லோருக்கும் வேலையில் சற்று கவனம் கூடும் என்பதை ஏற்கனவே அவதனித்திருக்கிறான் பிரபஞ்சன். அதனாலே பெரும்பாலும் அவன் மேற்பார்வை பார்க்க வரமாட்டான்.
எல்லோரையும் அவரவர் வசதிக்கு ஏற்ப வேலையை சுதந்திரமாக செய்யவிடுவான். வேலையில் நேர்த்தி இருந்தால் போதும், அவ்வளவுதான் அவர்களுடைய வேலை சுதந்திரத்தில் தலையிடமாட்டான்.
எல்லோரையும் கவனித்தவாறே நடந்து வந்தவனைக் கடந்த சிலர் புன்னகைத்து, வணக்கம் கூறவும், சிரிப்புடன் தலையை அசைத்து அதை ஏற்றுக்கொண்டவனின் பார்வை உமையாளின் மீது ஏதேச்சையாக விழ, அவள் வடிவமைத்த ஆடை கண்முன்னே விரிந்தது.
கண்டிப்பாக அவளுக்கு ஆடை வடிவமைப்பில் ஆர்வம் உண்டு என உணர்ந்தவன், அவளுடைய வேலையைப் பாராட்டிவிட்டு, தையல் பகுதியிலிருந்து ஆடை வடிவமைப்பு பகுதிக்கு மாற்றலாம் என எண்ணி அவளருகே நகர்ந்தான். தான் தைத்த துணிகளை எல்லாம் கையில் எடுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தவளின் பின்னே, மேற்பார்வையாளரும் உள்ளே நுழைந்தார்.
அந்த பெரிய அறையில் ஆட்கள் குறைவாகவே இருந்தனர். ஒருசில மக்களே அங்குமிங்கும் நின்றுகொண்டிருந்தனர். அந்த மேற்பார்வையாளர் உமையாளின் அருகே அவளை உரசிவிடும் தூரத்தில் நிற்க, அவனின் எண்ணம் புரிந்த பிரபஞ்சன் கைகளை மடக்கினான் கோபத்தில். ஆங்கில கெட்ட வார்த்தை ஒன்று இயல்பாய் உதடுகள் உச்சரிக்க, அவளருகே விரைந்தான் ஆடவன்.
தன்னருகே நின்ற நிழலில் ஒரு நொடி திடிக்கிட்டு நிமிர்ந்த உமையாளின் பார்வை அருகிலிருந்தவனைச் சுட்டுப் பொசிக்கியது. அவள் பார்வையின் வீச்சைத் தாங்காது அவன் ஓரடி பின்னே நகர, எதுவும் பேசாது தன் எடுத்து வந்தத் துணிகளின் கணக்கை எழுதிமுடித்து நிமிர்ந்தவள், அவன் முன்னே கையைக் கட்டிக்கொண்டு நின்றாள்.
“என்ன வேணும் உங்களுக்கு?” உமையாள் அழுத்தமாக வினவ, எதிரிலிருந்தவன் பற்கள் முழுவதும் வெளியே தெரிந்தது.
“என்ன உமையாள், வீட்ல தனியா இருக்க போல? ஆண் துணை இல்லாம எந்தப் பொண்ணாலும் இந்தக் காலத்துல இருக்க முடியுறது இல்லை. கலி காலமா போச்சு...” என்றவனின் குரலில் அத்தனை வழிசலும் குழைவுமிருந்தது.
அவர்கள் இருவருக்கும் அருகே இருந்த சுவரில் மறைவாய் நின்றுவிட்டான் பிரபஞ்சன். உமையாளின் எதிர்வினை என்னவாக இருக்கும் என அறிந்து கொள்ளத்தான் அவர்களருகே செல்லவில்லை ஆடவன்.
“ஆமா சார், நீங்க சொல்றதும் சரிதான். ஒரு பொண்ணு புருஷனை விட்டு பிரிஞ்சு இருந்தாலே, கண்ட நாயெல்லாம் வழிஞ்சுட்டு வந்து நிக்கும்...” என்றவளின் நக்கல் பேச்சில் எதிரிலிருந்தவளின் முகம் கருத்துப் போனது.
இருந்தும் தன்னை சமாளித்துக்கொண்டவன், “அதைவிடு உமையா, உனக்கு துணையா ஆண் வேணும்னு தோணலையா? எப்படி இப்படி நைட்டெல்லாம் தனியா இருக்க...” என்றவனின் நாரசமான வார்த்தைகளில் உமையாளின் உள்ளம் கொதித்து அடங்கியது. விழிகள் அவனது வார்த்தையில் கலங்கப் பார்க்க, அதை அனுமதிக்கவில்லை பெண். எதிரில் இருப்பவன் முன்னே தன்னை தானே பலவீனமாகக் காட்டிக்கொள்ள மனம் வரவில்லை. உதட்டைக் கடித்து அழுகையையும் பயத்தையும் ஒரு சேர உள்ளே தள்ளியிருந்தாள். அவனை அற்பமாகப் பார்த்து வைத்தவள்,
“ஏன், நீங்க வேணா வந்து வாட்ச்மென் வேலை பாருங்களேன்...” என்றாள் இளக்காரமான தொனியில்.
அதில் எதிலிருந்தவனின் முகம் கோபத்தை தத்தெடுத்தது. “என்ன நக்கலா? என்னை நீ அட்ஜஸ்ட் பண்ணி போகாம, இங்க வேலை பார்க்க முடியாது...” என்றவனின் வக்கிரப் பார்வை தன்னை துகிலிரிப்பதை எண்ணி அருவருத்துப் போனவளுக்கும் உடலும் உள்ளமும் ஒரு சேர கசந்து போனது.
‘தன் தந்தை வயதிருக்கும் இந்த மனிதருக்கு. எப்படி என்னை அந்த மாதிரியொரு கண்ணோட்டத்தில் இவனால் பார்க்க முடிகிறது’ என்ற எண்ணம் தொண்டையை அடைத்தது.
“என் அப்பா வயசு இருக்கும் உங்களுக்கு. அசிங்கமா இல்லை, ஒரு பொண்ணு தனியா இருந்தா, இப்படியெல்லாம் பேசணும்னு தோணுமா? இத்தனை நாள் நீங்க செஞ்சதையெல்லாம் எல்லாரும் பொறுத்துக்கிட்டாங்க
என்றதுக்காக, என்கிட்டயும் நீங்க அட்வான்டேஜ் எடுத்து பேசலாம்னு நினைச்சுட்டீங்களா?” குரல் முழுவதும் கோபமும் அதைவிட ஆற்றாமையும் பொங்கி வழிந்தது. இவர்களைப் போன்ற சில கேடுகெட்ட ஜென்மங்களால் தான், பெண்கள் வெளியேறி வேலைக்குச் செல்ல கூட பயம் கொள்கின்றனர். இப்படிப்பட்டவர்களைப் பார்த்து பயந்து ஓடிக்கொண்டே இருப்பதால்தான், அவர்களின் திமிறும் செயல்களும் அடங்காமல் தொடர்கிறது.
‘எதிர்த்து பேசு, ஆண் என்ற அவனின் அகந்தயை அழி. உடைத்து நொறுக்கு. என்ன வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்...’ என்று மூளையும் மனதும் கத்தியது.
“இனிமே இந்த மாதிரி பேச்செல்லாம் வச்சுட்டுப் பக்கத்துல வந்தீங்க...” என்றவளின் கைகள் அருகிலிருந்த பேனாவை எடுத்து மூடியை மூடித் திறந்தது. நிமிர்ந்து மீண்டும் அவனைப் பார்த்தவள், “சொல்ல மாட்டேன், செஞ்சுடுவேன். பெருசா ஒன்னும் இல்லை, என்னால என்ன முடியுமோ அதை செஞ்சு உங்களை அசிங்கப் படுத்திடுவேன். யார்கிட்டேயும் வெளிய தலை காட்ட முடியாத அளவுக்கு பண்ணிடுவேன். என்கிட்டன்னு இல்லை, கார்மென்ட்ஸ்ல யார்கிட்டேயும் நீங்க இப்படி நடந்துக்கக் கூடாது...” என்றவளின் குரலில் அவளை அலட்சியமாகப் பார்த்தான் எதிரிலிருந்தவன்.
“சே, பொம்பளை உனக்கே இவ்வளோ திமிறு இருக்கோ?” என்றவன் அவள் முன்னே கையை நீட்டி தோளைத் தொட முயன்றான். நூலிழை இடைவெளியில் யார்க் கண்ணையும் உறுத்தாத வகையில் அவன் கையில் பேனாவின் முனையை அழுத்தமாக சொருகியிருந்தாள் உமையாள். அலறினான் அவன், கைகளிலிருந்து இரத்தம் கசிந்தது.
“ஆஃப்டர் ஆல் பொம்பளை இல்லை, உன்னைப் பொத்தவளும் பொம்பளைதான், உன்னைக் கட்டுனவளும் பொம்பளைதான். உனக்கு பிறந்தவளும் பொம்பளை, அதைவிட உனக்கு மேல நூறு பொம்பளைங்க வேலை பார்க்குறாங்க...” என்றவள், “இதுதான் உனக்கு கடைசி வார்னிங். பார்க்க அமைதியா இருக்காளே, எது செஞ்சாலும் மான, அவமானத்துக்கு பயந்து வெளிய சொல்லாம இருப்பான்னு தப்புக் கணக்குப் போடாதீங்க. நான் வெளிய சொன்னாலும், சொல்லலைனாலும் இந்த சமூகம் என்னைக்கும் என்னை தூக்கி வச்சு கொண்டாடப் போறது இல்லை. அப்படியிருக்கும்போது உன்னை மாதிரி பொறுக்கீங்களுக்கு பயப்பட அவசியம் இல்லை...” என்று அருகிலிருந்த கிழிந்த துணியொன்றை அவர் மீது எறிந்து, “இரத்தம் வருது சார், பார்த்து கையையும், வாயையும் ஒழுங்கா வச்சுக்கோங்க...” என்றாள். குரலில் எரிச்சல் மண்டிக் கிடந்தது.
“இங்க நீ எப்படி வேலை பார்க்குறேன்னு நானும் பார்க்குறேன்...” என்றவன் வன்மத்துடன் நகர, அந்த அறையிலிருந்த சொற்ப ஆட்களும் நகர்ந்துவிட்டனர்.
(தொடர்ந்து கீழே படிக்கவும்)
அன்று ஞாயிற்றுக்கிழமை, எந்த வேலையும் இல்லாதிருக்க, சூரியன் உதித்த பின்னும் பிரபஞ்சன் எழவில்லை. அவன் மீது தன் கால்களைத் தூக்கிப் போட்டு கோகுலும் உறங்கிக்கொண்டிருந்தான். சாரதா மட்டும் எழுந்து குளித்துமுடித்து கூடத்தில் அமர்ந்து அன்றைய நாளிதழைப் புரட்டிக்கொண்டிருந்தார்.
மூட்டுவலி லேசாய் அவரை முகம் சுளிக்க வைத்தது. காலை அருகிலிருந்த மேஜையில் தூக்கி வைக்க, சுகமாக இருக்கவும், தன் வாசிப்பைத் தொடர்ந்தார்.
சற்றுநேரத்தில் கண்களைக் கசக்கிக்கொண்டே எழுந்தான் பிரபஞ்சன். கனத்தக் கால்கள் அவனை அசைவிடாமல் செய்ய, “தடியா, காலை எடு டா” என கோகுலை சற்றே தள்ளிப் படுக்க வைத்துவிட்டு எழுந்து கழிவறைக்குச் சென்று வந்தான்.
அறையைவிட்டு வெளியே வந்தவனின் பார்வையில், முகத்தை சுளித்தவாறு, இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி கீழே வைப்பதும் மேலே வைப்பதும் என சாகசம் செய்யும் சாரதாவில் நிலைக்க, ஆடவன் முகம் மென்மையானது. வயது மூப்பின் காரணமாக இப்போதெல்லாம் பெரியவருக்கு மூட்டுவலி அதிகமாயிருந்தது.
மருத்துவரின் அறிவுரைப்படி மருந்து மாத்திரைகளை நேரத்திற்கு தாயை உண்ண வைக்கிறான்தான். இருந்தும், இப்போது வலி அதிகமாகியிருக்க, அவரது அறைக்குள் நுழைந்து மூட்டுவலி தைலத்தை எடுத்துவந்தான் பிரபஞ்சன்.
“வா டா, நல்லா தூங்கிட்டு இருந்தீங்களா, அதான் எழுப்ப மனசு வரலை” எனக் கூறியவரின் அருகே அமர்ந்து அவரது காலை எடுத்துத் தன் மடியில் வைத்தான் பிரபஞ்சன்.
“ஜாய்ன்ட் பெய்ன் இருக்குன்னா, சொல்ல வேண்டியதுதானே மா? நான் தைலம் தேய்ச்சு விட மாட்டேனா?” எனக் கேட்டவனின் கரங்கள் தைலத்தை எடுத்துத் தாயின் முட்டியில் மெதுவாக தேய்த்துவிட்டது. அதில் சாரதாவின் முகத்தில் புன்னகை படர்ந்தது.
“போதும் டா, வலி இப்போ பரவாயில்லை...” என அவர் இரண்டுமுறை கூறியதும்தான் அவரது காலை மேஜை மீது நகர்த்தி வைத்தான் மகன்.
“பிரபா, ஒரு பொண்ணு நம்மளோட தூரத்து சொந்தம். போன வாரம் காசியோட கல்யாணத்துல பார்த்தேன். லட்சணமா இருந்தா, விசாரிச்சேன். அவளுக்கும் வரன் பார்க்குறாங்களாம், அந்தப் பொண்ணோட அம்மா, அப்பாகிட்டே பேசிட்டேன். அடுத்த ஞாயித்துக் கிழமை போய் பார்த்துட்டு வரலாம் பா!” என்றார் சாரதா.
“சரி மா, பார்க்கலாம்” பிரபஞ்சன் தலையை அசைக்க,
“ம்மா, போச்சு போங்க. இப்போ அம்மா, அம்மான்னு உங்கக் காலைச் சுத்தி வர்றவன், கல்யாணம் முடிஞ்சதும் பொண்டாட்டி முந்தானையைப் பிடிச்சு சுத்தப் போறான். வெரி பிட்டி ஃபார் யூ மம்மி...” உச்சுக் கொட்டியபடியே கொட்டாவிவிட்ட கோகுல், பிரபஞ்சன் அருகே அமரவும், சாரதா சிரித்துவிட்டார்.
கைக்கு அருகே ஏதேனும் அகப்படுதா எனத் தேடிய பிரபஞ்சன் முகம் லேசாய் சிவந்துவிட்டிருந்தது. கோகுலின் கழுத்தோடு சேர்த்து வளைத்தவன், “இந்த வாய் குறையவே குறையாதா டா?” எனக் கேட்டு அவன் தலையில் கொட்ட, கோகுல் குலுங்கிச் சிரித்தான்.
“மம்மி, பொண்டாட்டி பத்தி சொன்னதும், இப்போவே எப்படி ரியாக்ட் பண்றான் பாருங்க. நான் சொன்னது உண்மையாகப் போகுது...” என்ற கோகுலின் குறும்பில் மூவருக்கும் அப்படியொரு சிரிப்பு வந்தது.
கோகுலை அனுமதித்தால், பேசிக்கொண்டே இருப்பான் என உணர்ந்த பிரபஞ்சன் அவனை இழுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தான். இருவரும் சண்டையிட்டு சமாதானம் அடைந்து, பின் புதிதாய் வந்த திரைப்படம் ஒன்றிற்கு செல்லலாம் என முடிவெடுத்து அந்த ஞாயிறை கழித்துவிட்டிருந்தனர்.
திங்கள்கிழமை எப்போதும் போல வழக்கத்துடன் நகர, பிரபஞ்சன் தன் அலுவலக வேலையில் மூழ்கியிருந்த நேரம், கதவு தட்டப்பட, “யெஸ் கம்மின்...” என்றான்.
“சார், இந்த மந்த் ஆர்டருக்கு ட்ரெஸ் டிசைன் பண்ணியாச்சு. நீங்க பார்த்து ஓகே சொன்னா, ப்ரொசீட் பண்ணலாம்...” தலைமை ஆடை வடிவமைப்பாளர் கூறவும், எதிரிலிருந்த இருக்கையில் அவரை அமர வைத்தான். பின் அவர் அனுப்பிய மின்னஞ்சலை கணினியில் திறந்தான். இரண்டு மூன்று வடிவமைப்புகள் அதிலிருக்க, ஒன்றைத் தேர்ந்தெடுத்து, “இது நைஸ், பைனலைஸ் பண்ணுங்க. ரொம்ப நல்லா இருக்கு, எப்போவும் டிசைன் பண்றதைவிட, இது கொஞ்சம் டிப்ஃரண்டா இருக்கு...” என மெச்சுதலாய் அவரைப் பார்த்தான் ஆடவன்.
“தேங்க் யூ சார், ஸ்டிச்சிங்ல இருக்க ஒரு பொண்ணுதான் டிசைன் பண்ணாங்க” என்று அவர் கூறவும்,
“நைஸ், யாரு அவங்க?” என வினவினான் பிரபஞ்சன்.
“அவங்க நேம் உமையாள் சார், நான் டிசைன் பண்ணும்போது அங்க துணி அடுக்க வந்தாங்க, அப்போதான் ஐடியாஸ் கொடுத்தாங்க. எனக்கும் ஓகேன்னு தோணுச்சு. உங்ககிட்ட கேட்டு முடிவு பண்ணலாம்னு வந்தேன்!” என்றவரிடம் பிரபஞ்சன் புன்னகை பெரிதாய் விரிந்தது. தானே அதை வடிவமைத்தது எனக்கூறி கடந்து இருக்கலாம். அடுத்தவர்களைப் பாராட்ட மனம் வேண்டும் என நினைத்தவன், அவரிடம் மேலும் சில தகவல்களைப் பெற்றுக்கொண்டு வேலையில் ஆழ்ந்தான்.
கோகுல் அன்று வேலைக்கு வரவில்லை. ராகவனை மாதாந்திர மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவனை அழைத்துச் சென்றிருந்தான். அதனாலே பொழுது மெதுவாக நகர்வது போல தோன்ற, கையை நீட்டி சோம்பல் முறித்தவன், எழுந்து சிறிது நேரம் நடந்து வரலாம் என ஒவ்வொரு பகுதியாகச் சுற்றிவர ஆரம்பித்தான். அப்படியே வேலைகள் எப்படி நடக்கிறதென்று மேற்பார்வை பார்த்தபடியே நடக்க, எப்போதை விடவும், அவன் வருகையில் எல்லோருக்கும் வேலையில் சற்று கவனம் கூடும் என்பதை ஏற்கனவே அவதனித்திருக்கிறான் பிரபஞ்சன். அதனாலே பெரும்பாலும் அவன் மேற்பார்வை பார்க்க வரமாட்டான்.
எல்லோரையும் அவரவர் வசதிக்கு ஏற்ப வேலையை சுதந்திரமாக செய்யவிடுவான். வேலையில் நேர்த்தி இருந்தால் போதும், அவ்வளவுதான் அவர்களுடைய வேலை சுதந்திரத்தில் தலையிடமாட்டான்.
எல்லோரையும் கவனித்தவாறே நடந்து வந்தவனைக் கடந்த சிலர் புன்னகைத்து, வணக்கம் கூறவும், சிரிப்புடன் தலையை அசைத்து அதை ஏற்றுக்கொண்டவனின் பார்வை உமையாளின் மீது ஏதேச்சையாக விழ, அவள் வடிவமைத்த ஆடை கண்முன்னே விரிந்தது.
கண்டிப்பாக அவளுக்கு ஆடை வடிவமைப்பில் ஆர்வம் உண்டு என உணர்ந்தவன், அவளுடைய வேலையைப் பாராட்டிவிட்டு, தையல் பகுதியிலிருந்து ஆடை வடிவமைப்பு பகுதிக்கு மாற்றலாம் என எண்ணி அவளருகே நகர்ந்தான். தான் தைத்த துணிகளை எல்லாம் கையில் எடுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தவளின் பின்னே, மேற்பார்வையாளரும் உள்ளே நுழைந்தார்.
அந்த பெரிய அறையில் ஆட்கள் குறைவாகவே இருந்தனர். ஒருசில மக்களே அங்குமிங்கும் நின்றுகொண்டிருந்தனர். அந்த மேற்பார்வையாளர் உமையாளின் அருகே அவளை உரசிவிடும் தூரத்தில் நிற்க, அவனின் எண்ணம் புரிந்த பிரபஞ்சன் கைகளை மடக்கினான் கோபத்தில். ஆங்கில கெட்ட வார்த்தை ஒன்று இயல்பாய் உதடுகள் உச்சரிக்க, அவளருகே விரைந்தான் ஆடவன்.
தன்னருகே நின்ற நிழலில் ஒரு நொடி திடிக்கிட்டு நிமிர்ந்த உமையாளின் பார்வை அருகிலிருந்தவனைச் சுட்டுப் பொசிக்கியது. அவள் பார்வையின் வீச்சைத் தாங்காது அவன் ஓரடி பின்னே நகர, எதுவும் பேசாது தன் எடுத்து வந்தத் துணிகளின் கணக்கை எழுதிமுடித்து நிமிர்ந்தவள், அவன் முன்னே கையைக் கட்டிக்கொண்டு நின்றாள்.
“என்ன வேணும் உங்களுக்கு?” உமையாள் அழுத்தமாக வினவ, எதிரிலிருந்தவன் பற்கள் முழுவதும் வெளியே தெரிந்தது.
“என்ன உமையாள், வீட்ல தனியா இருக்க போல? ஆண் துணை இல்லாம எந்தப் பொண்ணாலும் இந்தக் காலத்துல இருக்க முடியுறது இல்லை. கலி காலமா போச்சு...” என்றவனின் குரலில் அத்தனை வழிசலும் குழைவுமிருந்தது.
அவர்கள் இருவருக்கும் அருகே இருந்த சுவரில் மறைவாய் நின்றுவிட்டான் பிரபஞ்சன். உமையாளின் எதிர்வினை என்னவாக இருக்கும் என அறிந்து கொள்ளத்தான் அவர்களருகே செல்லவில்லை ஆடவன்.
“ஆமா சார், நீங்க சொல்றதும் சரிதான். ஒரு பொண்ணு புருஷனை விட்டு பிரிஞ்சு இருந்தாலே, கண்ட நாயெல்லாம் வழிஞ்சுட்டு வந்து நிக்கும்...” என்றவளின் நக்கல் பேச்சில் எதிரிலிருந்தவளின் முகம் கருத்துப் போனது.
இருந்தும் தன்னை சமாளித்துக்கொண்டவன், “அதைவிடு உமையா, உனக்கு துணையா ஆண் வேணும்னு தோணலையா? எப்படி இப்படி நைட்டெல்லாம் தனியா இருக்க...” என்றவனின் நாரசமான வார்த்தைகளில் உமையாளின் உள்ளம் கொதித்து அடங்கியது. விழிகள் அவனது வார்த்தையில் கலங்கப் பார்க்க, அதை அனுமதிக்கவில்லை பெண். எதிரில் இருப்பவன் முன்னே தன்னை தானே பலவீனமாகக் காட்டிக்கொள்ள மனம் வரவில்லை. உதட்டைக் கடித்து அழுகையையும் பயத்தையும் ஒரு சேர உள்ளே தள்ளியிருந்தாள். அவனை அற்பமாகப் பார்த்து வைத்தவள்,
“ஏன், நீங்க வேணா வந்து வாட்ச்மென் வேலை பாருங்களேன்...” என்றாள் இளக்காரமான தொனியில்.
அதில் எதிலிருந்தவனின் முகம் கோபத்தை தத்தெடுத்தது. “என்ன நக்கலா? என்னை நீ அட்ஜஸ்ட் பண்ணி போகாம, இங்க வேலை பார்க்க முடியாது...” என்றவனின் வக்கிரப் பார்வை தன்னை துகிலிரிப்பதை எண்ணி அருவருத்துப் போனவளுக்கும் உடலும் உள்ளமும் ஒரு சேர கசந்து போனது.
‘தன் தந்தை வயதிருக்கும் இந்த மனிதருக்கு. எப்படி என்னை அந்த மாதிரியொரு கண்ணோட்டத்தில் இவனால் பார்க்க முடிகிறது’ என்ற எண்ணம் தொண்டையை அடைத்தது.
“என் அப்பா வயசு இருக்கும் உங்களுக்கு. அசிங்கமா இல்லை, ஒரு பொண்ணு தனியா இருந்தா, இப்படியெல்லாம் பேசணும்னு தோணுமா? இத்தனை நாள் நீங்க செஞ்சதையெல்லாம் எல்லாரும் பொறுத்துக்கிட்டாங்க
என்றதுக்காக, என்கிட்டயும் நீங்க அட்வான்டேஜ் எடுத்து பேசலாம்னு நினைச்சுட்டீங்களா?” குரல் முழுவதும் கோபமும் அதைவிட ஆற்றாமையும் பொங்கி வழிந்தது. இவர்களைப் போன்ற சில கேடுகெட்ட ஜென்மங்களால் தான், பெண்கள் வெளியேறி வேலைக்குச் செல்ல கூட பயம் கொள்கின்றனர். இப்படிப்பட்டவர்களைப் பார்த்து பயந்து ஓடிக்கொண்டே இருப்பதால்தான், அவர்களின் திமிறும் செயல்களும் அடங்காமல் தொடர்கிறது.
‘எதிர்த்து பேசு, ஆண் என்ற அவனின் அகந்தயை அழி. உடைத்து நொறுக்கு. என்ன வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்...’ என்று மூளையும் மனதும் கத்தியது.
“இனிமே இந்த மாதிரி பேச்செல்லாம் வச்சுட்டுப் பக்கத்துல வந்தீங்க...” என்றவளின் கைகள் அருகிலிருந்த பேனாவை எடுத்து மூடியை மூடித் திறந்தது. நிமிர்ந்து மீண்டும் அவனைப் பார்த்தவள், “சொல்ல மாட்டேன், செஞ்சுடுவேன். பெருசா ஒன்னும் இல்லை, என்னால என்ன முடியுமோ அதை செஞ்சு உங்களை அசிங்கப் படுத்திடுவேன். யார்கிட்டேயும் வெளிய தலை காட்ட முடியாத அளவுக்கு பண்ணிடுவேன். என்கிட்டன்னு இல்லை, கார்மென்ட்ஸ்ல யார்கிட்டேயும் நீங்க இப்படி நடந்துக்கக் கூடாது...” என்றவளின் குரலில் அவளை அலட்சியமாகப் பார்த்தான் எதிரிலிருந்தவன்.
“சே, பொம்பளை உனக்கே இவ்வளோ திமிறு இருக்கோ?” என்றவன் அவள் முன்னே கையை நீட்டி தோளைத் தொட முயன்றான். நூலிழை இடைவெளியில் யார்க் கண்ணையும் உறுத்தாத வகையில் அவன் கையில் பேனாவின் முனையை அழுத்தமாக சொருகியிருந்தாள் உமையாள். அலறினான் அவன், கைகளிலிருந்து இரத்தம் கசிந்தது.
“ஆஃப்டர் ஆல் பொம்பளை இல்லை, உன்னைப் பொத்தவளும் பொம்பளைதான், உன்னைக் கட்டுனவளும் பொம்பளைதான். உனக்கு பிறந்தவளும் பொம்பளை, அதைவிட உனக்கு மேல நூறு பொம்பளைங்க வேலை பார்க்குறாங்க...” என்றவள், “இதுதான் உனக்கு கடைசி வார்னிங். பார்க்க அமைதியா இருக்காளே, எது செஞ்சாலும் மான, அவமானத்துக்கு பயந்து வெளிய சொல்லாம இருப்பான்னு தப்புக் கணக்குப் போடாதீங்க. நான் வெளிய சொன்னாலும், சொல்லலைனாலும் இந்த சமூகம் என்னைக்கும் என்னை தூக்கி வச்சு கொண்டாடப் போறது இல்லை. அப்படியிருக்கும்போது உன்னை மாதிரி பொறுக்கீங்களுக்கு பயப்பட அவசியம் இல்லை...” என்று அருகிலிருந்த கிழிந்த துணியொன்றை அவர் மீது எறிந்து, “இரத்தம் வருது சார், பார்த்து கையையும், வாயையும் ஒழுங்கா வச்சுக்கோங்க...” என்றாள். குரலில் எரிச்சல் மண்டிக் கிடந்தது.
“இங்க நீ எப்படி வேலை பார்க்குறேன்னு நானும் பார்க்குறேன்...” என்றவன் வன்மத்துடன் நகர, அந்த அறையிலிருந்த சொற்ப ஆட்களும் நகர்ந்துவிட்டனர்.
(தொடர்ந்து கீழே படிக்கவும்)