- Messages
- 997
- Reaction score
- 2,810
- Points
- 93
நெஞ்சம் – 14
கையைத் தலையில் வைத்து முட்டியில் குற்றி அமர்ந்திருந்த பிரபஞ்சன் முன்பு ஒரு நிழலுருவம் வந்து நின்றது. நிமிர்ந்து பார்க்காமலே அது கோகுல்தான் என அவனால் உணர முடிந்தது.
“மச்சான்... என்னாச்சு?” அசிரத்தையாய் அமர்ந்திருந்த பிரபஞ்சனின் தோளை கோகுல் தொட, நிமிர்ந்து அமர்ந்தான்.
“தெரியலை டா...” உதட்டைப் பிதுக்கியவன், “ஷி மைட் ஹேவ் சம் ப்ராப்ளம் டா. பட் என்கிட்ட சொல்ல மாட்றாங்க...” ஆதங்கமும் கோபமுமாய் கூறினான் பிரபஞ்சன்.
“டேய், அப்படியெல்லாம் பெருசா எதுவும் இருக்காது. நீயா எதையும் இமேஜின் பண்ணி உன்னைக் குழப்பிக்காத” கோகுல் நண்பனின் தோளைத் தட்டினான்.
“நோ டா... என்னால அவங்க முகத்தைப் பார்த்துக் கண்டுபிடிக்க முடிஞ்சது...” என்றவன், “கேர்ள்ஸ் ஆர் டிபிகல் டூ அண்டர்ஸ்டாண்ட்!” என்றான் உதட்டைப் பிதுக்கி. முகம் முழுவதும் ஆதங்கம் அப்பிக்கிடந்தது. அதில் கோகுலுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
“மச்சான், பொண்ணுங்களை புரிஞ்சுக்க கடவுளால கூட முடியாது. நீ எல்லாம் எம்மாத்திரம்...” எனக் கூறி சிரித்தவன், “ஃபர்ஸ்ட் நீ ரிலாக்ஸாகு. நீ தானே என்கிட்ட சொன்ன, ஷீ நீட் சம் டைம்னு. மே பீ, அவங்க இப்போ குழப்பத்துல இருக்கலாம். அவங்களுக்கான இடைவெளியை நீ டிஸ்டர்ப் பண்ணாத. குழம்பி அவங்களே உன்கிட்ட வருவாங்க. நீ பொறுமையா நான் சொல்றதை மட்டும் யோசிச்சு பாரு. உனக்கே புரியும்...” என்ற கோகுலுக்கு மனம் முழுவதும் ஆச்சர்யம்தான். இதுவரை இப்படியொரு பிரபஞ்சனை அவன் கண்டதில்லை. எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், அதை அழகாய்ப் பொறுமையாய்க் கையாளுவான். எதிலும் அவசரம்காட்டாது, தன் மூளையையும் மனதையும் ஒருநிலைப்படுத்தி எதையும் செய்வான். அப்படிப்பட்டவனின் மனது இன்று குழம்பிய குட்டையாய் இருக்கிறது. ஏதோ பெரிய பிரச்சனை ஒன்றின் நுனியைக் கூட கண்டறிய முடியாத பாவனைதான் அவன் முகம் முழுவதும்.
‘எல்லாம் பெண் என்னும் அதிசயம் செய்யும் மாயம் தான். நமக்கு இந்தக் காதலே வேண்டாம்...’ என உறுதி பூண்டவன், பிரபஞ்சனுக்குச் சற்றே தனிமை கொடுத்து வெளியேறினான்.
கோகுல் கூறியதை மனதிலே அசை போட்டான் பிரபஞ்சன். அவன் சொல்வதும் உண்மை தானே? உமையாளுக்கான நேரத்தை நான்தானே வழங்கினேன். நானே அவளைத் தொந்தரவு செய்யக் கூடாது.
‘எப்படி குழம்பினாலும், தெளிந்து தன்னிடம்தான் வருவாள். உமையாளின் தெளிவு, தெரிவு இரண்டுமே நானாகத்தான் இருக்கக் கூடும். தான் ஏதோ ஒருவகையில் அவளைப் பாதித்து இருக்கிறோம். அதனால்தான் அவளால் தன்னை நேர்க்கொண்டு பார்க்க முடியவில்லை. தன்னிடம் பேச முடியவில்லை’ எனப் பொறுமையாய் யோசித்து நடந்ததை மனதில் ஓட்டிப் பார்த்தவனுக்கு சந்தோஷத்தில் பேச்சு வரவில்லை. இத்தனை நேரம் மனம் முழுவதும் வியாப்பித்திருந்த குழப்பமும் கோபமும் பயமும் நொடியில்
விடை பெற்றிருக்க, அப்படியொரு ஆசுவாசமான உணர்வு எந்த முகாந்திரமும் இன்றி ஆடவன் மனதில் குடிபுகுந்தது. மனமும் உடலும் புதுத் தெம்பை பெற்றது போலொரு எண்ணம்.
இருக்கையிலிருந்து சந்தோஷமாய் துள்ளி குதித்து எழுந்தவன், அறையைவிட்டு வெளியேற கோகுல் தொலைக்காட்சியில் ஏதோ படம் பார்த்துக்கொண்டிருந்தான்.
“ம்மா, ஒரு காஃபி ப்ளீஸ்...” என்ற பிரபஞ்சன் வேண்டுமென்றே கோகுல் அருகே அவனை ஒட்டி உரசியபடி அமர்ந்தான்.
“டேய், அங்கதான் அவ்ளோ இடம் இருக்கே. அப்புறம் எதுக்கு என்னை இடிச்சுட்டு வந்து உட்கார்ற?” என கடிந்துக்கொண்டே சற்று தள்ளி அமர்ந்தான் கோகுல்.
சாரதா அடுக்களைக்குள் நகர்ந்ததும், கோகுலின் கழுத்தை சற்றே வளைத்து அவன் வலக்கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டவன், “மச்சான் தேங்க்ஸ் டா. லவ் யூ...” எனக் கூற, “சீ... கருமம்! கருமம். போய்த் தொலைடா நாயே!” என துள்ளி எழுந்தான் கோகுல்.
“நாயே! என்ன டா, காதல் முத்தி பைத்தியமாகிட்டீயா? இதுல என்னை ஹோமோ செக்சுவல்னு வேற கலாய்க்குறான். எருமை” என்று கோகுல் திட்டியதற்கு எல்லாம் பிரபஞ்சன் அசையவே இல்லை. காலை நான்றாக மேஜை மீது நகர்த்தி அமர்ந்தவனின் முகத்தில் பற்கள் அனைத்தும் பளிச்சென மின்னின. முகம் மட்டுமல்ல அகமும் சேர்த்து ஜொலித்தன.
“மம்மி, காஃபில கொஞ்சம் உப்பை அள்ளிப் போடுங்க. அப்பவாது உங்க பையனுக்கு சூடு சொரனை வருதான்னு பார்ப்போம்...” கோகுல் சாரதாவிடம் முறையிட,
“டேய், என்ன டா உளறீட்டு இருக்க?” புரியாது வினவினார் அவர்.
“ஆமா, நான் இங்க உளர்றேன். உங்க மகன் உங்களுக்கு மருமகளோட பேத்தியையும் சேர்த்தே ரெடி பண்ண பக்கா பிளானோட இருக்கான்...” கோகுல் உதட்டுக்குள் முணுமுணுக்க,
“சத்தமா பேசு டா...” சாரதா அடுக்களையிலிருந்து கத்தினார். அதற்குள் எட்டி அவன் வாயைப் பொத்தியிருந்த பிரபஞ்சன், “ம்மா, ஒன்னும் இல்லை மா. அவனுக்கும் உப்பு தூக்கலா ஒரு காஃபி கொண்டு வாங்க...” என நண்பனை அறைக்குள் இழுத்துச் சென்றுவிட்டான்.
‘என்னது இது? ரெண்டு பேரும் பைத்தியமாகிட்டாங்களா? கடவுளே! நீதான் ரெண்டு பேரையும் சரி செய்யணும்...’ தீவிரமாய் மனதில் வேண்டுதல் வைத்தார் சாரதா.
மறுநாள் காலையில் பிரபஞ்சன் உமையாளைக் காணப் போகிறோம் என்ற உந்துதலில் மகிழ்ச்சியான மனநிலையோடு தயாராகிக்கொண்டிருந்தான். அவனையே பார்த்துக்கொண்டு உணவருந்திய கோகுல், “என்ன மம்மி உன் பையன் புது சொக்கா போட்டு கலக்கலா கிளம்புறான்?” என வினவ, “என்னடா கேட்குற?” என அவனருகில் வந்தார் சாரதா.
“அஹம்... ஹக்கும். அது ஒன்னும் இல்ல, உங்க பையனோட கலர் சொக்கா நல்லா இருக்குன்னு சொல்ல வந்தேன். சரி, சரி, சாம்பாரை ஊத்துங்க முதல்ல...” என அவரை திசைதிருப்பியிருந்தான்.
“டேய், நேத்துல இருந்து நீ ஆளே சரியில்லை, பேச்சும்தான்” கோகுலை சாரதா முறைக்க,
“ஹக்கும்... நானும் லேசுவாக்கா உன் மகனை போட்டுவிடலாம்னு பார்க்குறேன். மனசு வர மாட்டுது. நீயும் புரிஞ்சுக்க மாட்ற மம்மி...” என்றவனை சாரதா குழம்பிய முகத்துடன் ஏறிட்டான்.
“குழப்பம் நல்லது மம்மி, குழம்புனாதான் தெளிய முடியும். ஏன் டா நல்லவனே?” கோகுல் பிரப்ஞசனை நக்கலாகப் பார்த்தவாறே இழுக்க, அவன் தொடையில் நறுக்கென கிள்ளியவிட்டு, அவனருகில் உண்ண அமர்ந்தான்.
“ஆ... மம்மி. உங்க பையன் சரியில்லை. கண்டுச்சு வைங்க...” புகார் கூறியவாறே கை கழுவ எழுந்து சென்றான் கோகுல்.
“டேய், காலையிலயே அவன்கிட்ட ஏன் டா வம்பிழுக்குற. சாப்பிடு ஒழுங்கா...” பிரபஞ்சனை கடிந்தவாறே உணவைப் பரிமாறினார் அன்னை. உண்டுவிட்டு இருவரும் ஆடைத் தயாரிப்பகத்தை நோக்கி நகர்ந்தனர்.
(கீழே படிக்க தொடர்ந்து)
கையைத் தலையில் வைத்து முட்டியில் குற்றி அமர்ந்திருந்த பிரபஞ்சன் முன்பு ஒரு நிழலுருவம் வந்து நின்றது. நிமிர்ந்து பார்க்காமலே அது கோகுல்தான் என அவனால் உணர முடிந்தது.
“மச்சான்... என்னாச்சு?” அசிரத்தையாய் அமர்ந்திருந்த பிரபஞ்சனின் தோளை கோகுல் தொட, நிமிர்ந்து அமர்ந்தான்.
“தெரியலை டா...” உதட்டைப் பிதுக்கியவன், “ஷி மைட் ஹேவ் சம் ப்ராப்ளம் டா. பட் என்கிட்ட சொல்ல மாட்றாங்க...” ஆதங்கமும் கோபமுமாய் கூறினான் பிரபஞ்சன்.
“டேய், அப்படியெல்லாம் பெருசா எதுவும் இருக்காது. நீயா எதையும் இமேஜின் பண்ணி உன்னைக் குழப்பிக்காத” கோகுல் நண்பனின் தோளைத் தட்டினான்.
“நோ டா... என்னால அவங்க முகத்தைப் பார்த்துக் கண்டுபிடிக்க முடிஞ்சது...” என்றவன், “கேர்ள்ஸ் ஆர் டிபிகல் டூ அண்டர்ஸ்டாண்ட்!” என்றான் உதட்டைப் பிதுக்கி. முகம் முழுவதும் ஆதங்கம் அப்பிக்கிடந்தது. அதில் கோகுலுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
“மச்சான், பொண்ணுங்களை புரிஞ்சுக்க கடவுளால கூட முடியாது. நீ எல்லாம் எம்மாத்திரம்...” எனக் கூறி சிரித்தவன், “ஃபர்ஸ்ட் நீ ரிலாக்ஸாகு. நீ தானே என்கிட்ட சொன்ன, ஷீ நீட் சம் டைம்னு. மே பீ, அவங்க இப்போ குழப்பத்துல இருக்கலாம். அவங்களுக்கான இடைவெளியை நீ டிஸ்டர்ப் பண்ணாத. குழம்பி அவங்களே உன்கிட்ட வருவாங்க. நீ பொறுமையா நான் சொல்றதை மட்டும் யோசிச்சு பாரு. உனக்கே புரியும்...” என்ற கோகுலுக்கு மனம் முழுவதும் ஆச்சர்யம்தான். இதுவரை இப்படியொரு பிரபஞ்சனை அவன் கண்டதில்லை. எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், அதை அழகாய்ப் பொறுமையாய்க் கையாளுவான். எதிலும் அவசரம்காட்டாது, தன் மூளையையும் மனதையும் ஒருநிலைப்படுத்தி எதையும் செய்வான். அப்படிப்பட்டவனின் மனது இன்று குழம்பிய குட்டையாய் இருக்கிறது. ஏதோ பெரிய பிரச்சனை ஒன்றின் நுனியைக் கூட கண்டறிய முடியாத பாவனைதான் அவன் முகம் முழுவதும்.
‘எல்லாம் பெண் என்னும் அதிசயம் செய்யும் மாயம் தான். நமக்கு இந்தக் காதலே வேண்டாம்...’ என உறுதி பூண்டவன், பிரபஞ்சனுக்குச் சற்றே தனிமை கொடுத்து வெளியேறினான்.
கோகுல் கூறியதை மனதிலே அசை போட்டான் பிரபஞ்சன். அவன் சொல்வதும் உண்மை தானே? உமையாளுக்கான நேரத்தை நான்தானே வழங்கினேன். நானே அவளைத் தொந்தரவு செய்யக் கூடாது.
‘எப்படி குழம்பினாலும், தெளிந்து தன்னிடம்தான் வருவாள். உமையாளின் தெளிவு, தெரிவு இரண்டுமே நானாகத்தான் இருக்கக் கூடும். தான் ஏதோ ஒருவகையில் அவளைப் பாதித்து இருக்கிறோம். அதனால்தான் அவளால் தன்னை நேர்க்கொண்டு பார்க்க முடியவில்லை. தன்னிடம் பேச முடியவில்லை’ எனப் பொறுமையாய் யோசித்து நடந்ததை மனதில் ஓட்டிப் பார்த்தவனுக்கு சந்தோஷத்தில் பேச்சு வரவில்லை. இத்தனை நேரம் மனம் முழுவதும் வியாப்பித்திருந்த குழப்பமும் கோபமும் பயமும் நொடியில்
விடை பெற்றிருக்க, அப்படியொரு ஆசுவாசமான உணர்வு எந்த முகாந்திரமும் இன்றி ஆடவன் மனதில் குடிபுகுந்தது. மனமும் உடலும் புதுத் தெம்பை பெற்றது போலொரு எண்ணம்.
இருக்கையிலிருந்து சந்தோஷமாய் துள்ளி குதித்து எழுந்தவன், அறையைவிட்டு வெளியேற கோகுல் தொலைக்காட்சியில் ஏதோ படம் பார்த்துக்கொண்டிருந்தான்.
“ம்மா, ஒரு காஃபி ப்ளீஸ்...” என்ற பிரபஞ்சன் வேண்டுமென்றே கோகுல் அருகே அவனை ஒட்டி உரசியபடி அமர்ந்தான்.
“டேய், அங்கதான் அவ்ளோ இடம் இருக்கே. அப்புறம் எதுக்கு என்னை இடிச்சுட்டு வந்து உட்கார்ற?” என கடிந்துக்கொண்டே சற்று தள்ளி அமர்ந்தான் கோகுல்.
சாரதா அடுக்களைக்குள் நகர்ந்ததும், கோகுலின் கழுத்தை சற்றே வளைத்து அவன் வலக்கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டவன், “மச்சான் தேங்க்ஸ் டா. லவ் யூ...” எனக் கூற, “சீ... கருமம்! கருமம். போய்த் தொலைடா நாயே!” என துள்ளி எழுந்தான் கோகுல்.
“நாயே! என்ன டா, காதல் முத்தி பைத்தியமாகிட்டீயா? இதுல என்னை ஹோமோ செக்சுவல்னு வேற கலாய்க்குறான். எருமை” என்று கோகுல் திட்டியதற்கு எல்லாம் பிரபஞ்சன் அசையவே இல்லை. காலை நான்றாக மேஜை மீது நகர்த்தி அமர்ந்தவனின் முகத்தில் பற்கள் அனைத்தும் பளிச்சென மின்னின. முகம் மட்டுமல்ல அகமும் சேர்த்து ஜொலித்தன.
“மம்மி, காஃபில கொஞ்சம் உப்பை அள்ளிப் போடுங்க. அப்பவாது உங்க பையனுக்கு சூடு சொரனை வருதான்னு பார்ப்போம்...” கோகுல் சாரதாவிடம் முறையிட,
“டேய், என்ன டா உளறீட்டு இருக்க?” புரியாது வினவினார் அவர்.
“ஆமா, நான் இங்க உளர்றேன். உங்க மகன் உங்களுக்கு மருமகளோட பேத்தியையும் சேர்த்தே ரெடி பண்ண பக்கா பிளானோட இருக்கான்...” கோகுல் உதட்டுக்குள் முணுமுணுக்க,
“சத்தமா பேசு டா...” சாரதா அடுக்களையிலிருந்து கத்தினார். அதற்குள் எட்டி அவன் வாயைப் பொத்தியிருந்த பிரபஞ்சன், “ம்மா, ஒன்னும் இல்லை மா. அவனுக்கும் உப்பு தூக்கலா ஒரு காஃபி கொண்டு வாங்க...” என நண்பனை அறைக்குள் இழுத்துச் சென்றுவிட்டான்.
‘என்னது இது? ரெண்டு பேரும் பைத்தியமாகிட்டாங்களா? கடவுளே! நீதான் ரெண்டு பேரையும் சரி செய்யணும்...’ தீவிரமாய் மனதில் வேண்டுதல் வைத்தார் சாரதா.
மறுநாள் காலையில் பிரபஞ்சன் உமையாளைக் காணப் போகிறோம் என்ற உந்துதலில் மகிழ்ச்சியான மனநிலையோடு தயாராகிக்கொண்டிருந்தான். அவனையே பார்த்துக்கொண்டு உணவருந்திய கோகுல், “என்ன மம்மி உன் பையன் புது சொக்கா போட்டு கலக்கலா கிளம்புறான்?” என வினவ, “என்னடா கேட்குற?” என அவனருகில் வந்தார் சாரதா.
“அஹம்... ஹக்கும். அது ஒன்னும் இல்ல, உங்க பையனோட கலர் சொக்கா நல்லா இருக்குன்னு சொல்ல வந்தேன். சரி, சரி, சாம்பாரை ஊத்துங்க முதல்ல...” என அவரை திசைதிருப்பியிருந்தான்.
“டேய், நேத்துல இருந்து நீ ஆளே சரியில்லை, பேச்சும்தான்” கோகுலை சாரதா முறைக்க,
“ஹக்கும்... நானும் லேசுவாக்கா உன் மகனை போட்டுவிடலாம்னு பார்க்குறேன். மனசு வர மாட்டுது. நீயும் புரிஞ்சுக்க மாட்ற மம்மி...” என்றவனை சாரதா குழம்பிய முகத்துடன் ஏறிட்டான்.
“குழப்பம் நல்லது மம்மி, குழம்புனாதான் தெளிய முடியும். ஏன் டா நல்லவனே?” கோகுல் பிரப்ஞசனை நக்கலாகப் பார்த்தவாறே இழுக்க, அவன் தொடையில் நறுக்கென கிள்ளியவிட்டு, அவனருகில் உண்ண அமர்ந்தான்.
“ஆ... மம்மி. உங்க பையன் சரியில்லை. கண்டுச்சு வைங்க...” புகார் கூறியவாறே கை கழுவ எழுந்து சென்றான் கோகுல்.
“டேய், காலையிலயே அவன்கிட்ட ஏன் டா வம்பிழுக்குற. சாப்பிடு ஒழுங்கா...” பிரபஞ்சனை கடிந்தவாறே உணவைப் பரிமாறினார் அன்னை. உண்டுவிட்டு இருவரும் ஆடைத் தயாரிப்பகத்தை நோக்கி நகர்ந்தனர்.
(கீழே படிக்க தொடர்ந்து)