- Messages
- 997
- Reaction score
- 2,810
- Points
- 93
நெஞ்சம் – 13
பிரபஞ்சன் உள்ளே நுழைய, “பிரபா, உன்கிட்ட கொஞ்சம் பேசணும். இங்க வந்து உட்காரு...” என்று சாரதா கூற, “வந்து உட்காரு டா நல்லவனே!” என்றான் கோகுலும்.
அவர்களுக்கு அருகிலிருந்த இருக்கையை ஆக்கிரமித்தப் பிரபஞ்சன் முழுக்கை சட்டையை சற்றே தளர்த்தி மேலேற்றிவிட்டவாறே, கையிலிருந்தக் கடிகாரத்தை அகற்றினான். “சொல்லுங்க, என்ன வேணும் உங்க செல்ல மகனுக்கும், உங்களுக்கும்?” என வினவியவனின் முகத்தில் அப்படியொரு புன்னகை. தலையை நிமிர்த்தவே இல்லை.
“டேய்! ஏன் டா, இவன் ஏதோ உனக்கு ஹெல்ப் பண்றேன்னு சொன்னதுக்கு நீ வேண்டாம்னு சொன்னதும் இல்லாம, கிண்டல் வேற செஞ்சிருக்க? என் மகனைப் பார்த்தா, உனக்கு எப்படி தெரியுது?” கையில் குச்சி மட்டும்தான் இல்லை. மற்றபடி ஆசிரியை மாணவனை விசாரிக்கும் தொனிதான் சாரதாவிடம். இதழ்களுக்குள் புன்னகையை அதக்கிவிட்டான் மகன்.
“ஹம்ம்...” என்றவன் கோகுலை மேலிருந்து கீழாகப் பார்த்துவிட்டு, “வால் மட்டும் இருந்தா, ஹனுமான் தான்...” என சிரிக்காமல் கூறியபடியே அறைக்குள் நுழைய, “ம்மா...” என்று காலை தரையில் உதைத்தான் கோகுல்.
“டேய் பிரபா, வளர்ற புள்ளையை ஏன் டா குரங்குன்னு சொல்ற?” சாரதா கடிய, “மம்மி, அவன் இன்டேரக்டா சொன்னா, நீ டேரக்டா சொல்லு...” எனக் கோபமான கோகுல் பிரபஞ்சன் அறைக்குள் நுழைந்தான்.
பிரபஞ்சன் உடை மாற்றி வரவும், “மச்சான், நீ என்ன நினைச்சுட்டு இருக்க? நம்மளோட அடுத்த மூவ் என்ன? எல்லா விஷயத்துலயும் உனக்கு சப்போர்டாதான் நான் இருந்திருக்கேன். இதுலயும் என்னோட முழு ஆதரவு உனக்கு உண்டு. சோ நெக்ஸ்ட் என்ன பண்ண போறோம்?” கோகுல் தீவிர பாவனையுடன் கேட்க, தன் கையிலிருந்தத் துண்டை அவன் மீதெறிந்தான் பிரபஞ்சன். எதிரிலிருப்பவன் முகத்திலிருந்த பாவனை துளிகூட உரியவனிடத்தில் இல்லை. உதட்டோரம் மென்னகை மட்டும் படர்ந்திருந்தது.
“நெக்ஸ்ட் ரெஸ்ட் டா. ஹியர் ஆஃப்டர் ஐ வோன்ட் டிஸ்டர்ப் ஹெர் டா”
“டேய்! டிஸ்டர்ப் பண்ணலைன்னா எப்படி டா உன் மேல பீலிங்க்ஸ் வரும். நல்ல அபிப்பிராயம் வரும்? நீ சீரியஸா இல்லையோ?” கோகுல் கேள்வியில் புன்னகைத்தவன்,
“சீரியஸ்னா எப்படி, டெய்லி அவங்க பின்னாடி ஃபாலோ பண்றது, லவ் பண்றேன்ற பேர்ல இண்டீசன்டா பிகேவ் பண்றதா?” என்றவன் தலையை இல்லை என்பது போல இடம் வலமாக அசைத்து, “என்னோட விருப்பத்தைச் சொன்னேன். அவங்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அதுக்குப் பிறகும் டிஸ்டர்ப் பண்றது தப்புடா” என்றான்.
“அப்போ அந்தப் பொண்ணு வேணாம்னு முடிவெடுத்துடீயா?”
“அந்தப் பொண்ணு மட்டும்தான் டா வேணும்...”
“என்னை ரொம்பக் குழப்புற மேன் நீ...” தலையைப் பிய்த்துக் கொள்ளாத குறையாகக் கேட்டான் கோகுல்.
“டேய்! அவங்களுக்கான ஸ்பேஸை நான் கொடுத்து இருக்கேன். நான் போய் அப்ரோச் பண்ணதும் அவங்க அக்செப்ட் பண்ணுவாங்கன்னு எக்ஸ்பெக்ட் பண்ணலை டா. என்னை, என் குடும்பத்தை, என் குணத்தை நான் யாரு, எப்படிப்பட்டவன்னு அவங்களுக்குப் புரிஞ்சுக்க டைம் வேணும் டா. என்னை நானா புரிஞ்சுக்க, தெரிஞ்சுக்க அக்செப்ட் பண்ண அவங்களுக்கு நேரம் கொடுத்து இருக்கேன்.
கண்டிப்பா ஷி வில் அக்செப்ட் மீ. பட், டைம் எடுக்கலாம்...” என்றான்.
“கடைசிவரை அவங்க அக்செப்ட் பண்ணலைன்னா, என்ன டா பண்ணுவ?” கோகுல் வினவினான்.
“ஹம்ம்...” என இழுத்த பிரபா, “அப்போ கூட உன்னோட மொக்கை ஐடியா எனக்கு வேணாம் டா...” என்றான் உதட்டைக் கடித்துப் புன்னகையை இதழ்களுக்குள் அதக்கியபடி.
“மூட்றா... எப்படி நீ லவ் பண்ணி கல்யாணம் பண்றேன்னு நானும் பார்க்குறேன்...” கோழியாய் சிலிர்த்துக்கொண்டு கோகுல் வெளியேற, அவன் கேட்டக் கேள்விக்குக் கேலியாய் பதில் இயம்பினாலும், பிரபஞ்சன் மனதின் ஓரத்திலும் அந்தக் கேள்வித் தொக்கி நின்றது.
கண்டிப்பாக உமையாள் தன்னைப் புரிந்து கொள்வாள் என உள்மனம் அடித்துக் கூறியது.
அவளைக் கட்டாயப்படுத்தும் எண்ணம் துளியும் இல்லை ஆடவனுக்கு. விட்டுவிடும் எண்ணமும் இல்லை. பெண் வாழ்க்கையில் கண்ட காயங்கள் பெரிது. அதுதான் உமையாள் ஆண்களிடமிருந்து விலகிச் செல்லக் காரணம். இப்போது நினைத்தால் கூட, மதுரையிலிருக்கும் தன் நண்பர்கள் மூலமாக நடந்ததை அறிந்து கொள்ள முடியும் அவனால். ஆனால், அப்படி செய்ய மனம் வரவில்லை பிரபாவிற்கு.
அவளாக என்றாவது மனம் திறந்து கூறினால், கண்டிப்பாக அவள் கண்ணீர் துடைத்து கண்ணம் வருடி தலைக் கோதி தோளில் சாய்த்துக் கொள்வான். நடந்த எதையும் அவனால் மாற்ற முடியாது. ஆனால், அவளுக்கான ஆறுதலையும், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையையும் அளித்திட இயலும். காலம் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளும் என்ற எண்ணத்துடனும் அவளைத் தன்னால் மாற்ற முடியும் என்ற உறுதியுடனும் அப்போதைக்கு தன் மனதை சமாதானம் செய்துகொண்டான்.
நாட்கள் அதன்போக்கில் மெதுவாக ஊர்ந்து
சென்றுகொண்டிருந்தன. உமையாள் பிரபஞ்சன் தன்னிடம் விருப்பத்தை உரைத்ததைத் தற்காலிகமாக மறந்துவிட்டிருந்தாள். தேவைக்கு மேல் அவனிடம் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை பெண். அவளுண்டு அவள் வேலை உண்டு என இருந்து கொண்டாள். பிரபஞ்சனும் பெரிதாய் அவளிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. அவள் அவளாக இருப்பதுதான் மகிழ்ச்சி என நினைத்து தன் விருப்பத்தை அவளிடம் எந்த விதத்திலும் திணிக்க முயற்சிக்கவில்லை.
எப்போதும் போல ஆடைத் தயாரிப்பகம் நன்றாக இயங்கிக்கொண்டிருந்தது. அயல்நாட்டு ஏற்றுமதிக்காக புதுமையான உடைகள் தயாரிக்கப்பட்டு கொடுத்த தேதிக்குள் அனுப்ப வேண்டும் என வேலைகள் துரித கதியில் நடந்துகொண்டிருந்தன. பிரபஞ்சனும் கோகுலும் அந்த வேலையில் மூழ்கிவிட்டிருந்தனர்.
வலது கை மேஜை மீது தாளம் போட, இடதுகை கணினியில் உள்ள விசைப்பலகையை தட்டிக்கொண்டிருந்தது. அந்த மாதத்தின் வரவு செலவுகளை சரிபார்த்து முடித்த பிரபஞ்சன் கைகளைத் தலைக்கு மேலே தூக்கி, கழுத்தை நெட்டி முறித்தான். குனிந்தே நீண்ட நேரம் கணினியைப் பார்த்தது கழுத்தில் லேசாய் வலி வேறு. எழுந்து நின்று கையையும் காலையும் ஆட்டியவன், அப்படியே ஒவ்வொரு பகுதியாகச் சுற்றி வரலாம் என காலார மெதுவாய் நடைபோட்டான்.
ஆங்காங்கே சிலர் வணக்கம் வைப்பதும் தலையசைப்பதும் புன்னகையை உதிர்ப்பதுமாய் அவனைக் கடக்க, ஒவ்வொரு பகுதியாகச் சுற்றி வர ஆரம்பித்தான். பெண்களுக்கென ஓய்வெடுக்கும் பெரிய அறை ஒன்று தனியாக ஒதுக்கியிருந்தார் சாரதா. அதைக் கடக்கும்போது யாரோ ஒருவர் தேம்பி அழும் சத்தம் செவியை அடைந்தது. கால்கள் அவ்விடத்திலே நிலைகுத்தி நிற்க, என்னவென அறியாது பிரபஞ்சனுக்கு மனதில் லேசான பதற்றம்.
ஒரு நொடித் தயங்கியவன், பின் கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான். ஆடைத் தயாரிப்பகத்தில் வேலை பார்க்கும் பெண்மணி ஒருவரும், அவர் அருகே பன்னிரெண்டு அல்லது பதிமூன்று வயது நிரம்பிய சிறுமி ஒருத்தி தேம்பிக்கொண்டே நிற்க, என்ன சமாதானம் செய்வது எனத் தெரியாது தடுமாறினார் அந்தப் பெண்மணி.
பிரபஞ்சனைக் கண்டதும், “சார், அது... வேலை நேரம்...” என்றவர் அவன் வேலை நேரத்தில் இங்கு வந்ததற்குத் திட்டுவானோ எனப் பயந்து அவர் குரல் தடுமாறியது. அந்தப் பெண் தாயின் பின்னால் ஒளிந்தாள்.
“அக்கா, என்னாச்சு, ஏன் பாப்பா அழறா...?” என நேரடியாய் விஷயத்திற்கு வந்தான் பிரபஞ்சன்.
“அது தம்பி, என் பொண்ணுதான். இன்னைக்கு காலைல இருந்தே வயித்த வலின்னு சொல்லீட்டு இருந்தா. ஸ்கூலுக்கு அனுப்பாம இங்க கூட்டீட்டு வந்தேன். இப்போ திடீர்னு...” என்றவர் ஒரு நொடி தயங்கிப் பின், “பெரிய மனுஷியாகிட்டா. அதான் பயந்து அழறா. எனக்கும் பதட்டத்துல என்னப் பண்றதுன்னு தெரியலை. அவங்க அப்பாவுக்குப் போன் பண்ணியிருக்கேன். அவர் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாரு...” என்றார். அவர் கூறியதைக் கேட்டவன் சற்றே ஆசுவாசமானான்.
“அக்கா, பாப்பா பேரென்ன?” என வினவினான்.
“ஸ்வாதி...” அந்தப் பெண்மணி பதிலுரைக்கவும்,
“ஸ்வாதி, குட் கேர்ள் இல்ல? அம்மா பின்னாடி ஒளிஞ்சு நிக்காம இங்க அண்ணன் முன்னாடி வந்து நில்லுங்க...” என்றான். அவன் முன்னே வந்து நின்றவளுக்கு அழுகை நிற்கவில்லை. அழுது முகம் விழிகள் என எல்லாம் சிவந்திருந்தது. பிரபஞ்சனை பார்க்க சங்கடப்பட்டுக்கொண்டே குனிந்து நின்றாள் ஸ்வாதி.
“ஸ்வாதி ஏன் அழறீங்க? இதுல அழறதுக்கு என்ன இருக்கு?” பிரபஞ்சன் பரிவாய் வினவ,
“அது... பயமா இருக்கு அண்ணா!” என ஸ்வாதி தேம்பினாள்.
கனிவாய் அவளைப் பார்த்தவன், “இந்த மாதிரி நேரத்துல பயப்பட எல்லாம் கூடாது டா. இது ஒரு நேச்சுரல் ப்ராசஸ். கேர்ள்ஸ் எல்லாருமே இந்த ஸ்டேஜை கிராஸ் பண்ணி வந்து இருப்பாங்க. இதுல அசிங்கப்படவோ, பயப்படவோ ஒன்னும் இல்லை. இது தீட்டோ, தீண்டதாக விஷயமோ, அருவருப்பான விஷமோ இல்லை.உங்க உடம்புல வயசுக்கு ஏத்தமாதிரி சில சேஞ்சஸ் நடக்கும். அதுதான் இப்போ உங்களுக்கு நடந்து இருக்கு. இதை பத்தி ஸ்கூல்ல டீச்சர்ஸ் சொல்லி இருப்பாங்களே! இந்த மாதிரி நேரத்துல என்ன பண்ணணும் பண்ணக் கூடாதுன்னு அம்மாவும், டீச்சரும் சொல்லித் தருவாங்க டா. அதனால நீங்களும் அழுது அம்மாவைப் பதட்டப்பட வைக்கக் கூடாது. குட் கேர்ளா கண்ணைத் துடைச்சுக்கோங்க...” எனப் பிரபஞ்சன் கூறவும், ஸ்வாதியின் அழுகை நின்றது.
“ஸ்வாதி முதல்ல சின்ன புள்ளையா இருந்தீங்க. ஆனால், இப்போ ரொம்ப பிக் பிக் கேர்ளா மாறிட்டீங்க. இனிமே நோ அழுகை. இதுக்கு பிறகுதான் நீங்க ரொம்ப தைரியமா இருக்கணும். நல்லா சாப்பிடணும். வயித்த வலி ஆர் வேற எந்த விதமான பிராப்ளம்னாலும் அம்மாகிட்ட சொல்லிடணும்.
நீங்க நல்லா ஹெல்த்தியா இருக்கணும்...” என மேலும் சில நிமிடங்கள் பேசி ஒருவாறு சிறுமியின் அழுகையை நிறுத்தியிருந்தான்.
(கீழே படிக்கவும் தொடர்ந்து)
பிரபஞ்சன் உள்ளே நுழைய, “பிரபா, உன்கிட்ட கொஞ்சம் பேசணும். இங்க வந்து உட்காரு...” என்று சாரதா கூற, “வந்து உட்காரு டா நல்லவனே!” என்றான் கோகுலும்.
அவர்களுக்கு அருகிலிருந்த இருக்கையை ஆக்கிரமித்தப் பிரபஞ்சன் முழுக்கை சட்டையை சற்றே தளர்த்தி மேலேற்றிவிட்டவாறே, கையிலிருந்தக் கடிகாரத்தை அகற்றினான். “சொல்லுங்க, என்ன வேணும் உங்க செல்ல மகனுக்கும், உங்களுக்கும்?” என வினவியவனின் முகத்தில் அப்படியொரு புன்னகை. தலையை நிமிர்த்தவே இல்லை.
“டேய்! ஏன் டா, இவன் ஏதோ உனக்கு ஹெல்ப் பண்றேன்னு சொன்னதுக்கு நீ வேண்டாம்னு சொன்னதும் இல்லாம, கிண்டல் வேற செஞ்சிருக்க? என் மகனைப் பார்த்தா, உனக்கு எப்படி தெரியுது?” கையில் குச்சி மட்டும்தான் இல்லை. மற்றபடி ஆசிரியை மாணவனை விசாரிக்கும் தொனிதான் சாரதாவிடம். இதழ்களுக்குள் புன்னகையை அதக்கிவிட்டான் மகன்.
“ஹம்ம்...” என்றவன் கோகுலை மேலிருந்து கீழாகப் பார்த்துவிட்டு, “வால் மட்டும் இருந்தா, ஹனுமான் தான்...” என சிரிக்காமல் கூறியபடியே அறைக்குள் நுழைய, “ம்மா...” என்று காலை தரையில் உதைத்தான் கோகுல்.
“டேய் பிரபா, வளர்ற புள்ளையை ஏன் டா குரங்குன்னு சொல்ற?” சாரதா கடிய, “மம்மி, அவன் இன்டேரக்டா சொன்னா, நீ டேரக்டா சொல்லு...” எனக் கோபமான கோகுல் பிரபஞ்சன் அறைக்குள் நுழைந்தான்.
பிரபஞ்சன் உடை மாற்றி வரவும், “மச்சான், நீ என்ன நினைச்சுட்டு இருக்க? நம்மளோட அடுத்த மூவ் என்ன? எல்லா விஷயத்துலயும் உனக்கு சப்போர்டாதான் நான் இருந்திருக்கேன். இதுலயும் என்னோட முழு ஆதரவு உனக்கு உண்டு. சோ நெக்ஸ்ட் என்ன பண்ண போறோம்?” கோகுல் தீவிர பாவனையுடன் கேட்க, தன் கையிலிருந்தத் துண்டை அவன் மீதெறிந்தான் பிரபஞ்சன். எதிரிலிருப்பவன் முகத்திலிருந்த பாவனை துளிகூட உரியவனிடத்தில் இல்லை. உதட்டோரம் மென்னகை மட்டும் படர்ந்திருந்தது.
“நெக்ஸ்ட் ரெஸ்ட் டா. ஹியர் ஆஃப்டர் ஐ வோன்ட் டிஸ்டர்ப் ஹெர் டா”
“டேய்! டிஸ்டர்ப் பண்ணலைன்னா எப்படி டா உன் மேல பீலிங்க்ஸ் வரும். நல்ல அபிப்பிராயம் வரும்? நீ சீரியஸா இல்லையோ?” கோகுல் கேள்வியில் புன்னகைத்தவன்,
“சீரியஸ்னா எப்படி, டெய்லி அவங்க பின்னாடி ஃபாலோ பண்றது, லவ் பண்றேன்ற பேர்ல இண்டீசன்டா பிகேவ் பண்றதா?” என்றவன் தலையை இல்லை என்பது போல இடம் வலமாக அசைத்து, “என்னோட விருப்பத்தைச் சொன்னேன். அவங்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அதுக்குப் பிறகும் டிஸ்டர்ப் பண்றது தப்புடா” என்றான்.
“அப்போ அந்தப் பொண்ணு வேணாம்னு முடிவெடுத்துடீயா?”
“அந்தப் பொண்ணு மட்டும்தான் டா வேணும்...”
“என்னை ரொம்பக் குழப்புற மேன் நீ...” தலையைப் பிய்த்துக் கொள்ளாத குறையாகக் கேட்டான் கோகுல்.
“டேய்! அவங்களுக்கான ஸ்பேஸை நான் கொடுத்து இருக்கேன். நான் போய் அப்ரோச் பண்ணதும் அவங்க அக்செப்ட் பண்ணுவாங்கன்னு எக்ஸ்பெக்ட் பண்ணலை டா. என்னை, என் குடும்பத்தை, என் குணத்தை நான் யாரு, எப்படிப்பட்டவன்னு அவங்களுக்குப் புரிஞ்சுக்க டைம் வேணும் டா. என்னை நானா புரிஞ்சுக்க, தெரிஞ்சுக்க அக்செப்ட் பண்ண அவங்களுக்கு நேரம் கொடுத்து இருக்கேன்.
கண்டிப்பா ஷி வில் அக்செப்ட் மீ. பட், டைம் எடுக்கலாம்...” என்றான்.
“கடைசிவரை அவங்க அக்செப்ட் பண்ணலைன்னா, என்ன டா பண்ணுவ?” கோகுல் வினவினான்.
“ஹம்ம்...” என இழுத்த பிரபா, “அப்போ கூட உன்னோட மொக்கை ஐடியா எனக்கு வேணாம் டா...” என்றான் உதட்டைக் கடித்துப் புன்னகையை இதழ்களுக்குள் அதக்கியபடி.
“மூட்றா... எப்படி நீ லவ் பண்ணி கல்யாணம் பண்றேன்னு நானும் பார்க்குறேன்...” கோழியாய் சிலிர்த்துக்கொண்டு கோகுல் வெளியேற, அவன் கேட்டக் கேள்விக்குக் கேலியாய் பதில் இயம்பினாலும், பிரபஞ்சன் மனதின் ஓரத்திலும் அந்தக் கேள்வித் தொக்கி நின்றது.
கண்டிப்பாக உமையாள் தன்னைப் புரிந்து கொள்வாள் என உள்மனம் அடித்துக் கூறியது.
அவளைக் கட்டாயப்படுத்தும் எண்ணம் துளியும் இல்லை ஆடவனுக்கு. விட்டுவிடும் எண்ணமும் இல்லை. பெண் வாழ்க்கையில் கண்ட காயங்கள் பெரிது. அதுதான் உமையாள் ஆண்களிடமிருந்து விலகிச் செல்லக் காரணம். இப்போது நினைத்தால் கூட, மதுரையிலிருக்கும் தன் நண்பர்கள் மூலமாக நடந்ததை அறிந்து கொள்ள முடியும் அவனால். ஆனால், அப்படி செய்ய மனம் வரவில்லை பிரபாவிற்கு.
அவளாக என்றாவது மனம் திறந்து கூறினால், கண்டிப்பாக அவள் கண்ணீர் துடைத்து கண்ணம் வருடி தலைக் கோதி தோளில் சாய்த்துக் கொள்வான். நடந்த எதையும் அவனால் மாற்ற முடியாது. ஆனால், அவளுக்கான ஆறுதலையும், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையையும் அளித்திட இயலும். காலம் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளும் என்ற எண்ணத்துடனும் அவளைத் தன்னால் மாற்ற முடியும் என்ற உறுதியுடனும் அப்போதைக்கு தன் மனதை சமாதானம் செய்துகொண்டான்.
நாட்கள் அதன்போக்கில் மெதுவாக ஊர்ந்து
சென்றுகொண்டிருந்தன. உமையாள் பிரபஞ்சன் தன்னிடம் விருப்பத்தை உரைத்ததைத் தற்காலிகமாக மறந்துவிட்டிருந்தாள். தேவைக்கு மேல் அவனிடம் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை பெண். அவளுண்டு அவள் வேலை உண்டு என இருந்து கொண்டாள். பிரபஞ்சனும் பெரிதாய் அவளிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. அவள் அவளாக இருப்பதுதான் மகிழ்ச்சி என நினைத்து தன் விருப்பத்தை அவளிடம் எந்த விதத்திலும் திணிக்க முயற்சிக்கவில்லை.
எப்போதும் போல ஆடைத் தயாரிப்பகம் நன்றாக இயங்கிக்கொண்டிருந்தது. அயல்நாட்டு ஏற்றுமதிக்காக புதுமையான உடைகள் தயாரிக்கப்பட்டு கொடுத்த தேதிக்குள் அனுப்ப வேண்டும் என வேலைகள் துரித கதியில் நடந்துகொண்டிருந்தன. பிரபஞ்சனும் கோகுலும் அந்த வேலையில் மூழ்கிவிட்டிருந்தனர்.
வலது கை மேஜை மீது தாளம் போட, இடதுகை கணினியில் உள்ள விசைப்பலகையை தட்டிக்கொண்டிருந்தது. அந்த மாதத்தின் வரவு செலவுகளை சரிபார்த்து முடித்த பிரபஞ்சன் கைகளைத் தலைக்கு மேலே தூக்கி, கழுத்தை நெட்டி முறித்தான். குனிந்தே நீண்ட நேரம் கணினியைப் பார்த்தது கழுத்தில் லேசாய் வலி வேறு. எழுந்து நின்று கையையும் காலையும் ஆட்டியவன், அப்படியே ஒவ்வொரு பகுதியாகச் சுற்றி வரலாம் என காலார மெதுவாய் நடைபோட்டான்.
ஆங்காங்கே சிலர் வணக்கம் வைப்பதும் தலையசைப்பதும் புன்னகையை உதிர்ப்பதுமாய் அவனைக் கடக்க, ஒவ்வொரு பகுதியாகச் சுற்றி வர ஆரம்பித்தான். பெண்களுக்கென ஓய்வெடுக்கும் பெரிய அறை ஒன்று தனியாக ஒதுக்கியிருந்தார் சாரதா. அதைக் கடக்கும்போது யாரோ ஒருவர் தேம்பி அழும் சத்தம் செவியை அடைந்தது. கால்கள் அவ்விடத்திலே நிலைகுத்தி நிற்க, என்னவென அறியாது பிரபஞ்சனுக்கு மனதில் லேசான பதற்றம்.
ஒரு நொடித் தயங்கியவன், பின் கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான். ஆடைத் தயாரிப்பகத்தில் வேலை பார்க்கும் பெண்மணி ஒருவரும், அவர் அருகே பன்னிரெண்டு அல்லது பதிமூன்று வயது நிரம்பிய சிறுமி ஒருத்தி தேம்பிக்கொண்டே நிற்க, என்ன சமாதானம் செய்வது எனத் தெரியாது தடுமாறினார் அந்தப் பெண்மணி.
பிரபஞ்சனைக் கண்டதும், “சார், அது... வேலை நேரம்...” என்றவர் அவன் வேலை நேரத்தில் இங்கு வந்ததற்குத் திட்டுவானோ எனப் பயந்து அவர் குரல் தடுமாறியது. அந்தப் பெண் தாயின் பின்னால் ஒளிந்தாள்.
“அக்கா, என்னாச்சு, ஏன் பாப்பா அழறா...?” என நேரடியாய் விஷயத்திற்கு வந்தான் பிரபஞ்சன்.
“அது தம்பி, என் பொண்ணுதான். இன்னைக்கு காலைல இருந்தே வயித்த வலின்னு சொல்லீட்டு இருந்தா. ஸ்கூலுக்கு அனுப்பாம இங்க கூட்டீட்டு வந்தேன். இப்போ திடீர்னு...” என்றவர் ஒரு நொடி தயங்கிப் பின், “பெரிய மனுஷியாகிட்டா. அதான் பயந்து அழறா. எனக்கும் பதட்டத்துல என்னப் பண்றதுன்னு தெரியலை. அவங்க அப்பாவுக்குப் போன் பண்ணியிருக்கேன். அவர் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாரு...” என்றார். அவர் கூறியதைக் கேட்டவன் சற்றே ஆசுவாசமானான்.
“அக்கா, பாப்பா பேரென்ன?” என வினவினான்.
“ஸ்வாதி...” அந்தப் பெண்மணி பதிலுரைக்கவும்,
“ஸ்வாதி, குட் கேர்ள் இல்ல? அம்மா பின்னாடி ஒளிஞ்சு நிக்காம இங்க அண்ணன் முன்னாடி வந்து நில்லுங்க...” என்றான். அவன் முன்னே வந்து நின்றவளுக்கு அழுகை நிற்கவில்லை. அழுது முகம் விழிகள் என எல்லாம் சிவந்திருந்தது. பிரபஞ்சனை பார்க்க சங்கடப்பட்டுக்கொண்டே குனிந்து நின்றாள் ஸ்வாதி.
“ஸ்வாதி ஏன் அழறீங்க? இதுல அழறதுக்கு என்ன இருக்கு?” பிரபஞ்சன் பரிவாய் வினவ,
“அது... பயமா இருக்கு அண்ணா!” என ஸ்வாதி தேம்பினாள்.
கனிவாய் அவளைப் பார்த்தவன், “இந்த மாதிரி நேரத்துல பயப்பட எல்லாம் கூடாது டா. இது ஒரு நேச்சுரல் ப்ராசஸ். கேர்ள்ஸ் எல்லாருமே இந்த ஸ்டேஜை கிராஸ் பண்ணி வந்து இருப்பாங்க. இதுல அசிங்கப்படவோ, பயப்படவோ ஒன்னும் இல்லை. இது தீட்டோ, தீண்டதாக விஷயமோ, அருவருப்பான விஷமோ இல்லை.உங்க உடம்புல வயசுக்கு ஏத்தமாதிரி சில சேஞ்சஸ் நடக்கும். அதுதான் இப்போ உங்களுக்கு நடந்து இருக்கு. இதை பத்தி ஸ்கூல்ல டீச்சர்ஸ் சொல்லி இருப்பாங்களே! இந்த மாதிரி நேரத்துல என்ன பண்ணணும் பண்ணக் கூடாதுன்னு அம்மாவும், டீச்சரும் சொல்லித் தருவாங்க டா. அதனால நீங்களும் அழுது அம்மாவைப் பதட்டப்பட வைக்கக் கூடாது. குட் கேர்ளா கண்ணைத் துடைச்சுக்கோங்க...” எனப் பிரபஞ்சன் கூறவும், ஸ்வாதியின் அழுகை நின்றது.
“ஸ்வாதி முதல்ல சின்ன புள்ளையா இருந்தீங்க. ஆனால், இப்போ ரொம்ப பிக் பிக் கேர்ளா மாறிட்டீங்க. இனிமே நோ அழுகை. இதுக்கு பிறகுதான் நீங்க ரொம்ப தைரியமா இருக்கணும். நல்லா சாப்பிடணும். வயித்த வலி ஆர் வேற எந்த விதமான பிராப்ளம்னாலும் அம்மாகிட்ட சொல்லிடணும்.
நீங்க நல்லா ஹெல்த்தியா இருக்கணும்...” என மேலும் சில நிமிடங்கள் பேசி ஒருவாறு சிறுமியின் அழுகையை நிறுத்தியிருந்தான்.
(கீழே படிக்கவும் தொடர்ந்து)