- Messages
- 997
- Reaction score
- 2,810
- Points
- 93
நெஞ்சம் – 11
அன்று பெண் பார்த்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்த மகனின் முகத்தையே ஆர்வமாகப் பார்த்திருந்தார் சாரதா. அவரருகில் அமர்ந்து நிதானமாகப் பேசி தனக்கும் அந்தப் பெண்ணிற்கும் ஒத்துவராது என்பதை பிரபஞ்சன் விளக்கவும், சாரதா பெரிதாய் வருத்தம் கொள்ளவில்லை. அவரைப் பொறுத்தவரை வாழப் போவது அவர்கள் இருவர்தான். மனமொத்து இருந்தால்தான் திருமண வாழ்க்கை சிறக்கும். அப்படியில்லாதப்பட்சத்தில், வாழ்க்கை கசந்து போகுமே.
எனவே எந்த வித மனசஞ்சலங்கள் இன்றியும் மகனின் விருப்பத்தை ஏற்றுக்கொண்ட தாயை இறுக அணைத்து விடுவித்தவனுக்கு, மனதில் பெரியதொரு நிம்மதி பிறந்தது.
அடுத்தடுத்து நாட்கள் எப்போதும் போல நகர்ந்துகொண்டிருக்க, பிரபஞ்சனுக்குக் கொஞ்ம் குழப்பமும் இதுவரை உணராத உணர்வில் சுகமாகவும் நாட்கள் நகர்ந்தது. என்ன முயன்றும் உமையாளைக் காணும்போது பிரகாசிக்கும் முகத்தையும் துள்ளும் மனதையும் அடக்க வழியில்லாது போனது.
‘டீனேஜ் பையன் போல பிகேவ் பண்ற டா’ தனக்குத் தானே திட்டிக்கொண்டான் ஆடவன். அவனுக்குத்தான் அவள் மீதான விருப்பம் அழுத்தமாய் வேரூன்றி போனது.
உமையாள் எப்போதும் போல்தான் இருந்தாள். என்ன இவனைக் காணும்போது அவளறியாமல் உதடுகள் புன்னகையை உதிர்த்தன. முன்பெல்லாம் அவனைக் கண்டால் முதலாளி என்ற மரியாதை பான்மை மட்டும்தான் அவளிடம் தென்படும். அந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்ததிலிருந்து ஏனோ பெயரளவில் என்றில்லாமல் முகமும் அகமும் மலர்ந்து அவனைப் பார்த்துப் புன்னகைத்து நன்றி கூறிய உமையாள் உளமெங்கும் நிறைந்துதான் போனாள். அப்போது மட்டுமல்ல, அடுத்து எங்கே சந்திக்க நேரிடினும் பாவை முகத்தில் புன்னகை பூக்கும்.
அது மட்டுமின்றி ஆடை வடிவமைப்பு பிரிவுக்கு உமையாள் மாறிவிட்டிருந்ததால், அடிக்கடி அவனை சந்திக்க அறைக்குள் நுழைவாள். அவளது ஆடைவடிவமைப்பின் நுணுக்கத்தையும் நேர்த்தியையும் பார்த்து பிரபஞ்சனே வியந்து போனான். அத்தனை அழகாய் ஒவ்வொரு ஆடையும் வடிவமைத்தாள். ஒவ்வொரு முறையும் அவளைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கத் தவறவில்லை பிரபஞ்சன்.
தன் மனதிலிருக்கும் எண்ணத்திற்கு இன்னும் செயல்வடிவம் கொடுக்க முனையவில்லை ஆடவன். முதலில் தனக்குத் தோன்றிய உணர்வு வெறும் ஈர்ப்பா, இல்லை அதையும் தாண்டிய உணர்வா என சுய அலசல் செய்து குழப்பத்தைத் தீர்த்தப் பின்னரே, அவளின் மீதான தன் விருப்பத்தை உரைக்கலாம் என்றிருந்தான். ஏதாவது ஒருவகையில் அவனை ஆச்சரியப்பட வைத்துக்கொண்டிருந்தாள் பாவை.
ஏனோ தன் மனதை தானே நிச்சயம் அறியாதவரை யாரிடமும் தன் எண்ணத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை பிரபஞ்சன். ஒருவேளை இல்லையென்றாகிவிட்டால், அது உமையாளின் பெயரைப் பாதித்துவிடும் எனத் தன் எண்ணத்தைத் தனக்குள்ளே பாதுகாத்தான்.
இருந்தும் அன்றைக்கு யாரிடமாவது பகிர்ந்து கொள்ள மனம் தூண்ட, நெற்றியை அழுந்தத் தேய்த்துவிட்டுக்கொண்டான். கோகுலுக்கும் அவனுக்கும் இடையில் ஒளிவு மறைவு என எதுவுமே இருந்தது இல்லை, உமையாள் விஷயத்தைத் தவிர.
யோசித்தவன், தனது தனிப்பட்ட நாட்குறிப்பேட்டை எடுத்தான். என்றாவது ஒருநாள் மனதிலிலுள்ளதை அதில் எழுதும் பழக்கம் உண்டு ஆடவனிடம். நாட்குறிப்பேட்டை எடுத்துக்கொண்டு ஜன்னலின் அருகே மேஜை போட்டு அமர்ந்தவனின் கரங்கள் திரைச்சீலையை இழுத்துவிட, பளிச்சென்ற நிலவொளி அறையை நிறைத்தது.
மெல்லிய சங்கீதமாய் பூச்சிகளின் ரிங்காரமும் பறவைகளின் சத்தமும் செவியை நிறைக்க, நிலவைப் பார்த்து மனம் ரசித்தது. சில நிமிடங்களில் மழைத்துளிகள் விழ ஆரம்பிக்க, லேசாக சாரல் ஜன்னல் வழி தெறித்தது. உதட்டோரம் புன்னகையுடன் தன் மனதிலிருந்த எண்ணங்களை ஒன்றுவிடாமல் அந்த நாட்குறிப்பேட்டில் எழுதத் துவங்கினான் பிரபஞ்சன். மழை வலுக்கத் துவங்க, ஜன்னலின் வழியே மெல்லிய கூதக்காற்று உடலை சமீபிக்க, காதல் சாரலுடன் மழைச்சாரலும் அவனை சேர்த்து இதமாய்க் குளிர்வித்தது. மனதிலிருந்ததை எழுதி முடித்தப் பிறகு யாரிடமோ தன் எண்ணத்தைப் பகிர்ந்துகொண்ட களிப்பில் மனம் ஓய்வெடுக்கத் துவங்க, கையில் எழுதுகோலை வைத்து சுழற்றிக்கொண்டே தன் எண்ணத்தில் ஆழ்ந்து இருந்தவனை செருமல் குரல் நிகழ்வுக்குக்கொண்டு வந்தது.
“ஹக்கும்... ம்க்கும்...” தொண்டையை வேண்டும் என்றே சத்தமாய் செருமிய கோகுல் நாற்காலியை இழுக்கும் சத்தமும் அதில் அவன் அமர்ந்து கட்டிலில் காலை பொத்தென போடும் சத்தமும் பிரபஞ்சனது செவியை அடைய, திரும்பிப் பார்க்காமலே அவனால் உணர முடிந்தது. உதட்டோரம் புன்னகை வழிந்தது நண்பனது செயலில். கிரணைப் பார்க்கச் சென்ற தினத்திலிருந்து இன்றுவரை இருவருக்கும் இடையில் சரியானப் பேச்சு வார்த்தை இல்லை.
ஆனால், அவர்களுக்கு இடையேயான வேலைகள் எப்போதும்போல நடைபெற்றன. இருவரும் சேர்ந்து அலுவலகம் செல்வதும் வருவதுமாகத்தான் இருந்தனர். கோகுல் வாய் மட்டும் பூட்டுப்போட்டுக்கொண்டது பிரபஞ்சன் அருகில். ஒரே கட்டிலில் தான் எப்போதும் போல உறங்கி எழுந்தனர், ஒன்றாய் உண்டனர். ஆனாலும், இருவருக்கும் இடையே சண்டை ஒருபுறம் அப்படியே இருந்தது.
சாரதா அழைக்கவும் நாட்குறிப்பேட்டை மூடிவைத்துவிட்டு, அறையைவிட்டு வெளியேறினான் பிரபஞ்சன். பத்து நிமிடம் கழித்து அறைக்குள் நுழைந்தான். அவன் மூடி வைத்தப் பக்கம் அழகாக அப்படியே இருந்தது எழுதுகோலும் சேர்த்து. முகம் முழுவதும் புன்னகையில் மிளிர்ந்தது. அவனுக்குத் தெரியுமே, கோகுல் இதை கையால் கூடத் தொட மாட்டான் என்று. தன்னால் சொல்ல முடிந்தால், கண்டிப்பாக அவனிடம்தான் சொல்லி இருப்பேன் என்ற நம்பிக்கை அவனுக்குத் தன்மீது உண்டு என பிரபஞ்சனும் அறிவான். அதனாலே நாட்குறிப்பேட்டை அப்படியே வைத்துவிட்டு சென்றான்.
எதுவும் பேசாதவன் அதை எடுத்துப் பத்திரப்படுத்திவிட்டு,
மெத்தையில் வீழ்ந்தான். சிறிது நேரத்தில் அவனுக்கு அருகே கோகுல் படுக்க, வேண்டுமென்றே வலது காலை தூக்கி நண்பனின் மீது போட்டான்.
“ப்ம்ச்...” என்ற கோகுல் பிரபஞ்சன் காலைத்தட்டி விட, சிரிப்புடன் மீண்டும் அவன் மீது காலைப் போட்டான் பிரபஞ்சன்.
“என்ன டா வேணும்?” முகத்தைக் கோபமாக வைத்து பிரபஞ்சன் புறம் திரும்பிய கோகுல் பல்லைக் கடிக்க, “மச்சீ, கோபமா இருக்கீயா?” நக்கலான சிரிப்புடன் வினவினான்.
“ஆமா டா நாயே!” என்ற கோகுல் மறுபுறம் திரும்ப, “சரி விட்றா. என்கிட்ட என்ன கோபம்?” நண்பனை சமாதானம் செய்ய விழைந்தான்.
தன் தோளில் படர்ந்த கரத்தை தட்டிவிட்ட கோகுல், “எனக்குத் தெரியாம என்ன திருட்டு வேலை பார்குற நீ? அதை சொல்லாம, உன்கூட பேச மாட்டேன்...” குழந்தைப் போல அடம்பிடித்தான்.
“ப்ம்ச்... உன்கிட்ட சொல்லாமலா, சீக்கிரம் சொல்றேன் டா” பிரபஞ்சன் கூறியதும், இருவரும் எழுந்து அமர்ந்திருந்தனர். அன்றைக்குப் பிறகு இருவரும் சமாதானக் கொடியை பறக்கவிட வாய்ப்பு இல்லை. இப்போது இருந்த நல்ல மனநிலையில் பிரபஞ்சன் அந்த நல்லக் காரியத்தை கையிலெடுத்தான்.
“அந்தச் சீக்கிரம் எப்போ?” கோகுலின் உதடு கோணிக் கொண்டன.
“அவங்ககிட்ட சொன்னதுக்குப் பிறகு...” பிரபஞ்சன் கூறியதும், அவனைக் கீழே தள்ளி அவன் வயிற்றில் ஏறி அமர்ந்த கோகுல், “எனக்குத் தெரியும் டா. நீ கெக்க பெக்கன்னு தனியா ரூம்ல சிரிக்கிறது, நிலாவை ரசிக்கிறதுன்னு சீனைப் போடும்போதே நினைச்சேன். என்கிட்ட சொல்லணும்னு உனக்குத் தோணலைல...” என்றவன் கையில் பிரபஞ்சனின் மூடி கொத்தாக மாட்டியிருந்தது.
“ஆ... வேணாம் டா. அது... எனக்கே கன்ப்யூசனா இருந்துச்சு அதான் டா...” பிரபஞ்சன் என்ன கூறியும் கோகுல் சமாதானம் ஆகவில்லை.
“பொண்ணு எந்த ஊரு, எப்படி தெரியும்?”
“நம்ம ஆபிஸ்ல வொர்க் பண்றவங்க தான்...” பிரபஞ்சன் பதிலளித்ததும், “இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னு இருந்துட்டு, எனக்குத் தெரியாம பாரே நடத்திட்டு இருந்துருக்க... யாரு டா அந்த அவங்க...” என்றவன் மூடியை இறுக்கிப் பிடிக்க, பிரபஞ்சன் கத்த ஆரம்பித்தான்.
“டேய்! டேய்... என்ன டா பண்றீங்க? சத்தம் கேட்டு அறைக்குள் நுழைந்த சாரதா பதற, “மம்மி, ஒன்னும் இல்லை. எனக்கும் அவனுக்கும் பழைய கணக்கொன்னு தீர்க்க வேண்டியது இருக்கு. நீ போ, நாங்கப் பார்த்துக்கிறோம்...” என்ற கோகுல், “இல்லை டா?” என நண்பனை பார்த்து வினவினான். அதில் அப்படித்தான் கூறவேண்டும் என்ற தொனி ஒளிந்திருந்தது.
“ஆங்... ஆமா மா...” என்று பிரபஞ்சன் ஒப்புக்கொள்ள, “என்னமோ போங்க டா!” தலையில் அடித்துக்கொண்டு நகர்ந்தார் சாரதா.
விட்ட இடத்திலிருந்து கோகுல் கேள்விகளைத் தொடர, பிரபஞ்சன் வாய் பூட்டுப் போட்டுக்கொண்டது. “வாயைத் தொறந்து பதில் சொல்லு டா!” என்று கோபத்தில் பிரபஞ்சன் முடியைப் பிடித்து ஆட்டினான் கோகுல். ஆனால், எதிர்வினை என்னவோ சுழியம்தான்.
‘கார்மெண்ட்ஸ்ல குறைஞ்சது 500 கேர்ள்ஸ். அதுல கல்யாணம் ஆனவங்க ஒரு 350 பேர்னு ஒதுக்கிட்டா கூட, 150 பொண்ணுங்க மிச்சம் இருக்காங்களே. எப்படி கண்டு பிடிக்கிறது. இவனை டீப்பா வாட்ச் பண்ணணும் இனிமே!’ கோகுல் மனதில் நினைக்க, பிரபஞ்சன் அவனைப் பார்த்து புன்னகைத்தான். முகமெல்லாம் சிவந்து தனக்கு கீழே தன்னைத் தாங்கி படுத்திருந்த பிரபஞ்சன் மீதிருந்து போனால் போகிறது என்று எழுந்தான் கோகுல். இன்னும் கோகுல் முகத்தில் அந்த முறைப்பு அப்படியேதானிருந்தது.
அன்று பெண் பார்த்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்த மகனின் முகத்தையே ஆர்வமாகப் பார்த்திருந்தார் சாரதா. அவரருகில் அமர்ந்து நிதானமாகப் பேசி தனக்கும் அந்தப் பெண்ணிற்கும் ஒத்துவராது என்பதை பிரபஞ்சன் விளக்கவும், சாரதா பெரிதாய் வருத்தம் கொள்ளவில்லை. அவரைப் பொறுத்தவரை வாழப் போவது அவர்கள் இருவர்தான். மனமொத்து இருந்தால்தான் திருமண வாழ்க்கை சிறக்கும். அப்படியில்லாதப்பட்சத்தில், வாழ்க்கை கசந்து போகுமே.
எனவே எந்த வித மனசஞ்சலங்கள் இன்றியும் மகனின் விருப்பத்தை ஏற்றுக்கொண்ட தாயை இறுக அணைத்து விடுவித்தவனுக்கு, மனதில் பெரியதொரு நிம்மதி பிறந்தது.
அடுத்தடுத்து நாட்கள் எப்போதும் போல நகர்ந்துகொண்டிருக்க, பிரபஞ்சனுக்குக் கொஞ்ம் குழப்பமும் இதுவரை உணராத உணர்வில் சுகமாகவும் நாட்கள் நகர்ந்தது. என்ன முயன்றும் உமையாளைக் காணும்போது பிரகாசிக்கும் முகத்தையும் துள்ளும் மனதையும் அடக்க வழியில்லாது போனது.
‘டீனேஜ் பையன் போல பிகேவ் பண்ற டா’ தனக்குத் தானே திட்டிக்கொண்டான் ஆடவன். அவனுக்குத்தான் அவள் மீதான விருப்பம் அழுத்தமாய் வேரூன்றி போனது.
உமையாள் எப்போதும் போல்தான் இருந்தாள். என்ன இவனைக் காணும்போது அவளறியாமல் உதடுகள் புன்னகையை உதிர்த்தன. முன்பெல்லாம் அவனைக் கண்டால் முதலாளி என்ற மரியாதை பான்மை மட்டும்தான் அவளிடம் தென்படும். அந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்ததிலிருந்து ஏனோ பெயரளவில் என்றில்லாமல் முகமும் அகமும் மலர்ந்து அவனைப் பார்த்துப் புன்னகைத்து நன்றி கூறிய உமையாள் உளமெங்கும் நிறைந்துதான் போனாள். அப்போது மட்டுமல்ல, அடுத்து எங்கே சந்திக்க நேரிடினும் பாவை முகத்தில் புன்னகை பூக்கும்.
அது மட்டுமின்றி ஆடை வடிவமைப்பு பிரிவுக்கு உமையாள் மாறிவிட்டிருந்ததால், அடிக்கடி அவனை சந்திக்க அறைக்குள் நுழைவாள். அவளது ஆடைவடிவமைப்பின் நுணுக்கத்தையும் நேர்த்தியையும் பார்த்து பிரபஞ்சனே வியந்து போனான். அத்தனை அழகாய் ஒவ்வொரு ஆடையும் வடிவமைத்தாள். ஒவ்வொரு முறையும் அவளைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கத் தவறவில்லை பிரபஞ்சன்.
தன் மனதிலிருக்கும் எண்ணத்திற்கு இன்னும் செயல்வடிவம் கொடுக்க முனையவில்லை ஆடவன். முதலில் தனக்குத் தோன்றிய உணர்வு வெறும் ஈர்ப்பா, இல்லை அதையும் தாண்டிய உணர்வா என சுய அலசல் செய்து குழப்பத்தைத் தீர்த்தப் பின்னரே, அவளின் மீதான தன் விருப்பத்தை உரைக்கலாம் என்றிருந்தான். ஏதாவது ஒருவகையில் அவனை ஆச்சரியப்பட வைத்துக்கொண்டிருந்தாள் பாவை.
ஏனோ தன் மனதை தானே நிச்சயம் அறியாதவரை யாரிடமும் தன் எண்ணத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை பிரபஞ்சன். ஒருவேளை இல்லையென்றாகிவிட்டால், அது உமையாளின் பெயரைப் பாதித்துவிடும் எனத் தன் எண்ணத்தைத் தனக்குள்ளே பாதுகாத்தான்.
இருந்தும் அன்றைக்கு யாரிடமாவது பகிர்ந்து கொள்ள மனம் தூண்ட, நெற்றியை அழுந்தத் தேய்த்துவிட்டுக்கொண்டான். கோகுலுக்கும் அவனுக்கும் இடையில் ஒளிவு மறைவு என எதுவுமே இருந்தது இல்லை, உமையாள் விஷயத்தைத் தவிர.
யோசித்தவன், தனது தனிப்பட்ட நாட்குறிப்பேட்டை எடுத்தான். என்றாவது ஒருநாள் மனதிலிலுள்ளதை அதில் எழுதும் பழக்கம் உண்டு ஆடவனிடம். நாட்குறிப்பேட்டை எடுத்துக்கொண்டு ஜன்னலின் அருகே மேஜை போட்டு அமர்ந்தவனின் கரங்கள் திரைச்சீலையை இழுத்துவிட, பளிச்சென்ற நிலவொளி அறையை நிறைத்தது.
மெல்லிய சங்கீதமாய் பூச்சிகளின் ரிங்காரமும் பறவைகளின் சத்தமும் செவியை நிறைக்க, நிலவைப் பார்த்து மனம் ரசித்தது. சில நிமிடங்களில் மழைத்துளிகள் விழ ஆரம்பிக்க, லேசாக சாரல் ஜன்னல் வழி தெறித்தது. உதட்டோரம் புன்னகையுடன் தன் மனதிலிருந்த எண்ணங்களை ஒன்றுவிடாமல் அந்த நாட்குறிப்பேட்டில் எழுதத் துவங்கினான் பிரபஞ்சன். மழை வலுக்கத் துவங்க, ஜன்னலின் வழியே மெல்லிய கூதக்காற்று உடலை சமீபிக்க, காதல் சாரலுடன் மழைச்சாரலும் அவனை சேர்த்து இதமாய்க் குளிர்வித்தது. மனதிலிருந்ததை எழுதி முடித்தப் பிறகு யாரிடமோ தன் எண்ணத்தைப் பகிர்ந்துகொண்ட களிப்பில் மனம் ஓய்வெடுக்கத் துவங்க, கையில் எழுதுகோலை வைத்து சுழற்றிக்கொண்டே தன் எண்ணத்தில் ஆழ்ந்து இருந்தவனை செருமல் குரல் நிகழ்வுக்குக்கொண்டு வந்தது.
“ஹக்கும்... ம்க்கும்...” தொண்டையை வேண்டும் என்றே சத்தமாய் செருமிய கோகுல் நாற்காலியை இழுக்கும் சத்தமும் அதில் அவன் அமர்ந்து கட்டிலில் காலை பொத்தென போடும் சத்தமும் பிரபஞ்சனது செவியை அடைய, திரும்பிப் பார்க்காமலே அவனால் உணர முடிந்தது. உதட்டோரம் புன்னகை வழிந்தது நண்பனது செயலில். கிரணைப் பார்க்கச் சென்ற தினத்திலிருந்து இன்றுவரை இருவருக்கும் இடையில் சரியானப் பேச்சு வார்த்தை இல்லை.
ஆனால், அவர்களுக்கு இடையேயான வேலைகள் எப்போதும்போல நடைபெற்றன. இருவரும் சேர்ந்து அலுவலகம் செல்வதும் வருவதுமாகத்தான் இருந்தனர். கோகுல் வாய் மட்டும் பூட்டுப்போட்டுக்கொண்டது பிரபஞ்சன் அருகில். ஒரே கட்டிலில் தான் எப்போதும் போல உறங்கி எழுந்தனர், ஒன்றாய் உண்டனர். ஆனாலும், இருவருக்கும் இடையே சண்டை ஒருபுறம் அப்படியே இருந்தது.
சாரதா அழைக்கவும் நாட்குறிப்பேட்டை மூடிவைத்துவிட்டு, அறையைவிட்டு வெளியேறினான் பிரபஞ்சன். பத்து நிமிடம் கழித்து அறைக்குள் நுழைந்தான். அவன் மூடி வைத்தப் பக்கம் அழகாக அப்படியே இருந்தது எழுதுகோலும் சேர்த்து. முகம் முழுவதும் புன்னகையில் மிளிர்ந்தது. அவனுக்குத் தெரியுமே, கோகுல் இதை கையால் கூடத் தொட மாட்டான் என்று. தன்னால் சொல்ல முடிந்தால், கண்டிப்பாக அவனிடம்தான் சொல்லி இருப்பேன் என்ற நம்பிக்கை அவனுக்குத் தன்மீது உண்டு என பிரபஞ்சனும் அறிவான். அதனாலே நாட்குறிப்பேட்டை அப்படியே வைத்துவிட்டு சென்றான்.
எதுவும் பேசாதவன் அதை எடுத்துப் பத்திரப்படுத்திவிட்டு,
மெத்தையில் வீழ்ந்தான். சிறிது நேரத்தில் அவனுக்கு அருகே கோகுல் படுக்க, வேண்டுமென்றே வலது காலை தூக்கி நண்பனின் மீது போட்டான்.
“ப்ம்ச்...” என்ற கோகுல் பிரபஞ்சன் காலைத்தட்டி விட, சிரிப்புடன் மீண்டும் அவன் மீது காலைப் போட்டான் பிரபஞ்சன்.
“என்ன டா வேணும்?” முகத்தைக் கோபமாக வைத்து பிரபஞ்சன் புறம் திரும்பிய கோகுல் பல்லைக் கடிக்க, “மச்சீ, கோபமா இருக்கீயா?” நக்கலான சிரிப்புடன் வினவினான்.
“ஆமா டா நாயே!” என்ற கோகுல் மறுபுறம் திரும்ப, “சரி விட்றா. என்கிட்ட என்ன கோபம்?” நண்பனை சமாதானம் செய்ய விழைந்தான்.
தன் தோளில் படர்ந்த கரத்தை தட்டிவிட்ட கோகுல், “எனக்குத் தெரியாம என்ன திருட்டு வேலை பார்குற நீ? அதை சொல்லாம, உன்கூட பேச மாட்டேன்...” குழந்தைப் போல அடம்பிடித்தான்.
“ப்ம்ச்... உன்கிட்ட சொல்லாமலா, சீக்கிரம் சொல்றேன் டா” பிரபஞ்சன் கூறியதும், இருவரும் எழுந்து அமர்ந்திருந்தனர். அன்றைக்குப் பிறகு இருவரும் சமாதானக் கொடியை பறக்கவிட வாய்ப்பு இல்லை. இப்போது இருந்த நல்ல மனநிலையில் பிரபஞ்சன் அந்த நல்லக் காரியத்தை கையிலெடுத்தான்.
“அந்தச் சீக்கிரம் எப்போ?” கோகுலின் உதடு கோணிக் கொண்டன.
“அவங்ககிட்ட சொன்னதுக்குப் பிறகு...” பிரபஞ்சன் கூறியதும், அவனைக் கீழே தள்ளி அவன் வயிற்றில் ஏறி அமர்ந்த கோகுல், “எனக்குத் தெரியும் டா. நீ கெக்க பெக்கன்னு தனியா ரூம்ல சிரிக்கிறது, நிலாவை ரசிக்கிறதுன்னு சீனைப் போடும்போதே நினைச்சேன். என்கிட்ட சொல்லணும்னு உனக்குத் தோணலைல...” என்றவன் கையில் பிரபஞ்சனின் மூடி கொத்தாக மாட்டியிருந்தது.
“ஆ... வேணாம் டா. அது... எனக்கே கன்ப்யூசனா இருந்துச்சு அதான் டா...” பிரபஞ்சன் என்ன கூறியும் கோகுல் சமாதானம் ஆகவில்லை.
“பொண்ணு எந்த ஊரு, எப்படி தெரியும்?”
“நம்ம ஆபிஸ்ல வொர்க் பண்றவங்க தான்...” பிரபஞ்சன் பதிலளித்ததும், “இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னு இருந்துட்டு, எனக்குத் தெரியாம பாரே நடத்திட்டு இருந்துருக்க... யாரு டா அந்த அவங்க...” என்றவன் மூடியை இறுக்கிப் பிடிக்க, பிரபஞ்சன் கத்த ஆரம்பித்தான்.
“டேய்! டேய்... என்ன டா பண்றீங்க? சத்தம் கேட்டு அறைக்குள் நுழைந்த சாரதா பதற, “மம்மி, ஒன்னும் இல்லை. எனக்கும் அவனுக்கும் பழைய கணக்கொன்னு தீர்க்க வேண்டியது இருக்கு. நீ போ, நாங்கப் பார்த்துக்கிறோம்...” என்ற கோகுல், “இல்லை டா?” என நண்பனை பார்த்து வினவினான். அதில் அப்படித்தான் கூறவேண்டும் என்ற தொனி ஒளிந்திருந்தது.
“ஆங்... ஆமா மா...” என்று பிரபஞ்சன் ஒப்புக்கொள்ள, “என்னமோ போங்க டா!” தலையில் அடித்துக்கொண்டு நகர்ந்தார் சாரதா.
விட்ட இடத்திலிருந்து கோகுல் கேள்விகளைத் தொடர, பிரபஞ்சன் வாய் பூட்டுப் போட்டுக்கொண்டது. “வாயைத் தொறந்து பதில் சொல்லு டா!” என்று கோபத்தில் பிரபஞ்சன் முடியைப் பிடித்து ஆட்டினான் கோகுல். ஆனால், எதிர்வினை என்னவோ சுழியம்தான்.
‘கார்மெண்ட்ஸ்ல குறைஞ்சது 500 கேர்ள்ஸ். அதுல கல்யாணம் ஆனவங்க ஒரு 350 பேர்னு ஒதுக்கிட்டா கூட, 150 பொண்ணுங்க மிச்சம் இருக்காங்களே. எப்படி கண்டு பிடிக்கிறது. இவனை டீப்பா வாட்ச் பண்ணணும் இனிமே!’ கோகுல் மனதில் நினைக்க, பிரபஞ்சன் அவனைப் பார்த்து புன்னகைத்தான். முகமெல்லாம் சிவந்து தனக்கு கீழே தன்னைத் தாங்கி படுத்திருந்த பிரபஞ்சன் மீதிருந்து போனால் போகிறது என்று எழுந்தான் கோகுல். இன்னும் கோகுல் முகத்தில் அந்த முறைப்பு அப்படியேதானிருந்தது.