- Messages
- 997
- Reaction score
- 2,810
- Points
- 93
நெஞ்சம் – 10
மேலும் இரண்டு நாட்கள் அமைதியாகக் கழிந்திருக்க, அன்றைக்கு ஆடைத் தயாரிப்பகத்தில் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தான் பிரபஞ்சன். பெண்கள் அனைவரும் அந்தச் சந்திப்பிற்காக ஓரிடத்தில் கூடியிருக்க, பிரபஞ்சன், கோகுல், சாரதா மற்றும் அவர்களுடன் மேடை பேச்சாளரும் பெண்களுக்கு விழிப்புணர்வு கூட்டங்களை நடத்துபவருமான திருமதி கல்யாணியும், பிரபல வழக்கறிஞர் ஒருவரும் நின்றிருந்தார்.
அனைவரும் ஓரிடத்தில் குழுமியதும், சாரதாதான் முதலில் தன் பேச்சைத் துவங்கினார். “உங்க எல்லாரையும் நிறைய நாள் கழிச்சு ஒன்னா சந்திச்சதுல சந்தோஷம். இப்படியொரு மீட்டிங் போடணும்னு ரொம்ப நாள் நினைச்சுட்டே இருந்து, இப்போதான் அதுக்கான நேரமும் காலமும் கூடி வந்திருக்கு...” என்றவர் புன்னகைத்தார்.
“இந்த திடீர் மீட்டிங்கான காரணம் என்னவா இருக்கும்னு எல்லாருக்கும் மனசுல எண்ணம் இருக்கும். நானே அதை சொல்றேன், உங்களுக்கு பாலியல் சீண்டல்கள் மற்றும் சுரண்டல்கள், உழைப்பு சுரண்டல்கள், குடும்ப வன்முறைகள், வரதட்சணை கொடுமைன்னு இன்னும் பெண்களுக்கு எதிராத நடக்குற வன்முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தணும்ன்ற நோக்கத்துக்காகத்தான் இந்த மீட்டிங்கே.
நம்ம ஆஃபிஸ்ல புகார் பெட்டின்னு ஒவ்வொரு செக்ஷன்லயும் வச்சிருக்கோம். அது எதுக்குன்னு உங்க எல்லாருக்கும் தெரியுமா? உங்களோட நிறை குறையை அதுல பகிர்ந்துக்கத்தான். அதுமட்டும் இல்லை, உங்களுக்கு கார்மெண்ட்ஸ்ல என்ன பிரச்சனைனாலும், அதாவது உங்களோட மேற்பார்வையாளர், சூப்பீரியர் ஆபிசர் யாரும் உங்க கிட்ட தவறா நடந்துகிட்டாலோ, இல்லை தகாத முறையில பேசுனாலோ, கூட அதுல நீங்க சொல்லாம். எத்தனை பேருக்கு இது தெரியும்னு எனக்குத் தெரியலை .
உங்களுக்கு ஒரு அநியாயம் நடக்குது, பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகுறீங்கன்னா, எத்தனை பேர் உங்கள்ல அதை வெளிய சொல்றீங்க. நூத்துல பத்து சதவீதம் பேர் கூட சொல்றது இல்லை. ஏன்? தப்பு செஞ்சவனே தைரியமா சுத்தும் போது, நீங்க ஏன் பயப்படணும். உங்க மேல அந்த இடத்துல எந்த தப்பும் இல்லைன்னு நீங்க முதல்ல உணரணும்...”
“மேடம், வெளியே சொன்னா, வேலையைவிட்டு அனுப்பிடுவேன்னு மிரட்டுறாங்க. இந்த வேலையை நம்பித்தான் எங்க பொழைப்பே ஓடுது. எங்களை என்ன பண்ண சொல்றீங்க மேடம்?” ஒரு பெண் கேள்வி எழுப்பினாள்.
“மிரட்டுனா ஏன்மா நீங்க பயப்பட்றீங்க. உங்களுக்கு மேல இருக்க ஆபிசர்ஸ் வேலை சம்பந்தமா சொல்றதை மட்டும் நீங்க கேட்டா போதும். இது மாதிரி விஷயத்துக்கு எல்லாம் பயந்து அடிபணியணும்னு அவசியம் இல்லை. அவங்க உங்களுக்கு முதலாளி இல்லையே! அவங்க சொல்லி எந்தக் கேள்வியும் கேட்காம, மேனேஜ்மென்ட் உங்களை வேலையை விட்டுத் தூக்கப் போறது இல்லையே மா. இனிமே உங்களுக்கு எது நடந்தாலும், தைரியமா அதை என் மகன்கள் கிட்டே சொல்லுங்க. அப்படி நேரடியா சொல்ல தயக்கமா இருந்தா, புகார் பெட்டியில லெட்டர் எழுதிப் போடுங்க. எந்த இடத்துலயும் நீங்க இந்த மாதிரி விஷயத்துக்கு பணிஞ்சுப் போகவே கூடாது...” சாரதா பதிலளிக்க, அவரது துணிச்சலான தெளிவானப் பேச்சை கவனித்துக்கொண்டிருந்த உமையாளின் பார்வை அவ்வப்போது பிரபஞ்சனையும் தொட்டு மீழ, ஏனோ அவன் மீதான மதிப்பு பன்மடங்கு கூடிப்போனது.
“மேடம், என்னதான் வெளிய சொல்லுன்னு நீங்க சொன்னாலும், கடைசியில எங்கப் பேர்தான் கெட்டுப் போகுது. வீட்ல இது தெரிஞ்சா, வேலைக்கே அனுப்ப மாட்டாங்க...” மற்றொரு பெண் குரலெழுப்ப,
“பொம்பளை தலை குனிஞ்சுதான் போகணும். அதிர்ந்து பேசக் கூடாது, அதை செய்யக் கூடாது, இதை செய்யக் கூடாதுன்னு அந்தக் காலத்துல இருந்து பெண்ணுன்னா, இப்படித்தான் இருக்கணும்னு அப்படித்தான் இருக்கணும்னு ஒரு செட் ஆஃப் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷனோட தான் பொம்பளைப் புள்ளைங்களைப் பெத்தே போட்றாங்க. பொண்ணுன்னா செலவு – இதுதான் பெரும்பான்மையானவர்களோட கருத்து. அப்படிப்பட்ட சமூகத்துல நாம வாழ்ந்துட்டு இருக்கோம்.
காலம்காலமா சொல்ற மாதிரி
நீங்க குனிஞ்ச தலை நிமிராம நடந்தால் மட்டும் உங்களை பார்க்குற வக்கிரப்புத்திகாரங்க குறைவாங்களா? இல்லை உங்க மேல தப்பு இல்லைன்னு இந்த உலகம் ஒத்துக்குமா என்ன? இல்லையே! அப்படி இருக்கும்போது சுத்தி இருக்கவங்க என்ன நினைக்கிறாங்கன்னு நினைச்சு நினைச்சே, பேச வேண்டிய இடத்துல, எதிர்த்து நின்னு போராட வேண்டிய இடத்துல அமைதியா இருக்கீங்க. நீங்க அடங்கிப் போக போகத்தான் எதிர்ல இருக்கவங்களோட ஆட்டம் அதிகமா இருக்கும்.
இன்னைக்கு எல்லா துறையிலயும் பெண்கள் சாதிச்சாலும், இன்னும் இந்த மாதிரி செக்சுவல் அப்யூஸ்ன்ற பேர்ல அவங்களை டம்ப் பண்ணிட்டுதான் இருக்காங்க. அதுக்காக எல்லாம் வேலையைவிட்டு விலகிப் போகணும்னு என்ன அவசியம்.
முதல்ல உங்களுக்கு நடந்த அநியாயத்தை வெளிய சொல்ல பயப்படாதீங்க. உங்களோட பயம், பலவீனம்தான் எதிர்ல இருக்கவனோட பலம்.
நீங்க ஒரு தடவை வெளிய சொல்லி அசிங்கப்படுத்துனா, அடுத்த டைம் அந்தத் தப்பை பண்ண அவன் யோசிப்பான்...” மேடைப் பேச்சாளர் கல்யாணிதான் எழுந்து பேசத் துவங்கினார். ஆங்காங்கே பல பல ஆதங்கமான கேள்விகளும் குரல்களும் கேட்ட வண்ணமிருந்தன. அவர் பேசி முடித்ததும், வழக்கறிஞர் முன்னே வந்து அனைவருக்கும் இந்தியலமைப்புச் சட்டத்தைப் பற்றியும் பெண்கள் பாதுகாப்பில் அரசியலமை எந்த வகையில் பங்கெடுத்து உள்ளது என பேசினார். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை சகித்து வாழ வேண்டிய அவசியம் இல்லை என அனைவரின் மனதிலும் பதிய வைத்தார்.
அமைதியாக அமர்ந்திருந்த உமையாளுக்கும் தன் மனதிலிருந்த ஆதங்கத்தைப் பேச வேண்டும் போலிருந்தது. ஆனால், இதுபோல எல்லாம் அவளுக்கு வாய்ப்பு கிடைத்தது இல்லை. அவள் வாழ்ந்த சூழ்நிலை முற்றிலும் வேறு. ஆனால், மனதிலிருந்த ஆதங்கத்தை எல்லாம் வார்த்தையாய் கொட்டிவிட வேண்டும் என உந்துதல் முகத்தில் பிரதிபலித்தது.
அவளை இத்தனை நேரம் அவதானித்துக்கொண்டிருந்த பிரபஞ்சனுக்குப் புரிந்தது. உமையாளின் முகத்தைப் பார்த்து அகத்தைக் கணித்தவனின் மனது கொஞ்சம் அவளை மெச்சிக்கொண்டது. எழுந்து சென்று தாயின் காதில் எதையோ கூறினான்.
வழக்கறிஞர் தன் உரையை முடித்ததும், “உங்களுக்கு இதைப் பத்தி எதாவது சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேட்கலாம். அப்புறம் வேற யாரும் மேல வந்து பேசணும்னு விருப்பப்பட்டால், தாரளமா பேசலாம். மாற்றம் உங்களில் இருந்து வந்தா, உங்ககிட்டே இருந்து ஒரு குரல் ஒலிச்சா, அதுதான் நம்மளோட முதல் வெற்றி...” என்றவர் உமையாளைப் பார்க்க, ஆயிரம் தயக்கம் அவளிடம். தலையைக் குனிந்துகொண்டாள்.
பேச வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், முதல் முறை மேடையேறி எப்படி பேச என உள்ளுக்குள்ளே லேசாக நடுக்கமும் பிறந்தது. இதுவே மதுரையாக இருந்திருந்தால், இது போலொரு கூட்டத்திற்கு எல்லாம் அவளது தாய் அனுமதித்து இருக்கவே மாட்டார். வீட்டிலிருக்கும்போது இப்படியொரு எண்ணம் அவளிடமிருந்தது எனத் தெரிந்தால், கொலை குத்தம் செய்தததைப் போலத்தான் எல்லோரும் அவளை நடத்துவார்கள்.
ஆனால், இப்போது அவர்கள் யாருமன்றி தனியான தனக்கான சுதந்திரமான உலகத்தில் இருக்கிறாளே! இத்தனை நாட்கள் உலகத்தை சந்தித்த அனுபவங்களும், இந்த சில நாட்கள் இங்கு தனியாய் வாழ்த்தில் கிடைத்த துணிச்சலும் அவளை பேச உந்தியது. காலம் காலமாக பின்பற்றி வரும் மூட நம்பிக்கைகளால், தன்னைப் போல எத்தனை பெண்கள் வாழ்க்கையையே தொலைத்து நிற்கின்றனர். இன்னொரு உமையாள் வேண்டாம் என மனது உரைத்தது. ஒன்று அல்ல, ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான உமையாள்கள் இந்த உலகத்தில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளியே சொல்லாது மனதில் வைத்து அழுத்திக்கொண்டுதான் இருக்கின்றனர்.
தாமதமாகவே என்றாலும், தனக்கான சுதந்திரத்தை, தன் பிடிக்காத வாழ்க்கையிலிருந்து வெளியேறியிருந்தாள் உமையாள். தன்னைப் போல சம உரிமை அளித்திடாத, பாலின வேறுபாட்டில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் துணிச்சலாக அந்த உறவிலிருந்து வெளிவர ஊக்க வேண்டும். தானும் அவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாய் இருக்க வேண்டும் என ஆழ்மனது ஆர்ப்பாட்டமில்லாது கத்தியது.
தயக்கமாய் அமர்ந்திருந்த உமையாளைப் பார்த்த சாரதாவிடம் அந்தத் தயக்கம் இல்லை போல. “உமையாள், வந்து பேசு மா...” என்று அழைக்க, அவள் அசையவில்லை. மனதில் நிறைய இருந்தது பேச. ஆனாலும்
தயங்கி நின்றவளின் விழிகள் பிரபஞ்சனை சந்திக்க, அவன் விழிகளைத் திறந்து மூடினான்.
‘வா...’ என்பது போல ஆடவன் தலை அசைய, மெதுவாக மேலேறி வந்தவளுக்கு, அத்தனை பேரையும் ஒன்றாய் பார்த்ததில் பயம் வந்து ஒட்டிக்கொண்டது. லேசாக நெற்றியில் வியர்வை பூக்கள் பூத்தன.
“தண்ணீயைக் குடிச்சுட்டு பேசுங்க. ஜஸ்ட் ரிலாக்ஸ் கேர்ள், தே ஆர் யுவர் கொலிக்ஸ் ஒன்லி...” உமையாளுக்குச் சற்று தொலைவில் அமர்ந்திருந்த பிரபஞ்சன் எழுந்து வந்து அவளிடம் தண்ணீரைக் கொடுத்து, அவளை இயல்பாக்க முயன்றான். அதை வாங்கிப் பருகியவள், தன்னை சமன் செய்துகொண்டாள்.
“பொறந்ததுல இருந்தே ஒடுக்குமுறைக்கு உள்ளான சமூகம் பெண்கள் மட்டும்தான். ஆண்கள் இல்லையான்னு கேட்காதீங்க, நம்மளை ஒடுக்குறதே இந்த ஆணாதிக்க சமூகம்தான். குடும்ப வன்முறை, வேலை பார்க்குற இடத்துல பாலியல் சுரண்டல், சம்பளத்துல ஏற்றத்தாழ்வு, பெண்கள் உயர் பதவியில இருக்கக் கூடாது, அதையும் மீறி அவ இருந்துட்டா, அவளோட நடத்தையைத் தப்பா பேசுறது, பாலியல் அத்துமீறல்கள், சுரண்டல்கள்னு தினம் தினம் ஒவ்வொரு பொண்ணும் இதுமாதிரி ஏதாவது ஒன்னை சந்திச்சுட்டுதான் இருக்கா. காரணம் பெண்ன்ற பாலினத்துல பிறந்துட்டதால!
குடும்ப வன்முறைதான் இதுல ரொம்ப கொடுமை. தான் ஒருவகையா உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாகுறோம்னு தெரியாம எத்தனை பெண்கள் வாழ்க்கை முழுசும் வீடு மட்டுமே உலகம்னு இருக்காங்க? காலையில எழுந்ததுல இருந்து நைட்டு தூங்கப் போற வரைக்கும் வேலை செய்யணும் சம்பளம் இல்லாத வேலைக்காரியா. மொத்தக் குடும்பமும் நம்ம உழைப்பை அட்டை மாதிரி உறிஞ்சு எடுத்துக்குவாங்க.
உழைப்பு மட்டும் இல்லை, சுதந்திரத்தையும் மொத்தமா பறிச்சு எடுத்துக்குவாங்க.
உண்மையிலே ஆண்களுக்கு மனைவின்றவ தன்னோட உடைமை, ஒரு பொருள் மாதிரி. அதாவது அவ எப்பவுமே சுயமா ஒரு முடிவெடுக்கத் தகுதி இல்லாம, கணவனோட கட்டுப்பாட்டிலே கடைசி வரைக்கும் இருக்கணும். அவளுக்குன்னு சுயஅறிவு, சுயசிந்தனை இருக்கக் கூடாது. ஏன் சமமான மரியாதைக் கூட கொடுக்கக் கூடாது. ஒன்னும் தெரியாத மனைவியைப் பாதுகாத்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தன்னோடதுன்ற மாதிரி ஆதிகால சிந்தனையில்தான் இந்த சமூகம் இயங்கிட்டு இருக்கு.
சரி, கொஞ்சநாள் காலப் போக்குல பெண்கள் போராடி வேலைக்கு வெளியப் போக ஆரம்பிச்சாங்க. பினான்சியல் இன்டிபென்டன்சி கிடைச்சுச்சுன்னு சந்தோஷப்பட முடியாத ஒரு வகையான சிறைப்பட்ட சுதந்திரம் அது. வேலைக்குப் போய் சம்பாரிச்சு நம்ம செலவு செஞ்சா, அது வேலைக்குப் போறோம்ன்ற திமிர்ல பண்றதுன்னு பேச்சு வரும். அதைவிட கொடுமை, வெளியேயும் வேலை பார்த்துட்டு வீட்லயும் எல்லா வேலையும் நம்ம தான் பார்க்கணும். அப்படி பார்க்கலைன்னா, வீட்டுக்கு அடங்காம, என்ன வேலைக்குப் போறான்னு கேள்வி வரும்.
இப்படி எது தொட்டாலும் குத்தம், குறைன்னு பதில் சொல்லிக் சொல்லியே ஓஞ்சுப் போறவங்க நம்ம மட்டும்தான். எல்லா இடத்திலும் நம்மளோட குரலை உயர்த்தி, அடிப்படை உரிமையையே போராடி வாங்க வேண்டிய சூழ்நிலைதான் இந்த சமூகம் இருக்கே தவிர, இங்க பெண் என்பவள் வெறும் வீட்டைப் பார்த்துக்க, குழந்தையை வளர்க்க இருக்க சம்பளம் இல்லா வேலைக்காரின்ற நினைப்பு மாறவே இல்லை.
(தொடர்ந்து கீழே படிக்க)
மேலும் இரண்டு நாட்கள் அமைதியாகக் கழிந்திருக்க, அன்றைக்கு ஆடைத் தயாரிப்பகத்தில் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தான் பிரபஞ்சன். பெண்கள் அனைவரும் அந்தச் சந்திப்பிற்காக ஓரிடத்தில் கூடியிருக்க, பிரபஞ்சன், கோகுல், சாரதா மற்றும் அவர்களுடன் மேடை பேச்சாளரும் பெண்களுக்கு விழிப்புணர்வு கூட்டங்களை நடத்துபவருமான திருமதி கல்யாணியும், பிரபல வழக்கறிஞர் ஒருவரும் நின்றிருந்தார்.
அனைவரும் ஓரிடத்தில் குழுமியதும், சாரதாதான் முதலில் தன் பேச்சைத் துவங்கினார். “உங்க எல்லாரையும் நிறைய நாள் கழிச்சு ஒன்னா சந்திச்சதுல சந்தோஷம். இப்படியொரு மீட்டிங் போடணும்னு ரொம்ப நாள் நினைச்சுட்டே இருந்து, இப்போதான் அதுக்கான நேரமும் காலமும் கூடி வந்திருக்கு...” என்றவர் புன்னகைத்தார்.
“இந்த திடீர் மீட்டிங்கான காரணம் என்னவா இருக்கும்னு எல்லாருக்கும் மனசுல எண்ணம் இருக்கும். நானே அதை சொல்றேன், உங்களுக்கு பாலியல் சீண்டல்கள் மற்றும் சுரண்டல்கள், உழைப்பு சுரண்டல்கள், குடும்ப வன்முறைகள், வரதட்சணை கொடுமைன்னு இன்னும் பெண்களுக்கு எதிராத நடக்குற வன்முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தணும்ன்ற நோக்கத்துக்காகத்தான் இந்த மீட்டிங்கே.
நம்ம ஆஃபிஸ்ல புகார் பெட்டின்னு ஒவ்வொரு செக்ஷன்லயும் வச்சிருக்கோம். அது எதுக்குன்னு உங்க எல்லாருக்கும் தெரியுமா? உங்களோட நிறை குறையை அதுல பகிர்ந்துக்கத்தான். அதுமட்டும் இல்லை, உங்களுக்கு கார்மெண்ட்ஸ்ல என்ன பிரச்சனைனாலும், அதாவது உங்களோட மேற்பார்வையாளர், சூப்பீரியர் ஆபிசர் யாரும் உங்க கிட்ட தவறா நடந்துகிட்டாலோ, இல்லை தகாத முறையில பேசுனாலோ, கூட அதுல நீங்க சொல்லாம். எத்தனை பேருக்கு இது தெரியும்னு எனக்குத் தெரியலை .
உங்களுக்கு ஒரு அநியாயம் நடக்குது, பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகுறீங்கன்னா, எத்தனை பேர் உங்கள்ல அதை வெளிய சொல்றீங்க. நூத்துல பத்து சதவீதம் பேர் கூட சொல்றது இல்லை. ஏன்? தப்பு செஞ்சவனே தைரியமா சுத்தும் போது, நீங்க ஏன் பயப்படணும். உங்க மேல அந்த இடத்துல எந்த தப்பும் இல்லைன்னு நீங்க முதல்ல உணரணும்...”
“மேடம், வெளியே சொன்னா, வேலையைவிட்டு அனுப்பிடுவேன்னு மிரட்டுறாங்க. இந்த வேலையை நம்பித்தான் எங்க பொழைப்பே ஓடுது. எங்களை என்ன பண்ண சொல்றீங்க மேடம்?” ஒரு பெண் கேள்வி எழுப்பினாள்.
“மிரட்டுனா ஏன்மா நீங்க பயப்பட்றீங்க. உங்களுக்கு மேல இருக்க ஆபிசர்ஸ் வேலை சம்பந்தமா சொல்றதை மட்டும் நீங்க கேட்டா போதும். இது மாதிரி விஷயத்துக்கு எல்லாம் பயந்து அடிபணியணும்னு அவசியம் இல்லை. அவங்க உங்களுக்கு முதலாளி இல்லையே! அவங்க சொல்லி எந்தக் கேள்வியும் கேட்காம, மேனேஜ்மென்ட் உங்களை வேலையை விட்டுத் தூக்கப் போறது இல்லையே மா. இனிமே உங்களுக்கு எது நடந்தாலும், தைரியமா அதை என் மகன்கள் கிட்டே சொல்லுங்க. அப்படி நேரடியா சொல்ல தயக்கமா இருந்தா, புகார் பெட்டியில லெட்டர் எழுதிப் போடுங்க. எந்த இடத்துலயும் நீங்க இந்த மாதிரி விஷயத்துக்கு பணிஞ்சுப் போகவே கூடாது...” சாரதா பதிலளிக்க, அவரது துணிச்சலான தெளிவானப் பேச்சை கவனித்துக்கொண்டிருந்த உமையாளின் பார்வை அவ்வப்போது பிரபஞ்சனையும் தொட்டு மீழ, ஏனோ அவன் மீதான மதிப்பு பன்மடங்கு கூடிப்போனது.
“மேடம், என்னதான் வெளிய சொல்லுன்னு நீங்க சொன்னாலும், கடைசியில எங்கப் பேர்தான் கெட்டுப் போகுது. வீட்ல இது தெரிஞ்சா, வேலைக்கே அனுப்ப மாட்டாங்க...” மற்றொரு பெண் குரலெழுப்ப,
“பொம்பளை தலை குனிஞ்சுதான் போகணும். அதிர்ந்து பேசக் கூடாது, அதை செய்யக் கூடாது, இதை செய்யக் கூடாதுன்னு அந்தக் காலத்துல இருந்து பெண்ணுன்னா, இப்படித்தான் இருக்கணும்னு அப்படித்தான் இருக்கணும்னு ஒரு செட் ஆஃப் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷனோட தான் பொம்பளைப் புள்ளைங்களைப் பெத்தே போட்றாங்க. பொண்ணுன்னா செலவு – இதுதான் பெரும்பான்மையானவர்களோட கருத்து. அப்படிப்பட்ட சமூகத்துல நாம வாழ்ந்துட்டு இருக்கோம்.
காலம்காலமா சொல்ற மாதிரி
நீங்க குனிஞ்ச தலை நிமிராம நடந்தால் மட்டும் உங்களை பார்க்குற வக்கிரப்புத்திகாரங்க குறைவாங்களா? இல்லை உங்க மேல தப்பு இல்லைன்னு இந்த உலகம் ஒத்துக்குமா என்ன? இல்லையே! அப்படி இருக்கும்போது சுத்தி இருக்கவங்க என்ன நினைக்கிறாங்கன்னு நினைச்சு நினைச்சே, பேச வேண்டிய இடத்துல, எதிர்த்து நின்னு போராட வேண்டிய இடத்துல அமைதியா இருக்கீங்க. நீங்க அடங்கிப் போக போகத்தான் எதிர்ல இருக்கவங்களோட ஆட்டம் அதிகமா இருக்கும்.
இன்னைக்கு எல்லா துறையிலயும் பெண்கள் சாதிச்சாலும், இன்னும் இந்த மாதிரி செக்சுவல் அப்யூஸ்ன்ற பேர்ல அவங்களை டம்ப் பண்ணிட்டுதான் இருக்காங்க. அதுக்காக எல்லாம் வேலையைவிட்டு விலகிப் போகணும்னு என்ன அவசியம்.
முதல்ல உங்களுக்கு நடந்த அநியாயத்தை வெளிய சொல்ல பயப்படாதீங்க. உங்களோட பயம், பலவீனம்தான் எதிர்ல இருக்கவனோட பலம்.
நீங்க ஒரு தடவை வெளிய சொல்லி அசிங்கப்படுத்துனா, அடுத்த டைம் அந்தத் தப்பை பண்ண அவன் யோசிப்பான்...” மேடைப் பேச்சாளர் கல்யாணிதான் எழுந்து பேசத் துவங்கினார். ஆங்காங்கே பல பல ஆதங்கமான கேள்விகளும் குரல்களும் கேட்ட வண்ணமிருந்தன. அவர் பேசி முடித்ததும், வழக்கறிஞர் முன்னே வந்து அனைவருக்கும் இந்தியலமைப்புச் சட்டத்தைப் பற்றியும் பெண்கள் பாதுகாப்பில் அரசியலமை எந்த வகையில் பங்கெடுத்து உள்ளது என பேசினார். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை சகித்து வாழ வேண்டிய அவசியம் இல்லை என அனைவரின் மனதிலும் பதிய வைத்தார்.
அமைதியாக அமர்ந்திருந்த உமையாளுக்கும் தன் மனதிலிருந்த ஆதங்கத்தைப் பேச வேண்டும் போலிருந்தது. ஆனால், இதுபோல எல்லாம் அவளுக்கு வாய்ப்பு கிடைத்தது இல்லை. அவள் வாழ்ந்த சூழ்நிலை முற்றிலும் வேறு. ஆனால், மனதிலிருந்த ஆதங்கத்தை எல்லாம் வார்த்தையாய் கொட்டிவிட வேண்டும் என உந்துதல் முகத்தில் பிரதிபலித்தது.
அவளை இத்தனை நேரம் அவதானித்துக்கொண்டிருந்த பிரபஞ்சனுக்குப் புரிந்தது. உமையாளின் முகத்தைப் பார்த்து அகத்தைக் கணித்தவனின் மனது கொஞ்சம் அவளை மெச்சிக்கொண்டது. எழுந்து சென்று தாயின் காதில் எதையோ கூறினான்.
வழக்கறிஞர் தன் உரையை முடித்ததும், “உங்களுக்கு இதைப் பத்தி எதாவது சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேட்கலாம். அப்புறம் வேற யாரும் மேல வந்து பேசணும்னு விருப்பப்பட்டால், தாரளமா பேசலாம். மாற்றம் உங்களில் இருந்து வந்தா, உங்ககிட்டே இருந்து ஒரு குரல் ஒலிச்சா, அதுதான் நம்மளோட முதல் வெற்றி...” என்றவர் உமையாளைப் பார்க்க, ஆயிரம் தயக்கம் அவளிடம். தலையைக் குனிந்துகொண்டாள்.
பேச வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், முதல் முறை மேடையேறி எப்படி பேச என உள்ளுக்குள்ளே லேசாக நடுக்கமும் பிறந்தது. இதுவே மதுரையாக இருந்திருந்தால், இது போலொரு கூட்டத்திற்கு எல்லாம் அவளது தாய் அனுமதித்து இருக்கவே மாட்டார். வீட்டிலிருக்கும்போது இப்படியொரு எண்ணம் அவளிடமிருந்தது எனத் தெரிந்தால், கொலை குத்தம் செய்தததைப் போலத்தான் எல்லோரும் அவளை நடத்துவார்கள்.
ஆனால், இப்போது அவர்கள் யாருமன்றி தனியான தனக்கான சுதந்திரமான உலகத்தில் இருக்கிறாளே! இத்தனை நாட்கள் உலகத்தை சந்தித்த அனுபவங்களும், இந்த சில நாட்கள் இங்கு தனியாய் வாழ்த்தில் கிடைத்த துணிச்சலும் அவளை பேச உந்தியது. காலம் காலமாக பின்பற்றி வரும் மூட நம்பிக்கைகளால், தன்னைப் போல எத்தனை பெண்கள் வாழ்க்கையையே தொலைத்து நிற்கின்றனர். இன்னொரு உமையாள் வேண்டாம் என மனது உரைத்தது. ஒன்று அல்ல, ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான உமையாள்கள் இந்த உலகத்தில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளியே சொல்லாது மனதில் வைத்து அழுத்திக்கொண்டுதான் இருக்கின்றனர்.
தாமதமாகவே என்றாலும், தனக்கான சுதந்திரத்தை, தன் பிடிக்காத வாழ்க்கையிலிருந்து வெளியேறியிருந்தாள் உமையாள். தன்னைப் போல சம உரிமை அளித்திடாத, பாலின வேறுபாட்டில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் துணிச்சலாக அந்த உறவிலிருந்து வெளிவர ஊக்க வேண்டும். தானும் அவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாய் இருக்க வேண்டும் என ஆழ்மனது ஆர்ப்பாட்டமில்லாது கத்தியது.
தயக்கமாய் அமர்ந்திருந்த உமையாளைப் பார்த்த சாரதாவிடம் அந்தத் தயக்கம் இல்லை போல. “உமையாள், வந்து பேசு மா...” என்று அழைக்க, அவள் அசையவில்லை. மனதில் நிறைய இருந்தது பேச. ஆனாலும்
தயங்கி நின்றவளின் விழிகள் பிரபஞ்சனை சந்திக்க, அவன் விழிகளைத் திறந்து மூடினான்.
‘வா...’ என்பது போல ஆடவன் தலை அசைய, மெதுவாக மேலேறி வந்தவளுக்கு, அத்தனை பேரையும் ஒன்றாய் பார்த்ததில் பயம் வந்து ஒட்டிக்கொண்டது. லேசாக நெற்றியில் வியர்வை பூக்கள் பூத்தன.
“தண்ணீயைக் குடிச்சுட்டு பேசுங்க. ஜஸ்ட் ரிலாக்ஸ் கேர்ள், தே ஆர் யுவர் கொலிக்ஸ் ஒன்லி...” உமையாளுக்குச் சற்று தொலைவில் அமர்ந்திருந்த பிரபஞ்சன் எழுந்து வந்து அவளிடம் தண்ணீரைக் கொடுத்து, அவளை இயல்பாக்க முயன்றான். அதை வாங்கிப் பருகியவள், தன்னை சமன் செய்துகொண்டாள்.
“பொறந்ததுல இருந்தே ஒடுக்குமுறைக்கு உள்ளான சமூகம் பெண்கள் மட்டும்தான். ஆண்கள் இல்லையான்னு கேட்காதீங்க, நம்மளை ஒடுக்குறதே இந்த ஆணாதிக்க சமூகம்தான். குடும்ப வன்முறை, வேலை பார்க்குற இடத்துல பாலியல் சுரண்டல், சம்பளத்துல ஏற்றத்தாழ்வு, பெண்கள் உயர் பதவியில இருக்கக் கூடாது, அதையும் மீறி அவ இருந்துட்டா, அவளோட நடத்தையைத் தப்பா பேசுறது, பாலியல் அத்துமீறல்கள், சுரண்டல்கள்னு தினம் தினம் ஒவ்வொரு பொண்ணும் இதுமாதிரி ஏதாவது ஒன்னை சந்திச்சுட்டுதான் இருக்கா. காரணம் பெண்ன்ற பாலினத்துல பிறந்துட்டதால!
குடும்ப வன்முறைதான் இதுல ரொம்ப கொடுமை. தான் ஒருவகையா உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாகுறோம்னு தெரியாம எத்தனை பெண்கள் வாழ்க்கை முழுசும் வீடு மட்டுமே உலகம்னு இருக்காங்க? காலையில எழுந்ததுல இருந்து நைட்டு தூங்கப் போற வரைக்கும் வேலை செய்யணும் சம்பளம் இல்லாத வேலைக்காரியா. மொத்தக் குடும்பமும் நம்ம உழைப்பை அட்டை மாதிரி உறிஞ்சு எடுத்துக்குவாங்க.
உழைப்பு மட்டும் இல்லை, சுதந்திரத்தையும் மொத்தமா பறிச்சு எடுத்துக்குவாங்க.
உண்மையிலே ஆண்களுக்கு மனைவின்றவ தன்னோட உடைமை, ஒரு பொருள் மாதிரி. அதாவது அவ எப்பவுமே சுயமா ஒரு முடிவெடுக்கத் தகுதி இல்லாம, கணவனோட கட்டுப்பாட்டிலே கடைசி வரைக்கும் இருக்கணும். அவளுக்குன்னு சுயஅறிவு, சுயசிந்தனை இருக்கக் கூடாது. ஏன் சமமான மரியாதைக் கூட கொடுக்கக் கூடாது. ஒன்னும் தெரியாத மனைவியைப் பாதுகாத்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தன்னோடதுன்ற மாதிரி ஆதிகால சிந்தனையில்தான் இந்த சமூகம் இயங்கிட்டு இருக்கு.
சரி, கொஞ்சநாள் காலப் போக்குல பெண்கள் போராடி வேலைக்கு வெளியப் போக ஆரம்பிச்சாங்க. பினான்சியல் இன்டிபென்டன்சி கிடைச்சுச்சுன்னு சந்தோஷப்பட முடியாத ஒரு வகையான சிறைப்பட்ட சுதந்திரம் அது. வேலைக்குப் போய் சம்பாரிச்சு நம்ம செலவு செஞ்சா, அது வேலைக்குப் போறோம்ன்ற திமிர்ல பண்றதுன்னு பேச்சு வரும். அதைவிட கொடுமை, வெளியேயும் வேலை பார்த்துட்டு வீட்லயும் எல்லா வேலையும் நம்ம தான் பார்க்கணும். அப்படி பார்க்கலைன்னா, வீட்டுக்கு அடங்காம, என்ன வேலைக்குப் போறான்னு கேள்வி வரும்.
இப்படி எது தொட்டாலும் குத்தம், குறைன்னு பதில் சொல்லிக் சொல்லியே ஓஞ்சுப் போறவங்க நம்ம மட்டும்தான். எல்லா இடத்திலும் நம்மளோட குரலை உயர்த்தி, அடிப்படை உரிமையையே போராடி வாங்க வேண்டிய சூழ்நிலைதான் இந்த சமூகம் இருக்கே தவிர, இங்க பெண் என்பவள் வெறும் வீட்டைப் பார்த்துக்க, குழந்தையை வளர்க்க இருக்க சம்பளம் இல்லா வேலைக்காரின்ற நினைப்பு மாறவே இல்லை.
(தொடர்ந்து கீழே படிக்க)