- Messages
- 1,194
- Reaction score
- 3,478
- Points
- 113
நெஞ்சம் – 47 
வியாழக் கிழமையை ஆதிரை வேலை இருக்கிறதென நெட்டித் தள்ளிவிட, வெள்ளிக்கிழமை தேவா அவளைக் கட்டாயப்படுத்தி உழவர் துணைக்கு அழைத்து வந்துவிட்டான்.
அவனுக்குத் தெரிந்த நம்பகமான நபர் ஒருவரை அபியைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று மீண்டும் வீட்டில் அழைத்து வந்துவிட அவன் பணித்துவிட, இவளுக்கு அந்த வேலையும் இன்றிப் போனது. அவர் காலையில் சரியான நேரத்திற்கே வந்து அபியை தானியில் அழைத்துச் சென்றார். இவள் வேண்டுமென்றே தாமதமாய் கிளம்பினாள்.
தேவா கோபப்பட்டு அவளை வர வேண்டாம் என்றுரைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் ஆதிரை மிக மிக மெதுவாய் குளித்துவிட்டு முகப்பூச்சை முகத்தில் பூசினாள். பொறுமையாய் முடியிலிருந்த சிக்கை நீக்கி தலையைப் பின்னலிட்டாள். கண்ணாடியில் தேவாவை முறைத்துக் கொண்டே தான் அத்தனையும் செய்தாள். அவன் அசரவே இல்லை. இவள் விடாப்பிடியாக வர மறுத்துவிட, இன்னும் ஒருநாள் விடுமுறை அதிகமாய் எடுத்தாலும் இந்த மாதச் சம்பளத்தில் மொத்தமாய் கைவைத்து விடுவதாய் மிரட்டித்தான் கிளம்ப வைத்தான்.
ஒரு காலை ஆட்டியவாறு அலைபேசியில் ஒரு கண்ணை வைத்தவாறே மறுகண்ணை மனைவியிடம் குவித்திருந்தான். நீ எவ்வளவு நேரம் தாமதித்தாலும் வந்தே ஆக வேண்டும் என அவன் அசட்டையாய் அமர்ந்திருக்க, அவனை முறைத்துவிட்டு குனிந்து கண்ணாடியைப் பார்த்து நெற்றியில் குங்குமத்தை வைத்தவளை இவன் தலை முதல் கால் வரை ஒருமுறை பார்த்து மூச்சை இழுத்துவிட்டான்.
அடர் பச்சை நிறப்புடவை அவளை பாந்தமாய் தழுவியிருந்தது. ஒரு மடிப்பு கூட கசங்காது அழகாய் குத்தியிருந்தாள். எப்போதும் போல நேர்த்தியாய் இருந்தாலும் கழுத்தில் பளிச்சென்றிருந்த மஞ்சள் கயிறும் நெற்றியிலிருந்த குங்குமமும் அவளைப் புதிதாய் காண்பித்தன. ஒரு கையிலிருந்த வளையலைக் கழற்றிவிட்டு கைக்கடிகாரத்தைக் கட்டியவாறே கண்ணாடியில் அவனைப் பார்த்துப் என்னவென்பதாய் புருவத்தை உயர்த்தினாள்.
“ஹம்ம்... கொஞ்சம் புதுசா தெரியுறீயே? என்னவாம்?” எனக் கேட்டவன் விழிகள் அவளை மொத்தமாய் சுருட்டிப் பத்திரப்படுத்தின. பதிலளிக்காது உதட்டைக் கோணியவள், வாசனை திரவியத்தை எடுத்து உடைக்கு மேலே அடித்துவிட்டு கொஞ்சம் குறையாகத் தோன்றிய உதட்டுச்சாயத்தைக் கையில் எடுக்க, தேவா அவளுக்குப் பின்னே வந்து நின்றான்.
“என்னவாம்?” என்றவள் உதட்டைக் குவித்து சாயத்தை இட, அதைப் பார்த்தவன், “கிஸ் பண்ண போறேன். சோ, பீ ப்ரிபேர்!” என்றான் வெகு தீவிரமாக. ஆதிரைக்கு பக்கென்று சிரிப்பு வந்தது.
“இப்போ நோ கிஸ், நோ ஹக்!” என்றவள் அவன்புறம் திரும்ப, தேவா அவளை அணைக்க வந்தான். படக்கென்று அவன் மார்பில் கையை வைத்து தள்ளி பின்னே நகர்ந்து கைப்பையை எடுத்து மாட்டியவள், “ஒன் ஹவர் ஸ்பெண்ட் பண்ணி ரெடியாகி இருக்கேன். சேலை கசங்கிடும், லிப்பாம் மறுபடியும் போடணும். சோ நோ கிஸ் அண்ட் ஹக். எதுவா இருந்தாலும் ஈவ்னிங்தான். அண்ட் ஒன் மோர் திங்க் இப்படி விறைப்பா நின்னுட்டு கிஸ் கேட்டா, நோ சான்ஸ். என்னை என்ன லேப்ல வேலையா வாங்குறீங்க? சீரியஸான ஃபேஸ் ரியாக்ஷன்ல கிஸ் பண்ண உங்களாலத்தான் முடியும். கிஸ் பண்ண கொஞ்சமாச்சும் ரொமான்டிக் ஸ்மைல் அண்ட் லுக் எல்லாம் வேணும் தேவா!” எனக் கேலி செய்தவளை முறைத்தான். அதையெல்லாம் கண்டு கொள்ளாது இவள் முன்னே செல்ல, அவன் உர்ரென மகிழுந்தை இயக்கினான்.
ஆதிரை தனது இருசக்கர வாகனத்தில்தான் வந்தாள். காலையில் தேவாவோடு சென்றால் மாலை அவன் இவளுக்காக மீண்டும் வீடு வந்து பண்ணைக்கு வர வேண்டும். அவனுக்கு வேலையும் கெடும், அலைச்சல் வேறு. அதனாலே இவளாக தனியே சென்று வருகிறேன் என்று கூறியதும் தேவாவும் இயல்பாகவே ஒப்புக் கொண்டான்.
அவனுமே மாலை நேரத்தில் அவளை வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் வந்து சென்றால் வேலையில் கவனம் சிதறுமென யோசித்தே இருந்தான். அவளைத் தனியே வரச் சென்றுவரக் கூறினால் ஆதிரை எப்படி எடுத்துக் கொள்வாள் என தேவா யோசித்தான். முன்பு அவள் வெறும் தொழிலாளி. ஆனால் இப்போது மனைவியாகிவிட்டாள். அதற்குரிய இடத்தில் அவளும் அது இதுவென இவனிடம் சில சலுகைகளை எதிர்பார்க்க கூடுமென மனம் உரைத்தது.
எதாவது ஒரு இடத்தில் வளைந்து கொடுக்கலாம். ஆனால் எல்லா இடத்திலும் வளைந்து போக முடியாது என இவன் யோசிக்க, ஆதிரை அதற்கு வேலையே வைக்கவில்லை. என் வேலையை நானே பார்த்துக் கொள்கிறேன் என்பது போல இருக்க, இவனுக்கு அதில் சின்ன நிம்மதி பிறந்தது. அவன் கணித்ததில் எவ்விதத்திலும் ஆதிரையிடம் மாற்றமில்லை. நான் இப்படித்தான் என அலட்டிக்காது அவனது குடும்பத்தில் பொருந்திப் போனாள். ஒரே ஒரு விதிவிலக்கு வாணியிடம் அவள் காட்டும் பொறுமை. அதுகூட தனக்காகத்தான் எனப் புரிந்தே இருந்தான்.
அவன் சென்று சில பல நிமிடங்களில் ஆதிரையும் உள்ளே நுழைந்தாள். ஒருவாரம் கழித்து வருவதால் வேலை நெட்டி முறிக்கப் போகிறது என யோசனையும் அவள் வர, “ஹே... எல்லாம் எழுந்திரிங்க! சீக்கிரம். என்ன இவ்வளோ சோம்பேறியா இருக்கீங்க. நம்ப புது முதலாளியம்மா வராங்க! அவங்களுக்கு வணக்கம் வைங்க எல்லாரும்” என்ற தர்ஷினியின் குரலில் சிந்தனை கலைந்த ஆதிரை அவளை மென்மையாய் முறைத்தாள்.
“வாங்க மேடம்... வாங்க வாங்க!” அவள் கேலியாய் கூற, ஆதிரை அவள் முதுகில் வலிக்காதவாறு கைப்பையால் அடித்தவாறே அவளுக்கு அருகே அமர்ந்தாள்.
“ஹம்ம்... முதலாளியம்மா ஜொலிக்குறீங்களே! புது சேரி, வளையல், கழுத்துல தாலின்னு அழகா இருக்கீங்களே!” என அவள் இழுக்க, ஆதிரைக்கு சிரிப்பும் சின்னதாய் ஒரு வெட்கமும் வந்து ஒட்டிக் கொண்டது.
“பார்றா... நம்ப முதலாளியம்மா வெட்கப்படுறாங்க!” அவள் மேலும் கேலி செய்ய, தேவா ஆய்வகத்தைக் கடந்து இயந்திரப் பகுதிக்குள் நுழைய, நொடியில் அனைவரும் அவரவர் வேலையைக் கவனிக்கத் தொடங்கினர்.
அவன் தலை மறைந்ததும் மீண்டும் தர்ஷினி தொடங்கினாள். “ஏன்கா, ஒரு ஒரு மாசம் லீவ் எடுத்து என்ஜாய் பண்ணீட்டு வர்றது. அப்படியே உங்க ஆளைக் கூட்டீட்டு ஊட்டி கேரளான்னு போய்ட்டு வந்தா, எங்களுக்கும் கொஞ்சம் குளுகுளுன்னு இருக்கும்ல!” என்றாள் பாலை சோதனை செய்தபடியே.
“ஏன் ஆதிரை, லீவ் எடுத்தது எடுத்த. மண்டே வந்திருக்கலாமே வேலைக்கு. ஏன் இன்னைக்கே வந்த. மேரேஜ் டயர்ட் இல்லையா உனக்கு?” கோமதி கேட்க, இவள் சின்னதாய் சிரித்தாள். ஒருநாள் அதிகமாய் விடுப்பு எடுத்தால் மொத்த சம்பளத்தையும் தர மாட்டேன் என்று தேவா கூறியதைக் உரைத்தால் தர்ஷினி இன்னுமே கேலி செய்யக் கூடுமென வாயை இறுகப் பொத்தினாள்.
“என்னக்கா... என்ன? ஏதோ யோசிக்கிற மாதிரி இருக்கு? உங்க ஊட்டுக்காரர் என்ன சொன்னாரு?” என்றாள் ஆர்வமாய். ஆதிரை உதட்டில் கையை வைத்து சொல்ல மாட்டேன் என கையை அசைக்க,
“ப்ம்ச்... என்னக்கா? நம்ப என்ன அப்படியா பழகி இருக்கோம்? நம்ப எல்லாரும் ஒன்னா மண்ணா பழகிருக்கோம். சும்மா சொல்லுங்க!” என்று நச்சரித்து அவன் பேசியதைக் கேட்டறிந்ததும் கடகடவென சிரித்தாள் தர்ஷினி.
பின்னர் போலியாய் வருத்தம் கொண்டவள், “இதெல்லாம் நீங்களா இழுத்துக்கிட்டதுகா. நல்லது சொன்னா யாரு கேட்குறா? ஹம்ம்... நான் அப்பவே சொன்னேன். நைன் டூ பைவ் அவர் முகத்தைப் பார்க்கவே தலை சுத்துது. யோசிங்கன்னு சொன்னேன். சரி, நடந்தது நடந்து போச்சு. இனிமே என்னத்த பேச!” என கேலி செய்தவள், “இப்போ அவருக்கு நீங்கதான்கா பாஸ். பேசாம இந்த சீரியல்ல வர்ற மாதிரி சொல்ற பேச்சைக் கேட்கலைன்னா டிவோர்ஸ் பண்ணிடுவேன்னு நாலு வெத்துப் பேப்பரைக் காட்டி மிரட்டி விடுங்க கா. பயந்துடுவார்!” என்றாள் வில்லி கதாபாத்திர தொனியில்.
“கல்யாணமான ஒரே மாசத்துல எனக்கு டிவோர்ஸ் வாங்கி குடுத்துடுவ போல நீ!” ஆதிரை அவளை முறைக்க, சுபாஷ் வந்தமர்ந்தான். அவனும் தர்ஷினியுடன் சேர்ந்து ஆதிரையை ஒருவழி செய்திருந்தான்.
மதிய உணவு இடைவேளையின் போது இன்னுமே அவர்களுக்குப் பேச நேரம் கிடைத்தது. “ப்ம்ச்... முன்னவாது இந்த நாலு சுவத்துக்குள்ள அந்த மனுஷனைத் திட்டித் தீர்க்கலாம். இப்போ முதலாளியம்மா வேற இருக்காங்களே. எப்படி அவரைத் திட்டுறது. நம்மளோட ப்ரீடம் போய்டுச்சா?” பாவம் போல கேட்டவள் உணவை எடுத்து வாயில் வைக்க, ஆதிரை அவளை மெலிதாய் முறைத்தாள்.
“பார்த்தீங்களா? இப்பவே ஆதிரை முறைக்கிறா. சாரைப் பத்தி எதுவும் பேசுனா நமக்கு வேலை போய்டும். நாங்க பேசுறது எல்லாத்தையும் தேவா சார் கிட்டே போட்டுக் கொடுத்துடுவல்ல ஆதி?” சுபாஷ் கேட்கவும், ஆதிரைக்கு அய்யோடா என்றிருந்தது. காலையிலிருந்து ஆள் மாற்றி ஆள் ஒருவர் ஏதோ ஒருவகையில் அவளை கலாய்த்தனர். சரி ஓரிரு நாளில் இந்தப் பேச்சை விட்டுவிடுவார்கள். கோபப்படாமல் சிரிப்புடனே இருக்க வேண்டும் என முயன்று சிரித்து வைத்தாள்.
இவள் அதட்டலிட்டாள் அவர்கள் அந்தப் பேச்சை விட்டுவிடுவார்கள்தான். ஆனாலும் தர்ஷினி, சுபாஷின் முகம் வாடிவிடக் கூடும். அதுவும் இல்லாது இப்போது தேவாவின் மனைவி என்ற ஸ்தானத்தில் எதை செய்தாலும் சற்று யோசித்தே செய்ய வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வு தலை தூக்கியது.
மதிய பொழுதும் முடிந்துவிட, ஆதிரை லாக் புத்தகத்தில் அன்றைய வரவு செலவை எழுதிக் கொண்டிருந்தாள். பாலை சோதனை செய்து முடித்துவிட்டு அவளருகே அமர்ந்த தர்ஷினி, “ஏன்கா... நம்ப பாஸ், அதான் உங்க வீட்டுக்காரரு, தேவா சார் வீட்லயாவது சிரிப்பாரா கா? அவர் சிரிச்சு நீங்க பார்த்திருக்கீங்களா கா?” என வெகு தீவிரக் குரலில் கேட்டாள். ஆதிரை உதட்டோரம் புன்னகை வந்தமர்ந்தது. ஆமாமென தலையை அசைத்தாள்.
“சீரியஸாவா கா? அவருக்கு சிரிக்க தெரியுமா? நீங்க சொல்லித்தான் எனக்கு அது தெரியுது பாருங்களேன். இத்தனை வருஷத்துல ஒருநாளாவது என்னைப் பார்த்து சிரிச்சிருக்காரா அந்த மனுஷன். சரி விடுங்க, உங்களைப் பார்த்தாவது சிரிக்கிறாரே!” என்றாள் நொடிப்பாக. ஆதிரை எதுவும் கூறாது லாக் புத்தகத்தை தேவாவின் அறையில் வைத்துவிட்டு வந்தாள்.
திருமணத்திற்கு முன்பு எப்படி அவன் அறைக்குச் சென்று வேலையை மட்டும் பார்த்துவிட்டு வருவாளோ, அப்படித்தான் இப்போதும் புத்தகத்தை ஒப்படைத்தாள். எவ்வித வேறுபாடும் இருவரிடமும் இல்லை. ஆதிரை தோளைக் குலுக்கி சிரித்துக் கொண்டாள். அவன் இப்படித்தான் என அவளறிந்ததே.
“அப்புறம் முதலாளியம்மா, இந்த மூவிஸ்ல காட்டுற மாதிரி அவர் ரூம்ல ஒரே ரொமான்ஸா?” எனக் கேட்ட தர்ஷினி ஆதிரை முறைக்கவும், படக்கென தன்னிடத்திற்கு ஓடிவிட்டாள்.
“பதில் வரலையே முதலாளியம்மா?” அவள் மெல்லிய குரலில் ஆதிரையைப் பார்த்து சிரிக்க, “இதே கொஸ்டீனை உங்க சார்கிட்டே கேட்டு பதிலைத் தெரிஞ்சுக்கோ தர்ஸூ!” என்றாள் கேலியாக.
“ஹக்கும்...இதுக்கு நீங்க வாயை மூடிட்டு இரு தர்ஷின்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லி இருக்கலாம் கா!” அவள் முகத்தைக் கோண, இவள் கண்டு கொள்ளவில்லை.
வேலை முடிந்து தேவாவின் அறையில் கையெழுத்திட்டு அனைவரும் அகல, “போய்ட்டு வரேன் தேவா!” என்று இவள் கூறவும், அவன் மடிக்கணினியில் வேலையாய் இருந்தவன் முகத்தை நிமிர்த்தாது வெறுமனே தலையை அசைத்தான்.
ஆதிரை அவனை முறைத்துக் கையைக் கட்டி நிற்க, அவள் அரவம் அகலாததில் தேவா நெற்றியை சுருக்கிவிட்டு நிமிர, இவள் அமைதியாய் அவனைப் பார்த்தாள். அவள் பார்வையின் பொருளுணர்ந்தவன் நெற்றியை ஒருவிரலால் கீறிவிட்டு, “ஹம்ம்... பத்திரமா போ!” என்றான் மெல்லிய முறுவலுடன்.
“ஹக்கும்... வேலை முக்கியம்தான். அதுக்காக கல்யாணமானதை கூடவா மறப்பீங்க?” என அவனுக்கு குட்டு வைத்துவிட்டே ஆதிரை அகன்றாள். தேவாவும் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தான்.
மெதுவாய் நாட்கள் நகரத் தொடங்கின. ஆதிரையும் தேவா வீட்டில் தன்னை இணைத்துக் கொண்டாள். வாணியைத் தவிர அவளுக்குப் பெரிதாய் பிரச்சினைகள் எதுவும் இருக்கவில்லை.
ஜனனியுடன் அமர்ந்து பொழுதைக் கழிப்பது, குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது, விதவிதமாக எதையாவது சமைப்பது என வேலை நேரம் போக மற்ற நேரம் நன்றாய் கழிந்தது. அவ்வப்போது தேவாவை வம்பிழுத்து சிரிப்பாள். அவன் முறைத்து விட்டு செல்வான்.
அபிக்கு இன்னும் தேவா அங்கிள் என்ற விளிப்பில்தான் இருந்தான். ஆனால் ராகினி ஹரியை அப்பா என்றழைக்க இவன் சித்தப்பா எனப் பழகினான். ஜனனியிடம் சித்தி என ஓட்டிக் கொண்டே சுற்றினான். ஆதிரை இல்லாத நேரத்தில் ஜானுதான் அவனைப் பார்த்துக் கொண்டாள். பிரதன்யா சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடுவாள், படிக்க வைப்பாள். அருகில் எங்கேனும் அழைத்துச் செல்வாள்.
வியாழக் கிழமையை ஆதிரை வேலை இருக்கிறதென நெட்டித் தள்ளிவிட, வெள்ளிக்கிழமை தேவா அவளைக் கட்டாயப்படுத்தி உழவர் துணைக்கு அழைத்து வந்துவிட்டான்.
அவனுக்குத் தெரிந்த நம்பகமான நபர் ஒருவரை அபியைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று மீண்டும் வீட்டில் அழைத்து வந்துவிட அவன் பணித்துவிட, இவளுக்கு அந்த வேலையும் இன்றிப் போனது. அவர் காலையில் சரியான நேரத்திற்கே வந்து அபியை தானியில் அழைத்துச் சென்றார். இவள் வேண்டுமென்றே தாமதமாய் கிளம்பினாள்.
தேவா கோபப்பட்டு அவளை வர வேண்டாம் என்றுரைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் ஆதிரை மிக மிக மெதுவாய் குளித்துவிட்டு முகப்பூச்சை முகத்தில் பூசினாள். பொறுமையாய் முடியிலிருந்த சிக்கை நீக்கி தலையைப் பின்னலிட்டாள். கண்ணாடியில் தேவாவை முறைத்துக் கொண்டே தான் அத்தனையும் செய்தாள். அவன் அசரவே இல்லை. இவள் விடாப்பிடியாக வர மறுத்துவிட, இன்னும் ஒருநாள் விடுமுறை அதிகமாய் எடுத்தாலும் இந்த மாதச் சம்பளத்தில் மொத்தமாய் கைவைத்து விடுவதாய் மிரட்டித்தான் கிளம்ப வைத்தான்.
ஒரு காலை ஆட்டியவாறு அலைபேசியில் ஒரு கண்ணை வைத்தவாறே மறுகண்ணை மனைவியிடம் குவித்திருந்தான். நீ எவ்வளவு நேரம் தாமதித்தாலும் வந்தே ஆக வேண்டும் என அவன் அசட்டையாய் அமர்ந்திருக்க, அவனை முறைத்துவிட்டு குனிந்து கண்ணாடியைப் பார்த்து நெற்றியில் குங்குமத்தை வைத்தவளை இவன் தலை முதல் கால் வரை ஒருமுறை பார்த்து மூச்சை இழுத்துவிட்டான்.
அடர் பச்சை நிறப்புடவை அவளை பாந்தமாய் தழுவியிருந்தது. ஒரு மடிப்பு கூட கசங்காது அழகாய் குத்தியிருந்தாள். எப்போதும் போல நேர்த்தியாய் இருந்தாலும் கழுத்தில் பளிச்சென்றிருந்த மஞ்சள் கயிறும் நெற்றியிலிருந்த குங்குமமும் அவளைப் புதிதாய் காண்பித்தன. ஒரு கையிலிருந்த வளையலைக் கழற்றிவிட்டு கைக்கடிகாரத்தைக் கட்டியவாறே கண்ணாடியில் அவனைப் பார்த்துப் என்னவென்பதாய் புருவத்தை உயர்த்தினாள்.
“ஹம்ம்... கொஞ்சம் புதுசா தெரியுறீயே? என்னவாம்?” எனக் கேட்டவன் விழிகள் அவளை மொத்தமாய் சுருட்டிப் பத்திரப்படுத்தின. பதிலளிக்காது உதட்டைக் கோணியவள், வாசனை திரவியத்தை எடுத்து உடைக்கு மேலே அடித்துவிட்டு கொஞ்சம் குறையாகத் தோன்றிய உதட்டுச்சாயத்தைக் கையில் எடுக்க, தேவா அவளுக்குப் பின்னே வந்து நின்றான்.
“என்னவாம்?” என்றவள் உதட்டைக் குவித்து சாயத்தை இட, அதைப் பார்த்தவன், “கிஸ் பண்ண போறேன். சோ, பீ ப்ரிபேர்!” என்றான் வெகு தீவிரமாக. ஆதிரைக்கு பக்கென்று சிரிப்பு வந்தது.
“இப்போ நோ கிஸ், நோ ஹக்!” என்றவள் அவன்புறம் திரும்ப, தேவா அவளை அணைக்க வந்தான். படக்கென்று அவன் மார்பில் கையை வைத்து தள்ளி பின்னே நகர்ந்து கைப்பையை எடுத்து மாட்டியவள், “ஒன் ஹவர் ஸ்பெண்ட் பண்ணி ரெடியாகி இருக்கேன். சேலை கசங்கிடும், லிப்பாம் மறுபடியும் போடணும். சோ நோ கிஸ் அண்ட் ஹக். எதுவா இருந்தாலும் ஈவ்னிங்தான். அண்ட் ஒன் மோர் திங்க் இப்படி விறைப்பா நின்னுட்டு கிஸ் கேட்டா, நோ சான்ஸ். என்னை என்ன லேப்ல வேலையா வாங்குறீங்க? சீரியஸான ஃபேஸ் ரியாக்ஷன்ல கிஸ் பண்ண உங்களாலத்தான் முடியும். கிஸ் பண்ண கொஞ்சமாச்சும் ரொமான்டிக் ஸ்மைல் அண்ட் லுக் எல்லாம் வேணும் தேவா!” எனக் கேலி செய்தவளை முறைத்தான். அதையெல்லாம் கண்டு கொள்ளாது இவள் முன்னே செல்ல, அவன் உர்ரென மகிழுந்தை இயக்கினான்.
ஆதிரை தனது இருசக்கர வாகனத்தில்தான் வந்தாள். காலையில் தேவாவோடு சென்றால் மாலை அவன் இவளுக்காக மீண்டும் வீடு வந்து பண்ணைக்கு வர வேண்டும். அவனுக்கு வேலையும் கெடும், அலைச்சல் வேறு. அதனாலே இவளாக தனியே சென்று வருகிறேன் என்று கூறியதும் தேவாவும் இயல்பாகவே ஒப்புக் கொண்டான்.
அவனுமே மாலை நேரத்தில் அவளை வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் வந்து சென்றால் வேலையில் கவனம் சிதறுமென யோசித்தே இருந்தான். அவளைத் தனியே வரச் சென்றுவரக் கூறினால் ஆதிரை எப்படி எடுத்துக் கொள்வாள் என தேவா யோசித்தான். முன்பு அவள் வெறும் தொழிலாளி. ஆனால் இப்போது மனைவியாகிவிட்டாள். அதற்குரிய இடத்தில் அவளும் அது இதுவென இவனிடம் சில சலுகைகளை எதிர்பார்க்க கூடுமென மனம் உரைத்தது.
எதாவது ஒரு இடத்தில் வளைந்து கொடுக்கலாம். ஆனால் எல்லா இடத்திலும் வளைந்து போக முடியாது என இவன் யோசிக்க, ஆதிரை அதற்கு வேலையே வைக்கவில்லை. என் வேலையை நானே பார்த்துக் கொள்கிறேன் என்பது போல இருக்க, இவனுக்கு அதில் சின்ன நிம்மதி பிறந்தது. அவன் கணித்ததில் எவ்விதத்திலும் ஆதிரையிடம் மாற்றமில்லை. நான் இப்படித்தான் என அலட்டிக்காது அவனது குடும்பத்தில் பொருந்திப் போனாள். ஒரே ஒரு விதிவிலக்கு வாணியிடம் அவள் காட்டும் பொறுமை. அதுகூட தனக்காகத்தான் எனப் புரிந்தே இருந்தான்.
அவன் சென்று சில பல நிமிடங்களில் ஆதிரையும் உள்ளே நுழைந்தாள். ஒருவாரம் கழித்து வருவதால் வேலை நெட்டி முறிக்கப் போகிறது என யோசனையும் அவள் வர, “ஹே... எல்லாம் எழுந்திரிங்க! சீக்கிரம். என்ன இவ்வளோ சோம்பேறியா இருக்கீங்க. நம்ப புது முதலாளியம்மா வராங்க! அவங்களுக்கு வணக்கம் வைங்க எல்லாரும்” என்ற தர்ஷினியின் குரலில் சிந்தனை கலைந்த ஆதிரை அவளை மென்மையாய் முறைத்தாள்.
“வாங்க மேடம்... வாங்க வாங்க!” அவள் கேலியாய் கூற, ஆதிரை அவள் முதுகில் வலிக்காதவாறு கைப்பையால் அடித்தவாறே அவளுக்கு அருகே அமர்ந்தாள்.
“ஹம்ம்... முதலாளியம்மா ஜொலிக்குறீங்களே! புது சேரி, வளையல், கழுத்துல தாலின்னு அழகா இருக்கீங்களே!” என அவள் இழுக்க, ஆதிரைக்கு சிரிப்பும் சின்னதாய் ஒரு வெட்கமும் வந்து ஒட்டிக் கொண்டது.
“பார்றா... நம்ப முதலாளியம்மா வெட்கப்படுறாங்க!” அவள் மேலும் கேலி செய்ய, தேவா ஆய்வகத்தைக் கடந்து இயந்திரப் பகுதிக்குள் நுழைய, நொடியில் அனைவரும் அவரவர் வேலையைக் கவனிக்கத் தொடங்கினர்.
அவன் தலை மறைந்ததும் மீண்டும் தர்ஷினி தொடங்கினாள். “ஏன்கா, ஒரு ஒரு மாசம் லீவ் எடுத்து என்ஜாய் பண்ணீட்டு வர்றது. அப்படியே உங்க ஆளைக் கூட்டீட்டு ஊட்டி கேரளான்னு போய்ட்டு வந்தா, எங்களுக்கும் கொஞ்சம் குளுகுளுன்னு இருக்கும்ல!” என்றாள் பாலை சோதனை செய்தபடியே.
“ஏன் ஆதிரை, லீவ் எடுத்தது எடுத்த. மண்டே வந்திருக்கலாமே வேலைக்கு. ஏன் இன்னைக்கே வந்த. மேரேஜ் டயர்ட் இல்லையா உனக்கு?” கோமதி கேட்க, இவள் சின்னதாய் சிரித்தாள். ஒருநாள் அதிகமாய் விடுப்பு எடுத்தால் மொத்த சம்பளத்தையும் தர மாட்டேன் என்று தேவா கூறியதைக் உரைத்தால் தர்ஷினி இன்னுமே கேலி செய்யக் கூடுமென வாயை இறுகப் பொத்தினாள்.
“என்னக்கா... என்ன? ஏதோ யோசிக்கிற மாதிரி இருக்கு? உங்க ஊட்டுக்காரர் என்ன சொன்னாரு?” என்றாள் ஆர்வமாய். ஆதிரை உதட்டில் கையை வைத்து சொல்ல மாட்டேன் என கையை அசைக்க,
“ப்ம்ச்... என்னக்கா? நம்ப என்ன அப்படியா பழகி இருக்கோம்? நம்ப எல்லாரும் ஒன்னா மண்ணா பழகிருக்கோம். சும்மா சொல்லுங்க!” என்று நச்சரித்து அவன் பேசியதைக் கேட்டறிந்ததும் கடகடவென சிரித்தாள் தர்ஷினி.
பின்னர் போலியாய் வருத்தம் கொண்டவள், “இதெல்லாம் நீங்களா இழுத்துக்கிட்டதுகா. நல்லது சொன்னா யாரு கேட்குறா? ஹம்ம்... நான் அப்பவே சொன்னேன். நைன் டூ பைவ் அவர் முகத்தைப் பார்க்கவே தலை சுத்துது. யோசிங்கன்னு சொன்னேன். சரி, நடந்தது நடந்து போச்சு. இனிமே என்னத்த பேச!” என கேலி செய்தவள், “இப்போ அவருக்கு நீங்கதான்கா பாஸ். பேசாம இந்த சீரியல்ல வர்ற மாதிரி சொல்ற பேச்சைக் கேட்கலைன்னா டிவோர்ஸ் பண்ணிடுவேன்னு நாலு வெத்துப் பேப்பரைக் காட்டி மிரட்டி விடுங்க கா. பயந்துடுவார்!” என்றாள் வில்லி கதாபாத்திர தொனியில்.
“கல்யாணமான ஒரே மாசத்துல எனக்கு டிவோர்ஸ் வாங்கி குடுத்துடுவ போல நீ!” ஆதிரை அவளை முறைக்க, சுபாஷ் வந்தமர்ந்தான். அவனும் தர்ஷினியுடன் சேர்ந்து ஆதிரையை ஒருவழி செய்திருந்தான்.
மதிய உணவு இடைவேளையின் போது இன்னுமே அவர்களுக்குப் பேச நேரம் கிடைத்தது. “ப்ம்ச்... முன்னவாது இந்த நாலு சுவத்துக்குள்ள அந்த மனுஷனைத் திட்டித் தீர்க்கலாம். இப்போ முதலாளியம்மா வேற இருக்காங்களே. எப்படி அவரைத் திட்டுறது. நம்மளோட ப்ரீடம் போய்டுச்சா?” பாவம் போல கேட்டவள் உணவை எடுத்து வாயில் வைக்க, ஆதிரை அவளை மெலிதாய் முறைத்தாள்.
“பார்த்தீங்களா? இப்பவே ஆதிரை முறைக்கிறா. சாரைப் பத்தி எதுவும் பேசுனா நமக்கு வேலை போய்டும். நாங்க பேசுறது எல்லாத்தையும் தேவா சார் கிட்டே போட்டுக் கொடுத்துடுவல்ல ஆதி?” சுபாஷ் கேட்கவும், ஆதிரைக்கு அய்யோடா என்றிருந்தது. காலையிலிருந்து ஆள் மாற்றி ஆள் ஒருவர் ஏதோ ஒருவகையில் அவளை கலாய்த்தனர். சரி ஓரிரு நாளில் இந்தப் பேச்சை விட்டுவிடுவார்கள். கோபப்படாமல் சிரிப்புடனே இருக்க வேண்டும் என முயன்று சிரித்து வைத்தாள்.
இவள் அதட்டலிட்டாள் அவர்கள் அந்தப் பேச்சை விட்டுவிடுவார்கள்தான். ஆனாலும் தர்ஷினி, சுபாஷின் முகம் வாடிவிடக் கூடும். அதுவும் இல்லாது இப்போது தேவாவின் மனைவி என்ற ஸ்தானத்தில் எதை செய்தாலும் சற்று யோசித்தே செய்ய வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வு தலை தூக்கியது.
மதிய பொழுதும் முடிந்துவிட, ஆதிரை லாக் புத்தகத்தில் அன்றைய வரவு செலவை எழுதிக் கொண்டிருந்தாள். பாலை சோதனை செய்து முடித்துவிட்டு அவளருகே அமர்ந்த தர்ஷினி, “ஏன்கா... நம்ப பாஸ், அதான் உங்க வீட்டுக்காரரு, தேவா சார் வீட்லயாவது சிரிப்பாரா கா? அவர் சிரிச்சு நீங்க பார்த்திருக்கீங்களா கா?” என வெகு தீவிரக் குரலில் கேட்டாள். ஆதிரை உதட்டோரம் புன்னகை வந்தமர்ந்தது. ஆமாமென தலையை அசைத்தாள்.
“சீரியஸாவா கா? அவருக்கு சிரிக்க தெரியுமா? நீங்க சொல்லித்தான் எனக்கு அது தெரியுது பாருங்களேன். இத்தனை வருஷத்துல ஒருநாளாவது என்னைப் பார்த்து சிரிச்சிருக்காரா அந்த மனுஷன். சரி விடுங்க, உங்களைப் பார்த்தாவது சிரிக்கிறாரே!” என்றாள் நொடிப்பாக. ஆதிரை எதுவும் கூறாது லாக் புத்தகத்தை தேவாவின் அறையில் வைத்துவிட்டு வந்தாள்.
திருமணத்திற்கு முன்பு எப்படி அவன் அறைக்குச் சென்று வேலையை மட்டும் பார்த்துவிட்டு வருவாளோ, அப்படித்தான் இப்போதும் புத்தகத்தை ஒப்படைத்தாள். எவ்வித வேறுபாடும் இருவரிடமும் இல்லை. ஆதிரை தோளைக் குலுக்கி சிரித்துக் கொண்டாள். அவன் இப்படித்தான் என அவளறிந்ததே.
“அப்புறம் முதலாளியம்மா, இந்த மூவிஸ்ல காட்டுற மாதிரி அவர் ரூம்ல ஒரே ரொமான்ஸா?” எனக் கேட்ட தர்ஷினி ஆதிரை முறைக்கவும், படக்கென தன்னிடத்திற்கு ஓடிவிட்டாள்.
“பதில் வரலையே முதலாளியம்மா?” அவள் மெல்லிய குரலில் ஆதிரையைப் பார்த்து சிரிக்க, “இதே கொஸ்டீனை உங்க சார்கிட்டே கேட்டு பதிலைத் தெரிஞ்சுக்கோ தர்ஸூ!” என்றாள் கேலியாக.
“ஹக்கும்...இதுக்கு நீங்க வாயை மூடிட்டு இரு தர்ஷின்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லி இருக்கலாம் கா!” அவள் முகத்தைக் கோண, இவள் கண்டு கொள்ளவில்லை.
வேலை முடிந்து தேவாவின் அறையில் கையெழுத்திட்டு அனைவரும் அகல, “போய்ட்டு வரேன் தேவா!” என்று இவள் கூறவும், அவன் மடிக்கணினியில் வேலையாய் இருந்தவன் முகத்தை நிமிர்த்தாது வெறுமனே தலையை அசைத்தான்.
ஆதிரை அவனை முறைத்துக் கையைக் கட்டி நிற்க, அவள் அரவம் அகலாததில் தேவா நெற்றியை சுருக்கிவிட்டு நிமிர, இவள் அமைதியாய் அவனைப் பார்த்தாள். அவள் பார்வையின் பொருளுணர்ந்தவன் நெற்றியை ஒருவிரலால் கீறிவிட்டு, “ஹம்ம்... பத்திரமா போ!” என்றான் மெல்லிய முறுவலுடன்.
“ஹக்கும்... வேலை முக்கியம்தான். அதுக்காக கல்யாணமானதை கூடவா மறப்பீங்க?” என அவனுக்கு குட்டு வைத்துவிட்டே ஆதிரை அகன்றாள். தேவாவும் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தான்.
மெதுவாய் நாட்கள் நகரத் தொடங்கின. ஆதிரையும் தேவா வீட்டில் தன்னை இணைத்துக் கொண்டாள். வாணியைத் தவிர அவளுக்குப் பெரிதாய் பிரச்சினைகள் எதுவும் இருக்கவில்லை.
ஜனனியுடன் அமர்ந்து பொழுதைக் கழிப்பது, குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது, விதவிதமாக எதையாவது சமைப்பது என வேலை நேரம் போக மற்ற நேரம் நன்றாய் கழிந்தது. அவ்வப்போது தேவாவை வம்பிழுத்து சிரிப்பாள். அவன் முறைத்து விட்டு செல்வான்.
அபிக்கு இன்னும் தேவா அங்கிள் என்ற விளிப்பில்தான் இருந்தான். ஆனால் ராகினி ஹரியை அப்பா என்றழைக்க இவன் சித்தப்பா எனப் பழகினான். ஜனனியிடம் சித்தி என ஓட்டிக் கொண்டே சுற்றினான். ஆதிரை இல்லாத நேரத்தில் ஜானுதான் அவனைப் பார்த்துக் கொண்டாள். பிரதன்யா சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடுவாள், படிக்க வைப்பாள். அருகில் எங்கேனும் அழைத்துச் செல்வாள்.