• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,194
Reaction score
3,478
Points
113
நெஞ்சம்‌ - 42 💖

மணமக்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றதும் முறையாக பால் பழம் கொடுக்கப்பட்டது. ஆதிரை பூஜை அறையில் விளக்கேற்றி கடவுளை வணங்கினாள்.

எவ்வித சண்டை சச்சரவுகளும் அற்று வாழ்க்கை நன்றாய் செல்ல வேண்டும். தான் எல்லா விதத்திலும் இந்தக் குடும்பத்தில் பொருந்திப் போக வேண்டும் என்று மனதார வேண்டினாள். இந்த வேண்டுதல் இருவருக்காக மட்டும்தான்.

ஒன்று அபி, அவனை ஒரு குடும்ப அமைப்பில் வளரவில்லையே என்ற ஏக்கம் தீரத்தான் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாள்.

மற்றொன்று முழுக்க முழுக்க தேவாவிற்காகத்தான். இவள் அப்படியொன்றும் எவ்விதத்திலும் சிறந்தவள் இல்லை. ஆனாலும் என்னவோ அவனுக்கு தன் மேல் பிரியம் ஏற்ப்பட்டிருக்க, ஒருகட்டத்திற்கு மேல் அவளால் அவனை மறுக்க முடியவில்லை. தன் அன்பு வைத்த இருவருக்காக கொஞ்சம் வளைந்து கொடுத்து செல்ல வேண்டும், சுயகௌரவத்தை சில காலம் ஒதுக்கி வைக்கலாம் என ஏகமனதாய் முடிவெடுத்தாள்.

வீடு முழுவதும் உறவினர்கள் சலசலத்தனர். ஆதிரைக்கு அனைத்துமே புதிது‌. தனியாளாய் வளர்ந்தவளுக்கு, இது சுவாரஸ்யத்தைக் கொடுத்தது. தேவாவின் அருகில் அமர்ந்தபடியே அனைவரையும் வேடிக்கைப் பார்த்தாள். அங்காங்கே சிறு சிறு சலசலப்பு வேறு.

வயதில் மூத்தவர்கள் இது போல முறை செய்ய வேண்டும், அது போல செய்ய வேண்டும் என்று கூற, இந்த காலத்துப் பெண்கள் அதை ஏற்கவில்லை. அவர்கள் இஷ்டத்திற்கு செய்தனர் போல. ஒரு மாமியார் மருமகளை அதட்ட, இவள் புருவத்தை சுருக்கிப் பார்த்தாள். அந்தப் பெண்ணும் மாமியார் பேச்சிற்கு மறு வார்த்தை கூறாது அவர் இட்ட கட்டளைக்கு அடிபணிந்து போக, ஆதிரைக்குத் தன்னை அந்த இடத்தில் நினைத்ததும் சிரிப்பு வந்தது.

கண்டிப்பாக ஆதிரையால் இதைப் போல எல்லாம் பணிந்து போக முடியாதே. தேவாவைப் போலத்தான் அவள். வேலையிடத்தில் வேறு வழியின்றி அவனுக்குப் பணிந்து செல்கிறாள். மற்றபடி யாரிடமும் வளைந்து கொடுக்காதவள். பொன்வாணி வேறு இவள் வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்து முகத்தை திருப்புவதும், முறைப்பதுமாய் இருக்க, ஆதிரைக்குப் பெருமூச்சு எழுந்தது. அவருடைய கோபம் நியாயம்தான். அதற்கு இவள் எந்த வகையிலும் பொறுப்பாக முடியாது.


பொன்வாணியை தேவா பார்த்துக் கொள்ளட்டும். இவளுக்கு அவரை சமாளிக்க முடியும் என்று தோன்றவில்லை. ஏனென்றால் இவளிடம் பேசக் கூட அவள் விரும்பவில்லை. ஆனால் காலம் முழுக்க இருவரும் ஒரு வீட்டில்தானே வசிக்கப் போகிறோம்‌‌. அப்போது என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம் என யோசித்தவள், “ம்மா... புது பொண்ணு, வா, வந்து குளிச்சிட்டு வேற புடவையைக் கட்டிக்கோ!” என்று ஒரு பெண்மணி அழைத்தார். இவள் அபியைத் தேடினாள்.

ராகினி மற்றும் இரண்டு சிறுமிகளுடன் ஜனனியின் அறையில் அமர்ந்திருந்தான். இவள் பார்க்கவும், “நான் பார்த்துக்கிறேன் கா!” என்றாள் ஜனனி.

ஆதிரை சரியென சின்ன புன்னகையுடன் அறைக்குள் நுழைந்தாள். பிரதன்யாவின் புகைப்படம் அறையை நிறைத்திருந்தது. அறை அப்படியொன்றும் சுத்தமாய் இல்லை. இயன்றவரை அவள் சுத்தப்படுத்த முயற்சி செய்திருப்பதை ஆங்காங்கே பரவிக் கடந்த புத்தகங்கள், காகிதங்கள், துப்பட்டாக்கள் பறை சாற்றின.

“இரும்மா, நான் ஹெல்ப் பண்றேன். முந்தியைக் கழட்டு நீ!” என அப்பெண்மணி இவளது உடையில் கை வைக்க, “ஐயோ, பரவாயில்லை கா. நானே கழட்டிக்கிறேன்!” என்றாள் கூச்சத்துடன். சுற்றி நான்கைந்து மத்திம வயது பெண்கள் நின்றிருந்தனர். அவர்கள் எல்லாம் வெளியில் சென்றால் நன்றாக இருக்குமென தோன்றியது.

“அட, எல்லாரும் பொம்பளைங்க தானேம்மா!” என ஒருவர் கூற, இவள் சங்கடத்தோடு நின்றிருந்தாள்.

“சரிம்மா... உனக்கு சேலை கட்டத் தெரியுமா? அப்படின்னா குளிச்சிட்டு சேலையைக் கட்டிட்டு எங்களைக் கூப்பிடு!” என அவர்கள் அகல, இவள் அறையை நன்றாய் தாழிட்டு குளித்துவிட்டு வந்தாள். ஊதா நிறப்புடவையில் ஆங்காங்கே மெல்லிய அரக்கு வண்ணப் பூ பூத்திருக்க, இதுவும் தேவாதான் தேர்வு செய்திருப்பான் என்ற எண்ணத்தோடு அணிந்தாள். மீண்டும் ஒருமுறை சாமியை தரிசிக்க செய்தார்கள். இரவு உணவு மாப்பிள்ளையும் பொண்ணும் அமர்ந்து உண்ண, இவள் மகனை அருகே அமர்த்தி ஊட்டிவிட்டாள். அதைப் பார்த்த ஒருசிலர் ஏதோ கிசுகிசுத்தனர். ஆதிரை பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை.

அறைக்குள் அமர வைத்து ஆதிரைக்கு அலங்காரத்தை தொடங்கினர். ஜனனியும் சின்னவர்களும் அங்குதான் இருந்தனர்.

“அண்ணி, ஐ லைனர் போட்டு விட்றேன்!” என பிரதன்யா மையைக் கையில் எடுக்க, “இல்ல, எனக்கு கண்ல அலர்ஜியாகிடும்மா, வேணாம்!” என இவள் மறுத்துவிட்டாள்.

“ஓ... அப்படியா அண்ணி? அப்போ வேணாம்!” பிரதன்யாவின் முகத்தில் மெல்லிய வாட்டம் வந்தது.

“ஹம்ம்... ஐ டெக்ஸ் மை இருந்தா கண்ணுக்கு கீழ போட்டு விடு பிரதன்யா...” ஆதிரை அவள் முகத்தைப் பார்த்து உரைத்தாள்‌.

“இல்லண்ணி, அலர்ஜியாகும்னு தெரிஞ்சும் போட வேணாம். நான் உங்களுக்கு லிப் க்ளாஸ் போட்டு விட்றேன்!” என ஒரு பெட்டியைத் திறந்தாள். அ முதல் ஃ வரையிலான அழகு சாதனப் பொருட்கள் அதில் இருந்தனர். அதில் ஆதிரை மலைத்துப் போனாள்.

அவள் பார்வையை உணர்ந்த பிரதன்யா, “சும்மா என்னைக்காவது போடுவேன் அண்ணி. என்னோட பாக்கெட் மணியை சேர்த்து வச்சு வாங்குனேன்!” என பதிலளித்தவாறே உதட்டுச் சாயம் பூசினாள்.

ஜனனியின் தாய் கையில் பூவோடு வந்தார்‌.‌ “ஜானு, ஏன் டி சரியா சாப்பிடவே இல்ல, பால் காய்ச்சி தரேன். குடிச்சிட்டு படு, இல்லைன்னா நைட்டுப் பசிக்கும்!” என மகளை முறைத்தவர், ஆதிரையின் தலையில் பூவை வைத்தார். முதலில் ஏனோ தானோவென திருமணத்திற்கு வந்திருந்தாலும், ஆதிரையைப் பார்த்த பிறகு அவரது பேச்சு கொஞ்சம் குறைந்திருந்தது. பார்க்க நன்றாக இருக்கிறாள், அதுவும் இல்லாது அவள் அணிந்திருந்த நகைகள் வேறு ஓரளவிற்கு அவரது வாயை அடைத்திருந்தது.

“ஏம்மா... நல்லா லட்சணமா இருக்க? முதல் புருஷன் ஏன்மா உன்னை விட்டுட்டுப் போனான்?” திடீரென்று அவர் கேட்கவும், ஆதிரையின் முகம் மாறிப் போனது. ஜனனி குழந்தைகளிடம் கவனத்தை வைத்திருந்தவள், தாயின் பேச்சில் பதறிப் போனாள்.

“ம்மா... என்னம்மா நீ? எப்போ வந்து என்ன கேட்கணும்னு உனக்கு விவஸ்தையே இல்ல. போ, போ எனக்கு பாலைக் காய்ச்சு!” அவள் தாயைக் கண்டனத்துடன் வெளியே அனுப்ப முயன்றாள்.

“ஏன்டி... நான் என்ன இல்லாததையா கேட்டுட்டேன். இப்போ எதுக்கு என்னை முறைக்கிற நீ?” அவர் மகளை அதட்டிவிட்டு அகன்றார். ஜனனி ஆதிரை அருகே எழுந்து வந்தாள்.

“நீங்க எதுவும் நினைச்சுக்காதீங்க அக்கா, அவங்க அப்படித்தான். எதை எங்க பேசணும்னு தெரியாது!” என்றாள் தவிப்பான குரலில். இத்தனை நேரம் மலர்ந்திருந்த ஆதிரையின் முகம் அவர் பேசியதும் வாடிவிட்டது.

“பரவாயில்லை ஜனனி, விடுங்க. நான் எதுவும் நினைக்கலை. நீங்க உட்காருங்க!” என்றாள் அருகிலிருந்த நாற்காலியை இழுத்து. ஜனனி எதுவும் பேசாது அமர, அங்கே அசாத்திய அமைதி படர்ந்தது. இன்னும் சற்று நேரத்தில் தன்னைத் தேவாவின் அறைக்கு அழைத்துச் சென்று விடுவார்கள் என்றுணர்ந்த ஆதிரை அபியைப் பார்த்தாள்.

“தங்கப்புள்ளை அபிம்மா, அம்மாகிட்டே வா!” என அவனை அழைத்தாள். காலையிலிருந்து அவன் தாயிடம் பேசவே இல்லை. அவளுமே இன்று ஒருநாளிலே மகனைத் தேடியிருந்தாள். எப்போதும் எதையாவது செய்து கொண்டு கண்பார்வையிலே இருக்கும் மகனை இன்று அருகில் வைத்துக் கொள்ள முடியவில்லை.

“ம்மா...” என அருகே வந்தவனின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவள், “என் செல்லம் இன்னைக்கு அம்மா சொன்ன மாதிரி சமத்தா இருந்துட்டானே!” என்றாள் தன்னை இயல்பாக்கி. அவனுக்கு முகம் மலர்ந்தது.

“நிஜமாவாம்மா?” அவன் கேட்கவும், “நிஜம்மா... ப்ராமிஸா என் அபிம்மா சமத்தா இருந்தான். அவன் வெரி குட் பாய்!” என்றாள் இரண்டு கன்னத்தையும் கிள்ளி மகனை மடியில் தூக்கி அமர்த்தினாள். அவன் பற்கள் தெரிய சிரித்தான்.

“ஹம்ம்... அபி ஸ்மால் பாயா? இல்லை பிக் பாயா?” என மகன் தலையைக் கோதியவாறே கேட்டாள் இவள்.

“அபி இஸ் பிக் பாய்மா!” என்றான் அவன் கையை உயர்த்திக் காண்பித்து.

“அதானே... அபி ரொம்ப பெரிய பையன். இன்னைக்கு அபி பிரதன்யா அத்தையோட தூங்கப் போவியாம். அப்போதான் எல்லாரும் அபி பிக் பாய்னு நம்புவாங்களாம். அத்தை என்கிட்ட கேட்டாங்க. நான் அபி பிக் பாய்னு சொல்லிட்டேன்!” என்றாள்.

அபி பிரதன்யாவைப் பார்த்தான். முதலில் ஜனனி மற்றும் ஹரியுடன்தான் அவனை தூங்க வைக்கலாம் என்று எண்ணி இருந்தாள். ஆனால் அபி ஜனனி வயிற்றின் மீது காலைப் போட்டு அமுக்கி விடுவான் என யோசித்து பிரதன்யாவிடம் கேட்க, அவள், “அண்ணி, நானே கேட்கலாம்னு நினைச்சேன். அபி என்கூடவே தூங்கட்டும்!” என்றுவிட்டாள் அவள்.

“அண்ணி, அபி சின்ன பையன். என்கூட தூங்க மாட்டான்‌. அம்மா கூட மட்டும்தான் படுப்பான்!” பிரதன்யா சின்னவனை கேலி செய்யும் குரலில் கூறினாள்.

“நோ... அத்தை அபி பெரிய பையன். அம்மா, இன்னைக்கு நான் அத்தையோட தூங்குறேன்!” என்றான் ரோஷத்துடன். ஆதிரை உதட்டில் முறுவல் பிறந்தது.

“என் தங்கம் சமத்து, அத்தையை டிஸ்டர்ப் பண்ண கூடாது. அமைதியா தூங்கணும். போன் கேட்க கூடாது. பாத்ரூம் போகணும்னா, அத்தையை எழுப்பி கூட்டீட்டுப் போகணும்!” மேலும் அவள் ஏதோ சொல்ல வர,

“அண்ணி... போதும், என் அண்ணனுக்கு மேல இருக்கீங்க நீங்க. அதெல்லாம் அவனை நான் பார்த்துப்பேன். அவன் குட் பாய்!” என பிரதன்யா அபியின் தோளில் கையைப் போட்டு தன்னருகே இழுத்தாள். அவன் நெளிந்து கொண்டே பற்கள் தெரிய சிரித்தான்.

“அண்ணா...வா!” ராகினி அபியை அழைக்கவும், அவன் கட்டிலில் ஏறிச் சென்று ராகினி அருகே அமர்ந்தான். அவள் ஹரியின் அலைபேசியை வைத்திருந்தாள். இருவரும் அதில் ஏதோவொரு விளையாட்டை விளையாடினர். ஆதிரை அவர்களை மென் புன்னகையுடன் பார்த்தாள். அபி ஒருநாளிலே அனைவருடனும் நன்கு பொருந்திவிட்டான். அத்தை, சித்தி, ராகி என அவர்கள் அனைவரையும் வெகு சரளமாக அழைக்கப் பழகிவிட்டான்.

பிரதன்யாவும் ஜனனியும் எளிதில் அணுக கூடிய வகையில் இருந்தனர். ஹரியைப் பற்றி அவளுக்கு முன்பே தெரியும். எப்போதுமே அவன் புன்னகை முகத்துடன் கலகலவென்று இருப்பான். தேவாவை எப்படி சமாளிப்பது என்று இவளுக்குத் தெரியும். கோபால் இவளைப் பார்த்ததும் புன்னகைத்தார். அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி, அவரது அணுகுமுறையில் தவறில்லை. ஜனனியைப் போலவே இவளையும் நடத்த நினைக்கிறார் என ஊகித்தாள். பொன்வாணியை மட்டும்தான் இந்த வீட்டில் அவள் சமாளிக்க வேண்டி வரும்‌ என யோசித்தாள்.

“ஜானு, இங்க வா!” என ஹரி அறையை எட்டிப் பார்த்து அழைத்தான். காலையிலிருந்து வேலை செய்ததில் அவன் வெகுவாய் களைத்துப் போயிருந்தான். ஆதிரை அவனைப் பார்த்ததும், புன்னகைத்தான்.

மனைவி அருகே வர, “உன்கிட்ட எக்ஸ்ட்ரா பணம் கொடுத்திருந்தேன்ல,அதை எடுத்துக்குடு. மண்டபத்துல கரண்ட், தண்ணின்னு நிறையா பில்லைப் போட்றாங்க!”” என்றான் அவன் கொஞ்சம் கடுப்புடன். மண்டபம் பதிவு செய்யும் போது கேட்ட பணத்தை விட அது இதுவென இறுதியில் ஒரு தொகையை மண்டப உரிமையாளர் கேட்க, இவனால் ஓரளவிற்கு மேல் பேச முடியவில்லை.

“ஹரி... விடு, கேக்குற பணத்தைக் குடுத்துடு. உங்கம்மாகிட்டே நான் பணம் கொடுத்திருக்கேன். அதை வாங்கிட்டு வா!” என்றார் கோபால்.

“ப்பா... என்கிட்டயே இருக்குப்பா. யூஸ் ஆகுமேன்னு எக்ஸ்ட்ராவா எடுத்து வச்சேன்பா!” என்றவன் மனைவியிடமிருந்த பணத்தை வாங்கிச் சென்று மண்டப உரிமையாளரிடம் கொடுத்துவிட்டு வந்தான்.

“சாப்பிடு ஹரி, மணி பத்தாகப் போகுது!” ஜனனி அவனைக் கடிந்து உணவைப் பரிமாறினாள்.

“இன்னைக்கு நான் நிம்மதியா தூங்குவேன் ஜானு. தேவா லைஃப் செட்டிலாகிடுச்சு!” என்றவனை இவள் சின்ன சிரிப்புடன் பார்த்திருந்தாள். இரண்டாவது குழந்தைக்கு வளைகாப்பு வேண்டாமென இவள் நினைத்திருக்க, ஆனால் ஜனனியின் அப்பா வளைகாப்பு வைக்கலாம் என்று கூறிவிட்டார். தேவாவின் திருமணம் திடீரென ஏற்பாடாகியிருந்தது. ஜனனி தாய், தந்தையிடம் வளைகாப்பை ஒன்பதாம் மாதம் வைத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டாள். தேவாவின் திருமணம்தான் இப்போது அவளுக்கு முக்கியமாகப் பட்டது.

அனைத்தும் கூடி வரும்போது இவளால் தடைபடக் கூடாது என்று எண்ணினாள். ஏனென்றால் இன்னும் ஓரிரு மாதத்தில் தேவாவிற்கு முப்பத்து நான்கு வயதாகப் போகிறது. இரட்டைப் படையில் திருமணம் வைக்க கூடாது அது இதுவென எதாவது பிரச்சனையாகி வந்துவிடுமோ என யோசித்து ஜனனி செயல்பட, அதில் ஹரிக்கு வெகு திருப்தி. மனைவியைப் பற்றி நன்கு தெரியும். இருந்தாலும் இந்த விஷயத்தில் அவன் கூறும் முன்னே ஜனனி எது சரியாய் இருக்குமென செயல்பட்டுவிட்டாள். அதிலே அவன் மனம் நிறைந்து போனது.
 
Administrator
Staff member
Messages
1,194
Reaction score
3,478
Points
113
நல்ல நேரம் துவங்கியதும் ஆதிரையை தோவாவின் அறைக்கு அழைத்துச் சென்றனர். “ஏன்கா, இந்தப் பொண்ணுக்கு எதுவும் சொல்லி அனுப்பணுமா?” என ஒரு பெண் கேட்க, “ப்ம்ச்... அவ என்ன புது பொண்ணா டீ? இரண்டாம்தாரம் தானே? அதெல்லாம் அவளுக்கே எல்லாம் தெரியும். நீ சும்மா இரு!” என மற்றொருவர் கூற, ஆதிரை அவரைப் பார்த்தாள் ஒழிய, எதுவும் பேசவில்லை.

‘இன்னும் ஒன்னு ரெண்டு நாள் ஆதி, பொறுத்துக்கோ!’ என மனதோடு முணுமுணுத்தவள், தேவாவின் அறைக்குள் நுழைந்தாள். குப்பென ஊதுபத்தி, சாம்பிராணி வாசனை நாசியை நிரடியது. அனைத்தையும் தாண்டி தேவாவின் வாசம் மெல்ல நுரையிரலுக்குள் நுழைந்து வெளியேறியது.

கையிலிருந்த சொம்பு நிறைய பால் தளும்பி நிற்க, “ப்ம்ச்... இந்த சம்பிரதாயம் எல்லாம் யார் கண்டு பிடிச்சாங்களோ?” என பால் சிந்திவிடாமல் மெதுவாய் வந்து மேஜை மீது வைத்தவள், அறையில் விழிகளை சுழற்றினாள். அறை அப்படியே வெகு நேர்த்தியாய் இருந்தது. எங்கேயும் எதுவும் கலைந்து கிடக்கவில்லை. அவள் எதிர்பார்த்துதானே வந்தாள்.

குளியலறைக்குள் சப்தம் கேட்டது. அவன் குளித்துக் கொண்டிருக்கிறான் என எண்ணி சில நொடிகள் கையைக் கட்டி அறையை வேடிக்கைப் பார்த்தாள். அவன் வரத் தாமதமாகும் போல என்றெண்ணி அலமாரி அருகே சென்றாள்.

கை நிறைய வளையலை அணிவித்திருந்தனர். இரண்டை மட்டும் விட்டுவிட்டு மற்றவற்றை கழற்றி வைத்தாள். கழுத்தில் இரண்டு மூன்று கழுத்தணி உறுத்திக் கொண்டே இருக்க, ஒவ்வொன்றாய் அகற்றியவள் ஏதோ ஞாபகத்தில் தாலியையும் அவிழ்க்கச் சென்று, ‘ஐயோ... இப்போ நீ மிஸஸ் தேவநந்தன் ஆதி!’ தலையில் தட்டியவாறே தனக்குத் திருமணமானதை மனதில் பதித்தாள்.

“ஏன் நிறுத்திட்ட? தாலியையும் கழட்டி வைக்க வேண்டியதுதானே?” கேலியாய்க் கேட்டவாறே தலையை துவட்டியபடி தேவா அவளுக்கு சற்றுத் தொலைவில் வந்து நின்றான்.

அவனைத் திரும்பிப் பார்த்தவள்,
“தூங்கும் போது குத்துச்சுன்னா, கழட்டி வச்சிடுவேன் தேவா. ஐ டோன்ட் ஹேவ் எனி சென்டிமெண்டல் பீலிங்க்ஸ்!” என்றாள் நக்கலாய்.

“ஆமா... ஆமா, நீ சொல்லணும்னு என்ன அவசியம்? அதான் தெரியுமே! நீ ஒரு ஃபீலிங்லெஸ்!” அவன் கடுப்போடு முணுமுணுக்க, ஆதிரை தோளைக் குலுக்கிவிட்டு தலையிலிருந்த மல்லிகைப் பூவில் கைவைக்க செல்ல, தேவா அவளுக்கு மிக மிக நெருக்கமாய் வந்து நின்றான்.

குளித்து வந்திருந்தவனின் வழலைக் கட்டியின் வாசனை நாசியைத் துளைக்க, ஆதிரைக்கு பக்கென்று இருந்தது. நிதானமாக மூச்சை இழுத்துவிட்டு அவள் ஏதோ பேச துவங்கும் முன்னே பின்னிருந்து அவளை இறுக்கி அணைத்த தேவாவின் முகம் அவளது கழுத்தில் பதிந்தது. குளித்து முடித்திருந்தாலும் அவன் உடலின் உஷ்ணம் ஆதிரைக்கும் கடத்தப்பட்டிருந்தது.

“ரொம்ப என்னை டென்ஷன் பண்ணிட்ட டீ நீ!” என உதடு உரசக் கூறி ஈதழீரம் பதிய கழுத்தில் அழுந்த முத்தமிட்டிருந்தான். ஆதிரைக்கு அடிவயிற்றில் ஏதோ திகைக்க செய்தது. முன்வயிற்றைச் சுற்றி இரண்டு கரத்தையும் பாம்பு போல வளைத்துப் பிடித்திருந்தான். இவளுக்கு என்னவோ போலானது. தேவா இப்படியும், அவனிடம் தான் இப்படி அகப்பட்டிருக்க, அணைத்துக் கொண்டு நிற்கிறானே என அவஸ்தையாய் போனது.

இத்தனை வருடங்கள் முதலாளி என்ற எண்ணத்தை தவிர வேறு எப்படியும் பார்த்திடாத தேவா இப்போது இப்படி.‌‌.. ம்ஹூம் அவளுக்கு அவனை இப்படி நெருக்கத்தில் என்றுமே யோசித்துப் பார்த்தது இல்லையே, மனம் படபடவென அடித்துக் கொண்டது.

“தேவா... நான் உங்ககிட்டே டைம் கேட்டேன்!” என்றாள் பதற்றம் அப்பியக் குரலில்.

“என்னமோ பெத்து பேர் வச்ச மாதிரி நூறு தேவா போட்ற டீ நீ!” என வழுக்கட்டாயமாக அவளைத் திருப்பி இறுக்கிப் பிடித்து இத்தனை நாட்கள் ஏங்ககிடந்த பொருள் கை சேர்ந்த நிம்மதியுடன் அவளை அணைத்தான். இப்போதும் அவன் முகம் அவள் கழுத்தில்தான் தஞ்சமிருந்தது. கோபம்தான், ஆனாலும் நன்முறையில் எவ்விதப் பிரச்சனையும் அற்று இவளைக் கரம் பிடித்தாயிற்று என்ற நிம்மதி மனம் முழுவதும் அடர்ந்தது.

எத்தனை பேச்சு, செய்கை, எத்தனை தூரம் தன்னைப் பந்தாடினாள் இவள் என மூளை எடுத்துக் கொடுத்தது.

‘கண்டிப்பாக இவளை சும்மா விடக் கூடாது. ஹம்ம்... வெறுப்பேற்று!’‌ மனது திட்டமிட்டது.

அவன் பின்னந்தலையின் முடியைப் பிடித்திழுத்து அவன் முகத்தை தன்னை நோக்கித் திருப்பியவள், “தேவா... நீங்க... நான், அது இப்படியெல்லாம் நான் உங்களை யோசிச்சதே இல்ல. அது... எனக்கு சங்கடமா இருக்கு. நீங்க உர்ருன்னு இருந்தா கூட பரவாயில்லை. சட்டுன்னு இப்படிலாம்... என்னால இதை அக்செப்ட் பண்ண முடியலை. ஐ நீட் டைம்!” என்றாள் அவஸ்தையுடன். உண்மையில் நேற்றைக்கு தன் பேச்சிற்கு அவன் மதிப்புக் கொடுத்து அருகிலே வர மாட்டான் என்று எண்ணி அசட்டையுடன்தான் அறைக்குள் நுழைந்தாள்.

ஆனால் இப்போது அட்டைப் போல ஒட்டிக் கொண்டு நிற்கும் தேவா அவளுக்குப் புதிது. அவன் மூச்சுக் காற்றின் வெப்பம் இவள் உடலை சிலிர்க்க செய்தது.

“ஹம்ம்... கண்டிப்பா டைம் வேணுமா?” காதோடு கேலியாய்க் கேட்டான்.

“ஹம்ம்... கண்டிப்பா வேணும். நேத்து உங்ககிட்டே கால் பண்ணி கேட்டேன்ல?” குரலை உயர்த்தி அவனை உதற முயன்றாள். அவள் முயற்சியை அநாயாசமாகத் தடுத்த தேவா இன்னும் அவளுடலுடன் ஒன்றிப் போனான். பிரிய மனதில்லை அவனுக்கு. இவள் நேரம் கேட்டதில் அவனுக்கு ஏகக்கடுப்பு. முப்பத்து மூன்று வருட வாழ்க்கையில் இப்போதுதான் திருமணம் என்ற அத்தியாயம் நுழைந்திருக்கிறது. அதற்கே அவனது அரை உயிரை வாங்கிவிட்டாள். இதில் இன்னும் நேரம் வேண்டுமாமே என மனம் சிடுசிடுத்தது.

“ஓ... அப்போ ஒரு ஒன் ஹவர் டைம் போதுமா?” வெகு தீவிரமாக கேட்டான். ஆதிரை அதிர்ந்தாள்.

“தேவா... நான் சீரியஸா கேட்குறேன். எனக்கு ஒன் மந்த்தாவது டைம் வேணும். நான் உங்க ஃபேமிலியை அக்செப்ட் பண்ணணும். மேரேஜ் நடந்ததை ரியலைஸ் பண்ணணும். எல்லாரையும் புரிஞ்சு நம்ப குடும்பம் இது, என் புருஷன் நீங்கன்னு எனக்கா தோணணும். அப்போதான் என்னால இதெல்லாம் யோசிக்க முடியும்!” என்றாள் மெல்லிய கடுப்புடன்.

“ப்ம்ச்... டைம்லாம் தர எனக்கு இஷ்டம் இல்ல!” அசட்டையாக கூறினான்.

“நீங்க அப்படியெல்லாம் பண்ண மாட்டீங்க தேவா. நேர்மை, நியாயம் பேசுற நல்லவரு, வல்லவரு.நோ மீன்ஸ் நோதான்னு உங்களுக்கே தெரியும்!” அவள் கேலியாய்க் கூற, “சே... நல்லவன் நல்லவன்னு சொல்லியே எதையும் அனுபவிக்க விடாம பண்ணுங்க டீ!” எரிச்சலாய் கூறியவன் பிடியைத் தளர்த்தினான்.

ஆதிரையின் முகம் நொடி நேரம் அவன் மார்பில் பதிந்து மீள, “உங்க ஹார்ட் பீட் ஏன் இவ்வளோ ரெய்ஸாகுது?” என ஆச்சர்யத்துடன் கேட்டாள்.

“லைஃப்ல ஃபர்ஸ்ட் டைம் ஒரு பொண்ணை ஹக் பண்ணி இருக்கேன். சோ!” என அவன் முணுமுணுக்க, ஆதிரை உதட்டோரம் முறுவல் அரும்பிற்று.

“ஓஹோ... நல்லது!” என்றாள் சிரிப்புடன்.

“பைனலா என்ன சொல்ற டீ? ஷ்யூரா டைம் வேணுமா?” அவன் தலையைக் கோதிப் பெருமூச்சு விட்டான். மனம் அவளை என்னென்னவோ செய் என உந்தித் தள்ளியது. ஆசை கழுத்து வரை தளும்பி நின்றாலும் அவள் வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்தான். ஆனாலும் அவளை விட மனதில்லை. போராடி கை சேர்ந்த பெண், மெய்யும் சேர மனம் விரும்பி தொலைத்தது.

ஆதிரை சிரிப்புடன் தலையை முடியாது என அசைக்க, ‘ஒன் மந்த் டைம் வேணுமாம் இவளுக்கு? ஒருநாள் கூட கொடுக்க கூடாதுன்னு முடிவோட வந்தா, நல்லவன் வேஷத்தைக் கட்டிவிட்றா!’ என எரிச்சலோடு அவன் சென்று படுத்தான். ஆதிரை அவனைப் பார்க்கவும், கையைத் தூக்கி முகத்தை மறைத்துவிட்டான்.

ஆதிரை பூவை அகற்றிவிட்டு, தேவாவுடைய நிலைப் பேழையை திறந்து அவனுடைய இரவு உடை ஒன்றை எடுத்துச் சென்று அணிந்து வந்தாள். அவன் வாசனை உடையில் விரவிக் கிடந்தது. அதைத் தடவிப் பார்த்தாள். முட்டி வரை கால் சராயும் கொஞ்சம் தொளதொளவென்றிருந்த மேல் சட்டையும் இவளுக்கு நன்றாய்தான் இருந்தன.

படுக்கையில் வந்து விழுந்தாள். மகன் என்ன செய்வானோ என யோசனை அபியிடம் சென்றது. அவன் பிறந்ததிலிருந்து இன்றைக்குத்தான் தனியாய் தூங்குகிறாள்.‌ புரண்டு புரண்டு படுத்தும் உறக்கம் விழிகளை எட்டவில்லை. புது இடம், போதாகுறைக்கு உர்ரென்ற முகத்துடன் அருகே ஒரு புதிய புருஷன் வேறு என நினைத்து உதட்டை வளைத்தவள், “தேவா!” என்றாள் மெல்லிய குரலில். அவன் தூங்கவில்லை என்று இவளுக்குத் தெரிந்தது. ஆனாலும் அசையாது படுத்திருந்தான்.

“நீங்க தூங்கலைன்னு எனக்குத் தெரியும் தேவா. என்னென்னு கேளுங்க!” இவளும் விடாது பேசினாள்.

“என்ன வேணும் டீ உனக்கு?” அவன் இவள் முகத்தைப் பார்க்காது உர்ரென கேட்டான்.

“கோபமா உங்களுக்கு?” இவள் தயங்கியபடியே கேட்டாள்.

“சே... சே, எனக்கென்ன கோபம்?” அவன் தொனியே எரிச்சலுடன் வந்தது.

“இல்ல நீங்க கோபமா இருக்கீங்க. ஐ க்நோ, நான் பேசுனது உங்களை கோபப்படுத்தி இருக்கும். பட், நான் யாருக்கும் பொய்யான நம்பிக்கை கொடுக்க விரும்ப மாட்டேன். நான் உங்ககிட்டே பேசுனது எப்பவோ சொல்ல நினைச்சது. உங்க மனசு கஷ்டப்படுமோன்னு நான் இத்தனை நாள் சொல்லலை.
நேத்து போன்ல பேசுனப்புறம் ஐ பெல்ட் ரிலாக்ஸ்ட். என்னமோ பெரிய பாரம் குறைஞ்ச மாதிரி இருந்தது. ஐ யம் எக்ஸ்ட்ரீம்லி சாரி, நான் உங்களை ஹர்ட் பண்ணதுக்கு!” என்றாள் உண்மையாய் வருந்தி. தேவா எதிர்வினையாற்றவில்லை.

“உங்ககிட்ட தான் பேசுறேன் தேவா!” அழுத்தி அவனை அழைத்தாள்.‌

“என்னை டென்ஷன் பண்ணாம படு டீ!” அவன் குரல் டெசிபல் உயர்ந்ததும் ஆதிரை முகத்தை உர்ரென வைத்தாள். அவனையே முறைத்துப் பார்த்தவள், கட்டிலில் சாய்ந்து அமர்ந்தாள்‌. இப்போதைக்கு உறக்கம் வரும் என்று தோன்றவில்லை.

சில பல நிமிடங்களில் கடக்க, தேவா நகர்ந்து வந்து அவளது மடியில் முகத்தைப் புரட்டி புதைத்ததும், யோசனையாய் இருந்த ஆதிரை திகைத்துப் போனாள். அவன் மூச்சுகாற்று இவளை சுட்டது.

“தலையைக் கோது கொடு ஆதி!” என்றான் வளையல் அணிந்த அவள் வளை கரத்தை எடுத்து தன் தலையில் வைத்து. ஆதிரை தயங்கினாள்.

அவள் ஏதோ பேச வர, “இப்போ என்ன சொல்ல வர்ற? ஹம்ம்...என்னை இப்படிலாம் யோசிச்சது இல்ல? கூச்சமா இருக்கு? அப்படி இப்படின்னு சொல்லப் போறீயா?” தலையை நிமிர்த்தி முறைத்தான். அவள் தன்னுடைய உடையை அணிந்திருக்கிறாள் என மனம் தாமதமாக உணர்ந்தது. உரிமையாய் அவள் எடுத்து அணிந்ததில் மனதில் இதம் பரவியது. ஆதிரை தயக்கத்துடன் தலையை ஆமாமென அசைத்தாள்.

அவளை முறைத்தவன், “இதுக்கு முன்னாடி நினைக்கலைன்னா என்ன? இப்போ நினை. நான் உன் புருஷன் டீ... என்ன வேணாலும் நினைச்சுக்கோ. யாரும் கேட்க மாட்டாங்க!” எனக் கூறி அவள் மடியில் புதைந்தான். ஆதிரை கூச்சத்துடன் அவன் தலையைக் கோதிக் கொடுத்தாள். தேவா அமைதியாய் அவளது அருகாமையை உள்வாங்கினான். என்னவோ இந்தப் பெண்ணிடம் ஏதோவொன்று அவனை வெகுவாய் ஈர்த்து தொலைத்தது.

அமைதியாய் சில நிமிடங்கள் கழிய, “செம்ம கோபத்துல இருந்தேன் டீ உன் மேல... ஒவ்வொரு டைம் நீ என்னை வேணாம், வேணாம்னு சொல்லும் போதெல்லாம் இழுத்து வச்சு நாலு அறையலாம்னு தோணும். நான் ஈகோ பார்க்காம உன் பின்னாடி வந்ததால நீ என்னை சீப்பா நினைச்சுட்ட இல்ல?” ஆதங்கத்துடன் கேட்டான் தேவா.

“ப்ம்ச்... அப்படிலாம் இல்ல தேவா. நான்தான் ரீசன் சொன்னேனே!” இவள் இடைபுகுந்தாள்.

“பொல்லாத ரீசன்...” அவன் முறைக்கவும், இவள் வாயைப் பூட்டிக் கொண்டாள்.

“கல்யாணத்துக்கு முதநாள் கால் பண்ணி பேசுற பேச்சா டீ அது? அவன் அவனுக்கு நல்லபடியா கல்யாணத்தை முடிச்சா போதும்னு அலைஞ்சுட்டு இருக்க, நல்லா எந்த எஃபெர்டும் போடாம ஜம்முன்னு வீட்ல உக்கார்ந்துட்டு கால் பண்ணி மேரேஜ் லைஃப் ஒத்து வரலைன்னா பிரிஞ்சுடுவேன்னு ஈஸியா சொல்றா!” என சிடுசிடுத்தான் தேவா. ஆதிரை அமைதியாய் இருந்தாள்.

“ரொம்ப ரொம்ப என்னைப் படுத்திட்ட ஆதிரை. இதுவரைக்கும் என் லைஃப்ல யாருகிட்டயும் நான் இவ்வளோ ஃப்ளெக்ஸிபிளா இருந்ததே இல்லை. மானம், ரோஷம், கோபம் எல்லாம் உன்கிட்ட மட்டும் காணாம போய்டுது. என்ன கருமமோ?” முணுமுணுத்து அவள் மடியில் புதைந்தான்‌. ஆதிரையின் உதட்டில் முறுவல் படர, கைகள் சில நொடிகள் நின்று அவன் தலையைக் கோதின.

“ஏன் தேவா, கோபம் கோபம்னுறீங்க... ரூம்க்குள்ள நான் வந்ததும் உங்க கோபம் எங்க போச்சு? அடிச்சிருப்பேன், அடிச்சிருப்பேன்னு சொல்றீங்களே! அசந்தா கிஸ்ஸடிச்சுருப்பீங்க தானே?” எனக் கேலியாய் கேட்டவளை அவன் தீயாய் முறைத்தான்.

“சரி சண்டை போதும்... ரெண்டு பேர் மேலயும் தப்பு இருக்கு, சமாதானமா போய்டலாம்!” அவள் பேசும் போதே, “என் மேல எந்த மிஸ்டேக்கும் இல்ல!” என்றான் அவன் உர்ரென.

“சே... ஈகோஸ்ட் நீங்க‌. ஃபுல் மிஸ்டேக்கும் என் மேலேயே இருந்துட்டுப் போகட்டும். இதோட சண்டையை விட்டுடலாம். லெட்ஸ் ஸ்டார்ட் அ ப்ரெஷ் லைஃப் ப்ரம் டூமாரோ. ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க ட்ரை பண்ணலாம். காலைல எழுந்திரிச்சதும் மூஞ்சியை உர்ருன்னு வச்சீங்க, டென்ஷனாகிடுவேன். என்னை ஓகே சொல்ல வைக்கிறதுக்காக சண்டே வந்து வீட்டு வாசல்ல நின்னு சிரிச்சு சிரிச்சு இனிக்க இனிக்க பேசி கரெக்ட் பண்ணீங்களே!” அவள் கேலியாய் பேச, தேவா தீயாய் முறைத்தான்‌.

“சரி... சரி விடுங்க, அப்போ இருந்த மாதிரி ஸ்மைலிங் முகத்தோடதான் இனிமே நீங்க இருக்கணும். எனக்கு சண்டை போட்டு போட்டு போரடிச்சுப் போச்சு. இனிமே நோ சண்டை!” என்றாள்.

“நீதானே டீ சண்டை போட்டதே!” அவன் முறைத்தான்.

“சரி, சரி... அது அப்போ, வேணாம் வேணாம்னு சொன்னவளை கல்யாணத்துல இழுத்து விட்டுடீங்க. எல்லாரோடவும் எப்படி செட்டாகப் போறேன்னு தெரியலை. உங்கம்மாவைத் தவிர மத்தவங்க ஓகேதான்!” என்றாள்.

“அம்மாவை நான் பார்த்துக்கிறேன்!” தேவா கூறினான்.

“நீங்கதான் பார்த்துக்கணும். நோ ஆப்சன், அவங்க என்கிட்ட முகம் கொடுத்துக் கூடப் பேச மாட்டாங்க. சோ, நீங்கதான் அவங்களை ஹேண்டில் பண்ணணும்!” என்றாள். அவனிடம் பதில் இல்லை. மெல்லிய உறக்கம் விழிகளைத் தொட்டது.

“பதில் சொல்லுங்க!” இவள் அதட்ட, “சரி டீ...” என்றான் முணுமுணுப்புடன். இத்தனை நாட்கள் ஏனோ தானோவென உறக்கம் தொலைத்த பொழுதுகள் ஏராளம். ஆனால் இன்றைக்கு கேட்காமலே விழிகள் சொக்கின‌. ஆதிரை பேசினாலும் அவன் தலையைக் கோதுவதை நிறுத்தவில்லை. முதலில் கூச்சமாய் இருந்தாலும் பேச்சு சுவாரஸ்யத்தில் அது போயிருந்தது. அபியும் சில சமயம் அவள் மடியில் படுத்துறங்குவான். அதனாலே பெரிதாய் தெரியவில்லை.

“இன்னைக்கு ஹரி வேலையா இருந்தாலும் ஜனனியை அவ்வளோ அக்கறையா பார்த்துக்கிட்டாரு. அதைப் பார்த்து எனக்கு ஆச்சர்யம்தான். மேரேஜ் ஸ்கேரி, வேஸ்ட் திங்க். எதுக்குப் பண்ணணணும்னு பெருசா நான் இன்ட்ரெஸ்ட் காட்டலை. பட், விதி உங்க ரூபத்துல வந்துடுச்சு. சரி, கல்யாணம் பண்ணிட்டோம். என்னதான் இந்த லைஃப்ல இருக்குன்னு பார்க்கலாம்னு தோணுது தேவா. உர்ருன்னு முகத்தை வச்சிட்டே என்னை கன்வின்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டீங்க. இதுவரைக்கும் ஃபேமிலி செட்டப்ல நான் இருந்தது இல்லை. சோ, முன்னபின்ன இருந்தா அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. எதாவது மிஸ்டேக் பண்ணா என்கிட்ட சொல்லுங்க. எனக்கு சரின்னு தோணுச்சுன்னா கண்டிப்பா மாத்திப்பேன்!” என அவள் வேறு ஏதோ பேச, அவனிடம் அசைவில்லை, ஆழ்ந்து உறங்கிப் போயிருந்தான்.

‘அடப்பாவி!’ எனக் கடியானவள் அவனைத் தலையணையில் படுக்க வைத்துவிட்டு தானும் போர்வையை இழுத்துப் போர்த்தினாள். உறக்கம் வரவேயில்லை. அபி மீண்டும் நினைவிற்கு வந்தான். ஏதேதோ ஞாபகத்தை மனம் சுற்றி வந்தது. ஒவ்வொரு பக்கமும் புரண்டு புரண்டு படுத்து வெகுநேரம் கழித்தே தூங்கினாள்.

தேவா உறக்கத்தில் புரள, இவள் அபிதான் என்ற நினைப்பில் அவனுக்குத் தட்டிக் கொடுக்க, வளையல் சத்தமும் அவளது ஸ்பரிசமும் அவனை திடுக்கிடச் செய்ய, படக்கென்று கண்விழித்தான். தன் மார்பில் பதிந்திருந்த கையின் மருதாணிதான் முதலில் கண்ணில்பட்டது.

‘ப்ம்ச்... தேவா யூ ஆர் மேரீட் நவ்!’ மனம் அதட்டியது. பத்து பன்னிரெண்டு வருடங்களாக தனியாகப் படுத்தவனுக்கு திடீரென ஆதிரை உடன் தூங்கவும், மூளை அதை சேமிக்கத் தவறி இருந்தது. அவளைத் திரும்பி பார்த்தான். இவன் பக்கமாக முகத்தை வைத்து காலை மடக்கிப்
படுத்து தூங்கினாள். உதட்டோரம் மென்னகை படர, அவள் கையைப் பிடித்துக் கொண்டே உறங்கிப் போனான்.

தொடரும்...









 
Well-known member
Messages
510
Reaction score
383
Points
63
சூப்பர், திருமண வாழ்க்கைல வெற்றிகரமா முதல் படி எடுத்து வைச்சிருக்காங்க
 
Well-known member
Messages
445
Reaction score
323
Points
63
Adei indha ur nu irukirathu unga trade mark symbol ah aniyayam pannathiga rendu perum ithuku appuram aachum konjam.aachum siringa ya
 
Top